Subrahmanya Siva’s Personal Experience with Miracle Men

SubramaniyaSiva

Article No.1738; Date:- 21  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 17-40 pm

Freedom Fighter Subramanya Sivam (1884- 1925) narrated two personal experiences with miracle men in his Tamil book Moksha Sadhana Rahasyam. But he ignored them as basic siddhis (power to do some miracles) which one attains during the spiritual practice.

A rough translation of what Siva said in Tamil goes as follows:

Vibhuti manifestation

Once I was sitting with my friends. A beggar approached me and pinched me. Vibhuti (holy ash) came in his hand from my body. I suspected some foul play and so I asked him to get Vibhuti from the sand in front of me. He got it just like that and that Vibhuti had the great fragrance of Palani temple (Palani is famous for fragrant smell in Vibhuti. Making Vibhuti/holy ash and exporting it is a big industry even today. Siva wrote it in 1922. The book was published in 1925). His level of knowledge was lower than that of an animal! I asked him how he acquired this power. He told us by practising a particular ‘Vidhyai’ (some mantra or tantra practice), he acquired this power.

Another time a Bairahi (North Indian Wandering Yogis) came to me. I was talking to a Tamil scholar at that time. He asked my friend to go out and told me that he could cure my (leprosy) disease.  He asked me to bring a paper and pen. He signalled the paper to come to him. It moved towards him. I checked whether he is pulling it with a string. No, he didn’t. There was some space between the paper and the floor.

Siva narrates another old story to illustrate the wastage of energy on petty things after a penance. A yogi did practice Yoga for 12 years. One day when he came to the river he put his feet in water. They did not submerge in water. He tried to walk on water and he did succeed. When the Guru saw his feet bone dry, he asked him how come his feet were dry. He boasted about his newly acquired power. Then the Guru told him, “ Look! what you have saved is just a quarter Anna ( equivalent to few Pennys) after 12 long years of penance. If it is the only one use, you could have paid just quarter anna to the boat man and saved your 12 years”.

He advised him not to use such powers for small things but to advance spiritually.

(This story is also found in Ramakrishna Paramahamsa Upadesa Manjari as well. Siva was a great admirer of Sri Ramakrishna and Swami Vivekananda. He was a firebrand patriot and worked with VO Chidambaram Pillay and the great Tamil poet Subramanya Bharati).

The True Friend Who Comes Along With You after Your Death

3 friends

Article No.1737; Date:- 21  March, 2015

Written by S Nagarajan

Uploaded at London time 12-35 pm

BY Santhanam Nagarajan

I read an interesting story which I would like to share with the readers.

A person had three friends. But he felt more attracted towards the two and as to the third he did not bother much, was rather indifferent to him. Once he was in deep distress. He went to his first friend and told him, “I shall have to appear in a court in connection with a charge against me. I am in great difficulty. So you please help me and accompany me to the court?” The friend’s reply was very curt and straight. He said, “what to speak of a court, I can’t go with you a single step even.”

Thus disappointed by the friend this person felt very sad and approached his second friend and explained to him his distress and difficulty and requested him to accompany him to the court. And the second friend said, “You are in distress. Well, I shall only go along with you some distance. But I can’t help you going inside the court and assist you in the case.”

The person grew sadder and when he felt absolutely helpless he went to his third friend of whom he did not so long care to take notice. He spoke out to him about the distress he was in and everything about his friends. The third friend listened to him and not only went to the court along with him but cited such irrefutable proofs of his innocence as a witness in the court that the person was released.

The person then felt that the friend whom he had so long neglected had really rendered him the most sincere service at the time of his danger and distress.

And who are these three friends. Wealth, Relations and virtuous deeds. After death when a person goes to the next world his wealth (the first friend) will be of no avail. The second friend (Relations) will accompany the person only up to the burning ghat or burial ground. But the third friend is a real friend because he was a friend in need and was his savior.

Man’s only friend is his righteous deeds which alone follows him after death. Everything else perishes with his body when the man dies.

The Hindu scriptures emphasize on virtuous deeds. In order to merge with the Brahmam or Supreme Reality, Yoga Vasistha shows the way very simply.

In order to destroy the sins, associate with virtuous people and good deeds. By this, your mind will be purified.

Let the mind be led to the state of purity or righteousness through the study of scripture and by the association of virtuous people.

Three Musketeers

The scriptures or Shastras will teach you relating to the three classes of the objects of human life namely virtue, wealth and enjoyments.

The mind will be purified through the study of scripture and the application of repeated practice.
From the scriptures the knowledge of one’s own self flowing forth from the meanings of the great sayings contained therein, is obtained through one’s own experience, like the sweetness from the juice of the sugarcane.

Once the mind is purified, the Self or Supreme Reality will be realized through oneself through the power of Swabodha or one’s own enlightenment from those precepts.

The Yoga Vasishtha way is a simple way for salvation. The Hindu doctrines are so simple to follow.
**************

மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது?

கல்கி

Research Article No.1736; Date:- 21  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 6-05 am

விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் எந்த தேதியில் (திதியில்) நிகழும் என்று நம் முன்னோர்கள் அழகாக எழுதி வைத்துள்ளார்கள். அதைப் படிக்கையில் அடுத்த அவதாரம், அதாவது மிலேச்சர்களை ஒடுக்கும் கல்கி அவதாரம் எப்போது நிகழும் என்று தெரிகிறது.

1.சைத்ரே மாசி சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் திதௌ விபு:

உதபூம் மத்ஸ்ய ரூபேண ரக்ஷார்தம்  அவனேர்ஹரி:

பொருள்:–சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் (அமாவாசைக்குப் பின் 13-ஆவது நாள்), ஹரியானவர் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவத்தில் பிறந்தார்.

2.ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம்  பகவான் அஜ:

மந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ

பொருள்:– ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் (பௌர்ணமிக்குப் பின்னர் 12-ஆவது நாள்) பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.

3.சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம் ஜக்ஞே நாராயண ஸ்வயம்

புவம் வராஹரூபேண  ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத்

 

பொருள்:– சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் (ஐந்தாவது நாள்) பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றினார்.

