PATRIOTISM: Bismarck and Californians!

40033-california-comp-sketch

Written by London swaminathan

Date : 1 September  2015

Post No. 2115

Time uploaded in London : 19-50

United-Stamp4931-california

(1).Californians are famous for their loyalty to their native state. One of its native sons was once visiting his wife’s relatives in the East. While there he had occasion to attend the funeral of a man who was little liked in the community. At the services the minister, who was new to the parish, called upon someone to say few words about the deceased. A long and significant silence ensued. Finally, the true son of California stood up and said, “Well, since there is no one present who has anything to say about our departed brother, I would like a few minutes to tell you something about California.”

bismarck

Bismarck story

(2).Bismarck told a story of an Alpine host who, after pointing out the glories of his native land, asked a berlin youth if they had any such mountains in Berlin. “No”, he replied, “we have not got such mountains, but, if we had, they would be much finer than these.”

(3).Emperor Vespasian: Bhagavad Gita Echo!

When the Emperor Vespasian commanded a Roman senator to give his voice against the interests of his country and threatened him with immediate death if he spoke on the other side, the Roman, conscious that the attempt to serve a people was in his power, answered with a smile:

“Did I ever tell you that I was immortal? My virtues is in my own disposal, my life in yours; you do what you will, I shall do what I ought; and if I fall in the service of my country, I shall have more triumph in my death than you in all your laurels.”

((When I read this I am reminded of the Bhagavd Gita sloka/couplet: “Either slain thou shalt go to heaven; or victorious thou shalt enjoy the earth; therefore, arise, Arjuna, resolved on the battle” (2-37) “Weapons do not cleave this self, fire does not burn him; waters do not make him wet; nor does the wind make him dry. The soul is eternal (2-23)

VESPASIAN

(4).Little Boy’s Reply

It was a little boy in an American school, who in his reply to his teacher’s question, “Who was the first man?” answered, “George Washington”, and upon being informed that it was Adam, exclaimed, “Ah, well! If you are speaking of foreigners, perhaps he was.”

(5).I would have produced more sons!

In the early part of the American civil war an elderly lady who attended meeting of the First Vermont Regiment, arose, full of enthusiasm, and said she thanked God that she was able to do something for her country; her two sons, all she possessed in the world, were in the regiment; and the only thing she had to regret was that she could not have known twenty years before that the war was coming – she would have furnished more.

(A True Patriot!)

Washington_at_Brooklyn_1951_Issue-3cjpg

(6).Retort to British

Sometime after the conclusion of the revolution, a young American was present in a British playhouse, where an interlude was performed in ridicule of Americans. A number of American officers being introduced in tattered uniforms, and barefoot, the question was put to them severally: “What was your trade before you entered the army?”

One answered tailor, another a cobbler etc. the wit of the piece was to banter them for not keeping themselves in clothes and shoes, but before that could be expressed, the American exclaimed from the gallery: “Greta Britain beaten by tailors and cobblers! Hurrah!”

Even the Prime Minister, who was present, could not help smiling, amidst a general peal of laughter.

அப்பரின் அருமையான ‘லாபரட்டரி’!

appar1

Written by S NAGARAJAN

Date : 1 செப்டம்பர்  2015

Post No. 2114

Time uploaded in London : 9-02

ச.நாகராஜன்

இறைவனை அறிய ஒரு லாபரட்டரி சோதனை!

விஞ்ஞான யுகம் மலர்ந்ததிலிருந்து லாபரட்டரிகளுக்கு ஒரு தனி ‘மவுசு’ ஏற்பட்டிருக்கிறது. சோதனைச்சாலையில் எதையும் செய்து பார்த்து நிரூபித்தால் தான் அந்தக் கொள்கையைப் பற்றிய நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.

மாணவர்கள் சிறுவயதிலிருந்தே லாபரட்டரி ஃபீஸ் தனியே இப்போது கட்ட வேண்டியிருக்கிறது. எதையும் ஆராய்ந்து அறிந்தால் சுகம் தான்!

அது சரி சிக்கலான கேள்விகளுக்கு சோதனைச் சாலை உண்டா?

இறைவன் இருக்கிறானா, எங்கு இருக்கிறான், எப்படி அவனை அறிவது, இப்படி இதைத் தொடர்ந்து ஆயிரம் கேள்விகள். பதிலைப் பெற, சோதனை செய்து அறிய லாபரட்டரி ஏதேனும் இருக்கிறதா?

இறைவனைப் பற்றிப் பாடிய அருணகிரிநாதர் ‘அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சி’ என்கிறார்.

அறிவால் அறிய சோதனைச் சாலை உண்டா?

ஏதுக்கள் எதற்கு?

வேண்டாம் இந்த விபரீதம் என்று அருளுரையாக அன்புரையாக எச்சரிக்கிறார் திருஞானசம்பந்தர்.

“ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா” என்ற அவரது மொழி, லாஜிக் மற்றும் வார்த்தை சித்துகளை ஓரம் கட்டி வை என்று கூறுகிறது.

“சுடர் விட்டு உளன் எங்கள் ஜோதி” என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் அவர்.

அத்தோடு, “மா துக்கம் நீங்கல் உறுவீர்” என்று ஆறுதலும் கூறுகிறார்.

துக்கம் நீங்க என்ன ஐயன்மீர், வழி என்று சம்பந்தரைக் கேட்க வாய் திறக்குமுன்னர்

அவரே சிறிய யோசனை ஒன்றைக் கூறி இதற்கு முற்றுப் புள்ளியையும் வைத்து விடுகிறார்.

அவரது மாபெரும் ரகசிய உரை இது தான்: “மனம் பற்றி வாழ்மின்!”

அது என்ன மனம் பற்றி வாழ்வது? அதன் பயனை நான்கடிப் பாடலில் நான்காவது அடியில் கூறி விடுகிறார் இப்படி:-

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே!

மனம் பற்றி வாழ்ந்தால் இறையைச் சார்ந்து விடலாம்.

நான்கு அடிகளில் நான்கு கோடி அறிஞர்கள் சேர்ந்து நான்கு யுகங்கள் யோசித்தாலும் கூற முடியாத விஷயத்தை சம்பந்தர் எளிய தமிழ்ப் பாடல் ஒன்றில் கூறி விடுகிறார். (மூன்றாம் திருமுறை வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் பதிகத்தில் ஐந்தாம் பாடல் காண்க)

appar2

எத்தனை யோசனைகள்!

