டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகள் (Post No.4052)

Written by S NAGARAJAN

 

Date: 5 July 2017

 

Time uploaded in London:-  4-37 am

 

 

Post No.4052

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

தெயவ தேசம்

 

க்ராண்ட் கான்யான் அனுபவமும் டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகளும்!

 

ச.நாகராஜன்

சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து குடும்பத்தினர் அனைவரும் விமானம், ரெயில், கார் ஆகியவற்றின் மூலம் நீண்ட ஒரு நெடும் பயணம் மேற்கொண்டோம்.

 

நியூயார்க், நியூஜெர்ஸி, அரிஜோனா, வாஷிங்டன் என்று கலக்கலான ஒரு பயணம்

 

அதில் க்ராண்ட் கான்யானும் ஒன்று. எது எப்படியோ போகட்டும், ஐஸ்வர்யா ராய் க்ராண்ட் கான்யான் பாறையில் ஆடியதை நினைவு கூர்ந்து அந்தப் பாறையைப் பார்த்து ஜென்ம சாபல்யம் பெற்றனர் குடும்பத்தினர்.

 

வியூ பாயிண்ட் என்று ஆங்காங்கே காட்சிகளைப் பார்ப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து போர்டு மாட்டி வைப்பது அமெரிக்காவில் ஒரு நல்ல பழக்கம்.

 

ஒரு வியூ பாயிண்டில் க்ராண்ட் கான்யான் தரிசனத்தை முடித்துக் கொண்டோம். ஏராளமான போட்டோக்கள் எடுக்கப்பட்டன. மகன், மருமகள், மனைவி என்று ஆளுக்கொரு கேமரா. ஒரு மொபைல் போன். அமெரிக்காவில் வாங்கிய விலை மதிப்புள்ள ஒரு அதி நவீன வீடியோ கேமரா.

இவை அனைத்திலும் போட்டோக்கள்- போட்டோக்கள்- போட்டோக்கள்.

 

வியூ பாயிண்டில் ஏராளமான கூட்டம். ஆளாளுக்கு போட்டோ எடுத்துக் கொண்டே இருந்ததால் சமயம் பார்த்துத் தான் போட்டோக்களை எடுக்க முடிந்தது. இங்கும் அங்குமாக ஓடி ஓடி ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தது.

 

நேரத்தில் குறியாக இருந்த நான் போதும் போகலாம் என்ற எச்சரிக்கை குரலை Nth  டைமாகக் கொடுத்து அனைவரையும் நகர்த்தி காரில் அமர்த்தினேன்.

 

கார் புறப்பட்டது. ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும். எல்லோருடைய கேமராக்கள்,மொபைல் போன்கள், வீடியோ கேமரா எல்லாம் பத்திரமாக காருக்கு வந்ததா என்று கேட்டேன்.

ஷாக்!

 

வீடியோ கேமராவைத் தவிர அனைத்தும் வந்து இருந்தன.

வீடியோவைக் காணோம். காரை நிறுத்தினோம். சரி பார்த்தோம். ஹூம், வீடியோ கேமராவைக் காணோம்.

 

என் மருமகள் அனைவரது மொபைல் போன்கள், கேமராக்களை வாங்கி டிஜிடல் மயமாக இருந்த போட்டோக்களைப் பார்த்து திடீரென்று கூவினாள்.

 

“இதோ இருக்கிறது. இந்த பெஞ்சின் மீது வைத்து விட்டு வந்து விட்டோம்”

 

கேமரா ‘ஙே’ என்று அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்தது.

இப்போது என்ன செய்வது. இன்னும் அங்கு போக ஒரு அரை மணி நேரம் ஆகும்.

 

ஆக ஒன்றரை மணி நேரத்தில் அதை யார் எடுத்துக் கொண்டு போனார்களோ?

 

சரி, ஒரு முயற்சி தான்!

 

வண்டியைத் திருப்பினோம்.

 

வியூ பாயிண்ட் வந்தது.

 

மனம் பக் பக் என்று இருந்தது.அனைவரும் பெஞ்சை நோக்கி ஓடினோம்.

 

அங்கு அந்த கேமரா அப்படியே இருந்தது. ‘ஙே’ என்று அசையாமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.

முன்பை விட இப்போது இன்னும் அதிகக் கூட்டம்.

எங்கள் காமராவை சரி பார்த்து எடுத்துக் கொண்டோம்.

அனைவரும் சொன்ன வார்த்தை: அமெரிக்கா அமெரிக்கா தான்!

ஆம், யாரும் ஆசைப்பட்டு அதை எடுக்க முயலவில்லை.

அமெரிக்காவில் பெற்ற பல நல்ல அனுபவங்களில் இது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

அவரவர் தம் தம் வேலையைப் பார்ப்பது அமெரிக்கர்களின் பழக்கம்.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது அவர்களின் பரம்பரைக் குணம். வாழ்க அமெரிக்கா; வளர்க அமெரிக்கர்களின் நற்பண்பு.

 

சரி, தெய்வ தேசத்திற்கு வருவோம்.

 

இப்போது எங்கு பார்த்தாலும் சுரண்டல்.லஞ்சம். பேராசை. வேலை பார்க்காமல் அதிக சம்பளம் எதிர்பார்க்கும் குணம்.

போக வேண்டிய பாரதம் இது.

 

வருகின்ற பாரதம் பாரதி பாடியது போல அமைய வேண்டும்.

தெய்வ தேசத்தில் பழைய நாட்களில் இருந்த நற்பண்புகளைக் காணோம்.

அறவே காணோமா?

 

அப்படிச் சொல்ல முடியாது.

 

ஆங்காங்கே அற்புதமான நல்லவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

ஒரு சம்பவம்.

 

3-7-2014 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியானது இது.

 

59 வயதான காமேஷ்வர் கிரி ஒரு டாக்ஸி டிரைவர். கொல்கொத்தாவில் சுமார் 40 ஆண்டுகளாக டாக்ஸியை ஓட்டி வருபவர்.

 

ஒரு புதன் கிழமை அவரது வண்டியில் ஒரு குடும்பம் ஏறியது. அவர்களை வீட்டில் இறக்கி விட்ட காமேஷவர் கிரி திரும்பினார்.

சற்று நேரம் கழித்து டிக்கியைப் பார்க்கையில் அங்கு ஒரு பெரிய பெட்டி இருநதது.

 

அந்தக் குடும்பத்தினர் அதை மட்டும் விட்டு விட்டனர் – எடுக்க் மறந்து போய்!

 

பெட்டியை அவர் திறந்தார். உள்ளே ஜொலிக்கும் வைர நகைகள்.ஏராளம் இருந்தன. ஒரு கல்யாணத்திற்குத் தேவையான தங்க நகைகள்!

 

இங்கு நிமாய் சந்திர தாஸ்  நியூ அலிபூர் ரோடில் ராஜஸ்தான் பவனில் ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறியவர் தனது மகளின் திருமணத்திற்கு உரிய நகைகளை வாங்கிய சந்தோஷத்துடன் வீட்டில் குடும்பத்தினருடன் இறங்கினார். நடக்கவிருக்கும் விழாவைப் பற்றிய யோசனையில் இருந்தவர் டாக்ஸியை விட்டு அவசரம் அவசரமாக இறங்கி விட்டார்.

 

நகைப் பெட்டியை டிக்கியில் அப்படியே விட்டு விட்டார்.

வீட்டினுள் நுழைந்தவுடன் தான் தெரிந்தது – பெட்டி இல்லை என்பது!

 

உடனடியாக டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி ஓடினார். ராஜஸ்தான் ஸ்வீட் கடையின் அருகில் இருந்த டாக்ஸி டிரைவர்களிடம் தான் வந்த வண்டியைப் பற்றி விசாரித்தார்.

அங்குள்ள டிரைவர்கள் கிரி ஏற்கனவே அவர் வீட்டிற்குத் தான் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

உடனடியாக அவரை போனில் தொடர்பு கொண்டார். அவர் வீட்டில் வாசலில் தான் நின்று கொண்டிருப்பதாக கிரி கூறினார்.

 

வீட்டிற்குச் சென்ற நிமாய் தனது பெட்டியை கிரியிடம் பெற்றுக் கொண்ட போது அவர் கண்களில் நீர் துளிர்த்தது.

கிரிக்கு அவர் பரிசாக அளித்த தொகையை அவர் பெற மறுத்து விட்டார்.

 

ஏன்? அவர் தந்தை சொன்ன சொற்கள் அவர் நினைவுக்கு வந்ததாம்.

 

There is enough to meet a man’s needs, but never his greed.

