இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!

rukmini2

ருக்மிணியை   கிருஷ்ணர் கடத்திச் செல்லும் படம்

Written by London swaminathan

Research article No. 1786; Date 8th April 2015

Uploaded from London at   காலை 9-32

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

-தொல்.பொருளதிகாம்– 1038

இந்துமதம் ஒரு அழகான மதம். அதில் காதல்,கடத்தல் திருமணங்களும் உண்டு. மொத்தம் எட்டு வகையான திருமணங்களை மனு நீதி நூல் குறிப்பிடுகிறது. வேதகாலம் முதல் இதிஹாச புராண காலம் வரை இந்த எட்டு வகை மணங்களும் இருந்தன. இதில் இன்னும் ஒரு சுவையான விஷயம் தமிழில் மிகப் பழைய நூலான தொல்காப்பியமும் இதைக் குறிப்பிடுகிறது. அடுத்த வரியிலேயே அறம் பொருள் இன்பம் (தர்ம, அர்த்த, காமம்) என்பதையும் குறிப்பிடுகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே தர்மம் இருந்தது என்பதை தொல்காப்பியர் முடிந்த இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார். நிற்க.

1.உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் விமதா என்பவன் புருமித்ர என்பவரின் மகளான காமத்யுவைக் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டதைப் பாடி வைத்துள்ளனர் முற்கால ரிஷிகள் ( ரிக் வேதம் 1-112-19, 1-116-1; 1-117-20; 10-39-7; 10-65-12).

2.கிருஷ்ண பரமாத்மா, அவர் மீது காதல் கொண்ட ருக்மிணியைக் கடத்திச் சென்று கல்யாணம் முடித்தார்.

3.கிருஷ்ணரின் தங்கை சுபத்ராவை அர்ஜுனன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள கிருஷ்ணரே உதவினார்.

4.மஹாபாரதத்தில் பீஷ்மர், காசிராஜனின் புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா அக்கிய மூவரையும் கடத்திச் சென்று இருவரை விசித்ரவீர்யனுக்கு மணம் முடித்தார்.

bhishma-amba-ambika-ambalika-300x225

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவரையும் பீஷ்மர் கடத்தும் காட்சி

அந்தக் காலத்தில் காதல், கடத்தல் பற்றிய பல சுவையான விஷயங்களை இந்தக் கதைகள் சொல்லுகின்றன. புராணங்கள் பொய்க்கதைகள் அல்ல, அக்கால உண்மைச் சம்பவங்களை அப்படியே சொன்னவை என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.

கடத்தல் திருமணங்களை ராக்ஷச வகைத் திருமணங்கள் என்பர்.

ருக்மிணியின் தந்தையான ருக்மி, தன் புதல்வியை சிசுபாலனுக்கே கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார். ஆனால் அவளுக்கு கண்ணன் மீது காதல். ஆகையால் அவர் கடத்திச் சென்றார். இதனால் சிசுபாலனுக்கும், கண்ணனுக்கும் ஜென்மப் பகை ஏற்பட்டது.

சுபத்ராவை துர்யோதணனுக்குக் கொடுக்க வேண்டும் என்று பலராமன் எண்ணினார். அது அவருடைய தம்பியான கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அர்ஜுனனை ஒர் பிராமணன் போல வேஷம் போட்டு பல நாட்களுக்கு அரண்மனையில் தங்க வைத்தார். பின்னர் சுபத்ராவைக் கடத்திச் செல்ல உதவியும் செய்தார். அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை வேண்டாம் என்று சொல்ல எந்தப் பெண்ணும் துணிய மாட்டாள். ஆனால் இது கிருஷணருக்கும் பலராமனுக்கும் இடையே உரசலை உண்டாக்கியது.மஹாபாரதப் போரில் எந்தப் பக்கமும் சேர மாட்டேன் என்று சொல்லி பலராமன் தீர்த்த யாத்திரைக்குப் போய்விட்டார்.

subhadra

சுபத்திரையை அர்ஜுனன் கடத்தும் படம்

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரழகிகளை நித்திய பிரம்மச்சாரியான பீஷ்மர் கடத்திச் சென்றார்.எதற்காக? பாண்டு வம்சம் தழைக்க வேண்டும் என்று வளர்ப்புத் தாயார் சத்தியவதி சொன்னதால். ஆனால் மூவரில் அம்பா என்ற பெண், “நான் ஏற்கனவே ஷால்வ மன்னரைக்  காதலிக்கிறேன்” என்றாள். உடனே பீஷ்மர் அவளை விடுவித்து, “போய் வா மகளே” என்றார். ஆனால் ஷால்வ மன்னனோ “பிச்சை கேட்டுப் பெண் எடுப்பவன் நான் அல்ல, போய் விடு” என்று அவளை அனுப்பி வைத்தான். இதனால் வெகுண்டெழுந்த அம்பா, பீஷ்மருக்கு கடும் சாபம் போட்டாள்.

“பெண் சாபம் பொல்லாதது. குடும்பத்தையே வேரோடு அழிக்கும்” — என்று மனு தனது நீதி நூலில் எச்சரித்தது சரியாகப் போயிற்று. “பெண்கள் எங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களோ அங்கேதான் தெய்வங்கள் வாழும்” — என்று மனு ஒரு ஸ்லோகத்தில் திட்டவட்டமாகச் சொன்னது ஏன் என்று புரிகிறது.

மிக வியப்பான விஷயம் நாம் சினிமாக்கதைகளில் பார்ப்பது போலவே அந்தக் காலத்திலும் நடந்திருக்கிறது. நமது சமய நூல்கள் பல நீதிகளைப் புகட்ட இந்த உண்மைக் கதைகளை அப்படியே உள்ளதை உள்ளவாறு இயம்பின. காதலும், கடத்தலும் இப்படி வாழ்நாள் முழுதும் ரணங்களை, தீராத பகையை உண்டாக்கும் என்பதையும் இவை தெள்ளிதின் விளக்கும்.

rukmini

எட்டு வகைத் திருமணங்கள்

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் 20 ஆவது ஸ்லோகம் முதல் எட்டு வகைத் திருமணங்களை விளக்குகிறார். அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் சிங்காரவேலு முதலியார் இவைகளை விரிவாக அளித்துள்ளார். ஆயினும் 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் என்னும் புகழ்பெற்ற தமிழ்ப் பார்ப்பன உரைகாரர் எழுதிய தொல்காப்பிய உரையில் முழு விவரங்களையும் தருகிறார்.

1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம் — என்ற எட்டுவகை திருமணம் பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன. இக் கட்டுரையின் தொடர்ச்சியில்  — இரண்டாவது பகுதியில் — எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய முழு விவரங்களையும் காண்போம்.

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?

Mango-Tree

மரத்தில் மாம்பழங்கள்

Article written by S NAGARAJAN

Post No. 1785; Date 8th April 2015

Uploaded from London at 8-21 am

 

சம்ஸ்கிருதச் செல்வம்இரண்டாம் பாகம்

29. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் இறுதி அத்தியாயத்திற்கு வந்து விட்டோம். மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

फलवत्सहकारन्यायः

phalavatsahakara nyayah

பலவத்ஸஹகார நியாயம்

பழுத்துக் குலுங்கும் பழங்களுடன் கூடிய ஒரு மாமரம் பற்றிய நியாயம் இது.

மாம்பழங்கள் பழுத்துக் குலுங்க இருக்கும் ஒரு மாமரத்தின் நிழலில் ஒருவன் தங்கினால் நிழல் மட்டுமா அவனுக்குக் கிடைக்கும். கூடவே பசியாற மாம்பழங்களும் கூடவே கிடைக்கும் அல்லவா! அது போல நிஜமான ஒரு பெரிய மனிதரை அண்டினால், கேட்காமலேயே அறிவு உட்பட அனைத்தும் அல்லவா கிடைக்கும்!

