தமிழ் மொழி பற்றி கம்பன் (Post No.2819)

IMG_3212

Written by london swaminathan

 

Date: 17 May 2016

 

Post No. 2819

Time uploaded in London :– 15-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் மொழி பற்றி கம்பன் பாடிய பாடல்கள், அவனுக்கு தமிழ் மீதுள்ள அன்பைக் காட்டுகிறது. ராமன் புகழ் பாட வந்த கம்பன், தமிழின் புகழ் பாட மறக்கவில்லை. எங்கெங் கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தமிழையும், தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியனையும் போற்றிப் புகழ்கிறான்.

agastyanepal-carole-r-bolon

‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

ஆரண்ய காண்டத்தில் ராமன், அகத்தியன் சந்திப்பு பற்றி வருணிக்கும் கம்பன்,

ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான்

ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

பொருள்:– சக்கராயுதத்தை உடைய திருமாலைப் போல, பெரிய தமிழ் மொழியால் இவ்வுலகத்தை அளந்தவனாகிய அகத்தியன், ஆண்மை மிகுந்த ராம, லெட்சுமணர் அங்கே வந்ததை அறிந்தார். அதனால் மகிழ்ச்சிக் கடல் 14 உலகங்களையும் அடைந்தது. அந்த மகிழ்ச்சியுடன், மாட்சிமைப்பட்ட வரங்களை வழங்கும் ராமன், தன் திருவடிகளில் விழுந்து வணக்குமாறு, அவன்  எதிரே வந்தான்.

 

உழக்கும் மறை நாலினுமுயர்ந்து உலகம் ஓதும்

வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்’’

 

பொருள்:- அந்த அகத்தியன் நால் வேதங்களையும் பயின்று உயர்வு அடைந்தான். தமிழ் உலகம் பேசும் முரை, தமிழ்ப் புலவரின் செய்யுள் ஆகியவற்றை முறைப்ப்ட ஆராய்ந்து, சிவபெருமான் கற்றுத்தந்த தமிழுக்கு இலக்கணம் செய்து தந்தான். சிவன், ஒளிவீசும் மழு ஆயுதம்,நெற்றியில் நெருப்பை உமிழும் சிவந்த கண்ண்ணை உடையவன்.

 shiva at Dwaraka

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

“நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

 

பொருள்:– அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவனாகிய அகத்தியன், ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல் வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தான்.

 

 

தமிழ்த் தலைவன் யார்? (எனது பழைய கட்டுரையிலிருந்து)

 

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே

-கம்ப ராமாயணம், அயோத்தியா காண்டம், பாடல் 969

பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.

 

இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.

பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.

சொற்கலை முனிவன்

இன்னொரு செய்யுளில் அகத்தியனை “சொற்கலை முனிவன்” (பால காண்டம்) என்பான் கம்பன். தமிழுக்கு இலக்கணம் வகுத்ததால், அகத்தியனுக்குக் கிடைத்த அடைமொழி இது.

rama look

இராமபிரானுக்கு தமிழ் தெரியும்!

கம்பன் ஒரு அதிசயத் தகவலையும் தருகிறான். ராமனுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியும் என்பான்:–

நன்சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை

தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்

என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்

தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்

பொருள்:- பரத கண்டத்தின் தென்பகுதியில் வழங்கும் தமிழ் மொழி எனும் கடலைத் தாண்டியவனும், வடக்கே வழங்கும் சம்ஸ்கிருத மொழியில் கூறப்பட்டுள்ள எல்லா கலைகளுக்கும் எல்லை கண்டவனுமான ராமபிரான், “இனிய சொற்கலைக் கூறி இந்நாள் வரை என்னைப் பாதுகாத்து வளர்த்த தந்தையின் சொல்லை மீறி அரசாள்வது எனக்குத் தகுந்தது இல்லை. ஆனால் என் சொல்லை நீ மீறி நடந்தாலோ உனக்கு இழிவு அல்லவோ” (நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம்—லெட்சுமணனிடம் ராமன் சொன்னது)

 

 

எனது பழைய கட்டுரைகள்

 

தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில் (17 ஜூலை 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 2 (26 டிசம்பர் 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 1 (9 ஜூன் 2014)

 

–சுபம்–

 

தமிழ் முட்டாளும் சம்ஸ்கிருத முட்டாளும் (Post No.2810)

blockheads

Written by london swaminathan

 

Date: 14 May 2016

 

Post No. 2810

 

Time uploaded in London :–  9-31 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து பிடிக்கலாம் என்றது போல – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதுதான் முட்டாள்களின் அடையாளம். கொக்கைப் பிடிப்பதற்கு அதே நிறமுள்ள வெண்ணையை வைத்தால் அதற்குத் தெரியாது; அது வெய்யிலில் நிற்கும் போது வெண்ணை உருகி கண்ணில் விழுந்து அதை மறைக்கும்; அப்போது நாம் போய் அதைப்பிடித்துவிடலாம் என்று முட்டாள்கள் நினைப்பர்.

