ஆவிகள் மூலம் அற்புத இசை! Post No. 2371

pepito2

 

Written  by S NAGARAJAN

Date: 8 December 2015

Post No. 2371

 

Time uploaded in London :– 5-35 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடரில் நவம்பர் 27,2015 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியானது.

ஆவிகள் மூலம் அற்புத இசை வழங்கிய இசை மீடியம்கள்!

 

.நாகராஜன்

இருபதாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் ஆவி உலக ஆராய்ச்சி உச்ச கட்டத்தை அடைந்தது.விஞ்ஞானிகள் கூப்பிட்ட இடங்களில் எல்லாம் சென்று மீடியம் என்று அழைக்கப்படும் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்வோரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

 

பல மீடியம்கள் மோசடிப் பேர்வழிகள் என்பதை அவர்கள் நிரூபித்தனர். பல கேஸ்களில் நடந்த நிகழ்வுகளுக்கு விஞ்ஞான ரீதியாக பதில் சொல்ல முடியாமல் அவர்கள் திகைத்தனர்;

இந்த மீடியம்களில் இசைத்துறை விற்பன்னர்களாக இருந்த சில ஆவிகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன.

 

 

உணர்வுடன் தன் இயல்பில் இருக்கும் போது அவர்களால் பாட முடியவில்லை. ஆனால் ஆவி உலகத் தொடர்பால் ஆவிகளுடன் தொடர்பு கிடைத்த போது பிரமிக்க வைக்கும் இசை மேதைகளாக அந்த நிலையில்  மட்டும் அவர்கள் மாறினர்!

1900 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது. பெபிடோ அரியோலா (Pepito Ariola) என்ற ஸ்பெய்ன் தேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவன் இண்டர்நேஷனல் சைக்கிகல் காங்கிரஸில் பேராசிரியர் ரிச்சட் (Professor Richet) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டான். அவர் பாரிஸில் பிஸியோலோஜி துறையில் பேராசிரியராக இருந்தார்.

குழந்தை ஒரு வருடத்திற்கு முன்பாகவே அதாவது இரண்டரை வயதில் பியானோவை இசைக்க ஆரம்பித்தது. தன் பிஞ்சு விரல்களால் எப்படியோ பியானோவில் உயர்ந்த ரக இசையைத் தந்தது. பியானோவை இசைக்கும் போது மட்டும் அதன் விரல்கள் வளர்ந்தது போல இருந்தது. இல்லாவிட்டால் எப்படி அந்தக் குட்டி விரல்கள் அப்படிப்பட்ட இசையை அள்ளித் தர முடியும்! ஒவ்வொன்றும் மணி மணியான இசைப் பாடல்!

 

நமது திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தோடுடைய செவியன் எனப் பாட ஆரம்பித்து பல்லாயிரம் பாடல்களைத் திருநெறிய தமிழாகத் தந்ததை இங்கு நினைவு கூரலாம்.

 

ப்ளைண்ட் டாம் என்னும் நான்கு வயதுக் குழந்தை சவுத் ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒரு நீக்ரோ குழந்தை. அந்தக் குழந்தையை முட்டாள் என்றே சொல்லி விடலாம்; ஒன்றுமே அதற்குத் தெரியாது. ஆனால் பியானோவில் வெள்ளை மற்றும் கறுப்பு ‘கீ’களை இரண்டு கைகளாலும் அமுக்கி இசையைத் தர ஆரம்பித்து விட்டால் அது தேவ கானமாக இருக்கும், தனது ஐந்தாம் வயதில், அவன் ‘ரெய்ன் ஸ்டார்ம்’ (Rainstorm) என்ற இசையைக் ‘கம்போஸ்’ செய்து பியானாவோல் இசைக்க ஆரம்பித்தான். இதை மழையும் காற்றும் இடியும் தன்னிடம் சொன்னதாக அவன் கூறினான்.

 

ஒரே சமயத்தில் இரண்டு டியூன்களை அவனால் பியானோவில் இசைக்க முடிந்தது. ஒரு கையால் ஒரு டியூனும் இன்னொரு கையால் இன்னொரு டியூனையும் அவன் இசைத்துக் காட்டி வாயால் இன்னொரு பாடலைப் பாடி அனைவரையும் அசத்தினான். அரங்கத்தில் குழுமி இருந்தோரில் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க அதற்கேற்றபடி டியூனை அவன் வாசித்துக் காட்டினான்.

 

பிரான்ஸை சேர்ந்த மீடியம் ஒருவரின் பெயர் ஜார்ஜ் ஆல்பர்ட்.. இவருக்கும் இசைத்துறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் ஆவி உலகில் இருக்கும் அற்புதமான இசை மேதைகளால் பியானோவை வாசிப்பதாகக் கூறி பியானோவை வாசித்துக் காட்டினார். 1906ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஜெனரல் சைக்கோலொஜிக்யூ’ என்ற நிறுவனம் இவரை ஆராய முன் வந்தது.

