மிதிலை தந்த செல்வம்! (Post No.2519)

IMG_2695

மிதிலை தந்த செல்வம்! (Post No.2519) 

 

Written by S Nagarajan

 

Date: 8 February 2016

 

Post No. 2519

 

Time uploaded in London :–  5-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

ஹிந்து சரித்திர பொற்காலம்

 

மிதிலை தந்த செல்வம்!

 

ச.நாகராஜன்

 

 IMG_2695 (2)

ஹிந்து சரித்திரத்தை எழுத வேண்டுமெனில் பல கோடானு கோடி பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். அதில் ஒரு முக்கிய பங்கை மிதிலாபுரி வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

அங்கல்லவா சீதா தேவி தோன்றி வாழ்ந்து வந்தாள். இராமாயண நாயகியின் சரிதம் ‘சீதாயா சரிதம் மஹத் – சீதையின் மஹத்தான சரிதம் – என்று கூறி புகழப்படுகிறது.

 

விதேஹம் என்று இன்னொரு பெயரும் மிதிலைக்கு உண்டு. அதன் மன்னனான ஜனக புத்ரிக்கு வைதேஹி  என்ற பெயர் இதனால் தான் ஏற்பட்டது. மிதிலா புத்ரி என்பதால்  மைதிலி!

 

இந்த விதேஹம் பற்றி உலகின் மிகப் பண்டைய நூலான சதபத ப்ராஹ்மணம் கூறுகிறது. இங்கு சதாநீரா நதி ஓடியதாக அது தெரிவிக்கிறது. இந்த நதியே கோசல நாட்டையும் மிதிலாபுரியையும் பிரிக்கும் எல்லைக் கோடாகத் திகழ்ந்தது. சதாநீரா என்று பழைய காலத்தில் வழங்கப்பட்ட இந்த நதியை இன்று நாம் கண்டகி நதி என்று குறிப்பிடுகிறோம். நேபாளத்திலிருந்து பாய்ந்தோடி வரும் இந்த நதி கங்கையைச் சேர்கிறது. இதைப் பற்றிய அற்புதக் கதைகள் கேட்கத் தெவிட்டாதவை.

 

 

விதேஹம் பல ராஜ்யங்களை உள்ளடக்கி இருந்தது. வைசாலி அதில் ஒன்று. இங்கு தான் புத்த பிரான் பிறந்தார்.

ஆக மிதிலைச் செல்வமான மைதிலி – சீதா பிராட்டி இராமாயணத்தைத் தர கௌதம புத்தரோ ஒரு புதிய வழிகாட்டுதலை உலகிற்குத் தந்திருக்கிறார். அதற்கான இடமும் இந்த அழகிய பிராந்தியம் தான்!

 

 

மிதிலையும் அதன் அருகில் உள்ள வைசாலியும் சோனா மற்றும் கங்கை நதியின் அருகில் உள்ள ராஜ்யங்களாக வரலாறு விளக்குகிறது!

 

 

இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமனையும் லட்சுமணனையும் அயோத்தியிலிருந்து அழைத்துச் செல்கையில் நான்கு நாட்கள் நடைப் பயண்மாக நடந்து விதேகத்தை அடைந்தார் என்ற குறிப்பு வருகிறது. இடையில் ஒரு நாள் இரவு அவர்கள் வழியில் இளைப்பாறுகின்றனர்.

ஆக, இவை இரண்டும் மிக அருகில் இருந்த நகரங்கள் என்பது தெளிவு.

 rama rama rama

மிதிலையைச் சேர்ந்த அந்தணர்களை மைதிலி பிராம்மணர்கள் என்று கூறுவது வழக்கம்.

இங்கு யாகங்களும் பண்டித சபை விவாதங்களும் அன்றாடம் நடை பெற்று வந்திருக்கின்றன.

 

சடங்குகளையும் யாகங்களையும் எதிர்த்த புத்தர் தன் கடுமையான பிரச்சாரத்தை இங்கு மேற்கொண்டது இயல்பே.

ஹிந்து தத்துவம் தழைத்து ஓங்கி இருந்த இடம் விதேஹம்.

மஹாபாரதம் விளக்கும் சுகதேவர் மற்றும் மைதில தர்மவியாதன் கதையை நாம் அறிந்து பிரமிக்கிறோம்.

மீமாம்சை என்னும் தர்ம சாஸ்திர பிரிவைச் சொல்பவர்களை மீமாம்ஸகாரிகா என்பர். அப்படிப்பட்ட மீமாம்ச சாஸ்திர நிபுணர்கள் 1400 பேர்கள் ஒரே சமயத்தில் இங்கு இருந்துள்ளர்.

இந்த 1400ன பேரை வைத்து ராஜா பைரவசிம்மன் என்னும் ஒரு மன்னன் யாகம் ஒன்றை நடத்தியுள்ளான். இதை 15ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

புகழோங்கிய பண்டைய நகரம் இன்று … இருக்கிறது.

இன்றும் இருக்கிறது. அவ்வளவு தான்!

 

 

ஹிந்து சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால் உத்வேகம் எழும். பழைய தத்துவ தரிசனங்கள் நமக்குப் புலப்படும். ஆனால் இன்றைய பீஹார் நிலையோ சொல்லவே தேவை இல்லை.

 

பழைய காலத்தில் சுமார் 1255 சதுர மைல் பரப்பைக் கொண்டிருந்த மிதிலாபுரி இன்று பீஹாரிலுள்ள 38 மாவட்டங்களில் சில மாவட்டங்களில் அடங்கிக் கிடக்கிறது.

மதுபானி, தர்பங்கா,சமஸ்திபூர், வைசாலி, முஸாபிர்பூர்ம் சம்பாரன், மொங்கைர், ஸஹர்ஸா, பூர்னியா ஆகிய மாவட்டங்களில் அடங்கி உள்ள பண்டைய பிரம்மாண்டமான ராஜ்யம் பழைய கதையை ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு  இதிஹாஸ சொல்லிலும் இங்கு சொல்கிறது.

 

 

ஹிந்து பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு தேசீய உணர்வு செகுலர் அடிப்படையில் அழிக்கப்பட்டு வந்தாலும் ஒரு பழம் பெரும் வரலாற்றைப் போற்றிப் பாதுகாக்கவாவது இந்த மிதிலாபுரியையும் அதன் செல்வங்களையும் பாதுகாக்கலாம் அல்லவா! காலம் கருணை செய்ய வேண்டும்; ஹிந்துக்கள் புகழோங்கிய பண்டைய நாளின் வீரத்தையும், தத்துவதர்சனத்தையும், சீலத்தையும் மீண்டும் கொண்டு எழ வேண்டும்.

 

 

அயோத்தியின் அருகில் உள்ள … 

மிதிலாபுரி இதற்கு அஸ்திவாரமாக அமையுமா?

*******

 

 

அக்பரும் சூரிய நமஸ்காரமும் (Post No. 2463)

Emperor-Akbar-Empress-Jodha

Akbar and his wife Jodha Akbar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 6 January 2016

 

Post No. 2463

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

இந்திய சங்கீதம்

 

அக்பரும் சூரிய நமஸ்காரமும்

(Akbar and surya namaskar by Santanam Nagarajan)

ச.நாகராஜன்

 

 

கங்கை ஜலம் அருந்திய அக்பர்

 

அக்பர் ஒரு நல்ல ஹிந்துவுக்கு உரிய பல செயல்களை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.

அவர் எங்கு சென்றாலும் கூடவே கங்கை ஜலம் கொண்டு செல்லப்படும். தன் வாழ்நாள் முழுவதும் கங்கை ஜலத்தைத் தவிர வேறெந்த நீரையும் அருந்தாதவர் அக்பர்.

 

Jodha-Akbar-Mugh

மரியாதையை எதிர்பார்க்காத மன்னர்

 

அவரது அரசவையில் இருந்த ந்வரத்னங்களின் வீட்டுக்கு அவர் செல்வது வழக்கம். அவர்களின் அழைப்பை அவர் எதிர்பார்ப்பதே இல்லை.

 

ஆனால் இதில் ஒரு சங்கடம் அவர்களுக்கு உண்டு. சாதாரணமாக மாமன்னரான அக்பர் ஒருவரது வீட்டிற்கோ மாளிகைக்கோ அரண்மனைக்கோ சென்றால் அவரை மரியாதை செய்ய வேண்டும், அவரது அந்தஸ்துக்குத் தக!

 

 

தங்கத் தட்டில் விருந்து, முத்துக்கள் பதிக்கப்பட்ட குவளைகளில் நீர், ஒன்றே கால் கோடி ரூபாய் தக்ஷிணை ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டிய குறைந்த பட்ச மரியாதைகள்.

ஆனால் ராஜா பீர்பல் இதற்கெல்லாம் எங்கே போவார்? அவர் தன் இல்லம் வந்தமைக்காக மன்னரை வாழ்த்தி ஒரு பாடலைப் பாடுவது வழக்கம்.

 

அக்பரும் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு மகிழ்வார்.

தான்ஸேனும் இது போல தங்கத் தாம்பாளம், வைரக் கோப்பை, வெள்ளிக் குவளைகள், தங்க நாணய தக்ஷிணை ஆகியவற்றை ஒரு போதும் கொடுத்ததில்லை; ஏனெனில் அவரிடம் இவை இல்லை, அவ்வளவு தான்.

 

ஆனால் மன்னர் வந்தவுடன் பாட ஆரம்பிப்பார். அதில் அக்பர் உருகி விடுவார். அவர் தான் தான்ஸேனுக்கு எல்லாவற்றையும் தருவார்.

