பாக்யா
16-4-2019 இதழில் வெளியாகியுள்ள அறிவியல் துளிகள் ஒன்பதாம் ஆண்டு ஆறாம் கட்டுரை -அத்தியாயம் 422
காந்த மனிதன் !
ச.நாகராஜன்
மிரோஸ்லா மகோலா (Miroslaw Magola பிறப்பு :- 29-5-1958) இன்று உலகில் வாழும்
அதிசயமான மனிதர்களுள் மிக முக்கியமானவர். அவர் ஒரு காந்த மனிதர்.
ஆம். அவர் உடலே ஒரு காந்த மண்டலமாக இருக்கிறது. காந்தம் இரும்பை
இழுப்பது போல அவர் உடல் காந்த சக்தி கொண்டு காந்தம் இழுக்கும் இரும்பு போன்ற அனைத்தையும்
தன் பால் இழுக்கிறது.
போலந்தைச் சேர்ந்த மகோலா இப்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார்.
சைகோகைனஸிஸ் எனப்படும் அதீத உளவியல் ஆற்றலால் பொருள்களை அப்படியே
அலாக்காகத் தூக்கி வான் வழியே செல்ல வைத்து தன் உடம்புடன் ஒட்டிக் கொள்ள வைக்கிறார்
இந்த அபூர்வ மனிதர்.
1988ஆம் ஆண்டு இந்திய யோகா பயிற்சியில் ஆர்வம் கொண்ட மகோலா தியானத்தையும்
யோகா பயிற்சியையும் மேற்கொண்டார்.
மனித மனத்திற்கு எல்லையற்ற ஆற்றல் உண்டு என்பதையும் மனித மூளையைப்
பயன்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தினால் அபூர்வ சித்திகளைக் கொள்ளலாம் என்பதையும்
அவர் அனுபவ ரீதியாக உணர்ந்தார்.
வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு கடைசியில் உடலின் காந்தசக்தியால்
பொருள்களைத் தன் உடலில் ஒட்டும் பெரிய சித்தியைப் பெற்றார்.
இவரைப் பல விஞ்ஞானிகளும் ஆராய ஆரம்பித்தனர். ஜெர்மனியில் உள்ள
மாக்ஸ்ப்ளாங்க் இன்ஸ்டிடியூட்டில் பல விஞ்ஞானிகளுக்கு முன் இவர் தனது ஆற்றலைக் காட்ட
அவர்கள் வியந்தனர்.
ஏராளமான அரங்கக் காட்சிகளைப் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு
முன் செய்து காட்டி அவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் இவருக்கும் பகுத்தறிவு நிறுவனமான
ஜேம்ஸ்ராண்டி நிறுவனத்திற்கும் இடைவிடாத போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர் ஒரு பிராட்
என்று பகுத்தறிவாளர் ஜேம்ஸ்ராண்டி கூறவே தன்னைச் சோதிக்காமல் அவர் இப்படிக் கூறுவது
தவறு என்றும் சோதனைக்குத் தான் தயார் என்றும் இவர் பதிலடி கொடுத்து வருகிறார்.
போலந்தில் பிறந்த
மகோலா துரதிர்ஷ்டவசமாக தனது இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்தார். அவரது தந்தை ஒரு
வாகன விபத்தில் மரணமடைந்தார்; கஷ்டமான சூழ்நிலையில் வளர்ந்தார்.
1981இல் போலந்தின்
அரசியல் களம் குழப்பமான நிலையை அடைய சோவியத் ரஷியாவின் கொள்கைகளை மகோலா எதிர்த்தார்.
அதனால் அரசின் அடக்குமுறை ஏவி விடப்பட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது திறமையான
வக்கீல் ஜாசெக் டெய்லரின் வாதத்திறமையாலும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலையீட்டாலும்
அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மனைவி குழந்தையுடன் ஜூரிச்சுக்குச் சென்று
குடியேறினார். இவர் போன்றவர்களின் தீவிர முயற்சியால் 1989இல் போலந்தில் கம்யூனிஸ்ட்
ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது.
பின்னர் சீனா, நேபாளம்,
திபத், இந்தியா முதலிய நாடுகளுக்குச் சென்று பல கலைகளையும் கற்றார். 1992 முதல் தீவிரமாக
தனது சைகோகைனஸிஸ் ஆற்றலை உலகினருக்குக் காட்ட ஆரம்பித்தார்.
இரும்பு பாத்திரங்களை
உயரத் தூக்குவது, அங்கும் இங்கும் பறக்க வைப்பது, கீழே இறக்குவது போன்றவற்றை அவையினருக்கு
முன்னே செய்து காட்டியதோடு நூற்றுக் கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்ற ஆரம்பித்தார்.
பிரபல காமடி எழுத்தாளரான
ஸ்டான் லீ ( 28-12-1922 – 12-11-2018) தனது சூபர் ஹ்யூமன் நிகழ்ச்சியில் 2010 ஆண்டு
மகோலாவை அழைக்க அதில் தோன்றி மிகவும் பிரபலமானார் மகோலா! ஹிஸ்டரி சானல், டிஸ்கவரி சேனல்
போன்ற அனைத்து சேனல்களிலும் இவர் தனது ஆற்றலைக் காட்டி உலகினரை அயர வைத்தார்.
ஆங்காங்கே மூளையின்
அபூர்வ ஆற்றலைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். தி பவர் ஆஃப் ப்ரெய்ன் (மூளையின் சக்தி)
என்ற இவரது புத்தகம் குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம்.
இவரது பல்வேறு
நிகழ்ச்சிகளை (யூடியூப் உள்ளிட்ட) இணையதள சேனல்களில் இன்றும் காணலாம்.
