பாரதி பாடிய பெருந்தலைவர்கள்! (Post No. 2381)

Written by London swaminathan

Date: 11 December 2015

Post No. 2381

 

Time uploaded in London :–8-24 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Subramanya Bharati- born on 11 December 1882

Died on 11 September 1921

 

டிசம்பர் 11 – பாரதி பிறந்த நாள்

பாரதியை நாம் எல்லோரும் புகழ்கிறோம். பாரதியால் புகழப்பட்டோர் யார்? எவர்? என்று பார்த்தோமானால் அது மிக நீண்ட பட்டியலாகிவிடும். இவ்வளவு பேரைப் பாரதி பாடினார் என்பதை அறியும் போது அவரது பரந்த மனப்பான்மை நமக்கு விளங்கும்.

 

 

பேஸ்புக்—கில் ஒரு ‘லைக்’ போடக் கஷ்டப்படும் நமக்கு, பாரதி எத்தனை பேருக்கு ‘லைக்’ (பிடிக்கும் என்று) போட்டிருக்கிறார் என்பதை அறிகையில் அவரது கனிவும் பணிவும் புரியும். நாம் பாராட்டினால் அவை நீர் மேல் எழுத்தாக மறைந்துவிடுகிறது. பாரதி போன்ற “மந்திரம்போல் சொல்லின்பம்” உடைய கவிஞன் பாராட்டினாலோ அது கல் மேல் எழுத்தாகி காலத்தால் அழியாததாகிவிடுகிறது.

 

 

பாரதி பாடாத கடவுள் இல்லை. போற்றாத புராண இதிஹாச புருஷர்கள் இல்லை. கர்ணனும் பார்த்தனும், சகுந்தலையும் பரதனும், வீமனும் தர்மனும் அவரால் பாடப்பட்டனர். இந்தப் பட்டியலைத் தராமல் அவர் பாடிய தலைவர்களை யும், சாதனையாளர்களையும், கவிஞர்களையும் மட்டும் காண்போம்.

 

உலக மகா இலக்கிய வித்தகன் பாணினி, இந்துமதத்தைப் புனருத்தாரணம் செய்த, ஷண்மத ஸ்தாபர் ஆதிசங்கரர், உலக மஹா கவிஞன் காளிதாசன், தமிழ்ப் புலவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவன், அவ்வை, இந்துமதத்தை முஸ்லீம் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய வீர புருஷர்களான வீர சிவாஜி, குருகோவிந்த சிம்மன், மதத்தலைவர்களான ஏசு, புத்தன், தயானந்தர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், சுதந்திரப் போராட்டத் தலைவர்களான காந்திஜி, கோகலே, திலகர், தாதாபாய் நவுரோஜி, லாலா லஜபதி ராய், வ.உ.சி. முதலானோர் அவரால் பாடப்பட்டனர்.

 

வான சாஸ்திர மேதை பாஸ்கராசார்யார், மாமன்னன் அசோகன், கொடை வள்ளல் பாரி, சுவாமி விவேகாநந்தர், அவரது சீடர் நிவேதிதா, ஓவியர் ரவிவர்மா, தாயுமானவர், சுவாமி அபேதாநந்தா, வேல்ஸ் இளவரசர், குவளைக்கண்ணன்,வெங்கடேசு ரெட்டப்ப பூபதி,   நாம் அறியாத பல சாமியார்கள்:– சித்தாந்த சாமி, கோவிந்த சாமி, யாழ்ப்பாணத்துச் சாமி, மாங்கொட்டைச்சாமி, குள்ளச் சாமி, சுப்பராம தீட்சிதர் என்று பலரையும் போற்றிப் பாடியுள்ளார்.

இதாலிய தலைவர் மாஜினியையும் பாடினார். தாகூர்,தாமஸ் மூர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி மற்றும் பலரின் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்தார். ஆண்டாள், நம்மாழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனால் இவரையும் பாடாமல் பாடினார்.

 

ரஷிய மன்னன் ஜார், ஆங்கில விஞ்ச் துரை முதலியோரை வசை பாடியுள்ளார்!

பாரதியின் போற்றுதலுக்குள்ளானோர் பட்டியலில் இன்னும் பலருமுண்டு. என் பட்டியல் முழுமையான பட்டியலன்று. அகத்தியர் — வேத, புராண, இதிஹாசத்தில் அடிபடும் ரிஷியின் பெயராகும். அவரையும் இரண்டு இடங்களில் பாடியுள்ளார்.

 

இதோ, பாரதி பாடிய சில புகழ்மிகு வரிகள்:

பாடல் 1

கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும்

காளிதாசன் கவிதை புனைந்ததும்

உம்பர் வனத்து கோளையும் மீனையும்

ஓர்ந்ததளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்

நம்பருந்திறலோடொரு பாணினி

ஞாலமீதில் இலக்கணம் கண்டதும்

இம்பர் வாழ்வின் இறுதிகண்டுண்மையின்

இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்

பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பாரளித்து தர்மம் வளர்த்ததும்

பேரருட்சுடர் வாள் கொண்டு அசோகனார்

பிழைபடாது புவித்தலம் காத்ததும்

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்

வீழ்த்திவென்ற சிவாஜியின் வெற்றியும்

அன்னர் யாவும் அறிந்திலர் பாரதத்து

ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

பாடல் 2

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ் நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி

யாரம்படைத்த தமிழ்நாடு

 

பாடல் 3

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை

உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை

 

பாடல் 4

 

அகத்தியன் பற்றி தமிழ்த் தாய் சொல்வது:——

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்

 

பாடல் 5

அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்

அன்பினிற் போகுமென்றே – இங்கு

முன்பு மொழிந்துலகாண்ட புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

பாடல் 6

உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவள் என்று அறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!

பண்டாய்ச்சி அவ்வை அன்னையும் பிதாவும்

பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ

 

பாடல் 7

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டுப்

பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க!

 

பாடல் 8 (உ.வே.சா. பற்றி)

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

காலமெல்லாம் புலவர் வாயில்

துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே

 

பாடல் 9

தாயுமானவர் பற்றி

இறவாய் தமிழோடிருப்பாய் நீ

பாடல் 10

நிவேதிதா பற்றி

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

பெரும்பொருளாய் புன்பைத் தாகச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

நிவேதியைத் தொழுது நிற்பேன்.

 427-Kambar

 

இடம் கருதி இத்தோடு நிறுத்துகிறேன் ஏனைய கவிதைகளை பாரதியார் கவிதைத் தொகுப்பில் காண்க.

பாரதி வாழ்க! பாரதி வளர்த்த தமிழ் வாழ்க!!

 

–சுபம் —

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11 (Post No. 2380)

bharati drawing

Written by S NAGARAJAN

Date: 11 December 2015

Post No. 2380

 

Time uploaded in London :– 5-36 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாரதி இயல்

டிசம்பர் 11 பாரதியார் பிறந்த தினம். உலக மகாகவியைப் போற்றுவோம்.

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11

ச.நாகராஜன்

 

 

பாரதி பிறந்தார்

 

பாரதியார் புகழ் உலகெங்கும் பரவ உத்வேகமூட்டிய ஒரு நிகழ்ச்சி எட்டயபுரத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் பாரதி ஞாபகார்த்த மணிமண்டப அஸ்திவார விழாவாகும்.

மிக பிரம்மாண்டமான அளவில் பாரதி ஆர்வலர்கள் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பெரு முயற்சியால் நடந்தது.

ராஜாஜி அஸ்திவாரக்கல்லை நட கூடியிருந்தோர் மகிழ்ச்சியில் திளைக்க அழகாக நடந்த விழா தமிழக சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.

 

 

இந்த அஸ்திவார விழாவுக்கு அஸ்திவாரம் போட்டது ஒரு கட்டுரை. அதை கல்கி எழுதியிருந்தார். இதைப் படித்த சி.ரகுநாதன் ஐந்து ரூபாயை அனுப்பி இருந்தார். ஐந்து ரூபாயிலிருந்து ஆரம்பித்த நிதி சுமார் நாற்பதினாயிரம் ரூபாயைத் தாண்டியது அந்தக் கால அதிசயம்.

இந்தக் கட்டுரையையும் பொழுது புலர்ந்தது என்ற அஸ்திவார விழ பற்றிய கட்டுரையையும் இணைத்து இன்னும் ஏழு கட்டுரைகளுடன் பாரதி பிறந்தார் என்ற நூலை சின்ன அண்ணாம்லை தனது தமிழ்ப்பண்ணை வாயிலாக ஆகஸ்ட், 1945இல் (முதல் பதிப்பாக) வெளியிட்டார்.

 

பாரதி ஆர்வலர்களால் நினைவு கூர வேண்டிய ஒரு விழா கவிஞன் பிறந்த எட்டயபுரத்தில் நடந்த இந்த பாரதிப் பெருவிழாவாகும்.

அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இந்தப் புத்தகம்.

நூலில் ஏராளமான சுவையான சம்ப்வங்களைப் படிக்கலாம் – கல்கியின் சுவாரசியமான தமிழ் நடையில். இரட்டிப்புச் சந்தோஷம் உருவாகும்.

 

சின்ன அண்ணாமலை தன் முன்னுரையில் இறுதியில் கூறுவது:-

“ ஒரு காலத்தில் ஆங்கிலம் படித்தவர்களிடையே தமிழ்ப் புத்தகங்களையும் தமிழ்ப் பத்திரிகைகளையும் தொடுவதே கேவலமாகக் கருதப்பட்டது. அத்தகைய மனப்பான்மையைப் போக்கி இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் தமிழ் வெள்ளம் பரவும்படி செய்தவர் கல்கி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

பாரதியார் கவிதைக்கு எப்படிப் புது மலர்ச்சியை அளித்தாரோ, அப்படித் தமிழ் வசனத்திற்கு மறு மலர்ச்சி உண்டாக்கியவர் கல்கி. எட்டயபுரம் பாரதி ஞாபகார்த்த மண்டபத்தின் மூலம் அந்த இருவரின் பெயர்களும் ஒந்றாக இணைந்து விட்டன. ஸ்ரீ கல்கி அவர்களுக்குத் தமிழ் மக்களிந் சார்பாக நன்றி கூறுகிறோம்.”

