RAMAYANA IN ARTS OF ASIA BY GARRETT KAM (Post No.5166)

 

RAMAYANA IN ARTS OF ASIA BY GARRETT KAM (Post No.5166)


Written by LONDON SWAMINATHAN

 

Date: 30 JUNE 2018

 

Time uploaded in London –  13-56 (British Summer Time)

 

Post No. 5166

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

Ramayana in the Arts of Asia is a wonderful book with lot of information with particular reference to South East Asia. Author Garrett Kam is a scholar in the art history. I have found some useful information and pictures which I have never seen in any other book on Ramayana.

 

Ramayana character names change in all languages This is very useful for researchers. With is as a guide we can figure out the names of Hindu Gods in different countries. The pictures from private collections and museums are not available in other books. The display of important points in boxes is very attractive. I am just reproducing some pages which shows the Ramayana names in different cultures. Please enlarge the pages and read.

 

 

 

 

 

 

 

 

Nagapasa binds Rama and Lakshmana.

 

Everyone must buy this Encyclopaedia on Ramayana.

 

–subham–

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்’- ஒரு குட்டிக்கதை (Post No.5165)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 30 JUNE 2018

 

Time uploaded in London –  11-59 AM (British Summer Time)

 

Post No. 5165

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

வெற்றி வேற்கை/நறுந்தொகை, அதிவீரராமன் யாத்த நூல்

 

 

மஹாபாரத நூலில் இல்லாதது உலகில் இல்லை என்று ஒரு பாரத ஸ்லோகம் சொல்லும். அது உண்மையே.

 

வேதியர்கள் என்போர் தினமும் ஐம்பெரும் வேள்வி நடத்திவிட்டே உண்ண வேண்டும் என்று மநு ஸ்ம்ருதி தெளிவாகக் கூறுகிறது. அது மட்டுமல்ல விருந்தோம்பல் என்பது சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்றும் சொல்லும். அதற்கும் மேலாக விருந்தினர் சாப்பிட்ட பின்னரே ஒரு இல்லறத்தான் சாப்பிடலாம் என்றும் செப்புகிறார்.

 

ஐம்பெரும் வேள்வியை எல்லா வருண த்தார்க்கும் பொதுவாகப் பாடி வைத்திருக்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் (குறள் 43; தென்புலத்தார்….)

 

மஹாபாரதத்தில் ஒரு குட்டிக்கதை

சக்துப் பிரஸ்தர் என்று ஒரு அந்தணர் இருந்தார். அவர் மநு நீதி சொன்னபடி விருந்தோம்பும் பண்புடையவர். மேலும்  யாசகம் செய்யாவிடில் தானியங்களைப் பொறுக்கி எடுத்தும் வாழலாம் என்று மநு சொல்லியபடி வாழ்க்கை நடத்தியவர். எங்கும் யாசகம் செய்யாமல் வயல்களிலும் வனங்களிலும் விழும் தானியத்தைச் சேகரித்து வாழ்க்கை நடத்தினார். தினமும் விருந்தினர்களையும் உபசரித்தார். ஒரு நாள் சாப்பிடப் போகும் முன் ஒரு விருந்தினர் வந்தார்.

 

அவருக்கு வழக்கமான உணவைப் போட்டும் பசியாறவில்லை. உடனே தனது உணவையும், பின்னர் மகனின் உணவையும் அளித்தார். அப்பொழுதும் விருந்தாளி மேலும் உணவை எதிர்பார்த்து உட்கார்ந்து  இருந்தார். உடனே மனைவி, மருமகள் உணவையும் அளித்தார். அப்பொழுதுதான் அந்த புண்யாத்மா வயிற்றைத் தடவிக்கொண்டு ஒரு ஏப்பம் விட்டு எழுந்தார். ‘அன்னதாதா சுகீ பவ’ என்று வாழ்த்தினார்.

 

இதை எல்லாம் பார்த்த இந்திரன் அவருக்கு எல்லா செல்வத்தையும் அளித்து அனுக்கிரஹித்தார்.

 

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்– குறள் 85

பொருள்:

வந்த விருந்தினரை முதலில் சாப்பிட வைத்துப் பின்னர் மீதி உவை சாப்பிடுவோனுடைய விளை நிலத்தில் விதையே விதைக்க வேண்டாம்; தானாக பயிர்கள் வளரும்

 

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத்தவர்க்கு -குறள் 86

பொருள்:-

வந்த விருந்தாளிக்குச் சாப்பாடு போட்டுவிட்டு, அடுத்த விருந்தாளி எப்போது வருவான் என்று காத்திருப்பவனுக்கு தேவ லோகத்தில் உள்ளவர்கள் அருமையான விருந்து அளிப்பர்.

 

மநு சொன்னது எல்லாவற்றையும் வள்ளுவன் சொல்லுவது சிறப்புடைத்து!

அது மட்டுமல்ல; விருந்தோம்பும் பண்பு உலகின் எந்த நூலிலும் ஒரு புண்ணிய காரியமாகவோ, கட்டாயம் செய்யவேண்டிய கடமையாகவோ சொல்லப்படவில்லை. இது இமயம் முதல் குமரி வரை மட்டுமே காணக்கூடியது. ஆரிய- திராவிட வாதம் பேசுவோருக்கு வள்ளுவரும் மநுவும் கொடுக்கும் செமை அடி இது!