 

இதனுடைய பழைய வடிவம் மயிலின் தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது என்பதாகும்:

முன்னையுடையது காவாதிகந்திருந்து

பின்னையஃதாராய்ந்து கொள்குறுதல் – இன்னியல்

மைத்தடங்கண் மாதராய் அஃதாதல் வெண்ணெய் மேல்

வைத்து மயில்கொள்ளுமாறு (பழமொழி)

 

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னால் சமண முனிவர்களால் இயற்றப்பட்ட ‘பழமொழி’-யில் இப்பாடல் உளது. இதன் பொருள்:–

“ஏ கண்ணழகி! தனக்கு முன்னுள்ள பொருளைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டு, கஷ்டப்பட்டு அதே பொருளைத் தேடுவது மயிலின் தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கலாம் என்று எண்ணுவது போலாகும்”

 

வான்புகழ் வள்ளுவன் தேன் தமிழ்க்குறளில் பல இடங்களில் பேதைமை எது எனப் புகல்வான்.

பாரதியாரும் முட்டாள்கள் பட்டியலைப் பல இடங்களில் தருவார்:

கோயிற்பூசை செய்வார் சிலையைக் கொண்டு விற்றல், வாயிற்காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல், கண்களிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குதல், அமிர்தம் கிடைக்கும்போது கள்ளுக்கு ஆசை கொள்ளல்,விண்ணிலுள்ள இரவி/சூரியனை விட்டு மின்மினி (ப்பூச்சி) கொளல் முதலிய பல உவமைகள் மூலம் முட்டாள்தனம் எது என்று காட்டுவார்.

Laurel and Hardy.jpg

சம்ஸ்கிருத முட்டாள்

ஆரப்பயந்தே அல்பமேவாஅஞா: காமம் வ்யக்ரா பவந்தி ச

மஹாரம்பா: க்ருததிய: திஷ்டந்தி ச நிராகுலா:

சம்ஸ்கிருத மொழியிலும் முட்டாள்கள் பற்றி நிறைய பழமொழிகள் இருக்கின்றன:–

முட்டாள்கள் சின்ன காரியங்களைத் துவக்கிவிட்டு, முடிக்க முடியாமல் தவிப்பார்கள் பெரியோர்களோவெனில் பெரிய அளவில் பணிகளைத் துவக்கி, சலிக்காமல்,தயங்காமல், மலைக்காமல் அதைச் செய்துமுடிப்பர்.

आरभ्यन्तेऽल्पमेवाऽज्ञाः कामं व्यग्रा भवन्ति च

महारंभाः कृतधियः तिष्ठन्ति च निराकुला:
எல்லோரும் செய்யக்கூடாது என்று சொன்ன செயல்களை, முட்டாள்கள் செய்வர். அதை மூடி மறைக்கவும் அவர்களுக்குத் தெரியாது. (கதசரித்சாகரம்/கதைக்கடல்)

 

அகார்யம் ஹி கரோத்யக்ஞோ ந ச ஜானாதி கூஹிதும்

 

–சுபம்–

முட்டாள்கள் பற்றிய முந்தைய கட்டுரைகள்:

முட்டாள்களை எப்படி கண்டுபிடிப்பது? (31-10-2015)

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம் (27-2-2016)

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)

pyramid3

Written  BY S NAGARAJAN
Date: 14 May 2016

 

Post No. 2809

 

Time uploaded in London :–  6-24 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 
அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன.

அந்த குரு அவரிடம் சொன்னார். “நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது. அட்லாண்டிஸ்* நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே”

Pyramids1

(*அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார். மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள். பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.)

 

“இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன”

பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.

 

“உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்….”

அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. “எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன்” என்றார் அந்த குரு.

 

அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

 

தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் “பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே” என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ் நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.

 

the-sphinx-at-gizacairo-in-egypt-

ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.

தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. “மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்”

 

ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.

 

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.

 

மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை, நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும். The End.
Research Articles on Egypt written by London swaminathan in this blog:–

 

Did Indians Build Egyptian Pyramids? (Posted on 27 August 2012)

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda (Posted on 26 September 2012)

Hindu Gods in Egyptian Pyramids (Posted on 16 September 2012)

Vishnu in Egyptian Pyramids (Posted on 5 September 2012)

Vedas and Egyptian Pyramid Texts (Posted on 29 August 2012)

 

Why did Sumeria and Egypt worship Indra? (Posted on 14 September 2014)

Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams ( Posted on 31 July 2015)

Flags:Indus Valley – Egypt Similarity (Posted on 15 October 2012)

Human Sacrifice in Indus Valley and Egypt (Posted on 31-10-2012)

Magic in Hindu,Sumer, Egyptian Cultures (Posted on 2 August 2015)

Mata and Pita in Egyptian Religion (Posted on 17 November 2014)

More Tamil and Sanskrit Names in Egypt (Posted on 15 November 2014)

Hindu Mudras in Ancient Egyptian and Sumerian sculptures (posted on 7-10-2012)

Tirumular in Egyptian Pyramids (in Tamil Egiptil Tirumular Karuththukkal posted on 23-11-2013)

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் ( 23 நவம்பர் 2013)

 

–subham–

 

 

 

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783)

hugging

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2783

 

Time uploaded in London :– 6-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

காமத்துப் பாலில் 250 குறள்களில் காம சம்பந்தமான விஷயங்களை வள்ளுவன் பாடியிருப்பதை நாம் அறிவோம். அறம், பொருள் பற்றிப் பாடிய குறள்களிலும் ஆங்காங்கே சில ‘செக்ஸி’ உவமைகள் இருப்பது படித்து இன்புறத் தக்கது.