 

ஆரம்ப காலத்தில் பாரதியாரை ஒரு கவிஞர் என்ற வகையில் கல்கி ஒப்புக் கொண்டதையும் உலக மகாகவி என்பதை ஏற்க மறுத்ததையும் இதற்கு முன் வெளி வந்த அத்தியாயத்தில் படித்தோம். ஆனால் பாரதியின் அற்புதமான கவிதைகளில் மனம் தோய்ந்து அவற்றை அனுபவித்த பின்னர் அவரை உலக மகாகவி என்று கூறுவது மிகவும் சரியே என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

 

அதன் வெளிப்பாடே அவர் முனைந்து நின்று திரட்டிய நிதியும் அதனால் உருவான மணி மண்டபமும் ஆகும். அத்துடன் அவரது கதைகள், நாவல்களில் பாரதி பாடல்களைத் தாராளமாக அவர் உலவ விட்டார்.

நூலில் சில சுவாரசியமான பகுதிகளைப் பார்ப்போம்.

 

பாரதி பிறந்தார் கட்டுரையிலிருந்து:

சந்து பொந்துகளின் வழியாகச் சென்று கடைசியில் பாரதியார் பிறந்த வீட்டை அடைந்தோம். வீட்டு வாசலில் ஒன்றுக்கு மேல் ஒன்று உயரமாக இரண்டு விசாலமான திண்ணைகள் இருக்கின்றன. மேல் திண்ணையின் ஓரத்தில் சுவரில் ஒரு குறுகலான வாசற்படி காண்கிறது. அதற்குள்ளே இருந்த அறையிலே தான் பாரதியார் பிறந்தார் என்று சொன்னார்கள். ஆகா! பிறந்த குழந்தை “குவா, குவா” என்று அழுத போது அந்தக் “குவா” சத்தத்தில், தேச வெறியும் தமிழ்ப் பண்பும் பொங்கித் ததும்பும் அழகிய தமிழ்ப் பாடல்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று யாருக்குத் தெரிந்திருக்கப் போகிறது.

 

அந்த வாசற்படிக்கு வெளியே, திண்ணையில் பாரதியார் தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பது வழக்கம் என்றும் சொன்னார்கள். இப்போது இதே இடத்திலிருந்து தான் பாரதி திருநாளன்று அவருடைய திருவுருவப் பட ஊர்வலத்தை ஆரம்பித்து நடத்துகிறார்களாம் – இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான்.

 

பொழுது புலர்ந்தது கட்டுரையிலிருந்து:-

ராஜாஜியின் பேச்சில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. 1) பாரதியாரைப் பற்றிய ராஜாஜியின் சொந்த அனுபவங்கள் 2) பாரதியாரின் கவிதைச் சிறப்பு 3) பாரதியாரை தமிழ்நாடு போற்ற வேண்டிய முறை

பின் வருமாறு பேச்சு ஆரம்ப்மாயிற்று:-

 

இந்நாளில் பலர் பாரதியாரைப் பற்றித் தங்களுடைய சொந்த அனுபவங்களையும் ஞாபகங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் விடப் பாரதியாரை எனக்கு அதிகமாய்த் தெரியும்; அதிக காலமாயும் தெரியும். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் எல்லாரையும் விட எனக்கு வயது அதிகம் (சிரிப்பு) அவருடைய மாமாவைத் தவிரச் சொல்கிறேன். வயது எனக்கு அதிகமானதினாலேயே சில விஷயங்களில் அனுபவமும் அதிகமாய்த் தானே இருக்க வேணும்? 1906-ம் வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும். அவரும் நானும் கல்கத்தா காங்கிரஸுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரஸுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி. நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால் சாதாரண விஷயமல்ல. சூரத் காங்கிரஸில் நாற்காலிகள்  வீ  சி எறியப்பட்டன. செருப்புகளும் பறந்தன. ஆனால் இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்த போது பாரதியார் தூரத்தில் போய் ஸ்ரீ ஜி.எ. நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞராகையால் அப்படிச் செய்தார். கவிகள் சாதாரண மனிதர்களைப் போல் காரியங்களில் இறங்கி விட்டால் அவர்கள் கவிகளாயிருக்க முடியாது.

 

அந்தக் காலத்தில் பாரதியாரைப் போற்றும் விஷயத்தில் சாதியை யாரும் கவனிக்கவில்லை. உண்மையில் அவர் என்ன சாதி என்பது கூட அநேகருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. நானும் என் நண்பரு ஒருவரும் ஒரு சமயம் புதுச்சேரிக்குப் போய்ப் பாரதியாரைப் பார்த்தோம். அப்போது எங்களுக்குள் பாரதியார் என்ன சாதி என்ற கேள்வி எழுந்தது. பாரதியார் மேல் பூணூல் இல்லையாதலால் விவாதத்தை எங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே பாரதியாரையே கேட்டு விடுவது என்று தீர்மானித்துக் கேட்டோம். அவர் பிராம்மண சாதி என்று அறிந்ததும், ‘பூணூல் எங்கே?’ என்று கேட்டோம். ‘அது எங்கே போயிற்றோ? யார் கண்டது?’ என்றார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நமது நாட்டில் எப்போதுமே கவிகளைப் போற்றும் விஷயத்தில் சாதி குறுக்கிட்டது கிடையாது என்பதற்காகத் தான்.”

 

நூலில் உள்ள ஒன்பது கட்டுரைகளில் இரண்டு மட்டுமே பாரதியாரைப் பற்றியது என்றாலும் கூட அவை பாரதி இயல் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுபவை என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. (இதர ஏழு கட்டுரைகள் திரு.வி.க., தீரர் சத்தியமூர்த்தி, கம்பரும் நானும், தெய்வமானார், கிட்டப்பா ஞாபகம், வீ ழ்ந்த ஆலமரம், சாபம் நீக்கிய கவிஞர் ஆகிய தலைப்புகளில் உள்ளன.

 

நூலில் பாரதி விழாப் படங்களும் இடம் பெற்றுள்ளன.  நூலில் அந்தக் கால விலை நான்கு ரூபாய் எட்டணா!

******

 

Beautiful Quotations on Bharati (Post No. 2379)

bharati boat

Compiled by London swaminathan

Date: 11 December 2015

Post No. 2379

 

Time uploaded in London :– 5-19 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Subramanya Bharati- born on 11 December 1882

Died on 11 September 1921

 

Poet Bharati has fulfilled the true mission of a poet. He has created beauty not only through the medium of glowing and lovely words, but has kindled the souls of men and women by the million to a more passionate love of freedom, and a richer dedication to the service of the country. Poets like Bharati cannot be counted as the treasure of any province. He is entitled by his genius and his work, to rank among those who have transcended all limitation of race, language and continent and has become the universal possession of  mankind.

—Poetess Sarojini Naidu

XXX

barati stat3

Bharati is a true poet. He has the poet’s perception, the artist’s touch, the reformer’s zeal, the devotee’s faith, the scholar’s erudition, the patriot’s nationalism and the cosmopolitan’s internationalism he is a liberal rooted in the past, and a conservative who holds forward-looking thoughts. He is a rich blend of old and new. He expresses new themes in classic metres, and classic themes in newer modes. Some of his themes are bold and unconventional – so bold that some of his contemporaries gasped in wonder, or railed at his temerity.

–P N Appuswami

XXX

 

Bharati was truly great and he was easily the greatest of the modern Tamil poets. With him came the flood tide of renaissance, as a part of national upsurge for freedom. In his hand Tamil recovered its naturalness, clarity, vigour, vitality and flexibility.

–Bharathi Tamil Sangham, Calcutta

XXX

bharathi_ninaivukal_copy

Bharati was not only a poet who could rouse the patriotic feelings of his fellow- Tamils, but was also a literary artist of the highest order who could see the universal in the particular. So, although Bharati hails from Tamil Nadu, and occupies a front place in India’s regional literature, his impact will be felt wherever great literature is loved and read.

–V K R V Rao, Education Minister, 1970

XXX

 

Bharati has proved what every reader of poetry always knew, that if a poet is equal to his task, he can invest an old theme with a new significance and beauty by his poetic emotion and artistic skill. Kannan Paattu, his magnum opus, is a lyrical cycle of poems on Krishna. Its theme is traditional, one to which India has responded since time immemorial.

–Justice S K Mukherjea

XXX

bharati b & w

Bharati was only thirty nine when he died. But he had adorned tami with such a unique body of exquisite lyrics and pieces of prose, vivid and many toned, that will be a perpetual national possession.

—-Bharathi Tamil Sangham, Calcutta

XXX

 

Subrahmanya Bharati was a man on whose tongue the Goddess Saraswati can honestly be believed to have danced the dance of patriotism. If he had been born in any free country, why in any country of the world except the India, the man would have been made the Poet Laureate of the country, would have been given honours and titles by a government which knows how to respond to the feelings of the people, and would have lived and died among the most honoured of the nation.

—S Satyamurthi in Madras Legislative Council, 1928

XXX

bharati-stamp

Subramanya Bharati’s poetry falls broadly into three divisions. The first which is most well-known, consists of his soul stirring national songs. The second which is not so well-known to the general public, but which is familiar to students of Tamil, contains his two master pieces of Panajali Sabatham and Kuyil Pattu. In between there is a third division, which comprises of his religious and philosophic poems and songs. Though these form nearly half of his total output, they are not as well know as they should be.

–A V Subramaniya Aiyar

XXX

 

Bharati is the poet of the common man. The language of the common man became in his works the language of the poetry. Till then the language of the common man was not the respectable language of high class literature.

–Prof T P Meenakshisundaran, Vice chancellor of Madurai University

XXX

bharati drawing

Bharati has introduced in accordance with the spirit of the times, a new theme of poetry. The songs of patriotism or national songs are new to Tamil literature in the way they have been elaborated by Bharati and others. There may have been poems expressing loyalty to the king as representing the nation, culture or religion. But in the national songs of Bharati the loyalty is to the nation, to the people.

–Prof T P Meenakshisundaran

XXX

 

Bharati is not only the national poet of tamil Nadu; he belongs also to the whole India. His verses should be published in all the Indian languages.

–Jawaharlal Nehru, Prime Minister of India till 1964

 

XXX

 

Rooted in tradition, Bharati used the old, simple forms of classical art to new purposes and new effects.