 

 

அவர் சுய உணர்வுடன் தன் திறமை மூலமாக பியானோவை வாசிக்க இயலாதபடி பல சோதனைகள் நடத்தப்பட்டன. ஆய்வை நடத்தியவர்கள் மொஜார்ட் சொனாடாவை இசைக்கும் படி வேண்டினர். அவர் கண்களைக் கட்டினர். இரண்டு கிராமபோன்கள் ஒரே சமயத்தில் இசைக்க, அதிலிருந்து டியூபுகள் அவர் காதில் செருகப்பட்டன. அவரோ மொஜார்ட் இசையை கச்சிதமாக அப்படியே வாசித்து அவர்களை பிரமிக்க வைத்தார்.

 

இன்னொரு சோதனையில் அவரிடம் தரப்பட்ட ஒரு பெரிய தத்துவ நூலை அவர் மெதுவாகப் படித்துக் கொண்டே பியானோவை இசைத்துக் கொண்டிருந்தார்! அவரிடம் வந்த ஆவி உலக இசை மேதைகள் : பீத்தோவன், பெர்லியாஸ், மெண்டெல்ஷான், மொஜார்ட், சோபின், ஷுமன், லிஸ்ஜ்ட், வேக்னர் உள்ளிட்ட பல இசை மேதைகள்!

 

அவரது சுய கல்பனைகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்ஸ்டிடியூட்டால் ரிகார்ட் செய்யப்பட்ட அவரது இசை தொலைந்து போய் விட்டது. 1920ஆம் ஆண்டு பாரிஸில் லா மெடிமின்டே ஸ்ப்ரிட் என்ற இடத்தில் ஒரு நிகழ்வில் தனது ஆவி உலகத்துடனான தொடர்பையும் எப்படி இசைமேதைகள் தன்னுள் ‘பிரவேசித்து’ இசை நிகழ்ச்சிகளை நடத்தினர் என்பதையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

 

1903 ஆம் ஆண்டு டீ பாயொன் என்ற பிரான்ஸ் தேசத்து இசை மீடியத்தை லண்டனில் கவுண்ட் ஹாம்மன் என்பவர் அறிமுகப்படுத்தினார். அவர் விக்டோரியா காலத்து சிறப்பு இசையான சர்டோ உள்ளிட்ட இசையை அவர் பிரமாதமாக வழங்கினார். தான் என்ன இசைத்தோம் என்பது அவருக்குத் தெரியவே தெரியாது. அவரது விரல்கள் விளையாடும்! ஒரு தரம் இசைத்ததை மறு தரம் அவரால் இசைக்க முடியாது!

 

இப்படிப் பலரும் ஆவிகளின் உதவியால் ‘இசை மேதைகளாக’ மாறியதைத் துல்லியமாக ஆய்வேடுகள் விளக்குகின்றன. சிலரைப் பொய் என்று விஞ்ஞானிகள் நிரூபித்த போதும் மேலே கூறப்பட்ட பல இசை மீடியம்களை விஞ்ஞானிகள் வியப்புடன் தான் பார்க்க முடிந்தது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

விண்வெளியில் பறந்த விண்வெளி வீரர்களின் மீது பல விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. 1992இல் கெல்லி மற்றும் கனஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட ஆய்வில் 54 விண்வெளி வீரர்கள் பங்கு கொண்டனர். இவர்கள் அனைவருமே விண்வெளியில் பறந்தது பரவசமான ஒரு அனுபவம் என்று கூறினர். விண்வெளியில் பறந்த அனுபவம் தகவல் தொடர்பில் மிகப் பெரும் முன்னேற்றத்தைத் தங்கள் வாழ்க்கையில் தந்ததாகவும் அவர்கள் கூறினர். 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தால் தாங்கள் சிறந்த ஆன்மீகவாதிகளாக ஆகி விட்டதாகத் தெரிவித்தனர். அத்தோடு நாடு மொழி என்ற குறுகிய எல்லையை விட்டு உலகளாவிய அளவில் எதையும் நோக்கும் பிரபஞ்ச பார்வை தங்களுக்கு வந்து விட்டதாகக் கூறினர்.

 

இன்னொரு ஆய்வு உளவியல் மற்றும் நடத்தை ரீதியாக நடத்தப்பட்டது. இதில் நடத்தையில் 34 விதமான மாற்றங்கள் விண்வெளி வீரர்களிடம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மனச் சோர்வு, விரக்தி, ஞாபக மறதி,  உள்ளிட்ட எதிர்மறை விளைவுகள் இந்த 34 மாற்றங்களில் அடங்கும். இவர்கள் அனைவருக்குமே பொதுவாக இருந்த ஒரு மாற்றம் அட்ஜஸ்ட்மெண்ட் டிஸ்ஆர்டர் என்பதாகும். நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டதால் நேரம், நாள், பேச்சு, நினைவு உள்ளிட்ட ஏராளமான விஷயங்களில் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்வது பெரிய காரியமாகி விட்டது என்பது இவர்களின் அனுபவம்!