Bael tree

வில்வ மரம்; வில்வம் பழம்

बिल्वखल्वाटन्यायः

bilvakhalvata nyayah

பில்வ கல்வாட நியாயம்

வில்வ மரத்தின் அடியில் அமர்ந்த ஒரு வழுக்கைத் தலையர் பற்றிய நியாயம் இது. இதற்கான கதை ஒன்று உண்டு. ஒரு வழுக்கைத் தலையர் வில்வ மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார். அப்போது வில்வப் பழம் ஒன்று அவர் தலை மீது விழ, அவர் மண்டை உடைபட்டது. அது தற்செயலாக நடந்து விட்ட ஒன்று. இப்படித் தற்செயலாக நடக்கும் சம்பவங்களைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுகிறது.

newton apple

बीजांकुरन्यायः

bijankura nyayah

பீஜாங்குர நியாயம்

பீஜம்விதை

விதையும் முளையும் பற்றிய நியாயம் இது.

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா என்பது பழமொழி.

எது விதைத்தாயோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது வழக்கமாகச் சொல்லப்படும் ஒரு உண்மை. விதைப்பது தான் முளைப்பதற்கு காரணம். முளைத்து வருவதிலிருந்தே மீண்டும் விதை உருவாகிறது. இப்படி காரணமும் காரியமும் ஒன்றையொன்று பற்றி இருப்பதைக் காட்ட இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.

Germination20of20seeds

விதையும் முளையும்

भुलिन्गपक्षिन्यायः

bhulingapaksi nyayah

பூலிங்க பக்ஷி நியாயம்

பூலிங்கம் என்ற பறவை பற்றிய நியாயம் இது.

பூலிங்கம் என்ற அபூர்வமான பறவை ஒன்று எப்போதும்மா சாஹஸம்” – சாகஸ செயல்களில் ஈடுபடாதேஎன்று சொல்லிக் கொண்டே இருக்கும். ஆனால் அது எப்போதும் தான் சாகஸ செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும். சிங்கத்தின் வாயில் புகுந்து அங்கிருக்கும் மாமிசத் துணுக்குகளை தனக்கு உணவாக அது எடுத்துக் கொண்டு வரும்!

அசாதாரணமான சாகஸங்களைச் செய்வோர் பற்றி இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

bhulinga

(‘மஹாபாரதத்தில் பூலிங்கப் பறவை’, ‘கலியுக    அறிகுறிகள்: குருமார்கள் குலிங்கப் பக்ஷி…. ‘என்ற இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முழு விவரம் காண்க)

भ्रमरन्यायः

bhramara nyayah

ப்ரமர நியாயம்

ப்ரமரம்கருவண்டு

கருவண்டு பற்றிய நியாயம் இது.

கருவண்டு எப்போதும் மலர்களில் உள்ள தேனையே அருந்தும். வேறு எந்த வித சாறையும், அது எவ்வளவு இனிமையாக இருந்தாலும் அருந்தாது.

ஒரு பெரிய மனிதர் எப்போதும் மற்றவரின் நல்ல குணங்களையே எடுத்துக் கொள்வார். கெட்ட குணங்களைப் பெரிது படுத்த மாட்டார்.

அப்படிப்பட்ட அரும் மனிதர்களைச் சுட்டிக் காட்ட ப்ரமர நியாயம் பயன்படும்.

இத்துடன் இந்த நியாய வரிசைத் தொடர் தற்போதைக்கு நிறைவு பெறுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போது மேலும் பல நியாயங்களை அறியலாம்.

PollenBeetles435

பூவில் வண்டுகள்

நாளை முடிவுரை வெளியாகும்.

****************       முற்றும்

 

Marriage by abducting Girls in Ancient India!

subhadra

Subhadra’s abduction by Arjuna

Written by London swaminathan

Research article No. 1784; Date 7th April 2015

Uploaded from London at   21-40

Taking a woman away by force and marrying her is called “Rakshasa type of marriage”. It is listed as one of the eight approved types in the Hindu law books. This started during Rig Vedic (before 1700 BCE) days.

In the epics and Puranas and also in the Prakrit and Sanskrit literature, we have numerous instances of forcible abductions but the Vedic references of such cases are very few.

1.The Rig Veda (1-112-19, 1-116-1; 1-117-20; 10-39-7; 10-65-12) contains a few references to Vimada who carried off Purumitra’s daughter Kamadyu against her father’s will, but probably with her own consent.

2.Lord Krishna abducted Rukmini and married her.

3.Bhisma abducted Amba, Ambika, Ambalika (daughters of King of Kasi)  and married two of them to Vichitravirya.

4.Arjuna abducted Subhadra, Krishna’s sister, with the connivance of Krishna and married her.

bhishma-amba-ambika-ambalika-300x225

Bhisma’s abduction of Amba, Amabika, Amabalika

In Rukmini’s case her father Rukmi wanted to give her to Sishupala. But Rukmini liked Krishna.

In the case of Subhadra, Balarama wanted to give her to Duryodhana, but Krishna opposed it and helped Arjuna to abduct her. Subhadra liked Arjuna.

In the case of Amba, she told Bhisma that she had already fallen in love with King Shalva. When Bhisma sent her back to Shalva, he refused to accept her. She cursed Bhisma for the failure.

In the case of Ravana, he abducted Sita who is another man’s wife. Though the scriptures accepted abduction marriage (Rakshasa Vivaha) as one of the eight approved types, it never accepted abduction of married women/another man’s wife.

Asvalayana Grhya Sutra and most of the Dharma Sutras have given recognition to this form of marriage. The Baudhayana Dharma Sutra (4-1-15-16) clearly states that “if a damsel has been abducted by force and not has been wedded according to sacred texts, she is to be treated like a maiden and may be lawfully married to another man”.

rukmini2

Rukmini’s abduction by Krishna

Oldest Tamil book Tolkappiyam refers to eight types of marriages which is already said by Manu and other Hindu law books/smrtis. Most famous Tamil commentator Nachinarkiniyar explained them in detail. This gives another blow to the Aryan – Dravidian fake theory. I have already given scores of Tamil customs similar to the ones referred to in the ancient Hindu smrtis.

(1. Performing Rajasuya Yajna, Asvamedha Yajna by Tamil Kings, 2.Worship of Indra and Varuna, Shiva, Vishnu, Durga, Krishna, Balarama in Sangam literature, 3.Four divisions of army, 4.Six divisions of seasons, 5.Four Purusharthas: Dharmartha kamamoksha; 6.Praising Arundhati as the chastest woman; 7.Flags and White umbrella; 8.Sacrificing a human being before the war, 9.Capturing the cattle to start a war; 10.King as God; 11.Praying to Southerners/departed souls; 12.Wishing for a male child to do funeral rites; 13.Cremation, 14.Respecting Brahmins and the Four Vedas; 15.Belief in Karma Theory; 16Belief in Rebirth; 17.Wife respecting husband; 18.Godddess Worship; 19.Worship of sun and moon, 20.Belief in astrology, omens and umpteen other things in the oldest part of Tamil literature bulldozes the Aryan Dravidian theory. 21.Tamil and Sanskrit came from the same source and branched out before 3000 years; both following Sandhi rules until today; Agastya codifying Tamil grammar based on Panini’s Ashtadhyayee; 22.Worshipping nature 23.Using the same alphabet in same order 24.Using Brahmi script 25.Practice of ‘Sati’ etc are given in this blog. These things, not only ridiculed the supporters of Arya- Dravidian Racist theory, but also powdered their theory into dust).

Eight Types of Marriages in Tolkappiyam (Sutra 1038- Porul Adhikaram) and Manu Smrti (3-21)

1.Brahmam

Marriage between a man and a woman according to rules in the scriptures. This is a marriage between a 48 year old man and a 12 year old girl. The man remained a bachelor for 48 years for studying the Vedas and other allied subjects.

2.Prajapatyam (Prajapathi Type)

Giving away the daughter in marriage with double the dowry as given by the bridegroom’s party.

3.Arsam (Rishi Type)

Offering in marriage of a girl decked in jewels to a suitable person. Both the bride and the bridegroom are made to stand between a cow and an ox whose horns and hoof are plated with gold and they are blessed to live in joy like cow and ox. Holy water is poured as a symbol of giving away the daughter.

rukmini

4.Daivam (Divine)

This means the offer of a girl in marriage to the suitable one among those who do the noble sacrifice or yagam  in the presence of fire/agni.

5.Asuram (demonic)

The marriage of valour where a man marries one after proving his manliness by subduing a wild ox, shooting a wandering hog by an arrow or by proving his skill in archery.

