இளிச்சவாய் ஏகநாத ஐயர் (POST No. 2351)

ப்ரஹ்மின்1 (2)

மேலும் ஒரு சம்ஸ்க்ருத ஜோக்!

Compiled by London swaminathan

Date: 22 November 2015

POST No. 2351

 

Time uploaded in London :– காலை 9 -13 மணி

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

“ஒரு நாள் என் மாமனார் வீட்டுக்குச் சென்றேன். அங்குப் பத்துப்பதினைந்து நாள் வயிறு குறையாமல் திருப்தியாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு சம்ஸ்க்ருத பாஷையில் தேர்ச்சி அதிகமாதலால் ஒருநாள் யோஜித்து மாமியார் வீட்டுச் சுவற்றில்,

 

“ஸ்வஸ்ருகிருகநிவாஸ

ஸ்வர்கதுல்யோநராணாம்”

அதாவது மாமியார் வீட்டில் வசிப்பதானது மனுஷர்களுக்குச் சொர்க்கத்துக்குச் சமானம் என்று எழுதி வைத்தேன். மறுநாள் மத்தியான போஜனத்துக்குப் பிறகு நான் எழுதிய சுவற்றைப் பார்க்க, நான் எழுதியதற்குக்கீழே

 

“எதிபதி குணக்ஞஹா

பஞ்சமேஷஸ்தினாதி”

 

அதாவது மாப்பிள்ளை நல்ல குணமுள்ளவனாக இருந்தால் ஐந்து, ஆறு தினத்துக்கு மேலிருக்க முடியாது என்று யாரோ எழுதிவைத்திருப்பதைப் பார்த்தவுடன் எனக்குப் பகீரென்று அடிவயிற்றில் நெருப்பு வைத்தது போலிருந்தது.

 

உடனே அதன் கீழே நான்

“ததிகிருத மதுவர்ஜியம்

மாஸமேகம்வஸாமி

 

அதாவது தயிர், நெய், பால் இவைகளில்லாமல் ஒரு மாஸம் வசிக்கலாமல்லவா? என்று எழுதிவிட்டேன். அதற்கு மறுநாள்தான் எனக்குச் சனியன் பிடித்தது. நான் யெழுதிவைத்ததற்குக் கீழே மறுநாள்  பார்த்தேன்.

“ததுபரி தினமேகம்

பாதரக்ஷப்ரயோககா”

 

அதாவது இதனைக் கண்டதற்கு மேல் ஒருநாளிருப்பதாயிருந்தாலும் ஆற்காடு ஜோட்டடிதான் கிடைக்கும் என்று எழுதியிருந்தது. அதைத் திருப்பித்திருப்பி வாசித்துக்கொண்டிருந்தேன். அங்கு மறைவில் ஒளிந்துகொண்டிருந்த என் மைத்துனன் இடதுகையாலே இடது கால் ஜோட்டடி மகோற்சவம் நடத்தி, “இளிச்சவாயா, மாமியார் வீட்டுச் சொத்து என்ன பிள்ளையில்லா வீட்டுச் சொத்து என்று நினைத்தாயா?” என்று சொல்லி வழியனுப்பினான் அதனால்தான் நான் இளிச்சவாயன் ஆனேன்”.

“ஸ்வஸ்ருகிருகநிவாஸ ஸ்வர்கதுல்யோநராணாம்

எதிபதி குணக்ஞஹா பஞ்சமேஷஸ்தினாதி

ததிகிருத மதுவர்ஜியம் மாஸமேகம்வஸாமி

ததுபரி தினமேகம் பாதரக்ஷப்ரயோககா”

 

–சுபம்–

பாபாவின் அருள் விளையாடல்கள்!(Post No.2350)

baba-kalam

Baba with President Abdul Kalam

ஶ்ரீ சத்யசாயிபாபாவின் ஜயந்தி தினம் நவம்பர் 23. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை! ஞான ஆலயம் நவம்பர் இதழில் வெளியானது.

WRIITEN BY S NAGARAJAN

Date: 22 November 2015

Post No.2350

 

Time uploaded in London :– 6-12 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பாபாவின் அருள் விளையாடல்கள்!

.நாகராஜன்

 

லட்சக்கணக்கானோர் அருள் பெற்ற நவீன அவதாரம்

 

நம்முடைய காலத்திலேயே நம்முடன் வாழ்ந்து வந்த ஶ்ரீ சத்ய பாபாவின் அவதாரம் ஒப்பற்ற தனித் தன்மை உடைய ஒரு அவதாரமாக இலங்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் லட்சக் கணக்கான பக்தர்களை வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகி உபதேசித்தவர். பல நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மந்திரிகள், தொழில் துறை கோடீஸ்வரர்கள், ஞானிகள், விளையாட்டு வீரர்கள், நடிக, நடிகையர், பாடகர்கள், வேத விற்பன்னர்கள், சமயப் பெரியோர், கலைஞர்கள் என அனைத்துத் துறைகளிலிருந்தும் அவரிடம் வந்த பிரபலங்கள் மட்டுமே ஆயிரக் கணக்கில் உண்டு; அருளாசியுடன் உத்வேகமும் பெற்று அவர்கள் தம் பணியைத் தொடர்ந்ததை நம் கண் முன்னாலேயே கண்டோம் என்பது அவரது அவதார மஹிமைகளில் தனிச் சிறப்பு கொண்ட ஒன்று. முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா வாஜ்பாயி, பிரபல பாடகி பாரத் ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி, பிரபல கிரிக்கட் வீரர் பாரத் ரத்னா சச்சின் டெண்டுல்கர் போன்ற ரத்தினங்கள் அவரைப் போற்றி வணங்கி அவர் அருள் சங்கமத்துள் இணைந்த காட்சியைக் கோடிக் கணக்கானவர்கள் கண்டு மகிழ்ந்தது நிதரிசனமான சரித்திர உண்மை!

 

baba-stamps

மர்யாதா புருஷோத்தமனான கம்பீர ராமனாகவும், தீராத விளையாட்டுப் பிள்ளை கிருஷ்ணனாகவும் அவர் திகழ்ந்து நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஆயிரக் கணக்கில் உண்டு.

