ராமனின் அதிசயப் பயணம்-2 (Post.5255)

Written by London swaminathan

Date: 25 JULY 2018

 

Time uploaded in London – 7-24 am  (British Summer Time)

 

Post No. 5255

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராம பிரான் 14 ஆண்டுகள் அயோத்திக்கு வெளியே இருந்தார். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து கால் நடையாக இலங்கை வரை வந்தார். புராண கால மனிதர்களில் அதிக தூரம் நடந்து, சாதனைப் புஸ்தகத்தில் முதலிடம் பெற்றார். அவரைப் போல கால் நடையாக நடந்த மனிதர் எவரையும் நாம் அறியோம் . சுமார் 5113 நாட்கள் நாட்டை வலம் வந்தார். அவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதிசங்கரர் இப்படிப் பலமுறை வலம் வந்தார்

 

இதோ ராமனின் பயணம் தொடர்கிறது: (முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிப்பது சாலச் சிறந்தது)

 

20.ஸீதா பஹரி- ரிஷியான் ஜங்கல்

ஸீதையும் ராமரும் இங்கே ஓய்வு எடுத்தனர்

 

21.ஹனுமன் மந்திர் (முர்கா)

ராமருக்குத் துணையாக அனுப்பப்பட்ட

பரத்வாஜ ரிஷியின் மாணவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.

 

22.குமார் த்வய (ராம நகர்)

ராமரும் லக்ஷ்மணனும் குளித்துவிட்டு சிவனை வழிபட்ட இடம்

 

23.வால்மீகி ஆஸ்ரமம்- லாலாபூர்

மகரிஷி வால்மீகியுடன் சந்திப்பு

 

24.காமத் கிரி – சித்ர கூடம்- மந்தாகினி நதி

ராமபிரான் இங்கே நீண்ட காலம் தங்கினார்.

 

25.மாண்டவ்ய ஆஸ்ரமம்

பரதன் புகழ் பாடும் இடம்

 

26.பரத் கூப் – பரத்பூர்

அத்ரி மஹரிஷியின் உத்தரவின் பேரில், அண்ணனின் பட்டாபிஷேகத்துக்காக தம்பி பரதன், எல்லாப் புனித நீர் நிலைகளிலிருந்தும் ஜலத்தை எடுத்து இங்குள்ள கூவத்தில் ( கிணறு) சேமித்து வைத்தான்.

 

27.ஸ்படிக சிலா- சித்திரகூடம்

இந்திரனின் மகனான ஜயந்த், காகத்தின் வடிவத்தில்

ஸீதையைத் தாக்கினான்

 

28.குப்த கோதாவரி -சித்திரகூடம்

ஸீதையின் துணிமணிகளைத் திருடிய மாயாங்கனை, லக்ஷ்மணன் தண்டித்தான்

 

29.ததி காட்

மந்தாகினி நதி வட்ட வடிவில் ஓடும் அழகிய இடம் (ராமன், ஒரு இயற்கை அன்பன்; அவன் ரஸித்த இயற்கைக் காட்சிகளை வால்மீகியும் ரஸித்து எழுதி இருக்கிறார்)

 

30.அத்ரி – அனுசுயா ஆஸ்ரமம்

அத்ரி முனிவரையும் அனுசுயையையும் ராமன் சந்தித்த இடம்

 

31.ஆம்ரவதி

விராடன் என்ற அசுரன் ராம லக்ஷ்மணர்களைத் தாக்கினான்

 

  1. விராட்குண்டம் – ஜமுனிஹை

 

ராம லக்ஷ்மணர்கள், இங்கே விராடனைக் கொன்று புதைத்தனர்.

 

33.புஷ்கரணி — டிகாரியா

விராடனைக் கொன்ற ரத்தக் கறை படிந்த

ஆயுதங்களையும் துணிமணிகளையும்  கழுவிய புஷ்கரணி

34.மார்கண்டேய ஆஸ்ரமம்- மார்க்கண்டி

சிவனை வழிபட்ட இடம்

 

சதானா மாவட்டத்தில்  நுழைகின்றனர்

 

35.சித்த பஹார்-  சதேஹ சாதனா

ரிஷி முனிவர்களின் எலும்புக் குவியல்களில் இருந்து உருவான மேட்டுப் பகுதிகள்

 

(எனது கருத்து– இது போன்ற இடங்களை விஞ்ஞான முறையில் ஆராய்ந்தால் ராமாயண கால, அதற்கு முந்திய கால முனிவர்களின் காலத்தை துல்லியமாக மதிப்பிடலாம்)

 

36.சுதீக்ஷண ஆஸ்ரமம்

ராமர், சுதீக்ஷண முனிவரைச் சந்தித்த இடம்

 

37.சரபங்க ஆஸ்ரமம்- சர்பங்கா

சர பங்க முனிவர் ராம, லக்ஷ்மணர்களைச் சந்தித்தபின்னர், வாழ்க்கையின் பயன் நிறைவேறியது என்று கூறி யோக அக்னியில் புகுந்து ஜோதிமயமான இடம்

 

38.ஸீதா ரஸோய்

 

இங்கு ஸீதை அறு சுவை உணவு சமைத்த பின்னர், வனவாஸி சஹோதரர்களை ராமன் சந்தித்து நலம் விசாரித்தான்.

 

பன்னா மாவட்டத்தில் நுழைகின்றனர் (மத்தியப் பிரதேச மாநிலம்)

 

  1. தேவ பஹர் (அஜய் கர்)

ராமனுக்காக சிவன் கோவிலும். வசதியான குகைகளும் எழுப்பப்பட்ட இடம் ( ஏற்கனவே இருந்த குகைகளைச் சுத்தம் செய்து, காற்றோட்டம் உண்டாக்கி, இலை தழை மெத்தைப் படுக்கை உண்டாக்கினர் என்பதே பொருத்தம்- எனது கருத்து)

 

40.வ்ரிஹஸ்பதி- பஹரி கேரா

தேவ குரு பிருஹஸ்பதி உருவாக்கிய இந்த ஆஸ்ரமத்தில் ராமன், பல ரிஷிகளைச் சந்திக்கிறான். ரிஷிகள் மஹா நாடு என்றும் சொல்லலாம்!

 

126 மைல் கற்களில் 40 மைல் கற்களைக் கண்டோம். இன்னும் 86 மைல் கற்களையும் காண்போம்

–தொடரும்

பெண்களை மடக்க ஆங்கில அரசன் செய்த தந்திரம் (Post No.5254)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 18-46  (British Summer Time)

 

Post No. 5254

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்கில நாட்டை ஆண்ட அரசர்கள் பலர்; ‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பது போல மன்னர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

நாலாவது ஹென்றி (1367- 1413) ஒரு உத்தரவு போட்டார். ‘’இது என்ன கோரம்! பெண்கள் கன்னா பின்னா என்று நகை அணிந்து வருகிறார்கள்; பொது நிகழ்ச்சிகளில் இப்படி அவர்கள் அணிவது நன்றாக இல்லையே’’ என்று  போட்டார் ஒரு சட்டம்.

