அதிசய புத்த துறவி ஸு யுன்! – 11 (Post No.3039)

buddha museum

Article Written S NAGARAJAN

Date: 6th  August 2016

Post No. 3039

Time uploaded in London :– 6-14 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 11

ச.நாகராஜன்

 

சிரித்தவாறே விடை பெற்ற ஸு யுன் தன் பயணத்தைத் தொடர்ந்து டெங்சாங் என்ற இடத்தை அடைந்தார். அது பர்மாவின் எல்லையில் உள்ள நகரம். அங்கு தனது ஆலயத்திற்காக நிதி திரட்ட முனைந்தார் ஸு யுன்.

 

ஹுனான் கில்ட் ஹால் என்ற இடத்தில் தன் பைகளை அவர் வைக்கும் முன்னரே சிலர் அவரிடம் வந்து அவரை வணங்கினர்.

 

“பூஜ்யரே! எங்களுக்கு சூத்ரங்களைக் கேட்க ஆவலாக உள்ளது” என்றனர்.

 

“இங்கு சூத்திரங்களைச் சொல்வதற்காக நான் வரவில்லை” என்றார் ஸு யுன்.

“உங்களைப் போன்ற துறவிகள் சூத்திரங்களைச் சொல்வது வழக்கம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்” என்றார் அவர்களில் ஒருவர்.

 

“இந்தப் பகுதியில் உள்ள துறவிகளின் பழக்கம் பற்றி நான் ஒன்றுமே அறியேன்” என்றார் ஸு யுன்.

 

உடனே கில்ட் ஹாலின் தலைவர் இடைமறித்துக் கூறினார்”

“அன்புள்ள ஐயா! நீங்கள் இவர்களுக்காக சூத்திரங்களை நிச்சயம் சொல்ல வேண்டும். இவர்கள் புனிதர் என்று அழைக்கப்படும் ‘வூ’ வின் வம்சாவளியினர். அவர் 80 வயது வரை வாழ்ந்தவர். பல டஜன் குழந்தைகளைப் பெற்றவர்.  அவ்ர்களில் பல பண்டிதர்கள் உண்டு. அந்தப் பெரியவர் சில நாட்களுக்கு முன்னர் தான் காலமானார். இறப்பதற்கு முன்னால் தான் முன் பிறப்பில் ஒரு துறவியாக இருந்ததாகவும், தான் இறந்த பின் துறவிக்குரிய ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்றும் வீட்டில் உள்ள யாரும் அழக்கூடாது என்றும் எந்த ஒரு மிருகத்தையும் இறந்ததையொட்டி விருந்திற்காகக் கொல்லக் கூடாது என்றும், அங்கிருக்கும் டாயோயிஸ்ட் பண்டிதர்கள் யாரையும் ஈமச் சடங்கிற்காக அழைக்கக் கூடாது என்றும் கூறினார்.

 

 

ஒரு பெரிய துறவி இங்கு வருவார் என்றும் அவர் தன்னை  முக்தி பெறச் செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதைக் கேட்டவுடன் மறைந்த அந்தப் புனிதரின் இல்லத்திற்கு வர சம்மதித்து ஸு யுன் அங்கு சென்று அவரின் ஆன்மா சாந்தியடையவும் பசியோடிருக்கும் ஆவிகளின் பசிக்கு உணவாகவும் சூத்திரங்களை ஓதினார்.

gautam-buddha-PZ98_l

அந்த மாவட்ட அதிகாரிகள் அனைவரும் ஒருங்கு திரண்டு வந்து ஸு யுன்னிடம் அவர் அங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டினர்.

ஆனால் ஸு யுன் தான் காக் ஃபுட்டில் உள்ள ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிதி திரட்டவே அங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

 

இதைக் கேட்டு மகிழ்ந்த அவர்கள் கணிசமான நிதியைத் திரட்டி அவரிடம் கொடுத்தனர்.

 

ஸு யுன் தனது மலைக்குத் திரும்பினார். அங்கு ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தார். அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கி வழங்கினார். அவர்களுக்குத் தியானப் பயிற்சியை அளித்து ஒழுக்க முறைகளைக் கற்பித்தார்.

 

புத்தமத நெறிகளை போதித்தார்.

 

அந்த வருடம் ஆண் பெண் என இருபாலார் மற்றும் துறவிகள் என்று எண்ணிக்கை எழு நூறைத் தாண்டியது.

இந்த ஆலயத்தின் நெறிகளையும் செயல்பாட்டையும் பார்த்த ஏனைய மலையில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் இதே நெறிகளையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தொடங்கின.

 

 

துற்வற ஆடைகளை முறைப்படி அங்குள்ள துறவிகள் அணிய ஆரம்பித்தனர்.

 

அனைவரும் ஸு யுன்னிடம் வந்து அவரது ஆலயத்தில் தங்கி அவரது போதனைகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

 

ஸு யுன்னுக்கு 65 வயது நிறைவடைந்தது.

***********.

 

Black Money and White Money in Sanskrit Literature! (Post No.3038)

currencies

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3038

Time uploaded in London :– 17-35

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Sanskrit is the richest and the oldest language in the world. All subjects under the sun are dealt with by the Sanskrit poets. If we take other ancient languages, they lack in many respects. Moreover, they are all younger than Sanskrit. Sanskrit literature is available from the Vedic days (at least 1400 BCE) whereas Greek literature is available only from 8th century BCE and Tamil literature only from the first century BCE. Chinese and Hebrew literature may be older than Greek, Tamil and Latin but not as comprehensive as Sanskrit or Greek. No Indian can speak even for five minutes without a Sanskrit word!

Currency-of-the-world-006

When I call Sanskrit the oldest language, I say it on the basis of archaeological evidence (Bogazkoy inscrription, Dasaratha letters in Egypt, Kikkulis Horse manual in Turkey and Mitannian civilization and literary evidence (The Rig Veda) available today. Unfortunately, we don’t know yet the language spoken by the Indus people.

 

Let us look at some couplets about white and black money in Sanskrit:–

 

Rough Translation OF THE Sanskrit couplets given at the end: –

“Since we need money for everything it is necessary to earn it.

Three different tasks are there: Protecting what you have earned, increasing it (by way of investing) and enjoying it.

There are three kinds in it; they are white, mixture of both and black/coloured/stained.

Those can be divided into seven each;

Earning money by teaching, heroism, penance, kanyaa dhaanam (money when you get by marrying your daughter), by fire sacrifice, earning through your disciples (probably Guru dakshina) and treasure found are the seven that come under WHITE MONEY (sukla+aarjanam);

 

Earning through interest, agriculture, business, tax, arts, anuvrddi (side business or byeproducts) and reciprocal money (you do some favours and they give you money) are the seven that come under spotted or STAINED (sabalam) MONEY.

Money earned by slavery (servitude), gambling, begging, blackmailing, impersonation, heroic acts (goonies)  and fraudulent business are the seven that come under BLACK MONEY”.

