உ.வே.சா.வுக்கு புரியாத பாண்டவ பாஷை! (Post No.4056)

Written by London Swaminathan
Date: 6 July 2017
Time uploaded in London- 6-10 am
Post No. 4056

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சங்கீத மேதை மஹா வைத்யநாதையர் பற்றி தமிழ் தாத்தா உ.வே.சாமிநதையர் எழுதிய புத்தகத்தில் ஒரு அரிய விஷயத்தைச் சொல்லுகிறார். ஆனால் இது பற்றி அதிகம் பிரஸ்தாபிக்காமல் ஒரே ‘பாரா’வில் விஷயத்தை முடித்துவிட்டு ஓடி விடுகிறார்.

பாண்டவ பாஷை!

 

இப்படி உண்மையிலேயே ஒரு பாஷை இருந்ததா? அல்லது மதுரை வணிகர்கள், அல்லது நாம் சிறு பிள்ளைகளுக்குப் புரியக் கூடாதென்பதற்காக உபயோகப் படுத்தும் ஒரு மொழி (உத்தி) யா என்று விளங்கவில்லை.

முதலில் உ.வே.சா. சொல்லுவதைப் படியுங்கள்:-

 

“சகோதரர்களோடு பேசுங்காலத்தில் ஏதோ ஒரு பாஷையில் அவர் (மகா வைத்யநாதையர்) பேசுவார்; அஃது இன்ன பாஷையென்று யாருக்கும் விளங்காது. ஒரு முறை நான் என்ன பாஷையென்று கேட்டேன்; அவர் இதனைப் பாண்டவ பாஷையென்று சொல்வதுண்டு. விராட நகரத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தமக்குள் வழங்கி வந்ததைப் போன்றதென்று கேள்வி” என்றார்.

 

மதுரையில் வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பேரம் பேசுகையில், தமக்குள் சில சங்கேத சொற்களைப் பரிமாறிக்கொள்வார்கள். ‘இந்த ஆளுக்கு விலையை  இவ்வளவு குறைக்கலாம் அல்லது கூட்டு என்றோ, வந்த வாடிக்கையாளர் ஒரு சாவுக் கிராக்கி; நேரத்தை வீணடிக்காதே; ஆளை புறக்கனி என்றோ சங்கேத மொழியில் பேசிக் கொள்வார்கள்.

 

இதே போல நாம் வீட்டில் சிறு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாதென்பதற்காக “ நான் சாக்லெட்டை அங்கே வைத்திருக்கிறேன்” என்று சொல்லாமல் ‘அசா அல் அலெ அட் அங்கே இருக்கிறது’ என்று சொல்லுவோம். சிலர் ‘அ’ என்பதற்குப் பதிலாக ‘க’  என்பதைப் பயன்படுத்துவர் ‘கசா கக் கலெ கட்’ என்பர். ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி சில உத்திகள் இருக்கும்.

 

இது பற்றி உவே.சா. வேறு எங்கும் சொல்லி இருக்கிறாரா என்று தெரியவில்லை. இப்படி உண்மையிலேயே வேறு ஒரு பாஷையைப் பாண்டவர்கள் விராட தேசத்தில் பேசினார்களா என்றும் தெரியவில்லை.

 

என்னுடைய சம்சயம் (ஐயப்பாடு)!

இப்படி பாண்டவ பாஷை என்று ஒன்று இருந்ததா? அல்லது மஹா வைத்திய நாத அய்யர் கிண்டலாக இப்படிக் பகன்றாரா? என்பதே.

 

வாசகர்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எழுதுங்கள்.

-சுபம்-

 

ஓளி மாசைத் தடுக்க சட்டம் (Post No.4055)

Written by S NAGARAJAN

 

Date: 6 July 2017

 

Time uploaded in London:-  5-20 am

 

 

Post No.4055

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

பாக்யா 30-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

ஓளி மாசைத் தடுக்க உலகில் முதன் முதலில் சட்டம் இயற்றிய நாடு!

ச.நாகராஜன்

“நான் நியூயார்க்கிற்கு வந்து  35வது மாடியில் இருந்த எனது அபார்ட்மெண்டின் ஜன்னலைத் திறந்து பார்த்த போது பனி மூட்டமும் ஒளி மாசும் சேர்ந்திருந்தது. வானத்தில் எனது நட்சத்திரத்தை என்னால் காண முடியவில்லை. ஆகவே அதை பேனாவால் என் மணிக்கட்டில் வரைந்து கொண்டேன். ஆனால் அது அழிந்து கொண்டே இருந்தது.பின்னர் பச்சை குத்தும் பார்லருக்குச் சென்று அதை பச்சை குத்திக் கொண்டேன்” – உலகில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் பிரேஜிலைச் சேர்ந்த பேரழகி சூப்பர் மாடல் ஜிஸ்லி பண்ட்சென்

*

ஓளி மாசு கூட உண்மையில் மாசு தானா? ஆம்! இயற்கை படைத்திருக்கும் அற்புதமான பிரபஞ்சத்தில் விண்ணில் மின்னும் கோடிக்கணக்கான தாரகைகளை நகரிலிருந்து பார்க்க முடியாமல் லட்சக்கணக்கானோரைத் தடுப்பது நகரில் மின்னும் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு தான்!

இயற்கையான சூரியனின் ஒளியும் அது மறைந்த பின்னர் ஏற்படும் இருளும் பல்வேறு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

 

கடல் ஆமைகளுக்கு அதிக ஓளியினால் எங்கு முட்டைகளை இடுவது என்று தெரியவில்லை; விழிக்கின்றன! ஆண் வண்டுகளுக்கோ இன விருத்திக்காக பெண் வண்டுகளுடன் கூட முடியவில்லை. இடம் விட்டு இடம் செல்லும் பறவைக் கூட்டங்களோ வழி தெரியாமல் தவிக்கின்றன.

அதிக ஒளியினால் மனிதர்களும் அவஸ்தைப் படுகின்றனர்.

செக்ஸ் உறவில் ஆர்வமே போய்விடுகிறது. அதிகச் சோர்வு ஏற்படுகிறது. ஏன். தூக்கமின்மையுட்ன சில சமயம் கான்ஸர் வியாதி கூட ஒளி மாசினால் உருவாகிறது.

இருள் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்கிறார் கின்கென்பார்க் என்னும் விஞ்ஞானி. “யாரும் இல்லாத தேசம் போல இருளைப் போக்கி ஒளி மயமாக்குவது நல்லதல்ல’ என்கிறார் அவர்.

நாளுக்கு நாள் இந்த ஒளி மாசு அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டு விழித்துக் கொண்ட முதல் நாடு செக்கோஸ்லேவேகியா தான். 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து விளக்குகளும் அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டதோ அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சம் தந்து இதர இடத்திற்குப் போகாதபடி பாதுகாப்பு ஷீல்டு  எனப்படும் ஃபிக்ஸர்களைப் போட வேண்டும் என்று அது சட்டத்தைப் பிறப்பித்தது.

உலகில் இப்படி ஓளி மாசைத் தடுக்க முதன் முதலில் சட்டம் இயற்றிய செக்கோஸ்லேவிகியாவைத் தொடர்ந்து பல நாடுகளும் இதே போல சட்டங்களை இயற்றின.

ஆனால் 2016இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மனித இனத்திற்கு வானத்தைப் பார்க்கவே முடியவில்லையாம். பால் வீ தி எனப்படும் மில்கி வே அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 99 விழுக்காடிற்கும் அதிகமான  மக்கள் ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதன் முதலில் 1988ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் டார்க் – ஸ்கை அசோசியேஷன் (International Dark-Sky Association) உலகின் இருளைப் பாதுகாக்கத் தோன்றியது. ஒளியுடன் இருளையும் பாதுகாக்க இது பாடுபடுகிறது!

சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தவுட்ன் உலகின் பெரு நகரங்கள் அனைத்திலும் ஒளி விளக்குகள் செயற்கை ஒளியை உமிழ்கின்றன.

இருளை நம்பி இருக்கும் தாவரங்களும் பிராணிகளும் இன்னலுக்குள்ளாகின்றன.

உண்மையில் சொல்லப் போனால் உலகமானது சூரியனின் ஒளி-இருள் ஆகிய இந்த இரு நிலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது! சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமே பருவ கால நிலைகளைச் சரியாக ஏற்படுத்துகிறது. இயற்கையான சூரிய ஒளி இதற்கு இன்றியமையாதது. இது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது!

ஆஸ்திரேலியாவில் மட்டும் பத்தொன்பது லட்சத்தி நாற்பதினாயிரம் தெரு விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலியருக்கும் ஒரு விளக்கு! இதற்காகும் செலவு 2100 லட்சம் டாலர்கள். 115 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை இவை வெளிப்படுத்துகின்றன.பூமியை மாசு படுத்துகின்றன!

உலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் நான்கில்  ஒரு பங்கு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தான்! தேவையற்ற விதத்தில் விளம்பரங்களுக்கும்  இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரமோ மிக அதிகம். இத்தாலியைச் சேர்ந்த டெர்னா என்ற நிறுவனம் மாலையில் பகல் நேர வெளிச்சம் அதிகமாக இருந்த நேரத்தில் விளக்குகளைச் சற்று தாமதமாக எரிய விட்டதின் மூலமாக மட்டும் 6452 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சக்தியைச் சேமித்திருக்கிறது!

 தேவையற்ற விதத்தில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான் இடத்தில் ஒளியைப் பரவ விடுவது, தேவைக்கு மேல் மிக அதிக அளவிலான வெளிச்சம்  கொண்ட பல்புகளை எரிய விடுவது, கண்கள் கூசும் விதத்தில் விளக்குகளை எரிப்பது, மிக அதிக பல்புகளின் தொகுதிகளை ஒரே இடத்தில் எரிய விடுவது ஆகியவற்றால் ஒளி மாசு ஏற்பட்டு, அதன் மூலம் விபத்துக்கள், நோய்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்கும் விதத்தில், உலகெங்கும் ஒளி மாசை நீக்க அனைவரும் நடவடிக்கை எடுத்தால்மின்சாரமும் சேமிக்கப்படும், பூமியும் பிழைக்கும்.

முயன்றால் வெற்றி தவிர வேறெதுவும் இல்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி லூயி அகாஸிஸ் (Louis Agassiz)  ஐஸ் காலம்  (Ice Age) பற்றிய தனது ஆராய்ச்சியால் மிகவும் பிரபலமானவர்.அவர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நெடுங்காலம் பணியாற்றினார். அவருக்கு அரிய வகை மீன்கள் கிடைத்தால் போதும், மிகவும் சந்தோஷப்படுவார். மீனவர்கள் அனைவருக்கும் தெரியும்,புதிய அரிதான வகை மீன் கிடைத்தால் உடனடியாக் அதை அகாஸிஸிடம் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று.

   ஒரு நாள் அவரது இருப்பிடம் வந்த பிரதம விருந்தினர் ஒருவர்,இது என்ன அகாஸிஸ் மீன் கடை நடத்துகிறாரா அல்லது இது ஒரு ரெஸ்டாரண்டா? என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். போஸ்டனில் அடிமை ஒழிப்பை ஆதரித்துப் போராட்டம் நடத்திய அமெரிக்க செனேடர் சார்லஸ் சம்னர் (Charles Sumner) க்வின்ஸி மார்கெட் என்ற சந்தையில் புதிய ரக மீன் ஒன்றைப் பார்த்தார்.அவ்வளவு தான், அதை வாங்கிக் கொண்டு ஓடோடி வந்து அகாஸிஸிடம் அதைக் காட்டி மகிழ்ந்தார்.

பாரிஸில் அகாஸிஸ்  இருந்த போது நடந்த சம்பவ்ம் இது : ஒரு செல்வச் செழிப்பான சீமாட்டி அகாஸிஸிடம் வந்து,எப்படி இப்ப்டிப்பட்ட ஒரு மேதை மீன்களை வெட்டி ஆராய்ச்சி செய்ய முடியும் என்று தான் ஆச்சரியப்படுவதாகக் கூறினார். அதற்கு அகாஸிஸ், “மேடம், குட்டி மீன்கள் நீந்தி ஓடும் ஒரு நீரோடை அருகில் என்னை வாழ விட்டால், அதை விட வேறு எதுவும் வேண்டாம் என்று அங்கேயே என் வாழ்நாள் முழுவதையும் கழிப்பேன் என்று கூறினார்.

அகாஸிஸ் ஒரு மீன் மேன்MAN!

***

 

திருக்குறளில் பசு, ‘கோ மாதா’ (Post No.4054)

Written by London Swaminathan
Date: 5 July 2017
Time uploaded in London- 17-44
Post No. 4054
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இமயம் முதல் குமரி வரை பண்பாடு ஒன்றே. பசுவுக்கும் பிராமணனுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இலக்கிய வழக்கு. வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் (திருஞான சம்பந்தர் தேவாரம்) என்பர்.  இதையே சம்ஸ்கிருதத்தில் “கோப்ரஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம், லோகாஸ் சமஸ்தோ சுகினோ ப வந்து” என்பர். அதாவது பிராமணன் முதலான எல்லாரும் பசு முதலான எல்லா ஜீவன்களும் சுபமாக இருக்கட்டும் உலகம் முழுதும் சுபமாக இருக்கட்டும் என்பது இதன் பொருள்.

 

ஏன் பசுவையும் பிராமணனையும் மட்டும் சொல்ல வேண்டும்? சுயநலம் இல்லாமல் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிப்பதாலும் பாலும் வேதமும் எல்லோருக்கும் பயன்படுவதாலும் அவர்களை முதலில் வைத்து மற்றவர்களையும் வாழ்த்தினர்.

 

ஒரு வட்டத்தில் முதல் புள்ளி முடிவான புள்ளி, துவங்கும் இடம், முடியும் இடம் என்று எதுவும் கிடையாது. ஆனால் நாமாக ஒரு கோடு போட்டு இது துவங்கும் இடம், இது முடியும் இடம் என்போம்; ஓட்டப் பந்தயம் நடக்கும் வட்டமான மைதானங்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அது போலவே சமுதாயத்தில் எல்லோரும் ஒரு உடலின் அங்கம் என்று ரிக்வேதம் (புருஷ சூக்தம்) சொல்கிறது. எல்லோரும் சமம் ஆயினும் ஒரு துவக்கம் இருக்க வேண்டும்.

 

தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மலை போற்றும் திருக்குறளில் பசுவையும் பிராமணனையும் வள்ளுவரும் முதலிடத்தில் வைக்கிறார்.

 

ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் (குறள் 560)

 

ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் நியாயமான ஆட்சி நடத்தாவிடில் ஆறு தொழில்களைக் கொண்ட அந்தணர்கள் வேதங்களை மறந்து விடுவர்; பசுக்களும் பால் தராது. இந்தக் கருத்தும் “பசு-பிராமணன்” என்ற ஜோடியும் இமயம் முதல் குமரி வரை எல்லா மொழி நூல்களிலும்,

குறைந்தது  மூவாயிரம் ஆண்டுகளாக, உள்ளது.

 

புற நானூற்றில் நெட்டிமையார் (புறநானூறு பாடல் 9)

பாடிய பாடலில்— பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டும் பாடலில்—- ஆவும் ஆன் இயற் பர்ப்பன மாக்களும் என்ற வரிகள் வருகிறது.

 

கண்ணகிக் பிராமணர்களையும் பெண்களையும் எரிக்காமல் தீயோரை மட்டும் எரி என்று மதுரையில் அக்கினி தேவனுக்கு உத்தரவிட்டது போல பாண்டிய அரசனும் பிராமணர்களும் பசுக்களும் பெண்களும்,நோயாளிகளும் என்று சொல்லிவிட்டுப் போர் தொடுப்பானாம் என்கிறார். அது தர்ம யுத்தம் நடந்த காலம்.

 

இவ்வாறு சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பிராம- பசு ஜோடி  வருகி றது

 

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளி வந்தது இல் (குறள் 1066)

 

பசுவைக் காப்பது புனிதமானது. ஆயினும் ஒருவன் பசுவுக்காக தண்ணீர் கொடுங்கள் என்று தர்ம நியாயப்படி தண்ணீர் கேட்டாலும் பிச்சை, பிச்சைதான்; அது போல பிச்சை எடுப்பதைப் போல  நாவுக்கு இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை.

 

பசு மாட்டை ஏன் வள்ளுவர் உதாரணமாக வைத்தார். பசுக்களைப் பூஜித்து காப்பாற்றுவது இந்துக்களின் கடமை. அதற்காக தண்ணீர் வேண்டும் என்று கேட்பது தர்மமே. ஆனாலும் அதை பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டால், அதுவும் ஒருவனுக்கு இழிவான செயலே.

 

 

தமிழ் நாட்டில் கோவில் வாசல்களில் பசுமாடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதன் அருகிலேயே அகத்திக் கீரையை விலைக்கு விற்கும் பெண்களும் நிற்பர். பக்தர்களில் பலர் காசு கொடுத்து அகத்திக் கீரையை வாங்கி பசுமாட்டுக்குப் போடுவர். இது ஒரு பெரிய தருமம்; எளிதில் புண்ணியம் சேர்க்கும் வழி.

