Dravidian Magician in Kashmir: Kalhana’s Strange Story! (Post No.3869)

Written by London swaminathan

Date: 1 May 2017

Time uploaded in London: -12-21

Post No. 3869

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

Kalhana, the 12th century historian and author of Rajatarangni mentioned DRAVIDIAN in three places. There is a very interesting story about a Dravidian magician in his book Rajatarangini (River of Kings).

 

It is a true story according to Kalhana and it happened during the reign of Jayapida (751 CE).

 

From Fourth Taranga (Chapter) of Rajatarangini:

On one occasion, to the king who had acquired glory in all directions a certain person of divine figure spoke in a dream with folded hands:

“O King! in your realm I have been residing in comfort with my relatives; I am the Lord of the Nagas called Mahapadma, I come to you for asylum.

 

‘A certain Dravidian spell-monger is trying to draw me away from here in order to sell me for money in the Territory of Maru (desert) which yearns for water.

If you save me from him, I shall show in your country, a hill which produces god ore. The king having heard it in the dream, despatched spies in all directions the very next day. King’s spies found him and brought him before the king (Jayapida).

 

Ulur Lake Near Sri Nagar, Kashmir, India (also known as Wular)

When he confessed his intention, the king pardoned him. The king asked the Dravidian spell-monger (magician):

“How is it possible for you to draw out this Naga, who excels in spiritual power,  from the interior of the lake which extends for several Yojanas?”

Dravidian magician said to the king, “O, King! Inconceivable are the powers of the spell (mantra). If you desire to see it, come and see the marvel.

 

 

The king followed the magician to the lake. The Dravidian muttered incantations and then shot some arrows. The lake became dry. Then the king could see a snake (Naga) about a span in size with a human face, which was wriggling in the mud surrounded by several small snakes.

 

O King! I am going to catch him now. But the king ordered him not to catch the snake. At once the Dravidian spell monger (magician) withdrew the power of his spell and the lake became full. (The Vulur/Wular lake was called the Mahapadma lake after this naga who was supposed to live in it).

 

King disposed the magician by paying him some money.

 

The king was expecting the Naga to show him the Hill of Gold ore. But it did not happen. When the king asked him about it Mahapadma Naga said, “I asked for asylum; you did not give me asylum; but you drove away the spell-monger. So I will show you the hill of copper. When the king got the directions to it, he excavated copper from Kramarajya Hill and struck a hundred crores of Dinnaras (coins)”.

 

Dravidian Brahmins

In another chapter Kalhana referred to Dravids (Dravidian Brahmins in Kashmir). Until Max Muller and Caldwell gave the wrong connotations for the words Dravidian and Aryan, the words meant only A South Indian (Dravida) , A cultured person or ascetics of Himalayas ( aryan) in Indian literature.

Following is the reference found in Eighth Taranga (chapter)

“The daughter’s son of the chief of Karapatha settled in this place (Simhapura). Brahmans born in Indus region as well as Dravid Brahmans who formerly lived in the centre of siddhacchatra.”

 

Translator R S Pandit adds a footnote: As late as the 12th century Dravid Brahmans are mentioned as students in Kashmir.

 

My old articles on Kalhana’s Rajatarangini and Kashmir

 

1.Who are Dravidians? | Tamil and Vedas

Who are Dravidians?

17 Jul 2013 – He says ‘Pancha Dravida‘ means the Brahmins of Gujarat, Maharashtra, Karnataka, Andhra Pradesh and Tamil Nadu. Here again the word …

 

 

2.Ramayana cures Curses! Rajatarangini Episode! (Post No.3754); Date: 24 March 2017

 

3.Kaliyuga Calculation: Kalhana’s Blunder!

Post No: 1574: Dated 14th January 2015

 

4.Nehru on Rajatarangini; Article No.1465; Dated 7th December 2014.

 

5.Kashmiri King who attacked Tamil Nadu and Sri Lanka; Article No.1468; Dated 8th December 2014.

 

(6). 106 Kings of Hindu Kashmir!; Post No: 1577: Dated 15th January 2015

 

7.Beautiful Names of Ancient Kashmiri Women!; Article No 1583; Dated 17th January 2015.

 

8.Sanskrit in Mahmud of Ghazni Coins!; Article No 1579; Dated 16th January 2015

 

–SUBHAM–

 

வள்ளுவனுக்கு சங்கீதம் தெரியுமா?(Post No.3868)

Written by London swaminathan

Date: 1 May 2017

Time uploaded in London: -7-00  am

Post No. 3868

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

வள்ளுவன் தொடாத, பாடாத விஷயமே இல்லை. அவன் பாடிய குறள்களுக்கு பழங்காலத்தில் அறிஞர்கள் எழுதிய உரைகளைப் படித்தால்தான் நமக்கே அதன் ஆழமும் அகலமும் தெரியும்.

 

வள்ளுவன் குறளுக்கு பத்துப் பேர் உரை எழுதினாலும் அத்தனையும் நமக்குக் கிடைக்கவில்லை;

 

வள்ளுவன் தரும் சங்கீதச் செய்திகள்:–

1.ராகமும் பாடலும் ஒன்றோடொன்று பொருந்த வேண்டும் (குறள் 573)

 

2.குழலும் யாழும் இனிமையான கருவிகள் (குறள் 66)

 

இதில் ஏன் புல்லாங்குழலை முதலில் சொன்னார் என்றால் முதலில் குழல் வாசித்தபின்னர், அதை யாழிலே வாசிப்பது மரபு.

எடுத்துக்காட்டு:–

குழல்வழி நின்றது யாழே (சிலப்பதிகாரம்)

 

3.ஒரு குறளில் தோல் வாத்தியங்கள் பற்றிச் சொல்கிறார்:

அறைபறை அன்னர் கயவர் (குறள் 1076)

அறைபறை கண்ணார் (குறள் 1180)

ஏதேனும் செய்தியை அறிவிக்க இப்படி பறையைக் கொட்டி அறிவிப்பர். இவ்வாறு அறைந்து வெளியிடுவதால் அதை அறைபறை என்பர்.

