ஈயடித் தர்ப்பணக் கதை! (Post No.5150)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 26 JUNE 2018

 

Time uploaded in London –  15-10 (British Summer Time)

 

Post No. 5150

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும் — குறள் 405

பொருள் :– கல்லாதவன் மதிப்பு, அவன் வாயைத் திறந்தவுடன் தெரிந்துவிடும்

ஈயை அடித்து தர்ப்பணம் செய்த போலி பிராமணன் கதை!!

ஒரு கிராமத்தில் பெரிய அக்ரஹாரம். அங்கு வைதீக விஷயங்கள், மந்திரங்கள் தெரியாத ஒருவர் எல்லா சடங்குகளும் தெரிந்தது போல நடிப்பார். தனிமையில் போய் ஸந்தியா வந்தனம் முதலிய கிரியைகள் செய்து வருவதாகச் சொல்லி ஏமாற்றி வந்தார்.

 

ஒரு சமயம், ஒரு முழு ஸூர்ய கிரஹணம் வந்தது. அது போன்ற சமயங்களில் எல்லோரும் ஆற்றங்கரைக்குப் போய் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆகையால் இந்த போலிப் பிராஹ்மணனும் அவர்களுடன் போக நேரிட்டது.

 

எல்லோரும் ஆற்றங்கரையில் ஸ்நாதிகளைச் செய்து தர்ப்பணம் பண்ணத் துவங்கினர். இவருக்குப் பயம்; இன்று நமது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தார். ஆகையால் மிகவும் கவனமாக அருகிலுள்ள பிராஹ்மணன் என்ன எல்லாம் செய்கிறார் என்று பார்த்து அதன் படியே செய்தார். மந்திரத்தை மட்டும் சொல்லுவது போல வாயை அசைத்து பாவனை செய்தார்.

 

 

அவர் பூணூலை இடம் மாற்றினால், இடப்பக்கமாகவும், வலம் மாற்றினால் வலப்பக்கமாகவும் மாற்றி விரைவாகச் செய்து கொண்டிருந்தார். இவருடைய துரத்ருஷ்டம், இவர் எந்தப் பிராஹ்மணனைப் பார்த்து தர்ப்பணம் செய்தாரோ அந்தைப் பிராஹ்மணன் முதுகில் ஒரு ஈ உட்கார்ந்தது. அவர் ஓங்கி ஒரு அடி அடித்து அதை விரட்டினார். அதைப் பார்த்த போலி பிராஹ்மணனும் முதுகில் ஓங்கி அடித்துக் கொண்டார். மற்றொரு ஈ இன்னொரு பக்கம் உட்காரவே உண்மைப் பிராஹ்மணன் அந்தப் பக்க முதுகில் ஒரு அடி அடித்து ஈயை விரட்டினார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த போலி பிராஹ்மணன் அதைப் பார்த்து அப்படியே செய்ய எல்லோருக்கும் தெரிந்துவிட்டது இது ஒரு சந்தேஹக் கேஸு என்று.

 

சிலர் தைரியமாக அவரிடம் வந்து ஏனய்ய இப்படிச் செய்தீர்? என்று கேட்க, ஓ, அதுவா? எனக்கு ஈயடிக்கும் மந்திரத்தின் பொருள் தெரியாது; அவர்தான் ஈயடி தர்ப்பண மந்திரம் அறிந்தவர் என்று சொல்ல அனைவரும் ‘கொல்’ என்று சிரித்தனர். எல்லோரும் பிடிப்பதற்குள் அவர் ஓடிப் போய்விட்டார்.

தமிழில் ‘ஈயடிச்சான் காப்பி’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. இதை வைத்துத்தான் அந்த சொற்றொடரும் வந்தது போலும்!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.

அறிவாளிகளின் சபையில் முட்டாள் எளிதில் அகப்படுவான்.

 

(பழைய நூலில் கிடைத்த கதை!)

 

–சுபம்—

 

காந்திஜி : ஹரிலால், மணிலால்! (Post No.5148)

Written by S NAGARAJAN

 

Date: 26 JUNE 2018

 

Time uploaded in London –   7-00 AM (British Summer Time)

 

Post No. 5148

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காந்திஜி : ஹரிலால், மணிலால்!

 

ச.நாகராஜன்

1

மஹாத்மா காந்திஜியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். உபசார வார்த்தைகளுக்காக சொல்லப்படும் கூற்று அல்ல இது. உண்மையிலேயே உலகமே கண்டிராத அளவு அவர் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் அவரது சத்தியத் தேடல்கள், இறைவனுடன் பேசியது, உள்ளிருந்து எழுந்த குரலின் வாயிலாக தேச மக்களை உரிய வழியில் நடத்தியது, அந்தரங்கம், தவறுகள், ஒப்புதல்கள், முதலிய அனைத்தும் அடங்கும்.

 

அற்புதமான ஒரு சரித்திரம் மஹாத்மாவின் சரித்திரம்.

அவரின் வாழ்க்கையில் இணைந்து பிணைந்த அவரது மகன்களின் வாழ்க்கையும் கூட இதனால் திறந்த புத்தகம் ஆனது.

 

இது அவர்களை சற்று சங்கடப்படுத்தியது என்னவோ உண்மை!

 

அனைவருமே மஹாத்மா ஆக முடியாது, அல்லவா!

ஹரிலால் ஒரு சமயம் காந்திஜியிடம் கூறினார் இப்படி: “எல்லோருக்கும் தெரியும்படி இப்படிக் கண்டிப்பதை விட எங்களைத் தனியே கூப்பிட்டு பிரம்பால் அடிக்கலாம்

(Harilal remarked to Gandhi later in life that instead of “reprimanding us publicly–we would have preferred if you caned us privately” (p. 109 of the book – Gandhi’s Prisoner?: The Life of Gandhi’s Son Manilal).

 

 

ஹிந்து காந்தியாக இருந்த சனாதனி காந்தி ஹிந்து மதத்தின் பால் ஆழ்ந்த பற்று கொண்டவர். சிறந்த ஹிந்துவாக அவர் விளங்கியதாலேயே அவர் இதர அனைத்து மதங்களையும் சமமாக ஒப்புக் கொண்டார்.

 

     அவரது மகனான ஹரிலால் (1888 -1948) திடீரென்று இஸ்லாமிற்கு மாறி அப்துல்லா ஆனார்.

இதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை; ஒப்புக் கொள்ளவும் இல்லை.

 

இப்படி மதம் மாறுவது அவரது பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு ஆகாது என்று அவர் நம்பினார். அவர் சென்றதால் ஹிந்து மதத்திற்கு ஒரு நஷ்டமும் இல்லை; அவரை இஸ்லாமில் சேர்த்தது உண்மையில் பலஹீனமான ஒன்று என்று அவர் எழுதினார். சுத்தமில்லாத ஹ்ருதயம் உள்ள ஒருவன் மதம் மாறினால், அது கடவுளையும் அவனது மதத்தையும் மறுத்தது போல ஆகும் என்றார் அவர். எனது முஸ்லீம் நண்பர்களை நான் கேட்டுக் கொள்வது, அவர்கள் அவரது கடந்த காலத்தை

 

சோதித்துப் பார்க்கட்டும், அப்போது இந்த மதமாற்றம் ஆன்மா இல்லாத ஒன்று என்று அவர்களுக்குத் தெரிய வந்தால் அதை அப்படியே அவரிடம் சொல்லி அவரைத் துறந்து விட வேண்டும் என்பது தான் என்றார் அவர்.

 

அவரது எழுத்தை அப்படியே கீழே பார்க்கலாம்:

The statement issued to the Press on 2-6-1936, under the title “To My Numerous

Muslim Friends”, regarding Harilal’s conversion to Islam, was published in Harijan.

 

“Harilal’s apostasy is no loss to Hinduism and his admission to Islam is a source of

weakness to it if, as I apprehend, he remains the same wreck that he was before.

“Surely conversion is a matter between man and his Maker who alone knows His

creatures’ hearts. And conversion without a clean heart is, in my opinion, a denial of

God and religion. Conversion without cleanness of heart can only be a matter for

sorrow, not joy, to a godly person.

 

“My object in addressing these lines to my numerous Muslim friends is to ask them to

examine Harilal in the light of his immediate past and, if they find that his conversion is

a soulless matter, to tell him so plainly and disown him and if they discover sincerity in

him to see that he is protected against temptations so that his sincerity results in his

becoming a godfearing member of society. Let them know that excessive indulgence has

softened his brain and undermind his sense of right and wrong, truth and falsehood. I

do not mind whether he is known as Abdulla or Harilal if, by adopting one name for the

other, he becomes a true devotee of God which both the names mean.”

 

 

From :- ‘The Collected Works of Mahatma Gandhi’, published by Publication Division, Govt, of India.

Volume 63- Page no 7

பின்னால் கஸ்தூரிபாவின் வேண்டுகோளுக்கிணங்க மணிலால் தாய்மதம் திரும்பினார்.