 

‘’இனிமேல் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்கள் ஆடம்பரமாக நகை அணிந்து வரக்கூடாது’’ என்று போட்டார் ஒரு சட்டம்.

 

பெண்களோடு உடன் பிறந்தது நகைகள் அதைப் பிரிக்க முடியுமா? அவர்கள் மன்னன் உத்தரவை மதிக்கவில்லை; நன்றாக மிதித்தார்கள்.

 

மன்னனுக்கோ அதிக கோபம்; நான் போட்ட உத்தரவை மதிக்காத குடி மக்களை மடக்குவேன்; புது சட்டம் போட்டு அடக்குவேன் என்றார்.

 

போட்டார் ஒரு சட்ட திருத்தம்!

நான் போட்ட சட்டத்துக்கு முக்கிய திருத்தம்– விபசாரிகளும் பிக்பாக்கெட்டுகளும் , நகை அணியக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவார்கள்.

 

(அதாவது வேசி மகள்களும் பிக்பாக்கெட்டுகளும் தாராளமாக நகை அணியலாம்)

 

அவ்வளவுதான் எல்லா பெண்களும் நகைப் பெட்டிக்குள் பகட்டான அணிகளை முடக்கி வைத்தார்கள்!

 

அட்டஹாசமான மன்னன் நாலாம் ஹென்றி!

 

XXXX

என்னப்பனே! பொன்னப்பனே!

அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு தான்தோன்றித் தத்துவராயர். உலகே தன்னைச் சுற்றி நடக்கிறது என்பவர். அவரது மகனே, அப்பனை நன்கு அளந்து வைத்திருந்தான். அழகாகச் சொன்னான்:-

 

“என் தந்தை கல்யாணத்துக்குப் போனால் அவர்தான் மணமகன் என்று நினைத்து அத்தனை கௌரவங்களையும் எதிர் பார்ப்பார். அது மட்டுமல்ல. அவர் மரண ஊர்வலக் கூட்டங்களுக்குச் சென்றால், சவப் பெட்டீக்குள் இருக்கும் சவமாகத் தன்னை கருதி அத்தனை மரியாதைகளையும் எதிர்பார்ப்பார்!”

 

XXX

 

டிஸ்ரேலி ஐடியா!

 

டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்; அவரிடம் ஒருவர் வந்து அனத்தினார்; “ஐயா எனக்கும் ஒரு பட்டம் கொடுங்கள்; டிஸ்ரேலிக்குத் தெரியும் அந்த ஆள் அவர் எதிர் பார்க்கும் பட்டத்துக்கு அருகதை அற்றவர்” என்று.

 

 

“இந்தோ பாருங்கள்; எவ்வளவுதான் கெஞ்சினாலும் உங்களுக்கு நான் பட்டம் கொடுக்க முடியாது. ஒரு ஐடியா (idea) சொல்லுகிறேன்; பிரிட்டிஷ் பிரதமர் என்னைக் கூப்பிட்டு உங்களுக்குப் பட்டம் தரப்போகிறேன் என்று சொன்னார். உங்கள் பட்டம் எதையும் ஏற்க மாட்டேன் என்று சொல்லி நான் வெளியே வந்துவிட்டேன்; என்று தம்பட்டம் அடியுங்கள்.

 

நானும் ‘கம்’மென்று  இருந்து விடுகிறேன். நான் கொடுக்கும் பட்டத்தைவிட அது இன்னும் புகழ் கூட்டும்- என்றார்.

வந்தவருக்கு பரம திருப்தி: வெறும் சர்க்கரை கேட்கப் போன இடத்தில் கோதுமை அல்வா கிடைத்த திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

 

xxx

சாவதற்கு முன் மரண அறிவித்தல்!

பி.டி பர்னம் (P T Barnum) என்பவர் புகழ்பெற்ற அரசியல்வாதி; அமெரிக்க வர்த்தகர்; ஒரு சர்கஸ் கம்பெனி துவங்கியவர். எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பார். தற்பெருமை அதிகம். அவர் சாகக் கிடந்தார். இவரது தற்பெருமை பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் பி டி பர்னமின் காரியதரிசியை அணுகி, “ஐயா, உங்கள் தலைவரைப் புகழந்து நாலு பத்தி எழுதியுள்ளோம் அவர் இறந்தவுடன் காலமானார் (மரண அறிவித்தல்) பத்தியில் போட எழுதியுள்ளோம். அவர் உயிருடன் இருக்கும்போதே அதை வெளியிட்டால் அவரும் அதைப் படித்துவிட்டுச் சாகலாமே” என்றனர்.

 

காரியதரிசி சொன்னார்; தயவு செய்து மரண அறிவித்தலை அவர் சாவதற்கு முன் வெளியிடுங்கள்; அவர் அதைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார் என்றார்.

 

பத்திரிக்கையாளர்களும் அதை அவர்  இறப்பதற்கு முன்னர் நாலு பத்தி வெளியிட்டனர். பி டி. பர்னமுக்கு ஒரே சந்தோஷம்; அடடா. என்ன அருமை; நான் எவ்வளவு பெரியவன் என்று மகிழ்ச்சியுடன் செத்தார்.

 

–subham–

 

ரஜபுத்ரர்களைக் கண்டால் புலியும் நடுங்கும்! (Post No.5253)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 8-02 am  (British Summer Time)

 

Post No. 5252

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னன் ஒரு முரடன்; அசடன்; முஸ்லீம் வெறியன்; இந்துக்கள் மீது வரி போட்ட நரியன்; சொறியன்; கரியன்.

 

முகந்த்தாஸ் என்ற ரஜபுத்ர தளபதி அவுரங்க சீப்பை துச்சமாக மதித்து தனது கருத்துகளை வீரன் போல முழங்கி வந்தான். அவன், அவுரங்க சீப்பின் அரசவைக்குள் நுழைந்தவுடன், இந்த ஆளை புலியின் கூண்டுக்கள் தூக்கி எறியுங்கள்; கடித்துக் குதறுவதைப் பார்க்க ஆசை என்றான். உடனே சேவகர்களும் அவனை புலி இருக்கும் வட்டத்துக்குள் தூக்கி எறிந்தார்கள்; அவன் புலியைப் பார்த்தான்; உற்று நோக்கினான்; கோபக் கனலை வீசினான்.

 

“ஏய், டில்லிப் புலியே! இது ரஜபுத்ரப் புலி, இது எனது அரசன் ஜஸ்வந்த்   அனுப்பிய புலி.தெரியுமா?” என்றான்.

புலியும் பார்த்தது. ஆமாம் உண்மைதான் என்று வாய்திறந்து சொல்லாமல் தலையால் ஒரு சலாம் போட்டது. அது  தன் வேலையைப் பார்க்கத் திரும்பிப் போனது.

பார்த்தான் அவுரங்க சீப். இது போன்ற ஆட்கள் நமது தரப்பில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று அவனுக்குப் பரிசுகள் கொடுத்தான்.

 

 

அடடா! என்ன வீரம்; இந்த வீரத்தை எல்லாம் உன் மகனுக்கும் அளித்தாயா? என்று கேட்டான் அவுரங்க சீப்.

