மன அழுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் 20 நிமிட கலைப் பயிற்சி! (Post No.15,620)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,620

Date uploaded in London – 15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

21-3-26 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

மன அழுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் 20 நிமிட கலைப் பயிற்சி! 

ச. நாகராஜன் 

உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு புதிய புத்தகம் ‘ஆர்ட் க்யூர்” ART CURE!

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட இந்தப்         புத்தகத்தை எழுதியவர் டெய்ஸி ஃபேன்கோர்ட் (Daisy Fancourt) என்ற பெண்மணி. 

டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள இவர் யுனிவர்ஸிடி காலேஜ் ஆஃப் லண்டனில்   சைக்கோ பயாலஜி மற்றும் எபிடெமியாலஜி துறையில் பேராசிரியராகப்         பணியாற்றுகிறார்.

யாருமே இதுவரை செய்யாத ஒரு அபூர்வ ஆய்வை இவர் மேற்கொண்டார்.      என்ன அது? 

கலைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ளதொடர்பு பற்றிய  ஒரு ஆய்வை     இவர் மேற்கொண்டார்.

நல்ல உணவுத் திட்டம், உடல்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது போல      கலையைக் கற்பதும் உடல் நோய்களைக் குணப்படுத்தும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும், மன அமைதியை நல்கும் என்பதை இவரது ஆய்வின் முடிவு கண்டுபிடித்துள்ளது.

ஹீதர் ரோஸ் ஆர்டுஷின் (Heather Rose  Artushin)   என்ற 

பெண்மணி இவரை சைக்காலஜி டு டே பத்திரிகைக்காக பேட்டி  கண்டார்.

அதில் தன்னைப் பற்றியும் தனது ஆய்வைப் பற்றியும் இவர் மனம் திறந்து பல        தகவல்களை வெளியிட்டார்.

15 வருடங்களாக ஒரு விஞ்ஞானியாக கலைகள், மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி இவர் ஆராய்ச்சி செய்து வந்துள்ளார்.  

எந்த ஒரு கலையிலும் ஈடுபடும் ஒருவர் தான் சந்தோஷமாக இருப்பதையும்       மிகுந்த மனஅமைதியை பெறுவதையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கம். 

ஆனால் அது ஒருவரின் வாழ்க்கையை நம்ப முடியாத உயரத்திற்கு ஏற்றும்      என்றும் ஆரோக்கியம் மேம்படும் என்பதையும் இவர் உறுதிப்படுத்துகிறார்.    

 மூளையைப் படம்பிடித்து ஆராய்தல், உடலில் ஏற்படும் மாறுதல்களை         ஆராய்தல், இரத்த சாம்பிள்களை  எடுத்து ஆய்வு நடத்தல், ஏன் மரபணுவையே ஆய்வுக்கு உட்படுத்தல் என்பன போன்ற ஆய்வுகளை  முழு வீச்சில்  நடத்தி  கலைகளில் ஈடுபடுவதானது உடலில்  ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை அறிவியல் பூர்வமாகத் தொகுத்துள்ளார்.

மன ஆரோக்கியத்திற்கு கலைகள் பெரிதும் உதவுகின்றன. உணர்ச்சிகளைச்      சீராக்கல், படைப்பாற்றலை மேம்படுத்தல் உள்ளிட்ட பல நலன்கள் கலைகளில்        ஈடுபடுவதால் ஏற்படுகின்றன. மூளையில் டோபமைன் என்ற முக்கிய நியூரோ   டிரான்ஸ்மிட்டர் (இரசாயன தூதுவர்) அதிகரிக்கிறது. மன அழுத்த            ஹார்மோனானான கார்டிஸால் குறைகிறது.

ஒவ்வொருவரும் உணவுத் திட்டத்தை சீர்படுத்தி அமைத்துக் கொள்வது போல   கலைகளிலும் ஒரு நாளைக்கு இருபது நிமிட நேரமாவது ஈடுபட வேண்டும்      என்கிறார் இவர்.

இசை, நடனம், ஓவியம், நடிப்பு என்று எந்தக் கலை ஆகட்டும் நன்மையே பயக்கும்.

கலை ஈடுபாட்டை ஒரு ப்ரிஸ்கிரிப்ஷனாகவே தர வேண்டும் என்ற இவரது அதிரடி சிபாரிசு கலைப்பிரியர்களுக்கும் கலாரசிகர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியையே தருகிறது!

இதை ஆதாரத்துடன் ஆய்வு முடிவுகளைச் சுட்டிக் காட்டிக் கூறும் போது இந்த   அறிவியல் ஆமோதிப்பை அனைவரும் மனம் திறந்து வரவேற்கத்தானே வேண்டும்!

ஆர்ட் க்யூர் புத்தகம் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

புத்தகத்தின் விலை பேப்பர் பேக் எடிஷன் ரூ 662.33. பக்கங்கள் 328.

Leave a comment

Leave a comment