காக்கா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா! (Post No.7206)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

Date: 12  NOVEMBER 2019

Time  in London – 14-59

Post No. 7206

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

காகம் பற்றி 1992 மே 10ம் தேதியும், கொக்கு பற்றி 1992 நவம்பர் 15ம் தேதியும் தினமணியில் நான் எழுதிய கட்டுரைகளைப் படியுங்கள். காகம் பற்றிய செய்தி இன்று வரை சரியே. லண்டனுக்கு வரும் சுற்றுலாப் பபயணிகள் ‘லண்டன் டவரில்’ இன்றும் இக்கதையைக் கேட்கலாம். செஷைர் பால கொக்குகள் தொல்லை இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. இறுதியில் காகம் பற்றிய முந்தைய கட்டுரைகளுக்கும் தொடர்பு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

காகம் | Tamil and Vedas

காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது! (Post No.4734). Date:12 FEBRUARY 2018. Time uploaded in London- 11-26 am. Written by London swaminathan. Post No. 4734. PICTURES ARE TAKEN from various …

  1.  

tamilandvedas.com › tag › காகம்-பழமொ…



காகம் பழமொழிகள் | Tamil and Vedas

28 Mar 2013 – இன்று காகம் பற்றிய பாடல்கள், பழமொழிகளைக் காண்போம்.அடுத்த வாரத் தலைப்பையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்: ”இன்பம் …

கா கா பராசக்தி பாடல் | Tamil and Vedas

Translate this page

கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்) !!!!!! காகம் பற்றிய பழமொழிகள்: நாங்கள் பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள் புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் …

காகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/காகம்/

Translate this page

5 May 2017 – 5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை). 6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல். மாலை குளித்து மனை புகுதல் – சால.

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் …

Translate this page

27 Feb 2015 – காகம் என்னும் பறவை குறித்து இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி பாடிய காக்கை, குருவி …

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு …

Translate this page

5 May 2017 – எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). … பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது …

–subham–

அகநானூற்றில் MISS GOOD FRIDAY! RICE BEER!! (Post No.7205)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

Date: 12  NOVEMBER 2019

Time  in London – 9-02 am

Post No. 7205

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

சங்கப் புலவர் பெயர் நல் வெள்ளி!!!

Vegetarian Food at Tiruvannamalai

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1 | Tamil …

8 Dec 2014 – எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் காதல், குடும்ப வாழ்வு தொடர்பான 400 அகத்துறைப் பாடல்கள் உள. அதிசயம் 1

1.      

tamilandvedas.com › 2014/12/09 › அகநான…



அகநானூறு அதிசயங்கள் – Tamil and Vedas

9 Dec 2014 – Dr R Nagasamy ,an eminent archaeologist, historian and a Tamil-Sanskrit scholar has written several books on Tamil culture. கட்டுரையை எழுதியவர் … அதிசயம் 5 அகநானூற்றில் பல காடுகளின் பெயர்கள் வருகின்றன. அவை … Related. அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1In “தமிழ் பண்பாடு”.

1.      

swamiindology.blogspot.com › 2014/12 › 1_8



அகநானூறு அதிசயங்கள் – Swami’s Indology …

MYSTERIOUS MEDICINAL PROPERTIES OF THE SOMA PLANT IN RIG VEDA (Post No.7069). Oct 7th … Oct 1st. கவிதையில் இலக்கண அதிசயம்! வேற்றுமைக் கவிதைகள்!! … MY TAMIL BOOK. Sep 23rd.

அகநானூறு | Tamil and Vedas

7 Mar 2016 – Tagged with அகநானூறுஅகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! … ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1469; தேதி டிசம்பர், 2014. … அகநானூறு

சரக சம்ஹிதை | Tamil and Vedas

Tagged with சரக சம்ஹிதை … மாதவ நிதானம் (1-4). 9. வியாதிகளின் வகைகள். வியாதி … இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது. ஏன், 120 …

tamilandvedas.com › tag › சரகர்



—subham–

ஒலியின் ஆற்றல்! – 4 (Post No. 7204)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 12  NOVEMBER 2019

Time  in London – 7-10 am

Post No. 7204

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ஒரு கதையைப் படிப்பதற்கும்  அதை உணர்ச்சி ததும்ப சொல்வதற்கும் ஏராளமான வேறுபாடு உண்டு.