4.வைசாக சுக்லபக்ஷே து சதுர்தஸ்யாம் இனே அஸ்தகே

உத்பபூவ  அசுரத்வேசீ ந்ருசிம்ஹோ பக்தவத்சல:

 

பொருள்:– வைகாசி மாத சுக்ல பட்சத்தில் சதுர்தசியன்று (14-ஆவது நாள்), சூர்ய அஸ்தமன காலத்தில்  அசுரர்களின் எதிரியான பக்தர்களின் அன்புக்குப் பாத்திரனான நரசிம்மர் தோன்றினார்.

5.மாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:

அதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா

 

பொருள்:– புரட்டாசி மாதத்தில் சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபர் இருவரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.

பரசுராம

6.மார்கசீர்ஷே த்வீதிய்யாயாம் க்ருஷ்ணபக்ஷே து பார்கவ:

துஷ்ட க்ஷத்ரிய வித்வேசீ ராமோ அபூத் தாபசாக்ரணீ:

 

பொருள்:– மார்கழி மாத கிருஷ்ண பட்ச த்விதியை (இரண்டாம் நாள்) திதியில் துஷ்டர்களான க்ஷத்ரியர்களின் விரோதியான தபஸ்விகளில் முன்னோடியான பார்கவ ராமர் (பரசுராமர்) தோன்றினார்.

7.சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:

தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:

 

பொருள்:– சித்திரை மாதத்தில் சுக்கிலபட்சத்தில் நவமி திதியில் மத்தியான நேரத்தில், ரகு குலத்தில் ராவணனை வதை செய்ய

சாக்ஷாத் விஷ்ணுவானவர் ராமராக தோன்றினார்.

8.வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:

சம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:

 

பொருள்:– வைகாசி மாத சுக்கில பட்ச திருதியை திதியில், கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன், சம்கர்ஷணன் (பலராமன்) தோன்றினார். ஹலாயுத= கலப்பை ஏந்தியவன்

balarama

9.மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே

ப்ரஜாபத்யக்ஷர் சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்

பொருள்:– ஆவணி மாத அஷ்டமி (எட்டாம் நாள்) திதியில் இரவில் தேவகியிடத்தில் கிருஷ்ணர் அவதரித்தார்.

10.மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:

ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி

பொருள்:– கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச (இரண்டாம்) த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.

kalki

மிலேச்சர்கள் யார்?

ரிக் வேதம் (5-29-10), சதபத பிராமணம் ஆகியன கொச்சை மொழி, மிலேச்ச பாஷை பற்றிச் சொன்னதை, சிந்துவெளியில் இருந்த திராவிடர்களைப் பற்றி சொன்னது என்று சில “அறிஞர்கள்’ அழகான கதை எட்டுக் கட்டினர். உண்மையில் வேற்று மொழி பேசும் எல்லோரையும் மற்றவர்கள் ‘’வன்சொல்’’ என்று கேலி செய்வது வழக்கம்.

தமிழர்களை தெலுங்கர்கள் அரவா (சத்தம்) என்று கேலி செய்வர். எபிரேய பைபிளில் அராபியர்களை ‘அரவா’ என்று அழைத்தனர். பார்லிமெண்ட் உறுப்பினர் சேட் கோவிந்த தாஸ், தமிழ் மொழியைக் கிண்டல் செய்யும் போது, ‘’ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குங்கள்—அதுதான் தமிழ் மொழி’’ — என்று கிண்டல் செய்தார். கிரேக்கர்கள், மற்ற எல்லோரையும் காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றழைத்தனர். முஸ்லீம்கள் மற்ற எல்லோரையும் ‘’காபிர்கள்’’ என்றும், கிறிஸ்தவர்கள் மற்ற எல்லோரையும் ‘’பேகன்கள்’’ என்றும் மட்டம் தட்டியது போலாகும் இது. ஆகையால் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் சொன்னதை ஒதுக்கி விடுதல் நலம் பயக்கும்.

யவனர்களை அடியார்க்கு நல்லார், “மிலேச்சர்கள்” என்று சொல்லியது சரியே. தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் முஸ்லீம் மன்னர்களை ‘’வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்’’ —- என்று வசை பாடுவதைக் காண்க. சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வெள்ளைக் காரனையும் ‘’மிலேச்சன்’’ என்று இகழ்ந்ததையும் கருத்திற் கொள்க.

தமிழ் கலைக்களஞ்சியமான ‘’அபிதான சிந்தாமணி’’ யவனர் பற்றிக் கூறுவது:

அ)அரேபியா நாட்டு மிலேச்சர்

ஆ)யயாதியின் மகனான துர்வாசு மரபினர். ஒழுக்கங் குன்றி இவ்விடம் சேர்ந்து இப்பெயர் பெற்றனர்

இதைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் உள்ள குறிப்புகளும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டு  உள்ளன.

அவதாரங்கள்
‘மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.

பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.
யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.

சிந்துவெளி ஆய்வை திசை திருப்பிய சொல்

சிந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். மலக் (மாலிக்) என்ற ஒரு தெய்வத்துக்கு இஸ்ரேலியர்கள் குழந்தைகளைப் பலி கொடுத்ததை பைபிள் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களும் மிலேச்சர்கள் என்ற சப்தத்துள் அடங்குவர்.
முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.

இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வேல்ஸ் மக்களையும் ஜெர்மானியர்களையும் எப்படி மிலேச்சர்களாக கருதினர் என்ற எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன்

நரசிம்மர்
மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட (சாத்யகியால் கொல்லப்பட்ட சால்வன் ஒரு மிலேச்ச மன்னன்;கௌரவர்கள் தர்ப்பில் போரிட்ட அங்க என்பவனும் மிலேச்சன் என்கிறது மாபாரதம்) பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள் என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் வரலாறு காட்டும்.

ஆகவே சிந்து சமவெளி ‘மிளக்கா’வும் இல்லை, அங்கே பேசப்பட்ட மொழி ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு.
முந்தைய கட்டுரைகள்:–

MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012)

“மிலேச்ச” என்றால் என்ன? (Posted on 6 September,2012)

Date of Kalki Avatar!

kalki

Research Article No.1735; Date:- 20th March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 9-23 am

We all know that Lord Vishnu will reincarnate himself as Kalki Avatar at the end of Kali Yuga for “Paritraaya Saadhunaam and Vinaasaaya sa dushkrtaam” (to protect the good and destroy the wicked). Then he will establish righteousness (Dharma sam sthaapanaarthaaya) .