மனம் பற்றி வாழ்வது பற்றி மண்டை குடைகிறது!

கங்கை செல்க, காவிரியில் நீராடுக, குமரித் துறையில் குளிக்கவும் என்போர் ஒரு புறம்!

சாஸ்திரம் ஓது, அனைவருக்கும் கொடு, யாரும் அறிய முடியாத எட்டும் இரண்டும் பற்றி எட்டு மணி நேரம் பேசுமளவு தெரிந்து கொள் என்போர் இன்னொரு புறம்!

வேதம் ஓது, யாகம் செய். நீதி நூல் நித்தம் பயில் – இது சிலரின் அறிவுரை; காலை நீராடு; கானகம், நாடு ஆகியவற்றில் திரிந்து அலை; ஊனை ஒழி; வேடம் பூண்டு குழுவில் சேர்; நோன்பு நோற்கவும்; பட்டினி கிட; இதுவும் சரிப்படவில்லையா?

இன்னும் இருக்கிறது யோசனை; கோடி தீர்த்தம் ஒன்றாய்க் கலந்து குளி தவம் செய்!

அப்பப்பா, எத்தனை குழப்பம். எத்தனை நூல்கள்; எத்தனை அறிஞர்கள்; எத்தனை யோசனைகள்!

இந்த யோசனைகள் அனைத்தையும் தன் லாபரட்டரிக்கு எடுத்துச் செல்கிறார் அரிய தெய்வ புருஷர் ஒருவர். அவர் யார்?

அப்பர்!

டெஸ்ட் டியூபில் நமக்காக அனைத்து யோசனைகளையும் போட்டு அலசி ஆராய்கிறார்.

விடைகளைத் தர தமிழே உகந்தது என்பது அவரது முடிவு. நான்கு நான்கு அடிகளில் உண்மைகளைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார்; நாம் வியக்கிறோம்.

மனம் பற்றி வாழும் அரிய ரகசியக் கலை தெரிந்து விடுகிறது அவரின் பாடல் மூலமாக. மேலே சொன்ன கங்கை காவிரி ஆடல், வேதம் ஓதல், யாகம் செய்தல் இத்யாதி யோசனைகள் அனைத்தும் நல்லவையே! ஆனால் அவை பலன் அளிக்க வேண்டுமெனில் மனம் பற்றி வாழ வேண்டும் என்ற ஞான சம்பந்தரின் யோசனைக்கு அவர் ஆதரவு தெரிவிக்கிறார்.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்? இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்யின் என்? ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே

காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்? ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே!

கானம் நாடு கலந்து திரியில் என்? ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே!

கூட வேடத்தர் ஆகிக் குழுவில் திரியில் என்? அம்பலக்கூத்தனைப் பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே!

நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்? என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே!

கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே!

நல் தவம் செய்து வருந்தில் என்? ஆர் கழல் சேவடி பற்று இல்லாதவர்க்குப் பயன் இல்லையே!

ஆஹா! அப்பரின் பத்துப் பாடல்களை ஓதி உணர்ந்த பின்னர் எப்படி இத்தனை நாளும் ஓடும் நீரை ஓட்டைக் குடத்தில் அடைத்து மூடி மூடி வைக்கப் பார்த்து முழித்து முழித்து பேதையாக இருந்திருக்கிறேன் என்பது நன்கு தெரிகிறது!

அவரது லாபரட்டரி ரிஸல்ட் சுருக்கமானது; சுவையானது.

உள்ளத்தில் மகிழ்ந்து உள்கு, எப்போதும் எங்கும் இருக்கும் ஞானனைப் பாடு; நினை; அவன் சேவடியைப் பற்று.

 

மனம் பற்றி வாழ்மின் என்ற ஞானசம்பந்தரின் வாக்கை தன் சோதனைச்சாலையில் சோதித்து நமக்காக அப்பர் அருள் விருந்து படைக்கிறார். தமிழில் தவிர இப்படிப்பட்ட அரிய பாடல்கள் வேறு எந்த மொழியிலாவது உண்டா?

இனி ஏதுக்கள் எதற்கு? மிக்க சோதனைகள் எதற்கு. மனத்தில் இறைவனைப் பற்றி வாழ்வோம். உள்ளுக்குள் உறையும் உத்தமனை எப்போதும் நினைத்து வாழ் என்பதே சாரம்!

மாம் ஏகம் சரணம் வ்ரஜ; (என் ஒருவனையே சரணடை; நான் உன்னை அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் – கீதையில் கண்ணன்)

******************

பெண் என்றால் பேயும்…………………

Chennai

Compiled by London swaminathan

Date : 1 செப்டம்பர்  2015

Post No. 2113

Time uploaded in London: காலை 8-45

Swami_48@yahoo.com

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. ஆனால் பெண் என்றால் பேயும் அஞ்சும் – என்ற ஒரு பேய்க் கதையைக் கேளுங்கள். இது நமது கிராமப்புற மக்கள் சொல்லும் கதை. மனைவியை அடிக்கும் கணவன் பற்றியே படித்துப் பழக்கப் பட்டுவிட்டோம். ஆனால் கணவர்களைக் கொடுமைப்படுத்தும் மனைவிமார்களும் உண்டு. வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு கணவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்!

ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி அந்தப் பிராமணனை தினமும் அடிப்பாள். கிட்டத்தட்ட அது ஒரு தினசரி பூஜை போல ஆய்விட்டது அந்தப் பெண்மணிக்கு. இதற்கு அவரது வறுமையும் ஒரு காரணம். வெளியே போய்ச் சம்பாதித்து வாரும் என்று சொல்லி அடிப்பாள். கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு அலுத்துப் போகவே, “அன்பே! ஆருயிரே! அடுத்த ஊரில் இருந்து எனக்கு பூஜைக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு போனால் நல்ல வரும்படி வரும் என்று சொல்லிவிட்டுப் புறப்பாட்டார்.

அவளோ, ஐயய்யோ, இனி நான் யாரை தினமும் அடிப்பேன்? யார் எனக்கு அரிசி,மளிகை சாமான்கள் வாங்க காசு கொடுப்பார்கள்? என்றாள். அவர் சொன்னார், “ கவலையே படாதே. அதோ, சாலையின் ஓரத்தில் புளிய மரம் இருக்கிறதல்லவா? அதனிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். தினனும் அதைப் போய் அடி”, என்றார்.