அவதாரங்களின் நகைச்சுவை உணர்வு (Humour sense) பாபாவிடம் இருந்ததைப் போல இன்னொரு அவதாரத்தில் நாம் பார்த்ததில்லை.

 

 

நீங்கள் அனைவருமே எனது மிராக்கிள் தான்!

அணுக்கத் தொண்டரான கஸ்தூரி அவர் அருகில் கூடவே பழகினாலும் அவர் ஒரு நெருப்புப் பிழம்பு என்ற பயத்துடனேயே இறுதி வரை பழகி வந்தார். சாதாரண மனிதர் போல அவர் இருந்தாலும், ஒவ்வொரு க்ஷணத்திலும்  தெய்வீகப் பொறி அவரிடமிருந்து தெறிக்கும் என்பது அவரது அனுபவம்.

 

ஒரு நாள் கஸ்தூரி பாபாவிடம், ‘இன்று பௌர்ணமி. சித்ராவதி நதிக்குப் போகலாம்’ என ஆவலுடன் தெரிவித்தார். அங்கு மாலை நேரங்களில் செல்லும் பாபா, குழுமியோருக்கு மணலிலிருந்து லாக்கட், மோதிரம் போன்ற எதையாவது ‘உருவாக்கி’ அற்புதங்கள் நிகழ்த்துவது வழக்கம்.

 

பாபா சிரித்தவாறே, ‘சித்ராவதி மணல் இருந்தால் தான், நான் அற்புதங்களை நிகழ்த்துவேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய் போலும்!” என்றார்.

‘இல்லை, பௌர்ணமி நிலவில் உங்களுடன் இருக்க ஆசை’, என்றார் கஸ்தூரி.

“மிராகிள்! மிராகிள்!  அற்புதங்களுக்காக அலைகிறீர்கள்!” என்று நிறுத்திய பாபா பளீரென்று கூறினார்:” நீங்கள் ஒவ்வொருவருமே என் மிராகிள் தான், தெரியுமா?!”

baba-vibhutim

ஒரு கணம் கஸ்தூரி அசந்து நின்று விட்டார். மனித சரித்திரத்திலேயே ஒரு பிரம்மாண்டமான அவதாரம் தசை, எலும்பு, ரத்தத்துடன் தன் எதிரில் இருப்பதை எண்ணிய அவர் உடலும் உள்ளமும் சிலிர்த்தது.

அனைத்துக்குமான ஆதி விதை – ஆதி பீஜம் தான் தான் என்ற இரகசியத்தை ஒரு க்ஷணத்தில் மின்னல் வெட்டுவதைப் போலக் கூறி விட்டாரே!

 

 

கேமரா ட்ரிக்!

பக்தர்களுடன் விளையாடிக் கொண்டே இருப்பார்; ஆனால் ஒவ்வொரு விளையாட்டிலும் பெரும் அவதார மஹிமை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்!

ஒரு முறை பார்த்தசாரதி என்ற அன்பர், சோபாவில் பாபா அமர்ந்திருக்க, அவர் அருகில் அனைவரும் இருப்பதை போட்டோ எடுக்க எண்ணித் தன் கேமராவை எடுத்தார்.

பாபா, ‘அந்தப் போட்டோவை நானே எடுக்கிறேன். நீங்கள் அவரவர் இடத்தில் அமருந்திருங்கள்’ என்று கேமராவை வாங்கி சோபாவின் எதிரில் சென்று நின்றார்.

 

பாபாவே போட்டோவை எடுத்தால், அவர் அதில் விழ மாட்டாரே! அழாக்குறையாக அப்படி அவரே எடுக்க வேண்டாம் என்பதைச் சொன்ன போதும் அவர் கேட்கவில்லை.

‘போட்டோவை பிரிண்ட் போடு. அதில் நான் நிச்சயம் இருப்பேன்’ என்று அருளினார் பாபா. சொன்னபடியே பிரிண்ட் போட்ட போது நடுநாயகமாக போட்டோவில் அவர் இருந்தார்.

 

எங்குமே  எல்லாமாய் ஒரே சமயத்தில் இருப்பவருக்கு பிரிண்டில் ‘உட்கார்வது’ கஷ்டமான காரியமா என்ன?

ஒரு நாள் கஸ்தூரியை அழைத்த பாபா ஹைதராபாத்திலிருந்து வெளி வரும் நாளிதழ் ஒன்று கஸ்தூரியின் போட்டோவைக் கேட்டிருப்பதாகவும் போட்டோவைத் தானே எடுக்கப் போவதாகவும் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த கஸ்தூரி வேக வேகமாகச் சென்று நல்ல ஆடை அலங்காரம் செய்து கொண்டு பாபாவின் முன்னர் வந்து நின்றார்.

 

 

கேமராவுடன் இருந்த பாபா, ஸ்டடி, ரெடி என்று அவரைத் தயாராகுமாறு கூறி க்ளிக் செய்தார். அப்போது திடீரென்று வாலுடனும் முடியுடனும் இருந்த ஒரு சின்ன கறுப்பு உருவம் அவர் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத கஸ்தூரி அலறினார். எலியா? வேறு ஏதாவதா? எது தன் மீது பாய்ந்தது?

மெதுவாக பயத்துடன் கீழே விழுந்ததை அவர் ஆராய்ந்த போது அது பஞ்சினால் செய்யப்பட்ட ஒரு பொம்மை எலி என்று கண்டார். மிகவும் தந்திரமாக கேமராவுக்குள் அது வைக்கப்பட்டிருந்தது. க்ளிக் செய்தால் பாயும் படியான ஏற்பாடுள்ள கேமரா அது!

