WRITTEN by London Swaminathan swami_48@yahoo.com Date: 24 December 2018 GMT Time uploaded in London – 9-16 am Post No. 5824
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
statue of Nikitin
இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதன் மெகஸ்தனீஸ், சீன யாத்ரீகர்கள் யுவான் சுவாங் பற்றியெல்லாம் நாம் அதிகம் படித்திருக்கிறோம். ஆனால் ரஷ்ய-இந்திய உறவுகள் பற்றி அதிகம் அறிந்ததில்லை; இதோ சில சுவையான தகவல்கள்:-
ரஷ்ய மொழியில் நிறைய ஸம்ஸ்க்ருத மொழியின் செல்வாக்கைக் காணலாம். முன்காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் தாவர வகைகள்,பிரணிவகைகளின் குறிப்புகள் நிறைய உள்ளன.
இதன் பிறகு பர்லாம்- ஜோஸப் கதைகளில் புத்தரின் வாழ்க்கை பயன் பத்தப்பட்டுள்ளது.
முதலில் ரஷ்யர்களுக்கு இந்தியாவுடன் நேரடி தொடர்பு இல்லை. எல்லாம் பாரஸீகம் (ஈரான்) மூலமாகவே ஏற்பட்டது.
இந்ந்தியாவின் ஜாதி முறைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன ரஷ்ய நாட்டுப்புற கதைகளில் தாக்கத்தை உண்டு பண்ணின. ஈரானிய ,பல்கேரிய படைப்புகள் இதில் பெரும் பங்காற்றின.
மஹா அலெக்ஸாண்டரின் (The Romance of Alexander by Pseudo Callisthenes) காதல் லீலைகள் என்ற புத்தகத்தில் 11, 12 ஆவது நூற்றாண்டு தொடர்புகள் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து போலந்து, ஹாலந்து நாட்டினர் எழுதிய பழைய பூகோளப் புஸ்த்கங்களிலும் பல விஷயங்கள் உள்ளன.
தொல்பொருட் துறை சான்றுகள்
ரஷ்யாவின் கீவ் (Kiev இப்போது உக்ரைன் நாட்டின் தலைநகர்) கிடைத்த நாணயங்களும், பிற பொருட்களும் இந்திய- ரஷ்யத் தொடர்பை உறுதிப்படுத்தின. அவை எட்டு ஒன்பது நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை.
வால்கா (River Volga) நதியின் முகத்வாரத்திலுள்ள இடில்-கஜரான் (Itil-Kazaran) துறைமுகம் வழியாக நடந்த வணிகத்தை அராபிய வட்டாரங்கள் உறுதிப் படுத்துகின்றன.
14- ஆவது நூற்றாண்டில் இந்திய சுல்தான்கள், ரஷ்யாவுடன் வணிகத்தொடர்பு வைத்தனர். கியாசுதீன் துக்ளக் (1320-25)ஆட்சியில் , அவருடைய ராணுவத்தில், ரஷ்யர்கள் இருந்ததை ‘துக்ளக்நாமா’ என்னும் நூல் குறிப்பிடுகிறது.
ரஷ்ய அரசர் வாஸிலி இவனோவிச்சின் (Vasily Ivanovich) அரசவைக்கு, மொகலாய மன்னர் பாபரின் தூதர் க்வாஜா ஹுஸைன் 1532-ல் வந்ததை நிகனோவ்ஸ்காயா க்ரானிக்கிள் என்னும் நூல் காட்டுகிறது.
இவான் தி டெர்ரிபிள் (Ivan The Terrible, 1533-84) என்ற ரஷ்ய மன்னர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவுடனான வணிகத் தொடர்பு வளர்ந்தது. மாஸ்கோவில் இந்தியப் பொருட்கள் குவிந்தன.
ஓர்ஸ்க்(Orsk) என்னும் இடத்தில்கிடைத்த வெண்கலப் பாத்திரத்தில் 16ம் நூற்றாண்டு குருமுகி லிபி எழுத்துக்கள் காணப்படுகின்றன.
1615-16-ல் இந்திய வணிகர்கள் ஆஸ் ட் ரா கான் (Astrakhan) என்னும் இடத்தில் ரத்தினக் கற்கள், வாசனைத் திரவியங்கள் முதலியவற்றில் வியாபாரம் செய்ததோடு லேவாதேவி (வட்டிக்கு கடன் கொடுக்கும் வியாபாரம்) செய்ததும் தெரிகிறது.
பீட்டர் தி க்ரேட் (Peter The Great, 1689-1725) காலத்திலும் வணிகம் வளர்ந்த செய்திகள் நிறைய உள்ளன.