சிறுவர்களுக்குப் பாட்டிமார்களும், தாய்மார்களும் கூறும் கதைகள் அவர்களிடம் ஒரு நிரந்தரமான நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மஹாத்மா காந்திஜி இளமையில் கேட்ட ஹரிச்சந்திரன் கதை அவரை இறுதி வரை சத்தியத்தில் நாட்டம் அடையச் செய்தது. அவர் வாழ்க்கையையே சத்திய சோதனை ஆக்கியது.

தொட்டிலில் இருக்கும் குழந்தையைத் தூங்க வைக்க தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாடல் குழந்தையின் இதயத்துடிப்பை மெதுவாக்கி ஒரு அருமையான ஒய்வு உணர்வைத் தந்து அதைத் தூங்க வைக்கிறது.

இரவு நேரத்தில் நாம் கேட்கும் தேர்ந்தெடுத்த தேனிசைப் பாடல்கள் உணர்வு பூர்வமாக நம்மைக் கவர்ந்து ஒரு பெரிய சாந்தத்தை மனதிற்கு அளிக்கிறது.

எத்தனை பேர் தனக்குத் தானே பாடி மகிழ்ச்சி அடைகிறோம் – பாத் ரூம் பாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தானே!

உடலுக்கு நன்மை; உள்ளத்திற்கும் ஊக்கம் தந்து உதவுவது இசை தான்; அதன் அற்புதமான ஒலி தான்.

மருத்துவ சிகிச்சையில் சிலருக்கு இந்தப் பாடல் உடலின் சில தசைகளை வலுப்படுத்துகிறது.

பழங்குடி மக்கள் தங்களது பாடலில் ஒரு விதமான லயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லி உடலின் பல வியாதிகளைப் போக்குகின்றனர்.

நாராசமான ஒலி நமக்கு எரிச்சலை ஊட்டுகிறது. நமது கவனத்தைச் சிதற அடிக்கிறது. ஓவென்று கத்தும் ஓசை நம்மைத் துடிக்க வைக்கிறது.

தொடர்ந்து கேட்க முடியாத ஒரு ஓசையை நாம் வலுக்கட்டாயமாக கேட்க வைக்கப்பட்டால் காதிலிருந்து ரத்தம் கொட்டும்; உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

துள்ளாத மனமும் துள்ளும்

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும்

இசை இன்பத்தேனையும் வெல்லும்

என்பார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இசையின் மகிமை பற்றி ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதி விட்டதால் அதை மீண்டும் இங்கு தரத் தேவை இல்லை.

ஒலியின் இந்த அபூர்வ ஆற்றலை உணர்ந்த நமது மஹரிஷிகள் அதை ஆராயப் புகுந்தனர்.

அவர்கள் கண்டது இந்த பிரபஞ்சமே ஒலியின் அதிர்வுகளே என்பதைத் தான்.

நாத பிரம்மம் என்று சுருக்கமாக அவர்கள் இதைச் சொல்லி விட்டனர்.

காஞ்சி பரமாசார்யாள் இதைப் பற்றிப் பல இடங்களில் விரிவாக விளக்கி அருளியிருக்கிறார்.

அதில் ஒரு பகுதி இதோ :-

(“தெய்வத்தின் குரல்இரண்டாம் பகுதியில்வேதம் என்ற கட்டுரையில்ஒலியும் படைப்பும் என்ற உட்பிரிவில் முழுக் கட்டுரையையும் படிக்கலாம்).

வியாகரண சாஸ்த்ரத்தில் சப்தத்தையே ப்ரம்மமாக நிலைநாட்டியிருக்கிறது. இதற்கு சப்த ப்ரம்மவாதம் என்று பேர்.

பாஷை இலக்கணத்தைச் சொல்லும்போது இப்படி வையாகரணிகள் (வியாகரண சாஸ்திரக்காரர்கள்) அதை பிரம்ம ஸ்வரூபமாகச் சொல்லியிருப்பதையே இன்னொரு விதத்தில் ஸங்கீத சாஸ்திரக்காரர்களும் ஸ்தாபித்திருக்கிறார்கள். ஸங்கீதத்திலே நாதப்பிரம்ம உபாஸனை, நாதோபாஸனை என்கிற இடத்திலும் நாதம் என்பது வெறும் ஆதார சப்தம் மட்டுமில்லை. பாடுகிறவன் ஒரு ஸ்வர ஸ்தானத்தை ச்ருதியோடு சுத்தமாக தீர்க்கமாகப் பிடித்து அது பூர்ணமாக ஓங்கி முடிந்து விழுந்து லயிக்கிற இடத்தில் அது ச்ருதியோடு கவ்வி அத்வைதமாகக் கரைந்து, நிறைந்து போகிறதே அதைத்தான் நாதம் என்பது. இந்த இடத்திலே பாடுகிறவனும் அதோடு கரைந்து நிறைந்து விடுவான். அவன் மட்டுமில்லை. கேட்கிற ஸஹ்ருதயர்களானவர்களும் அப்படியே சொக்கித் தன்னை மறந்து அந்த நாதத்தில் ஐக்யமாயிருப்பார்கள்.