 

கஸ்தூரியின் பயத்தைக் கண்டு பாபா சிரித்தார். கஸ்தூரியும் சிரித்தார். அதில் அடங்கி இருந்த செய்தியை கஸ்தூரி உணர்ந்து கொண்டார். சனாதன சாரதியின் ஆசிரியர் பொறுப்பால் அவருக்கு அகங்காரம் வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த  விளையாட்டு செய்யப்பட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். பின்னால் மிகப் பெரும் பொறுப்பையெல்லாம் பாபா அவரிடம் தந்த போது அவருக்கு அகங்காரமே தோன்றவில்லை. அவர் மீது பாய்ந்த எலி தந்த படிப்பினை அவரிடம் கடைசி மூச்சு வரை இருந்தது.

sathya-sai-padapujya-deva

பாத நமஸ்காரத்தில் ஒரு லீலை!

பாபா நிகழ்த்திய இன்னொரு எளிய விளையாட்டு சுவையான ஒன்று. பிரசாந்தி நிலையத்தில் ஆரம்ப காலத்தில் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறந்த காலம் அது. அடிக்கடி மாணவர்களைப் பார்க்க வந்து விடுவார் பாபா. சுய தேவைப் பூர்த்தி என்ற கொள்கையின் அடிப்படையில் மாணவர் விடுதியில் பராமரிப்பு, சமையல் போன்ற பல பிரிவுகள் அங்கு உருவாயின. ஒரு புது ஸ்டோரை  உருவாக்கி அங்கு பாபாவை அழைக்கலாம் என மாணவர்கள் திட்டம் போட்டனர். இன்னொரு முறை பாபாவை அருகிலிருந்து தரிசனம் செய்ய அவர்களின் டெக்னிக் திட்டம் அது! அதில் “முக்கிய” மாணவர்கள் ஸ்டோரை நிர்வகிக்கும் சாக்கில் பாபாவின் பாத நமஸ்காரம் பெறவும் தீட்டம் தீட்டப்பட்டது.

 

ஆனால் அவர்களிடம் மிகவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தது. பாபா அனுமதி கொடுத்தால் மட்டுமே பாத நமஸ்காரம் பெறலாம்!

 

தங்களுக்குள் அவர்கள் பேசி முடிவெடுத்துக் கொண்டனர் : அப்படி அனுமதி தந்தால் சில விநாடிகளுக்குள் அவரை நமஸ்கரித்து எழ வேண்டும். நெடுநேரம் அவர் பாதங்களின் முன் இருந்தால் பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய் விடக் கூடும். எச்சரிக்கை! ஓரிரு வினாடிகள் தான் ஒவ்வொருவருக்கும்!

 

பாபாவும் வந்தார். ஸ்டோருக்கும் விஜயம் செய்தார். திரும்பிப் போகையில் கதவருகே சென்று விட்ட அவரிடம் பாத நமஸ்காரம் செய்ய அனுமதி கேட்டனர் மாணவர்கள். ‘சரி’ என்றார் அவர்.

முதல் மாணவன் ஓரிரு விநாடிகளில் பாத நமஸ்காரத்தை முடித்தான். அடுத்தவன் பாதங்களிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. அனைவருக்கும் ஆத்திரம், கோபம், அவசரமும் கூட!

fdc-baba

ஒரு ஊழிக் காலம் கடந்தது. மெதுவாக அந்த மாணவன் எழுந்தான். அவன் கண்களில் கண்ணீர். ஆனந்தக் கண்ணீரோ! மூக்கு சிவந்திருந்தது. மற்ற அனைவரும் விரைவில் பாத நமஸ்காரம் செய்ய, பாபாவும் புறப்பட்டார்.

எல்லோரும் இப்போது அந்த மாணவன் பக்கம் திரும்பினர் கோபத்துடன்!

“கோபப்படாதீர்கள்! என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். அவர் பாதங்கள் இரண்டிலும் என் முகம் பட்டவுடன் இரு கால்களுக்கு இடையே என் மூக்கு சிக்கி விட்டது. அவர் அதை விடவே இல்லை. எனது முயற்சி எதுவும் பலிக்கவில்லை. அவரே விட்டார், எழுந்தேன். அதனால் தான் என் மூக்கு சிவந்திருக்கிறது. கண்களில் கண்ணீர் வருகிறது

 

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். கோகுலத்தில் அந்த அவதாரத்தில் கோபியருடன் லீலை செய்தது கிருஷ்ணன். இங்கோ பிரசாந்தியில் இளம் சிறுவர்களிடையே ஆனந்த விளையாடலை அருளாகப் புரிந்தவன் சாயி கிருஷ்ணன்.

stamp-baba-project

உள்ளத்தில் நிலையாக என்னை பிரதிஷ்டை செய்

பிரபல விஞ்ஞானியான பகவந்தத்திடம் தங்கத்தையும் கரைக்கும் ராஜ திரவத்தில் சாயி போட்ட தங்க மோதிரம் கரையவில்லை! விநாடியில் நூற்றில் ஒரு பங்கு நடக்கும் எதையும் படம் பிடிக்கும் அதி நவீன கேமாராவின் துணை கொண்டு பிரபல விஞ்ஞானி கார்லிஸ் ஓஸிஸ் சாயி கை அசைவில் எப்படி எந்தக் கணத்தில் செயின், விபூதி  உருவாகிறது என்பதை எடுக்க முடியவில்லை!

 

பாரத் ரத்னாக்கள் ஆனாலும் சரி, விஞ்ஞானிகள் ஆனாலும் சரி, சாமானியரானாலும் சரி, பக்தர்கள் என்ற நிலையில் அவர்களிடம் பகவானின் அணுகுமுறை ஒன்றே தான்; அதுவும் தனித்தன்மை கொண்டது தான்! அருள் விளையாடலே அது! கணம் தோறும் ஆனந்தம் பூரிக்கும் அவர்கள் உள்ளத்தில் நிலையாக நிற்பதே அவரது அவதார நோக்கம்!

 

அவரது ஜயந்தி நாளில் அவரை மனதில் பிரதிஷ்டை செய்து இருத்துவோம்; ஆனந்த அருளைப் பெறுவோம்!

*******************

 

 

Father Anecdotes (Post No.2349)

64348-father-and-son-walking

Compiled by London swaminathan

Date: 21 November 2015

Post No.2349

 

Time uploaded in London :– 14-41

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

From an old Encyclopaedia of Anecdotes:–

Tit for tat!

