இந்தியா, அயர்லாந்து, சீனா அரசியல் சட்டங்கள் – ஒப்பீடு (Post No.8267)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8267

Date uploaded in London – – –1 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அரசியல் சட்டம் பற்றிய ஒப்பீடு – மூன்றாம் கட்டுரை!

இந்தியா, அயர்லாந்து, சீனா ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒரு ஒப்பீடு

ச.நாகராஜன்

அயர்லாந்து

அயர்லாந்தின் அரசியல் சட்டம் தெளிவாகயேசு கிறிஸ்துவை தெய்வீக புருஷர் என்று குறிப்பிட்டு அவருக்கு ‘ஒப்புக்கொடுப்பதை’த் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

1937ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அயர்லாந்தின் அரசியல் சாஸனத்தின் முன்னுரையில் குறிப்பிடப்படுவதை அப்படியே பார்ப்போம்:-

* In the name of the Most Holy Trinity, from whom is all authority and to Whom, as our final end, all actions of both men and States must be referred.

* We humbly acknowledge our obligation to our Divine Land, Jesus Christ who sustained our fathers.

* Gratefully remember their heroic and unremitting struggle.

அயர்லாந்து எவ்வளவு நேர்மையாகவும் நன்றியுடனும் அதனுடைய பழம் பெரும் பாரம்பரியத்தையும் அதன் தேசீய வீரர்களையும் யேசு கிறிஸ்துவையும் நினவு கூர்ந்து உரிய அங்கீகாரத்தைக் கொடுக்கிறது.

ஸ்ரீ லங்காவும் அயர்லாந்தும் இப்படித் தயங்காமல் தங்களது முன்னுரையை வகுத்து மக்களிடம் தரும் போது இந்தியாவை எடுத்துக் கொள்வோம்.

தெய்வீகத்திற்கான அங்கீகாரமும் இல்லை, நமது ஹிந்து பாரம்பரியம் பற்றிய குறிப்பும் இல்லை.

இத்தனைக்கும் ஹிந்து பாரம்பரியம் என்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே பிறந்த ஒன்று.

பாரதியாரோ அது என்று பிறந்தது என்று யாராலும் சொல்ல முடியவில்லை என்கிறார்.

“தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு

    சூழ்கலை வாணர்களும் – இவள்

என்று பிறந்தவள் என்று உணராத

    இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாரதத் தாய் பற்றிக் குறிப்பிடுகிறார்.

சீனா

இந்திய அரசியல் சட்டத்தின் முன்னுரை (IP 1950, 1976) கால் பக்கத்திற்கும் குறைவானது.

ஆனால் சீனாவின் அரசியல் சட்ட முன்னுரையோ இரண்டு பக்கங்கள் கொண்டது!

சீனாவின் CP மிகத் தெளிவாகத் தன் பழம் பெரும் பாரம்பரியத்தையும் தொன்மையையும் கம்பீரமாகக் கூறுகிறது.

* China is one of the countries with the longest histories in the world.

* A splendid culture and glorious tradition.

* Tortuous, heroic struggles (for socialism)

* Promotion of coordinated material, political, and spiritual civilizations.

* Preserving the integrity of the Motherland.

நமது அரசியல் சட்டத்திலோ இப்படிச் சில வழ வழா வார்த்தைகள் :-

‘soverign, socialist, secular, democratic republic’ –

ஏன் சுலபமான எளிய வார்த்தைகளைக் கொண்டு நம் முன்னோரின் பெருமையைக் கூறி அவர்களுக்கு நன்றி பாராட்டி அவர் வழி நடப்போம் என்று சொல்லவில்லை.

நைமிசாரண்யத்தில் கூடியிருக்கும் பெரும் ரிஷிகளே அங்கு தலைமை பீடத்தில் இருப்பவரிடம், “எங்களின் முன்னோர்களின் சரிதத்தைச் சொல்லுங்கள், அதைக் கேட்க மிகவும் ஆவலுடைவர்களாக இருக்கிறோம்’ என்று சொல்ல அதன் பின்னரே அனைத்து சரித்திரங்களும் தொடங்கப்படுகிறது. இதை நமது புராண இதிஹாஸங்களில் காண்கிறோம்.

ஆனால் இன்றோ… அவர்களைச் சொல்வது கூட மறக்கப்பட்டு விட்டதா, மறுக்கப்பட்டு விட்டதா…?

எத்துணை பெரிய வீழ்ச்சி!

சீனா ஸான் யாட் சென்னின் -‘people’s democratic dictatorship’ஐக் குறிப்பிடுகிறது.

Marxisim-Leninism,Mao, Deng ஆகியோரை வழிகாட்டிகள் எனப் புகழ்கிறது.

சோஷியலிஸம், சோஷியலிஸம் என்று பேசுகிறோமே அது என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறதா?

மனதில் தோன்றியபடி பேசும் அனைத்துமே சோஷியலிஸம் தான்!

தான் பேசுவது தான் உண்மையான சோஷலிஸம் என்று சொல்லிக் கொண்ட எத்தனையோ தலைவர்களை இந்தியா கடந்த 73 ஆண்டுகளில் கண்டிருக்கிறது!

சீனாவின் அரசியல் சட்டம் முன்னோர்களின் பாதை வழியே செல்லப் போவதாக உறுதி கூறும் நேரத்தில் இந்தியா, ஏதோ ஆகஸ்ட் 47இல் தான் இந்தியா பிறந்ததாக கருதும் விதத்தில் அமைந்திருக்கும் அரசியல் சட்டத்தைக் கொண்டுள்ளது.

புகழோங்கிய அதன் வரலாறு எங்கே, அது ஏன் குறிப்பிட்ப்படவில்லை – ஒரு சின்ன வார்த்தை கூட இல்லையே!

சீனா தனது நாட்டின் தேசபக்தர்களை உரிய வார்த்தைகளால் சொல்கிறது இப்படி:-

“In the long years of revolution and construction, there has been formed under the leadership of CPC a broad patriotic united front ….. and embraces all patriots who support socialism, and all patriots who stand for reunification of the Motherland”.

கம்யூனிஸ ஆட்சிக்கே இவ்வளவு பெரிய பீடிகை என்றால் சமஸ்த உலகங்களும் சுகத்துடன் இருக்கட்டும் – ‘லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து’ என்ற பெரும் கொள்கையைப் பாரம்பரியமாகக் கொண்டிருக்கும் நாம் நம்முடைய அரசியல் சட்டத்தின் பீடிகையை எப்படி அமைத்திருக்க வேண்டும்.

எல்லா உலகங்களும் எல்லா மக்களும் நலமுற வாழ பாரதம் முன்னணியில் நிற்கும் என்றல்லவா சொல்ல வேண்டும்.