 

ஏராளமான ஹிந்து அறிஞர்களைத் தன் அருகில் வைத்துக் கொண்டு அவர்களின் முழு அறிவையும் தன்னால் முடிந்த மட்டில் கிரகிக்கப்ப் பார்த்தார் அக்பர்.

surya namaskar by english

 

சூரிய உபாஸனை

 

தினமும் அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம். சூரிய உபாஸனையில் அவர் மனம் பக்தி சிரத்தையுடன் வெகுவாக ஈடுபட்டது.

 

ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.  ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். அவரது ஆரோக்கிய ரகசியம் சூரிய நமஸ்காரத்தில் இருந்தது.

அக்பரின் இந்த சூரிய வழிபாடு தான்ஸேனை வெகுவாகக் கவர்ந்தது.

சூரியனை நோக்கிப் பிரார்த்தித்த தான்ஸேன், “ஒளிபொருந்தியவராக சிரஞ்சீவியாக அக்பர் ஆட்சி புரிய சூரிய பகவான் அநுக்ரஹம் புரிய வேண்டும்” என்று பாடலை யாத்துப் பாடினார்.

 

“அங்கே சூரியன், இங்கே அக்பர்!

இருவரையும் பாருங்கள்!

 

என்ன பவித்ரம், வந்து வரம் வாங்குங்கள், ஆனந்தம் பெறுங்கள்!

சஹஸ்ர கிரணங்களைக் கொண்டுள்ள சூரியன் போலவே அக்பரும் ஆயிரம் கிரணங்களைக் கொண்டுள்ளார். புத்தி ச்ரேஷ்டர். துக்கம் போக்குபவர் என தான்ஸேன் சொல்கிறேன்” என்ற பொருளமைந்த பாடலையும் யாத்துப் பாடினார்.

சூரிய உபாஸனையை இடைவிடாது அக்பர் செய்து வந்ததால் பவித்திரமான ஒருவராக அவர் இருப்பதாக நினைத்த தான்ஸேன் அக்பர் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வந்தார்.

 

surya deva painting

புனைகதைகளில் தான்ஸேன்

 

ஆனால் ராம தானுவாக இருந்தவர் தான்ஸேனாக மாறியதோடு இஸ்லாமை ஏன் தழுவினார் என்பதை வரலாறு சரியாக விளக்கவில்லை. பல புனைகதைகள் இருப்பதால் அது பற்றிய உண்மை தெரியவில்லை.

 

ஒரு கதையில் மன்னர் ராமச்சந்திரரிடமிருந்து வந்து விட்ட சோகத்தால் தான்ஸேன் பாடுவதையே நிறுத்தி விட்டதாகவும், இதனால் அக்பர் அவரிடம் தன் புத்திரியை அனுப்பிப் பாட்டுச் சொல்லித்தரச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அவளுக்குப் பாட்டுச் சொல்லித் தரவே நாளடைவில் பழைய நிலைக்கு வந்து மீண்டும் பாட ஆரம்பித்ததாகக் கூறும் இந்தக் கதை வெறும் பொய்க்கதை என்பதை சுலபமாக உணரலாம்.

அரியணை ஏறி தான்ஸேனை அழைக்கும் போது அக்பருக்கு இருபதே வயது. அவர் எப்படி தன் மகளை 57 வயதான தான்ஸேனிடம் அனுப்பி இருக்க முடியும்?

 

ஆக தான்ஸேனின் வரலாறு பல மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே விளங்குகிறது.

 

ஆனால் ராகினிகளை  (ராக தேவதைகள்) அவர் உபாஸித்ததும் அந்த தேவதைகள் அவர் நாவில் நர்த்தனம் ஆடியதும் உண்மையே!

 

அக்பர் ஒரு வரலாற்று விசித்திரம் என்றால் அதில் அங்கம் வகிக்கும் தான்ஸேனைப் பற்றிய விவரங்களும் அப்படித்தான்!

*********

 

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடலாமா? (Post No. 2444)

SL ganesh stamp

Research Article written by London swaminathan

 

Date: 31  December 2015

 

Post No. 2444

 

Time uploaded in London :– 9-37 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article is uploaded in English as well.

ganesh nepal

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். ஆனால் குடித்துவிட்டுக் கும்மாளம் போடக்கூடாது. அதே நேரத்தில் தமிழ் புத்தாண்டையும் மறக்கலாகாது.

ஆங்கிலப் புத்தாண்டை ஏன் கொண்டாட வேண்டும்?

ஏனெனில்,அதைக் கொண்டாடும்வரை சம்ஸ்கிருதம் வாழும். இந்துமதம் வாழும். அது எப்படி?

 

கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி!!

நீங்கள் ஒரு பஜனைப் பாடலே பாடலாம்!

கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி! பாஹிமாம்!

ஜனவரி=கணபதி!! கணபதி=ஜனவரி!! ரக்ஷமாம்!!

 

ஏனெனில் ஜனவரி என்ற மாதப் பெயர் ‘ஜேனஸ்’ என்ற ரோமானிய கடவுள் பெயரிலிருந்து வந்தது என்பர். உண்மையில் ‘ஜேனஸ்’ என்பது ‘கணேஷ்’ என்பதன் திரிபு!

Janus-Vatican

Janus/Ganesh  in Vatican

ஆங்கிலத்தில் ‘ஜி’ என்ற எழுத்தும் ‘ஜே’என்ற எழுத்தும் இடம் மாறுவது சர்வ சாதாரண விஷயம்!

 

ஜேனஸ்=கணேஸ் யார்?

ஜேனஸ் என்ற ரோம் நகர தெய்வத்துக்கு இரண்டு முகங்கள்: ஒன்று கடந்த காலத்தைப் பார்க்கும்; மற்றொன்று எதிர்காலத்தைப் பார்க்கும். இதை வாசல்படிகளில், நுழைவாயில்களில் வைப்பர். நமது இந்துக் கோவில்களில் நுழைவாயிலில் கணபதி/கணேஷ் இருப்பதைப் பார்த்தே அவர்களும் இப்படி வைத்தனர்.

 

மேலும் இந்துக்கள் எல்லா காரியங்களையும் துவங்குவதற்கு முன் கணேஷை வணங்குவர். ஆகவே அவர்களும் ஜனவரியை ஆண்டுக்கு முதல் மாதமாக வைத்தனர். ஆகையால் இது ஆங்கிலப் புத்தாண்டு இல்லை. இந்துப் புத்தாண்டே!

 

ரோமானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி கணேஷ் சதுர்த்தி கொண்டாடினர். இன்றைக்கு அல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்பு!

 

Sesterce_temple_janus.JPGNERO

Janus Temple coin issued by Roman Emperor Nero

 

ஜேனஸ் கோவில்கள் கி.மு.400 முதல் கி.பி.400 வரை 800 ஆண்டுகளுக்கு இத்தாலி முழுதும் இருந்தன. அவருடைய கோவில்கள் சதுர வடிவில் – 4 பருவங்களைக் குறிக்க—அமைக்கப்பட்டிருந்தன. இதையும் இந்துக்களைப் பார்த்தே செய்தனர். கணபதியின் தனிக் கோவில்கள் தமிழ்நாடு முழுதும் சதுர வடிவிலே இருக்கும்.

 

இத்தாலியில், டைபர் நதிக்கரையில் ஜனிகுலம் என்ற இடத்தில் கணபதி நகரமே அமைக்கப்பட்டது!

 

ஜேனஸ் கையில் ஒரு சாவியும் மற்றொரு கையில் ஒரு தண்டமும் இருக்கும். நாம் அங்குசம், பாசக் கயிற்றைக் கைகளில் காட்டினோம். அவர்கள் சிறிது மாற்றி வைத்தனர். ஜேனஸுக்கும், போருக்கும் தொடர்பு உண்டு. இந்து புராணக் கதைகளிலும் அவர்தான் பூதகணத் தலைவர்.

janus

கணபதி கோவில்களை சாலை ஓரங்களிலும் ரோமானியர் கட்டினர். இன்றும் தமிழ் நாட்டின் சாலை ஓரங்களில் கணபதியைக் காணலாம். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் நாட்டிலிருந்துதான் ரோமுக்கு இவர் போனாரோ என்று என்ன வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்ற குகையிலுள்ள பிள்ளையார் சிற்பங்கள் ரோமானிய ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னால் எழுந்தவை.

மாதங்களில் சம்ஸ்கிருதம்!!!!!!!!!!

சப்த- ம்பர்= செப்டெம்பர்= சப்த =7

அஷ்ட- ஓபர்= அக்டோபர்= 8

நவ- ம்பர்= நவம்பர் = 9

தச- ம்பர் = டிசம்பர்= 10

முன்காலத்தில் மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதம். பின்னால் வந்தவர்கள் இதை மாற்றி வைத்தனர். அதற்கும் பின்னர், ஜூலியன் என்ற போப்பாண்டவர் இன்னும் சில காலண்டர் சீர்திருத்தங்களைச் செய்தார். மார்ச் மாதம் முத்லாவது மாதம் என்றால் சப்த, அஷ்ட, நவ, தச= 7,8,9,10 என்பது பொருந்தும். ஆகவே இதுவும் இந்து ஆண்டே. இன்றும் இந்தியவின் தேசிய வருடமான சக வருடம் (தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர புத்தாண்டு) மார்ச் மாதத்தை ஒட்டியே துவங்கும். அதுதான் நமது உண்மையான புத்தாண்டு. ஆனால் தமிழ் புத்தாண்டு சூரிய இயக்கத்தின் (சோலார்) அடிப்படையிலும், மற்ற இந்திய புத்தாண்டுகள் சந்திர இயக்க (லூனார்) அடிப்படையிலும் அமைந்தன. ஆகவே இரண்டும் சரியே.