“போடா போக்கத்த பயலே! உன்னைப் போன்றவர்கள், எங்களை எந்நேரமும் சண்டைக்கு இழுக்கும்போது மனைவியுடன் படுக்கையில் படுக்க நேரம் ஏது? என்று பதில் கொடுத்தான்.

அவன்தான் பெரிய வீரன்.

 

XXX

மன்னனுக்கு ‘கால்’ மரியாதை

 

தேவ்ரா இளவரசனை முகுந்த் தாஸ் அவுரங்க சீப்பிடம் அழைத்துச் சென்றான். அவர்களுக்கு எல்லாம் ராஜாவான ஜஸ்வத் சிங், ‘போய் வா, உனக்கு தக்க மரியாதைகள் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன்’ என்றான். அவனை அழைத்துச் சென்ற முகுந்தாஸோ, மொகலாய மன்னனுக்கு முன்னால் அனைவரும் சிரம் தாழ்த்தி மண்டியிட்டு வணக்கம் செய்தல் வேண்டும்; யாருக்கும் இதில் விதி விலக்கு என்பதே இல்லை’ என்றான்

 

இளவரசன் பதில் சொன்னான்

‘’ஹா ஹாஹ் ஹா! என் உயிர் வேண்டுமானால் மன்னன் கையில் இருக்கலாம்; என் மானம் அனைத்தும் என் கையில்தான்; ஒரு பயலும் தொட முடியாது என்றான்.

அரசனுக்கு முன்னால் இந்த ஆள் தலை வணங்க மாட்டான் என்பதால் ஒரு விஷேச ஏற்பாடு செய்தார்கள். இவன் குனிந்து வருவதற்காக ஒரு சிறிய நுழை வாயிலை அமைத்தார்கள்; அதில் மன்னனே நுழைந்தாலும், தலை குனிந்துதான் நுழைய வேண்டும்!

 

 

தேவ்ரா இளவரசன் சொன்னான்,

டேய்! நான் கள்ளனுக்கும் குள்ளன்; நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன் என்று சொல்லி விட்டு அந்த குட்டி நுழைவாயில் முதலில் காலை விட்டான். பின்னர் ஊர்ந்து முன்னேறி தலை பின்னால் வரும்படிச் சென்றான். அதாவது மன்னனுக்கு ‘கால்’ மரியாதை!

 

மன்னன் அதைக் கேட்டுவிட்டு மலைத்துப் போனான்

 

ரஜபுத்ர வீரர்கள் அஞ்சாத சிங்கங்கள்! அ வர்களுடைய மனைவியர், மாற்றான் படைகள் தொடுவதற்குள் தீப்பாய்ந்து மானம் காப்பார்கள். சித்தூர் ராணி பத்மினி கதை அனைவரும் அறிந்ததே!

 

XXXX

 

 

Linguists’ bluffing blasted by Tamil Language (Post No.5252)

Compiled by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 7-19 am  (British Summer Time)

 

Post No. 5252

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Following is the question and answer from The Guardian Newspaper of London and my comments are added at the end

 

How do YOU know the correct way to pronounce a dead language?

“Old languages don’t die. They just fade into new languages (at least most of them do). While the entire sound system of ancient language rarely survives intact, fragments can usually be found scattered around its various daughter languages.

 

For example, many traits of Latin pronunciation are directly observable in Italian French Spanish and Romanian. The job of linguistic historian is to try to piece these various bits together. The most tried and tested technique is comparative reconstruction, which focuses on the systematic sound correspondences that emerge when we compare the same words in different sister languages. Where this exercise turns up different sounds, it is usually possible to trace them back to a common historical source.

For example, many English words beginning with ‘t’ correspond to words beginning with ‘ ts’ ( Spelt z) , in sister language German; compare English ten, to, time with German Zein, zu, zeitgeist.

 

On the basis of this and many similar correspondences, we can reconstruct a Common Germanic parent language in which the older sound in this particular instance is the knowledge that each type of sound change takes place in one direction only. On the strength of what happens in many other languages, we know that ‘t’ at the beginning of a word can turn into ‘ts’ but not vice versa. The more  widely we cast our comparative net, the further we can reach back into the mists of time. The ‘t’ of early Germanic itself derives from an even older ‘d’ — contrast English two and tooth with, say, Italian ‘due’ and ‘dente’. Ultimately we arrive at the sound system of an ancient Indo-European tongue, the common ancestor of languages as apparently diverse as English, French, Russian, Irish, Greek and Urdu.”

John Harris, Department of Phonetics and Linguistics, University college, London

 

FROM NOTES AND QUERRIS, GURDIAN NEWSPAPER, VOLUME 5, 1994

 

MY COMMENTS

Compare changes in Tamil

IN TAMIL also we see ‘S’ of Sanskrit change into ‘T’ in Tamil

I will give some examples though there are hundreds of such words

Purushan– Purutan
Visesham– Visetam
Sishya — Seetan
Joshyam — Jothitam
VishaM —  Vitam
Koshtam — Kottam
Pushpam — Putpam

In my earlier research articles, I have  Exploded all the OLD theories about similarities or changes in Indo- European languages. In fact, those changes or similarities are found even in Pacific Ocean and Mayan languages. In short, all the bluffing of ‘D’ of Aryans changing into ‘L’ after contacting Dravidians, are wrong. Once they study the similarities between Tamil and Sanskrit or other languages they will know all those are nothing but SHEER bluffing.

 

 

Tamil and Sanskrit: Rewrite Linguistics Theory

tamilandvedas.com/2014/12/20/tamil-and-sanskrit…

Tamil and Sanskrit: Rewrite Linguistics Theory … But this D/L or R/L changes are natural. They are in Tamil … in Tamil itself. In Sanskrit language Sandhi .

Ja and Ya in Indian languages | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ja-and-ya-in-indian-languages

Posts about Ja and Ya in Indian languages written by Tamil and … with other languages will rewrite linguistic … this change lies in Tamil and Sanskrit …

 

 

Origin of Tamil and Sanskrit | Tamil and Vedas

tamilandvedas.com/…/origin-of-tamil-and-sanskrit

They believed that Siva’s drum Damaruka gave Sanskrit from one side and Tamil from another side. … //tamilandvedas.com/2014/11/13/origin-of-tamil-and-sanskrit/

 

  1. Vowels = Life, Consonants = Body; Hindu concept of Alphabet …

tamilandvedas.com/2015/06/27/vowels-life…

Research paper No 1958 Written by London swaminathan Date: 27 June 2015 Uploaded in London at 20-15 I have been arguing in my earlier posts that the Western …

 

Sanskrit Alphabet | Tamil and Vedas

tamilandvedas.com/tag/sanskrit-alphabet

Posts about Sanskrit Alphabet written by Tamil and Vedas

 

  1. Tamil or Sanskrit: Which is Older? | Tamil and Vedas

tamilandvedas.com/2014/07/16/tamil-or-sanskrit…

Tamil or Sanskrit: Which is Older? … my pet theory is Tamil and Sanskrit originated from a common source on the … comparative reconstruction pays no attention to …

  1. Tamil and Sanskrit | Tamil and Vedas

tamilandvedas.com/tag/tamil-and-sanskrit

Posts about Tamil and Sanskrit written by Tamil and Vedas. … (for old articles go to tamilandvedas.com OR … Tamil and Sanskrit, Tamil Grammar. Posted by Tamil …

 

–SUBHAM–

JUGGERNAUT AND LORD JAGANNATH! (Post No.5251)

Compiled by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 17-13  (British Summer Time)

 

Post No. 5251

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

What is the origin of the word Juggernaut?

