அதிசய புத்த துறவி ஸு யுன்! – 7 (Post No.2886)

buddha like vishnu

Article written by S.NAGARAJAN

 

Date: 11 June 2016

 

Post No. 2886

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 7

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 63. யாருமே அணுக  முடியாத மலை உச்சியில் குடிசை ஒன்றை போட்டுக் கொண்டு அவரது தவ வாழ்க்கை தொடர்ந்தது.

 

ஆனால் அவரைக் காணாத சக துறவிகள் அவரது காலடித் த்டங்களை அடையாளம் கண்டு அவரது குடிசையை அடைந்து அவரை ஆச்சரியப்படுத்தினர்.

 

 

குடிசையின் சுற்றுப் புறங்களிலும், வாயிலிலும் புலி நடமாடிய காலடித் த்டங்கள் இருந்தன. ஆனால் புலிகளோ அவரை தொந்தரவு செய்யவே இல்லை.

குடிசையில் நுழைந்த அவர்கள் அவரை சமாதி நிலையிலிருந்து எழுப்பினர்.

 

 

“சாப்பிட்டீர்களா?”, என்று ஸூ யுன்னை அவர்கள் கேட்க, “சாதம் இந்நேரம் வெந்திருக்க வேண்டும்” என்றார் அவர்.

பானையைத் திறந்து பார்த்தால் அதில் புழுக்கள் தாம் நெளிந்தன.

சுமார் பதினைந்து நாட்களாவது அவர் சமாதி நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று சக துற்விகள் அநுமானித்தனர்.

பிறகு அங்கிருந்து கிளம்பி பல்வேறு இடங்களுக்கும், மலைகளுக்கும் சென்று பின்னர் எமெல் மற்றும் ஜியாஜிங் மாவட்ட்ங்களை அவர் அடைந்தார்.

 

 

இன்-சுன் என்று ஒரு கிராமம். அதையொட்டி ஊஷா நதி பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தது. ந்தியின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. காலையிலிருந்து மதியம் வரை அவர் காத்திருந்தார். படகும் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கினர்.

கூட இருந்த மாஸ்டர் ஜியா – ஹென்னை முதலில் படகில் ஏறுமாறு கூறிய அவர் தன் பயண மூட்டையையும் அவரிடம் தந்தார்

 

 

படகில் ஏறப் போகும் தருணம். நதியின் வேகம் அதிகரிக்க படகு ஆடியது. கரையுடன் இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்தது. ஆனால் நல்ல வேளையாக ப்டகின் விளிம்பைப் பிடித்துக் கொண்டார் ஸூ யுன்.

 

படகு கட்டவிழ்ந்து வேகமாக நதிப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

 

thanga buddha, SL

படகில் ஏறவோ வழியில்லை. படகோட்டி படகைச் செலுத்தலானான.

மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் படகு கரையில் ஒதுங்கியது.  ஸு யுன்னை அனைவரும் நதியிலிருந்து தூக்கினர்.

கால் பாதங்களிலெல்லாம் பாறைகளின் மீது மோதிய்தால் ஏற்பட்ட வெட்டுக் காயங்கள். ஆடை அல்ங்கோலமாகக் கிழிந்து கிடந்தது.

 

 

மழை வேறு சோவென்று பெய்து கொண்டிருந்தது. தாங்க முடியாத குளிர் வேறு.

 

ஷாஜிங் சுங்கச் சாவடிக்கு அருகில் இருந்த ஒரு சத்திரத்திற்குச் சென்று அவர்கள் தங்குவதற்கு இடம் கேட்டனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அருகிலிருந்த ஒரு கோவிலில் தங்க அனுமதி கேட்டனர். ஆனால் கோவிலில் இருந்த துறவியோ அவர்களை உள்ளே தங்கக் கூடாது என்று சொல்லி வெளியில் இருந்த ஒரு மேடையில் இருக்குமாறு கூறி விட்டார்.

 

 

சிறிது பணத்தைக் கொடுத்து. “வைக்கோலையாவது தாருங்கள். அதை எரித்து குளிரைப் போக்கிக் கொள்கிறோம்”..என்று வேண்டினார் ஸு யுன். இரண்டு  கட்டு வைக்கோல் வந்து சேர்ந்தது. சொத சொதவென்று ஈரத்தில் நனைந்தவை.

போதாக்குறைக்கு அதை மூட்டிய புகை வேறு சேர்ந்தது.

அனைத்துத் துன்பங்களையும் ஸு யுன்னும் அவரது நண்பரும் பொறுமையுடன் சகித்துக் கொண்டனர்.

 

 

சிறிது பழங்களை உண்டு தங்கள் யாத்திரையைத் தொடங்கினர். பல்வேறு இடங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

கடைசியில் அவர்கள் அவலோகிதேஸ்வரரின் புனித ஆலயத்தை வந்து அடைந்தனர்.

 

பிறகு காக்-ஃபுட் மலையில் உள்ள மரத்தடியை அடைந்தனர்.

முன்பு ஒரு  முறை கேட்ட அதே மணி ஒலி இப்போது இரண்டாவது முறையாக கல் கதவின் பின்னாலிலிருந்து அதிசயமாக ஒலித்தது!

 

மறு நாள் ஜிங்-டிங் என்ற மலையின் உச்சியில் அவர்கள் ஏறினர். அங்கு இருந்த புனித ஆலயம் சிதிலமாகி சிதைந்து கிடந்ததைப் பார்த்து அவர் வருந்தினார்.

 

 

அதைப் புனருத்தாரணம் செய்ய அவர் விழைந்தார். ஆனால் ஆலயங்கள் தனியார் பராமரிப்பில் இருந்ததால் அவரை புனருத்தாரணம் செய்ய ஆலயத்தின் உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லை.

 

பிறகு கீழே இறங்கி நடைப் பயணம் மேற்கொண்டு குந்மிங் என்ற இடத்திற்கு ஸு யுன் வந்து சேர அங்கு இருந்த ‘தர்ம- மேற்காப்பாளர்’ அவரைத் தம்முடன் இருக்குமாறு வேண்டினார்.

புதிய ஆண்டு வரப் போகிறது. ஸு யுன் தனிமையில் தன் தவத்தை மீளவும் தொடர்ந்தார்.