ஆக ஆங்கிலப் புத்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டல்ல. இந்துப் புத்தாண்டே!! அது வாழும் வரை சம்ஸ்கிருத எண்கள் நினைவில் நிற்கும்.

 

மேலும் இந்துமதம் எதையும் ஜீரணம் செய்துவிடும். ஆங்கிலப் புத்தாண்டன்று பலர், திருத்தணி, பழநி, திருப்பதிக்குப் பாதயாத்திரை செல்வது பெரிய இயக்கமாக வளர்ந்து வருகிறது. சகரர், ஹூணர், கிரேக்கர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஜீரணம் செய்த நாடு பாரதம். அகாவே இந்து மதம் எதையும் ஜீரண செய்து தனதாக்கிக் கொண்டுவிடும். அஞ்சற்க.

gold ganesh

உலகில் கிறிஸ்தவ, முஸ்லீம் படையெடுப்பாளர்கள் சென்ற அவ்வளவு நாடுகளும் அவர்கள் மயமாய்விட்டன. தென் அமெரிக்கா முழுவதையும் ஸ்பானியர்களும் போர்ச்சுகீசியர்களும், ரோமன் கத்தோலிக்க நாடுகளாக்கினர். ஆப்ரிக்க நாடுகளை முஸ்லீகளும் கிறிஸ்தவர்களும் தமதாக்கினர். அனல் இந்தியாவில் “ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி”க்கும் (பாரதியாரின் வரி) பின்னர், பத்து சதவீதமே மதம் மாற்றப்பட்டனர். அவர்களும் பெரும்பாலும் நம்பிக்கையிலும், கலாசாரத்திலும் இந்துக்களே!

-சுபம்–

(இது போன்ற 2400 ஆராய்ச்சிக் கட்டுரைகள், எனது பிளாக்குகளில் உள. படித்து மகிழ்க)

 

ijanus0001p1

ijanus0001p1

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

அரசன் பேசிய பிழையான சம்ஸ்கிருதம்! குட்டிக் கதை! (Post No. 2411)

IMG_3207

Compiled by London swaminathan

Date: 21 December 2015

 

Post No. 2411

 

Time uploaded in London:- 9-35 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

palanquin

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாக இருந்ததேயில்லை என்று பல அரைவேக்காடுகள் அவ்வப்பொழுது தனது அறியாமைக்கும், முட்டாள்தனத்துக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. இவை எவ்வளவு தவறு என்பதற்கு வேத காலம் முதல் இன்றுவரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள.

சிலப்பதிகாரத்தில் வைஸ்ய ஜாதியைச் சேர்ந்த கோவலன், தெருவில் கதறி அழுத ஒரு பார்ப்பனப் பெண்ணின் சம்ஸ்கிருத ஓலைச் சுவடியைப் படித்தது, “த, த, த” கதையில் (பிருஹத் ஆரண்யக உபநிஷத்) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகிய மூவரும் சம்ஸ்கிருதம் பேசியது, கும்பகர்ணன் சம்ஸ்கிருதத்தில் தவறான வரம் கேட்டது, விருத்ராசுரன் கதையில் ஒரு அசுரப் பிராமணன் தவறாக சம்ஸ்கிருதம் பேசியது, அகஸ்தியர்-வாதாபி கதையில், அகஸ்தியர் சம்ஸ்கிருதம் பேசியது, மஹாபாரத யுத்தத்தில் தர்மன், சம்ஸ்கிருதத்தில் பொய் சொன்னது (அச்வத்தாமா இறந்தான்), ஹாலன் என்ற மன்னன், அவனுடைய மனைவி சம்ஸ்கிருதத்தில் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டவுடன் அவள் ‘கொல்’ என்று சிரித்தது – இப்படி நூற்றுக் கணக்கான எடுத்துக் காட்டுகளை அவ்வப்பொழுது காட்டி வந்துள்ளேன். இதோ மேலும் ஒரு சுவையான கதை.

 

ஒரு அரசன் பல்லக்கில் பவனி வந்தான். அந்தப் பல்லக்கைப் பலர் தூக்கி வந்தனர். அவர்களில் ஒருவனைப் பார்த்து, இந்த பாரம் மிகவும் வலிக்கிறதா? என்று கேட்டான். அதை சம்ஸ்கிருத்தில் கேட்டான். அதையும் பிழைபடக் கேட்டான். உடனே பல்லக்குதூக்கி சொன்னான். உன் உடல் பாரம் வலிக்கவில்லை. நீ பேசிய சம்ஸ்கிருதத்தில் உள்ள இலக்கணப் பிழைதான் பொறுக்கமுடியாத வலியைத் தருகிறது என்றான்.

 

ஒவ்வொரு மொழியிலும் சில குறிப்பிட்ட முறையில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்கால வினைச் சொற்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக தமிழில் இறந்த கால வினைச் சொற்கள்தான் மிகவும் சிக்கலானவை. கிட்டத்தட்ட பத்துவகைகள் உள்ளன. நான் வெளி நாட்டுக்காரர்களுக்குத் தமிழ் சொல்லித் தருவதால் இதை அவர்கள் புரிந்துகொள்ளப் படும் சிரமம் எனக்குத் தெரியும். வா என்பதன் இறந்த காலம் வந்தான். போ என்பதன் இறந்தகாலம் போந்தான் இல்லை! சாப்பிடு என்பதன் இறந்த காலம் சாப்பிட்டான். ஆனல் சா என்பதன் இறந்த காலம் செத்தான்! தமிழ் தெரியாத வெளி நாட்டுக்கார்கள் சா என்பதன் இறந்த காலத்தை சாப்பீட்டான் என்றும், சாத்தான் என்றும் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வரும். வில் என்ற வினைச் சொல்லை நாம் பயன்படுத்துவதே இல்லை. ஆனால் விற்றான், விற்கிறான், விற்பான் என முக்காலங்களிலும் பயன்படுத்துகிறோம் (கல்= கற்றான், கற்கிறான், கற்பான்). சொல் என்பதை சொற்றான், சொற்பான், சொற்கிறான் என்று சொல்ல மாட்டோம் இது போல எல்லா மொழிகளிலும் உண்டு. இப்படி சம்ஸ்கிருதத்திலும் உண்டு. இது தெரியாமல் ஒரு மன்னன் ஒரு தப்பு- இலக்கணத் தப்பு- விட்டான்.

 

பல்லக்கில் பவனி வந்த மன்னன்:

பாரம் பாததி வா? (என் உடல் பாரம் வலிக்கிறதா) என்றான். இது தவறு.

பல்லக்கு தூக்குபவன் சொன்னான்: “பாரம் ந பாததே யதா தவ பாததி”.

அதாவது பாரம் வலிக்கவில்லை. நீ (தவறாக) சொன்னாயே  “பாததி” என்று அதுதான் வலிக்கிறது.

palanquin1

இதிலிருந்து அக்காலத்தில் ராஜா முதல் பல்லக்கு தூக்கிவரை எல்லோரும் சம்ஸ்கிருதம் பேசியது தெள்ளிதின் விளங்கும். இதை ஒரு வேளை கற்பனைக் கதை என்று கருதினாலும், மஹாபாரத (அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது), ராமாயண (கும்பகர்ணன் நித்திரை கேட்டது), உபநிஷத (த, த, த கதை) கதைகளை யாரும் பொய்யென்று சொல்லமுடியாது. பிருஹத் ஆரண்யக உபநிஷதம் (பெருங்காட்டு உபநிஷதம்) காமாலைக் கண் படைத்த வெள்ளைக்காரன் கணக்கிலும் கூட மிகப் பழைய நூல். அதாவது இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

 

இந்த த, த, த கதையை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு, ஐ.நா.சபையில் பாடுவதற்கு எழுதிக்கொடுத்த மைத்ர்ரிம் பஜத – என்ற சம்ஸ்கிருதப் பாடலில் எழுதியுள்ளார். ஆக 2800 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பேச்சு மொழி நமது காலத்தில், ஐ நா. சபையிலும் ஒலித்து, அதை ஒலிபரப்பிய 100+ நாடுகளிலும் ஒலித்தது.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!

 

மதப் பிரசாரம் கூடாது: இங்கிலாந்து ராஜாவுக்கு சீன ராஜா கடிதம்( Post No. 2401)

chien2

Compiled by London swaminathan

Date: 18 December 2015

 

Post No. 2401

 

Time uploaded in London :– காலை 6-20

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Chien lung’s (1711-1799) letter to George III (1760-1801).

