ஸம்ஸ்க்ருதம் சாகாது! சாகவும் முடியாது!! (Post No.5612)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 1 November 2018

GMT Time uploaded in London – 8-53 am

Post No. 5612

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஸம்ஸ்க்ருதம் செத்தால் தமிழும் சாகும். ஏனெனில் தமிழ் இலக்கியம், தமிழ் அகராதி, நிகண்டு முழுவதும் பிரிக்க முடியாத அளவுக்கு சம்ஸ்க்ருதச் சொற்கள்!!

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் எழுதிய ‘மைத்ரீம் பஜத’ என்ற உலக சமாதான, உலக அமைதி, மக்கள் நல் வாழ்வு பற்றிய ஸம்ஸ்க்ருதப் பாடலை திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி , ஐ.நா.சபையில் பாடியதன் மூலம் ஸம்ஸ்க்ருத ஒலி உலக நாடுகள் முழுவதிலும் ஒலித்தது.

ஸம்ஸ்க்ருதத்தில் சுபாஷித ரத்ன பாண்டாகாரம் போன்ற தனிப்பாடல் திரட்டு நூல்கள் ஏராளம், ஏராளம். அதில் அதி பயங்கர ‘செக்ஸி’ பாடல் முதல் நக்கல், கிண்டல் பாடல்கள் வரை பல்லாயிரம் உள.

யார் எல்லாம் ஸம்க்ருதத்தைக் கிண்டல் செய்கிறார்களோ அவர்கள் பெயர்கள், அப்பா பெயர்கள், அம்மா பெயர்கள் எல்லாம் ஸம்ஸ்க்ருதம் என்றும் காட்டினேன்.

 

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ, திருக்குறளில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ அவை செத்துவிடும் என்றும் காட்டினேன்.

தமிழில் இது வரை ஒரு அகராதியோ, நிகண்டோ வரவில்லை என்பதையும் சொல்லுவேன். பக்கத்துக்குப் பக்கம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்!! ஆனால் நாம் அதை தமிழ் நிகண்டு, தமிழ் அகராதி என்போம்!!

நிற்க.

இன்றும் கூட ஸம்ஸ்க்ருதத்தில் நையாண்டி பாடல் எழுத முடியும் என்று மதுரை அன்பர் எழுதியதை எனது சகோதரர் (வாட்ஸ் அப்பில் வந்ததை எனக்கு) அனுப்பினார். இதோ இட்லி பற்றிய ஸம்ஸ்க்ருத  கவிதை:–

 

–subham–

தன்னைத் தானே புகழாதே-குறள் கதை (Post No.5611)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 1 November 2018

GMT Time uploaded in London – 7-03 am

Post No. 5611

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. இதை அவ்வையார், மநு, வள்ளுவர், அதிவீரராம பாண்டியன் முதலிய பல அறிஞர்கள் சொன்னதைக் கீழே கொடுத்துள்ளேன். இதை விளக்க ஒரு உண்மைச் சம்பவத்தை எடுத்துரைப்பேன்.

கல்கத்தா நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்தது. அந்தக் காலத்தில் கடுமையான குற்றம் புரிந்தோரை அந்தமான் தீவிலுள்ள தனிமைச் சிறைக்கு அனுப்பி விடுவர். மனித வாடையே இல்ல்லாமல், புழுத்த கஞ்சியைச் சாப்பிட்டுக்கொண்டு வாழ்நாள் முழுதும் இருக்க வேண்டும். இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோரையும் பிரிட்டிஷார் இப்படிக் கடும் குற்றம் இழைத்ததாகக் கருதி அனுப்பினர். சாவர்க்கர் போன்றோர் இப்படி அனுப்பப் பட்டனர். அது வேறு கதை. நான் சொல்வது உண்மைக் குற்றவாளி கதை.

வத்தலும் தொத்தலுமாக இருந்த ஒருவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி போலீஸார் சொன்னார்கள்:- இவன் அதி பயங்கரக் குற்றவாளி. இவனுக்கு ஜீவாந்தர சிக்ஷை கொடுத்து அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும்.

நீதிபதி சொன்னார்-

ஐயோ பாவம்! காற்றடித்தால் பறந்துவிடுவான் போல் இருக்கிறதே. இவன் என்ன அப்படிக் குற்றம் புரிய முடியும்? இவனைப் போய் அந்தமானுக்கு அனுப்பச் சொல்லுவது நியாயமா?

இதைக் கேட்டதுதான் தாமதம்! அந்தக் குற்றவாளி, அனுமார் போல ஒரே தாவாகத் தாவி, கூண்டுக்கு வெளியே குதித்தான்.

“என்ன நினைத்தீர்கள் என்னை? நான் காற்றடித்தால் பறப்பவன் அல்ல. என்னால் எதுவும் செய்ய முடியும்” என்று மாரைத் தட்டி வீர வசனம் பேசினான்.

 

ஜட்ஜ் சொன்னார்:

யார் அங்கே? அவனை மீண்டும் கூண்டுக்குள் ஏற்றுங்கள். இந்த ஆள் எதையும் செய்ய வல்லவன். நோஞ்சான் அல்ல. அந்தமானுக்கு அனுப்புங்கள். இவனுக்குக் கடுங்காவல் தண்டனை.

தன்னைத் தானே புகழ்வது எவ்வளவு அபாயம்!

நுணலும் தன் வாயால் கெடும், எங்கப்பன் குதிருக்குள் இல்லை — என்ற பழமொழிகளும் நினைவுக்கு வரும்.

From my old post:–

இதோ அறிஞர்கள் சொன்னது என்ன என்று படியுங்கள்:–

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே), வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில்  அவ்வையார்  அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439)

பொருள்:

தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

 

கூரம் பாயினும் வீரியம் பேசேல்

–கொன்றை வேந்தன்

(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை

வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

நயவாமை யன்றே நலம்

பொருள்:

தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

–SUBHAM–

 

மீ டூ?! Me Too – ஓடாதீங்க, படியுங்க!! (Post No.5610)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 1 Novemberr 2018

Time uploaded in London – 5-52 AM (British Summer Time)

Post No. 5610

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு

மீ டூ?!  – ஓடாதீங்க, படியுங்க!!

ச.நாகராஜன்

Me Too? மீ டூ?!  – ஓடாதீங்க, படியுங்க!!

Me Too பற்றி ஒரு ஜோக் சொல்லப் போறேன்னு சொல்ல வந்தேன். அதற்குள் இப்படி ஓடினா, எப்படிங்க!

கொஞ்சம் மேலே படிங்க!

ஜோக் இது தான்! கார்ட்டூனில் வந்தது இது.