 

முலையிரண்டும் இல்லாத பெண், ஆசைவயப்பட்டது பற்றிப் பாடுகிறான் (குறள் 402) வள்ளுவன்.

 

அறியாமை (கல்லாமை) பற்றி பத்து குறட்பா எழுதிய வள்ளுவன் 5 பாடல்களில் அருமையான உவமைகளைப் பயன்படுத்தி உலக மஹா கவிஞன் – உவமை மன்னன் — காளிதாசனுடன் போட்டியிட முயல்கிறான்!

 

முதலில் மஹாபாரதத்தில் வரும் அறியாமை பற்றிய ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்:

 

“மனிதனுக்கு ஒரே எதிரி அறியாமைதான்; இரண்டாவது எதிரியே அவனுக்கு இல்லை; அறியாமையால் சூழப்பட்டவன் மோசமான கொடூரமான செயல்களில் இறங்கிவிடுகிறான்” – என்று வியாசர் சொல்லுகிறார்:-

 

ஏகசத்ருர் நத்வீயோ(அ)ஸ்தி சத்ருரக்ஞானதுல்ய: புருஷஸ்ய ராஜன்

யேனாவ்ருத: குருதே சம்ப்ரயுக்த: கோராணி கர்மாணி சுதாருனானி

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 297-28

 

வள்ளுவன் வாய்மொழி

உவமை 1

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று- குறள் 402

பொருள்:- கல்லாத ஒருவன் ஒரு சபையில் பேச விரும்புவது, இயல்பாகவே ஸ்தனங்கள் (முலைகள்) இரண்டுமில்லாத ஒரு பெண், இன்பத்தை அனுபவிக்க விரும்பிய கதையாக முடியும்.

 

உவமை 2

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லாதவர் குறள் 406

பொருள்:-கல்லாதவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம்; அவர்கள் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்கள்.

 

உவமை 3

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவையற்று-குறள் 407

பொருள்:- ஆழ்ந்த, சிறந்த அறிவு இல்லாதவனின் அழகு (தோற்றம்) மண்பொம்மை போல இருக்கும் (தண்ணீரில் விழுந்தால் சாயம் வெளுத்துப் போகும்!)

 

உவமை 4

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்–குறள் 410

 

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

 

உவமை 5

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் -குறள் 401

பொருள்:- நூல் பல கல்லாமல், ஒரு சபையில் பேசுவது, கட்டம் போட்டு சதுரங்கம் வரையாமல் தாயக் கட்டையை உருட்டுவது போலத்தான்.

fool

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

கந்தபுராணத்திருந்து ‘ரஸவாதி ஏமாற்றிய கதை’ (Post No 2777)

கந்தபுராணம் 1

Compiled by london swaminathan

 

Date: 3 May 2016

 

Post No. 2777

 

Time uploaded in London :– 10-41 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கந்தபுராணத்திலுள்ள ரசவாதி கதையைப் படித்தபோது சிறு வயதில் அம்புலிமாமா பத்திரிக்கையில் படித்த கதைகள் நிணைவுக்கு வந்தன. கந்த புராணத்திலும் இப்படி ஒரு கதை இருப்பது பிரிட்டிஷ் நூலகப் புத்தகத்திலிருந்துதான் தெரியவந்தது.

 

irandu1

 

நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான சி.ப. வேங்கட ராம ஐயர் எழுதிய ‘இளமையும் ஒழுக்கமும் அல்லது இரண்டு பிள்ளைகள்’ என்ற புத்தகத்தில் (ஆண்டு 1915, சென்னை), பழைய தமிழில் இந்தக் கதையை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.

 

irandu22

 

irandu23

 

irandu24

 

irandu25

 

irandu26

 

irandu27

முருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’ (Post No.2769)

thanga murukan

Compiled by london swaminathan

 

Date: 30 April 2016

 

Post No. 2769

 

Time uploaded in London :– 6-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நீங்கள் முருக பக்தரா? எங்கே, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இதில் பத்துக்கு பத்து கிடைக்கவில்லையென்றால் நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே பிளாக்கில் போட்ட 25-க்கும் மேலான கேள்வி பதில்களுக்குப் போங்கள். ஏதாவது ஒன்றிலாவது நூற்றுக்கு நூறு எடுக்க முடிந்தால் நீங்கள் மெத்தப் படித்தவர். மிகவும் குறைவாக மதிப்பெண்கள் கிடைத்தால் மெதுவாகப் படிப்பவர்கள்!!!

muruga,doddappalapura,karnataka

1.முதலில் ஒன்று என்ற எண்ணுடன் துவங்குவோம். எந்த ஓரெழுத்து மந்திரத்தின் பொருளை சிவனுக்கு முருகன் உபதேசித்தார்? எங்கு?