சீனாவை ஆண்ட சியான் லங் என்பவர் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்கு ஒரு அழகான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் கடிதம் எழுதும் கலை எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இதோ அந்தக் கடிதம்:_

“ பல கடல்களைத் தாண்டி தொலைவில் வசிக்கும் ஓ, மன்னவா! எங்கள் நாகரீக நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் உடையவரே! மரியாதைக்குரிய உமது கடிதத்துடன் உங்கள் நாட்டு தூதர் இங்கே வந்தார். நீங்கள் மரியாதையுடன் அனுப்பிய உங்கள் நாட்டுப் பரிசுப்பொருள்கள் கிடைக்கப் பெற்றோம்.

george3

எங்கள் சாம்ராஜ்யத்தின் மணம் இந்த சொர்கத்தின் கீழுள்ள எல்லா நாடுகளிலும் பரவி இருக்கிறது. இந்தப் பூவுலகில் எல்லா மன்னர்களும் எங்களுக்கு கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் கப்பம் செலுத்தி வருகின்றனர். எங்களிடம் எல்லாப் பொருட்களும் உளது. விநோதமான, விலையுயர்ந்த உங்கள் நாட்டுச் சரக்குகளில் எங்களுக்கு நாட்டம் இல்லை. தொலை தூரத்திலிருந்து மரியாதையுடன் அனுப்பியதாலேயே அவைகளை நாம் ஏற்றோம்.

 

உங்கள் கடிதத்தை நான் படித்தேன். உங்கள் பணிவும் அடக்கமும் அதில் பிரதிபலித்தது. உங்கள் நாட்டுத் தூதருக்கு நான் பல சலுகைகளை அளித்தேன். அவரைக் கௌரவித்துப் பல பரிசுப் பொருட்களையும் தந்தேன். மன்னவா, உமக்கும் நான் விலையுயந்த பரிசுப் பொருட்களை அனுப்புகிறேன். அவைகளின் பட்டியலையும் அனுப்புகிறேன். அவைகளை அன்புடன் ஏற்கவும். உன்பால் எனக்குள்ள பரிவும் பாசமும் அதில் புலப்படும்.

 

ch-ien-lung-

சொர்கம் போன்ற எனது அரசவையில் உமது நாட்டு தூதர் இருக்க விருப்பம் தெரிவித்தீர். அதை நாம் ஏற்பதற்கில்லை. பீகிங் மாநாகரில் வசிக்கும் எந்த ஐரோப்பியனும், வெளியே போக முடியாது; கடிதமும் எழுத முடியாது. ஆகையால் இங்கு உன்னாட்டு தூதரை அனுப்புவதில் யாதொரும் நன்மையும் விளையாது. மேலும் ஐரோப்பாவில் உம் நாட்டைப் போல பல நாடுகள் உள. அவ்வளவு ஆட்களும் எமது அரசவையில் அமர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தால் நாம் ஏற்பது எங்கனம்? நீங்கள் கேட்பதற்காக இந்த சாம்ராஜ்யம், அதனுடைய  பழக்க வழக்கங்களை (சம்ப்ரதாயங்களை)  மாற்றிக்கொள்ள முடியுமா?

 

காண்டன் நகரத்துக்கு வெளியேயும் உங்கள் நாட்டு சரக்குகளின் வியாபாரம் நடத்த அனுமதி வேண்டுமென்ற கோரிக்கையையும் உமது தூதர் தெரிவித்தார். வேறு எந்தத் துறைமுகத்திலும் வசதிகளுமில்லை; மொழிபெயர்ப்பாளர்களுமில்லை. ஆகையால் உன்னாட்டு வணிகர்கள் அங்கே வர்த்தகம் செய்ய இயலாது. கடந்தகாலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி உமது வேண்டுகோளை நிராகரிக்கிறேன். காண்டன் துறைமுகத்தில் மட்டும் நீவீர் வியாபாரம் நடத்தலாம்.

 

பீகிங் நகரில் வியாபாரம் செய்ய வேண்டும், சரக்குகளைச் சேமித்துவைக்க வசதிகள் வேண்டும் என்பது செயல்முறைக்கு ஏற்றதல்ல. எனது தலைநகரம் உலகிலுள்ள எல்லாம் வலம் வரும் அச்சுப் போன்றது. அதன் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. இதுவரை எந்த வெளிநாட்டானுக்கும் அங்கே அனுமதி தந்ததில்லை. ஆகையால் உமது வேண்டுகோளை அனுமதிக்க மாட்டேன்.

GeorgeIII

உமது மதத்தைப் போதனை செய்யவும் உமது தூதர் அனுமதி கோரினார். வரலாறு தோன்றிய காலம் முதற்கொண்டு சீனாவின் அறிவு சால் மன்னர்களும் சாது,சந்யாசிகளும் ஒரு மதத்தை எங்களுக்கு அளித்துள்ளனர். அதைக் கோடிக்கணக்கான எமது பிரஜைகள் பின்பற்றி வருகின்றனர்.எங்களுக்கு வெளி நாட்டான் கற்பிக்க வேண்டிய தேவை இல்லை. உமது மதப் பிரசார கோரிக்கை சாரமற்றது.

 

எங்கள் நாகரீகத்தைப் பகிர்ந்து கொள்ளவிரும்பும் பல கப்பம் செலுத்தும் நாடுகளிடம் நாங்கள் பேரன்பு காட்டிவருகிறோம். ஓ, தொலைதூரத்தில் வசிக்கும் மன்னவா! உம்மிடத்தில் வேறு எவரையும் விட கூடுதலாகவே அன்பு காட்டினோம். ஆனால் உமது கோரிக்கைகளோவெனில் எம் நாட்டு பழக்க வழக்கங்களுக்கு மாறுபட்டுள்ளன. இதனால் எந்த நன்மையும் பயக்காது. ஆகையால்தான் நாம் சற்று விவரமாகவே பதில் தருகிறோம். எங்கள் உணர்ச்சிகளை நன்கு புரிந்துகொண்டு மரியாதையுடன் அவைகளுக்கு எக்காலத்திலும் கீழ்படிந்து நடத்தல் வேண்டும். உங்களுக்கு நல்ல அமைதி கிட்டுமாக!”

 

xxxx

 

 

 

 

 

 

 

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2

cuba-5

Compiled by S NAGARAJAN

Post No.2247

 

Date: 16 October 2015

Time uploaded in London: 7-48 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

அறிவியல் துளிகள்

பாக்யா 9-10-2015 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 242ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2

First Part of this article was published yesterday in this blog.

.நாகராஜன்

, வருணரே! எங்களைப் பேரிடரிலிருந்து காப்பீராக!

                                          –  அதர்வண வேத பிரார்த்தனை

 

napoleon

நெப்போலியனின் ரஷியப் படையெடுப்பு

1812ஆம் ஆண்டு. நெப்போலியனின்  படை ஆறு லட்சம் போர் வீரர்களைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப் பெரும் படையாக உருவாகி இருந்தது. எதற்கும் அஞ்சாத போர் வீரர்கள்! ரஷியாவிற்குள் அஞ்சாமல் சென்றான் நெப்போலியன். குளிர்காலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் நெப்போலியனுக்குக் அது ஒரு கவலைப் படக் கூடிய விஷயமா, என்ன! அவனது தளரா நம்பிக்கைக்கு முன்னர் எதுவும் துச்சம் தான்! மாஸ்கோவைப் பிடிக்கும் ஆவலில் படை முன்னேறியது. நகர் சூறையாடப்பட்டது. போர்வீரர்கள் தம் மனைவிமாருக்குக் கொடுப்பதற்காக ஏராளமான நகைகளைக் கொள்ளை அடித்திருந்தனர். ஆனால் நெப்போலியன் அறியாத ஒரு சின்ன உண்மை, ரஷியாவின் குளிர் பயங்கரமான ஒன்று என்பது தான்! ரஷியாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் படை வெளியேறிய போது குளிர் மைனஸ் நாற்பது டிகிரி செல்ஸியஸ் என்ற உறைகுளிர் நிலையை அடைந்து விட்டது.மைனஸ் நாற்பது என்பது ஒரு அபூர்வமான உஷ்ணநிலை. மைனஸ் நாற்பது செல்ஸியஸும் மைனஸ் நாற்பது ஃபாரன்ஹீட்டும் ஒரே அளவு என்ற விசித்திர நிலை மைனஸ் நாற்பது டிகிரியில் ஏற்படுகிறது. வீரர்கள் பொத் பொத்தென்று விழுந்தனர்; இறந்தனர். ஒரு நாளில் மட்டும் 50000 வீரர்கள் இறந்தனர். ரஷியாவை நோக்கிச் சென்ற ஆறு லட்சம் படைவீரரில் மீண்டு வந்தவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தான்! மகத்தான இழப்பு!! வந்தவர்களும் நொண்டி நொண்டி வந்தனர். மாபெரும் தளகர்த்தனான நெப்போலியனின் வீழ்ச்சி ரஷியப் படையெடுப்பில் ஆரம்பித்தது. ரஷிய நாடானது அப்பொழுதிலிருந்து ஐரோப்பாவின் சக்தி மிகுந்த நாடாக வளர ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம் குளிர் தான்!

 

 Greek-Persian_duel

கிரேக்கர்பெர்ஸியர் போர்

பெர்ஸியா வலிமை வாய்ந்த நாடாக இருந்த சமயம். கிரீஸின் மீது அது தன் பார்வையைப் பதித்ததுஆனால் கிரேக்க படை தளகர்த்தனான தெமிஸ்டோக்ளஸ் ஒரு அபூர்வமான கால நிலை வல்லுநன். அவனுக்குக் கடல் காற்றின் வலிமை, அது எந்த திசையில் எப்படி அடிக்கும் என்பதெல்லாம் அத்துபடிகி.மு 480இல் போர் ஆரம்பித்தது. சலாமிஸ் என்ற இடத்தில் நடந்த கடும் போரில் காற்றைப் பற்றிய தன் அறிவால் அவன் வென்றான். கிரேக்க கலாசாரம் பிழைத்தது!

