எனது கம்பெனியில் சேருகிறீர்களா, சார், நீங்கள்? (Post No.5074)

Written by S NAGARAJAN

 

Date: 4 JUNE 2018

 

Time uploaded in London –  6-56 am  (British Summer Time)

 

Post No. 5074

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நடைச்சித்திரம் : மேலாண்மை நகைச்சுவை

 

எனது கம்பெனியில் சேருகிறீர்களா, சார், நீங்கள்?

.நாகராஜன்

 

எனது கம்பெனியில் வேலைக்கு ஆட்களை எடுக்கிறோம்.

நீங்கள் சேருகிறீர்களா, சார்?

**

 

கம்பெனி தலைமை நிர்வாகிகளைப் பற்றிய அனுபவங்கள் அநேகமாகப் பலருக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். பணியைப் பற்றிய அறிவு நன்கு இல்லாவிட்டாலும் மற்றவரை நன்கு வேலை வாங்கத் தெரிய வேண்டும்; அதாவது நன்கு செயல் திறமையுடனும் அறிவுடனும் இருக்கும் பலரையும் நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்;

இன்னொரு வித தலைமை நிர்வாகிகள் உண்டு; அவர்கள் மானேஜ்மெண்டின் தலைமைக்கு தலைமையாக இருக்கும் கம்பெனி உரிமையாளர்களை “அனுசரித்து” நடப்பவர்கள்.

 

இதற்கு அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது “ஆமாம் சாமி” யாக இருக்க வேண்டும்!

சரி இன்றைய கம்பெனிகளின் நிர்வாகிகள் – பாஸ் – எப்படி இருக்கிறார்கள்?

ஒரு ஜோக் உண்டு.

 

கிளி ஒன்றை வாங்க வந்தவர் அதன் விலையைக் கேட்டார்.

500 டாலர் என்றார் கடைக்காரர்.

“500 டாலரா? கிளிக்கா” என்று வாயைப் பிளந்தார் விலையைக் கேட்டவர்.

“இதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணத் தெரியும் “ என்றார் கடைக்காரர்.

அடுத்த கிளியைப் பார்த்த அவர், “இதன் விலை என்ன?” என்றார்.

“இதன் விலை ஆயிரம் டாலர் என்றார் கடைக்காரர்.

 

“ஆயிரம் டாலரா? ஒரு கிளிக்கா இந்த விலை” மலைத்துப் போய்க் கேட்டார் அவர்.

“இந்தக் கிளிக்கு யூனிக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் தெரியும.புராகிராமும் பண்ணும்” என்றார் கடைக்காரர்.

மூன்றாவதாக இருந்த கிளியைப் பார்த்த அவர், “இதன் விலை என்ன?” என்று கேட்டார்.

இதன் விலை இரண்டாயிரம் டாலர் என்றார் கடைக்காரர்.

“என்ன இரண்டாயிரம் டாலரா?” என்று மயங்கி விழும் நிலையில் இருந்தார் கேட்டவர். “அப்படி என்ன இது செய்கிறது?”

 

“உண்மையைச் சொல்லப் போனால் இது ஒன்றுமே செய்து நான் பார்த்ததில்லை. ஆனால் மற்ற இரண்டு கிளிகளும் இதை “பாஸ்” என்று கூறி பவ்யமாக நடந்து கொள்கின்றன!” என்றார் கடைக்காரர்.

எக்ஸிகியூடிவ் என்பவர் யார் என்பதை இப்போது புரிந்து கொண்டால் சரி.

 

ஒரு நல்ல எக்ஸிகியூடிவ் திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல வேலை வாங்க வேண்டும். தலைமைக்கும் தலைமையாக இருக்கும் உரிமையாளர்களை “அனுசரித்து” நடக்க வேண்டும்.

 

 

ஒரு எக்ஸ்கியூடிவ் லேடி கார் ஓட்டும் போது ஒரு பஸ் மோதி இறந்தார்.

அவரை மேல் உலகில் செயிண்ட் பீட்டர் வரவேற்றார்.

 

“நீங்கள் பெரிய எக்ஸிகியூடிவ். அனைத்தும் அறிந்தவர். வேலையாட்களை எடுத்து அவர்களுடன் பணி புரிந்தவர். ஆகவே உங்களுக்கு ஒரு சலுகை.

ஒரு நாள் உங்களை நரகத்திற்கு அனுப்புகிறேன். அடுத்த நாள் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன். 48 மணி நேரம் கழித்து உங்கள் முடிவின் படி நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ அங்கு செல்லலாம்”

செயிண்ட் பீட்டரின் இந்த அபார சலுகையால் மனம் மகிழ்ந்த பெண்மணி முதலில் நரகம் சென்றார்.

 

அபாரமான வரவேற்பு.அனைத்துப் பெண்களும் அழகிகள். பியூட்டி பார்லரின் செண்ட் வாசனை கமகமத்தது.

அவரை வரவேற்று கோல்ப் மைதானத்திற்கு கூட்டிச் சென்றனர். நல்ல விளையாட்டு.பின்னர் க்ளப் ஹவுஸில் டின்னர். அடாடாடா! அதுவல்லவா டின்னர்.

 

டெவில் நேரடியாக வந்து நமது பெண்மணியை வரவேற்று நலம் விசாரித்தார்.

பிறகு பார்ட்டி. நல்ல அரட்டை.

24 மணி நேரம் முடிந்தது.

 

இப்போது சொர்க்கத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

மேகக் கூட்டங்களின் நடுவே தேவதைகள்! அவரை வரவேற்றன. நல்ல பாடல். அழகிய நடனம். ஆனந்தமாக இருந்தது.

24 மணி நேரம் முடிந்தது.

 

அவர் செயிண்ட் பீட்டரிடம் தன் முடிவைச் சொல்லும் நேரம்.

“நன்கு யோசித்துப் பார்த்தேன். சொர்க்கம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆடலும் பாடலும் சரி தான். ஆனால் நரகத்தில் இருக்கும் சுகமே தனி. ஆகவே அங்கேயே செல்ல விரும்புகிறேன்.”

அவர் நரகத்திற்கு அனுப்பப்பட்டார்.

நரகத்தில் கோரமான உருவங்கள் ஹாஹா என்று இப்போது அலறிக் கொண்டிருந்தன. நாற்றம் தாங்க முடியவில்லை. பார்க்கும் இடமெல்லாம் சகிக்க முடியாத குப்பை கூளச் சாப்பாடு.

அலறிப் போன பெண்மணியை டெவில் – கோரமான உருவம் – பார்த்து அசிங்கமாகச்  சிரித்தது.

 

“நேற்று நான் வந்த போது இந்த இடம் பிரமாதமாக இருந்ததே” என்று வருத்தம் தோய பயத்துடன் எக்ஸ்கியூடிவ் பெண்மணி கேட்டார்.

அதற்கு டெவில் பதில் சொன்னது” “ நேற்று உங்களை தேர்ந்தெடுக்கும் நாள்.இன்றோ நீங்கள் பணியாளருள் ஒருவர்.” (Yesterday we were recruiting you; today you are staff!”)

 

கம்பெனிகளைப் பற்றியும் எக்ஸிகியூடிவ் பற்றியும் ஒரு நல்ல ஐடியா கிடைத்தால் சரி!

**

 

எனது கம்பெனியில் வேலைக்கு ஆட்களை எடுக்கிறோம்.

நீங்கள் சேருகிறீர்களா, சார்?

 

***

 

கிரேக்க நாட்டில் தீக்குளித்த தமிழ் சந்யாஸி (Post No.5073)

Image of Augustus, Roman Emperor

 

Written by London Swaminathan 

 

 

Date: 3 JUNE 2018

 

 

Time uploaded in London – 20-59

 

Post No. 5073

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ரோமானிய மன்னன் அகஸ்டஸ் (கி.மு/கி.பி. முதல் நூற்றாண்டு)  ரோமானிய சாம்ராஜ்யத்தை ஆண்டபோது ‘பாண்டியோன்’ என்னும் மன்னன் அங்கே ஒரு தூதனை அனுப்பினான். அவனுடன் ஒரு சந்யாஸி சென்றார். அவருடைய பெயர்  ஜார்மனோசேகஸ் என்று கிரேக்க எழுத்தாளர்கள் எழுதி வைத்துள்ளனர். இவர்கள் சந்திப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு.19 வாக்கில் நடந்தது. இதற்குப் பின்னர் அந்த சந்யாஸி கிரேக்க நாட்டின் தலநகரான ஏதென்ஸ் மாநகரில் எல்லோர் முன்னிலையிலும் பஹிரங்கமாக தீக்குளித்தார். இதைக் கண்டு ஏதென்ஸ் மாநகரமே அதிசயித்து நின்றது. ஊரெங்கும் அதே பேச்சு.