நம்முடைய அரசியல் சட்டம் ‘தேசபக்தர்கள்’ என்ற வார்த்தையை மிகத் தெளிவாகத் தவிர்க்கிறது. ஏன்?

‘தாய் நாடு’ என்ற வார்த்தையையும் தவிர்க்கிறது, ஏன்?

‘உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் (!) கம்யூனிஸ கொள்கையை உடைய சீனாவா தாய்நாடு என்று சொல்லும் போது நாம் ஏன் நமது நாட்டை தாய் நாடு என்று சொல்லவில்லை.

வந்தே மாதரம் என்ற கீதம் நமது தேசீய கீதம். அந்த வந்தே மாதரத்தை அரசியல் சட்டம் உரிய கௌரவத்துடன் சொல்லி இருக்கிறதா?

சிந்திக்க வேண்டும்!

விக்கிபீடியா தரும் தகவல் இது:-

Rajendra Prasad, who was presiding the Constituent Assembly on 24 January 1950, made the following statement which was also adopted as the final decision on the issue:

…The composition consisting of the words and music known as Jana Gana Mana is the National Anthem of India, subject to such alterations in the words as the Government may authorise as occasion arises; and the song Vande Mataram, which has played a historic part in the struggle for Indian freedom, shall be honoured equally with Jana Gana Mana and shall have equal status with it. (Applause). I hope this will satisfy the Members.

Constituent Assembly of India, Vol. XII, 24-1-1950

யாருக்கு நாம் பயப்படுகிறோம் என்று தெரியவில்லை. அன்னையே உன்னை வணங்குகிறேன் என்று கூட சொல்லக் கூடாதா, நமது நாட்டில்?

சிந்திக்க வேண்டும்!

tags-  அயர்லாந்து,, சீனா அரசியல் சட்டங்கள்,

***

ஐப்பசி மாத பழமொழிகள் 4 கண்டு பிடியுங்கள் (Post No. 8266)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8266

Date uploaded in London – 30 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஐப்பசி மாதம் பற்றிய 4 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.ஐப்பசி  மாதத்து எருமைக்  கடாவும்  மார்கழி மாதத்து நம்பியானும் சரி

2.ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை  இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி

3.ஐப்பசி  மாதத்து வெயிலில் அன்று உரித்த தோல் அன்று காயும்

4.ஐப்பசி  மாதம் அழுகைத் தூற்றல், கார்த்திகை மாதம் கனத்த மழை

(ஐப்பசி, கார்த்திகை அடை மழைக் காலம் என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன் )

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

–subham–

tags — ஐப்பசி மாத, பழமொழிகள்

RIG VEDIC WEDDING SCENE IN TURKEY (Post No.8265)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8265

Date uploaded in London – 30 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Yazilikaya means ‘inscribed rock’. It is in Turkey near another famous site Bogazkoy. We have already seen the evidence of Vedic Gods Indra, Mitra, Varuna and Nasatya in their records dated 1380 BCE in Bogazkoy/kaya. So we know for sure that Hindus or those who believed in Hindu Gods lived and ruled there 3400 years ago. And after the marriage of Hittite princesses to Egyptian Pharaohs, the whole region was influenced by Hindu culture. We find horses for the first time in Egyptian battles . Hittite princesses installed new festivals. This is the background of Yazilkaya. The Middle East had thousands of deities. So newly married princesses mixed lot of local deities and as a result they got new deities or at least new names for old deities.

For Hindus , it is very familiar. Same Shiva, Vishnu and Devi are called with different names with different local myths (Sthala puranas) in different parts of India.

We have to look at Yazilikaya sculptures on huge rocks with this in mind. Above all , Hittite’s language is related to Sanskrit (Indo-European).

In the Rig Veda the most famous mantra is Wedding Mantra (RV 10-85). Unlike other mantras it is used in social events like Weddings. And the wonder of wonder is, it is used until today. South Indian Brahmin families use Vedic mantras for weddings. It is heard in several film wedding scene as well.

Here are the amazing similarities between wedding mantras and the Yazilikaya rock sculptures:-

1.Rig Veda mantra sees every bride as Miss Suuryaa. She is the daughter of Savitr or the Sun (Surya).

In Yazili also we see the Sun Goddess.

2.Rock sculptures show wedding processions coming in opposite directions. Male deities are in the left and the female deities are in the right.

In Hindu marriages we see processions like this. More over, the seating arrangement is similar  in religious gatherings and  Bhajans and weddings. On the Muhurtha day bridegroom party sits at the left.

3.One male god is shown with bull/ Rishaba in the rocks. Hindu scriptures portray Lord Shiva with a bull. Madurai Siva is described as SOMA Sundara reminding us the Wedding mantra where Soma (moon) is used with bull. He has got two companions who may be Asvini twins. They are accompanying Surya in the wedding.

4. Goddess in the opposite side is riding on a lion in Yazilikaya. Hindu goddess Shivani, Bhavani, Durga and others ride on a lion in Hindu mythology (I have already explained the Vahanas in my research paper in his blog

5. The characters in the procession extend their hands and on the hands we find their names. Hindu Weddings are called Paani Grahanam. It means grip/grasp/holding the hand. That is the main ceremony. Here in the rocks we see figures are ready for action.

6.Hindu wedding mantras are like love poems. They praise husband and wife as ‘two bodied one soul’. To depict this the double headed eagle is portrayed under two gods in the rocks. Two bodies united one like a heart (shape).

7.Hindu Mantras praise the bride and bride groom as one entering or dwells in another’s heart.  This heart is shown in Western greeting cards and greeting stamps . Double headed eagle’s body looks like heart.

8.Hindu mantras welcome everyone to see the procession and bless the couple. According to Rig Veda they travel in a golden chariot.

9.Even if Yazilikaya wedding procession is interpreted as Annual ritual Sacred Wedding procession we have comparisons. Gods’ sacred marriages are celebrated in all major South Indian temples; It was celebrated in Sumeria too. But all those are in museums now. Sacred weddings (Kalyana Maha Utsavas)  are a regular feature in all major South Indian temples . That was the model for human weddings.

Along with the female deities we see little figures as well . in the Rig Vedic wedding hymn there are 47m mantras praising over 25 deities. So we may count them as any one or two from the list.

Rig vedic wedding mantras give very interesting details about bride and bridegroom. I will deal with them separately.

Any one who reads the wedding hymn in the Rig Veda and looks at this rock scene will definitely see the similarities in both.