6.Rakshasam (demonic)

This means a forced marriage where a person carries away a maid by force without the consent of the woman or her parents

7.Paisasam (ogre Type)

This means the act of union with the old, drunkards or the sleeping ones; also it refers to marrying a woman leading a disgraceful life.

8.Gandharva (Love Marriage; Western Type)

This means a man and a woman falling in love at first sight and then getting married just like the heavenly Gandharvas ( The word Centaurs came from the gandarva)

abduction of Helen

Helen of Troy abduction by Paris

Sources :

A Cultural Index to Vedic Literature

Who is Who in Mahabharata

Manu Smrti (Third Chapter from 3-20 onwards)

Tolkappiam (Tamil Grammar)

Abidana Chintamani (Pages 1240-1243)

பாணினி மாஜிக்!! Panini Magic!!

panini better

Compiled by London swaminathan

Post No. 1783; Date 7th April 2015

Uploaded from London at   8-58 am

பாணினியை ஏன் உலகமே புகழ்கிறது? அவர் அப்படி என்ன செய்தார்?

பாணினி கி.மு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அதாவது இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன் இப்பொழுது பாகிஸ்தானில் உள்ள ஒரு ஊரில் பிறந்தார். சம்ஸ்கிருதத்துக்கு இலக்கணம் செய்தார். அவருக்கு முன்னரும் அந்த மொழி இருந்தது. அவரே நிறைய இலக்கண வித்தகர்களின் பெயர்களைப் பட்டியல் இடுகிறார். ஆனால் இவர் செய்த புதுமை ஒரு கன கச்சிதமான இலக்கணம் எழுதியது ஆகும். அவர் செய்த ஒவ்வொரு புதுமையையும் விளக்க அல்லது விளங்கிக் கொள்ள நமக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.

பின்னர் எப்படி அவர் பெருமையை உணர்வது?

பாரதியார் பாட்டில் படிக்கிறோம்:

நம்பருந்திறலோடொரு பாணினி

ஞால மீதில் இலக்கணம் கண்டதும்…..

 

உலகில் யாரும் நம்பமுடியாத திறமையுடன் இலக்கணம் செய்தார் என்கிறார் நம்முடைய மதிப்பைப் பெற்ற பாரதியார்.அவரோ காசியில் சம்ஸ்கிருதம் கற்றவர்.

அது சரி, ஒரு எடுத்துக்காட்டாவது காட்ட முடியுமா?

பாணினி எழுதிய புத்தகத்தின் பெயர் அஷ்டாத்யாயி (அஷ்ட அத்யாயங்கள் = எட்டு பகுதிகள்). அதில் முதலாவது மஹேஸ்வர சூத்திரம் என்று இருக்கிறது– சிலர் இதை பாணினி புத்தகத்தில் இருந்து வேறாகவும் கருதுவர். ஆனால் 2700 ஆண்டுகளாக வழங்கும் கதை என்ன வென்றால், சிவபெருமான் உடுக்கை அடித்து ஆடியபோது அந்த ஒலியில் இருந்து எழுந்த 14 சூத்திரங்களே இவை. இதை அவர் தனது புத்தகத்தில் பயன்படுத்தியதில் இருந்து இதற்கும் அவருக்கும் உள்ள தொடர்பு தெள்ளிதின் விளங்கும்.

panini fdc

சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்:

14 சூத்திரங்கள்:

அ இ உண்

ருலுக்

ஏ ஓங்

ஐ ஔச்

ஹயவரட்

லண்

ஞம ஙணநம்

ஜபஞ்

கடத ஷ்

ஜபகடதஸ்

க ப ச ட த சடதவ்

கபய்

சஷஸர்

ஹல்

–“இதி மாஹேஸ்வராணி சூத்ராணி”.

இவைதான் அவருடைய உடுக்கையில் இருந்து எழுந்த ஒலிகள்.

சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் இதில் உள. ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியிலும் உள்ள எழுத்து புள்ளிவைத்த மெய் எழுத்து. அது அடையாளத்துக்காக உள்ளது. விதிகளைப் பயன்படுத்தும்போது, அதைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது – அதாவது அது உப்புக்குச் சப்பை ஊருக்கு மாங்கொட்டை.

ஒரு எடுத்துக் காட்டு:—

உயிர் எழுத்துக்கள் சம்பந்தமான ஒரு விதியைச் சொல்ல வேண்டுமானால் “அச்” என்று சொன்னால் போதும். மேலே உள்ள சூத்திரத்தில் “அ” என்பது முதல் எழுத்து; பின்னர். நாலாவது சூத்திரத்தில் “ச்” என்று முடிகிறது. அ – முதல் ச் – வரையுள்ள எழுத்துக்கள் எல்லாம் உயிர் எழுத்துக்கள். முன்னர் சொன்னது போல ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியில் உள்ள புள்ளி வைத்த எழுத்துக்களை ( ச் ) மறந்துவிடுங்கள்.

விடை:–

அ இ உ ((ண்))

ருலு  ((க்))

ஏ ஓ ((ங்))

ஐ ஔ ((ச்)),

உயிர் எழுத்துக்கள் (Vowels) அ, இ, உ, ரு, லு, ஏ, ஓ, ஐ, ஔ

Panini,_

இன்னொரு விதியும் இதில் அடக்கம். அது என்ன?

ஒரு குறில் எழுத்தைச் சொன்னால் அது தொடர்பான நெடிலும் அடக்கம். அ என்றால் ஆ, இ என்றால் ஈ, உ என்றால் ஊ என்று சேர்த்துக்கொண்டே போக வேண்டும்.

அட, இது என்ன பிரமாதம்? “அச்” என்று சொல்லுவதற்கு பதில் தமிழில் உள்ளது போல “உயிர் எழுத்து” என்று சொல்லி விடலாமே. இதற்காகவா, பாணினியைப் புகழ்கிறார்கள்? என்று கேட்கலாம்.

இதே போல “ஹல்: என்றால் அது மெய் எழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும். ஐந்தாவது சூத்திரத்தில் ஹ என்னும் எழுத்தில் சூத்திரம் துவங்கி 14-ஆவது சூத்திரத்தில் “ல்” என்ற எழுத்தில் முடிகிறது. அது வரை உள்ள எழுத்துக்கள் எல்லாம் மெய் எழுத்துக்கள் (Consonants) — (ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியில் உள்ள புள்ளி வைத்த எழுத்துக்களை மறந்துவிடுங்கள்).

அட, இது என்ன பிரமாதம், “ஹல்” என்று சொல்லுவதற்குப் பதிலாக ‘மெய் எழுத்துக்கள்’ என்று சொன்னால் என்ன பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடும்? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் மெய் எழுத்து, உயிர் எழுத்து என்பதற்கு மட்டும் இன்றி, எந்த இரண்டு எழுத்துக்கள் இடையேயும் உள்ள எழுத்துக்களை இப்படி எடுத்துக் கொண்டு விதி செய்யலாம். சம்ஸ்கிருதத்தில் சந்தி விதிகளை விளக்க இப்படிப் பல சூத்திரங்கள் தேவைப்படுகின்றன.

இந்த 14 சூத்திரங்களை வைத்து 281 ‘காம்பினேஷன்’ போடலாம் என்று அறிஞர்கள் சொல்லுவர்!  இதனால் இதை பிரத்தியாஹார சூத்திரம் என்றும் சொல்லுவர். பிரத்தியாஹாரம் என்றால் முன்னர் குறிப்பிட்ட “அச்”, “ஹல்” போன்ற கூட்டு எழுத்துக்கள் (காம்பினேஷன்) ஆகும். சிவ அல்லது மாஹேஸ்வர சூத்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி 44 பிரத்தியாஹார சூத்திரங்களை பாணினி பயன்படுத்தியுள்ளார்.

இப்படி அவர் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இதுபோன்ற புத்திசாலித்தனமான உத்தியைப் பயன்படுத்தினால் இவ்வளவு பாராட்டி இருக்க மாட்டார்கள். சம்ஸ்கிருதம் என்ற மொழியே, முழுக்க முழுக்க இப்படி சில விஞ்ஞானபூர்வ விதிகளின் மேல் அமைந்துளது. அதாவது வேர்ச் சொற்களைத் தெரிந்து கொண்டு விட்டால், அகராதியே இல்லாமல் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம். நாமும் புதிய சொற்களை உண்டாக்கலாம். ஒரு வேர்ச் சொல்லுக்கு முன் ஒரு முன்னொட்டு (prefix) அல்லது வேர்ச் சொல்லுக்குப் பின்னர் ஒரு பின் ஒட்டைச் (Suffix) சேர்த்துக் கொண்டால் அர்த்தம் மாறிக்கொண்டே போகும்.