 

 

ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தீர்க்கமான ஆய்வை நடத்திய பின்னரே விண்வெளியில் இன்றைய வெற்றியை விஞ்ஞானம் கண்டுள்ளது!

**************

 

3 JAIL ANECDOTES (Post No. 2370)

Jail_Cell

Compiled by London swaminathan

Date: 7 December 2015

Post No. 2370

 

Time uploaded in London :– 16-52

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

In the first days of the governorship of the State of New York, Al Smith spoke to the assembled inmates of Sing Sing Prison. Not until he had already risen to his feet did he realize that he did not know how to address the particular audience.

 

“My fellow citizens”, he said, almost without thinking, but then stopped, remembering that the citizenship of those there imprisoned was forfeited.

 

Embarrassed he said, “My fellow convicts”, and that too did not seem to be the most just. Giving the thing as hopeless he launched once and for all into the sentence, “Well in any case, I am glad to see so many of you here.”

Vector illustration of a man lock up in prison

Stupid English law

In an English act of parliament there was a law passed for rebuilding Chelmsford jail. By one part of the law the new jail was to be built from the material of the old one; by another part of the law, the prisoners were to be kept in the old jail until the new jail was finished.

 

John Bunyan in Jail

John Bunyan, while in Bedford jail, was called upon by a Quaker desirous of making a convert of him.

 

“Friend John”, said he, “I come to thee with a message from the Lord; and after having searched for thee in all the prisons in England, I am glad I have found thee at last.”

 

“If the Lord has sent you”, answered Bunyan, “you need not have had so much pains to find me out, for the Lord knows that I have been here for twelve years.”

john bunyan

Pilgrim’s Progress of John Bunyan

–Subham—

 

 

 

உடைந்த மெழுகுவர்த்தி கதை! POST No. 2369

broken

Compiled by London swaminathan

Date: 7 December 2015

Post No. 2369

 

Time uploaded in London :– 16-36

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

I have already posted it in English

ஒரு மாதா கோவிலில் கிறிஸ்த பாதிரியார் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அந்த பிராத்தனைக் கூட்டத்துக்கு பலவகைப்பட்ட மக்கள் வந்திருந்தனர். அவர்களில் சிலர் ஏழைகள், சிலர் பணக்காரர். சிலர் உடலூனமுற்றோர், மற்றும் சிலர் நல்ல பலசாலிகள். சிலர் ஆரோக்கியசாலிகள், மற்றும் சிலர் நோயாளிகள்.

 

அவர் சொன்னார்: கடவுள், எல்லோர் மீதும் ஒரே அளவில் கருணையைப் பொழிகிறார்.

 

இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் திடீரெனப் பளிச்சிட்டன. அவர் எதையோ கண்டுவிட்டார். மெதுவாகப் பேசிக்கொண்டே அதை நோக்கி நடந்தார். அவர் கண்டது, கீழே தரையில் கிடந்த ஒரு மெழுகு வர்த்தி ஆகும். அது உடைந்து கிடந்தது.

 

எல்லோர் முன்னாலும் அதைக் காட்டினார். எல்லோரும் எதற்காக என்று சிந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு தீப்பெட்டியை எடுத்து அந்த மெழுகுவர்த்தியை ஏற்றினார். உடைந்த மெழுகுவர்த்தி, மற்ற எல்லா வத்திகளைப் போலவே பிரகாசமாக எரிந்தது. அது உடைந்தது என்பதற்காக இறைவன் அதற்குப் பிரகாசத்தை மறுக்கவில்லை.

broken 2

கடவுளின் கருணையும் இதே போன்றதே. சூரியனின், சந்திரனின் ஒளி எப்படி வேறுபாடின்றிப் பாய்கிறதோ அப்படியே இறையருளும் அனைவர் மீதும் பொழிந்து கொண்டிருக்கிறது.

 

சுவாமி ராமதாஸ் சொன்ன கதை; தமிழ் மொழிபெயர்ப்பு—லண்டன் சுவாமிநாதன்

–Subham–

 

 

ஒரு ராமாயண ஜோக் — குட்டிக் குரங்கினால் நேர்ந்த விநோதம்!!! (Post No. 2368)

Sundarakanda1

Compiled by London swaminathan

Date: 27 November 2015

Post No. 2368

 

Time uploaded in London :– 13-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

ஸ்ரீ  ராமர், கிஷ்கிந்தை மஹாஜனங்களாகிய வானரக் கூட்டங்களுடன் ராவணனை ஜெயித்து, விபீஷணர்க்கும் பட்டங்கட்டி, சீதையை மீட்டுத் திரும்பி வருங்கால், பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் அனைவர்க்கும் விருந்து நடந்தது.