 

இறந்தபோது கொட்டும் சாப் பறையையும் ஒரு குறளில் குறிப்பிடுவார் (1115)

 

இவ்வளவு இடங்களில், அவர் குழல், யாழ், பறை (புல்லாங்குழல், வீணை, மிருதங்கம்) பற்றிச் சொல்லுவதால் அவருக்கு ராகம் தாளம் எல்லாம் அத்துபடி என்பது விளங்கும்.

 

 

ராகமும் கீர்த்தனையும்

பண் என்னாம் பாடற் கியைபின்றேல் கண் என்னாம்ப்

 

கண்னோட்டம் இல்லாத கண்– (குறள் 573)

 

பொருள்:-

 

பாட்டுக்குப்   பொருத்தமான ராகம் இல்லாவிடில் பயன் உண்டோ?

 

அருட் பார்வை இல்லாத கண் இருந்து என்ன பயன்?

 

இதில் பண் என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்திய காலத்தில் இதன் பொருள் என்ன என்று பரிமேல் அழகர் உரை செப்பும்:

பண்களாவன- பாலை யாழ் முதலிய 103.

பாடல் தொழில்களாவன — யாழின் கண் வார்தல் முதலிய எட்டும்,

(வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், எள்ளல், பட்டடை. இவற்றை இசைக் கரணம் என்பர்

“எட்டு வகையின் இசைக்கரணத்து சில- 7-15

xxxx

பண்ணல் முதலிய எட்டும்,

பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்பன; இவற்றைக் குறிக்கோள் என்பர் (சிலப்.7-5/7)

 

xxx

மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்துமிவை கிரியைகள் எனப்படும்.

எட்டில் முதலில் உள்ள ஐந்தாகக் காணப்படுகின்றன (சிலப் 3-26 உரை)

xxxx

 

பெரு வண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய  வண்ணங்கள் எழுபத் தாறுமாம்.

அதாவது பெரு வண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் என்ற மூன்றும் முறையே 6, 21, 49-ஆய் வரும் என்று சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை கூறும்.

 

இவை எல்லாம் இன்றுள்ள சங்கீத மேதைகளுக்குக் கூட புரியுமா என்பது சந்தேகமே. ஆயினும் இசைத் தமி ழில் இவ்வளவு நுட்பமான சொற்கள் இருப்பதே அக்காலத்தில் சங்கீதத்துறை எந்த அளவுக்கு விரிந்து கிடந்தது — கடல் போலப் பரந்து கிடந்தது– என்பதை நமக்குப் புரியவைக்கும்.

உதவிய நூல்:-

திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பு (பதிப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன்)

 

வாழ்க வள்ளுவன்; வளர்க தமிழ் இசை!!

 

நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? (Post No.3867)

Written by S NAGARAJAN

 

Date: 1 May 2017

 

Time uploaded in London:-  6-20 am

 

 

Post No.3867

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

 

விதி விளக்கம் என்னும் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவியவ்ர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்கள். ஏராளமான அருமையான பழைய நூல்களை அவ்வப்பொழுது எனக்கு அவர் அனுப்புவது வழக்கம். அவருக்கு எனது நன்றி.

 

 

நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? : விதி விளக்கம் – 2

ச.நாகராஜன்

 

  1. நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை?

நூலாசிரியர் மிட்டா முனுசாமி நாடி கிர்ந்தங்களைப் பற்றிய தனது ஆராய்ச்சியை முதல் அத்தியாயத்திலேயே தெரிவிக்கிறார். அதன் சாரத்தைக் கீழே பார்ப்போம்.

நவகிரகங்கள் ஓயாது சுற்றிக் கொண்டே இருக்கின்றன. அவைகளின் ஓயாத இந்த சர கதியினால் பன்னிரெண்டு ராசிகளிலும் ஒரு காலத்தில் ஒரு ஜாதகத்தில் அவை ஒருவாறு அமைந்துள்ளதாகக் கொள்வோமாகில், அதே நிலையில் “ராசியில்” பின் ஒரு காலத்தில் சர கதியினால் அவை அமையக் கூடும். ஆனால் இந்த நவக்கிரகங்கள் நட்சத்திர நிலையிலாவது  அல்லது அம்ச நிலையிலாவது வருவது அசாத்தியம். இதுவே சிருஷ்டியின் மஹிமை.

இப்படி ஒருவேளை அமையக்கூடும் பட்சத்தில் முன்னொரு காலத்தில் ஜனித்த ஒருவர் மற்றொரு காலத்திலும் தோன்றியதாக ஆகக் கூடும். ஆனால் ஒவ்வொருவருடைய அனுபவத்தின் அடிப்படையிலும் சுருதி, ஸ்மிருதி ஆகியவற்றின் சாட்சியங்களின் அடிப்படையிலும் இவ்வாறு நேரிட்டதாகக் காண முடியவில்லை.

ஆகவே நாடிக் கிரந்தங்கள் ஸ்தூல பலனில் மட்டுமே நமக்குப் பயனளிக்குமே தவிர நித்திய அல்லது மாத ரீதியாக அல்லது வருஷ பலனை அறிய்  இடம் கொடுக்க மாட்டா.

அல்லாமலும் ஒரு மனிதரைப் போல இன்னொரு மனிதர் சகல விதத்திலும் ஒத்தவ்ராகப் பிறத்தல் அரிது.

.    நவக்கிரகங்களும் வேறு வேறு நிலைமையுள்ளனவாகச் சஞ்சரிக்கும் அற்புதம் சிருஷ்டி  மஹிமை. பன்னிரண்டு ராசிகளில் ஒரு வகையில் நவக்கிரகங்கள் ஒரு காலத்தில் அமைந்து அதே நிலையில் மற்றொரு காலத்தில் ராசியிலும் நட்சத்திர நிலையிலும் அமைவதில்லை. அதே நிலையில் பத்தாயிரம் வருடங்கள் சென்றாலும் அமைவது அசாத்தியம்.

இப்படிப்பட்ட சிருஷ்டி அமைப்பு இருப்பதினால், அவரவர்க்கு நித்திய அல்லது மாதத்திய அல்லது வ்ருஷத்திய பலனைத் தெரிந்து கொள்வதற்கு ஜோதிடர் அவசியம். நாடிக் கிரந்தங்கள் முழுமையாகப் பயன்பட மாட்டா. இது திண்ணம்.

