Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அகர்த்தாரம் – 4-13 செயலில் இறங்காதவர்
அகர்ம – 4-16 செயலின்மை , கர்மம் என்று கருதப்படாதது
அகர்ம க்ருத் -3-5 ஒரு கர்மத்திலும் ஈடுபடாமல்
அகர்மண: – 3-8 செயலின்மை (: இரண்டு புள்ளிகள் விசர்க்கம் எனப்படும்; இதை முன் உள்ள எழுத்துக்குத் தக உச்சரிக்க வேண்டும்; இங்கே ஹ என்ற ஒலி = அக்கர்மணஹ ) கர்மம் செய்யாமை
அகர்மணி -2-47 செயலின்மையில்
அகல்மஷம் – 6-27 மாசு மருவற்ற; குற்றமில்லாத ; பாவமற்றவன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!- Part 4
நதிகள் துதி 10-75-5
இதுதான் ரிக் வேதத்தின் புகழ்பெற்ற நதிகள் துதி. இதில் கங்கை நதியில் துவங்கி வரிசைக் கிரமத்தில் யமுனை ,சரஸ்வதி,சுதுத்ரி, பருஷ்ணி என்று மேற்கு நோக்கிச் செல்கின்றனர். இதனால் இந்து நாகரீகம் கங்கையில் துவங்கியது உறுதியாகிறது. அதை 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழரின் 2500 பாடல்களும் உறுதி செய்கின்றன. ஏனெனில் தமிழர்களுக்கு கங்கை, யமுனை தெரியும், இமயம், முனிவர்கள் தெரியும்; அமிர்தம், இந்திரன் தெரியும்; அருந்ததி, சப்தரிஷிகள் தெரியும். இவை அனைத்தும் புறநானூறு அகநாநூறு முதலிய நூல்களில் வருகின்றன. ஆனால் சிந்து, சரஸ்வதி, சோம ரசம் பற்றிய குறிப்புகளே இல்லை; ஆகவே கங்கைதான் முதலில் வந்தது என்பது புலனாகிறது
இதை ஒத்துக் கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிடினும் ஆப்கானிஸ்தான் முதல் டில்லி, மேற்கு வங்கம் வரை ஓடும் நதிகளைக் குறிப்பிடுவதால், இந்து மகா சாம்ராஜ்யத்தை வேதங்கள் குறிப்பிடுவதால் வேத கால பூகோள எல்லையும் விளங்கும் .
இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த நதிகள் பட்டியலில் உள்ள சில நதிகளைக் கூட நாம் அடையாளம் காண இயலவில்லை; வேதங்கள் அவ்வளவு பழமை உடைத்து .
ஆர்ஜீகீ, சுஸோமா , என்பன விபாஸா , சிந்து நதிகள் என்று யாஸ்கர் கூறுவதை வெள்ளைக்காரர்கள் சாத்தியமற்றது என்கின்றனர்.
எட்டாவது மந்திரத்தில் சிலாமாவதி ஊர்ணாவதி என்பன நதிகள் என்று சொல்லும் சாயனர் அவை சிந்து நதியின் காரணப் பெயர்கள் என்கிறார் . சிலாமா செடிகள் வளர்ந்து இருப்பதாலும் கம்பளி கிடைப்பதாலும் இப்படிப் பெயர்கள் என்கிறார். அவைகளுக்கும் ஆதாரம் இப்போது கிடைக்கவில்லை.
நதிகள் பற்றிய துதியிலும் கிரிப்பித் GRIFFITH விஷமம் நன்றாக புலப்படும்; கங்கை என்பது தொலைதூர நதி என்பதால் அதை முதலில் சொன்னார் என்று சொல்லிவிட்டு மேலும் அது ஒரு பெண்ணின் பெயர் என்றும் சொல்கிறார். உண்மையில் அதில் உள்ள எல்லா நதிகளின் பெயர்களையும் இன்றுவரை பெண்கள் சூட்டி வருகின்றனர் . தமிழ்ப் பெண்கள் கூட கோமதி, சிந்து, கங்கா, ஜமுனா என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர்
Xxx
கல்யாண மந்திரங்கள் 10-85-6 ரைபி, நாராஸம்சீ, காதா
இன்றும் கூட பிராமணர் வீட்டுக் கல்யாணங்களிலும் , சம்பிரதாய முறைக் கல்யாணங்களிலும் ரிக்வேத கல்யாண மந்திரத்தின் பெரும்பகுதி பயன்படுகிறது. ஆயினும் இவைகளில் உள்ள சில சொற்களின் பொருள் விவாதத்துக்கு உரியனவாக இருக்கின்றன. அதாவது உறுதியான பொருள் எவருக்கும் தெரியவில்லை. வேத காலத்துக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சாயனாரின் உரையை ஓரளவு நம்பலாம் ; ஆயினும் அவர் சம்பிரதாயத்தை உடைத்து வேதத்துக்குப் பொருள் கண்டதால் பழ மைவாதிகள் அதை ஏற்பதில்லை.
“ரைபீ , அவளுடைய (கல்யாணப் பெண்ணின் ) தோழி; நாராசம்சீ அவளுடைய தாசீ; சூரியையுடைய அழகான ஆடை ‘காதை’யால் அலங்கரிக்கப்பட்டிருந்தது”- 10-85-6
இவை பெண்களின் பெயர்கள் ; இவைகளை உருவக வருணனை என்று கருதுகின்றனர். ஏன் இந்தப் பெயர்கள்? விளங்கவில்லை. இவை விளங்காததால், இவைகளை வேதத்துக்குப் புறம்பானவை என்றும் எழுதிவிட்டனர்!!!
‘தனக்குப் புரியாவிட்டால் அது எல்லாம் திராவிட செல்வாக்கு! என்பன அடி முட்டாள்களின், விஷமிகளின் வாதம்’
xxxx
கோசம் 10-85-7
இது மணப் பெண்ணின் பெட்டியா, ஆடையா, தேரின் பாகமா என்று பல்வேறு கருத்துக்கள்!! என்ன வினோதம் !
“அவளுடைய மஞ்சனையில் எண்ணமே தலையணை; அவள் காணும் காட்சியே கண்ணுக்கு மை ; அவள் கணவனிடம் சென்றபோது வானமும் பூமியும் அவள் பொக்கிஷம் /கோசம்” — இது மந்திரம்
Xxxx
10-85-28 கிருத்யை
ஒரு பெண் தேவதை அல்லது பேய் அல்லது துஷ்ட தேவதை
XXX
10-85-35 ஆசசனம், விசசனம் , அதிவிகர்த்தனம்
இவை பல வகை ஆடைகளாக இருக்கலாம் என்பது ஒரு விளக்கம் ; ஆ னால் அகராதியில் காணும் பொருள்:– கொல்லுதல் , வெட்டுதல், துண்டு போடுதல்; இந்த அகராதியே சர்ச்சைக்குரியது ; கோல்ட்ஸ்டக்கர் GOLDSTUCKER இதை கிழி , கிழி என்று கிழித்து விடுகிறார். பசுக்கொலை செய்து தினமும் பிளேட்டில் பரிமாறுவோர் செய்த St Petersburg Dictionary செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகராதி அது. மேலும் இந்துக்கள் கோவில்களிலோ, கல்யாண விருந்துகளிலோ இன்று வரை மாமிசம் படைக்க மாட்டார்கள் ; சீக்கியர்கள் கூட இதைப் பின்பற்றுகின்றனர்.
பேராசிரியர் வில்சன் இவைகளை ‘சுற்றி அணியும் துணி’, ‘தலையில் அணியும் துணி’, ‘பிரிவுகள் உள்ள பாவாடை’ என்கிறார்.
xxxx
சிறைச் சாலையில் நான்
ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிட்டுக் கட்டுரையை முடிக்கிறேன். பிரிட்டிஷ் சிறைச் சாலைகளில் உள்ள இந்துக் கைதிகளைக் கண்டு அவர்களுக்குப் பிரார்த்தனை முதலியவற்றை வழங்கும் பணியையும் பகுதி நேர வேலையாகச் (Part Time Prison Chaplain) செய்துவந்தேன். மிகக் குறைவான இந்துக்களே சிறையில் அடைக்கப்படுகின்றனர் ஆனால் முஸ்லிம்களோ 25 சதவிகிதத்துக்கு மேல் ! அதாவது அவர்களுடைய ஜனத் தொகை விகிதாசாரத்தைவிட மிக மிக அதிகம்.
