MORE TAMIL WISDOM — ‘NAL VAZI’ WRITTEN BY AVVAIYAR- 2 (Post No.5710)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 28 November 2018


GMT Time uploaded in London 7-32 am

Post No. 5710


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Nal vazi  (Good Path) –Part Two (Concluding Part)

21.The red lotus seated goddess will at all times favour the guileless with water,shelter, sheaves of rice corn covering the threshing floor,good name,fame, great prosperity, possession of villages, increase of wealth and long life .

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.
21

xxx

 

22.Listen, he ruined and miserable men, who get money by hard labour and keep it buried: after your soul is gone from its lodging here, who, he sinners, will enjoy that money?

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
22
xxxx

23.The habitation s of those who, whilst on earth, inclined to partiality in judgement, will be occupied by fiends; white Erukku (milky shrubs) will grow and blossom therein. Pathalamuli ( Cyprus grass) will grow there and spread about. Muthevi, the goddess of ill luck will go and dwell there; and serpent s will live in them.

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.
23

xxxx

24.The forehead without sacred ash es is void of beauty; the food without ghee is tasteless; the country without rivers is a desert; the body of the person who has no brothers or sisters is as if unadorned with jewels; and the house without a virtuous wife is destitute of beauty.

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை.
24

xxxx

25.He who expends more than his income will be liable to lose his honour, to act foolishly, to appear a thief in the eyes of all men and in all places wherever he goes, to become so wicked as to continue in that state through the seven kinds of birth, and to be disregarded even by his beloved wife. Investigate its truth.

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
25

xxxxx

26.Starvation destroys these ten: honour, dignity,learning, honesty, knowledge liberality, nobility, penance, application to business, and the love of women, whose tongue utters words as sweet as honey.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
26
xxxxxx

27.You wish for one thing, then you get either the same thing or something else; Sometimes you find yourself in possession of a thing unexpected, hence you see in all these things the providential care of the Supreme Being.

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.
27

xxxx

28..Man who is blind to all that befall him needs but a measure of rice for his daily food and a piece of cloth four cubits length for covering his nakedness, yet he is troubled with myriads of cares till the day of his death when his body perishes as an earthen vessel.

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.
28
xxxx

29

29.If a tree bears fruit, there are none who will cal out to the bat, and entreat him to come there to eat there of. If people are ready to be liberal, like a milch cow giving out fresh milk,all the world will be their near relative s.

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.

xxxx

30.O King! Aggreably to the decree of Brahma the lotus seated, every body here enjoy s the fruit of his actions of his former birth; who could avoid the evils caused by his enemies, though all his neighbors were to help him against them? Can you destroy the decrees of destiny?

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி .
30

xxxx

 

31.The music to which poetry is sung is better than the poetry it is adapted to, if this be not properly constructed; virtue is to be preferred to rank; incessant pain is better than deficient heroism; single life is better than a wife that fears not disgrace.

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.
31

xxxx

32.O ye that dwell on earth! Riches are like the banks and the hollows formed by a river, changeable and inconstant. Therefore, give food to the hungry, water to the thirsty; such charitable actions will tend to make the quality of the mind elevated and noble.

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.
32
xxxx

33.The language of severity will not prevail against the language of mildness; the arrow that falls on the mighty elephant and pierce s him, forces not its way through cotton; the rock that is not split by the long Iron crowbar , will yield to the root of a young tree.

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
33

xxxx

34.Though a man may be unlearned, if there only be wealth in his possession , all people will go to meet him at his approach; for him that has nothing even his wife will care not; yea even the mother that brought him forth and reared him up will care not for such a person; the words of his mouth will not be attended to.

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.
34
xxxx

35.There are some trees which bear fruits without flowering; and among mankind there are some who will understand of themselves, without telling them. As some seed will not grow though you sow it; so though you instruct a simpleton, his understanding will not manifest itself.

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே – தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.
35

xxxx

36.O thou adorned with bright bracelets! The young of crabs, the pearls of oysters , bamboo s and the fruits of plantains bring with them respectively the destruction of their mothers; so seeking familiarity with his neighbors wives brings with it the ruin of ones knowledge, wealth and learning.

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் – ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.
36

xxxx

37.Neither the Vedas nor the Shastras teach us the way to avoid the fruit of our actions performed in previous births ; even to think of it is of no use; o thou mind, do not be solicitous about it; those who are absorbed in the Deity will have no births indeed.

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி.
37

xxx

38.To be absorbed in the contemplation of the deity in the very place where you are, without any making distinction saying, ‘this is good and this is bad ‘ , ‘ I did this and he did that ‘ ‘this is not and this is ‘ is the fruit of true wisdom; then you will be absorbed in the deity and be one with him. The Sambu grass and the ligaments with which it is tied into the bundle s are of the same substance.

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
38

xxx

39.If one before his thirtieth year of age do not gain such amount of knowledge as to be able to extinguish his desire after Virtue, Riches and Pleasure— Dharma Artha Kama — and attain the state of securing Moksha, final bliss, , the knowledge which he can obtain after that age , will be merely book knowledge; Old age seeks after pleasure.

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் – செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
39

xxx

40.Know thou that the following works treat of the same subject, viz. the Divine Kural, the four vakyas containing the substance of the Four Vedas, the poem of the Three Sages, the Vedantic Sutra of Vyasa, the Tirukkovai, the Tiruvasagam and the Tirumantra of sage Tirumular

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
40

Nal Vali of Avvaiyar, Tamil Poetess concluded (40 verses)

Thanks to Project Madurai for Tamil verses.

TAGS- Nal Vazi, Avvaiyar, Tamil Poetess, Tamil Wisdom

—- Subham—-

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு கேள்விகள்! – 3 (Post No.5709)

 

Written by S Nagarajan

Date: 28 November 2018

GMT Time uploaded in London –6- 49 am
Post No. 5709

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 3

ச.நாகராஜன்

அவை கூடியது.

அனைவரும் திருவள்ளுவரைப் பார்க்க அவர் கையை அசைத்தார்- துவங்கலாம் என்று.

“ஐயனே! பெண் என்பவள் யார்? நாங்கள் எப்படி இருக்க வேண்டும் “ – இப்படி மகளிர் அமர்ந்திருந்த பக்கத்திலிருந்து ஒரு பேரிளம் பெண் கேட்டாள்.

அனைவருக்கும் ஒரு உற்சாகம் ஏற்பட, வள்ளுவரை நோக்கினர்.

வள்ளுவர் முழங்கினார் :

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)

அனைவரும் ‘ஆ’ என்று வியந்து பாராட்டினர் இந்த வரையறுப்பைக் கண்டு. கேள்வி கேட்ட அழகியை அனைவரும் பாராட்ட இன்னொரு பெண் எழுந்து கேட்டாள் :  ‘என்னையும் காத்துக் கொள்கிறேன். கணவன் உள்ளிட்ட என் குடும்பத்தினரையும் நான் பேணுகிறேன் புகழையும் என்னால் சேர்க்கிறேன். இப்படிப்பட்ட பெண்ணை எப்படி அறிஞர் பார்ப்பார்கள்?’

வள்ளுவர் மஹாராணியையும் அந்தப் பெண்ணையும் பார்த்தார்; பின்னர்

கூறினார் :

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின் (54)

அனைவரும் மஹாராணியின் கற்பின் திண்மையை முதல் நாள் பார்த்தவர்கள் ஆதலால் மிகவும் மகிழ்ந்தனர்.

மகளிர் அனைவரும் மகிழ்ந்த போது ஆண்கள் பக்கத்திலிருந்து ஒருவர் எழுந்தார்:

“ஐயனே! பெண்களிடம் அப்படி என்ன தான் உள்ளது?”

வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்:

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள (1101)

இதைக் கேட்டு ஆண்களும் பெண்களும் பரவசப்பட்டுக் கத்தினர்.

ஐம்புலன்களுக்கு இன்பம் தர வல்லவள் பெண்ணல்லவோ! அவள் இல்லாமல் உலகம் இயங்குமா? இருக்கத் தான் செய்யுமா?