 

-தொடரும்

பூமியைத் தாங்கி நிற்பது எது? (Post No.2884)

atlas

Article written by London swaminathan

 

Date: 10 June 2016

 

Post No. 2884

 

Time uploaded in London :– 14-12

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

750px-Solar_sys

அறிவியல் முறையில் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் ஈர்ப்புவிசை என்று சொல்லவேண்டும். சூரியனின் ஈர்ப்புவிசையும் பூமி உள்ளிட்ட ஏனைய கிரகங்களின் ஈர்ப்புவிசையும் ஒன்றயொன்று இழுக்க அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.அதில் பூமியும் ஒன்று.

 

பூமியைத் தாங்கி நிறுத்துவது எது? என்று கேட்டால் இந்துக்கள், கிரேக்கர்கள் சீனர்கள் எல்லோரும் வெவ்வேறு பதில் சொல்லுவார்கள்.

கிரேக்கர்கள் அட்லஸ் என்ற அரக்கனே வானத்தையும் பூமியையும் தூக்கி நிறுத்திகிறான் என்று சொல்லுவர். இது பழைய புராணக்கதை. அட்லாண்டிஸ் என்ற தீவின் மன்னனான ப்ரொமேதயஸின் சகோதரனான அட்லஸ், ஒரு போரில் ஏற்பட்ட தோல்விக்காக வானத்தையும் பூமியையும் சுமக்கும் தண்டனை பெற்றான்.

 

சீனர்கள் ஒரு கடல் ஆமையின் முதுகில் இந்த பூமி நிற்பதாகவும், இன்னும் சில கதைகளில் பூமியின் நான்கு திசைகளில் உள்ள மரங்களின் மீது இந்த ‘சதுர’ பூமி நிற்பதாகவும் எழுதியுள்ளனர்.

myth-1-21

இந்து மத புராணங்களில் ஆதி சேஷன் என்ற பாம்புதான் உலகைத் தாங்கி நிற்கிறது என்பர். அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகைத் தாங்கி நிற்பதாகவும் பகர்வர்.

 

ஆனால் ஒரு அருமையான பாடல் ஏழுவிதமான குணங்களும் குணவான்களும் இந்த பூமியைத் தாங்கி நிற்கின்றனர் என்று போற்றும்:-

 

கோபிர்விப்ரைஸ்ச வேதைஸ்ச சதிபி: சத்யவாதிபி:

அலுப்தைர்தானசீலைஸ்ச சப்தபிர்தார்யதே மஹீ

பொருள்:–

பசுக்கள், அந்தணர்கள், வேதங்கள், கற்புள்ள பெண்கள்,உண்மை விளம்பிகள், பேராசையற்றோர், கொடையாளிகள் (தான சீலர்கள்) ஆகிய ஏழுமே உலகத்தை (மஹீ) தங்கி நிற்கிறது.

 

பசும்பால் இல்லாவிடில் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்; அந்தணர்கள் என்ற சொல்லுக்குத் தற்காலத்தில் அறிஞர்கள் என்று பொருள் கொள்ளலாம். வேதங்கள் எப்போதுமே வானத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”- என்பது யாவரும் அறிந்ததே.

lead_deskew=0 checksum=2e0f339cc42d8ab0fcbb3871de675d79

புறநானூற்றுப் பாடல்182

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் இதே கருத்தைச் சொல்கிறான்:–

இந்திரனுக்குரிய அமுதமே கிடைத்தாலும் தாமே சாப்பிடமாட்டார்கள்; கோபமற்றவர்கள்; எல்லோரும் அஞ்சும் தீய செயலுக்குத் தாமும் பயப்படுவார்கள்; புகழுக்குரிய செயல் என்றால் அதைச் செய்ய உயிரையே தருவார்கள்; பழிவரும் தீய செயலானால், உலகத்தையே தந்தாலும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு சோம்பேறித்தனமே கிடையாது. சுயநலமற்றவர். பொதுநலப் பணி செய்யும் உயர்ந்தோர். இவர்களே பெரியோர்கள். இவர்களால்தான் இந்த உலகமே இன்னும் இருக்கிறது.

 

உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்

தமியர் உண்டரும் இலரே; முனிவிலர்;

துஞ்சலுமிலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,

புகழ் எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன் தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே

–புறம் 182

–சுபம்–

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்! (Post No.2883)

indigo

Article written by S.NAGARAJAN

 

Date: 10 June 2016

 

Post No. 2883

 

Time uploaded in London :–  8-01 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

10-6-16  பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

ச.நாகராஜன்

 

மறு ஜென்மம் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். குழந்தைகள் சில சமயம் தங்கள் முற்பிறப்புகளின் விவரங்களைக் கூறுகின்றன. சரி பார்க்கப்படும் போது அவை அனைத்தும் சரியாக இருக்கின்றன. முந்தைய ஜென்மம் அல்லாது அவைகளுக்கு அவ்வளவு விவரங்கள் தெரிய வாய்ப்பே இல்லை!” – அமெரிக்க விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சகன்          

 

மறு ஜென்ம்ம் பற்றிய ஆராய்ச்சியில் இன்று உலகில் தலையாய ஆய்வாளராக இருப்பவர் வ்ர்ஜீனியா பல்கலைக் கழகத்தைச்  (அமெரிக்கா) சேர்ந்த உளவியல் நிபுணர் ஜிம் டக்கர் (Jim Tucker)என்பவர்.  எக்ஸ்ப்ளோர் (Explore) என்ற பிரபல பத்திரிகையில்  2008ஆம் ஆண்டு  பல மறு ஜென்ம கேஸ்களைப் பற்றிய தன் ஆய்வுக் குறிப்புகளை அவர் வெளியிட்டார்.

marss

 

அதில் நூறு சதவிகித விவரங்களும் சரியாக இருப்பது குழந்தைகள் தங்கள் முந்தைய ஜென்ம விவரங்களை வெளியிடும் போது தான் என்று அவர் குறிப்பிட்டார் பிரமாதமான விவரங்களைத் துல்லியமாக குழந்தைகள் தருவது சராசரியாக அவர்கள் மூன்று வயதாக (35 மாதங்கள்) இருக்கும் போது தான்

அவர்கள் கூறும் செய்திகளை யாராலும் சுலபமாக அவர்களுக்குச் சொல்லித் தர முடியாது.