 

ஜப்பானை நோக்கிய குப்ளாய்கான்

13ஆம் நூற்றாண்டு. மங்கோலிய அரசனான குப்ளாய்கானின் பார்வை ஜப்பானின் மீது திரும்பியது. ஜப்பானின் மீது படையெடுத்துச் சென்ற அவன் தோல்வியுற்றான். காரணம் ஜப்பானில் அப்போது வீசிய புயல் காற்றோடு கூடிய பருவ மழையால்! இன்னொரு முறை படையெடுத்தான். அப்போதும் தோல்வி. அப்போதும் காரணம் புயல் காற்றுடன் வந்த பருவ மழை தான்ஜப்பானிய ஷிண்டோ குருமார்களுக்கோ ஒரே சந்தோஷம். அவர்களின் தீவிரமான பிரார்த்தனைக்கு வருணன் செவி சாய்த்து வெற்றி அருளி விட்டான் என்று. அந்தப் புயல் மழையை அவர்கள் காமிகேஸ் என்று அழைத்துக் கொண்டாடினர். காமிகேஸ் என்றால் தெய்வீகக் காற்று என்று பொருள்!

 kublai good

அடிமைகளின் புரட்சி தோல்வியில் முடிந்தது

1800ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி. ரிச்மாண்ட் என்ற இடத்தில் இருந்த ஆயிரக்கணக்கான அடிமைகள் தங்கள் எஜமானர்களை எதிர்த்து தீவிரமான புரட்சி ஒன்று நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அது மட்டும் நடந்திருந்தால் ஏராளமானோர் பலியாகி, வரலாறே மாறி இருக்கும். ஆனால் அடிமைகளின் துரதிர்ஷ்டம்அன்று ஒரு பெரும் மழையுடன் கூடிய புயல் வந்தது. புரட்சி தோல்வியுற்றது!

 

 

ஹிட்லரின் ரஷியயெடுப்பு

அசராத அசுரனான ஹிட்லரின் மின்னல் வேகப் படையெடுப்புக்கு சடசடவென நாடுகள் சுருண்டு வீழ்ந்தன. ராட்சஸனின் கண்கள் ரஷியா மீது பதிந்தன. 1941ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷிய படையெடுப்புக்கு நாள் குறித்தான் அவன். அந்தப் படையெடுப்பின் பெயர் ஆபரேஷன் டைபூன். ரஷியாவை அவன் படைகள் தாக்கின. படையெடுப்பில் வெற்றியோ நிச்சயம். ஆகவே ஜெர்மானிய வீரர்கள் ரஷிய ரெட் ஸ்குயரில் வெற்றி அணிவகுப்பின் போது அணிய வேண்டிய வெற்றி யூனிஃபார்மையும் எடுத்துச் சென்றனர். அவ்வளவு நம்பிக்கை. ஆனால் அது ரஷியாவின் கடுங் குளிர் காலம்வெற்றி சீருடையை மறக்காமல் எடுத்துச் சென்ற ஜெர்மனி வீரர்கள் மறந்தது குளிர்காலத்தில் போட வேண்டிய ஆடைகளைத் தான்! விளைவுமாஸ்கோவின் வெளிப்புறத்திலும் ஸ்டாலின்கிராடிலும் வீரர்கள் சுருண்டு செத்தனர். படையெடுப்பு பெரும் தோல்வியைத் தழுவியது. ஸ்டாலினும் ரஷிய மக்களும் மகிழ்ந்தனர். ரஷியாவின் குளிர் வரலாற்றைப் பல முறை மாற்றிய தெய்வீகக் குளிர்!

 hitler

மாயன் நாகரிக அழிவின் மர்மம்

மாயன் நாகரீகம் எப்படித் திடீரென மறைந்தது என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரே திகைப்பு. ஆனால் அதை ஆராய்ந்த கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாமண்ட் டோஹெர்டி ஆப்ஸர்வேடரி அண்ட் தி நாஸா காடண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் ஸ்டடீஸில், உலக காலநிலை மாதிரிகளை அமைத்து ஆராயும் பேராசிரியர் பெஞ்சமின் குக் என்பவர் மாயன் நாகரிகம் அழிவதற்குக் காரணம் அவர்களே எனத் திட்ட வட்டமாகத் தெரிவிக்கிறார்.

திடீரென ஏற்பட்ட பஞ்சத்தால் லட்சக்கணக்கில் மக்கள் அழிந்து பட்டனர். ஆனால் இந்த திடீர் பஞ்சம் இயற்கையினால் ஏற்பட்ட சாபம் அல்ல; அவர்கள் காடுகளை அபரிமிதமாக அழித்ததினாலேயே பஞ்சம் ஏற்பட்டது என்கிறார்.

ஆக காலநிலை மாறுதல்களால் உலகின் வரலாறும் வரைபடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. போர்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வீரமும் புத்திசாலித்தனமும் மட்டுமல்ல. காலநிலையும் கூட என்பதை வரலாறு தெரிவிக்கிறது.

இயற்கையான காலநிலை மாறுபாடுடன் மனிதன் இன்றைய உலகில் எல்லா நாடுகளிலும் காடுகளை வெகு வேகமாக அழித்து வருகிறான்.

மக்களுக்கு காடுகளின் முக்கியத்துவம் தெரியவே இல்லை என்பது விஞ்ஞானிகளின் புலம்பலாக மாறி விட்டது.

தன்னைத் தன்னைத் தானே அழித்துக் கொள்ளலாமா என விஞ்ஞானிகளில் பலர் வெளிப்படையாக மனித குல அழிவு பற்றி வேதனை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

காலநிலை மாறுதல்கள் பற்றிய செய்திகளை அறிந்தால் இயற்கையை இன்னும் அருமையாகப் பாதுகாக்க மனம் வரும், இல்லையா!

 Mayan-Calendar

 

 அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரபல விஞ்ஞானி. தாமஸ் ஆல்வா எடிஸன் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு.

நான் இரண்டு முறை வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் என்று ஒருமுறை அவர் கூறினார்.

விவரத்தையும் அவரே கூறினார் இப்படி: முதலில் ஒரு ஆபீஸில் நான் டெலிபோன் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த மெஷினிடம் எனக்கு மிகவும் ஈடுபாடு வந்து விடவே அதையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால், வந்த செய்திகளை அனுப்புவதற்கு மறந்து விட்டேன். அவ்வளவு தான், என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.

எடிஸன் சிரித்தவாறே தொடர்ந்தார்:—“இன்னொரு ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்தேன். பழைய கால கட்டிடம் அது. எங்கு பார்த்தாலும் எலிகள். அவற்றின் அட்டகாசம் என்னால் பொறுக்க முடியாத அளவிற்குப் போனது. ஈக்களை அடித்துக் கொல்வது போல எலிகளைக் கொல்ல ஒரு சாதனத்தைக் கண்டு பிடித்தேன்.

edison

அவ்வளவு தான், அறை முழுவதும் கொலையுண்ட எலிகளின் துண்டுகள் சிதறிக் கிடந்தன. அறையைப் பார்த்தவர்கள் உடனே என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

எப்போதும், எதனாலும் மனம் தளராதவர் எடிஸன்!

***************

மஹரிஷியும் மகாத்மாவும்!

ramana2

Research article written by S NAGARAJAN

Post No.2208

Date: 2nd  October 2015

Time uploaded in London: 7-52 am

 

 

வாழ்விக்க வந்த மஹான்

அக்டோபர் இரண்டாம் நாள். காந்தி ஜெயந்தி. அண்ணலை நினைவு கூர வேண்டிய நன்னாள்!

 

மஹரிஷியும் மகாத்மாவும்!

.நாகராஜன்

 

 

மஹரிஷியும் மகாத்மாவும்

சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய அதிசயங்கள் இரண்டு. மஹரிஷியும் மகாத்மாவும்!

சமகாலத்தில் வாழ்ந்த இந்த இருவரைப் பெற பாரதம் என்ன தவம் செய்ததோ!

ஒருவர் தேசத்திற்கு விடுதலையை வாங்கித் தர முயற்சி செய்து, வெற்றி பெற்றார்.

இன்னொருவரோ அனைத்து ஆன்மாக்களுக்கும் பிறவியிலிருந்து விடுதலை பெறும் பெரு நெறியைக் காட்டினார்.

 

இருவரும் வாழ்க்கையும் சொல்வதும் ஒரே செய்தியைத் தான்!

MY LIFE IS MY MESSAGE (என் வாழ்க்கையே நான் தரும் செய்தி) என்பது தான்!

மஹாத்மா மஹரிஷியைப் பற்றி எப்போதுமே உயர்வாகப் பேசுவார். மஹரிஷியும் மஹாத்மாவைப் பற்றி உயர்வாகப் பேசுவார்.

இருவரையும் இணைத்து பெரும் நூலையே எழுதி விடலாம்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி இரு சம்பவங்களை நினைவு கூர்ந்து நமது வாழ்க்கையைப் புனிதமாக்குவோம்.

 ramana

ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்

 

1938ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ஜம்னாலால் பஜாஜுடன் பாபு ராஜேந்திர பிரசாத் (இந்தியாவின் எதிர்கால முதல் ஜனாதிபதி; 1938இல் காங்கிரஸில் தலைவர்; காந்திஜியின் தொண்டர்) ரமணாஸ்ரமத்திற்கு வந்தார்.

ஜம்னாலால் பஜாஜ் ஏராளமான கேள்விகளைக் கேட்டு மஹரிஷியிடம் பதில் பெற்றார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் சமயம். ரமண மஹரிஷியிடம் பிரியா விடை பெறும் நேரம்.