அவரும் புறப்பட்டார்; அவளும் தினசரி யாருக்கும் தெரியாமல் புளியமரத்தை அடித்தாள். ஆனால் பணமே கிடைக்கவில்லை. அந்தப் புளிய மரத்தில் ஒரு பேய் வசித்துவந்தது. அது இந்தப் பெண்மணியின் அடி தாங்காமல் கஷ்டப்பட்டுவந்தது.

Wife Beating Husband

பத்து நாட்களுக்குப் பின்னர்  கணவர் திரும்பிவந்தவுடன், “வாருங்கள் இந்தப் புளிய மரத்தைத்தானே அடிக்கச் சொன்னீர்; அது பணமே தரவில்லை” என்று சொல்லி அந்த மரத்தைக் காட்டினாள். அவர் சொன்னார், நீ வீட்டுக்குப் போ. நான் இரண்டு அடி கொடுத்து விசாரிக்கிறேன் – என்று சொல்லி மனைவியை அனுப்பிவைத்தார். இவர் அடிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் அந்தப் பேயே வெளியே வநு, ஏ பிராமணா! நான் பத்து நாட்களுக்கே உன் மனைவியின் அடியைத் தாங்க முடியவில்லை. நீ தினமும் அடிபடுவது எனக்குத் தெரியும். எப்படித் தாங்கினாய்?  உன்னைக் காப்பாற்ற ஒரு வழி வைத்துள்ளேன். நான் மஹாராணியைப் போய்ப் பிடித்துக் கொள்கிறேன். உடனே மஹாராஜா பெரிய பெரிய மந்திரவாதிகளை அழைத்து பேய் ஓட்ட முயற்சி செய்வார். நான் போகவே மாட்டேன். நீ வந்த பின்னர் ஓடிப் போய்விடுகிறேன். உனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும்; நீ சுகமாக வாழ். ஆனால் ஒரு எச்சரிக்கை! நான் வேறு யாரையாவது பிடிக்கும்போது நீ உதவி செய்ய மீண்டும் வராதே; எச்சரிக்கை! – என்று பேய் சொன்னது.

பிராமணனுக்கு மிகவும் சந்தோஷம். பேய், அரசன் மனைவியைப் பிடித்துக் கொள்ளவே அரசன் தண்டோரா போட்டு நாட்டின் மிகப் பெரிய மந்திரவாதிகளை அழைத்தான். பலனே இல்லை. உடனே இந்தப் பிராமணன் போய், என்னிடமுள்ள மந்திர சக்த்தியை வைத்து ஓட்டுகிறேன் என்று சொன்னார். அரசனும் சம்ம்மதித்தான். பிராமணனைப் பார்த்தவுடன் பேய் ஓட்டம் பிடித்தது. அரசன், அந்தப் பிராமணனுக்கு பெரிய பரிசுகள் கொடுத்து அனுப்பினான்.

பிராமணன் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். அந்தப் பேய் இப்பொழுது மந்திரியின் மனைவியைப் பிடித்துக்கொண்டது. அரசன், வேறு யாரையும் அழைக்காமல் , பிராமணனை அழைத்துவர ஆள் அனுப்பினான். மனைவிக்கு மேலும் பொருள் கிடைக்கும் என்று ஆசை. உடனே பிராமணனைப் பார்த்து, ஓய்! போய்வாரும் என்று கெஞ்சினாள். அவரும் ராஜா சொல்லைத் தட்ட முடியாதே என்று எண்ணி, அங்கே போனார். உடனே அந்தப் பேய், ஏ, பிராமணா! வேறு யாரைப் பிடித்தாலும் வரக்கூடாது என்று சொன்னேனே! உனக்கு எவ்வளவு ஆசை? ஏன் வந்தாய்? என்று கேட்டது.

அதற்கு அந்தப் பிராமணன் சொன்னான், “ எனக்கும் வரப் பிடிக்கவில்லை. என் மனைவி தான் அனுப்பி வைத்தாள் என்றான். அதைக்கேட்டவுடன் பேய்க்கு உடம்பெல்லாம் நடுங்கியது. மனைவியா? அவள் இப்பொழுது எங்கே இருக்கிறாள்? என்று கேட்டது. அவனும், நான் புறப்பட்டபோது அவளும் புறப்பட்டாள். மெதுவாக நடந்தாள். இப்பொழுது இந்த வீட்டு வாசலுக்கு வந்திருக்கவேண்டும் – என்றான். அதைக் கேட்டவுடன், முன்னர் வாங்கிய அடிகள் நினைவுக்கு வரவே, பேய் ஓட்டம்பிடித்தது!

இந்த முறை மன்னனும் மந்திரியும் நிறைய பணமுடிப்புகள், அதோடு சேவகர்களின் பாதுகாப்பு எல்லாம் கொடுத்து பிராமணனை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அப்புறம் அவன் மனைவி அந்தப் பிராமணனை அடிக்கவேயில்லை.

-இது ஒரு நாட்டுப்புற கதை

September 2015 Calendar

tejo

Compiled by London swaminathan

Date : 31 August 2015

Post No. 2112

Time uploaded in London: 14-00 pm

Swami_48@yahoo.com

 

Important Days:-

Ekadasi:– 8/9, 24;  Auspicious days:– 9, 16, 17

Full moon:–27/28 (Pournami);  New moon:– 12 (Amavasai)

Important days:- September 5 Janmashtami (Krishna’s Birthday & Teachers Day; 11- Tamil Poet Bharati’s death anniversary; 17- Ganesh Chaturthy; 24 -Bakrid

 

 

IMG_4597 (2)

Quotations from Swami Tejomayananda,

Head of Chinmaya Mission Worldwide

September 1 Tuesday

Love and forgiveness go together. If we can’t forgive, it means we can’t love sufficiently.

September 2 Wednesday

Be tender towards the fault of others; be strict towards your own.

September 3 Thursday

Some are influenced by the bad around them. Some are untouched by the good around them.

September 4 Friday

Some people have love-less lives, and some people have life-less love.

September 5 Saturday

Important things are NOT things.

IMG_4592 (2)

September 6 Sunday

Children need your presence, not your presents.

September 7 Monday

Values are more valuable than valuables.