கணவன் அலுவலகம் செல்லும் போது “ ஐ லவ் யூ” என்று சொல்லி விட்டுக் கிளம்ப ஆயத்தமானான்.

மனைவி Me Too என்கிறாள்.

அவ்வளவு தான், அலறி அடித்துக் கொண்டு கணவன் ஓடுகிறான்!

நல்ல ஜோக், இது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை!

*

மீ டூவை ஒட்டி எழுந்த வீடியோக்களை இணையதளத்தில் காணலாம்.

நாளுக்கு ஒரு – இல்லை, பல – வீடியோக்கள் –  காமவெறிக் கவிஞரைப் பற்றிய பரபரப்பூட்டும்  செய்திகளைத் தருகின்றன.

‘உன் இடுப்போ ஒரு உடுக்கை

உன் மார்போ  ஒரு படுக்கை’

என்ற ‘தமிழை வாழ வைக்கும் மகத்தான தமிழ் காமக் கொடூரக் கவிஞர்’ என்னை நோக்கிப் போனில் பாடினார் என்று ஒரு பெண் சொல்லும் வீடியோ!

பிரபல பாடகர் ஒருவரின் மருமகள், ‘அந்த ஆள் அப்படிப்பட்டவர் தான்’ என்று கூறும் ஒரு வீடியோ!

ஆண்டாளைப் பழித்த அவனுக்கு ஆயுள் முழுவதும் சாபம் தான் என்று ஒரு வீடியோ!

காமக் கொடூரக் கவிஞரின் மனைவியே அவர் நடத்தும் பெண்கள் ஹாஸ்டலில் அந்த மனிதர் வரும் போதெல்லாம் எல்லாப் பெண்களும் கதவை சாத்திக் கொண்டு ரூமிலேயே இருக்க வேண்டும், வெளியில் இருக்க வேண்டிய பெண்கள் மார்பில் துப்பட்டாவைக் கண்டிப்பாக மார்பில் போட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்ததாக ஒரு வீடியோ!

ஏகப்பட்ட பெண்கள் அந்தக் கொடூரனால் அவஸ்தைப் பட்டதாகத் தனக்கு ஏராளமான ட்விட் வருவதாக ஒரு வீடியோ!

சொல்லி மாளவில்லை, வீடியோக்களின் எண்ணிக்கை.

இதை வழக்கம் போல பார்ப்பனீயமாக மாற்ற முயலுகிறது இன்னொரு வீடியோ!

தடவிப் பார்க்க ஆசைப்படும் போது பார்ப்பனீயம் தெரியவில்லை, அதைத் தட்டிக் கேட்டால் பார்ப்பனீயமா என்று இன்னொரு வீடியோ!

பிரபல நடிகர் இப்படிப்பட்ட கொடூரங்களைத் தட்டிக் கேட்க நான ஒரு தளம் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லும் ஒரு வீடியோ;

அட, உனக்கே ஒரு மீ டூ வரப்போகிறது என்று அவரை நையாண்டி செய்து இன்னொரு பிரப்ல மாஜி வில்லன் நடிகரின் வாரிசு முழங்கும் இன்னொரு வீடியோ!

அட, நல்ல தமிழகமே! உனக்கு இப்படி ஒரு சாபக் கேடா!

நல்லவரை வீட்டிற்கு அனுப்பியதன் பலனை 1967லிருந்து அனுபவிக்கிறாயா!

*

ஒரு அரைவேக்காடு – கிறிஸ்தவ திராவிட இயக்கப் பேர்வழி – சின்ன வயது – கண்டபடி தமிழ்நாட்டாரைப் பேசும் ஒரு வீடியோ! அதில் அந்தப் பண்பாடு கெட்டவன் ரமண மஹரிஷியைப் பற்றியும் பேசுவதைக் கேட்ட பின்னர் தமிழகத்தின் மொத்த அவலமும் தெரிய வருகிறது.

பிரபல அப்பா நடிகரைப் பற்றி மகள் உண்மைகளைக் கொட்டிப் பேசும் வீடியோ!

பிரபல நடிகை பரிதாபமாக நடு இரவில் முழித்துப் புலம்புவதாக – “கேள்விப்படுவதாக” – ஒரு வீடியோ!

பழைய கால ஹீரோ நடிகர் – இன்று பரிதாபகரமான நிலையில் இருப்பதாக ஒரு வீடியோ!

முஸ்லீம்கள் தங்கள் பெயரை மறைத்துக் கொண்டு ஹிந்துப் பெயரில் வலம் வரும் லிஸ்டை போட்டோவுடன் காண்பிக்கும் ஒரு வீடியோ!

கிறிஸ்தவர்கள் தங்கள் பெயரை மறைத்துக் கொண்டு ஹிந்துப் பெயரில் வலம் வரும் லிஸ்டை போட்டோவுடன் காண்பிக்கும் ஒரு வீடியோ!

எல்லாம் ஒரு நிமிடத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் நீடிக்கும் அவ்வளவு தான்!

அதற்குள் செய்ய வேண்டிய டாமேஜை செய்து முடித்து விடும்!

*

இவற்றில் எத்தனை உண்மையோ!

எத்தனை பொய்யோ!

ஒரு தொழில்நுட்ப உத்தியை இந்த அளவு கேவலமாக மாற்றும் “சிறந்த பண்பை” இன்றைய தமிழகம் கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கிறதா?

காமக் கொடூரக் கவிஞன் போன்றவரை எக்ஸ்போஸ் செய்ய வீடியோவின் துணையை நாடினேன்; மீடியாவை அழைத்து ‘ மீ டூ’ செய்தேன் என்றால் புரிகிறது;

ஆனால் இதையே வெறுப்பை வளர்க்கும் கிறிஸ்தவ, ஜிஹாதி, கம்யூனிஸ, தீய திராவிட சக்திகள் முதலியவற்றின் கருவியாக மாற்றும் போது தான் மனம் கசக்கிறது!

*

ஆபாசமாக எழுதும் மஞ்சள் பத்திரிகையான ‘இந்துநேசனை’ கண்டு கொதித்து சின்ன அண்ணாமலை அருள் என்ற கமிஷனரிடம் ரிபோர்ட் செய்ய, அவர் ஒரே நாளில் அந்தப் பத்திரிகையைத் தடை செய்ததை சின்ன அண்ணாமலை புத்தகத்தின் வாயிலாகப் படித்து அறிகிறோம்.

மஞ்சள் பத்திரிகை ஒழிந்தது.

இப்போது ஒரு தொழில்நுட்ப உத்தியாக மஞ்சள் வீடியோ மலர்கிறதோ?!