 

2.முருகனுக்கு எத்தனை மனைவியர்? யார் அவர்கள்?

 

3.திருத்தணியில் எத்தனை படிகள் உள்ளன?

4.கதிர்காமத்தில் எத்தனை திரைகள் உள்ளன?

5.நமக்கு திருப்புகழ் பாடல்கள் எவ்வளவு கிடைத்துள்ளன?

6.பழனியிலுள்ள முருகன் சிலை எத்தனை பொருட்களால் ஆனது?

7.முருகப் பெருமானுடன் தொடர்புடைய முக்கிய எண் எது?

8.பழனி மலையில் எத்தனை படிகள் ஏறிச் சென்றால் முருகனை தரிசிக்கலாம்?

9.மலேசியாவில் பத்துமலைக் குகைக் (Batu Caves) கோவிலில் எத்தனை படிகள் இருக்கின்றன?

10.நக்கீரரை பிடித்த பூதம் அவரை எத்தனையாவது ஆளாகப் பிடித்தது?

 

mayil murugan

விடைகள்: 1.ஓம், சுவாமி மலை 2.இரண்டு மனைவியர்:வள்ளி, தெய்வானை 3. மொத்தம் முன்னூற்று அறுபத்தைந்து படிகள் 4.ஏழு திரைகள்  5.அருணகிரிநாதர் பாடியது 16,000க்கும் மேலான  திருப்புகழ் பாடல்கள்; இன்று பட்டியலிடப்பட்டவை 1334; யாரேனும் 1300 அல்லது அதற்கு நெருங்கிய எண் சொன்னால் முழு மதிப்பெண். 6.நவபாஷாணம் எனப்படும் ஒன்பதுவகை மருந்துப் பொருட்களால் ஆன சிலை என்பது  ஐதீகம் 7.முருகப் பெருமானுடன் மிகவும் தொடர்புடைய எண் ஆறு; அவன் பெயரே ஆறுமுகன், ஷண்முகன், அவனது புகழ்பெற்ற தலங்கள் ஆறு படைவீடு, அவனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர்; அவனது யந்திரம் அறுகோணம் 8.பழனியின் படிகள் 689 அல்லது 690 என்ற இரண்டும் சரியே; நாம் கடைசி படியைக் கோவிலாகவோ அல்லது அதையும் ஒரு படியாகவோ எண்ணலாம் 9.பாட்டு கேவ்ஸ் (Batu Caves) என்றும் பத்துமலை என்றும் அழைக்கப்படும் மலேசியாவின் புகல் மிகு முருகன் கோவிலில் 272 படிகள் உள 10. குகையில் 999 பேரை அடைத்து வைத்து ஆயிரமாவது ஆளாக நக்கீரரைப் பிடித்தது ஒரு பூதம்; அப்போது அவர் முருகன் அருள் வேண்டிப் பாடியதே திருமுருகாற்றுப்படை..

 

Earlier Quiz posted by me:
(1&2) 27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?

murugan vattam
Contact swami_48@yahoo.com

மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது! (Post No.2761)

air ulavan

மே 2016 காலண்டர் (துர்முகி  சித்திரை/ வைகாசி)

Compiled by london swaminathan

Date: 27 ஏப்ரல் ,2016

 

Post No. 2761

 

Time uploaded in London :–  16-50

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 3 gaurs

பசு, காளை, மாடு பற்றிய 31 தமிழ்ப் பழமொழிகள் மே மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு பழமொழியையும் யோசித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்; நீங்களே ஒவ்வொன்றைப் பற்றியும் கட்டுரை எழுதத் துவங்கி விடுவீர்கள். இது வரை இந்த பிளாக்கில் சுமார் 2000 தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதப் பழமொழிகளை தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாகத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். தமிழில் 20,000 பழமொழிகள் உள்ளன!! வாழ்க தமிழ்!

 

 

முக்கிய நாட்கள்:- மே 1 மே தினம்,  4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம், 9 அக்ஷய த்ருதியை, 21 புத்த ஜயந்தி, வைகாசி விசாகம், 28 அக்னி நட்சத்திரம் முடிவு.

முகூர்த்த நாட்கள்:- 2, 4, 9, 11, 12, 19,26; அமாவாசை:- 6; பௌர்ணமி:- 21; ஏகாதசி:- 3, 17.

 

மே 1 ஞாயிற்றுக் கிழமை

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும்.

மே 2 திங்கட் கிழமை

மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?

மே 3 செவ்வாய்க் கிழமை

மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்

மே 4 புதன் கிழமை

மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.

மே 5 வியாழக் கிழமை

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

 2PADDY THRASHING

 

மே 6 வெள்ளிக் கிழமை

அடியாத மாடு படியாது.

மே 7 சனிக் கிழமை

மாடு கிழமானாலும் பாலின் ருசி போகுமா?

மே 8 ஞாயிற்றுக் கிழமை

மாடு தின்கிற மாலவாடு, ஆடு தின்கிறது அரிதா?

மே 9 திங்கட் கிழமை

மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனிதனை சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.