இது தவிர இன்னும் ஏராளமான காந்த மனிதர்கள் உலகில் தங்கள் ஆற்றலைக்
காட்டிப் பவனி வருகின்றனர்.
ருமேனியாவில் புசாரெஸ்டில் உள்ள மருத்துவமனையில் பிஸியோதெராபிஸ்டாகப்
(Physiotherapist) பணி புரியும் ஆரெல் ரெலேனு
(Arurel Raileanu, Bcuharest,
Romania) தனது அதீத காந்த ஆற்றலால் 26 கிலோ எடையுள்ள டி.வி.செட்டையே தூக்கி விட்டார்.
இவரை சோதனை செய்ய வந்த கின்னஸ் ரிகார்ட் நிபுணர்கள் முன்னர் தனது ஆற்றலைக் காண்பிக்கவே
அவர்கள் வியந்தனர்; உலகின் மிகச் சிறந்த காந்த மனிதன் (most powerful human magnet) என்ற கின்னஸ் ரிகார்டை
இவருக்கு வழங்கினர்.
இது ஒருபுறமிருக்க 2011ஆம் ஆண்டு ஆறு வயதுச்
சிறுவன் ஒருவன் தன் விசேஷ காந்த ஆற்றலைக் காண்பித்து உலகினரை வியக்க வைத்தான். க்ரோஷியாவைச்
சேர்ந்த ஐவான் ஸ்டாய்ஜிகோவிக் ( Ivan Stoiljkovic) என்ற சிறுவன் ஊடகங்கள்
முன்னே எவர்சில்வர் பாத்திரங்கள், ரிமோட் கண்ட்ரோல்கள், செல் போன்கள் உள்ளிட்டவற்றைத்
தன் உடலுடன் ஒட்டிக் காண்பித்தான். அவை அப்படியே காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்புத்
துகள் போல அவனுடன் ஒட்டிக் கொண்டன. ‘மாக்னெடிக் பாய்’ – காந்தச் சிறுவன் என அவனை ஊடகங்கள்
புகழ்ந்தன.
மனிதனுக்கு காந்த
ஆற்றல் கிடையாது என்பது பகுத்தறிவாளர் ஜேம்ஸ் ராண்டியின் கொள்கை. ஒரு காம்பஸை காந்தப்
புலம் உடையதாகச் சொல்லும் ஒரு மனித உடலுக்கு அருகில் கொண்டு சென்றால் அதன் முள் அங்கும்
இங்கும் எல்லாத் திசைகளிலும் ஊசலாடும். ஆனால்
இப்படி ஆற்றல் உள்ளதாகக் கூறும் எவருக்கும் இப்படி ஆற்றல் உள்ளதை காம்பஸ் நிரூபிக்கவில்லையே
என்கிறார் அவர்.
ஆனால் கண்ணெதிரே நடக்கும் சம்பவங்கள் பொய்யா என்ன என்று அவரைக்
கிண்டல் செய்கின்றனர் பார்வையாளர்கள்.
பிம் பார்டிகிள் (PYM PARTICLE) என்ற ஒரு புது துகளை
விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளதால், ஒருவேளை இப்படிப்பட்டவர்கள் மீது அந்த விசேஷ துகள்
இருக்குமோ என்று ஒரு விஞ்ஞானி கூறுகிறார்.
ஆக காந்த மனிதர்கள் அறிவியல் கொள்கைக்கு அப்பாற்பட்டு நிஜத்தில் உலா வருவதென்னவோ உண்மை தான்; அவர்களை கின்னஸ் தனது சாதனையாளர் பட்டியலில் சேர்ப்பதும் உண்மை தான்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
மைக்ரோ கம்ப்யூட்டர் புரட்சிக்கு அடிகோலிய கணினித் துறை நிபுணரான
ஸ்டீவ் ஜாப்ஸ் (பிறப்பு : 24-2-1955 – மறைவு : 5-10-2011) ஒரு நாள் அவர் கீழ் பணியாற்றி
வரும் விஞ்ஞானிகளைச் சந்தித்தார். அவர்கள் அனைவருக்கும் ஒரே சந்தோஷம். ஏனெனில் முதல்
ஐ-பாட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு விட்டது. அதை ஸ்டீவ் பார்த்து அங்கீகரிக்க வேண்டியது
தான் பாக்கி.
மிக்க மகிழ்ச்சியுடன் அதை அவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸிடம் தர அவர்
அதை வாங்கிக் கொண்டார். அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்தார். பின்னர் அதை
நுணுகி ஆராய்ந்தார். அதற்குப் பின்னர் அதன் எடை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க
அதைக் கையால் தூக்கிப் பார்த்தார். பின்னர் அனைவரையும் நோக்கி அது சரியில்லை என்று
நிராகரித்து விட்டார். அது மிகவும் பெரிதாக இருக்கிறது என்றும் இன்னும் சிறிதாக இருந்தால்
நல்லது என்றும் தனது அபிப்ராயத்தை அவர் கூறினார்.
அங்கு குழுமியிருந்தோர் அனைவரும், எப்படி தாங்கள் மிகவும் முயன்று அதை அமைத்தோம் என்று கூறி
அதை இன்னும் சிறியதாக ஆக்க முடியவே முடியாது என்றும் விளக்கினர்.
ஸ்டீவ் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.
பின்னர் எழுந்து அந்த ஐ- பாடைக் கையில் தூக்கிக் கொண்டு பக்கத்தில்
இருந்த மீன் தொட்டி அருகே சென்றார். அதை தொபேரென்று அந்த மீன் தொட்டிக்குள் போட்டார்.
அனைவரும் திடுக்கிட்டனர்.
