Gambling Anecdotes (Post No.5140)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 23 JUNE 2018

 

Time uploaded in London –  11-57 am  (British Summer Time)

 

Post No. 5140

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Picture by Lalgudi Veda

At a large party, Mrs Henry Clay, chaperoning a young lady, passed through a room where gentlemen we’re playing cards, Mr Clay among them.
“Is this a common practice?, inquired the young lady.
“Yes, said Mrs Clay, they always play when they get together.”
“Doesn’t it distress you to have Mr Clay gamble?”
“No, my dear, said the old lady composedly , he most always wins.”
Xxxxx

BOOK MAKER APPROACH!

An ailing book maker sent his son to summon the doctor. Instead of the expected man, a stranger arrived. Later the book maker asked for an explanation.
“Well,said the boy ,there were a lot of brass plates on the doors, and when I got to the one you told me to go to, it said,
Consultations 11 to 12.
The one next to it said, 10 to 1.
And I knew you would like the one who gave the best odds
Xxx

Comedian Win

The British comedian, Beatrice Lillie, once won a hundred and fifty thousand franks at Chemin de fer through having the hiccoughs. Her repeated convulsions and noises were interpreted by the croupier as cries of Banquo.

BANQUO: Character in Macbeth, Gambling, Bank.

Xxxx
Anti Poker Grandma was cheated!


A Grandmother was bitterly opposed to gambling games, especially poker, but gave her sanctions to the playing of authors. So the grandchildren engaged her interests in the game of her choice. Her enthusiasm increased as the game progressed, and while she knew that the cards used were a deck of authors ,she didn’t know that the game she was playing was poker , and that grand mother was enthusiastically playing Whittier’s wild (Poems)

Xxx

காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்! (Post No.5139)

Written by S NAGARAJAN

 

Date: 23 JUNE 2018

 

Time uploaded in London –  6-46 am  (British Summer Time)

 

Post No. 5139

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கர்ம பலன் அதிசயம்

காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்!

 

ச.நாகராஜன்

 

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்.

ஹிந்து மதம் கூறும் கர்ம பல சித்தாந்தத்தின் படி இது சத்தியம்.

சில உண்மை சம்பவங்களைப் பார்ப்போம்.

1

டைட்டானிக் கப்பல் விபத்தைப் பற்றி அனைவரும் அறிவோம்.

அதன் முதல் பயணத்திலேயே அது விபத்திற்குள்ளானது.

அதில் பயணம் செய்தவர்களுள் ஜேம்ஸ் க்ரக் (James Kruck) என்பவரும் ஒருவர். சிகாகோவைச் சேர்ந்தவர் அவர். மூழ்க முடியாத கப்பல் என்று வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் மூழ்கவே அதில் பல நூறு பேர் உயிரிழந்தனர். (2222 பேர்கள் கப்பலில் இருந்தனர்; 1517 பேர்கள் உயிரிழந்தனர்)

ஆனால் அதில் ஜேம்ஸ் க்ரக் உயிர் பிழைத்தார்.

பின்னர் அடுத்து டார்பிடோவிற்கு இலக்கான லூஸிடானியா(Lusitania) வில் அவர் பயணித்தார்.

அதிலும் அவர் உயிர் பிழைத்தார்.

பின்னர் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதின.

 

அதில் ஒன்றில் பயணம் செய்தவர் நமது ஜேம்ஸ் க்ரக்.

அந்த விபத்திலும் கூட ஒரு சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்தார்.

 

அவருக்கு 68 வயதான போது மூன்றாம் மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்தார். காயங்கள் ஏற்பட்டாலும் உயிர் பிழைத்தார்.

மரணத்தை வென்ற மாவீரனாக அவர் காணப்பட்டார்.

ஆனால் என்ன அதிசயம்!

 

ஒரு அடி ஆழம் கூட இல்லாத ஒரு சிற்றோடையை ஒரு நாள் அவர் கடக்க நேரிட்டது. அப்போது மாரடைப்பு ஏற்பட அந்த நீரோடையில் அவர் விழுந்தார். உயிர் துறந்தார்.

காலனை விரட்டி விரட்டி அடித்த அவ்ர் காலம் வந்தவுடன் அவன் வசமானார்.

அதிசயம், ஆனால் உண்மை!

 

2

 

கல்கத்தா செய்தித்தாளான அம்ருத பஜார் பத்ரிகா தனது 23-6-1974 தேதியிட்ட இதழில் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பிரசுரித்தது.

திருமதி கான்சிலேரியா வில்லானுவேவா (Mrs Cancilaria Villanueva) தென் பிலிப்பைன்ஸில் (Southern Philippines) ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயது 52.

தீவுகளுக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்த அலோஹா (Aloha) என்ற அந்தக் கப்பல் திடீரென்று தீ விபத்தால் பற்றி எரிந்து உடைந்தது. ஜாம்போங்கா டெல் -நார்ட் (Zamboanga Del –Norte) என்ற மாகாணத்தின் அருகில் அது ஜூன் 2ஆம் தேதி மூழ்கியது. அதில் பயணித்த 271 பயணிகளில் 4 பேர் உயிரிழந்தனர்.

 

அதிலிருந்து விழுந்த கான்சிலேரியா ஒரு கடல் ஆமையின் முதுகில் ஏறினார். அந்த ஆமை அவரை இரண்டு நாள் பாதுகாப்புடன் சுமந்தது. 48 மணி நேரம் கழித்து அவர் ஒரு கப்பலைப் பார்த்தார். உதவி கோரிக் கத்தினார். கப்பலில் வந்த மாலுமி அவர் ஒரு பெரிய எண்ணெய் டிரமில் ஏறி வந்து கொண்டிருந்ததாக நினைத்தார். ஆனால் உண்மையில் பார்த்தால் அது ஒரு கடல் ஆமை. யாராலும் இதை நம்ப முடியவில்லை.

அவரைப் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றினர் மாலுமிகள்.

என்றாலும் கூட ஆமை அங்கிருந்து போகவில்லை. இரண்டு முறை கப்பலை சுற்றி விட்டு, தனது ‘பயணி’ பாதுகாப்பாக இருபப்தை உறுதி செய்தவிட்ட பின்னர், மெதுவாக அது அங்கிருந்து நகர்ந்தது.

 

இந்த அதிசயச் செய்தியை Bulletine Today என்ற பத்திரிகை வெளியிட்டது. அது உலகச் செய்தி ஆனது.

காலம் வரவில்லை அந்தப் பெண்மணிக்கு; ஆகவே காலனும் அவரிடம் வரவில்லை.

 

 

3

சவாய் மதோபூரில் ஜக்கர்பந்த் அருகே படகு ஒன்று விபத்திற்குள்ளானது. தாயும் தந்தையும் நதியில் மூழ்கி இறந்தனர்.

 

அவர்களது ஒரு வயது மகன் ஒரு புல் கட்டில் விழ அந்தக் குழந்தை உயிர் பிழைத்தது.

இதை PTI பெரிதாக வெளியிட்டது.

4

இன்னொரு  PTI செய்தி. நியூயார்க்கிலிருந்து வந்த செய்தியை அது 26-2-1952 அன்று வெளியிட்டது.

 

பல மாடி அடுக்குக் கட்டிடம். அதில் ஆறாவது மாடி ஜன்னலிலிருந்து ஒரு மூன்று வயதுக் குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது. டெலிவிஷன் ஏரியலில் தடுக்கிக் கீழே வந்து விழுந்த குழந்தை அம்மா அம்மா என்று கத்திக் கொண்டே சாதாரணமாக எழுந்து நடந்தது!