மகளிர் சிலர் நாணத்துடன் தலை கவிழ பலரோ வள்ளுவரைப் பாராட்டிக் கூவினர்.

மகளிர் அணியிலிருந்து எழுந்த ஒரு அழகிய இளம் பெண் கண்ணீர் மல்கவே மஹாராணியாரும் ஏனையோரும் துணுக்குற்றனர்:

அவள் விசும்பியவாறே கூறினாள்: “ என்னைக் கைப்பிடித்தவர் இன்னொருத்தியின் வீட்டில் அல்லவா இருக்கிறார்; இது நியாயமா?” என்று கேட்டாள்.

வள்ளுவர் வருந்திய முகத்துடன் கூறினார்:

“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று” (913)

கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து ஓடி வந்து அந்த அழகியை நோக்கிக் கூறினான்” என் தலைவியே! என்னை மன்னித்து விடு! இருட்டறையில் பிணத்தைத் தழுவி அல்லவா இது வரை வாழ்ந்தேன் என்று வள்ளுவப் பிரான் கூறுகிறார்; என் அறிவுக் கண்ணைத் திறந்து விட்டார்” என்று கூறி அழ, மன்னன் அவர்கள் இருவரையும் மேடைக்கு அழைத்தான்.

மஹாராணி தன் மார்பிலிருந்த  பாண்டி நாட்டு தங்கச் சங்கிலியில் கோர்த்த  முத்தாரத்தை எடுத்தாள்; மன்னரிடம் கொடுத்தாள்.

குறிப்பறிந்த மன்னன் அதை திருந்திய தனது குடிமக்களுள் ஒருவனான அவன் கையில் தந்து தன் தலையை அசைக்க அவன் உடனடியாக அந்த அழகியின் கழுத்தில் அணிவித்து தன்னை மன்னிக்குமாறு இறைஞ்சினான்.

கூட்டத்தினர் கை தட்டி, தங்கள் தோள்களில் இருந்த உத்தரீயங்களை மேலே எறிந்து பிடித்து ஆரவாரித்தனர்.

கண் கலங்கி, ஆனந்தக் கண்ணீர் விட்ட இளம் பெண் மஹாராணியின் காலில் விழ, அந்த இருவரையும் மஹாராணி வள்ளுவரை வணங்கி ஆசிப் பெறச் சொன்னாள்.

வள்ளுவர் கைகளை உயர்த்தி ஆசிகளைத் தர, கூட்டத்தினருக்கு ஒரு பெரிய நல் கூத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது; இங்கு வந்தது நமது புண்ணியமே என்று எண்ணினர்.

இதே போல பரத்தையர் வீடு செல்பவர்கள் இனி திருந்துவர் என மகளிர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

உடனடியாக புலவர் ஒருவர் எழுந்தார்:

“ஐயனே, அந்தணர் யார்?” என்று கேட்டார்

வள்ளுவர் பளீரென்று பகர்ந்தார்:

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான்

அனைவரும் அந்தணர்களைப் பார்த்து வணங்கினர்.

இன்னொருவர் கேட்டார் : அவர்கள் அறத்தை வழுவில்லாமல் காப்பது எப்படி? அனைவருக்கும் இது பொருத்தமான கேள்வி தான் என்ற எண்ணம் எழ, இதன் இரகசியத்தை வள்ளுவர் எப்படி விளக்கப் போகிறாரோ என்று பார்த்தனர்:

வள்ளுவர் கூறினார்:

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்

பாண்டியன் பெரிதும் மகிழ்ந்தான். அனைவரும் ஆஹாகாரம் செய்தனர்.

வளையா செங்கோல் நிமிர்ந்து நிற்க அந்தணர் பிறர்க்குரியாளராக வாழ்வதை அனைவரும் போற்றினர். பாண்டியன் பெருமிதத்துடன் மக்களைப் பார்க்க மக்களும் பாண்டியனை வெற்றிப் புன்னகையுடன் பார்த்தனர்.

அந்தணர் ஒருவர் எழுந்தார்:

“ஐயனே! மற்று எவ்வுயிர்க்கும் இப்படி செந்தண்மை பூண்டு வாழ்தலால் என்ன பயன்?”

வள்ளுவர் பகர்ந்தார்:

“கொல்லான் புலானை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்”

அடடா! என்ன ஒரு  பதில்! புலாலை மறுத்தவர் அல்லவோ அந்தணர்! மன்னுயிர் எல்லாம் தொழும் என்பதில் என்ன ஒரு அர்த்தம் பொதிந்திருக்கிறது!

புலவர்கள் பேச எழுந்தனர். வள்ளுவர் கூறிய பெண்மையைப் போற்றும் கூற்றுகளையும், அந்தணர் சிறப்பையும், கொல்லாமையையும் பற்றி அவர்கள் பெரிதும் பேச கூட்டத்தினர் உன்னிப்பாகக் கேட்டனர்.

மாலை சூரிய அஸ்தமனம் ஆகவே கூட்டம் கலைய மக்கள் உற்சாகத்துடன் தமக்குள் பேசியவாறே வீடு திரும்பினர்

தொடரும்

***

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட்பாக்களின் எண்கள் : 56,54,1101,913,30,543,260

Tags–பாண்டியன் வள்ளுவர,  நூறு கேள்விகள்! – 3

 

நாய் பற்றிய பத்து தமிழ்ப் பழமொழிகள் (Post No.5708)

 

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 27 November 2018


GMT Time uploaded in London –17-55

Post No. 5708


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் நாய் பற்றிய பத்து தமிழ்ப் பழ மொழிகள்  கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் தமிழ் அறிவைச் சோதித்துப் பாருங்களேன். ஒரு மணி நேரத்துக்குள் செய்ய முடியவில்லையானால் விடையைப் பார்த்து விடுங்கள்

answers

நாய்த் தோல் செருப்பு ஆகுமா?

நாய் நன்றியுள்ள பிராணி

நாயை அடிப்பானேன் ஃஃஃஃ சுமப்பானேன்

நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?

நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?

நாய் அடிக்க குறுந்தடியா?

நாய் விற்ற காசு குலைக்குமா?

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

நாயைக் கண்டால் கல்லைக் காணும், கல்லைக் கண்டால் நாயைக் காணும்

நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?

நாய் பட்ட பாடு

Tags–நாய், பழமொழிகள்

—subham–

MORE TAMIL WISDOM- NAL VAZI BY AVVAIYAR-1 (Post No.5707)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 27 November 2018

GMT Time uploaded in London –14-55

Post No. 5707

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

I have already posted three books of  Tamil poetess Avvaiyar with Englsih translation.This is Nal Vazi- ‘Good Path’ composed by Avvaiyar in 40 verses. Part 1 contains 20 verses.

Nalvazi ( The Good Path)

Prayer to Lord Ganesh

Milk, pure honey, molasses, pulses— these four blended, I will offer you, O Pure Gem, beautifying the exalted elephant faced, give me the Triple Tamil of the ancient Academy or Tamil Sanga.

  1. நல்வழி

Tamil verses taken from Project Madurai website; thanks. English matter IS taken from two authors and edited by me.
கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

XXX

SHUN EVIL,DO GOOD

1.Virtue will accrue,sin will disappear, the past deeds are hoards to the earth born. On reflection naught; but this do men of all religions preach- Shun evil, Do good.

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
1

XXX

 

GIVERS AND NON GIVERS

2.No castes exist but two, if we are to speak of it. According to the unfailing moral system, the givers are the great in the world and the non givers are base born, the bare truth as set forth in the codes.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.

XXX

DO CHARITY, LIBERATION IS ASSURED

3.This natural body is a bag of miseries. Don’t take this false body as true. Quickly do charity. If you do charity you, you will have moksha or liberation as those freed from mortal ills ordained by fate.
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

 

XXX

GOOD KARMA

4.It is hard for anyone to do good action as conceived by him unless his past merits favour it. It will be futile like the blind man throwing his walking stick, at the mango down unless the favourable time arrives for it.