மீன் தொட்டியின் அடியை ஐ-பாட் தொட்டது. அதிலிருந்து நீர்க்குமிழிகள்
மேலே வரலாயின.
ஸ்டீவ் ஜாப்ஸ் கூறினார் : “ இதோ பாருங்கள், நீர்க் குமிழிகளை.
அதற்கு அர்த்தம் என்னவென்றால் அதில் நிறைய இடம் இருக்கிறதென்று.
அதை இன்னும் சிறியதாக்குங்கள்”
அனைவரும் அங்கிருந்து சென்றனர். ஐ- பாட் தனது சிறிய வடிவத்தைப்
பெற்றது.
லண்டனில்
ராயல் கட்டிடக் கலைஞர் சங்கம் புகழ்பெற்றது. 1980ஆம் ஆண்டில் அவர்கள் வெளியிடும் மாத
இதழில் தாஜ்மஹால் பற்றிய வழக்கமான கதைகளை எதிர்த்து இரண்டு கடிதங்கள்
வெளியிடப்பட்டன.ஒன்று திரு ஓக் எழுதியது; மற்றொன்று நான் எழுதிய கடிதம்.
எங்களுடைய வாதங்களை எவரும் எதிர்த்து எழுதவில்லை. ஓக், பாதுஷாநாமா தொகுதி 1, பக்கம் 403 விஷயத்தை
மேற்கோள் காட்டியிருந்தார். நான் என் கடிதத்தில் கூறியது என்ன?
ஷாஜஹான்
ஆட்சிக் காலத்துக்கு முன்னர் ஆக்ரா நகரம் எப்படி இருந்தது? அதுதான் 17ஆம்நூற்றாண்டு வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் மழுப்பிய விஷயம். ஆங்கிலேயர்களைப் போலவே
டச்சுக்காரர்களும் வியாபாரம் செய்ய நம் நாட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு ஆக்ராவில்ஒரு வணிக நிலையம் இருந்தது. 1620 முதல் 1627 வரை அவர்களுடைய வர்த்தகப்பிரதிநிதியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ
பெல்சார்ட் என்பவர் ஆவார். ஹாலந்து நாட்டிலுள்ள தனது மேலதிகாரிகளுக்கு அவர் 1626ல் ஒரு அறிக்கை தயாரித்து அனுப்பினார்.
அவரும் ஆக்ரா நகரம் அப்போது இருந்த நிலைமையை விளக்குகிறார். இது தன்னிச்சையாக ஒரே நேரத்தில் நடந்த ஒரு அதிசயம்.
அவர் சொல்கிறார்:-
இது
குறுகலான, ஆனால் நீளமான ஒரு நகரம். ஏனெனில் எல்லா
செல்வந்தர்களும்,
செல்வாக்குமிக்கவர்களும்நதிக் கரைஓரமாக பத்தரை மைல் தொலைவுக்கு
அரண்மனைகளைக் கட்ட்டியுள்ளனர். நான் முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
வடக்கிலிருந்து
துவங்கினால் பஹதூர் கானின் அரணமனை இருக்கிறது. பின்னர் போஜ……….பிறகு
செங்கோட்டை இருக்கிறது. (இதை பெலசார்ட் வருணிக்கிறார்).
அதையும் தாண்டி பெரிய மார்க்கெட் (நகாஸ்)
உளது. அதையும் தண்டி பிரபுக்கள் அரண்மனைகள்- மீர்ஜா அப்துல்லா, ஆகாஅநவுர், மஹபத் கான், காலஞ்சென்ற ராஜா மான்சிங்கின் அரண்மனை, மதோ சிங் அரண்மனை”
இந்த
அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1925ம் ஆண்டு முதல் கிடைக்கிறது. ஆயினும் ஒரு வரலாற்று ஆசிரியரும்
குறிப்பிடவில்லை. ஏன்? காரணம்மிகவும் தெரிந்ததே.
நதிக்கரையில்
பத்தரை மைல் நீளப் பிரதேசம் முழுதும் அரண்மனைகள் இருப்பதாக 1626ல் பெலசார்ட் கூறியுள்ளார். ராஜாமன்சிங்கின் அரண்மனை, கடைசி அரண்மனைக்கு ஒரு இடம் முன்னதாக
இருந்தது. மனைவியை அடக்கம் செய்வதற்காக ஷாஜஹான் இதை எடுத்துக்கொண்டதாக பாதுஷா நாமா சொல்கிறது. ஆகையால் நாம் தாஜ்மஹால் என்று
எதைச் சொல்கிறோமோ அது ராஜா மான்சிங்கின் அரண்மனையே.இந்த உண்மையை வரலாற்று ஆசிரியர்கள்
நம்மிடமிருந்து மறைத்து வைத்திருந்தனர்.
என்னுடைய
முயற்சிகளுக்கு ஒரு பலன் கிடைத்தது; 1982ம் ஆண்டில் தொல்பொருட் துறை ‘தாஜ் மியூஸியம்’ என்று ஒரு சிறு புத்தகம் வெளியிட்டது.
அதன் ஆசிரியர்கள் வழக்கமாகச் சொல்லப்படும் கதைகளை எல்லாம் சொல்லிவிட்டு மும்தாஜ்,
பர்ஹான்பூரில் இறந்தார் அவருடைய சடலம் அங்கே அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு
ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்த சடலத்தைத் தோண்டி எடுத்து சவப்பெட்டியை
ஆக்ராவுக்கு அனுப்பினார். அதுவரைக்கும் அந்த இடத்தில் ராஜா மான்சிங்கின் அரண்மனை
இருந்தது” … இதை எழுதிய ஆசிரியர்கள் ஜியாவுதீன் அஹமது தேசாய், கவுல். இப்பொழுது அந்த அரண்மனை
தாஜ்மஹால் என்று அழைக்கப்படுகிறது இதைவிட எப்படி எளிதாகச் சொல்ல முடியும்? ஒரு சடலத்தை அரண்மனையில் புதைக்க
கட்டிடப் பணிகள் எதுவும் தேவையா?