 

இதைத் திருமூலரும் செப்புவார்:

 

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே

பொருள்:-

 

எல்லோரும் எளிதில் செய்யக் கூடிய வைகளைத் திருமூலர் சொல்லிக் கொடுக்கிறரர். இதை யாரும் செய்யலாம்; எப்போதும் செய்யலாம்; செலவின்றிச் செய்யலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்வதைப் புறநானூற்றில் புலவர் கபிலர் அப்படியே சொன்னார்; “பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” (பச்சிலை, பூ, பழம், தண்ணீர்) ஆகிய எதனாலும் என்னைப் பூஜிக்கலாம். இதைப் புறநானூற்றில் (106) புல், இலை, எருக்கம் ஆயினும் — கடவுள் ஏற்பார் என்று கபிலர் சொன்னார்.

 

திருமூலரும் கடவுளுக்கு ஒரு வில்வ இலையையோ, அருகம் புல்லையோ, துளசி இலையையோ கொடுத்தால் போதும் என்பார். அது போல பசு மாட்டுக்கு ஒரு கைப்பிடி புல் அல்லது அகத்திக் கீரை கொடுத்தால் போதும்.  நாம் சாப்பிடும் முன்னால் ஒரு கைப் பிடி அரிசியை ஏழைகளுக்கு, அனாதை ஆச்ரமங்களுக்கு என்று ஒரு பானையில் எடுத்து வைக்க வேண்டும். இதை

 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) பிடி அரிசித் திட்டம் என்று துவக்கி வைத்தார். இதை எல்லாம் செய்ய முடியாதவர்கள் கூட தன் இன்மொழியால் மற்றவர்களுக்கு நல்லதை உரைத்து அவர்களைக் கடைத்தேற்றும் புண்ணியத்தைச் செய்யலாம்.

ஆக, யார் பசுவைப் பற்றிப் பேச வந்தாலும் அத்தோடு பத்து நல்ல செயல்களும் கூடவே வரும்!

 

–Subahm–

 

 

 

Importance of Cow in Sanskrit Literature! (Post No.4053)

Written by London Swaminathan
Date: 5 July 2017
Time uploaded in London- 9-28 am
Post No. 4053

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

The cow occupies a unique position in Hinduism. Kalidasa’s Raghuvamsa gives a graphic account of care and respect shown to a cow by the emperor Dilipa.

Hindus’ greatest contribution to the world civilization is cow and its products. When the world was drinking goat’s milk and camel’s milk and even donkey’s milk they discovered that the cow’s milk is the best in the world and it is as good as mother’s milk. No ancient literature praises or values cow’s milk as Hindu literature. From Rig Veda to Sangam Tamil literature we find innumerable references in praise of the cow.

 

There are very interesting words in Sanskrit from the cow:-

Vaatslayam

Love and affection shown towards calf by its mother cow. Oft quoted in the Vedas

Go loka

The heaven of Krishna is Go loka (cow’s world)

Duhitri

A daughter is called milk maid (duhitri)

Gotra

clan; group

Gopis

Women with divine love towards Krishna

Madhuparka

All the saints are honoured with Milk and Honey. Hospitality is a unique Hindu concept. Rig Veda and Tamil Sangam book Purananuru have a lot of Danastutis, in praise of donation and hospitality. (English word donation comes from Sanskrit Dhaana).

Hosipitality is the rule of life among the Hindus. Tamil Veda Tirukkural has a chapter on it. Rig Veda praises it. Mahabharata has several stories in praise of hospitality. Panchatantra is full of quotations on hospitality. Guests were received with great ceremonies in ancient India. They must be given water to wash their feet and a seat to take rest. If they are unknown people, pial of the house was given to them to take rest and provided with full meals.

 

Hindus not only domesticated the cows and oxen, they worshipped them as gods and goddesses. Kamadhenu is the wish fulfilling cow. The picture and statues of Kamadhenu are in Hindu houses and temples.

Go puja and Gaja Puja (cow and elephant worship) are done in all the temples and religious Mutts. This has been going on for several thousand years without stopping. No animal in the world is worshipped continuously like this.

A word ‘Gohna’ is used for the guests. Foreigners translated it literally as Cow killer. They thought a cow was killed by the seer to feed another seer. The real meaning is that a cow’s products such as milk, butter, ghee, curd/yogurt, cow dung Go mutra (cow’s urine)– all are used in the service of the guests. Cow dung will be sprinkled with water in front of the house. Cow dung will be smeared in the oven to clean it. Cow’s urine is used to purify a place and a person.

Story of Cow’s creation

Satapata Brahmana (2-2-4-1) gives the story of Cow’s creation.

“Prajapati alone existed. He generated Agni (fire) from his mouth.

When they had sung praises, they went towards east saying, ‘We will go back thither! The gods came upon a cow which had sprung into existence. Looking up at them, she uttered the sound ‘hin’. The gods perceived that this was the ‘hin’ of the Saman (melodious sacrificial chant of Sama Veda); for heretofore their song was without ‘hin’, but after that it was the real Saman. (musical chant of Rig Vedic mantras; Hindus discovered the musical notes sa, ri, ga , ma pa, da ni – seven notes)

 

And as this same sound, ‘hin’ of the Saman, was in the cow, therefore the latter affords the means of subsistence; and so does he afford the means of subsistence whosoever thus knows the ‘hin’ of the Saman in the cow”.

 

“They said, ‘Auspicious indeed, is what we have produced here, who have produced the cow; for truly she is the sacrifice, and without her no sacrifice is performed; she is also the food. This word ‘go’ (Sanskrit word for cow; English word cow came from Sanskrit Go) then, is a name of those cows, and so it is of the sacrifice; let him therefore repeat it, saying , good, excellent! and verily, whosoever, , knowing this, repeats it, as it were saying good, excellent! with him those cows multiply, and the sacrifice will incline to him”.

Foreigners couldn’t understand this mantra. They took the word sacrifice and wrote that cow was sacrificed in the fire. But Hindus knew the correct  meaning: without cow’s products they cant run their life or do religious performance; Hindus use milk in birth and funeral ceremonies. Without Go mutra (cow’s urine), Ghee and milk no ceremony is done. They were great scientists to find that that Cow’s urine and Cow’s poo (cow dung) have got great curative and anti- bacterial properties.

Another story about cow is as follows:

Cow came from Prajapati’s Breath

Satapata Brahmana says ((7-5-2-6)

“Prajapati was alone at first. He desired, May I create food, may I be reproduced!. He fashioned animals from his vital airs, a man from his soul (mind), a horse from his eye, a cow from his breath, a sheep from his ear and a goat from his voice”.

 

Foreigners couldn’t understand the meaning of such mantras. Whenever and wherever they wanted they interpreted some words according to their whims and fancies; and the fact is no two foreigners agreed on the meaning, because they don’t know the real meaning. We can see this tend throughout the Vedic translations done by 20 to 25 authors. For them it was jigsaw puzzle game.

 

In the above mantras if they see a direction ‘North’, they will write “Look, they have come from North pole”. Here in the mantra the direction mentioned is east. Poor foreigners couldn’t say that Aryans came from the east. So they will keep quiet!

 

–Subham–

 

 

டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகள் (Post No.4052)

Written by S NAGARAJAN

 

Date: 5 July 2017

 

Time uploaded in London:-  4-37 am

 

 

Post No.4052

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

தெயவ தேசம்

 

க்ராண்ட் கான்யான் அனுபவமும் டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகளும்!

 

ச.நாகராஜன்

சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து குடும்பத்தினர் அனைவரும் விமானம், ரெயில், கார் ஆகியவற்றின் மூலம் நீண்ட ஒரு நெடும் பயணம் மேற்கொண்டோம்.

 

நியூயார்க், நியூஜெர்ஸி, அரிஜோனா, வாஷிங்டன் என்று கலக்கலான ஒரு பயணம்

 

அதில் க்ராண்ட் கான்யானும் ஒன்று. எது எப்படியோ போகட்டும், ஐஸ்வர்யா ராய் க்ராண்ட் கான்யான் பாறையில் ஆடியதை நினைவு கூர்ந்து அந்தப் பாறையைப் பார்த்து ஜென்ம சாபல்யம் பெற்றனர் குடும்பத்தினர்.

 

வியூ பாயிண்ட் என்று ஆங்காங்கே காட்சிகளைப் பார்ப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து போர்டு மாட்டி வைப்பது அமெரிக்காவில் ஒரு நல்ல பழக்கம்.

 

ஒரு வியூ பாயிண்டில் க்ராண்ட் கான்யான் தரிசனத்தை முடித்துக் கொண்டோம். ஏராளமான போட்டோக்கள் எடுக்கப்பட்டன. மகன், மருமகள், மனைவி என்று ஆளுக்கொரு கேமரா. ஒரு மொபைல் போன். அமெரிக்காவில் வாங்கிய விலை மதிப்புள்ள ஒரு அதி நவீன வீடியோ கேமரா.