When will this happen? Is there any indication in our scriptures?

Yes, there is a ‘sloka’ (couplet) which clearly tells us the date of his arrival here on earth.

For all the Ten Avatars we have information in the traditional hymns:

அவதாரங்கள்

TEN INCARNATIONS OF VISHNU

Fish – Matsya Avatar/ incarnation – Month Chitra – 13th day in bright half

Tortoise – Kurma Avatar/ incarnation – Month Jyeshta – 12th day in dark half

 

Boar – Varaha Avatar/ incarnation – Month Chitra – 5th day in dark half

Man Lion– Narasimha Avatar/ incarnation – Month Vaisaka – 14th day in bright half of the month – (Sukla Paksha)

 பரசுராம

PARASU RAMA AVATAR (RAMA WITH AXE)

Short man – Vamana Avatar/ incarnation – Month Bhadrapatha – 12th day in bright half of the month – (Sukla Paksha)

Rama with axe – Parasurama Avatar/ incarnation – Month Margasirsha – 2nd day in dark half of the month/ Krishna paksha.

Rama  – Rama Avatar/ incarnation – Month Chitra – 9th day in bright half

Man with a plough – Balarama Avatar/ incarnation – Month Vaisaka – 3rd  day in bright half of the month

balarama

BALARAMA= HALAYUDHA= RAMA WITH A PLOUGH = AGRICULTURAL ENGINEER

Blackman  – Krishna  Avatar/ incarnation – Month Sravana – 8th  day in dark half of the month/ Krishna paksha.

Tenth Avatar

 

Man on a White Horse – Kalki Avatar/ incarnation – Month Bhadrapatha – 2nd  day in bright half of the month – (Sukla Paksha) at the end of Kali Yuga

Masi Bhadrapathe sukla dwitiyaayaam Janardhana:

Mlechaakraantha kalavanthe Kalki rupo bhavishyati

—is the traditional sloka/couplet.

கல்கி

KALKI AVATAR- MAN ON A WHITE HORSE; MLECHAS WILL BE DESTROYED

But nobody knows when the current Kaliyuga will come to an end. Mlechas are interpreted as anti- Hindu or Anti religious.

The foreigners who translated Manu Smrti (Hindu law Book) translated Mlechas as barbarians.

2000 year old Sangam Tamil literature used this word for Romans and Greeks. Tamil commentators are very clear about it.

In Mahabharata , Shalva was a Mlecha king who fought on the side of Kauravas. There was another Shalva who invaded Dwaraka when Krishna was away, but he was defeated by Krishna’s son.

The engineers who built the inflammable House of Lac to kill the Pandavas are described as Mlechas in Mahabharata. Duryodhana borrowed foreign (Greek) ideas to destroy Pandavas.

Anga was another Mlecha in Mahabharata who fought on the side of Kauravas.

Later Sanskrit literature used it for Muslim invaders and British rulers because they were killing cows and eating beef.

The greatest of the modern Tamil poets Subramanya Bharati used the term for Muslim invaders who destroyed Hindu temples.

Tamil Encyclopedia Abidhana Chinatamani gives two more meanings:

1.Arabians

  1. Descendants of Durvasu, Son of Yayati; they were described as Mlechas because they were characterless.

In short Mlechas are those people who are against Hindu Dharma.

நரசிம்மர்

NARASIMHA = MAN LION = DESTRUCTION OF THE WICKED

Foreigners concocted a story saying that Mlechas were the occupants of Indus Valley. But actually those Mlechas were worshippers of Molek. Israelites sacrificed their children to Moloch by burning (Bible- 1 Kings 11-7 and 2 Kings 23-10)

Please read my article:

MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012)

Swami_48@yahoo.com

பிராமணன் மீது நஷ்ட ஈடு வழக்கு! ஒரு பழைய சுவையான கதை!

king

Article No.1734; Date:- 20th March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 9-04 am

மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி, பழி ஓரிடம் பாவம் வேறிடம்

 

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு. முட்டாள் களிடையே மௌனமாக இருப்பதே மேல் என்றும், புத்திசாலிகள் மௌனம் கடைப்பிடிப்பர் என்றும் சம்ஸ்கிருதத்தில் பழமொழிகள் இருக்கின்றன. மௌனம் என்பது அறியாமையைக் காட்டும் என்று நேர் எதிர்மாறாகக் கூறும் பழமொழியும் சம்ஸ்கிருத நூல்களில் வருகிறது. இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.

மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்னும் நூலில் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவம் சொல்லும் கதையை என் சொற்களில் கூறுகிறேன்:-

ஒரு ஊரில் திருடன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு பணக்கார பிராமணன் வீட்டில் திருடுவதாற்காக இரவு நேரத்தில் சென்று சுவற்றில் கன்னம் வைத்தான் (ஓட்டை போடுதல்). அந்தச் சுவர் ஈரமான சுவர். உடனே இடிந்து விழுந்தது. மூச்சுவிட முடியாமல் திருடன் செத்தான்.

திருடர்களின் நண்பர்கள் நஷ்ட ஈடு கோரி பிராமணன் மீது வழக்குத் தொடுத்தனர். அவர், அது தனது குற்றம் இல்லை என்று சொல்லி வழக்கை மன்னன் முன்னிலையில் வைத்தார்.

மன்னன்: ஓய், பிராமணரே! ஏன் இடியும் அளவுக்கு ஈரத்துடன் சுவரைக் கட்டினீர்?

மன்னா! அதை நான் அறியேன். பெரிய கொத்தனார்தான் அதைக் கட்டினார். அவரைக் கேளுங்கள்.

brahmin

யார் அங்கே? பெரிய கொத்தனாரை இழுத்து வாருங்கள்.

ஓய் கொத்தனாரே! சுவற்றை இவ்வளவு ஈரத்துடன் கட்டியதால் திருடன் இறந்துவிட்டான். நீர்தான் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னா! நான் என்ன செய்வேன்? வேலையாள் கலந்துகொடுத்த சிமெண்டை (காரையை) அப்படியே பூசினேன். ஈரக் கலவை பற்றி அவனைத் தான் கேட்க வேண்டும்

யார் அங்கே? சித்தாளை இழுத்து வாருங்கள்.