September 8 Tuesday

A person may have everything – knowledge, wealth and virtues, but if he is not humble, all is vain.

September 9 Wednesday

Have faith in the inherent goodness of others.

September 10 Thursday

Change your outlook, then look out.

IMG_4593 (2)

September 11 Friday

Don’t tell God how big your troubles are.

September 12 Saturday

An altar in our life will alter our life

September 13 Sunday

Those in drama and dance know they have makeup on. So they want to remove it as soon as possible. We do not know we have it on, so we don’t know we have to remove it.

September 14 Monday

To see truth… We need a pure mind and a subtle intellect.

September 15 Tuesday

Self-knowledge is the direct means to liberation.

IMG_4594 (2)

September 16 Wednesday

The solution to all worldly problems should be from a spiritual viewpoint.

September 17 Thursday

Our goals should be so inspiring that the challenges become fun in the journey of reaching our destination.

September 18 Friday

The softest pillow is a clean conscience.

September 19 Saturday

You are a product of your past, but NOT a victim.

September 20 Sunday

Take care of the state of your mind. More than the planets.

IMG_4595 (2)

September 21 Monday

Adopt the ways of nature. Her secret is patience.

September 22 Tuesday

Never believe in anything unless it happens.

September 23 Wednesday

Between the urgent and the routine, one must not forget the important.

September 24 Thursday

If we want to realise our dreams, we have to stay awake.

September 25 Friday

Everyone is born to succeed. Do not underestimate yourself or another.

IMG_4596 (2)

September 26 Saturday

No-one can give you rest. You will have to learn to take it.

September 27 Sunday

The sky is truly the limit for what we can do with what we have. We only have to realise this.

September 28 Monday

Dependence brings sorrow. Independence brings happiness.

September 29 Tuesday

Acquisition of things is great; renunciation of things is greater.

September 30 Wednesday

Love of wealth takes away the wealth of love from our heart.

A vision of one-ness, develops love, readiness to serve all, and creates an attitude of forgiveness.

–Subham–

மஹாகவிக்குச் செய்யும் மஹத்தான துரோகம்!

Default Co. Ltd

Default Co. Ltd

Written by S NAGARAJAN

Date : 31 ஆகஸ்ட்  2015

Post No. 2111

Time uploaded in London : 12-11

 

By .நாகராஜன்

 

பதிப்புகள் பல விதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்!

 

மஹாகவி பாரதியார் போன்ற ஒரு பெரும் கவிஞனை காலம் எப்போதோ ஒரு முறை தான் தோற்றுவிக்கிறது

வாழ்ந்த காலத்தில் அவரைக் கொண்டாடாமல், அவரைச் சற்றே வறுமையில் வாட விட்டு விட்டது தமிழ்ச் சமுதாயம்.

 

ஆனால் இப்போது அவரது பெருமை நன்கு புரிந்து விட்ட நிலையில் காலத்தை வென்ற கவிஞன் என்று அவன் போற்றப்படும் நிலையில் அவனுக்குத் தமிழர்கள் சிலர் இழைக்கும் கொடுமைக்கும் துரோகத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டே ஆக வேண்டும்.

 

மஹாகவிக்கு துரோகமா என்று விழிகளில் வியப்பைத் தேக்க வேண்டாம்.

அவர் நமக்கு விட்டுச் சென்ற படைப்புகளை உள்ளது உள்ளபடி வெளியிடாமல் தங்களின்கெட்டநோக்கத்திற்கு இசைந்த வகையில் வெளியிடுவதைத் தான் இங்கு துரோகம் என்று குறிப்பிடுகிறோம்.

 

அறியாமல் செய்தாலும் பிழை பிழை தான்! ஆகவே பாரதி ஆர்வலர்கள் இந்தப் பதிப்பாளர்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நல்ல பதிப்பையே தேடிப் பிடித்து வாங்க வேண்டும். சரியான தலைப்புகள், சரியான பாடம் தெரிந்த போது தனது பிரதியில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

மனம் போன படி மாற்றலாமா?

 

பல்வேறு வித நோக்கங்கள்! அதற்கு பலி மஹாகவி! அது தான் வருத்தமாய் இருக்கிறது.

முதலில் எழுத்துக்களை மாற்றி வெளியிடுதல் தவறல்லவா. , , , போன்ற எழுத்துக்களைக் கையாளுவதில் அவருக்குத் தடை இருந்ததே இல்லை. ஸ்வ சரிதை என்பதை பல பதிப்புகள் சுய சரிதை என்று மாற்றி வெளியிடுவதைப் பார்க்கலாம்.

 

 

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அவரது தீர்க்கமான சிந்தனை பற்றிய   அருமையான சம்பவங்கள் உண்டு, (அவற்றை எனது தனிக் கட்டுரையில் காணலாம்)

ஆகவே அவர் எழுதிய எழுத்துக்களை அப்படியே அவரது படைப்புகளில், கதை, கவிதை, கட்டுரையில் வெளியிட வேண்டும்.

 bharati drawing

அடுத்து தலைப்புகளை மாற்றுதல்.

 

ஶ்ரீ கிருஷ்ணன் மீது ஸ்துதி என்பது அவர் கொடுத்த தலைப்பு, கண்ணனை வேண்டுதல் என்பது புதிய தலைப்பு. எளிமைப் படுத்துகிறார்களாம்! மனம் போன படி தலைப்பு, வார்த்தைகளைஎளிமைப் படுத்தஇவர்கள் யார்?” ஸ்வ சரிதை என்பது 1948ஆம் ஆண்டு பாரதி பிரசுராலயம் கொடுத்திருக்கும் தலைப்பு. சிலர் இதை சுயசரிதம் என்றும் கனவு என்றும் தலைப்பு கொடுத்து பிரசுரிக்கின்றனர்.

 

கவிஞனின் உள்ளத்தைத் தெரிவிக்கும் தலைப்புகளையே மாற்றலாமா?

அடுத்து மஹாகவி ராகம், ஸ்வரக் குறிப்புகளைத் தன் பாடல்களுக்குத் தந்துள்ளார். அதை விடுத்து பாடல்களைப் பதிப்பது இன்னுமொரு தவறு!

வார்த்தைகளையே மாற்றுவது அல்லது மனம் போன படிதமிழ்ப் படுத்துவது’, சில வரிகளை மறைப்பது அல்லது மாற்றுவது என்று பாரதியார் பலதமிழர்களிடம்படாத பாடு படுகிறார்.