இவை அனைத்திலும் போட்டோக்கள்- போட்டோக்கள்- போட்டோக்கள்.

 

வியூ பாயிண்டில் ஏராளமான கூட்டம். ஆளாளுக்கு போட்டோ எடுத்துக் கொண்டே இருந்ததால் சமயம் பார்த்துத் தான் போட்டோக்களை எடுக்க முடிந்தது. இங்கும் அங்குமாக ஓடி ஓடி ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தது.

 

நேரத்தில் குறியாக இருந்த நான் போதும் போகலாம் என்ற எச்சரிக்கை குரலை Nth  டைமாகக் கொடுத்து அனைவரையும் நகர்த்தி காரில் அமர்த்தினேன்.

 

கார் புறப்பட்டது. ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும். எல்லோருடைய கேமராக்கள்,மொபைல் போன்கள், வீடியோ கேமரா எல்லாம் பத்திரமாக காருக்கு வந்ததா என்று கேட்டேன்.

ஷாக்!

 

வீடியோ கேமராவைத் தவிர அனைத்தும் வந்து இருந்தன.

வீடியோவைக் காணோம். காரை நிறுத்தினோம். சரி பார்த்தோம். ஹூம், வீடியோ கேமராவைக் காணோம்.

 

என் மருமகள் அனைவரது மொபைல் போன்கள், கேமராக்களை வாங்கி டிஜிடல் மயமாக இருந்த போட்டோக்களைப் பார்த்து திடீரென்று கூவினாள்.

 

“இதோ இருக்கிறது. இந்த பெஞ்சின் மீது வைத்து விட்டு வந்து விட்டோம்”

 

கேமரா ‘ஙே’ என்று அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்தது.

இப்போது என்ன செய்வது. இன்னும் அங்கு போக ஒரு அரை மணி நேரம் ஆகும்.

 

ஆக ஒன்றரை மணி நேரத்தில் அதை யார் எடுத்துக் கொண்டு போனார்களோ?

 

சரி, ஒரு முயற்சி தான்!

 

வண்டியைத் திருப்பினோம்.

 

வியூ பாயிண்ட் வந்தது.

 

மனம் பக் பக் என்று இருந்தது.அனைவரும் பெஞ்சை நோக்கி ஓடினோம்.

 

அங்கு அந்த கேமரா அப்படியே இருந்தது. ‘ஙே’ என்று அசையாமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.

முன்பை விட இப்போது இன்னும் அதிகக் கூட்டம்.

எங்கள் காமராவை சரி பார்த்து எடுத்துக் கொண்டோம்.

அனைவரும் சொன்ன வார்த்தை: அமெரிக்கா அமெரிக்கா தான்!

ஆம், யாரும் ஆசைப்பட்டு அதை எடுக்க முயலவில்லை.

அமெரிக்காவில் பெற்ற பல நல்ல அனுபவங்களில் இது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

அவரவர் தம் தம் வேலையைப் பார்ப்பது அமெரிக்கர்களின் பழக்கம்.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது அவர்களின் பரம்பரைக் குணம். வாழ்க அமெரிக்கா; வளர்க அமெரிக்கர்களின் நற்பண்பு.

 

சரி, தெய்வ தேசத்திற்கு வருவோம்.

 

இப்போது எங்கு பார்த்தாலும் சுரண்டல்.லஞ்சம். பேராசை. வேலை பார்க்காமல் அதிக சம்பளம் எதிர்பார்க்கும் குணம்.

போக வேண்டிய பாரதம் இது.

 

வருகின்ற பாரதம் பாரதி பாடியது போல அமைய வேண்டும்.

தெய்வ தேசத்தில் பழைய நாட்களில் இருந்த நற்பண்புகளைக் காணோம்.

அறவே காணோமா?

 

அப்படிச் சொல்ல முடியாது.

 

ஆங்காங்கே அற்புதமான நல்லவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

ஒரு சம்பவம்.

 

3-7-2014 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியானது இது.

 

59 வயதான காமேஷ்வர் கிரி ஒரு டாக்ஸி டிரைவர். கொல்கொத்தாவில் சுமார் 40 ஆண்டுகளாக டாக்ஸியை ஓட்டி வருபவர்.

 

ஒரு புதன் கிழமை அவரது வண்டியில் ஒரு குடும்பம் ஏறியது. அவர்களை வீட்டில் இறக்கி விட்ட காமேஷவர் கிரி திரும்பினார்.

சற்று நேரம் கழித்து டிக்கியைப் பார்க்கையில் அங்கு ஒரு பெரிய பெட்டி இருநதது.

 

அந்தக் குடும்பத்தினர் அதை மட்டும் விட்டு விட்டனர் – எடுக்க் மறந்து போய்!

 

பெட்டியை அவர் திறந்தார். உள்ளே ஜொலிக்கும் வைர நகைகள்.ஏராளம் இருந்தன. ஒரு கல்யாணத்திற்குத் தேவையான தங்க நகைகள்!

 

இங்கு நிமாய் சந்திர தாஸ்  நியூ அலிபூர் ரோடில் ராஜஸ்தான் பவனில் ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறியவர் தனது மகளின் திருமணத்திற்கு உரிய நகைகளை வாங்கிய சந்தோஷத்துடன் வீட்டில் குடும்பத்தினருடன் இறங்கினார். நடக்கவிருக்கும் விழாவைப் பற்றிய யோசனையில் இருந்தவர் டாக்ஸியை விட்டு அவசரம் அவசரமாக இறங்கி விட்டார்.

 

நகைப் பெட்டியை டிக்கியில் அப்படியே விட்டு விட்டார்.

வீட்டினுள் நுழைந்தவுடன் தான் தெரிந்தது – பெட்டி இல்லை என்பது!

 

உடனடியாக டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி ஓடினார். ராஜஸ்தான் ஸ்வீட் கடையின் அருகில் இருந்த டாக்ஸி டிரைவர்களிடம் தான் வந்த வண்டியைப் பற்றி விசாரித்தார்.

அங்குள்ள டிரைவர்கள் கிரி ஏற்கனவே அவர் வீட்டிற்குத் தான் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

உடனடியாக அவரை போனில் தொடர்பு கொண்டார். அவர் வீட்டில் வாசலில் தான் நின்று கொண்டிருப்பதாக கிரி கூறினார்.

 

வீட்டிற்குச் சென்ற நிமாய் தனது பெட்டியை கிரியிடம் பெற்றுக் கொண்ட போது அவர் கண்களில் நீர் துளிர்த்தது.

கிரிக்கு அவர் பரிசாக அளித்த தொகையை அவர் பெற மறுத்து விட்டார்.

 

ஏன்? அவர் தந்தை சொன்ன சொற்கள் அவர் நினைவுக்கு வந்ததாம்.

 

There is enough to meet a man’s needs, but never his greed.

 

இது தான் அவரது தந்தையின் மந்திர வாசகம்!

 

வற்புறுத்திய பின்னர் அவர் 44 ரூபாய்களைப் பெற்றுக் கொண்டார். நகைகளைத் திருப்பிக் கொண்டுவந்ததின் வண்டிச் சத்தம் அது.

 

அனைவரும் அவரைப் பாராட்டி வற்புறுத்திய பின்னர் நூறு ரூபாயை அவர் ஏற்றுக் கொண்டார்.

என் தந்தை கூறிய வாசகத்தை மறவேன்.

 

ஒவ்வொருவருக்கும் தேவையானது போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரது பேராசைக்கு ஈடுகட்ட தான் போதுமான அளவு இல்லை என்பது தந்தையின் வாக்கு!

 

அவருக்கு இரு ஆசைகள்.

இன்னும் ஐந்து வருடம் ஓட்டினால் அவரது டாக்ஸி கடனாக நிலுவையில் இருக்கும் எண்பதினாயிரம் ரூபாயை அடைத்து விடலாம்.

 

இன்னொன்று, இப்போது பி.காம் படிக்கும் தன் பையன் ஒரு சார்டர்ட் அக்கவுண்ட் ஆக விரும்புகிறான். அவன் அப்படி ஆகி விட வேண்டும்!

 

அவரை அனைவரும் வாழ்த்தினர். ஒரு நல்லவரின் ஆசைகள் நிறைவேறட்டும்.

தெய்வ தேசத்தின் பிரதிநிதி காமேஷ்வர் கிரி.

 

 

மாத்ருவத் பரதாரேஷு பரத்ரவ்யேஷு லோஷ்டத்ரவத்!

பர தாரம் – பர திரவியம் – அடுத்தவர் தாரம், அடுத்தவர் செல்வம் மீது கண் கூட வைக்காதே என்பது தெயவ தேச அறநூல்களின் அறிவுரை.