 

இது தான் அவரது தந்தையின் மந்திர வாசகம்!

 

வற்புறுத்திய பின்னர் அவர் 44 ரூபாய்களைப் பெற்றுக் கொண்டார். நகைகளைத் திருப்பிக் கொண்டுவந்ததின் வண்டிச் சத்தம் அது.

 

அனைவரும் அவரைப் பாராட்டி வற்புறுத்திய பின்னர் நூறு ரூபாயை அவர் ஏற்றுக் கொண்டார்.

என் தந்தை கூறிய வாசகத்தை மறவேன்.

 

ஒவ்வொருவருக்கும் தேவையானது போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரது பேராசைக்கு ஈடுகட்ட தான் போதுமான அளவு இல்லை என்பது தந்தையின் வாக்கு!

 

அவருக்கு இரு ஆசைகள்.

இன்னும் ஐந்து வருடம் ஓட்டினால் அவரது டாக்ஸி கடனாக நிலுவையில் இருக்கும் எண்பதினாயிரம் ரூபாயை அடைத்து விடலாம்.

 

இன்னொன்று, இப்போது பி.காம் படிக்கும் தன் பையன் ஒரு சார்டர்ட் அக்கவுண்ட் ஆக விரும்புகிறான். அவன் அப்படி ஆகி விட வேண்டும்!

 

அவரை அனைவரும் வாழ்த்தினர். ஒரு நல்லவரின் ஆசைகள் நிறைவேறட்டும்.

தெய்வ தேசத்தின் பிரதிநிதி காமேஷ்வர் கிரி.

 

 

மாத்ருவத் பரதாரேஷு பரத்ரவ்யேஷு லோஷ்டத்ரவத்!

பர தாரம் – பர திரவியம் – அடுத்தவர் தாரம், அடுத்தவர் செல்வம் மீது கண் கூட வைக்காதே என்பது தெயவ தேச அறநூல்களின் அறிவுரை.

 

இதன்படி ஒரு காலத்தில் அனைவரும் பாரதத்தில் வாழ்ந்தனர்.

இன்று புரையோடிப் போன வாழ்க்கை முறையில் லஞ்ச லாவண்யத்தைத் தான் காண முடிகிறது.

 

ஆனால் சிலரேனும் தர்ம காவலர்களாக இருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.

 

காமேஷவர் கிரி போன்றவர்களின் எண்ணிக்கை பெருகும் போது நமது தேசம் மீண்டும் தெய்வ தேசப் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கும்!

***

மொட்டைச் சுவர், கட்டைச் சுவர், தட்டைச் சுவர், குட்டைச் சுவர் – (Post No.4051)

Written by London Swaminathan
Date: 4 July 2017
Time uploaded in London- 21-41
Post No. 4051

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹா வைத்யநாதய்யர் வாழ்க்கைச் சரிதத்தில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்.

 

“ஒரு வருஷம் ஐப்பசி மாதத்தில் வழக்கம் போல துலா ஸ்நானத்திற்காக சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் இருந்து மாயூரம் சென்று கட்டளை மடத்தில் இருந்து வந்தார். மஹா வைத்ய நாதய்யர் மற்றும் பல வித்துவான்கள் வந்திருந்தனர்.

 

மாயூரத்தில் அக்காலத்தில் கோயிற் பாடகரான ஒரு முதிய அந்தணர் இருந்தார். அவர் யாருடன் பேசினாலும் “அபயாம்பிகா கடாட்சம் உங்களுக்குக் உண்டாகட்டும்” என்பார். இதனால் அவர் பெயரே அபயாம்பிகா கடாக்ஷம் என்றாகிவிட்டது (அபயாம்பிகை என்பது மாயூரம் அம்மனின் பெயர்)

அவர் அடிக்கடி மடத்துக்கு வந்து போவார். சுப்பிரமணிய தேசிகர், அவருக்கு வருஷத்துக்கு முக்கால் பணம் சன்மானம் கொடுப்பார். அப்படி செய்யும்போதெல்லாம் மஹா வைத்திய நாதய்யருக்கு மட்டும் பத்து இருபது என்று சன்மானம் கொடுக்கிறீர்களே. நான் மட்டும் தாழ்ந்தவனா? அந்தப் பையன் வரும்போது அவனை என்னுடன் பாடச் சொன்னால் என் யோக்யதை உங்களுக்குத் தெரியவரும்” என்று சொல்வார். சுப்பிரமணிய தேசிகரும் நகைத்துக் கொண்டே அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அனுப்புவார்.

 

மாயூரத்தில் எல்லோரும் கூடியிருந்த சமயத்தில் அபயாம்பிகா கடக்ஷமும் வந்து சேர்ந்தார். வழக்கம்போல ஸன்மானம் பெற்றுக்கொண்டர்.; பிறகு மஹா வைத்யநாதய்யருடன் சேர்ந்து பாடச் செய்தால் தம்முடைய மதிப்பு விளங்கும் என்றார். அங்கு அய்யர் இருந்தது அவருக்குத் தெரியாது. சுப்பிரமணிய தேசிகரும் புன்சிரிப்போடு இவர்களே மஹா வைத்யநதையர் அவர்கள் என்றார்.

 

அந்தப் பிராமணர் உடனே திடுக்கிட்டு எழுந்து போய்விடுவார்  என்று

நாங்கள் யாவரும் எண்ணினோம். ஆனால் அவரோ எழுந்து போகாமல், சிறிதும் அஞ்சாமல் “அப்படியா? நல்ல வேளை! இப்பொழுது அகப்பட்டுக் கொண்டாயா? பாடு பார்க்கலாம் என்றார். நானும் பாடுகிறேன். நான் பாடிக்காட்டும்படி பாடுவாயா என்று கேட்டுவிட்டு,

“மொட்டைச் சுவர், கட்டைச் சுவர்,  தட்டைச் சுவர், குட்டைச் சுவர்”  என்று தாம் வாய்க்கு வந்தவற்றைப் பல்லவியாக எடுத்துப் பாட ஆரம்பித்தார்

 

மஹா வைத்யநாதையர் சிரித்தார். உடனே அந்த முதியவர் என்ன சிரிக்கிறாய்? சிரித்துவிட்டால் ஏமாந்து போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? பாடு பார்க்கலாம். பேசாமல் ரூபாயை வாங்கி முடித்துக்கொண்டு போக மாத்திரம் தெரியுமா? நான் இல்லாத காலத்தில் வந்து பண்டார சந்நிதியை ஏமாற்றிப் பணம் வாங்குகிறாயா? எங்கே, இதைப் பல்லவியாக வைத்துப் பாடு பார்க்கலாம் என்றார். இவ்வாறு உத்ஸாகத்தோடு சொல்லிவிட்டு எல்லோர் முகத்தையும் பார்த்தார். உடன் இருந்த யாவரும் சிரித்தனர்.

உடனே அங்கிருந்த தியாகராஜ சாஸ்திரிகள், அந்தப் பிராமணரைப் பார்த்து ” ஓய், இங்கே வாரும். ஏன் அவரிடம் சென்று குழறுகிறீர்?  நீர் இங்கே வந்து பாடும்; நான் பாடிக் காட்டுகிறேன் என்று சொன்னார். அந்த முதியவரும் அப்படியே வந்து அசராமல் பாடினார். தியாகராஜ சாஸ்திரிகளும், அவர் பாடிய படியெல்லாம் பாடிக்காட்டினார். அவர் அபஸ்வரமாகப் பாடும்போதெல்லாம் சாஸ்திரிகளும் அபஸ்வரமாகப் பாடினார். இந்த விநோத நிகழ்ச்சியால் சபையில் இருந்த அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். ஒன்றும் தெரியாத ஸாதுவாகிய அபயாம்பிகா கடாக்ஷம், தமது  பாடல் இங்கே எடுபடாது என்று எண்ணி பேசாமல் எழுந்து போய்விட்டார்.

 

–சுபம்—

 

Sacred Cow in Satapata Brahmana (Post No.4050)

Cow attending Veda class

Written by London Swaminathan
Date: 4 July 2017
Time uploaded in London- 10-41 am
Post No. 4050

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Satapata Brahmana is one of the Brahmana books of Vedic period. Foreigners date it to 800 BCE to 1000 BCE. Hindus date it to thousands of years before that. Foreigners spread a false story that Hindus adopted vegetarianism only after Mahavira and Gautama Buddha appeared in India. Those stories are exploded by the Satapata Brahmana passage.