2

காந்திஜியின் இன்னொரு புதல்வர் மணிலால். (1891 – 1956). அவரது வாழ்க்கை வரலாற்றை அவரது பேத்தி துபேலியா மெஸ்திரி எழுதியுள்ளார். (Uma Dhupelia-Mesthrie. Gandhi’s Prisoner?: The Life of Gandhi’s Son Manilal. Cape Town: Kwela Books, 2005. 419 pp. $27.00 (cloth), ISBN 978-0-7957-0176-4.). அவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெஸ்டர்ன் கேப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார்.

அவர் எழுதியுள்ள நூலில் தனது தாத்தாவைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.

மணிலால் ஃபாத்திமா கூல் என்ற பெண்ணை மணக்க விரும்பினார். ஆனால் காந்திஜியோ ஒரு முஸ்லீம் பெண்ணை மணிலால் மணப்பதை விரும்பவில்லை.

ஒரு உறையில் இரு கத்திகள் இருப்பது போல ஆகும் என்று அவர் கூறினார்.

இளம் வயது பாலினக் கவர்ச்சியிலிருந்து விடுபடு என்று அவர் மணிலாலுக்கு புத்திமதி கூறினார். மணிலால் பிரம்மசாரியாகவே இருக்கலாம் என்றார் காந்திஜி. ஆனாலும் மணிலால் தனது 34ஆம் வயதில் மணம் புரிந்து கொண்டார். ஆனால் மணப்பெண் வீட்டார் பார்த்த பெண் தான். 19 வயதான சுசீலா மஸ்ருவாலாவை அவர் மணந்தார். அவரும் பனியா தான். மணப்பெண்ணின் தந்தை காந்திஜியைப் பின்பற்றுவர்; பெரிய செல்வந்தர்.

மணிலாலின் பேத்தி புத்தகத்தில் தரும் செய்திகள் இவை: புத்தகத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அப்படியே பார்க்கலாம்.

Gandhi’s influential hand was also evident in Manilal’s decision to marry. He had wanted to marry Fatima Gool, a Muslim from the Cape, but Gandhi objected because she was not Hindu: “it will be like putting two swords in one sheath” (p. 175). This seems anomalous considering that Gandhi had brought up his children to believe all religions equal. However, the boys were “shaped primarily by Hinduism” even though Gandhi respected all religions (p. 40). Gandhi was concerned about the impact the marriage would have on Hindu-Muslim relations in India. He warned Manilal that if he proceeded with the marriage he would have to stop editing Indian Opinion and would not be able to return to India. Gandhi advised Manilal to get over the “infatuation” and “delusions” of love: “our love is between brother and sister. Whereas here the main urge is carnal pleasure” (p. 176). Whatever Manilal might have felt, “in the end, though, he could not forget whose son he was. He did not have the courage to face the consequences of defiance; there really was no future without his father’s blessing” (p. 176). Gandhi implored Manilal to remain celibate, but on this issue Manilal disagreed with his father and married in 1927, at the age of thirty-four. However, his wife was chosen by Gandhi. She was nineteen-year-old Sushila Mashruwala, also of the bania caste and daughter of a wealthy property-owner and fervent Gandhi supporter (p. 183).

3

காந்திஜி தனது வாழ்க்கையில் ஒரு அற்புதமான ஹிந்துவாகவே வாழ்ந்தார். ஆதர்ச ஹிந்துவாக இருந்தார்.

தனது மகன்கள் இஸ்லாமிற்கு மதம் மாறவும் அவர் விரும்பவில்லை; அங்கிருந்து ‘பெண் எடுக்கவும் அவர் அனுமதிக்கவில்லை.

‘எல்லா மதமும் சம்மதம்; அதற்காக எனது மதத்தை இழிவு படுத்தி மற்ற மதங்களின் பால் எனக்குள்ள மரியாதையைக் காண்பிக்க முடியாது என்பதை அவர் வாழ்க்கை தெரிவிக்கிறது.

இன்றைய போலி செகுலரிஸவாதிகள் நம்மை நோக்கிக் கூறுவது, ‘மைனாரிடி என்ன செய்தாலும் அது சரி என்று கூறு; உனது சொந்த மதத்தை அடிக்கடி இழிவு படுத்தி நீ மைனாரிடிகளுக்கு நல்லவன் என்பதை நிரூபி என்பதைத் தான்.

காந்திஜியின் கொள்கைகளுக்கு நேர் விரோதிகள் இவர்கள் என்பதை அனைவரும் உணர்ந்தால் போதும், அது பாரத தேசத்திற்கு நல்ல நாளாக அமையும்!

***

 

 

 

 

 

HARE KRISHNA RATHA YATRA IN LONDON ON 24 JUNE 2018 (Post No.5149)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 26 JUNE 2018

 

Time uploaded in London –  7-51 am (British Summer Time)

 

Post No. 5149

 

 

 

Pictures by London swaminathan

 

 

International Society for Krishna Consciousness (ISKCON), also known as Hare Krishna movement, conduct annual Chariot Procession in all the major cities of the world every year. Chariot Procession (Ratha Yatra) of Lord Krishna and Balarama took place on 24 June 2018. The devotees gathered in thousands and they came from far off places. The procession went through the heart of London where millions of pictures were taken by the tourist as well as devotees. It started from Hyde Park and finished at Trafalgar Square where all had free vegetarian meals given by the Hindujas.

 

 

The devotees followed all the nine attributes of a true devotee and the pictures prove it

 

Nine Sadhanas

In a sloka in the Bhagavata, Prahlada explains to Hiranyakasipu that there are nine sadhanas to foster Bhakti, namely,

Sravana = Listening to the stories of God’s Lilas,

Kirtana = Singing  His praises

Smarana = Constantly remembering them

Padasevana = Serving him and his disciples

Archana= Worshipping him with flowers

Vandana = Saluting him and taking refuge in him

Dasya = Treating him as our boss and obey his commands

Sakya = Treating him as his life time friend

Atmanivedana = Dedicating oneself to Him (Ultimately comes the stage when one offers himself up to God effacing his self completely)

 

Please see the pictures below taken by me:–

 

 

 

 

 

 

 

 

 

-Subham-

GOOD AND EVIL QUOTATIONS-JULY 2018 CALENDAR (Post No.5147)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 26 JUNE 2018

 

Time uploaded in London –  6-40 am (British Summer Time)

 

Post No. 5147

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

FESTIVAL DAYS- JULY 13 PARTIAL SOLAR ECLIPSE (VISIBLE IN AUSTRALIA) , JULY 14- PURI RATHA YATRA, JULY 17- DAKSHINAYANA PUNYA KALAM, JULY 27 VYASA PURNIMA AND LUNAR ECLIPSE (VISIBLE IN INDIA; CHANDRA GRAHANA)

 

FULL MOON DAY-27; NEW MOON DAY-12; EKADASI FASTING DAYS- 9, 23

AUSPICIOUS DAYS- 1, 2, 5, 11

 

 

JULY 1 SUNDAY

‘A good deed is never lost’

Na hi Kalyaanakrut Kascit Durgatim ( Bhagavad Gita 6-40)
For never does anyone who does Good tread the path of woe.
xxx

JULY 2 MONDAY

Good counsel has no price

Uddared Aatmanaatmaanam (Bhagavad Gita Chap. 6, Sloka 5)
One should lift oneself by one’s own efforts

xxx

 

JULY 3 TUESDAY

‘A good example is the best sermon’

The noble win over their foes by helping them—Ramayana Manjari
Ripum apyupakaarena vasikurvanti saadhavah

xxxx

JULY 4 WEDNESDAY

‘Example is better than percept’
‘Gurus can be had by hundreds and thousands but chelas ( disciples) -there is not one’ is an ancient saying. It means that many are the persons who can give good advice but those who follow it are few— Rama Krishna Paramahamsa

xxx

JULY 5 THURSDAY

‘A good horse should be seldom spurred’

The ethical excel — Katha Sarit Sagara
Gunavaan hi varah

xxx

JULY 6 FRIDAY

The wolf may lose his teeth, but never his nature

O destroyer of foes! No sin accrues to the slayer of sinners

Valmiki Ramayana 5-52-11

na paapaanaam vadhe paapam vidhyate satrusuudana

xxxx

JULY 7 SATURDAY

‘The good is the enemy of the best’

A single virtue eclipses all faults —-Canakya Niti 10-15
Eko gunah khalu nihanti samastadosaan

xxx

JULY 8 SUNDAY

‘Of two evils chose the least’

Go by merits, not looks — Subhasita Ratna Bhandakaram
Gunam prcchasva maa ruupam
xxx

 

JULY 9 MONDAY

‘Ill weeds wax well’

Sin manifests itself -Kahavatratnakar

svayam paapah prakaasate

xxxx

JULY 10 TUESDAY

‘Ill weeds grow apace (fast)’