 

இதன்படி ஒரு காலத்தில் அனைவரும் பாரதத்தில் வாழ்ந்தனர்.

இன்று புரையோடிப் போன வாழ்க்கை முறையில் லஞ்ச லாவண்யத்தைத் தான் காண முடிகிறது.

 

ஆனால் சிலரேனும் தர்ம காவலர்களாக இருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.

 

காமேஷவர் கிரி போன்றவர்களின் எண்ணிக்கை பெருகும் போது நமது தேசம் மீண்டும் தெய்வ தேசப் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கும்!

***

மொட்டைச் சுவர், கட்டைச் சுவர், தட்டைச் சுவர், குட்டைச் சுவர் – (Post No.4051)

Written by London Swaminathan
Date: 4 July 2017
Time uploaded in London- 21-41
Post No. 4051

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹா வைத்யநாதய்யர் வாழ்க்கைச் சரிதத்தில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்.

 

“ஒரு வருஷம் ஐப்பசி மாதத்தில் வழக்கம் போல துலா ஸ்நானத்திற்காக சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் இருந்து மாயூரம் சென்று கட்டளை மடத்தில் இருந்து வந்தார். மஹா வைத்ய நாதய்யர் மற்றும் பல வித்துவான்கள் வந்திருந்தனர்.

 

மாயூரத்தில் அக்காலத்தில் கோயிற் பாடகரான ஒரு முதிய அந்தணர் இருந்தார். அவர் யாருடன் பேசினாலும் “அபயாம்பிகா கடாட்சம் உங்களுக்குக் உண்டாகட்டும்” என்பார். இதனால் அவர் பெயரே அபயாம்பிகா கடாக்ஷம் என்றாகிவிட்டது (அபயாம்பிகை என்பது மாயூரம் அம்மனின் பெயர்)

அவர் அடிக்கடி மடத்துக்கு வந்து போவார். சுப்பிரமணிய தேசிகர், அவருக்கு வருஷத்துக்கு முக்கால் பணம் சன்மானம் கொடுப்பார். அப்படி செய்யும்போதெல்லாம் மஹா வைத்திய நாதய்யருக்கு மட்டும் பத்து இருபது என்று சன்மானம் கொடுக்கிறீர்களே. நான் மட்டும் தாழ்ந்தவனா? அந்தப் பையன் வரும்போது அவனை என்னுடன் பாடச் சொன்னால் என் யோக்யதை உங்களுக்குத் தெரியவரும்” என்று சொல்வார். சுப்பிரமணிய தேசிகரும் நகைத்துக் கொண்டே அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அனுப்புவார்.

 

மாயூரத்தில் எல்லோரும் கூடியிருந்த சமயத்தில் அபயாம்பிகா கடக்ஷமும் வந்து சேர்ந்தார். வழக்கம்போல ஸன்மானம் பெற்றுக்கொண்டர்.; பிறகு மஹா வைத்யநாதய்யருடன் சேர்ந்து பாடச் செய்தால் தம்முடைய மதிப்பு விளங்கும் என்றார். அங்கு அய்யர் இருந்தது அவருக்குத் தெரியாது. சுப்பிரமணிய தேசிகரும் புன்சிரிப்போடு இவர்களே மஹா வைத்யநதையர் அவர்கள் என்றார்.

 

அந்தப் பிராமணர் உடனே திடுக்கிட்டு எழுந்து போய்விடுவார்  என்று

நாங்கள் யாவரும் எண்ணினோம். ஆனால் அவரோ எழுந்து போகாமல், சிறிதும் அஞ்சாமல் “அப்படியா? நல்ல வேளை! இப்பொழுது அகப்பட்டுக் கொண்டாயா? பாடு பார்க்கலாம் என்றார். நானும் பாடுகிறேன். நான் பாடிக்காட்டும்படி பாடுவாயா என்று கேட்டுவிட்டு,

“மொட்டைச் சுவர், கட்டைச் சுவர்,  தட்டைச் சுவர், குட்டைச் சுவர்”  என்று தாம் வாய்க்கு வந்தவற்றைப் பல்லவியாக எடுத்துப் பாட ஆரம்பித்தார்

 

மஹா வைத்யநாதையர் சிரித்தார். உடனே அந்த முதியவர் என்ன சிரிக்கிறாய்? சிரித்துவிட்டால் ஏமாந்து போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? பாடு பார்க்கலாம். பேசாமல் ரூபாயை வாங்கி முடித்துக்கொண்டு போக மாத்திரம் தெரியுமா? நான் இல்லாத காலத்தில் வந்து பண்டார சந்நிதியை ஏமாற்றிப் பணம் வாங்குகிறாயா? எங்கே, இதைப் பல்லவியாக வைத்துப் பாடு பார்க்கலாம் என்றார். இவ்வாறு உத்ஸாகத்தோடு சொல்லிவிட்டு எல்லோர் முகத்தையும் பார்த்தார். உடன் இருந்த யாவரும் சிரித்தனர்.

உடனே அங்கிருந்த தியாகராஜ சாஸ்திரிகள், அந்தப் பிராமணரைப் பார்த்து ” ஓய், இங்கே வாரும். ஏன் அவரிடம் சென்று குழறுகிறீர்?  நீர் இங்கே வந்து பாடும்; நான் பாடிக் காட்டுகிறேன் என்று சொன்னார். அந்த முதியவரும் அப்படியே வந்து அசராமல் பாடினார். தியாகராஜ சாஸ்திரிகளும், அவர் பாடிய படியெல்லாம் பாடிக்காட்டினார். அவர் அபஸ்வரமாகப் பாடும்போதெல்லாம் சாஸ்திரிகளும் அபஸ்வரமாகப் பாடினார். இந்த விநோத நிகழ்ச்சியால் சபையில் இருந்த அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். ஒன்றும் தெரியாத ஸாதுவாகிய அபயாம்பிகா கடாக்ஷம், தமது  பாடல் இங்கே எடுபடாது என்று எண்ணி பேசாமல் எழுந்து போய்விட்டார்.

 

–சுபம்—

 

Sacred Cow in Satapata Brahmana (Post No.4050)

Cow attending Veda class

Written by London Swaminathan
Date: 4 July 2017
Time uploaded in London- 10-41 am
Post No. 4050

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Satapata Brahmana is one of the Brahmana books of Vedic period. Foreigners date it to 800 BCE to 1000 BCE. Hindus date it to thousands of years before that. Foreigners spread a false story that Hindus adopted vegetarianism only after Mahavira and Gautama Buddha appeared in India. Those stories are exploded by the Satapata Brahmana passage.

Cow photographed in Oldenburg ,Germany

Through out the Vedas cow and calf are used as the symbol of love and affection between a mother and her child. This is the oft used simile in the oldest portions of the Vedas. That shows that cow was equated to mother. Vaatsalyam is a Sanskrit word coined out of it (Vatsa=calf)

 

The biggest contribution of the Vedic Hindus to the world civilization are the DECIMAL SYSTEM and the COW’S MILK. In no other world literature, we come across such references or similes as we see in the Vedas. Until today the world has not found an alternative to the Decimal system and the Cow’s milk. These are used everyday. This shows at they are the oldest and highly advanced civilization. These type of concepts can evolve only after thousands of trial and error methods or experiments.

Here are some passages from the famous Satapata Brahmana (3-1-2-3):

“Let him not eat the flesh of either the cow or the ox; for the cow and the ox doubtless support everything on earth. The Gods spake: ‘Verily the cow and the ox support everything here; come let us bestow on the cow and the ox whatever vigour belonged to other species of animals; and, therefore, the cow and ox eat the most. Hence were one to eat the flesh of an ox or cow, there would be, as it were, an eating of everything, or, as it were, a going on to the end. Such a one, indeed, would be likely to be born again as a strange being, as one of whom there is evil report, such as, “He has expelled the embryo from a woman’ He has committed a sin; let him therefore, not eat the flesh of the cow and the ox”.

Most valuable fuel and manure– cow dung

Foreigners are so cunning and divisive that they quote from different sources (very old and the latest) to support their arguments. It may be from the latest books, which they would never mention. But if they see any good things, they will say that they are from the latest books. It was because of…………. They will bluff.

 

Atharva Veda talks about a huge geographical area from West Bengal to Iran. No ancient civilization had such a sway over a large region. When such things come they will say Atharvana Veda was the latest addition. How latest – no two scholars agree! They try to cramp the development of a huge civilization within a span of 200 to 400 years. It is not possible to any civilization even in the modern period.

 

Usefulness of the Cows:

Sale of Cow for the Soma plant

In Vedic times barter trade was practised. They exchanged cows for Soma herb. Here is a passage about it:

“He bargains for the King Soma; and, because he bargains for the king, therefore any and everything is vendible. He says,

Soma seller! is your King Soma for sale?