 

My comments: —

Nowadays we use the terms white money, black money and stained hands; probably these came in vogue from these Sanskrit slokas/couplets.

 rupee6

Sanskrit slokas:–

 

Dhanamuula: kriyaasarvaa atastasyaarjanam matam

Vardhanam rakshanam bhoga iti tasya vidhi: kramaat

 

Tat punastrividham njeyam suklam sabalameva sa

Krushnam sa tasya vinjeya: prabedassapatadhaa puna:

 

Sratasaurya tapa: kanya yaajya sisyaanvayaagatam

Dhanam saptavidham suklamudayopyasya tatvidha:

Kusiida krsivaanijya suklasilpaanu vruttibhi:

Ktopakaaraadhaaptam sa sabalam samudaahrutam

Paarsvagadhyuuta dainyaarti pratruupaka saahasai:

Tyaajenoopaarjitam yassa tat krsnam samudaahrutam

 

Yathaa vidhena dravyena bhaktimsehakarotyayam

Tatvidham palamaapnoti tatpalam pretyaseha sa

 

–SUBHAM–

புதிய ஐடியாக்கள் -New Ideas from STRATFORD UPON AVON (Post No.3037)

IMG_0225

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3037

Time uploaded in London :– 9-47 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் ரோம், நியுயார்க், ஸ்டாக்ஹோம் போன்ற நகரங்களுக்குச் சென்று வந்த பிறகு புதுப் புது யோஜனைகளை எழுதி இந்தியர்களும் இப்படிச் செய்யலாமே என்று எழுதினேன். இங்கே ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்ட்ராட்போர்ட் அபான் ஏவன் STARTFORD UPON AVON என்ற இடத்தில் விற்கப்படும் காந்த வில்லைகலையும் MAGNETS ஒரு மெஷினையும் பாருங்கள். மேலை நாடுகளில் எந்த ஊருக்குப் போனாலும் பிரிட்J FRIDGE மேல் பொருத்த மாக்னெட் கிடைக்கும். அதில் படமோ மேற்கோளோ பொன்மொழியோ இருக்கும். இது போல நாமும் பாரதி, கம்பன், ராகவேந்திரர், தியாகராஜர் பொன்மொழி ளை காந்த வில்லைகளாக விற்கலாம். எல்லா இடங்களிலும் அதுவது அல்லது அவரவர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், படங்கள் விற்கப்படுகின்றன.

 

IMG_4711

படத்தில் காட்டிய மிஷினில் ஒரு பென்னி அல்லது இண்டு பென்ஸ் காசுகளை நுழைத்தால் SHAKESPEARE படத்துடன் அது வெளியே வரும். இது போல நாமும் ஒரு காசை நுழைத்தால் கம்பன், பாரதி படம் அல்லது பொன் மொழியோடு வரச் செய்யலாம்.

 

IMG_4709

 

IMG_4502

இது போல நாமும் நம் கவிஞர்களின் படைப்புகள் பற்றி சுருக்கமாக போர்ட் அல்லது போஸ்டர் வைக்கலாம்

இது போல அந்தக் கால உடைகளில் நாமும் கவிஞர்கள், சரித்திர நாயகர்கள், ராஜா-ராணிகளின் கதைகளை அவரவர் பிறந்த இடத்தில் நடித்துக் காட்டலாம். இவர்கள் இருவரும் 37  நாடகங்களிலிருந்து முக்கிய கட்டங்களை நடித்துக் காட்டுவர்.

 

IMG_4577

 

Shakespeare’s Birth Place at Stratford upon Avon- two hours’ drive from London: Every time I go to a country or a place, I write about new ideas for Indians to follow (Please see my ideas from New York, Stockholm and Rome).

 

Why dont we sell the quotations of Kamban, Bharatiyar and others on magnets so that we fix them on the Fridges. We always buy fridge magnets whenever we go to a country or a city. Look at the Shakespeare quotations here. And see the machine: if you insert one penny or two pence coin you will get a picture embedded on it. We can also do such things at the birth places of Ragavendra, Bharathy, Kamban, Thyagaraja etc.

மண்டை ஓடு போல காப்பிக் கோப்பைகள்

IMG_4716

திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post No.3036)

260px-Japanesethieves

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3036

Time uploaded in London :– 7-52 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

kili 2

சம்ஸ்கிருதத்தில் திருட்டுக் கலை பற்றி தனி நூல்களே இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அளவுக்கு பரந்த வீச்சு உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. காம சாஸ்திரம், விமான சாஸ்திரம், ஆயுர்வேதம், மூலிகை விஷயங்கள், திருட்டு சாஸ்திரம்,  ஜோதிட சாஸ்திரம், இலக்கணம், இலக்கியம், தர்க்க சாஸ்திரம், நாடகம், கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள், சட்ட நூல்கள்,  நிகண்டு, மொழியியல்  என பல நூறுவகை விஷயங்கள் அதில் அடக்கம். எனக்குத் தெரிந்தவரை, கிரேக்க மொழி இதற்கு கொஞ்சம் பக்கத்தில் வரும். ஆனால் கிரேக்க மொழி சம்ஸ்கிருதத்தை விட குறைந்தது 600 வருடமாவது வயது குறைந்த மொழி.

நிற்க.

 

திருடர்கள் இரண்டு வகை என்கிறார் உலகின் முதல் சட்டப் புத்தகத்தை எழுதிய மனு. அதில் சோதிடர்கள், குறி சொல்லுவோர், ரேகை சாத்திரக்காரர் கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்!

 

இதோ அவர் எழுதிய மனு ஸ்மிருதியில் உள்ள சில பாக்கள் (ஸ்லோகங்கள்):–

 

ப்ரகாச வஞ்சகா: தேஷாம் நானா பண்ய உபஜீவின:

ப்ரச்சன்ன வஞ்சகா: து ஏதே யே ஸ்தேன ஆடவிகாதய:

 

உத்கோச  காஸ்ச: பதிகா: வஞ்சகா: கிதவா: ததா

மங்களாதேசவ்ருத்தா: ச பத்ரா ச ஏகக்ஷணிகை: சஹ

 

அசப்ய காரிணை: ச ஏவ மஹாமாத்ரா சிகித்சகா:

சில்யோபசாரயுக்தாஸ்ச நிபுணா: பண்யயோஷித:

மனு 9-258 -260

 

 kili 5

மனு 9-256

உளவாளிகள்தான் அரசனுக்குக் கண்கள்; அவர்கள் மூலமாக மக்களின்  உடைமைகளைத் திருடும்  வெளிப்படைத் திருடர்கள், மறைமுகத் திருடர்கள் ஆகிய இரண்டு வகைத் திருடர்களையும் அரசன் கண்டுபிடிக்க வேண்டும்

 

மனு 9-257

வணிகத்தில் மோசடி செய்யும் அனைவரும் வெளிப்படைத் (தெரிந்த) திருடர்கள்; வீடு புகுந்து திருடுவோர், காடுகளில் வழிப்பறி செய்வோர் முதலியோர் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-258

லஞ்சம் வாங்குவோர், மோசடிப் பேர்வழிகள், ஏமாற்றுப் பேர்வழிகள், சூதாட்டக்காரர்கள்,  மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவோர், குறி சொல்லுவோர்…………..