–சுபம்–

 

ஒரு குட்டிக் கதை– ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ (Post No.5161)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 30 JUNE 2018

 

Time uploaded in London –  7-35 AM (British Summer Time)

 

Post No. 5161

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’-

நறுந்தொகை/ வெற்றி வேற்கை

 

பாகவத புராணத்தில் உள்ள கதை.

கார்த்த வீர்யார்ஜுனன் என்ற மன்னன் மஹா வீரம் பொருந்தியவன்; புஜ பல பராக்ரமம் உடையவன். மாவீரன் ராவணனையே புரட்டி எடுத்தவன். ராவணனையும் பயமுறுத்திய ஒரே ஆள். நர்மதை நதிக்கரையில் உள்ள மஹிஸ்மதி நகரை தலைநகராகக் கொண்டு ஹைஹய நாட்டை ஆண்டு வந்தவன். அவன் நர்மதை நதியில் மனைவிமார்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது ராவணன் வந்து வாலாட்டினான். அவனைப் பிடித்து நகரின் ஒரு மூலையில் மிருகங்களைக் கட்டிவைப்பது போல கட்டி காட்சிப் பொருளாக வைத்தான். பின்னர் அவனது தாத்தா புலஸ்த்யர் வந்து வேண்டவே ராவணனை விடுதலை செய்தான்.

 

கார்த்த வீர்ய அர்ஜுனனுக்கு ‘ஆயிரம் கையுடையோன்’ என்று ஒரு பெயர் உண்டு. இந்த ‘ஸஹஸ்ர பாஹு’ என்ற பெயர் வந்த காரணம் பாகவத புராணத்தில் உளது. ராமாயணத்திலும் இவன் பெருமை பேசப்படுகிறது.

 

கார்த்த வீர்யனின் குரு தத்தாத்ரேயர். அவரிடம் அவன் பணிவுடன் வேத சாஸ்திரங்களைக் கற்று வந்தான். அவருக்குப் பணிவிடை செய்யும் முகத்தான், அவர் உறங்கும்போது கால்களை அமுக்கி விடுவான். ஒரு முறை இப்படிச் செய்கையில் குரு தத்தாரேயரின் காலில் இருந்த தீ , கார்த்த வீர்யனின் கைகளை எரிக்கத் துவங்கியது. ஆயினும் குருவின் நித்திரைக்குப் பங்கம் விளையக்கூடாதே என்ற எண்ணத்துடன் பொறுத்துக் கொண்டான். அவர் தூங்கி எழுவதற்குள் அந்தத் தீ முழங்கை வரை வந்து விட்டது.

 

குரு தத்தாத்ரேயர் அதைப் பார்த்து என்ன ஆயிற்று? என்று வினவினார். கார்த்த வீர்யன், அவரது நித்திரை கலையாமல் இருக்க மிகவும் பிரயத்தனப் பட்டதைப் பகர்ந்தான்; குருவுக்கு மெத்த மகிழ்ச்சி. அவனது கைகளைத் தடவிக் கொடுத்தார். உனக்கு இன்று முதல் ஆயிரம் கைகள் இருந்தால் என்ன பலம் கிட்டுமோ அவ்வளவு பலம் கிடைக்கும்; உன்னை வெல்லுவது எவனுக்கும் இயலாது என்று வரம் அளித்தார்.

 

கார்த்த வீர்ய அர்ஜுனன் ‘ஆயிரம் கையுடையோன்’ ‘ஸஹஸ்ரபாஹு’ என்ற பெயருடன் கொடிகட்டிப் பறந்தான். அவன் இருக்கும் மேற்கு , மத்திய இந்தியாவுக்கு ராவணன் வரவே பயந்து நடுங்கினான். நமது புராண இதிஹாசங்களின் படி ராவணன் அஞ்சிய ஒரே மன்னன் கார்த்த வீர்ய அர்ஜுனன்.

 

வாழ்க தத்தாத்ரேயர்!

 

அதிவீரராமன் என்ற பாண்டிய மன்னன் இயற்றியது நறுந்தொகை. அதில் கூறப்படும் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’

கருத்து இந்து தர்மத்தின் உயரிய கருத்து “குருவே பிரம்மா, குருவே விஷ்ணு,  குருவே மஹேஸ்வரன்; அவரே பரப் ப்ரஹ்மம்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி எல்லோரும் வணங்குவர். இது வேத கால வழக்கம். உலகில் எங்கும் காண முடியாதது. குமரி முதல் இமயம் வரை மட்டுமே உள்ள கருத்து. வேத கால இந்துக்கள் வெளி நாட்டில் இருந்து வந்ததாகக் கூறும் அரை வேக்காடுகளுக்கு வேட்டு வைக்கும் கருத்து இது. பாரத மண்ணில் பிறந்து வளர்ந்த கருத்து!

உலகில் வேறு எங்கும் குரு குலமோ, ஆசார்ய வழிபாடோ இல்லாததால், ஆரிய-திராவிடம் பேசும் கூத்தாடிகளைப் புரட்டிப் புரட்டி அடிக்கும் வாக்கியம் இது.

 

–SUBHAM–

HERO STONES ON SEA BATTLES (Post No.5163)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –  21-24 (British Summer Time)

 

Post No. 5163

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Hero stones are found throughout India. They are erected to honour those who lost their lives in protecting the community or saving the country. Even a dog has a hero stone in Tamil Nadu because it heroically fought with a tiger and save the people.