 

5

ஈரானில் ஒரு பூகம்பம். இடிபாடுகளுக்கு இடையே ஏழு நாட்கள் கழித்து இரு குழந்தைகள் உட்பட ஏழு பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இது போன்ற பூகம்ப மீட்புச் செய்திகள் ஏராளம் உண்டு.

 

6

‘ஈஸ்வரஸ்ய வஷே சர்வம் சராசரமிதம் ஜகத்’

 

இந்த சராசரம் ஈஸ்வரனின் வசம் உள்ளது.

உண்மை; அனைத்தையும் நமது கர்மமே நிர்ணயிக்கிறது.

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!

சம்பவங்கள் ஆயிரம் ; உள்ளே உறைந்திருக்கும் சத்தியம் ஒன்றே தான்!

***

 

 

 

Proverbs on God (Post No.5138)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  18-51  (British Summer Time)

 

Post No. 5138

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

1.Man proposes, God disposes
The greatness of the Almighty is beyond the ken of one’s comprehension

acintaniiyo mahimaa paresithuh- Kahaavatratnaakar (Sanskrit).

 

Who can comprehend the ways of God?- viramaorvasiiya of Kalidas

ko devata rahasyaani tarkayisyati

 

Tamil also has this proverb—Thaan ondru ninaikka Deivam ondru ninaikkum

2.God helps them that help themselves

 

God is the right hand of the diligent.

 

nityam prayatammaanaanaam sahaayah paraleswarah

3.God hath leaden feet but iron hands

Tamil- Arasan Andre Kolvaan, Deivam nindru kollum

God pays back the dimwit in his own coin

devopi mandaaya dadaati mandam

4.God provides for him that trusteth

 

Those devoted to Narayana know no fear

naraayanaparaah sarve no kutacana bibhyati -Bhagavata Purana

 

Never does anyone who does good, tread the path of woe- Bhagavad Gita 6-40

 

na hi kalyaanakrt kascid durgatim taata gachchati – BG 6-40

My devotee perishes neve- Bhagavad Gita 9-31

na me bhakta pranasyati -9-31

5.God shapes the back for the burden

 

What is impossible for the Creator?

Dhaaruh kim naama durghatam- Brhat kathaa Manjari

6.God tempers the wind to the shorn lamb

 

Nectar turns into poison and poison turns into nectar, if the Lord so chooses- Raguvamsa of Kalidasa

 

visamapyammrtam kvacidbhavedamrtam vaa visamiisvarecchayaa

7.Gods mill grind s slow but sure
Tamil- Arasan Andre Kolvaan, Deivam Nindru Kollum
Lord Krishna gave 99 chances to criticise him. When he did it for 100th time he was done away with.



8.When need is highest, God’s help is nighest

Draupadi was helped by Lord Krishna;

 

Elephant Gajendra was helped by Lord Vishnu;

 

Prahlada was helped by Narasimha;

 

With the Lord’s grace, the negative traits convert into positives -Subhasita Ratnabhandaagaara

 

9.Whom god would ruin, he first deprives of reason
Vinasa kale Vipareeta Buddhi

Samsayaatmaa vinasyati – BG 4-40

Doubting Thomasses perish

10.Every man for himself, and god for us all 
Tamil- Dikkatravarkku Deivamee Thunai

 

What is impossible with the unfailing benediction of the gods?- Kathaa sarit saagara

 

Four kinds of people worship me: the distressed, seeker of wealth, the wise and the seeker of knowledge; the wise is dear to me.- BG 7-16

11.There is no going to heaven in a sedan
God’s will is formidable- Mahabharata
12.Ye cannot serve god and mammon

 

No ills of life ever touch those that alone cling to the feet of Him who is beyond the world of likes and dislikes

13.Short prayers rise up to heaven

 

The power of God is so great that it opens doors everywhere- Ramayana manjari

14.Bells call other’s but themselves enter not into the church

 

Not the fishes in holy Ganges go to heaven- Ramakrishna Paramahamdsa
15.The nearer the church the farther from the God

 

The head which bows not at the feet of God of eight attributes is as worthless as organs which do not perform their proper functions -Tirukkural -9

16.Like priest like people

Lord Krishna says that people follow good people in the Bhagavad Gita

Whatever action a great man performs common man follows- BG 3-21

17.He that would learn to pray let him go to sea.
Deeds, good or evil, that spring from darkness shall not affect those who gloriously sing the praise of theLord – Tiruvalluvar, Kural 5

 

Lord Krishna also say that those who are in trouble pray to him in Bhagavad Gita (Sea Travel is such a difficult one)

 

18.Faith can remove mountains 

 

Padmapada walked on water when his Guru Adi Shankara called him from the other side of the Ganges

Dumb becomes eloquent and lame cross the mountains with the grace of God- Muka Kavi

 

Muukam Karoti vaachaalam, Pankum langrte Girim

 

19.The just shall live by faith

Truth is dear to God

 

Isvarah satyavaak praiyah- Kahaavatratnaakar

-subham-

 

விஷக்கடிக்கு பௌத்த மத வைத்தியம் (Post No.5137)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  5-34 AM  (British Summer Time)

 

Post No. 5137

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாலி மொழி நூல்களில் புத்த மத விஷயங்களுக்கு இடையில் பல மருத்துவக் குரிப்புகளும் உள. சில விஷயங்கள் மிகவும் விநோதமனவை.

 

 

சூள வம்ஸம் என்னும் இலங்கை வரலாற்று நூல் விளம்புவதாவது:- கித்திஸிரிராஜஸீஹ,

(கீர்த்தி ஸ்ரீ இராஜ சிம்ஹன்) பௌத்த பிஷுக்களுக்காக இரண்டு டாக்டர்களையும் நர்ஸ்களையும் நியமித்தான். அரசாங்க கஜானாவிலிருந்து ஆண்டுதோறும் மருத்துவச் செலவை நல்கினான்.

 

 

உபாலி என்ற பௌத்த மத குருவுக்கு மூக்கில் வியாதி வந்தபோது நல்ல மருத்துவ வசதி அளித்தான்.

 

முதலாவது பராக்ரமபாஹு ஒரு பெரிய மண்டபம் கட்டி அங்கு நோயாளிகளைத் தங்கச் செய்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு விஷேச வேலைக்காரன், ஒரு வேலைக்காரியை அமர்த்தி இரவும் பகலும் உணவும் மருத்தும் அளிக்க ஏற்பாடு செய்ததாகவும் சூளவம்ஸம் எனும் சரித்திர நூல் பகரும்.

 

பராக்ரமபாஹு பல்வேறு மூலிகை மருந்துகளைச் சேகரித்து அவைகளை மாட்டு கொம்புக்குள் பாது காத்து வைத்தான். விஷ அம்புகளை எடுப்பதற்காக விஷேச சாமணங்களைச் செய்தான். விஷ அம்புகளை எடுத்து காயங்களுக்கு மருந்திட திறமையான டாக்டர்களை நியமித்தான்.

பாம்புக்கடிக்கோ அல்லது விஷத்தை இறக்கவோ சாணி சாம்பல், மூத்திரம், களிமண், கஷாயம் பயன்படுத்தப்பட்டன. ஒருவருடைய எல்லா உறுப்புகளிலும் விஷம் பாய்ந்து நீலம் ஏறிய பின்னரும் அவனைக் காப்பாற்றிய அதிசயச் செய்திகளை புத்தமத நூல்கள் நுவலும்.

