‘கடலில் கரைத்த பெருங்காயம்’ – கம்பன் கவிநயம் (Post No.5720)



WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 1 December 2018


GMT Time uploaded in London – 8-24 am

Post No. 5720


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கம்பன் தனது இராமகாதையில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான். ஒருவனுக்கு எவ்வளவோ பழமொழிகள் தெரிந்திருந்தாலும் அதைக் கையாளுமிடத்தினால்தான் அதன் மகிமை புரியும். காளிதாசன் உலகப் புகழ்பெற்றதற்கு, அவன் கையாண்ட 1200 உவமைகள் மட்டும்    காரணம் அல்ல. அதை அவன் பொருத்திக் காட்டிய இடத்தால்தான் அவனை ‘உவமைக்கோர் காளிதாசன்’ என்று உலகம் புகழ்கிறது. அதுபோலக் கம்பனும் உரிய இடத்தில், அரிய வழக்குகளைக் காட்டுவதன் மூலம் இராமாயணத்துக்கு மெருகூட்டினான்.

‘கடலில் கரைத்த பெருங்காயம் போல’ என்ற பழமொழியை நாம் அறிவோம். அதைப் பயன்படுத்துகிறான் கம்பன்.

இதோ அந்தப் பாடல்

அருங்கடல் கடந்து இவ்வூரை அள் எரி மடுத்து வெள்ளக்

கருங்கடல் கட்டி மேருக்கடந்து ஒரு மருந்து காட்டி

குரங்கு இனி உன்னோடு ஒப்பது இல் எனக் களிப்புக் கொண்டேன்

பெருங்கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமைப்பெற்றி

பொருள்

“கடத்தற்கரிய கடலைக் கடந்தேன்; இலங்கைக்கு நெருப்பு வைத்தேன்; கடலுக்கு அணை/பாலம் கட்ட உதவினேன்; மேரு மலையைக் கடந்து சென்று சஞ்சீவி மருந்தினைக் கொண்டு வந்தேன். அதைப் பார்த்து உனக்கு இணையான குரங்கு இந்த உலகில் இல்லை என்று இராமன் சொன்னான். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இப்போது நான் இராமனுக்குச் செய்யும் தொண்டு கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆயிற்றே!”

இது மாயா சீதைப் படலத்தில் (யுத்த காண்டம்) வரும் பாடல்; அதாவது இந்திரஜித், சீதையைப் போல் ஒரு மாய உருவத்தைச் செய்து, அதை அனுமன் முன்னிலையில் கொணர்ந்து வெட்டியபோது, அனுமன் புலம்பிய புலம்பல் இது.

‘கோட்டம்’– என்ற சொல்லுக்கு ‘வாசனை தரும் பொருள்’ என்று அர்த்தம். இங்கே  கடல் என்ற சொல்லுடன் வருகையில் அது பழமொழியை ஒட்டியே வந்தது.

இந்தப் பாடலிலும் இதற்கு முந்தைய ஓரிரு பாடல்களிலும் அனுமனின் சாகசச் செயல்கள் அனைத்தையும் கம்பன் பட்டியலிடுவது, அனுமன் துதி/தோத்திரம் போல அமைந்துளது.

அனுமனைச் ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவதற்குக் காரணம், அவன் ஒரு பத்திரிக்கையாளன் போல – journalist ஜர்னலிஸ்ட் போல- எழுத, பேச, சொல்ல வல்லவன். சீதை எங்கு இருக்கிறாள் என்று அறிய பல்லாயிரம் குரங்குகளை எண் திசைக்கும் ஏவிய இராமன், சீதை பற்றிய செய்திக்காக காத்திருந்தபோது, அனுமன் வந்தவுடன் சொன்ன செய்தி ‘கண்டனன் சீதையை’ என்பதாகும். அத்தைப் பாட்டி கதை சொல்லுவது போலச் சொல்லாமல், பத்திரிக்கை தலைப்பு போல ‘கண்டேன் சீதையை’ என்றான். இராமன் அவனை கட்டி அணைத்தான். இது பழைய பாடல். அதை இப்போது அனுமன் நினைவு கூறுவதன் மூலம் அந்தக் காட்சியும் அதன் முக்கியத்துவமும் மீண்டும் வருகிறது;

இதோ அந்தப் பாடல்,

வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன

செஞ்சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம் தேற

அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்றயான் அரக்கன் கொல்லத்

துஞ்சினாள் என்றும் சொல்லத்தோன்றினேன் தோற்றம் ஈதால்

பொருள்

சீதையே! சிறந்த வில்லாற்றல் கொண்ட இராமபிரான் வஞ்சிக் கொடி போன்ற உன்னை எங்கும் காணாது, தன் உயிரையே மறந்து உன்னைத் தேடியபோது, அவன் மனம் மகிழ்வுறுமாறு, ‘அழகிய சொல் உடையாளைக் கண்களால் கண்டேன்’ என்ற நல்ல செய்தியைக் கொடுத்தேன். இப்போது நானே போய் அரக்கன் தாக்கியபோது சீதை செத்துவிட்டாள் என்று சொல்லப் போகிறேனே; இதற்காகவா பிறந்தேன்.

இது சீதையின் மாயத் தோற்றத்தை இராவணன் புதல்வனான இந்திரஜித் வெட்டியபோது பாடிய பாடல்.

ஆக, அனுமனுடைய சாகசப் பட்டியலுடன், இங்கே கம்பன் கவிநயத்தையும் ரசிக்க முடிகிறது.

வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!

TAGS– இராமகாதை, கம்பன், கவிநயம், பெருங்காயம்

–சுபம்–

ஒபிஸிடி கோட் – 1 (Post No.5719)

Written by S Nagarajan

Date: 1 DECEMBER 2018


GMT Time uploaded in London –5- 39 am


Post No. 5719

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அறிவியல் துளிகள் 403 (எட்டாம் ஆண்டு முப்பத்தொன்பதாம் கட்டுரை)

ஒபிஸிடி கோட் – 1

ச.நாகராஜன்

(குறிப்பு : இந்தக் கட்டுரை சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து எழுதப்படுகிறது.இங்கு வந்து இரண்டு வாரம் ஆகி விட்டது)

அமெரிக்காவில் யாரைப் பார்த்தாலும் இப்போது உபவாசத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. நொறுக்குத் தீனிகள் கிடையாது; நினைத்தபடி சாப்பாடு கிடையாது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த உணவுக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு திடீரென ஏற்படக் காரணம் என்ன?

ஒபிஸிடி கோட்! (The Obesity Code) 2016ல் வெளியாகி இன்றைய ட்ரெண்டில் முன்னணியில் நிற்கும் புத்தகம் இது. இதை எழுதியவர் டாக்டர் ஜேஸன் பங் (Jason Fung). 

உடலின் எடை கூடி, பருமனாக இருக்கும் பெண்மணிகளும் ஆண்களும் தங்களின் உடல் பருமனைப் பற்றிக் கவலைப்படுவது நியாயமே. வெளியில் சகஜமாகப் போக முடியாது; எதையும் நினைத்தபடி உண்ண முடியாது; அதிலும் நீரிழிவு நோய்- டயபடீஸ் 2 – இருந்தாலோ அவ்வளவு தான்; ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள்! இவர்களுக்கெல்லாம் வரபிரசாதமாக இந்த டிரெண்ட் புத்தகம் அமைந்துள்ளது. பல பழைய கால பத்தாம்பசலிக் கொள்கைகளைத் தூக்கி எறிகிறது இந்தப் புத்தகம்.

இப்போதைய கொள்கையின் படி கலோரிகளை வைத்து உடல் எடையைப் பற்றிய அளவை நாம் கண்காணிக்கிறோம். 20 வயதுடைய ஒரு இளைஞனுக்கு அன்றாட தேவை 2800 கலோரிகள். 60 வயதுடைய ஒருவருக்கு அன்றாட தேவை 2496 கலோரிகள். அன்றாடம் நாம் உண்ணும் உணவை இதன் அடிப்படையில் நாம் தேர்வு செய்கிறோம்.