மே 10 செவ்வாய்க் கிழமை

மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவதா?

beauty bull

 

மே 11 புதன் கிழமை

மாடு மேய்க்கிற தம்பிக்கு மண்டலமிட்ட பெண்சாதி

மே 12 வியாழக் கிழமை

மேய்க்கிற மாட்டின் கொம்பிலே புல்லைக் கட்ட வேணுமா?

மே 13 வெள்ளிக் கிழமை

பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு, தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு.

மே 14 சனிக் கிழமை

பசு உழுதாலும் பயிரைத் தின்ன வொட்டான்.

மே 15 ஞாயிற்றுக் கிழமை

பசுத்தோல் போர்த்திய புலி போல

 azakana madu, cow

 

மே 16 திங்கட் கிழமை

பசுமாடு நொண்டியானால், பாலும் நொண்டியா?

மே 17 செவ்வாய்க் கிழமை

பசுவைக் கொன்று செருப்பு தானம் செய்தது போல.

மே 18 புதன் கிழமை

பசுவுக்கு பிரசவ வேதனை , காளைக்கு காம வேதனை

மே 19 வியாழக் கிழமை

பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்

மே 20 வெள்ளிக் கிழமை

மாடு திருப்பினவன் அர்ச்சுனன்

 

buffalo boy, cambodia

மே 21 சனிக் கிழமை

மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?

மே 22 ஞாயிற்றுக் கிழமை

மாடு மறுத்தாலும் பால் கறக்கும், வாலில் கயிறைக் கட்டினால்.

மே 23 திங்கட் கிழமை

காளை போன வழியே கயிறு போகும்.

மே 24 செவ்வாய்க் கிழமை

இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்

மே 25 புதன் கிழமை

எருதுக்கு நோய்வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?

 

fighting boys

மே 26 வியாழக் கிழமை

எருது ஏழையானால் (கூடாவிட்டால்), பசு பத்தினித்துவம் கொண்டாடும்

மே 27 வெள்ளிக் கிழமை

எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்

மே 28 சனிக் கிழமை

எழுது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.

மே 29 ஞாயிற்றுக் கிழமை

பசு மாடும் எருமை மாடும் ஒன்றாகுமா?

மே 30 திங்கட் கிழமை

பசு கருப்பென்று பாலும் கருப்பா?

மே 31 செவ்வாய்க் கிழமை

மாட்டை மேய்த்தானாம், கோலைப் போட்டானாம்

தண்ணீர் மாடு

–சுபம்–

 

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -2

hsuyunportrait3

Written  BY S NAGARAJAN

Date: 22 April 2016

 

Post No. 2751

 

 

Time uploaded in London :–  15-47

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய  கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் (Xu Yun or Hsu Yun) பற்றிய இரண்டாவது கட்டுரை இது.)

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -2

.நாகராஜன்

பொதுவாக தனது நீண்ட நெடும் வாழ்க்கையில் காலால் நடந்தே அனைத்து தலங்களுக்கும் சென்றிருக்கிறார் ஸூ யுன் (Xu Yun). நதி, கடல் போன்ற நீர் நிலைகளில் மட்டும் படகில் ஏறிப் பயணம் செய்வார்.

அத்துடன் அவருடைய அதிசயமான ஒரு பழக்கம் ஒவ்வொரு மூன்று அடிகளிலும் புத்த மதத்தின் த்ரி ரத்தினங்களுக்குமூன்று ரத்தினங்களுக்குநமஸ்காரம் செய்வார். புத்தமதத்தின் த்ரி ரத்தினங்கள் என்று போற்றப்படுபவை புத்தர், தர்மா, சங்கம்!

இப்படி வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மூன்று அடிக்கும் த்ரி ரத்தின நமஸ்காரம் செய்து சென்றதால் இவரது நடைப்பயணம் சற்று மெதுவாகவே நடந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம்.

ஏராளமானோர் இப்படி அதிசயிக்கத்தக்க விதத்தில் மூன்று அடிக்கு நமஸ்காரம் செய்வதைப் பற்றிக் கேட்டு வியப்பர். அவரைப் பற்றிய மரியாதை கூடி பயபக்தியும் அதிகமாகும்கம்யூனிஸ்ட் கயவர்களைத் தவிர!

தனது வயிற்று உணவுக்கு இவர் பின்பற்றியது  பை ஸாங் ஹுய்ஹாய் (Master Bai zhang Hu-hai) என்பவரது வழியை. ஆங்காங்கே உள்ள ஆலயங்கள் மடாலயங்களுக்கு உரிய நிலத்தில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் பயிரை வைத்து வாழ்க்கையை நடத்துவது இவர் பாணி!

வேலை செய்யாத ஒரு நாள், உணவு அருந்தாத ஒரு நாள்என்பது இவரது  கொள்கை. ஆகவே வாழ்நாள் முழுவதும் வேலை செய்து  கொண்டே இருந்தார்.

ஸூ யுன் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி க்வான் ஜோ (Quanzhou) என்ற இடத்தில் பிறந்தார். (1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மறைந்தார்.)

அவரது தாயார் பிரசவ வேதனையால் துடித்து கடைசியில் ஒருபையைகருப்பையிலிருந்து வெளியேற்றினார்.