ஆங்கிலத்தில் வண்ணங்களைக் (Colours)  குறிக்க ஏராளமான சொற்கள் உண்டு. பெயிண்ட் விற்கும் கடைக்குப் போய் கேடலாக்- கை (Catalogue) வாங்கிப் பார்த்தால் இவ்வளவு வகையான கலர்கள் உண்டா என்று வியப்பீர்கள். உண்மையில் உலகில் மூன்றே வர்ணங்கள்தான் உண்டு. சிவப்பு, நீலம், மஞ்சள் — இவைகளை வெவ்வேறு விகிதத்தில் கலக்க கலக்கப் புதுப் புது வர்ணங்கள் கிடைக்கும். அதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஆங்கிலப் பெயர். (Different shades of colours). இதே போல சம்ஸ்கிருதத்தில் ஒரு வேர்ச் சொல்லை எடுத்துக் கொண்டு முன்னொட்டு, பின்னொட்டுகளைச் சேர்த்து அர்த்தத்தை மாற்றிக் கொண்டே போகலாம். உலகில் சம்ஸ்கிருதத்தில் இருந்து தோன்றிய மொழிகளில் இதைக் காணலாம். ஆயினும் சம்ஸ்கிருதத்தில் இன்றும் அதற்கான இலக்கணம் உள்ளது. ஒரு நூறு, இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வரை சம்ஸ்கிருதத்தில் துதிகள் எழுதப்பட்டுள்ளன. அவைகளும் இதே விதியைத் தான் பயன்படுத்தின.

பாணினியைப் பயிலப் பயில, சம்ஸ்கிருத அமைப்பைப் பார்க்கப் பார்க்க, வியப்பு மேலே மேலே வந்து கொண்டே இருக்கும். தமிழர்களாகிய நாம் சந்தோஷப் படவேண்டிய விஷயம் நம் முன்னோர்கள் காழ்ப்பு உணர்ச்சி எதுவுமின்றி சங்க காலம் முதல் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சம்ஸ்கிருதம் இல்லாமல் எந்த இந்தியனும் எந்த இந்திய மொழியையும் பேசவே முடியாது! —- இருதயம், மனம், காமம், நீலம் – இது போன்ற நூற்றுக் கணக்கான சம்ஸ்கிருதச் சொற்களை நாம் ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தி வருகிறோம். தமிழர்கள் பெயர்கள் பலவும், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் உள்ள சொற்கள்!!!

ஒரே ஒரு எடுத்துக் காட்டு:– யார் யார் பெயர்களில் எல்லாம் ராஜா, இந்திரன், சரஸ்வதி, பாரதி, சோம, சூர்ய, ஆதித்ய, கருணா, நிதி, கீர்த்தி, வீர,மணி, தாச,க்ருஷ்ண, சாந்தி முதலியன வருகின்றனவோ அவை எல்லாம் ரிக்வேதத்தில் உள்ள சொற்கள் என்பதை அறிக.

தமிழுக்கு மிக,மிக, மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம். இந்த அளவு நெருக்கத்துக்கு வேறு எந்த மொழியும் தமிழுக்கு பக்கத்தில் வரவே முடியாது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் இருக்கிறதே என்று சொல்லாதீர்கள். அவை எல்லாம் தமிழின் சஹோதர மொழிகள். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.

-சுபம்-

ஒரு தாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்!

rama raibow

ஸ்ரீ ராமர் படம்

Article written by S NAGARAJAN

Post No. 1782; Date 7th April 2015

Uploaded from London at 6-12 am

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 17

by ச.நாகராஜன்

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்!

 rama immaiyee

நாராயணா என்னும் நாமம்!

 

நாராயணா என்னும் நாம மகிமையை திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் கூறியிருப்பதை அறியாதவர் இருக்க முடியாது. பெற்ற தாயினும் ஆயின செய்யும் அந்த எட்டெழுத்து மந்திரம், குலம் தரும் செல்வம் தரும், அனைத்து நலன்களையும் தரும்! அவர் அருளிய பாடலைப் பார்ப்போம்:-

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயாராயினவெல்லாம்                          

நிலம் தரச் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலமளிக்கும்           

வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்                  

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்

 

இப்படிப்பட்ட அரும் நாமம் கொண்ட மஹாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளதை நமது புராணங்கள் அழகுற விளக்குகின்றன.

 

திருமால் பெருமைக்கு நிகரேது!

மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மனிதருக்கு வாழும் நெறியைக் காட்டிய அவதாரங்களில் ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் தனிச் சிறப்பைப் பெற்ற அவதாரங்கள்.

இந்த பத்து அவதாரங்களையும் பார்த்து மகிழ ஒரு பாட்டு பிறந்தது – திருமால் பெருமை என்னும் படத்தில்.

1968ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் இந்த மாதிரி படங்களை எடுப்பதற்கென்றே பிறந்தவர் என்று சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஏ.பி.நாகராஜன். இதில் பத்து அவதாரச் சிறப்பையும் ஒவ்வொரு வரியில் அமைத்துத் தர வேண்டும். யாரால் முடியும்? வேறு யார் – கண்ணதாசன் தான் பாடலை இயற்றியுள்ளார்.

கணீர் என்ற குரலில் டி.எம்.சௌந்தரராஜன் இனிமையாகப் பாடலைப் பாட காட்சியின் பின்னணியில் பத்து அவதாரங்களையும் கண்டு மகிழலாம். சிவாஜிகணேசனும் பத்மினியும் இந்தக் காட்சியில் தோன்றுகின்றனர். சிவாஜி பாட பத்மினி அருகில் இருந்து துதிக்கும் காட்சி இது. சிவகுமார் புன்சிரிப்புடன் தெய்வத் தோற்றத்தைக் காட்டுகிறார். ஆவியே அமுதே என்று இறைவனை விளித்து சிவாஜி பத்து அவதாரங்களையும் வர்ணிக்கும் பாடல் அற்புதம் தான்! ராம அவதாரம் என்று பாடியவாறே வில்லை சிவாஜி அபிநயித்துக் காட்டி ராமரின் ஏற்றத்தைக் காட்டுகிறார்! பல ராமன் என்று கூறிப் பின்னர் பலராமன் என அவதாரத்தைச் சொல்லும் போது இந்தச் சொல்லை சிலேடையாகப் பயன்படுத்தி இருக்கும் கண்ணதாசனின் கவித்துவத்தைப் பளீரென மின்னலடித்துக் காட்டுவதாக விளங்குகிறது!

ramakoti beauty

நீண்ட இனிய பாடல் 4 நிமிடம் 43 வினாடிகள் நீடிக்கிறது.

திருமால் பெருமைக்கு நிகரேது – உன்றன்

திருவடி நிழலுக்கு இணையேது

பெருமானே உன்றன் திருநாமம் – பத்து

பெயர்களில் விளங்கும் அவதாரம்     (திருமால் பெருமைக்கு)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் தன்னைக்

காப்பதற்கே கொண்ட அவதாரம் – மச்ச அவதாரம்

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் – எங்கள்

அச்சுதனே உந்தன் அவதாரம் – கூர்ம அவதாரம்

பூமியைக் காத்திட ஒரு காலம் – நீ

புனைந்தது மற்றொரு அவதாரம் – வராக அவதாரம்

நாராயணா என்னும் திருநாமம் – நிலை

நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் – நரசிம்ம அவதாரம்

மாவலி சிரம் தன்னில் கால் வைத்து – இந்த

மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம் – வாமன அவதாரம்

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் – என்று

சாற்றியதும் ஒரு அவதாரம் – பரசுராம அவதாரம்

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும்

உயர்வினைக் காட்டிய அவதாரம் – ராம அவதாரம்

ரகுகுலம் கொண்டது ஒரு ராமன் – பின்பு

யதுகுலம் கண்டது பலராமன்  – பலராமன்

அரசுமுறை வழிநெறி காக்க – நீ

அடைந்தது இன்னொரு அவதாரம் – கண்ணன் அவதாரம்

விதி நடந்ததென மதி முடிந்ததென

வினையின் பயனே உருவாக

நிலை மறந்தவரும் நெறியிழந்தவரும்

உணரும் வண்ணம் தெளிவாக,

இன்னல் ஒழித்து புவி காக்க – நீ

எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் – கல்கி அவதாரம்  (திருமால் பெருமைக்கு)

 

 ramakoti

சீதையே இலட்சிய இந்தியா :ஸ்வாமி விவேகானந்தர்!