 

மனு 9-259

முறையற்ற வழியில் ஈடுபடும் மந்திரிகள், டாக்டர்கள், கலைகள் மூலம் சம்பாதிப்போர், வேசிகள்………….

 

மனு 9-260

இப்படிப்பட்டோர் வெளிப்படைத் திருடர்கள்; நல்லோர் வேஷம் போட்ட கீழ் ஜாதியார் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-261

இப்படிப்பட்ட திருடர்களை ரகசிய உளவாளிகள் மூலம் கண்டுபிடித்தவுடன் அவர்களைக் குற்றம் செய்யும் சூழ்நிலையை உருவாக்கி அதில் சிக்கவைத்து  கையும் களவுமாகப் பிடிக்கவேண்டும்.

மனு 9-262

ஒவ்வொருவர் செய்த தவறு என்ன என்பதைச் சொல்லி, தவற்றுக்கு ஏற்ற அளவு தண்டணை கொடுக்கவேண்டும்.

மனு 9-263

இந்தப் பூமியில் அமைதியாக உலவிவரும் தீயோரின்  நடவடிக்கைகளை  தீயோரைத் தண்டிப்பது ஒன்றினால்தான் செய்ய இயலும்.

மனு 9-264— மனு 9-266

சபைகள், சாலை ஓர நீர் குடிக்கும் இடங்கள், தாசி வீடுகள், உணவு விடுதிகள் (ஆப்பக் கடைகள்), மதுபானக் கடைகள், முச்சந்திகள், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூடும் இடங்கள், புனித மரங்கள், தோட்டங்கள், கலைஞர் வீடுகள், காலியாக இருக்கும் மனைகள், பொட்டல் காடுகள், புதர் மண்டிய பிரதேசங்கள் ஆகிய இடங்களில் உளவாளிகளையும் துருப்புகளையும் நிறுத்தி வைப்பதாலோ, அல்லது ரோந்து (காவல் சுற்று) செய்வதாலோ திருட்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

kili 7

மனு 9-267

ஏற்கனவே திருட்டில் ஈடுபட்டு, இபோது திருந்தியவர்களைக் கொண்டு  புதிய திருடர்களைப் பிடிக்க வேண்டும் . அவர்களுடன் பழக வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து, அந்தத் திருடர்களை அடியோடு அழிக்க வேண்டும்

மனு 9-268

சாது சந்யாசிகளை சந்திக்க அழைப்பது போல அழைத்தோ, உணவு, கேளிக்கைக்காக கூப்பிடுவது போல கூப்பிட்டோ அல்லது அவர்களது சாகச செயல்களைப் பாராட்டுவது போல பாசாங்கு செய்தோ அவர்களை வளைத்துப் பிடிக்க வேண்டும்.

மனு 9-269

 

இந்த வலையில் சிக்காமலோ, அல்லது இதை அறிந்தோ தப்பித்து ஓடும் திருடர்களையும் , அவர்களுடைய தாய்வழி, தந்தை வழி உறவினர்களை  யும், நண்பர்களையும் அழிக்க வேண்டும் (உறவினர் நண்பர் மூலம் தான் செய்தி தெரிந்திருக்கும் என்பதால்)

 

(திருக்குறள் 550–ம் கொலையில் கொடியாரை மரண தண்டனை கொடுத்து தீர்த்துக் கட்டுங்கள் என்று செப்பும்.)

 

ஒரு திருடனிடம், அவன் திருடிய பொருட்கள் இல்லை என்றால் அவனைத் தண்டிக்கக்கூடாது. திருடிய பொருட்களோ திருட்டுச் சாதனங்களோ இருந்தால் தயக்கமின்றி தண்டணை கொடுக்க வேண்டும்.

 

இதற்குப் பின்னர், திருட்டுகளை ஒழிப்பதில் உதவாத அதிகாரிகளைத் தண்டிப்பது பற்றி பகர்கிறார்.

 

அதற்குப்பின்னுள்ள ஒரு ஸ்லோகம் குறிப்பிடற்பாலது:–

ஒரு கிராமம் கொள்ளை இடப்படுகையிலோ, ஒரு அணை உடைந்தபோதோ, சாலை வழிப்பறி நடக்கும்போதோ, அவர்களுக்கு உதவாதபடி, வேடிக்கை பார்ப்பவர்களை நாடுகடத்த வேண்டும்.

 

இரவில் திருடுபவர்களின் இரண்டு கைகளையும் வெட்டுங்கள். பிக் பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடர்களின் விரல்களை வெட்டுங்கள் என்றும் மனு உத்தரவு இடுகிறார்.

 

ஒன்பதாவது அத்தியாயம் திருடர்கள் பற்றி இன்னும் பல விசயங்களை இயம்புகிறது. அக்காலத்தில் திருடர்கள் விஷயத்தில் எவ்வளவு கடுமையான விதிகள் இருந்தது என்பதை அறிவது அவசியம். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் – குப் தர் காலத்தில் — இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் பாஹியான், இந்தியாவில் திருட்டு பயமே இல்லை, மக்கள், வீடுகளின் கதவுகளைப் பூட்டாமல்தான் தூங்குவார்கள் என்று எழுதியுள்ளான்.

 

வாழ்க மனு! வளர்க மனு நீதி!

 

Two Types of Thieves (Post No.3035)

 

thief

Written by london swaminathan

Date: 4th    August 2016

Post No. 3035

Time uploaded in London :– 15-53

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

There are beautiful and meaning full slokas (Couplets/ Hymns) about thieves in Sanskrit. Manu Smrti, the oldest law book in the world, also deals with the thieves:–

 

“The king whose spies are his eyes should discover the two sorts of thieves, open and concealed, who steal other men’s possessions”. Manu 9-256

xxx

“The open deceivers are those of them who live by various sorts of shady trading, while concealed deceivers are burglars, forest bandits, and so forth”. 9-257

 

Prakaasa vancakaa: teshaam naanaa panya upajiivina:

Praccanna vancakaa: tu  te ye stena atavikaadaya:

xxx

“People who take bribes, frauds, deceivers, gamblers; those who live by announcing good luck; smooth operations and fortune tellers— Manu 9-258

Utkocakaschau padikaa vancakaa: kitavaastataa

Mangalaadesavruttaasca badraa ca ekshanikai: saha

xxx

 

“Great ministers and doctors who behave with impropriety; those who make use of their crafts in polite society; clever whores — Manu 9-259

Asabya kaarinai: caiva mahaamatraa cikisakaa:

Siilyopacaara yuktaasca nipunaa: panyayoshita:

 

xxx

 

tumblr_inline_mgbny2fOsx1qi2w9p

“These and others like them he should recognise them as open thorns for the people, as well as others who work in secret, uncultured but assume the distinctive marks of the cultured people. — Manu 9-260

Evamaadiin vijaaniyaat prakaasaan lokakandakaan

Niguudacaarinasca anyaan anaaryaan aaryalingina:

Xxx

 

“For only by punishment can anyone suppress the evil of evil minded thieves who prowl silently over the earth”. Manu 9-263

 