Yazilikaya has got many sculptures. They must be explored more thoroughly  with Hindu stories in mind. I have already written about the Double Headed Bird, Sacred Sumerian Marriage and Vahanas (Mounts of Gods) in the Middle East .

tags  –  Wedding Mantras, Yazilikaya, Sun Goddess, Procession, Sacred marriage, double headed eagle, vahanas

-subham–

ஆஸ்துமாவுக்கு ஆனியன் (onion) ! டயபடீஸுக்கு நிலக்கடலை!! (Post.8264)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8264

Date uploaded in London – 30 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கை  மேல் பழம்! கை மேல் பலன் !

கை  நிறைய, பை  நிறைய பழங்களையும்  , காய்கறிகளையும் வாங்கிச் சாப்பிடுங்கள் ; கை மேல், அதாவது உடனே பலனும் கிடைக்கும் ; பலமும் வரும்; நோய்களுக்கு ‘குட் பை’  சொல்லவும் இயலும். 

காய்கறிகள், பழங்கள் மூலமாக பல நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பக்கப் படத்தைத் (ONE PAGE A 4 SHEET PICTURE) தருகிறேன். இதை பிரிண்ட் அவுட் எடுத்து வீட்டில் சுவரில் அல்லது கதவில் அல்லது பிரிட்ஜ்(Fridge) மீது ஒட்டிவையுங்கள் என்று இந்த ஆங்கிலப் பக்கத்தின் அடியில் எழுதப்பட்டிருப்பதையும் கவனியுங்கள்

ஆங்கில மூலத்தின் சுருக்கம் இதோ:–

1.தலை வலி தீர இஞ்சி சாப்பிடு!

மீன்களில் உள்ள புரதச் சத்து (Protein)  தலைவலி வருவதைத் தடுக்கும் ;

மீன் எண்ணையாகவும் ( Fish Oil) சாப்பிடலாம்  இஞ்சியும் (Ginger)  வலியையும் , ரணத்தையும் ஆற்றும்

*****

2.ஹே பீவர் HAY FEVER போக தயிர் உதவும்!

மேலை நாடுகளில் வசந்த காலப் பூக்கள் மகரந்தங்களைப் (Pollen grains) பரப்பும் ; அப்போது மூக்கு ஒழுகும், உடல் அரிக்கும்; கண் எரியும் ; இன்னும் பல தொல்லைகள் ஏற்படும். இவை நீங்க ‘யோகர்ட்’ (Yoghurt) என்று வெளிநாட்டினர் அழைக்கும்  கட்டித் தயிர் சாப்பிட்டால் குணம் கிடைக்கும் .

***

3.தேநீர் சாப்பிட்டால் ஸ்ட்ரோக் STROKE வராது!

அவ்வப்போது தேநீர் எனப்படும் ‘டீ’ (Tea)  குடித்தால் ரத்தக் குழாய்கள் அடைபடுவதைத் தடுக்கலாம் . ரத்தக் குழாய்களில் கொழுப்புச் சத்து படிந்து ரத்த ஓட்டம் தட்டைப்படும்போது ‘ஸ்ட்ரோக்’ ஏற்படுகிறது.

***

4.தேன் HONEY சாப்பிட்டால் தூக்கம் கிடைக்கும்

நம்மில் பலரும் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறோம். தேன் சாப்பிட்டால் தூக்கமின்மை (Insomnia) அகன்று சுகமாகத் தூங்கலாம் ; சுவீட் ட்ரீம்ஸ்! SWEET DREAMS!!

****

CELERY

5.ஆஸ்த்மாவை அகற்ற வெங்காயம் போதும்

மூச்சு விடும் குழாய்கள் பாதிக்கப்படுவதால் ஆஸ்த்மா வருகிறது. இந்த மூச்சு இளைப்பு ஏற்படாமல் இருக்க  சிவப்பு வெங்காயம் (Red Onions)  சாப்பிட வேண்டும்

***

6.ஆர்த்ரைடிஸ் ARTHRITIS போக மீன் சாப்பிடுங்கள்

மூட்டு வலி, வீக்கம் , கீல் வாதம் பூக்கும் சக்தி சால்மன் , ட்யூனா , மகரில் (Salmon, Tuna, Mackerel)  மீன் வகைகளுக்கு உண்டு

(லண்டனில் என் நண்பர் ஒருவர் ரசம் குழம்பு, சாம்பாரில் புளிக்கு பதிலாக எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தி  கீல் வாதத்தை விரட்டினார் ; இது அனுபவ வைத்தியம் )

****

7.வயிற்றுக் கோளாறுக்கு (STOMACH UPSET) வாழைப்பழ வைத்தியம்

கல்யாணத்தில் ஐந்து முறை சாப்பிட்டு ‘அடித்து நொறுக்கியதால்’ வயிற்றுக்கு கோளாறா ? பரவாயில்லை . வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு சம நிலை அடைய உதவி செய்யும்; இஞ்சியும் கைகண்ட மருந்து. காலையில் எழுந்தவுடன் குமட்டல், வாந்தி எடுக்கும் பயம் வந்தாலும் இஞ்சியே துணை !!

***

8.நீர்கடுப்புக்கு கிரான்பெரி ஜூஸ்

சிறு நீர் போக முடியாமல் அந்த இடத்தில் எரிச்சலோ , அரிப்போ (BLADDER INFECTIONS) ஏற்பட்டால் அடிக்கடி கிரான் பெரி பழ ரசம் (Cranberry juice) சாப்பிட வேண்டும். மேலை நாடுகளில் இது எல்லா சூப்பர்  ஸ்டார்களிலும் கிடைக்கிறது

***

9.எலும்புக்கு அன்னாசிப் பழம்

எலும்பு முறிவு ஏற்பட்டாலோ, அல்லது வயதான பெண்களுக்கு வரும் ஆஸ்தியோபொரோசிஸ் OSTEOPOROSIS ( எலும்புகள் பலவீனமாகி எளிதில் சேதம் அடையும் நிலைமை) ஏற்பட்டாலோ அன்னாசிப் பழம்  (Pine apple) சாப்பிட வேண்டும். அதிலுள்ள ‘மங்கனீஸ்’ நல்ல பலன் தரும்

***

10.மாத விலக்கு பிரச்சினைகளுக்கு (PMS) கார்ன் பிளேக்ஸ் (CORN FLAKES) 

பெண்களுக்கு மாதம் தோறும் ஏற்படும் பிரச்சினை இது (PRE MENSTRUAL SYNDROME) . மாத விலக்கு ஏற்படுவதற்கு  முன்னர் கவலை வரலாம்; மனத் தொய்வு ஏற்படலாம்; காரணமே இல்லாமல் கணவன் மீது சீறி விழலாம். உடம்பில் உள்ள ஹார்மோன்களின் அளவு மாறுபடுவதே இதற்குக் காரணம் . இதைத் தடுக்க, சோளத்தினால் ஆனா கார்ன் பிளேக்ஸ் (CORN FLAKES)  உதவும் .