அது மட்டுமன்றி அப்போதைக்கப்போது நாளுக்கு நாள் அமையும் நிலைமைக்கும், ஒரு வித சமப்ந்தத்தினால் வேறு வேறு பலன்கள் நடந்து  கொண்டு வருவதை நாம் கண்ணாரக் காண்கிறோம்.

ஆனால் ஜனன கால நிலைக்கும் தற்கால நிலைக்கும் இருக்கும் நிலையை யூகித்துப் பலாபலனைக் கண்ட்றிவதே ஜோதிடர் பணி. ஆகவே ஜோதிடர் அவசியம்.

இன்றைய ஜோதிடர்கள் ஒருவருடைய பலனைத் தீர்க்கமாகக் கண்டறிய முடியாதபடி இருக்கும் காரணம் திதியினால் ஏற்படும் ஜாதக பலாப்லன்கள் இன்னதென்று அவர்களுக்குத் தெரியாததால் தான்.

நம் முன்னோர்கள்  1) ஒரு மனிதர் இறந்தால் திதியையே அனுஷ்டிக்க வேண்டும் 2) விரதாதிகள் அனைத்தும் அநேகமாய் திதியை அனுஷ்டித்தே செய்யப்பட வேண்டும் 3) திதிக்கும் நட்சத்திரத்திற்கும் இருக்கும் பேதத்தில் திதியே முக்கியம் என்று இப்ப்டி திதியின் முக்கியத்துவத்தை அனுஷ்டானத்தில் காட்டியுள்ளனர்.

“ஜனன காலம் முதல் ஆயுளுடன் ஜீவிக்கும் வரையில் நட்சத்திரம் முக்கியம். பெயரிடுவதும் விசேஷ காலங்களும் நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.” என நம் முன்னோர்கள் நட்சத்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டி விட்டு, இறந்தது  முதல் திதியே பிரதானம் என்று அனுஷ்டான வகையில் காட்டியுள்ளனர்.

ஆனால் திதியினால் ஏற்படும் பலாபலத்தின் விசேஷம் ஜாதகத்தில் அனுஷ்டிப்பதில்லை. திதியைப் பார்த்துப் ப்லன் சொல்ல வேண்டுமென்று சொல்லும் ஜோதிட நூல்களும் இல்லை.

இந்த நிலையைச் சுட்டிக் காட்டி விட்டு திதியே மிக முக்கியமானது என்று மிட்டா முனுசாமி தன் ஆராய்ச்சிகளின் மூலமாகக் கண்டறிந்துள்ளதாக விதி விளக்கம் நூலில் கூறுகிறார்.

இனி பஞ்சாங்கத்தில் வரும் பஞ்ச அம்சங்க்ளான வாரம், திதி,நட்சத்திரம்,யோகம், கரணம் ஆகியவை பற்றி நூலாசிரியர் விவரிப்பதை அடுத்துப் பார்ப்போம்.

– தொடரும்

 

Shakespeare and Kalidasa-Hindu Thoughts in Shakespearean Plays (Post No.3866)

Compiled by London swaminathan

Date: 30 APRIL 2017

Time uploaded in London:-11-29  am

Post No. 3866

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

We know that great men think alike; but some similarities in the plays of Kalidasa and Shakespeare make us believe that Shakespeare has read Kalidasa or heard about his plays. Innocent forest girl Shakuntala is incarnated as Miranda in The Tempest. Kalidasa’s Vidusakas (Jesters/comedians) are seen in several of Shakespeare’s plays. There are similarities in Othello, Hamlet and The Winter’s Tale as well.

 

Plays of Shakespeare were largely founded on Hellenic, Roman and and other foreign models, where as Kalidasa’s plays were based on Ramayana and Mahabharata.

 

Shakespeare puts in the mouth of one of his characters: –

“The self-same sun that shines upon his court

Hides not his visage from our cottage, but

Looks on’s alike”.

 

In describing the moral greatness of the Himalaya, Kalidasa gives expression to the idea as follows:

 

“He protects from the sun in his caves the darkness which through fear of light adheres to them for shelter; the care of the great is impartially bestowed on inferior and important personages alike”.

“Divaakaraad rakshati yo guhaasu

Leenam divaabheetam vaandhakaaram;

Kshudrepi noonam saranam prapanne

Mamatvam uchchais sirasaam sateeva”

Polonius Advice

Shakespeare students are familiar with the advice of Polonius to his son Laertes.

 

“Give thy thoughts no tongue, Nor any unproportion’d thought his act. Be thou familiar, but by no means vulgar. Those friends thou hast, and their adoption tried,Grapple them to thy soul with hoops of steel; But do not dull thy palm with entertainment Of each new-hatch’s, unfledged comrade. Beware…: (Hamlet Act I)

 

According to Kalidasa, the following is the advice that Shakuntala received from her foster father Kanva when she was leaving him to go to her royal husband’s home:

“Show due reverence to him and to your superiors; should others share your husband’s love, be an affectionate handmaid to them; should your husband displease you, let not your resentment lead you to disobedience. Be just and impartial to domestics, and seek not your own gratifications. By such behaviours young women become exemplary mistresses, but perverse wives are the bane of a family.”

There may be a difference of opinion, according to present ideas, as to this description of the duty of a wife; but there can scarcely be any difference of opinion as to the sentiments expressed by Kalidasa in the following verses:-

 

“The wicked are controlled, not by favour, but by punishment”.

 

“Of righteous acts good wives are certainly the fundamental cause”.

“Devoted wives never oppose the wishes of their husbands”.

“When there is seniority in virtue, youth is not taken into account”.

Hamlet and Manu Smrti

The king in Hamlet speaks of his inviolability thus:-

“There is such divinity doth hedge a king

That treason can but peep to what it would”

 

Manu explains royal divinity thus

“With eight elements of the gods is a king made; hence, by his lustre he subdues all creatures.”

Kalidasa describes a king of the Raghuvamsa, who went about without attendants thus:

“The race of Manu needed no bodyguard, but relied for safety on its own prestige and prowess.”