ஆசை ஆசையாக ஒரு மகன் பிறப்பான் என்று எண்ணியிருந்த அந்தத் தாய் தன் வயிற்றிலிருந்து ஒரு பை வெளியானதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

இன்னொரு குழந்தை தனக்கு பிறக்கவே முடியாது என்ற மனவிரக்தியில் ஆழ்ந்தார்.மயக்கமுற்றார்.

இந்த மனவேதனையில் உடனடியாக அவர் மரணம் சம்பவித்தது.

அடுத்த நாள் மருந்துகள் விற்கும் வயதான முதியவர் நடந்ததைக் கேட்டுப் பையைக் கீறினார்.

அதற்குள்ளிருந்து வந்தார் ஸூ யுன். இப்படி அவரது பிறப்பே அதிசயமாக அமைந்தது! குழந்தையை பாட்டி கண்காணித்து வளர்த்தார். மாமாவின் ஆதரவில் குழந்தை வளர்ந்து 11 வயது ஆனது.

பாட்டிக்கு ஒரு ஆசை டியான் மற்றும் டான் (Tian and Tan families) குடும்பங்களிலிருந்து குடும்பத்திற்கு ஒன்றாக இரு பெண்களைத் தன் பேரன் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று. ஆனால் அந்த ஆண்டு குளிர் காலத்தில் பாட்டி காலமானார்.

13ஆம் வயதில் வீட்டிலிருந்த புத்த மத நூல்களை ஸூ யுன் படிக்க ஆரம்பித்தார். தன் மாமாவுடன் நான் யுயே (Nan Yuye)என்ற இடத்திற்குச் சென்று பல புத்த மடாலயங்களுக்குச் சென்றார்.

பூர்வ ஜென்ம நல்வினையின் காரணமாக அவருக்கு வீடு திரும்ப மனம் இல்லாமல் போனது.

ஆனால் மாமாவோ கூட இருந்து அவரை வீடு திரும்ப வற்புறுத்தினார். வேறு வழியில்லாமல் வீடு வந்தார் ஸூ யுன்!

                                          –தொடரும்

 

 

சந்திரன் உலகை அழிப்பானா? (Post No.2737)

Blood-Moon-350143

Written BY S NAGARAJAN
Date: 19 April 2016

 

Post No. 2737

 

Time uploaded in London :–  8-28  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

பாக்யா வார இதழில் 15 -4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

இரத்த சந்திரன் உலகை அழிப்பானா?

 

ச.நாகராஜன்

 

blood-moon-2014-2-537x405

“சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது” –அறிவியல் செய்தி

 

சூரிய கிரகணம் பற்றிப் பேசும் போது ஒரு முக்கியமான செய்தியை அறிவியல் தருகிறது.

 

 

இனி அடுத்து வரும் மிகப் பெரிய சூரிய கிரகணம் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நிகழவிருக்கிறது. அமெரிக்காவில் இதை நன்கு பார்க்க முடியும். அங்கு ஜனத்தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளில் இதை பார்க்க முடியும் என்பதால் இதை அமெரிக்கா கோலாகலமாக வரவேற்க இருக்கிறது. இதையொட்டி என்னவெல்லாம் உற்பாதம் நிகழும் என்பதைக் குறித்து ஜோதிடர்கள் இப்போதே தங்கள் ஆரூடங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு சூரிய கிரகணம் 2024ஆம் ஆண்டு நிகழவிருக்கிறது.

 

 

இனி சந்திர கிரகணம் பற்றிய சில சுவையான செய்திகளைப் பார்க்கலாம்.

 

 

பௌர்ணமி தினங்களில் நிகழும் சந்திர கிரகணத்தைப் பற்றி உலகின் எல்லா நாகரீகங்களும் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன.

 

முக்கியமாக செக்ஸ் உறவு தவிர்க்கப்பட வேண்டும். கிரகண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியே வரக் கூடாது. கிரகணம் முடிந்த பின்னர் குளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நம்பிக்கைகள் ஏராளம்.

 

 

சூரியனுக்கு எதிரில் சந்திரன் வரும் போது நடுவில் இருக்கும் பூமியின் நிழல் சந்திரனின் மிது பட சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் சுற்றுப் பாதை பூமியின் பாதையிலிருந்து  ஐந்து டிகிரி கோணத்தில் தள்ளி இருப்பதால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரகணம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர்  கோட்டில் வந்தால் அது Syzygy  என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்க மொழியில் சேர்ந்து இணைக்கப்பட்டிருத்தல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது.

 

பூமியின் வளி மண்டலத்தில் பட்டு ஒளி சிதறும் போது சந்திரனின் நிறம் செக்கச் செவேலென சிவப்பாக இருக்கும் இதையே ரத்த சந்திரன் அல்லது சிவப்பு நிலவு என்கிறோம். ஒரே வருடத்தில் ஆறு பௌர்ணமியும் நான்கு சிவப்பு நிலவும் வந்தால் பூமி நிச்சயம் அழிந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இதையொட்டி ஜான் சார்லஸ் ஹேஜி என்ற ஒரு பாதிரியார் எழுதிய புத்தகம் சென்ற 2015ஆம் ஆண்டு உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது. 2014 தொடங்கி 2015 செப்டம்பர் முடிய இந்த மாதிரி நிகழ்வுகள் வந்து விட்டன என்றார் அவர். நல்ல வேளை, இரத்த சந்திரனால்  உலகம் அழியவில்லை!