Assembly halls, roadside watering places, cake stalls, brothels, wine or food stalls, cross roads, sacred tree groves, crowds, public events, gardens, wild places, the houses of artisans, empty buildings, woods, artificial groves/ entertainment parks – these are the places that a king should watch with the help of soldiers – stationed or on patrol – and by spies to foil thieves. 264-266

 

The king should detect them and destroy them by using clever reformed thieves who associate with them, follow them and become familiar with their various activities. They should round them up on the pretext of food and other enjoyments or for audiences with priests, or on pretexts of deeds of heroism. As for those who do not come near there and those who have discovered the plot, the king should attack them and kill them, together with their friends, maternal relatives, and paternal relatives. 267—269

 

Death Sentence in Tamil Nadu

 

Tamil poet Tiruvalluvar is also of same opinion:-

The king gives capital punishment to wicked killers like removing weeds from a flourighing field.—Tirukkural 550

 

A just king should not inflict physical punishment on a thief without the stolen goods, but he should punish him without hesitation if he has the stolen goods and the tools. — Manu 9-270

–subham–

 

டர்பாவின் அதிசய ஆய்வுகள்!(Post No.3034)

b.myers

Article Written S NAGARAJAN

Date: 4th  August 2016

Post No. 3034

Time uploaded in London :– 8-25AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 5-8-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

டர்பாவின் அதிசய ஆய்வுகள்!

.நாகராஜன்

durpa

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் மருத்துவ துணை சாதனம் தேவையாக இருக்கிறது. உங்கள் கண்களுக்கான கண்ணாடிகள், அல்லது இடுப்பு அல்லது  முழங்கால் மூட்டை பொருத்துதல் என இப்படி ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. செயற்கை அங்கங்கள் பொருத்தப்பட்ட தலைமுறை நம்மைச் சுற்றிலும் உள்ளது – எய்மி மல்லின்ஸ்

 

 

அமெரிக்காவின் இராணுவத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளை ஆராய்ச்சி செய்து வழங்கும் ஒரு அமைப்பின் பெயர் தான் டர்பா!  டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜக்ட்ஸ் ஏஜன்ஸி (Defense Advanced Research Projects Agency) என்பதின் சுருக்கமே டர்பா!

 

 

1957 ஆம் ஆண்டு ரஷியா ஸ்புட்னிக்கை விண்ணில் ஏவியதும் பதறிப் போன அமெரிக்கா தொழில்நுட்பத்தில் தான் மேம்பட வேண்டும் என்று எண்ணியது. ஜனாதிபதி ஐஸன்ஹோவர் உடனடியாக 1958இல் உயரிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவினார். பல முறை பெயர் மாற்றப்பட்டு இப்போது டர்பா என அழைக்கப்படும் ஆய்வு நிறுவனம் முதலில் விண்வெளி சம்பந்தமான ஆய்வைத் தொடங்கினாலும் நாஸா அமைக்கப்பட்டவுடன் விண்வெளி சம்பந்தமான அனைத்துத் திட்டங்களையும் அதன் செயல்பாட்டிற்கு விட்டு விட்டது. இதர துறைகளில் கவனம் செலுத்திய அது பல்வேறு அதிசயக் கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்துள்ளது.

 

சுமார் 240 ஆய்வாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். இதன் பட்ஜெட்டோ கற்பனைக்கு அப்பாற்பட்ட பல கோடி ரூபாய்கள்!

 

defense-advanced-research-projects-agency

ஆரம்ப காலத்தில் எதிரிகளின் ஆயுதங்களைக் கண்டுபிடித்து இலக்கை நிர்ணயித்து அழிக்கும் தானியங்கி இலக்கு நோக்கிகளை அது கண்டு பிடித்தது.

 

பின்னர் மனத்தைக் கட்டுப்படுத்தும் ஏராளமான அதிசயக் கண்டுபிடிப்புகளை அது கண்டு பிடித்து வருகிறது.

தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தெரிவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை அவ்வப்பொழுது டர்பா ஏற்பாடு செய்து வருகிறது. செப்டம்பர் 2015 மற்றும் மே 2016இல் டர்பாவின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்த பத்திரிகையாளர்கள் அசந்து பிரமித்து நின்றனர்!

 

 

பத்திரிகையாளர்கள் பார்த்தது ஒரு செயற்கை கையை! 45 பவுண்டு எடையுள்ள ஒரு கர்லாக் கட்டையை நாள் முழுவதும் அது சுழற்றிக் கொண்டே இருந்தது – அதன் பாட்டரியின் சார்ஜ் போகும் வரை! எந்த வலுவுள்ள  மனிதனாலும் இப்படித் தொடர்ந்து கர்லாக் கட்டையை 24 மணி நேரம் தொடர்ந்து சுழற்ற முடியாது!

 

 

இந்த கையின் செயல்பாட்டை விளக்கினார் ஜானி மாத்னி என்ற விஞ்ஞானி. அந்தச் செயற்கை கையை ஒரு  பெண் நிருபரின் கையைப் பிடித்து  குலுக்க வைத்ததோடு டர்பாவின் கண்டுபிடிப்பைப் பற்றி எழுதவும் வேண்டுகோள் விடுத்தார்!

வலிமையிலும் நெளிவு சுளிவுகளுடன் லாகவமாக செயல்படுவதிலும் உலகிலேயே திறமை வாய்ந்த ஒரே கை இது தான் என்றார் ஜானி மாத்னி!

 

 

உலகின் பல இடங்களிலிருந்தும் போர்களில் ஈடுபட்டுத் திரும்பிய கை இழந்த அமெரிக்க வீரர்களுக்கு கரம் கொடுப்பது இனி சுலபம் என்றார் டர்பாவின் உயிரியல் தொழில்நுட்ப டைரக்டரான ஜஸ்டின் சி. சான்செஸ் (Justin C. Sanchez).

 

 metallic cheetah

Metallic Cheetah by Darpa

மூளையின் இயக்கங்களையும் அதன் நுட்பமான செயல்பாட்டையும் அறிந்த பின்னரே இந்த செயற்கைக் கையை உருவாக்க முடிந்தது என்று கூறிய ஜஸ்டின் இயற்கையான கையைப் போலவே இது செயல்படும் என்றார்.

விபத்துக்களில் கைகள் துண்டிக்கப்பட்டோருக்கு இனி இந்தத் தொழில்நுட்ப மேம்பாடு உடலில் பதிக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் தசைகள் செயல்பட வேண்டிய விதத்தை அது பதிக்கப்பட்டவரின் எண்ணத்திற்கு ஏற்ப அவரது மூளைக்கு அறிவிக்கும்.

 

 

கைகள், கால்கள் இழந்தவருக்கு இந்த செயற்கை அங்கங்கள் இனி கிடைக்க இருப்பது அறிவியலின் ஒரு மாபெரும் வெற்றியாகும்.

 

 

எதிர்பாராத விபத்துக்களில் கைகளையும் கால்களையும் இழந்தவர்கள் வாழ்க்கையையே இழந்ததாக இனி கருத வேண்டாம் என்பதை எடுத்துக்காட்ட வீரர்கள் பலர் உள்ளனர்!