 

அவர்கள் கருகிய அரிசியினால் ஆன கஷாயத்தைக் கொடுத்து விஷத்தை இறக்கிய செய்திகளும் சொல்லப்படுகின்றன.

 

 

மருந்துகளைப் பொறுத்த மட்டில் ஆயுர்வேத மருந்துகளைப் போலவே உள்ளன. ஆனால் கரடி மாமிசம், முதலை மாமிசம், மீன் முதலியவும் உள்ளன.

வியாதிகளின் பட்டியல் பின்வருமாறு:

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசு மூத்திரம் கலந்த கஷயம் கொடுக்கப்பட்டது.

தோல் நோய்களுக்கு மூலிகை எண்ணை பயன்படுத்தப் பட்டது.

 

சமிதிகுத்த என்ற பிராஹ்மணனுக்கு குஷ்ட நோய் வந்து உறுப்புகள் அனைத்தும் உதிர்ந்து விழுந்தன.

மொக்கராஜ (மஹாராஜ) என்ற பிராஹ்மணனுக்கு  உடல் முழுதும் பருக்கள் வந்தன. வீட்டில் நோய்க் கிருமிகள் இருப்பதை அறிந்து குளிர் காலத்தையும் பொருட்படுத்தாது வயலில் வசித்தான்

 

ராஜ க்ருஹத்தில் இரண்டு பாங்கு அதிகாரிகள் வீட்டில் பிளேக் நோய் ஏற்பட்டது. முதலில் ஈ போன்ற பூச்சிகளும் பின்னர் பசு போன்ற மிருகங்களும் பின்னர் வேலைக்காரர்களும் பின்னர் வீட்டு எஜமானர்களும் நோயில் விழுந்தனர்.

 

நோய்களின் பட்டியலில் நீரிழிவு, வயிற்றுப் போக்கு, கண், காது, வாய், வயிறு, குடல் நோய்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. உறுப்பு வாரியாக நோய்கள் பட்டியலிடப்பட்டது விஞ்ஞான அணுகுமுறையைக் காட்டுகிறது.

 

 

Sota Roga = Disease of hearing
Jihva Roga = Disease of tongue
Kaya Roga = Disease  of body
Mukha Roga = Disease of mouth
Dant Roga = Disease of teeth
Kaba =cough
Sasa =asthma
Pinasa= cold in the head
Daha = burning
Kucchi Roga = Disease abdominal trouble.குடல் நோய்
Muchchaa = hysteria உணர்ச்சிக் கொந்தளிப்பு
Pakkhandika=  diarrhoea
Suula = acute pain
Visucikaa = cholera வாந்திபேதி
Kilaasa Roga = a cutaneous Disease
Apasmaara = epilepsy வலிப்பு
Daddu=  ringworm
vitachchikaa=  scabies
Madhu meha=  diabetes சர்க்கரை வியாதி
Lohitapitta=  bile with blood
Bhagandala = fistula இரத்தக்குழாய், குடல் போன்ற உறுப்புகளின் இணைப்பில் கோளாறு
Sannipaatikaa = union of humours
Utuparinaamajaaabaadhaa = change of season disease

சித்த, ஆயுர்வேத முறை  போலவே வாத, பித்த, கப  சமத்தன்மை இழப்பதால் நோய்கள் வருவதாக நம்பினர்.

 

–SUBHAM—

 

குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்! (Post No.5136)

Written by S NAGARAJAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  5-23 am  (British Summer Time)

 

Post No. 5136

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்!

 

ச.நாகராஜன்

1

பாரதத்தின் வரலாற்றை சரியாக எழுத வேண்டிய அவசியம் முன் எப்போதையும் விட இப்போது அவசியமாகிறது; இது அவசரத் தேவையும் கூட.

செகுலரிஸம் என்ற போர்வையில் கிறிஸ்தவ பாதிரியின் கல்லறையில் அவர் தமிழ் மாணவன் என்று பொறித்திருக்கிறார் என்று சிறு பிள்ளைகளின் பாட புத்தகத்தில் பொய்யும் புரளியுமாக எழுதி வைப்பது; குரு தேக் பகதூரின் ஒப்பற்ற அற்புதமான தியாகத்தைக் கொச்சைப் படுத்துவது அதை NCERT மூலமாகப் பரப்புவது போன்ற பல அபாயகரமான அசிங்கமான பல நூறு “செகுலரிஸ வித்தைகளைப்” பார்த்து விட்டோம்.
(“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு” இந்தியாவில் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும். இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. –

The National Council of Educational Research and Training (NCERT) is an autonomous organisation set up in 1961 by the Government of India to assist and advise the Central and State Governments on policies and programmes for qualitative improvement in school education.)

செகுலரிஸ போர்வையில் கம்யூனிஸ்டுகளும், வெறிபிடித்த மதமாற்றப்  பாதிரிகளும், இஸ்லாமிய தீவிரவாதிகளும், ஐந்தாம்படை வேலை பார்க்கும் போலி ஹிந்துக்களும் உலவுவதும் அறிஞர்கள் போல ஆய்வு என்ற பெயரில் விஷக் கருத்துக்களைத் திணிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

குரு தேக்பகதூரைப் பற்றி Guru Tegh Bahadur’s martyrdom

– Satish Chandra என்ற சதிஷ் சந்திராவின் கட்டுரையும் அதற்கு உரிய பதிலடிக் கட்டுரையாக , An untenable attempt என்று Gurtej Singh எழுதிய அழகிய கட்டுரையையும் ஹிந்து நாளேடு பிரசுரித்தது.

இணையதளத்தில் கீழ்க்கண்ட தொடுப்புகளில் அன்பர்கள் கட்டுரைகளை முழுதுமாகப் படிக்கலாம். (16-10-2001 மற்றும் 13-11-2001 இதழ்களில் வெளியானவை)

http://www.thehindu.com/2001/10/16/stories/05162524.htm

 

http://www.thehindu.com/thehindu/op/2001/11/13/stories/2001111300020100.htm

 

 

2

நமது நாட்டின் சேவையில் சீக்கியர்களின் சேவை மகத்தானது.

இவர்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதும், இவர்களின் பணியை கொச்சைப் படுத்துவதும் இவர்களை தேசீய நீரோட்டத்திலிருந்து பிரித்து பிரிவினையை ஏற்படுத்தும் தீய எண்ணத்தின் அடிப்படையிலானது.

இந்திய சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் பாதக அரசால் தூக்கிலிடப்பட்ட 124 வீரர்களில் 71 பேர்கள் சீக்கியர்கள். ஒரே ஒருவர் தான் முஸ்லீம். அவரும் கூட கைபர் பிராந்தியத்தைச் சேர்ந்த பத்தான். ஆயுள் தண்டனை தரப்பட்ட 3500 சுதந்திரப் போர் தியாகிகளில் 2200 பேர்கள் சீக்கியர்கள்.

1919ஆம் ஆண்டு புனிதத் தலமான அமிர்தசரஸில் நிராயுதபாணிகளாக இருந்தவர்களை பிரிட்டிஷ் அரசு வக்கிரமாக ஈவிரக்கமின்றி வதை செய்தது; அதில் 1301 பேர்கள் பலி ஆயினர். அவர்களுள் 799 பேர்கள் சீக்கியர்கள். ஒருவர் கூட முஸ்லீம் இல்லை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆக வரலாறு நெடுக ஹிந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் இன்னுயிரைத் தேசத்திற்காக தியாகம் செய்ததில் சளைத்ததே இல்லை.