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.

XXX

WHAT IS YOURS WILL COME TO YOU

5 . The unattainable can never be attained, however hard we strive for the same. The attainable will never miss us, however kicked out they be. To sit in sorrow, ponder long by themselves, make the mind sore and die at best- is human lot.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

XXX

6.In this world it is hard to get one another’s felicity except what has been allotted. To the life spirit inhabiting this body, of what avail is crossing the billowy ocean and coming back ashore.
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.

XXX

BE LIKE WATER ON LOTUS LEAF

7.Viewed in all possible ways, this body is a vile hut, replete with vile worms and foul diseases, and the sages who know it, don’t speak about it to others, but keep themselves in the world together and apart like the beautiful lotus leaf and the water about it: they live in the world and out of it at once.

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

XXX

WEALTH FLIES AWAY

8.Though countless are ways in which efforts are made to gather riches, they will not succeed unless ordained by fate. O men of great world, hearken, what is fit to acquire is honour. Wealth is unstable (takes to itself and flies away).
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.

XXX

GREAT PEOPLE ARE LIKE WATER SPRINGS

9.Even when the flood in the river has dried away and when the solar heat scorches the feet, the world is fed with spring water. To the mendicant poor, men of good birth will not withhold their gifts nor will they willingly say no despite their own vicissitudes.

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து .

XXXX

 

GIVE  AND EAT

10.However we weep and wail year after year and roll on the earth, will the dead come back, O men of the great world? Let us not do so. That is our WAY too. Till we depart ask what have we here? So give, eat and rest in peace.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்

XXX

APPETITE IS DIFFICULT TO CONTROL

11.O my body! Oppressed with appetites! If I say omit one day’s eating you will not. If I say take food for two days, you will not. You know not my trouble even for one day. To live with you is difficult indeed.

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.

XXXX

AGRICULTURE IS THE BEST WORK

12.The tree standing on the river bank and the wealth acquired through intimacy with the king equally liable to fall. Is it not so? To plough and eat is the most excellent way of living. There is no work so noble as this. All other occupations are considered mean.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு,

 

XXX

FATE DECIDES EVERYTHING

13.Indeed in this world, those that are destined to live long, who can destroy? Or those that are destined to be destroyed, who can enable to escape? Or those that are destined to always live by begging who can divert from that course?
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்.

XXX

HONOUR IS MORE IMPORTANT

14.Living frugally is better than begging. If the matter be well considered, it is disgraceful to procure one meal by flattery. To lose one’s life is far better than to lose his honour for the sake of a livelihood.
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.

XXXX

LORD SIVA IS SUPREME

15.Those who meditate on Siva will have no suffering of any kind at any time. This is the way of over coming the decree of destiny. This is the true wisdom. None but these will ever subdue fate.

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

 

XXX

WOMEN AND CHASTITY

16.Know you that in the sea girt earth the quality of water is distinguished by the goodness of the soil. The quality of the good by liberality, quality of the eye by unvarying favour and the disposition of women, by a man not repugnant to chastity.



தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

XXXX

DON’T BLAME GOD

17.Those who are instructed by the wise not to do evil in this world, do not behave accordingngly or give alms. Hence they suffer want ; Why should they then attribute it to god, and not to their vicious actions? Will they obtain great wealth? Will an empty pot boil over?

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?

XXXX

MISERS CAUSE VIOLENCE

18.In this vast earth a niggard will not give anything to his parents, children, country men, relatives and friends, even though they prostrate themselves at his feet. But he will give to strangers who inflict pain on him.

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.

XXX

19.For procuring a measure of rice in order to appease our hunger, we take uncommon pains to offer our services, or to beg from door to order, or to take long voyage s on the ocean of clear water, or to pay homage or to rule over kingdoms, or to make verses in honour of noble people.
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.

XXX

PROSTITUTION

20.To satisfy pleasure ( not by means of a lawful wife) but by a prostitute, is like attempting to cross a river ( not by means of a boat) but by a grind stone: this way of living will destroy wealth and become the seed of poverty. It is not good for either this life or for the life to come.

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.
20
—TO BE CONTINUED

Tags, Nal vazi-1, Good path,Avvai

–subham–

சிவ பூஜைக்குரிய சிவ பூஜை (Post No.5706)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 27 November 2018


GMT Time uploaded in London –6-38 AM

Post No. 5706


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

திருமூலர் திருமந்திரத்தில் தரும் மலர் விஷயம் சுவையானது:-

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்

வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்

தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை

செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திட்டே

–திருமந்திரம், திருமூலர் எழுதியது

பொருள்-

அம்புஜம் எனப்படும் தாமரை மலர், நீலோத்பல மலர், செங்கழுநீர்ப்பூ, அழகிய கருநெய்தல்மலர், வாசனை மிக்க கமுகம் பூ (பாக்கு மரம்), மாதவி என்னும் குருக்கத்தி மலர், மந்தார மலர், வகுளம் எனப்படும் மகிழம் பூ, சுரபுன்னை, மல்லிகை, செண்பக மலர், பாதிரிப்பூ, செவ்வந்தி எனப்படும் ஜிவந்தி ஆகியன சிவ பூஜைக்கு ஏற்ற மலர்கள். இவைகளை இறைவனுக்கு அணிவித்து பூஜை செய்க.

பொதுவாக வாசனை மிக்க மலர்களையே பூஜைக்குப் பயன்படுத்துவர். இவைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசனை உண்டு. இரண்டாவதாக, நாம் வசிக்கும் இடத்தில் கிடைக்கக்கூடிய மலர்களாக இருக்க வேண்டும்.

திருமூலர் தரும் பட்டியல் ,இந்துக்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு இணைந்தது என்பதைக் காட்டுகிறது.

எனது பழைய கட்டுரைகளில் இவைகளுக்கான ஆங்கில, தாவரவியல் பெயர்களைக் கொடுத்துள்ளேன்.

லண்டனில் வசிக்கும் திருச்சி திரு எம்.என் கல்யாண சுந்தர சிவாச்சார்யார் கந்த புராணத்திலுள்ள மலர்கள் பட்டியலை அனுப்பியுள்ளார். இது பற்றி தமிழில் தனி கட்டுரை எழுதுகிறேன். கபிலரின் குறிஞ்சிப் பாட்டின் 99 மலர்ப் பட்டியலுக்கு இணையாக அமைந்துள்ளது இது.