ஒரு சிறையில், இந்துக் கைதிகள், விசாரணைக் கைதிகள், என்னைக் கண்டவுடன் ஒடி ஒளிந்தனர். பெரும்பாலும் மாமிசம் சாப்பிடும் இலங்கைத் தமிழர்கள்; ஏனப்பா இப்படி எல்லோரும் மறைந்து மறைத்து போகிறார்கள் என்று ஒருவரைப் பிடித்து விசாரித்தேன். அவர் உண்மையைக் கக்கிவிட்டார். “ஐயா நாங்கள் எல்லோரும் இன்று லஞ்ச் Non Vegetarian Lunch நேரத்தில் மாமிசம் சாப்பிட்டுவிட்டோம். ‘அது’ சாப்பிட்டுவிட்டால் பிரார்த்தனை செய்யக்கூடாது; சுத்தம் இல்லையே என்றார் .
“அடப் பாவி மகன்களா ! இதை வாய் திறந்து முன்னமே சொல்லி இருந்தால், நான் வரும் தினத்தை அல்லது நேரத்தை மாற்றி இருப்பேனே” என்றேன். பின்னர் இதை அதிகாரிகளுடன் விவாதித்து நேரத்தை மாற்றிக்கொண்டேன் . மாமிசம் சாப்பிட்டால் சீக்கியர்கள் கூட பிரார்த்தனைக்கு வரமாட்டார்களாம். லண்டனில் மாமிசம் சாப்பிடும் சீக்கியர்கள், குருத்வராவில் கல்யாணம், பிரார்த்தனை வைத்துக்கொண்டாலும் அங்கே மாமிச விருந்து தர மாட்டார்கள். இதே போல சம்பிரதாய முறையில் கல்யாணம் செய்யும் எந்த ஜாதியினரும் மாமிச விருந்து கொடுப்பதில்லை. இப்போது காலம் கெட்டுவிட்டது எப்படி நடக்கிறதோ யாம் அறியோம் பராபரமே.
இதனால்தான் நம் சம்பிரதாயங்களை அறியாத, பின்பற்றாத, நம்பாத வெளியார்கள் எழுதும் வியாக்கியானங்களை நம்பக் கூடாது.இந்துவான எனக்கே சிறைக் கைதிகள் நழுவிச் சென்றபோதுதான் ஒரு ‘பாடம்’ lesson கிடைத்தது!
பத்தாவது மண்டலத்தில் (துதிகள் 1 முதல் 85 வரை) நான் கண்ட புரியாத சொற்களைத் தந்தேன் மேலும் பின்னர் காண்போம்.
இவர் வாழ்க்கையில் ஏராளமான அற்புத சம்பங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இவரது இசை ஈடுபாட்டைக் குறிக்கும் ஒன்றாகும்.
ஒருமுறை தஞ்சை ராஜா இவரது இசை ஈடுபாட்டை பரீட்சிக்க விரும்பியபோது இவர் தன்னை ஒரு கருங்கல் சுவருக்குள் அடைத்துக் கொண்டார். தம்புராவை மீட்டிக் கொண்டு ஆனந்தமாகப் பாட ஆரம்பித்தார். பத்து நாட்கள் நீரும் ஆகாரமும் இன்றி அங்கேயே இருந்து பததாம் நாள் மன்னன் கருங்கல் சுவரைத் திறந்து பார்த்த போது முதல் நாள் பார்த்தது போலவே ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தாராம். மன்னரும் மற்றவரும் பிரமித்துப் போயினர். இவர் இசை மேல் கொண்டிருந்த ஈடுபாட்டை அனைவரும் நன்கு உணர்ந்தனர்.
இவரது ஒவ்வொரு கீர்த்தனையும் காமாக்ஷி அம்மனிடம் இவர் கொண்டுள்ள அபார பக்தியை விளக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
தனது அளப்பரிய சங்கீத ஞானத்தைக் கொண்டு பங்காரு காமாக்ஷி தேவியைப் பற்றி பல ஸ்தோத்திரப் பாடல்களை இவர் பாடலானார்.
இசைத் துறையில் தாள வகைகளில் பல புதிய சாதனைகளைப் படைத்தார் சியாமா சாஸ்திரிகள்.
சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலுமாக சுமார் 300 கீர்த்தனைகளை அவர் இயற்றியுள்ளார். தமிழில் மிகக் குறைந்த அளவு கீர்த்தனைகளே அவரால் இயற்றப்பட்டன. தருணமிதம்மா என்ற கீர்த்தனையும் என்னேரமும் என்ற கீர்த்தனையும் அவரது பிரபலமான தமிழ்க் கீர்த்தனைகள் ஆகும். சியாமகிருஷ்ண என்ற தனது முத்திரையை அவர் பாடல்களில் பதிப்பது வழக்கம்.
மாஞ்சி, சிந்தாமணி, கல்கடா (பார்வதி நினு என்ற கீர்த்தனை) உள்ளிட்ட பல அபூர்வ ராகங்களை அவர் கையாண்ட விதம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. சிந்தாமணி ராகத்தில் முதன் முதல் கீர்த்தனை இயற்றியவர் அவரே. ஆனந்த பைரவி, சாவேரி, கல்யாணி ஆகிய ராகங்கள் அவரை மிகவும் கவர்ந்த ராகங்களாகும்.
ஒருமுறை யாத்திரையை மேற்கொண்டு அவர் புதுக்கோட்டை சென்ற போது அன்பர் ஒருவர் மதுரை சென்று மீனாக்ஷியம்மன் மீது கீர்த்தனை இயற்றலாமே என்று கூறினர். உடனே மதுரை சென்ற சியாமா சாஸ்திரிகள் அங்கு நவரத்தினமாலிகை என்னும் பிரபலமான ஒன்பது கீர்த்தனைகளை இயற்றிப் பாடினார். ஆஹிரி ராகத்தில் மாயம்மா என்ற கீர்த்தனையில் நம்மிதி நம்மிதி நம்மிதினி உன்னை நம்பினேன் நம்பினேன், நம்பினேனே என்று அவர் உள்ளமுருக்கும் வகையில் பாடி இருக்கிறார்.
ஆலயத்தில் அவரை யார் என்று யாரும் உணராத நிலையில் அங்கிருந்த அர்ச்சகர் மீது ஆவேசம் வந்து அவருக்கு உரிய மரியாதைகளைச் செய்து கௌரவிக்க வேண்டும் என்று அருள் வாக்கு பிறக்க, உடனே அவர் அங்கு வெகுவாக கௌரவிக்கப்பட்டார்.
ஸரோஜ தள நேத்ரி – சங்கராபரணம்
தேவி மீன நேத்ரி – சங்கராபரணம்
மரிவேறே கதி – ஆனந்தபைரவி
நன்னுப்ரோவு லலிதே – லலிதா
தேவி நீ பதராஸ – காம்போதி
மீனலோசன ப்ரோவ – தன்யாசி உள்ளிட்ட கீர்த்தனைகளையும் மத்யமாவதி ராகத்தில் உள்ள பாலிஞ்சு காமாக்ஷி, புன்னாகவராளி ராகத்தில் உள்ள கனக ஷைல விஹாரி உள்ளிட்ட ஏராளமான கீர்த்தனைகளையும் அனைவரும் இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.
ஸ்வரஜதியில் அவரது நிபுணத்வம் எல்லையற்றது. பைரவி, தோடி, யதுகுல காம்போதி ஆகிய ராகங்களில் அவரது ஸ்வரஜதிகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். தேர்ந்த நிபுணர்களும், சாமானியர்களும் வியக்கும் வண்ணம் உள்ள அவரது கீர்த்தனைகள் காலத்தை வென்றவை. சங்கீத கணிதத்தில் அவர் ஆற்றியுள்ள சேவையை அவர் தன் கைப்பட எழுதியுள்ள 79 அக்ஷர தாள பிரஸ்தார வரைபடங்களில் கண்டு மகிழ முடியும்; வியக்க முடியும்!
