இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 3 காளிதாசன் நூல்களில் ஆபரணங்கள்! (Post.15,874)

 Written by London Swaminathan

Post No. 15,874

Date uploaded in London –15 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆராய்ச்சிக் கட்டுரை Part 3

ராமாயணத்துக்கு அடுத்தபடியாக மோதிரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவன் உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசனே ; ராமன்  கொடுத்த மோதிரத்தை இலங்கையில் அசோகவனத்திலிருந்த சீதா தேவியிடம் அனுமன் கொடுத்த காட்சி மிக முக்கியமான காட்சி;  இதை ராமாயண உபன்யாசகர்கள் சொல்லும்போது அவர்களுக்கு பரிசாக, மோதிரத்தைக் கொடுப்பதையும் நானே கண்டிருக்கிறேன் . இந்த மோதிர உத்தியை காளிதாசன் சாகுந்தலம் , மாளவிகாக்னி மித்திரம், விக்ரமோர்வசீயம் ஆகிய  நாடகங்களில் பயன்படுத்தியதோடு  அவன் எழுதிய  ரகுவம்சம், மேக தூதம், ருது சம்ஹாரம் , குமார சம்பவம் ஆகிய நூல்களில் ஆபரணங்களையும் எடுத்தாண்டுள்ளான்.

காளிதாசன் பயன்படுத்திய சொற்கள் :

நூபுரம் – காற் சலங்கை ; இதை சங்கத்தமிழ் நூல்களிலும் புலவர்கள் பயன்படுத்தினார்கள் .

மேகலா அல்லது காஞ்சி அல்லது  ரசனா  – இடையில் அணியும் ஒட்டியாணம் ;இதையும்  தமிழ் நூல்களில்  புலவர்கள் பயன்படுத்தினார்கள் . மணி மேகலை என்பது ஒரு காப்பியத்தின் பெயர்.

ஹார – தமிழில் ஆரம் அல்லது மாலை ; மாலை என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொல்தான்  ;ஆயினும் தமிழ் இலக்கியத்தில் காணலாம் . தமிழில் தொங்கல் ,அலங்கல் போன்ற தூய தமிழ்ச் சொற்களும் உண்டு.

ஏகாவளீ- பல ரத்தினங்களால் இணைக்கப்பட்ட சங்கிலி ;

தாரஹார – பெரிய முத்துமாலை

வலய – கையில் அணியும் காப்பு ; மாலை போலவே இந்தச் சொல்லும் தமிழிலும் சம்ஸ்க்ருதத்தில் ஒரே பொருளில் வருகிறது; இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவை என்பதை மெய்ப்பிக்கிறது .

கேயூர அல்லது அங்கத – ஆண்களும் பெண்களும் தோள்களில் அணியும் ஆபரணம்.

கர்ணபூர அல்லது குண்டல அல்லது தாடங்கம் – காதில் அணியும் அணி ; இதுவும் ஆண்களும் பெண்களும் அணிவது; சிவ பெருமான் சிலைகளிலும் காதுகளில் தொங்கும் .

சூடாமணி – சூளாமணி – தலையில் தொங்கும் நகை;

மூக்குத்தி பற்றி எங்கும் சொல்லப்படவில்லை ; ஆயினும் பிராமணர் முதல் பழங்குடி மக்கள் வரை இதை அணிந்து வருகின்றனர்

முத்ரிகா – மோதிரம் – அங்குலீயக-

__

சாகுந்தலத்தில் இது முக்கியப் பங்காற்றுகிறது; மாளவிகாக்நி மித்திரத்திலும் பாம்பு மோதிரம் முக்கியப் பங்காற்றுகிறது.

உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம் ஆகும் ; துஷ்யந்தன் என்ற மன்னன் கானகத்தில் வாழ்ந்த பறவைப் பெண்ணை கந்தர்வ / காதல் திருமணம் செய்கிறான்( சாகுந்தல என்றால் பறவைங்களால் வளர்க்கப்பட்டவள் என்பது பொருள்; இதிலிருந்து வந்த சகுனம் – பறவை ஜோதிடத்தை — இன்றுவரை இந்துக்கள் பின்பற்றி வருகின்றனர் ); நாட்டுக்குத் திரும்பியபின்னர் சகுந்தலையை மறந்து விடுகிறான்; அவன் சகுந்தலாவுக்குக் கொடுத்த மோதிரத்தையும் ஒரு மீன் விழுங்கி விடுகிறது; சகுந்தலையை கண்வ மஹ ரிஷி  சிஷ்யர்கள் புடை சூழ துஷ்யந்தன் அரண்மனைக்கு அனுப்புகிறார்; மன்னரோ “பெண்ணே! உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதே” என்று மறதியில் உளறுகிறான்; அந்த நேரத்தில் ஒரு மீனவன் பிடித்த மீனின் வயிற்றில் அரச மோதிரம் (ரத்னாங்குலீயகா) இருக்கவே அதைக் கொண்டு ஓடிவருகிறான்; அந்த மோதிரத்தைக் கண்டவுடன் பழைய நினைவுகள் வந்தவுடன் சகுந்தலையை மனைவி என்று துஷ்யந்தன் ஒப்புக்கொள்கிறான்; அவர்களுடைய மகன் பரதன் ஆண்டதால் இந்தியாவுக்குப் பாரத நாடு என்ற பெயர் ஏற்பட்டதை மஹாபாரதம் இயம்புகிறது; அதை பாரதியாரும் பாடி மகிழ்ந்துள்ளார்.