–P N Appuswami

XXX

 

bharati malar

Bharati is probably one of the best poets of modern period in our country and definitely the greatest of Tamil poets of our time and the Tamils can be legitimately proud of this greatest bard who has given not only a new direction and dimension but a new shape and new thrust to Tamil poetry as well. It is in his magic hand tamil poetry regained its vigour and vitality, clarity and naturalness.

Dr S Agesthialingom, Vice Chancellor, Tamil University, Thanjavur, 1989

XXX

 

Bharati’s vastitudes can be known only when the poems of great one, in Tamil, are translated in to the languages of the world.

–Bharatidasan

 

XXX

IMG_1652 (2)

The craftsmanship of Bharati, as revealed by his juvenilia, s pretty conventional and is rather dull. However, as years roll by, his irresistible genius starts asserting itself with a wondrous splendour that is truly multi- dimensional. The myriad minder bard’s apperception is achieved with a thousand tentacles of awareness and his utterances – afire with burning desire- shoot out like piercing pins of light. His words and vocables energised by a novel poetic fervour, march out, suaviter in modo, fortiter in re, and make universal conquest.

–Sekkizar Adippodi Dr T N Ramachandran

(suaviter in modo, fortiter in re= gently in manner, strongly in deed)

 

XXX

Bharati completed one more work which carries the hall mark of a born poet, using common, almost thread-bare, unconsidered material. The Kuyil is pure fantasy but with its foundations in firm-set earth. He is the Morning Star of modern literature since he was the first to discredit the vogue of poetic diction and dealt with thems close to the life of today.

–P.Mahadevan

–subham—

 

 

 

 

 

My Visit to PANCHAVATI (Post No. 2378)

 

IMG_9462

 

IMG_9466

Written by London swaminathan

Date: 10 December 2015

Post No. 2378

 

Time uploaded in London :– 16-01

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

IMG_9470

Saint ValmikiIMG_9483

Kala Ram/ Back Ram Temple

From Triambakeswar we came back to Nashik and proceeded to Panchavati which is very nearby. As soon as we entered the town, we saw Ramayana scenes on the wall with descriptions in Hindi. This is about Rama’s encounter with Surpanaka followed by Maricha Vada (Killing of Maricha).

 

Panchavati became famous because of the incidents in the Aranya Kanda of Ramayana. Surpanakha tried to seduce Rama and Lakshmana followed by her disfigurement (nose cut). Maricha came disguised as a golden deer and Rama tried to catch it at the behest of Sita and Ravana came at the time to abduct Sita. Since Rama and Lakshmana camped there for most of the 14 year period in the forest, all the places there were connected with Ramayana.

IMG_9486

We went to see the five banyan trees which gave the name to the place: Pancha means Five and Vata means Banyan tree = Five Banyan Trees= Pancha Vati.

 

The banyan trees are numbered from 1 to 5. Tourists can easily identify them. But most of the sign boards are in Hindi only. We need them in English or regional languages such as Tamil, Telugu and Kannada. North Indians can follow Hindi.

 

All along our route we saw lot of banyan trees and Sugar cane juice stalls. There is a Sita Cave (Sita Guha or Gufa). As our driver warned us about the condition of the cave we did not venture to go there. He told us some drunkards abused the place and there was even a murder in the recent past. But opposite the five trees, there was a centre with all the Ramayana statues and dolls. It was very good to see the scenes from the Aranyakanda.

IMG_9487

The big attraction in Panchavati is the Kala Ram (Black Ram) temple. It is a beautiful Rama temple. In the nearby park we saw statues of Swami Vivekananda and Valmiki. Lot of shops sell things for tourists. We also bought some brass bells. I have already written about the tortoise lucky yantras sold there. With them Surya yantras are also sold.

 

Too many Toll gates:

Between Mumbai and Shirdi, we came across 8 to 10 toll gates. They extracted money and delayed the traffic. State and Central governments must find a way to eliminate them or use machines to photograph the number plates and charge them like we do in London for the Congestion Charge. Alternately State governments may be subsidised and the toll gates can be done away with.

 

Since onions became scarce and were in great demand, a lot of vendors were selling the  onion bags on the road side. We also saw lot of shops selling cheap Chinese toys such as teddy bears.

IMG_9489

IMG_9500

IMG_9502

 

 

IMG_9503

Ravana

 

MUKTIDHAM

Muktidham is another place near Panchavati. There is a beautiful marble temple were all Hindu gods and saints are displayed in miniature form. There is a central shrine for Rama and Sita. On either side there are lot of statues or marble figures depicting Puraic scenes. Dis play of the 12 Jyotirlinga shrines is the most impressive one.

 

There was a Kartikeya (Skanda) shrine where women are not allowed following the age old tradition. Poet Kalidasa and Tamil Sangam literature also talk about such a taboo.

 

One disappointing thing about such a beautiful temple is that we don’t get any pictures for sale. No one is allowed to take pictures inside the temple. In future, at least the temple should sell picture post cards.

IMG_9515

Picture of Muktidham Temple

Warning about Oily food

Our driver advised us to go to Rs 50 meals sold by the temple trust. But our ill luck made us to try the Purohit restaurant in the same compound where a meal (Thali) is Rs.230. We did not mind paying the amount, but all the dishes were floating in oil. Literally the vegetables were swimming in the oil!

 

Next time you go there, please try the temple restaurant and write to me about the quality of the food. Let me find out whether it is better than the restaurant!

IMG_9519

–Subham—

எனது திரயம்பகேஸ்வர் யாத்திரை! Post No. 2377

IMG_2692

Written by London swaminathan

Date: 10 December 2015

Post No. 2377

 

Time uploaded in London :– 9-10 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

வட நாட்டில் சிவ பெருமான் மீதும், ராமர், சீதாதேவி மீதும் அபார பக்தி இருக்கிறது. இதை அவர்கள் வணங்கும்விதத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். பல தமிழ் நாட்டுக் கோவில்களில் போலி பக்தர்களும் போலி பக்தியும் நிலவுகிறது. சடங்குகளும் அதிகம்- அதாவது தேங்காய், பழம், சூட தீபாராதனை என்று பற்பல. பட்டுப் புடவை உடுத்திய பெண்கள் ஒரு புறம்; மறுபுறம்;– கழுத்தில் கொட்டை, நெற்றியில் பட்டை, காலில் கட்டை, கையில் சட்டை!!

(கொட்டை= ருத்திராட்சம்; பட்டை= விபூதி அல்லது நாமம், கட்டை= சாமியார் செருப்பு, சட்டை= மேல் சட்டை)

12 jyotirlinga

நாங்கள் மும்பையில்ருந்து நாசிக் சென்றோம். அங்கிருந்து திரயம்பகேஸ்வர் கோவில் சென்றோம். இது 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இதற்கு முன் ராமேஸ்வரம், ஸ்ரீசைலம் ஆகிய இரண்டு ஜோதிர்லிங்க தலங்களைத்தான் பார்த்திருக்கிறேன்.

 

வெள்ளைக்காரந்தான் இந்நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று என் நண்பர்கள் பலர் பிதற்றுவர்/ உளறுவர். ஆனால் 51 சக்தி பீடங்களும், 108 வைஷ்ணவ திருப்பதிகளும், 12 ஜோதிர்லிங்க தலங்களும், ஆதி சங்கரரின் நான்கு மடங்களும் அகண்ட பாரதம் என்பதை நிரூபிக்கிறது. இதில் பல தலங்கள் பாகிஸ்தான், பங்களாதேஷில் இருப்பதால் அவைகளும் நம்முடையவையே. இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பியர்களுக்கு தேசீயம் என்பதை சொல்லிக் கொடுத்த நாடே பாரதம்தான். ஏனெனில் கிரேக்க, ரோமானிய, எகிப்திய, சீன, சுமேரிய நாகரீகங்களில் இக்கொள்கை இல்லை.

 

இந்த தலங்கள் அனைத்துக்கும் மோடி அரசு தனித்தனியே தபால்தலை வெளியிட வேண்டும். வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியக் கோவில்கள் இந்திய தபால்தலைகளில் இடம்பெற்றன. பின்னர் வந்த நேரு-காந்தி கொழ கொழா, வழ வழா ‘செக்யுலர்’ அரசு சொதப்பிவிட்டது. என்னுடைய தபால்தலை ஆல்பத்தில் உலக நாடுகள் ஆண்டுதோறும் வெளியிடும் கிறிஸ்துமஸ் தபால் தலைகள் உண்டு. முஸ்லீம் நாடுகள் வெளியிட்ட மசூதி, மெக்கா , காபா தபால்தலைகள் உண்டு. ஆனால் இந்துதபால்தலைகள் மிகக் குறைவு.

 

திரயம்பகேஸ்வரர் கோவில் கோதாவரி நதி தோன்றுமிடத்துக்கு அருகில் இருக்கிறது. அண்மையில் அங்கு கும்ப மேளா நடந்ததால், அப்போது போலீஸ்காரகள் வைத்த ஆயிரக்கணக்கான தடுப்புகள் சாலை ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

IMG_8070 (2)

படம்:– கோவிலுக்கு வெளியே எல்லோருக்கும், அழகான திரிசூல முத்திரை வைக்கிறார்கள்!

 

கோவிலை நெருங்க, நெருங்க போன்களையும் காமெராக்களையும், செருப்புகளையும் இங்கே விட்டுச் செல்லுங்கள் என்று பல வணிகர்களும் அவர்களது ஏஜெண்டுகளும் வழிமறித்தனர். அவர்களில் ஒருவரை நம்பி எல்லாவற்றையும் விட்டுச் சென்றோம். எல்லாவற்றுக்கும் குறைந்தது பத்து ரூபாய் கட்டணம்! நம்முடைய மொபைல் நம்பர் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு ஒரு டோக்கன் தருகிறார்கள். (கோவிலுக்குள் மொபைல் போன்களை அனுமதிக்கக்கூடாது என்பதை நான் ஆதரிக்கிறேன்)

 

கோவிலுக்குச் சென்றவுடன் 200 ரூபாய் விஷேச தரிசன ‘கியூ’வுக்குச் சென்றோம். ஆனால் அதற்கு நேரக் கட்டுப்பாடுகள் இருப்பதால் பொது பக்தர் வரிசையில் நின்றோம். ஆளுக்கு ஒரு பையில் பூ வாங்கிக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கிட்டத்தட்ட 20 வரிசைகள் இருந்தன. மக்கள் வேகமாக நகருவதைப் பார்த்து அதில் சேர்ந்தோம். மூன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் சந்நிதியில் நின்றோம்! ஆயினும் பெரிய மின்னணுத் திரையில் சன்னிதியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டே நகரலாம்.