 

இப்படி தமிழ்நாட்டு பாண்டிய மன்னனின் தூதனுடன் சென்றவர் பெயர் ஜார்மனோசேகஸ் என்பதை சிரமனாச்சார்யா என்று மாற்றி இவர் புத்தமதத்தினராக இருக்கக்கூடும் என்று  ராலின்ஸன், கென்னடி போன்றோர் பிதற்றி வைத்தனர். இதைச் சற்று ஆராய்வோம்.

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னனின் தூதருடன் வடநாட்டு சந்யாஸி போக வாய்ப்புகள் மிகவும் குறைவு. காரணங்கள் என்ன?

  1. நமக்குத் தெரிந்தவரை புத்த மத, சமண மத சந்யாஸிகள் எவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு இல்லை. ஏனெனில் இது இந்துக்களின் வழக்கம்.

 

2.கபிலர் என்ற பிராஹ்மணப் புலவன்தான் தமிழ் இலக்கியத்தில் அதிகமான பாடல்களை யாத்தவர். அவர் பாரி மன்னனின் இரு புதல்விகளையும் கல்யாணம் கட்டிக் கொடுத்த பின்னர் திருக்கோவிலூரில் தீக்குளித்தார். இன்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கே சென்று கபிலர் பாறையில் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

 

இந்து சாமியார்கள், சாது  சந்யாஸிகள் வாழ்க்கையின் குறிக்கோள் முடிந்தவுடன் இப்படித் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வது ராமாயண, மஹாபாரத கால வழக்கம்.

 

  1. ராமனைச் சந்தித்த சபரி என்ற வேடுவக் கிழவி உன்னை சந்தித்ததால் வாழ்க்கையின் பயனை எய்திவிட்டேன் என்று சொல்லி தீக்குளித்து மோட்சம் எய்தினாள்

 

4.சரபங்கர் என்ற முனிவரும் வேதவதியும் இவ்வாறு தீப்புகுந்ததை ராமாயணத்தில் காண்கிறோம்.

5.இதே போல ஆதிசங்கரர் ஆர்வத்தோடு வாதாட வந்த குமாரில பட்டர், எரியும் உமிக்கு நடுவில் தன் உடலை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கருகி இறந்த சம்பவத்தையும் நாம் அறிவோம். “நீங்கள் நான் உயிர்த் தியாகம் செய்யும் தருணத்தில் வந்து விட்டீர்கள் ஆயினும் என் சிஷ்யரிடம் வாதாடுங்கள்” என்று சொல்லி சங்கரரை அனுப்பி வைத்தார்.  அத்தகைய சாது சந்யாஸிகளுக்கு உடல் என்பது அழுக்கான ஆடை போல. அதைத் தூக்கி எறிவதில் எந்தக் கஷ்டமும் இல்லை.

 

6.வெளி நாடுகளுக்குச் சென்று கலாசாரத்தைப் பரப்பியது இந்துக்கள் என்பதை தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் 1500 ஆண்டுகளுக்கு நிலவிய இந்துக் கலாசாரம் காட்டுகிறது; அதை நிறுவியவர்கள் கௌன்டின்யன், அகஸ்தியர் என்ற இரண்டு பிராஹ்மணர்கள் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் காட்டி நிற்கின்றன. ஆக பாண்டிய மன்னருடன் சென்றவர் இந்து சாமியாரே என்பதற்கு அதுவும் அத்தாட்சி.

 

7.ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தோபர் கொலம்பஸ் போன்ற மாலுமிகள் கொள்ளைக்காரர்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவக் கொலைகாரர்களும் கூட; சென்ற நாடுகளில் உள்ள பழங்குடி மக்களை அழித்து அங்குள்ள தங்கம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். இவர்கள் அங்கு செல்லும் முன் ஒரு இந்து சாது அங்கே சென்று அவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பித்தார்.  1200 ஆண்டுகளுக்கு முன்னர் பகிரங்கமாகத் தீக்குளித்தார். அப்படி உயிர்த் தியாகம் செய்யும் முன்பு ‘’நான் திரும்பி வருவேன்’’ என்று அறிவித்தார்.  இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அங்கே சென்ற கிறிஸ்தவர்களைப் பார்த்து அவர்கள்தான் ஆரூடம் சொன்ன இந்து சந்யாஸி என்று கருதி காலில் விழுந்து வணங்கினர். அந்தக் கிறிஸ்தவக் கொலைகாரர்களோ அவர்களைக் கொன்று அங்குள்ள நூலகங்களை எரித்து, தங்கத்தை எல்லாம் ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். எஞ்சிய சில தஸ்தாவேஜுகளில் இருந்து நமக்கு இந்தத்  தகவலகள் கிடைத்தன.

ஆகவே மாயன், கிரேக்க எழுத்தாளர்கள் மூலம் நாம் அறிவது இந்து சந்யாஸிகள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வர் என்பதாகும்.

 

ராமாயண, மஹாபாரத்திலிருந்தும் தமிழ் இலக்கியத்திலிருந்தும் நாம் அறிவது வாழ்க்கையின் குறிக்கோள் முடிந்த இந்துக்கள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வர் என்பதாகும். குமாரிலபட்டர் போன்றோரும் இவ்வாறு உயிர் துறப்பது அல்லது வடக்கிருந்து உயிர் துறப்பதை நாம் ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் இருந்தும் அறிகிறோம். பாண்டிய மன்னனே தூதனை அனுப்பியது இந்த இந்து சந்யாஸியை அறிமுகப்படுத்தத்தானோ!!!

-சுபம்–

ANCIENT TAMIL HINDU SAINT WHO BURNT HIMSELF IN ATHENS! (Post No.5072)

Statue of Augustus

Written by London Swaminathan 

 

 

Date: 3 JUNE 2018

 

 

Time uploaded in London – 14-05

 

Post No. 5072

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ANCIENT TAMIL HINDU SAINT WHO BURNT HIMSELF IN ATHENS! (Post No.5072)

Monk Zarmanochegas who accompanied an Indian embassy from King Pandion to Roman Emperor Augustus  (63 BCE to 14 CE) reached Rome by 19 BCE. Later this Monk Zarmanochegas amazed Athens by burning himself to death publicly. Some people thought that he was a Buddhist. They changed the name Zarmanochegas into Sramanacharya. The identification is not certain. The Greeks did horrible things to the words they borrowed and the names they reproduced.

 

My research shows that he was a Hindu saints from Tamil Nadu. The reason being we don’t have enough evidence in ancient Buddhist literature to show that they burnt themselves when their life mission was finished. But in Hindu literature we have umpteen references to show that they ended their life in this way when their mission was fulfilled.

Kabila, the Brahmin poet who contributed highest number of Tamil verses in the Sangam literature, burnt himself to death after he married two daughters of ancient Tamil philanthropist Pari of Pa

rambu country. Even today we can visit his memorial Kabila Rock near Thirukkovilur in Tamil Nadu. He lived around First century BCE or CE. At the same time this Hindu burning himself in Greece also happened. So Kabilar might have inspired him. Moreover the saint/monk accompanied a Tamil ambassador from Pandya King. So the saint must be a Tamil one.

 

saints burning themselves happened from Ramayana Times. Sabari a hunter woman saint and many other saints of Ramayana days burnt themselves after seeing Rama, thinking that they can straight away go to heaven or attain salvation.

 

Kumarila Bhatta, a great scholar and contemporary of Adi Shankara burnt himself to death. When Adi Shankara came for a debate , Kumarila told him that it was too late and sent him to another scholar.

A Hindu saint visited Mayan civilization , taught them good things and burnt himself to death. He told them that he would come back again. After several centuries when he Christian robbers came from Spain that generation thought that he must be the expected saint. But those plunderers looted the innocent Mayan civilization and took all the gold to Spain.

 

Following is my article posted on 12 July 2014:-

Five Ascetics who Entered Fire: Vedavati, Sabhari, Sarabhanga,Kabila, Quetzalcoatl

 

Five Ascetics who Entered Fire: Vedavati, Sabhari, Sarabhanga,Kabila, Quetzalcoatl

Research Article Written by London Swaminathan
Post No. 1168; Dated 12th July 2014.

Hindu epic Ramayana is unique in many ways. One of the unique things about the Ramyana is “self immolation”. It is very interesting to know that women ascetics existed in the days of Ramayana and they did enter the fire and sacrificed their lives when they thought that the date of their departure had come. This is one the boldest things, we can see only in the Hindu world. Here we see a continuity of Upanishadic age sages like Gargi and Maitreyi. They did not feel any body pain when they entered the fire due to their Yogic practice.