 

 

ராஜேந்திர பிரசாத் கேட்டார்:”-மஹாத்மா காந்திஜியின் அனுமதியுடன் நான் இங்கு வந்திருக்கிறேன். அவரிடம் சீக்கிரம் திரும்பிச் செல்ல வேண்டும். அவருக்கு பகவான் ஏதாவது செய்தி தர முடியுமா?”

பகவான்:- “அத்யாத்ம சக்தி அவருள்ளிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறது. அது போதும். அதை விட வேறென்ன வேண்டும்?”

தன்னை வழி நடத்தும் சக்தியையே காந்திஜியிடம் கண்டார் மஹரிஷி! பகவானைப் பணிந்து ராஜேந்திர பிரசாத்தும் ஜம்னாலால் பஜாஜும் விடை பெற்றனர்.

 

யாரேனும் சக்தி குறைந்திருப்பது போலக் காணப்பட்டால் அவரை ரமணாஸ்ரமம் போ என்று அனுப்பி விடுவார் மகாத்மா!

மஹாத்மாவின் ஒவ்வொரு செயலும் மஹரிஷிக்குத் தெரியும்!

 

 rajendra

கடவுள் காட்டும் வழிப்படி நடப்பவர் காந்திஜி!

1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி. 11ஆம் தேதி ஹரிஜன் இதழில் காந்திஜி எழுதியிருந்த கட்டுரையைச் சுட்டிக் காட்டினார் மஹரிஷி.

காந்திஜி அதில் எழுதி இருந்தார்:- “How mysterious are the ways of God! This journey to Rajkot is a wonder even to me. Why am I going, whither I am going? What for? I have thought nothing about these things. And if God guides me, what should I think, why should I think? Even thought may be an obstacle in the way of His guidance.

 

The fact is, it takes no effort to stop thinking. The thoughts do not come. Indeed there is no vacuum – but I mean to say that there is no thought about the mission.”

 

இதைப் படித்த மஹரிஷி இது எவ்வளவு உண்மை என்று கூறி ஒவ்வொரு வரியையும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.

பின்னர் இந்த எண்ணமற்ற நிலையைத் தாயுமானவர் பாடி இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

 

சும்மாவிருக்கச் சுகம் சுகமென்று சுருதி எல்லாம்                               

அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டு அறிவின்றியே                                 

பெம்மான் மௌனி மொழியையும் தப்பி என் பேதைமையால்                        

வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!”

 

வரிசையாக இப்படி மூன்று பாடல்களை பகவான் சுட்டிக் காட்டி காந்திஜி கூறிய நிலை மெய் தான் என்பதை விளக்கி அருளினார்.

மறுநாள் பக்தர் ஒருவர், காந்திஜி எண்ணங்களே அந்நியமாக இருக்கிறது என்ற நிலையையா சுட்டிக் காட்டி உள்ளார் என்று கேட்டார்.

மஹரிஷி: “ஆம்! நான் என்ற எண்ணத்திற்குப் பின்னரே அனைத்து எண்ணங்களும் எழும்.”

 

 gandhi3 gandhi  gandhi2

தொடர்ந்து பக்தர் காந்திஜி கடவுளின் வழிகாட்டலுக்கு நம் எண்ணமே ஒரு தடை என்று சொல்கிறாரே என்று விளக்கம் கேட்டார்.

அதற்கு மஹரிஷி,” சாதனை என்பது தடைகளை நீக்கவே! ஆனால் ஒரு நிலையில் அந்த சாதனைக்குப் பிறகும் ஒருவன் தனது இயலாமையை உணர்கிறான். அப்போது தான் கடவுளின் சக்தி உணரப்படுகிறதுஎன்று அருளினார்.

 

 

ஒரு உயரிய நிலையை இன்னொரு உயரிய நிலையை அடைந்த அனுபவஸ்தரே அறிய முடியும்; விளக்க முடியும், இல்லையா!

குழுமி இருந்த பக்தர்கள் அனைவரும் இருவரின் நிலையையும்மகாத்மா, மஹரிஷி இருவரின் நிலையையும் உணர்ந்து பிரமித்தனர்!

இப்படி ஏராளமான உரையாடல்கள் காந்திஜி பற்றி அவ்வப்பொழுது மஹரிஷி ஆஸ்ரமத்தில் நிகழ்த்துவதுண்டு!

ஒரே சக்தி, இரு வேறு இடங்களில் இரு வேறு விதமாக வேலை செய்தது. ஒன்றி இயக்கமாககாந்திஜி வடிவில்.

இன்னொன்று மௌனமாகமஹரிஷி வடிவில்!

 

 stamp_einstein1

ஐன்ஸ்டீனின் புகழாரம் இருவருக்கும் பொருந்துகிறது!

 

அற்புதமான மஹாத்மாவைப் பற்றி அவரது 70ஆவது பிறந்த நாளன்று பெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், “Generations to come, it may well be, will scarce believe that sucha man as this one ever in flesh and blood walked upon this earth” (வரும் தலைமுறையினர், இப்படிப்பட்ட ஒருவர் ரத்தமும் சதையும் பொருந்தி இந்த பூமியில் நடந்தார் என்பதை அரிதாகவே நம்புவர்) என்று கூறி பிரமித்தார்.

 

ஐன்ஸ்டீனின் இதே மொழியை மஹரிஷிக்கும் பொருத்திப் பார்த்தால் அப்படியே பொருந்துகிறது.

வருகின்ற தலைமுறையினர் மகாத்மாவையும் மஹரிஷியையும் பற்றி எண்ணி எண்ணி பிரமிப்பர்.

அவர்கள் நடந்த இந்த புனித பூமியில் நடக்கும் பேறு பெற்றதை எண்ணி மகிழ்ந்து அவர்களை கை கூப்பித் தொழுவோம்!

************* 

On the occasion of Mahatma Gandhi’s 70th birthday. “Generations to come, it may well be, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth.”

கனவில் கண்ட உலக சரித்திரம்!

toynbee book

Research article written by S NAGARAJAN

Post No.2207

Date: 2nd  October 2015

Time uploaded in London: 5-52 am

 

 

(My elder brother S NAGARAJAN is a regular contributor to Bhagya, Jnanalayam, Nilacharal, Ezine and several other magazines and blogs: swaminathan)

தற்பொழுது விற்பனையாகி வரும் ஞானஆலயம்அக்டோபர் 2015 இதழில் வெளியான கட்டுரை.

பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று இளைஞர்களை ஊக்குவித்தார். கனவு காண எப்படி வேண்டுதல் புரிய வேண்டும் என்ற மந்திரத்தோடு அபூர்வமான விஷயங்களைப் போதிக்கிறது நம் அக்னிபுராணம்!

கனவில் கண்ட உலக சரித்திரம்!

அக்னி புராணமும் ஆர்னால்ட் டாய்ன்பியும்!!

.நாகராஜன்

 

toynbee

துஸ்ஸ்வப்ன நாசன:

நல்ல கனவுகளைக் காணுங்கள் என்பதே ஹிந்து சாஸ்திரங்கள் தரும் உபதேசம்! துஸ்ஸ்வப்ன நாசன: (தீய கனவுகளை நாசம் செய்பவன் நாமம் 926) என்றே விஷ்ணுசஹஸ்ரநாமம் விஷ்ணுவைத் துதிக்கிறது. அசோகவனத்தில் திரிஜடா, சீதையிடம் தான் கண்ட நல்ல கனவைத் தெரிவிக்க, அதன் பின்னர் அனுமன் சீதையை தரிசிக்க அதுவே ராமாயணத்தின் முக்கிய திருப்புமுனைக் கட்டமாக அமைகிறது!

 

அக்னிபுராணம் தரும் அறிவுரை

கனவுகளைப் பற்றி அக்னி புராணம் பிரமிக்கத் தக்க விஷயங்களை அள்ளித் தருகிறது. பல்வேறு கனவின் பலன்கள், எந்த ஜாமத்தில் கண்டவை பலிக்கும் என்பன போன்றவை அதில் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு நல்ல கனவை முதலில் கண்டு விட்டுப் பின்னர் கெட்ட கனவைக் கண்டால் கெட்ட கனவே பலிக்கும். ஆகவே நல்ல கனவைக் கண்ட பின்னர் உறங்காதே என்ற ஆலோசனையையும் அது அன்புடன் வழங்குகிறது. ஆகவே தான் நம் முன்னோர்கள் நல்ல கனவைக் கண்டவுடன் மகிழ்ச்சியுடன் எழுந்து அனைவரிடமும் அது பற்றிக் கூறி மகிழ்வர்; நல்லதை எதிர்நோக்கிக் காத்திருப்பர்.

ஹஸ்டன் ஸ்மித் என்ற அறிஞர் இந்து மதத்தில் மதமே கலை; கலையே மதம் என்று பொருத்தமுறக் கூறுகிறார்.

நமது கோவில் சிற்பங்கள், அங்குள்ள நாட்டியங்கள், இசை, அலங்காரம் என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்தால் நமது மதமே நமது கலை; நமது கலையே நமது வாழ்க்கை முறை என்பது விளங்கும்.