IMG_2688

எனக்கு சிறு வயதில் என் தந்தை கற்றுக் கொடுத்த ஓம் திரயம்பகம் …… என்று துவங்கும் த்ரயம்பக மந்திரம் (யஜூர் வேத ருத்ரத்தில் ஒரு மந்திரம்) வேறு ஒரு திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

 

ஒரு ஐடியா/ யோஜனை

நாம் எத்தனையாவது வரிசையில் நிற்கிறோம் என்பதை இலக்கமிட்டு, அவ்வப்பொழுது அறிவிக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் 20-ஆவது வரிசையில் இருந்தால் இன்னும் மூன்று மணி நேரத்துக்குப் பின்னர் சந்நிதியில் இருப்பீர்கள் என்று அறிவிக்கலாம். வரிசைக்கு எண் குறித்து பெரிய ‘போர்ட்’ வைக்கலாம். திருப்பதியில் நாம் நிற்கும் ஷெட்டுகளின் எண் பெரிதாகத் தெரியும். இது தவிர இனிமையான, சன்னமான குரலில் ஏதேனும் பாடல்களை ஒலிபரப்பலாம். நல்ல வேளையாக ஆங்காங்கே தண்ணீர் குடிக்க, குழாய்கள் வைத்திருக்கிறார்கள்.

 

நாங்கள் சன்னிதியை நெருங்கும்போது மாலை நாலு மணி ஆகிவிட்டதால் 200 ரூபாய் வரிசையும் அதில் கலக்கத் துவங்கியது. இந்த இடத்தில் கோவில் நிர்வாகம் ஒரு கயிறு கட்டி இரண்டு வரிசைகளையும் ஏக காலத்தில் நகர்ந்து செல்ல வசதி செய்ய வேண்டும். ஏனெனில் அங்கு கொஞ்சம் தள்ளு முள்ளு இருந்தது. இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கொந்தளிப்பு இருக்கத்தானே செய்யும்!

IMG_8069 (2)

ஒர் ஏமாற்றம்

நாங்கள் கோவிலுக்குள் நுழையும் முன்னர் ஒரு பெண்மணி எல்லா பூக்களையும் வாங்கி ஒரு கூடையில் போட்டுவிட்டு, பிரசாதம் என்று அதிலிருந்து இரண்டு பூக்களைக் கொடுத்தாள். இது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஒரு பூவையாவது, வில்வத்தையாவது எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வளவு பூவையும் அனுமதிக்க முடியாதுதான்.

சீரடி, திரயம்பகேஸ்வரம், மும்பை சித்தி விநாயகர் கோவில்கள் ஆகிய எல்லாவற்றிலும், அரை நிமிட தரிசனம்தான். அந்த அரை நிமிட நேரத்தில் கிடைக்கும் திருப்திக்காக மூன்று மணி நேரம் வரிசையில் நிற்பதால் நம் பாவங்களனைத்தும் கரைந்துவிடும்.

 

வெளியே வந்து “உடுப்பி” ஹோட்டலில் நுழைந்தோம். பெயர்தான் உடுப்பி. சாப்பாடோ கடுப்பு!

ஆனால் சீரடியில் கோவிலுக்கு எதிரேயிருந்த உடுப்பி ஹோட்டல் அருமையான கன்னட சாம்பார் சட்னியுடன் சுவையாக இருந்தது. வட நாட்டில் வடக்கத்திய சாப்பாட்டையும், தென்னாட்டில் தெற்கத்திய சாப்பாட்டையும் எதிர்பார்ப்பதுதான் நியாயம். ஆனால் நம் நாக்கு, அதை கேட்க மாட்டேன் என்கிறது!!!என்ன செய்ய?

 

சிவபெருமான், எப்பொழுதும் நீரில் இருக்க வேண்டும் என்னும் ஓர் ஐதீகம் இருப்பதால், பூசாரிகள் தண்ணீரை அபிஷேகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். திங்கட் கிழமை தோறும் பல்லக்கில் ஒரு கவசம் எடுத்துவரப்படும் என்று படித்திருக்கிறேன். படத்தில் நாங்கள் கண்ட மும்முக கவசமாக இது இருக்கலாம்.

IMG_8090

ஆமை மர்மம்!!!!!!!!!!!!!!!!!!!!!

 

திரயம்பகேஸ்வர் கோவில் கோபுரம் தன் பழமையைக் காட்டுகிறது. உள்ளே பெரிய ஆமை உருவம் தரையில் சந்நிதிக்கு முன்னிருந்தது.

முன்னர் நான் எழுதிய கட்டுரைகளில் ஆமை மட்டும் எப்படி உலகில் அதிக நாள் வாழ்கிறது என்று சுவாசக் கணக்குப் போட்டுக் காட்டியிருந்தேன். அப்படிச் செய்தால் நாமும் 300 ஆண்டுகள் வாழலாம். இன்னொரு கட்டுரையில் திருச்செங்கோடு முதலிய இடங்களில் ஆமைமீது மண்டபம் இருப்பதையும், கேரள கோவில்களில் மட்டும் ஆமையின் முதுகின்மேல் த்வஜ ஸ்தம்பம் இருக்கும் மர்மம் பற்றியும் எழுதியிருந்தேன். ஆனால் நான் படித்த எந்த கோவில் , ஆகம புத்தகங்களிலும் இதற்கு விளக்கம் இல்லை!!!

 

சீனர்கள் ஆமை முதுகின் மேல் எழுதப்பட்டதாக நம்பும் மேஜிக் ஸ்கொயரை (எப்படிக் கூட்டினாலும் 15 எண் வரும் குபேர யந்திரம்) அதிர்ஷ்டகரமாகக் கருதுவதையும் எழுதியிருந்தேன். இதையெல்லாம் மனதிற்கொண்டு த்ரயம்பகேஸ்வரர் கோவிலில் பெரிய ஆமை உருவம் சிவனுக்கு முன்னர் வரையப்படிருப்பதையும் அது நந்தியின் ஸ்தானத்தை வகிப்பதையும் கண்டு வியந்தேன். இதை விட அதிசயம், பஞ்சவடியில் எல்லா கடைகளிலும் ஆமை படம் போட்ட “லக்கி” யந்திரங்கள் விற்பதையும் கண்டு அதிசயித்தேன். இதற்குப் பழைய இந்துமத நூல்களில் ஆதாரமில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் கீதையிலும், குறளிலும் திருமந்திரத்திலும் வரும் ஆமையின் புலனடக்கப் பாடல்தான் (ஒருமையுள் ஆமை போல….)

தேவாரத்தில் சிவன் அணியும் பல பொருள்களில் ஆமை ஓடும் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களில் கூர்ம அவதாரம் ஒன்று.

 

கோதவரியைக் காணோம்!

நாங்கள் கோவிலை விட்டு வெளியே வருகையில் அந்தி நேரம் நெருங்கியதால், கோதாவரி நதியின் தோற்றுவாய்க்குச் செல்ல முடியவில்லை. ஆனால் த்ரயம்பகேஸ்வரத்தில் கோதாவரி, வெறும் தேங்கி நிற்கும் தண்ணீராகவே காட்சி தந்தது. இயற்கை அன்பனான எனக்கு அது ஒரு ஏமாற்றமே. பஞ்சவடியிலுள்ள ஐந்து ஆலமரங்களை வெளிச்சத்தில் காணும் அவாவில் காரின் வேகத்தை அதிகப் படுத்தி சிட்டாகப் பறந்தோம் (பஞ்சவடி அற்புதங்களை அடுத்த கட்டுரையில் காண்க).

–சுபம்–

ஆர்க்டிக் பனி உருகுகிறது! Post No. 2376

polarbear480x270

வட துருவக் கரடி, நீந்த முடியாமல் தவிக்கிறது; கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், தண்ணீர்!!!

  1. ஆர்க்டிக் பனி உருகுகிறது!

 

 Radio Talk written by S NAGARAJAN

Date: 10 Decemberember 2015

Post No. 2376

 

Time uploaded in London :– 8-43 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆர்க்டிக் பிரதேசத்தை ஆராய முதன் முதலாக முயன்றவர் நார்வேயைச் சேர்ந்த ப்ரிட்ஜாப் நான்ஸேன் (Fridrjof Nansen)  ஆவார். 1893ஆம் ஆண்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து எப்படியேனும் அதை ஆராயக் கங்கணம் கட்டிக் கொண்ட அவர் அங்குள்ள பனி பிரதேசத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார். நீர்ப் பாதையே தென்படவில்லை. அவரது கப்பலைச் சுற்றி இருந்த பனிப் பாறைகள் தொடர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  இருந்ததால் தனது முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

 

 

ஆனால் அதே ஆர்க்டிக் பிரதேசத்தை இன்று ஒப்பிட்டுப் பார்த்தால் சுலபமாக அதில் செல்லும்படியான நீர்ப் பாதை உருவாகியுள்ளது! பனிப்பாறைகள் உருகி வருவதே இதன் காரணம் ஆகும்.

 

pg-6-arctic-ice-pa

இன்னொரு ஆச்சரியமான விஷயம், அங்கு சமீபத்தில் ஆர்க்டிக்கை ஆராயப் போன விஞ்ஞானி ஒருவருக்கு தரையைத் தோண்டிக் காட்டிய அப்பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் ஒரு உருளைக்கிழங்கைக் காட்டினார். இது வியப்பூட்டும் விஷயம் ஆகி விட்டது, எதுவுமே விளைய முடியாத பனிப்பாறைகள் இருக்கும் பகுதியில் பனி உருகி நிலப்பகுதியும் நீர்ப்பகுதியும் அதிகரிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

 

 

நான்ஸேனுக்குப் பின்னால் 1926ஆம் ஆண்டு ஆர்க்டிக் பிரதேசத்தை ஆராய முனைந்த ரோல்ட் அமுண்ஸென் (Roald Amundsen) ஆர்க்டிக்கை முதன்முதலாக அடைந்தார்.

