HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 62; இந்து மத கலைச்சொல் அகராதி-62 (PostNo.15,726)

Written by London Swaminathan

Post No. 15,726

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted yesterday.

மங்களாசாசனம்

தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பட்ட விஷ்ணு/ பெருமாள் கோவில்களை   மங்களாசாசனம் செய்யப்பட திருத்தலங்கள் என்று அழைப்பார்கள் . இந்த ஆழ்வாரால் அல்லது ஆழ்வார்களால் என்று பெயர் சொல்லி இந்தச் சொல்லை பயன்படுத்துவார்கள்; ஆழ்வார்கள் பாடல்கள் அனைத்தும் திவ்யப்பிரபந்தத்தில் உள்ளது அவர்கள்  பாடிப்பரவிய தலங்களை 108 திவ்ய தேசங்கள் என்று பட்டியலிட்டுள்ளனர்; குமரி முதல் இமயம் வரையுள்ள இந்தத்தலங்களில் பரமபதம் என்னும் வானுலக தலத்தை மட்டும் பக்தர்கள் மனித உடலில் காண முடியாது.

***

மதயந்தி

செளதாச என்ற அரசனின் மற்றோரு பெயர் கல்மாஷபாதன்; அதாவது கரிகாலன் ; இவர்களுடைய கதை புராணங்களிலும் மகாபாரதத்திலும் உள்ளது.வசிஷ்ட முனிவரின் சாபத்தால் உடல் நிலை மாறியபோதும் அவனிடம் அன்பு பாராட்டிய கற்புக்கரசி மதயந்தி ; அவர்களுக்குப் பிறந்த குழந்தை அஷமாக. மதயந்திகா என்றால் மருதாணி என்று பெயர்; சிலர் இரண்டினையும் தவறாக எண்ணி குழம்புவார்கள். தமயந்தி – நளன் ஆகியோருடனும் குழம்பிக்கொள்ளக் கூடாது.

***

மதுரை

தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ; கடைச் சங்க காலம் முதல் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றிலும் இலக்கியத்திலும் உள்ள பெயர் ; சங்கப்புலவர் இருந்தது இந்த இடம்தான் என்பதற்குச் சான்றாக அதிகமான புலவர்களின் பெயர்களுடன் மதுரை இணைக்கப்பட்டுள்ளது; தற்போது உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர்  என்ற பாடல் பெற்ற சிவன் கோயிலாலும் ஆண்டு  தோறும் நடக்கும் சித்திரைத் திரு விழாவினாலும் மங்காத புகழுடன் விளங்குகிறது பாண்டிய மன்னர் முதல் நாயக்க மன்னார் வரை வளர்த்த கோவில் இது.

***

மலையாளம்

ஒரு மொழியின்  மற்றும் அந்த மொழி புழங்கும் மாநிலத்தின் பெயர் ; பழங்காலத்தில் சேரநாடு என்றும் தற்போது கேரளா என்றும்    அழைக்கிறோம். தமிழ் மொழியின் சகோதர மொழியான மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்குப்பின்னால் தோன்றியது ; எழுத்தச்சன் ராமாயணம் முதலிய இலக்கியங்கள் உடைத்து. 

***

மலய பர்வதம்

மேற்குத்தொடர்ச்சி மலை என்றும் சம்ஸ்க்ருதத்தில் சஹ்யாத்ரி என்றும் இதற்குப் பெயர் ; அகஸ்தியர் வாழ்ந்த பொதிகை மலை இதன் ஒரு பகுதிதான்.

***

மதுரா

கிருஷ்ணர் பிறந்த இந்த நகரம் உத்தர பிரதேசத்திலுள்ள புனித நகரம் ஆகும்; இந்துக்களின் புனிதமான ஏழு நகரங்களில் ஒன்று; ராமர்ப்பிறந்த அயோத்தி கோவில் போலவே கிருஷ்ணர் பிறந்த மதுராவுக்கும் பக்தர்கள் வரத்து அதிகம்; இதைச் சுற்றியுள்ள பிருந்தாவனம் கோகுலம் என்பன பக்தர்களின் புண்ய பூமி ஆகும்.’

***

மஹா பாரதப் போர்  &  மஹா பாரதம்

மஹா பாரதம், உனக்கிலேயே நீளமான புஸ்தகம் ; ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உடையது; வியாசரால் எழுதப்பட்ட இந்த நூலில் இல்லாத விஷயம் உலகில் இல்லை என்று ஒரு பொன்மொழி உள்ளது. பகவத் கீதை இதில் ஒரு அத்தியாயத்தில் உள்ளது மொத்தம் பதினெட்டு பருவங்களை உடைய இந்த நூல் சம்ஸ்க்ருத மொழியில் இருக்கிறது .