Cow photographed in Oldenburg ,Germany

Through out the Vedas cow and calf are used as the symbol of love and affection between a mother and her child. This is the oft used simile in the oldest portions of the Vedas. That shows that cow was equated to mother. Vaatsalyam is a Sanskrit word coined out of it (Vatsa=calf)

 

The biggest contribution of the Vedic Hindus to the world civilization are the DECIMAL SYSTEM and the COW’S MILK. In no other world literature, we come across such references or similes as we see in the Vedas. Until today the world has not found an alternative to the Decimal system and the Cow’s milk. These are used everyday. This shows at they are the oldest and highly advanced civilization. These type of concepts can evolve only after thousands of trial and error methods or experiments.

Here are some passages from the famous Satapata Brahmana (3-1-2-3):

“Let him not eat the flesh of either the cow or the ox; for the cow and the ox doubtless support everything on earth. The Gods spake: ‘Verily the cow and the ox support everything here; come let us bestow on the cow and the ox whatever vigour belonged to other species of animals; and, therefore, the cow and ox eat the most. Hence were one to eat the flesh of an ox or cow, there would be, as it were, an eating of everything, or, as it were, a going on to the end. Such a one, indeed, would be likely to be born again as a strange being, as one of whom there is evil report, such as, “He has expelled the embryo from a woman’ He has committed a sin; let him therefore, not eat the flesh of the cow and the ox”.

Most valuable fuel and manure– cow dung

Foreigners are so cunning and divisive that they quote from different sources (very old and the latest) to support their arguments. It may be from the latest books, which they would never mention. But if they see any good things, they will say that they are from the latest books. It was because of…………. They will bluff.

 

Atharva Veda talks about a huge geographical area from West Bengal to Iran. No ancient civilization had such a sway over a large region. When such things come they will say Atharvana Veda was the latest addition. How latest – no two scholars agree! They try to cramp the development of a huge civilization within a span of 200 to 400 years. It is not possible to any civilization even in the modern period.

 

Usefulness of the Cows:

Sale of Cow for the Soma plant

In Vedic times barter trade was practised. They exchanged cows for Soma herb. Here is a passage about it:

“He bargains for the King Soma; and, because he bargains for the king, therefore any and everything is vendible. He says,

Soma seller! is your King Soma for sale?

Soma seller: He is for sale

I will buy him from you.

Buy him

I will buy him of you for one sixteenth of the cow;

King Soma is surely worth more than that.

From the cow comes the fresh milk; from the boiled milk boiled milk comes ghee/butter cream, clotted curds, whey etc.

Soma seller: King Soma is worth more than that; but surely is the greatness of the cow

Adhvaryu Priest:-

Gold is yours;  a cloth is yours;  a milch cow, a pair of kine,  three other cows are thine.

 

They buy the Soma plant for a cow and then the cow is also taken back.

This type of conversation shows the importance of cow and they are shown as equal to mother and Soma plant.

Foreigners quote certain passages to show that a cow was sacrificed in the yaga; but there are also it is explained that a cow made up of dough or flour is sacrificed.

 

The very concept of sacrifice is uniquely Hindu. It shows that all you desire, all that you want, all you consider valuable are not yours—Idam Na Mama – it is not mine.

 

from this ritual ‘Idam na mama’ they take humans to a higher stage i.e. everything thing belongs to God – Isavaasyam Idam sarvam i.e.

Cow Puja at Kanchipuram

MANTRA ONE of Isavasya Upanishad

 

isavasyam idam sarvam

yat kinca jagatyam jagat

tena tyaktena bhunjitha

ma grdhah kasya svid dhanam

 

isa–by the Lord; avasyam–controlled; idam–this; sarvam–all; yat kinca— whatever; jagatyam–within the universe; jagat–all that is animate or inanimate; tena–by Him; tyaktena–set-apart quota; bhunjithah–you should accept; ma–do not; grdhah–endeavor to gain; kasya svit–of anyone else; dhanam–the wealth.

 

TRANSLATION

 

Everything animate or inanimate that is within the universe is controlled and owned by the Lord. One should therefore accept only those things necessary for himself, which are set aside as his quota, and one should not accept other things, knowing well to whom they belong. 

 

(This is the favourite hymn of Mahatma Gandhi)

 

–subham–

 

சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள் (Post No.4049)

Written by S NAGARAJAN

 

Date: 4 July 2017

 

Time uploaded in London:-  5-59 am

 

 

Post No.4049

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

தெய்வ தேசம்

 

சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள்; பலிக்காமல் போக வைக்க முடியுமா?!

ச.நாகராஜன்

 

‘ராஸ்கல்,ரௌடிகள், கொள்ளைக்காரர்கள் கைக்கு அதிகாரம் போகும்; எல்லா இந்திய தலைவர்களும் மிக மோசமான,போலியான தலைவர்களாக இருப்பார்கள். இனிக்க இனிக்கப் பேசுவர்; ஆனால் வஞ்சக நெஞ்சைக் கொண்டிருப்பர். அதிகாரத்திற்காகத் தங்களுக்குள் தாங்களே  சண்டையிடுவர். அரசியல் குழப்பங்களில் இந்தியா காணாமல் போகும். இந்தியாவில் காற்றும் நீரும் கூட வரி விதிக்கப்படும் ஒரு நாள் வந்து சேரும்.’ -வின்ஸ்டன் சர்ச்சில்

 

 

“Power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre & men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight amongst themselves for power and India will be lost in political squabbles. A day would come when even air and water would be taxed in India.”

 

வின்ஸ்டன் சர்ச்சிலின் மிக பிரபலமான இந்த மேற்கோள் ‘ராஸ்கல் மேற்கோள்’ (Rascal Quote)  என்று உலகெங்கும் பரவலாகப் பேசப்படுகிறது.

இதைக் கேட்கும் உண்மையான் தேசபக்தியுடைய இந்தியர்கள் சிரிப்பார்கள்.

எங்கள் தேசம் உயர் தேசம் என்று நமது பரம்பரையைச் சுட்டிக் காட்டி நெஞ்சு நிமிர்ந்து நடப்பர்.

சரி தான்! நல்லவர்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் நாட்டு நடப்பு?

நாட்டு நடப்பை அறிந்தவர்கள் கீழ்க்கண்ட விதமாகச் சொல்லுகின்றனர்:-

எல்லா பல்கலைத் துணை வேந்தர்களும அயோக்கிய ராஸ்கல்கள். அந்தப் பதவிக்கு ஐந்து கோடி குறைந்த பட்ச தொகையாகக் கொடுத்து அதை ‘வாங்க’ வேண்டுமாம்.

டி.எஸ்.பி. என்றால் அரை சி அதாவது 50 ல.

இன்ஸ்பெக்டர் என்றால் கால் சி.

வாத்தியார் என்றால் கூட ஒரு ல.

அரசு பதவிக்கு குறைந்த பட்ச தகுதி அரசியல் கட்சி ஆபீஸுக்குத் தினசரி போக வேண்டும். அரசு அலுவலகம் “தானாக” இயங்கும் அல்லது தூங்கும். யாருக்குக் கவலை.

நீதியரசர் பதவி பற்றிச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

தனக்குத் தானே வழக்கை விசாரித்து தன்னை நிரபராதி என்று தீர்ப்புச் சொல்லிக் கொண்டு மற்ற நீதியரசர்களுக்குத் தண்டனை விதிக்கும் நீதியரசர் ஒரு நல்ல உதாரணம்.

எஞ்ஜினியரிங், மெடிகல் என எடுத்துக் கொண்டால் 80 ல வேண்டும் – ஒரு சீட்டைப் பெற.

லா பற்றிச் சொல்லாம’லா’  இருக்க முடியும்? வேண்டாமப்பா, கல்’லா’த பேர்களே நல்லவர்கள். இங்கு இல்’லா’த பேர்களே யோக்கியர்கள்!

ஊடகங்கள் பொய்மூட்டையின் இருப்பிடம்; போலிகளின் விவாத மேடை விபரீத மேடை! தொலைக்காட்சியும் பத்திரிகைகளும் ஐந்தாம் படையாக மாறிக் கொண்டிருப்பதால் நாடு படும் பாடு பெரும்பாடு.

கோவில்களைக் கொள்ளையடிப்பதோ கைவந்த ஒரு தனிக் கலை!

இவற்றால் பண்பாடு படும் பாடு பற்றி ஒரு ‘பண்’ பாடு என்றால் கவிஞர்களாலும் கூட முடியாது.

அரசியலோ ரௌடிகளின் கூடாரம். கொலை கேஸ்களில் மாட்டிக் கொண்டவர்களின் இருப்பிடம். பல் லட்சம் கோடிகள் ஊழல் வழக்கில் சிக்குவதே அடிப்ப்டைத் தகுதி.

