HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 53; இந்து மத கலைச்சொல் அகராதி-53 (Post No.15,634)

Written by London Swaminathan

Post No. 15,634

Date uploaded in London –19 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tamil Version is posted here; English version was posted yesterday.

More  K  words

கண்ணப்பன்  – கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். திருக்காளத்தியில் வேடர் குலத்தில் பிறந்து, திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தன் கண்னையே சிவலிங்கத்திற்குக் கொடுத்து, அவருடைய அருளைப்பெற்று  பின்னர் சிவனுடன் கலந்தார் . பக்திக்கு இலக்கணமாகத் திகழந்த இவரது வரலாறு பெரிய புராணத்தில்   உள்ளது. இந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார்.

திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது. இக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு).

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும், பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன்கண்ணப்பன்வேடன் என்றும் சான்றோர்கள் கண்ணப்ப நாயனாரைப் போற்றியுள்ளனர் .

***

கோச்செங்கட் சோழன்

கோச்செங்கட் சோழ நாயனார் சோழ மன்னர்களில் ஒரு சிறந்த மன்னர். இவர் முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்து சிவபெருமானுக்குத் தொண்டு செய்தவர்; பெரிய புராணத்தில் இவர் வரலாறு உள்ளது.

 கோச்செங்கணான் என்ற பெயரும் உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவர்; மாடக்கோயில்கள், எனப்படும் உயர்ந்த தளங்களைக் கொண்ட 70-க்கும் மேற்பட்ட சிவன் கோயில்களைக் கட்டினார் ; பூர்வ ஜென்மத்தில் யானையால் பாதிக்கப்பட்டதால் , யானைகள் புக முடியாத கோவில்கள் இவை ; இவர் சிலந்தியாகப் பிறந்து சிவன் மீது வலை பரப்பி வழிபட்டபோது, மற்றோரு சிவ பக்தனான யானை அந்த வலையைக் கலைத்தது . யானை தன்னுடைய துதிக்கையால் அதை  ஓங்கி அடித்துக் கலைக்கவே அதன் துதிக்கையில் சிலந்தி புகுந்து தொல்லை கொடுத்தது; இருவரும் இறந்து  சிவனடியைச் சேர்ந்தனர். கண் சிவந்து பிறந்த சோழனை செங்கண்ணான் என்று அழைத்தனர்.

***

குறள் — திருக்குறள்

திருவள்ளுவர் எழுதிய இந்த நூலில் 1330 குறள் வடிவப் பாக்கள் உள்ளன ; அவை ஈரடிச் செய்யுட்கள் ; தர்ம அர்த்த காம – அறம் பொருள் இன்பம் – என்ற இந்துமதக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் விளக்கியதால் முப்பால் என்றும் பெயர் ; சுருங்கச் சொல்லி விளங்க வைத்ததும் எல்லா விஷயங்களையும் தொகுத்து அளித்ததும் இதன் பெருமையைப் பரப்பியது; திருவள்ளுவர் எழுதிய இந்த நூல் தமிழ் மொழி உலகுக்கு அளித்த பெரிய கொடை ஆகும் ; இவருடைய  காலத்தை  BCE 31 என்று தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டாலும் பழந்தமிழர்கள் இவரை சங்க காலத்துக்குப் பின்னரே வைத்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இவரைச் சேர்த்தனர் ; மேலும் மொழியியல் ரீதியாக இவரை ஐந்தாம் நூற்றா ண்டில்தான் (CE)  வைக்க முடிகிறது  ; இதைப் பல அறிஞர்கள் சுட்டிக் காட்டிவிட்டனர்; திருவள்ளுவரின் பிறப்பு பற்றியும் சர்ச்சை உள்ளது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர்  வெளியான எல்லா நூட்களிலும் உள்ள இந்த வரலாற்றினை இப்போது மறைத்து எழுதிவருகின்றனர். ஆதி – பகவன் என்ற கலப்பின தம்பதியருக்கு இவர் ஏழு சகோதர சகோதரிகளுடன் பிறந்தார்.