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே நடந்த சண்டை குருக்ஷேத்ரம்  என்னும் புண்ய பூமியில் நடந்தது இது தற்கால ஹரியானா மாநிலத்தில் இருக்கிறது. மஹாபாரதப்போரில் பங்குகொண்ட தேசங்கள் மற்றும் மன்னர்களின் பெயர்களைப் பார்க்கையில் இது பெரிய யுத்தம் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் இரும்பு, குதிரை ஆகியவற்றைக் குறிப்பிடுவதால் BCE1500  வாக்கில் நடந்ததாக பெரும்பாலான ஆராய்சசியாளர்கள் வாதிடுகின்றனர் ; இந்துக்களோவெனில் கலியுகம் துவங்குவதற்கு 36 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்ததாக எழுதியுள்ளனர் கலியுகம் துவங்கியது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்; அதாவது கி மு 3102 BCE.

***

மஹா பாஷ்யம்

பதஞ்சலி முனிவர் எழுதிய இலக்கண உரை இது ; பாணினியின் இலக்கணத்துக்கு உலகில் எவ்வளவு பெருமை உண்டோ அவ்வளவு பெருமை இதற்கும் உண்டு 2150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் பாணினியின் அஷ்டாத்யாயி நூலுக்கு எழுதிய உரை மஹா பாஷ்யம் ஆகும்; இதில் அவர் இலக்கணம் தவிர வேறு நிறைய விஷயங்களையும் தருகிறார். அவர் காட்டும் உதாரணங்களால் அக்கால அரசியல் நிலை, பண்பாடு , சமயம் முதலிய பல விஷயங்களை  அறிய முடிகிறது .

***

மஹா மகம்

கும்ப கோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பெரிய பண்டிகை ; தென்னாட்டின் கும்ப மேளா என்றும் பெயர் ; குடந்தையில் கும்பேஸ்வரர் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஸ்னாநம் செய்யும் விழா அடுத்த முறை மார்ச் 9, 2028-ல் நடக்கும். குரு என்னும்   வியாழன் கிரகம் சிம்ம ராசியில் நுழையும் போது இது கொண்டாடப்படுகிறது . 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண தேவ ராயர் விஜய நகரத்திலிருந்து இந்த விழாவுக்கு வந்து ஸ்நானம் செய்ததைக் கல்வெட்டுகள் விளம்புகின்றன.

***

மாயா

மாயை என்று தமிழில் சொல்லுவோம் ; இல்லாத ஒன்றினை இருப்பதாக நினைப்பது மாயை; மாயா ஜாலம் என்றும் மாஜிக் காட்சிக்குப் பெயர் ; இந்த உலகம் என்பதே மாயத் தோற்றம் என்பது ஆதிசங்கரின் அத்வைத வாதம் கூறும்; பாம்பினை கயிறு என்றும் கயிற்றைப் பாம்பு என்றும் தவறாக கருதி நாம் அஞ்சுவதை உதாரணமாகக் காட்டுகிறார் அவர் .

***

மகமாயி / மஹா மாயா

சக்தி தேவிக்கு இப்படி ஒரு பெயர்  ; இந்த உலகினையே நமக்கு மாயத்nதோற்றத்தில் காட்டுபவர் அவர்; தமிழர்கள் இவரை மகமாயி என்றும் மாரியாம்மன் என்றும் அழைக்கிறார்கள் ; அம்மை நோய் வந்தால் மகமாயி வந்திருக்கிறாள் என்று சொல்லி அந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக வீட்டு வாசலில் வேப்பிலையைக் கட்டித் தொங்க விடுவார்கள்; நோய் குணம் ஆனவுடன் அருகிலுள்ள கிராம தேவதை கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்துவார்கள் .

***

யோகமாயா

கம்சனைக் கொல்வதற்கு ஒரு ஆண் குழந்தை  பிறக்கப்போகிறது என்று ஆரூடம்/ அசரீரி வந்ததால் அவன் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று வந்தான்; தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை கிருஷ்ணன் ; அவளுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த கம்சன், வாளால்  குழந்தையை வெட்டப்போன போது அக்குழந்தை வானில் தோன்றி மறைந்தது உண்மையான கிருஷ்ணனை வேறிடத்துக்கு மாற்றியது ; கம்சனுக்கு முன்னர் தோன்றிய யோகமாயா கம்சனுக்கு இறுதி எச்சரிக்கையையும் விட்டுச் சென்றது .

To be continued…………………

Tags- மகமாயி , மஹா மாயா, மங்களாசாசனம்,HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 62; இந்து மத கலைச்சொல் அகராதி-62

Leave a comment

Leave a comment