Paul Bourget: life can never become entirely dull to an American. When he has nothing else to do he can always spend a few years trying to discover who his garn father was.

Mark Twain: Right, your Excellency, But I reckon a Frenchman has got his little standby for a dull time too; he can turn in and see if he can find out who his father was!

m twain

xxx

Too many Questions, No Answer!

A father was walking with his young son. The

boy said, “Daddy, what is electricity?”

“Well, now, I don’t really know”, said the father. “I never knew much about electricity. All I know about it is that it makes things run.”

A little farther on, the boy said, “Daddy, how does the gasoline make the automobiles go?”

The father replied, “Well, I don’t know. I don’t know much about motors.”

Several more questions followed with much the same result; until at last, the boy said, “Gee, I hope you don’t mind my asking so many questions?”

“Not at all son”, said his father, you go right ahead and ask. How else will you ever learn anything?”

 

Xxx

Are you the father of my children?

Getting on a trolley car, a kindergarten teacher sat down next to s man who appeared familiar to her. Smiling pleasantly, she turned as if to speak to him. Noticing his lack of response, she realized her error, and said, “Oh, excuse me. I mistook you for someone else.  I thought you were the father of two of my children.”

He got out at next corner.

 

Xxx

Girl and Home

We are told a story of a girl of the roaring 20’s who said to a real estate agent when he wanted to sell her a house:

“A home? Why do I need a home? I was born in a hospital, educated in a college, courted in an automobile, and married in a church. I live out of the delicatessen and paper bags. I spend my mornings on the golf course, my afternoons at the bridge-table, and my evenings at the movies. And when I die I am going to be buried at the undertaker’s. All I need is a garage.”

Xxx

30th Wedding Anniversary invitations

No Quarrel for 30 years in the family!

In course of his pastoral visitations, Rev. Dr. Chalmers called upon a worthy shoe maker who, in recounting his blessings, said that he and his family had lived happily together for thirty years without a single quarrel. This was too much for the doctor, who struck his cane on the floor and exclaimed

“Terribly monotonous man! Terribly monotonous!”

 

Xxx

–subham–

சம்ஸ்கிருதத்தால் வந்த சனியன்! (Post No.2348)

brahmin5

மெத்தப்படித்து புத்தி மோசம் போன கதை! சம்ஸ்கிருதத்தால் வந்த சனியன்!

 

Compiled by London swaminathan

Date: 21 November 2015

Post No.2348

 

Time uploaded in London :– 6-43 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

 

சோமளேஸ்வரன் பேட்டையில் சம்ஸ்கிருத பாஷையில் பூரண பாண்டித்யமுடைய கோகர்ண தீக்ஷதர் என்பவர் ஒரு நாள் இரவு சாஸ்திரப் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதுசமயம் திருடன் ஒருவன் பூட்டாமல் திறந்திருந்த தீக்ஷதர் வீட்டுக் கதவைச் சத்தமின்றித் திறந்து உள்ளே நுழைந்து கதவைச் சத்தமுண்டாக்கும்படி சாத்தினான்.

 

அப்போது தீக்ஷதர், “கபாட சப்தம் கிம்?”, அதாவது கதவு சாத்தப்பட்டதே யார்? என்றார். அதற்குத் திருடன் பயமின்றி, “சோ” என்று சொன்னான். அதைக் கேட்ட சம்ஸ்கிருத வித்வானாகிய தீக்ஷதர் சோ—வென்ற பதத்துக்குத் தாத்பர்யம் தெரியாது அகராதியைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்குள் உள்ளே நுழைந்த திருடன், ரொக்கசொக்கம்  எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பாத்திரப்பண்டங்கள் பாக்கியன்னியில் கொல்லைப்புறம் கடத்திவிட்டு, மறுபடியும் வெளியே போகும்போது சத்தமுண்டாக்கும் வண்ணம் கதவைச் சாத்தினான்.

 

அப்போது தீக்ஷதர், “புன கபாட சப்தம்கிம்?”, அதாவது மறுபடியும் கதவில் சத்தம் உண்டாக்குவது யார்? என்றார். அதற்குப் பக்காத் திருடன் “ரன்” என்று சொல்லி ஓடிவிட்டான்.

 

‘ரன்’ என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாதபடி, தீக்ஷதர் மீண்டும் அகராதியைப் புரட்டினார். இரண்டு நாழிகையாகியும் அவருக்கு அர்த்தம் புலப்படாததால், முதலின் என்ன சொன்னான், ‘சோ’, பின்னர் என்ன சொன்னான் ‘ரன்”!

அடக் கடவுளே இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் “சோரன்” என்று வருகிறதே என்று சொல்லிப் பதறினார். “சோரன்” என்றால் திருடன் என்று பொருள்.

 

ஒஹோ! திருடனல்லாவா வந்திருக்கான் என்று அறிந்து கையில் விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டில் தேடிப் பார்க்கையில், வீட்டில் தூசி தும்பட்டை எதுவுமில்லாமல் ஜாடாக எல்லாவற்றையும் திருடன் கொண்டு சென்றது தெரிந்தது. “ஐயோ, ஐயோ” என்று கத்திக்கொண்டு வெளியே சென்று பார்க்கையில் அங்கு எவரு மில்லை. பின்னர் வயிற்றிலும், வாயிலுமடித்துக்கொண்டு, “தன்படிப்பே தனக்குத் தண்டாவாச்சுதே” என்று விசனப்பட்டுக் கொண்டு வேறு ஜீவனம் செய்து காலம் கழித்து வந்தார்.

(சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஜோக்)

–மேலும் வரும்………………………………………………..