Voyages Beyond Three Seas by A Nikitin
இந்தியாவுக்கு விஜயம் செய்தது பற்றி (1471-1474)
மூன்று கடல் கடந்த யாத்திரை என்ற நூலில் அபனாஸி நிகிடின் என்பவர் எழுதினார். இதுதான் ரஷ்யாவில் வெளியான இந்தியா பற்றிய முதல் விரிவான நூல். அவர் வால்கா நதிக் கரையிலுள்ள் ட்வேர் (Tver- Kalinin காலினின்) என்ற ஊரைச் சேர்ந்த வணிகர். இந்த நூல் புகழ்பெற்றதால் இதை சோபிஸ்காயா க்ரானிக்கிள் என்ற தொகுப்பில் சேர்த்துவிட்டு அந்த படைப்புகளை, நிகிடின் இறந்த பின்னர் மாஸ்கோவுக்குக் கொண்டு சென்றனர். அந்த அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அவர் எல்லா வார்த்தகர்களும் செல்லும் வழியில், முதலில் இரானுக்குச் சென்றார். அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணமானார். அவர் எதையும் உன்னிப்பாக கவனிப்பவர். ஆகையால் எந்தெந்தப் பொருட்கள் எங்கு விளைகின்றன, அவற்றின் விலை என்ன, வாசனைத் திரவியங்கள், மிளகு ஆகியன எங்கு அதிகம் கிடைக்கும், குதிரைகளின் விலை என்ன– என்றெல்லாம் எழுதிவைத்தார். அவர் வெறும் வியாபாரி அல்ல. அறிவு வேட்கை உடையவர். ஆகையால் அனைத்துத் தகல்களையும் சேகரித்துப் பதிவு செய்தார்.
கான்ஸ்டாண்டிநோபிளில் உள்ள ஜஸ்டீனியச் சக்ரவர்த்தி சிலையை இந்திய சிலைகளோடு ஒப்பிடுவார். இந்தியப் பண்பாடு, விஜயநகர சாம்ராஜ்யம், பாமினி சுல்தான் ஆட்சி ஆகியன பற்றி அவர் குறிப்பிட்டவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாகும்.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்
ரஷ்ய அதிபர் நிகிடா குருஸ்ஷேவ் 1955ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அப்போது பிரதமர் நேருவிடம் நிகிடின் (Nikitin) காலம் முதலே நம் இரு நாடுகளும் தொடர்பு கொண்டிருந்தன என்று பெருமை பேசினார்.
அட அப்படியா! அவருக்கு ரஷ்யாவில் உரிய கௌரவம் அளிக்கப்பட்டதா? என்று நேருஜி கேட்டார்.
அட, அதை ஏன் கேட்கிறீர்கள்? அவர் பிறந்த ட்வேர் (Tver) என்னும் ஊரில் அவருக்கு சிலையே வைத்திருக்கிறோம் என்றார் குருஷேவ்.
உண்மையில் சிலை எதுவும் இல்லை!
பின்னர் குருஷேவ் ஒரு போன் அடித்து உடனே நிகிடினுக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யுங்கள்; நேருஜி ரஷ்யா வருவதற்குள் சிலை இருக்க வேண்டும் என்று கட்டளை போட்டார். பின்னர் என்ன?
கம்யூனிஸ்ட் தலைவர் சொல்லுவது போல சிலை வைக்காவிடில் அதிகாரிகளின் தலை அல்லவா போகும்.
இதுதான் நிகிடின் சிலை உருவான வரலாறு
Stamps with Nikitin’simage
சென்னைக்கு வந்த லெபிடேவ்
கல்வித்துறையில் உருவான இந்திய- ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் படைப்புகள் மிகப்பல.
முக்கியமான ஒரு விஷயம் ஜெராஸிம் லெபிடேவ் (Gerasim Lebedev) 1749-1817) வின் ஈடுபாடு ஆகும். இவர் முதலில் வந்தது சென்னை மாநகருக்கு. அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியதால் கொஞ்சம் தமிழ் கற்றார். ஆனால் பின்னர் கல்கத்தாவுக்குச் சென்று வங்காளி மொழியில் மூழ்கிவிட்டார். ஏற்கனவே பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் தெரிந்த அவருக்கு மொழி ஆராய்ச்சியில் ஈடுபாடு ஏற்பட்டதில் வியப்பு இல்லை.
லெபெடேவ் பிறந்த ஊரிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றவுடன் இசைத்துறையில் ஆர்வம் கொண்டார். தானாகவே வயலின் கற்றுக் கொண்டார். ஒரு இசைக் குழுவில் சேர்ந்து வியன்னா வரை சென்றார். பின்னர் அவர் ஆங்கில ‘பாண்டி’ல் (English Band) சேர்ந்தவுடன் 1785ம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். அந்தக் குழுவுக்கு அப்போதைய சென்னை மேயர் ஒரு வரவேற்பும் கொடுத்தார்.
ஈராண்டுக் காலம் சென்னையில் தங்கிய அவர் கொஞ்சம் தமிழ் கற்ற பின்னர், கல்கத்தாவுக்குச் சென்று வங்காளி மொழியையும், ஸம்ஸ்க்ருதத்தையும் பயின்றார்.