சங்கீத மும்மூர்த்திகளைப் பற்றி சங்கீத விற்பன்னர்கள் கூறுகையில், “தியாகராஜரின் கீர்த்தனைகள் திராக்ஷா பாகம் என்றும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் நாரிகேள பாகம் என்றும் அதாவது தேங்காயை நாரை உரித்து ஒட்டை உடைத்துச் சாப்பிடுவது போல என்றும் சியாமா சாஸ்திரிகளின் இசையை கதலீ பாகம் என்றும் அதாவது எளிதாக வாழைப்பழத்தை உரித்துச் சாப்பிடுவது போல என்றும் கூறுவர்.
சாஸ்திரிகளின் 64 வயது நடந்து கொண்டிருந்த போது அவர் மனைவி மறைந்தார். மிகுந்த துக்கம் அடைந்த அவர் “அவ சாக அஞ்சு நாள், செத்து ஆறு நாள்’ என்று கூறினார். அருகிலிருந்தோர் அவர் மனைவி இறப்பதற்கு அஞ்சுவதாக அவர் ‘அஞ்சினாள்’ என்று கூறுவதாக நினைத்தனர். ஆனால் அவர் மனைவி இறந்து ஐந்து நாட்கள் கழிந்தன. ஆறாம் நாள் அவர் காமாக்ஷியுடன் கலந்தார்; முக்தி அடைந்தார். அப்போது தான் அனைவருக்கும் அவர் தன் இறுதியை, மனைவி மறைந்த ஐந்து நாள்கள் கழித்த ஆறாம் நாள் தான் மறையப் போவதாகக் கூறியதை உணர்ந்தனர். அவர் 1827ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி – விபவ வருஷம் தை மாதம், 26ஆம் நாள் சுக்ல நவமி திதி தினத்தன்று தன் மகனின் மடி மீது தலை வைத்தவாறே ‘சிவே பாஹி காமாக்ஷி பரதேவதே’ என்று கூறியபடியே இறைவனுடன் கலந்தார். சியாமா சாஸ்திரிகளின் நினைவைப் போற்றும் வகையில் இந்திய அரசு 1985 டிசம்பர் 21ஆம் தேதியன்று ஒரு ரூபாய் மதிப்பிலான தபால் தலையை வெளியிட்டது.
சங்கீதத்தில் ஒரு புதிய பார்வையுடன் கம்பீரமான நடை போட்டு அனைவரையும் வியக்க வைத்த சியாமா சாஸ்திரிகளின் நினைவைப் போற்றுவோம்; பங்காரு காமாக்ஷியின் அருளைப் பெறுவோம்; உயர்வோமாக!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ம்ருகய 10-49-5
காற்றில் வசிக்கும் ஒரு அரக்கன்
4-16-13 மந்திரத்திலும், 8-3-19 மந்திரத்திலும் இச் சொல் வருகிறது
நாலாவது மண்டலத்தில் பிப்ரு என்னும் மற் றொரு அரக்கனுடன் சேர்த்துப் படுகின்றனர் ரிஷிகள்; அதே மந்திரத்தில் 50,000 கருப்பு அரக்கர்களை அழித்தான் என்பதில் வெளிநாட்டார் விஷம் கலந்து எழுதுகின்றனர். அவர்களை பூர்வ குடி மக்கள் என்று வருணிக்கின்றனர். உலகில் மனிதர்கள் தோன்றியது முதல் போர்கள் நடந்து வருகின்றன. வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாகும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகில் எப்போதும் குறைந்தது 50 இடங்களில் போர்கள் அல்லது மோதல்கள் நடப்பதைக் காட்டுகின்றன. அவர்களுக்கு ஆயுதங்களை விற்பதில்தான் மேலை நாடுகள் உயிர் வாழ்கின்றன. எந்த சண்டையிலும் ஒருவர் எதிரி என்னும் பெயரில் இருப்பர். ரிக் வேதத்தில் வரும் எதிரிகள் அனைவரையும் பூர்வ குடி மக்கள் , கறுப்பர் என்று வெளிநாட்டினர் முத்திரை குத்திவிடுகின்றனர்!!
நல்ல வேளை ! வெள்ளைக்காரன் முதலில் தமிழைப் படிக்கவில்லை. கால்டுவெல்கள் முதலிய பேர்வழிகள் மதத்தைப் பரப்ப மட்டுமே படித்தனர் . நம் தமிழ் இலக்கியத்தில் சேர, சோழர் ,பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதும் பல்லாயிரம் பேரைக் கொன்றதையும் புலவர்கள் பாடி வைத்துள்ளனர். அவர்களையும் ஒரு பகுதி ஆரியர் மற்றோரு தரப்பு திராவிடர் என்று முத்திரை குத்தி இருப்பார்கள்!! 1400 ஆண்டுகளுக்கு தமிழர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்தார்கள்; உலகில் ஒரே இனத்தில் இப்படி ஒரு பூசலை வேறு எங்கும் காண முடியாது ! மேலும் எப்போதும் எதிரியையோ , தீமை யையோ ‘கருப்பு’ என்று வருணிப்பது இந்திய இலக்கிய மரபு. தீமையை இருளுக்கு ஒப்பிட்டு தீபாவளி கொண்டாடுவர். மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்ல வந்த தமிழனை- முத்தநாதனை – ‘மனதினுள் கருப்பு வைத்து’ என்றே சேக்கிழார் பெருமான் படுகிறார். ஆக கருப்பு (கிருஷ்ண) என்று இம்மந்திரத்தில் சொல்லப்படுவது கறுப்பர் அல்லர்; தீயோர் என்றே பொருள் கொள்ள வேண்டும் .
Xxx
கவி 10-49-3
உசன கவியின் தந்தை ; இது கோத்திரப் பெயர்; ஆதலால் சுக்ராச்சார்யார் வரை இதே பெயர் பலருக்கும் உண்டு . மேல் விவரம் உசனன் என்ற தலைப்பில் முன்னரே கொடுத்துள்ளேன்.
Xxx
ஸ்ருத வர்ணன் , பட்கிரிபி 10-49-5
ஸ்ருத வர்ணன் என்பவனை வாரி வழங்கும் மன்னன் என்று சொல்லிவிட்டு பட்கிரிபி என்பவன் ஏ தோ ஒரு அரக்கனாக இருக்கலாம் என்று சொல்லி முடித்து விடுகின்றனர். அந்தப் பெயர் வேறு எங்கும் வரவில்லை. இவ்வாறு பல புதிர்கள், புரியாத விஷயங்கள் ரிக் வேதம் நெடுகிலும் உளது !
xxxx
10-56-2 வாஜினன்
இந்தச் சொல்லுக்கு பொதுவாக குதிரை என்று பொருள்.ஆனால் இங்கே கவி பாடிய புலவரின் மகனான வாஜிநன் என்பவனாக இருக்கலாம் என்று எழுதுகின்றனர்
xxx
அசு நீதி, அனுமதி, உசீனராணி 10-59-5, 10-59-10
இவை எல்லாம் ஈமச் சடங்கு விஷயங்களில் வரும் பெயர்கள். மரணச் சடங்குகள் பற்றிய எல்லாம் புதிராகவே உள்ளன . எதற்கெடுத்தாலும் ஐரோப்பாவில் உள்ள சம்பந்தமில்லாத விஷயங்களைத் தொடர்புபடுத்தி ஆரியர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்று கதைக்கும் வெள்ளைத் தோல்கள் , நூற்றுக் கணக்கான விஷயங்களில் ஒன்றையும் காட்ட முடிவதில்லை. குறிப்பாக சோம ரசம் பற்றி சுமார் ஆயிரம் இடங்களில் வேதம் பேசுகிறது ; மரணம் , கல்யாணம் பற்றி பல விஷயங்களைச் சொல்கிறது; அவற்றைப்பற்றி எதையுமே ஐரோப்பாவுடன் தொடர்பு படுத்தமுடிவதில்லை.