100 கிராம் காரட்டில் இருப்பது 35 கலோரிகள். 100 கிராம் பீன்ஸில் 117 கலோரிகளும், 118 கிராம் வாழைப்பழத்தில் 106 கலோரிகளும், 100 கிராம் தயிரில் 156 கலோரிகளும். 100 கிராம் வெந்த அரிசி சாதத்தில் 116 கலோரிகளும் உள்ளன. இப்படி கணக்கிட்டு நமது அன்றாட உணவை நாம் சாப்பிடுகிறோம் – உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க.

உள்ளே நாம் ஏற்கும் கலோரிகளைப் போல அதை அன்றாடம் செலவழிக்கவும் வேண்டும். இல்லையேல் அது கொழுப்பாக மாறி எடையை ஏற்றும். ஆக நடைப்பயிற்சி 28 நிமிடம் மேற்கொண்டால் 110 கலோரிகளையும், ஓடினால் 10 நிமிடங்களில் அதே கலோரிகளையும் இழக்கிறோம். ஆக இந்த உடல் இயக்கம் நமது அன்றாடத் தேவை ஆகிறது. இப்படி உடல் இயக்கம் மூலமாக நாம் இழக்கும் கலோரிகளால் குறையும் எடை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்கிறார் பங். ஆகவே அவரது அறிவுரை, முக்கியமாக உங்கள் உடலின் இன்சுலின் அளவைப் பாருங்கள் என்பதே! தொடர்ந்து தவறான உணவுப் பழக்கத்தின் காரணமாக உடலில் இன்சுலின் அளவு மிகவும் ஏறி விடும்.

ஆகவே ஹார்மோனல் இம்பாலன்ஸ் எனப்படும் ஹார்மோன்களின் சமச்சீரின்மை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். முக்கியமாக ஹார்மோன்களில் இன்சுலின் அளவை நாம் கண்காணித்து அதன் சமச்சீர்தன்மையை பராமரித்து வர வேண்டும். இதற்கான வழியாக, இடைவெளி விட்டு மேற்கொள்ளும் உபவாசத்தை – Intermittant Fastingஐ – மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறார் டாக்டர் பங்.

உணவை உட்கொள்ளும் போது நமது உடலில் உள்ள இன்சுலினின் அளவு ஏறுகிறது; நமது உடலில் உள்ள திசுக்களைச் சக்தி பெறச் செய்கிறது. நமக்குத் தேவையில்லாத அதிகப்படி சக்தியானது க்ளைகோஜனாக மாறி நமது உடலில் சேமித்து வைக்கப்படுகிறது.

உடனடியாகத் தேவைப்படும் அதிகப்படி சக்தி தசைகளிலும், கல்லீரலிலும் சேமிக்கப்படுகிறது.  இன்னும் கொஞ்சம் சக்தி தேவை என்ற நிலையில், க்ளைகோஜன் சக்தியைத் தருகிறது.மற்றவை கொழுப்பாக மாறுகிறது.

இந்த ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை இன்றைய நமது சூழ்நிலையின் காரணமாகவே ஏற்படுகிறது. உணவு வகைகளில் நமது விருப்பத் தேர்வுகள், பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளிலும் கேன்களிலும் அடைக்கப்படும் உணவு வகைகள், மிகுந்த அளவில் ஏற்றப்பட்ட சர்க்கரைச் சத்துக்களுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவை கட்டுப்பாடற்ற சந்தையில் கிடைக்கின்றன; அவற்றை ஆவலுடன் அவ்வப்பொழுது சாப்பிடுவதோடு நொறுக்குத் தீனியாக வேறு ஏராளமானவற்றைச் சாப்பிடுகிறோம். விளவு பருமனான உடல்; அத்துடன் டயபடீஸ்-2 போன்ற வியாதிகள்!

இத்துடன் இன்றைய வாழ்க்கை முறையிலான வேகம், பரபரப்பு, மன அழுத்தம் ஆகியவற்றோடு எந்த வித உடல் இயக்கமும் இல்லாமல் டி.வி முன்னால் உட்காரும் வாழ்க்கை முறை வேறு சேர்ந்து கொள்கிறது!

இதைப் போக்கும் வழி தான் ஒபிஸிடி கோட்! உடல் பருமனை நீற்கும் வழி முறை!

டோரொண்டோவில் இண்டென்ஸிவ் டயடரி மானேஜ்மெண்ட் ( தீவிர உணவுத்திட்ட நிர்வாகம்) என்னும் சிகிச்சை நிலையத்தை நடத்தி வரும் டாக்டர் பங் தன்னிடம் சிகிச்சைக்காக வருவோரிடம் பல்லாண்டுகளாகச் சோதித்து ஒரு புதிய வழிமுறைக் கண்டுபிடித்துள்ளார்.

உடல் பருமனை அறிவியல் ரீதியாகக் குறைக்க வேண்டும் என்பது அவரது அணுகுமுறை.

இதைத் தான் ஒபிஸிடி கோடில் – உடல் பருமனைக் குறைக்கும் வழி என்ற தனது புத்தகத்தில் – அவர் தந்துள்ளார்.

சுருக்கமாக அவரது வழிமுறையைப் பார்ப்போம் ..

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

க்ரோவர் ஸாண்டர்ஸ் க்ராண்ட்ஸ் (பிறப்பு 5-11-1931 மறைவு 14-2-2002 – Grover Sanders Krantz) அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மானிடவியலர் (ஆந்த்ரோபாலஜிஸ்ட்). மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். பிக் ஃபுட் (Big Foot) எனப்படும் பிரம்மாண்டமான புராண கால வரலாற்று பற்றிய ஆராய்ச்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டதால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். அவர் அந்த மனிதனைப் பார்க்கவில்லை என்றாலும் அதைப் பார்த்ததாகக் கூறிய பலரை நேரில் சந்தித்து விவரங்களைச் சேகரித்தார்.

வாழ்நாளின் இறுதியில் எட்டு மாதங்கள் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு துன்புற்றார். தனது மரணத்திற்குப் பின்னும் தனது உடல் பயன்பட வேண்டும் என்ற தனது ஆசையை அவர் தனது நண்பரான டேவிட் ஹண்டிடம் வெளியிட்டார். “எனது உடலைத் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. எனது நாயும் உடன் இருக்க வேண்டும்” என்றார் அவர்.

அவர் இறந்தவுடன், அவர் விருப்பப்படி  அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யப்படவில்லை. அது மானிடவியல் பிரிவுள்ள டென்னஸி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து அது பதப்படுத்தப்பட்டு  மீண்டும் 2003ஆம் ஆண்டு நேஷனல் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரிக்கு அனுப்பப்பட்டது. அவரது விருப்பப்படி அவரது நாய்கள் க்ளைட், இக்கி, யாஹூ ஆகிய மூன்று நாய்களும் பச்சை பெட்டியில் வைக்கப்பட்டன.

2009இல் அவரது எலும்புக்கூடு கலை நோக்குடன் அழகுற மேம்படுத்தப்பட்டது. அவரது நாயான க்ளைடின் எலும்புக்கூடும் அப்படியே செய்யப்பட்டது. இரு எலும்புக்கூடுகளும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செத்தும் கொடுத்தார் க்ரோவர் க்ராண்ட்ஸ்!

Tags- 

 ஒபிஸிடி கோட்! (The Obesity Code)

***

மருந்துச்சரக்கு குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5718)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 30 November 2018


GMT Time uploaded in London – 17-43

Post No. 5718


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL CROSS WORD

இந்தக்குறுக்கெழுத்துப் போட்டியில் மருந்துச் சரக்குகள் உள்பட 25 சொற்கள் உள. கண்டுபிடிக்க  உதவுமாறு சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்குள் கண்டுபிடிக்க இயலாவிடில் விடையைக் காண்க.


1



2  










3
  4

5
  







6
7    8

  9






   

 







 





10
  


11
12







13



14
15
16
17











18

19






 

  

  20



குறுக்கே

1–இனிப்பான மருந்துச் சரக்கு

3.தலையணைக்குள், மெத்தையில் இருக்கும்

5. சாப்பிட உதவும்

8.செவிப் புலன்

9.365 நாட்கள்

10.வீடு

11.ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்

14.கோவிலில் வழிபடும் உருவம்

15.மூலிகை வகையறா

16.ஈர்ப்பு

19.வானத்தில் தரிசிக்கலாம்

20.களவு

கீழே

2.தராசு

3.பல் வலிக்கு உதவும்

4.சுற்றிச் சுற்றி வரலாம்

5.) 7 நாட்கள் உடையது

6.தலையில் உள்ளது; மிக முக்கியம்

7.ஓட்டை, வாயில்

10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல!