அவர் பிராமணர்கள் பற்றியும் இந்திய கலாசாரம், மதம் பற்றியும் விரிவாக எழுதினார். அவருடைய நூல்கள்:
A GRAMMAR OF THE PURE AND MIXED EAST INDIAN DIALECTS (1801,LONDON)
AN IMPARTIAL CONTEMPLATION OF THE EAST INDIAN SYSTEMS OF BRAHMINS (1805, ST.PETERSBURG)
A COLLECTION OF HINDUSTANI AND BENGALI ARRIAS
BENGALI DICTIONARY
கலகத்தாவில் கோரக்நாத் தாஸ் என்பவரிடம் வங்காளி மொழியைக் கற்றுக்கொண்டு அவருக்கு வயலினும் ஐரோப்பிய இசையும் கற்பித்தார். முதல் முதலில் இந்திய ராகங்களை மேலை இசைக் கருவிகளில் புகுத்தியவர் லெபிடேவ். ஐரோப்பிய பாணியில் நாடக அரங்கை உருவாக்கி வங்காளி நடிகர்களை நடிக்க வைத்தார். வங்க மொழிப் படைப்புகளை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து வங்காளி-ரஷ்யன் அகராதியையும் வெளியிட்டார். ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் லண்டனில் தங்கி இந்திய மொழிகள் பற்றி நூல் வெளியிட்டார்.
ரஷ்யா சென்ற பின்னர், செயின் ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேவ நாகரி, வங்காளி லிபிக் அச்சுக்கள் கொண்ட அச்சகம் வைத்து நூல்களைலை எவெளியிட்டார். வங்காளி மொழிக்கு இவர் செய்த சேவையை நினைவு கூறும் முகத்தான் கல்கத்தாவில் இவரது நினைவுப் பலகைகளும் எழுப்பப்பட்டுள்ளன.
1795-ல் ஹிந்து தியேட்டரை (நாடக அமைப்பு) உருவாக்கினார்.
நிகிடின், லெபிடேவ் ஆகியோர் இந்திய பண்பாட்டுக்கு ஆற்றிய சேவை சிறப்பானவை.
ஏசு கிறிஸ்து இந்தியா வருகை
ஏசு கிறிஸ்து இந்திய முனிவர்களிடம் பாடம் கற்றதை தற்கால பைபிளில் வெட்டிவீட்டனர்.அவருடைய 20 ஆண்டு இளமைப் பருவத்தைச் சொல்லாமல் ஏசு, மீண்டும் வந்தார் என்று பைபிள் சொல்கிறது அவர் 12 ஆண்டுகளுக்கு இமய மலையில், முனிவர்களிடம் பாடம் கேட்டதாக நிகலஸ் நோட்டோவிச என்ற ரஷ்ய பயணி எழுதிவைத்துள்ளார். அவர் திபெத்திய நூல்களை இதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளார்.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ச.நாகராஜன்
உலகெங்கும் பரவி இருந்த சிவலிங்க வழிபாட்டை ஆதார பூர்வமாக நிரூபிக்கும் ஒரு கட்டுரையை பல்லவி தாகூர் எழுதியுள்ளார்.
பல்லவி தாகூர் எழுதியுள்ள அந்தக் கட்டுரை நமக்கு வியக்க வைக்கும் தகவல்களை அள்ளித் தருகிறது.
அதன் சில பகுதிகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
வத்திகனில் உள்ள எட்ருஸ்கன் மியூஸியம்
கி.மு. 2 முதல் 7-ஆம் நூற்றாண்டு முடிய வட இத்தாலி எடுரியா என அழைக்கப்பட்டு வந்தது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட பல அகழ்வாராய்ச்சிகளில் பல “பீடமுள்ள கற்கள்” – அதாவது சிவலிங்கங்கள் – கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வத்திகனில் கூட ஒன்று கிடைத்துள்ளது.இன்னும் பல சிவலிங்கங்கள் வத்திகனில் உள்ள பிரம்மாண்டமான சுவர்கள் மற்றும் தூண்களுக்கு அடியில் புதையுண்டு இருக்கக் கூடும். (என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா)
5000 ஆண்டு பழமையான சிவலிங்கம் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1940ஆம் ஆண்டு புதைபொருள் ஆராய்ச்சியாளர் எம்.எஸ். வாட்ஸ் 5000 ஆண்டு பழமையான மூன்று சிவலிங்கங்களைக் கண்டு பிடித்தார். (ஒரு அரிய பழைய போட்டோ ஹரப்பாவில் அகழ்வு நடக்கும் போது தோண்டி எடுக்கப்பட்டதைக் காண்பிக்கிறது.)
வியட்நாமில் சிவலிங்க வழிபாடு!
புராதன சிவலிங்கம் வியட்நாம் எங்கும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. துடிப்பான வேத நாகரிகத்தின் ஒரு வீடு வியட்நாம்! பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கங்கள் வியட்நாம் எங்கும் காணக் கிடைக்கின்றன.இது வேத நாகரிகம் உலகெங்கும் பரவி இருந்தது என்பதற்கான இன்னும் ஒரு ஆதாரமாகும்.