அசுநீதி என்பவர் யமனா அல்லது மரணச் சடங்குகளின் அதி தேவதையா என்று கேள்வி எழுப்புகின்றனர்.. ஆனால் இந்துக்களின் ‘மரணச் சடங்கு தேவதை’ என்பது உறுதி. வாழ்க்கைக்கான வழி , வாழ்க்கைக்கான வழிகாட்டி என்பது இதன் பொருள். இது போல எகிப்தின் மரணச் சடங்குகளிலும் உண்டு.
அனுமதி என்பதை தமிழில்கூட நாம் இப்போது permission பெர்மிஷன் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். ‘அவி’ (Havis) களை விருப்பத்துடன் ஏற்று கடவுளுக்கு அனுமதிக்கும் தேவதை இது. கருணை மிக்க தேவதை என்பது இதன் பொருள். வெள்ளைக்காரர்கள் இவ்விருவரையும் தேவதைகளாக காணாமல் (personification) உருவகம் என்று நினைக்கின்றனர். இதே துதியின் முதல் மந்திரத்திலேயே மரண தேவதை நிர்ருதியின் பெயர் வந்துவிடுகிறது. அதை அவர்கள் கவனிக்கத் வறிவிட்டனர்
உசீனராணியை உசீரநா என்பவனின் மனைவியாக்கி அவர்கள் இப்போதும் மத்திய தேசத்தில் வாழ்வதாக அடிக்குறிப்பில் எழுதுகின்றனர். அத்தோடு இது புரியாத மந்திரம் என்ற வழக்கமான பல்லவியையும் சேர்த்துவிட்டனர்! உண்மையில் சொல்லப்போன்னால் அர்த்தம் தெரியாத ஆராய்ச்சிக்குரிய சொல் இது . பிற்காலத்தில் மத்திய தேச மக்களுக்கு இந்தச் சொல் இருப்பதாக எழுதுவது எப்படி ரிக்வேத காலத்துடன் பொருந்தும்?
இதுவும் ஈமச் சடங்கு தொடர்பானது என்றே நான் கருதுகிறேன்; காரணம் முதல் மந்திரமும் மரணம் தொடர்பான தேவதை. இந்தக் கடைசி மந்திரமும் மரணம் தொடர்பானது. இடையிலும் மரண விஷயங்களையே பேசுகின்றனர்
Xxxx
அசமாதி , பஜேரத வம்சம் ,10-60-2
பஜேரத என்பது இளவரசன் பெயரா, நாட்டின் பெயரா என்றே தெரியவில்லை என்று அடிக்குறிப்பில் எழுதிவிட்டனர்!!!!
அசமாதி என்பவரை அரசர் என்கிறார் சாயனர். ஆனால் இதன் பொருள் ‘சமம் இல்லாத’ என்பதாகும். ஆக இங்கும் வெள்ளைக்காரன் கணக்குப் படி பொருள் தெரியவில்லை! ஆனால் பெயர்களில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. சாயனர் சொல்லுவது அக்காலத்தில் கிடைத்த, நமக்கு இப்போது கிடைக்காத, ஆதாரத்தை வைத்து எழுந்ததே. ஒரு பிரபல ரிஷியின் பெயர் ‘மான் கொம்பன்’= ரிஷ்ய ச்ருங்கன் = கலைக்கோட்டு முனிவன் என்பது கம்ப ராமாயண மொழிபெயர்ப்பு.
இன்னொரு முனிவரின் பெயர் எட்டு கோணல் = அஷ்டாவக்ரன் ; அப்பா, தப்பாக வேதத்தை உச்சரித்ததால் கர்ப்பப்பையிலேயே உடலை சுருக்கி கோணல் மாணலாகப் பிறந்த ரிஷி . (இதுபற்றி ஏற்கனவே வேத ஒலிகளின் சக்தி பற்றிய கட்டுரையில் எழுதி இருக்கிறேன்)
Xxx
SEVEN BIRDS, SEVEN SISTERS, JUNGLE BABBLERS.
10-67-7 காட்டுப் பன்றி BOAR- 10-67-7
உஷ்ணத்தினால் வியர்த்து, பிருஹஸ்பதி, வலிமையும் வீரமும் உள்ள காட்டுப் பன்றிகளுடன் ஏராளமான செல்வத்தைக் கைப்பற்றினான் .
இந்த மந்திரத்தில் காட்டுப் பன்றிகள் என்பன பலம் வாய்ந்த மருத் தேவர்கள் அல்லது நல்ல நீரைக் கொண்டு வருபவர்கள் என்று அடிக்குறிப்பு கூறுகிறது. சாயனர் ‘நல்ல நீரைக் கொண்டு வருவோர்’ என்றே எழுதுகிறார். ஏன் காட்டுப் பன்றி உவமை என்று வினவத் தோன்றுகிறது .
Xxxx
ஏழு பறவைப் பாடகர்கள் 10-71-3
இங்கு 7 பறவைகள் பாடகர்கள் என்ற குறிப்புக்கு பறவை இயல் வல்லுநர் Mr Dave தவே இது வங்காளத்தில் உள்ள ஏழு சகோதரிகள் என்ற பாடும் பறவை வகை என்கிறார். மர்றவர்கள் காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண சந்தங்கள் என்பர்.
இந்தப் பாட்டே வினோதமானது ‘ஞானம்’ என்ற தலைப்பில் அமைந்த ஒரே துதி இதுதான். இதை பிரம்ம ஞானம் என்று சாயனர் கூறுகிறார் . அவ்வகையில் பார்த்தாலும் ஞானிகளை பரம ஹம்சத்துடன் (அன்னம் என்னும் பறவை) ஒப்பிடுவதால் பறவை என்பதே சரி என்று துணியலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 11-10-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
சங்கீத மும்மூர்த்திகளுள் தாளத்திற்குப் பிரதானமாகப் புகழ் பெற்றவர் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள். இவருடைய சரித்திரம் அற்புதமான ஒன்று.
இவருடைய முன்னோர்கள் விஜயநகரத்தில் வசித்து வந்தனர். 1566ஆம் ஆண்டு விஜயநகரம் வீழ்ந்த பின்னர் அவர்கள் காஞ்சிபுரம் வந்து அங்கு குடியேறி பரம்பரை பரம்பரையாக வசித்து வரலாயினர். இவர்கள் வடம வகுப்பைச் சேர்ந்தவர்கள். பங்காரு காமாக்ஷி அம்மனை பூஜை செய்து வந்தவர்கள். பின்னர் காலகிரமத்தில் இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து பங்காரு காமாக்ஷி அம்மன் விக்ரஹத்துடன் செஞ்சி சென்றனர். அங்கு அபோது ஆட்சி புரிந்து வந்த சந்தான மஹாராஜா இந்தக் குடும்பத்தை ஆதரித்து வந்தான். பதினைந்து ஆண்டுகள் அங்கு இருந்த பின்னர் குடும்பத்தினர் உடையார் பாளையம் வந்தனர். எழுபது ஆண்டுகள் அங்கு இவர்கள் வாழ்ந்தனர். பிறகு அணைக்குடியில் பதினைந்து ஆண்டுகள் கழித்த பின்னர், விஜயபுரம், நாகூர், மடப்புரம், சிக்கல் என பல ஊர்களில் வாழ்ந்து விட்டு கடைசியாக திருவாரூருக்கு வந்து தங்கினர். சில காலம் அங்கு தங்கி இருந்து விட்டுப் பின்னர் தஞ்சாவூருக்கு வந்து குடியேறினர்.
திருவாரூரில் இந்தப் பரம்பரையில் வந்த குடும்பத்தினர் இருந்த போது குடும்பத் தலைவரின் பெயர் விசுவநாத ஐயர். காமாக்ஷியிடம் மிகுந்த பக்தி கொண்டவர் இவர். ஒரு நாள் அவர்கள் குடியிருந்த தெருவில் வேங்கடாஜலபதி சமாராதனை ஒன்று நடைபெற்றது. அதில் தம்பதியினர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஆவேசம் பெற்ற ஒருவர் எழுந்து விசுவநாதர் தம்பதியினரைப் பார்த்து, “அடுத்த ஆண்டு சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத் திருநாளில் உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்” என்று அருள் வாக்குக் கூறினார். அப்படியே நடந்தது.