***

11.ஞாபக சக்திக்கு ஆய்ஸ்டர் (OYSTERS)

வெளி நாடுகளில் சிப்பிகளுக்குள் இருக்கும் பூச்சியை (OYSTERS) சாப்பிடுவர். இதிலுள்ள துத்த நாகச் சத்து நினைவாற்றலை வளர்க்கும். மாமிசம், கடல் உணவு சாப்பிடாதோர் வல்லாரைக் கீரையைப் (BRAHMI)  பயன்படுத்தலாம்; வல்லாரைத் துவையல் சுவையானது. வேதங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எழுதாமல் மனப்பாடம் மூலம் பரப்பிவரும் பிராமணர் பாடசாலைகளில் வல்லாரைக் கீரையை அடிக்கடி பயன்படுத்துவர் ; இப்போது பிராமி டானிக் , பிராமி வில்லைகள் முதலியவையும் விலைக்குக் கிடைக்கிறது

***

CRANBERRY JUICE

12.இருமலுக்கு சிவப்பு மிளகாய் (RED PEPPER)

பெரிய மிளகாய் அல்லது கொடை மிளகாய் பச்சை , சிவப்பு, மஞ்சள்  வர்ணங்களில் கிடைக்கும். இதில் சிவப்பு மிளகாயில் இருமலைப் போக்கும் சத்து இருக்கிறது

***

13.மார்பக புற்று நோய் BREAST CANCER

பெண்களை அதிக அளவில் பாதிக்கும் நோய் மார்பக த்தில் ஏற்படும் புற்று நோய் ஆகும். பால் கொடுக்கும் உறுப்பில் (BREAST)  கட்டி போல கையில் நெருடினாலோ வலி ஏற்பட்டாலோ உடனே மருத்தவ பரிசோதனைக்குப் போகவேண்டும். பலரும் வெட்கப்பட்டுக் கொண்டு டாக்டரிடம் சொல்லாமல் இருந்து உயிரையே இழக்கின்றனர் கோதுமைத் தவிடு, முட்டைக் கோசு  (WHEAT BRAN, CABBAGE) ஆகியன பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் (ESTROGEN)  ஹார்மோனை ஆரோக்கியமான அளவில் வைக்க உதவுகின்றன .

***

14.நுரையீரல் புற்றுநோய் (LUNG CANCER)

ஆரஞ்சு மற்றும் கீரை முதலிய பச்சிலைகளில் உள்ள பீட்டா கரோட்டின் (BETA- CAROTENE) என்னும் வைட்டமின், நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்

***

15.வயிற்றுப்  புண் (ULCERS)

குடலில் அல்லது வயிற்றில் புண்கள் ஏற்பட்டால் வயிற்று வலி, வயிற்று எரிச்சல் ஏற்படும். இதில் இரண்டு வகை உண்டு . இதைத் தடுக்கவும், குணப்படுத்தவும் முட்டைக்கு கோசு (CABBAGE) உதவுகிறது .

***

16.வயிற்றுப்போக்கு (DIARRHEA)

ஆப்பிள் பழத்தைத் தோலுடன் துருவி காற்றுப்படும்படி வைத்தால் அது கொஞ்சம் பழுப்பு நிறத்தை அடையும். தைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்

****

17.கொலட்ஸ்ரால் என்னும் கொழுப்பு (CLOGGED ARTERIES):–

கொலட்ஸ்ரால் (CHOLESTEROL) என்னும் கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களில் படியும்போது  ரத்த ஓட்டம் தடைப்படும் . இதனால் இருதய நோய்கள் வருகின்றன. அவகாடோவிலுள்ள (AVOCADO) சத்து கொலஸ்ட்ரால் பிரச்சினைக்கு கைகண்ட மருந்து

***

RED PEPPER

18.உயர் இரத்த அழுத்தம் (HIGH BLOOD PRESSURE)

ஆலிவ் எண்ணை, செலரி (CELERY) தண்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சரியான அளவில் வைக்க உதவுகின்றன

***

19.டயபட்டிஸ் (DIABETES) எனப்படும் நீரிழிவு நோய்

ரத்தத்தில் உள்ள இன்சுலின் (INSULIN) என்னும் ஹார்மோன் சம நிலையில் இல்லாதது  நீரிழிவு நோய்க்கு காரணம் ஆகும் . ப்ராக்கோலி (BROCCOLI) , நிலக்கடலை ஆகியவற்றில் காணப்படும் குரோமியம் இன்சுலினை ஒழுங்குபடுத்தும்

***

“எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி யாம் ஒன்றும் அறியோம் பராபரமே” – தாயுமான சுவாமிகள்

BROCCOLI

TAGS– ஆஸ்துமா, ஆனியன், நிலக்கடலை,புற்று நோய்



LEMON, MANGO, AVOCADO, COCONUT

INDIA WAS NOT POOR-1 (Post No.8263)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8263

Date uploaded in London – – – 30 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

INDIA WAS NOT POOR:

TESTIMONY FROM ADAM SMITH  – 1

R. Nanjappa

Tales of Our Economic woes

Most Indians, including the so called educated ones, have no idea how wealthy India was historically. They tend to dismiss claims of our ancient prosperity as mere tales. The colonial-oriented history that they have studied in the modern period has created the picture of a poor, illiterate, backward society based on primitive agriculture. And the Independent government of Nehru and his coterie followed exactly the same line. This was the common belief spread in the country by both the historians and economists of the establishment, reinforced through the schooling system.

During the freedom struggle, some Indian leaders explained that Indian poverty was due to the wrong policies of the colonial govt. Gandhiji wrote much on the subject. But they were not taken seriously. Nehru, and the leftists who dominated the scene after Independence completely sidelined the old leaders and their views, to promote a Marxist view of the matter.

If we turn to Adam Smith, we will get some great information and pleasant surprise. 

In his masterpiece ‘The Wealth of Nations’, (1776) he wrote in some detail about the state of Bengal, because that was where it all began, and that was where the English had their headquarters, the seat of their Governor-General.  Let us remember that Smith was writing within 20 years of the battle of Plassey in 1757 which finally established English supremacy in  India, and within 3 years of the Regulating Act of 1773, which noted the misdeeds of the Company regime in India, and which was meant to regulate its affairs, as its very title shows! Considering this, Smith seems to be accurately informed!

India’s legendary prosperity

After noting the early systems of some other ancient people, and Egypt, Smith said:

The improvements in agriculture and manufactures seem likewise to have been of very great antiquity in the provinces of Bengal in the East Indies..

In Bengal the Ganges and several other great rivers form a great number of navigable canals  in the same manner as the Nile does in Egypt. ..