ஏய், ஏன் ஈரக் கலவையான காரையை அளித்தாய்?

மன்னர் மன்னா? வழக்கத்தைவிட பெரிய பானையை அன்று என் கையில் கொடுத்தான் குயவன். அதில் கொஞ்சம் தாண்ணீர் கூடுதலாகப் போய்விட்டது. நான் குயவனை நம்பியிருந்தேன்.

bricklayer_1

யார் அங்கே? குயவனை இழுத்து வாருங்கள்.

குயவரே! என்ன காரியம் செய்தாய்? வழக்கத்தைவிட பெரிய பானையைக் கொடுத்ததால் ஒரு மரணம் சம்பவித்துவிட்டது. நீயே நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னர், மன்னா! உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நம்மூர் விபசாரி, பேரழகி பகல் நேரத்தில் மேனியை மினுக்கி குலுக்கி, நடந்து சென்றாள் —- அவள் அழகில் மயங்கி நின்றபோது இந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது. அவளை அழைத்து விசாரியுங்கள்.

யார் அங்கே? அந்தப் பேரழகியை இழுத்து வாருங்கள்.

மன்னா! எனது தொழில் தர்மப்படி நான் இரவு நேரத்தில்தான் வெளியே வருவேன். மேலும் எனது வாடிக்கையாளர்களின் நலன் கருத்தி துவைத்த, தூய ஆடைகளை அணிவதே வழக்கம். அன்று வண்ணான்,என் வீட்டுக்குத் துணிகளைக் கொண்டு வராததால் அவன் வீட்டுக்குப் பகலில் நடந்து போனேன். வண்ணான் ஏன் தாமதித்தான்? தயவுசெய்து அதை விசாரியுங்கள்.

potter

யார் அங்கே? அந்த வண்ணானை இழுத்து வாருங்கள்.

மன்னவனே! எனது தொழிலில் மிகவும் முக்கியமான கொள்கை காலத்தில் துணிகளைக் கொடுப்பது. நான் வழக்கம் போல காலையில் சலவைத் துறைக்குச் சென்றேன். அன்று ஒரு சந்யாசி ஆற்றங்கரையில் என் கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரைத் தடுக்க மனமில்லாமல் காத்திருந்தேன். அதனால் தாமதம் ஏற்பட்டது. அது என் பிழையன்று. அந்த சந்யாசி ஏன் என் படித்துறைக்கு அன்று வந்தார்?

யார் அங்கே? அந்த சந்யாசியை அழைத்து வாருங்கள்.

முனிவரே! ஏன் இப்படி வண்ணான் துறைக்கு வந்து துணி துவைத்தீர்?

அந்த முனிவர் அன்று மவுன விரதத்தில் இருந்ததால் எந்த பதிலும் சொல்லவில்லை. எத்தனை முறை கேட்டாலும் அவர் மவுனம் சாதித்தார்.

CIS:4660:1/(IS)

மன்னன்:– அமைச்சரே! இதற்கு என்ன பொருள்?

மன்னர் மன்னா! “மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி”. ஒருவர் தக்க விளக்கம் கூற முடியாதபோது அவர் அதை ஒப்புக்கொண்டதாகவே கொள்ளல் வேண்டும் என்று நமது  நீதி நூல்கள் பகர்கின்றன என்றார் அமைச்சர்.

அப்படியா? இந்த சந்யாசி நஷ்ட ஈடு கொடுக்கும் வரை இவரை சிறையில் அடையுங்கள் என்று மன்னன் உத்தரவிட்டான்.

பழி ஓர் இடம், பாவம் அல்லது பாரம் ஓர் இடம்.

washing clothes

மஹாபாரதத்தில் மாண்டவ்ய முனிவர் கதையிலும் இதையே காண்கிறோம். மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அரண்மனையில் கொள்ளையடித்த நகைகளுடன் திருடர்கள், அந்த ரிஷியின் வீட்டில் ஒளிந்து கொண்டனர். அப்போது ரிஷி, மௌன விரதம் அனுஷ்டித்து இருந்தார். ராஜாவின் சேவகர்கள், அந்த வீட்டில் தேடிப் பார்த்ததில் திருடர்களும் அரண்மனைச் செல்வங்களும் கிடைத்தன. மாண்டவ்யர்தான் அவர்களை ஒளித்து வைத்துவிட்டு, சும்மா மௌனம் இருப்பதாக பாசாங்கு செய்தார் என்று எண்ணி திருடர்களுடன் அவரையும் ராஜாவின் முன்னிலையில் நிறுத்தினர். எல்லோரையும் கழுவேற்றிக் கொல்ல மன்னன் உத்தரவிட்டான். கழுவில் அவர் மட்டும் உயிரோடு நின்றதால் அரசன் தன் தவற்றை உணர்ந்து அவரை விடுதலை செய்தான். மௌனம், ஆபத்தில் முடிந்த கதை இது!

“கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” – கம்பன்

RAMAYANA-BALLET-WEB-BANNER2

இந்தோநேஷிய ராமாயண நாடகம்

கட்டுரை எண்: 1733 தேதி:- 20 மார்ச் 2015

லண்டன் நேரம்:– காலை 5-13

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 13

எழுதியவர்: — ச.நாகராஜன்

ராமன் கதை கேளுங்கள் !

 

சீதையின் திருமணம்

 

ராமன் சீதையை மிதிலையில் கண்டு சிவதனுசை ஒடித்து திருமணம் புரிந்து கொள்வதைக் கதையாகக் கேட்பதென்றால் அனைவருக்குமே காலம் காலமாக ஒரே மகிழ்ச்சி தான்!

கம்பன் சீதையின் முழு அழகை வர்ணிக்க முடியாமல் திணறுகிறான். ஏன், சீதையின் முத்துமாலை அணிவதைக் கூடத் தன்னால் திறம்பட வர்ணிக்க முடியவில்லை என்று அவனே கூறுகிறான் இப்படி:-

கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?

வாள் நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ?

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?

பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை, யான் புகல்வது என்கோ?”