Sangam Tamil literature refers to hero stones and so we know that it has been the practice for at least 2000 years; but unfortunately we have not discovered very ancient ones. The ones we know now are from sixth or seventh century.

Hero(ine) stones are erected for women who lost their lives by climbing their husband’s funeral pyre. Rajasthan and Karnataka have such stones with had symbols. In short Super Men were celebrated in Bharat from very early days.

Though we don’t come across much in Sanskrit literature about Hero Stones, we know that Brahmin families even today bury a stone after the ten day ceremony in a garden or the backyard of the house. Perhaps in ancient days it was a big one. Now they just bury it in the crematorium or the place where the ceremonies are done.

One feature about the hero stones is that they are revered as gods or goddesses. Sangam Tamil literature is very clear about the Pujas done to you with flowers etc.

 

Several Tamil Hero Stones became Village Gods. We are fortunate to have two sets of Hero stones describing in pictures and words the ancient sea battles. One set of Stones is in Goa Museum and another set of six stones is in Eksar in Mumbai. It is one mile from Borivili station. But latest press reports say that some of the stones are missing. People in the village worship it as Goddess Boradevi. They are between four and eight feet high and intricately carved with ships and warriors.

 

After some historical awareness, people have discovered over 100 hero stones in Maharashtra. They are already well known in Tamil Nadu, Andhra and Karnataka.

 

The old Goa hero stones are from the Kadamba rulers who ruled for 400 years from CE 950.

Great Tamil poet Tiruvalluvar says in Tamil Veda Tirukkural that human beings who lead a virtuous life are considered Gods.

“A man who leads an ideal life in this world,

will be ranked amongst the Gods in the heaven”- Kural 50

 

Sea Battle

Moti Chandra in his book Ancient Trade Routes has given full details about the six stones found in Eksar. But there are different opinions about the identity of the king in the stones. One researcher says it was the battle between Yadava king Mahadevan and Silhara King Someswara as described by Hemadri Pandit in his work Chaturvarga Chintamani. Others think it wass a battle between the Kadambas and Silahara kings. Since the inscriptions on the stones are unreadable we don’t know the names for sure.

 

Another strange thing about these Eksar stones is they are called Veera Gal ( a mixture of Sanskrit and Tamil words Veera+ Kal)

Now it becomes essential to collect all the details and publish them in an Encyclopaedia of Hero Stones.

 

I am giving below the descriptions of six stones as found in Moti Chnadra’s book:-

 

–SUBHAM–

 

 

கடல் போர், கடல்பயணம் 6 பற்றிய கல்வெட்டுகள் (Post No.5162)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –  16-52 (British Summer Time)

 

Post No. 5162

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கடல் போர், கடல்பயணம் 6 பற்றிய கல்வெட்டுகள் (Post No.5152)

 

மும்பய் நகருக்கு அருகில் ஏக்சார் (EKSAR) என்னுமிடத்தில் ஆறு நடுகற்கள் (வீர  கல்) இருக்கின்றன. இவை கடல் பயணத்திலேயோ கடல் போரிலேயோ இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்ப ட்ட கற்கள். வீர மரணம் எய்தியோருக்கு நடுகல் நடும் பழக்கமும் அவைகளை பூஜிக்கும் பழக்கமும் 2000 ஆண்டுப் பழமையான சங்க நூல்களில் காணக்கிடக்கின்றன. ஆயினும்  அதற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்தே கல்வெட்டுகள் கிடைக்கின்றன.  பம்பாய் அருகில் 11 ஆம் நூறாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இன்று வரை அவை ‘கல்’ என்னும் தமிழ்ச் சொல்லுடனும் ‘வீர’ என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுடனும் — வீர கல் – என்றே அழைக்கப்படுகின்றன. இவை பொரிவலி (BORIVILI) ஸ்டேஷனுக்கு ஒரு மைல் தொலைவில் உள.

 

இவற்றில் நிலத்தில் நடந்த சண்டைகளும் காட்டப்பட்டுள்ளன.

ஹேமாத்ரி பண்டிதர் இயற்றிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நூலில் யாதவ மன்னன் மஹாதேவனுக்கும் ஷிலாஹார மன்னன் சோமேஸ்வரனுக்கும் நடந்த போர் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அதுதான் இந்தக் கல்லின் பின்னணி என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 1265 ஆம் ஆண்டில் சோமேஸ்வரா கொல்லப்பட்டார்.

 

இவை தவிர கோவா மியூஸியத்தில் கடம்பர் கால கல்வெட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் 950 முதல் 400 ஆண்டுகள் ஆண்டனர். ஏக்சார் கல்வெட்டுகள் போஜ மன்னன் (1020) காலத்தியவை. இதற்கு நெடுங்காலத்துக்குப் பின்னர் குஜராத்தில் எழுப்பிய கல்வெட்டுகளும் குறிப்பிடத்தக்கவை.

தமிழர்கள் பரப்பினார்களா?

இலக்கியங்களைப் பொறுத்வரையில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள குறிப்புதான் மிகப் பழமையானவை. ஆனால் வேத காலம் முதல் நினைவுக்கல் எழுப்பும் பழக்கம் பிராமணர் குடும்பத்தில் இருந்துள்ளது. இப்பொழுதும் பத்து நாள் கிரியைகளுக்குப் பின்னர் பிராமணர்கள் வீட்டிலோ, சுடுகாட்டிலோ கல் புதைப்பர்.