 

சீர் பிரித்து பிரசுரிப்பது ஒரு வழக்கமாக ஆகி விட்டது இப்போது; மர்ரே கம்பெனியின் கம்ப ராமாயணப் பதிப்பின் நேர்த்தியைக் கண்டோர்தாமும் அதுவாகப் பாவித்துபாரதியாரைசீர் பிரிக்கிறார்கள்”! இதிலும் பல விதம்!!

 

பரலி சு.நெல்லையப்பர் ஆங்கிலேய அதிகாரிகள் பாரதியாரின் பாட்டுக்களை தடை செய்து விடுவார்கள் என்ற நோக்கத்துடன் நாட்டுப் பாட்டு என்ற நூல் தலைப்பில் அவரது கவிதைகளை வெளியிட்டார்; பரப்பினார். இது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் சுய லாபங்களுக்காக அவரை மாற்றுவது தான் வேடிக்கை!

 

 

தமிழினம் காப்பதாகதம் இனம்காப்போர்!

 

சிலஇஸம்களிடம் அவர் மாட்டிக் கொண்ட விந்தையையும் பல பதிப்புகளில் பார்க்கிறோம். கம்யூனிஸ்டுகளின் பாரதி ஒரு விதம்! திராவிடஆரியம் என்ற பிரிவினைக் கொள்கை கொண்டோரின் பாரதி இன்னொரு விதம்! பார்ப்பன எதிரிகள் என்று தம்மை பகிரங்கமாகச் சொல்லி கொள்வொர் பாரதியைத் துணைக்கு அழைத்து அவருக்குட்ரீட்மெண்ட்கொடுப்பது இன்னொரு விதம்!

இத்தனைக்கும் மீறிய மகாகவி அவர். அவரை உள்ளபடி தேடிக் கண்டு பிடிப்பது அவர் மறைந்த நூறு ஆண்டுகளுக்குள்ளேயே மிகவும் சிரமமான காரியமாக ஆகி விட்டது.

 

1936ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பாக தேசீய கீதங்கள் என்று தலைப்பிட்ட நூலை பாரதி பிரசுராலயம்,திருவல்லிக்கேணி, சென்னை வெளியிட்டுள்ளது. இந்த நூலைப் பார்த்து இன்றுள்ள பலரது பதிப்புகளையும் பார்க்கும் போது வேதனை தான் பிறக்கிறது. முதலில் தமிழை இப்படிப்பட்ட வக்கிரம் பிடித்தவர்களிடமிருந்து காக்க வேண்டும்.

 

தமிழினம் காப்போம், தமிழைக் காப்போம் என்ற கோஷத்தை முன் வைத்து தம் இனத்தை மட்டும்’ – வாரிசுகளைக் காக்கும் இவர்களை இனம் கண்டு இவர்களிடமிருந்து தமிழர்கள் முதலில் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?!

 

பாரதியாரைத் தம் பக்கம் தவறாகத் துணைக்கு இழுப்பவர்கள் பாரதியாருக்கு மரியாதை செய்பவர்களா அல்லது துரோகிகளா?

 

சிந்திப்போம்! பாரதியாரைக் காப்போம்!!

**************

 

மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள்

bharati drawing

செப்டம்பர், 2015 காலண்டர்

(மன்மத வருடம் ஆவணி/புரட்டாசி மாதம்)

Compiled by London swaminathan

Date : 31 ஆகஸ்ட்  2015

Post No. 2110

Time uploaded in London : 11-49 am

Swami_48@yahoo.com

Important days:-

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்; ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜயந்தி); செப்டம்பர் 11-பாரதியார் நினைவு தினம்; 17-விநாயக சதுர்த்தி;24-பக்ரீத்; 29-மகாளயபட்சம் ஆரம்பம்.

 

முஹூர்த்த தினங்கள்:– 9,16, 17,

பௌர்ணமி:– 27/28 அமாவாசை:–12; ஏகாதசி :– 8/9, 24

 

silence

இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் தனித்தனியே பொன்மொழிகளுடன் காலண்டர்கள் உள்ளன. இவைகளில் இந்திய இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான மேற்கோள்கள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.

செப்டம்பர் 1, செவ்வாய்க் கிழமை

பலம் மூர்கஸ்ய மௌனித்வம்

மௌனமாய் இருப்பதே முட்டளுக்கு பலம்.

செப்டம்பர் 2, புதன் கிழமை

தர்துரா யத்ர வக்தாரஸ் தத்ரம் மௌனம் ஹி சோபனம் – சுபாஷித ரத்னகண்ட மஞ்சுசா

தவளைகள் எங்கு பேச்சாளர்களோ, அங்கு பேசாமலிருப்பதே நலம்தரும்

செப்டம்பர் 3, வியாழக் கிழமை

மௌனம் கூஹதி மௌட்யம் சதஸி

சபையில் மவுனமாய் இருப்பது முட்டாள்களுக்குக் கேடயம் போலாகும்

செப்டம்பர் 4, வெள்ளிக் கிழமை

மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)

செப்டம்பர் 5, சனிக்கிழமை

மௌனம் சம்மதி லக்ஷணம்

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி

silence image

செப்டம்பர் 6, ஞாயிற்றுக் கிழமை

மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45

பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

செப்டம்பர் 7, திங்கட் கிழமை

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9

மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.

செப்டம்பர் 8, செவ்வாய்க் கிழமை

வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.

பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.

செப்டம்பர் 9, புதன் கிழமை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல் – குறள் 291

ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் – மனு 4-138

உண்மையேயானாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யுமானால் பேசாமலிரு.

செப்டம்பர் 10, வியாழக் கிழமை

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டுபவர் – குறள் 962

புகழை விரும்புவோர், பெரிய செல்வமே கிடைப்பதானாலும் தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

silence draw

செப்டம்பர் 11, வெள்ளிக் கிழமை

சத்யம் யத் பரதுக்காய தத்ர மௌனபரோ பவேத்- விஷ்ணு புராணம் 3-12-43

உண்மை சொல்வதால் கெடுதல் வருமானால் பேசாமலிருப்பதே உத்தமம்.