Soma seller: He is for sale

I will buy him from you.

Buy him

I will buy him of you for one sixteenth of the cow;

King Soma is surely worth more than that.

From the cow comes the fresh milk; from the boiled milk boiled milk comes ghee/butter cream, clotted curds, whey etc.

Soma seller: King Soma is worth more than that; but surely is the greatness of the cow

Adhvaryu Priest:-

Gold is yours;  a cloth is yours;  a milch cow, a pair of kine,  three other cows are thine.

 

They buy the Soma plant for a cow and then the cow is also taken back.

This type of conversation shows the importance of cow and they are shown as equal to mother and Soma plant.

Foreigners quote certain passages to show that a cow was sacrificed in the yaga; but there are also it is explained that a cow made up of dough or flour is sacrificed.

 

The very concept of sacrifice is uniquely Hindu. It shows that all you desire, all that you want, all you consider valuable are not yours—Idam Na Mama – it is not mine.

 

from this ritual ‘Idam na mama’ they take humans to a higher stage i.e. everything thing belongs to God – Isavaasyam Idam sarvam i.e.

Cow Puja at Kanchipuram

MANTRA ONE of Isavasya Upanishad

 

isavasyam idam sarvam

yat kinca jagatyam jagat

tena tyaktena bhunjitha

ma grdhah kasya svid dhanam

 

isa–by the Lord; avasyam–controlled; idam–this; sarvam–all; yat kinca— whatever; jagatyam–within the universe; jagat–all that is animate or inanimate; tena–by Him; tyaktena–set-apart quota; bhunjithah–you should accept; ma–do not; grdhah–endeavor to gain; kasya svit–of anyone else; dhanam–the wealth.

 

TRANSLATION

 

Everything animate or inanimate that is within the universe is controlled and owned by the Lord. One should therefore accept only those things necessary for himself, which are set aside as his quota, and one should not accept other things, knowing well to whom they belong. 

 

(This is the favourite hymn of Mahatma Gandhi)

 

–subham–

 

சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள் (Post No.4049)

Written by S NAGARAJAN

 

Date: 4 July 2017

 

Time uploaded in London:-  5-59 am

 

 

Post No.4049

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

தெய்வ தேசம்

 

சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள்; பலிக்காமல் போக வைக்க முடியுமா?!

ச.நாகராஜன்

 

‘ராஸ்கல்,ரௌடிகள், கொள்ளைக்காரர்கள் கைக்கு அதிகாரம் போகும்; எல்லா இந்திய தலைவர்களும் மிக மோசமான,போலியான தலைவர்களாக இருப்பார்கள். இனிக்க இனிக்கப் பேசுவர்; ஆனால் வஞ்சக நெஞ்சைக் கொண்டிருப்பர். அதிகாரத்திற்காகத் தங்களுக்குள் தாங்களே  சண்டையிடுவர். அரசியல் குழப்பங்களில் இந்தியா காணாமல் போகும். இந்தியாவில் காற்றும் நீரும் கூட வரி விதிக்கப்படும் ஒரு நாள் வந்து சேரும்.’ -வின்ஸ்டன் சர்ச்சில்

 

 

“Power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre & men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight amongst themselves for power and India will be lost in political squabbles. A day would come when even air and water would be taxed in India.”

 

வின்ஸ்டன் சர்ச்சிலின் மிக பிரபலமான இந்த மேற்கோள் ‘ராஸ்கல் மேற்கோள்’ (Rascal Quote)  என்று உலகெங்கும் பரவலாகப் பேசப்படுகிறது.

இதைக் கேட்கும் உண்மையான் தேசபக்தியுடைய இந்தியர்கள் சிரிப்பார்கள்.

எங்கள் தேசம் உயர் தேசம் என்று நமது பரம்பரையைச் சுட்டிக் காட்டி நெஞ்சு நிமிர்ந்து நடப்பர்.

சரி தான்! நல்லவர்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் நாட்டு நடப்பு?

நாட்டு நடப்பை அறிந்தவர்கள் கீழ்க்கண்ட விதமாகச் சொல்லுகின்றனர்:-

எல்லா பல்கலைத் துணை வேந்தர்களும அயோக்கிய ராஸ்கல்கள். அந்தப் பதவிக்கு ஐந்து கோடி குறைந்த பட்ச தொகையாகக் கொடுத்து அதை ‘வாங்க’ வேண்டுமாம்.

டி.எஸ்.பி. என்றால் அரை சி அதாவது 50 ல.

இன்ஸ்பெக்டர் என்றால் கால் சி.

வாத்தியார் என்றால் கூட ஒரு ல.

அரசு பதவிக்கு குறைந்த பட்ச தகுதி அரசியல் கட்சி ஆபீஸுக்குத் தினசரி போக வேண்டும். அரசு அலுவலகம் “தானாக” இயங்கும் அல்லது தூங்கும். யாருக்குக் கவலை.

நீதியரசர் பதவி பற்றிச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

தனக்குத் தானே வழக்கை விசாரித்து தன்னை நிரபராதி என்று தீர்ப்புச் சொல்லிக் கொண்டு மற்ற நீதியரசர்களுக்குத் தண்டனை விதிக்கும் நீதியரசர் ஒரு நல்ல உதாரணம்.

எஞ்ஜினியரிங், மெடிகல் என எடுத்துக் கொண்டால் 80 ல வேண்டும் – ஒரு சீட்டைப் பெற.

லா பற்றிச் சொல்லாம’லா’  இருக்க முடியும்? வேண்டாமப்பா, கல்’லா’த பேர்களே நல்லவர்கள். இங்கு இல்’லா’த பேர்களே யோக்கியர்கள்!

ஊடகங்கள் பொய்மூட்டையின் இருப்பிடம்; போலிகளின் விவாத மேடை விபரீத மேடை! தொலைக்காட்சியும் பத்திரிகைகளும் ஐந்தாம் படையாக மாறிக் கொண்டிருப்பதால் நாடு படும் பாடு பெரும்பாடு.

கோவில்களைக் கொள்ளையடிப்பதோ கைவந்த ஒரு தனிக் கலை!

இவற்றால் பண்பாடு படும் பாடு பற்றி ஒரு ‘பண்’ பாடு என்றால் கவிஞர்களாலும் கூட முடியாது.

அரசியலோ ரௌடிகளின் கூடாரம். கொலை கேஸ்களில் மாட்டிக் கொண்டவர்களின் இருப்பிடம். பல் லட்சம் கோடிகள் ஊழல் வழக்கில் சிக்குவதே அடிப்ப்டைத் தகுதி.

சி என்பது சீச்சீ என்று சொல்லுமளவு மிக அற்பமான தொகை அவர்களுக்கு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காமராஜர் சாதி மத வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் வயிறாரச் சோறிட்டு கல்விக் கண்களைத் திறக்க முயற்சித்ததை நன்கு அறிவோம்.

பின்னால் திராவிடப் பிசாசுகள் ஊழல்,பொய், லஞ்ச் லாவண்யங்களை அவிழ்த்து விட்டு அதில் தமது குடும்பத்தை வளர்த்த கதையையும் அறிவோம்.

தமிழ்நாடு மட்டுமல்ல, பீஹார், உ.பி. கேரளம், கர்நாடகம், வங்காளம் எந்த மாநிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் – அங்கும் இதே கதை தான்! ஊழல் அரசியலே தான்!

இது தான் நாட்டு நடப்பு அறிந்தோர் கூறுவது!

 

சர்ச்சிலின் மேற்கோளை நிச்சயமாக விரைவில் நடைமுறைப்படுத்தி விடுவோம் என்று ஆவேசமாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்து போகிறோம்.

நல்லவர்கள் நடுங்குகிறார்கள். யோக்கியமான்வர்கள் திகைக்கிறார்கள். எப்படித் தான் இந்த நாட்டில் வாழ்வது?

ஆறுகள் வறள்கின்றன – மணல் கொள்ளையால் – நல்ல மனங்கள் வறள்வது போல.

மலைகள் பொடியாகின்றன, கற்களைக் கொள்ளை அடிப்பதால் – நல்லவர் உள்ளம் பொடிப்பொடியாகி நொறுங்குவது போல.

இது தவிர,

மைனாரிடி அப்பீஸ்மெண்ட்.

தாழ்ந்தவர் கார்டைக் காட்டி சலுகை பெற முயல்வது.

எதையாவது இலவசமாகப் பெற்று வோட்டைத் தருவது.

இன்ன பிற அலங்கோலங்களை ‘எண்ணி’, ‘எண்ணி’ ( counting and thinking) மாய்ந்து போகிறோம்.

