மன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை! (Post No.5510)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 October 2018

 

Time uploaded in London – 6-14 AM (British Summer Time)

 

Post No. 5510

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மன்மதைனையும்  மயங்க வைக்கும் கொல்லிப்பாவை!

 

ச.நாகராஜன்

 

    பழ வகைகள், தேன் முதலிய உணவுப் பொருள்கள் நிரம்பிய மலை கொல்லி மலை. ஆகவே தவம் செய்ய விரும்பிய முனிவர்களும் தேவர்களும் இங்கு வந்து தங்கி இருக்கப் பெரிதும் விரும்புவர். இந்த மலையின் பெருமையைக் கேட்ட இராக்கதர்களும் அசுரர்களும் இங்கு வரத் தொடங்கினர். இதனால் தவம் புரிந்து வந்த முனிவர்களுக்குப் பெரிதும் இடையூறு ஏற்பட்டது.

 

ஆகவே அவர்கள் காற்று, மழை, இடி ஆகிய எதனாலும் கேடு கொள்ளாத ஒரு பாவையை விசுவகன்மாவைக் கொண்டு நிர்மாணிக்கச் செய்து அதை அம்மலையின் மேற்குப் பாகத்தில் நட்டு வைத்தனர். பல்வகை சக்தி அதில் ஊட்டப்பட்டிருந்ததால் அசுரர் முதலானோரின் காற்று வாடை பட்டால் கூட அந்தப் பாவை இளஞ்சிரிப்பைச் சிந்தும். கண்டவரது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கண் பார்வையையும் கொள்ளும். இதனால் பார்த்தவர்கள் பெரும் காம வேட்கையைக் கொள்வர். இறுதியில் உயிர்போக்க வல்ல மோகினி வடிவத்தையும் அது கொள்ளும். இந்தக் கொல்லிப்பாவை நகைப்பதையும் இயங்குவதையும் கண்டு அது ஒரு அழகிய மடந்தை என்று எண்ணி மயங்கிக் காம நோய் கொண்டு இறுதியில் அசுரர் முதலானோர் மடிவர்.

இப்படிப்பட்ட கொல்லிப்பாவையைக் கொண்டுள்ள கொல்லி மலை உடைய மண்டலம் கொங்கு மண்டலமே என கொங்கு மண்டல சதகத்தின் 25ஆம் பாடல் வெகுவாகப் புகழ்ந்துரைக்கிறது.

 

பாடல் வருமாறு:

 

“தாணு முலகிற் கடன்முர சார்ப்பத் தரந்தரமாய்ப்

பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருதுமலர்ப்

பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவைமுல்லை

வாணகை யாலுள் ளுருக்குவ துங்கொங்கு மண்டலமே

 

பாடலின் திரண்ட பொருள் : மன்மதனும் மயங்கத் தக்க இளஞ்சிரிப்புச் செய்யும் கொல்லிப் பாவை விளங்கும் கொல்லி மலையும் கொங்கு மண்டலத்தில் இருப்பதேயாகும்.

 

கொல்லிமலையில் எழுந்தருளியுள்ள அரப்பளீசுரர் ஆலயத்துக்கு மேற்குப் பக்கத்தில் இப்பாவை இருப்பதாக கொல்லி மலை அகராதி என்ற சுவடியில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் இக்காலத்தில் இது எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை; இதைக் காணவும் முடியவில்லை.

 

சித்திரமடல் என்னும் நூலில் இது பற்றிய குறிப்பைக் காண்கிறோம்:

 

     “ …. திரிபுரத்தைச் –

செற்றவனுங் கொல்லிச் செழும்பாவையு நகைக்கக்

கற்றதெலா மிந்தநகை கண்டாயோ    (சித்திர மடல்)

 

நற்றிணையும் கொல்லிப்பாவை பற்றிக் குறிப்பிடுகிறது:

 

‘செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்

தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட்

டவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக்

கால்பொரு திடிப்பினுங் கதழுறை கடுகினு

முருமுடன் றெரியினு மூறுபல தோன்றினும்

பெருநலங் கிளரினுந் திருநல வுருவின்

மாயா வியற்கைப் பாவை  …

         ….   கொல்லிக் குடவரைப்

பூதம் புணர்ந்த புத்தியல் பாவை     (நற்றிணை)

 

இதுமட்டுமின்றி குறுந்தொகையும் கொல்லிப்பாவை பற்றிக் கூறுகிறது:

 

“பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருகட் டெய்வங் குடவரை யெழுதிய

நல்லியற் பாவை                  (குறுந்தொகை)

 

இப்படி குடவரை எழுதிய கருங்கல் தெய்வமான நல்லியல் கொல்லிப் பாவையின் நகையும் இயக்கமும் மயக்க வைக்கும் மோகன உருவமும் அசுரரை மயக்கி அழித்து தவம் செய்யும் நல் முனிவர்களைக் காத்து வருகிறது என்பது பல நூல்களின்  முடிந்த முடிபுரை.

 

அப்படிப்பட்ட கொல்லிப்பாவையைத் தன்னகத்தே கொண்டு தென்னகத்தே இலங்கும் கொல்லி மலை இருப்பது கொங்கு மண்டலத்தில் என்பதால் கொங்கு மண்டலம் தனிப் பெருமை பெறுகிறது.

 

இத்துடன் கொங்குமண்டல சதகத்தின் அடுத்த பாடலும் (பாடல் 26) கொல்லி மலையில் உள்ள தேன் பற்றிப் புகழ்ந்துரைக்கிறது.

 

“முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினின் மோகமுறத்

தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள் ளோர்க்குஞ் சுவைமதுரத்

கொத்தீட் டியபுதுப் பூத்தேனு மூறுங் குறிஞ்சியின்றேன்

வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே

பொருள் : தேவர் முதலிய அனைவரும் ஆசை கொள்ளத் தக்க சுவை மதுரப் பூந்தேன் ஊறும் கொல்லி மலையைக் கொண்டுள்ளதும் கொங்கு  மண்டலமே ஆகும்.

கொல்லிமலையின் தேன் பற்றிக் கம்பரின் தனிப்பாடல் ஒன்று, “கொல்லிமலைத் தேன் சொரியுங் கொற்றவா என்று குறிப்பிடுகிறது.

 

அடுத்து நற்றிணையும் கொல்லி மலைத் தேனைப் பற்றிக் கூறுகிறது:

 

“உயர்சா லுயர்வரைக் கொல்லிக் குடவயி

னகவிலைக் காந்த ளங்குகுலைப் பாய்ந்து

பறவை யிழைத்த பல்க ணிறாஅற்

றேனுடை நெடுவரை

 

இப்படிப்பட்ட தேவரையும் மயங்க வைக்கும் தேன் உடை நெடு வரை கொல்லி மலை என்பதால் கொங்கு மண்டலத்தின் பெருமை இன்னும் கூடுகிறது, இல்லையா!

***

Three Layers in Rig Veda (Post No.5509)

Compiled by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 5 October 2018

 

Time uploaded in London –18-47 am (British Summer Time)

 

Post No. 5509

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Purushottam Lal Bhargava in his book ‘India in the Vedic Age’, published in 1956, made the following interesting remarks

Pre Divodasa-Sudan’s Rishis/seers
On examining the hymns, we find that those of them, which are attributed to rishis (seers) who are known to have lived before these kings never mentioned, while the hymns ascribed to rishis who are known to have been the contemporaries of Divodasa and Sudas or to have lived later, often mentioned their names.

 

Thus the rishis,
Chyavana
Kavi
Usanas
Avatsaara
Devala
Asita
Budha
Archananas
Andhiigu
Naabaananedhista
Vatsapri
Brihaspati
Samvarta
Diirghatamas
Saaryaata
Nahusa
Yayaati
Maandhaatri
Trsadasyu
Vasumanas
Tryaruna
Puuru
Suhotra
Ajamiidha
Pratardana
Sivi
Mudgala and
Kusika
Lived earlier than Divodaasa and Sudaas and never mentioned the kings names.

xxx

Second Layer
Purukutsa and Trsadasyu
The names of these two famous Vedic kings are mentioned in many hymns, but never in those rishis who lived before them. Sobhari was a contemporary of Trsadasyu. The hymns ascribed to him never mentioned Divodasa and Sudas’.

xxx

Third Layer
Contemporaries of Divodasa and Sudas’s, besides mentioning the names of these kings also often mentioned the names of the Purukutsa and Trsadasyu.
Vasistha, who was a contemporary of Sudas mentioned the name of Sudas and Trsadasyu.

Rishis who were joint authors of hymns are known from other sources to have been contemporaries.
Thus a rishi Manu Samvarani is the joint author of hymn 9-101,with kings Nahusa and Yayati, which means he was their contemporary, and this is borne out by hymn 10-61 in which Nabhaanethista speaks of his father Manu Samvarani being held in high esteem by the princes Yadu and Turvasa, the sons of king Yayati.

Similarly Kutsa Angirasa is the joint author of hymn 9-97 with Vasistha and his sons which means he was their contemporary and this is borne out by the mention of Sudas IN HYMN 1-112 ATTRIBUTED TO KUTSA.

Again hymn 10-179 is ascribed to three kings Sivi, Vasumanas and Pratardana and these were contemporaries according to Puranas.

 

Judging from the names of authors, the oldest among the books of Rig Veda seems to be Book 5, attributed to ancient Atri family, though it does not mean all the hymns in the book are equally ancient.

Rig Veda has Ten Books or Mandalas

See the attachments for the chronology:

 

 

–subham–

 

 

புராணங்கள் புளுகு மூட்டைகளா? பொய் சொல்கின்றனவா? (Post No.5508)

Research Article Written by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 5 October 2018

 

Time uploaded in London –8-47 am (British Summer Time)

 

Post No. 5508

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

புராணங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது எப்படி?