 

 

2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாடலைட் படங்கள் ஆர்க்டிக் எப்படி மாறி விட்டது என்பதைக் காண்பித்தது. இப்போது விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்விலோ ஆர்க்டிக் பகுதியில் உஷ்ணமான கடல் நீர் பாய்ந்து இன்னும் பனியை உருக்கும் என்று தெரிய வருகிறது.

 

 

பொதுவாக உலகில் அதிகமாகி வரும் உஷ்ணநிலை கடும் பனிப்பாறைகளையே உருக வைக்கிறது என்றால் அதன் பாதிப்பு எவ்வளவு கடுமையானது என்பதை நாம் சுலபமாக உணரலாம்.

 

 

இயற்கையின் சமச்சீர் தன்மையைக் காக்கும் ஆர்க்டிக் பனியை அப்படியே இருக்குமாறு காப்பது மனித குலத்தின் கையிலேயே உள்ளது. அதை எண்ணி செயல்படுவோமாக!

 

***

Visit to Trayambakeswaram Temple! Post No. 2375

IMG_2692

Written by London swaminathan

Date: 9 December 2015

Post No. 2375

 

Time uploaded in London :– 11-31 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

I was fortunate enough to visit five places Mumbai, Trayambakeswar, Panchavati, Muktidham and Shirdi under good weather conditions. I give below my experience, observations and ideas for improvement. I was moved by the blind faith of the devotees who are the followers of Lord Shiva and Lord Ram. In contrast to South Indian temples where we see much show with women in silk saris and men in silk dhotis with hour long rituals, people in the North simply worshipped without any pomp.

 

We went to Trayambakeswar via Nashik from Mumbai. Being a Sunday we had to wait in the queue for nearly four hours. First we tried the special Q where one can pay Rs.200 and have quick Darshan. But we understood that there was a special time table for the paid Darshan. When we reached the sanctum sanctorum, it was Four O clock and the special Q also merged with us.

Trayambakeswar is one of the twelve important Shiva shrines spreading over from Rameswaram in the South to Kedarnath in the Northern Himalayas. They are called Dwadasa Jyotirlinga Shrines. Three of them are in Maharashtra.

IMG_8090

Tortoise Mystery

I was surprised to see a big tortoise carved on the marble floor in front of the god. I have already written two articles about the mystery of tortoise. That is the longest living land animal with a life span of 300 years. That is the reason Lord Krishna mentioned it in Bhagavad Gita. Tamil literature also mentioned it. The second mystery is the Dwajasthambas (Flag staff) in Kerala temples are on the figure of a tortoise. This is not seen anywhere else. This mystery was not explained in any other scriptures. The third tortoise mystery is the Chinese belief that a turtle came with a magic square on it shell (adds up to No. 15= Kubera Yantra) and that is considered a lucky number. To my surprise shops in Panchavati and other places are selling yantras with tortoise picture. But we have no explanation for it in our scriptures. We know only the Kurmavatara of Vishnu and turtle shell, as a part of Lord Siva’s dress. (Please read my earlier articles on the tortoise mystery)

12 jyotirlinga

Here are some suggestions for improvement:

 

One disappointing thing was the flowers that devotees bought were taken by a woman even before we entered the Garbagriha and she gave us back a few flowers or leaves as Prasad. Devotees should be allowed to take at least a few flowers inside to offer them to the god.

 

 

In the Balaji temple at Tirupati, one would know where he stands in the Q. The sheds are numbered. In the same way the trust can number the lines and make announcement about the approximate time of waiting. For instance they can say, “ if you are in line 22, you will have to wait for at least three hours”.

 

Actually, we started in line 22 and it took three and a half hours to reach the Jyotirlinga. Though we were able to watch the Garbagriha and the main deity over big screen while waiting, there was no music. At least sweet devotional songs or Shiva Bhajans may be broadcast. Water facility for the people in the Q was good. Another suggestion is about the special Q. there was utter confusion and stampede in the junction where it merged with the ordinary Darshan Q. to avoid such stampede, there may be two lines : one for the special Q and another for ordinary Q. both can approach the deity at the same time.

 

There is a tradition to pour water over the Linga throughout the day. So the priests were doing Abishek with water now and then. I read in a book that the gold Kavasa (shield) is brought in a palanquin every Monday. Probably it has three faces of Shiva.

 

IMG_8070 (2)

Outside the temple all the devotees get this beautiful Trisula Mudra!

Hindu Stamps please!!

Modi Government should issue postage stamps for all the 12 Jyotirlinga shrines ,108 Vaishnavite shrines and 51 Sakti shrines. All the Christian countries such as UK, USA, Canada, Australia issue Christmas stamps every year. I have got hundreds of Christmas stamps with Christmas themes in my album. I have got stamps from Muslim countries in my album with mosques on it. All the Buddhist countries like Sri Lanka, Burma, Thailand, and Laos have issued hundreds of stamps for Buddha. Why shouldn’t we issue stamps for all the one hundred thousand temples in India?  The British boldly issued stamps with Hindu temples, when they ruled India. But secular India issued only stamps with Hindu statues or temples with architecture as its focus. It must issue stamps with religious focus.

 

IMG_8069 (2)

IMG_2688

 

Read also my articles on Panchavati and Muktidham

 

 

 

 

கணக்குப் போடும் நாய்! Post No. 2374

Meet the dog who can count

A bizarre video has emerged from China of a clever dog showing his ability to do maths. In the video, which was captured on Tuesday in Taiyuan, Shanxi Province, the dog’s owner and passersby say simple arithmetic problems to the dog and he taps the answer on a bell with his paw.

படத்தில் கணக்குப் போடும் சீன நாய்!

Written by ச.நாகராஜன்

Date: 9 December 2015

Post No. 2374

Time uploaded in London :– காலை 5-46

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

டிசம்பர் 4, 2015 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

மிருகங்களுக்கு அதீத உளவியல் ஆற்றல் உண்டா?      

.நாகராஜன்

 

 

“தங்களின் சொந்த அறிவைக் கொண்டு மிருகங்களின் அறிவைத் த்வறாகக் கணிக்கின்றனர் மனிதர்கள்” – ஹாலிவுட் மிருகப் பயிற்சியாளர் ரால்ஃப் ஹெய்ஃபர்

மிருகங்களுக்கு அதீத உளவியல் ஆற்றல் உண்டா?

இந்தக் கேள்விக்கு அனுபவ பூர்வமான பதில், உண்டு என்பது தான்! மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் இந்த அதீத உளவியல் ஆற்றல் உண்டு.

 

 

கணக்குப் போடும் நாய்:

கரிடா பார்டரிக்ஸ் என்ற பெண்மணி பாரிஸ் நகரைச் சேர்ந்தவர். 1927ஆம் ஆண்டு அவர் தனது நாய் கணக்குகளைப் போட்டுக் காண்பிக்கிறது என்று கூறி உலகையே அதிசயிக்க வைத்தார்.  தியோடர் பெஸ்டர்மேன் என்பவர் மேடம் கரிடா பார்டரிக்ஸ் தன்னிடம் தனது நாய் கணக்குப் போடுவதை நேருக்கு நேராகச் செய்து காண்பித்தார் என்று எழுதியிருக்கிறார். நாய் அந்தப் பெண்மணியின் கை அசைவுகளைப் பார்த்து கணக்குகளுக்கான விடைகளைச் சொல்கிறது என்று அவர் சந்தேகப்பட்டார். என்றாலும் எந்தக் கணக்கைக் கொடுத்தாலும் நாய் சரியான விடையையே தந்தது!

Enjoying School

Young cute dog in front of blackboard during a math class

 

ப்ளாக் பேர் (BLACK BEAR)  ;

கரும் கரடி என்று அழைக்கப்பட்ட ஒரு குதிரை செய்த  கணக்குகளைப் பார்த்து  யாரும் எந்த விதமான சந்தேகத்தையும் எழுப்ப முடியாமல் போனது! கண்ணுக்குத் தெரியாத சைகைகள், மறைமுகமாகச் சொல்லித் தருவது போன்ற அனைத்து சந்தேகங்களையும் ப்ளாக் பேர் விஷயத்தில் சொல்ல முடியாமல் போனது. அது எல்லாக் கணக்குகளையும் சரியாகப் போட்டதோடு ஒரு போர்டில் உள்ள ஆங்கில எழுத்துக்களைச் சரியாகக் காட்டி பல கேள்விகளுக்கு விடையை வேறு அளித்தது. 1931ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அனைவரையும் மலைக்க வைக்கும் ஒரு அதிசயத்தையும் அது செய்து காட்டியது. சீட்டுக் கட்டிலிருந்து ஒருவர் ஒரு கார்டை எடுத்துத் தன் கையில் ம்றைத்து வைத்துக் கொண்டதும் அவர் கையில் உள்ள கார்டு எது என்பதை அந்த குதிரை சொன்ன போது அனைவரும் திகைத்துப் போனார்கள்! கார்டின் பின் பக்கத்தை மட்டும் பார்த்து அது எப்படி கார்டு இன்னது தான் என்பதைச் சரியாகக் கூறியது என யாருக்கும் புரியவில்லை! சில சமயம் அது பதிலைக் கூற மறுத்தது. ஆனால் பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறும் அதன் திறனைப் பார்த்து அனைவரும் அசந்து தான் போனார்கள்!

 

math dog

பிறந்த நாளைக் கூறிய ப்ளாக் பேர்!

ப்ளாக் பேருக்குப் பல வித பயிற்சிகளைத் தந்த பயிற்சியாளரின் பெயர்  பாரட்! ப்ளாக் பேரைப் பார்த்து சோதனை செய்யப் பலதரப்பட்டவர்களும் வந்து கொண்டே இருந்தனர். ஃப்ளெட்சர் என்ற பெண்மணிக்கு பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இதை அந்தப் பெண்மணியே நினைவு கூரவில்லை. ஆனால் பாரட் ப்ளாக் பேரிடம்  “ப்ளாக் பேர், ஒரு நல்ல விசேஷமான நாள் நெருங்குகிறது. அது என்னவென்று உன்னால் கூற முடியுமா?” என்று கேட்ட போது ப்ளாக் பேர், “பிறந்த நாள்” என்று சரியாகக் கூறியது.