 

3

குரு தேக் பகதூர் (Guru  Tegh Bahadur) பத்து சீக்கிய குருக்களில் ஒன்பதாம் நானக் குருவாவார். (தோற்றம் 1-4-1621 மறைவு 24-11-1675). சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் அவர்களின் ஆவி இவர் மீது ஆவிர்பவித்ததாக நம்பப் படுகிறது.

குரு கிரந்த் சாகிப்பில் இவரது 115 கவிதை நடையிலான இறைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இவரது பெருமை அளப்பரியது.

பல்கலை வித்தகர் இவர். வில்வித்தை, கத்திச் சண்டையில் நிபுணர். குதிரையேற்றத்தில் வல்லவர். பழைய இதிஹாஸ நூல்களில் அவற்றின் ஆழம் கண்டவர்.

பதினான்காம் வயதிலேயே முகலாயரை போரில் எதிர்கொண்ட அஞ்சா நெஞ்சர் இவர்.

பகலா என்னும் இடத்தில் 26 வருடங்கள் 9 மாதங்கள் 13 நாட்கள் இவர் தவத்தில் இருந்தார். குடும்ப பொறுப்பை விட்டு விட்டு அதிகமாக தவத்தில் ஈடுபட்ட காலம் இது.

காஷ்மீரி ஹிந்து பண்டிட்களை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றும் அநியாயத்தைத் தட்டிக் கேட்டார் இவர்.

ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் இஸ்லாமிற்கு மாற்றும் முகலாய அரசின் போக்கை வன்மையாகக் கண்டித்து தைரியமாகப் போர்க்கொடி உயர்த்தினார்.

அனந்தபூர் சாஹிப் என்னும் அழகிய நகரை பஞ்சாப் மாகாணத்தில் நிறுவினார். பிலாஸ்பூர் ராணியான சம்பாவிடமிருந்து 500 ரூபாய் கொடுத்து இதற்கான இடத்தை இவர் வாங்கினார். பாடியாலா நகரையும் இவரே தான் நிறுவினார்.

ஜிஹாங்கீர் அநியாயமாக ஐந்தாம் சீக்கிய குருவான அர்ஜுன் சிங்கைக் கொலை செய்ததன் காரணமாக, இவருக்கு பலத்த பாதுகாப்பை இவரது மெய்காப்பாளர்கள் தந்தனர்.

ஆனால் ஔரங்கசீப் இவரைப் பிடித்து வந்து இஸ்லாமிற்கு மாறு; இல்லையேல் உயிரை எடுப்பேன் என்று கூறிய போது ஒருக்காலும் இஸ்லாமிய மதத்தை ஏற்க மாட்டேன். சாவதே மேல் என்று முழங்கினார்.

 

அனைவருக்கும் முன்பாக 1675-ல் இவர் தலை துண்டிக்கப்பட்டது. இவர் இறந்த இடம் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப். இவர் உடல் எரிக்கப்பட்ட இடம் குருத்வாரா ராகெப் கஞ்ச் சாஹிப்.

தனது இன்னுயிரை ஈந்து தன் மானத்தைக் காத்த மாபெரும் வீரரான இவரைக் கொச்சைப் படுத்துவதும் ஔரங்கசீப்பை புகழ்வதும் தேசப்பற்றில்லாதவர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயலாகும்.

இவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் உள்ளன. நாடு முழுவதும் இவர் சுற்றி வந்ததால் மக்களின் அளவிலா அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தார்.

குரு தேக் பகதூரைப் போற்றுவோர் பாரத தேச பக்தர்கள்; இவரது வரலாற்றை மாற்றத் துணிவோர் இந்த தேசத்தின் துரோகிகள்!

குரு தேக் பகதூரை வணங்குவோம்; போற்றுவோம்!

***

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  14-01  (British Summer Time)

 

Post No. 5135

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

 

சம்ஸ்க்ருதத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரக ஸம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை போன்ற ஆயுர்வேத நூல்களை நாம் அறிவோம். ஆனால் பாலி மொழியில் உள்ள பௌத்த மத நூல்களில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளை உலகம் அறியாது. புத்தரோ பௌத்தர்களோ மருத்துவ நூல்களை எழுதவில்லை ஆயினும் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய மருத்துவக் குறிப்புகள் அந்த நூல் ல்களிலும் உண்டு.

சில சுவையான செய்திகளை மட்டும் தருவேன்

ஒரு முறை புத்தர் நோய்வாய்ப்பட்டார். உடனே தேவஹித என்ற பிராஹ்மணனிடம் சென்று சுடு நீர் வாங்கி வரும்படி உபவன என்ற சிஷ்யரை அனுப்பி வைத்தார். உடனே அந்தப் ப்ராஹ்மணன் , புத்தரிடம் வந்து அவரை வெந்நீரில் குளிக்கச் சொன்னார். புத்தர் குளித்தவுடன் அவருக்கு வெல்லப்பாகு கலந்த சுடு நீரை சாப்பிட அருளினார். அதைக் குடித்தவுடனே  வாத, பித்த, கப தோஷ வியாதி போயிற்று.

முதலில் மனிதர்களுக்கு ஆசை மூப்பு, பசி என்ற மூன்று நோய்கள் மட்டும் இருந்தன. பின்னர் இது காலப்போக்கில் 96 நோய்களாகப் பல்கிப் பெருகின என்று சுத்தனிபாத என்ற நூல் செப்பும். சிலர் 98 என்றும் பகர்வர்.

புத்தர் காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னன் பிம்பிசாரன். அவனிடம் புகழ்பெற்ற மருத்துவர் ஜீவகன் இருந்தார். அவர் தக்ஷசீல பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். அப்போது மகத சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த நோய்கள் குஷ்ட ரோகம், க்ஷய ரோகம் (டி.பி.) , இழுப்பு, ஜூரம் முதலியன ஆகும்

 

கொப்புளங்கள் வந்தால் அதன் மீது கடுகுத் தூளைத் தூவி கட்டுப் போட்டனர்.

தலைவலி தீர பலவித மூலிகை எண்ணைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் மூக்கு வழியாக குழாய் மூலம் மருந்து கொடுத்தனர். இரட்டைக் குழாய் வழியாக நாசியின் இரு த்வாரங்கள் வழியே மருந்து தந்தனர். குழாய் வழியாக மருந்துப் புகையும் செலுத்தினர்.

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசுமாட்டின் மூத்திரம் கலந்த கஷாயம் தந்தனர்.

மூட்டுவலி முதலிய நோய்களுக்கு ஆவிச் சிகிச்சை தரப்பட்டது. ஆறு அடி குழி ஒன்றில் கரியை நிரப்பினர். அதன்மீது மணலைப் பர்ப்பி அதன் மீது மண்ணாலும் களி மண்ணாலும் பூசினர் அதன் மீது மூலிகைகள் போடப்பட்டன. அதிலிருந்து வரும் புகையில் கை, கால் முதலிய உறுப்பைக் காட்ட வைத்தனர். உடலின் எல்லா உறுப்புகளையும் காட்டி புகை பிடிக்க வைத்தனர்.