***  

மாளவிகா அக்நிமித்திரம் நாடகத்தில் ஒரு சுவையான மோதிரக் காட்சி வருகிறது; மாளவிகா சிறை வைக்கப்பட்டாள்; அவளை விடுவிக்க நகைச் சுவை நடிகன் / விதூஷகன் ஒரு தந்திரம் செய்கிறான் ; பாம்பு கடித்தது போல பாசாங்கு செய்து மஹாராணி தாரிணியிடமிருந்து பாம்பு மோதிரத்தைப் பெறுகிறான்; அதைக்கொண்டு பாம்பு விஷத்தை இறக்கிவிடலாம் என்பது அக்கால நம்பிக்கை; அதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய்ச் சிறைக் காவலர்களிடம் காட்டி , “ராணியின் உத்தரவு; உடனே மாளவிகாவை விடுதலை செய்யுங்கள்” என்கிறான்; சிறைக்காவலர்களும் உடனே மாளவிகாவை விடுதலை செய்கின்றனர்; எல்லா சம்ஸ்க்ருத நாடகங்களிலும் விதூஷகன் / காமெடியன் – கதாபாத்திரமுண்டு; இன்று வரை இந்த 2000 ஆண்டு வழக்கத்தை இந்தியத் திரைப்படங்களில் காணலாம். அரசவை விதூஷகனுக்கு மிகவும் செல்வாக்கு இருந்ததைத் தெனாலிராமன் கதைகளிலும் காண்கிறோம்; சம்ஸ்க்ருதத்தில் 600-க்கும் மேல் நாடகங்கள் இருக்கின்றன ; தமிழில் பழங்கால நாடகம் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை!

***

காளிதாசன் காவியங்களில் நகைகள் ரத்தினக் கற்கள்

ரகுவம்சம் – 8-63; 13-23; 8-58; 8-64; 9-37; 10-8; 11-17; 15-1; 16-65; 13-21; 16-56; 14-19; 15-77;16-74;

மேக தூதம் – 1-28; 1-35; 1-31; 1-69;2-9;

குமார சம்பவம் – 1-37; 3-55; 4-85-10; 7-618-14; 8-83; 7-69;7-35; 6-84;

மாளவிகா அக்கினி மித்ரம் -3-17;4-3; 3-20; 4-4; 6-24;

விக்ரம ஊர்வசீயம் -3-15; 4-52;

அபிக்ஞான  சாகுந்தலம்- 3-10; 1-13; 5-13;

ருது சம்ஹாரம்- 4-4; 3-20; 1-5; 3-20; 6-6; 4-3; 2-24;3-19; 2-19;

***

சங்க காலத் தமிழர்கள் தங்கம், வெள்ளி, முத்து, பவளம் மற்றும் இயற்கை மணிகளைக் கொண்டு நேர்த்தியான நகைகளைச் செய்தனர். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தாலிகாதணிமேகலைமற்றும் வளையல்கள் போன்ற ஆபரணங்கள்

சங்க காலத்தில் மக்கள் விரும்பி அணிந்த முக்கிய நகைகள்:

  • காதணிகள் (குழைகாதணி): காதுகளில் அணியப்பட்ட இந்த நகைகள் சங்கப் பாடல்களில் மிகவும் புகழப்படுகின்றன.
  • மேகலை (ஒட்டியாணம்): இடுப்பில் அணியப்படும் ஆபரணம்.
  • தாலி (மங்கல அணி): திருமணத்தின் அடையாளமாக கழுத்தில் அணியப்படும் அணிகலன்.
  • வளையல்கள் (வளையல் / கடகம்): கைகளில் அணியப்பட்ட அணிகலன். சங்க காலத்தில் சங்குகள், தங்கம் மற்றும் உலோகங்களால் இவை செய்யப்பட்டன.

நகைகள் வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்லாமல், மக்களின் கலை நயத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், பொருளாதார முதலீடாகவும் பயன்பட்டன.

–subham—

Tags- இந்துக்கள், பழங்கால நகைகள், Part 3 காளிதாசன், நூல்கள், ஆபரணங்கள்!

Leave a comment

Leave a comment