ஆப்பிரிக்காவில் சிவலிங்கம்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கமானது 6000 ஆண்டுகளுக்கு முன்பேயே ஆப்பிரிக்கர்கள் சிவனை வழிபட்டதற்கான சான்று ஆகும். புதைபொருள் ஆய்வாளர்கள் தென் ஆப்பிரிக்காவில் சுட்வாரா என்ற குகையில் 6000 ஆண்டு பழமையான கருங்கல்லினால் ஆன சிவலிங்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு ஆண்டுகள் அந்தச் சிவலிங்கம் எப்படி அப்படியே இருக்கிறது என்று பிரமித்தனர்.
நன்றி : ஆங்கில வார இதழ் ட்ரூத்- தொகுதி 86 – இதழ் 33 ;14-12-18
கட்டுரையின் ஆங்கில மூலத்தை இங்கே காணலாம்:
(Mysterious cases of Shivlings found across the world!, Pallavi Thakur, Jan 07, 2017).
Etruscan Museum at the Vatican:
Between the 2nd and 7th centuries BC, northern Italy was known as Etruria. During
excavations many such “meteoric stones mounted on carved pedestals” (Shiva
lingas) are discovered in Italy. Obviously, therefore, this one was dug up from the
Vatican itself. Many more must be lying buried in the Vatican’s massive walls and
numerous cellars. (Encyclopedia Britannica)
5,000 year old Shivalinga found at Harappa:In 1940, archaeologist M.S.
Vats discovered three Shiva Lingas at Harappa, dating more than 5,000 years old.
(A rare archival photo shows that ancient Shiva Linga as it was being excavated from the Harappa site.)
Ancient Shiva Lingas Found throughout Vietnam:
Vietnam was the home to a vibrant Vedic civilization. Throughout Vietnam many ancient Shiva Lingas have been found, dating back thousands of years. This is further proof of the vast extent of Vedic culture throughout the world.
Shivalinga in Africa: The discovery of a Shiva idol in South Africa is the proof that 6000 years ago Africans used to worship him.
Archeologists have found 6000 year old Shivalinga in a cave named Sudwara in South Africa and it is made of hard granite stone. The archeologists are amazed that how the Shivalinga survived there for so long.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ச.நாகராஜன்
டிசம்பர் 14, 2019 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.
இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
14-12-18 முதல் 21-12-18 முடிய 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பது தமிழிலும் உள்ளன.
முதல் அணுகுண்டு வெடிக்கப்பட்ட சோதனையில் ஒப்பன்ஹீமர் என்ன சொன்னார்?
அணுகுண்டு சோதனையில் அணுகுண்டு வெடிக்கப்பட்ட போது பத்திரிகையாளர்கள் ஓப்பன்ஹீமரிடம் எப்படி இருந்தது என்று கேட்ட போது அவர் என்ன சொன்னார்? அருகில் இருந்த ஜெனரல் என்ன சொன்னார்? இதில் காணலாம்.
கணித மேதை காஸின் வாழ்க்கையில் நடந்த மேலும் இரு சம்பவங்கள்
கணித மேதை காஸ் பள்ளியில் படித்த போது ஆசிரியர் ஒன்று முதல் 200 வரை உள்ள எண்களைக் கூட்டச் சொல்ல காஸ் உடனே பதில் சொன்னார்? எப்படி? ஐஸக் அஸிமாவ் அவர் பற்றிக் கூறும் இன்னொரு சம்பவமும் உண்டு. இதில் காணலாம்.
பிரபல பி.பி.சி. நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒன்றில் ஃப்ரீமேன் உளவியலாளர் கார்ல் ஜங்கைப் பேட்டி கண்டார். அப்போது நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா என்று அவர் கேட்ட போது ஜங் சொன்ன பதிலை இதில் காணலாம்.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 23 December 2018 GMT Time uploaded in London – 16-23 Post No. 5819
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Greek, Chinese and Roman travellers or pilgrims visited India long ago. Later French, English and other Europeans visited India and gave their accounts. With the Muslim invaders came Arabic and Persian travellers. But Russian contacts with India was little and was not that popular.
Among the accounts of India, mention must be made of the ‘Voyage Beyond Three Seas’ by the Russian Afanasy Nikitin, a merchant from Tver (present name Kalinin). His historic journey took place from 1471 to 1474. It established direct contact between India and Russia.
Russians came to know about India through Iran and some western countries. Nikitin’s work was the first-hand account by a Russian. It was hailed widely and it was incorporated in Sofiskaya Chronicle. After Nikitin’s death in Smolensk, his manuscript was taken to Moscow in 1475; thus it was given state importance.
Nikitin sailed to Iran via Astrakhan. This was the usual route of the Russian merchants to the East. He then followed the trade from Iran to India. During his journey he carefully recorded what grows and where, how much things cost, where was found plenty of pepper and incense and the price of horses etc. The object of his journey was not merely commercial. He had a thirst for knowledge. He made a comparison of the Indian sculpture with the monument to emperor Justinian in Tsarsgrad (Constantinople). His remarks on Indian religion and the kingdoms of Vijayanagar and Bahmani are historically valuable. This is the first account of those kingdoms by a European.
Literary works
Indian literary motifs and stories infiltrated into Russia partly through the Wet and partly through Iran.
Romance of Barlaam and Joasaph was a transposition of the legendary life of Buddha.