சர்ச்சில் கூறியது நடந்து விடுமா? சற்று யோசிப்போம்.

 

அவரைத் திட்ட வேண்டாம்; நம்மைச் சார்ந்தவர்கள் திருந்த வழி உண்டா என்று யோசிப்போம்.

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது அறநூல்களின் முடிபு. என்றாலும் அறத்தை வெல்ல வைக்க போதுமான நல்லவர்கள் தேவை அல்லவா?

ந்ல்லவர்கள் பகிரங்கமாக ஒன்று கூட முடியாத நிலை கூட ஏற்பட்டு விடும் போல இருக்கிறது.

ஒரு இரகசிய இயக்கமாக மாறி இவர்கள் நம் தேசத்தைக் காப்பாற்ற முன் வர வேண்டும்.

சர்ச்சிலின் மேற்கோள் பலிக்காமல் இருக்க நமது பாரம்பரிய அடிப்படையிலான ஒரு ‘வேத உத்வேகம்’ தேவை

ஜனநாயகத்தைக் காப்போம். நீதித்துறையை சரியானபடி பாதுகாப்போம்.

இந்திய அரசியல் சாஸனம் நமது இன்றைய தர்ம சாஸனம் என்பதை மனதில் இருத்திச் செயல்படுவோம்.

தர்மநெறி முறைகளைக் காப்போம்.

நல்ல ஊடகங்களை மட்டும் வளர்ப்போம்.

திறமைக்கும் தகுதிக்கும் மதிப்புத் தருவோம்.

வேலை செய்வது கடமை என உணர்வோம்.

சத்யமேவ ஜயதே என்ற பாரத அடிப்படை உண்மையை வெற்றி பெறச் செய்வோம். நமது ராணுவத்தைப் போற்றுவோம். வீரர்களுக்கு உறுதுணையாகத் தோள் கொடுப்போம்.

தர்மமே அரசியலுக்கு அடிப்படை என்பதை உலகிற்குக் காட்டுவோம்.

 

பாதை பிறழாமல் இருக்க அருள் புரி பாரத தேவியே!

போகுமிடம் வெகு தூரம்;

போக வேண்டும் நெடு நேரம்!

துணை இருப்பாய் காளி!

நீயே எமக்கு தர்ம வேலி!!

***                                                             ல என்றால் லட்சம் சி என்றால் க்ரோர். எல்லோரும் இந்நாட்டு ரியல் எஸ்டேட் மன்னர்கள் என்பதால் இதற்கு அர்த்தம் புரிந்திருக்க வேண்டும்.

 

மஹா வைத்திய நாத அய்யரின் தமிழ் அறிவு (Post No.4048)

Written by London Swaminathan
Date: 3 July 2017
Time uploaded in London-22-42
Post No. 4048

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹாவைத்திய நாத அய்யர் பெரிய சங்கீத மேதை. அவருடைய சங்கீத அறிவுக்கு யாரும் ‘சர்ட்டிபிகேட்’ கொடுக்க வேண்டாம். ஆனால் அவருடைய தமிழ் அறிவு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களாலும் பாராட்டப்பட்டத்தை உ.வே சாமிநாத அய்யர் எழுதும்போது அவருக்கு இரட்டைப் பட்டம் கிடைத்தது போலாகும்.

 

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கையில் திருக்குற்றாலப் புராணத்தின் அச்சுப் பிரதி ஒன்று கிடைத்தவுடன் ஒவ்வொரு பாடலாகப் படித்து பொருள் சொல்லிக்கொண்டே வந்தார். அப்பொழுது மஹா வைத்யநாத அய்யரும் இருந்தார். அவரும் தமக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டு வந்தார். அதில் சண்டிகேசுவர வணக்கம் பற்றிய பாடல் வந்தது

 

தான் பிறந்த தந்தையையும் இனிப்பிறக்கும் நிந்தையையும் தடிந்து சேயென்

றான்பிறங்கு மழவிடைமே லொருவரழைத்திடவிருவர் அயிர்ப்பவேகிக்

கான்பொலிதா ரரிபிரமா தியர்க்குமெய்தா விருக்கையெய்திக்கடவுட்சேடம்

வான்புலவர் பெறாப்பேறு பெற்றவனை நற்றவனை வழுத்தல் செய்வாம்

 

என்னும் செய்யுளில் “சேயென்று ஒருவர் அழைத்திட இருவர் அயிர்ப்பவேகி” என்ற பகுதியில் இருவர் என்பது யார்? என்று விளங்கவில்லை; உடனிருந்தவர்களும் யோசித்தார்கள்; சிலர் பிரம்மா-விஷ்ணு என்றனர். ஆனால் அது பொருத்தமாக இல்லை. அப்பொழுது மஹா   வைத்யநாதய்யர், விநாயகர், சுப்பிரமணியர் என்று பொருள் சொல்லலாமோ என்றா ர் அது அந்த இடத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தவுடன் பிள்ளையவர்களும் அதை ஆமோதித்தார்.

 

ஐயா, நீங்கள் சொன்னதுதான் நன்றாக இருக்கிறது. உங்களுடைய ஈஸ்வர பக்தியே இவ்வாறு தோன்றச் செய்தது என்றார். அவருடைய தமிழறிவை மஹாவித்துவானே கொண்டாடிவிட்டார்கள் என்றால் வேறு புதிதாக என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறார் உ.வே.சா.

 

மஹா வைத்தியநாதரும் அவருடைய தமையனாரும் சிலேடையாகப் பேசுவதில் வல்லவர்கள்

மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் தென்னாட்டு யாத்திரை சென்றபோது இருவரும் உடன் சென்றனர். கம்பனேரி புதுக்குடி என்ற இடத்தில்  அவர்கள் இருவர் மற்றும் உ.வே.சா. ஆகிய மூவரும் அணிந்திருந்த ஏறுமுக ருத்திராட்சக் கண்டியில் இருந்த தங்க முலாம் கொடுத்த வெள்ளி வில்லைகளை அகற்றிவிட்டு தங்க வில்லைகளைப் போடும்படி தேசிகர்  செய்வித்தனர்.  அப்பொழுது இராமஸ்வாமி அய்யர், “வெள்ளிவில்லை தங்க வில்லை” என்று சிலேடை மொழியில் பேசி அனைவரையும் மகிழ்வித்தார்.

 

இதே போல குற்றாலம் சென்றபோது அவருடைய தமையனார் ” எவ்வளவு கல் (மைல்) தாண்டி இருப்போம்? என்றார். மஹா வைத்திய நாதய்யர் “எல்லாங் கல்லுத்தானே” என்றனர்.

 

 

மஹா வைத்திய நாதய்யர் கூறும் சொல் விளக்கங்கள் மிக நன்றாக இருக்கும். தமிழ் மற்றும் சம்ஸ்கிருத நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்குவார். அப்பொழுது அவரது ஆராய்ச்சியின் ஆழம் புலப்படும். தேவர-உபநிஷத் கருத்துகளை ஒப்பிட்டுப் பேசுவார்.மங்களம் பாடுகையில் சஹானா ராகத்திலுள்ள நந்திகேசாய மங்களம் என்பதைப் பாடி நிறைவு செய்வார்.

அப்பூதி நாயனார் சரித்திரப் பிரசங்கம் செய்தபோது பெரியபுராணக் கீர்த்தனையில்  திங்களூர் மாடத்திங்களூர் என்ற வரிக்குப் பொருள் சொல்கையில் ‘சந்திரன், மேல் மாடத்தில் ஊர்ந்து செல்லும் ஊர்’ என்று பொருள் சொன்னார். சந்திரன், குருத் துரோகம் செய்த பாவத்தில் சிக்கியதால் அப்பூதி அடிகள் வாழும் ஊரின் மாடத்தில் ஊர்ந்தாதாலாவது பாவம் போகும் என்று “நிலவு சென்ற ஊர்” என்று விளக்கம் தந்தார்.

 

சோமாசிமாறநாயனார் சரித்திரம் சொல்கையில் எப்படியாவது, சுந்தரமூர்த்தி நாயனாரின் உதவிபெற்று  தியாகேசப் பெருமானைத் தன் யாகத்துக்கு வரவழைக்க திட்டமிட்டார். இதற்காக சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பிடித்த தூதுவளைக் கீரையை நாள்தோறும் அவர் அனுப்பிவந்தாராம். அதைக்கூறும் கீர்த்தனம் “தூதுவளைக் கீரையைக் காதலாய்க் கொடுத்துவந்தார்” என்று தொடங்குவது. இதைப்  பாடிப் பிரசங்கம் செய்கையில் வைத்திய நாதய்யர், அந்தக் கீரையின் பெயர் ‘தூதுவளை’. உங்களுக்குத் தூதாகச் சென்ற  சிவபெருமானை இணங்கச் செய்யவேண்டும் என்பதால்தான் தூதுவளைக் கீரையை தினமும் சப்ளை செய்தார் போலும் என்றார் வைத்திநாதய்யர்.