1762ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி, சித்ரபானு வருடம், சித்திரை மாதம் 17ஆம் தேதி கிருத்திகா நக்ஷத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்ததால் குழந்தைக்கு வெங்கட சுப்ரமண்யன் என்று பெயரிடப்பட்டது. அவருக்கு சியாம கிருஷ்ணா என்ற செல்லப் பெயரும் இடப்பட்டது. இவரே பிற்காலத்தில் அனைவரும் போற்றப்படும் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆவார்.
1781ஆம் ஆண்டு ஹைதர் அலியினால் ஒரு கலவரம் ஏற்பட சியாமா சாஸ்திரிகளின் குடும்பம் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தது. தஞ்சையை அப்போது ஆண்டுவந்த துளஜா ராஜா விசுவநாதையரை ஆதரிக்கலானார்.
இயல்பாகவே சியாமகிருஷ்ணருக்கு இளமையிலேயே சங்கீதத்தின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில் இவர் இரகசியமாகவே தகப்பனார் அறியாமல் சங்கீதப் பயிற்சி பெற்று வந்தார். இவரது மாமா இவருக்கு சங்கீதம் கற்பிக்க ஆரம்பித்தார். ஆனால் இவரது சங்கீத ஞானம் இவரது பிறப்பிலேயே அளப்பரிய தன்மையுடன் இருந்ததை மாமாவால் பொறுக்க முடியவில்லை. பொறாமை கொண்டார். ‘சங்கீதத்திலேயே இருக்காதே; ஏதாவது வேலையையும் செய்’ என்று அடிக்கடி கடிந்து கொள்வார். ஆனால் காமாக்ஷி அம்மன் மீது அவர் கோவிலில் பாட ஆரம்பித்தவுடன் அவரைச் சூழ்ந்து பக்தர்கள் குழுமி நின்று கொள்வர். அற்புதமான அவரது இசையைக் கேட்டு அனைவரும் மெய்மறந்து சிலிர்ப்பர். ஒரு நாள் ஒரு பெரியவர் இவரது இசையால் உருகி தனது சால்வையை எடுத்து இவர் மீது போர்த்தி, “ நீ இப்படியே இசையை வளர்ப்பாயாக’ என்று ஆசீர்வதித்தார்.
இந்தச் சம்பவத்தை கோவில் குருக்கள் அவர் மாமாவிடம் சொல்லி ஆனந்தப்பட அவரோ கடும் கோபம் கொண்டார். சியாமா சாஸ்திரிகளைப் பார்த்து, “உனக்கா இது?” என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டு அந்த சால்வையைப் பிடுங்கி எறிந்து அவர் பாட்டுப் புத்தகத்தையும் கிழிந்து எறிந்தார். “இனி நீ பாடக் கூடாது” என்ற கட்டளையையும் இட்டார். தான் பாட்டுச் சொல்லித் தருவதையும் நிறுத்தி விட்டார்.
இச்சமயம் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சந்யாசி காசியில் வசித்து வந்தார். அவர் காசியிலிருந்து இராமேஸ்வர யாத்திரையாக வந்தவர் தஞ்சாவூருக்கு வந்தார். அவர் பெயர் சங்கீத சுவாமிகள். சாதுர்மாஸ்ய விரத காலம் ஆனதால் அவர் அந்தக் காலம் முடிய தஞ்சாவூரில் தங்கினார். ஒரு நாள் விஸ்வநாத ஐயர் சங்கீத சுவாமிகளை தனது வீட்டில் விருந்துக்கு அழைத்தார். அவர் வீட்டுக்கு வந்த சந்யாசி சியாம கிருஷ்ணனைப் பார்த்தார்; அவர் இசையைக் கேட்டார். தன்னிடமுள்ள நாட்டியம், சங்கீதம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் பெற வல்ல தகுந்த பாத்திரம் இவரே என்று உணர்ந்து கொண்டார். இவரது தகப்பனாரிடம் சொல்லி இவரைத் தன் சீடனாக ஆக்கிக் கொண்டார்; அவருக்கு சங்கீத சாஸ்திரத்தையும், இதர கலைகளையும் கற்பிக்கலானார். சங்கீதம் ஒரு உயர்ந்த கலை அல்ல; வேத சாஸ்திரமே உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருந்த விசுவநாதையர் தன் மனதை அம்பாளின் அருளினால் மாற்றிக் கொண்டார். சாதுர்மாஸ்யம் விரதம் முடியவே இராமேஸ்வர யாத்திரைக்கு ஆயத்தமானார் சங்கீத சுவாமிகள். சியாம கிருஷ்ணனை அழைத்து தனது கையில் இருந்த அனைத்து இசைச் சுவடிகளையும் அவரிடம் அளித்தார்.
அப்போது தஞ்சை அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்த பச்சிமிரியம் ஆதியப்பையா என்பவரின் இசையைத் தொடர்ந்து கவனிக்குமாறு கூறினார். கேள்வி ஞானம் சிறந்தது என்றார் அவர்.
குருவின் கட்டளைப்படியே சியாம கிருஷ்ணர் ஆதியப்பையாவை அணுகினார். அவருக்கும் சியாம கிருஷ்ணன் மேல் அளவற்ற பாசம் ஏற்பட்டது. சியாம கிருஷ்ணரின் அறிவையும் பக்தியையும் நன்கு அறிந்த அவர் சியாம கிருஷ்ணரை காமாக்ஷி என்றே அழைக்கலானார்.
சியாமா சாஸ்திரிகளின் சங்கீதக் கலை வெகு வேகமாக உயர்ந்த நிலையை அடைந்தது.
தனது அளப்பரிய சங்கீத ஞானத்தைக் கொண்டு பங்காரு காமாக்ஷி தேவியைப் பற்றி பல ஸ்தோத்திரப் பாடல்களை அவர் பாடலானார்.
அப்போது அவரது சங்கீத மேன்மையைக் கண்ட பொப்பிலி கேசவய்யா என்ற வித்வான் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். தஞ்சையில் தன் பெயரை நிலை நாட்டி விட்டால் தானே தரணியில் சிறந்தவன் என்னும் பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்த அவர் அப்போது தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னனை அணுகினார். தன்னுடன் போட்டி போடத் தக்க வித்வானை அழைக்க வேண்டும் என்று அவர் வேண்டினார். சரபோஜி மன்னனுக்குக் கவலை வந்து விட்டது. தஞ்சையின் மானம் காப்பாற்றப்பட வேண்டுமே என்று எண்ணிய அவன் பலவிதமாக யோசித்தான். இசையே ஒரு வடிவமாக உருவெடுத்த சியாமா சாஸ்திரிகளையே அவன் நினைத்தான். அவரை அழைத்து வரச் செய்து விஷயத்தைக் கூறினான். சியாமா சாஸ்திரிகள் தஞ்சையின் மானத்தைக் காக்க இசைந்தார்.
பொப்பிலி கேசவையா சிம்ஹநந்தன தாளத்தில் ஒரு பல்லவியைப் பாடினார்.
தன் மேதாவிலாசத்தை முழுவதுமாக அவர் வெளிப்படுத்த அனைவரும் பயந்து போனார்கள். ஆனால் காமாக்ஷியை மனதில் துதித்த சியாமா சாஸ்திரிகள், அவரை நோக்கி ‘இந்த தானா, இங்க உன்னதா’ – ‘இவ்வளவு தானா, இன்னும் உள்ளதா’ என்று கேட்டார். ‘தீனிகி பைன பாடகலரா?’ – இதற்கு மேலும் பாட முடியுமா உங்களால் – என்று செருக்குடன் கேட்டார் பொப்பிலி கேசவையா.