11.மலைக்கோவிலுக்கு தினமும் செல்வார்

12.தூம கேதுவின் பகுதி

13.இது ஒரு குஸ்திக் கலை

17.கல்யாணத்துக்குப் பார்க்கலாம்

18.ஜாதி மலர்

19.குழந்தையின் முதல் படி

20.மதிப்புக்குரிய வைணவப் பெரியார்;

20. மலைக்கோவில்



தி
து  ர  ம்




லா



  ல  ம்
வா
   ய்



ட் 

மூ
து    கா

  வ
ரு

ளை

    க்

  ங்

 ம்ர்

தி

   க



கைஜா
   ம்
ஜீ
பு




தி


லை
சிச்

ர்

ல்


ப்

மு

ருன்



  டு

  ரு 

  தி



 ANSWERS

1.அதி மதுரம்

2.துலாம்

3.இலவங்கம்

3.இலவம்

4.வட்டம்

5.வாரம்

5.வாய்

6.மூளை

7.துவாரம்—

8.காது-

9.வருட

10.ஜாதிக் (8)காய்

10.ஜாகை

11.ஜீரகம்

11.ஜீயர்-

12.புகை

13.வர்ம

14.சிலை-

15.பச் (14)சிலை

16.கவர்

17.வரன்

18.முல்லை

19.கருடன்

19.கரு

20.திருப்பதி 11.ஜீயர்

20.திருடு

1.அதி மதுரம் –இனிப்பான மருந்துச் சரக்கு

2.துலாம்- தராசு

3.இலவங்கம்- பல் வலிக்கு உதவும்

3.இலவம்- தலையணைக்குள், மெத்தையில் இருக்கும்

5.வாரம்– 7 நாட்கள் உடையது

5.வாய்- சாப்பிட உதவும்

6.மூளை- தலையில் உள்ளது; மிக முக்கியம்

7.துவாரம்– ஓட்டை, வாயில்

8.காது- செவிப் புலன்

9.வருட- 365 நாட்கள்

10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல!

10.ஜாகை- வீடு

11ஜீயர்-.மலைக்கோவிலுக்கு தினமும் செல்வார்; மதிப்புக்குரிய வைணவப் பெரியார்;

11.ஜீரகம்- ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்

12.புகை- தூம கேதுவின் பகுதி

13.வர்ம-இது ஒரு குஸ்திக் கலை

14.சிலை- கோவிலில் வழிபடும் உருவம்

15.பச் (14) சிலை- மூலிகை வகையறா

16.கவர்- ஈர்ப்பு

17.வரன் —கல்யாணத்துக்குப் பார்க்கலாம்

18.முல்லை- ஜாதி மலர்

19.கருடன் —  வானத்தில் தரிசிக்கலாம்

19.கரு – குழந்தையின் முதல் படி

20.திருடு- களவு

20. திருப்பதி- மலைக்கோவில்

TAGS—மருந்துச் சரக்கு, குறுக்கெழுத்து, போட்டி

–SUBHAM–

AGE IS NO CRITERION FOR GREATNESS – BHARTRUHARI (Post No.5717)


WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 30 November 2018


GMT Time uploaded in London – 13-57

Post No. 5717


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Nitisataka 34,35,36


The lion, though young, attacks the mighty elephant The energy of the noble minded man proceeds from his natural disposition, not from his youth. It is the nature of the brave to aspire for the highest even when young. Indeed, age is no criterion for greatness.

सिंहः शिशुरपि निपतति
मदमलिनकपोलभित्तिषु गजेषु ।
प्रकृतिरियं सत्त्ववतां
न खलु वयस्तेजसो हेतुः ॥ 1.34 ॥

Age is no bar for attaining name and fame. This is proved by Hindu mythological characters such as Dhruva, Prahlada, Markandeya and Vedic boys like Nachiketas , Aruni and Satyakama Jabala . Great philosophers hers like Shankara attained fame when they were  young. Tamil saint Sambandar composed poems when he was 3 years old.




Age is No Bar -Authors who wrote before they were 30

Japanese Novelist Abe Kobo started to write at the age of 24. He won a prize when he was 26

Nigerian novelist Chinua Achebe published his first novel when he was 28.

English fantasy writer Douglas Adams published when he was 27.

English essayist, poet and playwright Joseph Addison

American poet, novelist, screenwriter James Agee published his first book when he was 25.

Israeli novelist and Nobel laureate SY Agnon published his first book When he was 20.

Ghanian playwright, poet and novelist AMA ATA Aidoo published her famous play when she was 28

American poet, short story writer and b
Novelist Conrad Aiken became famous with his first collection of poems when He was 25


xxxxx

Wealth is more important than Virtues!

Two great poets emphasize the importance of wealth in their books.

I give below translation of the same couplets by two authors.

Wealth of kindliness is real wealth.
Material wealth is possessed by even the basest— Kural 241

The best of all possessions is the wealth of compassion
For the meanest of men too possess worldly wealth- Kural 241

As those without riches can have no enjoyments in this world so also are those without the grace of compassion denied the blessings of the world above— Kural 247

Even as happiness in the world depends wholly on material possessions
Happiness in the world beyond will surely depend upon compassion-Kural 247

Both Bhartruhari and Tamil poet Tiruvalluvar agree on the point that material possessions account was for happiness on this earth..

Both the poets say that even the basest of men possess wealth.

In another couplet Tiruvalluvar in his Tirukkural say

The demon of poverty, when he overtake s one, the joys of this life
As well as the next one are lost to him -1042 
Infernal poverty blasts the joys of the earth and of heaven- 1042 


Our noble birth may go to the lower regions; our virtues may perish; our moral character may fall as if from a lofty mountain; our family may be consumed by fire; a thunderbolt may strike our might as it were an enemy; let us keep our money, for without this all the collected virtues are but a heap of grass.


जातिर्यातु रसातलं गुणगणैस्तत्राप्यधो गम्यतां
शीलं शैलतटात्पतत्वभिजनः सन्दह्यतां वह्निना ।
शौर्ये वैरिणि वज्रम् आशु निपतत्वर्थो‌உस्तु नः केवलं
येनैकेन विना गुणस्तृणलवप्रायाः समस्ता इमे ॥ 1.35 ॥

If a man be wealthy, he is of good family he is wise, he is learned in scriptures, he is virtuous, eloquent, handsome. All the virtues attach themselves to gold.

यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति ॥ 1.36 ॥

The importance given to the rich people has not changed from the ancient times; we see the same state of affairs even today. Money power boosts one to higher positions and higher awards.

TAGS- age no bar, no criterion, Niti sataka 34,35, 36, wealth

–subham–

‘சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?’ (Post No.5716)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 30 November 2018


GMT Time uploaded in London – 7-55 AM

Post No. 5716


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரி நீதி சதக தொடர்ச்சி 34,35, 36

‘சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?’ (Post No.5716)

ஸ்லோகம் 34

சிங்கக் குட்டியானாலும் கூட அது மிகப் பெரிய யானையைத் தாக்க விரும்பும்; இளம் வயதானாலும் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுவது வீர தீரர்களின் செயலாகும். பெருமை அடைய, புகழ் பெற வயது ஒரு தடை இல்லை.

ஸிம்ஹக சிசுரபி நிபததி மத மலின கபோலபித்திஷு கஜேஷு

ப்ரக்ருதிரியம் ஸத்வவதாம்ந கலு வயஸ் தேஜஸாம் ஹேதுஹு

“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே

மாற்றம் காண்பதுண்டோ?

மாற்றம் காண்பதுண்டோ?”