Indian texts on the origin of castes came to Russian folklore tradition.
Knowledge of India poured into Russia through the following works
THE NARRATIVE OF MACARIUS OF ROME
VISIT OF ZOSIMA TO THE RAHMANS
NARRATIVE OF METHODIUS OF PATARA.
THE STORY OF THE INDIAN KINGDOM, based on the story of a letter from the Indian priest king John to Greek ruler Manuel Commenus. The letter in Greek appeared in the middle of the 12th century. Russian version appeared in the 13th century.
Alexandria (Alexander’s Romance) by pseudo Callisthenes is also another work.
Fables of Indian origin by Stephanitus and Ihnelates
Polish Chronicle of the Whole Word by M Bielski
Italian Cosmographia by G Botero
Flemish Cosmographia by G Mercator also has Indo -Russian contact information.
Archaeological finds in the form of coins and goods show relations between Kiev and India in 8th and 9th centuries.
In the 14 th century, Sultans of India maintained contacts with Russia. Indian gold coins of the 14th century were found in Volga region.
The ‘Tuglakhnama’ testifies to the service of Russians in the army of Ghiassudin Tughlak.
Babur sent an ambassador to Russian king Vassily Ivanovich
During the regime of Ivan the Terrible (1533-1584) commercial contacts were made. Indian goods reached Moscow through Iran. Indian merchants appeared in the Moscow market.
Gurumukhi Inscription
A bronze vessel with an inscription in Gurumukhi script of 16th century was found in Orsk (South Urals). India merchants appeared in Astrakhan in 1615.They amassed money by money lending business as well in addition to selling precious stones, medicines and incense.
During the rule of Shajehan and Aurangzeb, Russian ambassadors came.
Closer commercial contacts were established during the rule of Peter the Great (1689-1725)
Lebdev learnt Tamil and Sanskrit
In the academic field, lot of exchanges took place. A firm link was established by noted Russian Lebdev (1749-1817). He came to Madras in 1785 and learnt some Tamil. He went to Calcutta and learnt Bengali, Hindi and Sanskrit. He wrote extensively about Indian culture and religion.
Christ Visit to India
There is a tradition that Jesus Christ not only came to India but also studied in the Gurukulam in the Himalayas. He learnt Indian philosophy and the Upanishads from Hindu saints.
The Russian traveller Nicholas Notovich, on the basis of a manuscript discovered in Tibet, wrote in his book entitled Jesus Christ, that he spent twelve years in India.
Bible is silent about Jesus’ teenage years. After talking about birth and boyhood of Jesus it suddenly jumps to his later life. King Constantine was a Christian fanatic and he burnt all other versions of the Bible in the fourth century. Now there is an old Greek version in the British library. Scholars hesitate to reveal the contents because it contradicts the current Bible in hundreds or thousands of places!
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 23 December 2018 GMT Time uploaded in London – 8-57 am Post No. 5818
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்குப் பல நாட்டுத் தூதர்கள் வந்தனர். இது இந்திய வரலாற்றில் முக்கியத் தகவல்களைத் தருகின்றது.
ராமாயணத்தில் அனுமனும், மஹாபாரதத்தில் அக்ரூரன், கிருஷ்ணன் முதலியோரும் தூது சென்றதை நாம் அறிவோம். சங்க இலக்கியத்தில், அதன் பிறகு எழுந்த திருக்குறளில், தூதர் பற்றிய விஷயங்கள் நிறைய உள.
ஆயினும் கீழ்க்கண்ட தூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து நிறைய தகவல்களை எழுதி வைத்துள்ளனர். இதே நேரத்தில் அசோகனும் அவனுக்கு முந்திய மன்னர்களும் வெளிநாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய செய்திகளையும் காணலாம்.
இதோ ஒரு பட்டியல்
சந்திரகுப்த மௌரியன் (கி.மு.302)ஆண்ட காலத்தில் கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகடார் என்ற மன்னன் மெகஸ்தனீஸ் என்ற தூதனை அனுப்பினான்.அவன் எழுதிய ‘இன்டிகா’ நூல்முழுக்கக் கிடைக்கவில்லை.ஆயினும் பிற்காலத்தில் அர்ரியன்,தியோதரஸ் முதலியோர் கொடுத்த மேற்கோள்களில் இருந்து நாம் மெகஸ்தனீஸ் சொல்லியவற்றை அறிகிறோம்.
அர்ரியன்= ஆர்யன்
தியோதரஸ் = தேவதரன்
ஸ்ட் ராபோ எழுதிய நூல்களிலிருந்து தெய்மஸ்ஸோஸ் ( தேவ மச்சான்) என்ற தூதர் மௌரிய மன்னன் பிந்துசாரனின் (கி.மு.300-273)அவைக்கு பல முறை வந்தது தெரிகிறது.
போரோஸ் (புரு) என்ற இந்திய மன்னன் ரோமானிய மன்னன் அகஸ்டஸ் அரசவைக்கு கி.மு 20-ல் தூதரை அனுப்பிய செய்தியையும் ஸ்ட் ராபோ நமக்கு அளிக்கிறார்.