சி என்பது சீச்சீ என்று சொல்லுமளவு மிக அற்பமான தொகை அவர்களுக்கு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காமராஜர் சாதி மத வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் வயிறாரச் சோறிட்டு கல்விக் கண்களைத் திறக்க முயற்சித்ததை நன்கு அறிவோம்.

பின்னால் திராவிடப் பிசாசுகள் ஊழல்,பொய், லஞ்ச் லாவண்யங்களை அவிழ்த்து விட்டு அதில் தமது குடும்பத்தை வளர்த்த கதையையும் அறிவோம்.

தமிழ்நாடு மட்டுமல்ல, பீஹார், உ.பி. கேரளம், கர்நாடகம், வங்காளம் எந்த மாநிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் – அங்கும் இதே கதை தான்! ஊழல் அரசியலே தான்!

இது தான் நாட்டு நடப்பு அறிந்தோர் கூறுவது!

 

சர்ச்சிலின் மேற்கோளை நிச்சயமாக விரைவில் நடைமுறைப்படுத்தி விடுவோம் என்று ஆவேசமாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்து போகிறோம்.

நல்லவர்கள் நடுங்குகிறார்கள். யோக்கியமான்வர்கள் திகைக்கிறார்கள். எப்படித் தான் இந்த நாட்டில் வாழ்வது?

ஆறுகள் வறள்கின்றன – மணல் கொள்ளையால் – நல்ல மனங்கள் வறள்வது போல.

மலைகள் பொடியாகின்றன, கற்களைக் கொள்ளை அடிப்பதால் – நல்லவர் உள்ளம் பொடிப்பொடியாகி நொறுங்குவது போல.

இது தவிர,

மைனாரிடி அப்பீஸ்மெண்ட்.

தாழ்ந்தவர் கார்டைக் காட்டி சலுகை பெற முயல்வது.

எதையாவது இலவசமாகப் பெற்று வோட்டைத் தருவது.

இன்ன பிற அலங்கோலங்களை ‘எண்ணி’, ‘எண்ணி’ ( counting and thinking) மாய்ந்து போகிறோம்.

சர்ச்சில் கூறியது நடந்து விடுமா? சற்று யோசிப்போம்.

 

அவரைத் திட்ட வேண்டாம்; நம்மைச் சார்ந்தவர்கள் திருந்த வழி உண்டா என்று யோசிப்போம்.

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது அறநூல்களின் முடிபு. என்றாலும் அறத்தை வெல்ல வைக்க போதுமான நல்லவர்கள் தேவை அல்லவா?

ந்ல்லவர்கள் பகிரங்கமாக ஒன்று கூட முடியாத நிலை கூட ஏற்பட்டு விடும் போல இருக்கிறது.

ஒரு இரகசிய இயக்கமாக மாறி இவர்கள் நம் தேசத்தைக் காப்பாற்ற முன் வர வேண்டும்.

சர்ச்சிலின் மேற்கோள் பலிக்காமல் இருக்க நமது பாரம்பரிய அடிப்படையிலான ஒரு ‘வேத உத்வேகம்’ தேவை

ஜனநாயகத்தைக் காப்போம். நீதித்துறையை சரியானபடி பாதுகாப்போம்.

இந்திய அரசியல் சாஸனம் நமது இன்றைய தர்ம சாஸனம் என்பதை மனதில் இருத்திச் செயல்படுவோம்.

தர்மநெறி முறைகளைக் காப்போம்.

நல்ல ஊடகங்களை மட்டும் வளர்ப்போம்.

திறமைக்கும் தகுதிக்கும் மதிப்புத் தருவோம்.

வேலை செய்வது கடமை என உணர்வோம்.

சத்யமேவ ஜயதே என்ற பாரத அடிப்படை உண்மையை வெற்றி பெறச் செய்வோம். நமது ராணுவத்தைப் போற்றுவோம். வீரர்களுக்கு உறுதுணையாகத் தோள் கொடுப்போம்.

தர்மமே அரசியலுக்கு அடிப்படை என்பதை உலகிற்குக் காட்டுவோம்.

 

பாதை பிறழாமல் இருக்க அருள் புரி பாரத தேவியே!

போகுமிடம் வெகு தூரம்;

போக வேண்டும் நெடு நேரம்!

துணை இருப்பாய் காளி!

நீயே எமக்கு தர்ம வேலி!!

***                                                             ல என்றால் லட்சம் சி என்றால் க்ரோர். எல்லோரும் இந்நாட்டு ரியல் எஸ்டேட் மன்னர்கள் என்பதால் இதற்கு அர்த்தம் புரிந்திருக்க வேண்டும்.

 

மஹா வைத்திய நாத அய்யரின் தமிழ் அறிவு (Post No.4048)

Written by London Swaminathan
Date: 3 July 2017
Time uploaded in London-22-42
Post No. 4048

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹாவைத்திய நாத அய்யர் பெரிய சங்கீத மேதை. அவருடைய சங்கீத அறிவுக்கு யாரும் ‘சர்ட்டிபிகேட்’ கொடுக்க வேண்டாம். ஆனால் அவருடைய தமிழ் அறிவு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களாலும் பாராட்டப்பட்டத்தை உ.வே சாமிநாத அய்யர் எழுதும்போது அவருக்கு இரட்டைப் பட்டம் கிடைத்தது போலாகும்.

 

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கையில் திருக்குற்றாலப் புராணத்தின் அச்சுப் பிரதி ஒன்று கிடைத்தவுடன் ஒவ்வொரு பாடலாகப் படித்து பொருள் சொல்லிக்கொண்டே வந்தார். அப்பொழுது மஹா வைத்யநாத அய்யரும் இருந்தார். அவரும் தமக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டு வந்தார். அதில் சண்டிகேசுவர வணக்கம் பற்றிய பாடல் வந்தது

 

தான் பிறந்த தந்தையையும் இனிப்பிறக்கும் நிந்தையையும் தடிந்து சேயென்

றான்பிறங்கு மழவிடைமே லொருவரழைத்திடவிருவர் அயிர்ப்பவேகிக்

கான்பொலிதா ரரிபிரமா தியர்க்குமெய்தா விருக்கையெய்திக்கடவுட்சேடம்

வான்புலவர் பெறாப்பேறு பெற்றவனை நற்றவனை வழுத்தல் செய்வாம்

 

என்னும் செய்யுளில் “சேயென்று ஒருவர் அழைத்திட இருவர் அயிர்ப்பவேகி” என்ற பகுதியில் இருவர் என்பது யார்? என்று விளங்கவில்லை; உடனிருந்தவர்களும் யோசித்தார்கள்; சிலர் பிரம்மா-விஷ்ணு என்றனர். ஆனால் அது பொருத்தமாக இல்லை. அப்பொழுது மஹா   வைத்யநாதய்யர், விநாயகர், சுப்பிரமணியர் என்று பொருள் சொல்லலாமோ என்றா ர் அது அந்த இடத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தவுடன் பிள்ளையவர்களும் அதை ஆமோதித்தார்.

 

ஐயா, நீங்கள் சொன்னதுதான் நன்றாக இருக்கிறது. உங்களுடைய ஈஸ்வர பக்தியே இவ்வாறு தோன்றச் செய்தது என்றார். அவருடைய தமிழறிவை மஹாவித்துவானே கொண்டாடிவிட்டார்கள் என்றால் வேறு புதிதாக என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறார் உ.வே.சா.

 

மஹா வைத்தியநாதரும் அவருடைய தமையனாரும் சிலேடையாகப் பேசுவதில் வல்லவர்கள்

மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் தென்னாட்டு யாத்திரை சென்றபோது இருவரும் உடன் சென்றனர். கம்பனேரி புதுக்குடி என்ற இடத்தில்  அவர்கள் இருவர் மற்றும் உ.வே.சா. ஆகிய மூவரும் அணிந்திருந்த ஏறுமுக ருத்திராட்சக் கண்டியில் இருந்த தங்க முலாம் கொடுத்த வெள்ளி வில்லைகளை அகற்றிவிட்டு தங்க வில்லைகளைப் போடும்படி தேசிகர்  செய்வித்தனர்.  அப்பொழுது இராமஸ்வாமி அய்யர், “வெள்ளிவில்லை தங்க வில்லை” என்று சிலேடை மொழியில் பேசி அனைவரையும் மகிழ்வித்தார்.

 

இதே போல குற்றாலம் சென்றபோது அவருடைய தமையனார் ” எவ்வளவு கல் (மைல்) தாண்டி இருப்போம்? என்றார். மஹா வைத்திய நாதய்யர் “எல்லாங் கல்லுத்தானே” என்றனர்.