இதிலே பெறுகிற ஆனந்தந்தான் ஆத்மானந்தம், பிரம்மாநந்தம் என்று மத சாஸ்திரங்களின் உச்ச லக்ஷ்யமாய் சொல்லியிருப்பது.

நாதம் பிரம்மத்துக்குக் கொண்டுபோகிறது, சப்தம் நாதத்துக்குக் கொண்டுபோகிறதென்றால் இதில் ஒன்றின் தன்மை இன்னொன்றுக்கு இல்லாவிட்டால் எப்படி முடியும்? அதனால்தான் சப்தமே பிரம்மம் என்று சொல்வதாக சாஸ்த்ரம் ஏற்பட்டிருக்கிறது.

சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் நித்யமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பதுதான் ‘நித்யம்’. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் ‘பூர்ணம்’. இப்படி எக்காலத்திலும் எவ்விடத்திலுமாக நிறைந்திருப்பது சப்தம் என்று நம் பூர்விகர்கள் சொன்னதை இப்போதுதான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

பதினாயிரம் மைலுக்கு அந்தண்டை பாடுவதை இங்கே நாம் ரேடியோவில் கேட்கிறோமென்பதால், சப்தம் space-ல் எங்கும் வியாபகமாயிருப்பது prove ஆகிறது. இதோ இப்போது நான் பேசுவதை ஒருத்தர் டேப்-ரிக்கார்ட் பண்ணுகிறார்; க்ராமஃபோன் என்று ரிகார்ட் பண்ணுகிறார்கள். எத்தனையோ வருஷத்துக்கு அப்புறம் இந்த ரிகார்ட்களைப் போட்டாலும் சப்தங்கள் மாறாமலே ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்ன prove ஆகிறது? சப்தம் காலத்தால் நசிக்காமல் நித்யமாய் இருக்கிறது என்று நிரூபணமாய் விடுகிறதோல்லியோ?

பூர்விகர்களின் அதீந்த்ரிய சக்தியும் போய், நவீன ஸயன்ஸும் வராத காலத்திலே, ‘சப்தம் நித்யமானது, பூர்ணமானது’என்றால் “இதென்ன பேத்தல்?நாம் எழுப்புகிற ஒலி இதோடு தீர்ந்துபோனதுதான். இதெப்படி நித்யம்? மிஞ்சினால் அது நூறு, இருநூறு கஜம் போகட்டும். பெரிய இடி இடித்தால்கூட நாலைந்து மைலுக்கு மேல் ஓசை போகிறதில்லை. இதை பூர்ணம் என்றால் எப்படி?” என்றுதான் தோன்றியிருக்கும். இப்போது ஸயன்ஸ் வந்து நம் சாஸ்த்ர அபிப்ராயத்தைக் காப்பாற்றிக் கொடுக்கிறது!”

இனி மந்திரங்களின் ஒலி மகிமை பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம் –  மந்திர மகிமை என்ற அடுத்த கட்டுரையில்!

ஒலியின் ஆற்றல் தொடர் நிறைவுறுகிறது.

குறிப்பு:  இத்தொடரில் உள்ள பல கருத்துக்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ள கட்டுரை – Sound Bites என்ற கட்டுரை. எழுதியவர்  –  Linda Leary  , 2001ஆம் ஆண்டு வெளி வந்த கட்டுரை.

INDIAN MUSIC AND WESTERN MUSIC (Post No.7203)

Compiled by  London swaminathaan

swami_48@yahoo.com

Date: 11  NOVEMBER 2019

Time  in London – 10-37 am

Post No. 7203

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

I have been throwing away all the paper cuttings and articles I have collected from 1974. I am clearing two cup boards full of paper cuttings, articles, my hand written notes in 20 note books. One article written by M S N Menon from ORGANISER weekly published in 2004 is very interesting. It compares the arts of India with the arts of the Western world in bullet points. I cannot resist publishing it here before throwing the small paper cutting into the bin. Please read the article if you are a fan of music.