மஞ்சள் வீடியோ தமிழகத்தை மஞ்சள் தமிழகமாக ஆக்கி விடுமோ?!

’இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம்’, மீ டூ இயக்க வெளிப்பாடுகள் நிச்சயம் அவசியமே!

ஆனால் இதை பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரால் திசை திருப்புவோர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டியது அவசியம் அல்லவா!

இதற்கு இன்றைய சட்டத்தில் இடமில்லையா, அல்லது இடமிருந்தும் அமுல் படுத்த மனம் இல்லையா?

சிந்திக்க வேண்டிய கேள்வி இது!

***

London Tribute to Iron Man of India (Post No.5609)

 

Compiled  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 31 October 2018

GMT Time uploaded in London – 21-16

Post No. 5609

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Evening Standard of London has published a beautiful short write up on Sardar Vallabbhai Patel on the day Prime minister Narendra Modi opened the tallest statue in the world. Here is what Lord Gadhia wrote in today’s paper
Today, the world’s tallest statue, the Statue of Unity, is unveiled in India by prime minister Narendra Modi, standing more than twice as high as the Statue of Liberty, the man honoured with this likeness is Vallabhbhai Patel — one of India s founding fathers and the first deputy prime minister of India.

His most visible legacy was integrating 552 princely states which had the option to join either India or Pakistan or remain independent. This required a blend of determination, skilful diplomacy and steely resolve, earning him the sobriquet the Iron Man of India.

The last viceroy Louis Mountbatten, refereed to this achievement in glowing terms. He said “had you failed, the results would have been disastrous “.

However, Patel was a man of many talents. He became India’s first deputy prime minister and home minister, served as the supreme commander of the armed force s ,and established the Indian Civil Service. But he started out as a freedom fighter.

Patel’s participation in the freedom movement came at considerable personal cost. He was imprisoned by the British many times, and his wife succumbed to cancer when he was 33. He gave up a place to study law in London to his elder brother. Although the latter fulfilled this ambition, coming top of his class in Middle Temple , and he even fortified the opportunity to become prime minister at Gandhi s request.

A 300 million pound statue might be viewed as a vanity project but some of the cost is being offset by collecting scrap Iron from farmers across India. And the monument is expected to become a major tourist attraction.

India is vast, and its 29 states could easily be separate countries, yet it has remained unified and a democracy— despite the many forces pulling in different directions.

This is India s real miracle, avoiding fragmentation. Although Patel s Statue metres, his reputation as the unifier of an independent India stands far taller.

Writer Baron Gadhia, an investment banker, was made a life peer in 2016

Evening Standard dated 31 October 2018

5.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? QUIZ க்விஸ்- பகுதி 5 (Post No.5608)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 31 October 2018

GMT Time uploaded in London – 7-47 AM

Post No. 5608

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் மஹாராணிகள்

தமிழ்நாட்டு மஹாராணிகளை அடையாளம் காண முடிகிறதா என்று பாருங்கள்; சங்க இலக்கியம் ,கல்வெட்டுகளில் இருந்து புகழ்பெற்ற வரலாற்று, கல்வெட்டு அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது புஸ்தகத்தில் கொடுத்துள்ளார். கடைசி கேள்வியைக் காண்க

81.வர்த்தமான மஹாவீரரின் தாயார் பெயர் என்ன?

82.ஜவஹர்லால் நேருவின் சகோதரி; ஐ.நா.சபையில் பெரும்பதவி வகித்தவர் யார்?

83.முதலில் வக்கீல் தொழில் ஆற்றிய பெண்மணி யார்? பார்ஸி இனத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பணிபுரிந்தார்

84.இந்தப் பெண் அறிஞர் ஜனகனுடன் தத்துவ விஷயங்களை விவாதித்ததாக மஹாபாரதம் பகரும்; மைத்ரேயியும் அல்ல, கார்கியும் அல்ல; வேறு ஒருவர், யார் அவர்?

85.கேரளத்தில் பிறந்த தாவரவியல் அறிஞர்; இந்திய தாவரவியல் சங்கத்தில் அழியா இடம்பெற்ற மாது யார்?

86.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 115 புஸ்தகங்களை எழுதிக் குவித்த நாவல் ஆசிரியை, பத்திரிகையாளர் யார்?

87.மகனும் மன்னனுமான அலார்கா என்பவனுக்கு தர்ம உபதேசம் செய்த தாய் யார்? மார்கண்டேய புராணம் புகலும், புகழும் நங்கை அவள்.

88.காஷ்மீரின் 17ஆம் நூற்றாண்டு  பக்தை, கவிஞர் யார்?

89.முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மனைவி, விடுதலைப் போராட்ட வீராங்கனை; இந்திரா காந்தியின் தாய் யார்?

90.ஜெயப் ப்ரகாஷ் நாராயணனின் மனைவி; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணியின் பெயர் என்ன?

91.புத்தர் சொற்பொழிவாற்றுகையில் சப்தம் போட்டவுடன் ஏழு வகை மனைவி பற்றி புத்தர் பட்டியல் கொடுத்தார்; யார் அந்த நங்கை?

92.முதல் குலோத்துங்க சோழனின் மனைவியர் இருவர் என்று கல்வெட்டுகள் பேசும்; அந்த மஹாராணிகள் எவரோ?

93.கவிஞர், பாடகி, 90-க்கும் மேலான இந்திப் படங்களில் நடித்த நடிகை யார்?

94.இந்தியாவின் பொற்காலம் எனப்படும் குப்த சாம்ராஜ்யத்தின் மஹத்தான பேரரசன் சந்திர குப்தன்; அவன் ஒரு இளவரசியை மணந்து மகத சாம்ராஜ்யத்தையே வரதட்சிணையாகப் பெற்றான். யார் அந்த சீதனக் காரி (ஸ்ரீ தனம் = சீதனம்)?

95.அப்பர் என்னும் திருநாவுக்கரசரை மீண்டும் சைவ சமயத்துக்கு மாற்றிய சகோதரி யார்?

96.கடைசி கேள்வியில் இணைக்கப்பட்டது

  1. காஷ்மீர் மஹாராணிகளுக்கு விஷேச கஜானா, சிறப்பு அதிகாரங்கள் உண்டு. அதன் கீழ் பத்மராஜாவின் முறைகேடான நிர்வாகத்தை ஒரே ஆணையில் குப்பையில் போட்ட மஹாராணியின் பெயர் என்ன?

98.பாண்டவர் இருவரின் தாய்; பாண்டுவுடன் வானப்ரஸ்தம் சென்று, அவருடன் காட்டில் உயிர் துறந்த புனிதை யார்?