 

 

தங்களது முந்தைய குடும்பம், நாடு, நகரம், விலாசம், தொழில், நண்பர்கள் உள்ளிட்ட விவரங்களைச் சரியாகத் தருவது லேசுப்பட்ட காரியமா என்ன ? அதுவும் 35 மாத குழ்ந்தையாக இருக்கும் போது!

 

மறு ஜென்மம் இல்லையென்றால் இன்னொரு சாத்தியக்கூறு இப்போதுள்ள மூன்று பரிமாணங்கள் அல்லாமல் இன்னொரு பரிமாணத்தில் அவர்கள் பயணம் செய்து இன்னொரு நிலையில் ஒரு வாழ்க்கை அனுபவத்தை உணர்வது தான்!

 

ஒரு ஆன்மா அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் பல்வேறு ஜென்மங்களை எடுத்து அனைத்தையும் அனுபவிக்க வேண்டியதாக இருக்கலாம்.

 

எல்லா ஆன்மாக்களும் ஒரே ஒரு இடத்திலிருந்து தங்கள் பயணங்களைத் துவங்குகிறார்களோ, என்னவோ!

 

போரிஸ்கா என்ற ஒரு சிறு பையன். ரஷியாவைச் சேர்ந்தவன். அவன் தாயார் அவன் நான்கு மாதக் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நன்கு பேச ஆரம்பித்து விட்டான் என்கிறார்! வார்த்தைகளைத் தெளிவாக அவனால் உச்சரிக்க முடிகிறது.  எட்டு  மாதமான போது அவன் முழு வாக்கியங்களைப் பேச ஆரம்பித்து விட்டான்! இரண்டு வயதான போது அவன் படிக்கவும் ஆரம்பித்து விட்டான்!

 

 

உள்ளூரில் பிரபலமான குழந்தையாக அவன் ஆனதில் வியப்பில்லை. அவனது அறிவு அனைவரையும் அசத்தியது.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் பெயர்களைச் சொல்வதிலிருந்து பிரபஞ்சத்தில் உள்ள் காலக்ஸிகள், நட்சத்திரங்கள் என்று வானியலில் அவனுக்குத் தெரியாத விஷயமே இல்லை!

 

 

அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பேரறிவு வருவதற்கான வாய்ப்பே இல்லை!

 

 

அவனுக்குத் தன் பழைய ஜென்ம ஞாபகமும் உண்டு. முந்தைய ஜென்மங்களில் ஒன்றில் அவன் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்திருக்கிறான் – பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்!

 

அவனைப் பேட்டி காண பலரும் வந்தனர்.

அவர்களிடம் அவன் சகஜமாகப் பேசினான். ஏராளமான விவரங்களைப் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போனான்.

 

 

பேட்டி கண்டோர் திகைத்துப் போனார்கள்!

“செவ்வாய் கிரகத்தில் உள்ளவர்கள் பலவேறு காலக்ஸிக்களுக்கும் பல்வேறு கிரகங்களுக்கும் பயணம் செய்வார்கள். அங்கு ஆகாய விமானம் போல விண் கலங்கள் உண்டு. அந்தக் கலங்கள் ப்ளாஸ்மா சகதியையும் ஐயான் சக்தியையும் உபயோகித்துப் பறந்தன. பெட்ரோல் போன்றவற்றை உபயோகித்தால் சீக்கிரமே அவை தீர்ந்து விடும். அந்தக் கலங்களில் பொருத்தப்பட்டிருந்த எஞ்ஜின்கள் மிக மிக சக்தி வாய்ந்தவை!”

 

ஒரு சிறு குழந்தைக்கு எந்த விதத்திலும் யார் சொல்லித் தந்தாலும் சொல்ல முடியாத விவரங்களை அவன் கூறும் போது திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

அவன் டெலிபோர்டேஷன் பற்றியும் பேசினான்.

 

“ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தில் தோன்றுவது என்பது சுலபமான விஷயம் தான். அப்படி ஒரு மாறுதலை போர்டல் (PORTAL)  மூலம் செய்ய முடியும். போர்டலின் போது நேரம் மெதுவாக இயங்கும் பின்னர் வெகு வேகமாக ஓடும். எப்படி என்பதை விளக்கவே முடியாது.

 

சில நிமிடங்களில் வெளியில் உள்ள இன்னொரு இடத்திற்குச் சென்று விடலாம்!

 

எல்லா எஞ்ஜின்களும் ஒரே மாதிரி இயக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. ப்ளாஸ்மா எஞ்ஜின்கள் சூரிய மண்டலத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.

 

ஒவ்வொரு கிரகத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு விதமாகத் தங்கள் விண்கலங்களை இயக்குகிறார்கள். உதாரணமாக ப்ளாஸ்மாவை எல்லோரும் பயன்படுத்துவதில்லை. சில கிரகங்களில் எனர்ஜி எஞ்ஜின்களைப் பயன்படுத்துகின்றனர்!”

 

இப்படி அந்த சிறுவன் விண்கல விவரங்களைப் பற்றி பிட்டுப் பிட்டு வைத்தான்.

 

செவ்வாய் கிரக வாசிகள் மனிதர்களைப் போல ஆக்ஸிஜனை சுவாசிப்பதில்லையாம். அவர்கள் கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்கிறார்களாம். கிரகங்களிடையே ஒத்துழைப்பு போன்ற பெரிய விஷயங்களையும் மூன்று வயதுச் சிறுவன் பேசும் போது விஞ்ஞானிகள் வியக்கின்றனர்; திகைக்கின்றனர்.

 

இதற்கிடையில் நாஸாவைச் சேர்ந்த ப்ளானடரி ஸயின்ஸஸ் டைரக்டரான ஜேம்ஸ் க்ரீன் (James Green, NASA Director of Planetary Sciences)  இதற்கு முன்னர் நாம் நினைத்தது போல செவ்வாய் கிரகம் வறண்ட கிரகம் அல்ல; அங்கு நீர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார்.

 

நாஸா ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் பல அதிசய விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அங்கு ஆறுகள் ஜீவ நதி போல பெருகி வரும் நீருடன் ஓடிக் கொண்டிருந்தனவாம்.