Sin and mercury are hard to digest — Rama Krishna Paramahamsa

XXXX

JULY 11 WEDNESDAY

‘Better be alone than in bad company’

The saintly seek solitude Kavatratnakar
Santo vivikamicchanti

xxxx

JULY 12 THURSDAY

‘Evil communications corrupt good manners’

Those headed towards their doom , are inclined to sin – Ramayana Manjari

patisyataam matih praayah kilbisaabhinivesinii

xxxx

JULY 13 FRIDAY

There are black sheep in every flock

xxxx

JULY 14 SATURDAY

Envy shoots at others and wounds herself

Sin kills the sinner- Granthasthagagegaku

paapi paapena hanyate

 

JULY 15 SUNDAY

The treason is loved, but the traitor is hated

The merits of pilgrimages fructify in time, communion bears fruit instantly with the saintly— Canakya Niti 6-36
Kaalena phalate tiirtham sadhyah saadhusamaagamah

xxxx

JULY 16 MONDAY

‘Treachery will come home to the traitor’

In this very world , one reaps the fruits of one’s sins ere long

Valmiki Ramayana 3-29-9

na ciraat praapyate loke paapaanaam karmanaam phalam

xxx

JULY 17 TUESDAY

‘A good tree cannot bring forth evil fruit’

Not merely the one who abuses the great, but he too who listens to it, partake of the sin- Kumarasambhavam 5-83

na kevalam yo  mahato papbhaasate srnoti tasmaadapi yassaabhaak

xxxx

JULY 18 WEDNESDAY

He that lies down with dogs must rise up with fleas

one sin, many suffer – Vidura Niti

ekah paapaani kurute phalam bhunkte mahaajanah

xxxxx

JULY 19 THURSDAY

‘From chipping come chips’

Even the talk of the sinners can cause sufficient harm -Kahavatratnakar

kathaapi khalu paapaanaamalamasreyase

xxx

JULY 20 FRIDAY

‘No smoke without some fire’

Heaven sometimes speaks through the mouths of lunatics, children and drunkards- Sri Ramakrishna Paramahamsa

xxx

JULY 21 SATURDAY

‘Of one evil come many’

Those who ridicule the noble are verily sinners and savages –Mrcchakatikam

ye bhibhavanti saadhum te paapaah te ca candaalaah- Mrcchakatika

XXX

JULY 22 SUNDAY

‘When the cat is away the mice will play’

As thieves cannot enter a house if inmates are wide awake, so if you are always on your guard, no evil thought will enter your mind to rob it of its goodness- Rama Krishna Paramahamsa

xxxx

JULY 23 MONDAY

‘Who sows the wind will reap the whirlwind’

The wages of the sin assuredly visit the sinner- Valmiki Ramayana 6-111-25

avasyameva labhate phalam paapasya karmanah

xxxx

JULY 24 TUESDAY

‘As you make your bed, so you must lie on it’

The most astounding sin is to slay the one who has been granted protection- Valmiki Ramayana 4-12-35

xxxx

JULY 25 WEDNESDAY

‘When you are well hold yourself so’

The company of the virtuous yield s every thing SBL
Satan hi sangassakalam prasuute
xxxx

JULY 26 THURSDAY

‘Leave (let) well alone’

For whom does not good company benefit? KSS
Kasya satsango na bhavecchubhah

xxx

JULY 27 FRIDAY

‘Ill news is too often true’

The wealth of the sinners is snatched away by fire, robbers, or kings- Kahavatratnakar

paapinastu  dhanam yaati vahnitaskarapaarthivaan

XXXX

JULY 28 SATURDAY

‘Bad news has wings’

The black axe of sin hews down all that is charming in no time – Brhat Katha Manjari

ramyam chinattisahasaa paapah kaakakuthaarikah-

xxx

JULY 29 SUNDAY

 

‘More have repented speech than silence’
The eloquent wise speak but one word, S V 2-109
Vaagekaavaagminahsatah

Xxxx

JULY 30 MONDAY

‘Speech is silvern, but silence is golden’

Fortune and misfortune depend upon words- Tirukkural 642

xxxx

JULY 31 TUESDAY

‘Speak fitly, or be silent wisely’

Spotless men speak what is sweet and grasp in others what is meet- Tirukkural 646

–subham–

 

 

 

இந்தியா 250,000 ஆண்டு பழமையானது (Post No.5146)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 25 JUNE 2018

 

Time uploaded in London –  15-11 (British Summer Time)

 

Post No. 5146

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

இந்தியாவின் வரலாற்றை அழகாக தேதி வாரியாக பட்டியலிட்டுள்ளார்  ஆசிரியர்—ஜார்ஜ் பௌர்ஸ்டேய்ன். இந்த ஆசிரியர் 14 வயதான போது ஒருவர் பால் ப்ரண்டன்  (A Search in Secret India by Paul Brunton) எழுதிய ‘மர்ம இந்தியாவில் ஒரு தேடுதல்’ என்ற புஸ்தகத்தை ஒருவர் பரிசளித்தார். அது முதல் ரமண மஹரிஷி போன்ற இந்தியப் பெரியோர்களின் ஆன்ம தேடுதல் பணியில் நாட்டம் கொண்டு யோகம் பயின்றார். அமெரிக்காவில் இவரது யோகா ஆராய்ச்சிக் கழகம் உளது. பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவின் புராதன வரலாறு குறித்து கிடைத்துள்ள பல புதிய தகவல்களைச் சேகரித்து நமது பழமை கி.மு 8000 என்று நிரூபித்துள்ளார்.

கி.மு 250,000 – இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய மனிதர் தடயங்கள்

 

40,000- மத்திய இந்தியாவில் பிம்பெட்கா முதலிய இடங்களில் மக்கள் வரைந்த ஓவியங்கள்

 

கி.மு. 8000 – 5000 ஸரஸ்வதி- சிந்து நதி தீர நாகரீக இடங்கள் கார்பன் கணக்கீடுகள் கி.மு 8000 என்று காட்டுகின்றன. ஆப்கனிஸ்தான் மெகர்காரில் தெளிவான தடயங்கள் உள.

கி.மு 3000 பாலகோர், ஹக்ரா, அம்ரி முதலிய இடங்களில் ஹரப்பா நகர நாகரீகத்துக்கு முந்திய கிராமங்கள்.

 

 

கி.மு 4000- 2000 – ரிக் வேதம், பின்னர் மற்ற மூன்று வேதங்கள், அதையடுத்து புராணங்களின் தோற்றம்.

 

ரிக் வேத தேதியைக் கணக்கிட அதிலுள்ள வானியல் குறிப்புகள் உதவுகின்றன.

மநு வைவஸ்வதர் (கி.மு.3100) எனப்படும் முதல் மநு, சப்த ரிஷிகள், சூர்ய வம்ச- இக்ஷ்வாகு அரசாட்சி துவக்கம்.

 

 

கி.மு-3210 வேனன் என்னும் கொடுங்கோலனை மந்திரங்கள் மூலம் ரிஷிகள் கொன்ற ஆண்டு; முதல் மன்னன் பிருது ( பிருத்வீ= பூமியின் பெயர்க் காரணம்)

 

பிப்ரவரி 18, 3102 கலியுகம் துவக்கம்

.

கி.மு 3000 ஸரஸ்வதி- சிந்து நதி நகரங்கள் உருவாதல்- மொஹஞ்சதாரோ, ஹரப்பா

 

2950– எகிப்தில் முதல் மன்னர் ஆட்சி துவக்கம்

 

 

2600-1900 சிந்துவெளி நகரங்களின் ஆட்சி

 

2600- 1400 யாக யக்ஞங்கள் பற்றிப் பேசும் பிராஹ்மண இலக்கியம் உருவாதல்.

 

2510- சகர மன்னர்- கபில முனி காலம் ரிக் வேதம் சொல்லும் பிரதர்தனன், திவோதஸன் காலம்

 

2450- பரத மன்னன் (பாரதம் எனப் பெயர் காரணம்) ஆண்ட காலம்

 

2371- 2316 பாபிலோனியாவை ஆண்ட ஸர்கோன், இந்திய சகர மன்னன் என்று வாடல் (Waddel)  கூறுகிறார். (Sargon of Babylonia= Sagaera of India)

2050– தஸரதன் ஆட்சி, ராமர் காலம், இலங்கையில் ராவணன் ஆட்சி

1970– சுதாஸ் எனப்படும் ரிக் வேத மன்னன் காலம்

 

 

1900- ஸரஸ்வதி நதி வறண்ட காலம்; ரிக்வேத மன்னன் துர கவசேயன் காலம்

 

1550– ரிக் வேத மன்னன் தேவாபி காலம்- இதுதான் ரிக்வேதத்தின் கடைசி துதி

1500 –பாரத யுத்தம்- மஹா பாரத யுத்த காலம்

 

கி.மு.570 பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் குறிப்பிடப்படும் கடைசி ஆசிரியர் பௌதிமசிபுத்ர. அவருக்கு முன்னர் 50 ஆசிரியர்கள் 1000 ஆண்டுகளுக்கு  உபநிஷத்தைப் பரப்பினர்.