 

நடு கற்கள் நாடு முழுதும் கிடைக்கின்றன. ரா ஜஸ்தான், கர்நாடகத்தில் உயிர்நீத்த பத்தினிகளுக்கும் ‘சதி’யில் புகுந்த வீர மங்கையருக்கும், தென் மாநிலங்கள், மஹாராஷ்டிராத்தில் வீர தீரச் செயல் புரிந்தோருக்கும் நடுகற்கள் எழுப்பப்பட்டுள்ளன. பல நடு கற்கள் பாதுகாக்கப்படாமல் அழிந்தும் மறைந்தும் வருகின்றன.

 

மஹாராஷ்டிரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான இடங்களில் நடு கற்கள் இருப்பதாக தற்கால நூல்கள் காட்டுகின்றன. எல்லா இடங்களிலும் இவை வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏக்சார் கல்வெட்டுகளை மக்கள் போராதேவி என்று வழிபடுகின்றனர். தொல்பொருட் துறை இவைகளைப் பாதுகாக்கததால் சில கற்களை வரலாற்றுத் திருடர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

 

 

முதல் கல்

முதல் கல் (HERO STONES, VEERA GAL) 10’X 3’X 6” அளவில் உள்ளது. இதில் நான்கு பிரிவுகள் அல்லது வரிசைக் காட்சிகள் உள்ளன. அடியில் இரண்டு குதிரை வீரர்கள் ஒரு வில்லாளியைக் கொல்கின்றனர். கொல்லப்பட் டவர்கள் மேகத்தினூடே இந்திர லோகத்துக்குச் செல்லும் காட்சி உளது (போரில் இறந்தால் சுவர்கம் புகலாம் என்ற கருத்து பகவத்கீதை, புற நானூறு ளில் முதலிய நூல்களில்  விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசையில் குதிரை வீரர்கள் புறப்படுவதும், வில்லாளி மேலும், ஆறு குதிரை வீரருடன் பொருதுவதும் இருக்கின்றது.

யானை வீரர்களும் காணப்படுகின்றனர். வீர சுவர்க்கம் புகுவோரை அப்சரஸ்கள் (தேவலோக அழகிகள்) வரவேற்பதும் அவர்கள் சிவலோகத்தில் சிவலிங்கத்தை வழிபடுவதும் சித்தரிக்கப்படுகிறது.

 

இரண்டாவது கல்

 

இரண்டாவது கல்லிலும் போரில் இறந்தோரின் சடலங்களும் மன்னர், மந்திரி ஆகியோரும் இருக்கின்றனர். தேவ லோக மங்கையரான அப்ஸரஸ்கள் அவர்கள் மீது பூமாரி பொழிகின்றனர்.

 

மன்னருக்கு ஒருவர் குடை பிடிக்க, மற்றொருவர் பன்னீர் தெளிக்க நிற்கிறார்; யானை ருவரை துதிக்கை யால் பிடித்து காலால் இடறும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. யானை முகபடாமுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

 

மூன்றாவது கல்

இதுதான் முக்கியமான கடற்போர் கல். கப்பல் சண்டைக் காட்சி உளது. முந்தைய இரண்டைப் போலவே இதுவும் நான்கு வரிசைகளாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது; ஐந்து கப்பல்கள் உள்ள வரிசையில் ஒன்பது துடுப்புகள் தெரிகின்றன. சண்டைக்குத் தயாராக வீரர்கள் காட்சி தருகின்றனர் ; ஐந்தாவது கப்பலில் பெண்களும் இருப்பதால் மன்னர் கப்பலாக இருக்கலாம். இரண்டாவது வரிசையில் 4 கப்பலகளின் அணிவகுப்பு. அவர்கள் பெரிய ஒரு கப்பலைத் தாக்குவதும் அந்தக் கப்பலின் வீரர்கள் கடலில் குதிப்பதும் செதுக்கப்பட்டு இருக்கிறது

பதினோறாம் நூற்றாண்டு எழுத்துக்கள் படிக்க இயலாதபடி சிதைந்துவிட்டன. இதே கல்லில் இமயம் உறை பார்வதி பரமேஸ்வரனும், சிவலிங்க வழிபாடும் , எலும்புகள் வைக்கும் பெட்டியும் இருக்கின்றன.

நாலாவது வீர கல்

இதில் எட்டு வரிசைகள் உள்ளன. ஆனால் அளவு ஏனைய மூன்றைப்போல 10X 3X 6” என்றே இருக்கிறது. அடி வரிசையில் 11 கப்பல்கள் ஒரு கப்பலைத் தாக்குகின்றன. மற்றொரு வரிசையில் ஐந்து கப்பல்கள் ஒரு படகைத் தாக்குகின்றன. .

மற்றொரு வரிசையில் ஒன்பது கப்பல்கள் வெற்றியுடன் திரும்பி வருகின்றன. பலர் வரவேற்கிறார்கள்

ஏனையவற்றில் சிவலிங்க வழிபாடு, அப்சரஸ்கள் வரவேற்கும் காட்சி சங்கு முழக்கம், சிவன் உறையும் கைலாசம் ஆகியவற்றைக் காண்கிறோம்.

 

ஐந்தாவது வீர கல்

அளவு 6’ X3’ X6’’ ; வரிசைகள் நான்கு; ஒரு கப்பலில் மன்னர் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்துள்ளார்.