TAGS– சிவ பூஜை, மலர்கள்,பூ

ब्रह्मोवाच ।। ।।
माहात्म्यं वद देवेश पुष्पजातिसमुद्भवम् ।।
येनयेन च पुष्पेण यत्फलं लभते नरः ।। १ ।।
।। श्रीभगवानुवाच ।। ।।
शृणु पुत्र प्रवक्ष्यामि माहात्म्यं पुष्पसंभवम्।।
येन पुष्पेण मे प्रीतिर्भवेत्सम्यङ्न संशयः ।। २ ।।
मल्लिका मालती चैव यूथिका चातिमुक्तका ।।
पाटला करवीरं च जयन्ती विजया तथा ।। ३ ।।
कुब्जकस्तबकश्चैव कर्णिकारं कुरंटकः ।।
चंपकश्चातकः कुन्दो बाणः कर्चूरमल्लिका ।। ४ ।।
अशोकस्तिलकश्चैव तथैवाऽपरयूथिकः ।।
अमी पुष्पप्रकारास्तु शस्ता मे पूजने सुत ।। ५ ।।
केतकीपत्रपुष्पं च भृंगराजस्तथैव च ।।
तुलसीपत्रपुष्पं च सद्यः प्रीतिकरं मम।। ६ ।।
पद्मान्यंबुसमुत्थानि रक्तनीलोत्पले तथा ।।
सितोत्पलं सहोमासे ममाऽत्यन्तं हि वल्लभम् ।। ७ ।।
तान्येव च प्रशस्तानि कुसुमानि च मे सुत ।।
यानि स्युर्वर्णयुक्तानि रसगन्धयुतानि च ।। ८ ।।
निर्गंधान्यपि शस्तानि कुसुमानि मतानि मे ।।
सुरभीणि तथाऽन्यानि वर्जयित्वा तु केतकीम् ।। ९ ।।
बाणं च चंपकाऽशोकं करवीरं च यूथिका ।।
पारिभद्रं पाटला च बकुलं गिरिशालिनी ।। 2.5.7.१० ।।
बिल्वपत्रं शमीपत्रं पत्रं भृंगिरजस्य च ।।
तमालामलकीपत्रं शस्तं मे पूजने सुत ।। ११ ।।
पुष्पैररण्यसंभूतैः पत्रैर्वा गिरिसंभवैः ।।
अपर्युषितनिश्छिद्रैः प्रोक्षितैर्जंतुवर्जितैः।। १२ ।।
अथारामोद्भवैर्वापि पुष्पैः संपूजयेच्च माम् ।।
पुष्पजातिविशेषेण भवेत्पुण्यं विशेषतः ।।१३।।
तपःशीलगुणोपेते पात्रे वेदस्य पारगे ।।
दश दत्त्वा सुवर्णानि यत्फलं लभते नरः ।।
तत्फलं लभते मर्त्यः सहे कुसुमदानतः ।। १४ ।।
द्रोणपुष्पे तथैकस्मिन्मह्यं च विनिवेदिते ।।
दश दत्त्वा सुवर्णानि फलं तदधिकं सुत ।। १५ ।।
पुष्पात्पुष्पांतरे भेदो यथाऽऽसीत्तन्निबोध मे ।। १६ ।।
द्रोणपुष्पसहस्रेभ्यः खादिरं तु विशिष्यते ।।
खादिरात्पुष्पसाहस्राच्छमीपुष्पं विशिष्यते ।। १७ ।।
शमीपुष्पसहस्रेभ्यो बिल्वपुष्पं विशिष्यते ।।
बिल्वपुष्पसहस्रेभ्यो बकपुष्पं विशिष्यते ।।१८।।
बकपुष्पसहस्रेभ्यो नंद्यावर्तं विशिष्यते ।।
नंद्यावर्तसहस्राद्धि करवीरं विशिष्यते ।। १९ ।।
करवीरसहस्रस्य कुसुमं श्वेतमुत्तमम् ।।
करवीरश्वेतपुष्पात्पालाशं पुष्पमुत्तमम् ।। 2.5.7.२० ।।
पालाशपुष्पसाहस्रात्कुशपुष्पं विशिष्यते ।।
कुशपुष्पसहस्राद्धि वनमाला विशिष्यते ।। २१ ।।
वनमाला सहस्राद्धि चंपकं च विशिष्यते ।।
चंपकस्य पुष्पशतादशोकं पुष्पमुत्तमम् ।। २२ ।।
अशोकपुष्पसाहस्राच्छेवन्तीपुष्पमुत्तमम् ।।
शेवन्तीपुष्पसाहस्रात्कुजकं पुष्पमुत्तमम् ।। २३ ।।
कुजपुष्पसहस्राद्धि मालतीपुष्पमुत्तमम् ।।
मालतीपुष्पसाहस्रात्सन्ध्यापुष्पं विशिष्यते ।। २४ ।।
सन्ध्या पुष्पसहस्राद्धि त्रिसंध्यापुष्पमुत्तमम् ।। २५ ।।
त्रिसंध्यारक्तसाहस्रात्त्रिसंध्याश्वेतमुत्तमम् ।।
त्रिसन्ध्याश्वेतसाहस्रात्कुन्दपुष्पं विशिष्यते ।। ।। २६ ।।
कुन्दपुष्पसहस्राद्धि जातीपुष्पं विशिष्यते ।।
सर्वासां पुष्पजातीनां जातीपुष्पमिहोत्तमम् ।। २७ ।।
जातीपुष्पसहस्रेण यच्छेन्मालां सुशोभनाम् ।।
मह्यं यो विधिवद्दद्यात्तस्य पुण्यफलं शृणु ।। २८ ।।
कल्पकोटिसहस्राणि कल्पकोटिशतानि च ।।
मत्पुरे वसते नित्यं ममतुल्य पराक्रमः ।। २९ ।।
येषां संति च पुष्पाणि प्रशस्तानि ममाऽर्चने ।।
तेषां पत्राणि शस्तानि तदभावे फलानि च ।। 2.5.7.३० ।।
एतैः पत्रैश्च पुष्पैश्च फलैश्चाऽपि तथाहि माम् ।।
अर्चन्दशसुवर्णस्य प्रत्येकं फलमाप्नुयात् ।। ३१ ।।
एताभिः पुष्पजातीभिः सहोमासेऽर्चयंति ये ।।
भक्तिं ददामि तेषां वै तुष्टः सन्नात्र संशयः ।। ३२ ।।
धनं पुत्रांस्तथा दारान्यत्किंचिद्वांछते हि सः ।।
तत्तद्ददामि देवेश पुष्पैरेभिः प्रतोषितः ।। ३३ ।।
इति श्रीस्कांदे महापुराण एकाशीतिसाहस्र्यां संहितायां द्वितीये वैष्णवखण्डे ब्रह्मविष्णुसंवादे मार्गशीर्षमाहात्म्ये जातीपुष्पश्रैष्ठ्यकथनपूर्वकं विष्णुकण्ठे तत्सहस्रपुष्पांकितमालास्थापनफलयोवर्णनंनाम सप्तमोऽध्यायः ।। ७ ।।

2000 ஆண்டுகளாக பெண்கள் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/2000-ஆண்டுகளாக-பெ…

2 Jun 2013 – 2000 ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம் (Please read my earlier post FLOWERS IN TAMIL CULTURE ) தமிழர்களுக்கும் பூக்களுக்கும் உள்ள ..

சண்பகம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/சண்பகம்/

26 Dec 2016 – பழைய சான்றோர்களின் உரைகள்தான் நமக்கு ஆதாரங்கள். இதையொட்டியே நானும் சிவ பெருமானுக்குசெண்பக மலரும் பிடிக்கும் .

சிவனுக்குரிய எட்டு பூக்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/சிவனுக்குரிய-எட்ட…

26 Dec 2016 – பழைய சான்றோர்களின் உரைகள்தான் நமக்கு ஆதாரங்கள். இதையொட்டியே நானும் சிவ பெருமானுக்குசெண்பக மலரும் பிடிக்கும் …

மன்னிக்க வேண்டுகிறேன்! மரங்களே! | Tamil …



https://tamilandvedas.com/…/மன்னிக்க-வேண்டுக…

21 Feb 2015 – பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை என்பன முதல் வகை. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ மருது, …

Trees of Wisdom | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/trees-of-wisdom/

If your shadow touches Shenpaka செண்பகம், it will bloom. Picture shows Sita under Asoka Tree. Paalai= Wrightia Tinctoria or Alstonia Scholaris; Makizam= Mimusops eEengi; Paathiri =Stereospermum Suaveblens; Mullai= Jasminium …

You’ve visited this page 2 times. Last visit: 08/04/18

மலர்கள் குறுக்கெழுத்துப் போட்டி (Post …



https://tamilandvedas.com/…/மலர்கள்-குறுக்கெழ…

12 Nov 2018 – … செம்பருத்தி, சிவந்தி, செண்பகம், குவளை, மனோரஞ்சிதம் , காசித் தும்பை, இரு வாச்சி, அந்தி மந்தாரை, குமுதம், தாழம் பூ, மரு.

seven types of women | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/seven-types-of-women/

பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால்செண்பக மரம் பூக்கும் …

பெண்களின் ஏழு வகைகள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/பெண்களின்-ஏழு-வக…

பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால்செண்பக மரம் பூக்கும் …

உதிய மரம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/உதிய-மரம்/

(தினமணி, 29-11-1977). தஞ்சை, நவ.27 (1977): தஞ்சை மாவட்டத்தில் புயல் வீசி மரங்கள் சாய்ந்தன. இவைகள் சாலைப் போக்குவரத்தைப் பாதித்ததால், …

Missing: செண்பகம் ‎| ‎Must include: ‎செண்பகம்

Trees | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/trees/

Karnikara = Pterospermum acerifolium (kanaka champaka in Kan)செண்பகம். 48.Karcura = Hedychium spicatum. 49.Karpasa = Gossypium herbaceum (hatti in Kan.) பருத்தி. champaca. (Champaka=Michelia). 50.Kalama – Gryza …

—subham—

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்! – 2 (Post No.5705)

 

Written by S Nagarajan

Date: 27 November 2018

GMT Time uploaded in London –6- 04 am
Post No. 5705

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 2

ச.நாகராஜன்

பாண்டிய மன்னன் மேடையின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலைப் பார்த்தான்; மகிழ்ந்தான்.