உருகி வரும் பனிப்பாறைகளும் உயரும் கடல் நீர் மட்டமும்! (POST No. 2347)

Melting-Ice-Caps-in-Antarctica-700x465

 

Radio Talk written by S NAGARAJAN

Date: 21 November 2015

POST No. 2347

 

Time uploaded in London :– 5-55 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகில் ஆங்காங்கே பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வுகள் பனிப்பாறைகள் பரவலாக உருகி வருவதைச் சுட்டிக் காட்டுகின்றன

ஒவ்வொரு வருடமும் க்ரீன்லாந்தில் 200 மில்லியன் டன்கள் என்ற அளவில் ஐஸ் உருகுகிறது என்பதையும் 2003ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் இதே அளவு ஐஸ் உருகி வருகிறது என்பதையும்  கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

இப்படிப் பெருமளவில் பனி உருகுவதால் கடல் மட்டம் உயர்கிறது. ஏற்கனவே கார்பன் நச்சுப்புகையால் கடல் நீரின் அமிலத் தன்மை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அத்தோடு இந்த அபாயமும் சேர்ந்திருப்பது கவலை தரும் அம்சமாகும்.

18 வருடங்களாக விண்கலங்களின் உதவி கொண்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் உலகெங்கும் உள்ள கடல் நீர் மட்டம் மூன்று மிலிமீட்டர் உயர்ந்திருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.கிடைத்துள்ள விவரங்களின் அடிப்படையில் ஒரு கடல் நீர் மட்ட அட்டவணைத் தயாரிக்கப் பட்டதோடு எதிர்காலத்தில் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதும் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

2100ஆம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அதிகரிக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.

 

கடல் நீரின் மட்டம் உயர்வது பூமியின் தட்பவெப்ப நிலை மாறுதலைக் கணிப்பதற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்றாகும்.

 

 

இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்தால் குறைந்த பட்சம் தாழ்வான பகுதியில் வாழும்  60 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவர் அவர்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படும். 50 சென்டி மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தாலேயே கடலோரப் பகுதிகளில் நீர் நுழைந்து சொல்லொணாத் துன்பத்தை அப்பகுதி வாழ் மக்கள் அடைவர் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

 

 

முந்தைய காலங்களில் எப்போதோ ஒரு முறை பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் வெள்ள அபாயம் இனி 2100ஆம் ஆண்டுக்குள் பல முறை பல்வேறு நாடுகளில் ஏற்படப் போகிறது என்பது சாதாரண விஷயமல்ல.

 

 

ஆகவே இதற்கு அடிப்படையான பூமி உஷ்ணத்தை அதிகரிக்க வைக்கும் மனிதனின் செயற்கையான காரணங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த உருகும் பனிப்பாறைகள் மனித குலத்திற்குத் தரும் எச்சரிக்கைச் செய்தியாகும். உணர்ந்து செயல்படுவோம்!

 

To be continued…………………………………………………

***

PAY THE FULL PRICE! (POST No. 2346)

square_price

Compiled   by London swaminathan

Date: 20  November 2015

POST No. 2346
Time uploaded in London :– 17-12
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

There was once a merchant who had a pearl necklace for sale. A customer came and asked him what the price of the necklace was. The merchant said that the price was 10,000 rupees. The buyer started haggling. He demanded the ornament for 7500 rupees. The merchant refused to sell it for less than 10,000 rupees. But the customer bargained it for 9000, 9600, 9750 and lastly 9990 rupees.

 

The merchant did not part with it for anything less than the original price quoted. “I cannot give you the necklace without payment of its full price”, he said. The customer, in order to have the necklace, had to pay the full price for it.

vector_price_tags_8211

So also God demands of you the full price before He can be yours. Verily, God is priceless. None can get him without paying the full price, that is, your entire being in all its aspects. In fact, dedication of one life is nothing, compared to the absolute freedom, peace and joy you get from Him. Even millions of lives offered to him are only meagre recompense for the unimaginably precious and magnificent return you get.

 

  • Story told by Swami Ramdas of Anandashram, North Kerala.

இலக்கியத்தில் சிறந்தது நாடகமே! (POST No. 2345)

kalidas-cinema-song-book

 

Compiled   by London swaminathan

Date: 20  November 2015

POST No. 2345
Time uploaded in London :– காலை 7-50
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(தமிழன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: யார் ஒரு கட்டுரையை எழுதினாரோ அவர் பெயரில்லாமல் அதை வெளியிடாதீர்கள். அதைவிடக் கொடுமை, அதை உங்கள் கட்டுரை போல வெளியிடாதீர்கள். இவ்வாறு செய்தால் தமிழ் செழிக்கும்; உங்கள் குலம் தழைக்கும்; சத்யமேவ ஜயதே! வாய்மையே வெல்லும்)

 

shakuntala-raja-ravi-varma

காவ்யேஷு நாடகம் ரம்யம்

தஸ்ய ரம்யா சகுந்தலா

தத்ராபி ச சதுர்தோங்க:

தத்ர ஸ்லோக சதுஷ்டயம்

 

பாட்டின் பொருள்:

“காவியங்களில் சிறந்தது (மனோ ரம்யமானது) நாடகம்; அந்த நாடகங்களில் சிறந்தது சாகுந்தலம்; சாகுந்தலம் நாடகத்தில் சிறந்த காட்சி நாலாவது காட்சியாகும். அந்தக் காட்சியிலும் சிறந்தது நான்கு ஸ்லோகங்கள்”.

 

உலகப் புகழ்பெற்ற காளிதாசன் ஒரு சொல் தச்சன்; ஒரு சொல் சிற்பி. ஒரு சொல் ஓவியன். ஆயிரம் உவமைகளுக்கும் மேலாக எழுதி உலகையே வியக்கவைத்த மாபெரும் கவிஞன். அவனுக்கு நிகராக இதுவரை யாரும் தோன்றவில்லை; இனிமேலும் தோன்றப் போவதுமில்லை.

 

காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தில் நாலாவது அங்கத்திலுள்ள 6, 18, 19, 22 எண்ணுள்ள ஸ்லோகங்களை ஏன் இப்படிப் புகழ்கின்றனர்? காளிதாசன் மிகப்பெரிய ‘ஸைகாலஜிஸ்ட்’ – அதாவது உளவியல் நிபுணன். சகுந்தலா என்னும் கானகப் பெண் (சகுந்தலா=பறவைப் பெண்) பறவைகளால் வளர்க்கப்பட்டவள். அவளுடைய வளர்ப்புத் தந்தையான கண்வ மகரிஷி, இந்த நான்கு ஸ்லோகங்களில் மனித உள்ளத்தில் பீறிடும் உணர்ச்சிகளை வடித்துக் கொட்டுகிறார்.