Source -ORGANISER weekly, dated 19 December 2004

Author – MSN Menon

subham

ஹோமர், உமர் கய்யாம், ஷேக்ஸ்பியர் (Post No.7202)

Blind Poet Homer of Greece

Compiled by  London swaminathaan

swami_48@yahoo.com

Date: 11  NOVEMBER 2019

Time  in London – 7-15 am

Post No. 7202

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

50 ஆண்டுப் பழமையான இலங்கைத் தமிழ் மலர் ஒன்றில் இலியத், ருபாயத் காவியங்கள் குறித்தும் ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய 24,000 சொற்கள் பற்றியும் இரண்டு பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன. படித்து மகிழுங்கள்

from the British Library Catalog:—
My pictures taken at Stratford Upon Avon
Shakespeare Beer!!!!!!!!!!!!!!!

தொல்காப்பியத்தில் எண்.9 (Post No.7201)

WRITTEN BY London swaminathaan

swami_48@yahoo.com

Date: 11  NOVEMBER 2019

Time  in London – 6-54 am

Post No. 7201

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

–subham–

ஒலியின் ஆற்றல்! – 3 (Post No.7200)


WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 11  NOVEMBER 2019

Time  in London – 6-44 am

Post No. 7200

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

to be continued………………..

SWAMI’S CROSS WORD 101119 (Post No.7199)


WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

Date: 10  NOVEMBER 2019

Time  in London – 5-53 am

Post No. 7199

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

1. (6) – enemy of Nagas

6. (4) – Petals of this Flower is used to make Gulkand

7. – big noise, sound in Sanskrit

8. – Urad dhal in Sanskrit with which South Indians make Vadai

10.– founder of Indina physics also known as Vaiseshika

11. – friend in Sanskrit

1. (5) – oldest woman philosopher in the world who challenged a great scholar in a big philosophers conference

2. (8) – King and Queen in Chess Chatur Anga

3. (5) – simile in Sanskrit and Tamil

4. – firm; also the name of Pole Star which is named after a Hindu boy

5. – name of a tree and a great emperor

9. – That which is true

–subham–

ஒலியின் ஆற்றல்! – 2 (Post 7197)


WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 10  NOVEMBER 2019
Time  in London – 5-43 am

Post No. 7197

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

ஒலி என்று எடுத்துக் கொண்டால் ஒரு ஒலிக்கு ஒரு அதிர்வெண் அல்லது ஃப்ரீக்வென்ஸி தான் இருக்கிறது. ஒரு போர்க்கைத் தட்டி அதிலிருந்து ஒரு ஓசை எழுகிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு ஃபோர்க்கை அதே போலத் தட்டினால் அதே ஃப்ரீகவென்ஸியுடன் – அதிர்வெண்ணுடன் தான் ஒலி எழும்பும்.

இதை சுலபமாக அளக்க முடியும்.

நாம் ஒரு பாட்டைப் பாடும் போது அதில் ஒரு ஸ்வரத்தைக் கையாளும் போது நமக்குள் ஒரு நல்ல அனுபவம் ஏற்படுகிறது – மெய் சிலிர்க்கிறது,தலையை ஆட்டுகிறோம்! ஆஹா எனக் கத்துகிறோம். இசை நம்மிடம் ஏற்படுத்தும் உடனடி விளைவு இது!

    திருடனைக் கண்டுபிடிக்கும் ஒரு புது விதமான  எச்சரிக்கை மணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் ‘தி இன்ஃபெர்னோ’ (The Inferno). அந்த எச்சரிக்கை மணி குறைந்த அதிர்வெண் உள்ள ஓசைகள் பலவற்றை எழுப்பும்.அதில் ஒன்று இன்னொன்றுடன் மோத பலவேறு ஓசைகள் எழும்பும்; அது உளவியல் ரீதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவிதமாகத் தலை சுற்றும்; வாந்தி எடுப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். கவனசக்தியைச் சிதற அடித்து எதைச் செய்ய எண்ணுகிறோமோ அது கவனத்திலேயே இல்லாமல் போய்விடும். இந்த மணியின் ஓசையால் திருட வந்தவன் திகைத்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் மலைப்பான். அவனால் திருட முடியாது!

      விஞ்ஞானிகள் ஒலி அலைகளைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளார்கள். அவற்றின் மூலமாக ஒலி வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுள்ளனர்.

வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வைத்து வளர்ப்பது ஒரு வித ஃபாஷன். வளர்ப்புப் பூனையைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சும் போது அது ஒரு வித மியாவ் ஓசையை எழுப்பும். அது வளர்ப்பவரின் மன இறுக்கத்தைத் தளர்த்துகிறதா? இதை ஆய்வு செய்து பார்த்து விடலாம் என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

விஞ்ஞானியான எலிஸபத் வான் மக்கெந்தலர் (Elizabeth Von Muggenthaler) ஒரு படி முன்னே போய், அப்படி பூனை எழுப்பும் ஓசை அது இயல்பாக நோய் தீர்க்கும் ஒலி என்றும் அது எலும்புகளையும் உடலின் அங்கங்களையும் வலிமைப் படுத்தும் ஓசை என்றும் தெரிவித்தார்!