 

563-483 கௌதம புத்தர்- புத்த மத ஸ்தாபனம்

 

550 ஆஜீவக மதப் பிரிவு- ஸ்தாபகர் கோசால மாஸ்கரிபுத்ர + பாணினி+ கானட முதலியோர் காலம்

 

கி.மு 500-400 பகவத் கீதையின் புது வடிவம்

அலெக்ஸாண்டருக்கு முன்னதாக இந்தியாவில் 138 அரசர்கள் ஆண்டதாக கிரேக்கர்கள் எழுதி வைத்துள்ளனர்

 

–SUBHAM–

 

புராதன சாஸ்திர மேதை சுப்பராய சாஸ்திரி – 2 (Post No.5145)

Written by S NAGARAJAN

 

Date: 25 JUNE 2018

 

Time uploaded in London –   8-29 AM (British Summer Time)

 

Post No. 5145

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

பாரத சாஸ்திர ரகசியம்

 

புராதன சாஸ்திரங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேதை சுப்பராய சாஸ்திரி – 2

 

ச.நாகராஜன்

மீமாம்ஸ சாஸ்திரம் : கர்மத்தின் இயற்கை பற்றி விளக்கும் சாஸ்திரம் இது. “அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா” என்று ஆரம்பிக்கும் இது, “அன்வாஹார்யேச தர்மா:” என்று முடிகிறது. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன. இதை அருளியவர் ஜைமினி ரிஷி.

ஜைமினியின் மீமாம்ஸ சாஸ்திரத்தில் உள்ள 12 அத்தியாயங்கள் வருமாறு:

1) தத்வ தர்மப்ரகரணம்

2) தர்மாபேத அப்ஹேதௌ

3) சேஷாசேஷீபாவ

4) ப்ரயோஜக ப்ரயோஜக பாவ

5) கர்மா

6) அதிகாரிநிரூபணம்

7) சமன்யாதிதேச

8) விசேஹதிதேச

9) ஊஹா

10) பாதா

11) தந்த்ரம்

12) ப்ரசங்கம்

இது தான் இப்போதுள்ள மீமாம்ஸ சாஸ்திரம்.

ஆனால் இது போல இன்னும் மூன்று மீமாம்ஸ சாஸ்திரங்கள் உள்ளன. அவை பல சாஸ்திர ரகசியங்களை விவரிக்கின்றன.

சந்தஸ் சாஸ்திரம் : அதாவது யாப்பிலக்கணம். இது யதியை விளக்குகிறது. எழுத்துக்களின் இசைவையும் நிறுத்த வேண்டிய இடங்களையும் விளக்குவது யதி.

கணம் : சீரான கவிதைக்கான சந்தம்.

இவை போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் மட்டும் 12 சாஸ்திரங்கள் உள்ளன.

அலங்கார சாஸ்திரம் : கவிதையில் உள்ள வெவ்வேறு அணிகள், மற்றும் எழுத்து நடை பற்றிய சாஸ்திரம். உபமானம், உபமேயம், அர்த்தபதி,தண்டபூபிகா, திலதண்டுலா,ரூபகம், போன்றவற்றை விரிவாக விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன.

இதிஹாஸம்: இதில் இதிஹாஸத்தை விளக்கும் 32 நூல்கள் உள்ளன.

 

புராணம் : மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 1) ப்ரஹ்ம 2) பத்ம 3)வைஷ்ணவ 4) சைவ 5) பாகவதம் 6)நாரதீயம் உள்ளிட்டவை இதில் அடங்கும். உப புராணங்களும் கூட உள்ளன.

 

சில்ப சாஸ்திரம் : இதில் 32 சாஸ்திரங்கள் உள்ளன.384 சிற்ப வகைகளை இவை விளக்குகின்றன.

 

சுப சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன.116 வகையான சமையலை இது விளக்குகிறது.

 

மாலினி சாஸ்திரம் : இரகசிய காதல் செய்தி பரிமாற்றத்தை விளக்கும் சாஸ்திரம் இது. மலர்கள், மாலைகள், பூங்கொத்து ஆகியவற்றின் மீது ரகசியமாக எப்படி எழுதுவது என்பதை இது விளக்குவதோடு அந்தப்புரத்திற்கு செய்திகளை எப்படி அனுப்புவது என்பதையும் நுணுக்கமாக விளக்குகிறது. இதே போல அந்தப்புரத்திலிருந்து காதலர்க்கு எப்படி செய்தி அனுப்புவது என்பதையும் இது தருகிறது. இது மட்டுமல்ல. தாதிகள் எப்படி ஆடை ஆபரணங்களை அழகுற உருவாக்குவது, ராணிமார், இளவரசிகளை எப்படி அழகுற அலங்கரிப்பது (இன்றைய மேக்-அப்) போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன. மேல் தட்டில் உள்ள பிரபுக்களின் மனைவிமார்களை எப்படி அலங்கரிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஜரிஹர சாஸ்திரம் : யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வெடி மருந்து, துப்பாக்கி குண்டு, துப்பாக்கி, பீரங்கி, அம்புகள்  போன்றவற்றை எப்படி தயாரிப்பது என்பதை விளக்கும் ஒன்பது சாஸ்திரங்கள் இதில் உள்ளன.நூறு மற்றும் ஆயிரம் ரவுண்டுகள் சுடுவது எப்படி என்பதையும் இது விளக்குகிறது.

 

ப்ரளய சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. படைப்பில் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு காலம் உண்டு என்பதை இது விளக்குகிறது. எப்போது அழிவு ஏற்படும், எந்த சமயத்தில் எப்படிப்பட்ட அழிவு வரும் போன்றவற்றை இது விளக்குகிறது.

கால சாஸ்திரம் :  வெவ்வேறு படைப்புகள் எப்போது உருவாகும் எப்போது மறையும் என்பதை விளக்குவது கால சாஸ்திரம். எப்போது விதை விதைப்பது, விவசாயம் எப்படி செய்வது, எப்போது அறுவடை செய்வது, தாதுக்கள் உள்ள இடம், மலைகளில் உள்ள தாதுக்கள் ஆகியவற்றை இது விளக்குகிறது. ஒவ்வொன்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

மய வாத சாஸ்திரம் : 20 வகை நூல்களின் மூலம் மாயாஜாலம் விளக்கப்படுகிறது. பொருள்களை அந்தரத்திலிருந்து எடுப்பது உள்ளிட்ட மாஜிக் வேலைகளை விளக்குவது இது.

 

இது போல ஏராளமான சாஸ்திரங்களை சுப்பராய சாஸ்திரி விளக்கியுள்ளார்.

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

ஒரு கேள்வி எழலாம். இந்த சாஸ்திரங்களின் மூலம் எங்குள்ளது என்பதே நமக்கு எழும் சந்தேகம். டாக்டர் வி.ராகவன் உலகெங்கும் சுற்றி பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத சுவடி நூல்களைக் கண்டு அந்த நூல் பட்டியலை தயாரித்துள்ளார். இவற்றில் என்ன உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. படிக்க, ஆராய பல நூறு அறிஞர்கள் பல்லாண்டுகள் உழைக்க வேண்டும்.

நம்மிடம் ஏராளமான விஞ்ஞான சாஸ்திரங்கள் உள்ளன.

விளக்கத்தான், பல சுப்பராய சாஸ்திரிகள் வேண்டும்.

***

 

நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா? (Post No.5144)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  17-09 (British Summer Time)

 

Post No. 5144

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பெரியது கேட்கின் வரிவடி வேலோய்

பெரிது பெரிது மூக்கு பெரிது;

அதனினும் பெரிது நாக்கு;

நாக்கினும் பெரிது தவறான வாக்கு!

 

இது அவ்வையாரின் பாட்டைக் கிண்டல் செய்ய எழுந்த பாட்டு அல்ல.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுந்த பாட்டு.

 

ட்வைட் மாரோ(Mrs Dwight Morrow) என்பவர் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண்மணி. அவர் சீனியர் ஜே.பி.மார்கனை (Senior J P Morgan) தேநீர் விருந்துக்கு (Tea Party) அழைத்தார். அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பணக்காரர். அவருடைய பெரிய மூக்கு புகழ்பெற்ற மூக்கு. தை பற்றிப் பேசாதோர் (பரிகசிக்காதோர்) யாரும் இல்லை.ட்வைட் மாரோவுக்கு ஒரு கவலை. அவருடைய இரண்டு பெண்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதில் ஒருவள் ஆன் )Anne). புகழ்பெற்ற வாயாடி. மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லி விடுவாள். ஜே.பி.மார்கன் மூக்கைப் பார்த்தால் விமர்சனம் செய்யாமல் இருக்க மாட்டாள். எப்படியும் பகடி செய்து விடுவாள்.