 

புராணங்கள் பழையதா? வேதங்கள் பழையதா?

புராணங்களும் வேதங்களும் பழமையானவையே;

சான்று உளதா?

அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. வெளிநாட்டினரும் கூட கி.மு.850 என்று தேதி குறிக்கும் சதபத பிராமணத்தில் புராண இதிஹாசம் என்ற தொடர் வருகிறது. இதற்குப் பின்னர் ஏரளமான குறிப்புகள் உள.

Atharva Veda (25-6-4); (11-7-24)

Satapata Brahmana (11-5-6-8)

‘புரா’ என்றால் ‘முன்பு’ ‘முன் காலம்’ Once upon a time, Long long ago என்று பொருள். வேத காலத்திலேயே நாம் முன்னொரு காலத்தில் என்று கதை சொல்லி இருப்போமானால், நாம் தான் உலகிலேயே பழமையான இனம் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

 

‘புரா அபி நவம்’ என்ற விளக்கமும் உண்டு. பழைய கதைதான்; ஆயினும் என்றும் புதுக்கருக்கு அழையாத தங்கம் போல ஜ்வலிக்கிறது என்பதால் ‘புரா அபி நவம்’  — அதாவது முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குவது– என்று பொருள் சொல்லுவர். 18 புராணங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகளின் குறிப்பை அடியில் காண்க. புதிய விஷயங்களுக்கு வருவோம்

 

புராணங்கள் என்றால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் கட்டுக் கதைகள் என்ற எண்ணம் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

 

 

1.வின்டர்நீட்ஸ் (Winternitz) என்ற இந்தியவியல் அறிஞர் சொன்னார்- ‘சூதர்’கள் எனபடும் கவி பாடும் மக்களிடையே இது போனதால் தரம் தாழ்ந்துவிட்டது. உயர்குடி மக்களிடையே இரு இருந்திருந்தால் இப்படி ஏற்பட்டிராது.

 

2.ஆதிகாலத்தில் வரலாற்றை வாய் மொழியாக, பாடல் வாயிலாக, பாமர மக்களுக்கு என படைக்கப்பட்டவை புராணங்கள். இதற்கு ஐந்து லட்சணங்கள் உண்டு. அதில் வரலாறும், பூகோளமும் அடக்கம். ஆயினும் இந்துக்கள் மஹா புத்திசாலிகள், ‘ரொம்ப அட்வான்ஸ்ட்’ (far advanced) என்பதால் அவ்வப்பொழுது புது வரலாற்றைப் (updating) புகுத்தினர். இப்படி உலகில் அவ்வப்பொழுது புது வரலாற்றை எழுதியோர் இந்துக்கள் மட்டுமே. வெளிநாட்டுப் பேதைகள் கடைசி தேதியைப் பார்த்துவிட்டு புராணங்கள் பிற்காலத்தியவை என்று முத்திரை குத்திவிட்டனர். பெயரிலேயே புராண (பழையவை) என்ற சொல் இருக்கையில் புதியவை என்று அரை வேக்காடுகள் செப்பியது ‘சூடான ஐஸ்க்ரீம்’ (Hot Icecream!!!) என்று சொல்லுவதற்கு இணையானது. குப்தர் காலம் வரை பிற்சேர்க்கை இருந்ததால் புராணங்கள் குப்தர் காலத்தியவை என்பது காமாலைக் கண்ணர்களின் வாதம்.

 

3.முக்கிய உபநிஷதங்கள் அனைத்தும் புத்தர் காலத்துக்கு முந்தையவை; அவைகளில் புத்தமத வாடையே கிடையாது; அப்படிப்பட்ட சாந்தோக்ய உபநிஷதத்தில் ஒரு அருமையான தகவல் உளது. நாரத முனிவர் தான் கற்ற விஷயங்களைப் பட்டியலிடுகையில் நான்கு வேதங்களுடன் புராணத்தையும் சொல்கிறார். ஆக நாரதருக்கும், உபநிஷதத்துக்கும் முந்தையவை புராணங்கள்.

 

ஆயினும் 18 புரானங்களும் வெவேறு காலத்தில் எழுத்து வடிவம் பெற்றமைக்கு அவைகளுக்கு உள்ளேயே சான்றுகள் தென்படுகின்றன.

 

4.ரோமஹர்ஷணரும்  அவரது புதல்வன் உக்ரஸ்ரவசும் பெரும்பாலான புராணங்க ளை யாத்தனர். இயற்பியலில் மூன்று வர்ணங்களை (primary colours சிவப்பு, மஞ்சள்,நீலம்) ஆதார வர்ணனங்கள் என்பர். அவைகளின் கலவையே ஏனைய வர்ணங்கள்; இது போல மூன்று புராணங்களே ஆதார அல்லது ஆதி புராணங்கள்- பிரம்ம,வாயு, மத்ஸ்ய புராணங்கள். ஏனையவை இவைகளிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்தவையே.

பிரம்ம புராணத்திலிருந்து  அக்னி புராணம் வந்தது.

 

மத்ஸ்ய புராணத்திலிருந்து பத்ம புராணம் வந்தது.

வாயு புராணத்திலிருந்து பிரஹ்மாண்ட புராணம் வந்தது.

 

 

பின்னால் வந்த 12 புராணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் அவைகளிடையே பெரும்பாலான விஷயங்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அதாவது மேற்கூறிய மூன்று ஆதி புராணங்களைத் தழுவி நிற்கின்றன. முதல் மூவர்- முதல் மூன்று ஆழ்வார்கள் –என்று சொல்லலாம்.

 

5.அந்தக் காலத்தில் உலகில் எங்கும் நிகழாத மஹா அற்புதமான மஹா நாட்டை இந்துக்கள் நடத்தி வந்தனர். உலகில் வேறு எங்குமிலாத புதுமை அது. அதாவது 12 ஆண்டுகள் நீண்ட ஒரு மஹாநாட்டை நடுக்காட்டில் நடத்தினர்

ரிஷி,முனிவர்கள் மஹாநாடு கூட்டி புராணங்களை இயற்றுவர், பாடுவர், மாற்றுவர், எடிட் செய்வர், அப்டேட் செய்வர்; எழுதுவர்; இப்படி நைமிசாரண்யமென்ற ஒரு காட்டின் நடுவில் ரோமஹர்ஷணர் சொன்னதுதான் வாயு புராணம்.

 

விஷ்ணு புராணம்,பாகவத புராணம் போன்ற புகழ்மிகு புராணங்கள் பின்னால் எழுந்தவை.

 

 

  1. மக்களைக் கவர்வதற்காக மிகைப்பட்ட கூற்றுகளைப் புராணம் சொல்லுவோர் மொழிந்தனர். தசரதனுக்கு 60,000 மனைவியர், காசி மன்னன் அலார்கா 36, 000 ஆண்டுகள் ஆண்டான்; ராமன் 24,000 ஆண்டுகள் ஆண்டான் என்றெல்லாம் கதை விட்டனர். ஆனால் வேதங்களோ மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகளே என்று திரும்பத் திரும்ப பாடுகின்றன. தீர்க தமஸ் 100 ஆண்டு வாழ்ந்ததையும், மஹீதாஸ ஐதரேயர் 116 வயது வரை இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. உண்மையில் ஆயிரம் என்பதில் மூன்று பூஜ்யங்களை நீக்கி விட வேண்டும்; ஏனெனில் இது போன்ற ‘கப்ஸா’க்கள் சுமேரியாவிலும் உண்டு; மூன்று தமிழ்ச்சங்கங்கள் வரலாற்றிலும் உண்டு. ஆதிகால மக்கள் இப்படி ஆயிரம் என்பதைச் சேர்த்துச் சொல்லுவர். மஹாபாஷ்யம் யாத்த பதஞ்சலி முனிவர் மட்டும் அறிவியல் முறையில் கணக்கிட்டு ராமன் 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்று அறுதியிட்டுக் கூறினார்.

ஆக மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் புராணங்களுக்கு புளுகு மூட்டைகள் என்ற அவப்பெயரை சம்பாத்தித்துத் தந்தன.

7.புராணங்கள் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் காலப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரே மன்னனின் தம்பிகள் அண்ணன்கள், தாயாதிகள் ஆண்டதையும் குழப்பிக்கொண்டு ஆண்டுகளை மாற்றி எழுதினர். பாண்டியர்களில் ஒரே நேரத்தில் ஆண்ட சஹோதரர்கள் உண்டு. சேர மன்னர்களில் இரண்டு வம்சங்கள் ஒரே நேரத்தில் ஆண்டதும் உண்டு. இவை பிற்காலத்தியவை; ஆகையால் குழப்பம் மிகக் குறைவு. பழங்கால விஷயங்களில் இது அதிகம்.

 

  1. ஒவ்வோரு புராணமும் அந்தந்த ஊர் தெய்வத்தைப் புகழ்வதற்காக, நம்மூர் ஸ்தல புராணங்கள் போல புதுக்கதைகளைஎட்டுக் கட்ட்டினர். சிலர் மன்னர்களை தெய்வங்கள் என்று புகழ்ந்தனர். சிலரை அவதார புருஷர் என்று காட்டினர். நமது காலத்திலேயே சத்ய சாய்பாபா, தான் ஷீரடி பாபாவின் மறு அவதாரம், தான் கடவுள், என்று சொன்னதை அறிவோம். இவ்வாறு ஒவ்வொரு புராணமும் பேசத் துவங்கியவுடன் குழப்பம் அதிகரித்தது.