 

அதில் கறிவகைகளில் மொச்சக்கொட்டையும் போடப்பட்டிருந்தது. அப்போது சேஷ்டை மிக்க ஒரு குட்டிக் குரங்கு சும்மா இராமல், மொச்சக் கொட்டையைக் கையில் எடுத்து வைத்து அதைப் பிதுக்கிற்று. உடனே அதிலிருந்து பருப்பு விடுபட்டு மேலே எழும்பியது. அதனைப் பிடிக்க குட்டிக் குரங்கு மேலே பாய்ந்தது. அதனைப் பிடிக்க இன்னொரு குரங்கு பாய்ந்தது. அந்தக் குரங்கைப் பிடிக்க இன்னுமொரு குரங்கு பாய்ந்தது. இப்படியே வானர சைன்யங்கள் பூராவும் பாய்ந்தன.

 

தன்னினத்தார் எல்லாரும் பாய்வதைக் கண்ட அனுமார், ஏதோ அபாயம் வந்துவிட்டதென்று எண்ணி,  எல்லோருக்கும் மேலே எகிறி ஒரு குதி குதித்தார். இதனைக் கண்ட லெட்சுமணப் பெருமாள், அனுமாரே பாய்வதென்றால், பெரும் ஆபத்து வருகிறது என்று கணக்குப் போட்டு, வில்லை நாணேற்றி சங்கத்வனி செய்ய ஆரம்பித்தார். அதைப் பார்த்த ராமர், யாரோ புது பகைவர் வந்துவிட்டார்கள் என்று கருதி படபடப்புடன் வில்லை நானேற்றித் திரும்பித் திரும்பி நாலா புறமும் பார்த்தார். ஒருவரையும் காணோம். பிறகு சங்கதியை விசாரிக்க குட்டிக் குரங்கின் சேஷ்டையே இவ்வளவுக்கும் காரணம் என்று தெரிந்தது. எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர்!!

IMG_2647

-சுபம்–

 

God is for the Humble (Post No. 2367)

567-Sri-Ramakrishna-Paramahamsa

Compiled by London swaminathan

Date: 27 November 2015

Post No. 2367

 

Time uploaded in London :– 9-54 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Sri Ramakrishna Paramahamsa was a humble devotee of Mother Kali. He was childlike in all his talks, actions and ways of life. Once Keshab Chandra Sen went to see him.  He heard about the fame of Sri Ramakrishna. In the course of his talk, Keshab Chandra Sen said he had recently enacted a religious drama in which he took the chief part. Sri Ramakrishna quietly listened. A disciple of Keshab Chandra Sen said that Keshab played his part very well and everybody applauded him they were planning to enact another drama. Keshab Chandra Sen jokingly asked Sri Ramakrishna if he would like to take part in it and if so what role. Without a moment’s hesitation, Sri Ramakrishna replied, “I shall take the part of the dust of your feet.”

 

What was the result of his reply? Sudden stillness and silence. By humbling themselves, saints humble others. When we reduce ourselves to dust, we realise the glory of the Spirit within.

 

–Swami Ramdas of Anandashram narrated this anecdote.

 

 

முட்டாள் யார்? (Post No: 2366)

horses

Compiled by London swaminathan

Date: 27 November 2015

Post No. 2366

 

Time uploaded in London :– 8-21 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

சில வியாபாரிகள் ஓர் இராஜாவிடம் சென்று குதிரையைக் காட்டி விலை கூறினர். அரசன் அவற்றையேற்றுப் பின்னும் பல குதிரைகளைக் கொண்டுவரும்படி கூறி லக்ஷம் ரூபாய் கொடுத்தனுப்பினார். அப்படியே வியாபாரிகள் சென்றனர்.

 

மூன்றாம் நாள் அரசன் போதையாயிருக்கும் போது, “மந்திரி நம் தேசத்திலிருக்கும் முட்டாள்களின் பெயரை எழுதி ஒரு பட்டியல் கொண்டுவா “ என்றார்.

 

மந்திரி அவ்வாறே எழுதிக் கொண்டுவர அரசன் அதைப் பார்த்துக் கோபம் கொண்டான். என் பெயரை ஏன் முதலில் எழுதிவைத்தாய்? என்றான். அதற்கு மந்திரி, “யாதொரு ஆதாரமும் இல்லாமல் வழிப்போக்கர்களாகிய குதிரை வியாபாரிகளுக்கு லக்ஷம் ரூபய் கொடுத்தீர்களே! இது முட்டாள்தனமல்லவோ? ஆதலினால்தான் உமது திருநாமம் முதலில் வந்தது என்று சொன்னார்.

 

“அவர்கள் குதிரைகளைக் கொண்டுவந்துவிட்டால், என்ன செய்வாய்?”

என்று அரசன் கேட்டார்.

fool

உமது திருநாமத்தை எடுத்துவிட்டு, அவர்கள் பெயரைப் பதிந்துவிடுவேன்” என்றார் மந்திரி.