 

 

மஹா வைத்திய நாதய்யர் கூறும் சொல் விளக்கங்கள் மிக நன்றாக இருக்கும். தமிழ் மற்றும் சம்ஸ்கிருத நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்குவார். அப்பொழுது அவரது ஆராய்ச்சியின் ஆழம் புலப்படும். தேவர-உபநிஷத் கருத்துகளை ஒப்பிட்டுப் பேசுவார்.மங்களம் பாடுகையில் சஹானா ராகத்திலுள்ள நந்திகேசாய மங்களம் என்பதைப் பாடி நிறைவு செய்வார்.

அப்பூதி நாயனார் சரித்திரப் பிரசங்கம் செய்தபோது பெரியபுராணக் கீர்த்தனையில்  திங்களூர் மாடத்திங்களூர் என்ற வரிக்குப் பொருள் சொல்கையில் ‘சந்திரன், மேல் மாடத்தில் ஊர்ந்து செல்லும் ஊர்’ என்று பொருள் சொன்னார். சந்திரன், குருத் துரோகம் செய்த பாவத்தில் சிக்கியதால் அப்பூதி அடிகள் வாழும் ஊரின் மாடத்தில் ஊர்ந்தாதாலாவது பாவம் போகும் என்று “நிலவு சென்ற ஊர்” என்று விளக்கம் தந்தார்.

 

சோமாசிமாறநாயனார் சரித்திரம் சொல்கையில் எப்படியாவது, சுந்தரமூர்த்தி நாயனாரின் உதவிபெற்று  தியாகேசப் பெருமானைத் தன் யாகத்துக்கு வரவழைக்க திட்டமிட்டார். இதற்காக சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பிடித்த தூதுவளைக் கீரையை நாள்தோறும் அவர் அனுப்பிவந்தாராம். அதைக்கூறும் கீர்த்தனம் “தூதுவளைக் கீரையைக் காதலாய்க் கொடுத்துவந்தார்” என்று தொடங்குவது. இதைப்  பாடிப் பிரசங்கம் செய்கையில் வைத்திய நாதய்யர், அந்தக் கீரையின் பெயர் ‘தூதுவளை’. உங்களுக்குத் தூதாகச் சென்ற  சிவபெருமானை இணங்கச் செய்யவேண்டும் என்பதால்தான் தூதுவளைக் கீரையை தினமும் சப்ளை செய்தார் போலும் என்றார் வைத்திநாதய்யர்.

 

–சுபம்–

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்! (Post No.4047)

Written by S NAGARAJAN

 

Date: 3 July 2017

 

Time uploaded in London:-  6-40 am

 

 

Post No.4047

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்!

 

ச.நாகராஜன்

இப்போது உலகெங்கும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன, திகைக்க வைக்கின்றன!

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்லாம் மதத்தைக் கண்டு பயப்பட்டு தங்கள் மதத்தையும் நாட்டையும் காப்பாற்ற முனைப்போடு ஈடுபட உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்கும் காட்சியைக் காண்கிறோம்.

 

 

ஆஸ்திரேலியாவிலோ, எங்கள் தேசத்தின் அரசியல் சாஸனம் மற்றும் பண்பாட்டுக்குத் தக வாழ முடியுமானால் இங்கு வாழுங்கள்; இல்லையேல் நடையைக் கட்டுங்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் முஸ்லீம்களை நோக்கி எச்சரிக்கை கலந்த அறிவுரையை சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதையும் காண்கிறோம்.

 

 

மியான்மரிலோ 969 இயக்கம் முஸ்லீம்களை ஒதுக்கி வைத்து புத்த மதத்தினரின் கடைகளிலேயே அனைத்தையும் வாங்குங்கள் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

 

 

அமெரிக்காவிலோ முன்னர் ரஷியாவை எதிரியாகச் சித்தரித்து வரும் நாவல்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை அறவே காணோம். அதற்குப் பதிலாக இஸ்லாமிய தீவிரவாதிகளை பயங்கரமாகச் சித்தரித்து அமெரிக்காவைக் காப்பாற்ற விழைவதற்கான அறைகூவல் கொண்ட நாவல்களும் சீரியல்களும் ஏராளமாக வருவதைக் காண்கிறோம்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

 

;பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமியரும் ஹிந்துக்களும் ஹிந்து நாட்டில் இணைந்து வாழ்வதை இப்போதைய உலக நோக்கில் கண்டு பிரமிக்க வேண்டியிருக்கிறது.

 

பாபரிலிருந்து ஆரம்பித்து ஔரங்கசீப் வரை பற்பல ஆண்டுகள் முஸ்லீம்களே ஹிந்து நாடான பாரதத்தை ஆண்டனர். ஆனாலும், தீவிரமான மதமாற்ற முயற்சியை அவர்கள் மேற்கொண்ட போதிலும், ஹிந்துக்களைப் பெருவாரியாக மாற்ற முடியவில்லை.

 

 

அதே சமயம் அவர்களை அப்படியே ஜீரணித்ததோடு தங்களின் அற்புதமான கலாசாரத்தை அவர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதையும் ஹிந்து மதம் சுட்டிக் காட்டி மதமாற்றம் தேவையில்லை என்ற நோக்கையும் எடுத்து வைத்து வந்திருக்கிறது.

 

வரலாற்று ரீதியாக் ஒரு சில உண்மைகளை இங்கு காண்போம்.

அக்பர் முதன் முதலாக ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து அன்யோன்யமாக வாழ வேண்டும் என்று முயற்சித்தார்.தீன் இலாஹி உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டார்.

 

 

அடுத்து ஜிஹாங்கீர் இந்த முய்றசியை மேற்கொண்டு வளர்த்தார்.

அக்பரின் பேரனான தாரா ஷிகு இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொண்டார்.

ராமாயணம், உபநிடதங்கள், கீதை ஆகிய அரிய இதிஹாஸ வேத நூல்கள் பெர்சிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

இந்திய சிந்தனை பெர்சியாவில் ஊடுருவியது.

அடுத்து முகம்மது கஜினியில் சமகாலத்தவரான,

அல்பெரூனி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பொது அற்புதமான் இந்த தேசத்தைக் கண்டு வியந்தார், பிரமித்தார்.

ஹிந்து மற்றும் புத்த மத நூல்கள் பலவற்றை ஆராய்ந்தார், மொழி பெயர்த்தார். புராணங்களின் மீது அவர் பெருமதிப்பைக் கொண்டிருந்தார்.

 

 

இருபத்தி இரண்டு சம்ஸ்கிருத ஆதார நூல்களை ஆராய்ந்து தனது வானவியல், ஜோதிடம், பூகோள நூலை உருவாக்கினார்.

இதை விட ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை இன்னும் ஒரு படி மேலே சென்றது.

 

குரு- சிஷ்ய பரம்பரை ஒன்று உருவானது

முஸ்லீம் மகான்கள் அல்லது குருமார்கள் ஹிந்து சீடர்களைப் பெற்றனர். ஹிந்து யோகிகள், ம்கான்கள் முஸ்லீம் சீடர்களைப் பெற்றனர்.

 

எங்கும் கலகமோ சச்சரவோ கருத்து வேறுபாடோ ஏற்படவில்லை.

 

பஞ்சாபில் இரு கல்லறைகள் உள்ளன. ஒன்று,  முஸ்லீமான ஜ்மாலி சுல்தானுடையது. இன்னொன்று ஹிந்து மகானான தியால் பவானி அவர்களுடையது. இருவரும் மிக நெருங்கிப் பழகிய நண்பர்கள். அந்த நட்புக்கு அடையாளமாக் இருவரின் கல்லறைகளும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் உள்ளன. இருவரின் சீடர்களும் மிகவும் ஒற்றுமையாக இருவரையும் போற்றி வழிபடுகின்றனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர் முஸ்லீம் மகானான பாவா ஃபல்டு. அவர் எதிர்காலத்தை அப்படியே கூற வல்லவர்.

 

இந்த அபூர்வமான சக்தி அவருக்கு ஒரு ஹிந்து யோகியிடமிருந்தே கிடைத்தது.

பாபல் ஸஹானா என்பவர் ஹிந்து மஹான். அவர் ஒரு  முஸ்லீம் பகீருடைய சீடர். அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர்.

 

 

இது ஒரு புற்மிருக்க எட்டாம் நூற்றாண்டில் அராபியர்களால் விரட்டியடிக்கப்பட்ட பார்ஸீக்கள் குஜராத்தில அடைக்கலம் புகுந்தது தனி வரலாறு. அவர்களையும் ஹிந்து மதம் அரவணைத்து ஏற்று அவர்களின் தனித்தன்மையையும் வழிபாட்டையும் மதித்து அவர்களை அவர்கள் வாழ்க்கை முறைப்படி வாழ வழிவகை செய்து உதவியது.