It is remarkable that neither the ancient Egyptians, nor the Indians, nor the Chinese encouraged foreign commerce, but seem to have derived their great opulence from this inland navigation.

Book I, chap iii

Referring to the inland navigation facilities provided by the Egyptians, Smith says:  

Those of the same kind  which were constructed by the ancient sovereigns of

Indostan for the proper distribution of the waters of the Ganges as well as of

many other rivers, though they have been less celebrated, seem to have been equally great.

In both ancient Egypt and Indostan, indeed, the confinement of the foreign market was in some measure compensated by the conveniency of many inland navigations, which opened, in the most advantageous manner, the whole extent of the home market, to every part of the produce of every different district of those countries. The great extent of Indostan, too, rendered the home market of that country very great, and sufficient to support a great variety of manufactures…..Bengal, accordingly, the province of Indostan, which commonly exports the greatest quantity of rice, has always been more remarkable for the exportation of a great variety of manufactures than for that of its grain.

Part IV, chap ix. Penguin edition, 1999, pages 268-269.


Thus, India was not a poor, wretched, primitive agricultural country, as the many Indian idiots, calling themselves economists, or historians, long maintained.                 

To be concluded

Adam Smith in London 
Adam Smith Statue In Edinburgh

tags –India not poor-1, Adam Smith, Wealth of Nations

இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள் – அரசியல் சட்டங்கள் – ஒப்பீடு -2 (Post No.8262)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8262

Date uploaded in London – – –30 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அரசியல் சட்டம் பற்றிய ஒப்பீடு – இரண்டாம் கட்டுரை!

இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள், ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒரு ஒப்பீடு -2

ச.நாகராஜன்

ஸ்ரீலங்கா

நமக்கு மிக அருகில் இருக்கும் குட்டி நாடு ஸ்ரீ லங்கா. ஒரு குட்டித் தீவு, ஆனால் பழம் பெரும் பாரம்பரியத்தையும் இந்தியாவுடனான நீண்ட நெடுங்கால உறவையும் கொண்டுள்ள ஒரு நாடு அது.

அதன் அரசியல் சட்டத்தின் முகவுரை (Preamble) ஒரு பக்கத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

அதனுடைய தலைப்பு ஸ்வஸ்தி என்பதாகும்.

“பற்பல தலைமுறைகளாக உணர்ந்தறிய முடியாதபடி உள்ள தொடர் பாரம்பரியத்தை (intangible heritage .. for succeeding generations)” அது சுட்டிக் காட்டுகிறது.

தனது மக்களுக்கு “அவர்களின் வீரதீர மற்றும் திருப்பிச் செலுத்த முடியாத போராட்டங்களை நினைவு கூர்ந்து” (while gratefully remembering their heroic and unremitting struggles) செய்ய வேண்டிய கடமையை அது சுட்டிக் காட்டுகிறது.

புத்த மதத்தை முதலிடத்தில் அது வைக்கிறது. அரசு புத்தமதத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்க்கும் என்று அது கூறுகிறது.

ஸ்ரீ லங்காவின் தேசிய கீதம் ஸ்ரீ லங்கா மாதா என்கிறது.

இப்போது நமது அரசியல் சட்டத்தைச் சிறிது பார்ப்போம்.

ஸ்வஸ்தி வாசனம் என்பது இந்தியாவிற்கே உரித்தான ஒன்று.

ஸ்வஸ்தி ஸ்ரீ என்று தான் நமது மன்னர்களின் கல்வெட்டுக்கள் ஆரம்பிக்கும்.

ஓம் என்ற மந்திரம் நமக்கே உரித்தானது.

நமது அரசியல் சட்டத்தின் ஆரம்பமாக ஓம் ஏன் இல்லை? (அல்லது ஸ்வஸ்தி ஸ்ரீ என்று ஏன் ஆரம்பிக்கவில்லை?!)

திருப்பிச் செலுத்த முடியாத, அபாரமான வீரர்களைக் கொண்ட நாடாக ஸ்ரீ லங்கா இருந்து அதன் பழம் பெரும் பாரம்பரியத்தை எவ்வளவு அழகாக அது அரசியல் சட்டத்தின் ஒரு பக்கத்திற்கும் குறைவான முன்னுரையில் நன்றியுடன் நினைவு கூர்கிறது.

நமது அரசியல் சட்டத்தில் நமது பாரம்பரிய மிக்க வீரர்கள் ஏன் குறிப்பிடப்படவில்லை.

ரிஷிகள், இராமர், கிருஷ்ணர், அர்ஜுனன், தர்மர், பீஷ்மர் என் அவதார புருஷர்களுக்கும், மகான்களுக்கும், வீரர்களுக்கும் பஞ்சமா என்ன இந்த நாட்டில்?

சந்திரகுப்தன், சாணக்கியன், ராஜ ராஜ சோழன், திருவள்ளுவர் போன்ற அற்புதமான மாமன்னர்களுக்கும், அறிஞர்களுக்கும் பஞ்சமா இந்தியாவில்!

இந்தப் பழம் பெரும் பாரம்பரியமிக்க மகான்களை, அறிஞர்களை, வீரர்களை மா மன்னர்களை ஒரு சொல்லிலாவது  நன்றி கூறி, பாராட்டி அவர் வழி நடப்போம் என்று சொல்லக் கூடாதா?

புத்த மதம் போற்றுவோம், புத்த சாஸனம் போற்றுவோம் என்று சொல்லி விட்டதால் ஸ்ரீ லங்கா பத்தாம் பசலித் தனமான கொள்கை உடைய நாடாக ஆகி விட்டதா, அப்படித்தான் இன்றைய உலகத்தினர் அதை எள்ளி நகையாடுகிறார்களா?

மாபெரும் புத்தர் நாடு என்றல்லவா அதைப் புகழ்கிறார்கள்!

இந்தியாவை எடுத்துக் கொண்டால் வசிஷ்டரிலிருந்து விவேகானந்தர் வரை எத்தனை ஆயிரம் மஹாபுருஷர்கள்!

அவர்களைப் போற்றுவோம் என்று ஒரு சொல் கூட ஏன் இல்லை!

பண்டைய பழம் பெரும் பாரம்பரியம் நமக்கு இல்லையா அல்லது 15, ஆகஸ்ட், 1947இல் தான் திடீரென்று இந்தியா தோன்றியதா?!

நேபாளம்

2007இல் ஒரு இடைக்கால அரசியல் சாஸனத்தை நேபாள் மேற்கொண்டது.

அது ஒரு ஹிந்து ராஷ்டிரம் என்ற பெருமையை, இல்லை, இல்லை, உலகின் ஒரே ஹிந்து ராஷ்டிரம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது செகுலர் தேசமாக மாறியது.