 

–சுபம்–

 

ஓஸோன் உறை பாதுகாப்பின் அவசியம்(Post No: 2365)

ozone1

Radio Talk written by S NAGARAJAN

Date: 27 November 2015

Post No. 2365

 

Time uploaded in London :– 6-37 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ozone2

ஓஸோன் உறை என்பது வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் உள்ள ட்ரோபோஸ்பியர் (Troposphere) என்று அழைக்கப்படும் முக்கிய பகுதியாகும். இதில் மாசு ஏற்பட்டால் தீவிரமான சுவாச சம்பந்தமான கோளாறுகள் மனிதர்களுக்கு ஏற்படும். விவசாய அறுவடைகள் பாதிக்கப்படும்,கட்டுமான வேலைகளும் பாதிக்கப்படும்.

 

 

இந்த ஒஸோன் உறையை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தங்கள் நாட்டைப் பொறுத்த வரையில் ஆராய முடிவு செய்து ஆராய ஆரம்பித்தனர். ஒஸோன் உறையைப் பாழ்படுத்துவது வாகனங்கள் வெளியேற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடும் கார்பன் டை ஆக்ஸைடுமே  என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். தொடர் இரசாயன மாறுதல்கள் மூலம் இந்த நச்சுப்புகை ஓஸோனைத் துளைக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

 

 

கடந்த 15 ஆண்டுகளாக லண்டன் மாநகரில் சேகரிக்கப்பட்டிருந்த தரவுகளிலிருந்து தங்கள் ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு இந்த மாசானது ஐரோப்பியப் பகுதியில் ஏற்படும் மாறுதல்களை மட்டுமே சார்ந்ததாக இல்லை; உலகளாவிய அளவில் ஏற்படும் மாறுதல்களும் இப்பகுதியை பாதிக்கின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

 

 

இதிலிருந்து நாம் அறிவது உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் மாசு அந்தப் பகுதியை மட்டும் சார்ந்ததாக இல்லை. அது உலகின் ஏனைய பகுதிகளையும் பாதிக்கிறது என்பது தான்.

 

 

ஆகவே ஒஸோனை பொருத்தவரையில் எல்லா நாடுகளும் கூடி மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை ஏற்படுத்தி அவற்றை தீவிரமாக அமுல்படுத்த வேண்டும் என்ற முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர்.

 

 

ஓஸோன் பாதிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் சற்றுக் குறைந்திருந்தது; ஆனால் இப்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ozone.3

 

ஓஸோன் பாதிப்பு என்பது உலகப் பிரச்சினையாக இருப்பதால் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அதில் பொறுப்பு உண்டு அதைத் தவிர்க்கவும் தடுக்கவும் எல்லா விதமான நடவடிக்கைகளையும் ஒவ்வொருவரும் எடுத்தல் இன்றியமையாதது!

 

***

Miracle Story: The Great Transformation (Post No: 2364)

Purandar stamp

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 26 November 2015

Post No: 2364

 

Time uploaded in London :–  15-24

(Thanks  for the pictures) 

 

Purandharadas was a rich jeweller, but very miserly. God in the form of Haridas came to him daily for six months begging for some help for the Upanayanam (sacred thread ceremony) of his son. The rich man refused to give him any help. He abused him and sent him away every day. This continued for six months.

 

At last, he threw a bad coin to him. Haridas then went to merchant’s wife and narrated that he had been going to merchant daily for six months and finally got a bad coin from him – a bad man. The wife knew whom he was referring to and did not like her to be called a bad man. She tried to send Haridas away by saying, “What do you want? I can give you some grain only.”

 

Haridas: No I want money

Woman: I have not got any money.

Hari: If you have a mind to give, you have enough to give. You have your diamond nose ring. That will quite serve my purpose. (She hesitated).If you do not like to give, I shall go somewhere else.

Wom: No, No. you are God himself. How can I allow you to go away without giving you what you want?

She then removed the nose ring and was about to give it to him.

Hari: What will your husband do when you hears about it?

Wom: what does it matter? I am prepared even to give my life for you.

Har: Then say and “Krishnarpanam” (dedicate it to Lord Krishna) and give.

 

FDC pf Purandhar

The woman said ‘Krishnarpanam’ and gave the nose ring to Haridas. He then straight went to the merchant (her husband) under the pretext of selling it. Seeing Haridas coming, the merchant in a contemptuous tone, asked, “Shameless fellow, have you come again?”

 

Hari: I have come here to do business, not to beg. Take this give me its price.

The merchant took the ornament from Haridas. He could recognise that it was his wife’s nose ring. He asked Haridas from where he got the jewel to which he replied a generous woman gave it to him as a present.

Merchant: You thief, is it true that you got it as a present?

Hari: Thief! Krishna also was a thief.

Mer: If Krishna was a thief, must you also be one? Come here tomorrow. I shall deal with you then.

 

Haridas left, and the merchant, in a fit of rage, came straight to his house and knocked at the door. Hearing the knocks, the wife thought that it was another devotee who had come for alms and asked, “Is it Gopaladasayya?”

Mer:Ha, Gopaladasayya, I shall show you Gopaladasayya by a slap on your cheek. Open the door.

The door was opened. The merchant asked his wife, “What did you give to that beggar?

Wife: I gave him alms.

Merc: What alms?

Wife: I gave him some maize.