 

ஒரு மணமான பெண் பிறந்தகத்தை விட்டு, மாப்பிள்ளையின் புக்ககத்துக்குப் போகும்போது தாயார் கண்ணீர் வடிக்கிறாள். இவ்வளவு நாள் ‘கிளி போல’ வளர்த்த பெண்ண இன்று ஒரு புதிய ஆண்மகனிடம் ஒப்படைக்கிறேனே, அவன் இவளை அன்பாகப் பாதுகாப்பானா? என்று அஞ்சுகிறாள்.

 

கண்வ மகரிஷியும் இப்படிக் கண்ணீர் விடுகிறார், சகுந்தலை என்னும் அப்பாவிப் பெண்ணுக்காக. அப்பொழுது அவர் கூறுகிறார். ‘’முற்றும் துறந்த முனிவனான எனக்கே இப்படி உணர்ச்சி கொந்தளிக்கிறதே; உண்மையில் பெற்றெடுத்த தாயும் தந்தையும் புதுமணப் பெண்ணை அனுப்பும்போது எப்படி பரிதவிப்பார்கள்’’ என்று கண்வ மகரிஷி புலம்புகிறார். இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் எழுதிய காவியம்; சொல்லோவியம்.

 

பிற்காலத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மாகவி – நாடகாசிரியன்– இதைப் பார்த்து காட்டில் வாழும் மிராண்டா என்னும் அப்பாவிப் பெண்ணை ‘’புயற்காற்று’’ என்னும் நாடகத்தில் (டெம்பெஸ்ட்) இதே போல படைத்திருக்கிறான்.

சாகுந்தலத்தில் கீழ்கண்ட சொற்களில் துவங்கும் அந்த 4 ஸ்லோகங்களை, நாடகத்தில், கதையுடன் சேர்த்துப் படிக்கையில் இன்னும் ரசிக்கலாம். இனி சுருக்கமாகப் பொருள் காண்போம்.

 

kali stamps 1

1).யாஸ்யத்ய…………………….

2).பாதும் ந ப்ரதமம்……………………..

3).அஸ்மான் சாது……………………………

4).சுஸ்ரூஷஸ்வ………………………….

முதல் ஸ்லோகத்தின் பொருள்:

கண்வர் பேசுகிறார்:

இன்று சகுந்தலை புறப்படுகிறாள்; இதை நினைக்கும்போதே என் நெஞ்சம் கலங்குகிறது. கண்ணீர்த் துளிகள் பெருகி, என் தொண்டையை அடைக்கிறது. கவலையால் என் புலன்கள் மரத்துப் போய்விட்டன. முனிவனான எனக்கே அன்பினால் இப்படி உணர்ச்சிப் பெருக்கெடுக்குமானால், குடும்பத்திலுள்ள தந்தைமார்களுக்கு , மகள் வீட்டை விட்டு வெளியேறும்போது எவ்வளவு துயரம் இருக்கும்?

 

2-ஆவது ஸ்லோகத்தின் பொருள்:

மரம், செடி, கொடிகளைப் பார்த்து கண்வர் புலம்பல்:

‘’உங்களுக்குத் தண்ணீர் விடாமல், அவள் தண்ணீர்கூட குடிக்கமாட்டாளே! அவளுக்கு அணிகலன்களை அணிவது விருப்பமென்றாலும் ஒரு இலையைக்கூட பறிக்கமாட்டாளே! செடிகள் பூக்கும் காலம் வந்தவுடன் , முதல் மலர் மலர்ந்த நாளன்று அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள். அப்பேற்பட்ட சகுந்தலை, இன்று தனது கணவனுடன் சேர்ந்து வாழ, அரண்மனைக்குப் போகிறாள்! நீங்கள் எல்லோரும் அதற்கு அனுமதி கொடுக்கவேண்டும்.’’

 

செடிகொடிகளைப் பார்த்து அனுமதி கோருவதும், அவைகளை சகுந்தலை தம் குழந்தை போல போற்றி வளர்த்த்தும் பாரதீய சிந்தனையின் உச்சகட்டமாகும். பிற்காலத்தில் பாரதியார் “காக்கை, குருவி எங்கள் ஜாதி; நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” – என்று பாடியதை, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காளிதாசன் பாடிவிட்டான்.

 kali stamp 2

3-ஆவது ஸ்லோகத்தின் பொருள்:

சார்ங்ரவா! நீ அரசனிடம் சகுந்தலையை ஒப்படைக்கும் போது நான் கூறுவதாக இதைச் சொல்லு:

“தவ சிரேஷ்டர்களாகிய எங்களை மனதில் வைத்துக்கொள்; உன்னுடைய உயர்குடிப் பிறப்பையும் நினைவிற்கொள்: யாரும் சொல்லாமலேயே அவளே உன் மீது காதல்கொண்டு அன்பைக் காட்டியதையும் மறவாதே. மற்ற மனைவியரிடத்தில் நீ காட்டும் அதே அன்பை இவளிடமும் காட்டு. அவளுக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறக்கட்டும். பெண்ணின் வீட்டார் இதற்கு மேல் கேட்பது கூடாது.’’

 

4-ஆவது ஸ்லோகத்தின் பொருள்:

‘’பெண்ணே! கணவர் வீட்டில் மூத்தோர் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேள்; மற்ற மனைவியரை உன்னுடைய நெருங்கிய நண்பர்களாக நடத்து. உனது கணவன் உன்னிடம் இசகு பிசகாக நடந்தாலும் அவனுக்கு கீழ்படியாமல் இருந்துவிடாதே. வேலைக்காரர்களிடம் அன்பாக நடந்துகொள்; தலைக் கனத்துடன் தவறு செய்துவிடாதே. நீ நான் சொன்னபடி செய்தாயானால், இளம் வயது மனைவியரும், பெரும் கௌரவத்தைப் பெறுவார்கள்.கெட்ட மனைவியர்தான் குடும்பத்தில் பாய்ந்த விஷத்துக்குச் சமம்.”