இரண்டு கால்களையும் சர்ஜரி மூலம் அகற்ற நேர்ந்த ஹ்யூ ஹெர் செயற்கைக் கால்களைப் பொருத்தி உயரமான மலைகளில் ஏறி சாகஸம் செய்கிறார்! செயற்கை கால்களைச் செய்யும் ஒரு லாபரட்டரியையும் அவர் இயக்கி வருகிறார்.

இறுதிச் சுற்றுக்கான தகுதியை இழந்தாலும் கூட 400 மீட்டர் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கு கொண்ட தென்னாப்பிரிக்க வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கால்களை இழந்து நொந்து கொண்டிருப்பவர்களுக்கான ஒரு ரோல் மாடல்! இவரைப் பார்த்து உத்வேகம் பெறாத ஆட்களே உலகில் இல்லை!

 

 

ஆப்கானிஸ்தானத்தில் ஒரு சாலையில் குண்டுத் தாக்குதலில் தனது இரு கால்களையும் கைகளையும் இழந்தார் ஸ்காட் ஷ்ரோடெர். மனம் கலங்காத அவர் செயற்கை அங்கங்களைப் பொருத்திக் கொண்டார். இப்போது ஸ்கூபா டைவிங் அடிக்கிறார்!

 darpa_02

 

நம்ப முடியாத இவரின் சாகஸ செயல்கள் கை, கால்களை இழந்தவர்களுக்கு நம்பிக்கையும் உத்வேகமூம் ஊட்டும் செயல்பாடுகள்!

 

 

எய்மி மல்லின்ஸ் ஒரு அழகான வலிமையான உத்வேகமூட்டும் பெண்மணி. பிறக்கும் போதே அவருக்கு கால்களில் குறைபாடு. அதனால்  மனம் தளரவில்லை அவர். முழங்காலுக்கு கீழே ஆம்புடேட் செய்யப்பட்டது. இரண்டு வயதாகும் போதே செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டு நடக்க ஆர்மபித்தார். பின்னர் வயதானவுடன் நீந்த அரம்பித்தார். சைக்கிள் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது என அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்றார். மாடலாகக் கூட மாறினார். அவரைப் பார்த்து உத்வேகம் பெறாதவர்களே இல்லை என்ற நிலையில் அவரது செயல்பாடுகள் இப்போது உள்ளன! பிரபலமான பீப்பிள் பத்திரிகை உலகின் 50 அழகிகளில் அவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்து உள்ளது.

 

 

இந்த வீரர்களையும் வீராங்கனைகளையும் பார்த்து விட்டு அமெரிக்க டர்பாவின் கண்டுபிடிப்பையும் நினைத்துப் பார்த்தால் மனித குலத்தில் அங்கங்களை இழந்தவர்கள் இனி வருத்தப்பட வேண்டியதில்லை என்ற நிலை தோன்றி விட்டதை அறிந்து மகிழலாம்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

 

இன்று நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அலுமினியம் ஒரு காலத்தில் வெள்ளியை விட விலை அதிகமாக விற்கப்பட்ட உலோகமாகும். பிரான்ஸ் மன்னனான நெப்போலியன் ராஜாங்க விருந்துகளில் சிறப்பு விருந்தினர்களுக்கு அலுமினிய பாத்திரங்களில் தான் உணவுப் பொருள்களைப் பரிமாறச் செய்வானாம். அதுமட்டுமல்ல, விழாக்காலங்களில் அவன் அணியும் கிரீடமும் அலுமினியத்தால் செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது.

அப்படி அலுமினியம் விலை உயர்ந்த பொருளாக இருந்ததன் காரணம் அதைத் தாதுப் பொருளிலிருந்து பிரித்தெடுக்கும் முறை எளிதாக இல்லை என்பது தான்.

 

 Charles_Martin_Hall_1880s  Paul-Heroult-1863-1914-Chemist

Charles Martin and Paul, who made Aluminium cheaper.

ஆனால் அலுமினியத்தை எப்படி எளிதாகப் பிரித்தெடுப்பது என்பதை இரு வேறு விஞ்ஞானிகள் தனித்தனியே ஒருவர் செய்வதை இன்னொருவர் அறியாமல் ஆராய்ந்து வந்தனர். ஒருவர் சார்லஸ் மார்டின் ஹால் (Charles Martin Hall) என்ற அமெரிக்கர். இன்னொருவர் பால் ஹெரால்ட் (Paul Heroult) என்ற பிரான்ஸ் தேசத்து விஞ்ஞானி. எலக்ட்ராலிஸிஸ் முறை மூலமாக அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது எளிதாக ஆகவே அதன் விலை வீழ்ந்து, இன்று மிகவும் மலிவாகக் கிடைக்கும் உலோகமாக ஆகியுள்ளது..

 

 

அட்லாண்டிக்கின் வெவ்வேறு  பக்கங்களில் இருந்து ஆராய்ந்த இந்த இருவரும் 1886ஆம் ஆண்டு – அதாவது ஒரே ஆண்டில் –  தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றனர். ஒரே ஆண்டில் இருவரும் வெற்றி பெற்றது மட்டுமல்ல, இவர்கள் இருவரும் 1863 ஆம் ஆண்டு – ஒரே ஆண்டில் பிறந்தனர். அது மட்டுமல்ல, இருவரும் 1914ஆம் ஆண்டில் – ஒரே ஆண்டில் மரணமடைந்தனர்.

 

என்ன அதிசய ஒற்றுமை!

 

Tags: டர்பா, செயற்கைக் கை, கால்கள், கர்லாக் கட்டை, அலுமினியம்

-Subham-

 

 

 

 

கம்ப ராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’ (Post No.3033)

Big-Crunch-to-Be-the-

Written by london swaminathan

Date: 4th    August 2016

Post No. 3033

Time uploaded in London :–  6-00 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

From the book, “Life and Labour of The People of India” by Abdullah Yusuf-Ali, Barrister at Law, Year 1907, London)

 

 

வால்மீகி என்னும் ஆதி கவி சம்ஸ்கிருத மொழியில் எழுதிய ராமாயணத்தை கம்பன் தமிழில் எழுதியதை நாம் அறிவோம்.

 

காஸ்மாலஜி/ COSMOLOGY-யை பெரும்பாலோர் அறியோம். காஸ்மாலஜி என்றால் என்ன? பிரபஞ்ச இயல். அதாவது இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? அதன் அமைப்பு என்ன? அதன் தற்போதைய நிலை என்ன? என்பனவற்றை ஆராயும் ஒரு துறை. முதலில் பட்டாணி அளவுக்கு இருந்த பிரபஞ்சம் திடீரென  வெடித்து (BIG BANG) பல்வேறு உலகங்களை உருவாக்கி, இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது என்பது இதில் விளக்கப்படுகிறது.

bigbang_expansion

இப்படி விரிந்துகொண்டே போக்கும் பிரபஞ்சம் ஒரு நாள் சுருங்கிவிடும் (BIG CRUNCH-பிக் க்ரஞ்ச்) என்று இப்பொழுது எழுதத்துவங்கியுள்ளனர். ஆனால் இதை கம்பனும் அவனுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புராண முனிவர்களும் செப்பிவிட்டனர்.