Meaning in English dictionary:

Definition of juggernaut

 

1: a massive inexorable force, campaign, movement, or object that crushes whatever is in its path

  • an advertising juggernaut

 

  • a political juggernaut

2chiefly British a large heavy truck

xxx

 

 

Juggernaut is derived from Sanskrit word and modern North Indian languages such as Hindi:

Naut here is ‘nath’ Lord of the Universe (Jagath).

The compound jaganath, is a title of the Hindu god, Vishnu, especially in his eighth incarnation as Krishna.

 

Huge lorries are called juggernaut because the epithet of the deity had come in English to be associated with the enormously heavy chariot /rath which bears Jagannath in procession at the annual festival- rath yatra at the town of Puri in Orissa in north East India.

 

This has been reported by European travellers from 1321 CE and reports mentioned worshippers dying, crushed under the massive wheels.

 

Western observers’ usually disparaging accounts led to an immediate usage of juggernaut for any institution to which persons are ruthlessly sacrificed (OED 1933) before it was applied to a very large lorry for transporting goods by road, especially one that travels throughout Europe (Collins Dictionary 1979)

 

During the past 150 years, juggernaut served in a derogatory sense as a verb and an adjective as well as noun.

–Elenore Nesbitt, Senior Research Fellow Religious Education, University of Warwick

The Guardian Newspaper, Notes and Queries, Vol.5, Year 1994

 

My comments:

 

First it was used to do propaganda against Hindus by Christian missionaries. Slowly the dictionaries changed the meaning and made it milder and milder.

In fact not many people died in such Rath yatras. The crowd that gathers there is more than the population of several European and Pacific Ocean island countries.

Like they keep on changing the language of The Bible every year and now 200 different types of Bibles are available, the dictionaries also differ. Derogatory sense is left behind.

 

–SUBHAM–

 

 

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் எங்கே போனார்?- Part 1 (Post No.5250)

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 13-52  (British Summer Time)

 

Post No. 5250

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் என்ன செய்தார்? எங்கே போனார்?-1 (Post No.5250)

 

ஒரு அருமையான ராமாயண ஆராய்ச்சிப் புத்தகம், லண்டன் பல்கலைக் கழக நூலகத்தில் கிடைத்தது. ராமன் 14 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். அதாவது 365 நாட்கள் X 14 ஆண்டுகள் + 3 லீப் வருட நாட்கள் = 5113 நாட்கள்.

 

இந்த 5113 நாட்களில் அவர் எங்கெங்கு போனார்? யார் யாரைப் பார்த்தார்? என்னென்ன செய்தார்? நாம் அனைவரும் யோசிக்காத வகையில் யோசித்து வால்மீகி ராமாயணப்படி தொகுத்துக் கொடுத்துள்ளார் டாக்டர் ராமாவதார் சர்மா .

 

ராமன் 14 ஆண்டுகளுக்குள் வராவிடில் தீக்குளித்து விடுவேன் என்று அருமைத் தம்பி பரதன் செப்பியதும், அதன்படி சரியாக 14 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமன் வந்ததும், பரதன் சொன்ன சொல் மீறாதவன் அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடப்போகிறான் என்று ஹனுமாரை ‘எமர்ஜென்ஸி’ பயணத்தில் ராமன் அனுப்பியதும் நாம் அறிந்ததே.

 

மற்ற விஷயங்களை நாம் நுணுகிப் பார்க்கவில்லை. டாக்டர் ராமாவதார் சர்மா செய்த ஆராய்ச்சியை டாக்டர் ராஜேந்திர சிங் குஷ்வாஹா – ‘’பாரதீய வரலாறு- ஒரு கண்ணோட்டம்’’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். இதோ சில சுவையான தகவல்கள்:–

 

கைகேயி உத்தரவு போட்டபின்னர் என்ன நடந்தது?

 

1.அயோத்தி- பிறந்த ஊரில்– ராம ஜன்ம பூமியில் — எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டார்- ஸீதா தேவியோடு கடும் வாக்குவாதம்; காடு என்பது கல், முள் நிறைந்தது என்பது ராமர் வாதம்- ஸீதையோ பிடிவாதம்- கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை- ராமன் ஸாமியே அப்பப்பா! என்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என்றாள். ராமனும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்- போகும் இடம் வெகு தூரம்!- புறப்படு என்றான்.

 

2.முதல் ஸ்டாப் (முதல் மண்டகப்படி)- தமஸா நதி

 

முதல் நாள் இரவு தமஸா நதிக் கரையில் தங்கினார்; ஏன்? அயோத்தி நகரமே திரண்டு எழுந்து பின்னால் வந்து விட்டது; அவர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்க வேண்டுமே! ராமனோ- சாந்த குண ஸ்வரூபன் – கோபமோ தாபமோ இல்லாத ஜீவன் முக்தன்.

 

3.அடுத்த மண்டகப்படி- பூர்வ சகியா–

அயோத்தி மக்களுக்கு பெரிய கும்பிடு போட்டார்; காம்ரேட்ஸ் (Comrades)! உங்கள் ஆதரவுக்கு நன்றி; தயவு செய்து திரும்பிப் போங்கள். என்னப்பன் தஸரதனும் , என் தம்பி பரதனும் உங்களைக் காத்து ரக்ஷிப்பர் என்றார். ராமன் சொல்லைத் தட்ட எவரால் முடியும்? தயக்கத்தோடு, மனக் கலக்கத்தோடு திரும்பினர்.

 

4.சூர்ய குண்டம்

ராமன், லக்ஷ்மணன், சீதா ஆகிய மூவரும் சூர்ய குண்டத்தில் குளித்தனர். சூர்ய பகவானை வணங்கினர்.

 

இப்பொழுது பைஸாபத் (அயோத்தி) மாவட்டத்திலிருந்து உத்தர பிரதேஸத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் நுழைந்தனர்.

 

 

  1. 5-வது மண்டகப்படி- வேதஸ்ருதி நதி

தற்போதைய அஷோக் நகர் அருகில் நதி யைக் கடந்தனர்.

  1. கோமதி நதி

அடுத்ததாக வழியில் தடை போட்ட நதி கோமதி. அதைத் தற்போதைய வால்மீகி ஆஸ்ரமம் அருகே கடந்து எதிர்க் கரை அடைந்தனர்.

 

ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே!

(ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?