கோலங்காண் படலம் பாடல் 8

முத்துமாலை நட்சத்திரங்கள் கோர்த்த ஒன்றா! நகையில் நிலாத் தவழலா! மார்பில் தவழும் முத்து மாலையை என்ன சொல்லிப் புகல்வேன் நான்?”, என்கிறான் அவன்.

இராமன் வில்லை எடுத்து முறித்ததை அவன் சொல்லும் பாணி உலக இலக்கியத்தில் மிக்க ஏற்றம் பெற்ற தனி பாணி! (Unique style)

கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

 

கார்முகப்படலம் பாடல் 34

அவ்வளவு தான்! சிவ தனுசை எடுத்தது கண்டனர்; பிறகு இற்றது கேட்டனர்!!

இதே இப்படி என்றால் திருமணத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்கிறான் கம்பன்! அப்படித் தனக்குத் திறமை இல்லை என்று சொல்லி அவன் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்தால் நமக்குத் தான் ரசிப்பதில் ரசனைத் திறமை இல்லை என்று நினைக்கத் தோன்றும்!!!

im159.guimet-D

கம்போடிய ராமாயண சிற்பங்கள், கெய்மே மியூசியம், பாரீஸ்

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு பாடலைப் பார்ப்போம்:-

ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்

ஆர்த்தன நால்மறை, ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு

ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன அண்டம்

கடிமணப் படலம் பாடல் 94

இப்படி ஒரு சில பாடல்களே மனதை மயக்குகிறது என்றால் முழு ராமாயணத்தையும் கேட்டால் நாம் சிறகடித்துப் பறக்க மாட்டோம்!

இராமாயணச் சாவடிகள்

காலம் காலமாக ராமாயணம் ஆங்காங்கே நகரங்களிலும் கிராமங்களிலும் ப்ரவசனகர்த்தாக்களால் சொல்லப்பட்டு வந்து கொண்டே இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள், நூல்கள், சுவடிகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. பல சாவடிகள் இதற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக மதுரையில் வடக்குமாசிவீதியில் இராமாயணச் சாவடி என்ற  ஒரு மண்டபத்தை இன்றும் காணலாம். இது போல நாடெங்கும் ஆயிரக்கணக்கில் மண்டபங்கள் உள்ளன.

இது தவிர கோவில்களில் உள்ள மண்டபங்களிலும், ஆற்றங்கரை மேடைகளிலும், இப்படி ராமன் கதை கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

சிப்பிக்குள் முத்து

இதைக் காட்சி அமைப்பாகக் கொண்ட ஒரு திரைப்படம் சிப்பிக்குள் முத்து. (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்). ஆடிஸத்தால் சற்று மனநலம் குன்றிய கமலஹாசன், அன்றைய கதாநாயகி ராதிகா ஆகியோர் நடித்து, தெலுங்கிலும் தமிழிலும் பெரும் வெற்றியைக் கொண்ட இந்தப் படம் வெளியான ஆண்டு 1986. படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான கே.விஸ்வநாத்.

பாடலை இயற்றியவர் வைரமுத்து. பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

அழகிய ஆற்றங்கரை ஓரம் அமைந்த மேடையில் கதாகாலக்ஷேபமாக ராமன் கதை பாடப்படுகிறது.

தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் ராம ஸ்தோத்திர வரிகளில் ஒன்றான “ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ” என்பதும் பாடலில் இடம் பெறுகிறது.

ராமனும், ராமபத்ரனும், ராமசந்திரனும் ஆகிய ராமனுக்கு நமஸ்காரம் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகத்தின் பகுதி மந்திரமாகக் கருதப்படும் ஒன்று.

0603 (1)

கர்நாடாக மாநிலம், ராமாயண சிற்பங்கள்

ராமன் கதை கேளுங்கள்

கமலஹாசன் செருப்பைக் கையில் ஏந்தி வந்து கூட்டத்தில் ஒருவராக அமர்வதையும், இளம் விதவையான ராதிகா தன் குழந்தையுடன் அங்கு இருப்பதையும் சுவாரசியமாக பாகவதர் கதை கூற பக்க வாத்தியங்கள் முழங்க கிராம மக்களுக்கு ஏற்ப எளிய தமிழில் ராமாயணம் இசையுடன் வழங்கப்படுவதையும் காட்சி சித்தரிக்கிறது. நீண்ட கதையாக சொல்லப்படுவதால் பாடல் 6 நிமிடம் 31 வினாடிகள் நீடிக்கிறது!

பாடலைப் பார்ப்போம்:-

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (ராமன் கதை கேளுங்கள்)

சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,

ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,

வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க

ஶ்ரீ ராமசந்திர மூர்த்தி.. கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்

யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார் (புலிகளின்)

தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்

இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

ஆஹா!

நடந்தாள் .. சீதை நடந்தாள்

விழி மலர்ந்தாள் .. சபை அளந்தாள்

வரவு கண்டு, அவள் அழகு கண்டு

சிவ தனுசின் நாணும் வீணை போல அதிர்ந்தது! (ராமன் கதை)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது

உடைபட விழுந்தார் – சிலர் எழுந்தார்

தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட,

சட்டென்று பூமியில் விழுந்தார்

காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்

சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா (ஆஹா)

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ

தசரத ராமன் தான் தாவி வந்தான்

வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்

சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்

மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட

ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு!

அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!!

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

காணக் காண அழகாகுமே

இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே (காண)

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

ஶ்ரீராமனே அதோ பாரப்பா.. ..

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீரகுராமன் கதை கேளுங்கள்!

தசரத ராமா! ஜனகன் உன் மாமா!!

“வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார்”, “தசரத ராமா, ஜனகன் உன் மாமா”, போன்ற சொற்றொடர்கள் கிராமத்தினரை மனம் மகிழ வைக்கும், இல்லையா! இளையராஜாவின் இசைத்திறனை கம்பனின் பாணியில் ‘வர்ணிக்க வார்த்தைகள் இல்லை’ என்று சொல்லி விட வேண்டியது தான்!

ராமாயணத்தை, அதிலும் சீதா திருமணத்தைப் படம் தந்தது என்ற மகிழ்ச்சியில் அதைப் பாராட்டலாம் இல்லையா, நிச்சயமாக!