என்ற திரைப் படப் பாடலை இது நினைவு படுத்துகிறது. இயற்றியவர் கண்ணதாசன்; படம்- பாகப் பிரிவினை

xxx

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’

1961ம் ஆண்டு வெளி வந்த திரைப்படத்தின் பாடல் வரிகள்  

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’

 மிகவும் பொருள் பொதிந்தவை. ஆயினும் இதை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பர்த்ருஹரியும், அதற்கு முன்னர்  தெய்வப் புலவன் வள்ளுவனும் செப்பிவிட்டனர்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு – குறள் 247

பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்வு இன்பமாக அமையாது. கருணையற்றவர்களுக்கு சுவர்க்க போகம் கிடைக்காது

பர்த்ருஹரி சொல்கிறார்,

நம்முடைய பரம்பரை எக்கேடு கெட்டுப் போகட்டும்; நம்முடைய குணங்கள் அதல, பாதாளத்துக்குப் போகட்டும்; நம்முடைய அடக்கம் மலை உச்சியிலிருந்து விழட்டும்; நம்முடைய பெருந்தனமை தீயில் கருகட்டும்; நம்முடைய துணிவை வஜ்ராயுதம் துண்டிக்கட்டும்; இப்படியெல்லாம் நடந்தாலும் பணமும் வசதியும் இருந்துவிட்டால் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம்;  பணமும் வசதியும் இல்லாவிடில் மற்ற குணங்கள் அனைத்தும் புல்லுக்குச் சமானம்!

ஜாதிர்யாது ரஸாதலம் குணகணஸ்தத்ராப்யதோ கச்சதாம்

சீலம் சைலதடாப்தத்வபிஜனஹ ஸந்தஹ்யதாம் வஹ்னினா

சௌர்யம் வைரிணி வஜ்ரமாசு நிபதத்வர்த்தோ அஸ்து நஹ கேவலம்

யேனைகேன வினா குணாஸ்த்ருண லவப்ராயாஹா ஸமஸ்தா இமே – 35

பணம் இருந்தால் போதும்; குணம் உதவாது என்ற உலக நடைமுறையை பர்த்ருஹரி அழகாகப் பறைந்தார்.

வள்ளுவன் மொழியும் மற்றுமொரு குறளும் நோக்கற்பாலது

இன்மை என ஒருபாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும் -குறள் 1042

வறுமை என்னும் கொடிய பாவி ஒருவனைப் பற்றிக்கொண்டால் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் தொடர்ந்து வரும்– என்பது வள்ளுவன் வாய்ச்சொல்.

பணம் இருந்தால்தான் மற்ற நல்ல காரியங்களை செய்ய முடியும்; அது இல்லாவிடில், அதை நாடித் தேடி ஓடுவதிலேயே வாழ்நாள் கழிந்துவிடும் என்பது சொல்லாமலே விளங்கும்

பர்த்ருஹரி அடுத்த ஒரு ஸ்லோகத்திலும் இக்கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவார்:-

யஸ்யாஸ்தி வித்தம்ஸ நரஹகுலீனஹ

ஸ பண்டிதஹ ஸச்ருதவான் குணக்ஞஹ

ஸ ஏவ வக்தா ஸ ச தர்சநீயஹ

ஸர்வ குணாஹா காஞ்சனமாஸ்ரயந்தி – 36

பணமுள்ளவன்தான் படித்தவன், ப்ரபு; அவன் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்; அவன்தான் வழிகாட்டி; அவன் ஒருவனே அழகன்; பேச வல்லவன்; உண்மைதான்! எல்லா குணங்களும் தங்கத்திலே அடங்கிவிட்டது.

இவ்வாறு பர்த்ருஹரி புலம்புவதின் உள் அர்த்தம் வெள்ளிடை மலை என விளங்கும். இது உலக நடைமுறை.

சங்க இலக்கியப் பாடலான குறுந்தொகையும்

இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு –பாடல் 120

பணம் இல்லாதவன் இன்பத்துக்கு ஆசைப்பட்டது போல என்று காட்டும்

பணம் இல்லாதவன் பிணம் என்று நாலடியார் செய்யுள் அறையும்

ஒத்த குடிப் பிறந்த கண்ணும் ஒன்றில்லாதார்

செத்த பிணத்திற் கடை- பாடல் 281

அப்பர் செப்பியது,

மாடுதானதில்லெனின் மானுடர்

பாடுதான் செல்வாரில்லை- (அப்பர் தேவாரம், கொண்டீசரம்-3) என்று மாடு (செல்வம்) இல்லாதவர் படும் பாட்டைப் பாடுவார் அப்பர்

எட்டானும் பத்தானும்  இல்லாதார்க்கிவ்வுலகில் இன்பமே போல்

ஒட்டாவே கண்டீர்- என்று திருத்தக்க தேவரும் சீவக சிந்தாமணியில் விளம்புவார்.

xxx

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)

பாடல்: பணம் பந்தியிலே -குணம் குப்பையிலே

இசை: கே.வி .மஹாதேவன்

பாடல் வரிகள்: கா .மு. ஷெரீப்

பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே

இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே (பணம்)

ஒன்றும் தெரியாத  ஆளானாலும் பணமிருந்தாலே

அவனை உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே (ஒன்றும்)

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை (என்ன)

உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே (பணம்)

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்

பணம் அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (ஏழ்மை)

இதை எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்களுண்டு

அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள்  கண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு(மண்ணாய்)

நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு.(பணம்)

xxx

सिंहः शिशुरपि निपतति
मदमलिनकपोलभित्तिषु गजेषु ।
प्रकृतिरियं सत्त्ववतां
न खलु वयस्तेजसो हेतुः ॥ 1.34 ॥

जातिर्यातु रसातलं गुणगणैस्तत्राप्यधो गम्यतां
शीलं शैलतटात्पतत्वभिजनः सन्दह्यतां वह्निना ।
शौर्ये वैरिणि वज्रम् आशु निपतत्वर्थो‌உस्तु नः केवलं
येनैकेन विना गुणस्तृणलवप्रायाः समस्ता इमे ॥ 1.35 ॥

यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति ॥ 1.36 ॥

TAGS- பணம் பந்தியிலே, சிங்கத்தின் கால்கள், நீதி சதக 34,35, 36

–subham–

சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா! (post No.5715)

Written by S Nagarajan

Date: 30 November 2018

GMT Time uploaded in London –6- 05 am
Post No. 5715

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சங்கர விஜயம்

சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா! காஞ்சி காமகோடி மடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததே!!

ச.நாகராஜன்

1

காஞ்சி காமகோடி மடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததே என்பதில் ஒரு சிறிதளவும் ஐயமில்லை.

இதனை ஒரு விவாதப் பொருளாக மாற்றி விவாதிப்பதில் சிலருக்கு ஆனந்தம். ஆனால், ‘Kanci Kamakodi Mutt : A Myth or Reality’ என்ற ஆய்வுப் புத்தகத்தைப் படித்தவர்க்கு நல்ல தெளிவு பிறக்கும். விவாதத்தில் ஒரு தெளிவும் வேண்டியது தானே! அப்போது தானே ஒரு முற்றுப்புள்ளியுடன் அது அடங்கும்!

இதை எழுதியவர் டாக்டர் டபிள்யூ. ஆர். அந்தார்கர் (Dr W.R.Antarkar). இந்தப் புத்தகம் வெளியான ஆண்டு 2001. பக்கங்கள் 168. இதை எனக்கு அனுப்பியவர் எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன். அவருக்கு எனது உளம் கலந்த

நன்றிகள்!

2

நூல் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் பேருண்மை : காஞ்சி காமகோடி மடமானது ஆதி சங்கரராலேயே ஸ்தாபிக்கப்பட்டது. இது அவர் ஸ்தாபித்த ஐந்தாவது மடம். இதை ஸ்தாபித்தது மட்டுமன்றி அதன் முதல் பீடாதிபதியாகவும் அவரே இருந்து அருளினார்.

அத்வைத சித்தாந்தத்தை உலகிற்குச் சரியான முறையில் அருள அவர் நான்கு மடங்களை ஸ்தாபித்தார்; ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையிலும் அவை குறிக்கும் நான்கு மகா வாக்கியங்களைக் குறிக்கும் வகையிலும் பாரதத்தின் நான்கு திசைகளில் அவர் நான்கு மடங்களை ஸ்தாபித்தார்.

இது ஒரு நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அசைக்கமுடியாத பல்வேறு நூல்களின் அடிப்படையில் அவர் காஞ்சி மடத்தையும் ஸ்தாபித்தார் என்பதை இந்த நூலாசிரியர் விரித்துரைக்கிறார்.