தான் கேட்டதை அப்படியே பாடி முடித்த சியாமா சாஸ்திரிகள், தொடர்ந்து சரபந்தன தாளம் என்ற ஒரு புதிய மிகக் கடினமான தாளத்தில் சிம்ஹநந்தன தாள பல்லவிக்கு எதிராகப் பாடினார். அனைவரும் ஆரவாரித்தனர். சியாமா சாஸ்திரிகள் போட்டியில் வெற்றி பெற்றார். மன்னன் மிகவும் மகிழ்ந்தான். சியாமா சாஸ்திரிகளுக்கு வெற்றி மாலையை அணிவித்தான். விருதுகள் பலவும் கொடுத்துச் சிறப்பித்தான். ஆனால் சியாமா சாஸ்திரிகளோ அனைத்துப் பரிசுப் பொருள்களையும் காமாக்ஷிக்கே அர்ப்பணித்து விட்டார்.
இதே போல நாகப்பட்டினம் அப்புக்குட்டி என்ற வித்வானும் இவரிடம் போட்டி போட வந்தார். அவரையும் இவர் ஜெயித்து அரசனின் ஆதரவைப் பெற்றார்.
அப்புக்குட்டி மைசூரை அடைந்து மைசூர் மன்னரிடம் பெருந்தன்மையாக இவரைப் பற்றிப் புகழ்ந்து கூற, மன்னர் இவரை அழைத்தாராம். ஆனால் சியாமா சாஸ்திரிகளோ காமாக்ஷி அருளைத் தவிர பெயர், புகழ், செல்வம் விரும்பாதவர் என்பதால் அங்கு செல்ல மறுத்து விட்டார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!- Part Two
ரிக். 10-22-6 உஷனன்
புலவர்களில் நான் உஷன கவி என்று பகவத் கீதையில் கண்ண பிரான் கூறுவதை நாம் அறிவோம். அவருடைய பெயரே ‘கவி’ என்பதாகும். அவருடைய கோத்திரம் காவ்ய கோத்திரம். தமிழில் மிகவும் பழையகாலக் கவி என்று கருதப்படும் தொல் காப்பியரும் தொன்மையான காப்பியக் குடியைச் சேர்ந்தவரே. இவருடைய பெயர் த்ருண தூமாக்கினி என்பது நச்சினார்க்கினியர் உரையால் அறியப்படும். மற்றொரு புகழ்பெற்ற காவ்ய கோத்ர சங்கப்புலவர் காப்பியாற்றுக் காப்பியனார். அவரைப் பற்றிய அதிசய விஷயங்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் காணக்கிடக்கிறது.
காவ்ய என்பது தமிழில் காப்பிய என்று மாறும் (ப=வ)
இதில் அதிசயம் என்னவென்றால் ரிக் வேத காலத்திலேயே அவர் (USANA KAVI ) புராண புருஷர் ஆகிவிட்டார். சில கவிதைகள் அவருடைய பெயரில் கிடைத்த போதிலும் அவர் அக்காலத்திலேயே பழைய கவிஞர் என்று அழைக்கப்பட்டார் . அவரை ரிக் வேதத்தின் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவர் இந்திரனின் நெருங்கிய நண்பன், தோழன், துணைவர் என்றும் அவை பேசுகின்றன. ( இந்திரன் என்பது ஒரே ஆள் அல்ல. ஜனாதிபதி, பிரதமர் என்பதுபோல ஒரு பதவி; ஆகையால் எந்த இந்திரன் என்பது ஆராய்ச்சிக்குரியது )
Xxxx
சுசா , சுசி – 10-26-6
இந்த இரண்டு பெயர்களும் ஒரு ஆண் , பெண் ஆகியோரின் பெயர் என்பது லுட்விக் Ludwick என்பவரின் கருத்து .ஆனால் மாபெரும் உரைகாரரான சாயனர் மற்றும் வில்சன் Prof Wilson என்பவர் வேறு கருத்துக்களை உரைப்பர். இவை ஆண் ஆடு , பெண் ஆடு என்கின்றனர். ஏன் சுசா , சுசி என்ற பெயர்கள் என்பதை விளக்கவில்லை .
இதை அடுத்த மந்திரங்களில் ஆட்டு ரோமத்தால் ஆன கம்பளி ஆடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பூஷன் என்னும் வேதகால தேவதையை இழுத்துச் செல்லும் ரதம் ‘ஆட்டு ரதம்’ என்பதையும் நாம் அறிவோம். பிற்காலத்தில் அக்கினி பகவானின் வாகனமாக ‘ஆடு’ சித்தரிக்கப்படுவதையும் நாம் அறிவோம். இப்போது இவை ஆடா ? ஆட்களா ? குழப்பம் நீடிக்கிறது
Xxx
சோம மூலிகை பற்றிய அதிசயச் செய்தி
பஞ்சதச சோம 10-27-2
இந்த ‘15 சோமம்’ என்பதற்கு சாயனர் அற்புதமான விளக்கம் தருகிறார். சோமம் என்னும் அபூர்வ மூலிகை சுக்ல பக்ஷ 15 நாட்களில் வளருமாம். கிருஷ்ண பக்ஷ 15 நாட்களில் அதன் இலைகள் வாடுமாம். அதனால் அதற்கு 15 (பஞ்சதச) ஸோம என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கே பல முக்கிய விஷயங்களைக் கவனிக்கவேண்டும். R T H Griffith கிரிப்பித் என்பவர் 125 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட ரிக் வேத மொழி பெயர்ப்பிலேயே , முதல் பக்கத்திலேயே, சோம லதை என்னும் தாவரம் பற்றி தவறான தகவலை வெளியிட்டார். அது போதை மருந்துச் செடி; காளான் வகையினது என்று. ஆனால் நம்மவரான சாயனரோ அது மரம் என்றும் 15 நாளில் வாடக்கூடியது , பின்னர் வளரக் கூடியது என்றும் புதிய தகவலைத் தருகிறார். இதனால்தான் சந்திரனுக்கும் சோமா லதைக்கும் ஒரே பெயர் போலும்.
இங்கே தாவரங்கள் பற்றிய அரிய அறிவியல் செய்தி ஒன்றையும் சொல்ல வேண்டும். இந்துக்கள் மட்டும் தாவரங்கள் வளர்ச்சியையும் சந்திரனையும் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். ஆனால் விஞ்ஞானிகளோ சூரியன்- தாவர வளர்ச்சி பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஒருவேளை, எதிர்காலத்தில் நாம் சொல்வதை அவர்கள் ஆதரிக்கக்கூடும்.
Xxxx
RV 10-30 ; ஊதா /பர்பிள் நிற கழுகு /சுபர்ணன்
பத்தாவது மண்டல 30 ஆவது துதியிலும் பல புரியாத விஷயங்கள் வருகின்றன ; ஊதா /பர்பிள் நிற கழுகு /சுபர்ணன் என்ற வரிக்கு சோம என்று வியாக்கியானக்காரர்கள் உரை எழுதுவர் . இங்கே சோமம் என்பது சந்திரனையும் குறிக்கும்; சோம மூலிகையையும் குறிக்கும். ரிக் வேதம் முழுதும் பருந்து (Falcon or Eagle) கொண்டு வரும் சோம குளிகை பற்றி புலவர்கள் பாடுகின்றனர். எவருமே சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை. கிளி, குயில், காகம், அன்னம் பற்றிப் பேசும் ரிக் வேதம் ‘பருந்து- சோம லதை’ பற்றியே சொல்லுகின்றன.