2.சிறு
நீரகக் கல் நோயைத் தீர்க்கும் பிரம்ம தீர்த்தம்
3.தேவார
வைப்புத் தலம்
4.வெட்டுப்பட்ட
சிவலிங்கம்
5.ராஜ
ராஜ சோழனால் கட்டப்பட்ட கோவில்
6.நிறைய
கல்வெட்டுகள்
7.வயல்
நடுவில், தொலை தூரத்தில் கோவிலமைந்த அதிசயம்
8.நாங்கள்
சென்ற தேதி – 25-3-2019
9.எங்கே
உள்ளது?
இந்த
சிவன் கோவில் திருச்சி மாவட்ட லால்குடி வட்டத்தில் இருக்கிறது. நாங்கள்
திருச்சியிலிருந்து காரில் சென்றோம். பாடலூரிலிருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவு.
சிவனின்
பெயர்- சுத்த ரத்தினேஸ்வரர்
இறைவியின்
பெயர்- அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம்
– பிரம்ம தீர்த்தம்
10. கோவில்
பிரகார மேல் சுவற்றில் நவக் கிரகங்கள், 27 நட்சத்திரங்கள்.
11. கோவிலில் ஒட்டியுள்ள விளம்பரப் பலகையில் கோவிலின் சிறப்புகள் வரையப்பட்டுள்ளன. (இணைப்பில் விவரம் காண்க)
பென்ஸில்வேனியா பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை
மேற்கொண்டது – எப்படி மூட நம்பிக்கைகள் எனப்படும் சூப்பர்ஸ்டிஷன் பரவுகிறது என்பது
பற்றி.
ஒரு நம்பிக்கையும் இல்லாதவரும் கூட, ஒரு அமைப்பில்
இன்னொருவர் செய்வதைப் பார்த்து அதையே தானும் செய்கிறார். பலரும் இதை வழக்கமாகச்
செய்யும் போது அது ஒரு அர்த்தமில்லாத – மூட நம்பிக்கைப் பழக்கமாக மாறுகிறது;
பரவுகிறது.
திராவிடத் தம்பிகள் கோவிலில் மணி அடிப்பது,
தெய்வச் சிலைகளுக்கு மாலைகளை அணிவிப்பது, கோபுரத்தை நோக்கிக் கும்பிடுவது,
அர்ச்ச்னை செய்வது உள்ளிட்ட ஏராளமான வழிபாட்டு வழக்கங்களைக் கிண்டல் செய்வது
வழக்கம்.
ஆனால் என்ன ஆயிற்று?
தலைவர் சமாதிக்குச் செல்லும் போது செருப்பைக்
கழட்டி விட்டுத் தான் உள்ளே செல்ல வேண்டும்.
ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம் சமாதியில்.
கும்பிடலாம் – கையெடுத்து.
அந்தச் சிலைகளைப் பார்த்து ஆனந்திக்கலாம்; கண்ணீர்
வடிக்கலாம்.
அதை மதிப்புடன் நோக்கலாம்; வழிபடலாம்.
அதற்கு ஒருவர் அவமரிதையாக ஏதேனும் செய்து விட்டால்
அவ்வளவு தான் – ஊரே களேபரம் அடையும்.
அட, நீங்கள் தானே சொன்னீர்கள், சிலையை இழித்துப்
பேசினால் சிலை என்ன பேசவா செய்யும் என்று.
ஊது பத்தி எதற்கு, செருப்பை ஏன் அவிழ்க்க வேண்டும்
என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?
ஆனால் பகுத்தறிவு மழுங்கி, புதிய மூட நம்பிக்கைகளை மேற்கொண்டு விட்டீர்களே!
இரண்டு வண்ணக் கொடி எதற்கு, ஒரு சின்னம் தான்
எதற்கு? அதற்கு வணக்கம் தான் ஏன், அதை மதிப்பது தான் எதற்கு?
ஏன் பேச்சில் கூட அனைவரும் ஒரே பாட்டர்னைப்
பின்பற்றுவது தான் ஏன்? “வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு” ஊரிலுள்ள அனைத்துப் பெயர்களையும் விளித்து
அழைத்து … அடடா, எத்தனை மணித்துளிகள் வேஸ்ட்!
மூட நம்பிக்கைகளை ஒழிக்கப் பிறந்த பகுத்தறிவுத்
தம்பிகள் வளர்க்கும் புதிய மூட நம்பிக்கைகள்!
இது முந்தையதை விட மோசமானது.
அங்கு மனிதனைத் துதி பாடவில்லை.
இங்கு “செத்து மாயும்” மனிதனைத் தெய்வமாக்கி விடுகிறார்கள்!
அடடா, என்ன ஒரு பகுத்தறிவு!
இதைத் தான் பென்ஸில்வேனியா ஆய்வு நன்கு ஆராய்ந்து
தனது முடிவைச் சொல்கிறது.
“ஒருவனை இன்னொருவன் பார்க்கிறான்; அதன் படி
நடக்கிறான்; அது நாளடைவில் ஒரு பழக்கமாக நம்பிக்கையாக மாறுகிறது.”
ஆனால் ஹிந்து மதத்தில் ஏற்பட்டுள்ள பழக்க
வழக்கங்கள் உள்ளுணர்வினால் உந்தப்பட்டு மந்திரங்களைக் கண்ட மஹரிஷிகளால்
ஏற்படுத்தப்பட்டவை.