மற்றொரு வரிசையில் கடற்போர்; வீரர்கள் தண்ணீரில் வீழும் காட்சி.

இறந்தவீரகள் மீது அப்சரஸ்கள் (தேவலோக அழகிகள் ) மலர் மாலை வீசுகின்றனர். மற்றொரு வரிசையில் சிவலிங்க வழிபாடு; பெண்கள் வழிபாட்டுப் பொருட்களுடன் காட்சி. தேவலோக கந்தர்வர் ஆனந்தக் கூத்து; மன்னர் தர்பாரில்: அபசரஸ்கள் அவரை வாழ்த்தும் காட்சி

Kannada hero stone from wikipedia

ஆறாவது கல்

அளவு 4X 15X 6”

இரண்டு வரிசையில் படங்கள்.

ஒரு வரிசையில் கப்பல் சண்டை.

மற்றொரு வரிசையில் ஒரு வீரர் சுவர்கத்தில் இருக்கும் காட்சி.

 

இவை கடம்பர்களுக்கும் சீலஹாராக்களுக்கும் இடையே நடந்த கடல் போர் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. இதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் சோழ மன்னர்களின் கடற்படை இலங்கை, பர்மா, இந்தோ நேஷியா வரை சென்று வெற்றிக் கொடி நாட்டின. அதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கடற்படை அனுப்பி அந்நாட்டு மன்னனைக் காப்பாற்றினான் நரசிம்ம பல்லவன். அதற்கு முன்னர் சோழர்களும் அவர்களுக்கு முன்னர் சாதவாஹன அரசர்களும் அதற்கு முன்னால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் வெற்றிக் கொடி நாட்டினர். சேரர்கள், கடலில் வாலாட்டிய யவனர்களைச் சிறைப்பிடித்து, மொட்டையடித்து, கைகளைப் பின்புறம்கட்டி, தலையில் எண்ணை ஊற்றி ஊர்வலம் விட்ட காட்சி  தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது.

 

ஆனால் அதை சித்திரமாக நடு கல்லில் — –வீரக் கல்லில்— காணும் போது பசுமரத்தாணி போல மனதில் பதிகிறது.

 

Kannada hero stone, Not Eksar

 

–சுபம்–

 

 

 

 

 

கடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள் (Post No.5160)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –  7-19 AM (British Summer Time)

 

Post No. 5151

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஜூலை 2018 மாத காலண்டர் (விளம்பி வருஷம் ஆனி- ஆடி மாதம்)

 

ஏகாதஸி விரதம்- ஜூலை 9,23; பௌர்ணமி- ஜூலை 27;

அமாவாஸை- ஜூலை 12;

முஹூர்த்த தினங்கள் – ஜூலை 1, 2, 5, 11

பண்டிகை நாட்கள் – ஜூலை 13 பார்ஸ்வ சூர்ய கிரஹணம்/ இந்தியாவில் தெரியாது, 14 பூரி ஜகந்நாத ரத யாத்திரை, 17 தக்ஷிணாயண புண்ய காலம், 27- வியாஸ/ குரு பூர்ணிமா, பூரண சந்திர கிரஹணம்

கடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள்

 

ஜூலை 1 ஞாயிற்றுக் கிழமை

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

ஜூலை 2 திங்கட் கிழமை

 

திக்கற்றவருக்கு தெய்வமே துணை

 

ஜூலை 3 செவ்வாய்க் கிழமை

நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு

 

ஜூலை 4 புதன் கிழமை

 

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (குறள்)

 

ஜூலை 5 வியாழக் கிழமை

ஹரி ஸ்ம்ருதிஹி ஸர்வவிபத் விநாசினி

ஹரியை நினைந்தவருக்கு துன்பங்கள் பறந்தோடும்

ஜூலை 6 வெள்ளிக் கிழமை

கடவுள் நினைத்தால் நடக்கதானவும் நடக்கக்கூடும் (கதா சரித் ஸாகரம்)

சுதுஷ்கரமபி கார்யம் சித்யத் யனிக்ரஹவதீஸ்விஹா தேவதாஸு

 

 

ஜூலை 7 சனிக் கிழமை

ஸ்வேச்சேசாரா ஹி தேவதாஹா

தெய்வங்கள் அதன்போக்கில் செயல்படும்

 

ஜூலை 8 ஞாயிற்றுக் கிழமை

ஸர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி

அனைத்துக் கடவுளருக்கு அளிக்கும் நமஸ்காரங்கள் கேசவனை அடைகின்றன

 

ஜூலை 9 திங்கட் கிழமை

ஸங்க்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து (விஸ்ணு ஸஹஸ்ரநாமம்)- நாராயணன் என்ற ஒலி கேட்ட மாத்திரத்தில் துன்பங்கள் அகலும்

 

ஜூலை 10 செவ்வாய்க் கிழமை

ஒரே கருத்துடையவர்களை ஒன்று சேர்ப்பதில் இறைவன் (பிரம்மா) வல்லவன் (பாத தாடிதக)

ஸர்வதா ஸத்ருசயோகேஷு நிபுணாஹா கலு ப்ரஜாபதிஹி

ஜூலை 11 புதன் கிழமை

இறைவனின் சக்தி எல்லாக் கதவுகளையும் திறந்துவிடும் (ராமாயண மஞ்சரி)- ஸர்வத்ர விவ்ருத த்வாரா தைவசக்திர்  கரீயஸீ