 

  1. மர்மங்கள் ரஹஸியங்கள் அதிசயங்கள், அற்புதங்கள் இல்லாத விடத்திலும் அவைகளை அற்புதம் போலச் சித்தரித்தன. எடுத்துக்காட்டாக அகஸ்தியர் விந்திய மலை வழியாக முதல் சாலை (First Land Route) போட்டார். இதை ‘விந்திய கர்வ பங்கம்’ என்று பெரிது படுத்தினர். அகஸ்த்யர் பண்டிய மன்னர்களை அழைத்துக்கொண்டு கப்பற் படையுடன் தென் கிழக்காசியா சென்றார். அவர் வியட்நாம் இந்தோநேஷியா போனதை அகஸ்த்யர் ‘கடலைக் குடித்தார்’

என்று எழுதின. பகீரதன் மாபெரும் சிவில் எஞ்சினீயர். (Civil Engineer) அவன் கங்கை நதியை பாறைகளைப் புரட்டி திசை திருப்பினான். இதை கங்கையை 16, 000 ஆண்டு தவம் செஉ,,து பூமிக்குக் கொணர்ந்தான் என்றனர்; பரசுராமன் கேரள பூமியை பயிரிடும் பூமியாக மாற்றினான் அவன் கடலில் இருந்து பூமியை மீட்டதாக எழுதினர். பாண்டியன் வேல் விட்டவுடன் கடல் பின்வாங்கி ‘நிலம் தரு திருவில் பாண்டியன்’ ஆனது போல,பல கதைகளை எழுதினர் எஞ்சினீயரிங் விஷயங்கள், அதி அற்புத மனித சாதனைகளை  அதிசயங்களாக காட்டினர். அதாவது பழங்காலத்திலிப்படி மறைபொருளில் பேசுவது வழக்கம் அதைப் புரிந்து கொள்ளாமல் கடலைக் குடித்தார், காகம் மூலம் காவிரியை உண்டாக்கினார் என்றெல்லாம் புராணங்கள் செப்பத் துவங்கின.

  1. மிகப் பெரிய குழப்பம் ஒரே பெயரில் பலர் ஆண்டதால் ஏற்பட்டது. மூன்று தசரதர்கள், ரிக் வேதத்தில் வரும் பல மநுக்கள், சர்யாதி, யயாதி போன்ற பெயரில் பல காலங்களில் பல மன்னர்கள் இருந்ததைப் புரிந்துகொள்ளாமல் ‘இவர் அவரே’, ‘அவர் இவரே’ என்று பகர்ந்து குட்டை யைக் குழப்பினர். துருக்கி-இராக் பகுதியை ஒரு தசரதன் கி.மு 1400ல் ஆண்டதை குயூனிபார்ம் களிமண் கல்வெட்டுகள் காட்டுகின்றன. ராமாயண தசரதனை நாம் அறிவோம்; அசோக சக்ரவர்த்தியின் பேரன் பெயரும் தசரதனே. இப்படிப் பல பெயர்கள் வந்தவுடன் கதை சொல்லுவோர் அறியாமை காரணமாக புலம்பினர்; வைவஸ்வத மநு– ஒரு மன்னன். மநு சம்வரணி– வெறும் கிராமத் தலைவன்; இருவர் பெயரும் ரிக் வேதத்தில் வருகின்றன. மநு சம்வரணியின் மகன் நாபானேதிஷ்டா. அவனை யார் மகன் என்ன ஜாதி என்றெல்லாம் பிற்காலப் புராணங்கள் புதுக்கதைகளை புகன்றன. இது ஒரு எடுத்துக் காட்டுதான்; தமிழ் இலக்கியத்திலும் பல கபிலர்கள், பல அகஸ்தியர்கள் உள்ளனர். ஆறு அவ்வையார்கள் இருக்கின்றனர். நாம் இக்காலத்திலேயே குழம்பினால் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் குழப்பம் உண்டாவது இயல்பே.

 

வசிஷ்டர், அகஸ்தியர் போன்றோர், பல கதைகளில் வருவர். அது கோத்திரப் பெயர். இந்திரன் என்றால் ‘மன்னன்’ ‘தலைவன்’ என்று பொருள். அதை எல்லாம் ஒரே ஆள் தலையில் கட்டிக் கதை எழுதினர். எல்லா வசிட்டர்களுக்கும் அருந்ததியை மனைவியாக காட்டினர். கற்புள்ளா எல்லோரும் அருந்ததிதானே!! சங்கத் தமிழ் இலக்கியத்திலேயே மன்னர் மனைவிகளை அருந்ததி என்று சங்கப் புலவர்கள் ஆறு இடங்களில் பாடினர். ஆகப் பெயர்க் குழப்பம் மஹா குழப்பத்தில் முடிந்தது.

 

 

சூரியன், சந்திரன், இந்திரன் ஆகிய பெயர்கள் இன்று வரை தென்கிழக்காசியா முழுதும், காஷ்மீர் வரை கண்டி வரையும் ஸம்ஸ்க்ருத்தில் உள்ளபடியே (தமிழர்களாலும் ) பயன் படுத்தப் படுகின்றன. அக்காலத்திலும் இப்படி உபயோகித்தனர். ஆனால் பௌராணிகர்கள், சுவை ஊட்டுவதற்காக, உண்மையான சந்திரனும் சூரியனும் மனிதனுடன் உறவாடியதாகப் பேசிவிட்டனர். இன்று ராஜேந்திரன் பாஸ்கரன் (சூரியன்) என்றால் நம் அலுவலக்த்தில் வேலை பார்க்கும் சக ஊழியர் என்று அறிவோம்; அந்தக் காலத்தில் உண்மையான சூரியன் வேத கால இந்திரன் என்றெல்லாம் எழுதிவிட்டனர் புராணங்களில். வேதங்களை ஆராய்ந்த முப்பது வெளி நாட்டு அறிஞர்களும் இன்று வரை ரிக் வேதம் குறிப்பிடுவது ஒரு இந்திரனையா, ‘ஒரு’ கடவுளையா, ‘ஒரு’ இயற்கைச் சக்தியையா என்று சொல்லவில்லை; சொல்லவும் முடியாது!

புராணங்கள் பெரிய கலைக் களஞ்சியங்கள்; உலகிலேயே மாபெரும் இலக்கியம்; பல லட்சம் பாக்களை   கொண்டவை; வராலாறும் பூகோளமும் பாடுபவை ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம். தாவரவியல் அறிவியல்,விலங்கியல் , வறட்சி, பூகம்பம் முதலியன பற்றி அவற்றில் உள. பல லட்சம் பாக்களை  ஆராய நமக்கு ஒரு 100 ஆண்டு ஆயுள்  போதாதே! என்ன செய்வது!

 

  1. புராணங்கள்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/புராணங்கள்

Posts about புராணங்கள் written by Tamil and Vedas

  1. 18 புராணங்கள்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/18…

Posts about 18 புராணங்கள் written by Tamil and Vedas

 

 

–சுபம்–

 

அறிவியல் வியக்கும் இசை (Post No.5507)

WRITTEN BY S NAGARAJAN

Date: 5 October 2018

 

Time uploaded in London – 6-07 AM (British Summer Time)

 

Post No. 5507

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 5-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஒன்றாம்) கட்டுரை                                

அறிவியல் வியக்கும் இசை                  

ச.நாகராஜன்                                   

இசையின் பெருமையையும் அருமையையும் அறிவியல் போற்றுவதைப் பல கட்டுரைகளில் இந்த தொடரில் கண்டுள்ளோம்.     இப்போது இன்னும் சில உண்மைகளை அறிவியல் தருகிறது. இசை உங்கள் செயல்திறனை பணிபுரியும் இடங்களில் அதிகரிக்கிறதா என்ற கேள்விக்கு விடையைக் கண்டுள்ளார் மியாமி பல்கலைக்கழகத்தில் உள்ள துணைப் பேராசிரியையான தெரஸா லிசியுக். (TeresaLesiuk).                                                                              

யார் இசையைக் கேட்கிறார்களோ அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையை சீக்கிரமாகவும் மற்றவர்களை விட சிறந்த கருத்துக்களைக் கொண்டும் திறம்பட முடிக்கிறார்கள் என்பதே அவரது ஆய்வின் முடிவு.                         ஆனால்  சில வகையான இசை, உற்பத்தித் திறனை பாதிக்கவும் செய்கிறது. பணியிடத்தில் சளசளவென்று மற்றவர்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தால் அருகில் இருக்கும் ஒருவரால் நன்கு வேலையில் கவனம் செலுத்த முடிவதில்லை. அதே போலவெ பாடல் வரிகள் கொண்ட இசையைக் கேட்டால் கவனம் சற்றுச் சிதறுகிறது. இசை ஒரு பேக் ரவுண்டாக இருந்து பங்கை ஆற்றும் போது அது சிறக்கிறது. அதுவே பல வரிகளைக் கொண்ட பாடலுடன் இருந்தால் பணிக்கும் பாடல் வரிகளுக்குமாக மனம் தாவுகிறது.

 

டாக்டர் ஹாக் (Dr Haake) என்ற பெண்மணி பணியிடங்களில் இசை கேட்பதை நன்கு ஆய்வு செய்துள்ளார்.   அவரது ஆய்வின் முடிவுகள் பல உண்மைகளை அறிவிக்கின்றன:               சிக்கலான இசை அமைப்புடைய இசை கவனத்தைச் சிதற அடிக்கும்.