ஒரு சுவையான தகவல் என்னவெனில் இந்தியா தவிர செகுலர் என்ற வார்த்தையை அரசியல் சாஸனத்தில் கொண்டுள்ள இன்னும் ஒரு நாடு நேபாளம் தான்! (ஆனால் கடைசியாகக் கிடைக்கும் உறுதியாகாத தகவலின் படி அது மீண்டும் ஒரே ஹிந்து ராஷ்டிரம் என்ற பெருமையைப் பெறலாம்)

என்றாலும் கூட நேபாளம் தேவநாகரியை அது தனது அதிகாரபூர்வமான எழுத்தாக அறிவித்துள்ளது!

அது மட்டுமல்ல, பசுவை தேசீய விலங்காக அது அறிவித்துள்ளதோடு அதைப் போற்றிப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவின் பாரம்பரியம் மிக்க இலக்கிய வளம் செழித்த சம்ஸ்கிருதம் என்ன ஆனது? கோடானுகோடி ஹிந்துக்கள் காலம் காலமாகப் போற்றி வழிபடும் பசுவைப் போற்றக் கூடாதா, அரசியல் சட்டத்தில்?!

குறைந்த பட்சம் அதன் வதையையாவது தடுக்கக் கூடாதா?

சிந்திக்க வேண்டும்!

***

ரா, ரா, ரா,ரா,ரா, ரா,ரா, ரா, ரா,ரா,ரா, ரா,ரா -க்கள்; 26 அழகிய சொற்கள் (Post No.8261)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8261

Date uploaded in London – 29 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ரா, ரா, ரா,ரா,ரா, ரா,ரா, ரா, ரா,ரா,ரா, ரா,ரா -க்கள்; 26 அழகிய சொற்கள் (Post No.8261)

பாபநாசம் சிவம் சங்கீத மேதை மட்டுமல்ல. பெரிய சம்ஸ்கிருத மேதை யும் கூட ; சம்ஸ்கிருத மொழியை நமக்கு சுவையாக கற்பிக்கிறார். அவர் எழுதிய வட மொழிச் சொற்கடல் பால் பாயசமும் பாதாங்கீரும் , கோதுமை அல்வாவும் பன்னீர் ஜாங்க்ரியும் சாப்பிட்ட ருசியைத் தரும்.

இதோ 26 ராக்கள் ; ருசிரா, ஏமி ருசிரா !

க்ருகரா , ஸுகரா , முகரா , அசரா

கசரா , ருசிரா , அஜரா , இதரா ,

கதரா, சுதரா , சதுரா , மதுரா ,

பதரா , சதரா , கதிரா , மதிரா ,

அதரா, பதரா , மதுரா , விதுரா ,

அபரா, கபரா , ச்ருமரா  , விவரா ,

சுஷிரா , மசுரா

சம்ஸ்க்ருதத்தில் க, ச,ட , த, ப வர்க்கம் ஒவ்வொன்றிலும் 4 எழுத்துக்கள் இருப்பதால் உச்சரிப்பின் படி அர்த்தம் மாறும்.

மேலே உள்ள பட்டியலில் முதல் மத் /துரா கண்ண பிரானின் வட மதுரை .

இரண்டாவது மதுரா தமிழ் வளர்த்த தென் மதுரை.

tags — பாபநாசம் சிவன், வடமொழி சொற்கடல், ‘ரா’ சொற்கள் 

NEVER SICK AGAIN (Post No.8260)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 8260

Date uploaded in London – 29 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

I am clearing my cup board and binning all my old paper cutting (PC)s. Following PC may be useful to many of you. Fruits and vegetables will cure most of your health problems

So, just buy these fruits and vegetables periodically. There is nothing wrong in consuming these even if you have no health issues. I am binning this pc. So, keep a copy or at least note down my blog post number, title and date. You can use it at any time and send the message to any of your friends. (This cutting is stapled with 2012 NEWS SCIENTIST matter. So it may be from that source; but I am not sure)

Lokas samastho sukhino bhavantu

Let all people live in good health and with sound mind

(I WILL GIVE IT IN TAMIL TOMORROW)

tags – never sick again, , fruits, vegetables,

ஆவணி மாத பழமொழிகள் 4 கண்டு பிடியுங்கள் (Post No. 8259)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8259

Date uploaded in London – 29 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.ஆடிக்கொரு தரம் (தடவை) , ஆவணிக்கொரு தரம் (தடவை)

2.ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு

3.ஆவணி முதலில் நட்ட பயிர் பூவணி அரசர் புகழ் போலும்

4.ஆவணி கீழ்க் காற்றும் ஐப்பசி மேல் காற்றும்  சொற்பனத்திலும் ம ழை இல்லை

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு.

tags– ஆவணி, மாத ,பழமொழிகள்

–subham–

துருக்கியில் ரிக்வேத கல்யாண காட்சி -புதிய கண்டுபிடிப்பு (Post No.8258)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8258

Date uploaded in London – 29 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

துருக்கியில் ரிக்வேத கல்யாண காட்சி -புதிய கண்டுபிடிப்பு

துருக்கி நாட்டில் பொகாஸ்கோய் (Bogazkoy) என்னுமிடத்தில் கிமு.1380 கல்வெட்டில் ரிக் வேத தெய்வங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது எல்லோரும் அறிந்த செய்தி. விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்களில் நீண்ட காலமாக உள்ள செய்தி ; இதன் மூலம் சம்ஸ்கிருதம், உலகில் கல்வெட்டில்  பொறிக்கப்பட்ட மிகப்ப ழைய மொழி என்ற பெருமை பெற்றது . ஏனெனில் அதே தெய்வங்களின் பெயர்களை இந்திரன், அக்கினி, நாஸத்யர் களை (அஸ்வினி தேவர்கள்) இன்றும் நாம் வணங்கி வருகிறோம். நம்முடைய பெயர்களில்  மட்டுமின்றி எல்லா கோவில் மந்திரங்களிலும் அஸ்வினி, அஸ்வின், இந்திரன் முதலிய பெயர்கள் உள்ளன  . இதைவிட பழைய பாபிலோனிய, சுமேரிய கல்வெட்டுகள் இருந்தும் அவைகள் மியூசிய தெய்வங்கள் தான் . அதுமட்டுமல்ல ரிக்வேதத்தில் அதிகம் துதிகளை உடைய இந்திரன் பெயர் காஷ்மீர் முதல் கண்டி (Kandy in Sri Lanka) வரை உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் இன்றும் இந்திரன் பெயர் உள்ளது. தமிழர்களிடையே இந்திரன் பெயரோ கொள்ளை மலிவு. ராஜேந்திரன், மகேந்திரன், கஜேந்திரன் உபேந்திரன் முதலிய பெயர்களை தினமும் கேட்கிறோம்.