*******

Silence is NOT Golden!

king

Written by London swaminathan

Article No 1732; Date 19th March 2015

Uploaded at 10-19 am London Time (GMT)

Silence is golden is a proverbial saying in English. The origin of this phrase is in Sanskrit literature. But we see contradictory statements in the literature as well. ‘Silence amounts to consent’ is another saying in Sanskrit. There are a few interesting anecdotes in our literature about silence.

No answer itself is the answer – says ‘Ratnasamuccaya’

The wise should observe silence –  says ‘Subhasitaratna bhandakara’

All is achieved through silence – is found in ‘Pancatantra’

Silence is the ornament for the ignorant – says ‘Niticataka’-6

If telling the truth causes anguish, better be silent – is the saying in ‘Vishnu Purana’ 3-12-3

(Source: ‘Suktisudha’, Chinmaya International Foundation)

brahmin

Compensation case against an innocent Brahmin!

Freedom Fighter Subrahmanya sivam narrates a story in Tamil in his book ‘Moksha Sadhana rahasyam’ and a rough translation goes like this:

A thief made a hole in the wall of a wealthy Brahmin’s house to steal away his money. Unfortunately the wall was very wet and fell on him. He died on the spot. His relatives sued the Brahmin for compensation. He took the case to the king saying that it was unfair to ask money from him for a dead thief.

But the king wanted to find out the cause. He asked him, “why did you leave the wall so wet that it fell at the touch of a person?”

bricklayer_1

O King! I don’t know the reason. Better ask the builder. It is a new wall built just a day ago.

The builder was summoned immediately.

Why did you do a shabby work? You have to pay the compensation to the family of the thief, said the king.

The builder said, O King! I don’t know the reason. Probably the worker mixed the cement with much water.

Immediately the building worker was summoned.

Why did you pour more water? The thief died because of you. You have to pay the compensation  – said the king

Building worker said, O King! I don’t know the reason. The pot was unusually big. Better ask the potter about it.

Immediately the potter was summoned.

Why did you give him a bigger pot on that day? Look at what you have done. Pay the compensation to the family

potter

He said, O King! It is true I made the pot bigger on a particular day. But that was because of a beautiful prostitute walked past me in broad day light. And I was looking at her beauty. It was unusual for her to walk in our street at that time of the day. So she has to pay the compensation.

Immediately the prostitute was summoned to the court.

She said, O King! It was not my fault. I never walk in the streets during day time. On that day the washer man did not deliver the clothes. I always present myself to the clients with clean clothes. So I had to go to washer man’s house to collect my clothes. You have to ask the washer man for the delay.

Immediately the washer man was summoned.

CIS:4660:1/(IS)

Washer man said, O King! It was not my fault. As usual I went to the banks of the river in the early in the morning. An ascetic was washing his clothes in my place. So I did not want to disturb him. I could not finish my work at the usual time. Please ask the saint why he came to my place on the day.

Immediately the ascetic was summoned.

He was observing silence on that day. He did not bother to answer the questions of the king.

Then the ministers quoted the saying, Silence means Yes. So they unanimously decided that the ascetic was the culprit. The ascetic was detained!!

washing clothes

Silence trapped one more saint in another case in the Mahabharata. When thieves were hiding in Sage Ani Mandavya’s house, he was observing silence. When royal servants found the thieves in his house with the stolen property, he was also dragged to the court and he was sentenced to death. He was impaled with other thieves, but he survived the impalement due to his penance and was released later.

Is silence golden? You decide!

கூப்பிடு தூரத்தில் இறைவன்!

disrobing-of-Draupadi-

Written by London swaminathan

Article No 1731; Date 19th March 2015

Uploaded at 9-48 am London Time (GMT)

கதை சொன்னவர் சுப்ரமண்ய சிவா; புத்தகத்தின் பெயர்: மோக்ஷ சாதன ரஹஸ்யம்; வெளியிட்ட ஆண்டு 1925

(சொற்கள் என்னுடையவை)

தஞ்சாவூரில் பெரியதாசர் என்று ஒரு சிறந்த பக்தர் இருந்தார். அவர் சதா சர்வ காலமும் இறை வழிபாட்டிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்தார். அவருடைய பெருமை அரசன் காதுகளையும் எட்டின. ஒரு நாள் அரசனே நேரே வந்தான். கொஞ்சம் பேச்சுக் கொடுத்துவிட்டு, கடவுள் எங்கே இருக்கிறார்? என்றார்.

உடனே பெரியதாசர் கொஞ்சமும் தயங்காமல் கடவுள் “கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்” என்றார். பெரிய தத்துவார்த்த பதிலை எதிர்பார்த்த அரசனுக்கு இப்படி அவர் பதில் கூறியது என்னவோ போல இருந்தது. தன்னை பெரியதாசர் கிண்டல் செய்கிறாரோ என்று தோன்றியது.

அப்படியா? இதோ என் சேவகர்களை அனுப்பி கூப்பிடு தூரத்தில் தேடிப் பார்க்கிறேன் என்றார்.

(ஒருவர் கூப்பிடும் குரல் எவ்வளவு தூரம் வரை கேட்கிறதோ அதைக் கூப்பிடு தூரம் என்று தமிழில் செப்புவர். ஆங்கிலத்தில் இதை Hailing Distance ஹெய்லிங் டிஸ்டன்ஸ் என்பர்)

சப்தம் போட்டுக் கூப்பிட்டுவிட்டு அவ்வளவு தூரம் வரை சேவகர்களை அனுப்பிப் பார்த்ததில் கடவுளின் சுவடே தெரிய இல்லை.

PONRHanumanSacredHeart400

பெரியதாசரிடம் அரசன் சொன்னார்: “அரசனிடம் பொய் சொல்லுவது பெரிய குற்றம். அது உங்களுக்குத் தெரியும். உண்மையைச் சொல்லுங்கள் கடவுள் எங்கே இருக்கிறார்?”

நான்  தான் முன்னமே சொன்னேனே! கடவுள் கூப்பிடு தூரத்தில் இருக்கிறார் என்று.

நான் தேடிப் பார்த்தேன் கடவுள் கூப்பிடு தூரத்தில் இல்லையே- என்றான் அரசன்.