Sita did not fear to enter fire to prove her purity. Kumarila Bhatta, contemporary of Adi Shankara, did not hesitate to burn his body slowly in the middle of husk lighted on all four sides. Tamil poet Kabila did enter fire after fulfilling his noble mission. Aztec saint Quetzalcoatl (may be a Hindu saint) did sacrifice his life in fire.

Goddess Uma did penance by standing in the middle of Five Fires (Panchagni). Many a saints including Bhageeratha did Panchagni penance. Bharata and Angatha tried to enter the fire thinking that they lost their in their mission. This is a Hindu ritual. When one completes something noble, one enters fire. When one failed to achieve to fulfil something, they enter the fire ritually.

There is a big difference between suicide and this ritual sacrifice. Here they enter the fire after announcing to the whole wide world that on such and such day they would do it for a particular noble cause. It is not because of depression or agitated mind. There is another type known as Sati, where in the women who lost their husbands climb the funeral pyre. There is another type of sacrifice where women like Chitoor Rani Padmini along with her friends entered the fire to save their modesty.
Here is a short list of great ascetics who immolated themselves:

Sharabhanga :

Rama, after slaying the demon Viradha, visited the hermitage of Sharabhanga. He told Rama that he rejected Indra’s invitation to visit Brahmaloka, knowing that Rama was visiting the place. He also directed Rama to Sutikshna’s dwelling. He requested Rama to stay with him till he casts off his body as a snake casts off its slough. Then Sharabhanga prepared a fire and poured clarified butter therein. The sage entered the flames and assumed a youthful form and ascended to Brahma’s abode (Source: Aranya Kanda, Chapter 5)

Sabhari:

She was waiting to see Rama. When Rama went to her in the middle of the forest; she gave him berry fruits and roots which were bitten by her. She did this to give the sweetest ones to Rama. Since Rama knew her motherly love, he did not reject it. She belonged to the caste of hunters. That tribal woman guided Rama and Lakshmana to lake Pampa an Rishyamuka mountain.
“Having received permission from Rama to depart, Sabhari, wearing matted locks, robes of bark and a black antelope skin, cast herself into the fire, thereafter rising into the air like a bright flame. (Chapter 74, Aranya Kanda).

Vedavati:

Vedavati was the daughter of Rishi Kusadhwaja. When Ravana was passing through the forests in the Himalaya he met Vedavati, a damsel of great beauty dressed in acetic garb. When Ravana wanted to marry her she told him that she would marry only Vishnu. But Ravana boasted to her about his heroic deeds and touched her hair with a bad intention. Enraged by this, she cursed him that he would be destroyed by her in her next birth (as Sita) and entered fire before him. When she entered the fire celestial flowers fell around her (Uttara Kanda, Ramayana)

Tamil Poet Kabilar:

Kabilar, a Brahmin poet of great character, who lived in the Sangam Age ( First three centuries CE) was a good friend of a generous chieftain Pari. When the mighty Tamil kingdoms laid a siege around his kingdom Kabilar boldly supported Pari. The three Tamil kings of Sera, Choaza, Pandya kingdoms killed him by deceit. Then Kabilar took his two daughters to all the chieftains begging them to marry them. No one dared to earn the enmity of the powerful Tamil kings. At last, one chieftain took care of those girls and Kabilar, having fulfilled his mission, entered the fire. There was a memorial stone in the place known as Kabilar Stone near Tirukoyilur on the banks of River Pennai. There is an inscription with this story in verse (Source Dr R Nagasamy’s Tamil book ‘Paamaalai’).

Bharatha, Rama’s brother, was desperate to see Rama after his 14 year banishment. When he did not arrive on the appointed day Bharat was about to jump in to ceremonial fire. But Rama arrived by his divine Supersonic jet from Sri Lanka and saved his life. When Angathan and other monkeys could not find Sita in their search mission, they contemplated sacrificing themselves in fire. This is a typical Hindu approach.

 

Aztec Saint’s Self Immolation

Aztec civilization (750 CE to 1500 CE) in South and Central America had a mysterious person with the name Quetzalcoatl. There were two people with the same name which resulted in lot of confusion. He was a demiurge, priest, ruler conceived by virginal birth years after his father’s death. He was ruler of Toltecs for twenty two years. He lived in Tula, lost a civil war, fled with a good sized Toltec force. He set sail into the open sea on a particular date Aztec calendar with a prophecy that he would come back on the recurrence of that date.

Centuries after this date, Spanish man Herman Cortes landed on the coast of Mexico on 4th March 1519. Aztec king Montezuma believed that god and saint Quetzalcoatl had come back in the form of a white man. He was given royal welcome. But Cortes, Columbus and his band of explorers brought disease, death and destruction to the wonderful Mayan, Aztec and Inca civilizations. They plundered the whole of South America and took tons of gold to Spain and Portugal.

Quetzalcoatl means ‘feathered serpent’ or ‘precious twin’. He is one of the most important Aztec deities, although he has origins in pre Aztec cultures. There was a historical king in the same name that was expelled from Tula, the Toltec capital in 987 CE. According to one version he reached the Gulf of Mexico and immolated himself, to be reborn as the planet Venus. He predicted that he would come back. He may be a Hindu saint who practised such rituals in ancient India.

 

–Subham–

சர்ச்சிலின் டான்ஸ்! (Post No.5071)

Written by S NAGARAJAN

 

Date: 3 JUNE 2018

 

Time uploaded in London –  9-54 am  (British Summer Time)

 

Post No. 5071

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ச.நாகராஜன்

 

 

இந்தியா சுதந்திரம் பெற்று விடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

அதை விட அவரது மோசமான எண்ணம் அப்படி ஒருவேளை சுயாட்சி தர நேர்ந்தாலும் அல்லது சுதந்திரமே தர நேர்ந்தாலும் இந்தியாவைத் துண்டாடி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை உருவாக்கித் தீராத தலைவலியை இந்தியாவிற்குத் தந்து விட வேண்டும் என்பது தான்.

 

முதல் எண்ணம் வெற்றி பெறவில்லை.

இரண்டாவது எண்ணம் வெற்றி பெற்று விட்டது.

இந்தியர்களை அயோக்கிய ராஸ்கல்கள் என்று அவர் கூறிய அவரது பிரபலாமான மேற்கோள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். (இந்தியர்கள் தங்கள் நாட்டை ஆளத் தகுதியற்ற நாள் சீக்கிரம் வரும் என்று அவர் குறிப்பிட்டார்; அது நிறைவேறி விடும் படி நமது அரசியல் கோமாளிகள் நடந்து கொள்வதை வருத்தத்துடன் குறிப்பிட்டு, அது நிறைவேறாமல் இருக்க இளைய தலைமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளேன்)

 

ஆனால் நன்றி கெட்ட சர்ச்சில் தனது உயிரைக் காப்பாற்றிய ஹிந்து-சீக்கிய ஜவான்களின் நாடான இந்தியாவையே பிரிக்கத் திட்டம் போட்டது தான் மன்னிக்க முடியாத செயல்.

சர்ச்சில் தனது சுயசரிதத்தில் அவர் இளம் ராணுவ வீரராக கைபர் கணவாய் அருகே பணியாற்றிய போது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அவரை முஸ்லீம் பத்தான்கள் சுற்றி வளைத்தனர்.

அவர் உயிர் போகவிருந்த தருணத்தில் அவரது ப்ளாட்டூனில் இருந்த ஹிந்து-சீக்கிய ஜவான்கள் குறுக்கிட்டு அவர் உயிரைக் காப்பாற்றினர். தனது உயிர் காப்பாற்றப்பட்டது ஹிந்து-சீக்கிய ஜவான்களாலேயே என்று அவரே எழுதியுள்ளார்.

 

ஆனால் அவர் பிரதம மந்திரியான போது நடந்த சம்பவங்கள் விசித்திரமானவை. இந்தியாவைப் பிரிப்பதே அவர் நோக்கமாக இருந்தது. 1940 மே 10ஆம் தேதி அவர் பிரிட்டனின் பிரதம மந்திரியாக ஆனார்.

 

முகம்மதலி ஜின்னாவை அவர் ஆதரித்துத் தயார் படுத்தினார்.

ஆனால் இரண்டாவது உலக மகா யுத்தம் எதிர்பாராத விதமாக வந்து பிரிட்டனை அச்சுறுத்தியது.

 

தனது மின்னல் வேகப் படையால் ஹிட்லர் ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து கொண்டு முன்னேறினான்.