 

உலகில் முதல் முதலில் காஸ்மாலஜி பற்றிப் பாடியவர்கள் ரிக்வேத முனிவர்களே! ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 129, 130 ஆகிய இரண்டு மந்திரங்களும் (நாசதீய சூக்தம்) இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைக் கண்டு வியக்கும் பாடல்கள் —  விளக்கும் பாடல்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இப்படி ஒரு அருமையான கவிதை இருப்பதைப் பற்றி நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகின.

 

 

நாம் கம்ப ராமாயணப் பாடலுக்கு வருவோம்:–

 

ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி

உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி

சென்று ஆசறும் காலத்து அந்நிலையது ஆகி

திறத்து உலகம்தான் ஆகி செஞ்சவே நின்ற

நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே எங்கள்

நவைதீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி

நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே

–ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 

பொருள்:–

 

ஆதிகாலத்தில் ஒன்றாக இருந்து, பின்னர் பலவேறு (BIG BANG) வடிவங்களாகி, அவ்வடிவங்களில் அறிவும், உயி ரும் வெவ்வேறாகி, ஊழிக் காலம் மஹா பிரளயத்தால் முடியும் போது, முதலில் இருந்த ஒன்றாகும் நிலையைப் பெற்று (BIG CRUNCH) , மீண்டும் படைப்பு நிகழும்போது பலவகைப்பட்ட உலகங்களாகி, செம்மையாய் நின்ற ஞானக் கொழுந்தே! நீ புண்ணிய செயல்களை மேற்கொண்டவர்களைக் காக்கின்றாய், பாவம் செய்பவர்களை அழிக்கின்றாய் (பரித்ராணாய சாதூனாம், விநாசாய ச துஷ்க்ருதாம் – கீதை 4-8). நிலையில்லாத அப் பாவமும் நீ படைத்தது அல்லவா?

 

big-crunch-theory-big-bounce

உலக விஞ்ஞானிகள் சொல்லாததை எல்லாம் இந்து மதம் முன்னரே சொல்லிவிட்டது. நாம் சொன்ன பேரண்ட வெடிப்பு, பேரண்டச் சுருக்கம் (மஹா பிர்ளயம்) ஆகியவற்றை பிரபஞ்சவியல் (COSMOLOGISTS) அறிஞர்கள் இப்போது ஒப்புக் கொண்டனர். இனி இது சுழற்சியாக நடை பெறும் ஒரு செயல் பாடு (CYCLICAL) என்பதையும் ஒப்புக்கொள்வர்!

 

–subham—

 

நாசதீய சூக்தம், காஸ்மாலஜி, ரிக் வேதம்,பேரண்ட வெடிப்பு, சுருக்கம், மகா பிரளயம்

Village Well is Ladies Club in India! (Post No. 3032)

gossip well

Compiled by london swaminathan

Date: 3RD   August 2016

Post No. 3032

Time uploaded in London :–  20.346

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

From the book, “Life and Labour of The People of India” by Abdullah Yusuf-Ali, Barrister at Law, Year 1907, London)

 

India Water_Siva

“As the social life of the men centres round the Lambardar’s (Village headman) reception room, so the social life of the women centres round the village well, to which they go to draw water. The graceful figure of the village maiden, with two or three pots of different sizes–the smallest on the top poised on her head, going to the river to fetch water, has been so familiarised in Daniell’s pictures that it is scarcely necessary to describe it in words, but the social chatter which takes place at the well claims a little of our attention.

 

In the first place it must be realised that the water supply of a village which is some distance from a stream or river (a description that would apply to a vast number of villages) is not derived from any water-works, but from deep holes dug und to a depth of 15 to 30 feet, according to the spring level. The vertical hole thus made in the soil is lined with masonry. When the masonry tube is well sunk in, a ceremony is performed which is analogous to that of the going of a bride to the husband’s house. The well is supposed to be a living being, and she is married to the god of the locality. No one is allowed to drink water out of it until the installation has taken place in due form. It is attended with some picturesque ceremonies, and forms quite an event in village history.

 

The exterior of the well is built up in the form of a round platform with an opening into the well in the centre. On this platform are fixed two or three poles, or a framework with a pulley and ropes, to help people to draw water. The mouth of the well is sometimes covered with a wooden grating to prevent accidents, as men and women have been known to lose their balance and fall into the water. The favourite mode of suicide, by the way when an Indian woman finds herself unhappy in her married life on account of differences, not with her husband, but with her mother-in-law is by jumping down a well.

village well, google

The usual gossip of the women, morning and evening, is around the village well. It is the ladies’ club, as exclusive as the aristocratic clubs of London. The higher castes have wells of their own, to which no lower class people are allowed to go to draw water.

 

The conversation which usually takes place among the elder women when they are present is about the enormities or failings of the younger women who are their daughters-in-law. If they are absent when they are gone, then comes the turn of the young wives to compare notes about their respective mothers-in-law and sisters-in-law, not often to the advantage of these relatives of the husband. Thus you will see the village well looms very large in the social history of the Indian women; but it would require a whole volume to enlarge upon the romance of the well.

 

It will be remembered that even so in England, in the age of chivalry and romance, great many legends gathered around wells. These still linger around the holy wells in Cornwall and Ireland. Southey wrote a famous ballad on the well of St Keyne, and the scene of one of Sir Walter Scott’s novels is laid in the midst of the motley society that come to “take the cure” at St Roman’s well.

 

The men also come to the well, but the morning and evening hours are sacred to the women. These hours are usually avoided by the men out of respect to the fair sex. The most perfect decorum and even privacy is observed these matters in the village. Though the village women go about freely, there is never any molestation of them, and the men, in their own rough and ready way, show a chivalrous not noticed by those who only look at life from a superficial point of view.

well, bargarh Dt., new IE

All crimes, social or legal, against women in a village, are committed by strangers, but they are not many. Of course, the lot of the Indian women requires improvement in many ways but so does that of the Indian man, and, taking them altogether, we ought to be very cautious in judging either sex. Their lives are as possible under the circumstances. The social evils of the joint family system are responsible for much friction between mothers-in-law and daughters-in-law, and for many attempted suicides on the part of the latter; but that is a large question, and need not detain us here.

 

It may be asked: If the men do not come to the well to draw water, and if they have their own meeting places in the village, why should they come to the well at all? The answer is that the water which the women draw is mostly for drinking and cooking purposes. The bathing is all done at the well. Ablutions form a great feature in Oriental life. Every Hindu of the better classes is supposed to bathe before every meal, and he does bathe at home, but comes not to the well, divests himself of all his clothes except his loin cloth, and pours water over his head and shoulders. This is all done quite publicly in the open air. It is generally done on platform round the mouth of the well the and sometimes the dirty water finds its way in. One of the problems of public sanitation in the administration of the villages is to make the platforms in such a way that the dirty water cannot possibly find its way in, but must all flow out. The best way is to have separate bathing platforms round about the well. But, even so, the water that flows out is apt to stagnate round the well, percolating through the soil, and eventually affecting the purity of the water in the well. There is no systematic drainage of the village streets, and all sanitary reforms in the villages have first to deal with this particular evil.