முதல் நாள் கூட்டம் கலைய ஆரம்பித்தவுடன் மஹாராணி குறிப்பால் மன்னனை அருகில் அழைத்தாள்.

காலையில் சபை ஆரம்பிக்கும் போது இருந்த மக்கள் எண்ணிக்கை மாலையில் எப்படி இருந்தது பார்த்தீர்களா? – ராணியின் கேள்வி மன்னனைச் சிந்திக்க வைத்தது.

பல் மடங்கு பெருகி இருந்தது. வள்ளுவரை அருகில் வந்து தரிசித்து வணக்கம் சொல்வதிலேயே பெரும்பொழுது சென்று விட்டது.

நாளை என்ன ஆகும்? கூட்டம் பெருகுமல்லவா? அவர்கள் நன்கு அமர்ந்திருக்க சரியான பந்தல், நீர் பந்தல் ஆகியவற்றை அமைக்க வேண்டாமா? – ராணியின் கேள்வியால் மகிழ்ந்த மன்னன் உடனடியாக அமைச்சரையும் தளபதியையும் அழைத்தான்.

“நாளை இன்றைய தினத்தை விட பன்மடங்காக மக்கள் திரளுவர். எத்தனை தச்சர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்! அலங்காரப் பந்தல் பெரிதாக வேண்டாமா!”

அமைச்சர் தானும் அதையே நினைத்ததாகக் கூறி ராணியின் மதியூகத்தை எண்ணி வியந்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

மயன் கூட அமைக்க முடியாத மாபெரும் பந்தல். ஆங்காங்கு தண்ணீர்ப் பந்தல்.

ராணியார் இரவு முழுவதும் பந்தல் அமைப்பை மேற்பார்வையிட்டார். ஒரு சமயம் ஒரு செம்பில் நீர் கொண்டுவரச் சொல்லி அதை மேலிருந்து ஊற்றச் சொல்லி பந்தலில் அமர்ந்தார். ஒரு சொட்டு நீர் கூட கீழே சொட்டவில்லை. ராணியாரின் கவனத்தையும் அக்கறையையும் கண்ட தச்சர்கள் இன்னும் சாந்துப் பூச்சுக் கலவையை நிதானமாகப் பூசி தண்ணீர் விழாத படியும், சூரிய ஒளி ஆங்காங்கு பிரகாசமாக ஜொலிக்கும் படியும் பந்தலை நிர்மாணித்தனர்.

மறுநாள் வள்ளுவர் வந்தார்; பந்தலைப் பார்த்தார்; புன்முறுவல் பூத்தார்.

மக்களோ பிரமித்தனர்.

மகானுக்கு ஏற்ற மரியாதை!

புலவர் குழாம் ஒரு புறமும் அரசவை உறுப்பினர் ஒரு புறமும் மகளிரும் ஆண்களும் அவரவர் இடத்திலும் அமர்ந்தனர்.

புலவர் குழாத்தில் ஒரு புலவர், வள்ளுவரை எப்படி மாட்டி விடலாம் என்ற எண்ணம் கொண்டவர், தனது சாதுரியத்தை முதலிலேயே காட்ட எண்ணினார். முதல் கேள்வியிலேயே வள்ளுவரைத்  திணற வைத்தால் அந்த வித்வத் சதஸ் என்னும் அறிவுக் கூட்டம் சீக்கிரமே முடியுமல்லவா?

பவ்யமாக வள்ளுவரை நோக்கினார்: “பெருமானே, ஆமையைப் பற்றிக் கூறி அதனால் என்ன கற்க முடியும் என்று சொல்லுங்களேன்!

கூட்டத்தினர் கொல்லென்று சிரித்தனர்.

அந்தப் புலவரின் புலனுக்கடங்கா சேஷ்டைகள் ஊரிலுள்ள அனைவருக்கும் தெரியும். இப்படி இடக்காகக் கேட்கிறாரே!

ஆமைக்கும் வள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்.

மன்னன் கூடத் திடுக்கிட்டான். பெரிய புலவர் வாய்த்துடுக்காக இப்படிக் கேட்கலாமா?

யாரும் யோசித்து முடிக்குமுன்னரே பளீரென்று வள்ளுவர் வினவினார்:

“நீவீர் எந்த ஆமையைப் பற்றிக் கேட்கிறீர்? பிறனில் விழையாமை,அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, கள்ளாமை,  வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை,  நிலையாமை,

கல்லாமை,சிற்றினஞ்சேராமை,  பொச்சாவாமை,  வெருவந்த செய்யாமை, இடுக்கணழியாமை,  அவையஞ்சாமை,  பெரியாரைப் பிழையாமை,  கள்ளுண்ணாமை,  பிரிவாற்றாமை !” கடகடவென்று வள்ளுவர் அடுக்கிக் கொண்டே போனார்.

 

மக்கள் பிரமித்தனர்!

“இவற்றில் எந்த ஆமையைப் பற்றி அறிய ஆசை?”

வள்ளுவரின் கூர்மையான கேள்வியைக் கேட்டு மக்கள் அனைவரும் ஆஹா ஆஹா என்று கூவினர். சிலரோ நாவல் நாவல் என்று கத்தினர்.

கேள்வி கேட்ட புலவர் நடுநடுங்கிப் போனார்!

இடக்கான கேள்வியைக் கேட்டதற்கு நொந்து போய் மென்று விழுங்கி, “நான்கு கால்களால் நிலத்திலும் நீரிலும் செல்லும் ஜந்து …” என்று தட்டுத் தடுமாறிக் கூறி அமர்ந்தார்.

வள்ளுவர் பளீரென்று கூறினார்:

ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

மக்கள் கரங்களைத் தட்டிப் பாராட்ட, புலவர்கள் அதற்கு விரிவுரை கூற கேள்வி கேட்டவர் வெட்கித் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவருக்கு ஏற்ற பதில்! இனியாவது ஆணவம் பிடித்து அலையாமல் கண்,காது, மூக்கு, நாக்கு, உடல்  ஆகியவற்றை அடக்கி அவர் வாழ்வாரா என மன்னன் எண்ணினான்.

அந்தப் புலவர் பிறகு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பதை மக்கள் வரும் நாட்களில் அறிந்தனர்.

அடுத்து பந்தலில் ஒரு கோடியில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு மெலிந்தவர் எழுந்தார்.

புலவர்கள் முகம் சுளித்தனர். படைவீரர்கள் துணுக்குற்றனர். அவர் மன்னனின் தேரை ஓட்டும் சாரதி.

“ஐயனே! தேரை வைத்து ஒரு கூற்றை உங்கள் வாயிலாகக் கேட்க ஆசைப்படுகிறேன்”.

‘தேரில் என்ன இருக்கிறது? இவன் எல்லாம் ஒரு ஆள்’, என்று சிறுமையாக அவரை நோக்கிப் பலரும் பார்க்க வள்ளுவர் கூர்மையாகக் கூறினார்:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

இவன் பெரியவன், இவன் சிறியவன் என்று தோற்றத்தை வைத்து எடை போடாதே, உருளும் தேருக்கு அச்சாணி அல்லவா முக்கியம், அது போல தோற்றத்தால் எளிமையாக இருப்பினும் அவர்கள் முக்கியமான விஷயத்திற்கு அச்சாணி போன்றவர்கள்!