பிந்துசாரன் அவைக்கு எகிப்திய மன்னன் டாலமி பிலடெல்போஸ் (கி.மு.285-247) அனுப்பிய தூதன் தியோநிஸோஸ் (தேவநிஸன்) வந்தான். எகிப்தில் புத்த மத பிரசாரம் வெற்றி பெற்றதாக அசோகனின் 13 ஆவது கல்வெட்டிலிருந்து அறிகிறோம்.
பாக்ட் ரி ய (வடமேற்கு இந்தியாவின் கிரேக்க ஆளுகை) அரசன் அந்தியகிடஸ் (கி.மு140-130) ஒரு தூதனை விதிசா (பில்ஸா) நகருக்கு அனுப்பினான். அந்த தூதனின் பெயர்-ஹீலியோடரஸ். அவன் பரம பாகவதன் அதாவது மஹா விஷ்ணு பக்தன்.அவன் வசுதேவனைப் போற்றி ஒரு பெரிய தூண் எழுப்பினான். அது இன்றுமுளது. அது ஒற்றைக்கல்லில் எழுப்பப்பட்ட தூண். இதிலிருந்து 2200 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள்,இந்துக்களாக மதம் மாறியது தெரிகிறது. ஏனெனில் கிரேக்க கடவுளர், வீரர்கள் ஆகியோரை அவர்கள் விஷ்ணுவாகவும்,சிவனாகவும் கண்டனர்.
ரோம் நகருக்கு இந்திய தூதர்கள் விஜயம்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியில் ரோம் நகரிலிருந்த ரோமானிய சாம்ராஜ்யத்துக்கு நிறைய இந்திய தூதர்கள் சென்|றனர். இந்தியா முழுதும், குறிப்பாக தென் இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கான ரோமானிய தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதுவும் தூதர் தொடர்பை உறுதிப்படுத்தும்.
ட் ராஜன் (கி.பி.98-117)
ஹேட் ரி யன் (117-138)
அந்தோணியஸ் பயஸ் (138-161)
மார்கஸ் ஆரேலியஸ்(261-280)
ஹீலியோ ஜெரிலஸ் ( 218-222)
ஹீலியோ= சூர்ய
ஜூலியன் (270-275)
கான்ஸ்டன்டைன் (323-353)
ஜஸ்டீனியன் (527-535)
ஆகியோர் காலத்தில் இந்திய தூதர்கள் ரோம் நகருக்கு வந்ததாக எழுதி வைத்துள்ளனர்.
சிரியா நாட்டுக்கு இந்தியா, 218 முதல் 222 வரை தூதர்களை அனுப்பியது.
ஹர்ஷவர்தனன் (606-647), சீனாவுக்கு 641-ல் ஒரு தூதரை அனுப்பினான்.
இபின் படூடா என்ற தூதரை முகமது பின் துக்ளக் 1342ல் சீனாவுக்கு அனுப்பினன்.
சீனாவும் இருமுறை, ஹர்ஷனின் சபைக்கு தூதர் வாங் லியன்ட்ஸியை அனுப்பி வைத்தது.
முதல் முறை ஹர்ஷன் அவருக்கு வரவேற்பு அளித்தான். இரண்டாம் முறை வங் வந்தபோது, ஹர்ஷன் இறந்து போனதால் அர்ஜுனன் பதவியில் இருந்தான். அவன் சீன தூதரை விரும்பவில்லை. ஆயினும் வாங் 657-ல் புத்த கயா, வைசாலியில் புத்தமத பிரார்த்தனை செய்தார்.
பாரஸீக (ஈரான்) மன்னன் இரண்டாம் குஸ்ரூ சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேஸி காலத்தில் ஒரு தூதனனை அனுப்பி வைத்தான் இது கி.பி 627ல் நடந்தது. அவன் தூதர் நியமன கடிதத்தைக் கொடுக்கும் காட்சி அஜந்தா குகை ஓவியங்ளில் தீட்டப்பட்டுள்ளது.
1443-ல் பாரஸீக சுல்தான் ஷாரூக் ஒரு தூதரை அனுப்பினான். அந்த தூதரின் பெயர்- அப்துர் ரஜாக். கோழிக்கோடு, விஜய நகரம் முதலிய இடங்களுக்குச் சென்ற அப்துர், விஜய நகரத்தில் கஜானாவுக்குக் கீழ் சுரங்கப்பாதைகள் இருந்த சுவையான செய்தியை நமக்கு அளிக்கிறார். அங்கே தங்கப் பாளங்கள் கொட்டிக் கிடந்ததையும், நாட்டு மக்கள் கை, கால்,மூக்கு, காது எல்லாவற்றிலும் நகைகளுடன் காட்சி தந்ததையும் விவரிக்கிறார். அந்த நாட்டில் 300 துறை முகங்கள் இருந்ததையும் சொல்கிறார்.
கி.பி. 1615ல் மொகலாய மன்னன் ஜஹாங்கீர் அரசவைக்கு இங்கிலாந்திலிருந்து தாமஸ் மன்றோ வந்தார்.