 

 

blood moon 3

அதிக பட்சமாக சந்திர கிரகணத்தின் நேரம் 220 நிமிடங்களே! இதில் பூரண சந்திர கிரகணம் என்பது அதிக பட்சமாக சுமார் நூறு நிமிடங்களே நீடிக்கும்.

 

இன்னும் நூறு கோடி வருடங்கள் கழித்து நிகழும் சந்திர கிரகணம் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கும். இதற்கான காரணம் சந்திரன் பூமியிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 1.6 அங்குலம் நகர்வதினால் தான்! கிரகணங்கள் நிகழும் போது விஞ்ஞானிகளுக்குக் கொண்டாட்டம் தான். பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை அவர்கள் தீவிரப் படுத்துவார்கள்.

 

ஆனால் உலக மக்களுக்கோ பல வித கவலைகள்! எஸ்கிமோக்கள் சந்திர கிரகணத்தின் போது பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விடுவார்கள். இல்லையேல் வியாதி வந்து விடும் என்பது அவ்ர்களின் நம்பிக்கை.

 

தாய்லாந்திலோ கிரகணத்தின் போது பட்டாசு வெடிப்பது வழக்கம். இதன் மூலம் கெட்ட ஆவிகளை விரட்ட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. பொதுவாக உலகின் முடிவைத் தெரிவிக்க ஏற்படுவதே கிரகணம் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி கிரகணத்தை ஏற்படுத்துவது கெட்ட ஆவிகளே என்று அவர்கள் நம்புவதால் பானைகளைத் தட்டி ஒலி எழுப்பியும் வெடி வெடித்தும் ஆவிகளை அவர்கள் துரத்துவார்கள்.

 

 

இன்னும் யூதர்கள், மாயா நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். கிரேக்கர்கள் என இப்படி ஒவ்வொரு பிரிவினரின் நம்பிக்கைகளையும் ஆராயப் புகுந்தால் பெரிய நூலையே தொகுக்க வேண்டியிருக்கும்.

 

ஆனால் கிரகணம் என்பது இயற்கையில் நிகழும் ஒரு அற்புத நிகழ்வு;  என்பது நபிகள் நாயகத்தின் அருளுரை!

 

கிரகணங்கள் வருகின்றன, போகின்றன; உலகம் அதன் இயல்பில் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

 

விஞ்ஞானிகள் தரும் அறிவுரைகளை மனதில் கொண்டு பாதுகாப்பாக கிரகணங்களைப் பார்த்தால் பல இயற்கை விந்தைகளைக் கண்டு மகிழலாம் என்பது உறுதி.

 

marconi

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

 

1902ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியன்று முதல் தொலைத் தொடர்புச் செய்தி மார்கோனி ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்பப்பட்டது.  1903ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் பிரிட்டன் மன்னர் ஏழாம் ஹென்றிக்கு தொலைதூரச் செய்தியை முதலில் அனுப்பினார். இதிலிருந்தே உலகம் சுருங்கிப் போனது. உடனடிச் செய்திப் பரிமாற்றம் அமுலுக்கு வந்தது.

 

 

உலகின் பெரிய கடல் விபத்தான டைடானிக் நிகழ்வில் மார்கோனியின் கண்டுபிடிப்பு பல உயிர்களைக் காப்பாற்றிய சம்பவம் பிரபலமான ஒன்று.

 

 

டைடானிக் மூழ்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கர்பதீயா என்னும் கப்பல் நியூயார்க்கிலிருந்து ரிஜேகா என்னும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  அந்தக் கப்பலில் இருந்த வயர்லெஸ் ஆபரேட்டர் ஹரால்ட் காட்டம் டைட்டானிக்கின் அவசர செய்தியை முதலில் கேட்கவில்லை. பின்னர் டைடானிக் மூழ்கும் செய்தி அவருக்குக் கிடைத்தவுடன் வேகமாகச் சென்று காப்டன் ஆர்தர் ஹென்றியை எழுப்பினார். அவர் உடனே 58 மைல் தொலைவில் தள்ளி இருந்த டைடானிக் நோக்கி கப்பலை விரைந்து ஓட்டிச் சென்றார். உரிய தருணத்தில் அங்கு சேர்ந்த காப்டன் 705 பேரைக் காப்பாற்றினார்.

 

 

விபத்து பற்றி மார்கோனி கோர்ட்டில் தனது சாட்சியத்தை அளிக்கும் போது கடலிலிருந்து எப்படி செய்திகளை ஆபத்துக் காலத்தில் அனுப்ப முடியும் என்பது பற்றி விளக்கினார். பிரிட்டனின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும் டைடானிக் விபத்து பற்றிய தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில்,” காப்பாற்றப்பட்ட அனைவரும் ஒரே ஒருவரால் காப்பாற்றப்பட்டனர், அவர் தான் மார்கோனி, அவரது கண்டுபிடிப்பே இப்படி அனைவரையும் காப்பாற்ற உதவியது என்று குறிப்பிட்டு அவர் மார்கோனியைப் பாராட்டினார்.