செப்டம்பர் 12, சனிக்கிழமை

வாக் ஜன்ம  வைபல்யம் அசக்யசல்யம் குணாதிகே வஸ்துனி மௌனிதா சேத்  – நைஷதீய காவ்யம்

நல்லோர் முன்னிலையில் ஒன்றும் பேசாமலிருப்பது பொறுத்துக் கொள்ளமுடியாதது. (பேஸ் புக்கில் நல்ல விஷயங்களுக்கும் ‘லைக்’ போடாமல் கல்லுளி மங்கனாக இருப்பது போல)

செப்டம்பர் 13, ஞாயிற்றுக் கிழமை

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம் – பர்த்ருஹரி

மௌனமாக இருப்பது பண்டிதரில்லாதோருக்கு அணிகலன்.

செப்டம்பர் 14, திங்கட் கிழமை

அனுத்தரம் ஏவ உத்தரம் – ரத்ன சமுச்சய

பதில் சொல்லாவிடில் அதுவே ஒரு பதில்தான்

செப்டம்பர் 15, செவ்வய்க் கிழமை

துர்ஜனஸ்ய ஔஷதம் நாஸ்திகிஞ்சித் அனுத்தராத் – சுபாஷிதாவளி

தீயோருக்கு எதிரான மருந்து என்னவென்றால், எதிர்வார்த்தை (பதில்) பேசாலிருப்பதுதான்.

day_of_silence_2012_by_eveefugo-d4x36x8

செப்டம்பர் 16, புதன் கிழமை

அகாத ஜலசஞ்சாரி ந கர்வம் யாதி ரோஹித:

அங்குஷ்டமாத்ர தோய அபி சபரி பரபராயதே –பஞ்சதந்திரம்

ஆழ்கடலில் செல்லும் பிராணிகள் கர்வம் அடைவதில்லை; விரல் அளவு தண்ணீரில் செல்லும் மீன்கள் பரபரக்கச் செல்லும் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 17, வியாழக் கிழமை

அபிபூதி பூயாத் அசூனத: சுகமுஞ்சந்தி ந தாம மானின: – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்கள், அவமானம் உண்டாகும் என்பதற்காக உயிரையும் விடுவர்; மானத்தை என்றும் கைவிடார்.

செப்டம்பர் 18, வெள்ளிக் கிழமை

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182

செப்டம்பர் 19, சனிக்கிழமை

அல்பவித்யா மஹாகர்வீ – சு.ர.பா.

கொஞ்சம் படித்தவர்கள் ‘படம்’ காட்டுவர் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 20, ஞாயிற்றுக் கிழமை

உத்தமா மானம் இச்சந்தி மானம் ஹி மஹதாம் தனம் – சாணக்யநீதி

நல்லோர் விரும்புவது மானம்; அவர்களுக்கு அதுவே பெரிய செல்வம்.

learn silence

செப்டம்பர் 21, திங்கட் கிழமை

நான்யஸ்ய கந்தமபி மானப்ருத: மஹந்தே- சிசுபாலவதம்

பிறருடைய கர்வத்தை மானமுள்ளவர்கள் பொறுக்கமட்டார்கள்.

செப்டம்பர் 22, செவ்வாய்க் கிழமை

ந அஹங்காராத் சத்ரு:

நான் என்னும் செருக்கைவிட பெரிய எதிரி இல்லை.

செப்டம்பர் 23, புதன் கிழமை

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள்- 963

செல்வமுள்ளபோது பணிவும், வறியநிலையில் உயர்ந்த கொள்கைப் பற்றும் வேண்டும்.

செப்டம்பர் 24, வியாழக் கிழமை

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம், மானபங்கே தினே தினே – சாணக்யநீதி

உயிரைவிட்டால் ஒரு நாள்தான் துக்கம்; அவமானத்துடன் வாழ்வதோ நாள்தோறும் துக்கம்.

silence (1)

செப்டம்பர் 25, வெள்ளிக் கிழமை

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் – குறள்- 969

ஒரு முடியை இழந்தாலும் கவரிமா உயிரிழக்கும். பெரியோர்கள், மானம் அழிந்தால் உயிர்துறப்பர்.

செப்டம்பர் 26, சனிக்கிழமை

வரம் ஹி மானினோ ம்ருத்யுர்ன தைன்யம் ஸ்வஜ்னாக்ரத: – கதாசரித்சாகரம்

தன் மக்களுக்கு முன்பு அவமானம் அடைவதைவிட, மானமுள்ளவர்களுக்கு மரணமே மேல்.

செப்டம்பர் 27, ஞாயிற்றுக் கிழமை

பராபவோ அப்யுத்சவ ஏவ மானினாம் – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்களுக்கு தோல்விகூட உற்சாகமே தரும்.

செப்டம்பர் 28, திங்கட் கிழமை

சதாபிமான ஏகதனா ஹி மானின: – சிசுபாலவதம்

மானமுள்ளவர்களுக்கு அது ஒன்றே எப்போதுமுள்ள சொத்து (செல்வம்).

செப்டம்பர் 29, செவ்வாய்க் கிழமை

தலையின் இழிந்த மயிர் அனையர் மந்தர்

நிலையின் இழிந்த கடை – குறள்- 96964

மானம் போனால், கீழே விழுந்து கிடக்கும் மயிருக்குச் சமம்.

செப்டம்பர் 30, புதன் கிழமை

அதிதர்பே ஹதா லங்கா – மிகுந்த அஹங்காரத்தால் (ராவணனின்) இலங்கை அழிந்தது.

-subham-

Funny Ghost Story from Indian Villagers!

Chennai

Article No. 2109

Compiled  by London swaminathan
Date : 30 August  2015
Time uploaded in London :– 20-22

We always read about bad husbands beating their wives. But in all parts of the world there are bad wives who torture their husbands as well. We know the suffering of Socrates at the hands of his wife. His famous quote is: if you want to become a philosopher, marry a bad woman.” That was a true story. Here is a funny ghost and a bad wife story from Indian villagers.

In a village there was a poor Brahmin who was beaten by his wife every day. He also accepted the torture like a ritual. One day he got fed up with his wife’s treatment and decided to go out for ten days. He told his wife, “Look, My darling! I have an important business in the neighbour town. I am leaving today. I will be back after ten days”. Immediately she told him, “Every day I used to beat you with broomstick asking for money. Now who do I beat with the broomstick. I can’t eat without doing that.”