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 85-ஆவது துதி கல்யாண மந்திரம். இதை நாம் எல்லோரும் அடிக்கடி கேட்கிறோம். பிராமணர் வீட்டுக் கல்யாணங்களிலும் , பிரமணர்களைக் கொண்டு நடத்தப்படும் கல்யாணங்களிலும் , திரைப்படக் கல்யாணக் காட்சிகளிலும் நீங்களும் இதைக் கேட்டிருப்பீர்கள். இதில் இரண்டு அருமையான வரிகள் வருகின்றன.

“உன்னுடைய இதயமும் என்னுடைய இதயமும் ஒன்றாகட்டும்” என்று புதுமணத்தம்பதிகள் மந்திரம் சொல்கின்றனர். இதை இன்று உலகிலுள்ள எல்லா மதத்தினரும் இதயம் (Heart)  படம் போட்டு வாழ்த்து அட்டைகளிலும் (Greeting Cards and Greeting Stamps)  தபால்தலைகளிலும் பயன்படுத்துகிறோம். 47 மந்திரங்கள் அடங்கிய ரிக்வேத 10-85ம்- (RV 10-85 hymn) துதியில் இது ஒரு மந்திரம்.

கணவன் 11ஆவது குழந்தை!!

மற்றொரு அற்புதமான வரி “மணப்பெண்ணே உனக்கு பத்துக் குழந்தைகள் பிறக்கவேண்டும். உன்னுடைய கணவனை 11ஆவது குழந்தையாக நடத்து”. இது மிகவும் உளவியல் ரீதியான (Psychological) அறிவிப்பு. கணவனும் மனைவியும் கொஞ்சிக் குலவுவர். ஆனால் குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான அன்பும் கவனிப்பும் குழந்தை இடத்தில் போய்விடும்.அந்தக் குழந்தையை கணவனின் மறு அச்சாக (replica) அந்தப் பெண் பார்ப்பது இதற்கு காரணம். ஆகையால் பத்துக் குழந்தை பெற்றாலும் கணவனையும் கைவிடாமல் குழந்தையைக் கவனிப்பது போல கவனி என்று அற்புதமாக சொல்கின்றனர். இதை எல்லா கல்யாண விட்டு மந்திரங்களிலும் இன்றும் கேட்கலாம்.

திரைப்படக் காதல் பாட்டுகளுக்கு எல்லாம் மூலம் இந்த ரிக் வேத துதிதான். இதிலுள்ள 47 மந்திரங்களில் பல மந்திரங்களுக்கு இன்னும் அர்த்தமே தெரியவில்லை. வெளிநாட்டு மொழி பெயர்ப்பாளன் ஒவ்வொருவனும் ஒருமாதிரி உளறிவைத்துள்ளான் . ரால்ப் கிரிப்பித் (Ralph Griffith) மூன்று இடங்களில் அர்த்தம் புரியவில்லை என்று ஒப்புக்கொள்கிறார். இன்னும் ஓரிடத்தில் ‘ஒருவேளை’ (Probably)  இப்படி இருக்கலாம் என்பார். மற்றவர்கள் வழக்கம்போல  வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டி கிளறி முடி இருக்கின்றனர் .

47 மந்திரங்களிலும் 25-க்கு மேலான வேதகால தெய்வங்கள் பெயர்கள் உள்ளன. கடைசி மந்திரத்தில் உள்ள தேஸ்த்ரி Destri என்பது ரிக்வேத சரஸ்வதியாக இருக்கலாம் என்பது ஸாயனர் கருத்து. வேறு இடங்களில் இந்த சொல் வரவே இல்லை. இன்னும் ஏராளமான புதிர்கள் உள்ளன. ஆனால் சொல்லவந்த விஷயம்  புதிய கண்டுபிடிப்பு.

புதிய கண்டுபிடிப்பு

கல்யாண ஊர்வலம் என்பது இந்துக்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. இந்திய துணைக் கண்டத்திலுள்ள முஸ்லீம்கள் இதை ஓரளவு பின்பற்றுகின்றனர். கிரேக்கர் கல்யாணங்கள் முதலியனவும் ஆடல் பாடல்களுடன் நடக்கும். ஆயினும் மாப்பிள்ளை அழைப்பு (Jan vasam)  ஊர்வலம், பின்னர் மணப்பெண்ணை மணமகனுடன் சேர்த்து ஊர்வலம் விடுவது, அதாவது கணவன் வீட்டுக்கு அனுப்புவது எல்லாம் மந்திரத்தில் உள்ள ஒரே மதம் இந்து மதம்தான்.

தங்க ரதத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் ஊர்வலமாகப் போகும்போது “எல்லோரும் வந்து வாழ்த்துங்கள்” என்று ஒரு மந்திரம் அழைக்கிறது.

பிறகு ‘கையும் கையும்’ கலப்பதுதான் கல்யாணம் என்பதையும் ஒரு மந்திரம் சொல்கிறது. இதைக் ‘கைப்பிடித்தல்’ என்று ஆண்டாள் முதல் பலரும் பாடி இருக்கின்றனர் . பிராமண வீ ட்டு திருமணப் பத்திரிகைகளில் இதைப் ‘பாணி கிரஹணம்’ என்று சம்ஸ்கிருதத்தில் எழுதி இருப்பர். இதற்குப்பின்னர்  கன்யா தானம் (பெண்ணை தானமாகக் கொடுக்கிறேன்) என்ற வரியும் இருக்கும்.

பெண்ணுக்கு நாலாவது கணவன் மாப்பிள்ளை!!!

மற்றொரு மந்திரம் மணப்பெண்ணை சூர்யா என்ற பெண் பெயரால் அழைக்கும் . மணமகன் சந்திரன் (சோமன்).

ஏற்கனவே சோமன், கந்தர்வன் அக்கினி ஆகியோர் மணந்த மணமகளை இப்பொழுது ‘நாலாவதாக’  இந்த மணமக க்கு தருவதாக ஒரு மந்திரம் சொல்லும். இது தத்துவ பூர்வ விஷயம். இதைச் சொன்னவுடன் எந்த மாப்பிள்ளையும் கோபித்துக் கொண்டு மணமகளை ‘வேண்டாம் போ’ என்று சொன்னதாக வரலாறு இல்லை!!

இந்த கல்யாண ஊர்வலக் காட்சி அப்படியே பொகஸ்கோய் (Yazilikaya near Bogos Kaya) பக்கத்திலுள்ள பாறையில் செதுக்கப்பட்டுள்ளது..