96,99, 100.ஒவ்வொருவர் பெயர் சொல்லியும் யார், எவர் என்று

கேட்காமல் ஒரு தமிழ் மஹாராணி பட்டியல் தருகிறேன் . யார் என்று கண்டுபிடியுங்கள்.

சங்கா-

தரணி முழுதுடையாள்-

செம்பியன் மாதேவி-

அம்மங்கா தேவி-

குந்தவை-

மணக்கிள்ளி-

அவனி முழுதுடையாள்- மங்கையர்க்கரசி-

பதுமன் தேவி-

ரங்கபதாகை-

விலாசவதி-

பஞ்சவன் மாதேவி-

வானவன் மஹாதேவி-

தியாக பதாகை-

மதுராந்தகி-

குந்தவை

ஒரட்டானன் சொரப்பை-

தந்தி சக்தி விடங்கி/லோக மாதேவி-

ஒவ்வொரு மன்னருக்கும் பல    மனைவியர் இருந்தாலும் ஒருவரோ, இருவரோ மட்டும் அரியணயில் அமர்ந்தனர்.

முக்கோக்கிழானடிகள்-

 

ANSWERS:–

81.திரிஷலா

82.விஜயலெட்சுமி பண்டிட்

83.கார்னீலியா சோரப்ஜி

84.சுலபா

85.டாக்டர் ஜானகி அம்மாள்

86.கோதை நாயகி அம்மாள்

87.மதலஸா

88.ரூப பவானி

89.கமலா நேரு

90.பிரபாவதி தேவி

91.சுஜாதா

92.தியாகவல்லி, ஏழிசை வல்லபி

93.மீனா குமாரி

94.குமார தேவி

95.திலகவதி

97.சூர்யமதி

98.மாத்ரி

  1. 99, 100++++++

சங்கா- பல்லவ மன்னன் நந்திவர்மன் மனைவி

தரணி முழுதுடையாள்- விக்கிரம சோழன் மனைவி

செம்பியன் மாதேவி- கண்டராதித்த சோழனின் மனைவி

அம்மங்கா தேவி- ராஜேந்திர சோழன் மகள்; சாளுக்கிய ராஜ ராஜனின் மனைவி

குந்தவை- ராஜராஜனின் மகள்; சாளுக்கிய மன்னன் விமலாத்தனின் மனைவி

மணக்கிள்ளி- சோழன் மகள்; நெடுஞ்சேரலாதனின் மனைவி

அவனிமுழுதுடையாள்-மலாட குலப் பெண், இரண்டாம் ராஜ ராஜனின் மனைவி

மங்கையர்க்கரசி- சோழன் மகள்; பாண்டியன் நெடுமாறனின் மனைவி

பதுமன் தேவி- வேளாவிக் கோமான் மகள்; சேரலாதன் மனைவி

ரங்கபதாகை- பல்லவமன்னன் இராஜ சிம்மன் மனைவி

விலாசவதி- இராஜ சிம்மனின் மற்றொரு மனைவி

பஞ்சவன் மாதேவி- முத்தரையன் மஹிமாலயன் மனைவி

வானவன் மஹாதேவி- உத்தம சோழன மனைவி

தியாக பதாகை- விக்கிரம சோழன் மனைவி

மதுராந்தகி- முதல் குலோத்துங்கனின் முதல் மனைவி; அவள் இறந்த பின்னர் வேறு இருவரை மணந்தான்.

குந்தவை (ராஜராஜனின் தமக்கை)- வந்தியத்தேவன் மனைவி

ஒரட்டானன் சொரப்பை- உத்தம சோழனின் பல மனைவியருள் ஒருத்தி

தந்தி சக்தி விடங்கி/லோக மாதேவி-இராஜ இராஜனின் தேவியரில் ஒருத்தி

ஒவ்வொரு மன்னருக்கும் பல    மனைவியர் இருந்தாலும் ஒருவரோ, இருவரோ மட்டும் அரியணயில் அமர்ந்தனர்.

முக்கோக்கிழானடிகள்- விக்ரம சோழனின் முதல் மனைவி; பின்னர் தியாக பதாகை

தமிழ் மஹாராணிகளின் கல்வெட்டுக் குறிப்புகளை டாக்டர் நாகசாமி புஸ்தகத்தில் காண்க.

–SUBHAM–

குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?! (Post No.5607)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 31 October 2018

Time uploaded in London – 7-13 AM (British Summer Time)

Post No. 5607

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?!

ச.நாகராஜன்

1

கபீர்தாஸருக்கு ஒரு குழப்பம் வந்து விட்டது.

திடீரென்று அவர் முன்னர் குருவும் கோவிந்தனும் ஒரே சமயத்தில் வந்து தோன்றி விட்டனர்.

இப்போது இந்த இருவரில் யாரை முதலில் நமஸ்கரிப்பது?

குருவையா?

அல்லது கோவிந்தனையா?

ஒரு நிமிடம் யோசித்த கபீர்தாஸர் கோவிந்தனை விடுத்து முதலில் குருவை நமஸ்கரித்தார்.

அதற்கான காரணத்தை அவர் சொல்கிறார் இப்படி:

“குரு கோவிந்த் தோனோ கடே காகே லாகௌ பாய் |

பலிஹாரி குரு ஆப்னே கோவிந்த் தியோ பஹாய் ||”

இந்த தோஹாவின் பொருள் :

குரு கோவிந்தர் இருவரும் என் வாசலில் வந்து நின்றால் யாரை வணங்குவது?

முதலில் குருவைத் தான் வணங்க வேண்டும். ஏனெனில் அவரில்லாமல் கோவிந்தரை எப்படி என்னால் அறிய முடியும்?

கோவிந்தனைக் காட்டி அருளிய குருவுக்கே எனது முதல் நமஸ்காரம் என்பது கபீரின் முடிவு.

Guru Govind dono khade kake lagu paay

Balihari Guru aapki Govind diyo batay.

Kabir wrote this verse to sing the glory of Guru, without whose help, one cannot cross this ocean of worldly life. He asks, “If both, Guru and God in form of Govind were to appear at the door, whose feet will I worship first?” He answers, “It has to be the Guru’s feet first, because without him, how would I have recognized (known) God?”

2

 

எம்பார் ஒரு சமயம் ஓரிடத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். ஏராளமான கூட்டம்.

யார் முதலில் ஆன்ம குருவாக இருக்கிறார் என்பதைப் பற்றி பிரசங்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

கூட்டத்தில் ஒருவர், “சாஸ்திரங்களை குருவே உபதேசித்து அருள்கிறார். ஆகவே அவரே முக்கியம்” என்றார்.