என்ற திரைப் படப் பாடல் என் காதில் ஒலிக்கிறது ( இதை எழுதும் போது)

 

 

7.பிரதாப்கார் மாவட்டத்தில் நுழைகின்றனர்

ஸ்யந்திகா (சாய் ஆறு) — ஸாய் நதியும் பராரியா ஆறும் கலக்கும் இடத்தில் நின்று இயற்கையை ரஸிக்கின்றனர்.

 

8.அடுத்ததாக வேத்ரவதி நதியை அடைகின்றனர் – தற்போது இந்த நதிக்கு சாகர்னி என்று பெயர்.

 

9.பாலுக்னி நதி –

நிறைய மணலும் கூழாங்கற்களும் நிறைந்ததால் இந்த நதியை பாலுக்னி என்று அழைப்பராம்.

 

இதைத் தாண்டியவுடன் ராமன் உத்தரப் பிரதேஸத்தின் பிரயாகை மாவட்டத்துக்குள் (இப்போதைய பெயர் அலஹாபாத்) பிரவேஸிக்கிறான்.

 

10.சிருங்கிபேர புரம்

‘குகனுடன் ஐவரானோம்’ என்ற கம்பன் பாடல் மூலம் பிரஸித்தி பெற்ற குகன் என்னும் வேடனைக் காண்கிறான் ராமன். ஸஹோதரனைப் போல அவன்  பாஸமும் பரிவும் நேஸமும் நட்பும் பாராட்டுகிறான். அவன் நிஷாத குல மன்னன். கங்கையைக் கடக்க நூற்றுக் கணக்கான படகுகளை அணிவகுக்கிறான்.

11.ஸீதா குண்டம்

கங்கையைக் கடந்தவுடன், அமைச்சன் ஸுமந்திரனைத் திருப்பி அனுப்புகிறான் ராமன்.

 

12.சிவன் கோவில்

ஸீதா தேவி, ஒரு குளத்திலிருந்து மண் எடுத்து சிவ லிங்கம் செய்து வழிபடுகிறாள்.

 

( இதை எழுதியவர் வால்மீகீ ராமாயணத்தோடு ஆங்காங்கே உள்ள ஸ்தல புராணக் கதைகளையும் இணைத்துப் படைத்துள்ளார் என்பதை நினைவிற் கொள்க.)

 

13.ராம ஜோய்தா

சரவா கிராமம் அருகில் ராமர் குளித்தார்.

 

14.பரத்வாஜ மஹரிஷியுடன் சந்திப்பு

 

ராமன் முதலில் சந்தித்த பெரிய ரிஷி பரத்வாஜர். அவரது ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு. அது கங்கை நதிக் கரையில் அமைந்தது.

 

15.ஆலமர வழிபாடு (யமுனை நதிக்கரை)

 

ஸீதா தேவி அக்ஷய வடம் என்னும் ஆலமரத்தை வழிபடுகிறாள்

 

16.. பதினாறாவது மண்டகப்படி – சங்கம்

 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் மிகப் பெரிய கும்பமேளா திருவிழா நடக்கும் த்ரிவேணி சங்கமத்தில் கங்கை– யமுனை- ஸரஸ்வதி — நதி கலக்குமிடத்தில் புண்ய ஸ்நானம்.

17.ஸீதா ரஸோய் (ஜஸ்ரா பஜார்)

இங்கு மிகப் பழைய குகை ஒன்று இருக்கிறது. அங்கு ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் ஸீதா சமைத்து அறுசுவை உண்டி படைத்தாள்

 

பாண்டா மாவட்டத்தில் நுழைகின்றனர்

  1. சிவ் மந்திர்/ சிவன் கோவில் (ரிஷ்யான் ஜங்கல்)

கானகம் வாழ் ரிஷிகளின் கூட்டத்துடன் ராமன் சந்திப்பு

  1. ஸீதா ரஸோய் (ஜன் வன்)

ஸீதா தேவி இங்கு அரிசிச் சோறு உண்டாக்கினாள்.

 

TO BE CONTINUED……………………………….

ALL PROSTITUTES CAN WEAR JEWELS- ENGLISH KING’S ORDER (Post No.5249)

 

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 9-35 am  (British Summer Time)

 

Post No. 5249

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

VANITY ANECDOTES continued

 

MY DAD WANTS TO BE A BRIDEGROOM IN EVERY WEDDING!

It was one of his own sons who so aptly characterised Theodore Roosevelt, saying,
“Father always had to be the centre of attention. When he went to a wedding, he wanted to be the bride groom; and when he went to a funeral, he wanted to be the corpse”.

Xxxx

DISRAELI’S TRICK

There is a good story told of the way Disraeli got rid of an unfortunate applicant for a baronetcy (the rank of a baronet) upon whom, for many reasons, it was impossible to confer the honour.
“You know I cannot give you a baronetcy, said Disraeli, but you can tell your friends I offered you a baronetcy and that you refused it. That is far better.”

Xxxx

GENERAL WOULD HAVE DIED YEARS AGO!– LINCOLN

In an interview between President Lincoln and Petroleum V. Nasby, the name came up of a recently deceased politician of Illinois whose merit was blemished by great vanity. His funeral was very largely attended.
“If General……….
Had known how big a funeral he would have had, said Mr Lincoln, he would have died years ago”.

Xxx

YOU ARE WONDERFUL!

Oscar Levant was known for his self-esteem. Occasionally he would tell this story on himself. “Once I was saying to an old friend how remarkable was our congeniality since we had practically nothing in common.
Oh, but we have, replied the friend, I think you are wonderful and you agree with me.”

Xxx

HENRY IV EXEMPTED PROS.
Henry IV enacted some sumptuary laws, prohibiting the use of gold and jewels in dress; but they were for some time ineffectual. He passed a supplement to them which completely answered his purpose. In this last he exempted from the prohibitions of the former after one month, all prostitutes and pickpockets. Next day there was not a jewel nor golden ornament to be seen.

Xxx

I AM D’ANNUNZIO! DON’T YOU KNOW?

In London, D Annunzio, the Italian poet asked a policeman to direct him to his destination and remarked,
“I am D Annunzio! The bobby did not understand. Where upon the genius burst forth into oaths and commanded his secretary to present that ignorant lout with copies of all his works”.
Xxx SUBHAM XXX

நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2 (Post No.5248)

Written by S NAGARAJAN

 

Date: 23 JULY 2018

 

Time uploaded in London –   7-26  AM (British Summer Time)

 

Post No. 5248

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 20-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபதாம்) கட்டுரை

செயற்கை அறிவுடன் கூடிய நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2

ச.நாகராஜன்

 

செயற்கை அறிவால் என்ன பயன் என்று கேட்போருக்கு ஒரு சுவையான செய்தி உண்டு!

 

நடிலஸ் (Nautilus) என்ற செயற்கை அறிவூட்டப்பட்ட சூப்பர் கணினி தான் ஒஸாமா பின் லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவியது. உண்மை. அதற்குள் பத்து கோடி செய்திகளும் கட்டுரைகளும் பதிவு செய்யப்பட்டன. அது ஆராய ஆரம்பித்து ஒஸாமா பின் லேடன் ஒளிந்திருக்கும் இடத்தை 125 மைல் தூரத்திற்குள்ளாக இருப்பதாக அறிவித்தது.