 

ஆகவே இரண்டு மகள்களையும் அழைத்து பெரியோரிடம் மரியாதைக் காட்டுவது எப்படி என்று உபந்யாசம் செய்தாள்; ஆன் என்ற மகளுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றி, மகளே அவர் மூக்கைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்; ஆனால் வெளியே மட்டும் வாய் திறந்து பேசிவிடாதே என்றாள்.

மகளும் அப்படியே செய்வேன் என்று தலை அசைத்தாள்.

ஜே.பி மார்கனும் வந்தார். பெண்களை அவசரம் அவசரமாக அறிமுகப் படுத்திவிட்டு உள்ளே செல்ல உத்தரவிட்டார்.

ஒரு அச்மபாவிதமும் நடக்க வில்லை.

ஆனால் ட்வைட் அம்மணியார் சதா சர்வகாலமும் மூக்கைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் வாய் தவறி,

 

மிஸ்டர் மார்கன், உங்களுக்கு தேநீரில் லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா என்று கேட்பதற்குப் பதிலாக

 

உங்கள் நோஸில் (Nose) லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா?

என்று கேட்டு விட்டார்.

நாக்கில் உள்ளது வாக்கில் வந்து விட்டது!!

 

xxxxxxx

ஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்?

 

நீதிபதி: அப்படியனால் நீ உன் மனைவியை இரண்டாவது மாடி ஜன்னல் வழியாகத் தள்ளிவிட்டது உண்மையா?

 

குற்றவாளி: ஆமாம் கனம் நீதிபதி அவர்களே!

 

நீதிபதி: ஏன் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து தள்ளிவிட்டாய்?

என்ன காரணம்?

 

குற்றவாளி: நாங்கள் முதலில் கீழே (கிரவுண்ட் ப்ளோர் Ground Floor) குடியிருந்தோம்.

சமீபத்தில்தான் இரண்டாவது மாடிக்குக் குடிபுகுந்தோம்.

வீடு மாறியதே மறந்து விட்டது, ஐயா!!!

 

xxxxx

ஞாபக மறதிப் பேராசிரியர்கள்!

ஒரு பேராசிரியருக்கு அதி பயங்கர ஞாபக மறதி.

 

வீட்டுக்குள் விறு விறு என்று நுழைந்து கொண்டிருந்தார்.

 

மனைவி: பார்த்தீர்களா? நீங்கள் இறந்து போய்விட்டதாகப்

பத்திரிகையில் செய்தி போட்டிருக்கிறார்கள்.

 

அப்படியா, மறந்து விடாதே. எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி.

ஞாபகமாக ஒரு மலர் வளையத்துக்கு ‘ஆர்டர்’ கொடு.

 

நானும் நீயும் மறக்காமல் போக வேண்டும்

 

மனைவி தலையில்…………………

xxxxxxxxxxx

வேகமாகப் போ! ம்ம்… இன்னும் வேகம்!

ஒரு பேராசிரியருக்கு என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விடும் அளவுக்கு ஞாபக மறதி!! ஒரு ஊருக்கு சொற்பொழிவு ஆற்றச் சென்றார்.

சொற்பொழிவின் நேரம் மட்டும் ஞாபகம் இருந்தது.

ஆனால் வீட்டைவிட்டு தாமதமாகப் புறப்பட்டு அடுத்த ஊரில் போய் இறங்கி டாக்ஸியில் ஏறினார்.

 

ஏய், வண்டியை வேகமாக விடப்பா! கூட்டம் துவங்க பத்து நிமிடம்தான் இருக்கு!

 

அதுக்கென்ன ஸார், இதோ பாருங்கள் ! வண்டி சிட்டாய்ப் பறக்கும் என்று ஆக்ஸிலேட்டரை அமுக்கினான்.

 

ஏய், இன்னும் வேகமாகப் போ என்றார்.

அதற்கென்ன என்று சொல்லி 70 மைல் ஸ்பீடை 90 மைல் ஸ்பீட் ஆக்கினான்.

 

ஏய் நிறுத்து, நிறுத்து! எங்கே போகிறாய்?

இடம் தெரியுமா?

தெரியாதே ஸார்; நீங்கள் சொல்லுங்கள் என்றான் டாக்ஸி ட்ரைவர்!

அடக் கடவுளே! எனக்கு நேரம் மட்டுமே நினைவு இருக்கிறது- என்று சொல்லி டாக்ஸியில் இருந்து இறங்கினார்.

 

XXXXXX

 

கறார் பேர்வழி! கணக்கான பேர்வழி!

 

ஒரு சரக்குக் கப்பலின் கேப்டன்

 

மிகவும் கறாரான, கணக்கான பேர்வழி. அவருக்குக் கீழே வேலையில் இருந்தவன் குடித்துவிட்டு வேலைக்கு வந்தான். கேப்டனின் கடமை:– எல்லோர் பற்றியும் லாக் புஸ்தகத்தில் எழுத வேண்டும்

 

குடித்த ஆளின் பெயரை லாக் புஸ்தகத்தில் எழுதிவிட்டார். இதைப் பார்த்த அந்த ஆள் கேப்டனிடம் கெஞ்சாய்க் கெஞ்சினார். தயவு செய்து என் பெயரை அடித்து விடுங்கள்; நான் இனிமேல் தவறு செய்ய மாட்டேன்; உங்களுக்கே தெரியும் ;நான் இதுவரை இப்படி செய்ததில்லை என்று.

 

இப்படியெல்லாம் கெஞ்சியும் சமாதானம் சொல்லியும் கப்பலின் கேப்டன் மசியவில்லை.

 

“இதோ பார், நீ குடித்தது உண்மை; அதைத்தானே எழுதினேன். நான் உண்மையை  எப்படி மறைக்க முடியும்? போ!” என்று சொல்லி அனுப்பிவிட்டார். எப்போதும் சரியானதை எழுதுவதில் தவறே இல்லை என்றார்.

 

ஒரு நாள் ‘லாக் புஸ்தகம்’ வேலை இந்த பாதிக்கப்பட்ட ஆளுக்கு வந்தது. பழி வாங்க துடியாய்த் துடித்தவருக்கு அருமையான வாய்ப்பு இது. ஆனால் பொய்யும் எழுத முடியாது. எடுத்தார் பேனாவை! தொடுத்தார் சொற்களை!

 

“இன்று கேப்டன் மிகவும் நிதானமாக (நிதானத்தில்) இருந்தார்” என்று கொட்டை எழுத்தில் எழுதினார்.

உண்மைதானே (ஆனால் எப்படியும் பொருள் கொள்ள முடியும்)

 

–subham–

Accuracy and Absent Mindedness Anecdotes (Post No.5143)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  9-17 am  (British Summer Time)

 

Post No. 5143

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

More Absent mindedness anecdotes

 

Nose, Big Nose!!
When her daughters were very small girls, Mrs Dwight Morrow gave a high tea at which one of the guests was to be the senior JP Morgan.
The girls were to be brought in, introduced and ushered out. Mrs Morrow’s great fear was the possibility that Anne, the most outspoken of them, might comment audibly upon Mr Morgan’s celebrated and conspicuous nose. She therefore took pains to explain to Anne that personal observations were impolite and and to caution her especially against making any comment upon Mr Morgan’s nose, no matter what she thinks of it.
When the moment came and the children were brought in, Mrs Morrow held her breath as she saw Anne’s gaze unfalteringly fix upon this objective and remain there.

Nonetheless, the introduction was made, the little girls curtsied and were sent on their way. With a sigh of relief Mrs Morrow turned back to her duties as hostess and said to her chief guest, “And now, Mr Morgan, will you have cream or lemon in your nose?”

Xxxx

Lungs!
That absent minded professor Schmaltz has left his umbrella again. He would leave his head if it were loose, observed the waiter.
That is true, said the manager, I just heard him say he was going to Switzerland for his lungs.
Xxx

 

Send a wreath for Your Own Death!

The professor was very absent minded;

Did you see this?, his wife asked as he came in.
There is a report in the paper of your death.
“Dear me, said the professor, we must remember to send a wreath”.
Xxx


Forgotten Floor!
You mean to say, asked the judge of the defendant, that you threw your wife out of the second story window through forgetfulness ?
Yes sir, replied the defendant
We used to live on the ground floor and I plumb forgot we moved.
Xxxx

Top Speed! To Unknown Destination!

Thomas Henry Huxley once arrived late in a town in which he was to deliver an important lecture.
Jumping into a cab, he cried to the driver ,”Top speed!”

In a hurry the cabby whipped his horse into action and the vehicle went bumping along the streets at a wild clip. The lack of dignity and organisation in the proceedings then dawned upon Huxley, and above the clatter of the wheels he shouted to the driver,
“Here,here, do you know where I want to go?”
“No, Your Honour, called the cabby, cracking his whip the while, but I am driving as fast as I can.”