“சீதாயா சரிதம் மஹத்” என்பார் வால்மீகி. இராமாயணத்திற்கு வால்மீகி தந்த பெயர் சீதையின் சரிதம் என்பது தான்!

சீதையே இலட்சிய இந்தியா என்றார் ஸ்வாமி விவேகானந்தர்:  “Sita is typical of India – the idealized India”

ஸ்வாமிஜியின் அமுத மொழிகள் ராமரின் ஏற்றத்தையும் சீதையின் மாபெரும் மஹத்துவத்தையும் இப்படிச் சித்தரிப்பதைக் காணலாம்:-

Rama and Sita are the ideals of the Indian nation. All children, especially girls, worship Sita. The height of a woman’s ambition is to be like Sita, the pure, the devoted, the all-suffering!”

“Sita is the name in India for everything that is good, pure, and holy; everything that in woman we call woman”

ஆக வழிவழியாக பாரதப் பெண்மையின் லட்சியமாக சீதை திகழ்வதையும் அப்படிப்பட்ட ஒரே தாரத்தைப் பெற்றுப் போற்றி குடும்பம் நடத்துவதற்கான வாழ்வு நெறியை ராமன் காண்பிப்பதையும் ராமாயணம் நமக்கு உணர்த்துகிறது.

இதைத் தமிழ் திரையுலகம் அவ்வப்பொழுது அழகுறச் சித்தரித்து வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் திருமால் பெருமை பத்து அவதார மகிமையையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டது எனலாம்!

*****************

Sanskrit Inscriptions in South East Asia!

Carte_Empire-Khmer

Compiled by London swaminathan

Post No. 1781; Date 6th April 2015

Uploaded from London at   20-15

Over 1250 inscriptions are discovered so far in South East Asian countries. Majority of them are in Sanskrit language. Ancient Cambodia, known as Kingdom of Khmer covered most of the area in South East Asia. Champa, what is now known as Vietnam, has the oldest Sanskrit inscription. Since the name on the inscription is Sri Mara, I have interpreted it as the name of a Pandyan king in my research article “A Tamil king who ruled Vietnam” — posted here on  Sept 13 , 2011. This is what I wrote,

“The inscription is known as Vo-Chanh Inscription. It was inscribed on a rock as two parts. This is about the donation made by the family of the king Sri Maran. We have fifteen lines on one part of the rock and seven more lines on the other side. Of these only nine lines are readable. Scholars who took a copy of the inscription say the poetry part is in Vasantha Thilaka metre in Sanskrit and rest is in prose.

The king donated all his property to the people who were close to him and ordered that it should be honoured by the future kings. The inscription ends abruptly. But we could read the words ‘Sri Mara raja kula’ very clearly. Though we couldn’t get much information about this king from other sources, Chinese historians confirmed that the Hindu empire that existed in Vietnam, Laos and Cambodia started with Sri Maran”.

Over 800 Sanskrit inscriptions were found in S.E.Asia until fifty years ago. Now more and more inscriptions are discovered. Even a new underground city is discovered in 2013.

10_A-Shivait-Sanskrit-inscription

Saivite Sanskrit Inscription

Cambodia has made unique contributions to Sanskrit literature especially in poetry according to Dr M K Charan. He says, “The writers demonstrated full knowledge of various Indian sects. They mastered the rhetorical and literary conventions like puns, alliterations, similes etc. and virtually employed all the varied metres of Sanskrit poetics.

Cambodian epigraphy used both Sanskrit and old Khmer languages. They considered Sanskrit as a sacred language and so used it to record royal genealogies, panegyrics of the founders of monuments and donors, while old Khmer and Cambodian were used for the details which followed. Even in South India writers used Sanskrit and Tamil in the same way. Sanskrit verses praised the king and his Vamsavali (genealogy) whereas the Tamil section gave minute details of the donation, the extension of the land or the gifts to temples or the Brahmins.

south-east-asia-map

298 verses in one inscription!

Since the Cambodian inscriptions covers a vast area covering several modern S. E. Asian countries and period of 800 years from 7th century to 14th century CE, we can’t expect uniformity in the language of the inscriptions.

“We have positive evidence about the flourishing state of Sanskrit language during a span of more than 800 years. Verses composed during the period of Jayavarman and Yasovarman conform to Panini’s rules because the composers had a thorough knowledge of grammar”, says DR MK Charan. Many of the Sanskrit verses are so beautiful that we do not find their parallel in India. A new Kavya style named Manohara has been referred to in the Pre rup inscription.

Inscriptions are in beautiful and flawless Kavya style. They exhibit a thorough knowledge of different metres and most developed rues and conventions of rhetoric and prosody.

10_A-Buddhist-inscription

Buddhist Inscription

The oldest inscription found in Cambodia is of fifth century CE. Out of the five verses contained in this inscription, four are in sardulavikridita metre and one shows familiarity with Hindu mythology. Some of the inscriptions are very big compositions. The Prasusti of Rajendravarman which contains 298 verses excess all others in size.

J F Stall says, “The Vocañh inscription is written in regular Sanskrit prose, and most of the inscriptions from Cambodia are written in a more correct form of Sanskrit than that which is used in some of the inscriptions from India. The reason for this may be that the Cambodians learned Sanskrit from grammar books and not from native speakers. The Indian grammarian Panini is in fact honoured by being mentioned in these inscriptions; other linguistic works are referred to as well”.

Jean-Michel Filippi, Professor of Linguistics at Royal Phnom Penh University wrote in June 2013, “Cambodian inscriptions make you feel dizzy: new inscriptions are still regularly found and they are very far from having been translated and commented upon.

The implications of this fact are obvious: Cambodian general history may well be known, but there remains very many obscure points which will only be made clear when the inscriptions are deciphered. Thus there is a strong chance that a book about pre-Angkor or Angkor Cambodia written 20 years ago may be simply refuted by the discovery or the deciphering of an inscription”.

budhagupta inscription

Pallava Grantha Script

Lakshminarayana dasa and Bhaktin Kaunteya of Iskcon, Cambodia, are writing about research in this area and add

“In the beginning of Christian era, Khmer language was only a spoken language. In other terms, at that time, the Khmer did not know how to write. The ancient Khmers borrowed the Indic script to record their own language. So the modern Khmer language is written in a script, which is borrowed from India. It is precisely the Grantha Brahmi script, which is the mother of modern Khmer script. Cambodia has also adopted the Devanagari script and Pallava Grantha script in order to develop its actual alphabets. In the present day Cambodian, about seventy percent words are borrowed from Sanskrit. Such common words as dhanagara (bank), durasabda (telephone),bhasa (language), etc are derived from Sanskrit.

Sanskrit was the court language of the Khmer Empire for more than thousand years. All the royal orders, land transactions, temple administration were recorded in Sanskrit. Slowly the Khmer language shared this role in course of centuries. So after seventh century we find inscriptions partly written in Sanskrit and partly in Khmer.

south_east_asia_map

About 1250 inscriptions have been discovered from the Ancient Angkor Empire. The majority is written in Sanskrit. The aim of the present research is to explore various aspects of cultural relations between India and Cambodia as presented in the epigraphic literature of this country”

Sources:–

Studies in Sanskrit Inscriptions of Ancient Cambodia by M K Charan, 1974

Articles by J F Stall, Jean-Michel Filiippi and Iskcon, Cambodia.

10_The-Vo-Canh-Inscription

Vo Canh Inscription in Vietnam (Champa)

‘நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர்’: சுவையான கதை!

gurukulam

குரு குல முறையில் வேதாத்யயனம்

Article written by London swaminathan

Post No. 1780; Date 6th April 2015

Uploaded from London at  காலை 9-22

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் 
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி 
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் 
கருமமே கண்ணாயி னார்நீதி நெறி விளக்கம்

 

ஒரு செயலில் முனைப்பாக இருப்பவர் உடலுக்கு வரும் வருத்தம், நோய் நொடிகளைப் பொருட்படுத்த மாட்டார். பசித்தாலும் கவலைப்படமாட்டார். தூங்க மாட்டார். யாரேனும் கெடுதல் செய்தாலும் அதையும் மனதிற் கொள்ளார். காலம் பற்றியும் கவலைப்படமாட்டார். தனக்கு வரும் அவமதிப்பையும் எடுத்துக்கொள்ளார்.