இவை பற்றிய ஆய்விற்கு அறிவியல் வரவில்லை; வந்தால்
ஒரு வேளை, வியத்தகும் விஷயங்கள் வெளியாகலாம்.
அதனால் தான் விவேகானந்தர் கூறினார் “நமது
மஹரிஷிகள் காலத்தினால் மிகவும் முற்பட்டவர்கள்; அவர்களை சரியாக் அறிந்து கொள்ள
வெகு காலம் ஆகும்” என்று.
அறிவியல் வளர வளர ஹிந்து மதத்தின் நம்பிக்கைகள்,
பழக்க வழக்கங்கள் வியப்பை ஊட்டுகின்றன. அதை அறிவியல் விளக்கும் போது
பிரமிக்கிறோம்.
பகுத்தறிவுகளின் புதிய மூட நம்பிக்கைகள் காலத்தால்
அழிந்து படுபவை. ஆனால் மாறாத நியதிகள் உடைய ஹிந்து பாரம்பரியப் பழக்கங்கள்
உள்ளர்த்தம் கொண்டவை, நீடித்து நிலைப்பவை! இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!
இவற்றைப் போற்றி அதன் படி நடப்பது நமக்குச்
சிறப்பை அளிக்கும்!
லண்டனுக்கு அருகில் வசிக்கும்
திரு.காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை
ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு நண்பர் மூலம் என்னை
அணுகினார். நான் மொழி பெயர்த்த கட்டுரையை எனது பிளாக்கில் வெளியிட அனுமதி தந்தார்.
இதோ நீண்ட கட்டுரை: part- 2
தாஜ்
மஹால்- உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது- part 2
“கல்லறை கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் முன்னர் ராஜா மான்சிங்கின் அரண்மனையாக இருந்தது. இப்பொழுது அவருடைய பேரன் ராஜா ஜெய்சிங்கின் வசம் உள்ளது”. பல ஆசிரியர்கள் லதீப் புஸ்தகத்தை மேற்கோள் காட்டிய போதும், இந்த விஷயத்தை மட்டும் காட்டவில்லை. ஆக, இந்த உண்மையையும் வரலாற்று ஆசிரியர்கள் நம்மிடமிருந்து மறைத்து வைத்தனர்.
ஆக்ரா
மாவட்ட கெஜட்டை 1905ம் ஆண்டில் எச்.ஆர். நெவில் ஐ.சி.எஸ்
தொகுத்து வெளியிட்டார். அதில் ராஜா மான்சிங் அரண்மனை என்பதை, ராஜாமான்சிங்கின் ஒரு துண்டு நிலம்
என்று மாற்றினார்.
இதைத்
தொடர்ந்து வரலாறு எழுதிய அனைவரும் ராஜா ஜெய்சிங்கின் வசமிருந்த ராஜா மான்சிங்கின்
ஒரு துண்டு நிலத்தை ஷாஜஹான் விலைக்கு வாங்கினார் என்று எழுதத் துவங்கினர். இந்த
ஏமாற்று வித்தை நூற்றாண்டுக் காலமாக நடந்து வருகிறது.
ஒரு
ஆங்கில அதிகாரி ஏன் இப்படிப்பட்ட விஷமச் செயலைச் செய்வதில் ஆர்வம் காட்டினார்
என்று சிலர் வினவலாம்.
இதோ
அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போருக்குத் தெளிவான பதில்
கிடைத்துவிடும்
1901
வைஸ்ராய்
கர்சன் பிரபு பஞ்சாபின் சில பகுதிகளைப் பிரித்து
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடமேற்கு எல்லை மாகாணத்தை உருவாக்கினார்.
இந்துக்கள் அங்கே சிறுபான்மை மக்கள் ஆயினர். அவர்களுடைய துரதிருஷ்ட காலத்தின்
ஆரம்பம் இது.
1903
வங்காளத்தைப்
பிரித்து முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு வங்காளத்தை அமைக்கப் போவதாக
கர்சன் பிரபு அறிவித்தார்.
1905
கர்சன்
ராஜினாமா செய்தார். ஆயினும் அவர் திட்டப்படிவங்காளத்தை இரண்டாகப் பிரித்தார்.
1906
ஆகாகான் தலைமையிலொரு முஸ்லீம் குழு புதிய வைஸ்ராய் மின்டோ
பிரபுவைச் சந்தித்தது. எந்த ஒரு அரசியல் முடிவிலும் தங்களையும் கவனத்திற்கொண்டு
தங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள்கோரினர். இதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே
தூண்டிவிட்டனர்.
1906 டிசம்பர்- டாக்காவில் முஸ்லீம் லீக் துவக்கப்பட்டது.
1909
மோர்லி-
மின்டோ சீர்திருத்தங்களின்படி முஸ்லீம்களுக்கு தனித் தொகுதிகள் அளிக்கப்படன.
மற்றொரு விஷயத்தையும் நினைவிற் கொள்ள வேண்டும். 1873-1914 கால கட்டத்தில் ஆங்கில அதிகாரிகள் சிலர் பாபர் நாமா, ஹுமாயுன்நாமா, அக்பர் நாமா, அயினி அக்பரி, தாஜுக்-இ- ஜஹாங்கிரி ஆகியவற்றை பாரஸீக மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். ஆனால் பாதுஷா நாமாவை மட்டும் தொடவில்லை.
மேற்கூறிய
தகவல்களைப் பின்னணியில் வைத்துக்கொண்டு பார்த்தோமானால் 1905ம் ஆண்டில் ஆக்ரா கஜட்டைத் தொகுத்த
நெவில் ஏன் விஷமம் செய்தார் என்பது புரியும்.