Xxxxx

Accuracy anecdotes
Cordell Hull is an extremely cautious speaker, striving always for scientific accuracy. One day on a train, a friend pointed to a fine flock of sheep grazing in a field. Look, those sheep have just been sheared, he said.
Hull studied the flock. Sheared on this side any way, he admitted.

Xxx

Tit for Tat

The captain of a certain freighter was martinet who, although technically just, was noted far and wide, for the strictness of his interpretation of the facts.

On a certain voyage he had a new first mate, an able and conscientious man. Following an of shipboard revelry, the captain entered in the log the note, ‘The first mate was drunk last night’.
Seeing this the mate was greatly distressed and pled with the captain to strike it off the record. He had never been drunk before, he insisted, would not be drunk again; was conscientious in the performance of his duties and had been off duty at the time of the offence anyway.
He begged for leniency, pointing out what an unduly detrimental effect on his record such an entry on the log might have.

 

The captain remained adamant, “you were drunk last night and I cant change the fact. The record will stand’.

 

Much wounded by this the first mate resumed his duties. That night it fell to his lot to make the next entry in the log for a period of his watch. This he did, with what may be called a malicious scrupulousness of accuracy. Accordingly the captain next day found on the log that innocently damning statement, “The captain was sober last night”.
 

–Subham–

விமான சாஸ்திரம்- சுப்பராய சாஸ்திரி – 1 (Post No.5142)

Written by S NAGARAJAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  6-56 am  (British Summer Time)

 

Post No. 5142

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

பாரத சாஸ்திர ரகசியம்

புராதன சாஸ்திரங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேதை சுப்பராய சாஸ்திரி – 1

 

ச.நாகராஜன்

 

சுப்பராய சாஸ்திரியின் சரித்திரம் மிகவும் ஆச்சரியமூட்டும் ஒன்று.

 

புராதன சாஸ்திரங்களை எல்லாம் அவர் அறிமுகப்படுத்திய போது இந்தியாவே வியந்தது.

விமான சாஸ்திரம் பற்றி அவர் தந்த விவரங்களைக் கொண்டு ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும் முன்னரே பம்பாயில் விமானம் ஒன்று செய்யப்பட்டு அதன் சோதனை ஓட்டம் ஒன்று நடந்ததை சமீப காலத்தில் பலரும் பல கட்டுரைகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

 

சுப்பராய சாஸ்திரியின் இளமைப் பருவம் மிகவும் சோகமான ஒன்று.

 

இளமையிலேயே அனாதரவாக கைவிடப்பட்ட அவர் கொடூரமான ஒரு தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார்.

வியாதியுடன் ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து தவழ்ந்து சுற்றி அலைந்தார்.

 

ஒரு நாள் தாகத்தைத் தணிக்க நீரை அருந்துவதற்காக ஒரு குளத்திற்குச் சென்றார். தவறி அந்தக் குளத்தில் அவர் விழுந்த போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது.

 

அவர் ஒரு குகைக்குள் இருந்தார். ஒரு சாது அவரைக் கண்டு இரக்கப்பட்டு அவரது வியாதியைத் தனது தபோ சக்தியின் மூலம் குணப்படுத்தினார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை.பாரதத்தின் புராதன சாஸ்திரங்கள் பலவற்றைச் சொல்லலானார். அவற்றை சுப்பராய சாஸ்திரியின் நினைவில் தக்க வைத்தார். அவற்றை நன்கு கற்பித்தார்.

நினைத்த போது அந்த சாஸ்திரங்கள் அனைத்தும் அவருக்கு நினைவுக்கு வரும் படி அவர் அனுக்ரஹித்தார்.

அம்சுபோதினி என்று ஒரு சாஸ்திரம். சூரிய கிரணங்களின் சக்தி பற்றிய சாஸ்திரம் அது.

 

வைமானிக சாஸ்திரம் என்ற சாஸ்திரம் விமானங்களை எப்படி அமைப்பது என்பதைச் சொல்லும் சாஸ்திரம். இது பரத்வாஜ  முனிவரால் இயற்றப்பட்டது.

 

இவை அனைத்தையும் நன்கு  கற்றுக் கொண்ட சுப்பராய சாஸ்திரி பெங்களூர் வந்தார்.

 

அங்கு இவரது ஞானத்தைக் கண்ட பலரும் வியந்தனர்.

மஹா சங்கல்பம் என்ற ஒன்றை பெரிய காரியம் ஒன்றைச் செய்யும் முன்னர் ஹிந்துக்கள் செய்வது வழக்கம்.

இந்த மஹா சங்கல்பம் மிக அழகிய சொற்களால் ஆனது. ஒசை நயம் கொண்டது. அதில் மனித குலத்தின் மொத்த ஞானமும் அடங்கிய பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளடங்கியுள்ளன.

இதைச் சற்று உன்னிப்பாக ஆராய்ந்தாலேயே போதும் புராதன பாரதம் எப்படிப்பட்ட் ஆன்மீக ஞானத்தைக் கொண்டிருந்தது, எத்தனை கலைகளில் சிறந்திருந்தது என்பது தெரிய வரும். அனைத்து விஞ்ஞானமும் அதில் உள்ளது.

 

இதை ஆராய்ந்த மஹரிஷி அனகல் சுப்பராய சாஸ்திரி அதன் மஹிமையை உலகிற்கு எடுத்துரைத்தார்.

சாஸ்திரி அவர்கள் பல சாஸ்திரங்களையும் சொல்லச் சொல்ல அவற்றை அப்படியே பங்களூரைச் சேர்ந்த ஜி.வெங்கடாசல சர்மா எழுதலானார்.

 

சாஸ்திரங்களின் விவரங்களையும் சாஸ்திரி எடுத்துரைத்தார்.

அவரே கன்னடத்திலும் தெலுங்கிலும் அவற்றை விவரித்தார்.

அதை அப்படியே ஆங்கிலத்தில் வெங்கடாசல சர்மா மொழி பெயர்த்தார்.

 

இந்த சாஸ்திரங்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்று. அவற்றில் சிலவற்றின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்:

அக்ஷரலக்ஷ சாஸ்திரம் : இந்த சாஸ்திரம் அகர முதலான எழுத்துக்கள், அதற்குரிய எண், அல்ஜீப்ரா,ஜாமெட்ரி, மற்றும் இதர  கணிதங்கள்,குறியீடுகள் ஆகியவற்றை விளக்கும் ஒன்று. பதினான்கு லோகங்களிலும் உள்ள வெவ்வேறு மொழிகளை எப்படி அமைப்பது என்பன உள்ளிட்ட விவரங்களையும் இது விளக்குகிறது.

லிகித சாஸ்திரம் : இது எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவது என்பதை விளக்கும் கலை.

கணித சாஸ்திரம் : சகல லோகங்களிலும் உள்ள கணிதங்களை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் 18 சாஸ்திரங்கள் அடங்கி உள்ளன.

 

ஜோதிட சாஸ்திரம் : இது 64 விதமான வானவியல் மற்றும் ஜோதிட ரகசியங்களை விளக்கும் சாஸ்திரமாகும்.

நிருக்த சாஸ்திரம் : வேதங்களின் பாஷ்யங்களாக விளங்கும் ஆறு அங்கங்களை விளக்கும் சாஸ்திரம் இது.

 

 

வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு சாஸ்திரங்கள் உள்ளன. நியாய சாஸ்திரத்துடன் தொடர்புள்ள சாஸ்திரம் இது.

வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்களை விமரிசித்து அல்லது மறுத்துரைத்துச் சொல்லும் உரைகள் உள்ளன.இது பூர்வ பக்ஷம் எனப்படும். மேலும் இதில் பிரஸ்தான த்ரயம் எனப்படும் வேதாந்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது.

பட்ட சாஸ்திரம் : இதில் 5 விதமான வெவ்வேறு சாஸ்திரங்கள் விளக்கப்படுகின்றன.இவை நியாய சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டவை.

 

ப்ரபாகர சாஸ்திரம்:  மூன்று விதமான ப்ரபாகர சித்தாந்தங்கள் உள்ளன. இவை நியாய சாஸ்திரத்துடன் ஒப்பிடக் கூடியவை.

நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. இவை கதாதரி என்ற ஐந்து வேதங்களைச் சொல்பவை.வைகானஸ தர்க்கத்தில் உள்ள 42 வேதங்கள் மற்றும்  கௌட தர்க்கத்தில் உள்ள 60 வேதங்கள் ஆகியவற்றின் விளக்கத்தை இதில் காணலாம்.

 

வியாக்ரண சாஸ்திரம் :இலக்கணம் பற்றியது. ஒன்பது விதமான வியாகரணங்கள் உள்ளது.பாணிணீயம்,மஹா வியாக்ரணம், ஐந்திரம்,சந்திரா,சகதவனம், ஸ்போத்தயானம் போன்றவை இதில் அடங்கும்.