He told her, “Don’t worry about it. I have already trained the tamarind tree in the back garden. It will take all your beatings. You can do it without any hesitation.”

beat

She also did it for ten days. The ghost that occupied the tamarind tree was suffering for ten days. The Brahmin returned after ten days and she took him to the Tamarind tree and showed what she did for ten days. As soon as she left the place, the ghost in the tree called the Brahmin and told him that he could help him to get out of poverty and his wife’s cruelty. It told him that it would go to the palace and possess the king’s wife. It promised him to leave her only when he came and do some exorcism. The Brahmin also agreed to it.

When the queen was possessed with the ghost the king called the famous exorcists in the country and in spite of that the ghost did not leave her. Then the Brahmin approached the king and told him that he could easily drive away the ghost. As soon as the ghost saw the Brahmin, it left the queen according to the original plan. The king amply rewarded the Brahmin. He became very rich overnight. But the ghost warned the Brahmin that he should not help anyone this way any more.

After leaving the queen the ghost went and took over the control of minister’s wife. Immediately the king sent a word for the Brahmin. In spite of the warning of the ghost, he boldly went to cure the minister’s wife. The ghost reminded him of its warning. But the clever Brahmin told that he was not ready to do that job. But his wife only drove him out of the house to do the job. The moment the Brahmin told about his wife, the ghost started shivering and shaking. It asked the Brahmin where his wife was. The Brahmin told the ghost that she was just near the door of the minister’s house. The ghost ran away in a fraction of a second. Once again the king gave him more money and provided him security. His wife could not beat him any more!

Wife Beating Husband

இலங்கைச் சரித்திரம்

Article No. 2108

Compiled  by London swaminathan
Date : 30 August  2015
Time uploaded in London :– 7-14 am

IMG_4070

வடமொழியில் காந்தபுராணத்துள்ள, தக்ஷிண கைலாச மான்மிய சங்கிரகம் எனப்படும் இலங்கைச் சரித்திரம்

யாப்பாணத்து வண்ணைநகர் சு.ரத்தினசபாபதி சாஸ்திரிகளால் ஏடுகளிலிருந்து மொழிபெயர்த்துச் சொல்லியபடி, நல்லூர் வ.சின்னத்தம்பி புலவரால் அச்சில் பதிப்பிக்கப்பட்டது.

இந்த நூல் பிரிட்டிஷ் மியூசியத்தில் 1911- ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டதாக கடைசி பக்கத்தில் முத்திரை இருப்பதால் அதற்கு முன்பு பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது லண்டன் பிரிட்டிஷ் லைப்ப்ரரியில் உள்ளது.

IMG_4071 - Copy

IMG_4072 (2) - Copy

IMG_4073 (2)

IMG_4074 (2)

IMG_4075 (2)

IMG_4080 (2)

IMG_4083 (2)

IMG_4084 (2)

IMG_4085 (2)

IMG_4086 (2)

IMG_4087 (2)

IMG_4088 (2)

IMG_4089 (2)

IMG_4090 (2)

IMG_4091 (2)

IMG_4092 (2) IMG_4094 (2)

IMG_4093 (2)

IMG_4095 (2) IMG_4096 (2)

IMG_4098 (2)

IMG_4099 (2)

IMG_4100 (2)

IMG_4101 (2)

IMG_4102 (2)

IMG_4103 (2)

IMG_4105 (2)

No Pain, No Gain! Wisdom from Villagers!

2 er uzavan

rticle No. 2107

Written by London swaminathan
Date : 29 August  2015
Time uploaded in London :– 19-56

Indians have been passing their age old wisdom through proverbs, stories and golden sayings (Subhasitas). The villagers who go to field in the morning and return during sun set after a daylong hard work never had time to go to school and learn. But they learnt a lot of things from stories told by their grandmas and grandpas when they were children.  Even when they were working in the fields they exchanged such stories and proverbs in their conversations. That is how we have developed the largest story collection in the world (Katha Sarit Sagara), 20,000 Tamil proverbs and 20000 Sanskrit Subhasitas (Golden sayings).

Here is one more story to show how people learn some truths by the hard way:

There was wealthy villager in a village. He worked hard all through his life in his filed which is vast covering acres of land. He earned a lot of money through his successful farming. But his eight lazy sons were spending money in gambling. They did not go to the fields at all. They competed with one another in wasting father’s money. Their father tried all the ways to teach them good things, but failed in his attempts. When he was 85 year old and in his death bed, he called all is children to tell them about his will. Everyone was eager to know what he has written in his will and how much each one would get.

But he told them, “Look, my sons, I am not going to tell how much each one would get. But I will tell you a secret. I have buried all my treasures in various places in our vast land. It is definitely more than eight places. So whoever digs the land and gets it, it is his own. So the more places you dig, more you would get. But there is one condition. If you all respect me, don’t take it before my death”.

er uzavan

Every one of his sons was eagerly waiting for the farmer’s death. And the day came. The farmer died and after cremating his body all his sons ran to the fields with axe and other equipment’s and started vigorous digging. Several days passed. No one got anything. And the rainy season came. It started raining heavily making the fields muddy. Then his sons met together and decided to cultivate crops. They divided the land among themselves and did grow the same crops like their father. Because of vigorous digging and timely rain they had a very good harvest. They made big money. Then they realised what his father meant by “burying treasure under the earth.”

No pain, No gain

பாரதி புதையல்: மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்!-5

bharathiyar_554

Article No. 2106

Written by S NAGARAJAN
Date : 29 August  2015
Time uploaded in London :– 12-06

ச.நாகராஜன்

பாரதி புதையல் மூன்றாம் தொகுதி

ரா..பத்மநாபனின் தமிழ்த் தொண்டு

மிக மிக அருமையான இந்த நூலை பாரதி பக்தர் ரா.அ.பத்மநாபன் தொகுத்து 1975ஆம் ஆண்டு பாரதி தினத்தன்று வெளியிட்டிருக்கிறார். இது அமுதநிலையம் பிரைவேட் லிமிடட்டின் 248வது நூல். 321 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் அன்றைய விலை ரூ 12.

பதிப்புரையில் ரா.அ.பத்மநாபன் கூறுவது:- “பாரதியாரின் எழுத்துகளில் இதுவரை வெளியாகாதவை அல்லது எப்போதோ பத்திரிகைகளில் வெளி வந்து மறைந்து கிடப்பவை – இவற்றைத் தேடித் திரட்டி, நூல் வடிவில் தொகுத்துத் தருவதே “பாரதி புதையல் நூல் வரிசையின் நோக்கமாகும். இவ்வரிசையில் இது மூன்றாவது தொகுதியாகும். முதல் தொகுதி 1958-இலும் இரண்டாம் தொகுதி 1959-இலும் வெளியாயின.”