 

அவனை மகாத்மா காந்திஜி உள்ளிட்ட அனைவரும் ஆதரிக்கவில்லை. பிரிட்டன் தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சி வேண்டிய போது அதற்கு காந்திஜியின் தலைமையில் இந்திய மக்கள் சம்மதித்தனர். ஹிட்லரால் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து வரும் யூத அகதிகளுக்குப் புகலிடம் தரவும் இந்திய தேசிய காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் பிரிட்டன் இதை ஏற்கவில்லை. என்றாலும் ஹிந்து-சீக்கிய மக்கள் சில யூதர்களை இங்கு குடியேறச் செய்தது.

ஆனால் முகம்மதலி ஜின்னாவோ ஹிட்லரின் வருகை பிரமாதமான ஒன்று என்றும் ஹிட்லரை தான் ஆதரிப்பதாகவும் பகிரங்கமாகக் கூறினார்.

 

 

1938 செப்டம்பரில் மூனிச் உடன்படிக்கை ஜனநாயக செக்கோஸ்லேவேகியாவை அழித்த போது ஜின்னா ஹிட்லர் தங்களுக்கு (இந்திய முஸ்லீம்களுக்கு)  உத்வேகம் ஊட்டும் ஒருவர் என்று கூறினார்.

 

பிரிட்டனுக்கு ஆதரவு தந்த காந்திஜிக்கும் இந்திய மக்களுக்கும் துரோகம் இழைத்த சர்ச்சில், பிரிட்டனின் எதிரியான ஹிட்லரை ஆதரித்த ஜின்னாவுக்கு ஆதரவு தந்தார்.

பாகிஸ்தானை உருவாக்குவதில் முனைப்பாக உதவி செய்தார்.

இந்த நீண்ட நெடிய சுதந்திரப் போரில் ஒன்று தான் கிரிப்ஸ் மிஷன். (Cripps Mission) கிரிப்ஸ் லேபர் கட்சி.சர்ச்சிலோ கன்ஸர்வேடிவ் கட்சி.

 

கிரிப்ஸ் இந்திய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் சில திட்டங்களை முன் வைத்தார். சுயாட்சி தரப்படும் என்ற அவரது தேனான திட்டம் பேப்பர் அளவிலேயே இருந்தது. ஆக்கபூர்வமான ஒன்றாக அது இல்லாததால் காந்திஜி உள்ளிட்ட அனைவரும் அந்தத் திட்டத்தை நிராகரித்தனர்.

 

கிரிப்ஸின் மிஷன் தோல்வி அடைந்தது.

இதைத் தான் சர்ச்சில் மிகவும் விரும்பினார்.

கிரிப்ஸின் இந்திய விஜயம் மகத்தான தோல்வியை அடைந்தது என்ற செய்தியைக் கேட்டவுடன் அளவிலா ஆனந்தம் அடைந்த சர்ச்சில் தனது அதிகாரபூர்வமான இல்லமான 10, டவுனிங் தெருவில் தனது இல்லத்தில் இருந்த காபினட் அறையில் டான்ஸ் ஆடினார். அவ்வளவு மகிழ்ச்சி!

இதை பிரிட்டிஷ் எழுத்தாளர் மைக்கேல் எட்வர்டஸ் (Michael Edwardes) எழுதியுள்ளார்.

 

 

அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட் இந்தியாவிற்கு உதவப் பெரிதும் விரும்பினார். யுத்தத்திற்கோ அமெரிக்க உதவி சர்ச்சிலுக்குத் தேவையாக இருந்தது. ஆகவே கண் துடைப்பிற்காக யுத்த கால மந்திரி சபை உறுப்பினரான கிரிப்ஸை இந்தியாவிற்கு அனுப்ப சர்ச்சில் சம்மதித்தார்.

இது அமெரிக்க ஜனாதிபதிக்காக – வெறும் கண் துடைப்பிற்காக. ஆனால் அவர் தோற்றவுடன் இந்தியாவை உருப்படாமல் செய்ய வேண்டும் என்ற தன் எண்ணம் பலித்ததற்கு ஆனந்த நடனம் ஆடினார் சர்ச்சில்.

சர்ச்சிலின் குள்ளநரித் தந்திரம் இந்தியாவைப் பிரிக்க வழிவகை செய்தது.

 

 

ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் இரண்டு பட்டது – பாகிஸ்தான், பங்களாதேஷாக.

 

இதுவும் போய் அகண்ட பாரதம் உருவாகும் என அரவிந்தர் கூறியுள்ளார். அதைக் காலம் தான் மெய்ப்பிக்கும்!

***

Animal Emblems of Indian Kings (Post No.5070)

Written by London Swaminathan 

 

 

Date: 2 JUNE 2018

 

 

Time uploaded in London – 21-32

 

Post No. 5070

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Indian kings, mostly used animals and birds as their royal emblems. This shows their interest in nature and staright forward thinking. They did not have mythical animals as Yali or Kamadhenu cow or four headed Airavata. They used the symbols which are recognised easily by general public.

Lion
Lion was the royal emblem of the Satavahanas
Kadambas of Banavasi
Dynastic crest of Western Chalukyas of Kalyana
Ikshvakus of Eastern Deccan
Senavas of Kudalurupura

Singalese of Sri Lanka

Lion Capital of Modern India (from Asoka Pillar)

Tiger
Tiger was the royal emblem of Chozas of Thanjavur region
Hoysalas of Dwarasamudra
Sindas of Bagadage

Elephant
Elephant was the royal crest of Cheras
Bow was also on the flag of Cheras

Boar
Boar was the royal emblem of the Chalukyas



Bull, Nandhi

Bull was the royal emblem of the Nava Nagas of Narwar
Nandobhavas of Joypore
Maukharis of the Western Magadas
White Huns
May be Indus Valley Kings
Pallavas Of Kancheepuram

Eagle
Eagle was the royal emblem of the Guptas of Maghada
Gurjara Pratiharas of Kanauj
Rashtrakutas of Malked
Silaharas of Northern Konkan

Fish
Fish was the royal emblem of the Pandyas of Madurai

Double headed Eagle

Vijayanagara Emperors (Ganda Beranda Pakshi)

Kingdom of Mysore

Mouse
Mushikas of Kerala

 

Conch

Cochinn/ Travancore Kings

–subham–

புத்திமானும் பலவானும் பேயை விரட்டிய கதை! (Post No.5069)

Written by London Swaminathan 

 

 

Date: 2 JUNE 2018

 

 

Time uploaded in London – 14-54

 

Post No. 5069

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

பல நாட்டுப்புறக் கதைகள் பழங்காலத் தமிழில் உள; அவைகளை நான் அவ்வப்பொழுது புதுத் தமிழில் செதுக்கிக் கொடுக்கிறேன்

ஒரு கிராமத்தில் ஒரு பயில்வான் இருந்தான்;  உடல் பலம் இருந்தும் அவனுக்கு புத்தி ‘மந்த புத்தி’தான்; ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல ஐந்து நிமிடமாவது ஆகும். ஆனால் வேறு எவரும் அசைக்கக்கூட முடியாத பாரத்தை மிக எளிதாகத் தூக்கி விடுவான். அவனை எல்லோரும் வல்லாள கண்டன் என்று அழைப்பர்.

 

அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் உடல் பலம் இல்லாத, ஆனால் மஹா புத்திசாலியான ஒருவன் இருந்தான். அவனை வாய்ச்சொல் வீரன் என்று அழைப்பர். மிகவும் புத்திநுட்பம் உடையவன். மற்றவர்களுக்குத் தோன்றாத விஷயங்கள் அவனுக்கு எளிதில் புலப்படும் தட்டுத் தடங்கலின்றி பேசுவான். பதில்கள் அனைத்தும் அக்ஷர லக்ஷம் பெறும்.

வாய்ச்சொல் வீரனின் புகழ் எங்கும் பரவவே வல்லாள கண்டனுக்குப் பொறாமை ஏற்பட்டது. உடல் பலமின்றி வாய்ச் சொல் வீரம் இருந்து என்ன பயன் என்று கிண்டல் செய்தான். ‘பேச்சுக்கு ராவணன், பின்னர் பார்த்தால் கும்பகர்ணன் போல’ இருக்கிறதே என்பான். ‘சொல்லுதல் யார்க்கும் எளிதாம்; சொல்லியவாறு செய்தல் அல்லவோ கடினம்’ என்பான். இருவரும் சந்திப்பது நல்லது என்று இரண்டு கிராம மக்களும் முடிவு செய்தனர்.