இன்னொருவரோ, “ பெரிய மகான் தான் நம்மை ஆன்ம குருவைக் காண்பிக்கிறார்” என்றார்.

எம்பார் அவர்களை நிறுத்தினார்: “அது அப்படியில்லை” என்று கூறிய அவர் தொடர்ந்து சொன்னார்: “நம் உள்ளத்தில் உறைகிறானே, பரமன், நம் கண்ணுக்குத் தெரியாத அவன் தான் நல்ல விஷயங்களைத் தடை செய்து தடுத்து விடாமல் கண்ணுக்குத் தெரியும்படி நேரடியாக வந்து அருளும் குருமார்களையும், சேவைக்குத் தூண்டும் உதவியாளர்களையும் அவர்கள் சொல்வதை ஏற்றுச் செயல்படும்படி அருள்கிறான்.” என்றார்.

ஆக உள்ளத்தில் உறைந்து அனைத்து நல்ல காரியங்களையும் தூண்டி அருளும் நாராயணனை எப்போதும் தியானிக்க வேண்டும் என்பது அவரது அருளுரையாயிற்று.

இறைவன் தானே எப்போதும் நேரில் வருவதில்லை.

பெரியவர்கள், மகான்கள், குரு இப்படி பல ரூபத்தில் தக்க சமயத்தில் வந்து உதவுபவனே இறைவன்.

ஆதாரம் பகவத் விஷயம்

God-the Guru in the heart.

In the lecture-assembly of Embar, the subject of who is the first Spiritual Preceptor for the soul came to be discussed.

” The Guru imparts to us the Scriptures,” some said. Others opined : ” The first is that godly man who helps to take us to the spiritual Preceptor for acceptance.”

” Not so,” said Embar, ” the First Preceptor is that Universal Lord who is seated in our hearts, and who unseen, gives us the impulse not to resist, but to yield to the proposals for good services offered by the visible Preceptors or Helpers.”

[Bhagavat Vishayam : Bk. II. p. 720-1. “Ottar” 11-3-2]

****

தவம் பற்றிய முப்பது பொன் மொழிகள் (Post No.5606)

தவம் பற்றிய முப்பது பொன் மொழிகள் (Post No.5606)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 30 October 2018

GMT Time uploaded in London – 20-27

Post No. 5606

நவம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்

இந்த மாத காலண்டரில் தவம் பற்றிய முப்பது பொன்மொழிகள் இடம் பெறுகின்றன.

பண்டிகை தினங்கள்–

தீபாவளி- நவம்பர் 6 (தமிழ்நாடு), 7 (வட இந்தியா); 8 கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்; 13-கந்த சஷ்டி  சூரசம்ஹரம்; 14-குழந்தைகள் தினம்; 23- திருக் கார்த்திகை

அமாவாஸை- 7; பௌர்ணமி-22; ஏகாதஸி விரதம்-3, 19

முஹூர்த்த தினங்கள்-4,5,9,11,14,28

நவம்பர் 1 வியாழக்கிழமை

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு-261

தவம் என்பது தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்கு துன்பம் கொடுக்காமல் இருத்தல் ஆகும்

நவம்பர் 2 வெள்ளிக் கிழமை

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது-262

மன வலிமை உடையார்க்கே தவம்; பிறர் முயற்சிப்பது வீண்

நவம்பர் 3 சனிக் கிழமை

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்-263

 
உணவு,உறைவிடம்,உடை ஆகியவற்றை சந்யாசிகளுக்குக் கொடுப்பதற்குத்தான் பல இல்லறத்தார்கள் சந்யாஸி ஆகவில்லை!

நவம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை

 
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்- குறள் 264

பகைவரை அழித்தல், நண்பர்களைக் காத்தல்- இரண்டும் தவத்தால் எளிதில் முடியும்

நவம்பர் 5 திங்கட் கிழமை

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப்படும் – குறள் 265

தவம் செய்தால் விரும்பியன கிடைக்கும்; உடனே தவம் செய்க.

நவம்பர் 6 செவ்வாய்க் கிழமை

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு—266

பற்று இல்லாதவர் செய்வது தவம்; ஏனையோர் செய்வது வீண் முயற்சி

நவம்பர் 7 புதன் கிழமை

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு—267

புடம் இடும் தங்கம் மேலும் மேலும் ஒளிவீசும்; தவம் செய்யச் செய்ய தேஜஸ் பிறக்கும்

 
நவம்பர் 8 வியாழக்கிழமை
 
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்-268

268
நான் என்ற செருக்கு அழிந்தால் எல்லோரும் அவனைத் தொழுவர்

நவம்பர் 9 வெள்ளிக் கிழமை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு—269

தவ வலிமையால் எமனையும் /மரணத்தையும் வெல்ல முடியும்

நவம்பர் 10 சனிக் கிழமை

269
இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்—270

 

பணமில்லாதவர் உலகில் அதிகம்; பணம் படைத்தவர் குறைவு; ஏன்?  தவம் செய்யாதவர் அதிகம்.தவம் செய்தவர் குறைவு.அதனாலதான்!

நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை

     வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்-271
 
    பொய்யான ஒழுக்கம் உடையவனைக் கண்டு (போலி சாமியார்)

அவனுள் இருக்கும் பஞ்ச பூதங்களும் சிரிக்கும்

 

நவம்பர் 12 திங்கட் கிழமை

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று–274

மன வலிமை இல்லாதவன் தவம் செய்வது புதருக்குப் பின்னே

 
   நின்று பறவைகளை வேட்டையாடுவதைப் போன்றதே

நவம்பர் 13 செவ்வாய்க் கிழமை

தவ சீலர்களிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்-      காளிதாஸனின் சாகுந்தல நாடகம்

நவம்பர் 14 புதன் கிழமை

முனிவர்களின் சாபத்தை யாராலும் மாற்ற முடியாது

-பாஷா எழுதிய ப்ரதிமா நாடகம்

நவம்பர் 15 வியாழக்கிழமை

தவம் மூலம் சக்தி பெறலாம்- பாரத மஞ்சரி

   நவம்பர் 16 வெள்ளிக் கிழமை

தவம் மூலம் கிடைக்கும் ஆனந்தமே நல்லது; ஏனையவை        நிலையற்றவை- வால்மீகி ராமாயணம் 7-84-9

நவம்பர் 17 சனிக் கிழமை

பாதுகாப்பு இல்லாததால் முனிவர்கள் தங்கள் தபோ சக்தியைப்      பயன்படுத்தி சாபம் என்னும் ஆயுதங்களைப் பயன் படுத்துகிறார்கள்;      அவர்களுடைய ஆன்மீக சக்தியை விரயம் செய்கிறார்கள் –  ரகுவம்ஸம் 15-3