 

வாழ்க்கை வாழ்வதற்கான சகல வாய்ப்புகளும் செவ்வாயில் உண்டாம்.

 

ஜார்ஜியா  இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த கிரகவியல் விஞ்ஞானி ஜேண்ட்ரா ஓஜா (Lujendra Ojha , Planetary Scientist of Georgia Institute of Technology)  செவ்வாய் கிரகம் பற்றி எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து அங்கு நீர் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

 

ஆக நாஸா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளனர்.

இந்த சமயத்தில் ‘செவ்வாய் பையன்’ போரிஸ்காவின் பேட்டி பரபரப்பான ஒன்றாக அமைகிறது!

 

மறு ஜென்மம் பற்றி பூமியில் பல இடங்களில் வாழ்ந்ததாக குழந்தைகள் குறிப்பிட்ட கேஸ்கள் பல உண்டு. அவற்றின் மீது ஆய்வு மேற்கொண்டு அவை உண்மை தான் என்பதை விஞ்ஞானிகள் கண்ட விவரமும் உண்டு.

ஆனால் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் விவரம் கொண்ட கேஸ் முதல் முதலாக இது தான்! இதை யார் தான் சரி பார்க்க முடியும்!

 

விஞ்ஞானிகளைத் திகைக்க வைக்கும் சிறுவன் போரிஸ்கா புதிய பரிமாணம் கொண்ட ஒரு புத்தறிவுக்கு வழி வகுக்கும் பாலகனா?!

 

descart1

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரான்ஸை சேர்ந்த தத்துவ ஞானியும் கணித மேதையும் விஞ்ஞானியுமான டெஸ்கார்டஸ் ( தோற்றம் 31-3-1596 மறைவு 11-2-1650) இன்று ரொபாட் (Robot) என்று பிரபலமடைந்திருக்கும் தானியங்கி இயந்திரங்களுக்கான முதல் வழிகாட்டியுமாவார்.

அவர் இளவயதில் ஐந்தே வயதில் மறைந்த தனது பெண் குழந்தை பிரான்ஸின் போலவே ஒரு தானியங்கி பொம்மை ரொபாட்டை அமைத்தார்.

 

 

அவருக்கு 1649ஆம் ஆண்டில் ஸ்வீடன் மஹாராணி கிறிஸ்டினாவிடமிருந்து அழைப்பு வரவே கப்பலில் தன் பொம்மையையும் எடுத்துச் சென்றார். கப்பல் காப்டனிடம் தன் குழந்தையை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கண்டிப்பான் உத்தர்வைப் போட்டிருந்தார் அவர். கப்பலில் அவர் மேல் தளத்தில் இருக்கும் போது பலத்த புயல் ஒன்று வரவே காப்டன் ஓடோடி வந்து அவரது மகளைக் காப்பாற்ற விழைந்தார். ஆனால் அவர் கண்டது ஒரு பெட்டியைத் தான். பெட்டியைத் திறந்தவுடன் ‘உயிருள்ள பொம்மை’ ஒன்றைக் கண்டார்.

 

இளம் பெண் கண்ணை அகல விரிப்பது போல பொம்மை தன் கண்களள அகல விரித்துப் பார்த்தது. அரண்டு போன காப்டன் அது பேயோ பிசாசோ என்று எண்ணி அதை, கப்பலிலிருந்து  கடலில் தூக்கி எறிந்தார். நிஜமான தன் ஐந்து வயது மகளை இழந்த டெஸ்கார்டஸ் இப்போது தனது இயந்திர மகளையும் இழந்தார். மிகவும் வருத்தமடைந்த அவர் அதிலிருந்து மீளவே இல்லை ஸ்வீடனுக்கு வந்த அவர் நியுமோனியாவினால் பாதிக்கப்பட்டு  .இறந்தார்.

முதல் ரொபாட்டை வடிவமைத்த பெருமை டெஸ்கார்டஸையே சேரும்!.

automation

–சுபம்–

 

For a Bull Five Yards, For a Horse 10 Yards, For a bad person …………………. (Post No. 2882)

beauty bull

Article written by London swaminathan

 

Date: 9 June 2016

 

Post No. 2882

 

Time uploaded in London :– 16-36

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

There are two verses in Sanskrit and Tamil, almost identical that deals with bad people. The way the poets emphasize their point is very impressive.

 

An anonymous verse in the Tamil ‘Neethi Venba’ says:

If you see a bull stay at least five yards away from it (you will be safe); if it is a horse stay ten yards away from it. If you see an elephant (mad elephant), stay away by 1000 yards. If it is a bad person stay away from his sight.

 

A Sanskrit poet differs slightly, who says:-

If you see a vehicle, stand at a distance of five yards; 10 yards for a horse, 1000 yards for an elephant; and for a bad person, go as far as possible.

Saktam pancahasteshu dasahasteshu vaajinam

Gajam hasta sahasrena dushtam durena varjayet

 

Another verse beautifully compres a poisonous snake with a bad person:-

Hindus believe that a cobra has a ruby like red stone in its hood with which it looks for food in the night time (scientific explanation is that snakes use infrared rays to find its prey).

Durjanah parihartavyo vidyaalankrutopi san

Maninaa bushita sarpah kimasau na bayankarah

3 snakes

Even if a bad person is a leaned one, keep away from him; maintain a distance; even the cobra that has a crest jewel is considered a terrible creature!

–subham–

 

கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு…………… (Post No.2881)

beauty bull

Article written by London swaminathan

 

Date: 9 June 2016

 

Post No. 2881

 

Time uploaded in London :– 8-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன.விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

 

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

India Rampaging Elephant

இதே விஷயம் சம்ஸ்கிருதத்திலும் அழகாக உள்ளது:-

சகடம் பஞ்சஹஸ்தேஷு தசஹஸ்தேஷு வாஜினம்

கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேத்

வண்டிகள் (சகடம்) நின்றால் அதற்கு அருகில் நிற்காதீர்கள். அது திடீரென நகரக்கூடும். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைகள் (வாஜினம்) இருந்தால் முனால் பாய்ந்து கடிக்கவும் செய்யும்; பின் காலால் உதையவும் செய்யும்; ஆகையால் பத்து முழம் தள்ளி நில்லுங்கள். யானைக்கு (கஜம்) ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். துஷ்டர்களைக் கண்டாலோ வெகு தொலைவில் போய் விடுங்கள்.