அசோகர் காலத்தில் ஒரு புத்த பிக்ஷுவுக்கு நோய் வந்தது. மருந்து கிடைக்காமல் அவர் இறக்க நேரிட்டது. உடனே பாடலிபுத்திர நகரத்தின் நான்கு வாயில்களிலும் நான்கு பெரிய தொட்டிகள் முழுக்க மருந்துகளை நிரப்பி அனைவருக்கும் மருந்து கிடைக்க அசோகர் வசதி செய்தார். புத்தகோசரின் சமந்தபாஸாதிக என்ற புஸ்தகம் இத்தகவலைத் தருகிறது. அவரது கல்வெட்டு ஒன்று மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தனித்தனியே ஆஸ்பத்திரிகள் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன

–SUBHAM–

EMPEROR ASOKA’S FOUR TANKS OF MEDICINES AT FOUR GATES! (Post No.5134)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  7- 16 am  (British Summer Time)

 

Post No. 5134

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

EMPEROR ASOKA’S FOUR TANKS OF MEDICINES AT FOUR GATES! (Post No.5134)

2300 Years ago, Emperor Asoka installed four tanks filled with medicines in four gates of the city (Pataliputra) according to Buddhgosa’s Samantapasadika.

Why?

 

A Buddha Bikshu died for want of medicines. Immediately Asoka took this drastic step. According to the rock edicts of Asoka, two kinds of medical treatments were available in his kingdom- 1.medical treatment of man and 2.medical treatment of animals.

In later Pali work Culavamsa (Chapter 73) we find Kittisirirajasiiha (Kirti Sri Raja Simha of Sri Lanka) appointed two physicians well versed in medicines and nurses for the bikshus. They were given yearly a big sum for the medicines from the Royal Treasury.

The king gave the best treatment for Upali when he was suffering from a disease in the nose.

Sri Lankan King ParakramabahuI had a big hall built for sick people and he gave to each sick person a special slave and a female slave to prepare medicines day and night, according to need, medicines and food, solid and liquid (Culavamsa, Chapter 76).

Treatment for Poison

Parakramabahu collected different types of medicines and preserved them in cow horns. This was to cure the wounds caused by the poisonous arrows. He also collected iron pincers for extracting arrow heads. He engaged many skilful physicians.

 

Snake Bites

To cure the snake bites, they used four materials: Cow dung, urine, ashes and clay. One physician used drugs made up of vegetables and cured a person even after the poison affected all limbs.

XXX

Hemp water was used as medicine (Mahavagga 6-14-3

To cure constipation, a decoction made up of ashes of burnt rice was administered.

For the wind troubles in stomach salt sour gruel or teka-kula was given which contains ginger and two kinds of pepper.

Following Eye ointments were mentioned in the Buddhist works:

Black Collyrium

Rasa ointment (made with vitriol_

Ointment made with antimony

Geruka (yellow ochre)

Kapalla (soot taken from a lamp)

In case of internal complaint, hot water with fruit juice was given.

 

Plague in RajagrAha

The Dhammapda commentary mentioned two diseases in bankers’ houses.

Bhaddavatiya , a banker got an intestinal disease. When this disease broke out, the first to die were the flies, then insects, then mice, domestic fowls, swine, cattle, slaves, both male and female, and last of all, the members of the household.
The banker with his wife and daughter fled away from the house. The same work also refers to the outbreak of plague in the house of the chief a banker of the Rajagraha with the result that many animals, slaves ,masters and mistresses of the household and the chief treasurer with his wife fell a victim to this disease.

A peculiar kind of disease known as Ahivataroga or snake- wind disease broke out in a Savaththian family.

 


Besides the diseases mentioned above, a list of diseases is also given:-
Sota Roga = Disease of hearing
Jihva Roga = Disease of tongue
Kaya Roga = Disease  of body
Mukha Roga = Disease of mouth
Dant Roga = Disease of teeth
Kaba =cough
Sasa =asthma
Pinasa= cold in the head
Daha = burning
Kucchi Roga = Disease abdominal trouble
Muchchaa = hysteria
Pakkhandika=  diarrhoea
Suula = acute pain
Visucikaa = cholera
Kilaasa Roga = a cutaneous Disease
Apasmaara = epilepsy
Daddu=  ringworm
vitachchikaa=  scabies
Madhu meha=  diabetes
Lohitapitta=  bile with blood
Bhagandala = fistula
Sannipaatikaa = union of humours
Utuparinaamajaaabaadhaa = change of season disease

In the medicine list we find the usual Ayurvedic ingredients.
Among the non vegetarian ingredients, fat of bear, fish alligator, swine and ass have been prescribed with oil.

It is interesting to note that pulverised ointments were put into pots and saucers.
Boxes were used for ointments.

 

Summarised from Dr Bimala Churn Law’s article, Calcutta, Year 1940

–SUBHAM–

 

 

 

காலத்தை உறைய வைக்கும் புகைப்பட நிபுணர்! – 3 (Post No.5133)

Written by S NAGARAJAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  6-45 am  (British Summer Time)

 

Post No. 5133

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 22-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினாறாம்) கட்டுரை

காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 3

.நாகராஜன்

 

மனிதனின் புலன்கள் வழியாக அவன் பெறும் அறிவு மிகவும் குறைவு என்று கூறுகிறார் மக்யார். அவர்கள் எப்படி சூழ்நிலைக்குத் தக்கபடி இருக்கிறார்கள் என்பதை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். எதைச் செய்தாலும் கூட நமது அறிவு மிக மிகக் குறைந்த அளவாகவே இருக்கிறது என்பது அவரது அனுபவ உரை.

தனது ஸ்கேனர், கேமரா ஆகியவற்றை அவரே தயாரித்துக் கொள்ள ஆரம்பித்தார். ஒரு மனிதரின் உடல் பாகங்களை பல முறை துண்டு துண்டாகப் போட்டோ எடுத்து அதைப் பின்னர் முழு மனிதனாக அசெம்பிள் செய்ய ஆரம்பித்தார். மக்கள் கூட்டம் அலை அலையாக ஊர்ந்து செல்லும் போது அவரது ஸ்கேனரும் கேமராவும் விளையாட ஆரம்பித்தது.

ஒலிம்பிக் போட்டிகளில் இறுதியாக வென்றவரைக் கண்டு பிடிக்கும் ‘ஸ்லிட் ஸ்கேன்’ கேமரா பல்லாயிரம் டாலர் விலை கொண்டது. இதைத் தானே தயாரிக்க எண்ணினார் மக்யார். மீடியம் ஃபார்மட் கேமரா லென்ஸுடன் இன்னொரு சென்ஸரை இணைத்து அதற்கான கணினியின் மென்பொருளைத் தானே எழுதித் தயாரித்தார் அவர். மொத்தச் செலவு ஐம்பதே டாலர் தான்!

ஸ்கேன் செய்ய வேண்டிய ஒரு ஆவணத்தை ஸ்கேனரில் நிலையாக வைத்து விட்டு ஸ்கேனர் அந்த ஆவணத்தின் மீது ஊர்ந்து செல்லும். இது தான் சாதாரணமான ஸ்கேனரின் செயல்பாட்டு முறை. ஆனால் மக்யாரோ இதை மாற்றி, சென்ஸரை நிலையாக வைத்து ஸ்கேன் செய்யப்பட வேண்டிய விஷயத்தை இயக்கத்தில் இருக்கும் படி மாற்றினார்.