 

On Royal attributes, such as King Henry V defined and Cranmer prophesied of the infant Elizabeth, Kalidasa speaks in referring to a king of the Solar Race thus:

 

“Broad-chested, strong shouldered like a bull, long armed like a pine-tree, his physical frae was suited to the task of his royal birth; he was the embodiment of the virtues of the warrior caste”.

All the world is a stage

“I hold the world but as the world, Horatio

A stage where everyman must play a part”.

 

and again in As You like It

“All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages. At first, the infant,”

–As You Like It

I have given similar thoughts found in Tamil and Sanskrit in my post:–

Drama, Puppet Show, Folk Theatre in Tamil and Sanskrit Literature (Post No.3608); Date: 5 FEBRUARY 2017

 

The Winter’s Tale

The scene where the king (Shakuntalam), after dismounting from the is about to enter the grove of Marica’s hermitage and has his first glimpse of his son is a replica of the scene in Act One, where also the king after dismounting from the chariot at the fringes of the grove of Kanva’s hermitage, enters and see the boy’s mother for the first time. The finding of the lost son and heir precedes and leads to the recognition of the mother. An interesting parallel is provided in the last scene of Shakespeare’s ‘The Winter’s Tale’.

 

Othello and Sakuntalam

There is an interesting parallel in Othello. In the drama, proof of heroine’s chastity and love is demanded. Desdemona’s chastity hangs on a handkerchief; Sakuntala’s on a ring. Both heroines are blissfully unaware of the importance of the token. To them love is its own proof and a witness to their chastity.

 

In Ramayana, Sita was asked to prove her chastity by undergoing the ordeal of fire to allay the suspicions of the public: In Shakespeare’s Othello and King Lear where proof of fidelity and of filial love is demanded, we have a parallel.

 

A lot of Shakespeare’s quotable quotes have parallel in Sanskrit verses (I will give them separately).

 

Source Books:

Orient and Occident, Manmath C Mallick,1913

Kalidasa, The Loom of Time, Chandra Rajan, 1989

 

–Subham–

 

‘பாரதிதாசன் பாடலுக்கு இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு!’ (Post No.3865)

Written by London swaminathan

Date: 30 APRIL 2017

Time uploaded in London:-6-51  am

Post No. 3865

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று “துன்பம் நேர்கையில்…………..” என்ற பாடல். இது திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு இசை அமைத்தவர் திக்கெட்டும் தமிழ் இசை மணம் கமழ வைத்த M M தண்டபாணி தேசிகர் ஆவார். இதற்கு இசை அமைக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிற்றாம். இது அவரே சொன்ன செய்தி. இதற்கு மிகவும் பொருத்தமான ராகம் ‘தேஷ்’ என்னும் ராகம்தான் என்கிறார் தேசிகர்.

 

ஒரு பாட்டின் பொருளுக்கேற்ற ராகத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்கிறார். யார் ஒருவர் பாட்டு எழுதினாரோ, அவருக்கு சங்கீத ஞானம் இருந்தால் அவரே அந்த பாட்டுக்கு ராகமும் போட்டுவிடுவார். பாரதி பாடல்களுக்கு அவரே அமைத்த ராகங்களை பழைய பதிப்புகளில் காணலாம்.

தண்டபாணி தேசிகர் சொல்கிறார்:

“இந்த பாட்டுக்கு சரியான ராகத்தைக் கண்டுபிடித்து இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு. இதற்கு தேஷ் ராகம்தான் பொருத்தம். பாருங்கள்! நான் இதையே அடானா ராகத்தில் பாடுகிறேன் (தேசிகர் பாடியும் காட்டுகிறார்). இப்படி அடானா ராகத்தில் பாடினால், வருத்தமுற்ற பெண் ‘அம்மா, அப்பா’ என்று அழுதுகொண்டு ஓடிப் போய்விடும். பொருளுக்கேற்ற ராகம் இருக்க வேண்டும். இதை வள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்தார்:-

 

பண் என்னாம் பாடற்கு

பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண் — குறள் 573

 

பொருள்:-

பாடலின் பொருளோடு இயைந்து வராத பண்ணால் (ராகத்தால்) என்ன பயன்?  அதைப்போல கண்ணோட்டத்துடன் (இரக்கம், அருள்) பொருந்தாத கண்ணால் என்ன பயனுண்டாகும் ?”

 

இதிலிருந்து வள்ளுவனுக்குள்ள சங்கீத ஞானமும் புலப்படும்

 

இதோ பாரதிதாசனின் முழுப்பாடல்:–

 

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல்
லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா?     …… துன்பம்…

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க — எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க — நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? — கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா?   — துன்பம்…

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது — யாம்
அறிகி லாத போது — தமிழ்
இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? — நீ
இயம்பிக் காட்டமாட் டாயா?       —துன்பம்…

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் — தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் — நல்
திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? — தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா?   துன்பம்…

——-பாவேந்தர் பாரதிதாசன் (Poem is taken from Project Madurai website)

xxx

 

 

திரு எம் எம் தண்டபாணி தேசிகரின் வெண்கல குரலில் அவர் இயற்றிய பிரபல பாடலை தேஷ் ராகத்தில் கேளுங்கள் இங்கே

https://www.4shared.com/…/o…/Thunbam_nergaiyil_Desh_MMD.html

 

–Subahm–

இறைவா எனக்கொரு வரம் அருள்வாய்! (Post No.3864)

Written by S NAGARAJAN

 

Date:30 April 2017

 

Time uploaded in London:-  6-25 am

 

 

Post No.3864

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இறைவா எனக்கொரு வரம் அருள்வாய்!

 

by ச.நாகராஜன்

 

இறைவா, எனக்கொரு வரம் அருள்வாய்.