சீன யாத்ரீகர்கள்
பாஹியான் (கி.பி.405-411), யுவாங் சுவாங் (630-645), இட்சிங் (671-695) ஆகிய சீன யாத்ரீகர்கள் புத்த சமய புனிதத்தலங்களைத் தரிசித்து புத்த மத நூல்கலைப் பயின்றனர். அவர்கள் இந்தியா பற்றி மிக விரிவாக எழுதியுள்ளனர்.
அசோகன் தனது புதல்வி சங்க மித்ரையையும், மகன் மஹேந்திரனையும் இலங்கை முதலிய நாடுகளுக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினான்..
ஏசு கிறிஸ்து இந்தியா வருகை
ஏசு கிறிஸ்து இந்திய முனிவர்களிடம் பாடம் கற்றதை தற்கால பைபிளில் வெட்டிவீட்டனர்.அவருடைய 20 ஆண்டு இளமைப் பருவத்தைச் சொல்லாமம் ஏசு, மீண்டும் வந்தார் என்று பைபிள் சொல்கிறது அவர் 12 ஆண்டுகளுக்கு இமய மலையில், முனிவர்களிடம் பாடம் கேட்டதாக நிகலஸ் நோட்டோவிச என்ற ரஷ்ய பயணி எழுதிவைத்துள்ளார். அவர் திபெத்திய நூல்களை இதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளார்.
அக்பர் முதலிய மன்னர்களின் அவைக்கும் பல வெளிநாட்டினர் வந்தனர்.
இந்தியாவுக்கு யாத்ரீகர்களாகவும் தூதார்களாகவும் வந்த ஆல்பெருனி, இபின் படூடா, மார்க்கோ போலோ ஆகியோர் மிக விரிவாக இந்தியா பற்றி எழுதினர்.
மொகலாய,விஜய நகர சாம்ராஜ்ய செல்வ வளம் பற்றி ஜீன் பாப்டிஸ் டாவர்னியர் (1638-1663), நிகலோ மனூச்சி (1653-1708), பிரான்ஸ்வா பெர்னியர் (1656-1717) ஆகியோர் அற்புதமான தகவல்களைச் சொல்கின்றனர்
(இதுபற்றி தனி புத்தகமே எழுதலாம். டாவர்னியர், பெர்னியர் புத்தககங்கள், லண்டன் லைப்ரரிகளில் உள்ளன.நேரம் கிடைக்கும்போது அவர்கள் தரும் அற்புத விஷயங்களை உங்களுடன் பகிர்வேன்.
சிரி,உன்னோடு உலகம் சிரிக்கும்! அழு, நீ மட்டும் தனியாக அழுவாய்!!
ச.நாகராஜன்
சிரி,உன்னோடு உலகம் சிரிக்கும்; அழு, நீ மட்டும் தனியாய் அழுவாய்!
எப்படிப்பட்ட அற்புதமான கவிதா வரிகள்.
Laugh, and the world will laugh with you, Weep, and you weep alone;
இப்படி ஆரம்பிக்கும் சாலிட்யூட் என்ற கவிதையை இயற்றியவர் எல்லா வீலர் வில்காக்ஸ் என்னும் பெண்மணி. (Ella Wheeler Wilcox பிறப்பு: 5-11-1850 மறைவு: 30-10-1919)
சிறந்த கவிஞரான இவர் அமெரிக்காவில் வில்கான்ஸின் மாகாணத்தில் ஜேனஸ்வில்லி என்னுமிடத்தில் பிறந்தார். இவரது கவிதைகளில் அனைவரின் மனதையும் கவர்ந்த கவிதை சாலிட்யூட். அத்துடம் மட்டுமல்ல, உலக மக்களில் பெரும்பாலானோரால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் முதல் இரண்டு வரிகளும் இந்தக் கவிதையில் இருப்பது தான்.
ஏராளமான பொருள் பொதிந்த வார்த்தைகளும் கூடிய இந்தக் கவிதையில் வார்த்தை விளையாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை.
ஒவ்வொரு வார்த்தையும் எடுத்து அதன் பின்புலம் என்ன என்பதை ஆய்வாகவே எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்தோர் ஏராளம். அவர்களின் கண்டுபிடிப்புகளை எழுதினால் அதுவே ஒரு பெரிய புத்தகம் ஆகி விடும்
அப்படி ஒரு புலமை; அப்படி ஒரு அர்த்தம்; அப்படி ஒரு மறை பொருள் – இந்தக் கவிதையில் அடங்கியுள்ளது.
கவிதை இது தான்:
Solitude
Laugh, and the world laughs with you;
Weep, and you weep alone;
For the sad old earth must borrow its mirth,
But has trouble enough of its own.
Sing, and the hills will answer;
Sigh, it is lost on the air;
The echoes bound to a joyful sound,
But shrink from voicing care.
Rejoice, and men will seek you;
Grieve, and they turn and go;
They want full measure of all your pleasure,
But they do not need your woe.
Be glad, and your friends are many;
Be sad, and you lose them all;
There are none to decline your nectar’d wine,
But alone you must drink life’s gall.