பாடல் வரிகள் அதன் மெசேஜைக் கேட்கத் தூண்டுவதால் நமது சிந்தனைப் போக்கை மாற்றும். கவனத்தைத் திசை திருப்பும்.   ஒரு வேலையைச் செய்யும் போது இசையைக் கேட்டுக் கொண்டே செய்வது ஒருவருக்கு நன்கு பழக்கமாகி விட்டதென்றால் அது அவரைப் பொறுத்தவரையில் நல்லதையே செய்யும். ஆகவே இசை கேட்கும் பழக்க வழக்கமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

இசை ஒருவரின் மீது வலியத் திணிக்கப்பட்டால் அவரை அது மிகவும் பாதிக்கும். வேலையைச் செய்யவிடாது.

பொதுவாக எந்த வகை இசை நலம் பயக்கும் என்பதையும் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

பாரம்பரிய சங்கீதம் – கர்நாடக இசை போல உள்ளவையும், பாச், விவால்டி ஆகியோரின் இசையும் மனநிலையைச் சீராக்கி பணியிடத்தில் கவனக் குவிப்பை அதிகமாக்கும்.         இயற்கை தரும் இயல்பான இனிய ஓசைகள் மூளைத் திறனை அதிகரிக்கும். சலசலவென ஓடும் ஆற்றின் ஓசை, இலைகளின் அசைவில் எழும் ஓசை, மழை விழும் போது எழும் ஒலி, பறவைகளின் இனிய கானம் என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

வீடியோ கேம் ம்யூசிக் என்பது இன்னொரு ரகம். இதில் உள்ள இசை அமைப்பு விசேஷமாக விளையாடும் திறனை அதிகரிப்பதற்காகவே கம்போஸ் செய்யப்படுகிறது.

இன்னொரு வகையான இசை ஆம்பியண்ட் மியூசிக் எனப்படும். பாரம்பரிய இசைக்குப் பதிலாக இதில் த்வனிக்கும் சூழ்நிலைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வாத்திய இசையான இதில் மிக மெதுவான திருப்பித் திருப்பி வரும் மனதை வருடும் இதமான இசை ஒலி எழும்பும்.

இது தவிர, ஜாஸ், தியான இசை போன்றவையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கேட்பதற்காக உள்ளன.                  இப்போது பிரபலமாகி இருக்கும் பிரபல பாடகர் டினி டெம்பா, “இசை உணர்ச்சியைத் தூண்டுகிறது. அத்துடன் மட்டுமல்ல, வெவ்வேறு மதம், இனம், நாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு லட்சம் பேரை ஆண்பால் பெண்பால் பேதமின்றி ஒரே இடத்தில் சேர வைப்பது இசை தான். இதே போல அரிய காரியத்தை ஆற்ற வல்லவை மிகச் சில தான்” என்கிறார்.

இவர் (பிறப்பு 7-11-1988) லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவரை இப்போது ப்ளிமத் பல்கலைக் கழகம், பேராசிரியர் எடுவார்டோ மிராண்டா தலைமையில் செய்யப்படும் ஒரு ஆய்விற்கு அழைத்துள்ளது. சோதனைக் கூடத்தில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க இவர் இசையைக் கேட்க வேண்டும். இ.இ.ஜி கட்டுப்பாட்டிற்குள் வரும் போது இவரது மூளை இசை கேட்கும் சமயத்தில் என்ன மாறுதலை அடைகிறது என்பதைக் கண்டு பிடிப்பதே ஆய்வின் நோக்கம்.

இசை உணர்ச்சிகளைத் தூண்டும். ஒருவரை அழ வைக்கும்; குதூகலப்படுத்தும்; ஒருவருக்கு இன்பமயமான உணர்வுகளைத் தூண்டும் என்பனவற்றில் விஞ்ஞானியும் இசை வல்லுநரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர். என்றாலும் குறிப்பிட்ட ஒரு இசையைக் கேட்கும் போது உள்ளம் கிளர்ச்சி அடைகிறதா, அமைதியை உணர்கிறதா, ஆனந்தப் படுகிறதா, துயரமடைகிறதா என்பனவற்றைப் பற்றி ப்ளிமத் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தும்.    இப்படிப்பட்ட இசை கேட்கும் நேரத்தில் மூளை எப்படித் தோற்றமளிக்கிறது என்பதும் காணப்படும்.

இறுதியாக ஆய்வின் முடிவுகளை வைத்து இசையை ஒரு சிகிச்சை முறையாக அறிவியல் ரீதியில் அறிமுகப்படுத்துவதும் தீர ஆலோசிக்கப்படும். இந்த இசை தெராபி வந்தால் அது ஆயிரக்கணக்கானோருக்கு நல்ல மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் குறைந்த செலவில் தரும் என்பதில் ஐயமில்லை!

ஆய்வு முடிவுகள் எதை எப்படிச் சொன்னாலும் கூட ஒலியே இல்லாத அமைதியான இடம் பணிக்கு மிக சாதகமான இடம் என்பதில் ஐயமே இல்லை!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜோசெலின் பெல் பர்னெல் (தோற்றம் 15-7-1943- Jocelyn Bell Burnell) வட அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி. முதலில் இந்தப் பெண்மணி தான் ரேடியோ பல்சரைக் (Radio Pulsar) கண்டுபிடித்தார். ஆனால் 1974ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்குத் தரப்படவில்லை. பெல்லின் மேற்பார்வையாளராக இருந்த ஆண்டனி ஹீவிஷுக்குப் பரிசு அளிக்கப்பட்டது. இது அப்போதே பலராலும் கண்டிக்கப்பட்டது. என்றாலும் கூட பெல் அமைதி காத்தார். பின்னால் பல விருதுகளை இவர் பெற்றார். என்றாலும் கூட வட்டியும் முதலும் சேர்த்துக் கிடைத்தது போல 2018க்கான ஸ்பெஷல் ப்ரேக்த்ரூ விருது (Special Breakthrough Prize in Fundamental Physics) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பரிசுத் தொகை 23 லட்சம் பவுண்டுகள் ஆகும். இந்தப் பெரும் தொகையை அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சிறுபான்மை இனத்தினரின் முன்னேற்றத்திற்கும், இயற்பியலில் ஆர்வம் கொண்டு ஆய்வுக்காக அகதிகளாக வரும் மாணவர்களுக்கும் உதவும் வகையில் நன்கொடையாக அளித்து விட்டார். பெரிய கண்டுபிடிப்பிற்காக இவரைப் பாராட்டுவதா, அல்லது இவரது பெரிய மனத்திற்காக பாராட்டுவதா? இரண்டிற்காகவும் இரு முறை இவரைப் பாராட்டுவோம்!

XXXX SUBHAM XXXX

PURANA RESEARCH- PURANA IN ATHARVA VEDA (Post No.5506)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 4 October 2018

 

Time uploaded in London –16-18 (British Summer Time)

 

Post No. 5506

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

The word Purana is found in the Atharva Veda (25-6-4); Ithihasa-Purana occur together in Satapata Brahmana and other Brahmana  period books. This shows that Puranas- Hindu Mythologies– are as old as Vedic literature. But Puranas were constantly updated and so the latest updated versions decided their date. Hindus were great historians and they were updating the history and added it to the existing Puranas. This updates earned a bad name for Puranas and they were classified as the latest books in the Hindu literature. Puranas were meant to give genealogies of Hindu Kings and sutas/bards were singing it in all the places.

 

Atharva Veda  mentions Puranas with the Richs, the Samans and the Yajus (11-7-24)

The Satapata Brahmana (850 BCE composition according to foreign authors) called Ithihasa-Purana and certain other compositions as ‘honey offering to the God’s and commands their daily study (11-5-6-8)

 

In the Chandogya Upanishad, Narada mentioned the subjects he had studied in which Ithihasa- Purana comes immediately after four Vedas. So it is clear by the time of Bramanas, Ithihasa-Purna existed in its original form.

 

There are 18 major Puranas (see my two earliers posts on Puranas for more details). The internal evidence shows that they were written at different periods. By the time of Guptas,they got the present form.

Narrator of most of the Puranas is Romaharshana or his son Ugrasrava. Brahma, Vayu and Matsya Puranas were the oldest of the 18 Puranas. We see a clear pattern in the later Puranas. Brahma Purana is called the Adi (old, original) Purana.

 

Brahmanda Purana followed Vayu;

Padma Purana followed Matsya;

Agni Purana followed Brahma.

 

A comparison of the 12 later Puranas  shows that the version of each of them approximates to one or the other of the three ancient Puranas.

Vishnu Purana came after this.

 

Vayu Purana’s origin itself shows that it is very old. In the olden days Hindus had a very beautiful system which is not seen anywhere in the wolrd. They had conference inside the deep forest for 12 long years. Romaharshana recited the Vayu Purana deep inside the Naimisaranya (Forest named after King Nimi).

They had havans, scholarly deliberations, editing, compiling, revising during the 12 year period. Even daily recitation of it was considered sacred. We see even later day Tamil kings giving grants for reciting Ithihasa- Puranas in the temples.

 

Puranas were relegated to backstage because of some defects:

 

1.Winternitz says that the Puranas were passed into the hands of lower rank priesthood, who used them for the glorification of local deities. Even now we see such a trend in ‘sthala puranas’.

 

 

2.New editors gave wrong origin to many ancient dynasties. As the time passed they mixed up and merged two or three dynasties, because they could not understand them. When the brothers ruled different parts as juniors or a different clan ruled a smaller area the confusion arose (we see such trends in Tamil Chera Kings and Pandya kings; nothing to do with Puranas; just as an example I am giving this)

 

3.A  lot of exaggeration was there because it was for general public.

 

4.Editors who were lacking historical sense gave fabulous ages to ruling dynasties

 

King Alarka of Kasi is said to have ruled 66000 years; Rama ruled for 24,000 years.