RV 10-30-5 சோம ஓஷதி
இதுமட்டுமல்ல. இதே துதியில் ஐந்தாவது மந்திரத்தில் சோம ஓஷதி (மூலிகை) என்பதற்கு தர்ப்பைப் புல் அல்லது குச புல் என்று உரை எழுதுகின்றனர். ஆக சோம என்பது உரிச் (Adjective) சொல்லாகவும் பயன்படுகிறது. நாம் பாயசத்தை சாப்பிட்டுவிட்டு அமிர்தம் !! என்று புகழ்வது போல ‘சோம’ என்பது பயன்படுகிறது. ரிக் வேதம் முழுதும் பசு, குதிரை, இரும்பு, இந்திரன் என்பன பல பொருள்களில் வருகிறது ; வெள்ளைக்கார மொழி பெயர்ப்பாளர்கள் இவைகளை மறைத்து விடுவார்கள் அல்லது மழுப்பி விடுவார்கள்
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். சிந்து சமவெளியில் கோட்டைகள் இருந்ததாகவும் அவைகளை ஆரியர்கள் அழித்ததாகவும் ஆரம்பத்திலேயே தப்பாக எழுதி இதுவரை சிந்து சமவெளி எழுத்துக்களைப் படித்தறியமுடியாதபடி செய்துவிட்டனர். இரும்புக் கோட்டைகளை இந்திரன் அழித்ததாக ரிக் வேதம் இயம்புகிறது. அதை மொழி பெயர்க்கையில் ஆரியர் பற்றி வாய் திறவார். சிந்து சமவெளியில் இரும்பு கிடையாது என்று ஒரு புறம் எழுதிவிட்டு, அதை ஆரியர் அழித்ததாக எழுதிவிட்டு இரும்பு, குதிரை எலும்புகள் எங்கே? என்று கேட்டால் மவுனம் சாதிப்பார்கள். ஆக இங்கு சோம என்பதற்கு சந்திரன், பருந்து, தர்ப்பை என்று பல பொருள்கள் வருகின்றன!!!
Xxxx
இரண்டு தாரைகள்
இதே 10-30 துதியில் இரண்டு தாரைகள் ( நீர் பெருக்கு ) என்பதற்கு ஏகதனா , வசதிவாரி என்று உரை எழுதுவர் ; இவை வேள்வி விஷயமா அல்லது நீர் நிலைகளா என்று விளக்கப்படவில்லை
Xxxx
குரு ஸ்ரவணன் 10-32-9
பத்தாவது மண்டல 32 ஆவது மந்திரத்தில் குரு ஸ்ரவணன் என்ற ‘பெயர்’ அல்லது ‘சொல்’ வருகிறது . ஸ்ரவண என்றால் கேட்பது என்று பொருள்; கேட்பதால் மட்டும் அறியப்படுவதால் வேதத்தை ‘சுருதி’ என்பர்; இதை அற்புதமாக சங்க காலத் தமிழர்கள் ‘கேள்வி’ என்று மொழிபெயர்த்தனர் ; பிராமணர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆன்ற கேள்வி நான் மறையாளர்’ என்பர். இதே பொருளில் ‘கேட்பவர்’ என்று சாயனர் உரை எழுதினார். வெள்ளைக்காரர்களோ இது ஒரு மன்னன்/ இளவரசன் பெயர் என்பர். இதற்கு அடுத்து வரும் துதியை சான்றாகக் காட்டுவர்.
Xxx
துஹ்சாசு 10-33-1
இதற்கு அப்படியே அகராதியில் பொருள் கண்டால் , பேய் அல்லது கெட்ட தேவதை , துஷ்ட தேவதை என்று வரும். ஆனால் லுட் விக் என்பவர் இதை பகை மன்னனின் பெயர் என்பார். பகைவர்களை நாம் பேய், பேமானி ,பேய்ப்பயல் என்னு திட்டுவது போல அவர் கொள்கிறார். இதன் மூலம் ஒரு பிசாசின் பெயரை நாம் அறிகிறோம்
Xxx
WOLF AND QUAIL- 10-39-13 ஓநாயும் காடையும்
இதற்கு உரை எழுதிய சாயனர், அவருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாஸ்கரை மேற்கோள் காட்டுகிறார். ‘இரவு’ என்னும் ஓநாயின் வாயிலிருந்து ‘உஷை’ (Dawn, Early Morning) என்னும் பறவையை மீட்டார்கள் என்று.
சங்கத் தமிழ் அகப்பாடல்களைப் போல இப்படி மறைபொருளில் பாடும் வழக்கம் ரிக் வேதத்தில் முதலில் துவங்கியதை ஒப்புக்கொள்கிறார்கள்
இரண்டாவது இது 1-112-8 துதியிலும் வருகிறது ஆனால் அங்கே அஸ்வினி தேவர்கள் செய்த அற்புதங்கள் பட்டியலில் வருவதால் வேறு பொருளும் இருக்கலாம். ஏனெனில் யாஸ்கர் காலத்துக்குள்ளேயே (கி.மு.850) வேதத்தில் உள்ள 600 சொற்களுக்கு பொருள் தெரியவில்லை என்று அரவிந்தர் தனது வேத அகராதியில் (Vedic Glossary by Sri Aurobindo) சொல்கிறார்.
ஆகவே சாயனர், யாஸ்கர் சொல் வதையும் ஒரு ஊகமாகவே கொள்ள வேண்டும் இதனால்தான் சங்கராசார்யார் போன்றோர் வேதத்தின் பொருள் காண்போரை மெச்சுவதில்லை. அதன் மந்திர ஒலியின் மஹிமையை மட்டுமே அவர்கள் போற்றுவர்.
Xxx
10-47-6 வைகுந்தன் , சப்தகு
இங்கு ஒரு அதிசய விளக்கம் வருகிறது. வைகுண்டம்/ன் என்ற பெயர் நமக்கு விஷ்ணுவின் இருப்பிடம் என்று தெரியும். அது ஒரு ரிஷியின் பெயர் – இந்திர வைகுண்டம்!!
அவரைப்பற்றிய வியப்பான செய்தி. அவர் விகுந்தா என்ற அரக்கியின் மகன்! அவரை இந்திரன் இரண்டாவது தாய் ஆக ஏற்றுக்கொண்டாராம். ஆக வேத காலத்திலேயே தேவர் – அரக்கர் கலப்பு உண்டு. கச்ச தேவயானி- சுக்ராசார்யார் கதை, கிருஷ்ணனின் குடும்பத்தில் அரக்கர் சம்பந்தம் முதலியவற்றிலும் இதை அறிய முடி கின்றது
‘சப்தகு’ என்பதற்கு பெரும் துதி பாடுவோரின் பிரபு என்று பொருள் எழுதினார்கள். ஆனால் இது பிருஹஸ்பதியின் ஒரு பெயர் என்றும் அவருடைய தேரை/ ரதத்தை ‘ஏழு எருதுகள்’ (Drawn by Seven Oxen) இழுப்பதால் இந்தப் பெயர் என்றும் உரை எழுதியுள்ளனர் சிலர்.
வேதம் முழுதும் ரதத்தை இழுக்க, பல பறவைகள் , மிருகங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன .
கலைமான்கள் இழுக்கும் சாண்டா கிளாஸ் வண்டி Santa Claus Sledge drawn by Reindeer கூட வேதத்தில் உளது. பைபிளுக்குப் புறம்பான இதை கிறிஸ்தவர்களும் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டார்கள் (முன்னரே இது பற்றி எழுதியுள்ளேன்)
Xxx
10-48-8 பர்ணயன் , கரஞ்சன்
இந்த மந்திரத்தில் இரண்டு பேய்கள் பற்றிய தகவல் வருகிறது. பர்ணயன் , கரஞ்சன் என்ற இரண்டு மரத்தில் வசிக்கும் அரக்கர் பற்றி மந்திரம் எட்டில் (10-48-8) காண்கிறோம். மஹாபாரதத்தில் உள்ள யக்ஷப் பிரஸ்னம் என்ற பேயின் கேள்வி பதில் பகுதியை அறியாதோர் எவருமிலர். சங்க இலக்கியப் பாடல்களில் ‘அணங்குகள்’ பற்றி அறிகிறோம். ஏரி , குளம், மலை, மரம் ஆகிய எல்லாவற்றிலும் அணங்கு இருப்பதாக தமிழர்கள் பாடுவார்கள். அந் +அங்கு என்றால் உடல் இல்லாத (ஆவி) என்று பொருள்.
இந்த மந்திரத்தில் வரும் இரண்டு மரப் பேய்கள் பற்றி 1-53-8 மந்திரத்திலும் வருகிறது அங்கே ‘வாங்ருதா’ என்ற மேலும் ஒரு அரக்கர் பெயரையும் கேட்கிறோம் .