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்றந்தப் பேதை சொன்னான்

இந்த வசை எனக்கு எய்திடலாமோ என்று

பாரதி பாடிய நிலை இன்று இன்னும் மோசமாயிற்றே

இதை மாற்றிட ஒரு வரம் அருள்வாய்

திராவிடப் பிசாசுகள் கூத்தும் கும்மாளமும் போட்டுத்

தமிழின் பெயரால் தம் பெயர்களை

சந்து முனை தொட்டு நகர்,கிராமம் என

எங்கும் தங்க வைக்கும் தாங்கா நிலையை அழித்திடு

தமிழின் பெயரால் பேராசான் பதவி முதல் அனைத்தையும்

விலை கொடுத்து வாங்கும் வீணர்களை ஒழித்திடு

 

கல்வி நிலையத் துணைவேந்தர் முதல் கடை நிலை பியூன்

வரை லஞ்சம் வாங்கும் லஞ்ச நிலையங்களை அழி;    அவர்களை ஒழி!

 

 

திராவிட மாயைகள் எழுதிய பொய் பித்தலாட்ட புத்தகங்களை

நூலகத்திலிருந்து எடுத்து எரி; நல்ல புத்தகங்களை லஞ்சமின்றி

வாங்கி அடுக்கவும் படிக்கவும் வழி வகை செய்

மருத்துவ நிலையங்கள் மாய நிலையங்களாக்கிக் கொள்ளையடிக்கும் கொள்ளையரைக்

கொள்ளை நோயில் போக்கி  நல் நிலையை உருவாக்கு

லாயர் என்ற பெயரில் ரவுடிகளாக உலா வரும்

அவல நிக்குலையை நீக்கு

நீதி நிலையங்களை அறம் வளர்க்கும் ஆலயமாக்கு

 

கோவில் உண்டியல்களை உடைக்கும் வீணர்களை உடை

கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் அநியாயக்காரர்களை அழி

நற்பணி என்ற பெய்ரில் துர்ப் பிணி பரப்பும் தோழர்களை தூர்த்திடு

 

நாத்திகம் பேசி நர்த்தனம் ஆடிடும் நயவஞ்சகர்களை நாசமாக்கு

கன்னியரைத் தாய்க்குலத்தை ஏமாற்றும் எத்தரை அழி

பொய்யாக் காவிரியைப் பொய்த்துப் போகச் செய்த

மெய் காக்கும் வையையை வறளச் செய்த

தங்கம் நிகர் தாமிரபரணியைத் தரைக்கும் கீழே தாழ்த்திய

மணல் கொள்ளை மாபியாக்களை மண்ணாக்கு

 

தமிழ் இலக்கியம் என்ற பெயரில் தம் இலக்கியத்தைச்

செய்யும் தறுதலைகளை மூளை செயலிழக்கச் செய்

தேசீய நீரோட்டத்தில் தமிழகத்தை இணையச் செய்

தம் வீடகத்தை வளர்க்கும் பொய் ஊடகத்தை ஒழி

நாளிதழ் என்ற பெயரில் நாச இதழ் நடத்துவதை ஒடி

அனைத்து அக்கிரமங்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கும்

அக்கிரம அரசியல்வாதிகளை அழி; ஒழி!

 

 

பூமித் தாய் பிளந்து அவர்களை உள் வாங்க வேண்டாம்;

ஏனெனில் பூமித் தாய் தீட்டுப்பட்டு மாசு படுவாள்

வானில் வாயுவால் பறக்க வைத்து எங்கோ போக விடு

எங்களை ஒழுக்கத்தின் உயரத்தில் ஏற்றி விடு

 

 

நல்ல தமிழர்களை வளமுறச் செய்; நலம் பெறச் செய்!

வள்ளலார், பாரதியார் உள்ளிட்ட தமிழினக் காவலர் தமை

எள்ளளவுப் பொழுதும் மறக்காத நிலை தனை உருவாக்கு

அறிவியலில் சிறக்க அழியா நிலை அடைய ஆதரவளி

எனக்கு ஒரே ஒரு வரம் அருள்வாய் இறைவா!

இங்கு சொன்னதெலாம் இமைப்பொழுதில் நடக்கவொரு

அற்புதத் தமிழ்த் தலைவனை அருள்; உன்

பொற்பதம் போற்றுவேன்

 

 

தீய பந்தம் போக்க வந்த சம்பந்தன் போல

என்னப்பன் என்று மேலோர் சொல்லும் அப்பர் போல

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற

மந்திரச் சொற்களைச் சொன்ன மறத்தமிழன் போல

உத்வேகமூட்டும் ஒருஎழுச்சி மிக்க

தலைவனைத் தமிழைக் காப்பாற்றத் தா

இந்த நல் வரம் – ஒரு வரம் மட்டும் ஈந்திடு

என் இறைவா; தங்கத் தமிழ் நாட்டைக் காத்தருள்வாய்!

இனிய இந்த ஒரு வரம் மட்டும் போதும்

இனி எனக்கு வேறு எது வேணும்?

***

Courage and Cowardice Anecdotes (Post No.3863)

Compiled by London swaminathan

Date: 29 APRIL 2017

Time uploaded in London:- 10-24 am

Post No. 3863

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

I don’t want to Run

An Athenian , who was lame in one foot , was laughed at by the soldiers on account of his lameness.

“I am here to fight, said he, not to run”, said the Athenian.

 

Xxx

Fighters deserve Liberty!

Brasidass, the famous Lacedemonian general caught a mouse. It bit him, and by that means made its escape.

“Oh!” Said he,

“What creature so contemptible but may have its liberty if it will fight for it.”

 

Xxx

 

As Hugh Latimer and Nicholas Ridley, the English reformers were led to the stake, Latimer said to Ridley

“We shall this day light such a candle, by god’s grace , in England as I trust shall never be put out.”

 

Xxxx

Cowardice Anecdotes

 

A French colonel had one day punished a young officer, just arrived from Saint Cyr, for showing fear during his first battle. Marshal Foch to whose notice it came severely reprimanded the disciplinarian.

“Colonel”, said he, “none but a coward dares to boast that he has never known fear”.

 

Xxx

I will Die but Once!

When Caeser was advised by his friends to be more cautious as to the security of his person , and not to walk among the people without arms or anyone to protect him, he replied,

“He who lives in the fear of death, every moment feels its tortures ; I will die but once”.

Xxx

Assassinating! Not that bold!

When a certain politician was spoken of as capable of assassinating anyone, Talleyrand remarked,

“Assassinating, no! Poisoning, yes.”