–Subham–

 

 

முப்பது கோடி உலகங்கள்: கம்பன் தரும் அதிசயத் தகவல்! (Post No.3031)

PLANETS VIEWS

Research Article written by london swaminathan

Date: 3RD   August 2016

Post No. 3031

Time uploaded in London :–  16-02

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பூமியைப்போல பல்லாயிரக் கணக்கில் கிரகங்கள் இருப்பதும், பால்வெளி மண்டலம் (MILKY WAY –மில்கி வே)  போல கோடிக் கணக்கில் பிரபஞ்சங்கள் இருப்பதும் இப்பொழுது விஞ்ஞானிகள் வெளியிடும் தகவல்கள். ஆனால் இது இந்துக்களுக்கு எப்பொழுதோ தெரிந்த விஷயம்!

 

நக்கபிரான் அருளால் இங்கே நடைபெறும்

உலகங்கள் கணக்கிலவாம்!

தொக்கன அண்டங்கள் — வளர்

தொகைபல கோடிபல்கோடிகளாம்

இக்கணக்கெவர் அறிவார் – புவி

எத்தனையுளதென்பது யார் அறிவார்?

— என்று பாரதி பாடியதில் வியப்பில்லை. அவர் நம் காலத்தவர்

 

ஆனால் அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்னால் வாழ்ந்த மாணிக்கவாசகரே — அதாவது இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரே — இந்த அரிய உணமையைப் பாடியுள்ளார். கலிலியோ, கோபர்நிகசுக்கு முன்னதாக வானத்தை அளந்தவர்கள் நாம்!

GALAXI

இதோ திருவாசகப் பாடல்:–

 

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்                               

 அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி                               

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்                                    

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன                                  

இல் நுழை கதிரின் துன்அணுப் புரையச்     

–திரு அண்டப் பகுதி, திருவாசகம்

 

இதில் அண்டம் என்பது உருண்டை வடிவானது, அது நூற்றுக்கணக்கான கோடி அண்டங்களாக விரிவடைகிறது என்ற வானவியல் கருத்துகள் சொல்லப்படுகிறது.

 

இந்தப் பிரபஞ்சம் காற்றால் ஊதப்படும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் தற்காலக் கண்டுபிடிப்புகள். ஆனால் இதை சம்ஸ்கிருத நூல்களும் , தமிழ் நூல்ல்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டன.

 

நமக்கு 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பனும் எல்லோருக்கும் தெரிந்த  — எல்லா இந்துக்களுக்கும் தெரிந்த — இவ்வுண்மையை போகும் போக்கில் சொல்லிவிடுகிறான்:–

தோன்றல் நீ முனியின் புவனத் தொகை

மூன்று போல்வன முப்பது கோடி வந்து

ஏன்ற போதும் எதிர் அல என்றலின்

சான்று வேதம் தவம் பெரும் ஞானமே

–ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்

 

இதன் பொருள்:-

தலைவனே நீ சினம் கொண்டால், இம் மூவுலகங்கள் போல முப்பது கோடி உலகங்கள் ஒன்றாகக்கூடி எதிர்த்தாலும், அவை உன் ஆற்றலுக்கு ஏற்றவை அல்ல. இவ்வாறு கூறுவதற்கு வேதங்களும், எமது தவமும், தத்துவ ஞானமும் சான்றுகள் ஆகும்.

 

முப்பது கோடி உலகங்கள் என்பதை அப்படியே அர்த்தம் (LITERAL MEANING)  கொள்ளாமல் பல கோடி உலகங்கள் என்று படிக்க வேண்டும்.

 

ஆக கம்பன் காலத்திலேயே இப்படி வானியல் அறிவு இருந்தது. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சூரிய மண்டலம் போன்றவை எ து அவர்களுக்குத் தெரியும்.

 planets_image

பிற கிரகங்களில் உயிரினங்கள்

 

விஞ்ஞானிகள் இதுவரை பிற கிரகங்களில் உயிரினங்களைக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் இந்து புராணங்கள் மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதையும் அவர்களுடைய நிலையையும் தெளிவாகக் கூறியுள்ளன:–

 

பிற கிரகங்களில் வாழ்வோருக்கு கண்கள் இமைக்காது

1.கால்கள் நிலத்தில் பதியாது

2.அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர்.

3.நினைத்த மத்திரத்தில் கிரகம் விட்டு (INTER GALACTIC TRAVEL) கிரகம் செல்வர்.

4.வேண்டிய உருவங்கள் எடுக்கவல்லவர்.

5.அவர்கள் போட்டுக்கொண்ட மாலைகள் வாடா.

6.அவர்கள் மேல் உலகில் செக்ஸில் (NO SEX REGION) (உடல் உறவில்) ஈடுபடமுடியாது.

7.அவர்களுக்கு ஒளிமிகுந்த (PHOSPHOROUS) உடல் உண்டு.

 

கம்பனும் புற அண்டம் (EXTRA TERRESTRIAL) பற்றிப் பாடுகிறான்:–

கம்பன் காலத்திலேயே புற அண்டங்களில் உயிரினங்கள் வாழ்பவது தெரியும்!

புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்

அகல்வரேனும் எம் அம்பொடு வீழ்வரால்

தகவு இல் துன்பம் தவிருதிர்  நீர்  எனா

பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான்

–ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்

 

இதன் பொருள்:-

 

முனிவர் உரைத்ததைக் கேட்ட சூரிய குல ராமன், அவரிடம், இவ்வரக்கர்கள் இனிமேல் தீங்கு செய்ய மாட்டோம் என்று கூறி என்னிடம் அடைக்கலம் அடையாவிட்டால், அவர்கள் இந்த அண்டத்தை விட்டு வேறோர் அண்டத்துக்கு ஓடிப்போனாலும் என் அம்பால தாக்கப்பட்டு அழிந்தொழி வார்கள் எனவே நீங்கள் துன்பத்தை ஒழியுங்கள்.

 

இப்பாட்டில் சொல்லப்படும் அறிவியல் கருத்துகள்:–

1.புற அண்டம் உண்டு

2.அவற்றுக்கு பயணம் செய்வதும் சாத்தியமே.

 

இந்த அறிவியல் கருத்துகள் இல்லாவிடில் இத்தகைய சொற்கள் பாடலில் இடம்பெறா.

IMG_4976

இல்லாத ஒன்றை கற்பிப்பது புலவர்க்கு இயலா.

இருப்பதையே அவர்கள் சொல்லுவர்.

 

ஆக கம்பராமாயணம் முழுதும் வரும் வானில் கருத்துகளை ஒட்டு மொத்தமாக தொகுத்துப் பார்த்தால் அக்காலத்தில் மக்களுக்கு எவ்வளவு தெரிந்தது என்பதை அளவிட முடியும்

 

 

கோள், கோளம், அண்டம்

 

அண்டம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு முட்டை என்று பொருள்.

 

இந்த பிரபசம் , விண்வெளியில் உலவும் கிரகங்கள் இவறுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய இச்சொல்லிலிருந்து அவர்களுக்கு அக்காலத்திலேயே பூமி, பிரபஞ்சம் எல்லாம் வட்டவடிவமானவை என்பது தெரிந்திருந்தது என்பது தெளிவாகிறது.