தென் இந்தியாவில் பெரிய கோவில்களில் ஆண்டு தோறும் இறைவன்- இறைவியின் கல்யாண உற்சவம் சிறப்பாக  இன்றும் கொண்டாடப்படுகிறது. சுமேரியாவிலும் , மதுரை மீனாட்சி  கோவில் போலவே திருமணம் நடந்தது பற்றி முன்னரே எழுதியுள்ளேன் அதே போன்ற காட்சி பொகஸ்கொய அருகில் யாஜிலிகாயாவில் (Yazilikaya) செதுக்கப்பட்டுள்ளது இதில் ஒவ்வொரு கடவுளும் ஒரு வாகனத்தில் வரு வதை முன்னரே வாஹன ஆராய்சசிக் கட்டுரையில் தந்துள்ளேன்.

ஏனைய கடவுள் கல்யாணங்களை விட இதில் சிறப்பு என்னவென்றால் ரிக் வேத கல்யாண மந்திரத்துக்கும் இந்தக் காட்சிக்கும் உள்ள ஒப்பீடு ஆகும்

1.எந்தப் பெண் கல்யாணம் செய்துகொண்டாலும் இந்துக்கள் மந்திரத்தில் அந்தப் பெண்ணை சூர்யா (Miss Suuryaa) என்றுதான் அழைப்பர் . அதே போல துருக்கியிலும் சூர்யா (Suuryaa) என்ற பெண் கல்யாணக் காட்சியைக் காணலாம். இந்துக்களின் கதையின்படி  சூர்ய தேவனின் மகள் சூர்யா .

2.இரண்டாவது ஒற்றுமை கல்யாண ஊர்வலம் ஆகும். சூர்யா ஊர்வலமும் மணமகன் ஊர்வலமும் எதிர் எதிர் திசையில் வந்து சந்திக்கிறது . இங்கு மண மகனின் பெயர் தேசுப் (Tesub) என்னும் பருவநிலைக் (weather god) கடவுள் ஆகும். அவர் ரிஷப வாஹனம் அருகில் நிற்க காட்சி தருகிறார். இது மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு வரும் சிவனை நினைவு படுத்தும் . அதுமட்டுமல்ல அவர் பெயரிலும் சோமன் உண்டு. அவரை சோமசுந்தரர் என்றே அழைப்பர். 

3.துருக்கி பாறை சிற்பங்களில் அவர் அருகில் இரண்டு குட்டி தெய்வங்களும் இருக்கின்றன.  இவர்களை ரிக் வேத கல்யாண மந்திரம் குறிப்பிடும் அஸ்வினி தேவர்களுக்கு ஒப்பிடலாம்

4.சூர்யா என்பவள் சிம்ம வாஹனத்தில் வருவதாக யாஜிலிகாய பாறைச் சிற்பம் காட்டுகிறது. இது சிவனின் மனைவி காளி, துர்க்கை என்னும் பல பெயர்களில் சிம்ம வாஹினியாக காட்சி தருவதற்கு இணையானது

(காய, கோய் என்ற சொல்லுக்கு பாறை என்று பொருள்).

5.ஐந்தாவது ஒற்றுமை ஒவ்வொருவரும் கை நீட்டி நிற்கின்றனர். கைக்குமேல்  அவர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  இது ‘பாணி கிரகணத்தை’ — கைப்பிடித்தலை – குறிக்கிறது

6. சூர்யா என்னும் மணப்பெண் அருகில் 2 பெண்கள் , அவளுடைய மகன், ஒரு குரங்கு ஆகியன உள்ளன. ரிக் வேத கல்யாண மந்திரத்தில் இருபதுக்கும் மேலான பெயர்கள் வருவதால்  நாம் எதையும் குறிப்பிடலாம்

7.கடவுளருக்குக் கீழே இருதலைப் பறவை (Double Headed Eagle)  சித்தரிக்கப்பட்டுள்ளது ‘ஈருடல் ஓருயிர்’ என்பதைக் காட்டும் பறவை இது. இரண்டு தலைகள் இருக்கும் ஆயினும் உடம்பு ஒட்டி இருக்கும்

கி.மு 1400 முதல் மத்திய கிழக்குச் சிற்பங்களில்  தோன்றும்  இருதலைப்புள் (Double headed bird) விஜய நகர காசுகள் வரை பொறிக்கப்பட்டு இன்று பல நாட்டுக் கொடிகளிலும் காசு , ரூபாய் நோட்டுகளிலும் அச்சி டப்பட்டுள்ளது  உடம்பு ஒரே இதய வடிவில் இருக்கும் அகநானுறு 12, கலித்தொகை 89, புறத்  திரட்டு 785 முதலியவற்றில் இருதலைப் புள்  பாடப்படுவதை முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரையில் கொடுத்துள்ளேன்.

8. மேலும் ஆண் தெய்வங்கள் இடது புறமும் பெண் தெய்வங்கள் வலது புறமும் நிற்கின்றன . இன்றும் கூட இந்து கல்யாணங்களில் ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் மற்றொரு புறமும் நிற்பர். கோவில்கள், பஜனைகளில் கூட

இப்படிப் பிரிவு (segregation)  உண்டு. வெளிநாட்டில் இதைக் காணமுடியாது.

இதே போல வல , இட அமைப்பை முகூர்த்த நேரத்தில் காணலாம்.

இந்த துருக்கிய சிற்பங்கள் அனைத்தும் ஹிட்டைட் (Hittites)  கலாசாரத்தின் தாக்கம் என்றும் அவர்கள் சம்ஸ்கிருதம் தொடர்பான (இந்தோ ஐரோப்பியன் மொழிக்குடும்பம்) மொழி பேசினர் என்றும் எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

எப்படி ஒரே சிவன் -பார்வதி, ஒரே விஷ்ணு -லெட்சுமி ஒவ்வொரு ஊர்க் கோவிலிலும் வெவ்வேறு பெயர்களுடன், வெவ்வேறு கதைகளுடன் காணப்படுகின்றனரோ அப்படி மத்திய கிழக்கிலும் 3000 தெய்வங்கள் இருக்கின்றன. ஆகையால் பெயர்களை மறந்து விட்டு கதையின் உயிரோட்டத்தை மட்டும் ‘சலித்து எடுக்க’ (filter) வேண்டும் ; அப்படிப் பார்க்கையில் யாஜிலிகாயா சூர்யா கல்யாணமும் பிராமண வீடுகளில் மணப்பெண்ணை சூர்யாவாக பாவித்து ரிக் வேத (10-85) மந்திரம் சொல்வதும் ஒன்றே.

வாழ்க மணமக்கள்!!

Tags-  துருக்கி ரிக்வேத 10-85 , கல்யாணம், மந்திரம்.