அஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார் – பகுதி 3 (Post No.3598)

Compiled by London swaminathan

 

Date: 2 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  5-40 am

 

Post No. 3598

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“அதிசய முதலியார் செய்த அற்புதங்கள்” என்ற தலைப்பில் கடந்த இரண்டு நாட்களில் முதல் இரண்டு பகுதிகள் வெளியாகின. இது மூன்றாம் பகுதி.

 

1878-ஆம் ஆண்டு திருக்கழுக்குன்ற மலை அடிவார மஹா மண்டபத்தில் தசாவதானி ஜெகநாதபிள்ளை முன்னிலையில் கலியாண சுந்தர முதலியார் அஷ்டாவதானம் செய்து காண்பித்தார்.

 

அவ்வமயம் செங்கல்பட்டு வக்கீல் சுந்தர முதலியார் கேள்விக் கணை தொடுத்தார்– எங்கே புத்தகத்துக்கும் கரத்துக்கும் சிலேடை வைத்து செய்யுள் இயற்றுங்கள் பார்ப்போம் என்றார்.

 

மூடித் திறத்தலினால் மொய்ரேகையேயுறலால்

நாடியெவரு நண்ணுகையால்– கோடலினால்

வித்தகர்  கணத்துகின்ற வேதகிரி தண்பதியில்

அத்தமது புத்தகமுமாம் 

 

-என்று முதலியார் சிலேடை—(இரு பொருள்படும்படி செய்யுள்) — செய்தார்.

 

(அத்தம்=ஹஸ்தம்=கை=கரம்)

 

சிவக்கொழுந்து பண்டாரம் என்பவர், பால் என்னும் சொல் பத்து இடங்களில் வருமாறு கவி செய்க என்றார்.

 

பற்றுங்கொடிக்ககனும் பங்கயனும் காணாவும்

பற்றோலுரித்த வன்னப் பாலே பால் — மற்றப் பால்

மாட்டுப் பால் பூப்பால் மரப்பால் வனிதையர்பா

லாட்டுப் பாலப் பாலிப்   பால்

 

-என்று முதலியார் பாடினார்.

செய்யூர் ஜமீந்தார் வைத்தியநாத முதலியார் எழுந்து, நாடு என்று துவங்கி ஊர் என்று முடியுமாறு ஒரு கவி புனையுங்கள் என்றார்.

 

நாடுசேரன் சோழ நற்பாண்டியன் முதலோர்

தேடு பொருள் யாவுஞ்சிறக்குமா –னீடு தொண்டை

மண்டலத்திற் கோர்திலகன் வைத்தியநாதச் சீமா

னொண்டி   றலோடே வாழ்செய்யூர்

 

என்று முதலியார் பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

 

அஷ்டாவதானத்தில் வெறும் கவி பாடுதல் மட்டுமல்ல. பலர் கூட்டல், கழித்தல் போடச சொல்லுவர். மற்றும் சிலர் முதுகில் கற்களையோ, விதைகளையோ வீசி எத்தனை கற்களைப் போட்டென் என்று கேட்பார். தமிழ் இலக்கியத்தில் கேள்விகள் கேட்பர்.  இது போல எட்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். இவை எல்லாம் முடிந்தவுடன் செய்யூர் ஜமீந்தார் பரிசளிக்க முயன்றதைக் குறிப்பால் உணர்ந்து

 

காசுதனி லெனக்குக் கவலையில்லை பொற்சரிகைத்

தூசுதனிலேதுந் துயரிலை — வீசுபுக

ழீகட்டும் வள்ளா லியகற்றுக வென்னாசிரியர்

வீடுகட்டி வாழ்ந்திடவே –என்று பாடி முடித்தார்.

 

 

இதன் பொருளாவது: எனக்கு காசு பணம் வேண்டியதில்லை. என்னுடைய ஆசிரியரான தசவதானியாருக்கு வீடுகட்டிக் கொடுக்கவும் என்பதாகும். உடனே தசாவதானியார் ஜெகநாத பிள்ளைக்கு வீடு கட்டத் தேவையான பொருட்களை ஜமீந்தார் அனுப்பி வைத்தார்.

 

இதற்குப் பின்னர் ஜமீந்தாரின் வேண்டுகோளை ஏற்று திரிபுரசுந்தரி மாலை இயற்றினார்.

 

முதலியார், இடைகழி நாட்டுக்கு வந்திருக்கும் செய்தி கேட்டு ஜமீந்தார், யானையை அனுப்பி அவரை அழைத்துவர ஏற்பாடு செய்தார். ஆனால் அவர் ஒரு சீட்டுக் கவி மூலம் சின்னாட்களுக்குப் பின்னர் வருவதாக அறிவித்து சேயூரில் ஒரு வாரம் தங்கினார். அப்போது அவருக்குக் கிடைத்த பரிசுகள் அனைத்தையும் தன்னுடைய  ஆசிரியரான தசாவதானியாருக்கே கொடுத்துவிட்டார்.

 

திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து கமலபந்தமியற்றிப் பரிசு பெற்றார்.

பாம்பு கடித்தது

 

1879 ஆம் ஆண்டில் செங்கல்பட்டிலிருந்து திருப்போரூருக்குச் செல்லுகையில் ஒரு பாம்பு இவரைக் கடித்துவிட்டு படம் எடுத்து ஆடியது. இவர் தாம் இறந்து போய்விடுவோமென்றெண்ணி கையிலிருந்த கமலபந்தத்தின் பின்னால் தனது பெயர் முதலியவற்றை எழுதிவிட்டு தியானத்தில் மூழ்கி திருமுருகாற்றுபடையை ஜெபிக்கத் தொடங்கினார். அந்த    கமலபந்தம் திருப்போரூர் சிவசங்கரத் தம்பிரான் மீது இவர் இயற்றியதாகும். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தொட்டியன், பாம்பு கடித்த செய்தி கேட்டு அவருக்கு ஒரு மூலிகையைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னான். இவரும் குணமடைந்து தொட்டியனைத் தேடவே அவனைக் காணவில்லை. முருகப்பெருமானே வந்து உதவியதாக முதலியார் எண்ணினார். தம்பிரானிடம் நடந்த செய்திகளைச் சொல்லவே அவர் அன்று முருகனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளைச் செய்து முதலியாரை மகிழ்வித்தார்.

 

1879-ல் மேடவாக்கம் வெங்கடாசல முதலியார் குமாரத்தி பார்ப்பாத்தியம்மாளுக்கும் முதலியாருக்கும் திருமணம் நடந்தேறியது. காலப்போக்கில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. எஞ்சினீயர் அலு வலகத்தில் கிளர்க் உத்தியோகமும் கிடைத்தது.  பரங்கி மலைக்கு மாற்றப்படவே சென்னையில் மைத்துனர் கடையில் இருந்து கொண்டு சுதந்தர விருத்தியில் இறங்கினார். பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். பெரியபுராணம் முதலிய நூல்கள் பற்றி உபந்யாசம் செய்தார். நடராஜ சபை என்ற பெயரில் சமயப்  பணிகள் தொடர்ந்தன.