 

–சுபம்–

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்! (Post No.4047)

Written by S NAGARAJAN

 

Date: 3 July 2017

 

Time uploaded in London:-  6-40 am

 

 

Post No.4047

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்!

 

ச.நாகராஜன்

இப்போது உலகெங்கும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன, திகைக்க வைக்கின்றன!

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்லாம் மதத்தைக் கண்டு பயப்பட்டு தங்கள் மதத்தையும் நாட்டையும் காப்பாற்ற முனைப்போடு ஈடுபட உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்கும் காட்சியைக் காண்கிறோம்.

 

 

ஆஸ்திரேலியாவிலோ, எங்கள் தேசத்தின் அரசியல் சாஸனம் மற்றும் பண்பாட்டுக்குத் தக வாழ முடியுமானால் இங்கு வாழுங்கள்; இல்லையேல் நடையைக் கட்டுங்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் முஸ்லீம்களை நோக்கி எச்சரிக்கை கலந்த அறிவுரையை சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதையும் காண்கிறோம்.

 

 

மியான்மரிலோ 969 இயக்கம் முஸ்லீம்களை ஒதுக்கி வைத்து புத்த மதத்தினரின் கடைகளிலேயே அனைத்தையும் வாங்குங்கள் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

 

 

அமெரிக்காவிலோ முன்னர் ரஷியாவை எதிரியாகச் சித்தரித்து வரும் நாவல்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை அறவே காணோம். அதற்குப் பதிலாக இஸ்லாமிய தீவிரவாதிகளை பயங்கரமாகச் சித்தரித்து அமெரிக்காவைக் காப்பாற்ற விழைவதற்கான அறைகூவல் கொண்ட நாவல்களும் சீரியல்களும் ஏராளமாக வருவதைக் காண்கிறோம்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

 

;பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமியரும் ஹிந்துக்களும் ஹிந்து நாட்டில் இணைந்து வாழ்வதை இப்போதைய உலக நோக்கில் கண்டு பிரமிக்க வேண்டியிருக்கிறது.

 

பாபரிலிருந்து ஆரம்பித்து ஔரங்கசீப் வரை பற்பல ஆண்டுகள் முஸ்லீம்களே ஹிந்து நாடான பாரதத்தை ஆண்டனர். ஆனாலும், தீவிரமான மதமாற்ற முயற்சியை அவர்கள் மேற்கொண்ட போதிலும், ஹிந்துக்களைப் பெருவாரியாக மாற்ற முடியவில்லை.

 

 

அதே சமயம் அவர்களை அப்படியே ஜீரணித்ததோடு தங்களின் அற்புதமான கலாசாரத்தை அவர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதையும் ஹிந்து மதம் சுட்டிக் காட்டி மதமாற்றம் தேவையில்லை என்ற நோக்கையும் எடுத்து வைத்து வந்திருக்கிறது.

 

வரலாற்று ரீதியாக் ஒரு சில உண்மைகளை இங்கு காண்போம்.

அக்பர் முதன் முதலாக ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து அன்யோன்யமாக வாழ வேண்டும் என்று முயற்சித்தார்.தீன் இலாஹி உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டார்.

 

 

அடுத்து ஜிஹாங்கீர் இந்த முய்றசியை மேற்கொண்டு வளர்த்தார்.

அக்பரின் பேரனான தாரா ஷிகு இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொண்டார்.

ராமாயணம், உபநிடதங்கள், கீதை ஆகிய அரிய இதிஹாஸ வேத நூல்கள் பெர்சிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

இந்திய சிந்தனை பெர்சியாவில் ஊடுருவியது.

அடுத்து முகம்மது கஜினியில் சமகாலத்தவரான,

அல்பெரூனி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பொது அற்புதமான் இந்த தேசத்தைக் கண்டு வியந்தார், பிரமித்தார்.

ஹிந்து மற்றும் புத்த மத நூல்கள் பலவற்றை ஆராய்ந்தார், மொழி பெயர்த்தார். புராணங்களின் மீது அவர் பெருமதிப்பைக் கொண்டிருந்தார்.

 

 

இருபத்தி இரண்டு சம்ஸ்கிருத ஆதார நூல்களை ஆராய்ந்து தனது வானவியல், ஜோதிடம், பூகோள நூலை உருவாக்கினார்.

இதை விட ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை இன்னும் ஒரு படி மேலே சென்றது.

 

குரு- சிஷ்ய பரம்பரை ஒன்று உருவானது

முஸ்லீம் மகான்கள் அல்லது குருமார்கள் ஹிந்து சீடர்களைப் பெற்றனர். ஹிந்து யோகிகள், ம்கான்கள் முஸ்லீம் சீடர்களைப் பெற்றனர்.

 

எங்கும் கலகமோ சச்சரவோ கருத்து வேறுபாடோ ஏற்படவில்லை.

 

பஞ்சாபில் இரு கல்லறைகள் உள்ளன. ஒன்று,  முஸ்லீமான ஜ்மாலி சுல்தானுடையது. இன்னொன்று ஹிந்து மகானான தியால் பவானி அவர்களுடையது. இருவரும் மிக நெருங்கிப் பழகிய நண்பர்கள். அந்த நட்புக்கு அடையாளமாக் இருவரின் கல்லறைகளும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் உள்ளன. இருவரின் சீடர்களும் மிகவும் ஒற்றுமையாக இருவரையும் போற்றி வழிபடுகின்றனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர் முஸ்லீம் மகானான பாவா ஃபல்டு. அவர் எதிர்காலத்தை அப்படியே கூற வல்லவர்.

 

இந்த அபூர்வமான சக்தி அவருக்கு ஒரு ஹிந்து யோகியிடமிருந்தே கிடைத்தது.

பாபல் ஸஹானா என்பவர் ஹிந்து மஹான். அவர் ஒரு  முஸ்லீம் பகீருடைய சீடர். அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர்.

 

 

இது ஒரு புற்மிருக்க எட்டாம் நூற்றாண்டில் அராபியர்களால் விரட்டியடிக்கப்பட்ட பார்ஸீக்கள் குஜராத்தில அடைக்கலம் புகுந்தது தனி வரலாறு. அவர்களையும் ஹிந்து மதம் அரவணைத்து ஏற்று அவர்களின் தனித்தன்மையையும் வழிபாட்டையும் மதித்து அவர்களை அவர்கள் வாழ்க்கை முறைப்படி வாழ வழிவகை செய்து உதவியது.

ச்மீப காலத்திய சரித்திரத்தை எடுத்துப் பார்த்தோமானால் கபீர் ஒரு பெரிய யோகியாகத் திகழ்ந்தார். அவருக்கு ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் சீடர்களாக இருந்தனர்.

 

 

அடுத்து மிக சமீப காலத்தில் ஷீர்டி சாயிபாபா முஸ்லீம் மகானாக இருந்தாலும் கூட ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஏராளமான அளவில் அவருக்கு சீடர்களாக இருந்தனர்.

. இன்றும் கூட ஆயிரக்கணக்கில் ஷீர்டியில் உள்ள அவரது சமாதிக்குச் சென்று வழிபடுகின்றனர்.

 

 

கடைசி கடைசியாக மஹாத்மா காந்தி ஹிந்துக்களையும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க அரும்பாடு பட்டார்.

 

ரகுபதி ராகவ ராஜாராம் பதிதபாவன சீதாராம்

ஈஸ்வர் அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்

என்று ‘’அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்று; அனைவருக்கும் நல்ல புத்திமதியைத் தா’’ என்று மனமுருக வேண்டினார்.

அதையே நவீன பிரார்த்தனை மந்திரமாக ஆக்கி தன் மாலை நேர வழிபாட்டில் அனைவரையும் பாட வைத்தார்.

இப்படி ஒரு பிரம்மாண்டமான மத நல்லிணக்கத் தொடர் முயற்சியை இதர நாடுகளில் வேறு ஒரு நாட்டிலும் காண முடியாது.

 

விரலை மடக்கினால் ஒரே ஒரு தேசம் மட்டுமே நமக்குத் தெரிகிறது.

 

அது தெயவ தேசம். பாரதம் தான். பாரதம் மட்டுமே தான்.

ஹிந்துக்களுக்கு அனைத்து மதங்களும் சம்மதமே!

அதே மனப்பான்மை மற்ற மதத்தினருக்கும் வரும் போது நமது பூமி தெய்வ பூமியாக மாறும்!

 

அதற்கும் ஹிந்து மதம் ஒரு மந்திரத்தைத் தந்திருக்கிறது.

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து!

 

***