 

ஜூலை 12 வியாழக் கிழமை

சேஷன் என்னும் நாகம் உலகையே தாங்குவது கண்டு கிருஷ்ணன் அதைப் படுக்கையாக வைத்துக் கொண்டான் (குமார ஸம்பவம் 3-13)

வ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஸ்ணேன தேஹோத்த்ரணாய சேஷஹ

 

ஜூலை 13 வெள்ளிக் கிழமை

கடவுள் நினைத்தால் விஷம் அமிர்தமாக மாறும்; அமிர்தம் விஷமாக மாறும்– விஷமயம்ருதம் க்வச்சித் பவேதம்ருதம் வா விஷமிஸ்வரேச்சயாச்சயா- ரகுவம்சம் 8-46

 

 

ஜூலை 14 சனிக் கிழமை

கடவுள் அருள் இருந்தால் எதிரியும் அன்பைப் பொழிவான்

ஸானுகூலே ஜகந்நாதே விப்ரியஹ சுப்ரியோ பவேத் (சுபாஷிதரத்ன கண்டமஞ்சுசா)

 

ஜூலை 15 ஞாயிற்றுக் கிழமை

இறைவனின் எண்ணத்தை எவரும் தடுக்கவியலாது- மஹா பாரதம்

பலீயஸீ கேவலம் ஈஸ்வரேச்சா

 

ஜூலை 16 திங்கட் கிழமை

ஆண்டவனின் அருள் இருக்கும்போது அடையமுடியாததும்  உண்டோ?- கதா சரித் ஸாகரம்

ப்ரஸன்னே ஹி கிமப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே

ஜூலை 17 செவ்வாய்க் கிழமை

பிரம்மாவின் படைப்புகள் நம்ப முடியாத அளவுக்கு அற்புதமானவை- கதா சரித் ஸாகரம்

ப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிஸர்கோஸதிகாதிகஹ

 

ஜூலை 18 புதன் கிழமை

எவரும் சிவபிரானின் உண்மைப் பெருமையை உணரவில்லை– குமார சம்பவம் 5-77

ந ஸந்தி யாதாத்யர்விதஹ பினாகினஹ

ஜூலை 19 வியாழக் கிழமை

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்

 

ஜூலை 20 வெள்ளிக் கிழமை

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

 

ஜூலை 21 சனிக் கிழமை

உலகங்கள் அனைத்துமே பிரம்மாவினால் உருவாக்கப்பட்டன- வால்மீகி ராமாயணம் 4-24-41

லோகோ ஹி ஸர்வோ விஹிதோ விதாத்ரா

ஜூலை 22 ஞாயிற்றுக் கிழமை

கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்

ஜூலை 23 திங்கட் கிழமை

கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்தாற்போல

ஜூலை 24 செவ்வாய்க் கிழமை

சிவாய நம ஓம் என்போர்க்கு அபாயம் ஒருபோதும் இல்லை

ஜூலை 25 புதன் கிழமை

கடவுளின் லீலைகளை யாரே அறிவார்?- விக்ரமோர்வஸீயம்

கோ தேவதா ரஹஸ்யானி தர்க்கயிஷ்யதி

 

ஜூலை 26 வியாழக் கிழமை

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மேல் தெய்வமும் இல்லை

 

ஜூலை 27 வெள்ளிக் கிழமை

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

ஜூலை 28 சனிக் கிழமை

மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு விண்ணெலாம்

மதுரமிக்க ஹரிநமக்கு மதுவெனக் கதித்தலால்- பாரதி

 

ஜூலை 29 ஞாயிற்றுக் கிழமை

துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிடல் ஆகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!- பாரதி

 

ஜூலை 30 திங்கட் கிழமை

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.- பாரதி

ஜூலை 31 செவ்வாய்க் கிழமை

ஏகம் ஸத் விப்ராஹா பஹுதா வதந்தி- ரிக் வேதம்

உண்மை/ கடவுள் ஒன்றே; அறிஞர்கள் பலவாறு பகர்வர்.

 

–Subham–

 

 

 

 

 

 

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1 (Post No.5159)

Written by S NAGARAJAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –   6-35 AM (British Summer Time)

 

Post No. 5159

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 29-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினேழாம்) கட்டுரை

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1

.நாகராஜன்

 

ஜப்பானில் லட்சக்கணக்கானோர் காலையில் படுக்கையிலிருந்து இகிகை-கொள்கையுடன் (Ikigai) எழுந்திருக்கின்றனர்.

இகிகை என்றால் “உயிருடன் இருப்பதற்கான காரணம்” என்ற கொள்கையாகும். அப்படியே மொழி பெயர்ப்பது என்றால் “நீ காலையில் விழித்தெழுவதற்கான காரணம்” என்று சொல்லலாம்.

எதற்காக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும்  வாழ்க்கை என்பதற்கு நாம் தரும் மதிப்புகளுமே இகிகை.

இகிகை எதையும் உங்களிடம் வலியச் சுமத்தாது. வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் மதிப்புகள் சுயமாகவே எழும்.

 

ஜப்பானில் உள்ள ஓகினாவா தீவில் தான் இகிகை தோன்றியது. அங்கு தான் உலகில் நூறு வயதை எட்டிய ஏராளமானோர் இருக்கின்றனர். நூறு வயது வாழ்வை அடைய இகிகை தான் காரணமா?