 

அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதேவாக்குண்டாம், அவ்வையார்.

 

கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே. ஏன்?

1.நேரம் வீண், 2.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. யார் உங்களுக்கு குழி பறிப்பார்கள் என்பதும் தெரியாது என்று எச்சரிக்கிறார் அவ்வையார்.

3 snakes

இறுதியாக மேலும் ஒரு சம்ஸ்கிருதப் பாடல்:–

துர்ஜன: பரிஹர்தவ்யோ வித்யா அலங்க்ருதோ அபி சன்

மணினா பூஷித ஸர்ப: கிம் அசௌ ந பயங்கர:

படித்தவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தால், அவர்களை விட்டுவிடவேண்டும். நாகரத்தின மணி வைத்திருந்தாலும் பாம்பு என்பது பயங்கரமானது இல்லையா!

படித்தும் கெட்டவர்கள் = மாணிக்கம் தரித்த விஷப் பாம்பு

அழகான உவமை!

 

வாழ்க தமிழ்; வளர்க சம்ஸ்கிருதம்.

–சுபம்–

 

 

உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் ! – 2 (Post No.2880)

Yoga_vasistha_of_valmiki_medium

Article written by S.NAGARAJAN

 

Date: 9 June 2016

 

Post No. 2880

 

Time uploaded in London :–  5-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

 

 

யோக வாசிஷ்டத்தில் சிக்கலான கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் உள்ளன என்பதை எப்படி நம்புவது என்று ஒருவர் கேள்வி கேட்டால் அது நியாயமான கேள்வி தான்.

ஏனெனில் அதீதமாகப் புகழ்வது என்ற வரிசையில் இந்த மொழி உரைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது சொல்பவரின் கடமை அல்லவா?

 

 

இதற்கு இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம் – ஒரு பானை சோறுக்கு ஒரு பதம் என்பது போல.

 

முதலாவது யோகவாசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ள அபூர்வமான விஷயங்கள்.

 

இவற்றை அறிவியல் கண்டுபிடித்து நிரூபிக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்!

 

இரண்டாவது யோக வாசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களை உலகின்  மாபெரும் மேதைகள் என்று கருதப்படுபவர்கள் அப்படியே எடுத்துரைப்பது தான்.

இப்படிப்பட்ட மேதைகள் தனித்தனியே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சொற்கள் வெவ்வேறு நாட்டில் வலியுறுத்திக் கூறியிருப்பதை ஒரே நூலில் அழகாக, கோர்வையாக படிக்க முடிகிறது என்றால் அந்த நூலின் மகிமையை வேறு எப்படிச் சொல்ல முடியும்.

 

 Six Major Sections of Yoga Vasis

அது சந்தேகமில்லாமல் அதிசய நூல் தானே!

எந்தெந்த மேதைகள் எந்தெந்த கருத்துக்களைக் கூறியுள்ளார் என்று ஆராயப் புகுந்தால் அது ஒரு பெரிய புத்தகமாக மிளிரும்.

 

 

அப்படிப்பட்ட அரிய ஆராய்ச்சியை ஒருவர் செய்து புத்தகமாகவும் வெளியிட்டு விட்டார் என்பது அரிய ஒரு சுவையான செய்தி தானே!

 

 

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய திரு பி.எல். ஆத்ரேயா யோகவாசிஷ்டா அண்ட் மாடர்ன் தாட் (Yoga Vasistha and Modern Thougtu by B.L.Atreya) என்ற அரிய ஒரு நூலை எழுதியுள்ளார். 1934ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்த நூலைப் பாராட்டாதோர் கிடையாது; மேற்கோள் காட்டாத அறிஞர்கள் இல்லை.

 

 

இந்த நூலில் சுமார் 158 பேரறிஞர்களின் கருத்துக்களை யோக வாசிஷ்டக் கருத்துக்களுடன் பி. எல் ஆத்ரேயா ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

 

 

ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸண்ட், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான், பெர்சி கால்ஸன், வீட்லி கேரிங்டன்,எட்வர்ட் கார்பெண்டர், ஜாகுவஸ் கார்னோவா, ஈ.எஸ்.காங்க்ளின்,எஃப் .சி. கான்ஸ்டபிள்,   ஜெரால்டின் காஸ்டர், டேம்பியர் வேதம், சார்லஸ் ஜில்பெர்ட்  டேவின், ஷா டெஸ்மாண்ட், சர் ஆர்தர் எடிங்டன், எமர்ஸன்,எட்வ்ர்ட் டக்ளஸ் ஃபாசெட், ஜே.ஜி.     ஃபிட்ஸே, ஃபின்லே, சிக்மண்ட் ஃப்ராய்ட், ஹிக்கின்ஸன் ஆலிவர் லாட்ஜ். சி.ஈ.எம் ஜோட், ஆரிஸான் ஸ்வெட் மார்டன்,டபிள்யூ, மக்டொனால்ட் என்று இப்படி அறிஞர்களின் பட்டியல் நீளுகிறது.

 

 

43 அரிய தலைப்புகளில் ஆத்ரேயா, யோக வாசிஷ்ட கருத்துக்களையும் இந்த அறிஞர்களின் கருத்துக்களையும் ஒப்பிடுகிறார். யோக வாசிஷ்டம் கூறும் சில கருத்துக்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இவற்றை விரிவாக இந்த நூலில் பார்க்கலாம்.

 

 

இந்த நூலை ஒரு தடவை படித்தாலும் போதும், யோக வாசிஷ்டம்  மிக அதிசயமான நூல் தான் என்று யார் வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வர்.

 

 

சரி, யோக வாசிஷ்டம் கிடைக்குமா என்ற கேள்வி கேட்போருக்கு பதில் இது தான்:

 

யோக வாசிஷ்டத்தை இலவசமாகப் படிக்கலாம்; பெறலாம்.

அடுத்த கட்டுரையில் எங்கு பெறலாம எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம்!