ராஜா
மான்சிங்கிற்குச் சொந்தமான துண்டு நிலத்தை ஷாஜஹான் விலைக்கு வாங்கியதாக ஸர்
ஜதுநாத் சர்கார் , மௌல்வி அஹமது சொல்லுவதும் வியப்பை அளிக்கிறது.ஸர் ஜதுநாத் சர்கார் அவுரங்கசீப் வாழ்வில் நடந்த
சம்பவங்கள் என்ற நூலை இயற்றியவர்;மௌல்வி அஹமது (தாஜின் வரலாறு, 1905) என்ற நூலை இயற்றியவர்; அவர்கள் பாதுஷா நாமாவிலிருந்து மேற்கோளும் காட்டியுள்ளனர். முதல் தொகுதி,பக்கம் 40 3 என்று. விந்தையிலும் விந்தை; அந்தப் பக்கத்தில் என்ன எழுதி இருக்கிறது எவரும் பார்க்கவே இல்லை.
டில்லியைச்
சேர்ந்த பி.என்.ஓக் என்பவருக்கு 1964ஆம் ஆண்டில் தாஜ்மஹால் பற்றி சந்தேகம் எழுந்தது. அது ஒரு காலத்தில்
அரண்மனையாக இருந்தது என்ற வாதத்தை முன்வைத்தார். இது விஷயமாக அவர் பல வரலாற்று
ஆசிரியர்களுடன் மோத நேரிட்டது. அவர்களில் ஒருவர்
காஷ்மீரி பண்டிட். அவர்கள் இருவரும் அரசாங்க ஆவணக் காப்பகத்துக்குச் சென்றார்கள்.
அங்குள்ள நூலகர் சொன்னபடி அவர் பாதுஷா நாமாவைப் படிக்கத் துவங்கி பக்கம் 403க்கு வந்தார். அதில் ஒரு வரி
‘வா பேஷ் அசீன் மஞ்சில் இ ராஜா மான்சிங் பூத் வடரி வக்த் பா ராஜா
ஜெய்சிங்’ என்று இருந்தது. ஷாஜஹான் , மனைவியை அடக்கம் செய்ய ராஜா
மான்சிங்கின் அரண்மனையை எடுத்துக்கொண்டார் என்பதை பண்டிட் உடனே ஒப்புக்கொண்டார்.
ஓக்
அவர்களை எதிர்த்த அந்த நேர்மையான ஆளுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.அவர்
பக்கம் 402, 403 ஆகியவற்றிலுள்ள விஷயங்களை வரிக்கு வரி மொழி
பெயர்த்தார். அதைத் தொடர்ந்து ‘தாஜ்மஹால் என்பது இந்து அரண்மனையே‘ என்று பி.என்.ஓக் 1968ல் புஸ்தகம் வெளியிட்டார். ஆனால்
பி.என். ஓக் அது தனது மொழிபெயர்ப்பு இல்லை என்பதை சொல்லவேயில்லை. ஒரு பாரஸீக மொழி
அறிஞர் அவருக்கு மொழி பெயர்த்தார். அது அவருடைய எதிரிகளுக்கு வரப்பிரசாதமாகப்
போயிற்று. அவர்கள் அனைவரும் ஓக் அவர்களின் மொழிபெயர்ப்பு தவறு என்று வாதிட்டனர்.
ஓக்
எழுதிய புஸ்தகம் 1977ல் எனக்கு லண்டனில் கிடைத்தது. அதை
ஓரண்டுக்காலம் படித்தேன்.முதலில் வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதாக வந்த மேற்கோள்களை
மட்டும் தேடிப் படித்தேன். நான் இங்கிலாந்தில் வசித்ததால் எனக்கு இது எளிதாகக்
கிடைத்தது. ஓக் அவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. எல்லா வரலாற்று ஆசிரியர்களும்
தாஜ்மஹால் ஒரு இந்து அரண்மனையே என்றும் அது ஷாஜஹானால் கட்டப்படவில்லை என்றுமே
சொல்லியிருக்கிறார்கள்.
1986ம் ஆண்டில், நான் ஒரு சின்ன புஸ்தகம்வெளியிட்டேன்; அதன் தலைப்பு “தாஜ்மஹால்-பெரும்
ஏமாற்று வித்தை பற்றிய ஒரு சின்ன ஆராய்ச்சி”. 1981ம் ஆண்டில் பல மேற்கோள்களைப் படித்த
போதே எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதாவது பிரிட்டிஷ்காரர்களுக்கு இது நன்றாகவே
தெரியும். ஆனால் வேண்டுமென்றே உண்மையை மறைத்தனர் என்று. இதைத் தொடர்ந்து என்
ஆராய்ச்சியை தானேநகர இதிஹாஸ் பத்ரிகா என்னும் காலாண்டு இதழ் பத்து பகுதிகளில்
வெளியிட்டது. நான் 1784 முதல்1984 முடியவுள்ள200
ஆண்டுக்காலத்தில் தாஜ்மஹால் பற்றிஎன்ன தகவல்கள் உண்டோ அவைகளைத் தொகுத்து எப்படி
பிரிட்டிஷார் அவற்றை மறைத்தனர் அல்லது திரித்தனர் என்று காட்டினேன். என்னுடைய
ஆராய்ச்சி தொடர்ந்தது. அதன் விளைவாக 1996ம் ஆண்டில் இன்னொரு புஸ்தகம் வெளியிட்டேன்; அதன் பெயர் ” தாஜ்மஹாலும்
பிரிட்டிஷாரின் பெரிய சதியும்.”