பெரியதாசர் சொன்னார்: மன்னவனே; திரவுபதி கதை உனக்குத் தெரியாதா? அவளைத் துச்சாதனன் சபைக்கு இழுத்து வந்து அவளது புடவையை உருவினான். ஒரு பெண்ணுக்கு உலகில் இதைவிடப் பெரிய கொடுமை ஏதும் இல்லை. உயிரே போனாலும் பரவாயில்லை; மானம் போகக் கூடாது என்று பெண்கள் நினைப்பர். அவள் தனது இரு கைகளாலும் புடவையைப் பிடித்துக் கொண்டு, “அடே கண்ணா, துவாரகாபுரீவாசா, என்னைக் காப்பாற்று” – என்று கதறினாள்.

துவாரகாபுரீவாசன், நாமோ ரொம்ப தூரத்தில் உள்ளோம். அவளோ தன் புடவையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறாள் என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டார்.

நேரம் ஆக, ஆக திரவுபதிக்குத் தெரிந்துவிட்டது. இனி மனித முயற்சியில் ஒன்றும் நடவாது என்று உணர்ந்து, இரு கைகளையும் உயரே உயர்த்தி, “அடே ஹ்ருதய கமலவாசா! உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்”– என்று கதறினாள். அடுத்த நொடியில் உலக மஹா அற்புதம் நிகழ்ந்தது. துச்சாதனன் உருவிட, உருவிட புடவை வளர்ந்தது. அவன் மயக்கம்போட்டு வீழ்ந்தான். எப்படி?

துவாரகாபுரீ வாசா என்று அவனைத் தொலைவில் வைத்து, தன்னுடைய  இரு கைகள் மீது நம்பிக்கை வைத்த வரை கிருஷ்ணன் தனது ஆசனத்தை விட்டு அகலவில்லை.

இருதய கமல (இதய தாமரை) வாசா என்று “கூப்பிடு தூரத்துக்குள்” வைத்து அழைத்தவுடன், வெளியே குதித்த கண்ணன், அவளைக் காப்பாற்றினான். கூப்பிடு தூரம் என்பது அவரவர்கள் இறைவனைப் பக்கத்தில் வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பதைக் காட்டும் சொல் என்றார்.

ramais in heart

அரசனுக்கு இந்தப் பதில் நல்ல திருப்தியைத் தந்தது. பெரியதாசரின் பெருமையை உணர்ந்து அவரது காலடியில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றான்!

அன்பர்களே, இந்தக் கதை புகட்டும் நீதி என்ன?

உள்ளத்தில் கடவுளை வையுங்கள்; அவன் மீது முழுநம்பிக்கை வையுங்கள். முழு நம்பிக்கையோடு கூப்பிட்டால் உடனே வருவான், அருள்வான்.

இருதய கமல வாசன் வாழ்க! இருதயங்கள் வெல்க!!

செம்மறி ஆட்டுக் கூட்டம்!

aattu mandhai

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

 Article No 1730; Date 19th March 2015

Written by S Nagarajan

லண்டன் நேரம் காலை 4-55 am

 

24. செம்மறி ஆட்டுக் கூட்டம்!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

अपराह्नच्छायान्यायः

aparahnacchaya nyayah

அபராஹனச்சாயா நியாயம்

சாயாநிழல்

மாலை நேர நிழல் பற்றிய நியாயம் இது

ஒருவனின் வாழ்க்கையில் வளம் குன்றிக் கொண்டே போகிறது. அல்லது பாசத்தின் அடிப்படையிலான நெருக்கம் தேய்பிறை போலக் குறைந்து கொண்டே வருகிறது. அப்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். மங்கும் செல்வம் அல்லது குறையும் உறவின் நெருக்கம் ஆகியவை மாலை நேர நிழலுக்கு ஒப்பிடப் படுகிறது. இருள் சூழும் போது நிழலும் இருக்காது. அது போல இன்னும் சிறிது காலத்தில் இப்போது இருப்பதும் போய் விடும்.

shadow-on-the-farm

इषुवेगक्षयन्यायः

ishuvegaksaya nyayah

இஷுவேகக்ஷய நியாயம்

வில்லிலிருந்து விடுபட்ட அம்பு பற்றிய நியாயம் இது.

வில்லிலிருந்து ஒரு அம்பு எய்யப்பட்டவுடன் அது இலக்கை நோக்கி வேகமாகச் செல்லும். அது தனது இலக்கைத் தாக்கும் வரை ஓயாது. அது போல ஒரு இலட்சியத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதன் தன் இலட்சியத்தை அடையும் வரை ஓயமாட்டான். தன் இலட்சியத்தை அடைந்தவுடன் எப்படி அம்பை எய்தவுடன் ஒருவன் வில்லைக் கீழே வைக்கிறானோ அதே போல அவனும் தன் கருவிகளைக் கீழே வைத்து விட்டு ஓய்வு எடுப்பான்.

கருமமே கண்ணான ஒருவன் பற்றிய செய்யுளை ஏற்கனவே பார்த்துள்ளோம்:-

குமரகுருபரர் இயற்றியுள்ள நீதிநெறி விளக்கம் நூலில் 52வது பாடலாக அமைந்துள்ளது இது.

மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்                              எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி                             அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்                                       கருமமே கண்ணாயினார்

செவ்வி அருமை – காலத்தின் அருமை

aaddu

गड्डरिकाप्रवाहन्यायः

gaddarikapravaha nyayah

கட்டரிகா ப்ரவாஹ நியாயம்

தொடர்ந்த ப்ரவாஹத்தைக் குறிக்கும் நியாயம் இது.

நாம் அனைவரும் அறிந்த செம்மறியாட்டுக் கூட்டம் பற்றிய நியாயம் இது. ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் ஒரு ஆடு கிணறில் தவறி வீழ்ந்து விட்டால், அனைத்து ஆடுகளும் கிணற்றில் விழும்.

ஒரு செயல் சரியா, தவறா என்பதையெல்லாம் பாராது, குருட்டுத்தனமாக ஒருவன் செய்யும் செயலையே அனைவரும் செய்ய ஆரம்பித்தால் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல என்ற இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். சாய்ஞ்சா சாயற பக்கமே சாயற செம்மறி ஆடுகளா என்று திரைப்படப் பாடல் ஒன்று கூட இதைச் சுட்டிக் காட்டுவதை நோக்கலாம்.