மன்னன் எழுந்து பாண்டிய நாட்டிலேயே விரைவாகத் தேர் ஓட்ட வல்லவன் அவன் என்று கூறி அவனது பெயரும் நளனே என்று கூறி மகிழ்ச்சியுடன் அமர்ந்தான்.

அனைவரும் இந்தப் புகழுரையைக் கேட்டு மகிழ்ந்து கரங்களைத் தட்ட நளனோ வெட்கத்தால் அனைவரையும் வணங்கி அமர்ந்தார். நளன் எப்படி தேரை விரைவாக ஓட்ட வல்லவன் என்பதைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் கூறப்பட்ட நள தமயந்தி சரித்திரத்தை அனைவரும் அறிந்தவர்கல் ஆதலால் அவர்கள் பெருமையுடன் மன்னனின் தேர்ப்பாகனான நளனைப் பார்த்தார்கள்.

வள்ளுவர் தொடர்ந்தார்:

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

மன்னனையும் மந்திரியையும் அவர் பார்த்துக் கூறிய வார்த்தைகளால் இடம் அறிந்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதை அவர் கூறுகிறார் என மக்கள் புரிந்து கொண்டனர். வலிய சக்கரங்களை உடைய நெடுந்தேர் கடலில் ஓடாது. அதே போல பெரிய கப்பலாக இருந்தாலும் அது நிலத்தில் ஓடாது.

கேள்வியைக் கேட்டு வாழ்வியல் ரகசியத்தை அறியச் செய்த தேர்ப்பாகனை அனைவரும் பாராட்ட கூட்டத்தில் வறியவராக இருந்த ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! நெடுந்தொலைவிலிருந்து வந்துள்ளேன். எங்கள் ஊர்களில் மழையே பெய்யவில்லையே! என்ன செய்வது?”

என்று மெலிந்த குரலில் கேட்டார்.

அவரது கேள்வியைக் கேட்ட வள்ளுவர் மஹாராணியைப் பார்த்துக் கூறினார்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

மஹாராணி வள்ளுவர் தன்னை நோக்கிக் கூறியதைக் கேட்டவுடன் ஆசனத்திலிருந்து எழுந்தாள்.

“அடடா, இப்படி மழையின்மையால் நீங்கள் வருந்துவது எனக்குத் தெரியாதே” என்று கூவி விட்டு வானை நோக்கிக் கைகளை உயர்த்தினாள் “வருண பகவானே! என் குடி மக்களுக்கு இப்படி ஒரு இடரா? மழையைப் பொழியுங்கள். பெய்க மழை” எனக் கூவி மனமுருக வேண்டினாள்.’அடுத்த சில கணங்களில் நிகழ்ந்தது அற்புதம்.

வானம் இருண்டது. மேகம் திரண்டது. வள்ளுவர் புன்முறுவல் பூத்த முகத்துடன் வானைப் பார்க்க ஒரு துளி பூமியில் விழுந்தது.

பின்னர் வந்தது அடைமழை.

மக்கள் ‘ஹாஹா’வென்று  பத்தினி தேவி ராணியின் சொல் பலித்தது என்று மகிழ கேள்வி கேட்டவரோ ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்.

மழை நின்றது.

ராணியை அடுத்து மன்னன் எழுந்தான். தன் செங்கோலைக் கையில் ஏந்தி வானை நோக்கினான்.

“வருண தேவரே! நாடெங்கும் பெய்க மழை!” என்று கூவி வேண்டினான்.

அடுத்து இன்னொரு மழை தொடர்ந்தது.

அனைவரும் அதிசயிக்க பந்தலிலொ ஒரு சொட்டு நீர் கூட விழவில்லை. மக்கள் பந்தல் நிர்மாணிப்பை சிலாகித்துத் தமக்குள் பேசிக் கொண்டனர்.

பெரிதாகப் பெய்த மழை ஓய்ந்தது.

புலவர் கூட்டத்தின் அருகில் அமர்ந்திருந்த வேதம் ஓதும் அந்தணர்கள் உடனே எழுந்தனர். வருண ஜபத்தை ஆரம்பித்தனர். அடடா! அதிசயம் இன்னொரு மழை தொடர்ந்தது.

புலவர்கள் பெருமையுடன் உரக்க மக்களைப் பார்த்துச் சொன்னார்கள் :

வேதம் ஓதும் வேதியர்க் கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக் கோர் மழை

மாதர் கற்புடை மங்கையர்க் கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.

ஆனால் மாதம் மும்மாரி பெய்வதற்குப் பதிலாக இன்றே ஒரே தினத்தில் மும்மாரி பெய்து விட்டது! இது உலகம் காணா அதிசயம்!

அனைவரும் ஆஹா என்று கூவி மகிழ்ந்தனர்.

வள்ளுவர் அகம் மலர்ந்து முகம் மலர்ந்து அனைவரையும் ஆசிர்வதித்தார்.

அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வர மக்கள் பலவாறாக அன்று நடந்த அதிசயங்களை எண்ணிப் பேசியவாறே நடந்து சென்றனர்!

நாளை பெருங் கூட்டம் அல்லவா கூடப் போகிறது!!

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் : 126, 667, 496, 55

-தொடரும்

TAGS- பாண்டியன்,100 கேள்விகள்! – 2

***  subham ******

24 Avatars of Vishnu Word Search (Post No.5704)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –20-22

Post No. 5704


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

We have 24 incarnations of Lord Vishnu in the word search square. Just to make it easy to identify all the names, the initial letters are given in the capitals

 

S a n a k a b a s i R
H a y e r t a t t a D
a a B a l a r a m a h
y N a r a s i m h a a
a a n K a l k i m n
g y h V a n a m a V
r a s y a v r h D r a
i r i a s m a H B u n
v a r s a m a R u h t
a N K a l k i d s r
V a r a g a d a i
r a m r u K h r r
M a t s Y a g n a a a
N u h t i r P H

 

ANSWERS:-

24 AVATARS OF VISHNU

1.SanakadiMunis (Four Saints), 2.Rishab(h)a, 3.Dattatreya, 4.Dhanvantri

5.Hayagriva, 6.Balarama, 7.Narasimha, 8.Dhr(u)va, 9.Vyasa, 10.Naranarayana

11.Vamana, 12.Matsya, 13.Kalki, 14.Krishna, 15.Hamsa, 16.Parashurama

17.Hari, 18.Prithu, 19.Rama, 20.Buddha 21.Varaga

TAGS- 24 avatars, Word search

–SUBHAM–

Tamil Cross word புயல் 40 Words (Post No.5703)

 

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –12-07

Post No. 5703


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் சுமார் 40 சொற்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடிக்கச் சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முயன்று பாருங்கள்; தெரியாவிட்டால் விடைகளைக் காண்க.

1 2
3 4   5
6 7
8 9
10  11 12
13 14
15 16 17
25
18 19 20 21
22 23 24

குறுக்கே

2.சாம்பார் செய்ய எது தேவை

2.திருமணப் பெண்

2.இது இல்லாவிடில் எதையும் வாங்க முடியாது

4.கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,

6.வெற்றி

7.பிரமுகர் வருகை

8.வலிமை

9.பறவைகள் செய்வது

11.பனை மரத்தில் கிடைக்கும் பானம்

12.சப்தஸ்வரம்,

12.மக்கள்

14.கல்யாணம், வாசனை

16.பானை

15.செவ்வகத்தின் ஒரு பகுதி

17.எரிக்கும் கிரியை

18.ஒரு கேந்திரம்

19.இல்லம்

19.இல்லறத் தலைவி

21.எலியின் எதிரி

22.ஐந்து உணர்ச்சிகளிலொன்று,

23.படுக்கையில் விழு

கீழே

  1. எது வீசினால் மரங்கள் சாயும்

3.பானை, இசைக்கருவி

4.இடதின் எதிரப்புறம்

5.மரத்தை அறுக்க உதவும் கருவி

7.நகைச் சுவை காட்சி

8.குதிரை

  1. முனிவர்கள் செய்வது
  2. சூரியன்

12.அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்

13.வியாபாரம்

14.உள்ளம்

12.மக்கள்

15.பூமியின் பெயர்

16.ஆண் குரங்கு

17.அடக்கம்

19.குளம், ஏரியின் வாயில்

20 போய்…………, விட்டு………………..