லண்டனுக்கு அருகில் வசிக்கும்
திரு.காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை
ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு நண்பர் மூலம் என்னை
அணுகினார். நான் மொழி பெயர்த்த கட்டுரையை எனது பிளாக்கில் வெளியிட அனுமதி தந்தார்.
இதோ நீண்ட கட்டுரை:
தாஜ் மஹால்- உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது
தாஜ்
மஹால் பற்றிப்பல கதைகள் உண்டு.ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு
வாக்கியத்தைக் காணலாம்- ‘இதைக் கட்டுவதில் 22 ஆண்டுகளுக்கு 20,000 பேர் ஈடுபட்டனர்’. இது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஒரு
சின்னக் கேள்வி. யாரிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது?
பிரான்ஸ்
நாட்டைச் சேர்ந்த ரத்தின வியாபாரி ஜே பி டவர்னியர் எழுதிய இந்தியப்பயணம் என்ற நூலில் இருந்துதான் இந்த
எண்ணிக்கை வந்தது. அவர் சிவாஜியின் காலத்தில் இந்தியாவுக்குஆறு முறை—1638 முதல் 1668 வரை — துணிகர பயணங்களை மேற்கொண்டார்..
டாவர்னியர் சொல்கிறார்- “இந்தக் கட்டிடப்பணியின் துவக்கத்தையும் நிறைவையும்
நான் கண்டேன். இதில் 22 ஆண்டுகளுக்கு
20000 ஊழியர்கள் இடைவிடாது
பணியாற்றினர்” என்று.
டவர்னியரின்
புஸ்தகம் முதலில் பிரெஞ்சு மொழியில் 1675ல் வெளியானது.அந்தக் காலத்தில் ஒரு தனி மனிதன் இவ்வளவு நீண்ட பயணம்
செய்வது ஒரு துணிகரச் செயலாகக் கருதப்பட்டது. பயணத்தில் பல கஷ்டங்களைச் சந்திக்க
வேண்டியிருக்கும்;
பலமொழி, கலாசாரம் உடைய ஆட்களுடன் பழக வேண்டியிருக்கும்; அவர்களுடைய நடை உடை பாவனைகளுக்கு ஏற்ப
மாறவேண்டியிருக்கும்; பின்னர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்; இதுவே நம்பமுடியாத சாதனை. அத்தோடு
டவர்னியரோ வைரம் முதலான ரத்தினக் கல்
வியாபாரம் செய்பவர்.ஒரு முறை அல்ல;இரு முறை அல்ல; டவர்னியர் இப்படி ஆறு முறை பயணம்
செய்தார். ஆகையால் அக்காலத்தில் அவருடைய புஸ்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1677 முதல் 1811க்குள் அவருடைய புத்தகம்
ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது .ஒன்பது ஆங்கிலப் பதிப்புகள்
வெளியாகின.அதே காலத்தில் 22 பிரெஞ்சு
மொழிப் பதிப்புகள் வெளியாகின.
1889ம் ஆண்டு டாக்டர் பால் என்பவர்
பிரெஞ்சு புத்தகத்தை மொழி பெயர்த்து முந்திய தகவல்களைத் திருத்தினார். அவர் நிறைய
அடிக்குறிப்புகளையும் சேர்த்து கூடுதல் தகவல் சேர்த்தார். டவர்னியரின் பயணத்தை
நன்கு ஆராய்ந்து அவரது ஆறு பயணங்களின் விவரங்களையும் சேர்த்தார்.
அதிலிருந்து டவர்னியர் இரண்டு முறை மட்டுமே ஆக்ராவுக்கு வந்ததது தெரிகிறது 1640-41 குளிர் காலத்திலும் 1665ம் ஆண்டிலும். இது இன்னொரு சுவையான
வினாவை எழுப்பும்.
ஷாஜஹானின்
மனைவி 1631ம் ஆண்டில் இறந்ததாகவும் உடனே ஷாஜஹான்
தாஜ் மஹல் கட்டிட வேலையைத் துவங்கியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அது
சரியென்றால் டவர்னியர் தாஜ்மஹால் கட்டத் துவங்கியதைப் பார்த்திருக்க முடியாது.
ஏனெனில் அவர் அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே ஆக்ராவுக்கு வந்தார்.
அவுரங்க
சீப், அவருடைய தந்தையான ஷாஜஹானை ஆக்ராவிலுள்ள செங்கோட்டையில் 1658 முதல் சிறை வைத்து ஆட்சியைக்
கைப்பற்றினார்.அவுரங்கசீப் தாஜ்மஹாலை கட்டி முடித்தார் என்று எந்த வரலாற்று
அறிஞரும் எழுதவில்லை. அது சரியென்றால், டவர்னியர் தாஜ்மஹால் கட்டிடம் நிறைவு அடைந்ததையும் பார்த்திருக்க
முடியாது.
அப்படியானால்
20,000 தொழிலாளர்கள் இடைவிடாது பணியாற்றினர்
என்று டவர்னியர் சொல்லுவது அர்த்தமற்றது.ஏன் இந்த வரலாற்று உண்மையை 117 ஆண்டுகளாக வரலாற்று அறிஞர்கள்மறைத்து வைத்தனர் ? காரணம் மிகவும் தெளிவானதே.இந்த உண்மை, கதையின் அஸ்திவாரத்தையே ஆட்டுகிறது.
பாதுஷாநாமா
– இதுஎன்ன சொல்கிறது?