 

இருவரும் வாய்ச்சொல் வீரனின் கிராமத்தில் சந்தித்தபோது வல்லாள கண்டன் சொன்னான்; ஒரு நாள் முழுதும் உன்னுடன் தங்கியிருந்து உடல் பலமே பெரிது என்பதைக் காட்டப்போகிறேன் பார்! என்று சவால் விடுத்தான்.

முதல் சோதனை

 

சரி அடுத்த கிராமத்திலுள்ள இடையன் நிறைய ஆடுகள் வைத்திருக்கிறான். அதை என் உடல் பலத்தால் களவாடி வருகிறேன். உன்னால் முடியுமா என்றும் யோசித்துப் பார் என்றான் வல்லாள கண்டன் . மாலையில் இருட்டத் துவங்கியது

 

இடையன் எப்போதும் சாப்பிடப் போகும்போது,  ஒரு ஆள் இருப்பது போலத் தெரியட்டும் என்று ஒரு கம்பளியைக் கம்பின்மீது போட்டுவிட்டுப் போவான்; யாரோ ஒருவர் கூடவே இருப்பது போல பாவனை செய்து பெரிதாச் சொல்வான்: . “தம்பி ஆடுகளைப் பார்த்துக்கொள்; இந்தப் பக்கம் திருடர்களும் பேய்களும், சிப்பாய்களும் அதிகம். ஆடுகளைத் தூக்கிச் செல்லாமல் பார்த்துக்கொள்” என்பான்; இது வழக்கமான பல்லவி.

 

இதை எல்லாம் கவனித்த மஹா புத்திசாலி வா, வா, போய் ஒரு ஆட்டை  எடுத்துக்கொண்டு ஓடி விடுவோம் என்றான். வல்லாளகண்டனுக்குப் புத்தி குறைவு என்பதால் அந்தக் கம்பின் மீது போட்ட கம்பளியை ஆள் என்றே நினத்துத் தயங்கினான். பின்னர் அது வெறும் கம்பளி அங்கு யாரும் இல்லை என்று காட்டவே வல்லாளகண்டனுக்கு ஒரே ஆச்சர்யம்!! ஒரு ஆட்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

 

அந்தக் கிராமத்தில் உண்மையிலேயே பேய்கள் உண்டு;  அவைகளும் இடையனின் பேச்சை கேட்டு ‘’சிப்பாய்கள்’’ என்றால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது ஆட்டைத் திருடிய வல்லாளகண்டனும்  வாய்ச்சொல் வீரனும் வந்தனர். இதுவரை இந்த மாதிரி ஆட்களைப் பார்த்ததே இல்லை. ஓ! இவர்கள்தான் சிப்பாய்கள் போல என்று நினைத்து ஆடுகள் உருவத்தில் போய் செடி கொடிகளை பேய்கள் மேய்ந்தன. அப்படிச் செய்தால் வெறும் ஆடுகள் என்று எண்ணி இருவரும் போய்விடுவர் என்று அவை எண்ணின

அவைகளைப் பார்த்துக் கொண்டு வந்த வல்லாள கண்டன் ஒரு பேய் ஆட்டைத் தொட்டுப் பார்த்து, அட, இது நாம் திருடிய ஆட்டை விடக் கொழுத்து இருக்கிறது என்று கருதி அதில் ஒன்றைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான்.

பேய் ஆட்டுக்குப் பயம் வந்துவிட்டது. எப்படித் தப்பிக்கலாம் என்று யோசித்த போது, பின்னால் வாய்ச் சொல்வீரன் நடந்து வருவதைப் பார்த்து அவனும் ஒரு சிப்பாய் என்று பயந்தது. அந்த நேரத்தில் கொழுத்த ஆட்டின் எடை தாங்காமல் ‘ஏய், இதை ஒரு நிமிடம் உன் தோளில் வைத்திரு. கொஞ்சம் முதுகை நெளித்து வளைத்து உடலைச் சரி செய்கிறேன் என்று சொல்லி மஹா புத்திசாலியின் தோளில் வைத்தான். அவனுக்கு உடல் வலு இல்லாததால் அவன் அதை ‘தொபுக்’ என்று கீழே போட்டான். பேய் ஆடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டது பின்னர் மாயமாய் மறைந்தும் போனது.

 

ஏற்கனவே இடையன் பேச்சில் பேய்கள் பற்றிச் சொன்னதைக் கேட்டு இருந்ததால் அது பேய்தான் என்று பயந்து இருவரும் வேகமாக நடந்தனர்.

 

இதைப் பார்த்த சில பேய்கள் நம்மைத்தான் ‘சிப்பாய்கள்’ பிடிக்க வருகிறார்கள் என்று பேசிக்கொண்டு தலை தெறிக்க ஓடின. மற்ற பேய்கள் சிரித்துக் கொண்டே சிப்பாய்களும் இல்லை, குப்பாய்களும் இல்லை என்று நக்கல் அடித்தன.

இருவரும் வீட்டுக்குப் போய் தாங்கள் பார்த்த கொழுத்த ஆடு பேய்தான் என்று பேசிக்கொண்டே தூங்கிவிட்டார்கள். அந்த வீட்டில் அன்று எதேச்சையாக பேய்கள் போய் மதில் ஏறிக் குதித்தன. இதைப் பார்த்த வல்லாள கண்டன் அவனது நண்பன் வாய்ச்சொல் வீரனிடம் போய் பேய்கள் இங்கும் வந்து விட்டன. நாம் என்ன செய்வது? என்றான். உடனே மஹா புத்திசாலியான வாய்ச்சொல் வீரன் ‘’நீ ஒன்றும் தெரியாதது போல உருண்டு போய் உன்     இடத்திலேயே படுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு ரஹஸியமாக தாழ்ந்த குரலில் தனது பெண்டாட்டியிடம் சொன்னான்: நீ போய் இலை போட்டு, இருக்கும் சாப்பாட்டைப் பரிமாறு; என்ன இது? இன்று காலையில் நான் பிடித்து வந்த மூன்று பேய்களைச் சமைக்கவில்லையா? அவை எல்லாம் பழையதாய்ப் போனால் நன்றாக இராது என்பேன்; நீ உடனே  மூன்று பேய்களையும் உங்கள் மகன் பக்ஷணம் பண்ணிவிட்டு மேலும் வேண்டும் என்றான்; நான் இல்லை என்று சொன்னவுடன் கோபித்துக்கொண்டு பேய் பிடிக்கப் போய்விட்டன் என்று சொல்லு’’ என்றான். மனைவியும் சரி என்று சொல்லிவிட்டு அவன் சொன்ன படியெல்லாம் செய்தாள்.

 

இதைக் கேட்ட பேய்கள் நடுநடுங்கி ஓட்டம் பிடித்தன. ஏற்கனவே ஆடாக இருந்து தப்பித்த பேயிடம் அவை எல்லாம்,’ நீ சொன்னது உண்மைதான்; சிப்பாய்கள் பொல்லாதவர்கள்; அவன் மகனே மூன்று பேய்களைத் தின்றுவிட்டு நம்மையும் பிடிக்க அலைகிறானாம். நாம் வேறு காட்டுக்குப் போய்விடுவோம் என்று ஓடி விட்டன. அப்போதுதான் வல்லாளகண்டனுக்குப் புரிந்தது: உடல் பலத்தை விட புத்தி பலமே பெரிதென்று.

 

இருவரும் மறு நாளைக்கு வேறு ஒரு கிராமத்துக்குப் போவோம் என்று புறப்பட்டனர். பேய்கள் போன புதுக் காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாலை நேரம் ஆகி இருட்டத் துவங்கியது. வல்லாள கண்டனுக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா’கத் தென்பட்டது. ஆகையால் நாம் ஒரு அரச மரத்தின் மீது ஏறி இரவைக் கழிப்போம்; பொழுது விடிந்ததும் புறப்படுவோம் என்றான். அதற்கு இணங்கிய மஹா புத்தி சாலியும் இரவு முழுதும் பல கதைகளைச் சொல்லிப் பொழுதைக் கழித்தான். அதே மரத்துக்கு அடியில் நள்ளிரவில் பேய்கள் வந்து குழுமி கூட்டம் போட்டன. அதைப் பார்த்த வல்லாள கண்டன் பயந்து நடுங்கி பேய்கள் மீது தொபுக் என்று விழுந்தான். அவன் வாய் குளறிப் போய் ஏதோதோ பிதற்றத் துவங்கினான்.

அவைகளைக் அதைக் கேட்ட மஹா புத்தி சாலி, அட நீ ஏன் இந்தப் பேய்களையும் தின்ன வேண்டும் என்று துடிக்கிறாய்? இன்றுதான் ஐந்தாறு பேய்களை அடித்துக் கொன்று தின்னோமே; இவைகளை நாளை இரவுச் சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்வோம். சூடாகச் சாப்பிடுவோம்’’ என்று மரத்தின் மீதிருந்து சொன்னான்.