 

முதலியாரவர்கள், சிதம்பரத்தில் பாஸ்கர சேதுபதி மஹாராஜவைச் சந்தித்து வார்த்தை சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் சித்திரகவி சடாதர நாவலர் அவரைச் சந்த்க்க வந்தார். நாவலர், தான் கவிபாடும் வல்லமை படைத்தவர் என்று சொல்லவே, மெய்கண்டநாதன் என்பதை வைத்து அஸ்வபந்தம் பாடும்படி சொல்லிவிட்டுப் போஜனத்திற்கேகினார் பாஸ்கர சேதுபதி.

 

நாவலருக்கோ ஒரு சொல் கூட வரவில்லை. மஹாராஜா வந்தபின்னரும் மவுனமா இருந்து விட்டார். முதலியாரோவெனில் ஒரு செய்யுளை எழுதி ராஜா கையில் கொடுக்க, அது அஸ்வபந்தத்தில் அடைபட்டது. நாவலர் சென்றவுடன் முதலியாருக்கு பரிசுகள் கிடைத்தன. ஒரு சால்வையும் போர்த்தினர். வெளியே காத்துக் கொண்டிருந்த நாவலர், தனது இயலாமையைச் சொன்னவுடன் அவருக்கு முதலியார் அஸ்வபந்த இலக்கணம் கற்பித்து, அந்தச் சால்வையையும் அவருக்கே போர்த்தி அனுப்பினார். கலியாண சுந்தர முதலியார் மிகவும் கருணை உள்ளம் படைத்தவர்.

 

 

முதலியார் இயற்றிய நூல்கள், தனிப்பாடல்களின் பட்டியல் மிக நீண்டது. வாழ்நாள் முழுதையும் சைவ சமயத்துக்கும் தமிழ்ப் பணிக்கும் பயன்படுத்தியவர். 1914-ஆம் ஆண்டில் மணவழகு கலியாண சுந்தர முதலியாரின் சஷ்டியப்த பூர்த்தியின் போது அவருடைய மாணவர்கள் ஒரு மலரை வெளியிட்டு அவரது சாதனைகள், திருப்பணிகளைத் தொகுத்து வெளியிட்டனர். அதன் சுருக்கத்தை மட்டுமே நான் மூன்று கட்டுரைகளில் தந்தேன்.

 

–சுபம்–

 

Written by S NAGARAJAN

 

Date: 2 February 2017

 

Time uploaded in London:-  5-11 am

 

 

Post No.3597

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

by Santhanam Nagarajan

 

Sanskrit is one of the richest languages in the world. There are thousands and thousands of manuscripts which are not at all touched by anybody. These are being preserved in various countries.

One area in which everybody is interested in Sanskrit Literature is called Subhasitas. What is Subhasita?

There are thousands of moral maxims, ethical teachings and wise sayings in the Sanskrit literature. These are generally called as subhasita verses.

The great scholars of India used to quote very many subhasita verses in their discourses. Because these are well spoken words filled with Dharma, the ethics.  We may find riddles also in these short verses.

A very rough estimate indicates that there are about 20000 verses in this category.

Given below are a few wonderful, inspirational verses to make us understand its significance.

 

Sickness

Sickness arises in six ways; through too much water-drinking, and through eating irregularly (as a quantity and time), through sleeping by day and through staying awake by night, and through retention of urine and excrement.

 

The following five are considered as fathers: giver of food, the protector from fear, the giver of the young girl (in marriage), the natural father, and the preceptor.

 

The giving of food is a great gift, but the giving of education is a greater one; the satisfaction that comes out of taking food is momentary, whereas the good result of education is life-long.

 

Proficiency in other sciences is only a pastime, for at the time of need they mean nothing. But medicine (the art of curing), astrology and Mantravada (Science of Spells) infuse confidence are useful at every step.

 

Those who are acquainted with the nature of the Eternal and the Transient, do not lament for either of them; when some among these beings even are seen to mourn, it is to be understood, that nature rules supreme in them.

 

Some of the verses will give double meanings. For example let us go through this one:

Dear girl, you are affected by high fever (or, you suffer from the fever of love). I consider fasting good for you (or, the kindling of sacred fire for our marriage will be for your happiness).  The other meaning of this verse will be: O, best of physicians, prescribe mercurial preparation, for I am not able to undergo the fast as prescribed by you (or give me love, for I am not able to disregard what you have said.

 

Those who know Sanskrit could enjoy the verses for its beauty, words and meaning.

Several attempts have been made in the last two hundred years to compile as many subhasitas as possible.

We may assign some time daily to read and grasp the meaning of these beautiful verses which will enrich our knowledge to lead a better life.

*********

This article first appeared in EzineArticles.com on 23-1-2017. You may read it in the following link.

http://ezinearticles.com/?Wonderful,-Inspirational-Sanskrit-Subhasita-Verses&id=9626334

அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 2 (Post No.3596)

Picture of Kancheepuram Garuda Sevai

 

Compiled by London swaminathan

 

Date: 1 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  10-30 am

 

Post No. 3596

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஜயங்கொண்ட தொண்டை மண்டலத்தில், புலியூர்க் கோட்டத்தில், புத்தவேடனு நத்தத்தில், விற்பெற்ற துளுவ வேளாளர் குலத்தில், பூவிருந்த வல்லியார் மரபில், அறுபான்மும்மை நாயன்மார்களில் ஒருவரான வாயிலா நாயனார் பரம்பரையில், சென்னவராய கோத்திரத்தில், அண்ணாசாமி முதலியாருக்கும்-உண்ணாமுலை அம்மாளுக்கும் புதல்வனாக 10-5-1854-ல் பிறந்தார் பூவை கலியாணசுந்தர முதலியார்.