ஆனந்த குமாரஸ்வாமி (1877-1947) ஒரு பெரும் கலைஞர். இந்து மதச் சிறப்புகளை கலைஞனுக்கே உரித்த வகையில் நுணுக்கமாக உலகினருக்கு விவரித்தவர். அவர் அக்னி புராணத்திலிருந்து ஒரு அழகிய மந்திரத்தை எடுத்துக் காட்டி ஒரு கலைஞன் பெரிய காரியத்தைத் தொடங்கும் முன்னர் முதல் நாள் இரவில் கனவில் அதை நிறைவேற்றுவதற்கான வழிகளைக் காண்பிக்குமாறு வேண்டுதல் புரியும் மந்திரத்தைக் கூற வேண்டும் என்கிறார். கலை என்பது ஒரு யோகம் என்கிறார் அவர். கனவுக்கும் பெரிய திட்டத்தை நனவாக்கும் செயலுக்கும் உள்ள நெருக்கத்தை நல்ல முறையில் அடைய அக்னி புராணம் கூறும் முறையில் பிரார்த்தித்துச் செய்தால் அது பிரம்மாண்டமான வெற்றியைப் பெறும் என்கிறார் அவர். Visualization என்னும் காட்சிப்படுத்தல் பற்றி ஆதிசங்கரரும் அற்புதமாக விளக்கியுள்ளார்.

கனவுப் படைப்பாளிகளுக்கு நவீன வரலாற்றில் பஞ்சமே இல்லை. நூற்றுக்கணக்கான பேர்களில் மாதிரிக்கு 14 பேரை அட்டவணையில் தனியே காணலாம்!

gra0168sh_einstein

ஐன்ஸ்டீனின் மனச்சித்திரம்

உலகின் அதிசயமான கண்டுபிடிப்புகள் எல்லாம் விசுவலைசேஷன் என்ற காட்சிகள் மூலமாகவே பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஐன்ஸ்டீனும் விதி விலக்கல்ல. ஒளியின் வேகத்தின் மீதேறிச் செல்வது போன்ற காட்சியே உலகின் பிரம்மாண்டமான கண்டுபிடிப்பான தியரி ஆஃப் ரிலேடிவிடியயைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. அதனால் தான் அடிக்கடி அவர் மனச்சித்திரத்தை வற்புறுத்தி வந்தார் வாழ்நாள் முழுவதும்.

ஆர்னால்ட் டாய்ன்பியின் உலக சரித்திரம்

உலகின் சரித்திரத்தை எழுதிய ஆர்னால்ட் டாய்ன்பி (1889-1975) ஒரு அற்புதப் படைப்பாளி. ‘A STUDAY OF HISTORY’’ என்ற அவரது படைப்பு 30 லட்சம் சொற்கள் அடங்கியது. 26 நாகரிகங்களைப் பற்றி 12 தொகுதிகளில் அவர் விளக்கியுள்ளார். ஒரு மனிதனால் இப்படி துல்லியமாக சரித்திரக் காட்சிகளை எழுதி விட முடியுமா என்ன/

இதை எப்படி எழுத முடிந்தது என்பதை அவரே விளக்கியுள்ளார். படுத்தவுடன் கனவில் பக்கம் பக்கமாகச் சொற்கள் அடங்கிய காட்சிகள் விரியுமாம். எழுந்தவுடன் அதை அப்படியே எழுதி விடுவாராம். கனவில் அகக் கண்ணில் விரிந்த காட்சிகள் படலம் படலமாக வர உலக சரித்திரம் மிளிர்ந்தது. அக்னி புராணம் கூறும் கனவுக் காட்சிகளுக்கு அவரே சரியான சான்று. கனவின் மூலமாக உத்வேகம் பெற்ற அறிஞர் அவர்.

toynbee book3

பற்றிக் கொள்; காத்திரு

கடவுளைப் பற்றியும் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் விளக்கப் புகுந்த அவர் இதற்கு விடையாகத் தனது கனவு ஒன்றையே விவரிக்கிறார்!

இந்தக் கனவில் சிலுவையின் அடிப்பாகத்தைப் பிடித்துக் கொண்டு தான் இருப்பதை அவர் கண்டார். யார்க்‌ஷைரில் ஆம்பிள்ஃபோர்த் அப்பேயில் (Abbey of Ampleforth) பெனிடிக்‌ஷன் பீடத்தின் மேல் உள்ள சிலுவையையே அவர் கண்டார்.

பிறகு தெளிவான லத்தீனில் கம்பீரமான ஒரு அசரீரி ஒலித்தது!

“ஆம்ப்ளெக்ஸஸ் எக்ஸ்பெக்டா”

இதன் பொருள்? “பற்றிக் கொள்; காத்திரு” (CLING AND WAIT என்பதாகும்.

(ஷீர்டி சாயி அன்பர்களுக்கு அவர் கூறும் ச்ரத்தை; பொறுமை என்ற இதே அர்த்தம் தொனிக்கும் இரு வார்த்தைகள் நினைவுக்கு வருகிறதா!)

சென்ற நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரான அவரது கனவு நமது உள்ளத்தில் சிலிர்ப்பூட்டும் இறை நினைப்பை ஊட்டுகிறதல்லவா?

ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தில் அபார பற்று உடையவராக அவர் இருந்தார். 1944ஆம் ஆண்டு அவர் மனைவி ரோஸலிண்ட் மர்ரேயை விவாகரத்து செய்ய வேண்டி இருந்தது. தன் மனைவி தன்னை விட்டுப் பிரிய கிறிஸ்தவ மதத்தின் வறண்ட ஒரு கொள்கையே காரணம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். கிறிஸ்தவ மதத்தின் மீதான பிடிப்பு தளரவே புத்த மதம் அவரை ஈர்த்தது.

சமரஸ மத நோக்கு கொண்ட மகாத்மா காந்திஜியை அவர் பெரிதும் போற்றினார். “சமுதாயத்தைக் காக்க வந்த நவீன மீட்பர்” (Modern savior of Society) என்று அவர் காந்திஜியைக் கொண்டாடினார்.

அவரது விரிந்த பார்வை ஹிந்து மதத்தின் பால் திரும்பியது. ஹிந்து மதம் காட்டும் உண்மைகளை உணர்ந்து பெரிதும் அதிசயித்தார் அவர்.

உலக சரித்திரத்தை எழுதியவர் உலகின் எதிர்காலமே இனி ஹிந்து மத நோக்கில் சென்றாலேயே செழிக்கும் என்று முத்தாய்ப்பாக இறுதியில் எழுதி தனது பத்தாவது பாகத்தை முடித்தார்.

கனவில் அவர் கண்ட காட்சி எதிர்காலத்தை ஆளும் ஹிந்து மதக் காட்சி என்றால் அது சரியான காட்சி தானே! தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் உரியவன் அல்லவா!

அவர் கூறுவதை அப்படியே காண்போம்: – “The indian religions are not exclusive minded. They are ready to allow that there may be alternative   approaches to the mystery. I feel sure that in this they are right and that this catholic minded Indian religions spirit is the way of salvation for human beings of all religions in an age in which we have to learn to live as a single family if we are not to destroy ourselves.”

guinea-bissau-science-stamp-2003

“இந்திய மதங்கள் மற்ற எதையும் ஒத்துக்கொள்ளாத மனப்பான்மை கொண்டவை அல்ல. இறைமர்மத்திற்கு விடை காண இன்னும் வேறு பல அணுகுமுறைகளும் உண்டு என்பதை அவர்கள் அனுமதிக்கத் தயார்! இதில் அவர்கள் கூறுவது சரியே என்பதில் நான் உறுதி கொள்கிறேன். நம்மை நாமே அழித்துக் கொள்ளாது, ஒரே குடும்பமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஒரு யுகத்தில் வசிக்கும் எல்லா மதங்களையும் சார்ந்துள்ள மனிதர்களுக்கு இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையுள்ள இந்திய மதங்களின் உணர்வே உய்வதற்கான வழியாகும்.”

பெரிய மேதை தன் கனவில் கண்ட அகக்காட்சியில் உலகம் உய்வதற்கும் அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் அற்புதமான பரந்த மனப்பான்மை இந்து மதத்தில் உள்ளது, அதை ஏற்போம் என்று கூறுவது இன்றைய நிலையில் எவ்வளவு பொருத்தமாக உள்ளது!