21.சிவபெருமான் பட்டாளம்

24.செயல்

25.தாக்குதல்

25.கர்நாடக, தெலுங்கு ஆள், பிரம்மச்சாரி,

25.சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்

 

 

 

ANSWERS–

புயல், துவரம் பருப்பு, துட்டு, விகடம், கடம், வது, வரம், ஜயம், விஜயம், தவம், வலது, சரிகமபதநி, சலம், மனம், சனம், மணம், பூதகணம், ரம்பம், பலம்,பற, பகலவன், கலம், கடுவன், வடு, வன்,

தொடு, மடு, மனை, மனைவி, விடி படு, வினை, பரி, விற்பனை, பூனை, வடுக,  பவன், அகலம், தமனம், தகன, அவநி

 

பு ப் ரு ம் து ட் டு
ல்   ர ம்
ம் வி ம் ம்
ம்
நி ரி ம்
 வ வி ம்
ம் ற்
டு
ன் னை வி பூ னை
ன் தொ டு டு வி

1.புயல்- எது வீசினால் மரங்கள் சாயும்

2.துவரம் பருப்பு- சாம்பார் செய்ய எது தேவை

  1. வது- திருமணப் பெண்

3.துட்டு- இது இல்லாவிடில் எதியும் வாங்க முடியாது

3.கடம்- பானை, இசைக்கருவி

4.வலது- இடதின் எதிரப்புறம்

4.வரம்- கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,

5.ரம்பம்- மரத்தை அறுக்க உதவும் கருவி

6.ஜயம்- வெற்றி

7.விஜயம்- பிரமுகர் வருகை

7.விகடம்- நகைச் சுவை காட்சி

8.பரி- குதிரை

9.பலம்- வலிமை

9.பற- பறவைகள் செய்வது

10.தவம்- முனிவர்கள் செய்வது

11.பகலவன்  — சூரியன்

11.பதநி- பனை மரத்தில் கிடைக்கும் பானம்

12.சரிகமபதநி- சப்தஸ்வரம்,

12.சனம்- மக்கள்

12.சலம்- அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்

13.விற்பனை- வியாபாரம்

14.மனம்- உள்ளம்

14.மணம்- கல்யாணம், வாசனை

15.அகலம்- செவ்வகத்தின் ஒரு பகுதி

15.அவநி  – பூமியின் பெயர்

16.கலம்- பானை

16.கடுவன் — ஆண் குரங்கு

17.தமனம்- அடக்கம்

17.தகன-எரிக்கும் கிரியை

18.பவன்  — ஒரு கேந்திரம்

18.வன்  —  தாக்குதல்

19.மடு- குளம்,ஏரியின் வாயில்

19.மனை– இல்லம்

19.மனைவி- இல்லறத் தலைவி

20.விடு

20.விடு

21.பூனை- எலியின் எதிரி

21.பூதகணம்- சிவபெருமான் பட்டாளம்

22.தொடு- ஐந்து உணர்ச்சிகளிலொன்று,

23.படு- படுக்கையில் விழு

24.வினை- செயல்

25.வடு- சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்

25.வடுக- கர்நாடக,தெலுங்கு ஆள் ,பிரம்மச்சாரி, கடி- பல்லால் செய்யும் செயல்

TAGS–புயல் 40 Words , Tamil Cross word

–subham–

நாலாவது கடவுள் ஹனுமான்! கம்பன் புகழாரம் (Post No.5702)

WRITTEN by London Swaminathan



swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –7-47 am

Post No. 5702


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Written for the Radha Madhav Kalyan Mahotsav Souvenir in London released on 25-11-2018

கம்ப ராமாயணத்தில் ஹனுமானை மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கிறான் கம்பன். . ‘சொல்லின் செல்வன்’ என்ற சிறப்புப் பட்டத்தை, அடை மொழியை, ஹனுமானுக்கு ராமன் வழங்கியதைப் பலரும் அறிவர். யுத்த காண்டத்தில் ஓரிடத்தில் எதிரி கூட அனுமனைப் புகழும் ஒரு பாடலை நம் முன் வைக்கிறான் கவிச் சக்ரவர்த்தி கம்பன்.

எல்லோருக்கும் தெரிந்த கடவுள் திரிமூர்த்தி- அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்களுக்கு அடுத்தபடியாக யாராவது உளரா? அப்படியானால் அவர் யார்?

கம்பன் சொல்கிறான்:- உண்டு, அவன்தான் அனுமன்.

ஒருவரை நண்பர்கள் புகழ்ந்தால் நூற்றுக்கு 75 மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஒருவனை அவனுடைய எதிரியே புகழ்ந்தால்- நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம் அல்லவா?

ராவணன் தரப்பைச் சேர்ந்த மாலியவான் கூற்றாக கம்பன் சொல்லும் பாடல் இதோ:

 

முறைகெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின்

குறைஇலை குணங்கட்கு என்னோ கோள்  இலா  வேதம் கூறும்

இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமேதான்

அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா.

-மாயா சீதைப் படலம், யுத்த காண்டம்,

பொருள்

உலகப் படைப்பின் முறையே மாற வேண்டுமானாலும், அனுமன், தான் நினைத்ததை செய்து முடித்து விடுவான். அவனிடமுள்ள குணங்களுக்குக் குறைவில்லை. குற்றமற்ற வேதங்கள் சொல்லும் கடவுளர் மூவர்தான் என்பது ஆராயாதோரின் கருத்து ஆகும். ஒலிக்கும் வீரக் கழலை அணிந்த அனுமனோடு முதற் கடவுளர் நால்வர் ஆவர்.

இது அருமையானதொரு பாராட்டு. அனுமனின்றி ராமன் வெற்றி பெற்று இருக்க முடியாது. ஆகவே கம்பன் கூறுவது உண்மையே.

 

இதற்கு முன்னர், ராமனே அனுமனைப் புகழ்ந்த காட்சியையும் காணலாம்.:

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா (Welcome to Kishkinda) ” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராம லெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

 

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

TAGS–  நாலாவது கடவுள், ஹனுமான், கம்பன், அநுமன்

-சுபம்-

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்! (Post No.5701)

 

Written by S Nagarajan

Date: 26 November 2018

GMT Time uploaded in London –6- 08 am
Post No. 5701

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்!

ச.நாகராஜன்

பாண்டிய மன்னன் கம்பீரமாக வீற்றிருந்தான். அருகிலே அமைச்சர்களும், தளபதியும், ஒற்றர் தலைவரும் நின்றிருந்தனர்.

‘என்ன செய்தி?’ என அமைச்சரை நோக்கி மன்னன் கேட்க, அவர் ஒற்றர் தலைவரை நோக்கித் தலையை அசைத்தார்.

“ மன்னரே! நல்ல செய்தி தான்! வள்ளுவர் தனது தவத்தை முடித்துக் கொண்டு பாண்டிய நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறார்!”

ஆஹா என மன்னன் துள்ளிக் குதித்தான். அமைச்சர் புன்முறுவல் பூத்தார்.

“அமைச்சரே! தெய்வப்புலவரின் திருப்பாதங்கள் இந்த சங்கம் வளர்க்கும் மதுரையில் பதியப் போகிறதா! உடனே கிளம்புவோம்! அவரை உரிய முறைப்படி வரவேற்போம். ராணியிடம் செய்தி தெரிவியுங்கள். மகளிரும் வருவர்”- பாண்டியனின் உற்சாகமான ஆணையை ஆமோதித்த அமைச்சர் குறுகுறுவென்று பாண்டியனைப் பார்த்தார்.

பாண்டியன் : “தங்கள் பார்வையில் ஏதோ ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறதே!”