கற்றவனுக்கு அடையாளம் என்ன?

ஒரு சுவையான கதை கேளுங்கள். ஒரு படிக்காத இளைஞனை நன்றாகப் படித்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். நாளாக ஆக இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. அவளும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ இவனை குத்திக் காட்டினாள். இவன் ஒரு முடிவுக்கு வந்தான். நன்கு கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு வருவேன் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.

ganapati2

நல்ல மாணவர்கள் பசி நோக்கார்

அந்தக் காலத்தில் காசி என்ற தலமே கற்றோர் நிறைந்த ஊர். ஆகையால் பெரிய அறிவாளிகள் எல்லாம் காசிக்குச் சென்று கற்று வருவர். இவனும் காசிக்குப் போனான். அங்கே ஒரு வயதான ஆசிரியரைக் கண்டான். தனது சோகக் கதையைச் சொல்லி தனக்கு கல்வி புகட்டும்படி மன்றாடினான். அவரும் இவனை சிஷ்யனாக ஏற்றார்.

இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடின. நல்ல சீடனாகவே இருந்து எல்லாவற்றையும் ஆர்வத்தோடு கற்றான். குரு, ஒரு நாள் தனது மனைவியை அழைத்து, நாலை முதல் இவனுக்குப் பரிமாறும் உணவில் ஒரு உத்தரணி (ஸ்பூன்) அளவுக்கு வேப்ப எண்ணையைக் கலந்து பரிமாறு என்றார். ஆனால் அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த நாளைன்றே என்னிடம் சொல்லிவிடு என்றார்.

குருவின் மனைவிக்கு ஏன் என்று புரியவில்லை. இருந்தாலும் கணவன் இட்ட கட்டளையை மீறாத பத்தினி அவள். அந்த சிஷ்யனும் முகம் கோணாது சாப்பிட்டு வந்தான். குருவின் மனைவிக்குக் கூட கொஞ்சம் பரிதாபம் மனதில் ஏற்பட்டது. வேப்ப எண்ணையைக் கலக்காமல் விட்டுவிடலாமா என்று எண்ணிணாள். ஆயினும் அவளுக்கு அந்தத் துணிவு வரவில்லை.

dhanus

மெய் வருத்தம் பாரார்

இவ்வாறு வேப்ப எண்ணை கலந்த சாப்பாடு மூன்று மாதம் பரிமாறப்பட்டது. ஒரு நாளைக்கு சிஷ்யன், குருவின் மனைவியைப் பார்த்து, “அம்மையே, உங்களுடைய சாப்பாடு எப்போதும் அமிர்தமயமாகவே இருக்கும். கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் வேறுபாடு தெரிகிறது. ஏதோ வேப்பெண்ணை வாசனை அடிக்கிறது” என்றான். குருவின் மனைவியும் சமாளித்துக் கொண்டு, “அப்படியா? என்ன காரணம் என்று கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

ரகசியமாக கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள், “உங்கள் சீடனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் வேப்பெண்ணை வாசனையைக் கண்டுபிடித்துவிட்டான்” என்றாள். குரு சிரித்துக் கொண்டே, சிஷ்யனைக் கூப்பிட்டார்.

“சிஷ்யா! நீ நல்ல மாணவன். மூன்று ஆண்டுகளாக எல்லாவற்றையும் உண்மையான ஆர்வத்தோடு பயின்றாய். நீ எல்லாவற்றையும் கற்றுமுடித்த அறிகுறிகள் தென்படுகின்றன. நாளை காலை நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பலாம். உனக்கு என்னுடைய பரிபூரண ஆசீர்வாதம்” என்றார். சீடனுக்கு மிகவும் சந்தோஷம். மறுநாள் காலையில் தக்க குரு தட்சிணை கொடுத்து, நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டான்.

குருவின் மனைவி வியப்புடன் கேட்டாள், “நாதா! வேப்பெண்ணைக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்கவில்லையே!”

குரு சொன்னார், “அன்பே, நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் என்ற ஆன்றோர் வாக்கை நீ கேட்டது இல்லையா? ஒருவனுக்கு கல்வியில் நாட்டம் உள்ளவரை வேறு எதிலும் சுவை இருக்காது. சொல்லப்போனால் சுவையே தெரியாது. அவனுக்கு கல்வியில் முழு கவனம் இருக்கும் வரை அவனுக்கு ருசியே தெரியவில்லை. அந்த நாட்டம் குறைந்தவுடன் அவனுக்கு ருசி தெரிந்துவிட்டது. ஆகையால்தான் அவனை ஊருக்கு அனுப்பிவைத்தேன். அவன் இனிமேல் பிழைத்துக் கொள்வான்” என்றார்.

children,mumbai

கருமமே கண்ணாயினார்

–சுபம்

கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாமா?

http://regex.info/blog/2007-05-23/466

Article written by S NAGARAJAN

Post No. 1779; Date 6th April 2015

Uploaded from London at 7-20 am

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்இரண்டாம் பாகம்

28. கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாமா?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

पञ्जरमुक्तपक्षिन्यायः

panjaramuktapaksi nyayah

பஞ்சர முக்த பக்ஷி நியாயம்

கூண்டிலிருந்து விடுதலையாகும் பறவை பற்றிய நியாயம் இது.

இறப்பின் போது உடலிலிருந்து ஆன்மா, கூண்டிலிருந்து விடுதலையாகிப் பறந்து வானில் செல்லும் பறவையைப் போல பறந்து செல்கிறது என்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது.

bird_escaping_from_cage

கூண்டுக் கிளி பறந்தது (குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே

உடம்போடடு   உயிரிடை நட்பு – குறள்  338)

प्रथममल्लन्यायः

prathanamalla nyayah

பிரதம மல்ல நியாயம்

மல்யுத்த வீரர்களின் தலைவனைத் தோற்க அடிப்பது குறித்த நியாயம் இது.

பல பேரை எதிர்க்க வேண்டியுள்ள ஒருவன் எதிர்ப்பவர்களில் வலிமையாக இருக்கும் தலைவனைத் தோற்க அடித்து விட்டால் ஏனையோரைப் பற்றிக் கவலையே பட வேண்டாம், இல்லையா! அது போல, பல வித கொள்கைகளை எதிர்த்து தன்  கொள்கையை ஸ்தாபிதம் செய்ய நினைக்கும் ஒருவர் ஒவ்வொரு கொள்கையாக எடுத்து எதிர்த்து தன் கொள்கையாக நிர்ணயிக்காமல், பிரதானமாக இருக்கும் கொள்கையை எதிர்த்து தன் கொள்கையை ஸ்தாபித்து விட்டால் ஒவ்வொரு கொள்கைக்கும் பதில் சொல்ல வேண்டாம். இதைச் சுட்டிக் காட்டும்வலியவனை வெல்என்னும் நியாயம் இது.

kushti 2

குஸ்தி, மல்யுத்தம் படம்

बकबन्धनन्यायः

bakabandhana nyayah

பக பந்தன நியாயம்

 

கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கும் நியாயம் என்ற இந்த நியாயம் பிரசித்தி பெற்ற ஒன்று. சாதாரணமாக வழக்கில் இருந்து வரும் ஒன்றும் கூட!

கொக்கைப் பிடிக்க ஒருவன் நினைத்தான். அதற்கு அவன் கண்டு பிடித்த வழி, அதன் தலையில் முதலில் வெண்ணெய் வைக்க வேண்டும். அது சூரிய வெப்பத்தில் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன், கொக்கு குருடாகி விடும். அப்போது அதை சுலபமாகப் பிடித்து விடலாம். எப்படிப்பட்ட யோசனை! இப்படி முட்டாள்தனமான யோசனைகளை ஒருவர் கூறும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

kokku

கொக்கின்   தலையில் வெண்ணை?