 

காளிதாசன் 2000 ஆண்டுக்கு மு கூறிய கருத்துகள் இன்றும் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!

 

காளிதாசனைப் படியாதோர் படியாதவர்களே!

–சுபம்–

 

அழிந்து வரும் மழைக் காடுகள்! POST No. 2344

amazon-rainforest-shutterstock-web

 

Radio Talk written by S NAGARAJAN

Date: 20 November 2015

POST No. 2344

 

Time uploaded in London :– 5-50 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

contentIte

உலகெங்கும் உள்ள வனப் பகுதிகள் பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்படும் நிலை கூடிக் கொண்டே போகிறது.

 

வன விலங்குகளை வேட்டையாடுவது, வனப்பகுதிகளை அழித்து விவசாயம் பரவலாக்கப்படுவது, வனத்தில் இருக்கும் மரங்களை வெட்டுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் வனச் செல்வம் அழிவு பட்டு அதனால் உலகளாவிய அளவில் பல்வேறு அபாயங்கள் ஏற்பட்டு வருகின்றன.

 

உலகின் மிகப் பெரிய மழைக் காடுகள் அமைந்துள்ள அமேஸான் பகுதியும் இந்த அபாயத்திற்கு உள்ளாகி இருப்பது அனைவரையும் கவலையுற வைத்துள்ளது.

 

 

பிரேஜில் நாட்டில் உள்ள 19 நகரங்களின் ஜனத்தொகையானது கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இந்த 19 நகரங்களில் 10 நகரங்கள் அமேஸான் வனப் பகுதியில் உள்ளவையாகும். நாளுக்கு நாள் அமேஸான் காடுகள் அழிக்கப்பட்டு வருவதையே இது குறிக்கிறது.

 

 

காட்டுச் செல்வம் அழிக்கப்படும் போது அங்குள்ள வன விலங்குகள் வேட்டையாடப்பகுகின்றன. இதனால் பல விலங்கினங்கள் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களை ஏற்படுத்தவும் அன்றாட உபயோகங்களுக்காகவும் மரங்கள் அழிக்கப்படுவதால் மழை வளம் குறைவதோடு புவி வெப்பம் உயரும் அபாயமும் ஏற்படுகிறது. இது உலகளாவிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

 

நூறாண்டுகள் வாழ்ந்த மரங்கள் வெட்டப்படும் போது பல உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரமாக அவை விளங்குவதை மறந்து விடக் கூடாது. 30 சதவிகித பறவை இனங்கள் கூடுகள் கட்டி வாழவும், பல்வேறு விலங்கினங்கள் இளைப்பாறவும் உதவும்  மரங்கள் பெருமளவு கார்பனை உறிஞ்சி சேமிக்கின்றன. மண் வளத்தின் மறு சுழற்சிக்கு மரங்கள் பெரிதும் உதவுகின்றன. பெரிய மரங்கள் மனிதர்களுக்கும் பல்வேறு விலங்கினங்களுக்கும் ஏராளமான உணவை அளிக்கின்றன.பழங்கள், காய்கள், மலர்கள் என அமுதத்திற்கு நிகராக அவை வழங்கும் உணவுச் செல்வம் மதிப்பிட முடியாத ஒன்று.

 

amazon 2

சமீபத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி நமது நாட்டின் 14 நகரங்களில் வனப்பகுதிகள் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை 367 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு குறைந்துள்ளது.ஒவ்வொரு மரமும் வெட்டப்படும் போது வாழ்வாதாரம் சிறிது வெட்டப்படுகிறது என்பதே பொருள்.

 

 

எதிர்கால சந்ததியினருக்கு மழைவளத்தையும் குறைக்கிறோம் என்பது நீண்ட கால விளைவுகளில் ஒன்று. ஆகவே அரிய வனப் பகுதிகளை எந்தக் காரணத்திற்காகவும் அழித்தல் கூடாது; அவற்றைப் பாதுகாக்க சட்டம் இயற்றியுள்ள அரசோடு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

 

***

 

Is Mechanization Right? (Post No. 2343)

type

 

Compiled   by London swaminathan

Date: 19 November 2015

POST No. 2343
Time uploaded in London :– 17-03
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Ultra-thin-laptops

Shovels and Spoons

The economic fallacy of unemployment arising from machinery is well illustrated by the two workmen who watched with awe the performance of a huge steam shovel which took up many tons of earth in one bite.

Said one of them, “if it wasn’t for that blasted scoop, five hundred of us might be working with shovels.”

“Yes”, was the reply of the other, “and if it wasn’t for our shovels, a million of us might be working with spoons.”

farm.mechanisation01

You are charging me too much!

The value of specialised training is exemplified in this little episode.

The car simply would not run. The mechanic was called in, lifted the hood, reached inside, gave a twist of the wrist to a little mechanism — – all was well.

“What do I owe you?”

“Fifteen dollars and fifty cents”, said the mechanic.

“Great Heavens!”, remonstrated the car owner.

“It seems like an awful lot for just twisting a little gadget. How do you itemize it?”

“Well”, said the mechanic, “for twisting the little gadget – fifty cents. For knowing which little gadget to twist – ten dollars.”

 

When typewriting machine was invented, there was a big protest against using them. The protesters who were clerks in the courts and copyists of the Bible said that they would lose jobs and there would be big unemployment.

ultrabook-amd

When computerisation was implemented in the banks in India, the bank staff protested saying that this would cause thousands of job losses. Now we laugh at all such protests. When one limb loses its power, other limbs get extraordinary powers; and in the same way one invention may cause job loss, but it creates jobs too.