 

ஒரே நேரத்தில் எட்டு வகை காரியங்களைச் செய்யும் அஷ்டாவதானம் என்னும் கலையில் தேர்ச்சிபெற்ற பூவை கல்யாணசுந்தரம், தாலுக்கா பாடசாலையில் மாணவராக இருந்தபோது, ஆசிரியர் சேஷாத்திரி அய்யங்கார் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல் ஒன்றைக் கற்பித்துக் கொண்டிருந்தார்:

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்

தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் யான்முகமாய்

அந்தாதி மேலீட்டறிவித்தே   னாழ்பொருளை

சிந்தாமற் கொண்மினீர் தேர்ந்து

 

(அந்தாதி மேலீட்டறிவித்தே   னாழ்பொருளை

சிந்தாமற் கொண்மினீர் தேர்ந்து = அந்தாதி, மேலிட்டு, அறிவித்தேன், ஆழ் பொருளை, சிந்தாமல், கொள்மின், நீர், நேர்ந்து– திருமழிசை ஆழ்வார் பாடிய நான்முகன் திருவந்தாதி)

 

 

என்ற திவ்வியப் பிரபந்த பாடலைச் சொல்லிக்கொண்டிருக்கையில் சிறுவன் கலியாணசுந்தரம் கற்பலகையில் (ஸ்லேட்)

 

சங்கரனே நாரணனைத்தான் படைத்தானம்மாலே

பங்கயனைப் பெற்றெடுத்தான் பார்மிசையில் – துங்கமுடன்

சத்தியமாரணங்கள் சாற்றியது மேயுணர்வீர்

நித்தியத்தைப் பெற்றுய்ய நீர்

 

(பங்கயன்=பிரம்மா, ஆரணங்கள் = வேதங்கள்)

–எனவெழுதி வாத்தியாரிடம் காட்டினார். அவர் இது யாருடையது என்று கேட்க முதலியார் மவுனமாயினார். பக்கத்திலிருந்த சிறுவர், இது கலியாணசுந்தரம் செய்த கவிதைதான் என்றும் அவர் இப்படிப் பாடல்கள் பல எழுதுவது வழக்கம் என்றும் சொன்னார்கள்.

 

உடனே அய்யங்காருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு, இன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை; எங்கே ஒரு கவிதை எழுது பார்க்கலாம் என்றார்.

 

கலியாணசுந்தரமும் சலிக்கவில்லை.

 

மெச்சும் புகழ்வரதர் மென்கருடன் மீதேறிக்

கச்சியினிலே அடைந்தார் கம்பீர– முச்சிதமாய்

மன்னியவே கம்பர் வலனுரைகா மாட்சியெனு

மன்னையினைச் சுற்றுவதால்

 

என்று பாடவே ஆசிரியர் வியப்புற்றார். அழுக்காறுமுற்றார். “ஏகம்பர் வலனுரை காமாட்சி என்னும் அன்னையைச் சுற்றுவதால்” – என்று பாடியதால் கலியாணசுந்தரத்துக்கு சமயத் வேஷம் இருப்பதாகக் கருதி அவருக்கு சரியாகப் பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருந்தார். பின்னர் முதலியார் வேறு பாடசாலையில் சேர்ந்து பயின்றார்.ராமலிங்க சுவாமிகளையும்கண்டு அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

 

1873-ல் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருமயிலைக்கு (மைலாப்பூர்) வந்தபோது

 

சீர்பெருஞ் சிரபுரத்து மீனாட்சி சுந்தரநற் செம்மலேறே

ஏர்பெருகு நின் வீட்டு வாயலினிற்கின்றே நெனையழைத்துப்

பேர்பெருகுங் கல்விநல மென்மேலு மென்றனக்குப் பிறங்கியோங்க

வார்பெருகு நின்னாசி யினைக்கூறி யன்புடனே யாட்கொள்வாயே

 

எழுதி அனுப்பியவுடன் பிள்ளை அவர்கள், முதலியாரை அழைத்து அவர் எழுதிய புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.

 

கலியாண சுந்தர வென்கண்மணியே நின்பால்

மலிவாகக் கல்வி வளரும்– பொலிவாகப்

பொற்புவியிற் கற்றோர் புகழச் சிவஞான

விற்பனனாய் வாழ்ந்திருக்கவே

 

–என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிக்கொடுத்தார்.

1875 முதல் செங்கல்பட்டு மிஷன் பாடசாலையில் பயின்றார். அங்கு இலக்கணக் கடல் தசாவதானம் பேறை ஜெகநாதபிள்ளை யவர்களிடம் இலக்கணம் கற்றார்

 

1876-ஆம் ஆண்டில் சென்னையிலில்ருந்து செங்கல்பட்டுக்குப் புகைவண்டிவிட்டபோது, சக மாணாக்கர் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கவி பாடினார்:

ஆயிரத் தெண்ணூற்றெழுபத்தாறாமாண்டணி செப்டம்பர்

தூயமுற்றிகதி சுக்ரவாரந்தோன்றும் பதினோரு மணியதனில்

பாய வுலகில் பலமாக்கள் பலனையடையப் புகைவண்டி

நேய செங்கை நகரென்னு நிலத்து வந்து நிலவிற்றால்

–என்று எழுதிக்கொடுத்தார்.

 

உடனே அவரது ஆசிரியர் தசாவதனியார்

 

பாருங்களோர் நொடியிற் பன்னுமிடம் போய்வரலாம்

வாருங்களென்ன தடை மாநிலத்தீர்

 

என்று இரண்டு வரிகளை எழுதிச் சேர்த்தார். உடனே முதலியார் மேலும் இரண்டடிகளை எழுதினார்.

நீருங்கள்

காலா நடவாமல் காசு மிகநல்காமல்

மேலாக வாழ்வினி மேல்.

 

பின்னர் இந்து தேச சரித்திரத்தையும், இந்திய பீனல் கோடு சடத்தையும் முறையே 700, 500 விருத்தங்களால் பாடிப் பரத கண்ட இதிஹாசம், நீதிசாகரம் எனப்பெயரிட்டனர்.

 

1877-ல் செங்கல்பட்டு சுந்தரவிநாயகர் பதிகம், ஏகாம்பரேசர் பதிகம், காமாட்சியம்மன் பதிகம் இயற்றினார்.

 

1878-ல் தசாவதனியார் முன்னிலையில், திருக்கழுக்குன்ற வேதமலை அடிவரத்தில் அஷ்டாவதானம் செய்து காட்டினார்.

பதிகங்களைத் தவிர முதலியார் இயற்றிய நூல்கள் 40. பரிசோதித்து அச்சிட்ட நூல்கள் 96. அவ்வவ்வமயங்களிற் பாடிய சாத்து கவிகள் முதலியன 864.

(இவையனைத்தும் இந்த மலர் வெளியிட்ட நாள் வரையுள்ள கணக்கு)

 

அஷ்டாவதானத்தில் அவர் செய்த செய்யுட்களை அடுத்த பகுதியில் காண்போம்.

 

–தொடரும்

 

–subham–

TYPES OF FRIENDS (Post No.3595)

Compiled by London swaminathan

 

Date: 1 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  9-32 am

 

Post No. 3595

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Who is your reliable friend?

At home your wife is your reliable friend

In a foreign country, your knowledge or your wisdom is your best friend.