 

                                                -தொடரும்

 

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878)

earth-atmosphere-layers

Research Article written  by London swaminathan

 

Date: 8 June 2016

 

Post No. 2878

 

Time uploaded in London :–  17-45

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

உலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் மேகத்துக்கு 15 சம்ஸ்கிருத சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழு வகை அதிசய மழைகளையும் சம்ஸ்கிருத நூல்கள் உரைக்கின்றன. காளிதாசனின் சாகுந்தல நாடகத்துக்கு உரை எழுதியோர் ஏழு வகை ஆகாய மார்கங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். இவைகளில் 75 விழுக்காட்டுக்கு விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. மீதியை இனித்தான் விஞ்ஞானம் கண்டுபிடிக்குமோ!

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

cloud_types

இந்த ஏழு வகை மழைகளில் நாம் எல்லோரும் அறிந்தது நீரைப் பொழியும் மழை.

மற்ற மழைகளைப் பற்றி பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் படித்து வியக்கிறோம். சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தங்க மழை:

ஆதி சங்கரர் சிறு வயதில் ஒரு வீட்டு வாயிலில் நின்று “பவதி பிக்ஷாம் தேஹி” (தாயே! பிச்சை போடுங்கள்) என்று சொன்னார். அந்த வீட்டுப் பெண்மணி, பரம ஏழை. ஓடிப்போய் சமையல் அறையில் பார்த்தாள்; ஒன்றும் கிடைக்கவில்லை. பாத்திரங்களை உருட்டினாள். ஒரு ஊறுகாய் ஜாடியின் கீழே ஒரே ஒரு நெல்லிக்காய் ஒட்டிக்கொண்டிருந்தது. ஓடோடி வந்து அதைப் பிச்சைப் பாத்திரத்தில் போட்டார். சங்கரனின் கண்களில் இருந்து கண்ணீர் ‘பொல பொல’ என்று உருண்டோடியது. பரம கருணை மிக்க தாயே! உனது நல்லாட்சியில் இப்படி ஒரு வறுமையா? என்று அம்பாளை வேண்டி ஒரு துதி பாடினார். தங்க நெல்லிக்காய்கள் மழையாகப் பொழிந்தது. அந்தத் துதியின் பெயர், ‘தங்க மழை போற்றி’ (கனகதாரா தோத்திரம்).

பூ மழை

தேவர்கள் சந்தோஷப் படும்போதெல்லாம் பூ மாரி பெய்ததாக நமது புராணங்கள் பேசுகின்றன. அது உண்மையோ இல்லையோ நாம் அரசியல் தலைவர்கள் மீது பூ மாரி பெய்யும் பல படங்கள் அவ்வப்போது வெளி வருகின்றன. இதுபோல உற்சவ காலங்களில் கடவுள் சிலை மீது பூ மாரி பெய்கிறோம். திருமணத்தில் ஆசீர்வாத காலத்தில் மணமக்கள் மீது பூ மழை பெய்கிறோம். பிராமணர்கள் ‘யோபாம் புஷ்பம் வேதா’ – என்ற நீண்ட மந்திரம் சொல்லி இறைவனுக்கு பூமாரி பெய்வதுமுண்டு.

sandstorm

 

மண்மழை

உறையூரும், திருமலைராயன் பட்டிணமும் எப்படி மண்மழையில் அழிந்தது என்று முன்னரே எழுதிவிட்டேன். கீழ்கண்ட எனது கட்டுரையைப் படிக்கவும்.

மணலில் புதைந்த இரண்டு தமிழ் நகரங்கள் ( 7 டிசம்பர் 2013)

Sand Storms destroyed Two Tamil Towns! (7-12-2013)

 

பாலைவனத்தில் அவ்வப்பொழுது மணற் புயல் ஏற்பட்டு விமான சர்வீஸ் ரத்தாவது வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிப்போருக்குத் தெரியும். சஹாரா பாலவன மண், ஐரோப்பா வரை வந்து வானிலை மாற்றங்களை உண்டாக்குவதையும் பத்திரிக்கைகளில் காணலாம்.

கல் மழை

சில நேரங்களில் ஐஸ்கட்டி மழை பெய்கையில் அதை ஆலங்கட்டி மழை என்போம். பெரிய பெரிய கூழாங்கற்கள் அளவுக்கு பனிக்கட்டி விழும். ஆனால் சில நேரங்களில் காற்றின் சுழற்சி காரணாமாக மேகங்கள் நீர் நிலைகளிலுள்ள மீன்கள், தவளைகள், கற்களுடன் மழை பெய்த செய்திகளையும் நாளேடுகளில் படிக்கிறோம்.

 

எரிமலை அருகில் வசிப்போருக்கு கல் மழை மிகவும் சர்வ சாதாரணம். இது தவிர பூமி தனது வட்டப் பாதையில் செல்கையில் ஆண்டுதோறும், சில குட்டி கிரகங்கள், விண்கற்கள் ‘பெல்ட்’டைக் கடக்கையில் எரிகற்கள் மழை பெய்வதுண்டு. அவைகளில் பெரும்பாலானவை காற்று மண்டலத்தில் எரிந்து விடும்.

 

Tungurahua-volcano-

தீ மழை

சுனாமி வருகையிலும், எரிமலை பொங்குகையிலும் தீ மழை பொழிகிறது. சுனாமி பேரலைகள் மிகவும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், கடலில் தீ தோன்றும் அதிசயச் செய்திகளுமுண்டு.

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

chart-cloud-types

அறிவியல் சிந்தனை:

விஷ்ணு புராணத்திலும் இக்கருத்துள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மில்கி வே, சப்தரிஷி மண்டலம் வரை சிந்தித்துள்ளனர் என்று தெரிகிறது. எல்லாம் ஓவியத்தில் வரைந்த படங்கள் போலில்லாமல் இயங்குவதையும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லும் வாயுவை நாம் காற்று என்று மொழிபெயர்க்காமல்  பலவித கதிர்கள், அலைகள், ஒலிகள் என்று பொருள் கொள்ள வேண்டும். முதலில் இப்படி மேகங்களையும் காற்று மண்டலத்தையும் பிரித்த முதல் விஞ்ஞானிகள் இந்துக்களே. இப்போது நாம் மேகங்களை வேறுவிதமாகப் பிரிப்ப்தை வானிலை இயல் நூல்களில் காண்கிறோம். அறிவியல் சிந்தனை இருந்தால்தான் இப்படிப் பலவகை பிரிவுகளைச் செய்திருக்க முடியும்.