Mer: You gave him your nose ornament with as big a diamond as maize. Where is your nose ornament, tell me?

 

 

liramdas

Wife: I have kept it in the Puja room.

Mer: Bring it here immediately.

Wife: I shall do Tulsipuja and then go to the Puja room to get it.

Mer: Now you have no other go but to take refuge in Tulsi (Holy Basil plant).

She was greatly agitated. She performed her usual puja to Tulsi, with folded hands, and prayed: “O, Mother, save me from this situation. If you are not going to help me now, I must commit suicide.”

With her eyes closed, she was standing still. There was a sudden ‘tuk’ noise. She opened her eyes. Lo! Her nose ornament had dropped down from somewhere near the Tulsi! She took it to her husband.

Mer: Ha, how could this come here? I had locked it in my box in the shop. He ran up to his shop and found it was not found in the box where he had kept it.

 

Now came the great transformation. Haridas whom he hated and despised for six months daily, had gone away. The merchant was thirsting for a look at him. He started wailing, “Oh, Haridas, I must see you again. Without having a look at you, I cannot live for another minute. Come to me.”

 

Then came a voice from the Heaven: “Why do you want to see Haridas form. I shall come in my own form.” Suddenly there was a flash of light and there stood Lord Krishna, giving darshan (appearance) to the miserly merchant. He distributed all his wealth to the poor and with his wife left for Vijayanagar to serve in the temple of Vijaya Vithoba. There he came to be known as Purandhardas.

Hints to aspirants cover a

Purandharadasa is considered the Father of Carnatic Music. He composed lot of songs on Krishna (Vitobha).

 

Story narrated by Swami Ramdas of Anandashram in North Kerala.

–Subham–

டிசம்பர் 2015 காலண்டர் ( Post No. 2363 )

IMG_8421

(மன்மத வருஷம்,கார்த்திகை/மார்கழி)

இந்த மாதக் காலண்டரில், பலம், மானம் பற்றிய 31 அரிய சம்ஸ்கிருத பழமொழிள் இடம் பெறுகின்றன.

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 26 நவம்பர் 2015

Post No:2363

 

Time uploaded in London :–  8-36

(Thanks  for the pictures) 

 

முக்கிய நாட்கள்: டிசம்பர் 11- பாரதி பிறந்த நாள்,  17- மார்கழி மாதப் பிறப்பு,  21 வைகுண்ட ஏகாதசி, 24 மிலாடி நபி, 25 கிறிஸ்துமஸ் , 26 ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை)

 

 

 

அமாவாசை –  டிசம்பர் 11

ஏகாதசி – டிசம்பர் 7, 21 வைகுண்ட ஏகாதசி

பௌர்ணமி— டிசம்பர் 25

 

முகூர்த்த நாட்கள்: டிசம்பர் 6, 7.

IMG_8423

டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமை

துர்பலஸ்ய பலம் ராஜா – ஹிதோபதேசம்

பலமில்லாதவர்களுக்கு அரசனே துணை

(ஒப்பிடு: திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை)

 

டிசம்பர் 2 புதன்கிழமை

திக் பலம் க்ஷத்ரிய பலம்

ப்ரம்மதேஜோ பலம் பலம் – மஹாபாரதம்

அரசர்களுடைய பலம் பெயரளவுக்குதான்; ஆன்மீக பலமே பெரிய பலம்

(ஒப்பிடுக: புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம் – அவ்வையார்)

 

டிசம்பர் 3 வியாழக்கிழமை

நாஸ்தி ச ஆத்ம சமம் பலம் – சாணக்ய நீதி

தனக்குத்தானே பலம் (ஒருவன் மற்றவர்களைச் சார்ந்திருப்பதைவிட தன் சுய பலத்தையே நம்பியிருக்க வேண்டும்.

 

டிசம்பர் 4 வெள்ளிக்கிழமை

ப்ரக்ஞா நாம பலம் தஸ்மான் நிஷ்ப்ரஜஸ்ய பலேன கிம்? – கதா சரித் சாகர்

புத்திதான் உண்மையான பலம்; மற்றவற்றால் என்ன பயன்? (உடல் பலம் உண்மையான பலம் அல்ல).

 

டிசம்பர் 5 சனிக்கிழமை

பலம் மூர்கஸ்ய மௌனித்வம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

முட்டாள்களுக்கு மௌனமே பலம்.

 

டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை

பலீயசீ கேவலம் ஈஸ்வர இச்சா – மஹாபாரதம்

ஆசையில் பெரியது, இறைவன் மீதுள்ள ஆசையே!

ஒப்பிடு: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு- குறள்

 vishnu

டிசம்பர் 7 திங்கட்கிழமை

சௌராணாம் அந்ருதம் பலம்  — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

திருடர்களுக்கு பொய்தான் பலம்.