But Vedas repeated in numerous places that the human life span is 100 years. Only Mahidasa Aitareya lived for 116 years; Dirgatamas lived for 100 years.

My comments:

 

We see this even in Sumerian history and Tamil Sangam History. wherever thousand comes we have to delete the three zeroes. Patajnjali in Mahabhasya approached this problem in a scientific way and worked out Rama ruled for 24 years.

 

5.We see many kings with same names. It is possible even today. But Puranic reciters or editors got mixed up with them. A Dasaratha ruled Mitanni region (Turkey, Iraq) in 1400 BCE. Another Dasaratha is found before Rama’s father. Most famous Dararatha was Rama’s father. Emperor Asoka’s grandson was also named Dasaratha. When such things came Pauranics recited or concocted new stories.

 

Manu Vaivasvata who was a king is mentioned in the Rig Veda. Later Manu samvarani who was not a king is also mentioned. His son Nabanedhista was shown as the son of Vaivasvata Manu. Two ‘Saryatis’, two Yayatis also led to lot of confusion.

 

  1. Rishi names such as Vasishta and Visvamitra are found in different ages. Actually they are Gotra names. Tamils have lot of Agastyas in different ages in different locations from te Vindhyas to Java  in Indonesia. All Vasithas shown having Arundhati as wife!

 

7.The identification of different persons was carried to an absurd limit when historical persons were confused with mythological beings and even planets or other objects bearing the same names.

 

For instance Indra, Surya/sun and Chandra/moon figure in most of the names from Kashmir to Kandy in Sri Lanka. With all the modern day communication, mass media and social media we sift them. Even then some confusion arises.

 

  1. Puranic editors deliberately introduced divine beings in the life of famous persons. In our time many people called themselves Avatars of so and so or Reincarnation of God etc. Lakhs of people believed them. It happened in the olden days leading to big confusion in later periods. (E.g. Sathya Sai Baba called himself an avatar of Shirdi Sai Baba)

9.Puranic editors added miracles in the lives of many. When great adventures or extraordinary events happened they attributed miracles. When Agastya laid a land route through the Vindhya mountains they called Agastya ‘belittled’ Vindhya mountain (Vindhya Garva Bhanga). When Agastya took a naval force to South East Asia, they interpreted it as Agastya drank the sea. This is a symbolic language. But Puranic reciters without understanding it said that he really drank the ocean. Bhagirata diverted the Ganges into new plains; Indra did it during Vedic times. Parasurama reclaimed saline and of Kerala and converted them as inhabitable area. Several Pandyas did this. But Tamil literature said that the Pandya king threw the spear in anger and the sea went back.

 

In short ignorance, communication gap, exaggeration, poor editing, mix ups, false interpretations, attributing miracles without understanding ancient way of presentation (symbolic language) and deliberate distortions for favors from kings—all these earned the Puranas a bad name.

–subham–

கம்பன் – சோழன் மோதல் கதைகள் (Post No.5505)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 4 October 2018

 

Time uploaded in London –8-55 am  (British Summer Time)

 

Post No. 5505

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை; பர்த்ருஹரி, வள்ளுவர் உடன்பாடு (Post No.5505)

 

பர்த்ருஹரி எழுதிய 300 ஸம்ஸ்க்ருதப் பாடல்களில் 100 பாடல்கள் நீதி சதகத்தில் இருக்கின்றன. பாடல் 11, 12, 13, 14, 15 ஆகியவற்றின் பொருள் உணர்ந்து தெளிவு பெறுவோம்.

 

மூர்க்கன் என்றால் தமிழில் முரட்டுப் பயல், ரௌடி என்று நினைப்போம். ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் மூர்க்கன் என்றால் முட்டாள் என்று பொருள்;  உண்மைதான்

 

மூர்க்கர்கள் முட்டாள்கள்;

முட்டாள்கள் மூர்க்கர்கள்.

 

பர்த்ருஹரி சொல்கிறார்—
शक्यो वारयितुं जलेन हुतभुक्च्छत्रेण सूर्यातपो
नागेन्द्रो निशिताग्कुशेन समदो दण्डेन गोगर्दभौ ।
व्याधिर्भेषजसङ्ग्रहैश्च विविधैर्मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधम् अस्ति शास्त्रविहितं मूर्खस्य नस्त्यौषधिम् ॥ 1.11 ॥

 

சக்யோ வாரயிதும் ஜலேன ஹுதபுக் ச்சத்ரேண சூர்யாதபோ

நாகேந்த்ரோ நிசிதாங்குசேனஸம்தா தண்டேன கோ கர்தபௌ

வ்யாதிர் பேஷஜ ஸங்க்ரஹைர்ஸ்ச விவிதைர் மந்த்ரப் ப்ரயோகைர் விஷம்

ஸர்வஸ்யௌஷதம் அஸ்தி சாஸ்த்ரவிஹிதம் மூர்க்கஸ்ய

நஸ்த்யௌஷதிம் 1-11

 

பொருள்

நெருப்பை நீரால் அணைக்கலாம்;

சூரிய ஒளியை குடையால் மறைக்கலாம்;

அங்குசத்தால் யானையை அடக்கலாம்;

மாடு, கழுதையை குச்சியால் அடக்கலாம்;

நோய்களை மருந்தால் தீர்க்கலாம்;

விஷக்கடிகளை மந்திரம் மூலம் நீக்கலாம்;

இவை எல்லாவற்ரையும் நூல்கள் செப்புகின்றன.

ஆனால் முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை.

2000 ஆண்டு பழமையான சங்கத் தமிழ் நூல் உரைப்பது என்ன?

நன்னன் என்ற மன்னனின் அரண்மனைத் தோட்டத்தில் கீழே விழுந்த மாம்பழத்தை எடுத்த சிறுமிக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். ஊரே கெஞ்சியது- மன்னித்து விடப்பா என்று. ஆயினும் அவன் இணங்க வில்லை. எடைக்கு எடை தங்கக் கட்டிகளைத் துலா பாரம் தருகிறோம் என்றனர். அப்போதும் கேட்கவில்லை முட்டாள் நன்னன்; மூர்க்கன் நன்னன்; உன்னை எங்கள் தலை முறை இனி பாடாது; உன் தலை முறையில் வருவோரையும் பாடோம் என்று சபதம் செய்தனர் தமிழ்ப் புலவர்கள்.

 

400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மொகலாய மன்னன் அவுரங்க சீப் முரடன், வெறியன். இசை, கலைகள் எதுவுமே பிடிக்காது. அக்பருக்கு நேர் மாறானவன்.

 

இதோ இன்னும் ஒரு பாடல்:

 

 

साहित्यसङ्गीतकलाविहीनः
साक्षात्पशुः पुच्छविषाणहीनः ।
तृणं न खादन्नपि जीवमानस्
तद्भागधेयं परमं पशूनाम् ॥ 1.12 ॥

இலக்கியத்தையும் இசையையும் விரும்பாதவன் மிருகம்தான்;

அவனுக்கு கொம்பும் வாலும் இல்லை;

புல்லைத் தின்னாவிட்டாலும் அவனுக்கும் மாட்டுக்கும்

வித்தியாசம் இல்லை

xxx

 

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणो न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूता
मनुष्यरूपेण मृगाश्चरन्ति ॥ 1.13 ॥

 

யேஷாம் ந வித்யா ந தபோ ந தானம்

ஞானம் ந சீலம் ந குணோ ந தர்மஹ

தே மர்த்யலோகே புவிபார பூதா

மனுஷ்ய ரூபேண ம்ருகாஸ் சரந்தி

தவமோ தானமோ இல்லாமல்

கல்வியோ ஞானமோ இல்லாமல்

குணமும் ஒழுக்கமும் இல்லாமல்

வாழ்பவர்களின் உருவம் வேண்டுமானால்

மனிதன் போல இருக்கலாம்;

ஆனால் அவர்கள் மனித ரூபத்தில் உலவும் மாடுகளே.

 

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

 

 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர் – குறள் 410

 

நல்ல நூல்களைக் கற்று விவேகம் அடைந்தோர் மக்கள்;

அவைகளைக் கல்லாதவர் விலங்குகள்.

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாஸனை போஜ மன்னன் மதிக்காதபோது அவன் நாட்டைவிட்டு வெளியேறினான். பின்னர் போஜ மன்னன் சிரமப்பட்டு அவனைத் தேடிக் கண்டுபிடித்து நாட்டிற்கு அழைத்து வந்தான்.

கம்பன் பாடுகிறான்

கம்பனுக்கும் சோழ மன்னனுக்கும் நடந்த சண்டை சச்சரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

 

கம்பனின் மகனான அம்பிகாபதியை, சோழ மன்னன் கொன்றவுடன்

கம்பன் பாடினான்,

 

மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? – என்னை

விரைந்து ஏற்றுக் கொள்ளாத வேந்து உண்டோ? சோழா

குரங்கு ஏற்றுக் கொள்ளாத கொம்பு.

 

இந்த உலகில் நீ ஒருவன்தான் மன்னனா?

உன் நாடு மட்டும்தான் வளமையான நாடு என்று எண்ணுகிறாயா?

உன்னை நம்பித்தான் நான் தமிழ் கற்றேனா?

என்னை ஏற்றுக் கொள்ளாத நாடு உண்டா?

குரங்கை ஏற்றுக் கொள்ளாத மரக்கிளை உண்டா? (இல்லை)

 

xxx

वरं पर्वतदुर्गेषु
भ्रान्तं वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः
सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥

வரம் பர்வத துர்கேஷு

ப்ராந்தம் வனசரை ஸஹ

ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ

ஸுரேந்த்ர பவனேஸ்வபி

 

பொருள்

முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட

காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்.