 

இதைக் கேட்ட அவை அனைத்தும் அடக்கடவுளே! இவன் மூன்று பேய்களை பக்ஷணம் பண்ணியவனின் தகப்பன் அல்லாவா? என்று பயந்து நடுங்கி ஓட்டம் பிடித்தன.

 

மறு நாள் காலையில் வல்லாள கண்டன் சொன்னான்: “புத்திமான் பலவான் ஆவான்; உடல் பலம் இருந்தும் என்னால் பேய்களை விரட்ட முடியவில்லை; நீ உன் புத்திசாலித் தனத்தால் விரட்டிவிட்டாய் என்று புகழ்ந்துவிட்டு தனது கிராமத்துக்கே சென்றான்.

 

–சுபம்–

காசு மேலே காசு வரும்! வாஸ்து சாஸ்திரம்!! (Post No.5068)

Written by S NAGARAJAN

 

Date: 2 JUNE 2018

 

Time uploaded in London –  7- 11 am  (British Summer Time)

 

Post No. 5068

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வளமான வாழ்க்கைக்கு வாஸ்து

 

காசு மேலே காசு வரும்!

 

ச.நாகராஜன்

வாஸ்து சாஸ்திரம் ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. அது பொய்க்காது.

வாஸ்து சாஸ்திரத்தின் பெருமை எல்லையற்றது. அதன்  பெருமைகளைக் கேட்பதை விட உடனடி பலன்களை எதிர்பார்ப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.

எப்படி மின்சாரத்தின் தியரி பகுதியை அனைவரும் அறிய விரும்பாமல் ஸ்விட்சைப் போட்டால் விளக்கு எரிவதை மட்டும் விரும்புகிறார்களோ அது போல, வாஸ்து சாஸ்திரத்தின் பெருமையை முழுவதுமாக அறிவதற்கு முன்னால் அதன் பயனை உடனடியாக அனுபவிக்கத் துடிப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.

ஒம்’ஸ் லாவும் (Ohm’s Law) கிர்சாஃப்ஸ் லாவும் (Kirchoff’s Law) யாருக்கு வேண்டும். ஸ்விட்ச் போட்டால் விளக்கு எரிய வேண்டும்; ஃபேன் சுற்ற வேண்டும்.

சரி, நேரடியாக அனைவருக்கும் பிடித்த விஷயத்திற்கு வருவோம்.

காசு மேலே காசு வரும்!

அது தானே வேண்டும்.

‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணது எய்த இருதலையும் எய்தும்”

 

அதாவது குற்றமுற்ற பூமியில் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றனுள் நடுவில் இருக்கின்ற பொருளை அடைந்து விட்டால் அறமும் இன்பமும் தானே வரும் என்பது ஆன்றோர் வாக்கு.

சரியாகத் தான் சொன்னார்கள்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

வாஸ்து மூலம் காசு மேலே காசு வர வழி என்ன?

சுலபமானது; அதிகம் செலவில்லாதது – ஒரு வழி!

வடக்கு திசையைக் கவனியுங்கள் என்பது தான் அது.

வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்.

செல்வம் வேண்டுவோர் முதலில் பார்க்க வேண்டிய திசை அது.

வடகிழக்கு மூலையில் – ஹாலில் –  தினமும் ஒரு நல்ல பாத்திரத்தில் ஜலத்தை நிரப்பி வைக்க வேண்டும்; அதை மறு நாள் காலையில் அகற்றி விடவேண்டும். மறுபடியும் புதிய நீரை நிரப்ப வேண்டும்.

வடக்கு திசையில் – ஹாலில் – முக்கியமாக குப்பை கூளங்கள் இருக்க கூடாது.

வடக்கு திசையில் ஸ்டோர் ரூம் இருக்க கூடாது.

வடகிழக்கில் டாய்லட் இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால் அங்கு கல் உப்பை ஒரு கிண்ணத்தில் வைக்க வேண்டும். அது ஈரமாகப் போனவுடன் அதை அகற்றி புதிய உப்பை வைக்க வேண்டும்.

வடக்கு திசை செல்வத்தின் திசை என்பதால் அங்கு காசு, பணம் உள்ள பீரோவை வைக்கலாம்.

வடக்கில் செய்யக் கூடாத ஒன்று – வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பது தான். அது மூளையின் செயல் இயக்கத்திற்குப் பாதகத்தை விளைவிக்கும்.

வடக்கு நீரின் திசை.

இந்தத் திசை வீட்டில் சுத்தமாக இருந்தால் அந்தஸ்து உயரும்; உயர் பதவி வரும்; செல்வம் சேரும். சொத்துக்கள் சேரும்.

இது மிகவும் பலவீனப்படுத்தப்பட்டால் – ஸ்டோர் ரூம், அழுக்கு மூட்டைகள், குப்பைகள் சேர்தல், செருப்புகளை வைத்தல் ஆகியவற்றால் பலவீனப்படுத்தப்பட்டால் – வீட்டில் செல்வம் வந்தாலும் அது உடனடியாக அகன்று விடும். இல்லத்தில் இருப்பவர் நோய்வாய்ப்படுவர். சொத்துக்கள் வில்லங்கமாகி விடும்.

ஆகவே வடக்கு திசையைக் கவனித்து வடகிழக்கு மூலையில் ஒரு பேஸினில் நீரை வைத்து 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் கவனியுங்கள்.

நிச்சயம் ஒரு நல்ல அறிகுறி தோன்றும்.

உடனடியாக இந்தப் பழக்கத்தை பலப்படுத்துங்கள்.

 

 

 

நீரில் ரோஸ் வாட்டர், பன்னீர், கங்கை ஜலம் போன்றவற்றை ஊற்றி வரவை அதிகமாக்கலாம்.

இந்தப் பழக்கத்தை ஆரம்பித்தவுடன் உங்கள் பணவரவைப் பாருங்கள்.

வடக்கில் Clusterஐ அகற்றுங்கள்.

வாஸ்து தரும் காரண்டி – காசு மேலே காசு வரும்!

***

பயனடைந்தவுடன் அன்பர்கள் தங்கள் அனுபவத்தை எழுதி அனுப்ப மறக்க வேண்டாம்!

EFFECTIVE MEDICINE TO KILL YOUR MOTHER IN LAW! (Post No.5067)

Written by London Swaminathan 

 

Date: 1 JUNE 2018

 

Time uploaded in London – 13-25

 

Post No. 5067

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

VERY EFFECTIVE MEDICINE WHICH KILLS MOTHERS IN LAW IS AVALABLE AROUND THE WORLD AND THE SURPRISING THING IS THAT IT IS FREE!  t

 

The following anecdote is the proof; I will narrate it very briefly.

 

A newly married couple enjoyed their life for the first one year and there came a thorn in the beautiful rose plant- that is the mother in law thorn! The thorn became sharper and stronger every time the husband called his wire @  Hi, Honey!”.

 

Mother in law was boiling when he heard her son saying, ‘Hi Honey I have never tasted such a tasty food in my life’ (about her cooking). Now the jealousy mother in law was fed with more fuel. She used all that fuel to torture her daughter in law. Every evening when her son came back from the office she boy’s mother submitted a list of the ‘crimes’ she did on that day; but he never listened to them; just ignored his mother.

In the meantime, the torture of mother in law went beyond the tolerance level and so the daughter in law approached a spiritual Guru. Guru listened to her patiently and said to her,

“This is no problem; I have solved lot of cases like yours. I will give a bottle of medicine. But keep it away from children; it is a slow killing poison; it will solve the problem in nine months; just add one drop of this medicine to her favourite food. and it is absolutely free. You may come to my Ashram whenever you need my help”.

 

She was very happy and literally snatched the medicine from the Guru and was about to rush outside. Guru called her and said to her there two important conditions which she must strictly follow them:

  1. She must prostrate to her Mother in Law every morning and cook her favourite dish

2.She must ask her the favourite dish and then cook it.

Guru told her to pretend like a very kind and caring person so that mother in law wont suspect her. Daughter in law said to swamiji:-

 

“Guru! you don’t need to worry about me. I have been watching  lot of T V Serials and films; So I can easily act like a good girl.”

 

Months went by. The mother in law started praising her sky high to every one who visited the house. Friends of the daughter in law phoned her and asked about the secret potion which made her mother in law soft. But she did not tell anyone the 9 month project.