இதே துதியில் ‘கங்குகள்’ என்று ஒரு சொல் வருகிறது இவர்கள் யார் என்று தெரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவிட்டனர்
ஒன்பதாவது மந்திரத்தில் ‘சாப்ய நமீ’ என்ற பெயர் வருகிறது – இவரை இந்திரனின் நண்பர் என்று சிலர் செப்புவர். ‘சய்யா’ என்பவரின் மகன் ‘நமி’ ; அவரை ‘சப்பிய நமீ’ என்பர் . பிற்காலத்தில் சமணர் பெயர்களில் ‘நமி’ நிறைய வருகிறது!
என்ற கவி வாக்கால் முருக பட்டாரகர் தான் மறைஞான சம்பந்த குருவின் மரபில் வந்தவர் என்பதை உறுதிப் படுத்துகிறார்.
தொண்டை நாட்டுப் பெருமையைப் பேச வந்தவர்,
சேக்கிழார் கலியனார் திருக்குறிப்பினார்
மேக்குறு பூசலார் விழையும் வாயிலார்
தேக்குமை யடிகளார் திகழு மூர்க்கனார்
ஆக்கமொடு உதித்தருள் அடைந்த நாடிதால்
என்று கூறி சேக்கிழார், கலிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், பூசலார் நாயனார், வாயிலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், மூர்க்க நாயனார் ஆகிய பெரியோர் அவதரித்த மண்டலம் தொண்டை மண்டலம் எனப் பெருமை படக் கூறுகிறார்.
முருகனே வந்து வீரசோழியச் செய்யுளை எடுத்துக் காட்டி அருள் பாலித்து மறைந்ததை ஆசிரியர் சிறப்புறப் பல செய்யுள்கள் மூலம் விவரிக்கும் பாங்கு அருமையாக இருக்கிறது.
பின்னர் தனது மாணாக்கரான கோனேரியப்பரை நோக்கி கச்சியப்பர், “ஸ்காந்தத்தின் ஏழாவது பகுதியான உபதேச காண்டத்தைத் தமிழ்ப் படுத்துக” என்று அருள்கிறார்.
“மங்கலத்துறும் இடாடி மந்தலரிழிக்குஞ் செம்மை
யங்கமுளருனப் புத்தேள் அணி மகரத்தினின்றி
யங்கவுற்றிடு கரீரமென் றனைவோருங் கூறத்
திங்களினுருவ மூன்று திகழ் திருத் திங்கணாளில்”
கச்சியப்பர் சிவபிரானொடு ஒன்றினார்.
கந்த புராணம் வாழ்க, ஆதிசைவர்கள் வாழ்க, என்று வாழ்த்துக் கூறி கந்த புராணத்தை எடுத்துரைத்தவர், ஆய்ந்தவர், கற்றவர், இனிக் கற்கப் போகின்றவர், உள்ளம் உருகிக் கேட்பவர்கள் ஆகிய அனைவரும் முக்திப் பேறை அடைவர் என்று உறுதி கூறி நூல் முடிவு பெறுகிறது.
நூலுக்கு அற்புதமாக அருள் வாழ்த்துரைகள் வழங்கியோரின் உரைகளில் ஒரு பகுதி இதோ :
திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் – கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனர் தில்லை சிவஸ்ரீ எஸ். கார்த்திகேய சிவம் அவர்கள் ஆண்டு தோறும் இது போன்று சிறந்த நூல்களைப் பதிப்பித்து வருதல் பாராட்டத்தக்கது.
தருமை ஆதீனம் 27ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் – இந்நூலில் மூலப்பாடல் மட்டுமே இருந்த நிலையில் அவற்றுக்கு உரை எழுதப்பட்டு மறுபதிப்பு செய்யப்படுவது அறிந்தோம். இது சைவத்திற்கும் தமிழுக்குமாகிய தொண்டு
திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் கயிலைமாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் – பன்முகச் சிறப்புடன் நூல் வெளிவந்து பல்லாயிரம் பக்தர்களுக்கு விருந்து தந்து பரவசமூட்டிடச் செந்திற்கந்தன் சேவடிகளைச் சிந்தித்து வாழ்த்துகிறோம்.
ஸ்ரீ கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீமத் ராஜ.சரவணை மாணிக்கவாசக குரு பரமாச்சார்ய சுவாமிகள் – இவ்வரிய பயனுள்ள பணியில் தன்னை ஆட்படுத்திக் கொண்ட அனைவருக்கும் குருவருளும் திருவருளும் என்றும் முன்னிற்கவும் சைவக் கொள்கை நிறைந்து வாழும் அனைவருக்கும் இந்நூல் வரப்பிரசாதமாக விளங்குவதால் அனைவரும் பெற்று குருவருள் பெற்றிடவும் வாழ்த்தி ஆசீர்வதிக்கிறோம்.
விகாஸ் ரத்ன சிவஸ்ரீ கே. பிச்சை குருக்கள் – உரையாசிரியர் கூனம்பட்டி ஆதீனப்புலவர் உயர்திரு. இராம. மாணிக்க வாசகர் அவர்களின் ரத்தினச் சுருக்கமான அழகான உரை பாராட்டத் தக்கதாகும்.
மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனரும், முதல்வருமான சிவஸ்ரீ ஏ.வி. ஸ்வாமிநாத சிவாசாரியார் – “சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்பார் நாவரசர். அவ்வாறு சிவ சிந்தையுடையோரால் ஆக்கப்பட்ட புராணங்களைப் படனஞ் செய்தும் செய்வித்தும் வந்தால் சிந்தை தெளிந்து ஏகாக்கிர சித்தமாய மகிழ்வுடன் வாழலாம் என்பது இந்நூலைப் பயிலுவோர்க்கு விளங்கும்.
திருச்சி, மலைவாசல் சிவஸ்ரீ M.N.கல்யாணசுந்தர சிவாச்சாரியார் – ஆதிசைவ மரபில் வந்துதித்த கச்சியப்ப சிவாசாரியார் புகழ் பாடும் இந்நூல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீள்பதிவு செய்து குருமரபினை நிலைநாட்டி வரும் எமது பேரன்புக்குரிய தில்லை கு. கார்த்திகேயசிவம் அவர்களின் இச்சேவை பாராட்டுக்குரியது. இப்புத்தகத்தை அன்பர்கள் வாங்கி படித்து குருவருள் பெற்றுய்ய ப்ரார்த்திக்கின்றோம்.
முத்தமிழ்ச் சைவ மாமணி சு. இராமலிங்க சுவாமிகள் (சீவம்பட்டியார்) – இது சைவ உலகிற்கு ஒரு அருட்கொடையாகும். சிவநேய மிகுந்த அன்பர்கள் கற்று உணர்ந்து சிவனருளைப் பெறுவீர்களாக
இந்நூலைப் பதிப்பித்த தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் தனது பதிப்புரையில் 1) பழமையான நூலைப் பாதுகாத்து, மறுபதிப்பு செய்து, வரும் தலைமுறைகளுக்குத் தருவதும் உயர் சிவப்புண்ணிய தர்மமே ஆகும் 2) பழமையான இந்நூல் கருத்துக்கள் சைவ உலகைச் சென்றடைய வேண்டும் 3) காலவெள்ளத்தால் இந்த நூல் அழிந்து விடாமல் உயிர்பெற வேண்டும் என்ற இந்த மூன்று காரணங்களை முன் வைத்து அவற்றை மனதில் கொண்டு, தான் இந்த நூலைப் பதிப்பித்ததாகக் கூறுகிறார்.
கம்பன் கழகம் போல கச்சியப்பர் கழகமும் உருவாகி கந்தபுராணம் அனைத்துத் தமிழர் இல்லங்களையும் அடையும் என எதிர்பார்க்கலாம்.
“வாழ்க இந்த முயற்சி. நூலகங்களிலும் தமிழர் இல்லங்களிலும் தவறாது இந்த நூல் இடம் பெற வேண்டும்.” என்ற நமது வாழ்த்தையும் அளித்து இந்த நூல் தனது இரண்டாம் பதிப்பை விரைவில் காணும் என்ற நம்பிக்கையையும் இங்கு பதிவு செய்கிறோம்.