இந்த நூலை ஓரியண்டல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட், புனே பிரசுரித்துள்ளது. இதைப் பிரசுரித்ததற்கான காரணத்தைச் சொல்ல வருகையில், 1) இது பற்றிய முடிந்த முடிபான முடிவு என்று ஒன்று இல்லை என்பதால் புதிய ஆய்வுக்கான கள நோக்கைப் பாராட்ட வேண்டியதே 2) இதை சமர்ப்பிக்கும் அந்தார்கர் தான் எடுத்துக் கொண்டுள்ள ஆய்வுப் பொருளை சரியாக குறிக்கோளுடன் ஆய்ந்துள்ளார்; அதில் ஒரு வித பாரபட்ச நோக்கையும் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வுப் பார்வை அவருடையது மட்டுமே; இது இந்த நிறுவனத்தின் பார்வை அல்ல என்று இப்படி பண்டார்கர் ஓரியண்டல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த கௌரவ செயலாளர் எம்.ஜி. தாத்பலே (M.G.Dhadphale) தெளிவு படுத்துகிறார்.

இந்த ஆய்வுப் பேப்பர் 1960ஆம் வருடம் புனே பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்று.

 

காஞ்சி காமகோடி மடம் பற்றி இரு நிலைப்பாடுகள் உண்டு.

முதலாவது : த்வாரகா, கேதார்நாத்,பூரி, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவிய பின்னர் ஆதி சங்கரர் காஞ்சிபுரம் வந்தார். ஐந்தாவது மடமாக காஞ்சிகாமகோடி மடத்தை நிறுவி அதன் முதல் பீடாதிபதியாக அவரே அங்கம் வகித்தார். 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக அப்போதைய காஞ்சி மடத்தின் பீடாதிபதி மடத்தின் தலைமையிடத்தைத் தஞ்சாவூருக்கு மாற்றினார். பின்னர் கும்பகோணத்திற்கு மடம் மாற்றப்பட்டது.

இன்னொரு நிலைப்பாடு:  ஆதி சங்கரர் நான்கு மடங்களை மட்டுமே நிறுவினார். த்வாரகா, கேதார்நாத், பூரி, சிருங்கேரி ஆகிய இடங்களில் மட்டுமே அவர் ஆமாத்ய மடங்களை நிறுவினார்.

காஞ்சி மடம் என்று இப்போது சொல்லப்படும் மடமானது உண்மையில் கும்பகோண மடம் தான்; அது தஞ்சாவூரில் ஸ்தாபிக்கப்பட்டு பின்னர்கி.பி.1821ஆம் ஆண்டு வாக்கில் சரபோஜி மன்னரின் ஆதரவால் கும்பகோணத்திற்கு மாற்றப்பட்ட ஒன்று. இந்த மடம் உண்மையில் சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையே. இது தாமிர பட்டயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1839ஆம் ஆண்டு காஞ்சி கோவிலுடனான தொடர்பு மடத்திற்கு ஏற்படுத்தப்பட்டது. கோவிலின் தர்மகர்த்தா பொறுப்பை அது 1842ஆம் ஆண்டு பெற்றது.

1845ஆம் ஆண்டு ஜம்புகேஸ்வர தலத்தில் தாடங்க பிரதிஷ்டையை கும்பகோண மடம் செய்தது.

ஒரு தால பத்ரத்தின் படி (பனையோலை) மஹாதேவ சரஸ்வதி என்பவர் சிருங்கேரியிலிருந்து தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டார். இவரே கும்பகோண மடத்தின் முதல் பீடாதிபதியாக இருந்திருக்கக்கூடும். அவர் சென்னைக்கருகில் சமாதியானார்; ஆனால் இதை நிரூபிக்க சான்றுகள் இல்லை.

கோவிந்த தீக்ஷிதர் என்பவர் தஞ்சாவூர் அரசரின் அமைச்சர். அவர் கும்பகோணத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். அவர் சந்யாசத்திற்குப் பின்னர் சந்த்ரசேகர சரஸ்வதி என்று நாமகரணம் செய்யப்பட்டார். அவர் மிகுந்த செல்வாக்குள்ளவர். எனவே அவர் மூலம் கும்பகோண மடம் அரசரின் பேராதரவைப் பெற்றது.

மேற்கண்ட இரு நிலைகளைத் தவிர பல்வேறு நூல்கள் காஞ்சி மடத்தின் ஆசாரியர்கள் பலகாலம் தலைமையிடத்தை விட்டு பாரதத்தின் பல்வேறு இடங்களில் சஞ்சாரம் செய்து வந்தனர் என்றும் குறிப்பிடுகின்றன.

நூற்றுக் கணக்கான நூல்கள். நூற்றுக் கணக்கான ஆதாரங்கள்!

காஞ்சி மடத்தைப் பற்றி சங்கர விஜயம் நூலில் குறிப்பிடப்படவில்லை என்பதை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமெனில் ஆனந்தானந்தகிரி அவர்கள் எழுதிய சங்கர விஜயம் நூலில் சிருங்கேரி மடமே குறிப்பிடப்படவில்லை. அப்படி எனில் சிருங்கேரி மடத்தை ஆதி சங்கரர் ஸ்தாபிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளக் கூடுமா என்ன? என்கிறார் இந்த ஆய்வாளர்,நூலாசிரியர்.

பகவத்பாதாப்யுதயா என்ற நூலில் காஞ்சி காமகோடி மடம் சொல்லப்பட்டுள்ளது. நான்கு மடங்களுடன் கூட ஆதி சங்கரர் ஐந்தாவது மடமாக காஞ்சி காமகோடி மடத்தையும் ஸ்தாபித்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

இந்த நூலாசிரியர் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் பிரதமர் நரசிம்மராவ் ஆகியோரின் உதவியுடன் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஒரு அரிய நூலைப் பெற முயற்சி எடுத்த போதும் அவரது கடித்தைக் கூடப் பெற்றதாக அந்த பல்கலைக்கழகம் பதில் அளிக்கவில்லை. அந்த நூலும் பார்க்கப்படவில்லை. இந்த நூலில் தான் சர்மா என்பவர் கூறும் (காஞ்சி மடம் ஐந்தாவது மடம் இல்லை என்பதற்கான)  ஆதாரங்கள் உள்ளன.

ஆக தனது முயற்சியால் போலி வாதங்களை பொய் பிரச்சாரங்களையும் உதறி விட்டு விட்டு உண்மையான ஆதாரங்களை மட்டும் தன் ஆய்விற்கு எடுத்து அவற்றை விரித்துரைக்கிறார் நூலாசிரியர்.

இந்த உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கூறும் முடிவு:

நான்கு மடங்களுடன் கூட ஐந்தாவது மடமாக ஆதி சங்கரர் காஞ்சி காமகோடி மடத்தை ஸ்தாபித்தது மட்டுமன்றி அவரே அதன் முதல் பீடாதிபதியாக அக்ராசனம் வகித்து அருளினார்; அவர் மறைந்ததும் காஞ்சியிலேயே!

பல ஆதாரங்களை விளக்கும் இந்த நூலை  அன்பர்கள் படித்தால் இது பற்றிய தெளிவைப் பெறலாம்!

நூலைப் படித்தவுடன் நமக்குத் தோன்றுவது இது தான் :-

காஞ்சி காமகோடி பீடத்தில் ஏறும் அருளாளர்களுக்கு சரஸ்வதி என்ற பட்டப் பெயரும் சிருங்கேரி பீடத்தில் ஏறும் அருளாளர்களுக்கு பாரதி என்ற பட்டப்பெயரும் சூட்டப்படுவது மரபு என்பதை அனைவரும் அறிவோம்!

சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா! காஞ்சி மடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததே தான்!!

Tags–சரஸ்வதி, காமகோடி மடம்,  காஞ்சி, ‘Kanci Kamakodi Mutt : A Myth or Reality’

****

31 பாரதியார் பொன் மொழிகள் (Post No.5714)

 

compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 29 November 2018

GMT Time uploaded in London – 16-17

Post No. 5714
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டிசம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள்;16- மார்கழி மாதம் ஆரம்பம்;18- வைகுண்ட ஏகாதஸி, கீதா ஜயந்தி; 23-ஆருத்ரா தரிசனம்/திருவாதிரை; 25-கிறிஸ்துமஸ்

அமாவாஸை- 6, பௌர்ணமி- 22; ஏகாதஸி உபவாஸ நாட்கள்- 3, 18.