 

When Sony invented Walkman it was a big milestone in listening to music. Then came the CD players and now they are all gone. We can listen to anything by downloading into our computers. Change is inevitable. It is natural. Everything must change. Nothing remains stagnant!

hero18401

–Subham–

போலி மாப்பிள்ளைத் தோழன் கதை! POST No. 2342

 

 

at_the_feet_of_god_medium

 

Compiled   by London swaminathan

Date: 19 November 2015

POST No. 2342
Time uploaded in London :– 10-25
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுவாமி ராமதாஸ் சொன்ன கதை:தமிழ் மொழி பெயர்ப்பு-லண்டன் சுவாமிநாதன்

திருமணமான ஒருவருக்கு மாமனாரிடமிருந்து அழைப்புக் கடிதம் வந்தது. “தொலைதூரத்தில் வசிக்கிறீர்களே; நீண்ட நாளாகிவிட்டதே; இங்குவந்து எங்களுடன் தங்கிவிட்டுப் போகக்கூடாதா?” — என்று. குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் இருந்ததால் அவர் மட்டும் பயணமானார். ஒரு கில்லாடிக்கு எப்படியோ இந்தக் கடித விஷயம் தெரிந்தது. அவனும் டிப்-டாப்பாக உடைகளை அணிந்து மாப்பிள்ளை புறப்பட்ட அதே ரயிலில் புறப்பாட்டான்.

 

இருவரும் மாமனார் ஊருக்கு வந்தனர். மாப்பிள்ளையை வரவேற்க, மைத்துனர் கார் கொண்டு வந்திருந்தார். அவரைக் காரில் பின் சீட்டில் மரியாதையாக அமர்த்தியபோது, அதே ரயிலில் வந்த டிப்-டாப் பேர் வழி “ஹலோ” என்று வணக்கம் சொல்லி காரில் அமர்ந்துகொண்டான். மைத்துனர் நினைத்தார் இவர் மாப்பிள்ளையின் தோழர் போல என்று. மாப்பிள்ளை நினைத்தார், அவர் மாமனார் வீட்டுக்கு வேண்டியவர் போலும்; ஒரே ரயிலில் வந்ததால் அவரையும் அழைத்துப் போகத்தான் மைத்துனர் வந்தார் போலும் என்று!

 

இருவரும்  வீடு போய்ச் சேர்ந்தவுடன் உற்சாக வரவேற்பு கிடைத்தது. டிப்-டாப் பேர்வழி யரும் எதையும் கேட்டு விடக் கூடாதென்பதற்காக என்னுடைய அறை எது? என்று கேட்டவுடன், மாமனார் அவனுக்கு ஒரு அறையை ஒதுக்கினார். மாப்பிள்ளையின் சந்தேகமெல்லாம் பறந்தோடிவிட்டது. ஓஹோ! இவர் மாமனாரின் நெருங்கிய நண்பர் போலும்; அதுதான் உரிமையோடு அறையைக் கேட்க, மாமனாரும் உடனே கொடுத்துவிட்டார் என்று.

 

ஒரு நாள் ஆயிற்று, இரண்டு நாள் ஆயிற்று. டிப் டாப் பேர்வழி எல்லா அறைகளிலும் சென்று எல்லாப் பொருட்களையும் எடுத்தார். எல்லோர் உடைகளையும் எடுத்து அணிந்தார்; வீட்டிலுள்ள நல்ல செருப்புகளை தன்னுடைய சொந்த செருப்பு போலப் பயன்படுத்தினார். எல்லோருக்கும் “ஹலோ, குட் மார்னிங்” எல்லாம் சொன்னார்.பேச்சு கொடுக்கக் கூடாதென்பதற்காக, பெரும்பாலான நேரங்களில் வெளியே போய்விடுவார். சாப்பாட்டு நேரத்தில், சாப்பாட்டு ராமன் —  பெருந்தீனீ – என்னும் பெயருக்குரியவராகி விடுவார்!!!

 

மாப்பிள்ளையும், மாமனாரும் இது ஏது, இப்படி இங்கிதம் இல்லாமல் மோசமாக நடந்து கொள்கிறான் என்று மனதுக்குள் புகைந்தனர். ஆனால் எதுவும் சொல்ல பயந்தனர்.

 

மானாருடைய சொந்தக்காரரைக் குறைகூறினால் அவர் தப்பாக நினைப்பாரே என்று மருமகன் பயந்தார். மருமகனின் சொந்தக்காரரைக் குறை சொன்னால் மருமகன் கஷ்டப்படுவாரே என்று மாமனார் தவித்தார்.

 

ஒரு நாள் அந்த ஆள்மாறாட்ட டிப்டாப்  பேர்வழி எல்லை மீறி சுதந்திரத்தைப் பயன்படுத்தினார். யார் அனுமதியும் கேட்காமல் காரை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி எல்லா பெட்ரோலையும் செலவழித்துவிட்டுக் காரை நிறுத்தினார். இந்த வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று கருதி மாமனார், மாப்பிள்ளையிடம் யார் இந்த பிருஹஸ்பதி? என்று கேட்போம் என்று அவரை நெருங்கினார். ஆள்மாறாட்டக்காரனின் இந்த அடாத செயலைப் பார்த்துக்கொண்டிருந்த மாப்பிள்ளையும் இவ்வளவு மோசமான இவன் யார்? என்று கேட்க மாமனாரை நெருங்கினார். ஆள்மாறாட்டப் பேர்வழிக்கு நிலைமை முற்றிப்போனது தெரிந்துவிட்டது. நைஸாக நழுவிவிட்டார். இப்போது மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் (மருமகன்) உண்மை விளங்கியது.

 

ramdas

படம்: சுவாமி  ராமதாஸ்

அந்த டிப் டாப் ஆள்மாறாட்டப் பேர்வழியின் பெயர் என்ன தெரியுமா? அஹங்காரம்; அதாவது “யான்” “எனது” என்னும் செருக்கு.

 

யார் ஒருவன் அஹங்காரத்தை அடையாளம் காண்கிறனோ, அப்பொழுது அது பயந்து ஓடிவிடும். அதைப் புரிந்துகொள்ளாமல் அதற்கு இடம் கொடுக்கும் வரைக்கும் அது (டிப்-டாப் ஆள் மாறாட்டப் பேர்வழி) ஆட்டம்போடும்!

 

இது சுவாமி ராமதாஸ் சொன்ன கதை; தமிழ் மொழிபெயர்ப்பு; லண்டன் சுவாமிநாதன்

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் – திருக்குறள் 346

 

–சுபம்–