 

Xxx

Lame Excuse!

The evening before a battle an officer came to ask Marshal Toiras for permission to go and see his father who was at the point of death.

“Go”, said the general who saw through his pretext ,

“Honour thy father and thy mother, and thy days may be long on earth”.

 

Xxx

Cowards Run!

 

Lincoln was often the despair of his generals because of his lenient treatment of cases where soldiers were absent without leave.

“If the good Lord has given a man a cowardly pair of legs”,

Lincoln reasoned, “it is hard to keep them from running away with him”.

 

Xxxx SUBHAM xxx

பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள் (Post No.3862)

மே மாத 2017 காலண்டர்

ஹேவிளம்பி சித்திரை- வைகாசி 2017

 

Written by London swaminathan

Date: 29 APRIL 2017

Time uploaded in London:- 8-12 am

Post No. 3862

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

Festival/ Holidays: மே 1- மே தினம், மே 10- சித்திரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா

 

ஏகாதசி— 6, 21

பௌர்ணமி- 10

அமாவாசை-  25

சுபமுகூர்த்த தினங்கள்-  7, 12, 17, 18, 29

 

மே 1 திங்கட் கிழமை

பணம் பத்தும் செய்யும்

 

மே 2 செவ்வாய்க்கிழமை

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247

 

மே 3 புதன்கிழமை

பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்

 

மே 4 வியாழக்கிழமை

பணமும் பத்தாயிருக்க வேணும், பெண்ணும் முத்தாயிருக்க வேணும் ,முறையிலேயும் அத்தை மகளாய் இருக்கவேணும்

 

மே 5 வெள்ளிக்கிழமை

பணத்தைப் பார்க்கிறதா, பழமையைப் பார்க்கிறதா?

 

 

மே 6 சனிக்கிழமை

துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி, சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும், வட்டிக்கு ஈடல்ல

 

மே 7 ஞாயிற்றுக்கிழமை

பணமிருக்க வேணும், இல்லாவிட்டால் பத்து சனமிருக்கவேணும்

 

மே 8 திங்கட் கிழமை

முதலிலார்க்கு ஊதியம் இல்லை  – குறள் 449

 

மே 9 செவ்வாய்க்கிழமை

பணம் பார்த்துப் பண்டங் கொள், குணம் பார்த்துப் பெண் கொள்

 

மே 10 புதன்கிழமை

பணம் இருந்தால் பாட்சா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி

 

 

மே 11 வியாழக்கிழமை

காசேதான் கடவுளடா; பணம் இல்லாதவன் பிணம்

 

மே 12 வெள்ளிக்கிழமை

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்

 

மே 13 சனிக்கிழமை

பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறது

 

மே 14 ஞாயிற்றுக்கிழமை

பணம் என்ன பாடாணம் சுகுணம் ஒன்றே போதும்

 

மே 15 திங்கட் கிழமை

காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன ?

 

மே 16 செவ்வாய்க்கிழமை

காசு இல்லாதவனை வேசியும் துப்பமாட்டார்கள்

 

மே 17 புதன்கிழமை

காசுக்கு ஒரு புடவை விற்றாலும், நாயின் சூத்து அம்மணம்

 

மே 18 வியாழக்கிழமை

காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கன் (கம்மாளன்)குஞ்சு ஆகாது

 

மே 19 வெள்ளிக்கிழமை

துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும், துலுக்கக்குட்டி மட்டும் ஆகாது

 

மே 20 சனிக்கிழமை

காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்களும் ஆத்தாளும் கூட வருவார்கள்

 

 

மே 21 ஞாயிற்றுக்கிழமை

கால் காசுக்கு குதிரையும் வேணும் கொள்ளும் தின்னக் கூடாது, சிட்டாவும் பறக்கனும்

 

மே 22 திங்கட் கிழமை

காசுக்கு இரண்டும் பிசுக்குக்கு (பீசுக்கு) ஒன்றும்

 

மே 23 செவ்வாய்க்கிழமை

துட்டுக்கு இரண்டு, துக்காணிக்கு மூன்று

 

மே 24 புதன்கிழமை

சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்

 

மே 25 வியாழக்கிழமை

செட்டி போன இடமெல்லாம் வட்டம் காற்பணம்

 

 

மே 26 வெள்ளிக்கிழமை

துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ , திட்டு வந்து விழுந்ததோ?

 

மே 27 சனிக்கிழமை

காசுக்கு லோபி கழுதையினிடத்திற் போனால் போல

 

மே 28 ஞாயிற்றுக்கிழமை

பணக்கார அவிசாரி பந்தியிலே, அதில்லாத அவிசாரி சந்தியிலே

 

மே 29 திங்கட் கிழமை

செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் நூலைக் குறைத்தான்

 

மே 30 செவ்வாய்க்கிழமை

பணமிருந்தால் பத்தும் வந்து சேரும்

 

 

மே 31 புதன்கிழமை

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே- கா.மு.செரீப் (திரைப்படப் பாடல்)

 

xxxx

பணம் குலமாகும் ,பசி கறியாகும்

xxxxx

 

செட்டி வீட்டில் பணம் இருக்கிறது ஆலமரத்தில் பேய் இருக்கிறது.

 

–Subahm–

 

 

ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம் (Post No.3861)

Written by S NAGARAJAN

 

Date:29 April 2017

 

Time uploaded in London:-  7-28 am

 

 

Post No.3861

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

 

ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம்:

விதி விளக்கம் – 1

 

 

ச.நாகராஜன்

 

ஜோதிடம் கடல் போன்ற ஒரு சாஸ்திரம். இதை நீந்திக் கடந்தவ்ர்கள் மிகச் சிலரே.

 

ஜோதிடத்தில் பலன் பார்க்க ஏராளமான அம்சங்கள் உள்ளன. திதியைப் பற்றி அவ்வளவாக யாரும் பொதுவாகப் பொருட்படுத்துவதில்லை.

ஆனால் ‘சோதிட தர்ஸனம் என்னும் விதி விளக்கம்’ என்னும் நூல் திதியின் அற்புத மஹிமைகளை நன்கு விளக்குகிறது.