சுப முகூர்த்த நாட்கள்- 12, 13, 14

டிசம்பர் மாத (கார்த்திகை/மார்கழி) காலண்டரை பாரதியார் பொன்மொழிகள் அலங்கரிக்கின்றன.

டிசம்பர் 2018 காலண்டர்; விளம்பி கார்த்திகை-மார்கழி மாதம்

 

டிசம்பர் 1 சனிக்கிழமை

அருவி போலக் கவி பொழிய-எங்கள்

அன்னை பாதம் பணிவேனே

குருவிப்பாட்டை யான்பாடி- அந்தக்

கோதை பாதம் அணிவேனே

டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

மாணுயர் பாரத தேவியின் மந்திரம்

வந்தே மாதரமே

டிசம்பர் 3 திங்கட்கிழமை

அச்சப்பேயைக் கொல்லும் படையாம்

வித்தைத் தேனில் விளையும் கனியாய்

வாராய், நிலவே வா

டிசம்பர் 4 செவ்வாய்க்கிழமை

மந்திரம் கூறுவோம், உண்மையே தெய்வம்

கவலையற்றிருத்தலே வீடு, களியே அமிழ்தம்,

பயன்வரும் செய்கையே அறமாம்.

டிசம்பர் 5 புதன் கிழமை

ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

ஸமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

டிசம்பர் 6 வியாழக் கிழமை

கடல் நமது தலை மேலே கவிழவில்லை

ஊர்கள் கலைந்து போகவில்லை

உலகம் எல்லா வகையிலும் இயல்பெறுகின்றது

இஃதெல்லாம் அவளுடைய திருவருள்

டிசம்பர் 7 வெள்ளிக் கிழமை

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்

சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்

சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது

 

டிசம்பர் 8 சனிக்கிழமை

புகழே, புகழே, புகழே

புகழுக்கோர் புரையுண்டாயின்

இகழே, இகழே, இகழே

டிசம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை

இன்பம் இன்பம் இன்பம்

இன்பத்திற்கோர் எல்லை காணில்

துன்பம் துன்பம் துன்பம்

டிசம்பர் 10 திங்கட்கிழமை

நாதம், நாதம், நாதம்

நாதத்தேயோர் நலிவுண்டாயின்

சேதம், சேதம், சேதம்

டிசம்பர் 11 செவ்வாய்க்கிழமை

தாளம், தாளம், தாளம்

தாளத்திற்கோர் தடையுண்டாயின்

கூளம், கூளம், கூளம்

டிசம்பர் 12 புதன் கிழமை

பண்ணே, பண்ணே, பண்ணே,

பண்ணிற்கோர் பழுதுண்டாயின்

மண்ணே, மண்ணே, மண்ணே

டிசம்பர் 13 வியாழக் கிழமை

ஆதியாலாதியப்பா!- கண்ணா!

அறிவினைக் கடந்த விண்ண்கப் பொருளே

சோதிக்குச் சோதியப்பா!– என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!

டிசம்பர் 14 வெள்ளிக் கிழமை

பெண்டீர் தமையுடையீர்!பெண்களுடன் பிறந்தீர்

பெண் பாவமன்றோ? பெரியவசை கொள்வீரோ?

கண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் (திரவுபதி)

 

டிசம்பர் 15 சனிக்கிழமை

பேயரசு செய்தால்பிணம் தின்னும் சாத்திரங்கள்

டிசம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை

‘தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும்’ எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்

வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்

டிசம்பர் 17 திங்கட்கிழமை

கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

டிசம்பர் 18 செவ்வாய்க்கிழமை

கோயிற் பூசை செய்வோர் சிலையக் கொண்டுவிற்றல் போலும்

வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்

ஆயிரங்களான நீதி யவை உண்ர்ந்த தரும

தேயம் வைத்திழந்தான், சீச்சீ சிறியர் செய்கை செய்தான்

டிசம்பர் 19 புதன் கிழமை

ஆங்கொரு கல்லை வாயிற்படி என்

றமைத்தனன் சிற்பி,மற்றொன்றை

ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்

றுயர்த்தினான், உலகினோர் தாய் நீ!

டிசம்பர் 20 வியாழக் கிழமை

யாங்கனே எவரை, எங்கனஞ்சமைத்தற்

கெண்ணமோ அங்கன்ம் சமைப்பாய்

ஈங்குனைச் சரணென்றெய்டினேன், என்னை

இருங்கலைப் புலவனாக்குதியே

டிசம்பர் 21 வெள்ளிக் கிழமை

இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென

இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்

இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென

வானூலார் இயம்புகின்றார்.

 

டிசம்பர் 22 சனிக்கிழமை

இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்

பொருட்கெல்லாம் இயற்கையாயின்

இடையின்றிக் கலை மகளே! நினதருளில்

எனதுள்ளம் இயங்கொணாதோ?

டிசம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்- அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் நல்ல மங்களம்  வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே

(காயத்ரி மந்திரத்தின் மொழி பெயர்ப்பு)

டிசம்பர் 24 திங்கட்கிழமை

‘கிழவியர் தபசியர் போல்- பழங்

கிளிக்கதை படிப்பவன், பொறுமையென்றும்

பழவினை முடிவென்றும்- சொலிப்

பதுங்கி நிற்போன், மறத் தனமையிலான்

வழ வழ தருமன்’

டிசம்பர் 25 செவ்வாய்க்கிழமை

நல்லது தீயது நாமறியோம் அன்னை

நல்லது நாட்டுக1 தீமையை ஓட்டுக!

டிசம்பர் 26 புதன் கிழமை

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி

யொருசில பேய்கள் வந்தே

துன்பபடுத்துது, மந்திரஞ்செய்து

தொலைத்திட வேண்டுமையே!

டிசம்பர் 27 வியாழக் கிழமை

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

பூணும் வட நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு

 

டிசம்பர் 28 வெள்ளிக் கிழமை

தில்லித் துருக்கர் செய்த வழ்க்கமடி! பெண்கள்

திரையிட்டு முகமலர் மரைத்து வைத்தல்

வல்லியிடையினையும் ஓங்கி முன்னிற்கும்- இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்

டிசம்பர் 29 சனிக்கிழமை

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- முகச்

சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ

டிசம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

அதை தொழுது படித்திடடி பாப்பா!

உயிர்களிடத்தில் அன்பு வேணும்- தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்

டிசம்பர் 31 திங்கட்கிழமை

சாமி நீ! சாமி நீ! கடவுள் நீயே!

தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்

HAPPY NEW YEAR

TAGS- பாரதியார், பொன் மொழிகள், டிசம்பர் 2018, நற்சிந்தனை, காலண்டர்

 

–SUBHAM–

31 Quotations from Niti sataka of Bhartruhari (Post No.5713)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 29 November 2018


GMT Time uploaded in London 13-56

Post No. 5713
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

DECEMBER 2018 ‘GOOD THOUGHTS’ CALENDAR

This month’s calendar consists 31 quotations from Bhartruhari’s Niti Sataka

FESTIVAL DAYS-  Dec.11- Poet Bharatiyar’s Birth Day, 16-Dhanur/ Markazi month begins, 18-Vaikunda Ekadasi and Gita Jayanthi, 23-Arudra Darsan, 25-Christmas

NEWMOON DAY- 6 ; FULL MOON DAY- 22 ; EKADASI FASTING DAYS-3, 18 ;

AUSPICIOUS DAYS- DECEMBER 12, 13, 14

 

DECEMBER 1 SATURDAY

Great persons offer donations with their hands;
Offer obeisance to gurus with their heads;
Speak the truth with their tongues;
Listen to the wisdom by their ears and
Observe purity in their hearts.

DECEMBER 2 SUNDAY

Great Turtle upholds the earth; pole star makes the planets to go round it. The birth of those who spend their lifetime in the service of others is worthwhile.