For a sick person, his or her medicine is the friend.

When you are dead Dharma is your best friend. Nothing else can accompany you. Whatever you have done good when you are alive will help you.

This is what our forefathers have found in course of thousands of years and have summarised their wisdom in two beautiful lines:-

Pravaase vidyaa- Knowledge in foreign country

Grhe bhaaryaa – Wife at home

Vyaadhitah ausadam- Medicine for the sick

Mrtasya dharma- Dharma for the dead

 

Vidyamitram pravaseshu bharyamitram Genesis ca

Vyaditasyausadam mitramdharmo mitram mrtasya ca

—-Sushasita Ratna Bhandagara159-287

xxx

How do you get Friends?

 

Aurasa-Born of same parents

Krtasambhandha-Related by marriage

Vamsa-Lineage

Rakshaka-Protector in suffering

 

Aurasam krtasambandhamtatha vamsakrmaghatam

Rakshakam vysanebhya ca  mitral njeyam caturvidham

—Kamandakiya Nitisastra

 

The protector in suffering is a very interesting one. In Tamil and Sanskrit literature, we come across several poems where in a girl falls in love with someone who protected her. This is a theme widely used in feature films as well. It may be saving someone is who is drowning or someone who is attacked by a tiger or someone dying in poverty.

 

Xxx

 

Tamil Wisdom

Tamil saint Tiruvalluvar has summarised the good things about friendship in ten couplets in the Tail Veda ‘Tirukkural’

 

Valluvar compares good and friends with the moon in one of his couplets:

The friendship of the worthy develops day by day like like the waxing crescent moon,

but foolish alliances deteriorate as the waning thereof –(Kural 782)

 

He says good friends are like great books:

As one sees greater beauty and derives enhanced pleasures, from the deeper study of a great book, Noble friendships gain in worth and grace day by day (783)

Swimmer Flavia Zoccari’s wardrobe malfunction (valluvar used this as a simile)

He adds,

Friendship is not for laughing and merry making. It is to hit at wrong movements by harsh advice.(784).

But Valluvar is at his best when he talks about how quick one should help one’s friend in distress:

Like the hand that, that goes to the rescue when a garment slips, stepping into help

When a friend faces adversity, is true friendship (788)

This is reflex action. When one’s garments slips, the hand picks it up quickly. We have seen many such awkward moments in the public events. Valluvar must also have seen such slips!

 

There are beautiful quotations about Friendship in Panchatantra and Valmiki Ramayana. I will give them in another post.

 

–subham–

 

புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3 (Post No.3594)

Written by S NAGARAJAN

 

Date: 1 February 2017

 

Time uploaded in London:-  6-39 am

 

 

Post No.3594

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

13-1-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3

ச.நாகராஜன்

t

“சுமார் நூறு கோடி கடற்பறவைகள் மற்றும் மிருகங்கள் பிளாஸ்டிக் பைகளினால் மடிந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகள் அவற்றின் குடலைச் சுற்றி இறுக்கவே அவை இறக்கின்றன”

                                                                 – அறிவியல் தகவல்

 

சுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டிற்காக முனைந்து பாடுபடும் இன்னும் சிலரைப் பார்ப்போம்.

 

 

மரீனா சில்வா

1958ஆம் ஆண்டு பிறந்த மரீனா சில்வா ஒரு அரசியல்வாதி. பிரேஸிலைச் சேர்ந்த இந்த பெண்மணி ரப்பரை எடுக்கும் ஒருவரின் மகளாகப் பிறந்து அமேஸான் காடுகளில் ரப்பரை எடுத்துக் கொண்டிருந்தவர். சட்டத்திற்கு விரோதமாக மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்கூடாகக் கண்டு மனம் நொந்து போன இவர் காடுகளைக் காக்க தீவிரமாக களத்தில் இறங்கினார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட இவர் பிரேஸில அமைச்சரானார். பல லட்சம் சதுரமைல் பரப்புள்ள காட்டு வளம் இவரால் காப்பாற்றப்பட்டது. காடுகளை அழிப்பவரை 75 சதவிகிதம் ஒழித்துக் கட்டினார். திடீரென்று 1500 கம்பெனிகளை ரெய்டு செய்து பத்து லட்சம் கியூபிக் அளவுள்ள சட்ட விரோதமாக வெட்டப்பட்ட ம்ரங்களைக் கைப்பற்றி அந்த நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கக் கூடிய வகையில் இவருக்கு நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு இருந்தது.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்தால் தான் உலக வளம் காப்பாற்றபபட முடியும் என்ற கொள்கையை ஆணித்தரமாக உலகெங்கும் முழங்கி வரும் துணிச்சல்கார பெண்மணி இவர்.

 

ரெபக்கா ஹாஸ்கிங்

பிபிசியில் காமரா உமனாகப் பணியாற்றிய பெண்மனி ரெபக்கா ஹாஸ்கிங். ஹவாய்க்குப் படம் எடுக்கச் சென்ற போது அங்கு பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று இறந்து போன மிருகங்களைக் கண்டு மனம் நொந்து பரிதாபப்பட்டார். விளைவு, பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. மாட்பரி என்ற சிறு நகரில் உள்ள வர்த்தகர்களிடம் சென்று பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதற்கு பதிலாக மாற்று வழியைக் கையாளுங்கள் என்று வேண்டினார். நல்ல ஆதரவு கிடைக்கவே பிரிட்டனில் பிளாஸ்டிக் இல்லாத முதல் நகரம் என்ற பெயரை 2007ஆம் ஆண்டு மாட்பரி எடுத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனில் இன்னும் 80 நகரங்கள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்தன.

ஆண்டு தோறும் 400 கோடி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் பிரிட்டனை பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக மாற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் இந்த உத்வேகமூட்டும் பெண்மணி. ‘அரசாங்கத்தை எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடமிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்’ என்பது இவர் மக்கள் முன் வைக்கும் கோஷம்!

 

ஆப்ரே மேயர்

தென்னாப்பிரிக்க இசைக் கலைஞரான இவர் லண்டனில் வசிப்பவர். உலக நாடுகளை பணக்கார நாடு ஏழை நாடு என்று பிரிப்பதற்குப் பதிலாக சுற்றுப்புறச் சூழல் அடிப்படையில் வெப்ப மாறுதலை வைத்துப் பிரிக்க வேண்டும் என்கிறார் இவர். நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடை ஒரு நாடு எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பது இவரது வாதம்.

இசையை விட்டு விட்டு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக மாறிய இவர், 1990இலிருந்து வாழ்க்கை வாழ்வதற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார். என்றாலும் தான் எடுத்துக் கொண்ட நல்ல பணியை விட்டு விடாமல் தொடர்கிறார்..