எறும்பு

घुणाक्षरन्यायः

ghunaksara nyayah

குணாக்ஷர நியாயம்

பூச்சி ஒன்று மரத்தில் எழுத்தைப் பொறித்தது பற்றிய நியாயம் இது. மரத்தில் பூச்சி ஊர்ந்து ஏற்படுத்தியவை எழுத்துக்கள் போல தற்செயலாக அமைந்திருப்பதைப் பார்த்து விட்டு வியக்கிறோம். பழைய புத்தகத்தைப் பிரித்துப் பார்க்கும் போது உள்ளே பூச்சி அரித்ததால் ஏற்பட்ட அரிப்பு எழுத்துப் போல இருப்பதைப் பார்த்து வியக்கிறோம்.

தற்செயலாக அல்லது அதிர்ஷ்டவசமாக ஏற்படுவனவற்றைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படும்.

oil pan

तदागमे हि तद दृश्यते

tadagame hi tad drisyate

ததாகமே ஹி தத் த்ரிஷ்யதே நியாயம்

ஒரு அரிய குணம் இயல்பாக வராமல் வேறு இடத்திலிருந்து அடையப்பட்டிருப்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டும்.

தீ மூட்டப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாகவே எண்ணெய் கொதிக்கிறது. ஆகவே வெப்பம் என்பது எண்ணெயினால் ஏற்பட்ட ஒன்றில்லை; அது தீயினால் ஏற்பட்ட ஒன்று. இன்னொருவன் மூலம் அடையப்பட்ட குணத்தை அல்லது சக்தியை அல்லது ஒரு பேறை ஒருவனுக்குரியதாக எண்ணி விடக் கூடாது அடுத்தவனிடம் கடன் வாங்கிப் பெற்று மகுடம் சூடிக் கொள்வதை இந்த நியாயம் எடுத்துக் காட்டுகிறது.

*************

மன்னர் – முனிவர் இடையே சுவையான உரையாடல்!

guru_disciple-336x352

Article No 1729; Date 18th March 2015

Written by London swaminathan

லண்டன் நேரம் காலை 8-15

வைசம்பாயனர் – ஜனமேஜயன் உரையாடல்

ஆதாரம் – சுதந்திராநந்தர் சுப்ரமண்ய சிவா எழுதிய மோக்ஷ சாதன ரஹஸ்யம் – ஆண்டு 1925, புத்தக இருப்பிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னர் மன்னவா! உனக்கு மஹாபாரதம் என்னும் மகத்தான இதிஹாசத்தை அறிமுகப்படுத்த ஆவல். தங்கள் சௌகரியம் எப்படியோ?

மன்னன் ஜனமேஜயன்:

முற்றும் துறந்த முனிவரே! உம்மைப் போன்ற அவகாசம் எமக்கில்லையே. இறைவன் இன்னும் இரண்டு கைகள் கொடுத்து, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்றால் கூட எனக்கு நேரம் போராதே! எனக்கு தலைக்கு மேலே பல வேலைகள் உள்ளன.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னா! கவலை வேண்டாம். மஹா பாரதத்தில் உள்ள 18 பர்வங்களையும் சொல்லாமல் ஒரே ஒரு பர்வம் மட்டும் சொல்கிறேன்.

மன்னன் ஜனமேஜயன்:

வேண்டவே வேண்டாம்; ஒரு நிமிட அவகாசம் கூட எனக்கில்லை.

முனிவர் வைசம்பாயனர்:

(பொறுமைக்கு இலக்கணமானவர் வைசம்பாயனர்; ஆகையால் விடவில்லை) – அதனால் என்ன மன்னா? ஒரு அத்தியாயம் மட்டும் சொல்கிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

முனிவரே, உமக்கு அரசாட்சி என்றால் என்ன என்றே புரியவில்லை, பாரும்! இன்னும் எத்தனை முறை சொல்ல வேண்டும்? எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை. இல்லவே இல்லை!

guru-shishya (1)

முனிவர் வைசம்பாயனர்:

புரிகிறது, புரிகிறது, நன்றாகவே புரிகிறது. மாபாரதத்தில் மொத்தம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு ஸ்லோகம் மட்டும் சொல்லுகிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

சரி, சரி! ஒன்றே ஒன்று. நேரத்தை வீணடிக்காமல் சட்டென்று சொல்லும்.

முனிவர் வைசம்பாயனர்:

துரியோதனன் போய் பசுக்களை அபகரித்து வந்தான் (ஆநிரை மீட்டல்). பெரிய யுத்தம் நேரிட்டது. துரியோதணன் செத்தான். போய்ட்டு வரட்டுமா?

இவ்வாறு சொல்லிக் கொண்டே எழுந்தார்.

மன்னன் ஜனமேஜயன்:

சுவாமிகளே! நில்லுங்கள். துரியோதணன் மாபெரும் மன்னன். அவன் போய், பசுக்களை எதற்காகத் திருட வேண்டும்? புரியவில்லையே. கதையில் ஏதோ தப்பு இருக்கிறது.

முனிவர் வைசம்பாயனர்:

ஓ, அதுவா? அவன் ஏன் பசுக்களைக் கவர்ந்தான் என்றால் …………………………………

இப்படியாக விளக்கம் சொல்லவும், ஜனமேஜயன் மேலும் ஆர்வம்கொண்டு பல துணைக் கேள்விகளைக் கேட்டான். ஒவ்வொன்றுக்காக அவர் பதில் சொல்லச் சொல்ல முழு மஹாபாரதத் தையும் சொல்ல வேண்டிவந்தது.

ஒரு லட்சம் பாடல்களைக் கொண்ட—இரண்டு லட்சம் வரிகளைக் கொண்ட – பத்து லட்சம் சொற்களைக் கொண்ட — ஏராளமான உபகதைகளைக் கொண்ட – மஹாபாரதம் – காலத்தை வென்ற ஒரு காவியம். கேட்கக் கேட்க தெவிட்டாத இலக்கியம். உலகிலுள்ள எல்லாம் அதில் உள. அதில் உள்ள எல்லாவற்றையும் உலகில் ஒரே இடத்தில் காண்பது அரிது.

வாழ்க மஹா பாரதம்! வளர்க சொற்பொழிவாளர்கள்!!