 

 

இதைக் கேட்ட ஃப்ளெட்சர், “ஆம், அது உண்மை தான்” என்று கூறினார். “சரி, அது என்று வருகிறது என்று உன்னால் கூற முடியுமா” என்று அவர் கேட்டார். “வெள்ளிக்கிழமை அன்று” என்று ப்ளாக் பேர் பதில் கூறியது. “எந்த வெள்ளிக்கிழமை” என்று மேலும் ஃப்ளெட்சர் கேட்க, அது, “ஆகஸ்ட் 3ஆம் தேதி” என்று பதில் கூறியது!

 

 

குதிரைகளும் பேய்களும் :

சர் வில்லியம் பாரட் என்பவர் மிஸ் மாண்ட்கோமரி என்பவரைப் பற்றி தனது நூலில் குறிப்பிடும் அதிசய சம்பவம் பேயைப் பற்றித் தெரிவிக்கிறது. ஒரு நாள் குதிரைகள் பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது  சாலையில் பேய் ஒன்று அந்தரத்தில் மிதப்பதை மாண்ட்கோமரி கண்டார். பேயைக் கண்ட மாத்திரத்தில் குதிரைகள் நின்று அலறின.. தமது முன்னங்கால்களைத் தூக்கிக் கனைத்தன. குதிரைகளுக்குப் பேயை உணரும் சக்தி இருப்பதை அவர் உணர்ந்து அனைவரிடமும் இந்தச் சம்பவத்தைக் கூறினார்.

 

dog

1844இல் ஒரு அதிசயமான சம்பவம் நடந்தது. இதைப் பலரும் தங்கள் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர். பால்டிக் தீவில் ஆஸல் என்ற இடத்தில் குதிரைகள் பல பயந்து போய் திடீரென்று அலறின. காரணம் பூமியில் புதைந்திருந்த ஒரு  சவப்பெட்டியிலிருந்து இடி போன்ற குரல் எழுந்ததினால் தான்!

இதை விவரமாக ராபர்ட் டேல் ஓவன் என்பவர் தான் எழுதிய நூலான ‘ஃபுட்பால்ஸ் ஆன் தி பவுண்டரி ஆஃப் அனதர் வோர்ல்ட்’ (FOOTFALLS ON THE BOUNDARY OF ANOTHER WORLD) என்ற நூலில் எழுதியுள்ளார்.

மிகவும் ஆய்வு செய்த பின்னர் மிகச் சரியாகக் குறிப்புகளிலும் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஏராளமான சம்பவங்கள் மிருகங்களுக்கும் அதீத உளவியல் ஆற்றல் உண்டு என்பதை நிரூபிக்கின்றன!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

அமெரிக்காவைச் சேர்ந்த  பெர்ட் ரீஸ் என்பவர் பிரபலமான மீடியம். அவரைச் சோதனை செய்ய பல விஞ்ஞானிகள் முன் வந்தனர். அவர்களில் ஒருவர் பிரபல விஞ்ஞானி எடிஸன். அவர் கஷ்டமான அறிவியல் கேள்வியை ரீஸிடம் கேட்டார். ரீஸ் தொலைவில் இன்னொரு அறையில் இருந்தார். எடிஸன் தன் அறையில் ஒரு பேப்பரில் ஒரு கேள்வியை எழுதினார் இப்படி:

 

”ஆல்கலைன் எலக்ட்ரிக் பேட்டரிக்கு நிக்கல் ஹைட் ராக்ஸைடு பேட்டரியை விடச் சிற்ந்தது ஏதாவது இருக்கிறதா?” இன்னொரு அறையில் இருந்த ரீஸ் உடனே பதில் எழுதினார் இப்படி:”இல்லை. ஆல்கலைன் எலக்ட்ரிக் பேட்டரிக்கு நிக்கல் ஹைட் ராக்ஸைடு பேட்டரியை விடச் சிற்ந்தது வேறு எதுவும் இல்லை!” எடிஸன் அசந்து போனார்.

 

பரோன்  ஷ்ரெங்க் நோட்ஸிங் என்பவர் ஐந்து கேள்விகளைத் தனித் தனி பேப்பர்களில் எழுதினார் : 1) எனது அம்மாவின் பெயர் என்ன? 2) நீங்கள் ஜெர்மனிக்கு எப்போது போவீ ர்கள்? 3)நான் எழுதிய புத்தகம் வெற்றி பெறுமா? 4) எனது மூத்த மகனின் பெயர் என்ன? ஐந்தாவது கேள்வி அந்தரங்க விஷயம் பற்றிய ஒரு கேள்வி. ஐந்து பேப்பர்களையும் குலுக்கிப் போட்டு ரீஸிடம் தந்தார் பரோன். எந்தச் சீட்டில் என்ன கேள்வி இருக்கிறதென்று யாருக்கும் தெரியாத நிலையில் ரீஸ் அவற்றை ஒவ்வொன்றாகத் தொட்டு சரியான விடைகளை உடனே சொன்னார். பரோன் மிகவும் வியப்படைந்தார்.

 

ஆவி உலகம் பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலரும் ஆவி உலகம் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்!

*************

 

Yatra to Shirdi Baba Samadhi (Post No. 2373)

a78e7-shirdi2bred

Written by London swaminathan

Date: 8 December 2015

Post No. 2373

Time uploaded in London :– 13-37

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

I have heard that Shirdi Sai Baba Samadhi has got good divine vibrations. I have visited Puttaparthi several times from 1964. I was planning to visit Shirdi for several years and at last it happened on 30th November 2015.

 

We travelled from Mumbai via Nashik to Shirdi by car and stayed in a mediocre hotel paying Rs.2000 per double room. My driver told me that there will be tea stalls along the road for those who go to Kakad Arti at 4-30 am. But we skipped it and stood in the queue at 6 am and finished our ‘darshan’ (viewing) by 7 am. Then we had a good breakfast in the Udupi restaurant opposite the temple. While we were queuing, sweet (Boondi) packets were distributed to us as Prasad inside the temple.

26088-img_95232b252822529

 

No mobile, no cameras inside temples– a good policy

In Shirdi Baba’s Samadhi temple, only lady’s hand bags are allowed. l liked the restrictions on mobile phones and cameras inside all the temples. If they allow the mobile phones inside the temples, there will be unnecessary shouting and giggling spoiling the divine atmosphere. Cameras, I pads and mobile phones are used for selfies disrupting other activities. Those who want to take pictures of the temples may be taken in escorted groups for a fee at a specified time.

 

After the ‘darshan’ we went round the temple where there are a few more ‘Samadhis’ (burial places of holy people) including a Muslim devotee’s. Then we queued for the ‘Udi’ holy ash, which is derived from the eternal fire near the Samadhi.

 

There is a very good museum inside the Samadhi complex. Baba devotees would love to see the objects used by Baba during his life time. His disciples’ rare black and white photos are also displayed there.

8eb5f-img_9527

Cheats in the Q

People visit holy places to acquire good virtues, but we saw some cheats in two places. One group of people wearing badges hung in blue strings jumped the Q. Many of us thought they were working there. But  they were actually cheating “devotees”. In Trayambakeswar, one person sent his children first and tried to follow them crying “Oh Bacha, bacha”. These cheats won’t get the blessings of the Lord or the saint.

 

What I don’t like…………………………….

Mahatma Gandhi did a Himalayan blunder by corrupting the famous old Hindu Bhajan song ‘Ragupati ragava rajaram’ by inserting Allah’s name etc. Not many Muslims sang this or uttered Vandemataram. They shouted Allahu Akbar and divided the country. In the same way Sathya Sai Baba devotees corrupted the age old Hindu Bhajans by inserting baba’s name in the last lines saying you are Rama, Krishna, Nanak, Allah, Jesus and Moses. Only  Hindus sing this Bhajan. Not the followers of other religions.

9d09e-shirdi2bquote

I am a devotee of both the Babas. But I don’t like or approve this sort of corruption. The second blunder was showing Arti to a ‘holy man’ instead of God. Great philosophers like Sankara , Ramanuja, Madhwa, Ramakrishna, Ramana, Vallabha never did this. Now following this Puttaparti custom, all fraudulant Babas, Bhagavans and  Anandas inserted their names in the traditional Bhajans and accept Arti for them instead of God!

 

Already ignorant Hindu parents were not able to answer their children’s genuine questions. After two or three generations, the children may wonder whether these fraudulent Swamijis were real Gods or the Hindu Trinity real Gods. Every month we read in the newspapers of an Ananada or Baba or Bhagawan arrested for rape or murder. So it is our duty not to allow such corruptions. But everyone has the right to praise his own Guru separately. It is individual’s belief. What I am opposed is to getting their names included in the traditional Bhajans replacing our Gods’ names.

f127e-img_9526

You may wonder why I mentioned all these things in an article on Shirdi pilgrimage. My taxi driver loaded a newly bought Shirdi CD into his car CD player. The music and voice was beautiful. But the wordings irked me. “You won’t get peace when you go to Banaras or Mathura , you will get it only when you visit Shirdi”. I thought it was too much. You praise Shirdi, but don’t decry the Hindus’ holiest shrine Kasi! If we allow such things, then we need another Adi Shakara who wiped out 96 bad sects of Hinduism and established Shanmatha (Six sects)!

 

Bad Experience in a London Temple

Hare Krishna devotees decry Lord Shiva as demi god. Swaminarayans believe the Brahmin boy Neelakanda as God himself. Some fanatic Vaishnavites don’t even enter the Saivaite temples. I took one such Vaishnavite into London Murugan temple with his wife, because the venue happened to be the temple hall. Since it is the custom of the priests and temple authorities to honour all the speakers who come into temple, I took him into the sanctum sanctorum. As the priests honoured him, they gave him Vibhuti (holy ash) Prasad which he simply threw it on the floor. We were all angry, but yet did not say anything against the visiting guest. It is customary to give the visitor an envelope containing a small gift (amount). The priests who were angry did not present him the envelope. His wife did not insult Lord Muruga/Skanda. When they left the temple, the priests came running to me saying that they wanted to give him the envelope. I commented. “ I know why you didn’t give him in the first place. I also think he did not deserve your honorarium. Please save it for the next guest speaker.”