முதலில் இவர் கொள்கையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட பிரிட்டன் இப்போது இவரது கொள்கையை ஆதரிக்கிறது. பல நாடுகளும் நச்சுப்புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விட்டன.

இசையை எழுதுவதும் நச்சுப்புகையைத் தடுப்பதும் பல விஷயங்களில் ஒன்று தான் என்று கூறும் இவர் அதை அழகுற விளக்குகிறார். இசைக்கான நோட்ஸை பேப்பரில் எழுதிப் பார்த்தால் அது என்னவென்றே யாருக்கும் புரியாது. ஆனால் நோட்ஸின் படி இசையை இசைத்தாலோ அனவரும் சொக்கி விடுவர். அதே போல எவ்வளவு நச்சுப்புகையை எந்த நாடு வெளியிடுகிறது என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால் நச்சுப் புகை கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் வாழ ஆரம்பித்தால் அதன் சுகமே தனி. அப்போது தான் அதன் மஹிமையை உணர முடியும் என்கிறார் இவர்.

பிரபல வயலின் வித்வானான இவர் தினந்தோறும் வயலினை இசைப்பதை இன்றும் தொடர்கிறார். ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தான் விட்டு விட்டார்.

உலகத்தை மாற்ற இவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாமல் போயிற்றே என்று அங்கலாய்க்கிறார் இந்த இசைக் கலைஞர்.

 

ஜியா ஜாங்கே

நடிகரும் இயக்குநருமான ஜியா ஜாங்கே ஸ்டில் லைஃப் (Still Life) என்ற திரைப்படத்தை எடுத்து உலகப் புகழ் பெற்றார். வெனிஸில் 2006ஆம் ஆண்டு நடந்த விழாவில் இந்தப் படத்திற்காக கோல்டன் லயன் விருதினைப் பெற்றார். சீனாவில்  மூன்று அணைகள் கட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் கேட்டினைச் சித்தரிக்கிறது படம். ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் ஒன்றிற்காக கட்டப்பட்ட இந்த அணைகளால் லட்சக் கணக்கானோர் தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் துணையைத் தேடி அலைகின்றனர். நகரிலோ வெள்ளப் பெருக்கு. லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, வன்முறை ஆகிய எல்லாவற்றையும் காட்டும் இந்தப் படம் சீன நாட்டு சென்ஸாரிடம்  என்ன பாடுபடுமோ என்ற கவலை முதலில் இருந்தாலும் சென்ஸார் படத்தை அனுமதித்து விட்டது. சீனாவின் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை திரைப்படத்தில் அற்புதமாகச் சித்தரித்துக் காட்டிய சிறந்த படம் இது. இவரைப் பார்த்து உத்வேகம் கொண்ட இதர கலைஞர்களும் இப்போது சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக சீனாவில் பாடுபட ஆரம்பித்து விட்டனர்.

 

இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் புத்துலகைக் காண விழையும் வித்தகர்களாக இன்று திகழ்கின்றனர். நாம் தெரிந்து கொண்டது இங்கு சிலரைப் பற்றி மட்டுமே!

உத்வேகமூட்டும் இவர்களைப் பின்பற்றி நாமும் ஒரு சிறு செயலைச் செய்தால் கூட உலகம் புத்துணர்ச்சியுடன் கூடிய புத்துலகமாக மாறும்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

ஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் (Svante August Arrhenius)   ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி.தோற்றம் (19-2-1859 மறைவு 2-10-1927) பூமியில் உயிரினம் ஏற்பட்டதற்குக் காரணம் அயல் கிரகங்களிலிருந்து வந்த உயிரினத்தாலேயே என்று ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டிலேயே முதன் முதலில் அவர் கூறினார். அதை இதர விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. ஆனால் இதே கருத்தை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிரபல பிரிட்டிஷ் விண் இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரெட் ஹாயிலும் கூறிய பின்னர் இந்தக் கருத்தின் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பு ஏற்பட்டு விட்டது.

 அர்ஹேனியஸிற்கு ஏராளமான விஷயங்களில் ஆர்வமும் ந்ல்ல அறிவும் உண்டு. பூமி வெப்பமயமாதல் என்ற கருத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே 1905ஆம் ஆண்டில் முதலில் சொன்ன அவர், கார்பன் டை ஆக்ஸைடே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

1903ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோப்ல பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. முதல் உலக மகா யுத்தத்தின் போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சாமர்த்தியமாக பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அர்ஹேனியஸ் விடுவித்தார்.

1901 லிருந்து 1927ஆம் ஆண்டு  முடிய இயற்பியல் மற்றும் இரசாயனம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெறத் தகுதியானோரைத் தேர்ந்தெடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். பல் துறை விற்பன்னர் என்ற பெயரைப் பெற்ற பெரிய விஞ்ஞானி இவர்.

**********

 

 

ஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை? (Post No.3593)

Written by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  18-50

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு — என்ற தலைப்பில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 நான் எழுதி வெளியிட்ட கட்டுரையில், பாரதி, பாரதிதாசன், அருணகிரிநாதர், திருமூலர், நம்மாழ்வார், தொல்காப்பியர், நக்கீரர், தாயுமானவர், அப்பர், மாணிக்கவாசகர், திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி, திருவள்ளுவர் ஆகியோரின் பொன்மொழிகளை வெளியிட்டேன். இப்பொழுது சம்ஸ்கிருத நூல்களில் இன்பம், ஆனந்தம், மகிழ்ச்சி பற்றிய சில பொன்மொழிகளையும் பழமொழிகளையும் காண்போம்:-

 

எது அல்லது யார் இன்பம் தருவர்?

 

ஸ்வதாரா- தன்னுடைய மனைவி

போஜன- நல்ல சாப்பாடு

தனம் – பணம்

 

சந்தோஷஸ்த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)160-337

xxxx

ஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை?