***

குஷிக

விச்வாமித்ர மாஹரிஷியின் தாத்தா குஷிக ஆவார் ; காதி என்பவர் குஷிகவின் மகன்; சியவன ரிஷிக்கு குஷிக மிகவும் சிரமப்பட்டு சேவை செய்தார் ; அவர் மகிழ்ச்சி அடைந்து உன்னுடைய சந்ததியினர் பிராமணத்துவம் பெறுவார் என்று ஆசீர்வதித்தார் . விச்வாமித்திரரும் பிற்காலத்தில் பிரம்மரிஷி பட்டம் பெற்றார்.

***

L WORDS ; LA words 

லக்னம் 

ஒரு ஜாதகர் பூமியில் ஜனனம் ஆகும் போது கிழக்கு திசை அடிவானத்தில் எந்த ராசி உதயம் ஆகிறதோ அதுதான் அவருடைய லக்கினம் எனப்படும்; லக்னம் என்று குறிப்பிடப்பட்ட அதே கட்டத்தில் சந்திரனும் இருக்கும் ; ராசிச் சக்கரத்தில் “ல” என்று குறிப்பிடப்பட்டு குறுக்கு வாக்கில் ஒரு கோடு போட்டிருப்பார்கள். அவர்களுக்கு ராசி லக்னமும் ஒன்றாகவே இருக்கும்; சுப வேளை  என்பதையும் லக்கினம் என்று சொல்வார்கள் .அந்த ஜாதகத்திற்கு நடந்து கொண்டிருக்கும். திசை மற்றும் புத்தி கொண்டு பலன்களை கணக்கிடுவதற்கு லக்னம் மிக அவசியமாகும்.

****

லக்ன பத்திரிகை

லக்கின பத்திரிகை (அல்லது லக்ன பத்திரிகை) என்பது தமிழ் இந்து திருமணங்களில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமணத்தை உறுதி செய்த பிறகு, நல்ல நேரத்தில் பரிமாறிக்கொள்ளும் முறையான திருமண அழைப்பிதழ் ஆகும். இது பெரும்பாலும் குடும்பப் பெரியவர்களால், மஞ்சள்/ பிங்க் நிறத் தாள்களில், மணமக்களின் ஜாதக விவரங்கள், திருமண நேரம் மற்றும் இடத்துடன் எழுதப்படும்.

நிச்சயதார்த்தம்: திருமணத்திற்கு முன் நடத்தப்படும் மிக முக்கியமான சடங்கு.

பரிமாற்றம்: லக்னப் பத்திரிகை வாசித்த பின், இரு வீட்டாரும் பத்திரிகைகளை மாற்றிக்கொள்வர்.

இதில் திருமண நாள், லக்னம், முகூர்த்த நேரம், மணமக்களின் பெயர் மற்றும் பெற்றோரின் விவரங்கள் இடம் பெறும்.

***

லெட்சுமி/ லக்ஷ்மி

லட்சுமி (அல்லது லக்ஷ்மி) செல்வச் செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு மற்றும் தூய்மையின் தெய்வமாக வழிபடப்படும் தேவி ஆவார்; திருமால் அல்லது விஷ்ணுவின் மனைவி; மன்மதனின் தாய் ; அலைமகள், மலர்மகள், மகாலட்சுமி என்பன ஏனைய பெயர்கள்; எட்டு முக்கிய வடிவங்களில் (அஷ்டலட்சுமி) இவளை வணங்கலாம்

தாமரையில் வீற்றிருப்பவர், இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியிருப்பார்.

அஷ்டலட்சுமி (ஆதி, தன, தான்ய, கஜ, சந்தான, வீர, விஜய, வித்யா லட்சுமிகள்)

யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி

தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா

எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி,  கோலமிட்டு  அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.

அது என்ன பூரண கலை?

நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் வளத்தை பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.

சத்வ குணத்தில் கருட வாகனத்திலும், ரஜோ குணத்தில் யானை அல்லது தாமரை மீதும், தமோகுணத்தில் ஆந்தை மீதும் வருபவள் .

அஷ்டலக்ஷ்மி:  தனலக்ஷ்மி, தானிய  லக்ஷ்மி, தைரிய  லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, வித்தியா லக்ஷ்மி, கீர்த்திலக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி என்று  தமிழ் நாட்டுக் கோவில்களில் காட்சி தருகிறாள்.