 

உலகில் நூறு வயதை எட்டியோரைப் பற்றி ஆராய்ந்து டான் ப்யூட்னர் என்பவர் ப்ளூ ஜோன்ஸ்: லெஸன்ஸ் ஆன் லிவிங் லாங்கர் ஃப்ரம் தி பீப்பிள் ஹூ ஹாவ் லிவ்ட் லாங்கஸ்ட் (Dan Buettner : Blue Zones: Lessons on Living Longer from the people Who’ve Lived the Longest) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் நூறு ஆண்டு வாழ இகிகை தான் காரணம் என நம்புகிறார்.

 

ப்யூட்னர் தனது புத்தகத்தில் வலியுறுத்தும் ஒரு முக்கிய விஷயம் இகிகை என்பது ஓகினாவா தீவில் உள்ளவர்களுக்காக மட்டுமே உள்ள ஒன்று அல்ல என்பது தான். நீடித்து 100 வயது வாழும் சார்டினா மற்றும் நிகோயா தீபகற்பத்தில் வாழ்பவர்களும் கூட இந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்களே, இகிகை என்ற வார்த்தையால் அதை அவர்கள் குறிப்பிடுவதில்லை”  என்கிறார் அவர்.

 

இகிகை என்பது மூன்று விஷயங்களைக் கொண்டது.

  • நீங்கள் உங்கள் வாழ்க்கை என்பதற்குத் தரும் ஆதாரமான மதிப்புகள் 2) நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள் 3) நீங்கள் சிறந்து விளங்கும் விஷயங்கள். இவை இணைவது தான் உங்களின் இகிகை.

 

உங்கள் குறிக்கோளை நீங்கள் வாழ்க்கையில் இழந்து விட்டால் அது மிகவும் மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் முடிவுகள்.

 

அமெரிக்க பழங்கால இதிகாச ஆராய்ச்சியாளரான ஜோஸப் காம்பெல், “நான் எனது மாணவர்களிடம் வலியுறுத்தும் ஒரு விஷயம்; உனக்கு அளிக்கப்பட்ட வரங்களைப் பின்பற்று; அவை என்ன என்று கண்டுபிடி; அப்படியே அதைப் பின்பற்று” என்கிறார்.

 

உங்களுக்கு இயல்பாக அமைந்த திறமைகள் தான் உங்களுக்கு (இறைவனால் ) அளிக்கப்பட்ட வரங்கள்!

ஹெக்டர் கார்சியா என்பவர் இகிகை; தி ஜபானீஸ் சீக்ரட் டு  எ லாங் அண்ட் ஹாப்பி லைஃப் என்ற புத்தகத்தின் இணை எழுத்தாளர். (Hector Garcia, Co-author : Ikigai: The Japanese Secret to a Long and Happy Life).

 

“மனிதகுலம் தோன்றியதிலிருந்து பார்த்தால் பொதுவாக பணத்தின் பின்னால் ஓடுவதே வழக்கமாக இருக்கிறது. ஆனால் சிலரோ பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் அதை விட பெரிய விஷயங்களுக்கு ஆசைப்படுகின்றனர். வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான இந்த விஷயத்திற்கு ஏராளமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு குறிப்பிடப்படுகின்றன” என்கிறார் அவர்.

உங்களுக்கு உங்களின் இகிகை- ஐக் கண்டுபிடிக்க ஆவலாக இருக்கிறதா?

அதற்கு நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன:

  • நீங்கள் எதை மிக மிக அதிகமாக விரும்புகிறீர்கள்? (வெறித்தனமான ஆசை என்கிறோமே அது தான்)
  • உலகத்தின் தேவை என்ன? ( அதற்கான உங்களது பணி)
  • நீங்கள் எதில் மிகவும் சிறந்து விளங்குகிறீர்கள்? (உங்களது திறமை)
  • எந்தப் பணியில் நீங்கள் சம்பாதிக்க முடியும்? (உங்கள் தொழில்)

 

இந்த நான்கும் இணைந்தது தான் உங்களது இகிகை!

இதை மட்டும் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் சந்தோஷமாக நீண்ட காலம் நீங்கள் வாழலாம்.அதாவது உங்கள் இகிகை-ஐ கண்டுபிடிப்பது உங்களின் முதல் காரியமாக இருக்க வேண்டும்!

அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

 

 

நான்கு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:

  • எதை நான் விரும்புகிறேன்?
  • எதில் நான் சிறந்து விளங்குகிறேன்?
  • இப்போது எந்த வேலையில் எனக்குப் பணம் கிடைக்கிறது?
  • உலகத்தின் இன்றைய தேவை என்ன?

இந்த நான்கையும் இணைத்து உங்களின் இகிகை எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

 

 

அதன் வழியில் உங்களின் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். நீண்டகாலம் அமைதியாக சந்தோஷமாக வாழலாம். இது தான் ஜப்பானிய ரகசியம்!

ஹெக்டர் கார்சியா மற்றும் ஃப்ரான்செஸ்க் மிரல்லெஸ் ஆகியோர் (Hector Garcia & Francesc Miralles : Ikigai – The Japanese Secret to a Long and Happy Life) இகிகை பற்றிய தங்கள் நூலில் இகிகைக்காக பத்து விதிகளைத் தொகுத்துத் தந்துள்ளனர்.