அமைச்சர் : ஆம் மன்னா! தெய்வப்புலவரின் வருகையைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களிடம் அவர் தவத்தின் பயனையும் அவர் உற்றுணர்ந்த அறிவையும் கொண்டு சேர்க்க வேண்டும். இது மன்னராகிய தங்களின் கடமையாக நான் நினைக்கிறேன்.

பாண்டியன்: அருமை! அருமை! அப்படியே செய்வோம்.  எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மக்களிடம் – ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, வாழ்வியல் மர்மங்களில் அவர்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை எழுதி அரண்மனையில் சேர்க்கச் சொல்லுங்கள்; புலவர்களை விட்டு விடாதீர்கள்; அவர்களுக்குத் தெய்வப்புலவரின் புலமையின் மீதும் சந்தேகம்; அவருக்கு நாம் காட்டும் மரியாதையின் மீதும் பொறாமை! ஆகவே அவர்கள் அறிவுத் தெளிவு பெற இதுவே சரியான சந்தர்ப்பம். வந்து சேரும் கேள்விகளில் தலையாய நூறு கேள்விகளை – அவை ரகசியங்களை விளக்கச் சொல்லும் கேள்விகளாக, என்றும் எல்லோருக்கும், அதாவது மனித குலத்திற்கே பயன்படுபவையாக இருத்தல் வேண்டும். கேள்விகளை நாமே தேர்ந்தெடுப்போம். என்ன சொல்கிறீர்கள்!

அமைச்சர்: உத்தரவு மன்னா! தங்களின் அறிவும் முடிவும் மக்களை எப்போதுமே மேம்படுத்துவதாக அல்லவா அமைகிறது!

*

மன்னரின் வரவேற்பை வள்ளுவப்பிரான் மனமுவந்து ஏற்றுக் கொண்டார். பாண்டியனை செங்கொல் தவறாது அரசாளச் செய்யும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தார்.

அம்மன் கோவில் அருகே உள்ள பூங்காவனத்தில் மக்கள் கூட்டம் – ஆயிரக் கணக்கில் திரண்டிருந்தனர்.

மகளிர் ஒரு பாலும் ஆண்கள் மறு புறமும் சீராய் அமர்ந்திருக்க பெரிய மேடையில் சிறப்பான ஆசனத்தில் வள்ளுவப் பிரான் அமர்ந்திருந்தார். அவருக்குக் கீழே ஆசனங்களில் மன்னரும், மஹாராணியும், அமைச்சரும், தளபதியும், முக்கிய அரசவை பிரமுகர்களும் அமர்ந்திருக்க மன்னருரும் ராணியும் வள்ளுவருக்குப் பாதபூஜை செய்து மகிழ்ந்தனர்; மக்கள் கரம் தட்டிப் பாராட்டி மகிழ்ந்தன்ர்; பக்தியுடன் வள்ளுவரை வணங்கினர்.

*

சபை ஆரம்பித்தது. மன்னர் வள்ளுவரை நோக்கி, “வாழ்வியல் மர்மங்களை, அரிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இங்கே பல்லாயிரக் கணக்கானோர் கூடி உள்ளனர். அவர்கள் கேள்விகளோ எண்ணற்றவை. அவற்றில் தலையாய நூறு கேள்விகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

தேர்ந்தெடுத்தவர்களிடமே அந்தக் கேள்விகளைக் கேட்கச் சொல்லி விட்டோம். ஆரம்பிக்கலாமா சபையை?

வள்ளுவர் சொற்களில் சிக்கனமானவர். அவர் வாயிலிருந்து வரும் தமிழெல்லாம் அமிர்தம். தலையை அசைத்தார்.

ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்களும் மேடையின் அருகிலே அமர்ந்திருந்து இடக்காகக்  கேட்கும் புலவர்கள் உள்ளிட்டோரும் கற்றோரும் மற்றோரும் அமர்ந்திருக்க முதல் கேள்வியே அற்புத இரகசியத்திற்கான கேள்வியாக அமைந்தது.

சாமானியர் ஒருவர் எழுந்தார்: “வள்ளுவப் பிரானே! நீடு வாழ வேண்டும் என்பதே  மக்கள் அனைவரது ஆசையும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்க்க அவர் கூறினார்:

மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்

கூட்டம் ஆரவாரித்தது. மன்னன் தன் சிரம் வாழ்த்தி மதுரைச் சொக்கரையும் அன்னை மீனாட்சியையும் நினைந்து உருகினான்.மஹாராணியோ கண்ணீர் திவலை சொட்ட பிரார்த்தித்தாள்.

அடுத்த கேள்வி புயலென வந்தது.”வள்ளுவரே! எங்கும் துன்பம்; எனக்கு எப்போதும் துன்பம்; துன்பம் நீங்க வழி என்ன?”

வள்ளுவர் கூறினார்: “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல”

ஒரு பிரமுகர் எழுந்தார் : ஐயனே! என்னிடம் இல்லாத செல்வம் இல்லை; இல்லாத ஆடை, அணி, ஆபரணங்கள், உணவு வகைகள், தோட்டங்கள், மணிகள், ரத்தினங்கள் இல்லை. ஆனால் என்னால் ஒரு பிடி உணவைக் கூட ஏற்க முடியவில்லையே! உடல் வியாதி வருத்துகிறதே! காரணம் என்ன?

வள்ளுவர் கூறினார் :

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

அருகிலிருந்த புலவர்களில் ஒருவர் கர்மவினை பற்றி விளக்கி வள்ளுவரின் சொற்களின் ஆழத்தை விரித்து எடுத்துரைத்தார்.

மக்கள், தம் தம் வினைகளே எதற்கும் காரணமாக அமைவதை வள்ளுவர் எடுத்துரைத்த பாங்கினைக் கண்டு வியந்தனர்.

இன்னொருவர் எழுந்தார் :”ஐயனே! அவர் செல்வம் இருந்தும் உண்ண வகையின்றித் தவிப்பதை எடுத்துரைத்தார். இன்றும் நாளையும் எனக்கு உதவும் உணவுக்குப் பஞ்சமில்லாத ஒரு நல்ல துய்க்கும் சேமிப்பு உபாயத்தைச் சொல்லி அருள்வீர்களாக!

வள்ளுவர் அருளினார் : அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.

புலவர்களில் ஒருவர் ஆஹா என்று கூவி வைப்புழி என்றால் பிற்காலத்தில் பலனைத் தரும் ஒரு சேமிப்பு உத்தரவாதம் என்று கூவி மகிழ்ந்தார்.

கூட்டத்தில் இருவர் ஒரே சமயத்தில் எழுந்தனர்:

“ஐயனே! இந்த உலகத்தில் வியக்கத் தகாதது ஏதாவது உண்டா?”

அதே சமயத்தில் இன்னொருவர், “ஐயனே! கூட இருந்தே குழி பறிக்கிறார்களே, அதைச் செய்யலாமா? என்றார்.

முதல்வரை நோக்கி வள்ளுவர் கூறினார்: வியவற்க எஞ்ஞான்றும் தன்னை

அடுத்தவரை நோக்கிக் கூறினார்: நயவற்க நன்றி பயவா வினை.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

வள்ளுவரின் சீரிய சொற்களுக்கு பண்டிதர்களும், புலவர்களும் பல்வேறு மேற்கொள்களைக் காட்டிப் பேசி மக்களுக்கு உத்வேகம் ஊட்டினர்.

மக்கள் மகிழ்ந்தனர்.

செய்தி நாடெங்கும் பரவ, எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் திரள் மீனாட்சி அம்மன் திருவாலயத்தை நோக்கி வர ஆரம்பித்தது.

மறுநாள் தன் முயற்சி அனைத்தையும் கொண்டு படைவீரர்களை அழைத்து அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தான் பாண்டியன்; இதை மேற்பார்வை

பார்த்தவர் மஹாராணி.

அடுத்த நாள் சபை ஆரம்பித்தது!

–      தொடரும்

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் 3,4,377,226,439,110

Tags– 100 கேள்விகள்

xxxx subham xxx