********************

sleep

கனவுப் படைப்பாளிகள்

———————————————————————————————————————————————-

எண்           கண்டவர் பெயர்               படைப்பு

————————————————————————————————————————————————

01               ஐன்ஸ்டீன்                    தியரி ஆஃப் ரிலேடிவிடி

02               ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன்   1892இல் எழுதிய Across the Plains

03               ஆர்னால்ட் டாய்ன்பி          உலக சரித்திரம்

04             சாமுவேல் டெய்லர் கூல்ட்ரிட்ஜ்   குப்ளாகான் (கவிதை)

05             ராமானுஜன்                    கணிதக் கண்டுபிடிப்புகள்

06             கெக்குலே                 பென்ஸீனில் கார்பன் அணுக்கள் அமைப்பு

07        பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்            பல கணிதத் தீர்வுகள்

08        ஜேம்ஸ் காமரான்         ஹாலிவுட் படம் – தி டெர்மினேடர்

09        ரெனி டெஸ்கார்டெஸ்     அறிவியல் அணுகுமுறை மற்றும் கார்டீஸியன்

கோ ஆர்டினேட் சிஸ்டம்

10        மேரி ஷெல்லி           உலகின் முதல் அறிவியல் நாவலான

“ப்ராங்கென்ஸ்டீன்”

11        பால் மக்கார்ட்னி            பிரசித்தி பெற்ற இசைப்பாடல் “Yesterday”

12        நீல்ஸ் போர்                 அணுவின் அமைப்பு

13    ஃப்ரெடெரிக் பாண்டிங்     (நோபல் பரிசு பெற்றவர்) பெனிசிலின் இஞ்ஜெக்‌ஷன்

14    எலியாஸ் ஹோ            தையல் மெஷின்

sleep2

————————————————————————————————————————————————————

யாழ்ப்பாணம் பற்றிய சுவையான நூல்

IMG_6160 (2)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 29  September 2015

Post No: 2197

Time uploaded in London :– 8-09 am

(Thanks  for the pictures) 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் யாழ்ப்பாணம் பற்றிய, 1915 ஆம் ஆண்டு வெளியான, நூல் ஒன்று கண்டேன். 156 பக்கங்களுக்கு மேலுள்ள இந்த நூலில் பல அரிய தகவல்கள் உள்ளன. இத்தகைய நூல் இன்று இலங்கையில் கிடைக்காவிடில் இதை மீண்டும் அச்சிடுவது நல்லது. இதை எழுதியவர் முத்துத்தம்பிப் பிள்ளை. புத்தக முடிவில் அந்தக் கால வழக்கப்படி ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வாழ்த்துக் கூறியிருப்பது அக்கால மனநிலையை உண்ர முடிகிறது. விக்டோரியா ராணியாரையும், மன்னரையும் வாழ்த்துவது அக்கால கட்டங்களில் வெளியான நூல்களில் காணமுடிகிறது.

யாழ்ப்பாண நில அமைப்பு, குடியேறிய ஜாதிகள் விவரம் முதலியனவும் புத்தகத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணர் படம் ஒன்றும் நூலில் இருக்கிறது.

IMG_6161 (2)

IMG_6162

IMG_6163 (2)

IMG_6164 (2)

IMG_6165 (2) - Copy

IMG_6166 (2)

IMG_6167 (2)

IMG_6168

IMG_6169 (2)

IMG_6170 (2)

jaffna_map

Last few pages are given below:——————

IMG_6171 (2)

IMG_6172 (2)

IMG_6173 (2)

IMG_6174 (2)

IMG_6175 (2)

IMG_6177 (2)

(Jaffna map is NOT from the old book.)

–Subham–

பாரதி சொன்ன ஜோதிடம் பலிக்கும்: பாகிஸ்தான் அழியும்!

akhand baharat 2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 11 September  2015

Post No. 2147

Time uploaded in London: –   10-35 am

(Thanks to face book friends and others for the pictures)

“உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” – பாரதி

“மந்திரம் போல வேண்டுமடா சொல்லின்பம்” – பாரதி

கவிஞர்கள் வாக்கு பொய்க்காது.பாரதி வாக்குகள் பொய்த்ததில்லை. அதுவும் வேதம் படித்த பிராமணனான பாரதி வாக்கு பொய்த்ததே இல்லை. அவன் சொன்ன மூன்று விஷயங்கள் – ஆரூடங்கள் பலிக்குமா?

முதல் ஆரூடம்

சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

இரண்டாம் ஆரூடம்

எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்

ஆம், ஆம், இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க.

மூன்றாம் ஆரூடம்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

இன்னும் பல விஷயங்களை அவன் சொல்லியிருக்கிறான். அவன் இந்தியாவின் நாத்ரதாமஸ் — மறைபொருளில்  அவன் சொன்ன விஷயங்களை நாம்தான் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்!

bharathi-1

ஏன் “சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம்” என்று சொன்னான்? வந்தே மாதரம் என்ற சொல், அல்லாவைத் தவிர மற்றவர்களை வணங்குவதாகும் என்று சொல்லி, காந்திஜிக்கு எதிராக, அல்லாஹு அக்பர் என்று குரல் கொடுத்து இந்தியாவைத் துண்டாடினான் முகமது அலி ஜின்னா. இதன் காரணமாக பாகிஸ்தான் என்னும் குறைப் பிரசவ, அல்பாயுஸ் குழந்தை உருவானது. பின்னர் பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எண்ணி நாமே 1971-ல் அதை உடைத்து பங்களாதேஷை உருவாக்கினோம். “உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி” என்ற பழமொழிக்கிணங்க நமக்கு இப்போது இருபுறமும் எதிரிகள். ஆனால் பாரதி வாக்கு பொய்க்காது. பாகிஸ்தானும் பங்களாதேஷும் (வங்க தேசம்) உலக வரைபடத்திலிருந்து மறைந்து “சேதமில்லாத” ஹிந்துஸ்தானம் உருவாகும். அகண்ட பாரதம் உருவாகும். இது நித்திய சத்தியம்.

இந்தியா வல்லரசாகும்

எல்லோரும் அமர நிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்று பாரதி மும்முறை கூறுகிறான். இந்தியா வல்லரசாகும் என்பது மட்டும் இதன் பொருளல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இருந்தது போல இனி, இந்தியா எப்போதும் தலைமைப் பீடத்திலேயே இருக்கும். எல்லோரும் உலக நாடுகளின் பெயரைச் சொல் என்றால் இன்று அமெரிக்கா, ரஷ்யா ……… என்று வரிசைப் படுத்துவர். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா……. என்று துவங்கி அடுத்த நாடுகளின் பெயர்களைச் சொல்லுவர். இது மூன்றாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் நிகழும். மூன்றாம் உலகப் போர் இந்திய மண்ணில் நடைபெறும் என்று இந்திய யோகி ஒருவர் சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு ஸ்தாபனமும் இப்படியே கணித்திருப்பதை லண்டன் டைம்ஸ் வெளியிட்டிருந்தது கண்டு வியப்படைந்தேன்.

IMG_3754 (2)

இலங்கைக்குப் பாலம்

இலங்கையின் பெயரை சிங்களத் தீவு என்று பாரதி குறித்ததால், தனி நாடு வராது என்று நான் முன்னரே சொல்லி வந்தேன். அது போலவே விடுதலை இயக்கத்தினரும் வேருடன் சாய்ந்தனர். ஆனால் பாரதி சொல்லுவது புதுமையான விஷயம். இரண்டு நாட்டுக்கும் இடையே ஒரு பாலம் அமையப் போகிறது. அது சேதுவை மேடாக்கி அமைக்கப்படும் என்று. இதுவும் 50 ஆண்டுகளுக்குள் நிகழும் என்றே தோன்றுகிறது

இதுவரை சொன்னது பலித்ததா?

கவய: கின்ன பஸ்யந்தி – சாணக்ய நீதி தர்ப்பண:

கவிகள் எதைப் பார்ப்பதில்லை? கவிகள் கண்களில் தென்படாதது ஏதேனும் உளதோ?

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹான்  பஹுஞ்சே கவி =  சூரியன் புக முடியாத இடத்திலும் கவிஞன் நுழைந்து பார்க்க வல்லவன் என்று சம்ஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பழமொழிகள் உள்ளன. பாரதியும் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகிவிட்டால் அவன் சொல்வதெல்லாம் மந்திரமாகும் என்கிறான். பாரதி ஒரு சித்தன்; பாரதி ஒரு ரிஷி; பாரதி ஒரு மந்த்ர த்ருஷ்டன்!

பாரதி சொன்னதெல்லாம் பலிக்கும் எனபதற்கு உரைகல் எது?

ஆடுவோமே, பள்ளுபாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று  நம் நாடு சுதந்திரமடைவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்னரே சொல்லிவிட்டு 1921 ஆம் ஆண்டிலேயே இறந்தும் போனான். அவன் சொன்னது பலித்தது.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றான். இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்து பி.பி.சி. தமிழோசை அந்தப் பணியைச் செய்கிறது. நானும் பிரிட்டிஷாரின் அழைப்பின் பேரில் 1987 முதல் 1992 வரை பி.பி.சி. தமிழோசை மூலம் இப்படி உலகம் முழுதும் தமிழ் முழக்கம் ஒலிக்கச்செய்தேன்.

இதன் பிறகு சிங்களவர் தயவில் (அவர்களடித்த அடியில்)  இலங்கைத் தமிழினம் நார்வே முதல் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா வரை (வடதுருவம் முதல் – தென்  துருவம் வரை) பரவியது. உலக கம்ப்யூட்டர் தலைநகர் பங்களூராக மாறியதால் சென்னைத் தமிழர் உலகெங்கும் பரவி தமிழ் வளர்த்தும் வருகின்றனர். இன்று தமிழ்ப் பள்ளி, தமிழ்க் கோவில் இல்லாத நாடுகள் வெகு சிலவே. தொல்காப்பியப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் இன்று இருந்திருப்பாரானால் “வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” — என்று பாடியதை சிறிது மாற்றி “வடதுருவம் முதல் தென் துருவம் ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” என்று பாடியிருப்பார். பாரதி சொன்னது உண்மையானது!

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று கவிபாடினான் பாரதி. இன்று நம் தமிழ் – நற்றமிழ்—செம்மொழி உயர்வு பெற்றுவிட்டது. இப்படிப் பாரதி பாடிய எத்தனையோ விஷயங்கள் பலித்ததால், நான் சொன்ன மூன்றும் பலித்தே தீரும்.

1.இந்தியா வல்லரசாகும்

2.பாகிஸ்தானும் பங்களாதேஷும் அழிந்து அகண்ட பாரதம் உருவாகும்.

3.சிங்களத் தீவான இலங்கைக்கு சாலைப் பாலமும், ரயில் பாலமும் அமைக்கப்படும்.

வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!

-சுபம்-