 

டிசம்பர் 8 செவ்வாய்க்கிழமை

துல்யே பலே து பலவான் பரிகோபமேதி – பஞ்ச தந்திரம்

சமமான பலமுள்ளவனிடத்தில்தான், பலசாலி

கோபத்தைக் காட்டுவான் (பலம் குறைந்தவர்களிடம் சண்டை போட மாட்டான்)

 

டிசம்பர் 9 புதன்கிழமை

பாலானாம் ரோதனம் பலம் — சு.ர.பா

சிறுவர்களுக்கு அழுகையே பிரதானம்

 

டிசம்பர் 10 வியாழக்கிழமை

பாஹூ மே பலமிந்த்ரியம் – யஜூர் வேதம்

தோள் வலிமையே பெரிய சொத்து.

mosquito-illustration_360x286

டிசம்பர் 11 வெள்ளிக்கிழமை

மசகஸ்ய பலம் கியத்?

கொசுவுக்கு என்ன பலம்?

 

டிசம்பர் 12 சனிக்கிழமை

யஸ்ய புத்திர்பலம் தஸ்ய நிர்புத்தேஸ்து குதோ பலம் – பஞ்ச தந்திரம்

யாரிடம் மூளை இருக்கிறதோ அவனிடம் பலம் உண்டு; புத்தியில்லாதவனிடம் பலம் எங்கே?

 

டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை

ரூப யௌவன மாதுர்யம் ஸ்த்ரீணாம் பலம் அனுத்தமம் – (சாணக்ய)

பெண்களின் பெரிய பலம்: அழகு, இளமை, இனிமை.

 azaki tamil

டிசம்பர் 14 திங்கட்கிழமை

வீரபோக்யா வசுந்தரா

இந்த பூமியானது வீரர்களுக்கே சொந்தம்.

 

டிசம்பர் 15 செவ்வாய்க்கிழமை

ஹிம்சா பலம் அசாதூனாம் – மஹாபாரதம்

கெட்டவர்களின் பலம் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதே

 

டிசம்பர் 16 புதன்கிழமை

அப்ரகடீக்ருதசக்தி: சக்தோபி ஜனஸ்திரஸ்க்ரியாம் லபதே– பஞ்ச தந்திரம்

தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தாத சக்திமான், பழிச்சொல்லுக்கு ஆளாவான்.

 

டிசம்பர் 17 வியாழக்கிழமை

அவக்ஞாத்ருடிதம் ப்ரேம நவீகர்தும் க ஈஸ்வர:

அவமரியாதையில் உடைந்த அன்பை எந்தக் கடவுள்தான் ஒட்ட வைப்பான்?

(கடவுளினாலும் முடியாது)

 

டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை

உன்னதோ ந சஹதே திரஸ்க்ரியாம் – கிராதர்ஜுனீயம்

உயர்ந்த மனிதன், வசவுகளைப் பொறுக்கமாட்டான்

 

டிசம்பர் 19 சனிக்கிழமை

பரிபவோரரிபவோ ஹி சுது: சஹ: – சிசுபாலவதம்

எதிரியினிடம் அடையும் தோல்வி பொறுத்துக் கொள்ள முடியாததே

 

டிசம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை

மோன ஹானி: குத: சுகம்?

மானம் போன பின்னால் சுகம் எங்கே?

 Vishnu_1

டிசம்பர் 21 திங்கட்கிழமை

வரம் ம்ருத்யுர்ன புனரபமான:

அவமானத்தை விட சாவே சிறந்தது

 

டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை

சந்தத கமனாதனாதரோ பவதி – சு.ர.பா.

அடிக்கடி செல்வது மரியாதைக் குறைவு

(பழகப் பழகப் பாலும் புளிக்கும்)

ஒப்பிடு: முதல் நாள் தலை வாழை இலையில்

இரண்டாம் நாள் தையல் இலையில்

மூன்றாம் நாள் கையில் (சாப்பாடு கிடைக்கும்).

 

டிசம்பர் 23 புதன்கிழமை

கஜானாம் பங்கமக்னானாம் கஜா ஏவ துரந்தரா: – ஹிதோபதேசம்

யானைகள் சகதியில் சிக்கினால் யானைகள் தான் அவைகளைக் காப்பாற்றமுடியும்

(ஒப்பிடுக: யானையால் யானை யாத்தற்று)

 

 

டிசம்பர் 24 வியாழக்கிழமை

தாரு சஸ்த்ர ப்ரஹாரேண ம்ருகேந்த்ரோ நைவ ஹன்யதே- கஹாவத்ரத்னாகர்

மரக் கத்தியை வைத்து சண்டை போட்டு சிங்கத்தைக் கொல்ல முடியாது

 

டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை

ந நிர்பலா பாத்ரபதோ ஹி ஸ்ராவணாத்- கஹாவத்ரத்னாகர்

ஆவணிக்கு சளைத்தது அல்ல புரட்டாசி!