ச்மீப காலத்திய சரித்திரத்தை எடுத்துப் பார்த்தோமானால் கபீர் ஒரு பெரிய யோகியாகத் திகழ்ந்தார். அவருக்கு ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் சீடர்களாக இருந்தனர்.

 

 

அடுத்து மிக சமீப காலத்தில் ஷீர்டி சாயிபாபா முஸ்லீம் மகானாக இருந்தாலும் கூட ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஏராளமான அளவில் அவருக்கு சீடர்களாக இருந்தனர்.

. இன்றும் கூட ஆயிரக்கணக்கில் ஷீர்டியில் உள்ள அவரது சமாதிக்குச் சென்று வழிபடுகின்றனர்.

 

 

கடைசி கடைசியாக மஹாத்மா காந்தி ஹிந்துக்களையும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க அரும்பாடு பட்டார்.

 

ரகுபதி ராகவ ராஜாராம் பதிதபாவன சீதாராம்

ஈஸ்வர் அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்

என்று ‘’அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்று; அனைவருக்கும் நல்ல புத்திமதியைத் தா’’ என்று மனமுருக வேண்டினார்.

அதையே நவீன பிரார்த்தனை மந்திரமாக ஆக்கி தன் மாலை நேர வழிபாட்டில் அனைவரையும் பாட வைத்தார்.

இப்படி ஒரு பிரம்மாண்டமான மத நல்லிணக்கத் தொடர் முயற்சியை இதர நாடுகளில் வேறு ஒரு நாட்டிலும் காண முடியாது.

 

விரலை மடக்கினால் ஒரே ஒரு தேசம் மட்டுமே நமக்குத் தெரிகிறது.

 

அது தெயவ தேசம். பாரதம் தான். பாரதம் மட்டுமே தான்.

ஹிந்துக்களுக்கு அனைத்து மதங்களும் சம்மதமே!

அதே மனப்பான்மை மற்ற மதத்தினருக்கும் வரும் போது நமது பூமி தெய்வ பூமியாக மாறும்!

 

அதற்கும் ஹிந்து மதம் ஒரு மந்திரத்தைத் தந்திருக்கிறது.

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து!

 

***

 

 

வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய பிராமணம் (Post No.4046)

Compiled by London Swaminathan
Date: 2 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4046

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்பன அவை. அதில் நேற்று சுவையான சில கதைகளைத்  தந்தேன். இன்று மேலும் சில தகவல்களைக் காண்போம்

 

தாண்ட்ய மஹா  பிராமணம் தரும் தகவல்:-

 

உயிரினங்களைப் படைத்த பிரஜாபதி, தேவர்களின் நன்மைக்காக  தன்னையே, யாகத்தில் ஆஹுதியாக அளித்தார். முன்னர் மரணம் அடைந்து கொண்டிருந்த தேவர்கள், இதன் காரணமாக இப்பொழுது தெய்வீக நிலையைப் பெற்றனர் (தேவர்களாயினர்)

 

இது பற்றி ஆபஸ்தம்பர் (2-7-16) தரும் வியக்கியானம் சுவையானது:-

முன் காலத்தில் இவ்வுலகத்தில் தேவர்களும் மனிதர்களும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். பின்னர் யாக யக்ஞங்கள் செய்தவர்கள், அதன் பலனாக, தேவ லோகம் சென்றனர். மனிதர்களோவெனில் உலகிலேயே தங்க நேரிட்டது தேவர்களைப் போல யாக யக்ஞங்களைச் செய்பவர்கள் மரணத்துக்குப் பின்னர், தேவ லோகத்தில் பிரம்மாவுடன் வசிப்பர்..

தேவ லோகவாசிகள் பற்றி இந்துமத புராணங்கள் தரும் தகவல் வேறு எங்கும் இல்லை. ஆக,  நாமே இத்துறையில் மிகவும் முன்னேறி உள்ளோம்; எதிர்காலத்தில் வெளி கிரஹ வாசிகளைக் கண்டுபிடிக்கையில் நாம் அன்றே சொன்னோம் என்று சொல்லலாம்:-

1.தேவலோக வாசிகள் கண் இமைக்காது

2.கால்கள் நிலத்தில் பதியாது

3.அவர்கள் போட்டிருக்கும் மாலைகள் வாடாது

4.அவர்கள் இன்பமாக இருப்பர்; ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது

5.அவர்கள் மானசீகமாக எங்கும் பயணம் செய்யலாம்.

6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே

 

ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான்  இங்கு வந்து, பூமியில் உயிரினங்களை உண்டாக்கினர் என்பர்

தசரதர் போன்றோர் இறந்த பின்னரும் பூமிக்கு வந்து காட்சி தந்தனர்.  அர்ஜுனன் போன்றோர் இந்திர லோகம் வரை சென்று வந்ததை மஹாபாரதம் கூறுகிறது.

 

ஐதரேய பிராமணக் கதை

 

வேதங்களுக்கு உரை எழுதிய சாயனர் சொல்லும் கதை இது. பழங்கால ரிஷிகளில் ஒருவருக்கு பல மனைவியர் உண்டு. ஒரு மனைவியின் பெயர் இதரா. அவருக்கு மஹிதாச ஐதரேய என்ற ஒரு மகன் இருந்தான். ஆனால் அவர் அந்த மகனைத் தவிர மற்ற மனைவியர் மூலம் பிறந்த எல்லோர் இடத்திலும் அன்பு காட்டினார். அவனைத் தவிர மற்ற எல்லோரையும் மடியில் உட்கார வைத்துக் கொஞ்சுவார். மஹிதாசனுடைய அம்மாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன்னுடைய குல தெய்வத்திடம் வேண்டினாள்.

மஹிதாசன் எல்லோரையும் விட அறிவில் சிறந்தவனாக இருந்ததால் எல்லோர் முன்னிலையிலும் தேவி தோன்றி அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். ஐதரேய பிராமணம் அவர் முன்னிலையில் தோன்றியது –ஆரண்யகமும் அவர் முன்னிலையில் தோன்றியது

 

பிராமண நூலும் ஆரண்யக நூலும் அவர் முன்னிலையில் “தோன்றியது” என்பதன் பொருள், அவர் அருள் பெற்றபோது பொங்கி எழுந்த விஷயங்களே இவ்விரு நூல்களும் என்பதாகும்.

 

–Subham–

More Stories from the Brahmana Literature (Post No.4045)

Compiled by London Swaminathan
Date: 2 July 2017
Time uploaded in London-15-05
Post No. 4045

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Extra Terrestrials in Tandya Maha Brahmana

The Lord of creatures offered himself a sacrifice for the benefit of the Devas. The Devas were mortals who thus became divine or glorified.

Apastamba (2-7-16) comments on this are interesting:

“Formerly men and gods lived together in this world. Then the gods in reward of their sacrifices went to heaven, but men were left behind. Those men who perform sacrifices in the same manner as the gods did, dwell (after death) with the gods and Brahma in heaven.

“Whatever sins we have committed by day or night, you are the annulment thereof. Whatever sins we have committed sleeping or awake you are the annulment thereof. Whatever sins we have committed knowing or unknown you are the annulment thereof. You are the annulment of sin.

xxxx

Why Asvamedha is performed?

Prajapati, having created all living beings, through affection entered within them. But afterwards he could not get out of them. He said, “whoever will extricate me from this confinement will become wealthy. The Devas performed an Asvamedha and thereby extricated him; thus they became wealthy. Whoever performs an Asvamedha attains profusion of wealth by extricating Prajapati—Taittiriya Brahmana

xxx

Why a cow immediately on calving should not be milked?

Certain descendants of Angiras, the expounder of the fourth Veda, had a lean white milch cow, which for want of grass lived on the pressed stalks of Soma vine. The sight of this grieved the owners much, and they performed a sacrifice which brought on plenteous rain, every drop of which grew up into nutritious vegetables. The Pitris (manes) besmeared them with poison when the cow was affected, and appeared before the sacrificers. They enquired who had caused the evil, whereupon the pitris (departed souls) said, we co -sharers of the ceremony, have caused this.

The sacrificers then gave a share of the sacrifice to the Pitris who benignantly removed the poison. When the cow was fattened by profusion of fodder, the calf was let loose  and requested by  the sacrificers  to drink a little milk and leave the rest for the sacrifice. The calf refused to do so unless they would engage to milk the cow for the first ten days after calving, and to allow the calf to suck for a period equal to one fifth of the day or night after morning and evening milking. The calf which drinks for a longer period is cursed by Rudra.