DECEMBER 3 MONDAY

Vast and mighty ocean is endless and bright and able to bear all the burden; on one side Vishnu sleeps and on the other side demons rest. On one side mountains lying and on other side submarine fire (Great people are like that).

DECEMBER 4 TUESDAY
The sincere and noble friend prevents his friend from committing wrong deeds. He inspires his friend to get involved in good things.

DECEMBER 5 WEDNESDAY

The sun makes the lotus blossom, moon makes the lily blossom, monsoon clouds make rains without any request;
Noble persons serve others even when not asked for .

DECEMBER 6 THURSDAY

The noble ones renounce all desires. They practise forgiveness and are free from pride. 

DECEMBER 7 FRIDAY

Very few saints are full of nectar of good deeds in their mind, speech and body. They win over the love of all the three worlds.



DECEMBER 8 SATURDAY
Indra with all his thunder bolt as weapon, Airavata as vahana, gods as soldiers , Brihaspati as Guru and blessing of Lord Vishnu– was defeated by his enemies. Fate alone should be our refuge and not our own efforts.

DECEMBER 9 SUNDAY

The noble person may fall on the ground like a ball but, would rise again. However, an inferior person falls on the ground like a lump of clay.

DECEMBER 10 MONDAY

The moon is full of nectar and is controller of all Medicines and is on the lock of Lord Shiva. Yet the moon cannot avoid it’s waning .
Fate alone is responsible for whatever happens in this world

DECEMBER 11 TUESDAY

The trees stoop when they bear fruits. The clouds descend low when they have enough water to give The noble persons observe even greater humility when they become prosperous.

DECEMBER 12 WEDNESDAY

One may be in the forest or ocean or among enemies or under difficult circumstances; but one is protected by the good deeds of the past 

DECEMBER 13 THURSDAY

One shall get only what is destined by according to one’s actions. Who can change what is destined for the future?

DECEMBER 14 FRIDAY
Neither handsomeness nor nobility, nor learning brings good fruits. Only the penance under gone in the past brings good fruits.



DECEMBER 15 SATURDAY
Any action carried out in haste would result in one’s own heart like a thorn.

DECEMBER 16 SUNDAY

When the fruits of noble deeds get exhausted, all the prosperity gets scattered like the pearls of a necklace which gets broken during love making.

DECEMBER 17 MONDAY
Do only the noble actions which turn a sinner into a saint, an illiterate into the learned, enemy into a friend and poison into nectar.

DECEMBER 18 TUESDAY
Indeed the ways of Karma are mysterious. It changed Brahma into a potter, Vishnu had to take ten avatars, Shiva had to roam with a skull in his hand

DECEMBER 19 WEDNESDAY
Give up all your attempts to destroy the patience of the noble ones by heaping misfortunes upon them, because such attempts would be futile.

DECEMBER 20 THURSDAY
A determined person never gives up his quality of patience even when harassed or troubled.

DECEMBER 21 FRIDAY

Real ornament for wealth is modesty, humility for knowledge, charity for money and absence of anger for penance.

DECEMBER 22 SATURDAY

For those whose bodies are filled with pure character, fire becomes cool water, ocean becomes a small stream, Mount Meru becomes a small stone and lion becomes a tamed deer..


DECEMBER 23 SUNDAY

Patient and determined persons win over the three worlds

DECEMBER 24 MONDAY

Gods never stopped till they collected nectar from the ocean. They were not freighted by poison. Thus the steady minded persons do not end their efforts until they attain their goals.

DECEMBER 25 TUESDAY
The true ornament of ear is listening to Vedas and not ear rings. The real ornament of hands is the giving of alms in charity and not bangles or bracelets.

DECEMBER 26 WEDNESDAY

He is the real son who pleases his father by good deeds. She is the real wife who always thinks about the good of her husband.

DECEMBER 27 THURSDAY
A drop of water that falls in an oyster shell becomes a pearl. A drop of water that falls on a piece of red hot iron instantly gets burnt up. Thus the quality of the contact with good saints or the wicked determines the result of such a company.

DECEMBER 28 FRIDAY

The saintly persons observe the pledge to do ,charity silently, to welcome guests who come to their homes, to observe silence after doing good things.

DECEMBER 29 SATURDAY

I bow down to those great persons who seek the company of saints, who admire the virtues of others and who are devoted to Shiva.

DECEMBER 30 SUNDAY
Shadow in the morning is long, but becomes shorter as the day advance s;In the afternoon the shadow is short, but grows longer as the sun sets. The friendship with the wicked and the noble ones decreases and increases accordingly.

DECEMBER 31  MONDAY

My mind feels the seven thorns: dull moon during day, charming woman who lost her youthfulness, lake without lotus flowers, face of an illiterate, greedy employer, noble man facing trouble and wicked person enjoying palace life.



HAPPY NEW YEAR TO YOU.

AND MORE

Bhartruhari quotations from Nitisataka

The heart of a great man is soft and delicate like a lotus flower when he is in prosperity. But his heart becomes hard like a rock when he is in adversity.
xxx
The path of one’s ultimate good is clearly shown in all the scriptures, it is non-violence, truth, not coveting others wealth, respect for gurus and silence when talking about others’ women.
xxx

Great persons always observe patience in adversity and peace full and forgiving in prosperity.
xxx

The deer, the fish and the noble person happily subsist on grass, water and contentment. Yet the hunter, the fisherman and the wicked persons are unnecessarily being hostile towards them.

xxx
How can one be happy living near a wicked person who has thrown moral s and ethics to the winds?

xxx

If a person observes silence he is considered dumb, if he talks too much he is called talkative. The path of service is mysterious and even the yogis are unable to understand it.
xxx
If one has greed, there is no necessity of other wickedness. If one cherishes back biting, there is no need for other sins.

TAGS- Bhartruhari quotations, December 2018 calendar.


–subham–

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்! – 4 (Post No.5712)

Written by S Nagarajan

Date: 29 November 2018

GMT Time uploaded in London –11- 08 am
Post No. 5712

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 4

பாண்டியன் வியந்து போனான்.ஒவ்வொரு நாளும் பெருகி வரும் கூட்டத்தில் அருகிலிருந்த சோழ நாடு, சேர நாடு ஆகிய நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் வருவதைக் கண்டான்.

அவர்கள் தங்குமிடத்திற்கென ஏராளமான கூடாரங்களை அமைத்ததோடு உணவுக்கென ஏராளமான சமையல்கூடங்களையும் திறக்கச் செய்தான்.

அவை கூடியதும் வள்ளுவரிடம் கேள்வி கேட்க ஒரு கூட்டமே எழுந்தது.

இதை முறைப்படுத்த வேண்டி அமைச்சர் ஒவ்வொருவரையும் வரிசையாகத் தங்கள் கேள்விகளை கேட்கச் சொன்னார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது ஊரில் தனக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்லி விட்ட ஒருவரை எண்ணி நொந்து கொண்டார் அவருக்கு என்ன தண்டனை என்று கேட்டார்:

வள்ளுவர் கூறினார்:

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன் நெஞ்சே தன்னைச் சுடும்

தன் மனச்சாட்சியை மீறிப் பொய் சொன்னவனுக்கு அவன் நெஞ்சமே தகுந்த தண்டனையைத் தந்து விடும். ஒவ்வொரு நாளும் அவன் தகிப்பான் என்று புலவர்கள் விரிவாக விளக்கியபின் கேள்வி கேட்டவர் அமைதியானார்.

தனது வீட்டில் கோபத்துடன் இருக்கும் கணவனையும் பெரியவரையும் சுட்டிக் காட்டிய பெண்மணி இதனால் தான் பெரிதும் மன வருத்தம் அடைவதாகவும் அவர்களுக்கு ஒரு வாழ்வியல் ரகசியத்தை அருள வேண்டுமென்றும் வேண்டினாள்.

 

வள்ளுவர் கூறினார்:

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

அடடா என்று கூவிய புலவர்கள் அதை விரித்து உரைத்தனர். சேர்ந்தவரைச் சேர்ந்தவுடன் விஷம் கூடக் கொல்லாது. ஆனால் சினம் சேர்ந்தவுடன் ஒருவரின் வாழ்க்கை நிம்மதியைக் கொன்று விடும். அவனது மகிழ்ச்சி, செல்வம் எல்லாம் போய்விடும். அது மட்டுமன்றி அவனுக்கு கஷ்ட காலத்தில் உதவும் தெப்பமாக இருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்ஆகியோரையும் அது சுட்டு அழித்து விடும்.