 

 

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற்

கடும்புலி வாழும் காடு நன்றே- வெற்றி வேற்கை

 

xxx

शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयागमा
विख्याताः कवयो वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।

तज्जाड्यं वसुधादिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका हि मणयो यैरर्घतः पातिताः ॥ 1.15 ॥

 

சாஸ்த்ரோபஸ்க்ருத சப்த ஸுந்தர கிரஹ சிஷ்யப்ரதேயாகமா

விக்யாதா ஹா கவயோ வசந்தி விஷயே யஸ்யப்ரபோநிர்தனாஹா

தஜ்ஜாட்யம் வஸுதாதிபஸ்ய கவயஸ்வர்தம் விநாபீஸ்வராஹா

குத்ஸ்யாஹா ஸ்யுஹு குபரீக்ஷகா ஹி மணயோ யைரர்கதஹ பதிதாஹா

 

 

பொருள்

சீடர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், புகழ்மிகு கற்றோரும் கவிஞர்களும் ஒரு நாட்டில் வறுமையில் வாடினால், ஏழ்மையில் உழன்றால்,

அந்த நாட்டு மன்னனே முட்டாள், உணர்ச்சியற்ற ஜடம்தான்;

பணமே இல்லாத போதும் கற்றோரும் அறிவாளிகளும் பெரியோரே, புகழுடையோரே. திறமையற்ற ஒருவன் ரத்தினக் கல்லுக்கு மட்டமாக விலையை மதிப்பிட்டால் அது ரத்தினத்தின்   பிழையன்று; பொற்கொல்லனின் பிழையே!

 

கம்பன் பாடுகிறான்

காதம் இருபத்து நான்கு ஒழியக் காசினியை

ஓதக் கடல் கொண்டு ஒளித்ததோ?– மேதினியில்

கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா! நீ முனிந்தால்

இல்லையோ எங்கட்கு இடம்?

 

உலகத்தின் சுற்றளவு 25,000 மைல்; உன் சோழ நாடோ 240 மைல்தான் (காதம்= 10 மைல்); மற்ற நாடுகள் எல்லாம் சுனாமி யில் மூழ்கி விட்டது என்று நினைத்தாயா; சோழ நாட்டில் தேன் சொட்டும் கொல்லி மலையை ஆளும் அரசே (மூடா) ! நீ கோபப் பட்டால்  எனக்குப்  போவதற்கு இடமே இல்லையா?

 

ஆக கவிஞர்கள் யாருக்கும் அஞ்சாத தீரர்கள். ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்’ போன்றவர்கள்; மூடர்களையோ மூர்க்கர்களையோ ஏற்க மாட்டார்கள்.

 

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

 

 

குறள் 834, 835

 

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்- 834

 

நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத  முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை.

 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான் புக்கழுந்தும் அளறு-835

 

ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன்.

 

–சுபம்–

அற்புத தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி! (Post No.5504)

WRITTEN BY S NAGARAJAN

Date: 4 October 2018

 

Time uploaded in London – 5-52 AM (British Summer Time)

 

Post No. 5504

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

அற்புத தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி!

 

.நாகராஜன்

நம்முடைய காலத்திலேயே வாழ்ந்து நமக்கு சுருக்கமான வார்த்தைகளில் பெரிய அரிய உண்மைகளை விண்டுரைத்தவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே.கிருஷ்ணமூர்த்தி.

பெருத்த சிந்தனையாளர். தத்துவ ஞானி. ஆன்மீகத்தை அள்ளித் தந்தவர். மனம், தியானம், உலகியல் வாழ்வு, சமூக மாற்றம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை எளிமையாக விளக்கியவர்.

அவரது சொற்களிலேயே அவரது தத்துவம் இது தான்:

உன்னை மாற்றிக் கொள் (CHANGE YOURSELF)

நீயே தான் உலகு (YOU ARE THE WORLD)

1895ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மதனபள்ளியில் தெலுங்கு அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஜே.கே. தியாஸபி இயக்கத்தில் ஈடுபட்டு பெரும் புகழ் பெற்றார். அவரது உயரிய ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பதே ஒரு அனுபவம் என்ற நிலையில் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் அவரது உரைகளைக் கேட்டு இன்புற்றனர்; பயனுற்றனர்.

1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் நாள் அவர் மறைந்தார். அவரது வாழ்வு திடுக்கிடும் திருப்பங்கள் நிரம்பிய ஒன்று. பரபரப்பூட்டும் சம்பவங்கள் அடங்கியது. வியப்பூட்டும் உயரிய தியாகங்கள் நிறைந்தது.

90 வயது வாழ்ந்த அவரது நீண்ட வாழ்வில் அவர் எழுதிய நூல்கள் பல. ஆற்றிய உரைகள் பல. அவரது அனைத்துச் சொற்பொழிவுகள், எழுத்துக்கள் 17 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 1933 முதல் 1967 முடிய உள்ள காலகட்டத்தில் அடங்குபவை இவை.

இது 50 தொகுதிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 தொகுதிகளின் விவரம் இதோ:-

  • Volume 1 (1933–1934): The Art of Listening(1991).
  • Volume 2 (1934–1935): What Is the Right Action?(1991)
  • Volume 3 (1936–1944): The Mirror of Relationship(1991).
  • Volume 4 (1945–1948): The Observer Is the Observed(1991)
  • Volume 5 (1948–1949): Choiceless Awareness(1991)
  • Volume 6 (1949–1952): The Origin of Conflict(1991).]
  • Volume 7 (1952–1953): Tradition and Creativity(1991).
  • Volume 8 (1953–1955): What Are You seeking?(1991).
  • Volume 9 (1955–1956): The Answer is in the Problem(1991).
  • Volume 10 (1956–1957): A Light to Yourself(1991).[
  • Volume 11 (1958–1960): Crisis in Consciousness(1991).
  • Volume 12 (1961): There is No Thinker, Only Thought(1991).
  • Volume 13 (1962–1963): A Psychological Revolution(1992).
  • Volume 14 (1963–1964): The New Mind(1992).
  • Volume 15 (1964–1965): The Dignity of Living(1992).
  • Volume 16 (1965–1966): The Beauty of Death(1992)
  • Volume 17 (1966–1967): Perennial Questions(1992)

இந்தப் பதினேழு தொகுதிகளும் சுமார் 5500 பக்கங்கள் கொண்டவை. ஜே.கே எழுதியவை 2412 நூல்களில் அடங்கும் என்றும் சுமார் 4580 வெளியீடுகளைக் கொண்டது என்றும் இவை 53 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிகிறது. 46822 நூலகங்களில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவரது படைப்புகள் சுமார் இரண்டு கோடி வார்த்தைகளை உள்ளடக்கியது. 75 புத்தகங்கள், 700 ஆடியோகேஸட், 1200 வீடியோ கேஸட் உள்ளிட்டவை இப்போது கிடைக்கின்றன.  2010இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின் படி 22 மொழிகளில் இவரது படைப்புகள் சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இப்போது நிகழ்நிலைஆன் லைன் –  மூலம் படிக்கவும் இவரது நூல்கள் கிடைக்கின்றன.

இவரது சிந்தனையால் கவரப்பட்ட அறிஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் மிக நீண்டது. இடம் கருதி சிலரை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

George Bernard Shaw, Henry Miller, Anne Morrow Lindbergh, Alan Ginsburg, Federico Fellini, Khalil Gibran, Pandit Jawaharlal Nehru, Indira Gandhi, Erick Fromm, Prof. David Bohm, Charlie Chaplin, Greta Garbo, John Kenneth Galbraith, Svetlana (Stalin) Peters, Dalai Lama.

இவரது உரையைக் கேட்ட அல்டஸ் ஹக்ஸ்லி,புத்தரின் உரையைக் கேட்பது போல இருக்கிறது. அப்படிப்பட்ட வலிமை, நுட்பம், அதிகாரபூர்வமான கருத்துக்கள் என்றார்.

ஜே.கேயின் கருத்துக்கள் உண்மை ஒளியைக் காண விழைவோருக்கான ஒரு அபூர்வ பொக்கிஷமாகும்.

படிப்போம்; உயர்வோம்!

***

 

 

 

Fools are Beasts without Tails- Bhartruhari and Valluvar agree! (Post No.5503)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 October 2018

 

Time uploaded in London –17-11  (British Summer Time)

 

Post No. 5503

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Bhartruhari’s Niti Sataka 11,12,13,14

 

There are some stories to illustrate the points raised in Bhatruhari’s slokas/verses. I will give some stories from Tamil and Sanskrit books.

 

शक्यो वारयितुं जलेन हुतभुक्च्छत्रेण सूर्यातपो
नागेन्द्रो निशिताग्कुशेन समदो दण्डेन गोगर्दभौ ।
व्याधिर्भेषजसङ्ग्रहैश्च विविधैर्मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधम् अस्ति शास्त्रविहितं मूर्खस्य नस्त्यौषधिम् ॥ 1.11 ॥

 

11:Fire can be quenched by water

Heat of the sun can be kept off by an umbrella

A wild elephant can be guided by a sharp hook

An or an ass by stick

Sickness can be subdued by the help of doctors

Poison by the charms.

A cure has been ordained by the shastras/scriptures for everything

But there is no medicine for the cure of fools.

 

Kamban is a great Tamil poet who composed over 10,000 verses to sing the glory of Rama. He lived about 1000 years ago in Tamil Nadu. Now and the he had some quarrels with the Chola King.

 

Then he composed a verse saying ,

 

Look! your country is only 24 Katham (appr. a katham is 10 miles). Do you think that the rest of the earth is covered by sea? O Kolli Hill ruler! Haven’t I got any other place to go?