50c2f-img_2693

In short, we have to stop such parochial attitudes and teach basic Hinduism to our youths like the Chinmaya Mission, Divine Life Society, Ramakrishna Mission and other non-sectarian organisations. Gurus can be praised and sung, without altering the age old hymns and customs.

1f614-img_2700

bada7-img_27012b252822529

Street Vendors in Shirdi

Om Sri Sai Ram!!!

எனது ஷீரடி யாத்திரை! Post No. 2372

Written by London swaminathan

Date: 8 December 2015

Post No. 2372

 

Time uploaded in London :– 6-41 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தத்தாவதார ராதகுரு சாயி

கஜலா தாவு தாவா பாயி

 

எனது டயரியில் (Diary) வைத்திருக்கும் படங்களில் ஒன்று சீரடி சாய் பாபா படம். அதன்கீழ் “தத்தாவதார ராதகுரு சாயி. கஜலா தாவு தாவா பாயி” என்று எழுதியிருக்கும். பொருள் தெரியாமலேயே, இந்த ஸ்லோகத்தைப் படித்துவிட்டு அன்றாட வேலைகளைத் துவக்குவேன். பாபாவின் பொன்மொழிகளில் பிடித்தது “நானிருக்க பயமேன்?” Why fear when I am here?

 

1964-ம் ஆண்டுமுதல் பல முறை புட்டபர்த்திக்குச் சென்று ஸ்ரீ சத்யபாபாவைத் தரிசனம் செய்துள்ளேன். அதுமுதல் சீரடி பாபா பற்றி கேள்விப்பட்டு பல நூல்களில் சீரடி பாபா செய்த அற்புதங்களைக் படித்தறிந்தேன். புட்டபர்த்திக்குப் போனதுபோலவே சீரடிக்கும் போகவேண்டுமென்று பல ஆண்டுகளுக்குத் திட்டமிட்டு இறுதியில் அந்த ஆசை 2015 நவம்பர் 30ஆம் தேதி நிறைவேறியது.

 

பம்பாயிலிருந்து நவம்பர் 29ஆம் தேதி புறப்பட்டு நாசிக் சென்றோம். அங்கிருந்து 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான த்ரயம்பகேஸ்வரம் சென்றுவிட்டு, பஞ்சவடி (Panchavati), முக்திதாம் (Muktidham) ஸ்தலங்களை தரிசித்துவிட்டு (இவை பற்றி அடுத்த கட்டுரையில் காண்க)  இரவு சீரடியில் தங்கினோம். ஒரு நடுத்தர ஹோட்டலில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்வீதம் (Double Room) டபுள் ரூம் (இரண்டு படுக்கை அறை) எடுத்தோம். கோவில் ஐந்து நிமிட தூரத்தில் இருந்தது. காலையில் ஆறு மணிக்கு போய் வரிசையில் நின்றோம். 45 நிமிடங்களில் பாபாவின் சமாதியுள்ள சந்நிதியில் நின்று தரிசித்தோம். நல்ல சூழ்நிலை. காலை நாலு மணிக்கு காகடி (Kakadi) ஆரத்தி இருந்த போதிலும் அதற்குச் செல்லவில்லை.

எங்களை அழைத்துச் சென்ற டாக்ஸி டிரைவர், இது கூட்டமில்லாத ஒரு நாள் என்றார். பொதுவாக வியாழக்கிழமை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமிருக்கும் என்று சொன்னார். காலையில் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போதே பாபாவின் ஆரத்தி பாடல்கள், சஹஸ்ரநாமம் முதலியன ஒலிபெருக்கி மூலம் காதில் விழுந்தது.

 

கோவிலுக்குள் பாபா சந்நிதியை தங்க கவசத்தால் அலங்கரித்துள்ளனர். ஆயினும் மொபைல் போன், கேமரா, மற்றும் வீடியோ புகைப்படக் (Mobile Phones, Cameras, Video Equipments) கருவிகளுக்கு அனுமதியில்லை.

 

ஒரு ஐடியா (IDEA) / யோஜனை!

இது எனக்கு மிகவும் பிடித்த பாலிஸி. ஏனெனில் வெறி பிடித்ததுபோல் மொபைல் போனில் கத்துவதும், அல்லது இளம் பெண்களும் ஆண்களும் மொபைனில் “கிளுக் கிளுக்”கு என்று சிரித்து நமக்கு எரிச்சல் ஊட்டுவதும் இருக்காது. மேலும் ‘’செல்பி’’ (Selfie) எடுப்பது போல முன்னாலுள்ள பின்னாலுள்ள அழகிகளைப் படமெடுக்கும் வாய்ப்புகளும் இராது. ஆகவே எந்த இந்துக் கோவிலிலும் மொபைல் போன், காமெராக்களைப் பிடுங்கிவைக்க வேண்டுமென்பதை பலமாக ஆதரிப்பவன் நான். எனக்கும் புகைப்படமெடுத்து போட ஆசைதான். அத்தகையோருக்கு கோவில் நிர்வாகம் தனி நேரம் ஒதுக்கி, ‘’எஸ்கார்ட்’’ (Escort) செய்து அழைத்துச் செல்லலாம். அதற்குத் தனி கட்டணம் வசூலிக்கலாம். ஐம்பது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான கோவில்களுக்குச் சென்றதில் கண்டுபிடித்த ஒரு உண்மை இதோ:—-

“சாமி கும்பிடச் செல்லும்போது கலை அழகு ரசிக்கச் செல்லாதே; புகைப்படம் எடுக்காதே.

புகைப்படம் எடுக்கவோ, சிலை அழகுகளை ரசிக்கச் சென்றாலோ சாமியை மறந்து விடு” – இது எனது பொன்மொழி!!

 

முஸ்லீம் சமாதி:

சீரடி பாபா கோவிலுக்குள் பல பாபா பக்தர் சமாதிகளும் உள்ளன. சில முஸ்லீம் பக்தர்கள், அவருடைய நெருங்கிய பக்தரான ஏ.எஸ். ஐயர் சமாதி ஆகியன உள்பட குறைந்து நாலு சமாதிகளை வலம் வந்துவிட்டு, பாபா விபூதி பொட்டலம் கொடுக்குமிடத்தில் கீயூ (Queue) வில் நின்று அதையும் வாங்கினோம். உண்டியலில் காசு போட்டோம். இந்த விபூதி ‘உடி’ எனப்படும். சமாதியில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் அக்னியின் சாம்பல் இது.

 

சமாதியில் மியூசியம்

சமாதி காம்பவுண்டுக்குள் பபவின் மியூசியமும் உள்ளது. இதில் அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் உள்ளன. அரிய புகைப்படங்களும் உள்ளன. இவ்வளவு விஷயங்களையும் வேறு எந்த புத்தகத்திலும் கண்டதில்லை. பாபா பக்தர்கள் பார்க்கவேண்டிய இடம்.

கோவிலுக்கு வெளியே தேநீர்க்கடை

எங்களை அழைத்துச் சென்ற பம்பாய் தமிழ் டிரைவர் அடிக்கடி அங்கே செல்வதால் காலை நாலரை மணி முதல் சாலையின் இருமருங்கிலும் டீ விற்பார்கள் என்று சொல்லியிருந்த்தார். அது உண்மைதான். கோவிலுக்கு அதிகாலை 4 மணிக்குப் போவோர் டீ அருந்திச் செல்லலாம். இது நல்ல (Idea) ஐடியா. மற்ற தலங்களிலும் இதைப் பின்பற்றலாம். பேப்பர் கோப்பைகள் (Paper Cups) என்பதால் சுகாதாரம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சாப்பிட்டவுடன் நாமே அவைகளைக் கசக்கித் தூக்கி எறிந்துவிடலாம்.

 

நல்ல பிசினஸ் (Business)

நாங்கள் சென்ற கோவில்களுக்கு வாசலில் நூற்றுக் கணக்கான இடங்களில் “இங்கே உங்கள் , காமெராக்களை விட்டுச் செல்லுங்கள், மொபைல் போன்களை விட்டுச் செல்லுங்கள், பூ வாங்குங்கள், செருப்புகளை விட்டுச் செல்லுங்கள்”— என்று வணிகர்கள் நச்சரிக்கிறார்கள். கோவில் நிர்வாகம் இதை ஏற்பாடு செய்யாததால், அவர்களில் ஒருவரை நம்பி காமெரா, போன் – ஆகியவற்றை விட்டுச் சென்றோம். திரயம்பகேஸ்வரர் கோவிலில் நாங்கள் கொண்டு சென்ற பூக்களை சந்நிதிக்குள் நுழையும் முன்னரே ஒரு பெண் வாங்கி ஒரு கூடையில் போட்டுவிட்டு இரண்டு மூன்று பூக்களை நமக்கு பிரசாதம் என்று கொடுக்கிறார். ஆனால் சீரடியில் பாபா சமாதி வரை பூக்களைக் கொண்டு செல்லலாம். பிரசாதமும் பெறலாம்.

 

நாங்கள் வரிசையில் நின்று சமாதியை அடையும் முன்னரே ஒருவர் வந்து மலைபோல பிரசாத பாக்கெட்டு (Packets) களைக் குவித்தார். அதில் சுவையான இனிப்பான பூந்திப் பிரசாதம் இருந்தது. உங்களுக்கு விருப்பமிருந்தால் சர்க்கரை உருண்டை பிரசாத பாக்கெட்டும் வாங்கிச் செல்லலாம்.

 

சீரடியிலும் விஷேச தரிசன வசதிகள் உண்டு. முதியோர்கள் ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்று விரைவில் தரிசிக்கலாம். மின்னணுப்பதிவின் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து விரைவில் திரும்பிவரலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் நேரம் முதலிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

சீரடி பாபா சமாதி முகப்பு தோற்றம்

 

ஏமாற்றுப் பேர்வழிகள்!

எல்லா மதங்களும் சொல்லித்தருவது – சத்தியத்தைக் கடைப்பிடி; உண்மையாக இரு, அன்பாக இரு. இதைக் கடைப் பிடிப்போர், வேறு எந்த தெய்வத்தையும் வணங்கத் தேவையில்லை. ஆனால் பாபாவின் அருளைப் பெற வந்த ஒரு கும்பல், ஒரு நீல நிற கயிற்றில் ஒரு பாட்ஜை அணிந்துகொண்டு, ஏதோ அங்கு வேலை பார்ப்போர் மாதிரி எல்லாரையும் முந்திக் கொண்டு சென்றது. இந்தக் கும்பல் பாபாவைக் கும்பிட்டென்ன பயன்? கும்பிடாமல் போனால் என்ன? கழுதை, கழுதையே!