बधिरकर्णजपन्यायः

badhira karnajapa nyayah

பதிர கர்ண ஜப நியாயம்

செவிடன் காதில் முணுமுணுப்பது பற்றிய நியாயம் இது.

ஒன்றுமே காதில் விழாத ஒரு செவிடனிடம் முணுமுணுப்பதால் என்ன பிரயோஜனம்? வீணான ஒரு வேலையை ஒருவர் மேற்கொள்ளும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

deaf_grandma_small

செவிடன் காதில்  – ஊதிய சங்கு

 

बहूनामनुग्रहो न्यायः

bahunamanugraho nyayyah

 

பஹுனாமனுக்ரஹோ நியாயம்

 

பலர் ஒன்று கூடி சேர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது. தன் பந்து மித்திரர்களுடன்உற்றார் உறவினருடன்சேர்ந்து இருந்து அவர்களின் ஆதரவைப் பெற்றால் அது மிகவும் நல்லது, அல்லவா! அனைவரது ஒத்துழைப்பும் நல்லாசிகளும் கிடைக்கும். இந்த ஒற்றுமையைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

large family

நல்ல குடும்பம், பெரிய குடும்பம்

*****************

Four Indian Kings who did not want to Rule!

Puhar-ILango

Picture of Tamil Prince Ilango

Research Article written by London swaminathan

Post No. 1778; Date 5th April 2015

Uploaded from London at  22-03

We have stories of at least four ancient Indian kings who sacrificed their right to rule. Because of their great sacrifice their names are entered into our literature and remembered for ever.

Devapi of Rig Vedic Period

Dustaritu Paumsayana of Vedic Period

Bhisma of Mahabharata Period

Ilango of Tamil Sangam Period

The interesting stories about these people are as follows:-

Devapi (RV 10-98) abdicated the throne in favour of his brother. According to the Nirukta (2-10), Devapi was the elder Kuru prince, but his younger brother Santanu became the king. There was a prolonged drought in the kingdom and Devapi acted as the priest of the king and brought rain by performing a sacrifice. The Brhaddevata gives us the same story but adds that Devapi abdicated because of his skin disease.

King Dustaritu Paumsayana, a king of the Srnjayas had to abdicate for his misrule (Satapata Brahmana 12-9-3-1). We have the stories of Vijaya who was banished from Kalinga/Vanga region who established a new kingdom in Sri Lanka. Other kings thrown out were Vena, Nahusa and Sumuka. But theirs was not abdication; they were driven out from their kingdoms.

title_bhishma_

Bhishma’s Great Sacrifice

Bhishma’s sacrifice was highly praised by the epic. His name was Devavrata. He sacrificed his right to rule for the sake of his father. His father Shantanu fell in love with a fisherwoman (Satyavati). Her father insisted that Shantanu could marry her only when he promised him that her child would succeed him to the throne of Hastinapura. When Shantanu was not ready to give such a promise, Devavrata came to know about his father’s love for Satyavati. He renounced the throne of Hastinapura. The entire country praised him for his sacrifice and then he was called Bhishma (man of terrible vow).

King Edward VIII of Britain wanted to marry a divorced American woman Wallis Simpson; it was opposed on moral, political and legal grounds. He renounced the throne in 1936 and married the woman.

bhisma

Tamil Prince Ilango

Ilango (also written Ilanko) was the younger son of King Ceralatan who ruled the western coastal area (Kerala) of South India. His elder brother was Senguttuvan. He was celebrated in the Tamil epic Silappadikaram written by his brother Ilanga. They lived in the Second century CE.

One day, when the king Ceralatan was sitting in the audience hall, there came to the court an astrologer who predicted the immediate death of the reigning king and the passing of the throne to his younger son (Ilango). It was an age of faith in Astrology. The prediction was a rude shock to Senguttuvan, brother of Ilango. He was the elder son and heir apparent to the throne. Ilnago noticed this, and in order that his brother might enjoy the kingdom, he became a monk. Once he became a monk, he could not be a king. The assumption of holy orders was to assure his brother that he would not stand to the way of his brother’s hopes and aspiration. He left the palace immediately and lived in Gunavayir Kottam, a temple.

swarna-vrsti  shankara

Pictures of Vidyaranya and Adi Shankara

Hindus believed that once a person becomes a monk, astrological predictions won’t come true. It is a way out or an exit strategy to defeat the fate or to beat the Karma theory. When Adi Shankara was caught by a crocodile, he told his mother that his present life was finished, but once his mother allowed him to become a monk, he would live. His mother said yes and the crocodile left him. That was like his “second birth”.

When Vidyaranya prayed for immense wealth, goddess appeared before him and told him that he couldn’t become rich in that birth, he immediately became a monk. Later he realised that Hindu monks couldn’t touch money. He gave all the gold bars given by the Goddess to  Harihara and Bhukka to establish the Vijanagara Empire. In the same way, by taking a “second birth” as ascetic, Ilango wiped out his first existence. He beat astrology by becoming an ascetic.

Source books:

Who is Who in the Mahabharata by Subash Mazumdar

A cultural Index to Vedic Index, Edited by N N Bhattacharya

The Cilappatikaram by Prof. V R Ramachandra Dikshitar

வேதத்தில் பரத நாட்டியம்!

JR

Picture of Famous Bharata Natyam Dancer Dr Janaki Rengarajan

Research Article written by London swaminathan

Post No. 1777; Date 5th April 2015

Uploaded from London at  14-00

This is already published in English in two parts

உலகிலேயே மிகப் பழமையான நூல் ரிக்வேதம். அதிலுள்ள பல சம்ஸ்கிருதச் சொற்களை தமிழர்களாகிய நாம் இன்றும் அன்றாடம் பேசும் உரையாடலில் பயன்படுத்துகிறோம். இன்றும் அந்த வேதம் கோவில்களிலும் யாகங்களிலும், திருமணச் சடங்குகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் நாட்டியம் பற்றியும், சங்கீதம் பற்றியும் ஏராளமான குறிப்புகள் உள்ளன. வேதத்தில் வரும் இசைக் கருவிகள், ஆபரணங்கள், தங்க நகைகள், நாட்டியம் – சங்கீதம் ஆகிய எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கையில் அவர்கள் எவ்வளவு நாகரீகம் படைத்தவர்கள் என்பதை எண்ணி வியக்கிறோம்.

ஒரு நாட்டில், மக்களின் அடிப்படைத் தேவைகள் – உணவு, உடைகள், உறைவிடம் – ரோட்டி கப்டா அவர் மகான் – நிறைவடையும் போதுதான் கவலைகள் மறையும்; கலைகள் மலரும். அவைகள் பரிணமிக்க மேலும் சிறிது காலம் பிடிக்கும். ரிக் வேத காலத்தில் பெண்கள் நகை அணிந்து சபைகளுக்குச் செல்லும் மந்திரங்களைப் பார்க்கையில் அவர்கள் நாகரீகத்தில் மிகவும்  முன்னேறியவர்கள் என்று தெரிகிறது.

குஜராத்தி பெண்கள் இன்று ‘கர்பா’ நடனம் ஆடுவது போல— மேலை நாட்டில் கம்பத்தைச் சுற்றி ‘மே போல் டான்ஸ்’ ஆடியது போல— வேத காலப் பெண்கள் வட்டமாக நின்று ஆடிய குறிப்புகளும் உள.

இந்திரனை நாட்டியக்காரன் என்று ரிக்வேத மந்திரங்கள் துதிபாடுகின்றன. இந்திரன் ஆடியதோடு மற்றவர்களை ஆடவைத்ததையும், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆடியதையும் காண்கிறோம்.

பிற்கால புராணக் கதைகளில் இதன் முழு விவரங்களும் கிடைக்கின்றன. தேவ லோகத்தில் அரம்பையர்கள் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா – ஆடியதை நாம் அறிவோம். கந்தர்வர்கள் என்பவர்களை இசையுடன் இணைத்து கந்தர்வ கானம் என்று புகழ்வதையும் நாம் கேட்கிறோம். இதற்கெல்லாம் வேதத்தில் மூலம் (வேர்) இருக்கிறது.

ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களில் இதுபற்றி கூடுதலாகத் தகவல் கிடைக்கிறது. அர்ஜுனன், அலி வேடம் தரித்து உத்தரை என்ற ராஜ குமாரிக்கு சங்கீதம் நடனம் பயிற்றுவித்ததை அறிவோம். தமிழில் சிலப்பதிகாரத்திலும் அதன் உரைகளிலும் நாட்டியம் பற்றிய முழு விவரங்களும் உள்ளன. (இது பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் காண்க). இந்தப் பிண்ணனியில்தான் சம்ஸ்கிருதத்தில் பரதர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரமும் புகழ் பெற்றது.

janki fb

வேதத்தில் வரும் நாட்டிய விஷயங்கள்

தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி 25-2-1989-ல் பம்பாய் ஷண்முகாநந்தா நுண்கலை – இசை சங்கத்திலும் 16-12-1989 ல் சென்னை நாரத கான சபையிலும் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவுகளில் குறிப்பிடுவதாவது: ரிக் வேதத்தில் சரியான பாத அசைவுகளோடு ஆடும் மருத்துகளை ந்ருதவ: (நடனமாடுவோன்) என்று அழைக்கின்றனர்.

மார்பில் தங்க நகைகளோடு ஆடும் நடனக்காரர்களே! உங்கள் சகோதரத்துவத்தை நாடி மானுடப் பிறவிகளும் ஓடி வருகின்றனர். எங்களையும் பார்த்துக் கொள்வாயாக  – என்று ரிக் வேத துதி கூறுகிறது (8-20-22)

மருத்துக்கள் தாளத்துக் கேற்ப ஆடுவதோடு மட்டும் நில்லாமல், பாடவும் செய்கின்றனர். மருத்துக்கள் ஆண்கள். பெண்களில் மிகச் சிறந்த நடனம் ஆடும் உஷை (அதிகாலைப் பொழுது) பற்றிய அழகிய பாடலும் உண்டு. அவள் பகட்டான ஆடை அணிந்து வரும் காட்சியை ரிக் வேத ரிஷி வருணிக்கிறார்.

“அதிகாலைப் பொழுது — உஷா— கிழக்கு வானத்தில் அழகிய வண்ணங்களில் தோன்றிவிட்டாள். பறவைகள் சிறகடித்துப் பாடுகின்றன (புள்ளும் சிலம்பின காண் – ஆண்டாள் திருப்பாவை)). மனிதர்கள் எழுந்து சுறுசுறுப்பான வேலைகளில் இறங்கிவிட்டனர். உஷத் காலம், ஒரு நடனக்காரி போல, எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறாள்”.

உவமை பற்றிய விதிகள், மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களையே, உயர்ந்த விஷயங்களையே உவமைகளாக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. வேத காலத்தில் நாட்டியம் என்பது மிகவும் பிரபலமாக இருந்ததால்தான் புலவர் இந்த உவமையைக் கையாளுகிறார்.

நாட்டியக் கலை மிகவும் உன்னத நிலைக்குச் சென்றதைக் காட்டும்  – மிகவும் வளர்ச்சி பெற்றதைக் காட்டும் — பல உவமானங்கள் ரிக் வேதத்தில் வருகின்றன. நாட்டியக்காரிகள், சமூகத்தில் முக்கிய இடம் பெறுகின்றனர். அவர்கள் இல்லாமல் எந்தப் புனிதச் சடங்கும் நடைபெறமுடியாது. புனிதத்துவத்துக்கும், பூரனத்துவத்துக்கும் சின்னமாக விளங்குவது பூரண கும்பம். “ஓ! அழகிய பெண்மணியே, நெய்யும் தேனும் நிறைந்த அந்த பூரண கும்பத்தை எடுத்து வா” என்று இன்னும் ஒரு துதி கூறும்.

அமரகோசம் என்னும் அற்புத சம்ஸ்கிருத நிகண்டில் நாட்டியம் பற்றிப் பல சொற்கள் இருப்பதையும் நாகசாமி எடுத்துரைத்தார்:

தாண்டவம் நடனம் நாட்யம் லாஸ்யம் ந்ருத்யம் ச நர்த்தனே

தன்யத்த்ரிகம் ந்ருத்ய கீத வாத்யம் நாட்யம் இதம் த்ரயம்

(ஆங்கிலச் சொற்பொழிவில் இருந்து நான் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்தால் அவை என்னுடையவை என்று அறிக)

இனி சந்திரா ராஜன் எழுதிய காளிதாசன் எற ஆங்கில நூலில் சொல்லும் சில கருத்துக்களைக் காண்போம்:–

பரத மாமுனி, சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாட்டிய சாஸ்திரம் என்ற நூல்தான் உலகில் நாடகம், நாடகவியல் கோட்பாடுகள் பற்றிய மிகப் பழைய நூல் (பழங்காலத்தில் நாடகமும் நடனமும் இணைந்தே மக்கள் முன் வைக்கப்பட்டன).

வேத மந்திரங்களைப் பல்ர் பாடியதற்கான சான்றுகளைப் பார்க்கையில் அவை கோஷ்டி கானம் என்பது தெளிவாகிறது. மேலும் அதில் திரும்பத் திரும்ப வரும் பல்லவிகலையும் காண்கிறோம். மேலும் பெண்கள் அழகிய ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கைகளில் நீர்க்குடங்களுடன் யாக மேடைகளைச் சுற்றி ஆடிப் பாடி நடன மாடிய காட்சிகளும் மந்திரங்களில் வருகின்றன. இந்தப் பல்லவி, ஆடல், பாடல் ஆகியன அக்காலத்தில் நாடகத்தின் ஆதி வடிவம் ஆகும்.

எங்களுக்கு வரம்பிலா மகிழ்ச்சியை அருள்வாயாக என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-100); மாட்சிமை பொருந்திய அன்னை உன்னை ஈன்றெடுத்தாள். அருள் பெற்ற அன்னை உன்னைப் பெற்றெடுத்தாள்– என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-134).

இந்திரனை நாட்டியக் காரன் என்று சொல்லும் ரிக்வேத மந்திரங்கள் வசந்த காலத்தில் நடனமாடும் மருத்துக்கலைப் பற்றியும் பாடுகின்றன (ரிக். 5—52; 6—63). அஸ்வினி தேவர்களும் இவ்வாறு போற்றப்படுகின்றனர்.

jr natraj pose

காளிதாசனில் நாட்டியம்

உலகப் புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வசித்தான் என்னும் பல அறிஞர்களின் கருதை சங்க காலப் பாடல்களும் உறுதி செய்வதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இதே பிளாக்கி- கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருகிறேன். அவனும் பல இடங்களில் நாட்டியம் பற்றிக் குறிப்பிடுகிறான். அவனுக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த வராஹமிகிரரும் பிருஹத் சம்ஹிதாவில் கிரகணமும், கிரகங்களும் நாட்டியப் பெண்களைப் பாதிப்பது பற்றி மூன்று இடங்களில் குறிப்பிடுவான்.

காளிதாசன் எழுதிய நடனக் குறிப்புகலைத் டனிக் கட்டுரையில் தருவேன்.

ரிக்வேதத்திலும் அதர்வ வேதத்திலும் நடனம் பற்றி வரும் இடங்கள் பின்வருமாறு:

ரி.வே.:–

1-130-7; 2—22-4; 5-52-12; 6-63-5; 7-33-9, 7-33-12, 7-10-95; 8-20-22, 8-24-9, 8-24-12, 8-92-2; 10-100, 10-123-5, 10-134, 10-132-6

அ.வே.

4-37-1, 4-37-4, 4-37-5, 7-12-2, 12-1-1, 12-1-41

ரிக் வேதத்தில் கந்தர்வர், அப்சரஸ் பற்றிய பாடல்களும் கூர்ந்து நோக்கப்படவேண்டியவை.

அதர்வவேதத்தில் பூமி பற்றிய பாடல் மக்கள் எப்படி ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று காட்டுகிறது.

இருபதுக்கும் மேலான இசைக் கருவிகள், இருபதுக்கும் மேலான ஆபரணங்கள், இருபதுக்கும் மேலான நடனக் குறிப்புகள் முதலியன் 3700 ஆண்டுகளுக்கு முந்தைய, உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது — ரோடி-கப்டா அவ்ர் மகான்—பற்றிய கவலையே இல்லாத ஒரு செழிப்பான நாகரீகத்தைக் காட்டுகிறது என்பதில் இனியும் ஐயம் உண்டோ!!

jan2 (2)