 

 

லேரி பிர்ன்பாம் (Larry Birnbaum)என்ற பேராசிரியர் ஒரு கட்டுரையை கணினியில் செலுத்தினார். அது படித்தது. பின்னர் ஏராளமான செய்திகளை அதனுள் செலுத்த அது தானே ஒரு கட்டுரையை எழுதியது. கதைகளையும் அது எழுத ஆரம்பித்தது. ஆக எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இனி பலத்த போட்டி உண்டு.

இன்னொரு அச்சுறுத்தும் செய்தி! ரொபாட்டுகள் தன்னைத் தானே ரிப்பேர் செய்து புதுப்பித்துக் கொள்ளும். ஆம், உண்மை. ஆறு கால்கள் கொண்ட ஒரு ரொபாட்டின் இரு கால்கள் பழுதடைந்தன. அது பார்த்தது, தன்னைத் தானே ஆராய ஆரம்பித்தது. 13000 இயக்கங்களை அலசி ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்து தனது இரு கால்களை இயங்க வைக்கும் முறையைக் கண்டுபிடித்து “ஆரோக்கியமானது. எதிர்காலத்தில் அப்படியானால் சாவே இல்லாத சிரஞ்சீவி கம்ப்யூட்டர்கள் உருவாகிவிடுமோ என்ற பயமும் ஏற்படுகிறதல்லவா?

 

இனி இன்னும் ஒரு செய்தி இருக்கிறது, அதை ஏன் விட்டு வைக்க வேண்டும். ரொபாட்டுகளுடன் மனிதன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியும் என்கிறார் ரொபாட் இயல் நிபுணர்  ஒருவர்.

 

ஆக இவற்றை உயரத் தூக்கி வைக்கவும் முடியாது, ஒதுக்கி வைக்கவும் முடியாது என்பதே இன்றைய நிலை!

 

 

நடிலஸ் (Nautilus)

 

சிந்திக்கும் இயந்திரங்களைப் பற்றி என்ன சிந்திப்பது என்ற கேள்வியை எழுப்பும் வில்லியம் பவுண்ட்ஸ்டோன் கணினி நிபுணரான எட்ஜெர் டிஸ்க்ஸ்ட்ரா கூறியிருப்பதை மேற்கோளாகக் காட்டுகிறார்:

 

 

“இயந்திரங்கள் சிந்திக்குமா என்ற கேள்வி, சப்மரீன்கள் நீந்துமா என்று கேள்வி கேட்பதைப் போல ஆகும். ஒரு திமிங்கிலமும் ஒரு சப்மரீனும் நீரில் வேகமாக முன்னேறும். ஆனால் அவை இரண்டும் அடிப்படையிலேயே வேறு விதமாக அதைச் செய்கின்றன. சிந்திப்பதும் கணினிசெய்வதும் ஒரே முடிவைத் தந்தாலும் அவை அதைச் செய்யும் முறை அடிப்படையிலேயே வித்தியாசமானது.

 

இன்னொரு பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரீமேன் டைஸன் இந்தக் கேள்வியே அர்த்தமற்றது என்கிறார். “சிந்திக்கும் இயந்திரங்கள் இருப்பதாக நான் நம்பவில்லை அல்லது அவை சமீப காலத்தில் உருவாகக்கூடும் என்பதையும் நான் நம்பவில்லை. அடிக்கடி நான் எண்ணுவது தவறாகப் போகிறது. நான் தவறு என்றால், இந்தக் கேள்வியைப் பற்றிய சிந்தனைகள் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாதவை. நான் சரி என்றால் இந்தக் கேள்வியே அர்த்தமில்லாது போகிறது.

1965ஆம் ஆண்டிலேயே கணித மேதையான இர்விங் குட், “ அல்ட்ரா இண்டெலிஜென்ட் மெஷின் மனிதன் வடிவமைப்பதை விட இன்னும் அருமையாக நவீன இயந்திரங்களை வடிவமைக்கும். அப்போது மனிதனின் அறிவை அது மிஞ்சி விடும். ஆக அந்த மெஷினே மனிதனின் கடைசி கண்டுபிடிப்பாக அமையும் என்கிறார்.

 

 

மனிதனின் கையை மீறி இயந்திரங்கள் தாங்களே சிந்திக்க ஆரம்பித்து விட்டால்..?

எப்போது செயற்கை அறிவுள்ள இயந்திரங்கள் மனித அறிவை மிஞ்சும். அப்போது நல்லது நடக்குமா, கெட்டது நடக்குமா?

செயற்கை அறிவு பற்றி ஆராயும் விஞ்ஞானியான மாக்ஸ் டெக்மார்க் இதை பல வகையாகப் பிரிக்கிறார்.

செயற்கை அறிவு மனித அறிவை இன்னும் சில ஆண்டுகளில் மீறி விடும் என்று நம்புவோர் – இப்படிப்பட்டவர் யாரும் இப்போது இல்லை.

 

 

செயற்கை அறிவு  இன்னும் 50 முதல் 100 ஆண்டுகளில் மனித அறிவை மிஞ்சி விடும். அது மனித குலத்திற்கே ஒரு வரபிரசாதமாக அமையும். இப்படி எண்ணுவோர் பலர்.

இதற்கு எதிர்மாறாக எண்ணுவோர் செயற்கை அறிவு இயந்திரங்கள் மோசமானவை என்கின்றனர்.

 

 

“இன்னும் நூறு ஆண்டுகளில் செயற்கை அறிவு வந்து விடும். அவை நல்லதையே செய்ய வேண்டும் என்பதற்கான வேலையை ஆரம்பிப்போம் என்கின்றனர் இன்னும் சிலர்.

கணினிகளிடம் ஒரு விஷயத்தைக் கொடுத்தால் எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில் தான் வரும்.ஆனால்  மனித மூளையோ வெவ்வேறு விதமாகச் சிந்திக்கும்.கணினி துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளில் செயல்படும். மனித மூளையோ வாய்ப்புக்கேற்றபடி செயல்படும். கணினிகள் குறிப்பிட்ட சூத்திரங்கள் வழியேயும் புரோகிராம் செய்யப்பட்ட வழிமுறையிலும் செயல்படும். ஆனால் மனித மூளையோ மனத்தின் வழியே உள்ளர்த்தத்தைக் கண்டு விதவிதமாக செயல்படும். கணினிகள் கோட் என்ற பாஷை வழியே செயல்படும் போது மனித மூளையோ நியூரான்கள் வழியேயும் ரத்த ஓட்டம், மற்றும் ஹார்மோன்கள் வழியேயும் அபூர்வ வழியில் சிந்திக்கும்.

 

 

ஒரு ஆச்சரியகரமான விஷயம், செயற்கை அறிவு எப்படி செயல்படும் என்பதை நுணுக்கமாக விவரிக்கும் விஞ்ஞானிகள் மனித மூளை எப்படி செயல்படுகிறது என்பதை லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்னும் கண்டுபிடிக்கவில்லை!