சப்த சாஸ்திரம் :ஒலியின் நுணுக்கங்களை கூறும் சாஸ்திரம் இது. இதில் ஆறு சாஸ்திரங்கள் உள்ளன.

தர்க்க சாஸ்திரம் : லாஜிக் என ஆங்கிலத்தில் கூறப்படும் சாஸ்திரம் இது. தர்க்கம் பற்றிய எட்டு சாஸ்திரங்கள் உள்ளன. விவாதம் பற்றிய 84 சாஸ்திரங்கள் இதில் உள்ளன.

 

– அடுத்த கட்டுரையுடன் முடியும்

***

 

 

ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள கருத்து விருந்தோம்பல்! (POST.5141)

WRITTEN by LONDON SWAMINATHAN

 

Date: 23 JUNE 2018

 

Time uploaded in London –  18-27  (British Summer Time)

 

Post No. 5141

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆரிய-திராவிட வாதம் தவிடு பொடி!

மநு நீதி நூல்- Part 21

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி…………………………..

ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள கருத்து விருந்தோம்பல்! (POST.5141)

3-83 ஐம்பெரும் வேள்விகளின் பகுதியாக, ஒரு பிராமணனுக்காவது அன்னமிட்டு முன்னோர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். ஆனால் விஸ்வே தேவர்களுக்கான சடங்குடன் இதைத் தொடர்பு படுத்தாதே.

 

3-84 தினமும் சாஸ்திரப்படி செய்த நைவேத்தியத்தை விஸ்வேதேவர்களுக்கு வீட்டிலுள்ள அக்னியில் பிராஹ்மணன் போடவேண்டும்.

 

3-85 முதலில் அக்னி, பின்னர் ஸோமன், பின்னர் இரு தேவதைகளுக்கும் சேர்த்து, கடைசியில் தன்வந்திரிக்கு அளிக்கவும்

 

3-86 பின்னர் அமாவாஸைத் தெய்வமான குஹு, பௌர்ணமி தெய்வமான அனுமதி பிரஜாபதி, பூமி, ஆகாஸம், கடைசியாக அக்னி ‘ஸ்விஸ்தக்ரது’ ஆகியோருக்கு அளிக்க வேண்டும்.

 

3-87 இவ்வாறு செய்த பின்னர் திக் தேவதைகளுக்கு பிரதக்ஷிணமாக இந்திரன் (கிழக்கு), அந்தகன் (தெற்கு), ஆ பதி/ வருணன் (மேற்கு) இந்துவுக்கும் (சந்திரன்/ ஸோமன் வடக்கு) தரவேண்டும்.

3-88 வாசலில் மருத் (காற்று) தேவதைகளுக்கும், ஜலத்தில் தண்ணீர் தேவதைக்கும், உரல் உலக்கைக்கும் படைக்கவேண்டும். தண்ணீரில் அளிக்கையில் மரங்களின் தேவதைகளுக்கு என்று சொல்லி அளிக்கவும்.

(மரங்களுக்கும் உரல் உலக்கைக்கும் தருவது புறச்சூழலின் மேலுள்ள மரியாதையை   காட்டுகிறது)

 

3-89 தலையில் செல்வ தேவதை ஸ்ரீக்கும், காலில் பத்ரகாளிக்கும், வீட்டின் நடுவில் வாஸ்தோஸ்பதிக்கும் அளிக்கவும். (வீட்டின் தலை , கால் என்பது திருமணப் படுக்கையின் தலை, கால் பகுதி என்று வியாக்கியானம் செய்கின்றனர்)

 

3-90 காற்றில் விஸ்வே தேவர்களுக்கும் இரவிலும் பகலிலும் திரியும் பேய்களுக்கும் பலி தரவேண்டும்

 

3-91 வீட்டின் மேல் பகுதியில் சர்வ உணவு தேவதைக்கும் (ஸர்வான்னபூதி) மிகுதியை தென் திசையில் உள்ள முன்னோர்களுக்கும் அளிக்க வேண்டும்

 

(பஞ்ச யக்ஞமும், தென் திசை முன்னோர் குறிப்பும் திருக்குறளில் உளதால் இந்துக்களின் வேதமே திருக்குறள் என்பது தெளிவாகிறது. ஆரிய- திராவிடம் பேசும் பேயர்களுக்கு அடிமேல் அடி கொடுக்கும் பகுதி இது. ஏனெனில் இங்கே குறிப்பிடும் சடங்குகள் தமிழிலும் ஸ்ம்க்ருதத்திலும் மட்டுமே உளது. பிற்கால நூல்களான சிலம்பு, கம்பராமாயணம் ஆகியவற்றிலும்    உறுதிப்படுத்தப்படுகிறது.)

 

3-92 நாய்களுக்கும், புலையர்களுக்கும், பறவைகளுக்கும், புழுக்களுக்குமான உணவை தூவ வேண்டும்

 

(பறவைகள், நாய்கள், புழுப்பூச்சிகளுக்கும் தினமும் உணவு தரவேண்டும் என்பது உலகில் எங்கும் காணாத அற்புத பண்பாடு. “காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பாரதியைப் பாட வைத்த பாட்டு)

 

3-93 இவ்வாறு  பித்ரு தேவதைகளுக்கும் பூதங்களுக்கும் பலி கொடுக்கும் பிராஹ்மணன் மஹத்தான சக்தி பெற்று நேரடியாக மேல்நிலையை அடைவான்.

3-94 இவ்வாறு தேவதைகள் பூதங்களுக்குப் பலி கொடுத்த பின்னர் அவன் முதலில் விருந்தினருக்குச் சோறு படைக்க வேண்டும்; பின்னர் பிச்சை எடுப்போருக்கும், வேதம் படிக்கும் ஒரு பிரம்மச்சாரிக்கும் அன்னம் இட வேண்டும்

3-95 இவ்வாறு செய்யும் ஒரு கிரஹஸ்தன் (இல்வாழ்வான்) குருவுக்கு கோ (பசு மாடு) தானம் செய்த புண்ணியத்தை அடைவான்.

 

(ஆரிய திராவிடம் பேசும் அயோக்கியர்களுக்கு செமை அடி கொடுக்கிறது இந்தப் பாடல்.  உலகில் இப்படி பலி கொடுக்கும் வழக்கமோ அல்லது தானம் செய்யும் பண்பாடோ எங்குமிலை. அது மட்டுமல்ல; வேதங்கள் கோ தானம் பற்றி இந்துக்கள் பேசுகையில் ஏனையோர் பசுக்கொலை செய்து அதை நாள்தோறும் உண்ணுகின்றனர்)

 

3-96 வேதத்தை நன்கு கற்ற ஒருவருக்கு   தட்சிணையோ அல்லது மந்திரம் ஜபிக்கப்பட்ட ஒரு சொம்பு தண்ணீரையோ தர வேண்டும்

 

3-97 வேதம் படிக்காதவர்களுக்கு அளிக்கும் தானம் வீண்; வேதம் படிக்காதவர் செய்யும் கருமங்களும் வீண்.

3-98 படித்த, தவம் இயற்றிய பிராஹ்மணனாகிய அக்னியில் இடப்படும் ஆகுதி ஒருவனை கெட்ட தலை விதியிலிருந்தும், பெரும்  பாபங்களிலிருந்தும் விடுவிக்கும்.

விருந்தோம்பல்

3-99 தானாக வந்த ஒரு விருந்தாளிக்கு முதலில் ஆசனம், தண்ணீர் தந்து நன்கு, திறமைக்குத் தக,  சமைக்கப்பட்ட உணவு பரிமாறவும்

 

3-100 ஒரு விருந்தாளியைக் கவனிக்காவிடில், அவர் அந்த வீட்டிலுள்ள எல்லாப் புண்ணியங்களையும் எடுத்துச் சென்று விடுவார்.

அன்பான வார்த்தைகள்!!!

3-101 வந்த விருந்தாளிக்கு பாய், தங்கும் இடம், தண்ணீர், அன்பான வார்த்தைகள் — ஆகிய நான்கும் அளிக்கப்படும் இடம் நல்லவரின் வீடு ஆகும்

3-102 ஒரு நாள் தங்குபவரே விருந்தாளி; அதனால்தான் அவரை அதிதி என்று அழைக்கிறோம் அநித்ய ஸ்தித ( நிலையாகத் தங்காதவர்) என்பதே அ+திதி= அதிதி ஆகியது.

3-103 ஒரே கிராமத்தில் வசிப்பவன் இல்லறத்தான் வீட்டுக்கு வந்தால் அவன் விருந்தாளி அல்ல.

3-104 யாராவது ஒருவன் முறை தவறி விருந்து உண்டால், அந்த முட்டாள் அடுத்த ஜன்மத்தில் விருந்து கொடுத்தவன் வீட்டில் மாடாகப் பிறப்பான்.