1897ஆம் ஆண்டு “க்வர்ன்மெண்ட் உத்தியோகஸ்தராயிருந்து பென்ஷன் வாங்கி வரும்  மிட்டா – முனிசாமி செட்டி. பி.ஏ. (பச்சையப்பன் காலேஜ்)” எழுதிய இந்த நூல்  1934ஆம் ஆண்டு சென்னையில் பதிக்கப்பட்ட ஒரு நூலாகும்.

 

நூலாசிரியர் தரும் பல்வேறு தகவல்கள் மிகுந்த சுவாரஸ்யமானவை.

 

அவற்றில் சிலவற்றை இந்தக் குறுந்தொடரில் பார்க்கலாம்.

 

  1. இந்து விரதமும் திதியும்    

 

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கும் விரதங்களும் முக்கிய பண்டிகைகளும் திதியை முதன்மைப் படுத்தியே அமைக்கப்பட்டுள்ளன. அனேக விரதங்களில் முக்கியமான சிலவற்றைக் கீழே காணலாம்:

 

 

  • கணேச சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி – சதுர்த்தி
  • ஸ்கந்த ஷஷ்டி – ஷஷ்டி
  • ரத சப்தமி     – சப்தமி
  • கிருஷ்ண ஜயந்தி அல்லது கிருஷ்ணாஷ்டமி – அஷ்டமி
  • ஸ்ரீ ராம நவமி – நவமி
  • மஹா சிவராத்திரி,ம்ஹா சதுர்த்தசி – சதுர்த்தசி
  • சித்திரா பௌர்ணமி – பௌர்ணமி
  • மாளய அமாவாசை அல்லது சர்வபிதுரு அமாவாசை – அமாவாசை

 

இது தவிர இறந்த கால திதி அனுஷ்டானம், சில நட்சத்திர சம்பந்தமான திதிகள், சங்கராந்தி சம்ப்ந்தப்பட்ட திதிகள், ராமாயணம், ம்ஹாபாரதம் ஆகிய காவியங்களில் வரும் முனீஸ்வரர், ஆசாரியர் ஆகியோரின் பிறந்த அல்லது திதிகள் போன்றவை திதிகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.

ஒவ்வொரு ஹிந்துவும் இறந்த கால திதியை அனுஷ்டித்தே பெரியோர்களுக்குச் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்கிறார்.

 

 

ஆகவே விதி விளக்கத்திற்குரிய்  திதியை ஒவ்வொருவரும் தீர்க்கமாக அனுஷ்டிக்க வேண்டும்.

 

திதிகளே நவகிரகங்களுக்கு இருக்கும் ந்ன்மை தீமை பலன்களைத் த்ருகிறது. தீமையான திதியினால் அமைந்த கிரகங்களும் கூட எக்கதியில் அவைகள் நன்மையோ அல்லது இஷ்ட ப்ராப்தியோ செய்கின்றனவென்றும் , தீமையோ அல்லது மாரகமோ எப்போது செய்கின்றனவென்றும், எக்காலத்தில் யோகம் அதாவது, ஒரு ஜன்மாவின் லௌகிக அந்தஸ்து பொருள், சொத்து, க்ஷேமம், இவைகளுக்கு தீமையையோ அல்லது க்ஷேமத்தையோ விளைவிக்கின்றன என்றும் திதிகளினாலேயே ஏற்படுகின்றன.

 

 

ஒவ்வொருவரும் தங்கள் திதியை மிக நுட்பமாகக் கவனித்து வந்தால் அதன் பலனையும் உற்று நோக்கி வந்தால் திதியில் இருக்கும் தெய்வீக ரகசிய ந்ன்மை, தீமையை அறிய முடியும்.

 

இப்படிக் கூறும் இந்த ஜோதிடர், சோதிடத்தில் திதியின் மஹிமையை அலசி ஆராய்ந்து தருகிறார். நூலாசிரியர் தரும் மேலும் சில் சுவையான தகவல்களை அடுத்துக் காண்போம்.

-தொடரும்

ஐம்புரி பற்றி அப்பர் பெருமான் தகவல்! (Post No.3860)

Written by London swaminathan

Date: 28 APRIL 2017

Time uploaded in London:- 18-28

Post No. 3860

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

அப்பர் பாடிய தேவாரத்தில் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலில் ‘ஐம்புரி’  என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த ஐம்புரி  என்னும் சொல், பிராமணர்களிடத்தில் புழங்கும் சொல். அப்பரோ பிராமணர் அல்ல; ஆயினும் அவர் வேத பாராயணத்தில் புழங்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்தியது அவர் இந்த விஷயங்களில் எவ்வளவு அறிவுள்ளவர் என்பதைக் காட்டுகிறது. அது மட்டுமின்றி வேறு பல வியப்பான விஷயங்களையும்  தெரிவிக்கின்றது. முதலில் பாடலைக் காண்போம்:

 

இடிப்பான்காண், என் வினையை; ஏகம்பன் காண்;

எலும்பு ஆபரணன் காண்; எல்லாம் முன்னே

முடிப்பான் காண்; மூ உலகும் ஆயினான் காண்;

முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்

படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்;

பராய்த்துறையான்; பழனம், பைஞ்ஞீலியான் காண்;

கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் —

காளத்தியான் அவன், என் கண் உளானே

 

–அப்பர் தேவாரம், ஆறாம் திருமுறை, காளத்தியில் பாடியது.

 

பொருள்:-

சிவபெருமான் என்னுடைய வினையைத் தீர்க்கும் பரம்பொருள்; ஏகம்பனாகக் கச்சியில் வீற்றிருப்பவர்; எலும்பு மாலையை ஆபரணமாக உடையவர். எல்லாச் செயல்களையும் வகுத்து நடத்துபவர்; மூன்று உலகங்களும் அவரே; ஐம்புரி முதலான வேத பாராயணத்தை வகுத்தளித்த பிரமனின் தலையைக் கொய்தவர். பசுபதியாகத் திகழ்பவர்; திருப்பழனம், திருப்பைஞ்ஞீலி ஆகிய திருத்தலங்களில் உறைபவர். நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சூடியவர்; திருக்காளத்தியில் வீற்றிருப்பவர். அவர் என் உள்ளத்தில் உறைபவர்.