***

இலங்கை

லங்காபுரி என்றும் சிலோன் என்றும் ஸ்ரீ லங்கா என்றும் அழைக்கப்படும் பொன்மயமான தீவு பற்றிய அழகான வருணனை வால்மீகி ராமாயணத்தில் உள்ளது; குபேரனுக்காக விஸ்வகர்மன் என்னும் தேவலோக சிற்பி உருவாக்கிய இலங்கையை ராவணன்  பிடுங்கிக்கொண்டான்; யக்ஷர்கள், நாகர்களுக்குச் சொந்தமான தீவாக தமிழ் இலக்கியமும், பாலி மொழி நூல்களும் வருணிக்கின்றன ; இந்து மதம் தழைத்த– சைவம் தழைத்த நாடு — பிற் காலத்தில் அசோகர் மகன், மகளால் பெளத்த மத நாடாக மாற்றப்பட்டது; சீதையை ராவணன்  கவர்ந்து சென்ற பின்னர் ராம பிரான் அனுமன் படையின் உதவியுடன் சேது/ பாலம் அமைத்து இலங்கை மீது படை எடுத்தான். ராவணன்  கொல்லப்பட்ட பின்னர் அவனுடைய தம்பி விபீஷணன் இலங்கையை ஆண்டான்  .

***

லவணன்

மதுவுக்கும் கும்பி நாசிக்கும் பிறந்த ராக்ஷஸன்; சிவ பெருமான் கொடுத்த திரிசூலத்தை அவனுடைய தந்தையிடமிருந்து பெற்றான்; ஆயினும் ஆயுதம் இல்லாத தருணத்தில் அவனை ராமனின் சகோதரனானான சத்ருக்கனன் கொன்றான். அதன் பிறகு அவன் ஆண்ட மதுராவை சத்ருக்கனன் ஆண்டான்.

***

லக்ஷ்மணன்

ராமனின் தம்பி ; சுமித்ராவுக்கு இரட்டையர்களாக சத்ருகுணனுடன் பிறந்த போதிலும் கோசலை மகனான ராமனுடன் அல்லும் பகலும் அனவரதமும் இருந்தான்; ராமனுடன் 14 ஆண்டுகளுக்கு கானகம் ஏகினான்; ராம-ராவண யுத்தத்தில் பெரும்பங்காற்றினான் ; சீதையின் காலணிகளைத் தவிர நிமிர்ந்தும் பார் க்காதவன்; ஊர்மிளாவை மணந்தான்தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்.

****

லக்ஷ்மண / லக்ஷ்மணா

துரியோதனன் – பானுமதி தம்பதியருக்குப் பிறந்த சகோதர சகோதரி ஆவார்கள் . லக்ஷ்மணா என்ற பெண்ணை கிருஷ்ணின் மகன் சம்பா கடத்திச் செல்லவே, அவனை துரியோதனன் பிடித்துச் சிறையிலிட்டான்; பின்னர் பலராமன் தலையீட்டின் பேரில் அவனை விடுதலை செய்து லக்ஷ்மணாவைத் திருமணம் செய்து கொடுத்தான்; அவன் அஞ்சாத வீரன்; ஆயினும் மஹாபாரதப்போரில் அபிமன்யு கையில் மரணம் அடைந்தான்

.***

 லக்ஷம்

இந்திய மொழிகளில் உள்ள  சம்ஸ்கிருதச்  சொல்; தமிழில் நூறாயிரம் என்பர்

***

லவ, குசன்

குசன் என்ற தலைப்பில் ஏற்கனவே உளது

***

லாட தேசம்

புராதன இந்தியாவின் 56 தேசங்களில் ஒன்று ; குஜராத்தின் ஒரு பகுதி இது ; டாலமி போன்ற வெளிநாட்டு யாத்ரீகர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

LaataDesam, part of Kurjara/ Gujarat Desa

—subham—

Tags HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 53; இந்து மத கலைச்சொல் அகராதி-53 கண்ணப்பன் , திருக்குறள் , லாட தேசம், லக்கினம்

Leave a comment

Leave a comment