 

விஷயானந்த- உலக விஷயங்கள் தரும் இன்பம்

 

யோகானந்த – யோகத்தின் மூலம் பெறும் இன்பம்

 

அத்வைதானந்த- அத்வைதக் கொள்கையால் கிடைக்கும் இன்பம்( அஹம் பிரம்மாஸ்மி)

 

விதேஹானந்த- உடல் கடந்த இன்பம்

 

பிரம்மானந்த – இறை இன்பம்

 

விஷயே யோகானந்தௌ த்வாவத்வைதாந்த ஏவ ச

விதேஹானந்தோ விக்யாதா ப்ரஹ்மாந்தஸ்ச பஞ்சமாஹா

xxxx

 

சேரும்போது இன்பம், பிரியும்போது துன்பம்

 

அதிகாரம்- ஆட்சி அதிகாரம், பதவி அதிகாரம்

கர்பம்- கருவுருதல், கரு சிதைதல்

வித்தம்- பணம்

ஸ்வான மைதுனம்- நாய்களின் புணர்ச்சி

 

அதிகாரம் ச கர்பம் ச வித்தமன்வதேர் ச ஸ்வானமைதுனம்

ஆகமே சுகமாப்னோதி நிர்கமே ப்ராணசங்கடம்

 

xxx

 

ஆனந்த சீமா கலு ந்ருத்யசேவா- ஒருவரின் மகிழ்ச்சியின் எல்லை நடனத்தில் (தெரியும்)

 

ஏகத்ர சிரவாசோ ஹி ந ப்ரீதிஜனனோ பவேத் (மஹாபாரதம் 3-36-36)

ஒரே இடத்தில் நீண்டகாலம் வசிப்பது மகிழ்ச்சி தராது

 

கோ ஹி சாந்த்வைர்ன துஷ்யதி (பாரத மஞ்சரி) – ஆறுதல் தரக்கூடிய பேச்சு யாருக்குத்தான் மகிழ்ச்சி தராது?

 

மனத்திருப்தி வந்துவிட்டால் யார் பணக்காரன்? யார் ஏழை? (வைராக்ய சதகம் 53) மனசி ச பரிதுஷ்டே கோ அர்தவான்கோ தரிர்த்ரஹ

 

புத்தியுள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும், அதுதான் கடவுளை வணங்குவதாகும் (சந்தோஷம் ஜனயேத் ப்ராக்ஞஹ ததேவேஸ்வர பூஜனம்)

 

மகிழ்ச்சிக்கு இணையான செல்வம் இல்லை (பஞ்சதந்திரம்) சந்தோஷ துல்யம் தனமஸ்தி நான்யத்

 

மகிழ்ச்சியானவர்கள் வெற்றி அடைவர், அழுகின்றவர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவார்கள்

ஹசத்பிஹி க்ரியதே கர்ம ருதத்பிஹி பரிபச்யதே

 

–Subham–

 

 

இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு

https://tamilandvedas.com/…/இன்பம்எங்கேஇன்ப

Translate this page

23 Apr 2013 – இன்று நாம் அலசும் விஷயம் ”இன்பம் எங்கே?” யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம். திருமூலர்: நான் …

அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 1 (Post No.3593)

Compiled by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  9-13 am

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact: swami_48@yahoo.com

 

 

சென்னை பூவிருந்தவல்லி கலியாணசுந்தர முதலியார் ஒரு அஷ்டாவதானி; அதாவது ஒரே நேரத்தில் எட்டுவித செயல்களைச் செய்யும் அற்புதம் நிகழ்த்துபவர். அவருடைய 60-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அவர்களுடைய மாணவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட மலர் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது. அதில் படித்த சில விஷயங்கள்:-

 

இவர் சிறுவயதிலேயே தமிழ்ச் செய்யுட்களைப் படிப்பதிலும் மனனம் செய்வத்திலும் ஆர்வம் காட்டி வந்தார். வளர் மதி (சந்திரன்) போல் இவர் மதியும் வளர்ந்தது. சிறுவயதிலேயே இவருக்கு செய்யுள் இயற்றும்  ஆ ற்ற லும் வாய்த்தது.

 

தினமும் பள்ளிக்கூடத்துக்குப் போகும் முன், தெருக்கோடியிலுள்ள பிள்ளையார் கோவிலில் தானே இயற்றிய ஒரு செய்யுளின் மூலம் பிரார்த்திப்பார். சக மாணவர்களை அழைத்து நீங்களும் துதிபாடுங்கள் என்று சொல்லிக் கொடுப்பார். இதோ முதலியார் செய்த துதி:-

 

வாத்தியார் சொல்லிவைக்கும் வண்மையுள்ள பாடமெல்லாம்

நேர்த்தியா யென்மனதில் நேர்மையுடன் — பூர்த்தியுறச்

சுந்தர விநாயகனே தூய்மை பெறு நின்றாளென்

சிந்தையினிலே யிருக்கச் செய்

 

(நின்றாள் = நின் தாள் = உன்னுடைய பாதங்கள்)

xxx

இவர் தந்தையார் தினமும் திருமுருகாற்றுப்படையைப் படிக்கும்படி சொல்லவே முதலியாரும் அவ்வாறே செய்து முருக பக்தர் ஆனார்.

 

இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் ஒரு நாள் ஆசிரியர் “வாடியோட வனச மன்னன்” என்ற ‘திருவரம்பக் கலம்பகம்’ பாடல்

பற்றிப் பாடம் எடுத்தார். அதில் முருகன் ஓட என்ற வரிகள் வந்தது இவருக்குப் பிடிக்கவில்லை. இவரோ தீவிர சிவபக்தர். அதைப் படிக்க

மறுத்துவிட்டார். உடனே வாத்தியார், முதலியாரின் தந்தையிடம் இதைத் தெரிவித்தார்.

 

இதற்குப் பின்னர் 38ஆவது வயதில் முதலியார் பாடிய திரு ஒற்றியூர் கலம்பகத்தில் திருமால், லெட்சுமி, பிரம்மா எல்லோரும் ஓட என்னும் பொருள்படும் பாடலை இயற்றி தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார்!

xxx

பள்ளிக்கூடப் பாடம் படிக்கும்  நேரத்தில் படிக்காமல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தால் ஆசிரியருக்குப் பிடிக்காது. அந்தக் காலத்தில் வாத்தியார்கள், பிரம்பைக் கையில் எடுத்து  தண்டிப்பது வழக்கம்.இப்படி விளையாடிய மாணவர் அருகில், கலியாண சுந்தர முதலியாரும் நின்றிருந்தார். ஒவ்வொருவரையாக அடித்த வாத்தியார். முதலியாரையும் அடித்து வைத்தார். உடனே அவர் செய்யுள் வடிவில் தனது தந்தையிடம் புகார் கொடுத்தார். அந்தச் செய்யுளை, முதலியாரின் தந்தை ஆசிரியரிடம் எடுத்துச் சென்று காட்டியவுடன், வாத்தியார் தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் ஐரோப்பிய பிள்ளைகள் படித்த கத்தோலிக்க பாடசாலையில், முதலியாரைச் சேர்க்க அவரே உதவி செய்தார். ஆயினும் முதலியார், ஈராண்டுகள் அங்கே படித்துவிட்டு, தாலுக்கா பாடசாலையில் சேர்ந்து  தனது படிப்பைத் தொடர்ந்தார்.

 

 

இதோ முதலியார் சிறு பையனாக இருந்தபோது கொடுத்த புகார் மனு:-

 

எந்தவித குற்றமுமியானின்று செய்யாதிருக்க

என்றன் தொடையிலேன் சூடு வந்ததெனப்

பூரணமாய்க் கல்வி கற்ற பூங்கா வனக் கவியை

காரணநீ கேட்டிடுக கண்டு.