ஷாங்காய் நகரத்தில் அவர் சாலை வழியே செல்லும் பயணிகளை இப்படி ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார். ஒரு லட்சம் தொடர் காட்சிகளை துண்டு துண்டாக எடுத்து அதை ஒரு முழுப் புகைப்படமாக்கினார். இதன் விளைவாக அர்பன் ஃப்ளோ (Urban Flow) என்ற ஒரு அடி உயரமும் எட்டு அடி நீளமும் உள்ள போட்டோக்கள் உருவாக ஆரம்பித்தன. இதில் வேகமாகச் செல்லும் பஸ்கள் கார்களாக சுருங்கின. பஸ்களோ மெட்ரோ ரயில் போல நீளமானது. மெதுவாக நடந்த மனிதர்களின் கால்கள் பெரிதாக ஆனது.

ஷாங்காய் நகரில் மக்யாரைச் சந்தித்த தோர்குல் என்பவர் இப்படிப்பட்ட போட்டோ விசித்திரங்களைக் கண்டு மயங்கிப் போனார். மக்களோ அசத்தலான போட்டோக்களை போட்டி போட்டு வாங்கலாயினர். நம்ப முடியாத விலையான 700 டாலர் (சுமார் 46900 ரூபாய்கள்) முதல் 1400 டாலர் வரை கொடுத்து ஒவ்வொரு போட்டோவையும் அனைவரும் வாங்கினர்.

இதனால் உற்சாகமடைந்த மக்யார் தனது அடுத்த ப்ராஜெக்டாக ஸ்டெயின்லெஸ் என்ற திட்டத்தைத் தொடங்கி பாரிஸ், டோக்யோ, நியூயார்க் முதலிய நகரங்களில் உள்ள சப்-வே ஸ்டேஷன்களில் படம் எடுக்கலானார். இதில் பிரம்மாண்டமானஒரு உண்மை வெளியானது. எந்த நாடானாலும் சரி, எந்த ஸ்டேஷனாலும் சரி மக்கள் ஒரே விதமான உருவத்துடனும், ஒரே விதமான முக பாவத்துடனும், அணுகு முறையுடனும் இருக்கின்றனர். நாடு, இனம்.மொழி இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒற்றுமையைக் காண முடிகிறது என்பதே அந்த உண்மை!

தனது படப்பிடிப்பிற்காக சரியான வெளிச்சத்தை நிர்ணயிக்க தனது லைட்-மீட்டருடன் 290 ஸ்டேஷன்களிலும் அவர் ஒரு வாரம் அலைந்தார். ஐந்து ஸ்டேஷன்களில் மட்டுமே ஹை – ஃப்ரீக்வென்ஸி லைட் இருந்தது.அங்கு தன் வேலையை அவர் தொடங்கினார். ரயிலுக்குள் அவரது போட்டோவிற்கான போதுமான வெளிச்சம் இல்லை; அதற்காக மூன்று மாத காலம் ஆராய்ந்து ஒரு மென்பொருளைத் தயாரித்தார். பிறகு வெற்றி பெற்றார். இவரது நலம் விரும்பியான தோர்குல், “ ஜென் புத்தமதப் பிரிவில் ஐந்து வருட காலப் பயிற்சிக்குப் பின்னரே ஒரு அம்பை குறி பார்த்து விட அனுமதி கிடைக்கும். ஐந்து வருட காலம் குறி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்! அதுவரை பயிற்சி பெற வேண்டியது தான்!! அது போலத்தான் மக்யாரும்! நன்கு தயாரான பின்னரே அவர் களத்தில் இறங்குவார்” என்கிறார்.

தனது ஸ்டெயின்லெஸ் திட்டத்திற்கு அடுத்தபடியாக ஜெர்மானிய கேமரா உற்பத்தியாளரான ஆப்ட்ரானிஸ் என்ற நிறுவனத்தை அணுகிய மக்யார் 16000 டாலர் பெறுமான ஒரு இண்டஸ்ட்ரியல் வீடியோ கேமராவைக் கடனாகத் தருமாறு கேட்டார். ஆப்ட்ரானிஸ் நிறுவனக் கேமராக்கள் ஒரு வினாடிக்கு ஒரு லட்சம் ப்ரேம்களை எடுக்கும் வேகத் திறன் படைத்தவை. சாதாரண கேமராக்களால் ஒரு வினாடிக்கு 24 ப்ரேம்கள் மட்டுமே எடுக்க முடியும்.

அதை வைத்து படங்களை எடுத்தார். மக்யார் சாதாரண வேகத்தை விட 56 மடங்கு அதிக வேகத்தில் தனது படங்களைப் பிடிப்பது வழக்கம். இதனால் 12 வினாடி படங்களை 12 நிமிட படங்களாக நீட்டிக்க முடியும். போனை உதடுக்குக் கொண்டு செல்லும் போது உதடு சுழலும் அசைவு கூட அவரது கேமராவில் துல்லியமாகப் பதியும்.

மில்லி செகண்ட் படப்பிடிப்பு அவருடையது. நிகழ்காலத்தை தத்ரூபமாகக் காட்டுகிறேன் என்கிறார் அவர்.

இப்போது அவரது படங்கள் ஒவ்வொன்றும் 14000 டாலர் (சுமார் 9,24000 ரூபாய்) என்ற விலையை எட்டி விட்டது.

காலத்தை உறைய வைத்து அனைவரையும் குதூகலப்படுத்தும் அற்புத புகைப்பட நிபுணராக இருக்கும் மக்யார் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்பதில் ஐயமில்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

வில்லியம் ஹால்ஸ்டெட் (William Halsted) என்பவர் அமெரிக்காவில் ஜான் ஹாப்கின்ஸ் மெடிகல் ஸ்கூலில் தலைமை அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்தார். 33 ஆண்டு அனுபவத்தால் அனைவராலும் மதிக்கப்பட்டு வந்த அவர் சற்று கண்டிப்பானவர். நர்ஸ்கள் மற்றும் டாக்டர்கள் அனைவரும் மருத்துவ மனையில் பணியாற்றும் சமயம் தங்கள் கைகளை மெர்குரிக் க்ளோரைட் கரைசலால் நன்கு கழுவிக் கொண்டே ஆபரேஷன் செய்யத் தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். ஆபரேஷன் செய்யப்படும் நோயாளிகளுக்கு இவர்கள் மூலமாக எந்த விதமான தொற்றும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலேயே அவர் இதை வற்புறுத்தி வந்தார்.

1889ஆம் ஆண்டு ஒரு நாள் கரோலின் ஹாம்ப்டன் என்ற நர்ஸ் தனக்கு அந்த கரைசலைப் பயன்படுத்தினால் கையில் அரிப்பு ஏற்படுகிறது என்று அவரிடம் வந்து புகார் செய்தார். உடனே ஹால்ஸ்டெட் குட் இயர் ரப்பர் கம்பெனியிடம் ஒரு ரப்பர் க்ளவ்ஸை – கையுறையை – தயாரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். கையுறையும் வந்தது. நர்ஸின் பிரச்சினையும் தீர்ந்தது.

இதைப் பார்த்த மற்ற நர்ஸ்கள் அனைவரும் தங்களுக்கும் அது போன்ற க்ளவ்ஸ் தேவை என்றனர். ஆகவே ஹால்ஸ்டெட் அனைவருக்கும் அதை ஆர்டர் செய்து வாங்கித் தந்தார். இந்தப் பழக்கம் தொடர ஆரம்பித்தது. இதை அறிந்த ஏனைய மருத்துவ மனைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தன.