அனைவரும் அறிவியல் கண்டுபிடிப்பால் மகிழ்ந்தனர்.

******

 

“எனக்கு ஏன் சிலை வைக்கவில்லை?” (Post No.2705)

walker art gallery

Picture: Walker Art Gallery, Liverpool

Compiled by london swaminathan

Date: 8 April, 2016

Post No. 2705

Time uploaded in London :–  10-05 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

Modesty Anecdotes (Translated by London swaminathan)

 

0_photographers_alinari_rome

Rome Art Gallery

பணிவு, அடக்கம் பற்றி பல மேற்கோள்களும், துணுக்குச் செய்திகளும் உள்ளன. ஏற்கனவே ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை எழுதினேன். இதோ மேலும் சில சம்பவங்கள்:–

 

காடோ என்பவர் புகழ்பெற்ற ரோமானிய ராஜ தந்திரி. 2000 ஆண்டுகளுக்கு முன், இதாலியில், ரோம் நகரில் இருந்த அரசியல்வாதி.அவர் சிலை வைப்பது பற்றிச் சொன்னது மிகவும் பிரபலமான பொன்மொழியாகும்:-

 

“எனக்கு சிலை வைப்பதை நான் விரும்பவில்லை. எவன், எதற்காக, இந்த ஆளுக்குச் சிலை வைத்தான்? என்று கேட்பதைவிட, இப்பேற்பட்ட பெரியவருக்கு இன்னும் சிலை வைக்கவில்லையா? ஏன்? என்று மக்கள் கேட்பதையே நான் விரும்புகிறேன்”.

Xxx

da vinci

குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் தழும்பாது

 

லியார்னோடோ டா வின்சி என்பவர் பல கண்டுபிடிப்புகளின் தந்தை, பல ஓவியங்களை வரைந்தவர். அவர் மரணப் படுக்கையில் கிடந்தார். அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட இதாலிய அரசர் அவரைப் பார்க்க வந்தார். உடனே லியார்னாடோ மிகவும் கஷ்டப்பட்டு எழுந்திருக்க முயன்றார். தலையை எவ்வளவு தூரம் தூக்க முடியுமோ அத்தனை உயரம் தூக்கி, “நான் கலைத் துறையில் இன்னும் எவ்வளவோ செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் மனிதனையும் கடவுளையும் அவமதித்துவிட்டேன்” என்று பணிவுடன் கூறிவிட்டுத் தலையைச் சாய்த்தார்.

லியார்னாடோ செய்ததோ மகத்தான சாதனைகள். ஆனால் அவருடைய பணிவோ அதையும்விட மகத்தானது.

Xxx

பீதோவன் மியூசியத்தில் பியானோ கருவி

paderewsi_readmore

Picture of Padrewski

 

மேலை உலகத்தின் மாபெரும் இசை மேதை பீதோவன். அவர் பயன்படுத்திய இசைக் கருவிகள் ஜெர்மனியில் பான் நகரத்தில், அவரது சொந்த வீட்டில் உள்ள, ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு அமெரிக்க மாணவர் குழு அதை சுற்றிப் பார்க்கவந்தது. அதில் ஒரு பெண்மணி, அந்தப் பகுதியின் பாதுகாப்பாளரிடம் போய்,  தனது கவர்ச்சி சக்திகளையெல்லாம் பயன்படுத்தி மிகவும் கொஞ்சலாக, ‘நான் இந்தக் கருவியைக் கொஞ்சம் வாசித்துப் பார்க்கலாமா?’ என்று கேட்டார். பாதுகாப்பாளரும் (மியூசியம் க்யூரேட்டர்), ‘அதற்கென்ன ,வாசியுங்களேன்’ என்றார். அந்தப் பெண்ணும் பீதோவன் இயற்றிய புகழ்பெற்ற, ‘மூன்லைட் சொனாட்டா’வை இசைத்து முடித்துவிட்டு, பெருமிதத்துடன், “உலகப் புகழ்பெற்ற இசை மேதைகள், என்னைப் போல இந்த பியானோவை வாசித்திருப்பார்களே” என்றார்.

 

அந்தப் பகுதியின் பாதுகாப்பாளரோ மிகவும் அமைதியாகச் சொன்னார்: “மேடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெடெரொவ்ஸ்கி இங்கே வந்திருந்தார். இதன் பக்கத்தில் வந்து, பயபக்தியுடன் இதைப் பார்த்தார். கடவுளே! இதைத் தொடும் தகுதி எனக்கு இல்லை” என்று சொல்லிவிட்டுப் போனார்.

பெடெரவ்ஸ்கி, போலந்து நாட்டைச் சேர்ந்த இசை மேதை. உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர். அவருடய பணிவையும் அடக்கத்தையும் பாருங்கள். பீதோவனின் பியானோவைத் தொடக் கூட அஞ்சினார். (நான் இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்- லண்டன் சுவாமிநாதன்).

beethoven piano

–சுபம்–