அமரகோசத்தில் 15 பெயர்கள்

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமரத்தில் கீழ்கண்ட பெயர்கள் மேகம் என்ற பொருளில் வழங்கப் படுவதாக அமர சிம்மன் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்:–

அப்ரம், மேக:, வாரிவாஹ:, ஸ்தனயுத்னு:,

பலாஹக:, தாராதர:, ஜலதர:, தடித்வான், வாரித:, அம்புப்ருத், கண:, ஜீமூத:, முதிர:, ஜலமுக், தூமயோணி:.

மேகக் கூட்டத்துக்கு மேக மாலா, காதம்பினி என்று பெயர்.

 

தமிழில்:– கொண்டல், கொண்மூ, புயல், கார், மாரி, முகில், மங்குல், விண்டு, ஊரி, மாசு, மஞ்சு, எழில், செல், மை என்ற சொற்கள் மேகத்துக்கு உண்டு.

சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தில், ஞாயிறு, திங்கள் ஆகியவற்றுடன் மழைக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வள்ளுவர் வான் சிறப்பு என்று பத்து குறள் பாடி கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வைத்திருப்பதும் மேகத்தின், மழையின் சிறப்பை விளக்கும்.

காளிதாசனும் தமிழ் புலவர்களும் கடல், ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின் நீர்தான் ஆவியாகி, மேகமாகி, மழையாகப் பொழிகிறது என்று தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். ஓரிடத்தில் அல்லது ஈரிடத்தில் மட்டுமல்ல. பல நூறு இடங்களில் பாடிவைத்துள்ளனர்.அவர்கள் முதல் முதல் தோன்றிய வானிலை இயல்துறை நிபுணர்கள் என்றால் மிகையாகாது!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876)

amazing 1

Translated by London swaminathan

 

Date: 7 June 2016

 

Post No. 2876

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், வியாச பகவான், கண்ண பிரான், திருவள்ளுவர், உலக மஹா கவிஞன் காளிதாசன், மற்றொரு சம்ஸ்கிருதப் புலவன் ஆகிய பலர் உலக அதிசயம் எது? அத்புதம் எது? ஆச்சரியம் எது? என்ற கேள்விக்கு வெவ்வேறு விதமான, சுவையான பதில்களைத் தந்துள்ளனர்!

 narayana

1.நாராயணன் என்ற சப்தம் இருக்கிறது. வாயில் சொல் இருக்கிறது. எளிமையாக வசப்படுத்தலாம். அப்படியும் கோரமான நரகத்தில் மனிதர்கள் விழுகிறார்களே!! இதுவே அத்புதம்!!!

நாராயணேதி சப்தோஸ்தி வாக் அஸ்தி வசவர்தினீ

ததாபி நரகே கோரே பதந்தீதி ஏதத் அத்புதம்

–ஒரு சம்ஸ்கிருதக் கவிஞன்

 

மூன்றாண்டுகளுக்கு முன் நான் எழுதி, இங்கே வெளியிட்ட கட்டுரை இதோ:–

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? ( 10 நவம்பர் 2013)

 

2.கிருஷ்ணா உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

“ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம் ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய:
ஆச்சர்யவச்சைன-மன்ய: ச்ருணோதி ச் ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித்
(பகவத் கீதை 2-29)

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித்- யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கச்சின் -மாம் வேத்தி தத்வத:
(பகவத் கீதை 7-3)

பொருள்: எவனோ ஒருவன் இதை ஆச்சரியம் போல் காண்கிறான். அவ்வாறே மேலும் ஒருவன் ஆச்சரியம் போல் பேசுகிறான். மற்றும் ஒருவன் ஆச்சரியம் போல் கேட்கிறான். எவனும் கேட்டும் இதை அறியவே இல்லை (2-29). மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன் சித்தி பெற முயற்சிக்கிறான். அப்படி முயற்சி செய்யும் சித்தர்களில் யாரோ ஒருவன் என்னை உண்மையில் உணர்கிறான் (7-3)

3.வள்ளுவரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

4.காளிதாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

5.வியாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னத்தில் பேய் கேட்ட கடைசி நான்கு கேள்விகளுள் ஒன்று: உலகிலேயே அதிசயமான விஷயம் எது?

தர்மர் சொன்ன பதில் (வியாசரின் சொற்களில்):

எவ்வளவோ உயிர்கள் தினமும் இறக்கின்றன. இதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவனும் என்றும் வாழப் போகிறோம் என்று நினைத்து செயல்படுவதுதான் உலகிலேயே மிக ஆச்சரியமான விஷயம்.

 wow

6.காஞ்சி பரமாச்சார்யார் சொன்ன அதிசயம்
15-10-1932 சென்னை உபந்யாசம்:

ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார். நாம் எல்லாம் மரணம் அடைவது ஆச்சரியம் அல்ல. இந்த உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லி இருக்கிறார்:

நவத்வாரே ஸரீரே அஸ்மினாயு:வசதி சந்ததம்
ஜீவதியத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

 

–சுபம்–

 

வெற்றிக்கு வழி! (Post No.2871)

Success-Motivate

Article written by S.NAGARAJAN

 

Date: 6 June 2016

 

Post No. 2871

 

Time uploaded in London :–  4-50 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சமஸ்கிருதச் செல்வம்

 

வெற்றிக்கு வழி!

 

ச.நாகராஜன்BusinessFunnel

நான் யார்?

 

இப்போதுள்ள கால தேச (வர்த்தமானம்) என்ன?  நல்லவை அல்லது கெட்டவை எவை உள்ளன?

எனது எதிரிகள் யார்? எனது நண்பர்கள் யார்?

 

என்னிடம் உள்ள வலிமை எவ்வளவு?

 

பயனுள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு உள்ள வழிகள் எவை?

எனக்கு காலம் எப்படி இருக்கிறது? (அதிர்ஷ்ட காலம் தானா?)

எனக்கு வளம் சேரும் தொடர்ச்சி எப்படி உள்ளது?