பூனையின் இந்த ஓசை சராசரியாக 27 முதல் 44 ஹெர்ட்ஸ் என்ற அளவில் இருக்கிறது.

இந்த அளவு ஓசை எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது; எலும்புகளின் அடர்த்தியை (density) அதிகரிக்கிறது; இதர அங்கங்களுக்கும் வலுவூட்டுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே போல அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை (Ultra Sound treatment) மருத்துவ மனைகளிலும் சிகிச்சை நிலையங்களிலும் உடைந்த எலும்பை ஒட்ட வைப்பதற்கும் சீக்கிரமே அவை குணமடைவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

அற்புதமான இசையை இசைத்தால் தாவரங்களும் அபரிமிதமாக வளர்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இசை விற்பன்னர் தான் இசை அமைக்கும் போது என்னென்ன ஸ்வரங்களைப் பயன்படுத்தினாரோ அதே ஸ்வரங்களைப் பயன்படுத்தினால் தான் அந்த நல்ல விளைவு ஏற்படுகிறது என்றும் வெவ்வேறு வகையில் ஓசைகளை எழுப்பும் போது அந்த நல்ல விளைவு ஏற்படுவதில்லை என்பதும் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதே போன்ற ஆய்வுகள் பாக்டீரியாக்களை வைத்தும் நடத்தப்பட்டன. ஒரு விதமான நல்ல அதிர்வெண்கள் மூலம் அவை பெருகுகின்றன என்பதும் இன்னொரு விதமான அதிர்வெண்ணில் அவை சாகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை வைத்துப் பார்த்தால், நமது முன்னோர்கள் சில ஒலிகளைத் திருப்பித் திருப்பி ஏன் கூறச் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த விதமாகத் திருப்பித் திருப்பிக் கூறுவது வியாதிகளைத் தீர்க்கிறது.

      பறவைகளின் பாட்டொலி சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஒரு நல்ல பயனை விளைவிக்கிறது.

வசந்த காலம் வந்தால் பறவைகளின் உற்சாக ஒலி நம்மைப் பரவசப்படுத்துகிறது.

இந்த அற்புதமான் மெல்லிசை சுற்றி இருக்கும் தாவரங்களின் இலைகளை வளரச் செய்கிறது; மலர்களைப்  பூக்க வைக்கிறது.

வசந்த காலத்தில் இது அவசியம். ஆனால் கோடைகாலத்தில் வளர்ந்து விட்ட நிலையில் மலர்களுக்கும் இலைகளுக்கும் இந்த இனிய ஓசை அவ்வளவாகத் தேவை இல்லை.

     தாவரங்களில் ஏற்படும் இரசாயன மாற்றம் – அதாவது போட்டோசிந்தஸில் – (Photosynthesis) இரவில் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து உதய காலத்தில் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் செயல் பறவைகளின் இனிய ஒலிகளால் ஊக்கப்படுத்தப் படுகிறது.

இப்படி இனிய ஒலி எங்குமே ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியல் சோதனைகளாலும் நேரடி அனுபவங்களாலும் நாம் உணர்கிறோம்.

***

ஒலியின் ஆற்றல் தொடரும்

எட்னா எரிமலை மீது குண்டு வீச்சு (Post No.7198)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 10  NOVEMBER 2019

Time  in London – 5-39 am

Post No. 7198

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

எரிமலை மீது குண்டு வீச்சு என்ற தலைப்பில் நான் தினமணியில் மே3, 1992ல் ஒரு கட்டுரை எழுதினேன்.

27 ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த எரிமலை  இன்னும் அவ்வப்போது பொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

கடைசியாக மவுன்ட் எட்னா எரிமலையின் சீற்றம் 2018 டிசம்பரில் நடந்தது. சிசிலி தீவில் பெரிய பூகம்பம் ஏற்பட்டு கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த முறை எரிமலையின் சிகரத்தில் தீச்சுவாலை பீறிட்டு எழாமல், பக்க வாட்டு மலையைப் பிளந்து கொண்டு எரிமலை சீறியது. இப்படி பக்கவாட்டில் வெடிப்பது பத்து ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் நடந்துள்ளது

Dinamani article written by London Swaminathan in 1992.
DINAMANI NEWSPAPER 3rd May 1992

Mount Etna Volcano
subham