அந்தப் பெண்மணியின் கணவரும் தந்தையும் எழுந்தனர். இனி ஒருக்காலும் தெப்பத்தைச் சுட விடமாட்டோம்; சேர்ந்தவரைக் கொல்லும் சினத்தை விட்டு விட்டோம் என்று உரக்கக் கூவவே மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

நெருங்கிய நண்பன் தன்னை ஒரு கஷ்டமான சூழ்நிலையில் கைவிட்டு விட்டதைச் சொல்லி ஒருவர் மனமுருக, அவரைப் பார்த்து வள்ளுவர் கூறினார்:

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்

நட்பு என்பது நிலைத்திருப்பது. அது நல்ல காலத்தில் மட்டுமல்ல; ஒருவனின் கஷ்ட காலத்திலும் மறையக் கூடாதது. அப்படி ஒருவர் இருந்தால் அது நட்பே அல்ல; அதை நினைத்தாலே நெருப்பே வேண்டாம்; உள்ளமே சுடும்; பார்த்துப் பழகுங்கள் என்று வள்ளுவர் அறிவிப்பதை அனைவரும் உணர்ந்தனர்.

கிராமப் புறத்திலிருந்து வந்தவர் தன் ஊரில் நல்ல கொள்கைகளை விடும், ஊர் செல்வந்தரைப் பற்றிக் கூறினார்; அதே ஊரைச் சேர்ந்த இன்னொருவர் அஞ்சி வெட்கப்பட வேண்டிய காரியங்களைக் கூட அவர் செய்வதாகக் கூறினார்.

அடடா என கூட்டத்தினர் வருத்தப்பட்ட போது வள்ளுவர் கூறினார்:

குலஞ் சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை

ஐயோ! கொள்கை தவறினால் அது குலத்தையே அல்லவா கெடுக்கும்; நாண வேண்டிய பழி காரியங்களைச் செய்தால் அனைத்து நன்மைகளையும் அல்லவா அழித்து விடும் என்று கூட்டத்தினர் பேச கேள்வி கேட்டோர் வள்ளுவர் கூற்றை எழுதிக் கொண்டனர். கிராமத்தில் அதை எழுத வேண்டுமென்று தீர்மானித்தனர்.

மகளிர் பக்கத்திலிருந்து ஒரு இளம் அழகி எழுந்தாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என மஹாராணி வியந்தவாறே அவளைப் பார்த்தாள்.

“ஐயனே, கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளம்  சுடும் என்று சொன்னீர்களே! என் உள்ளம் சுடுகிறதே,இது எதனால்? என்று நொந்தவாறே கேட்டாள்.

வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்; கூறினார்:

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்

பெரும்புலமை வாய்ந்த மஹாராணியார் அந்த இளம் அழகியைத் தன்னிடம் வரச் சொன்னார். அவளது கணவன் கடல் கடந்து பொருள் சம்பாதிக்கச் சென்றதை அறிந்து கொண்டாள். அவரை மறக்கவும் முடியவில்லை; மறக்காமல் நினைத்தாலும் பிரிவை நினைத்தே உள்ளம் சுடுகிறதே என்ற அவளது நிலையை எண்ணி, அவளிடம் ‘வருத்தப்படாதே; உன் கணவனை உடனே இங்கு திரும்பச் செய்கிறோம்.

அரண்மனையிலோ அல்லது படையிலோ தக்க வேலை ஒன்றைத் தகுதிக்கேற்பத் தரச் சொல்கிறேன்’ என்று கூறவே பெண்கள் அனைவரும் ராணியார் வாழ்க என்று கூவினர்.

பிரிவுத் துன்பம் தெரிந்த மகத்தான ராணி அல்லவா அவர் என்று மகளிர் பெருமிதத்துடன் பேச புலவர் ஒருவர் எழுந்தார்.

“இன்று ஒரு அதிசயம் பார்த்தீர்களா!

 

சுடும் என்ற சொற்களை வள்ளுவப் பிரான் எப்படிப் பயன் படுத்தி இரகசியங்களை விளக்கி இருக்கிறார் என்பதை ஓர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன் நெஞ்சே தன்னைச் சுடும்

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்

குலஞ் சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்

 வள்ளுவர் வாழ்வியல் இரகசியங்களைத் தேர்ந்த சொற்களால் விளக்கும் அருமையே அருமை” என்று மகிழ்ந்து கூறினார்

வள்ளுவரின் தெள்ளுதமிழ் அமுதத்தைப் பருகிய மக்கள் கூட்டம் கலைந்தது. மறு நாள் மலர்ந்தது.

   தொடரும்

***

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 293,306,799,1019,1207

TAGS– 100 கேள்விகள்! – 4 

MAHABHARATA PLACE NAMES CROSS WORD (Post No.5711)

 

WRITTEN by London Swaminathan



swami_48@yahoo.com


Date: 28 November 2018


GMT Time uploaded in London 19-05

Post No. 5711




Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

AT LEAST 13 PLACE NAMES FROM THE MAHABHARATA ARE IN THIS CROSS WORD; IF YOU CANT IDENTIFY WITHIN 30 MINUTES THEM LOOK AT THE ANSWERS.

1.
2
A 3.
4. 5 6
7 8
9
10
11

ACROSS

  1. MODERN DELHI, ANOTHER CAPITAL OF PANDAVAS

2.COUNTRY OF KARTAVIRYA ARJUNA

6.THE UTOPIA OF INDIAN MYTHOLOGY; LAND OF GOLD WHERE ARJUNA GOT GOLD

8.KING SHALVA RULED FROM HERE ,WHO AMBA WANTED TO MARRY

10.HIRANYAVARMA RULED FROM HERE. SHIKANDI MARRIED HIS DAUGHTER.

  1. PLACE WHERE A WAX HOUSE WAS CONSTRUCTED TO KILL PANDAVAS

DOWN

  1. CAPITAL OF KURU DYNASTY
  2. PANDAVAS WERE EMPLOYED HERE
  1. COUNTRY OF KAIKEYI, ALSO FIGURE IN MAHA BHARATA
  2. COUNTRYOF AMBA, AMBALIKA AND AMBIKA
  3. KARNA WAS MADE KING OF THIS COUNTRY
  4. MIGHTY STATE OF INDIA,MODERN BIHAR; JARASANDHA WAS FROM HERE.
  5. – THE FAMOUS BATTLEFIELD

I N D R A P R A S T H A
Y R
H A I H A Y A A T
A K G M E
S E N A H
T U R U K A R A T T U S
I A S U
N M S H A U B Y A R
A A I A U
P G K
U A A N R A S A D
R D
A A T A R V A N R A V

ANSWERS

ACROSS

1.INDRAPRASTHA- MODERN DELHI, ANOTHER CAPITAL OF PANDAVAS

2.HAIHAYA- COUNTRY OF KARTAVIRYA ARJUNA

6.UTTARAKURU- THE UTOPIA OF INDIAN MYTHOLOGY; LAND OF GOLD WHERE ARJUNA GOT GOLD

8.SHAUBYA- KING SHALVA RULED FROM HERE ,WHO AMBA WANTED TO MARRY

10.DASARNA-  HIRANYAVARMA RULED FROM HERE. SHIKANDI MARRIED HIS DAUGHTER.

11.VARNAVRATA- PLACE WHERE A WAX HOUSE WAS CONSTRUCTED TO KILL PANDAVAS

DOWN

  1. HASTINAPURA- CAPITAL OF KURU DYNASTY
  2. MATSYA- PANDAVAS WERE EMPLOYED HERE

4.KEKAYA- COUNTRY OF KAIKEYI, ALSO FIGURE IN MAHA BHARATA

4.KASHI- COUNTRY  OF AMBA, AMBALIKA AND AMBIKA

5.ANGA- KARNA WAS MADE KING OF THIS COUNTRY

  1. MAGADA- MIGHTY STATE OF INDIA,MODERN BIHAR; JARASANDHA WAS FROM HERE.

9.KURUKSHETRA- THE FAMOUS BATTLEFIELD

tags- Place names , Maha bharata, cross word

–subhm–