 

When Kamban’s son Ambikapathy was killed by the Chola king, In another verse he asks,

Is there a tree branch which wont entertain a monkey?

 

A learned person will be welcomed by all.

 

Nannan was a cruel and stupid king. Once a teenage girl picked a mango that was fallen on the ground in the royal garden. Immediately she was presented before the king and he passed  death sentence on her. The whole town came together in support of the girl and apologized to the king on her behalf. He was adamant. Then they promised him to give gold equal to the weight f the girl. but yet he insisted that she should be executed. All the Tamil poets cursed him that his generation wont be sung by any Tamil poet. This happened 2000 years ago.

 

The greatest of the Indian poets, Kalidasa also had quarrels and arguments with his contemporary, king Bhoja. when he migrated to other countries Bhoja begged him to return. he had to use various tricks o bring him back.

साहित्यसङ्गीतकलाविहीनः
साक्षात्पशुः पुच्छविषाणहीनः ।
तृणं न खादन्नपि जीवमानस्
तद्भागधेयं परमं पशूनाम् ॥ 1.12 ॥

 

12, The man who has no sense of literature and music is like a beast, though he has not got horns and a tail; he may not eat grass, but yet he lives a life exactly like that of the cattle.

 

(The Mogul emperor Aurangzeb was a man who never liked music or literature; quite opposite to Akbar)

 

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणो न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूता
मनुष्यरूपेण मृगाश्चरन्ति ॥ 1.13 ॥

 

13.Those in whom is neither wisdom nor penance, nor liberality nor  knowledge, nor good disposition, nor virtue, nor righteousness may live in the world of mortals in the form of men, but pass through the world like beasts encumbering the earth.

वरं पर्वतदुर्गेषु
भ्रान्तं वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः
सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥

 

14 it is better to wander in a mountain pass with the wild beasts than to live in the palace of the gods with a fool.

 

(There is a Tamil Verse: better live in forest infested with tigers than to live under a tyrant king)

 

शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयागमा
विख्याताः कवयो वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।
तज्जाड्यं वसुधादिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका हि मणयो यैरर्घतः पातिताः ॥ 1.15 ॥

 

If the learned and reputed poets, whose literary creations are worth learning and emulating by their disciples, are poor and wealthless in a kingdom, then the king himself must be stupid and insensitive! The wise and the learned are already great and famous even without any wealth. If an incompetent jeweller underestimates the value of a gem, then it is his fault and not of the gem.

Tamil poet Valluvar in the Tamil Veda Tirukkural says

Beasts are lower than men in the scale of creation; even so are fools before those who have delved deep in the mines of knowledge – Kural 410

 

Valluvar and Bhartruhari agree that ignorant people are like beasts.

 

In another couplet he says,

 

A deluded fool is shameless, aimless in life, unfeeling, languid. He does not safeguard anything- Kural 833

 

He also said,

In one brief birth a fool can gain

Enough hell for seven births of pain- Kural 835

 

–subham– 

வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்! மநு நீதி நூல்- PART 28 (Post No.5502)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 October 2018

 

Time uploaded in London –8-50 am  (British Summer Time)

 

Post No. 5502

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மநு நீதி நூல்- PART 28

MANAVA DHARMA SASTRA FOURTH CHAPTER CONTINUED……………..

வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்! (Post No.5502)

மநு நீதி நூலின் நாலாவது அத்தியாயத்திலுள்ள சுவையான விஷயங்களை முதலில் பகிர்வேன்; முதல் 26 கட்டுரைகளில் நிறைய அதிசயங்களைக் கண்டோம்.

 

பள்ளிக்கூட மாணவர்களுக்கு வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று கிறிஸ்தவ நாடுகள் அமல் படுத்திய வழக்கத்தை இன்று கடைப் பிடிக்கிறோம். ஆனால் கிறிஸ்துவுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த, ரிக் வேதம் புகழும், ஸரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடும், மநு தர்ம சாஸ்திரமோ மாதத்துக்கு குறைந்தது ஆறு நாட்கள் விடுமுறையை அமல் படுத்தியது. சில மாதங்களில் ஆறுக்கும் மேலான நாட்கள் விடுமுறை. அதிசயத்திலும் மஹா அதிசயம்– 4000 ஆண்டுகளாக இன்று வரை வேத பாடசாலைகள் இதைப் பின்பற்றி வருகின்றன.

 

மாதத்தில் இரண்டு அஷ்டமிக்கள்

மாதத்தில் இரண்டு சதுர்தஸிக்கள்

மாதத்தில் பௌர்ணமி, அமாவாஸை

 

முதலியன வேதம்படிக்க விலக்கப்பட்ட நாட்கள்.

 

இந்தப் பகுதியில் மநு ஒரு விஞ்ஞானி என்பதையும் காட்டுகிறார். அவர் பெரிய ஸவுண்ட் (SOUND ENGINEER) எஞ்சினீயர். இடி இடித்தால், கன மழை பெய்தால், பூகம்பம் ஏற்பட்டால், விண்கற்கள் விழுந்தால் 24 மணி நேரம் பள்ளி விடுமுறை (SLOKAS 103, 104, 105). ஆதாவது வேத அத்தியயனம் கிடையாது.

 

இன்று லண்டன், நியூயார்க் முதலிய இடங்களில் இருந்து வரும் வானவியல் (ASTRONOMY MAGAZINES) பத்திரிக்கையில் மாதம் தோறும் எந்த நாள் இரவில் வானத்தின் எந்தப்பகுதியில் விண்கற்கள் வீழ்ச்சி (METEORITE SHOWERS) வரும் என்று அட்டவணை தருகிறார்கள். பூமியில் ஒவ்வொரு நிமிடமும் டன் கணக்கில் விண்கற்கள் விழுகின்றன. அவற்றில் 99 சதவிகிதம் காற்று மண்டலத்திலேயே பஸ்மமாகி (சாம்பல்) விடும்.சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பூகம்பம், விண்கல் வீழ்ச்சி முதலியவை குறித்துப் பேசியிருப்பது, அதுவும் சட்டப் புத்தகத்தில் பேசியிருப்பது, ஆச்சர்யமான விஷயம். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை போலும்.

அது மட்டுமல்ல; பிராஹ்மணன், பாம்பு, க்ஷத்ரியனைப் (SLOKA 135, 136) பகைக்காதே- உன்னை அடியோடு அழித்து விடுவர் என்று எச்சரிக்கிறார்.

நல்லது செய்பவனுக்கு கெடுதியே வராது என்று (SLOKA 146) கண்ண பிரான் பகவத் கீதையில் (6-40) மொழிந்ததை இவரும் செப்புகிறார்.

 

சில மிருகங்கள் (SLOKA 113)  குறுக்கே போனால் வேத அத்தியனம் கிடையாது என்றும் உரைக்கிறார். பூனை, பாம்பு, தவளை உள்பட. இது அந்தக் கால (மூட) நம்பிக்கை போலும்.

 

சில மிருகங்களின் ஒலி கேட்டாலும் வேதப் படிப்பு ‘ஸ்டாப்’!

 

சுடுகாடு, தீட்டு விஷயங்களைச் சொல்லிவிட்டு, அந்தக் காலங்களில் வேத படிக்காதே என்று ஆணை இடுகிறார்

 

இன்றைய பகுதியில் எந்தக்  காலங்களில் எப்படி வேதம் படிக்க வேண்டும் என்று இயம்புகிறார்.

 

அது மட்டுமல்ல மாமிசம் (SLOKA 131) சாப்பிட்டால் வேதம் படிக்காதே என்பார். காரணம்- அந்தக் காலத்தில் மூன்று ஜாதிகள் வேதம் பயின்றன.

வாஹன சவாரியின் (SLOKA 120) போது வேதம் சொல்லக் கூடாது என்று சொன்னவர் குதிரை, ஒட்டக சவாரியுடன் கடற் பயணத்தையும் குறிப்பிடுகிறார். ஆனால் பிராஹ்மணர்கள் வெளி நாடு செல்ல மநு தடை போட்டதையும், தமிழ்ப் பெண்கள் வெளி நாடு செல்ல தொல்காப்பியன் தடை போட்டதையும் முன்னரே எழுதியுள்ளேன். ஆகவே மநு சொல்லுவது மூன்று ஜாதியினருக்கு என்பது என் ஊகம்.

 

வேதம் என்பது ஒலி அடிப்படையில் அமைந்த அறிவியல் நூல். ஆகையால் அவர் பல சப்தங்கள், அதிர்வுகள் ஏற்படுகையில் வேதத்தைப் பயிலாதே என்று சொல்லுகிறார்.

 

ஒரு (SLOKA 121) ஸ்லோகத்தில் ரிக், யஜூர், சாம வேதம் ஆகிய மூன்றும் முறையே தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள் (இறந்த முன்னோர்) ஆகியோருக்கானவை என்ற புதுக் கருத்தை  முன்வைக்கிறார்.