 

 

இங்கு ஐம்புரி என்னும் சொல்லைப் பல உரைகாரர்களும் விளக்குவதில்லை; இது ஒரு அருமையான சொல்; இதற்கு சம்ஸ்கிருதத்தில் ‘பஞ்சாதி’ என்று பெயர்.

 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தனது உரை ஒன்றில் பிராமணர்கள் இந்த மண்ணின் மைந்தர்களே என்பதை அழகாக விளக்குகிறார். சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் நூற்றுக்கணக்கான இடங்களில் பிராமணர்களையும் அவர்களுடைய வேதங்களையும் சடங்குகளையும் குறிக்க தூய தமிழ்ச் சொற்கள் ( மறை, வேள்வி, நான்மறையாளர், இருபிறப்பாளர், அந்தணர் ) பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணின் ஒரு பகுதியாக, சொந்தக்காரர்களாக இருப்பதை அறிய முடிகிறது என்பார். (கருத்து அவருடையது; சொற்கள் என்னுடையது)

 

அவ்வகையில் பார்த்தால் பஞ்சாதி என்பதையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அழகாக தமிழில் ‘ஐம்புரி’ என்று சொல்லாக்கம் செய்தது சிறப்புடைத்து.

ஐம்புரி என்றால் என்ன?

 

பிராமணர்கள் போட்டிருக்கும் பூணூலில் மூன்று வடங்கள் இருப்பதால் முப்புரி நூல் என்பர். அவ்வகையில் பார்த்தால் ஐந்து புரிகள் இருப்பது ஐம்புரி. ஆனால் இது எங்கும் அணியும் நூல் அல்ல. கணக்குப் பார்க்க வகுத்த கால்குலேட்டர்/ கணக்கிடு கருவி!

 

பிராமணச் சிறுவர்கள், வேத பாட சாலைகளில் ஆசிரியரின் காலடியில் அமர்ந்து வேதம் கற்கும் போது அவர் ஐம்பது, ஐம்பது  சொற்களாகச் சொல்லிக் கொடுப்பார். அதை எல்லா மாணவர்களும் பத்து முறை சொல்ல வேண்டும். இதைத் தமிழில் அழகாக திருவை என்பர். திரும்பத் திரும்பச் சொல்லுவதால் திருவை.

இப்படி ஒரு ஐம்பது  சொற்களைச் சொல்லிக் கொடுத்தபின் அடுத்த வரிகளைச் சொல்லுவார். அந்த வரிகளில் ஐம்பாதாவது சொல் எங்கு வருகிறதோ அத்தோடு நிறுத்திவிட்டு அதைப் பத்து முறை சொல்லச் சொல்லுவார். இதுவே பஞ்சாதி; அதாவது ஒவ்வொரு 50 சொல்லும் ஒரு பஞ்சாதி= ஐம்புரி. இது அத்தோடு நிற்பதல்ல; இப்படி ஒவ்வொரு பத்து முறை சொன்னபிறகும் அந்த பிராமணச் சிறுவர்கள் அவர்கள் அணிந்திருக்கும் பூணூலை ஒரு விரலில் ஒரு சுற்று சுற்றிக் கொள்வர். இப்படி ஐந்து பஞ்சாதிகள் முடிந்த பின்னர் ஐந்து விரல்களிலும் நூல் சுற்றப்பட்டிருக்கும். இப்பொழுது அந்த நிமிடம் வரை சிறுவர்கள் எவ்வளவு சொற்களை மனப் பாடம் செய்தனர் அல்லது பத்துப் பத்து    முறை திருப்பிச் சொன்னார்கள் என்று அவர்களுக்கே கணக்குத் தெரியும்.

 

சிலேட்டு வேண்டாம்; குச்சி (பல்பம்) வேண்டாம்; நோட்டு வேண்டாம்; பென்சில் வேண்டாம்; கால்குலேட்டர் வேண்டாம். ஒரு சிறுவன் அந்த நிமிடம் வரை எத்தனைச் சொற்களைப் படித்திருக்கிறான் என்பதை அவன் கைவிரல்களே காட்டிவிடும். என்ன அற்புதமான முறை; அதற்கு என்ன அற்புதமான தமிழ் சொல்! அதை அற்புதமாக நமக்கு நினைவு படுத்தும் அப்பர் பெருமான்!

 

அப்பர் பெருமான் பாடல்களில் நிறைய அற்புத விஷயங்கள் இருக்கின்றன. நால்வரில் அதிக வயது வாழ்ந்தவர் அவர்; அதிக உலக அநுபவம் பெற்றவர் அவர். ஆகையால் போகிற போக்கில் நிறைய விஷயங்களைச் சொல்லுகிறார். அவர் பெரிய வரலாற்று நிபுணர். நரியைப் பரியாக்கிய திருவிளையாடலைச் சொல்லி மாணிக்கவாசகர் தமக்கு முன் னே வாழ்ந்தவர் என்பதைக் காட்டுகி றார். தருமி என்னும் பிராமணப் புலவன் தமிழ்ச் சங்கத்தின் படிக்கட்டுகளில் ஏறி நக்கீரருடன் மோதிய திருவிளையாடலை நமக்கு நினைவூட்டுகிறார். அந்தக் காலத்தில் எத்தனை வகைக் கோவில்கள் இருந்தன  என்பதை ஒரு பாடலில் அடுக்குகிறார். இன்னொரு பதிகத்தில் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பழமொழிகளைப் பட்டியல் இடுகிறார். மகேந்திர பல்லவனுடன் அவர் மோதிய செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. அப்பர் ஒரு சிவ பக்தர்; ஒரு வரலாற்றுப் பேரறிஞர்.

 

(திருவை, ஐம்புரி பற்றிய விஷயங்களை மாயூரம் சுவாமிநாத சிவாச்சாரியார், திருச்சி கல்யாண சுந்தர சிவாச்சார்யார் ஆகியோருடன் கலந்துரையாடியபோது அறிந்தேன்; நன்றி)

 

–subham–