நவம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை

முனிவர்களின் சொற்கள் வீணாவதில்லை- நைஷதீய சரித்ர

நவம்பர் 19 திங்கட் கிழமை

தவத்துக்கு இடையூறுகளும் தடைகளும் அதிகம்-  வால்மீகி   ராமாயணம் 3-10-14

நவம்பர் 20 செவ்வாய்க் கிழமை

தபோவனங்களுக்குள் செல்கையில் எளிமையான ஆடைகளை     அணிந்து செல்லுங்கள்– சாகுந்தலம்

  நவம்பர் 21 புதன் கிழமை

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின்–272

தெரிந்தும் தவறு செய்பவனுக்கு தவக் கோலம் ஒருபயனும் தராது

நவம்பர் 22 வியாழக்கிழமை

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று- 273

 
   போலி சாமியார்களின் வேஷம், ஒரு பசு, புலித்தோலைப்    போர்த்திக்கொண்டு மேய்வதற்குச் சமம்

நவம்பர் 23 வெள்ளிக் கிழமை

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்- 279

அம்பு நேராக இருக்கும்; யாழ் கோணலாக இருக்கும்;ஆனால் அம்பு    கொடிய செயல் செய்யும்; யாழ் இனிமை தரும்; தோற்றத்தைக்   கண்டு மயங்காமல் (சாமியார்களை) செயலால் எடை போடு

   நவம்பர் 24 சனிக் கிழமை

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்-280

தவசீலர்களுக்கு மொட்டையும் தேவை இல்லை; நீண்ட    முடியும் தேவை இல்லை; உலகத்தார் தவிர்த்து ஒதுக்கிய தீய    ஒழுக்கங்களைக் கைவிட்டால் போதும்.

நவம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை

“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :

காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :

பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:

ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”

—பஜகோவிந்தம் பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான்.    மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன்    ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி    உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.

280

நவம்பர் 26 திங்கட் கிழமை

சித்தம் போக்கு சிவன் போக்கு, ஆண்டி போக்கு அதே போக்கு- தமிழ்ப் பழமொழி

நவம்பர் 27 செவ்வாய்க் கிழமை

ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்- வெற்றிவேற்கை

நவம்பர் 28 புதன் கிழமை

தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை-  தமிழ்ப் பழமொழி

நவம்பர் 29 வியாழக்கிழமை

தவத்துக்கொருவர்,  கல்விக்கிருவர்–  தமிழ்ப் பழமொழி

நவம்பர் 30 வெள்ளிக் கிழமை

தவத்திலிருந்தால் தலைவனைக் காணலாம்–

தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்– தமிழ்ப் பழமொழி

 

–subaham-

Part 5 OF 100 GREAT INDIAN WOMEN QUIZ (Post No.5605)

 

swami_48@yahoo.com
Date: 30 October 2018

GMT Time uploaded in London – 8-14 am

Post No. 5605

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

81.Who was Vardhamana Mahavira’s mother?

82.Jawaharlal Nehru’s sister who became President of United Nations Organisation

83.First woman who was  a Parsi, to practise law in India and Britain

84.A woman scholar who discussed philosophic matters with King Janaka (according to Mahabharata)

85.Great botanist of India, born in Kerala, held many big posts

86.Tamil novelist, journalist, writer who wrote 115 books nearly 100 years ago.

87.Queen who taught Dharma to her son Alarka, according to Markandeya Purana

88.Seventeenth century mystic poet of Kashmir, whose birth name was Alakeshwar

89.Wife of first prime minister Jawaharlal Nehru, mother of Indira Gandhi,freedom fighter.

90.Freedom fighter and wife of Jayapaprakash Narayan…………….

 

91.A woman who made noise during Buddha’s lecture and Buddha told the meeting about Seven Types of Wives. What is the name of that wife?

92.In Kulothunga Choza’s inscriptions, names of  two queens are mentioned. who are they?

93.Poet, Hindi film actress and singer who acted in over 90 films in 33 years…

94.One of the Greatest Emperors of India was mighty Chandragupta; he married a princess and got the dowry of Mighty Magada. What is the name of that queen?

95.A woman who reconverted Appar to Hinduism from Jain faith, (Appar-one of the Great Four of Tamil Nadu)

SEE THE LAST QUESTION

97.Kashmiri Queens had their own treasuries and powers. One of the famous queens dismissed the mal administration of Padmaraja. What is her name?

  1. A queen went to forest with Pandu and died with him. who is she?

96,99, 100++ Can you recognize these great queens of Tamil Nadu? Who are these people?

Sanga, Ammanga Devi,Kunthavai, Manakkilli, Avanimuzuthudaiyal, Paduman Devi, Panchavan Mahadevi, Vanavan Mahadevi, Orattanan Sorappai, Thanthi Sakthi Vidangi/Loka Maha Devi, Mukkookizan Adikal, Thyagavalli, Thyaka pathaka, Sembian Mahadevi, Kopperun Devi, Anthuva Sellai, Ilangovenman.

 

ANSWERS:—-

81.TRISHALA

82.VIJAYALAKSHMI PANDIT

83.PARSI WOMAN CORNELIA SORABJI

84.SULABHA

  1. JANAKI AMMAL, BOTANIST

86.KOTHAINAYAKI NOVELIST

87.MADALASA in Markandeya Puranam

88.RUPA BHAWANI OF KASHMIR

89.KAMALA NEHRU

90.PRABHAVATI DEVI

  1. SUJATA

92.THIYAGA VALLI and EZISAI VALLABHI

93.Meenakumari

94.Kumaradevi

95.HIS OWN SISTER THILAKAVATHY

97.Queen Suryamati (7th chapter of Rajatarangini)

98.Madri

96, 99, 100++++.

Kunthavai- Chalukya King Vimala Aditya’s wife, dauther of mighty Raja Raja Choza

Ammanga Devi- Rajendra Choza’s daughter, Wife of Chalukya king Raja raja

Manakkilli- Wife of Neduncheralathan

Sanga- Wife of Pallava king Nandivarman

Sembian Mahadevi- Wife of Kandarathiththa Choza

Avanimuluthudaiyal- Wife of Rajaraja II

Paduman Devi- Wife of Cheralathan

Panchavan Mahadevi- Wife of Muthaiyan Mahimalayan

Vanavan Mahadevi- Wife of Uttama Choza

Orattanan Sorappai- Another wife of Uttama choza

Lokamahadevi- Rajaraja’s Chief Queen

Mukkokizan Adikal- Wife of Vikrama Choza

Madurantaki- Wife of Kulothungan I, later Thyagavalli

Thyagapathaka- Wife of Vikrama Choza

((List of Tamil Queens is taken from famous historian Dr R NagaswaMy’s book.))