சர்ஜிகல் க்ளவ்ஸ் நாளடைவில் பிரசித்தமாயிற்று. இன்றோ ரப்பர் க்ளவ்ஸ்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பல் டாக்டர்கள், சாதாரண நோயாளிகளுக்குச் சிகிச்சை தரும் டாக்டர்கள் என்று அனைவராலும் பயன்படுத்தப்படும்  இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது!

***

 

96 Diseases in Buddhist Works! (Post No.5132)

 


Written by LONDON SWAMINATHAN

 

Date: 20 JUNE 2018

 

Time uploaded in London –  15-02  (British Summer Time)

 

Post No. 5132

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

We come to know about ancient Indian medical system through Buddhist works in Pali language. The Charaka Samhita and Susruta Samhita books are ancient medical treatises in Sanskrit language. If one collect and compare the details from both the sources, we get a very good picture of ancient Hindu medical system that existed 2600 years. One must remember neither Buddha nor Buddhist scholars wrote any medical books. They only narrate what existed in those days. So we can broadly classify them as Hindu Medical system.

 

Here are some interesting facts:-

In the days of Buddha, 2600 years ago, Magadha Empire (Modern Bihar and surrounding states) suffered from five diseases; they were leprosy, dry leprosy, boils , consumption (T.B) and fits.

 

Emperor Bimbisara had Jeevaka , the most famous physician of those days. He got a medical degree from the Taxila (Thatchaseelam) University.

The boils were cut and mustard powder was applied. Bandages were used to cover the boils. Decoctions of herbs and lime (calcium) were used.

 

For headaches oil was used. Nose spoon and double nose spoon were used to give medicine through nose. A pipe was used to send aromatic vapour. Administration of medicine through nose was mentioned in Brahmajaala Sutta of the Digha Nikaya.

Cow’s Urine

For jaundice, a decoction (Kashaaya) made with cows urine was given. For skin diseases, oil was massaged on the body. Purgatives were also used.

A Brahmin named Mogharaaja (Maharaja) had pimples. As he knew that the house was infected he took shelter in the fields though it was winter. A Brahmin named Samitigutta was attacked by leprosy and his limbs were crumbling.

 

Steam bath

In case of acute rheumatism, steam bath was prescribed. A pit six feet deep was filled with charcoal and covered with a coating of sand. Some herbs were spread over it. The patient’s affected limbs were applied with herbal oil and asked to show it over the charcoal pit.  They were asked to turn over and over until the whole body was steamed.

In case of fever blood is let out with the help of a horn.

 

Buddha was treated by a Brahmana Doctor!

Once the Exalted Buddha suffered from disorderly humours (Vaata, Pitta, Kapha) and sent Elder Upavaana to Brahmin Devahita for hot water. The Elder caused Buddha to bathe in hot water and then mixing the molasses with hot water gave it to the Exalted Buddha to drink. He got better soon.

The word Roga denoting various diseases has been defined in the Buddhist commentaries. The diseases were enumerated and classified with reference to the parts of the body affected by them e.g. Diseases of the eye, ear etc.

 

A’ gaathaa’ in the Sutta Nipata says at first there were three diseases, namely Iccha (Desire) anasana (Hunger) and Jaraa (Aging). The diseases , gradually increased in number and the gaathaa fixing the total number as ninety eight. But the editors of Pali-English could not find all the 98 diseases. Dhammapala in his commentary on the Mahaaniddesa speaks of 96 diseases the roots of which lie in the three humours Vaata, Pitta, semhaa (kapha). Out of the 96, thirty two kinds arise from each humour.

Source:- Dr Bimala Churn Law, Calcutta, Year 1940

 

–SUBHAM–

 

 

ஜப்பானில் பிராமண குரு- மகத்தான வரவேற்பு! (Post No.5131)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 20 JUNE 2018

 

Time uploaded in London –  8-45 am  (British Summer Time)

 

Post No. 5131

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

லோகேஷ் சந்திராவின் ஜப்பான்- இந்திய உறவு பற்றிய ஆங்கிலப் புஸ்தகத்தில் 400 பக்கமும் சுவைமிகு அதிசயச் செய்திகள்!

ஜப்பானில் பிள்ளையார் கோவில், ஸரஸ்வதி ஆலயம், ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள், தர்மபோதி பொம்மைகள், நவக்ரஹ வழிபாடு, வேத கால தெய்வங்கள் முதலியன பற்றி நாலைந்து கட்டுரைகள் எழுதிவிட்டேன். கடலில் விழுந்த ஒருவர் ஜப்பானுக்கு பருத்தித் துணியைக் கொண்டு வந்ததையும் பிராமணர் ஒருவருக்கு மஹத்தான வரவேற்பு கிடைத்ததையும் இன்று காண்போம்.

 

49 அடி வெண்கல புத்தர்

காமகுரா  டாய் புட்சு ( KAMAKURA DAIBUTSU AT HASE) ஹேஸி என்னும் இடத்தில் உள்ளது. இந்து 49 அடி வெண்கல புத்தர்; ஜப்பானின் சின்னமாகத் திகழ்கிறது. 1232ல் சுஹாவதி (SUHAAVATI)  பிரிவினர் கொடுத்த காணிக்கையால் உருவாக்கப்பட்டது; 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சுனாமி பேரலை வந்து மண்டபத்தை அடித்துச் சென்றது. இன்று வெட்டவெளியில் கருணா மூர்த்தியாக கீழ் நோக்கிய பார்வையுடன் அருள் பொழிகிறார் அமிதாப புத்தர்.

 

ஆப்கனிஸ்தானில் பாமியன் (BAMIYAN) என்னுமிடத்தில் இருந்த பிரம்மாண்டமான கல் புத்தர்களை இந்த வெண்கல புத்தர் நினைவுபடுத்தும்.

 

( ஆப்கனிஸ்தானில் இருந்த 174 அடி உயர புத்தர் சிலைகளை துலுக்க வெறியர்கள் 2001-ம் ஆண்டில் வெடி குண்டு வைத்து தகர்த்துவிட்டனர்)

 

கடலில் வந்த பருத்தித் துணி

ஜப்பானில் மிகாவா(MIKAWA) மாகாணத்தில் கி.பி.799-ல் நடந்தது இது.

கடலில் விழுந்த ஒரு இந்தியர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரப்பட்டார். அவருக்கு இருபது வயது. அரை நிர்வாண கோலத்தில் இருந்தார். அவர் பேசிய பேச்சு எவருக்கும் புரியவில்லை. தவியாய்த் தவித்தார். நீண்டகாலத்துக்குப் பின்னர் ஜப்பானிய மொழியைப் புரிந்து கொண்டார்; தான் இந்தியாவிலிருந்து வந்ததாகச் செப்பினார். அவர் பருத்தி விதைகள் உள்ள ஒரு பை வைத்திருந்தார். நரா நகரில் கவடெரா கோவிலில் ( KAWADERA TEMPLE  AT NARA) தஞ்சம் புகுந்து வசித்து வந்தார். அவர்தான் பிற்காலத்தில் ஜப்பானியர்கள் மிகவும் விரும்பி அணிந்த பருத்தித் துணியை ஜப்பானியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் பருத்தி சாகுபடி துவங்கியது. இந்த விஷயம் எல்லாம் நிஹோன் கோகி, ருய்ஜு  (NIHON-KOKI AND RUIJU-KOKUSHI) புஸ்தகங்களில் இடம்பெற்றுள்ளன ஜப்பானியர்கள்  பருத்தி(துணி)யை ஹட (HATA OR VATA) அல்லது வட என்பர். ஸம்ஸ்க்ருத மொழியில் பட (PATA)  என்பது துணியைக் குறிக்கும் அதிலிருந்து பிறந்தது ஜப்பானியச் சொல்.