3-105 மாலையில் வந்த ஒரு விருந்தாளியை திருப்பி அனுப்பக்கூடாது. அந்த நேரத்தில் வந்தான், இந்த நேரத்தில் வந்தான் என்று சாக்குப் போக்குச் சொல்லாமல் வீட்டில் தங்க வைத்து சோறு போட வேண்டும்

3-106 விருந்தாளிக்குப் போடுவதையே அவனும் உண்ணவேண்டும். யார் ஒருவன் விருந்தினரைக் கவனிக்கிறானோ அவன் புகழ், செல்வம்,  நீண்ட ஆயுள், சொர்க்கத்தில் இடம் ஆகியன பெறுகிறான்.

 

3-107 விருந்தினரின் தகுதிக்கு ஏற்ப உயர்ந்த, நடுத்தரமான, கடைத்தர வசதிகளை அளிக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஆசனம், நல்ல படுக்கை, நல்ல அறை, நல்ல பிரிவுபசாரம் ஆகியன கொடுத்தேயாக வேண்டும்

3-108 விஸ்வே தேவர்களுக்கு அளித்தபின்னர் வேறு ஒரு விருந்தாளி வந்தால் அவரையும் உபசரிக்க வேண்டும்.

 

3-109 குலம், கோத்திரம் சொல்லி உணவு பெறுதல் கூடாது; அப்படிச் சொல்லி பெறும் உணவானது வாந்தி எடுத்த உணவை சாப்பிடுவதற்கு சமமாகும்.

3-110  ஒரு அரசன், பிராஹ்மணன் வீட்டுக்கு வந்தால், அது விருந்தினர் வந்ததாகப் பொருள் கொள்ளலாகாது. அதே போலத்தான், குரு, வைஸ்யன், சூத்திரன், உறவினர், நண்பர் வருகையும்.

 

3-111 ஒரு க்ஷத்ரியன் வந்தால், அவன் சாப்பிட விரும்பினால், பிராஹ்மண போஜனம் முடிந்தவுடன் விருந்து படைக்கலாம்.

3-112 அதே போல வைஸ்யர்களோ சூத்திரர்களோ வந்தால் வீட்டிலுள்ள மற்றவர்களோடு அவர்களுக்கும் கருணையின் அடிப்படையில் விருந்து தரலாம்.

3-113 நண்பர்கள் வந்தால் அவர்களுக்கும் நல்லெண்ண அடிப்படையில் உணவு பரிமாறலாம்.

3-114 விருந்தினருக்கும் முன்னதாக, புதுமணத் தம்பதிகளுக்கும், கர்ப்பவதிகளுக்கும், சின்னப் பெண்களுக்கும், நோயளிகளுக்கும் விருந்து அளிக்கலாம்.

3-116 பிராஹ்மண விருந்தினர், குடும்பத்தினர், குடும்பத்தைச் சேர்ந்தார் எல்லோரும் சாப்பிட்ட பின்னர்தான் இல்லறத்தானும் மனைவியும் சாப்பிடலாம்.

 

3-117 தேவர்கள், ரிஷி முனிவர்கள், மனிதர்கள், முன்னோர்கள், வீட்டிலுள்ள (இல்லுறை) தெய்வங்கள் ஆகியோருக்கு விருந்து கொடுத்த பின்னர் மிச்சம் மீதியை இல்லறத்தான் சாப்பிடலாம்.

3-118  தனக்கு மட்டுமே சமைப்பவன், தவற்றைப், பிழையை உண்பவன் ஆவான்.  வேள்விக்குப் பின்னர் மிஞ்சிய உணவே நல்ல மனிதர்களின் உணவு.

 

(இந்தக் கருத்து பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது.)

 

3-119 ஓராண்டுக்குப் பின்னர் வரும் அரசன், புரோகிதன், குரு, நெருங்கிய நண்பன், வேதம் படித்தவன், தாய் மாமன், மாமனார் ஆகியோருக்கு மதுபர்க்கம் (தேன்+ பால்) கொடுத்து மரியாதை செய்க.

3-120 யாகம் செய்யும்போது அரசனோ வேதம் அறிந்த புரோகிதனோ வந்தால் அவருக்கும் மதுபர்க்கம் கொடுக்கவும்.

 

எனது கருத்து

விருந்தாளி யார்?

ஒரு நாளைக்கு மேல் தங்குபவன் விருந்தாளி அல்ல. ஒரே கிராமத்தைச் சேர்ந்தவனோ விருந்தாளி அல்ல; பலனை எதிர்பார்த்துக் கொடுத்தால் அதைச் சாப்பிடவனும் விருந்தாளி அல்ல;  நான்கு ஜாதிக் காரர்களும் விருந்தாளியாக வரலாம் – இப்படிப்   புரட்சிகரமான கருத்துக்களை வீசி ஆரிய-திராவிடப் பேய்மானிகளின் கன்னத்தில் அறை மேல் அறை , வைக்கிறான் புரட்சி வீரன் மநு. உலகம் கானாத புதுமை இது; வெளி நாட்டார் அறியாத போற்றாத பண்பு இது. பாரத மண்ணில் தோன்றி பாரத மண்ணில் வளர்ந்த சமதர்மக் கருத்து இது!

 

மநு சொல்லும் மேற்கூறிய முறைகள் எங்கும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. ஆக அவன் ரிக் வேத காலத்தவன் என்பது இதனாலும் சரஸ்வதி நதிக் குறிப்புகளினாலும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை மநு சொல்லாததாலும் வெள்ளிடை மலை என விளங்கும்; இதனால்தான் இவனை ஹமுராபிக்கும் (கி.மு.)2600 முந்தியவன் என்று யான் செப்புகிறேன்.

 

வெள்ளைக்கார அரை வேக்காடுகளும் மார்கஸீயப் பிதற்றல் பேர்வழிகளும் ஆரியப் பூச்சாண்டியைக் கிளப்பி, வேத கால ஹிந்துக்கள் வெளிலியிலிருந்து வந்ததாக விளம்புவர். அப்படிப்பட்ட பேர்வழிகள் இது போன்ற ஆயிரக்கணக்கான விஷயங்களுக்கு ஒரு ஆதாரத்தையும் இந்தியாவுக்கு வெளியில் காட்டவும் முடியவில்லை. மேலும் பல நூறு விஷயங்கள் தமிழ் வேதமான திருக்குறளிலும், பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்திலும் காணப்படுவதால் கயவர்களின் வாதம்– பிடிவாதம்– தூள் தூளாகப் போகின்றது.

ஓராண்டுக்குப் பின்னர் வருவோருக்கே சிறப்பு மரியாதை, தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி என்ற கருத்து ஆகியன புரட்சிவீரன் என்ற பட்டத்தை மநுவுக்கு அளிக்கும்.

( விருந்தோம்பல் என்னும் பண்பைப் போற்றாத ஸம்ஸ்க்ருத, தமிழ் நூல்கள் இல்லை. இதனால் புண்ணியம் கிடைக்கும் என்பதையும் இரு மொழியும் இயம்பும். இப்படிப்பட்ட ஒரு பண்பு வேறு எந்த மத நூலிலும் கிடையாது இந்தியாபில் இந்துக்களாகப் பிறந்து புதிதாகக் கிளைவிட்ட சமண, பௌத்த, சீக்கிய மதங்களில் மட்டுமே இருக்கும். வெளிநாட்டில் இந்தப் பண்பு போற்றப்படாததால் ஆரிய- திராவிட போலி வாதம் மூச்சுத்திணறி சாகும். மநு ஸ்ம்ருதியில் இடைச் சொருகலாக வந்த 40 ஸ்லோகங்களை மட்டும் வைத்துக்கொண்டு கூச்சல் போடும் மார்கஸீயங்களும், திராவிடங்களும், மதப் பிரசாரகர்களும் விருந்தோம்பல் பண்பு வேறெங்கும் இல்லாதது கண்டு திணறிப் போகிறார்கள். சீதையும் கண்ணகியும் வந்த விருந்தினரைக் கவனிக்கும் வாய்ப்பு இல்லையே என்று வருந்துவதை வால்மீகி ராமாயணமும் சிலப்பதிகாரமும் செப்பும்.

 

மஹா பாரதத்தின் அடிப்படையே விருந்தோம்பல்தான்; விருந்தோம்பல் மூலம் கிடைத்த வரங்களால், குந்தி,  பஞ்ச பாண்டவரைப் பெற்றாள். புராணங்களிலும் அதையடுத்து வந்த கதைகளும் அன்ன தானச் சிறப்பை விதந்து ஓதும்.

வெளிநாட்டுப் பிடாரிகளுக்கு அடிமேல் அடி கொடுத்து ஆரிய-திராவிட வாதக் கயவர்களைக் குழி தோண்டிப் புதைக்கிறது மநு தர்ம சாஸ்திரத்தின் மூன்றாம் அத்தியாயம்!!

தொடரும்…………….