(இரண்டும் பருவ மழை கொட்டும் மாதங்கள். புரட்டாசியில் கல்யாணம் செய்ய மாட்டார்கள்; ஆவணியில் நல்ல காரியங்களைச் செய்வார்கள்)

 Nataraja atom

டிசம்பர் 26 சனிக்கிழமை

ந வ்யாக்ரம் ம்ருகசிசவ: ப்ரதர்ஷயந்தி- ப்ரதிமா நாடகம்)

மான்குட்டிகள் புலிகளைத் தாக்காது.

 

டிசம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை

ந ஹி துல்யம் பலம் சௌம்ய ஸ்த்ரியாஸ் ச புருஷஸ்ய ஹி – வால்மீகி ராமாயணம்

அன்பரே! ஆணும் பெண்ணும் சம பலம் படைத்தவர் அல்ல

 

டிசம்பர் 28 திங்கட்கிழமை

ப்ரபலே துர்பலே ஜாதே துர்பல: ப்ரபலாயதே – கஹாவத்ரத்னாகர்

பலவான், பலவீனம் அடையும் போது, பலமற்றவன் வலிமையுள்ளவனாகிறான்

(ஒப்பிடு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்)

 

டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை

பக்னாதி மசகமேவ லூதாதந்துர்ன மாதங்கம் —விக்ரம சரித

சிலந்தி வலையில் கொசுதான் சிக்கும், யானை சிக்காது!

spider

டிசம்பர் 30 புதன்கிழமை

பலம் ஹி சித்தம் விகரோதி – சாணக்கியர்/கௌடில்யர் அர்த்தசாஸ்திரம்

உடல் பலம், உள்ளத்துக்கு உரமூட்டும்

(ஒப்பிடுக: இளைஞர்கள், பகவத் கீதை படிப்பதைவிட கால்பந்து ஆடுவதையே நான் விரும்புகிறேன். பலவீனனால் இந்த ஆத்மாவை ஆடைய முடியாது என்று உபநிஷதம் கூறுகிறது:- சுவாமி விவேகாநந்தர்)

 

டிசம்பர் 31 வியாழக்கிழமை

வஜ்ரம் வஜ்ரேண பித்யதே- சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 2-45

வைரத்தை வைரத்தால்தான் அறுக்கமுடியும்

(ஒப்பிடுக: முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்).

 _diamonds_

ஜனவரி 1 வெள்ளிக்கிழமை (2016)

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! மங்களம்! சுப மங்களம்!!

காற்றில் மாசை ஏற்படுத்துவது வாகன நச்சுப் புகையே! ( Post No. 2362 )

smoke1

Radio Talk written by S NAGARAJAN

Date: 26 November 2015

Post No. 2362

 

Time uploaded in London :– 6-26 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

emissions-smoke

பெரு நகரங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேம்பட்ட அளவில் காற்றை மாசுபடுத்துவது வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையே! சென்ற பத்தாண்டுகளில் உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் டீஸல் வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையை சுவாசிப்பவர்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாவதைச் சுட்டிக் காட்டுகின்றன. இதனால் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

 

 

டீஸல் எரிபொருளைப் பயன்படுத்தி  இயக்கப்படும் லாரிகள் வெளியேற்றும் புகை நச்சுப்புகை என்று 1998ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட்து. 2012ஆம் ஆண்டு  ஜூன் மாதம் உலக சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANISATION) டீஸல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது (Carcinogenic) என்று அறிவித்துள்ளது.Particulate Matter எனப்படும் துகள்மப் பொருளையும் நைட்ரஜன் ஆக்ஸைடையும் அதிக அளவில் டீஸல் வாகனங்கள் வெளியேற்றுகின்றன. பெட்ரோலால் இயக்கப்படும் வாகனங்களோ கார்பன் மானாக்ஸைடையும் ஹைட்ரோகார்பன்களையும் வெளியேற்றி காற்றை மாசுபடுத்துகின்றன.

 

 

வாகனங்களில் மாசைக் கட்டுப்படுத்தும் அதி நவீன எஞ்சின்களைப் பொருத்துவது, வாகனங்களைச் சரியான முறையில் பராமரிப்பது, அவ்வப்பொழுது வாகனங்களைச் சோதனைக்குட்படுத்தி நச்சுப்புகை கட்டுப்பாட்டிற்கான சான்றிதழை புதுப்பிப்பது போன்ற வழிகளை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

 

 

இது ஒருபுறமிருக்க மாசு என்றாலேயே வெளிப்புறத்தில் ஏற்படும் மாசைப் பற்றியே நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் வீட்டிற்குள் ஏற்படுத்தப்படும் காற்று மாசைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. கிராமங்களையே அதிகமாகக் கொண்டுள்ள நம் நாட்டில் அன்றாட சமையலுக்காக வீடுகளில் விறகுகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு தொடர் இருமலும் நுரையீரலில் புற்று வியாதியும் நியுமோனியாவும் வர அதிக வாய்ப்புள்ளது. ஆகவே இவற்றைப் பயன்படுத்துவோர் எல் பி ஜி போன்ற மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும்.

 

 

இது இன்றைய நாட்களில் அவசியத் தேவை அவசரத் தேவையும் கூட!

 

***