 

–subham–

சபரிமலை தரிசனம் : கம்யூனிஸ்டுகளின் அக்ரமம்! (Post no.5604)

WRITTEN BY S NAGARAJAN

Date: 30 October 2018

Time uploaded in London – 7-24 AM (British Summer Time)

Post No. 5604

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சபரிமலை தரிசனம் : கம்யூனிஸ்டுகளின் அக்ரமம்!

ச.நாகராஜன்

1

சொந்தத்தில் சூன்யம் வைத்துக் கொள்வது என்று ஒரு பழமொழி உண்டு.

கம்யூனிஸ்டுகளுக்கு இந்தப் பழமொழி சபரிமலை தரிசன விஷயத்தில் நூற்றுக்கு நூறு பொருந்துகிறது.

சூன்யத்தைத் தானே வைத்துக் கொண்டு விட்டார்கள்.

தெய்வ சாபம் மற்றும் தேச சாபம் அவர்களை விடாது.

விளைவை சீக்கிரத்தில் அனுபவித்தே ஆக வேண்டும்.

விளைவு தேர்தல் முடிவின் ரூபத்தில் வந்து சேரும்.

கம்யூனிஸ்டுகளின் அக்ரமம் சபரிமலை சாஸ்தாவிந் அருளினால் ஒரு முடிவுக்கு வந்தே தீரும்!

சொந்த நாட்டிலேயே அழிந்து விட்ட கம்யூனிஸம் இந்தியாவில் இழுத்துக் கொண்டு இருக்கிறது.

சுவாசம் சீக்கிரம் நின்று விட அவர்களே வழியைத் தேடிக் கொண்டு விட்டார்கள்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

2

ஜனநாயகம் என்றால் என்ன அர்த்தம்? எந்தக் கடையனும் சமூகத்திற்கு எதிராக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று அர்த்தமா?

ஊடக தர்மம் என்றால் என்ன அர்த்தம்?

120 கோடி இந்தியர்,நாட்டுக்குச் சொந்தமானவர்கள் வாழ்கையில், அதில் ஓரிரு தேச துரோகிகள்  சொல்வதை தினமும் ஒரு மணி நேரம் ஒளி பரப்பி அதை ஒட்டு மொத்த நாட்டின் கருத்தாகச் சித்தரிக்க முற்படுவது தான் ஊடக தர்மமா?

நீதி மன்ற நியாயம் என்றால் என்ன அர்த்தம்?

120 கோடி மக்களுக்கும் ஒரே நீதி ஒரே நியாயம் ஒரே சட்டம் என்பதல்லாமல் ஹிந்துக்களுக்கு மட்டும் தனியாக ஒரு சட்டம், இதர மதங்களுக்கு இதே இந்தியாவில் ஒரு தனிச் சட்டம் என்பதா நீதி மன்ற நியாயம்?

ஹிந்துக்களுக்கான நாட்டில் ஹிந்துக்களை மட்டும் பாதிக்கும் விதத்தில் சட்டம் இருப்பது நியாயமாகுமா?

எண்ணிப் பார்த்து இதில் உள்ள குறைகளைக் களைய வேண்டிய தருணம் வந்து விட்டது, இல்லையா?!

3

செகுலரிஸம் என்றால் ஹிந்து விரோதம் என்று அர்த்தமா?

அப்படித்தான் கடந்த 70 ஆண்டு கால பாரத வரலாறு கூறுகிறது.

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒரு பெண் பாதிரியாராக இருக்க முடியாது.

பெண்ணியவாதிகளில் எந்த ஒரு பெண்ணாவது இதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறாரா?

ஊடகத்தில் இது பற்றிய எந்த ஒரு விவாதமாவது இடம் பெற்றிருக்கிறதா?

இஸ்லாமியரின் மசூதிகளில் பெண்களை அனுமதிப்பதுண்டா?

பெண்ணியவாதிகளில் எந்த ஒரு பெண்ணாவது இதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறாரா?

ஊடகத்தில் இது பற்றிய எந்த ஒரு விவாதமாவது இடம் பெற்றிருக்கிறதா?

இஸ்லாமியரின் மத சம்பந்தமான பணத்தை இதர வழிகளில் செலவழிக்க அரசால் முடியுமா? அதை வஃப் போர்ட் அல்லவா தீர்மானிக்கிறது!

கிறிஸ்தவரின் மத சம்பந்தமான பணத்தை இதர வழிகளில் செலவழிக்க அரசால் முடியுமா? அதை வடிகன் காட்டும் வழியில் இநதிய கிறிஸ்தவ தலைமைப் பீடம் அல்லவா தீர்மானிக்கிறது!

ஆனால் ஹிந்து கோவில்களின் பணமோ அரசு சொல்லும் வழியில் பணத்தை ஹிந்து கோவில்களுக்கான ஆக்கபூர்வமான வழியில் அல்லாமல் எதற்கு வேண்டுமானாலும் செலவழிக்கப்படுகிறது.

நீதி மன்றங்கள் இஸ்லாமியர் பற்றியோ அல்லது கிறிஸ்தவர் பற்றியோ எந்த ஒரு வழக்கையும் மத ரீதியாக சுயேச்சையாக விசாரித்துத் தீர்ப்பு சொல்ல முடியாது.

அதாவது செகுலரிஸம் என்பது ஹிந்து விரோதம் – ஹிந்து விரோதம் மட்டுமே – என்பது உறுதியாகிறது!

4

பாரம்பரிய பழக்கம் என்பது ஹிந்து  மதத்தில் ஒரு முக்கியமான அங்கம்.

சபரி மலை, திருப்பதி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆலயங்களில் ஆங்காங்கு வழி வழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்கள், சடங்குகள், திருவிழாக்கள் அப்படியே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கு என்ன சங்கடம், தெரியவில்லை.

அதிக வருமானம் வரும் ஒரு கோவிலின் அதிகப்படியான பணத்தை, வருமானம் அவ்வளவாக இல்லாத கோவிலுக்கு அல்லவா கொடுக்க வேண்டும்?

அதை விடுத்து நலத் திட்டங்கள் என்ற பெயரால் நினைத்தபடி செலவழிக்க அரசுக்கு என்ன உரிமை?

இதற்கான ஆலய வாரியம் ஒன்றல்லவா சுயேச்சையாக செயல்படும் விதத்தில் அமைக்கப்பட வேண்டும்?