எந்தன் என்பது என்றன் — என்று இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் முதலியாருக்குத் தெரியாது.

 

xxxx

 

 

ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்து ஒரு கீரைத் தோட்டம் வழியாக மற்ற மாணவர்களுடன் முதலியாரும் நடந்து வந்துகொண்டிருந்தார். கீரைப் பாத்தியை பிள்ளைகள் மிதித்துவிட்டனர் என்பதால் சூரன் என்ற பெயருள்ள தோட்டக்காரன் எல்லோரையும் ஒரு வளார் கொண்டு விரட்டிக் கொண்டு வந்தான். எல்லோரும் ஓடிவிட்டனர். முதலியார் மற்றும் பொறுமையுடன் நின்றவுடன் அவருக்கு அடி விழுந்தது. உடனே கோபத்தில் கவி பொழிந்தார்.

 

தோட்டக்காரச் சூரன் றோன்றி வளாரடியைப்

போட்டான் முதுகில் பொறுக்கேனான் — தோட்டிதழ்சேர்

தாராரும் காளியே தாரணியிலன்னவனைப்

பாராமலேயிருக்கப் பண்

 

என்று தோட்டத்தின் மூலையில் இருந்த காளி கோவிலில் பாடிவிட்டு வந்தார். அந்தச் சூரன் அன்றிரவு தோட்டத்தில் தவறி விழுந்து கால் உடைந்து முடவன் ஆகிவிட்டான்.

 

பகுதி இரண்டில் அஷ்டாவதான அற்புதச் செயல்களைக் காண்போம்

 

தொடரும்……………

 

 

 

 

What is Happiness? Where is Happiness? (Post No.3592)

Compiled by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  6-04 am

 

Post No. 3592

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Following verses are available in Sanskrit literature. The verses and the proverbs are the summary of our ancient wisdom.

 

1.Santosah kartavyah/ Contentment to be had

 

Svadaaraa–With one’s own wife

Bhojana–In eating

Dhana–With one’s own wealth

 

Santosastrishu kartavyah svadare bhojane dhane

Subaashita ratna bhaandaagaaram

 

Xxx

 

2.Aagame sukh am, nirgame praanasankatam/ Happiness during association , sorrow in separation 

Adhikaaram–Rulership

Garbham–Pregnancy

Vittam–Wealth

Svaanamaithuna–Copulation of dogs

 

Adhikaram ca garbham ca Vitaminwater ca svaanamaithunam

Agame sukhamapnoti nirgame praanasankatam

 

Xxxx

 

3.Types of Bliss

Visayaananda–Worldly happiness

Yogaananda–Bliss through yoga

Advaitananda–Non dual bliss

Videhaananda–Bliss beyond body

Brahmaananda–Supreme bliss

 

Vishaye yoganandau dwavadvaitananda Eva ca

Videhanando vikyata brahmanandasca pancamaah

XXX

4.Dance is the climax of delight –Granthasthagaathegaaku

5.To reside in the same place for long, is unconducive to pleasure Mahabharata 3-36-36

6.Whom does not soothing speech console? Bharata Manjari

 

7.If contented, who then is rich or poor? Vairagya Sataka.53

 

8.The wise must make others happy – that itself is the worship of the Divine

(santosam janayepraajnaah tadaiva Isvara puujanam)-Sanskrit Proverb

 

9.No wealth equal to Happiness – Pancatantra 2-162

(santosa tulyam dhanamasti naanyat)

 

10.The happy achieve, the weeping scorch others—Sanskrit Proverb

(hasadbhih kriyate karma rudadbhih paripacyate)

 

–subham–

 

 

 

Taj Mahal is a Hindu Temple reveals the book ‘World Vedic Heritage’ (Post No.3591)

Written by S NAGARAJAN

 

Date: 31 January 2017

 

Time uploaded in London:-  5-06 am

 

 

Post No.3591

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

Santhanam Nagarajan

 

The book under review ‘World Vedic Heritage – A History of Histories’ is written by a great reserach scholar P.N.Oak after years of research on this subject.

This was written way back in 1984 and I have read it long back with wonder. Some of the topics like Taj Mahal was a Hindu Temple, Vedic stanzas are in Koran, Aurangazeb’s grave is in a Goddess Temple-Yard etc. attracted me very much. While I am reading this book now, still it fascinates me.

Even though the subjects are controversial, the author has given ample authoritative evidence for the readers.

The author says that the dome of the Taj Mahal in Agra, near New Delhi, the capital of India, has lotus petals. The lotus petals in inlay-work girding its base, the inverted lotus on top of the dome and the trident pinnacle are all Hindu, Vedic features indicating that the fifth generation Mogul emperor, Shahjahan only requisitioned the Tejo Mahalaya Shiva Temple.

Most of the area in around the main building is under Archaelogical Department’s control and no visitor is permitted there. Oak says that there is ample evidence to prove his point in those areas.

 

The book has 92chapters in 1312 pages. The Vedic culture in the East, Vedic past of Japan, China, Korea and Manchuria, West Asia etc. are dealt in detail by the author. Supporting his theory, the author has given 56 photos also in the book.

The book makes an interesting reading.  It is argued in the book that the first immediate reaction of a large section of the public on reading an unheard of thesis of the kind expounded in this book is likely to be one of shock, disbelief and rejection. But the cogency of the argument, the continuity of the thread of the history and the comprehensive evidence are likely to be persuasive factors which may ultimately make the theme more agreeable and acceptable.

A detailed bibliography is also attached at the end of the book quoting 114 sources.

The reader may draw his own conclusion after digesting all the facts put forth in the book. Lastly, after going through the contents of this book, one will get the impression that the Indian history must definitely be re-written correctly.

Purushottam Nagesh Oak (Birth: 2 March 1917; Death: 4 December 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hindu-centric brand of historical revisionism. Oak’s “Institute for Rewriting Indian History” issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.    He has written more than twelve books. He was on the editorial staffs of the newspapers Hindustan Times and The Statesman.  He joined in the Ministry of Information and Broadcasting, India and served as class I officer for a long time.

In all, those who are interested in Indian History, should read this book without fail.

***

This article first appeared in www.ezinearticles.com

You may read Platinum Author Santhanam Nagarajan’s articles in the above site.