 

பூகோளம், மண்டலம், கோள் என்பன எல்லாம் வட்ட வடிவத்தையே குறிக்கும்.

 

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் கோள், கோளம் என்பன கி கங்களுடன் தொடர்புடைய சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கால்டுவெல்களும், மாக்ஸ்முல்லர்களும் பிதற்றிய ஆரிய– திராவிட மொழிக் கொள்கைகளை உதறிவிட்டுப் பார்த்தால் அற்புதமான மூல  மொழி– உலகிற்கெல்லாம் தாய்மொழி தெரியும்.

–சுபம்–

வேதம் விளக்கும் சந்தோஷம்! (Post No.3030)

av3

Article Written S NAGARAJAN

Date: 3rd  August 2016

Post No. 3030

Time uploaded in London :– 8-22 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

வேத நெறி

வேதம் விளக்கும் சந்தோஷம்! (Post No.3030)

ச.நாகராஜன்

rigveda_front

வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது வேதத்தின் அன்புக் கட்டளை!

 

மனதால் சந்தோஷம்

வாக்கால் சந்தோஷம்

சரீரத்தால் சந்தோஷம்

 

 

இந்த மூன்று வகை சந்தோஷங்களையும் அடைந்து விடு என்று அறைகூவுகிறது வேதம்.

இப்படி ‘சந்தோஷ அறைகூவலை’ உலகில் வேறு எந்த ஒரு நூலுமே ஆதி காலத்திலேயே விடுத்ததில்லை என்பது நிதர்சனமான உண்மை.

உண்மையான சந்தோஷத்தை அடையும் விதத்தையும் அது விளக்குகிறது.

சந்தோஷம் என்ற பதத்தை அப்படியே வேதம் கூறவில்லை.

ஆனால்

 

 

தோஷமானா:  (யஜுர் வேதம்)

துஷயந்தி      (ரிக் வேதம்)

தோஷதமா:    (ரிக் வேதம்)

என்று இப்படி பல விதங்களில் கூறுகிறது.

தர்மார்த்த காம எனப்படும் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று வித  புருஷார்த்தங்களால் நியாயமான வழியில் பொருளைத் தேடு என்கிறது அது.

 

 

அதிக பணம் வந்தாலும் சரி, குறைவாகப் பணம் வந்தாலும் சரி,  அதிக மகிழ்ச்சியையோ அல்லது  அதிக துக்கத்தையோ அடையாதே என்று அது கூறுகிறது.

உழுது பிழை; உழைத்துப் பிழை என்பது யஜுர் வேதம் கூறும் அறிவுரை!

 

பதஞ்சலி முனிவரும் வேத வழியில் நின்று வாழும் சந்தோஷத்தின் பலன் உத்தமமான சுகத்தை அடைவதே என்கிறார்,

 

சந்தோஷத்தை மூன்று வகையாக விள்க்குகிறது வேதங்கள்.

மானஸிக சந்தோஷம் – மனத்தால் ஏற்படும் சந்தோஷம்

வாஸிக சந்தோஷம் – வாக்கினால் ஏற்படும் சந்தோஷம்

சாரீரிக சந்தோஷம் – உடலால் ஏற்படும் சந்தோஷம்

ஆக இப்படி சந்தோஷத்தை ஒவ்வொருவரும் மூன்று வகையாக அடைய முடியும்!

 

the vedas

 

மனத்தால் ஏற்படும் சந்தோஷம்

‘சூதாடி வரும் பணத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அது பாவம்’ என்று நண்பனுக்குக் கூறும் அறிவுரையாக வேதம் கூறுகிறது.

 

தியாகம் செய்வதன் மூலமாக சுகம் பெறலாம் என்ற ரகசியத்தை அது விளக்குகிறது.

(தேன த்யக்தேன புஞ்ஜீயா மா க்ருத: கஸ்யஸ்வித்தனம்!)

சோம்பேறியாக இருக்காதே; அதிர்ஷ்டத்தினால் உன்னிடம் இருக்கும் பணத்தால் ஆனந்தப்படாதே, உழைப்பினால் வருவதே செல்வம் என்றும் அது விளக்குகிறது.

 

 

வேத சம்ஹிதைகள் போலி சந்தோஷத்தையும் உண்மையான சந்தோஷத்தையும் இப்படி இனம் பிரித்து நன்கு காட்டுகின்றன!

உண்மையாக பணம் சம்பாதிக்கும் போது மனதில் உண்மை சந்தோஷம் ஏற்படுகிறது; அது நிலைக்கிறது.

 

 

வாக்கால் ஏற்படும் சந்தோஷம்

 

அடுக்குமொழி வசனங்க்ளை அள்ளி வீசுவதை வேதம் ஆதரிக்கவில்லை.

 

அனுத்வேககரம் வாக்யம் சத்யம் பிரியம் ஹிதம் (கீதை)

அடுத்தவருக்கு ஆத்திரம் ஊட்டாத வார்த்தைகள்

உண்மையான வார்த்தைகள்;

 

அடுத்தவருக்கு பிரியமான வார்த்தைகள் (உண்மையாக இருந்தாலும் அடுத்தவரைப் புண்படுத்தினால் அதைப் பேசாதே) அடுத்தவருக்கு ஹிதமான வார்த்தைகள்

இவற்றையே பேச வேண்டும்.

 

வாசம் வததி சாந்திவாம் – அதர்வண வேதம்

வாசம் வதத் பத்ரயா  – அதர்வண வேதம்

 

ம்ங்களம் பொருந்திய மதுரமான வாணி, சாந்திமயமான வார்த்தைகள் இவ்ற்றையே அதர்வண வேதம் வலியுறுத்துகிறது.

 

 rig

சரீரத்தால் ஏற்படு சந்தோஷம்

 

காம குரோதங்களால் ஏற்படும் திருட்டு, ஹிம்சை, விபசாரம் இவற்றை விட்டு விடுக.

அடுத்தவருக்கு சேவை செய்க

நல்ல கர்மங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருக (நடைமுறைப்படுத்துக) என்கிறது வேதம்.

 

 

சந்தோஷம் பரமாஸ்வாய சுகார்த்தீம் ச்மயதோ பவேத்

ச்ந்தோஷமூலம் ஹி சுகம் துக்கமூலம் விபர்யய: (மனு 4 -12)

வெறுப்பு, ஆசை, பொறாமை ஆகியவற்றை விடுத்து சந்தோஷத்துடன் உற்சாகமாக வாழ்க்கையை நிர்வகித்தலே சுகத்திற்கான அடிப்படை மூலம்; மாறாக இவற்றை விட்டு விட்டு வாழ முற்படுவதே துக்கத்தின் மூலம் என்கிறார் மனு.

 

இன்னும் இராமாயணம் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்கள் வேத வழியை விரிவாகக் கூறி சந்தோஷம் பெறும் வழியைக் சுட்டிக் காட்டுகின்றன.

 

ஹிந்து மதம் காட்டும் வாழ்க்கை நெறியே அலாதியானது. அநாதி காலம் தொட்டு இருந்து வருவதும் கூட!

**********