 

எனக்கு பிடிக்காத விஷயம் இரண்டு!!

புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா கொண்டுவந்த புதிய பழக்கம் இப்பொழுது இந்து மதத்தை விஷமாக அரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடைய ஞானிகள் பாடிவைத்த அருமையான, சக்தி வாய்ந்த பஜனைப் பாடல்களில் எல்லாம் கடைசி வரியை மாற்றி பாபாவின் பெயரைப் புகுத்தினர். இது தவறு – மிகப் பெரிய தவறு. பாபாவைப் புகழ்ந்து பாடுங்கள் அவரே கடவுள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் பாடல்களில் கை வைக்காதீர்கள்.

 

இப்பொழுதே நமது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் கேட்கும் நூற்றுக் கணக்கான கேள்விகளுக்குப் பெரும்பாலான பெற்றோர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. இதற்கு அடுத்த தலைமுறை “நேற்று வந்த பாபாதான் கடவுள்” என்று பாடினால் அவர்கள் குழம்பிப்போவார்கள். ஆகையால் தயவு செய்து ட்ரடிஷனல்’ (Traditional) /சம்பிரதாய பஜனைகளை மாற்றாதீர்கள். பாபா பற்றி தனியே பாடுங்கள், ஆடுங்கள்— அது உங்களின் தனி உரிமை.

இதே போல பாபா கொண்டுவந்த மற்றொரு வழக்கம்- காட்டுத் தீ போல பரவி வருகிறது- அதாவது தனி மனித தீபாரதனை. எனது அப்பா, அம்மா, குருமார்கள், சங்கராசார்யார்கள் எல்லோரும் கடவுள் படங்களுக்கும் சிலைகளுக்கும் தான் ஆரத்தி (Arti) காட்டினர். இன்றோ பாபாவைப் பார்த்து, தோழான், துருத்தி, குப்பன், சுப்பன் எல்லாம் – ஆனந்தா பெயரைச் சேர்த்து வைத்துக்கொண்டு தனக்கு தீபாரதனை வாங்கிக் கொள்ளுகின்ரனர். பின்னர் அந்த பாபாக்கள், ஆனந்தாக்கள் எல்லாம் கொலை வழக்கிலும், கற்பழிப்பு வழக்குகளிலும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் (கம்பி எண்ணுதல்= சிறைவாசம்).

 

ஏன் இந்தப் புலம்பல்?

சீரடி விஷயம் எழுதப் போய், திடீரென இதை ஏன் எழுதுகிறேன் என்று நீங்கள் வியக்கலாம். காரணம் என்ன? தமிழ்நாட்டில் சில அயோக்கியர்கள், இப்படி பாபா வேஷம், பகவான் வேஷம், ஆனந்தா வேஷம் போட்டு காசு பணம் அடிப்பதை நான் அறிவேன். மேலும் சீரடியில் எனது டாக்ஸி டிரைவர் வாங்கிய ஒரு புதி சி.டி.யைக் (Compact Disc) காரில் போட்டு ‘சுவிட்’சை அமுக்கினார். அருமையான குரல், அருமையான மியூசிக் (Music) ஆனால் பாடலின் பொருள்: காசி, மதுரா சென்றபோதெல்லாம் கிடைக்காத அருள் ஆனந்தம், சீரடி சென்றால் கிடைக்கும்!!!!! நீ ராமனுக்கு மேல், அல்லாவுக்கு மேல், ஜீசசுக்கு மேல், மோசசுக்கு மேல் என்று ஒரே பிதற்றல்!!

இந்துக்களின் வீக்னெஸ் Weakness/ பலவீனம்

மஹாத்மா காந்தி செய்த பயங்கரத் தவற்றை (ஹிமாலயன் பிளண்டர் HIMALAYAN BLUNDER), பாபா பக்தர்கள் பின்பற்றுகின்றனர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நாம் பாடும் ரகுபதி ராகவ ராஜா ராமில் அல்லா, குல்லா என்ற வார்த்தைகளை நுழைத்து பாடலை களங்கப் படுத்தினார் காந்தி. அதையே பர்த்தி, சீரடிக்காரர்களும் பின்பற்றி பிதற்றத் துவங்கிவிட்டனர். அல்லாவை, ஏசுவை, நானக்கை, மோசசை சேர்க்க நமக்கு உரிமையுமில்லை, தேவையுமில்லை. அப்படிப் பாடுவதற்கு அந்தந்த மதத்தினர் முன்வர வேண்டும்.  காந்தி பாடிய ரகுபதி ராகவ ராஜாராமை முஸ்லீம் எவரும் பாடுவதில்லை. காந்தி சொன்ன வந்தே மாதர கோஷத்தை ஏற்க மறுத்து அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பாகிஸ்தானை உருவாக்கினர். இந்தப் பாடத்தை இந்துக்கள் மறக்கக்கூடாது.

 

ஷீரடி: சமாதியின் நுழை வாயில்

 

எனக்கு பயங்கர அனுபவம்!!!

ஒரு முறை பிரபல தமிழ் உபந்யாசகர் ஒருவரை லண்டன் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். முருகன் சந்நிதியில் விபூதி கொடுத்தவுடன் அதை வாங்கி, அர்ச்சகர் முன்னிலையிலே கீழே போட்டுவிட்டார். எனக்கும் அவர்களுக்கும் ரத்தம் கொதித்தது. ஆயினும் கடவுள் சந்நிதி என்பதால் அவரை மன்னித்து விட்டனர். நானும் அவரை உபந்யாச ஹால்/ மண்டபம் அங்கிருப்பதால்தான் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். யார் வந்தாலும் அவர்களுக்குரிய மரியாதை செய்து அர்ச்சகர்கள் ஆளுக்கு ஐந்து பவுன் போட்டு ஒரு ஐம்பது பவுனை ஒரு கவரில் போட்டுக் கொடுத்து, மரியாதை செய்வது அவர்களுடைய வழக்கம். ஆகையால்தான் சந்நிதியில் நுழைய நேரிட்டது. ஆனால் அவருடைய மனைவி, முருகனை அலட்சியம் செய்யாமல் விழுந்து கும்பிட்டார். அவர்களிருவரும் காரில் ஏறிச் சென்றவுடன் அர்ச்சகர்கள் அந்த பண உறையுடன் ஓடிவந்தனர். “முதலில் நாங்கள் கொடுக்கத் தயங்கினோம். நீங்கள் கூட்டி வந்ததால் கொடுப்பது முறை என்று ஓடிவந்தோம்” என்றனர். நான் சொன்னேன்: நீங்கள் செய்தது மிகவும் சரியே! நானும் இதையேதான் செய்திருப்பேன். இந்தப் பணத்தை அடுத்த உபந்யாசகருக்குப் பயன்படுத்துங்கள்” – என்றேன்.

 

இதே போல ஹரே கிருஷ்ணா இயக்கத்திலும் பல பிருஹஸ்பதிகள், அசமஞ்சங்கள் உண்டு. ராமனையும், கிருஷ்ணனையும், போற்றிப் பரவி ஆடிப்பாடி, உச்சுக் குடுமியுடன் தெருவில் தேர் இழுத்துவந்து, வாழ்நாள் முழுதும் குடி, கூத்து இன்றி, முழு வெஜிட்டேரியனாக இருப்பதால் அவர்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. ஆனால் இத்தனைக்கும் நடுவில் சிவ பெருமானை டெமி காட்/ உப தேவதை (DEMI GOD) என்று வலிய, வம்புக்கு இழுத்துப் பேசும்போது “அடப் பாவி மகன்களா! ஒரு குடம் அமிர்தம் கொண்டு வந்து அதில் ஒரு சொட்டு விஷம் சேர்க்கிறீர்களே” என்று மனதுக்குள் நொந்துபோவேன்.

 

 

குஜராத்தி ஸ்வாமிநாராயணன்களும் இதே போலத்தான். அவர்களுக்கு ஸ்வாமிநாராயணன் என்பவர் நீலகண்டன் என்ற பிராமணச் சிறுவன் என்பதுகூடத் தெரியாமல் அவர்தான் ஆதி தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ஆயினும் பல பாபாக்களும், பகவான்களும், ஆனந்தாக்களும் செய்த மிகப்பெரிய நன்மை:– வேற்று மதங்களில், இந்துக்கள் போய் விழாமலிருக்க, இவர்களுடைய கவர்ச்சி உதவுகிறது. அதுவும் சத்ய சாய்பாபா போன்றோர் செய்த பொதுநல சேவைகளும் இமயம் போல உயர்ந்தவை. அவருடைய கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும், குடிநீர்திட்டங்களும் அவர்தம் புகழை எந்நாளும் காப்பாற்றும், போற்றும்.

ஷீரடியில் பிச்சைக்காரர்கள்

 

நாம் என்ன செய்ய வேண்டும்?

சின்மயா, சிவானந்தா ஆஸ்ரமம் போல பேஸிக் BASIC/ அடிப்படை இந்துமத தத்துவங்களைப் போதிக்க வேண்டும். ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகளின் ஆழ்ந்த தத்துவங்களையும் புனிதக் கொள்கைகளையும் போதிக்க வேண்டும். பழைய பாடல்களில் வேற்று மதத்தினரின் பெயர்களைச் சேர்த்தாலோ, தனி மனிதரைத் தெய்வம்போலப் பாராட்டி தீபாரதனை , ஆரத்தி காட்டினாலோ அவர்களிடமிருந்து ஒதுங்க வேண்டும்; புராதன இந்துமதத்தை ‘’கரப்ட்’’ CORRUPT ஆகாமல், துருப்பிடிக்க (RUSTY) விடாமல் காப்பது நம் கடமை.

ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ரமணர் போன்றோரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும்.

ஷீரடி பாபாவுக்கு நமஸ்காரம்! புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவுக்கு நமஸ்காரம்.

 

 

சீரடியில் சமாதியருகே சிறு வியாபாரிகள்.

-சுபம்-