Pl follow the link to read about Taj Mahal :                         http://EzineArticles.com/expert/Santhanam_Nagarajan/19574

 

நம்மாழ்வாரின் 28 அற்புதப் பொன்மொழிகள் (Post No.3590)

Compiled by London swaminathan

 

Date: 30 JANUARY 2017

 

Time uploaded in London:-  19-59

 

Post No. 3590

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பிப்ரவரி 2017 காலண்டர்

துர்முகி வருடம் (தைமாசி மாதம்)

 

 

முக்கிய நாட்கள்:- பிப்ரவரி 3ரத சப்தமி, 9-  தைப்பூசம், 24-மஹா சிவரத்திரி.

ஏகாதசி- 7, 22; அமாவாசை- 26; பௌர்ணமி– 10

முகூர்த்த நாட்கள்1, 2, 6, 9, 16, 17, 23.

 

பிப்ரவரி 1 புதன்கிழமை

திரு உடம்பு வான்சுடர்; செந்தாமரை கண்; கை கமலம்

திரு இடமே மார்வம்; அயன் இடமே கொப்பூழ்;

ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே;

ஒருவு இடமும் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (3054)

 

பிப்ரவரி 2 வியாழக்கிழமை

ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்;

காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;

பேணுங்கால், பேணும் உரு ஆகும்….. (3062)

 

பிப்ரவரி 3 வெள்ளிக் கிழமை

உன்னைச் சிந்தை செய்து செய்து, உன் நெடு மா மொழி இசைபாடி, ஆடி, என்

முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் (3069)

பிப்ரவரி 4 சனிக்கிழமை

அனைவது அரவு- அணைமேல்; பூம்பாவை ஆகம்

புணர்வது; இருவர் அவர் முதலும் தானே;

இணவன் ஆம் எப்பொருட்கும்; வீடு முதல் ஆம்-

புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (3088)

 

பிப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை

கைம்மா துன்பம் கடிந்த பிரானே!

அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே-3099

(கைம்மா=யானை).

 

பிப்ரவரி 6 திங்கட்கிழமை

மகிழ் கொள் தெய்வம் உலோகம், அலோகம்

மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே!

மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்

மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே -3104

 

பிப்ரவரி 7 செவ்வாய்க்கிழமை

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்

வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்,

வளர் இளம் பொழில் சூழ்மாலிருஞ்சோலை

தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே–3110

 

பிப்ரவரி 8 புதன்கிழமை

வரும்காலம், நிகழ்காலம், கழிகாலம் ஆய், உலகை

ஒழுங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?-3125

 

பிப்ரவரி 9 வியாழக்கிழமை

கிற்பேன், கில்லேன் என்று இவன் முனம் நாளால்;

அற்ப சாரங்கள் அவை அகன்றொழிந்தேன்;

பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்

நற்பொன் – சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?—3137

 

பிப்ரவரி 10 வெள்ளிக் கிழமை

 

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை – வானவர் வானவர் – கோனொடும்

சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து

அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே -3144

 

பிப்ரவரி 11 சனிக்கிழமை

சாதி மாணிக்கம் என்கோ?

சவி கொள் பொன்முத்தம் என்கோ?

சாதி நல் வயிரம் என்கோ?

தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?-3157

 

பிப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை

கும்பிடு நட்டம் இட்டு ஆடி

கோகு உகட்டுண்டு உழலாதார்

தம்பிறப்பால் பயன் என்னே

சாது சனங்களிடையே?–3168

 

பிப்ரவரி 13 திங்கட்கிழமை

கனியை, கரும்பின் இன்சாற்றை,

கட்டியை, தேனை, அமுதை

முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்

முழுது உணர் நீர்மையினாரே—3170

 

 

பிப்ரவரி 14 செவ்வாய்க்கிழமை

ஒருமை மனத்தினுள் வைத்து,

உள்ளம் குழைந்து, எழுந்து, ஆடி,

பெருமையும் நாணும் தவிர்ந்து

பிதற்றுமின், பேதைமை தீர்ந்தே!-3174

 

பிப்ரவரி 15 புதன்கிழமை

தேவதேவனை, தென் இலங்கை

எரி எழச் செற்ற வில்லியை

பாவநாசனை, பங்கயத் தடங்

கண்ணனைப் பரவுமினோ -3177

 

பிப்ரவரி 16 வியாழக்கிழமை

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை

நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,

வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்

கலந்தார் அடியார்- தம் அடியார் எம் அடிகளே -3195

 

பிப்ரவரி 17 வெள்ளிக் கிழமை

அடிஆர்ந்த வையம் உண்டு, ஆல் இலை அன்னவசம் செய்யும்

படியாதும் இல் குழவிப்படி எந்தைபிராந் தனக்கு

அடியார் அடியார் தம் அடியார் அடியார்- தமக்கு

அடியார் அடியார் – தம் அடியார் அடியோங்களே -3196

 

பிப்ரவரி 18 சனிக்கிழமை

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ

எந்நாவில் இன்கவி  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் –3209

 

பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமை

மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண் தோள் என்று

பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே – 3215

 

பிப்ரவரி 20 திங்கட்கிழமை

இடர் இன்றியே, ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய

படர்புகர்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திந்தேர் கடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே –3224

பிப்ரவரி 21 செவ்வாய்க்கிழமை

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவார்கள்; ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -3233

 

பிப்ரவரி 22 புதன்கிழமை

ஏக மூர்த்தி இரு ஊர்த்தி

மூன்று மூர்த்தி பல மூர்த்தி

ஆகி, ஐந்து பூதம் ஆய்,

இரண்டு சுடர் ஆய், அருவு ஆகி – 3255

 

பிப்ரவரி 23 வியாழக்கிழமை

கண்ணன், எம்பிரான், எம்மான்

காலச்சக்கரத்தானுக்கே -3257

 

பிப்ரவரி 24 வெள்ளிக் கிழமை

அறியும் செந்தீயைத் தழுவி

அச்சுதன் என்னும்; மெய் வேவாள்;

எறியும் தண் காற்றைத் தழுவி

என்னுடைக் கோவிந்தன் என்னும்; -3266

 

பிப்ரவரி 25 சனிக்கிழமை

திரு உடை மன்னரைக் காணில்

திருமாலைக் கண்டேனே என்னும்;

உரு உடை வண்ணங்கள் காணில்

உலகு அளந்தான் என்று துள்ளும்;

கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்

கடல்வண்ணன் கோயிலே என்னும்;

வெருவிலும் வீழ்விலும் ஓவாள்;

கண்ணன் கழல்கள் விரும்புமே -3271

 

 

பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை

விரும்பிப் பகவரைக் காணில்

வியல் இடம் உண்டானே என்னும் -3272

(பகவர்= துறவி)

 

 

பிப்ரவரி 27 திங்கட்கிழமை

 

கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை

வண்-தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -3284

 

பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமை

கொள்ளமாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்

வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ என்று என்று-3298

 

–subham–