My comments:

Even a cursory reading will tell us that the story is symbolic.  Literally it may look like a meaningless story. Moreover, stories like this must be read in their contexts.

–subham–

 

 

செரிங்கட்டி விதிகள்! – 2 (Post No.4044)

 

Written by S NAGARAJAN

 

Date: 2 July 2017

 

Time uploaded in London:-  5-40 am

 

 

Post No.4044

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

16-6-2017 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

செரிங்கட்டி விதிகள்! – 2

ச.நாகராஜன்  

 

 

“நல்ல காடுகளே நமக்கு அறிவை வழங்கியுள்ளன. காடுகளே நம்மை மனிதர்களாக ஆக்கியுள்ளன. இங்கிருந்து தான் நாம் வந்திருக்கிறோம். ஒருவேளை, அதனால் தானோ என்னவோ நாம் செரிங்கட்டி என்னும் இந்த இடத்தின் மீது ஒரு அரிய பாசப்பிணைப்பைக் கொண்டுள்ளோம். இது நமது இளமையின் தேசம் – பாய்ட் நார்டன்

 

இரண்டாவது உலக் மகா யுத்தத்தில் ராணுவத்தில் பணியாற்றிய வால்டர் கனான் (Walter Cannon) என்ற விஞ்ஞானியே “எதிர்த்துப் போராடு அல்லது இடத்தை விட்டு ஓடு” என்ற பொருள் படும் “Fight or Flight” என்ற பொருள் பொதிந்த வாசகத்தை முதலில் உலகுக்கு அளித்தவர்.

 

போரில் காயம் பட்ட வீரர்கள் ஏன் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இறக்கின்றனர் என்பதை ஆராயப் புகுந்தார் அவர்.

காடுகளில் கொல்லப்படும் மிருகங்களில் காணப்படும் அதே விதமான அறிகுறிகளான அதி வேக நாடித்துடிப்பு, பிதுங்கிய விழிகள், உடல் முழுதும் வேர்வை வெள்ளம் ஆகியவற்றை இந்த ராணுவ வீரர்களிடம் அவர் கண்டார்.  நாடித்துடிப்பிற்குப் பதிலாக அவர்களின் இரத்த அழுத்தத்தை அவர் அளக்க ஆரம்பித்தார். அது மிக மிகக் குறைவாக இருந்தது. உடனே சோடியம் பைகார்பனேட்டை அவர்களுக்குத் தர, குறிப்பிடத் தகுந்த நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

 

இந்த ஆய்வுகளால் மனித உடலின் அங்கங்கள் இரட்டை விதமான நரம்பு மண்டலக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைக் கண்டார்.

 

ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் இப்படிப்பட்ட கட்டுப்பாடு இயற்கையின் அனைத்து இடங்களிலும் உள்ளது.

 

இயற்கையின் கட்டுப்பாடு என்பது சுற்றுப்புறச் சூழல் அமைப்பு, அதில் உயிர் வாழும் உயிரினங்கள் என்ற அனைத்து அம்சங்களிலும் எதிரொலிக்கிறது.

 

இந்த அடிப்படையை வைத்தே விஞ்ஞானிகள் செரிங்கட்டி காடுகளில் தங்கள் ஆய்வைச் செய்து ஆறு விதிகளைக் கண்டனர்.

முதல் மூன்று விதிகளைப் பார்த்தோம். இனி அடுத்த மூன்று விதிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

சிறிய மிருகங்களை பெரிய மிருகங்கள் அடித்துத் தின்பது என்பது அதன் பெரிய உடலாலும் சக்தியாலும் முடிகிறது. 1980லிருந்து 1987 முடிய சிங்கங்களும் நரி முதலிய மிருகங்களும் கொல்லப்பட்டதாலும் கடத்தப்பட்டதாலும் செரிங்கட்டியில் சிறிய மிருக வகைகள் எண்ணிக்கையில் உயர்ந்தன. இதை இடைவிடாது ஆராய்ந்த விஞ்ஞானிகள் சிங்க்ளேர் மற்றும் அவரது சகாக்கள் புதிய விதியைக் கண்டனர்.

 

செரிங்கட்டி விதி எண் 4

 

ஒரு மிருகத்தின் உடல் அளவு அந்த மிருக வகையின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அம்சம்.

ஒரு மிருக இனத்தின் எண்ணிக்கை குறையும் போது தானாகவே அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. மிக அதிகமாகும் போது அவற்றிற்கான உணவுக்கு வழி இல்லை என்பதால் தானாகவே எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.

 

 

சிங்க்ளேர் ஒவ்வொரு மிருக இனத்தின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதற்கு ஒப்பீட்டு வரைபடங்கள் தயாரித்து இதைக் கண்டு பிடித்தார். ஆக செரிங்கட்டியின் விதி எண் 5 உருவானது.

 

விதி எண் 5

மிருகங்களின் எண்ணிக்கையானது அதன் அடர்த்தியைப் பொறுத்து உள்ளது.

 

உணவுக்கு ஓரிடத்தில் வழி இல்லை என்னும் போது குறிப்பிட்ட மிருகங்களின் கூட்டம் இடம் விட்டு இடம் மாறுகிறது. விஞ்ஞானி சிங்க்ளேர் இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் நான்கு லட்சம் ‘தாம்ஸன் மான்’களும் இப்படி ‘மைக்ரேஷன்’ எனப்படும் இடம் விட்டு இடம் பெயர்தலைக் கண்டு வியந்தார்.

 

ஆக செரிங்கெட்டியின் ஆறாவது விதி உருவானது.

 

 

விதி எண் 6

 

இடம் விட்டு இடம் பெயர்தலானது ஒரு மிருக வகையின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது.

டாக்டர் ஆஸ்கார் பாமன் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1892இல் செரிங்கட்டி காடுகளை ஆராய அதனுள் புகுந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான சுவையான செய்திகளை செரிங்கட்டி காடுகள் மனித இனத்திற்கு தந்து வ்ருகின்றன.

அதில் இயற்கையின் இயல்பான கட்டுப்பாடு முக்கிய அம்சமாக இலங்குகிறது.

 

இந்த இயற்கை கட்டுப்பாட்டைப் பேணிக் காக்காமல் நமது செயற்கையான வழிமுறைகள் மூலம் இயற்கையைக் கெடுத்து விடக் கூடாது என்பது தான் விஞ்ஞானிகளின் ஒரே வேண்டுகொள்.

 

புவியை வெப்பமயமாக்கல், இயற்கை உயிரினங்களை பணத்திற்காக அழித்தல், கடத்துதல் போன்றவற்றை மனித இனம் விட்டு விட்டால் இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் இநதக் காடுகள் அழியாமல் வாழும்; மனித இனத்தையும் வாழ வைக்கும்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

கம்ப்யூட்டருக்கு முன்னோடியான  ‘மெகானிகல் எஞ்சினை’ உருவாக்கியவ்ர் சார்லஸ் பாபேஜ் (1792-1871) பாபேஜ் பெரிய மேதை என்பதால் லண்டனில் உள்ள இலக்கிய வட்டத்தில் பெரிதும் மதிக்கப்பட்டார். அங்கு உலகின் புகழ் பெற்ற கவிஞரான ஆல்ஃப்ரட் லார்ட் டெனிஸன் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.

தனது அருமையான கவிதையான ‘தி விஷன் ஆஃப் சின்’ (The Vision of Sin) என்ற கவிதையில்,  “ஒவ்வொரு கணமும் ஒரு மனிதன் இறக்கின்ற தருணத்தில், இன்னொரு மனிதன் பிறக்கிறான்” (Every moment dies a man, Every moment one is born) என்ற தனது கருத்தை அழகுற கவிதை நயத்துடன் உரிய சந்தத்தில் தெரிவித்திருந்தார்.

 

இதைப் படித்தார் கணித மேதையான சார்லஸ் பாபேஜ். கவிதையானாலும் கணிதத்தில் கோட்டை விடலாமா? நேரடியாக அவரிடம் வந்து அந்த வரியை மாற்றச் சொன்னார்.

 

“ஒவ்வொரு கணமும் ஒரு மனிதன் இறக்கின்ற தருணத்தில் ஒன்றும் ஒன்றின் கீழ் ஆறும் என்ற விகிதத்தில் மனிதன் தோன்றுகிறான்” (Every moment there dies a man, And one and a sixth is born) என்பதே சரியான உண்மை என்பது அவரது வாதம்.