One day mother in law called her daughter in law and praised her as ‘Maha Lakshmi (Goddess of wealth)’, most beautiful girl she ever saw and her son was lucky to get her. She also whispered into her ear that she asked her son to give her a diamond necklace very soon. She sent her old jewellery for recycling into a diamond necklace.

Now the daughter in aw felt very guilty for mixing the slow killing poison in her food. Next day she ran to Guru’s ashram and started talking. Guru interrupted, “I knew everything; the medicine is working very well; she will have to wait for a few more months to finish her off”.

 

But the girl said, No, Guruji, I don’t want to kill my mother in law.

Guu said to her that he cant stop it half way through. It would create more problems for her, because the poison has already started working. When she felt sad, Guru promised her to give her a better medicine which will make her happier and take away her guilt after ‘project mother in law’ finish . Half heartedly she went back.

In course of time, she got her diamond necklace  and there was a big function to celebrate her birth day—it was a surprise party!

 

Now she felt guiltier. Next day she ran to her Guru and told him in stronger terms. She even threated the Guru that if he did not stop the slow killing poison she would commit suicide on the day her mother in law dies and both the sins would come to the Guru.

As soon as the Guru heard this, he burst into laughter.- Big laughter- It went through the roof. And he said

Hello, my girl! your mother in law will never die; she will for long. The medicine—the slow killing poison- was nothing but sugar syrup. The real medicine was given to you (the girl)  in the form of two conditions to prostrate to mother in law every morning and cook her favourite dish. Actually, that was the medicine which worked very well”. Saying this, Guru gave her Kunkum, flowers and blessings to her.

Tears of Joy rolled over her cheek. She couldn’t speak a single word.

Be the change you wish to see in others- Mahatma Gandhi.

( This story was told by Mr M K Angajan in a spiritual talk held yesterday in London; I have given it in my words)

–subham–

மாமியாரைக் கொல்லும் அதிசய மருந்து! (Post No.5066)

Written by London Swaminathan 

 

Date: 1 JUNE 2018

 

Time uploaded in London – 10-58 AM

 

Post No. 5066

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

BE THE CHANGE YOU WANT SEE IN THE WORLD—MAHATMA GANDHI

 

ஒரு ஊரில் ஒரு அழகி; அவளுக்கும் ஒரு அழகனுக்கும் கல்யாணம்; தேன் நிலவு (ஹனி மூன்) நிறைவு; சுக போக வாழ்க்கை!

ஆனால் ரோஜாச் செடி முள் போல, ஒரு மாமியார்; வந்தது பிரச்சனை; புற்று நோய் போலப் புரையோடத் துவங்கியது. ‘போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்’ என்ற பழமொழிக்கு இணங்க, பையன் வேறு, புதுப் பெண்ணைப் புகழ்ந்து தள்ளினான். அவள் சமைத்தது எல்லாம் அமிர்தம் என்றான். பெத்த வயசு கேட்குமா? வயிற்று எரிச்சல் அதிகரித்தது. பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

 

அந்த வயிற்றெரிச்சலை எல்லாம் புகார் மனுவாக மாற்றி பையன் காதில் ஊதினாள் மாமியார்; அதாவது பையனின் அம்மா.

அவனுக்கு அது ஏறுமா? அது ‘செவிடன் காதில் ஊதிய சங்கு போல’ இருந்தது.

மாமியாரின் கோபம் எல்லாம் மருமகள் மீது பாய்ந்தது.

நாள் ஆக நாள் ஆக மருமகளுக்குப் பொறுக்க முடியவில்லை; அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். இந்தப் பெண்ணும் அந்த சாமியார் காலில் விழுந்தாள்; காதில் ஓதினாள்.

சாமியார் சொன்னார்:

“மகளே அஞ்சற்க; என்னிடம் மாமியாரைக் கொல்லும் அரு மருந்து இருக்கிறது. ஆனால் இது மெதுவாகக் கொல்லும் விஷம்; கூட இருந்தே ‘கழுத்தை அறுக்கும் உறவினர் போலக் கொல்லும்’ சக்தி வாய்ந்தது; நண்பன் போலவே நடித்து ‘பின்னுக்குக் குழிபறிப்பவன் போல’ உன் மாமியாருக்குக் குழி பறிக்கும் வல்லமை வாய்ந்தது. இந்தா, சின்ன (BOTTLE) பாட்டில்; ஆனால் ஒன்று சிறுவர் கையில் இது சிக்கி விடக் கூடாது. மாமியார்க்குத் தெரியாமல் தினமும் ஒரு சொட்டுக் கலந்து விடு அவள் சாப்பாட்டில்; பின்னர் பார்; உன் வாழ்வில் இன்பம் செழிக்கும்” என்றார்.

 

 

மருமகளுக்கு ஏக சந்தோஷம்; பாட்டிலை சாமியாரின் கையிலிருந்து பிடுங்காத குறைதான்; விரைவாக வெளியே ஓடினாள். சாமியார் சொன்னார்:

பெண்ணே நில்! நில்! இரண்டு முக்கிய நிபந்தனைகள் உண்டு.

இதில் உள்ள விஷம் உன் மாமியாருக்குத் தெரியாமல் இருப்பதற்காக நீ தினமும் இரண்டு காரியம் செய்ய வேண்டும்:–

  1. காலையில் எழுந்தவுடன் அம்மா! என்று சொல்லி அவள் காலில் விழுந்து நம்ஸ்காரம் செய்து ஆஸீர்வாதம் பெறு!

2இரண்டாவதாக, அம்மா! உங்களுக்கு இன்று என்னம்மா சமைக்க? உங்களுக்குப் பிடித்த கறி, காய், கூட்டு, பலகாரம் சொல்லுங்களம்மா!! என்று அன்போடு கேள்; டி.வி ஸீரியல், சினிமா நடிகைகளை விட நன்றாக நடி; வெற்றி நமதே! ஒன்பதே மாதம்!”

 

பெண்ணும் ஓடினாள்; கன கச்சிதமாக காரியங்களைச் செய்தாள். மாமியாருக்கு முதலில் கொஞ்சம் சம்ஸயம் (DOUBT); ஈதென்னடா; இப்படி அதிசயம்! என்று ஆச்சர்யத்தாள்; ஆனால் நாளடைவில் பழகிப் போயிற்று; நம்பிக்கையும் பிறந்தது.

மாதங்கள் உருண்டோடின; மருமகள் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த கணவனின், மருமகளின் நண்பர்களிடம் எல்லாம் மாமியார் மருமகளைப் புகழ்ந்து தள்ளினாள். இது மெதுவாக மருமகள் காதுக்கும் எட்டியது. அவளுக்கும் அதிசயம்; என்னடா இது, புகார் பட்டியல் போய்,  புகழ்ச்சிப் பட்டியல் வருகிறதே என்று.

 

நாள் தோறும் நமஸ்காரம்; வேளை   தோறும் பிடித்த தளிகை. மாமியாருக்கு ஒரே மகிழ்ச்சி.

அட வீட்டுக்கு வந்த லெட்சுமியே! என் மகனைப் போல அதிர்ஷ்டசாலி உலகில் யாரும் இல்லை, நீ வீட்டுக்கு வந்த மகராசி! என்றெலாம் மாமியார் பகிரங்கமாக, பல்லோர் முன்னிலையில், புகழ்பாடத் துவங்கினாள். ‘நீ ஒரு அழகி; உனக்கு என் மகனை விட்டு வைர நெக்லஸ் வாங்கித் தரச் சொல்லி இருக்கிறேன்’ என்றாள் மாமியார்.

 

மருமகளின் மனதும் இளகத் துவங்கியது; ஓடினாள், ஓடினாள், ஓடினாள் சாமியாரின் ஆஸ்ரமத்துக்கு ஓடினாள்  .

வா, மகளே வா, ” வந்து விட்டாயா; ஏறத்தாழ ஆறு மாதம் ஆகி விட்டது ; இன்னும் மூன்றே மாதம்தான்; பின்னர் மாமியார் தொல்லை என்பதே இல்லை என்றார்.

“இல்லை, குருவே……………………. என்று இழுத்தாள் மருமகள். என் மனச் சாட்சி என்னை உறுத்துகிறது; மாமியார் கொடியவள் அல்லள்; அவளைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை……”

சாமியார் இடை மறித்தார்

“பெண்ணே மருந்தை நிறுத்தி விடாதே; அது தெய்வக் குற்றம்; அபசாரம்; தொடர்ந்து நான் சொன்னபடி செய்; ஒன்பது மாதம் கழித்து வா; பின்னர் உன் குற்ற உணர்வு போகவும், பாபம் தொலையவும் இதை விட சக்தி வாய்ந்த மருந்து தருகிறேன்” என்றார்.