எனது சொற்கள் நிராகரிக்கப்பட்டால் எனது பதில் என்னவாக இருக்க வேண்டும்?

 

வெற்றியை விரும்பும் நல்ல மனிதர்கள் வெற்றி பெறும் வழியை உறுதியாக இப்படிச் சிந்திப்பார்களேயானால் அவர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்!

 

 

Who am I?

What are the present time and place and what good or evil qualities in evidence?

Who are my enemies, and who are my allies?

What power have I?

 

What means of carrying out a useful plan?

What store of good fortune have I?

What continuance of prosperity?

And what should be my reply if my words are rejected?

Good men, who fix their minds thus steadfastly on success, are not disappointed.

( Translation by F.Edgerton)

 

ஒரு மானேஜ்மெண்ட் (மேலாண்மை) கோர்ஸில் கொடுக்கப்படும் அறிவுரை போல அல்லவா இருக்கிறது என்று நினைத்தால் அது சரியல்ல.

 

இது நமது பழைய கால பஞ்சதந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம்.

வெற்றி பெற எப்படி சிந்திக்க வேண்டும், எதை எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் அறிவுரை.

 

சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்:

 

கோஹம் கோ தேச காலோ சம விஷம குணா: கே த்விஷ: கே சஹாயா:

 

கா சக்தி: கோப்யுபாயோ ஹித காரண வித்யௌ கா ச மே தைவ சம்பத் I

 

சம்பத்தே: கோ அனுபந்த:  ப்ரதிஹதவசனஸ்யோத்தரம் கிம் ச  மே ஸ்யாத்

 

இத்யேவம் கார்யசித்தாவவஹிதமனஸோ நாவசீதந்தி சந்த  II:

வெற்றிக்கான அருமையான உத்திகளை வகுத்துத் தருவது பஞ்சதந்திரம். டேல் கார்னீகியின் சுய முன்னேற்றக் கருத்துக்கள் எல்லாம் பழைய ‘கள்’; ஆனால் புதிய மொந்தையில் தரப்பட்டது.

 

உலகமும் அதை ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டது.

 

ஆனால் ஹிந்து சிந்தனைகள் காலத்தால் முற்பட்டவை; காலத்தை வென்றவை. என்றும் பொருந்துபவை!

******************

 

இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869)

milk-yoghurt-3-2_0

Written by London swaminathan

 

Date:5 June 2016

 

Post No. 2869

 

Time uploaded in London :–  7-13 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

veggy lunch

ஆயுளைக் கூட்டுவது எது? ஆயுளைக் குறைப்பது எது? என்று சொல்லும் இரண்டு அருமையான பாட்டுகள் (ஸ்லோகங்கள்) சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

 

வ்ருத்தார்கோ ஹோமதூமஸ்ச பாலஸ்த்ரீ நிர்மலோதகம்

ராத்ரௌ க்ஷீரான்னபுக்திஸ்ச ஆயுர்வ்ருத்திர்தினே தினே

(வ்ருத்த, அர்க, ஹோம, தூம, ச, பால, ஸ்த்ரீ,நிர்மல, உதகம், ராத்ரௌ, க்ஷீர, அன்ன, புக்தி, ச, ஆயுர், வ்ருத்தி, தினே தினே)

பொருள்:-

மாலை வெய்யில், ஹோமப் புகை, (தன்னைவிட)இளம் வயதுப் பெண்ணைக் கல்யாணம் செய்வது, சுத்தமான தண்ணீரைக் குடிப்பது, இரவில் பால் சோறு சாப்பிடுவது ஆகியன ஒவ்வொரு நாளும் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்.

 

அந்தக் காலத்திலேயே சுத்த நீரைக் குடிக்க வேண்டும் என்று எழுதியது, புறச்சூழல் பாதுகாப்பு பற்றிய அறிவும், உணர்வும் இருந்ததைக் காட்டும்.அடுத்த பாட்டில் அசுத்த நீர் பற்றி வருகிறது!

 

பாலார்க: ப்ரேததூமஸ்ச வ்ருத்தஸ்த்ரீ பல்வலோதகம்

ராத்ரௌ தத்யான்னபுக்திஸ்ச ஆயு: க்ஷீணம் தினே தினே

 

(பால, அர்க,பிரேத, தூம, ச, வ்ருத்த, ஸ்த்ரீ,பல்வல, உதகம், ராத்ரௌ, ததி அன்னம், புக்தி, ச,  ஆயு:, க்ஷீணம், தினே தினே)

பொருள்:- காலை சூரிய ஒளி, பிணம் எரிக்கும் புகை, தன்னைவிட வயதான பெண்ணை மணத்தல், கலங்கிய நீர், இரவில் தயிர் சாதம் சப்பிடுதல் ஆகியன ஒவ்வொரு நாளும் ஆயுளைக் குறைக்கும்.

curd-rice

ஆயுர்வேதம் எட்டு வகை:-

 

அதர்வ வேதத்தின் உபவேதமான ஆயுர்வேத சாஸ்திரம், சுஸ்ருதர் எழுதிய நூலின்படி எட்டு வகைப் படும்; அவையாவன:–

1.சல்யம்:-

ஆயுதத்தால் செய்யும் அறுவைச் சிகிச்சை; சர்ஜரி; ஆபரேஷன்

2.சாலக்யம்:-

அறிகுறிகளைக் கொண்டு நோயைக் கண்டுபிடித்தல் (டயக்னாசிஸ்)

3.காய சிகித்சா:-

உடலின் நோய்க்குச் சிகிச்சை

4.பூத வித்யா:-

பேய் பிசாசுகளால் ஏற்பட்ட மனோ வியாதிக்கு சிகிச்சை (பேய், பிசாசு = பயம், மனக் கவலை)

5.கௌமார ப்ருத்யம்:-

குழந்தைகள் நோய்ச் சிகிச்சை

6.அகத தந்த்ரம்:–

விஷ முறிப்பு

7.ரசாயன தந்த்ரம்:_

ஆயுள் வளர்ச்சிக்கு மருந்து

8.வாஜீகரண தந்த்ரம்:-

செக்ஸ் பிரச்சனைகள், நோய்கள் தொடர்பான மருந்துகள்

–சுபம்–