மொத்தத்தில் பல அறிஞர்களின் கருத்து செயற்கை அறிவு நம்மை ஆளப்போகும் யுகத்தில், சினிமா, நடனம், நுண்கலைகள் போன்ற நுட்பமான விஷயங்கள் அறவே இருக்காது!,

 

 

மனிதர்கள் செயற்கை அறிவு சாதனங்களுக்கு அடிமையாக ஆகி, அவர்களை எஜமானராகக் கொண்டு செயல்பட வேண்டி வரும், என்பது தான்!

 

இன்னொரு முக்கிய விஷயம், செயற்கை அறிவு இயந்திரங்கள் பெருமளவில் உலகை ஆக்கிரமிக்கும் போது மனிதர்கள் இன்று பார்க்கும் வேலைகளில் 70 சதவிகிதம் இருக்காது! அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

 

 

ஆகவே செயற்கை அறிவை வரவேற்பவர்கள் சற்று ஜாக்கிரதையாக வரவேற்பை நடத்த வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஏகோபித்த கருத்தாக அமைகிறது!

செயற்கை அறிவே உனக்கு ஒரு ஜே போட்டு வரவேற்கிறோம் – சற்று ஜாக்கிரதையுடன்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

செயற்கை அறிவு பற்றிய ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்தவர் பிரபல விஞ்ஞானியான மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky 1927-2016)

அவர் அறிமுகப்படுத்திய இரண்டு விதிகள் அனைவராலும் மேற்கோள் காட்டப்படுகின்றன.

 

முதல் விதி: வார்த்தைகள் உங்களது வேலைக்காரர்களாக இருக்க வேண்டும்; உங்கள் எஜமானர்களாக அல்ல! (Words should be your servants, not your masters)

இரண்டாவது விதி: எதையாவது செய்யவெண்டும் என்பதற்காகச் செய்யாதீர்கள். அதில் நிலைத்திருங்கள். (Don’t just do something. Stand there)

 

அவரது ஆராய்ச்சிக்கிணங்க அவரது வீட்டிலும் லாபரட்டரியிலும் நூற்றுக்கணக்கான வினோத பொருள்கள் இருக்கும். அவரது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் உலகெங்கிலுமிருந்து ஆராய்ச்சி உரைகள் வந்தவண்ணம் இருக்கும். டெலிபோனுக்கு அருகில் உள்ள ஒரு மெஷினிலிருந்து விநோதமான ஒலிகள் எழுந்த வண்ணம் இருக்கும். அந்த விநோதமான ஒலிகளை வைத்து தனது சர்க்யூட்டில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வார்! பின்னால் இந்த உத்தியைப் பயன்படுத்தி பல விளையாட்டு பொம்மைகளைச் செய்யும் கம்பெனி ஒன்றை அவர் தொடங்கினார்.

 

அவரது சோதனைச்சாலயோ இன்னும் விநோதமான ஒன்று. பிளாஸ்டிக்கினால் ஆன ரொபாட் சிலை ஒன்று அங்கு இருக்கும்.

 

துணியினால் ஆன செடி ஒன்று தத்ரூபமாக செடி போல இருக்கும். பெரிய கம்ப்யூட்டர் ஒன்று உண்டு. அது அனைத்து வேலைகளையும் செய்யும் – கதவுகளைத் திறக்கும். லிப்டுகளை இயக்கும். அதற்கு இயந்திரக் கைகள் உண்டு! ரொபாட்டுகளை இயக்க ரிமோட் கண்ட்ரோலும் அதற்கு உண்டு! அது செஸ் போட்டியில் வென்றதற்காக அளிக்கப்பட்ட ட்ராபி அதன் மேல் காணப்படும்! 1963இல் புதுப்பிக்கப்பட்ட அவரது லாபரட்டரி ஒன்பது மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான சோதனைக் கூடம்! அவருக்கு உதவியாக ஒன்பது பேராசிரியர்களும் நூறு மாணவர்களும் அங்கு பணியாற்றினர்.

 

இசை கம்போஸ் செய்வது மின்ஸ்கியின் பொழுதுபோக்கு. உயிரியல் மற்றும் கணிதத்தில் மேதையான அவர் செயற்கை அறிவுக்குத் தாவி ஏராளமான கண்டுபிடிப்புகளைத் தந்து ‘செயற்கை அறிவின் தந்தை என்ற செல்லப் பெயரையும் பெற்றார்!

***

 

அரக்கர் தர்ப்பணம்; கம்பன் அதிசய தகவல்! (Post No.5247)

Written by London swaminathan

Date: 22 JULY 2018

 

Time uploaded in London – 16-27  (British Summer Time)

 

Post No. 5247

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அரக்கர்கள் பற்றி கம்பன் பல அதிசய தகவல்களை அள்ளித் தெளிக்கிறான். ராமனின் மண்டை ஓட்டில் தர்ப்பணம் செய்ய ஒரு பெண்மணிக்கு ஆசையாம்!!

 

  1. அரக்கர்கள் தவம் செய்து கடவுள்களிடம் வரம் பெற்றனர்.
  2. அவர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.

 

இது மார்கஸீய, திராவிட வாதங்களுக்கு வேட்டு வைக்கும் தகவல்கள். இதைக் கம்பன் ஏராளமான பாடல்களில் கோடிட்டுக் காட்டுகிறான்.

 

 

ராமனின் மண்டை ஓடு தேவை!

 

கர தூஷணர்களை ராமன் வதம் செய்தது ராமாயணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வந்து விடுகிறது.

 

அவனது மகன் மனைவி பற்றிய தகவல்களை கம்பன் யுத்த காண்டத்தில் உரைக்கிறான். ராவணன் அனுப்பிய நான்கு கமாண்டர்களையும் (படைத் தளபதிகளையும்) ராம லக்ஷ்மணர்கள் தீர்த்துக் கட்டி விடுகின்றனர். எஞ்சிய சில தலைவர்களில்

ஒருவன் கரனின் மகன். அவன் ராவணனிடம் வந்து, என்ன ஐய? என்னை மறந்து விட்டீர்கள்? என் தந்தையைக் கொன்ற இராமனைக் கொன்று பழி தீர்க்கக் காத்து இருக்கிறேன். அது மட்டுமல்ல. ராமனின் கபாலத்தில் கரனுக்குத்  தர்ப்பணம் செய்ய என் அம்மா ஏங்கிக் கொண்டு இருக்கிறாள். அந்தப் பொன்னாளுக்கு காத்து இருக்கிறேன்.

 

ராவணனும் ‘போய் வா, மகனே! போய் வா’ என் று அனுப்புகிறான். முடிவு தெரிந்த விஷயம்தான். தர்ம வீரர்களின் வில்லாற்றல் முன்பு, சில்லறைகள் நிற்க முடியுமா?