ஸ்லோகம் 138 மிகவும் பிரஸித்தமான ஸ்லோகம்

உண்மையச் சொல்; இனிமயானதை மட்டும் சொல்; உண்மையே ஆனாலும் கசப்பானதைச் சொல்லாதே

 

இப்படிப் பல சுவையான விஷயங்களை கீழே உள்ள ஸ்லோகங்களில் காண்க. நாலாவது அத்தியாயத்திலுள்ள வேறு அதிசயங்களை அடுத்த கட்டுரையில் நோக்குவோம்

 

கீழேயுள்ள இணைப்புகளைக் காண்க—

 

 

 

 

 

 

–subham-

இன்கா நாகரீக அதிசய முடிச்சு மொழி – பகுதி 2 (Post No.5501)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 October 2018

 

Time uploaded in London –7-27 am  (British Summer Time)

 

Post No. 5501

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நேற்று வெளியான முதல் பகுதியில் தென் அமெரிக்காவின் பெரு, சிலி நாடுகளில் உள்ள, சூரிய தேவனை வழிபடும், இன்கா நாகரீகத்தின் (Inca Civilization) அற்புதமான நிர்வகத் திறன் பற்றியும் முடிச்சு மொழி இந்தியாவின் ஸரஸ்வதி- ஸிந்து சமவெளி நாகரீகத்தின் புரியாத எழுத்தின் புதிரை விடுவிக்க எப்படி உதவலாம் என்றும் விளக்கினேன்.

இன்கா இளவரசிக்கும் ஸ்பெயின் நாட்டு ஆக்ரமிப்பாளனுக்கும் பிறந்த கவிஞர் கார்ஸிலாஸோ டெ லா வேகா 1609-ம் ஆண்டில் முடிச்சு மொழியின் மூலம் அவர்கள் என்ன என்ன எழுதினர் என்று விளக்கியிருந்தார். அவர் ஒரு துப்புத் தகவல் கொடுத்திருந்தார். இன்காக்கள் கயிற்றில் போடும் முடிச்சு மூலம், அவர்கள் போட்ட சண்டைகள், வாதப் பிரதிவாதங்கள், சம்பாஷணைகள், வரி விதிப்பு வசூல், நிலுவை விவரம், யார் யார் வந்து மன்னர்களைப் பார்த்தனர் என்றும் எழுதிவைத்ததாக 400 ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார். முடிச்சுகளில் எண்களைக் காண்பது எளிதாக இருந்தது. ஆனால் வரலாற்றைக் காண்பது இதுவரை புதிராக இருந்தது.

 

இப்பொழுது ‘கிணற்றில் கல் விழுந்துவிட்டது’- புதிரும் குதிருக்குள் இருந்து வெளியே வந்துவிட்டது!

அவர் பல முரணான தகவல்களைக் கூறியிருந்ததால் இதுவும் ஒரு ‘கப்ஸா’வோ என்று கருதியோரும் உண்டு. ஆயினும் கிடைத்த முடிச்சுக் கயிறுகளில் மூன்றில் ஒரு பகுதி முடிச்சுக் கயிறுகள் வித்தியாசமாக இருந்தன.

 

1920ம் ஆண்டில் நியூயார்க்கிலுள்ள அமெரிக்க இயற்கை வரலாற்றுக் காட்சியகத்தில் உள்ள முடிச்சுகளை ஒரு மானுடவியல் வல்லுநர் ஆராயத் தொடங்கியதிலிருந்து ஆர்வம் பிறந்தது. ஒரு கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கும் உயரம் அது 10 அல்லது 100 அல்லது 1000 என்று காட்டுவதை (ரிக் வேதத்தில் உள்ள டெஸிமல் ஸிஸ்டம்/ தஸாம்ச முறை) அவர் கண்டுபிடித்தார்.

 

அது சரி, 76 என்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். அது என்ன 76? என்று தெரியவில்லையே என்று ஹர்வர்ட் பல்கலைக்கழக காரி உர்டன் (Gary Urton) 25 ஆண்டுகளாக ஆராய்ந்தார்.

 

அவர் உலகம் முழுதும் மியூஸியங்கள், தனியார்களிடம் உள்ள 900 கீ பூ (Khipu) முடிச்சுக் கயிறுகளைப் படம் பிடித்தார்; பட்டியலிட்டார்; நுணுகி ஆராய்ந்தார். அப்போது அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. முடிச்சுப் போடும் திசை, முடிச்சின் தன்மை, என்ன வண்ன நூலில் முடிச்சு போடப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் என்று தெரிந்தது. 2012ஆம் ஆண்டு அவருக்கு ஞானோதயம் பிறந்தது. ஒரு முடிச்சு இருக்கும் திசையை வைத்து அந்தப் பணம் வசூலிக்கப்பட்டதா இல்லையா என்று அவர்கள் ‘எழுதி’ இருந்தது விளங்கியது. இடது பக்கம் முடிச்சு முடிகிறதா, வலது பக்கம் முடிச்சு முடிகிறதா என்பதெல்லாம் ஒரு செய்தி! ஆக 201ம் ஆண்டில், இதில் கொடுத்தவரின் தகுதி  அந்தஸ்து, அவர் பெயர் எல்லாம் இருப்பதை உணர்ந்தார்.

2016 ஆம் ஆண்டில் மேலும் புதியன கண்டார். அவருடைய அதிர்ஷ்டம். 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறு இன/ஜதி மக்களிடையே வசூலித்த பணம் பற்றிய விவரமும் (ஸ்பானிய மொழியில்) ஆறு முடிச்சுக் கயிறுகளும் இருந்தன. அதன் பின் 132 கயிறுகளை ஆரய்ந்ததில் அக்காலத்தில் ஸ்பானிய ஆக்ரமிப்பாளர் எழுதிய விஷயங்களும் முடிச்சுகளும்  ஒரே விஷயத்தைச் செப்பின. 132 பேர் செலுத்திய வரிப்பணம் பற்றிய தகவல் அவை.

 

அவரிடம் ஒரு மாணவர் படித்து வந்தார். அவர் பெயர் மான்னி மேற்றானோ. அவர் இன்கா ஜாதி. ஆனால் ஆக்ரமிப்பாளரின் ஸ்பானிய மொழி பேசுபவர். ஆக இன்னும் நன்றாக விளங்கியது. அவர் பெரிய முடிச்சவிக்கி!

 

அந்தக் கயிறுகளில் உள்ள பாணி (ஸ்டைல்/ பேட்டர்ன்) என்ன இனம் என்று காட்டுவதைக் காண்பித்தார்.  இதை வாஷிங்டன் பல்கலைக் கழக கீ பூ முடிச்சு ஆராய்ச்சியளார் பிடித்துக் கொண்டு, இதில் கதை, வரலாறுகளும் இருக்க முடியும் என்ற கோணத்தில் ஆராய்ந்தார். அவரைப் போலவே பிரிட்டனிலுள்ள செயின்ட் ஆன்றூஸ் பல்கலைக் கழக  ஸபீன் ஹைலண்டும் ஆராய்கிறார். அவர் தொலை தூர தென் அமெரிக்க கிராமங்களுக்குச் சென்று படம் எடுத்தார். கீ பூ பயன்படுத்துவோரைப் பேட்டி கண்டார். பெரு நாட்டின் லிமா நகரிலுள்ள ஒரு பெண்மணி தொலைதூர கிராமத்தில் ஒரு சர்ச்சில் பாதாள அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கீ பூ – கயிறுகள் பற்றித் தகவல் கொடுத்தார்.

பல மாதங்களுக்கு நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் அந்த கீ பூ முடிச்சுக் கயிறுகளை தரிசிக்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டியது. ஆனால் அந்த இனத்தின் தலைவர் ஒரு சமூக விழாவில் கலந்துகொள்ள வேறு ஒரு ஊருக்குப் போவதால் இரண்டு நாட்களுக்குள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யலாம என்ற ஆணை பிறந்தது.

ஹைலண்டும் விடாப்பிடியாக அதைப் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒவ்வொரு பிரதானக் கயிற்றிலிருன்டுந்து பல சின்னக் கயிறுகள் தொங்குவதையும் அவைகளில் முப்பரிமாணத்தில் தகவல் கோர்க்கப்பட்டிருப்பதையும் அறிந்தார். வண்ணங்கள் வெவ்வேறு; முடிச்சின் சிக்கல்கள் வெவ்வேறு; பலவிதப் பிராணிகளின் ரோமமங்கள் வேறு.

 

அந்தக் கிராம மக்கள் கீ பூ என்பது ‘பிராணிகளின் மொழி’ என்று கூறியதற்கு அவருக்கு விளக்கமும் கிடைத்தது. 95 வகைகளைக் கண்டவுடன் அவற்றில் சில எழுத்துக்களையோ சொற்களையோ

குறிக்கின்றன என்று அறிந்தார். இரண்டு கலர் ரிப்பன்கள் கட்டப்பட்ட கயிறு இரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது என்றவுடன் இவர் ஊகத்தில் அதன் பெயரைக் கண்டுபிடித்தார். கிராம மக்களுடன் பேசியபோது அப்படி ஒரு இனம் இருப்பது உண்மையே என்றும் அறிந்தார்.

சில பட எழுத்துகள் போன்றவை; சில அசைச் சொற்கள் (Ideographic, syllbic) உடையவை; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வண்ணங்களும் பின்னப்பட்ட பாணிகளும், முடிச்சின் கன பரிமாணமும் பல எழுத்துக்களையும் சொற்களையும் காட்டின. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பெரு நாட்டில் தங்கி ஆராயப் போகிறார். ஸ்பானியப் படை எடுப்பாளர் அந்தக் காலத்திலேயே (1530ம் ஆண்டு) கீ பூ மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கியதால் அவர்கள் ஸ்பானிய மொழியில் எழுதியதையும் முடிச்சு மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. மேலும் பல புதிய விஷயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உளது.

இது போல இந்தியர்களும் ஆரிய-திராவிட வாதத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு புதிய கண்ணோட்டத்தில் ஸரஸ்வதி- சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்தல் அவசியத் தேவை ஆகும்.

 

நியூ ஸைன்டிஸ்ட் New Scientist வார இதழில் ஆங்கில மூலத்தில் முழு விவரமும் உளது; கண்டு மகிழ்க.

 

–சுபம்–