 

 

ஆனால் இவ்வளவு துல்லியமாக மாற்றச் சொன்னாலும் தனது வரியிலும் கூட ஒரு கணிதப் பிழை இருப்பதையும் அவரே ஒப்புக் கொண்டார். அதாவது ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் 1.167 (என்ற விகிதத்தில் இன்னொரு) மனிதன் பிறக்கிறான் என்பதே துல்லியமான உணமையாகும்!

“ஆனால் கவிதையில் யாப்பிலக்கணம் சந்தத்திற்கான விதியைத் தந்திருக்கிறதே! அதையும் நாம் அனுசரிக்கத் தானே வேண்டும்” என்று ஒரே போடாகப் போட்டார்.

 

அனைவரும் டென்னிஸனுக்கும் சார்லஸ் பாபேஜுக்கும் நடந்த இந்தக்  கவிதை கருத்துப் போரை வெகுவாக ரசித்துப் பாராட்டினர்!

 

மேதைகள் மேதைகளே!

*****

 

 

 

 

பரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் திருத்துவது எப்படி? கதை (Post No.4043)

Compiled by London Swaminathan
Date: 1 July 2017
Time uploaded in London-20-44
Post No. 4043

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேதகால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு: 1.சம்ஹிதை/துதிகள் 2.பிராமணங்கள் 3.ஆரண்யகங்கள் 4.உபநிஷத்துகள்

 

இதில் பிராமணங்களில் நிறைய விநோதக் கதைகளும் விளக்கங்களும் இருக்கின்றன; பல விஷயங்கள் புரியவே புரியாது; ஏனெனில் அடையாளபூர்வ, சங்கேத மொழிகளில் விஷயத்தைச் சொல்லுவர். சில கதைகளை இங்கே காண்போம்.

தைத்ரீய பிராமணத்தில் உள்ள கதை

பரத்வாஜர் வேதம் கற்கும் பிரம்மசாரியாக மூன்று முறை

பிறவி எடுத்து பயின்றார். மிகவும் வயதாகி தளர்ந்துபோய் படுக்கையில் கிடந்தார். இந்திரன் அவர் முன்னே தோன்றினான்.

பரத்வாஜரே, உமக்கு நான்காவது முறை வாழ வரம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

நான் மீண்டும் பிரம்மசாரியாக குருகுலத்தில் சேருவேன் என்றார் பரத்வாஜர்.

உடனே இந்திரன் மூன்று மலைகளைக் காட்டினான். அவை ஒவ்வொன்றிலும் ஒரு கை மண் அளவு எடுத்தான்.

பரத்வாஜரே, இவைதான் (நீர் படித்த) வேதங்கள்; அவை அளவற்றவை. நீர் மூன்று ஜன்மங்களில் படித்தது மூன்று கை மண் அளவே. ஆகையால் நீர் படிக்காதவை இன்னும் இருக்கின்றன. வாருங்கள்; பயிலுங்கள் என்றான். இதுதான் பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கும் அறிவு. இதை அறிந்தவன் மூன்று வேதங்களையும் அறிந்தவன் வெல்லக்கூடிய அளவுள்ள பெரிய உலகை வெல்லுவான் என்றான்.

 

என் கருத்து

கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்று சரஸ்வதி தேவியே சொன்னதாக அவ்வையார் பாடி இருக்கிறார். அதுவும் கூட கௌஷிதகி பிராமணத்தில் இருந்து வந்திருக்கலாம்.

பிரதர்தன என்ற மன்னன் துருக்கி பகுதியை ஆண்டதை கிமு 1400 ஆண்டு துருக்கி நாட்டுக் கல்வெட்டுகளால் அறிகிறோம்; விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் பிரதர்தன என்ற பெயர் உள்ளது. ஆகவே ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தனர் என்ற கொள்கை எல்லாம் தவிடு பொடியாகின்றன. எகிப்திலுள்ள தசரத கடிதங்கள் முதலியனவும் கி.மு 1500 ஆண்டு வாக்கில் இந்துக்களின் பெயர்கள் இருந்ததைக் காட்டுகின்றன. ஈரானில் இந்துக்களின் பெயர்கள் இருப்பதை எல்லோரும் அறிவர். இந்த மறுக்க முடியாத தொல் பொருத் துறைச் சான்றுகளால் ஆரிய திராவிட வாதம் தவிடு பொடியகிறது. கௌஷிதகி பிராமணத்திலும் பிரதர்தன என்ற அரசன் பெயர் வருவதும், காசி போன்ற தேசங்களில் இந்த மன்னர் பெயர்கள் வழங்கியதும் கிமு 1500க்கு முன்னரே இந்தப் பெயர்கள் கங்கைச் சமவெளி முதல் துருக்கி-சிரியா எல்லை வரை பரவி இருந்ததை (மிடன்னி நாகரீகம்-Mitanni Civilization)  காட்டுகிறது

 

xxx

கௌசிதகி பிராமணத்தில் உள்ள ஒரு சுவையான கதை

 

நைமிசாரண்ய ரிஷிகள் முன்னால் பிரதர்தன ராஜன் அமர்ந்தான். ஒரு

வேத சதஸில் (சபை) ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அதனால் ஏற்படும் பாவத்திலிருந்து தப்பிப்பது எப்படி?என்று அரசன் பிரதர்தனன் கேட்டான். எல்லா புரோகிதர்களும் மௌனமாகிவிட்டனர். அவர்களுடைய தலைவர், நாம் நம்முடைய தந்தையர்க்கெல்லாம்  ஆசிரியரான ஜாதுகர்ன்யாவிடம் கேட்போம் என்றர்.

அரசனும் கேட்டான்:- ஒரு தவறு நடந்து விட்டது என்றால் அந்த வேதப் பகுதியைத் திருப்பிச் சொல்வதால் பரிகாரம் கிடைத்துவிடுமா? அல்லது ஏதேனும் யாகம் செய்ய வேண்டுமா?

 

ஜாதுகர்ன்யா சொன்னார்:- அந்தப் பகுதியைத் திருப்பிச் சொல்ல வேண்டும்

 

புரோகிதர் தலைவர் கேட்டார்:-ஆரம்பம் முதல் இறுதிவரை எதையும் சொல்ல வேண்டுமா?

 

ஜாதுகர்ன்யா சொன்னார்:- தவறு நடந்த பகுதி வரை திருப்பிச் சொல்ல வேண்டும் அது ஒரு முழு பாடலாக இருக்கலாம்; அரைப் பாடலாக இருக்கலாம்; ஒரு வரியோ, ஒரு சொல்லோ, ஒரு எழுத்தோ– பிழை நடந்த இடம் வரை சொல்ல வேண்டும்.

உடனே கௌஷிதகி சொன்னார்:

அந்தப் பகுதியைத் திருப்பிச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை; பரிகார யாக யக்ஞங்கள் செய்ய வேண்டியதும் இல்லை; யாகம் செய்பவர் ஒரு தவற்றைத் தெரியாமல் செய்தால் அது தவறே இல்லை. தெய்வீக புருஷனான அக்னிதேவன் அதைத் திருத்தி நிறைவு செய்துவிடுவான் இதை ரிக் வேத துதியும் உறுதி செய்கிறது

–கௌஷிதகி பிராமணம் 6-11

 

எனது கருத்து:

வேதத்தில் இலக்கணப் பிழைகள் இருந்தால் அதைத் திருத்த எவருக்கும் உரிமை இல்லை என்பது வேத அறிஞர்களின் கருத்து. அங்கு தவறே, “சரி” என்று ஆகிவிடும். இதே போலத்தான் பக்தன் தவறு செய்தாலும் கடவுள் அதைப் பொருட்படுத்தார். ஆனால் பக்தனுக்கு யாரேனும் தவறிழைத்தால் கடவுளாலும் ஒன்றும் செய்ய இயலாது. அவரே பக்தனிடம் போய் மன்னிப்பு கேள் என்று அனுப்பிவிடுவார். கடவுளே கூட கொடுத்த வரத்தையோ சாபத்தையோ மாற்ற முடியாது. அதற்கு பரிகாரம் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் சொன்ன சொல்லை மாற்ற யாராலும் முடியாது.

 

இந்து மதம் சத்தியத்தின் அடிப்படையில் அமைந்தது. வேதங்கள் ‘ருதம்’, ‘சத்யம்’ என்று இதைச் சொல்லும். இதூதான் இந்து தர்மத்தின் அடிப்படை; கடவுளும் அந்த சத்தியத்துக்கும் வேதம் சொல்லும் ‘ருத’த்துக்கும் கட்டுப்பட்டவர். இந்த சொற்களும் ஆங்கிலத்தில் Tறூத், ரிதம் (Truth and Rhythm) என்று இன்றும் வழங்குகின்றன.

 

–Subham–