இந்துக்களுக்கு
வரலாற்று உணர்வே இல்லை என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவர். முஸ்லீம்
ஆட்சியாளர்கள் மட்டுமே வரலாற்று தகவல்களைப் பதிவு செய்ததாக விளம்புவர்.போகட்டும். நாம் ஷாஜஹான் காலத்தில் எழுதப்பட்ட
பாதுஷா நாமா பக்கம் நம் பார்வையைச் செலுத்துவோம். வங்காளத்தில் இருந்த ஆசியக்
கழகம் 1867, 1868 ஆண்டுகளில் பாதுஷா நாமாவின் பாரஸீகப்
பதிப்பை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது.ஆங்கிலமேஜர் ஒருவரின் மேற்பார்வையில் இரண்டு
மௌல்விகள் இதைச் செய்தனர். மிகவும் விந்தையான விஷயம் என்னவென்றால் தாஜ் மஹால் எப்படிக்
கட்டப்பட்டது என்று பாதுஷா நாமா சொல்லுவதை
எந்த வரலாற்று ஆசிரியனும் வெளியிடுவதில்லை. ஏன்?
எட்டாவது
நூற்றாண்டில் முகமது பின் காசிம் சிந்து நதி தீரத்தில் நடத்திய தாக்குதலிலிருந்து 19-ஆவது நூற்றாண்டில் மராட்டியர் ஆட்சி
வீழ்ச்சி அடையும் வரையான இந்தியவரலாற்றை எழுதும் மஹத்தான பணியை எலியட் மற்றும் டவ்சன் என்ற இரு ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். அதாவது1200 ஆண்டு வரலாறு. ஆனால் முஸ்லீம்கள்
எழுதிய வரலாற்றை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்கள் எழுதினர். 1867 முதல் 1877 வரை பத்து தொகுதிகளாக அவை வெளியாயின.
ஏழாவது தொகுதி ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகியோரின் ஆட்சி பற்றியது. அதில் தாஜ்மஹால்
என்றசொல்லே இல்லை.
அவர்கள்
என்னசொல்லியிருக்க வேண்டும்? நாங்கள் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில் அவரால் அதிகாரபூர்வமாக எழுதிவைக்கப்பட்ட
பாதுஷாநாமாவை ஆதாரமாகக் கொண்டு இந்த வரலாற்றை எழுதியுள்ளோம். அதில் தாஜ் மஹால்
பற்றி எதுவும் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் அப்படி எதுவும்
செப்பவில்லை. வரலாற்று அறினஞர்கள் இதையும் கடந்த 130 ஆண்டுகளாகச் நம்மிடம் சொல்லவில்லை.
1896ம் ஆண்டு ஆக்ராவின் விரிவான வரலாறு என்ற நூலை கான் பகாதூர் சையது முகமது லதீப் எழுதினார்.அவர் பாதுஷாநாமாவை பல முறை மேற்கோள் காட்டினார். ஆனால் பக்கங்களின் எண்களைக் குறிப்பிடவில்லை. பக்கம் 105-ல் அவர் சொல்கிறார்,………………………..
Whistler completed a portrait for a wealthy and highly placed
client, who was dissatisfied with the finished work.
“I really think Mr Whistler, he explained, that it is a bad
work of art.”
Whistler shrugged and looked coolly at the man. He said, “but
then you must admit that you are not a good work of nature.”
(James Abbott
McNeill Whistler was an American artist, active during the American Gilded Age
and based primarily in the United Kingdom. He was averse to sentimentality and
moral allusion in painting, and was a leading proponent of the credo “art
for art’s sake”. Wikipedia
Whistler once admired a picture Rossetti was painting and
sometime afterward asked him how it was going.
“All right, said Rossetti, I have ordered a stunning frame
for it” .
Later Whistler saw it framed, but not at all advanced in
execution. “You have done nothing to it since I saw it, have you?”
“No,oo,said Rossetti, but I have written a stunning sonnet on
the subject”.
“Then, replied Whistler, take out the picture and frame the
sonnet”.
(Gabriel Charles
Dante Rossetti (12 May
1828 – 9 April 1882), generally known as Dante Gabriel Rossetti(/rəˈzɛti/),[1] was a British
poet, illustrator, painter and translator, and a member of the Rossetti family).
Xxx
Whistler and Turner Rivalry
Whistler detested Turner. Unwittingly a lady
approached him one day requesting Mr Whistler, my husband has discovered in an
auction shop what he thinks are two genuine Turners. Would you be kind enough
to come and tell us whether they are genuine Turners or imitation Turners.
Madam, said Whistler, that is a fine distinction.
(Joseph Mallord William TurnerRA (23
April 1775 – 19 December 1851), known as J. M. W. Turner and
contemporarily as William Turner,[a] was an English Romantic painter, printmaker and watercolourist.
He is known for his expressive colourisations, imaginative landscapes and
turbulent, often violent marine paintings.)
Xxx
Bury your
Paintings!
A painter was advised to turn a physician:
For now all his faults were seen; then they would be buried.
Xxx
I like Ladies Room!
Helen Westley, the actress, while playing in a Theatre Guild Show in Chicago, decided to see the sight s of the city. Some days later, a culture bitten colleague enthusiastically raised the subject of her visit to the galleries of the Art Institute. The room of contemporary American painters is superb! She chanted.
“I prefer the Rembrandt room”, commented Frank Reicher. Then everyone turned questioningly to the noted character actress.
“And which room in the museum do you prefer, Helen?” “I, remarked, the incorrigible Miss Westley without blinking an eyelash, “Why I prefer the ladies room.”
(Helen Westley (born Henrietta Remsen Meserole Manney; March 28, 1875 – December 12, 1942) was an American character actress). Xxx Have you seen an Angel? At a showing of the work of Rockwell Kent, a woman, who had been gazing at one of his celebrated angels, approached him and said, No angel ever looked like that! Have you ever seen an angel, Madam? asked Kent.