  

புத்த மத வரலாறு

ஜப்பானிய சக்ரவர்த்தி கிம்மெய் (Emperor Kimmei) என்பவருக்கு கி.பி.552-ல் பெக்செ (குடார= கொரியா; Paekche- Kudara) மன்னர் சில பரிசுகளை அனுப்பினார். அவற்றில் சாக்யமுனி புத்தரின் சிலையும் நூல்களும் இருந்தன. இது போன்ற ஒரு தத்துவ போதனையை நான் யாங்கனுமே கேட்டதில்லை என்று அவர் வியந்தார்.

 

கி.பி.577-ல் புத்த மத குருமார்களை கொரியா அனுப்பிவைத்தது.

கி.பி.584-ல் குடார (கொரியா) நாட்டிலிருந்து பெரிய கல் புத்தர் சிலை கொணரப்பட்டது.

 

ஆறாம் நூற்றாண்டின் மத்தியில், புகழ்மிகு தர்மபோதி (Dharmabodhi)  சீனா வழியாக ஜப்பானுக்கு வந்து ஹொக்கேசான் என்னும் இடத்தில் வாசம் செய்தார். ஆயிரம் கையுடைய அவலோகிச்வரர் சிலையின் சிறு வடிவம் அவரிடம் இருந்தது. அப்போது சக்ரவர்த்திக்கு தீராத நோய். கூன் பாண்டியன் நோயை ஞான சம்பந்தர் விபூதி மூலம் குணப்படுத்தியது போல அப்பர் பெருமானின் நோயை அவரது தமக்கை திலகவதியார்  விபூதி மூலம் குணப்படுத்தியது போல, தர்மபோதியும் மன்னர் நோயை , குணப்படுத்தினார்.

 

கி.பி.651-ல் த்ரிபீடக (மூன்று பெட்டி) திருவிழாவை அறிமுகப் படுத்தினார். ஏழு நாட்களுக்கு அரண்மனையில் பேருரை ஆற்றினார். இளவரசர்கள் அனைவரும் அவர் தாள் பணிந்தனர்.

 

இந்தியாவுக்கு வந்து சென்ற சீன யாத்ரீகர் யுவாங் சுவாங்கிடம் தியானம் கற்பதற்காக தோஷோ (629-700) சீனாவுக்குச் சென்றார். அவரிமிருந்து தோஷோ (Dosho) அரிய மருந்துப் புட்டிலையும், புத்தமத சூத்ரங்களையும் கொணர்ந்தார். இந்திய முறை தஹனக் கிரியைகளையும் அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு டாய்ச்சோ (Taicho)  முதலிய பல குருமார்கள் தோன்றினர்.

பிராமண குரு (The Brahmin Archbishop)

டோடைஜி (Totaiji Temple) கோவிலில் மஹா புத்தர் மணிமண்டபம் (Dai Butsu Den)  உளது. எட்டாம் நூற்றாண்டு முதல் ரோசன புத்தரின் விராட ஸ்வரூபம் (Virat rupa of Rocana) பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. புத்தரின் சக்தியை உலகிற்கு பறை அறிவிக்க சக்ரவர்த்தி ஷோமு(Emperor Shomu) இந்தச் சிலையை 48 அடிக்கு உயர்த்த திட விரதம் பூண்டார். 12 ஆண்டுகளுக்கு ஏராளமான பொருட்செலவு, உடல் உழைப்பு மூலம் கனவு (Dai Butsu) நனவாகியது. கி.பி. 752 ஏப்ரல் 9ம் தேதிக்கு புனித நீராட்டு விழாவுக்கு நாள் குறிப்பிடப்பட்டது. போதி ஸேனர் (Bodhisena) என்ற பிராஹ்மணர் அதை நடத்திவைத்தார். இதுதான் வரலாறு பூர்வமான முதல் விஜயம். ஏனையவை பலவித இலக்கிய ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

 

இந்த பிராஹ்மணன் பாரத்வாஜ கோத்ரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மஞ்சுஸ்ரீ புத்தரின் பெருமைதனை அறிந்து சீனாவிலுள்ள  வெட்டய் ஷான் (Wu-t-ai shan) மலைக்குச் சென்று இருந்ததாகவும், ஜப்பானிய சக்ரவர்த்தியின் அழைப்பின் பேரில் அந்த பிராஹ்மண ஆர்ச் பிஷப் (மஹா குரு) எழுந்தருளினார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் செப்பும். கி.பி.736-ல் அவரது திருப்பாதங்கள் ஜப்பானிய மண்ணை மிதித்தன. மஹத்தான வரவேற்பு நல் கப்பட்டது. மக்கள்  அவரை பர்மன் (பிராஹ்மன்) மஹா குரு என்றே அழைத்தனர்.

 

கி.பி.760 பிப்ரவரி 25-ல் அவர் மஹா சமாதி அடைந்தார். பிறகு அவரது சிஷ்யர்கள் அவரது கொள்கைகளைப் பரப்பினர். பிராஹ்மண மஹா குருவால் புனிதம் செய்யப்பட்ட தோடைஜி கோவிலில் கிருஷ்ணர் போல புல்லாங்குழல் வாசிக்கும் மூர்த்தி,  இந்திரன், ஸூர்யன், சந்திரன், ஸரஸ்வதி, மஹா தேவி, 4 லோகபாலர்கள் சிற்பங்கள் உள. ஒரு பெரிய தீவிபத்து நடந்த பின்னரும் தப்பிப்பிழைத்த சிற்பங்கள் இவை!

இந்த மஹத்தான மணி மண்டபத்தில் 1200 ஆண்டுப் பழமையான எண்கோண வெண்கல விளக்கும் உளது. அதில் தேவலோக இசைவாணர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

 

பரீக்ஷைகளில் நல்ல மார்க் வாங்க மாணவ, மாணவிகள் போதிசேனரின் த லையைத் தொடும் காட்சியை இங்கே காணலாம். ஜப்பானியர்களின் இதயத்தில் அழியா இடம்  பிடித்துவிட்டார் இந்த பிராஹ்மண மஹா குரு.

 

லோகேஷ் சந்திராவின் தந்தை டாக்டர் ரகுவீரா, லண்டன் புஸ்தக் கடை ஒன்றில் தொங்கிய ஜப்பானியப் படத்தினால் ஈர்க்கப்பட்டு லண்டனில் ஜப்பானிய மொழி பயின்று மாபெரும் ஆராய்ச்சி செய்து அத்தனையையும் அவரது மகன் லோகேஷ் சந்திராவிடம் விட்டுச் சென்றார். இருவரும் ஜப்பானில் பல்லாண்டுக் காலம் வசித்ததாலும் ஸம்ஸ்க்ருதத்தில் புலமை பெற்றிருந்தமையாலும் புஸ்தகத்தின் 400 பகங்களில் தகவல் மழை பொழிந்துள்ளனர். ஜப்பான் இந்து மதத்தை எளிதில் தழுவும்!! பிராசரகர்கள் தேவை!!!

-சுபம், சுபம்–