அவளும் வருத்தப் பட்டுக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினாள்; தினசரி நம்ஸ்காரம் செய்து கதையைத் தொடர்ந்தாள்;

ஒன்பது மாதம் போயின.

ஓடினாள்; சாமியார் ஆஸ்ரமத்துக்கு.

குருவே! மிகவும் மனக் கவலை; ஒரு நல்ல ஆத்மாவைக் கொன்று விட்டு நான் உயிர் வாழ விரும்பவில்லை; எனக்கு உடனே இறக்கும் மருந்து கொடுங்கள்; என் மாமியார் இறந்தால் நான் ஒரு கணமும் உயிர் வாழேன்; அவள் ஒரு புனிதவதி” என்று சொல்லி அழுதாள் மருமகள்.

 

சிரித்தார்! சாமியார் சிரித்தார்!!  கூரை அதிரச் சிரித்தார்!!

“பெண்ணே! உன் மாமியார், இன்று போல என்றும் நலமாக இருப்பாள்; நான் அவளுக்கு மருந்து கொடுக்கவில்லை; உனக்குத்தான் மருந்து கொடு த்தேன்; இரண்டு கட்டளைகள் என்ற ரூபத்தில்!

 

மாமியாருக்குக் கொடுத்த பாட்டிலில் இருந்தது வெறும் டானிக்; வைட்டமின் மருந்து!!

உன் மனம் மாறுவதற்கும் அதன் மூலம் மாமியார் மெச்சிய மருமகள் என்று பெயர் கிடைக்கவும் உன்னை தினமும் நமஸ்காரம் செய்ய வைத்து நல்ல உணவு வகைகளைச் சமைக்க வைத்தேன்.

 

பிரச்சனை என்பது வெளியே இல்லை; நம்மிடம்தான் உள்ளது; எந்த ஒரு பிரச்சனைக்கும் உலகி மருந்து உண்டு. அதன் மூலம் பிரச்சனைகளையே வரமாக மாற்ற இயலும்; தீயோரையும் திருத்த இயலும்; இந்தா! பிரஸாதம்! என்று குங்குமம், பழங்களைப் பெண்ணின் கையில் போட்டார்.

“தீர்க்க சுமங்கலி பவஹ” என்று ஆசீர்வதித்தார்.

மருமகளின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வெள்ளம் போலக் கரை புரண்டு ஓடியது.

(தென் ஆப்ரிக்கவில் இருந்து வந்த அங்க ஜ ன் என்ற பேச்சாளர் லண்டனில் ஆற்றிய சொற்பொழிவில் ஆங்கிலத்தில் சொன்ன கதை; தமிழில் பிழிந்தவர்- லண்டன் சுவாமிநாதன் )

 

–சுபம்–

உடனடித் தேவை – தாய் மதம் திரும்புவோருக்கு வரவேற்பு! (Post No.5065)

Written by S NAGARAJAN

 

Date: 1 JUNE 2018

 

Time uploaded in London –  7-50 am  (British Summer Time)

 

Post No. 5065

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

உடனடித் தேவை – தாய் மதம் திரும்புவோருக்கு வரவேற்பு!

 

ச.நாகராஜன்

ஹிந்துக்களின் தொகை இந்தியாவில் குறைந்து கொண்டே போகிறது. மைனாரிட்டிகளான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் தொகை கூடிக் கொண்டே போகிறது.

இஸ்லாமியர்களின் அதிரடி வாசகம்: நாங்கள் எப்போது 51% சதவிகிதம் ஆகிறோமோ அப்போதே 100 சதவிகிதம் ஆகி விடுவோம்.

இதற்கு விளக்கவுரை தேவையில்லை. மாறாவிட்டால் மரணம் என்பது தான் தீர்வு என்ற பாணியில் 51% என்பது 100 % ஆகும் என்பது தெளிவு.

கிறிஸ்தவ போப்போ இந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் நல்ல அறுவடை கிடைக்கும் என்று இந்த ஆயிரமாவது துவக்கத்தில் 2000ஆம் ஆண்டு ஆசியுரை வழங்கி இருக்கிறார்.

மாறாக ஹிந்து மதம் எப்போதும் போல எல்லா மதங்களும் சம்மதம்; வஸுதைவ குடும்பகம் என்ற சகல உலக நலத்திற்காகப் பிரார்த்தித்து வருகிறது.

ஹிந்துக்களின் ஜனத்தொகை குறைவது ஹிந்து மதத்திற்கு ஆபத்து என்பது மட்டுமல்ல; உலக நலனுக்கே ஆபத்து!

ஏனெனில் ஹிந்து மதம் ஒன்றே சகல மதங்களையும் சமமாக பாவிக்கிறது. எப்படி வழிபட்டாலும் இறைவனை அடையலாம் என்பது ஹிந்து மதத்தின் ஆணிவேர் கொள்கை.

ஆகவே தான் ஆர்னால்ட் டாய்ன்பி, “இப்படிப்பட்ட கொள்கை உடைய ஹிந்து மதம் ஒன்றே உலகின் எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஒளி” என்றார்.

ஆக அந்த மதத்தைத் தேய விடக்கூடாது.

இதற்கு ஒரே வழி.

மத மாற்றத்தைத் தடுக்க வேண்டும்; தாய் மதம் திரும்ப விரும்புவோரை வரவேற்க வேண்டும்.

மத மாற்றம் கீழ்க்கண்டவற்றால் ஏற்படுகிறது:-

 

  • அதிரடி பயமுறுத்தல்; கையில் கத்தி கொண்டு பயமுறுத்தல் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
  • மண்ணாசை – இடம் தருதல்
  • பெண்ணாசை – மணமுடிக்க மதம் மாறுதல்
  • பதவி ஆசை – பெரிய பதவி சுகத்திற்காக மதம் மாறுதல்
  • பண ஆசை – பணத்தைக் காட்டி கும்பல் கும்பலாக மதம் மாறுதல்
  • ஏமாற்றி மாற்றுதல் – கடலோர கிராமங்கள்; எல்லையோர மாநிலங்கள் ஆகியவற்றில் உள்ள மக்களை பல்வேறு ஆசை காட்டி ஏமாற்றி மதம் மாற்றுதல்

இவற்றை நிறுத்த தனது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் (Freedom of Religion Billa) சட்டமாக்கப் பட வேண்டும். மதமாற்றுவதை சட்ட விரோதச் செயலாக ஆக்க வேண்டும்.

இதற்கு பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன.

குழம்பிய குட்டையில் மீன் பிடித்தல் அல்லது தெளிவான குட்டையைக் குழப்பி விடல் இதுவே எதிர்க்கட்சிகளின் செயல்முறை.

நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா தனித்து என்ன செய்ய முடியும்!

மக்களே இப்போதைய நிலையில் தாய் மதம் திரும்ப தாமே முன்வருவோரை வரவேற்க வேண்டும்.

மதுரையில் மதுரை ஆதீனம் சோமசுந்தரத் தம்பிரான் செய்தது போல சடங்கை எளிதாக்கி புதுப் பெயரைத் தந்து தாய் மதத்திற்கு வரவேற்க வேண்டும்.

மதமாற்றத்திற்காக வெளி நாடுகளிலிருந்து வரும் பணத்தைத் தடுக்க வேண்டும்.

வாடிகனில் ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது; அந்தத் தொகைக்கு மதம் மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதன் அடிப்படையில் ஒரு தலைக்கு  மதம் மாற ஆகும் தொகை இவ்வளவு என்பது கணக்கிடப்பட்டு நிர்ணயிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான மதமாற்ற பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.

இந்த விஷயத்தை அருண்ஷோரி மிக அழகுற விளக்கியுள்ளார். (இது பற்றித் தனிக் கட்டுரை தான் எழுத வேண்டும்)

 

ஆக தினசரி ஒரு கலாட்டா, கோஷ்டி கானம், மறியல் போன்றவற்றைத் தூண்டி அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு நாடு துண்டாடப் பட திட்டம் தீட்டும் மதமாற்ற கோஷ்டிகளுக்கு எச்சரிக்கை கொடுத்து ‘செக்’ வைக்க வேண்டும்.

தாய் மதம் திரும்புவோரை அனைத்து ஹிந்துக்களும் வரவேற்று, அரவணைத்து அணைத்து உரிய மரியாதை செலுத்தி அவர்களை சகோதர சகோதரிகளாக ஏற்க வேண்டும்.

உலகிற்கே வழி காட்டும் ஹிந்து மதம் அழியாமல் இருக்க இது ஒன்றே வழி!

***