தமிழ் மக்களுக்கு இதை விடச் சிறந்த சேவையை எப்படிச் செய்ய முடியும். ரா.அ.பத்மநாபனுக்கு தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.பாரதியின் புகழ் பரப்பும் பணியே இவரது வாழ்க்கைப் பணி.

இந்த நூலில் பாரதியாரின் வெளியிடப்படாத கவிதைகள் நான்கும், கட்டுரைகள் இருபத்தி ஒன்பதும் உள்ளன. இத்துடன் மிக முக்கியமான தொகுப்பாக பாரதியாரைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் உடன் பழகியவர்களும் எழுதிய 26 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது ஒரு அரிய கஷ்டமான காரியம். எங்கெங்கோ எப்போதோ பிரசுரிக்கப்பட்டவற்றை ஒரே நூலில் படிக்க முடிகிறது.

பல்வேறு சுவையான சம்பவங்கள். சம்பவங்களில் உடன் இருந்தோர் அதை விவரிக்க, அவற்றைப் படிக்கும் போது அதிகாரபூர்வமாக அவற்றை உணர முடிகிறது.

padmanaban_1740634h

R A Padmanabhan

சோழனும் கம்பனும்

மாமா பாரதியார் என்று வ.உ.சி எழுதிய கட்டுரையில் தன்னைச் சோழனாகவும் பாரதியாரைக் கம்பனாகவும் நினைக்க வைத்த சந்திப்பை உளமுருக விவரிக்கிறார். மாஜினியின் சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்ந்தோர் செய்து வந்த விசுவாசப் பிரமாணச் செய்யுளை பாரதியார் ஆங்கிலத்தில் படித்துக் காட்ட, வியப்புற்ற வ.உ.சி அதைத் தமிழ்ப்பாட்டாகத் தர வேண்டினார். உடனே அதே இடத்தில் கவிதை ஒன்று உருவானது. அது தான் ‘பேரருட் கடவுள் திருவடியாணை’ என்று தொடங்கும் கவிதை.

 

நாராயண ஐயங்காரின் கட்டுரைகள்

சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் கடை கண்ட நிபுணரான பண்டிட் எஸ்.நாராயண ஐயங்கார் பாரதியாரின் நண்பர். அவர் 9-9-1956, 16-9-1956 தினமணி சுடர் இதழ்களில் எழுதிய கட்டுரைகள் காசியிலிருந்து பாரதியாருடனான நாராயண ஐயங்காரின் நட்பை விளக்குகிறது.

கங்கைக் கரையில் அமர்ந்து ஷெல்லியின் பாடல்களைப் படித்து அர்த்தம் சொல்வார் பாரதியார். ஒரு சமயம் சரஸ்வதி பூஜையன்று பெண் கல்வி வேண்டுமென்பது பற்றி அவர் பேச அந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த ஶ்ரீ சீதாராம சாஸ்திரிகள் அதை ஏற்க மறுக்க பாரதியாரோ இன்னும் ஆணித்தரமாகத் தன் கருத்தை வலியுறுத்தினார். காசியில் இருந்த போது அவருக்கு வயது 18. நாராயண ஐயங்காருக்கு வயது 16. ஏராளமான சுவையான சம்பவங்களை விவரிக்கிறார் நாராயண ஐயங்கார்.

.வே.சு. ஐயரும் பாரதியாரும்

புதுவையில் இந்தியா வெளியிடும் பொறுப்பை ஏற்றவர் ,மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சாரியார். இவர் பாரதியாரின் புதுவை வாழ்க்கையில் உடன் இருந்தவர். வ.வே.சு ஐயரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு இவர் 1942 மார்ச் கலைமகள் இதழில் எழுதிய கட்டுரை நூலில் இடம் பெற்றுள்ளது. ஶ்ரீ அரவிந்தர் ரிக்வேதம் படிக்கும் போது அவரோடு பாரதியாரும் ரிக் வேதம் படித்தார்.ஆர்யா என்ற அரவிந்தரின் மாதப் பத்திரிகைக்கு பாரதியார் விஷயதானம் செய்து வந்தார். சதுரங்கம் ஆடும் போது ஏப்போதும் ஐயருக்கு எதிர்க் கட்சியில் பாரதியார் இருப்பார். எப்போதும் ஐயர் தான் ஜெயிப்பார். பாரதியாருக்கு ரோஷம் பிறந்து விடும்.மறுபடியும் ஐயரை ஆடச் சொல்லி ஓரிரு முறை தான் ஜயித்த பின் தான் எழுந்திருப்பார்.

 

குவளை கிருஷ்ணமாச்சாரியாரின் அரிய கட்டுரைகள்

பாரதியாரை யானையிடமிருந்து காப்பாற்றிய குவளை கிருஷ்ணமாச்சாரியார் பல சுவையான சம்பவங்களை விவரமாக எழுதியுள்ளார். 1938இல் அவர் ஹிந்துஸ்தான் வாரப் பதிப்பில் எழுதிய கட்டுரை இது.பன்னிரெண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா, பார் நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் என்று பாரதியார் எழுத ஆரம்பித்த பாடல்கள் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு அறுபத்தாறு பாடல்களுடன் நின்றது.

பாரதியாருக்கு இறந்து போன அவரது தந்தை உருவத்தையும் தாய் உருவத்தையும் காண்பித்த கோவிந்தசாமி என்னும் சித்தரைப் பற்றி குவளை கிருஷ்ணமாச்சாரியார் 1939 கலைமகள் எழுதிய சுவாரசியமான கட்டுரையும் இதில் இடம் பெறுகிறது.

இப்படி முக்கியமானவர்களின் எழுத்துக்களின் தொகுப்பைப் படிக்கும் போது பாரதி பக்தர்கள் பரவசமடைவதில் வியப்பே இல்லை.

பாரதியாரைக் கற்கவும் புரிந்து கொள்ளவும் விரும்புவோர் உடனடியாகப் படிக்க வேண்டிய நூல் இது.

எழுதிய அனைவரும் தமிழ் உலகிற்கு ஒரு அரிய தொண்டைச் செய்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.

************