இதோ கம்பன் பாடல்:

கரனின் மகன் மகரக் கண்ணன் செப்பியது:-

அருந்துயர்க் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள்

பெருந்திருக் கழித்தல் ஆற்றாள் கணவனைக் கொன்று பேர்ந்தோன்

கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்

பருந்தினுக்கு இனிய வேலாய் இன்  அருள் பணித்தி என்றான்

 

-யுத்த காண்டம், மகரக் கண்ணன் வதைப் படலம்

 

பொருள்

என் அன்னை அழுத கண்ணோடு துன்பக் கடலில் உழல்கிறாள்; அவளுடைய கணவனைக் கொன்றவன் (ராமன்)  தலையில் அல்லாமல் வேறு எதிலும் இறந்தவனுக்குச் செய்ய வேண்டிய நீர்க்  கடன்களைச் செய்து முடிக்க மாட்டேன் என்றாள். அதனால் இதுவரை தாலியைக் கூட கழற்றவில்லை. பருந்துகளுக்கு பிண உணவினைக் கொடுத்து மகிழ்விக்கும் ராவணா! இனிய போருக்குச் செல்ல எனக்கு இப்போதே ஆணை இடு.’

 

கும்பகர்ணனின் தர்ப்பண ஆசை!

 

கும்ப கர்ணனும் விபீஷணனும் சந்த்தித்த போது, ‘அண்ணா, நீயும் ராமன் தரப்புக்கு கட்சி மாறி விடு; அது தர்மக் கட்சி; கட்டாயம் வெல்லும் கட்சி’- என்கிறான்.

அதற்கு கும்பகர்ணன் தந்த மறு மொழியில்,

‘தர்மக் கட்சி; தாமரை போல மலரும் கட்சி; வெல்லும் கட்சி என்பதெலாம் உண்மைதான்; ஸத்யமே வெல்லும். ஆனால் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற தர்மத்தை நீ மறந்தாயோ?  ராவணன் கட்சி தோற்கப் போவதும் உண்மையே; அந்தக் கட்சி படு தோல்வி அடைந்து ராவணன் மட்டும் தனித்து இருப்பதை காண என்னால் முடியாது; அதற்கு முன்னர் நான் யமலோகத்துக்குச் செல்ல ஆசை; எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எல்லோரும் செத்தால் எங்களுக்குத் தர்ப்பணம் செய்ய, நீர்க்கடன் ஒருவன் வேண்டுமே! ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் கட்சியிலேயே இருப்பா யாக! என்கிறான்.

 

இதோ அந்தப் பாடல்:

 

 

ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே

உய்கிலை என்னின் மற்று இவ்  அரக்கராய் உள்ளோம் எல்லாம்

 

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்

 

கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்

 

பொருள்:

 

இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்- என்கிறான் கும்பகணன்.

 

ஆக இரண்டு பாடல்களும் தரும் செய்தி யாது?

மார்கஸீயங்களும் திராவிடங்களும், ராவணன் ஒரு பெண்பித்தன்; மாற்றான் மனைவி மீது ஆசை கொள்பவன் என்பதால் கட்டாயம் திராவிடனே என்று சொல்வதெல்லாம் தவறு; அவனும் தர்ப்பணம் வேதம், வேள்வியில் நம்பிக்கை உடையவனே; அரக்கர்களின் தபோ பலமே அவர்களுக்கு அரிய பெரிய ஆற்றலை நல்கியது என்பது தெளிவாகிறது.

 

இது மட்டுமல்ல; இந்திர ஜித், ராவணனிடம் சொல்கிறான்:- ‘’அப்பா என்னிடமும் பிரம்மாஸ்திரம் உள்ளது; லக்ஷ்மணனிடமும் உள்ளது ஆகையால் நான் விட்டால் அவனும் விட்டு வானத்தில் மோதிச் சிதறி விடும்; ஆகையால் நான் போய் குகையில் மாபெரும் யாகம் செய்து அவனைத் தோற்கடிக்க வழி செய்கிறேன் என்கிறான். அந்த யாக விஷயத்தைப் பின்னர் காண்போம்.

 

-சுபம்–

OBITUARY COLUMNS BEFORE DEATH!!! (Post No.5246)

Compiled by London swaminathan

Date: 22 JULY 2018

 

Time uploaded in London – 15-12  (British Summer Time)

 

Post No. 5246

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

More Vanity Anecdotes

PT Barnum craved free publicity. When he was near death the ‘Evening Sun’  of New York, asked the great show man’s publicity agent if Barnum would object to having his obituary published before he died. The agent said, ‘the old man will be delighted’.

Next day Barnum read four columns about his own death, and he loved it.

(Phineas Taylor Barnum was an American showman, politician, and businessman remembered for promoting celebrated hoaxes and for founding the Barnum & Bailey Circus-wikipedia)

Xxxxxxxxxxxx

Theodore Roosevelt, at the height of his prominence in American pubilc life, was once approached by a man on the street who tipped his hat and said,
‘Mr Brown, I believe?’
Roosevelt looked at the man and replied bluntly,

‘Sir, if you believe that, you will believe anything’.

Xxx

Oscar Levant is said to have once asked George Gershwin,
Tell me George, if you had it to do all over, would you fall in love with yourself again?

(George Jacob Gershwin (/ˈɡɜːrʃ.wɪn/; September 26, 1898 – July 11, 1937) was an American composer and pianist.[1][2] Gershwin’s compositions spanned both popular and classical genres, and his most popular melodies are widely known. Among his best-known works are the orchestral compositions Rhapsody in Blue (1924) and An American in Paris (1928), as well as the contemporary opera Porgy and Bess (1935).- Wikipedia)

Gershwin observed Oscar Levant, was the happiest man on earth. He was in love with himself and did not have a rival on earth.
Xxx


When Coolidge was governor of Massachusetts he was once host to A visiting English man of some prominence. The latter ostentatiously took a British coin from his pocket, saying,
‘My great great grandfather was made a Lord by the King whose picture you see on this shilling.’
Coolidge laconically produced a nickel.
‘My great great grandfather, he said, was made an angel by the(Red) Indian whose picture you see on this coin’.

Xxx

An English newspaper once published the following bit of gossip

James Mc Neil whistler and Oscar Wilde were seen yesterday in Brighton , talking as usual about themselves.
Whistler sent the paragraph to Wilde with a note saying
‘I wish these reporters would be accurate. If you remember, Oscar, we were talking about me’.
Wilde sent him a telegram saying,
‘It is true, Jimmie, we were talking about you, but I was thinking of myself’

Xxxx


A little fable was formerly current about Theodore Roosevelt. The great man, after his death, was-supposed to-have ascended to heaven. There he bustled about made himself a nuisance by insisting that he be entrusted with some major responsibility. At last wearily the higher powers instructed St. Peter to authorise T.R. to organise and train a celestial choirs to replace the old one, which it was felt had gone to seed. T. R. continued to be a nuisance by the fierce persistence with which he pressed his requisitions.
I must-have 10000 sopranos, he told the bewildered and weary St. Peter And 10000 contraltos, and 10000 tenors
And hurry hurry everything is waiting on you.
Yes said Peter, how about the basses?
Roosevelt fixed him with a scornful glare.
I will sing bass! He bellowed.

Xxxx SUBHAM xxx