கம்யூனிஸ்டுகள், நாத்திகக் கும்பலான திராவிட இயக்க ஆதிக்கத்திலிருந்து கோவில்கள் விடுபட இதுவல்லவா வழி?

சபரிமலையில் கம்யூனிஸ்டு பெண்களையும், இஸ்லாமிய பெண்களையும் மாறு வேடத்தில் – குறிப்பாக 10 முதல் 50 வயதுக்குள்ளவராக இருப்பவரைத் தேர்ந்தெடுத்து – வலிய அனுப்ப முற்படுவது நியாயமா?

ஹிந்துக்களும் யோக்கியமான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இது பற்றித் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

உரிய முறையில் ஹிந்துக்களுக்கான அடிப்படை உரிமைகளை – அதிகப்படியான உரிமைகளை அல்ல – அடிப்படை உரிமைகளை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்; அதற்குரிய சட்டங்களை இயற்ற வேண்டும்!

இதற்கு ஹிந்துக்கள் ஒரே குரலாக ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும்.

இதை இயக்கபூர்வமான வழியில் செய்ய வேண்டுமெனில், ஆர் எஸ் எஸ் ஒன்றே தான் வழி!

நான்ய பந்தா வித்யதேயனாய!

இதை விட வேறு வழி ஒன்றுமில்லை!

***

33 QUOTATIONS ON TAPAS/ PENANCE (Post No.5603)

 

NOVEMBER 2018 ‘GOOD THOUGHTS’ CALENDAR



Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 October 2018

GMT Time uploaded in London – 15-46

Post No. 5603

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

This month calendar consists 30 quotations from Tirukkural of Tamil poet Tiruvalluvar, Bhajagovindam of Adi Shankara and from other Sanskrit books.

FESTIVAL DAYS- DEEPAVALI 6 (TAMIL NADU), 7 (NORTH INDIA), 13-SKANDA SASHTI, 14- CHILDREN’S DAY, 23- KARTHIKAI DEEPAM

NEWMOON DAY- 7; FULL MOON DAY- 22; EKADASI FASTING DAYS- 3,19;

AUSPICIOUS DAYS- NOV.4,5,9,11,14,28

DIWALI FIRE CRACKERS

NOVEMBER 1 THURSDAY
Penance consists in enduring pain and refraining from inflicting injury on the living — Tirukkural 261
NOVEMBER 2 FRIDAY
Asceticism befits a person who has deserved it by his past actions— Tirukkural 262

NOVEMBER 3 SATURDAY
House holders wanted to give basic needs (food, shelter and clothing- roti,kapda aur makhan) — to ascetics. That is the reason for them forgetting asceticism— Tirukkural 263

NOVEMBER 4 SUNDAY
The body has become decrepit;t the head has turned grey; the mouth has become toothless, grasping a stick , the old man moves about. Even then the mass of desires does not go— Bhajagovidam
15

NOVEMBER 5 MONDAY

The ascetic with matted locks, the one with his head shaven, the one’s with hairs pulled out one by one, the one who disguises himself variously with the ochre coloured robes — such a one is a fool who, though seeing, does not see. Indeed, the various disguise is for the sake of the belly -Bhajagovidam 14 of Adi Shankara

NOVEMBER 6 TUESDAY

Ascetics acquire powers by their austerities to curse and give boons— Tirukkural 264

NOVEMBER 7 WEDNESDAY

Asceticism is practised in this world to attain what they wanted in the next world — Tirukkural 265

NOVEMBER 8 THURSDAY

They discharge their duty who practise asceticism. Others entrapped by their desire harm themselves— Tirukkural 266

NOVEMBER 9 FRIDAY

Men of penance may indeed be asked any question under the sun— Shakuntala of Kalidasa

NOVEMBER 10 SATURDAY

The curses of sages are irrevocable— Pratima nataka of Bhasa

NOVEMBER 11 SUNDAY
Penance confers powers — Bharatamanjari

NOVEMBER 12 MONDAY

Penance is the ultimate good; all other joys are delusory— Valmiki Ramayana 7-84-9

NOVEMBER 13 TUESDAY

Hotter the fire, purer the gold. Harder the austerity, the more refined the human soul becomes— Tirukkural 267

NOVEMBER 14 WEDNESDAY
All living beings worship him who has gained control of his own life— Kural 268

NOVEMBER 15 THURSDAY

Those who have acquired strength through asceticism have the power of overcoming even death— Tirukkural 269

DIWALI NEW YEAR ACCOUNTS

NOVEMBER 16 FRIDAY

The rich are few and the poor are more. It is in proportion to those who perform penance and those who do not— Tirukkural 270

NOVEMBER 17 SATURDAY

The five elements will laugh at the secret conduct of deceits -Tirukkural 271

NOVEMBER 18 SUNDAY
What use an appearance of saintliness if one is guilty of conscious sin? — Tirukkural 272

NOVEMBER 19 MONDAY
A deceiving fake fakir/ascetic is like a cow grazing clothed in tigers skin.— Tirukkural 273

NOVEMBER 20 TUESDAY

Penance ever fraught with obstacles and assailed with difficulties— Valmiki Ramayana 3-10-14

NOVEMBER 21 WEDNESDAY
Yogis attain everything by penance- Naisadiya caritra

NOVEMBER 22THURSDAY

Ascetics are by nature docile — Shakuntala of Kalidasa

NOVEMBER 23 FRIDAY

Retire to the penance groves in simple attire— Shakuntala

NOVEMBER 24 SATURDAY

He who sins under the guise of asceticism is like a hunter trapping birds hiding behind a bush— Tirukkural 274

NOVEMBER 25 SUNDAY

There are none so hard hearted as those who pretend to be ascetics in heart without renouncing the world — Tirukkural 276

NOVEMBER 26 MONDAY

The world has persons who are red like abrus seeds but heart as black as the face of that seed — Tirukkural 277

NOVEMBER 27 TUESDAY
There are many who wash their exterior and pretend to be saintly, while their heart remains impure.— Tirukkural 278

NOVEMBER 28 WEDNESDAY

Cruel arrow is straight; but the sweet lute is curved and shapeless; don’t judge men by appearance— Tirukkural 279 (appearance of saints)

NOVEMBER 29 THURSDAY

It matters not whether a man shaves his hair or allows it to grow in flowing locks if he could refrain from what the world shuns— Tirukkural 280

 

NOVEMBER 30 FRIDAY
Bereft of protection, ascetics use curses as weapons and expend their spiritual energy—Raghuvamsam 15-3

Words of saints never fail —Nagananda

Nothing is impossible with austerity— Kathasarith sagara

–SUBHAM–