Feast, and your halls are crowded;
Fast, and the world goes by.
Succeed and give, and it helps you live,
But no man can help you die.
There is room in the halls of pleasure
For a large and lordly train,
But one by one we must all file on
Through the narrow aisles of pain.
இந்தக் கவிதை வில்காக்ஸின் மிகவும் பிரசித்தி பெற்ற கவிதை. ஒரு தனி மனிதனுக்கும் வெளி உலகிற்குமான தொடர்பை விவரிக்க ஆரம்பிக்கிறார் கவிஞர்.
எதிரெதிர் பதங்களைக் கொண்டுள்ள கவிதை இது. சிரி; அழு – இரண்டு வார்த்தைகளும் எதிரெதிர் அர்த்தங்களைத் தருபவை. உலகம் என்ற வார்த்தை கவிதைக்குள் முதல் வரியில் நான்காம் வார்த்தையாகவே வந்து விட்ட போதிலும் கவிதையின் தலைப்போ சாலிட்யூட் – தனிமை!
உலகில் ஒருவன் எப்படி நடக்க வேண்டும் என்ற உத்வேகமூட்டும் வார்த்தைகளைக் கொண்டுள்ளது கவிதையின் முதல் இரு வரிகள்.
சிரி; சிரித்துக் கொண்டே இரு; உலகமும் சிரித்து உன்னை மகிழ வைக்கும்.
அழு; அழுது கொண்டே இரு; உலகம் உன்னிடமிருந்து ஒதுங்கி நின்று உன்னை மட்டும் அழ வைத்து வேடிக்கை பார்க்கும்.
ஆனால் கவிதையின் உள்ளர்த்தம் இன்னும் ஆழமானது. உலகில் ஒவ்வொருவரும் தனிமையில் இருப்பதாகவே கவிஞர் எண்ணுகிறார்.
இந்தக் கவிதையை அவர் எழுதிய சம்பவம் சுவையான ஒன்று.
ஒரு நாள் வில்கான்ஸின் மாகாணத்தில் உள்ள மாடிஸனுக்குச் செல்லும் வழியில் துயரமுற்றிருந்த ஒரு பெண்ணைப் பார்த்தார். அவளுக்கு ஆறுதல் கூற ஆரம்பித்தார். ஆனால் எவ்வளவு தான் ஆறுதல் கூறினாலும் கூட அவளது துக்கத்தை அவரால் தணிக்க முடியவில்லை. அவளது இழப்பு அப்படிப்பட்ட ஒரு இழப்பு! மிகவும் கவலையுற்ற அவர் தனது ஹோட்டலுக்குத் திரும்பினார். தனது துயரம் தோய்ந்த முகத்தைக் கண்ணாடியில் பார்த்த கவிஞர் வேகமாக ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டார்; எழுத ஆரம்பித்தார். அது தான் சாலிட்யூட் கவிதை!
நீதியை போதிக்க வந்த கவிஞர் உலகில் நம் முன்னர் விருப்பத் தேர்வாக அமைந்துள்ள ஏராளமானவற்றைச் சுட்டிக் காட்டுகிறார். நீ சிரிக்கலாம், பாடலாம், சந்தோஷப்படலாம், விருந்துண்ணலாம் (Laugh, Sing, Rejoice, Feast)- உடனே உன்னுடன் உலகம் சேரும்.
ஆனால் நீ அழுதாலோ, பெருமூச்சு விட்டாலோ, உண்ணாமல் இருந்தாலோ, துயரமுற்றிருந்தாலோ (Weep, Sigh,Fast, Grieve), அது உன்னைக் கை விட்டு விடும்!
But one by one we must all file on
Through the narrow aisles of pain.
கடைசி கடைசியாகப் பார்த்தால் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் சேர வேண்டியது தான்!
இது அனைவரும் காலன் முன்னே வரிசையில் தனித் தனியாக நிற்க வேண்டியதைக் குறிப்பிடுகிறதோ. கவிதையின் கடைசி வார்த்தையான பெயின் – வலி – மரண தேவன் தரும் இறுதி அவஸ்தையைத் தான் குறிப்பிடுகிறதோ!
Joyful sound, bound – சந்தோஷமான ஒலி எதிரொலியாக வருவது இருக்கட்டும். சவுண்ட்,பவுண்ட் என்பதிலேயே ஒரு ஓசை இனிமை இருக்கிறதல்லவா!
இந்தக் கவிதையில் வரும் ஒவ்வொரு வார்த்தையையும் முடிந்த வரை அலசி ஆராயலாம்; புதுப் புது அர்த்தங்களைக் காணலாம்.
எல்லா வீலர் வில்காக்ஸ் ஒரு Rosicrucian கூட!
ரோஸிக்ரூசியன் என்றால்!
அது ஒரு மர்ம சங்கம். அதைப் பற்றி விரிவாக இன்னொரு முறை பார்க்கலாம்.
கவிதையை ரசித்து விட்டதால் சற்று சிரியுங்கள்;
அட, உலகம் மகிழ்ச்சியுடன் உங்களுடன் சேர்ந்து சிரிக்கிறதே!