 

 

  • எப்பொதும் செயலூக்கத்துடன் இருங்கள். ரிடையர் ஆகாதீர்கள்.
  • மிக மிக அவசரம் என்பதை விட்டு விடுங்கள்; சற்று மெதுவாக நிதானமாக வாழ்க்கையைக் கொண்டு செலுத்துங்கள்.
  • 80 சதவிகிதம் வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்
  • நல்ல நண்பர்களை உங்களைச் சுற்றி இருக்க விடுங்கள்.
  • உங்கள் உடலை நல்ல உடல் பயிற்சியைத் தினசரி செய்வதன் மூலம் கட்டுக்கோப்புடன் அழகாக வைத்திருங்கள்.
  • புன்சிரிப்புடன் உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரையும் அரவணையுங்கள்
  • இயற்கையுடன் ஒன்றுங்கள்.
  • நமது நாளை ஜொலிக்க வைக்கும் எதற்கும், நமது வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ வைக்கும் எதற்கும் நன்றி தெரிவியுங்கள்.
  • நிகழ்காலத்தில் – இந்தக் கணத்தில் வாழுங்கள்

10) உங்கள் இகிகை படி வாழுங்கள்!

இன்னும் இகிகை பற்றிச் சற்றுப் பார்ப்போம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

..

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. அணுகுண்டையும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனையும் சம்பந்தப்படுத்தி அவர் தான் அணுகுண்டு வெடிக்கக் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் நேரடியாக அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபடவில்லை.

 

 

ஹிட்லர் மின்னல் வேகத்தில் ஆக்கிரமித்து நாடுகளைக் கைப்பற்றும் சமயத்தில் ஜெர்மனியில் அணுகுண்டு தயாரிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைப் பற்றிக் கவலைப்பட்ட லியோ ஜிலார்ட் மற்றும் யூஜின் விக்னர் (Leo Szilard and Eugene Wigner) ஆகிய விஞ்ஞானிகள் எதாவது செய்ய வேண்டுமென நினைத்தனர். ஜிலார்ட் அமெரிக்க ஜனாதிபதியான ருஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் ஐன்ஸ்டீனையும் கையெழுத்திடச் செய்தார். ஜிலார்டுக்கு அதிகாரவர்க்கத்திடம் செல்வாக்கு இல்லை என்பதே இதற்குக் காரணம்.

 

 

அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றது.

அணுகுண்டுகள் போடப்பட்டு இரண்டாவது உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

 

அணுகுண்டு போடப்பட்ட பின்னர் ஒரு வருடம் ஐன்ஸ்டீன் அதைப் பற்றிய கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு வருடம் கழித்து நியூயார்க் டைம்ஸ் அவரது கருத்தாக, “ரூஸ்வெல்ட் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் அணுகுண்டு போட அனுமதித்திருக்க மாட்டார்” என்பதை வெளியிட்டது.

 

 

ஐன்ஸ்டீன் பின்னர், “நான் அணுகுண்டை ஜப்பானுக்கு எதிராகப் பயன்படுத்துவதை எப்போதுமே எதிர்த்து வந்தேன்” என்று கூறினார்.

1954, நவம்பரில், ஐன்ஸ்டீன் இறப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் அவர் அணுகுண்டு தயாரிப்பு பற்றிய தனது முத்தாய்ப்பான கருத்தை இப்படிச் சொன்னார்: “ நான் எனது வாழ்க்கையில் ஒரு பெரிய தவறைச் செய்தேன். ரூஸ்வெல்ட்டிற்கான கடிதத்தில் அணுகுண்டு தயாரிக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்து கையெழுத்திட்டது தான் அது. ஆனால் அதிலும் ஒரு நியாயம் இருந்தது, ஜெர்மானியர்கள் அதை செய்யும் அபாயம் இருந்தது.”

(“I made one great mistake in my life… when I signed the letter to President Roosevelt recommending that atom bombs be made; but there was some justification – the danger that the Germans would make them.”)

ஐன்ஸ்டீன் செய்த தவறு என்று அவரே ஒத்துக் கொண்டது அணுகுண்டு தயாரிப்பு பற்றித் தான்!

***

 

RAMAYANA SCULPTURES IN THAILAND (Post No.5158)

 

compiled by LONDON SWAMINATHAN

 

Date: 28 JUNE 2018

 

Time uploaded in London –  14-20 (British Summer Time)

 

Post No. 5158

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.\

 

 

RAMAYANA sculptures in Cambodia are well known; but sculptures describing the scenes of Ramayana in Thailand are not known to many. Some of the sculptures were even interpreted earlier as scenes from Buddha Jataka stories. Now we know they are from Ramayana.

Mostly sculptures of Hindu gods are found in the temples of Prasat Phnom Rung and Prasat Phimai. Other sculptures of Hindu Gods are kept in Bangkok Museum.

Following book (Palace of the Gods by Smithi Siribhadra and Elizabeth Moore)  give some pictures with explanation:

 

 

 

 

 

 

 

— SUBHAM —

 

 

 

Ambition and Abraham Lincoln anecdotes (Post No.5157)

compiled by LONDON SWAMINATHAN

 

Date: 28 JUNE 2018

 

Time uploaded in London –  11-57 AM (British Summer Time)

 

Post No. 5157

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.\

 

 

Some of Abraham Lincoln’s intimate friends once called his attention to a certain member of his cabinet who was quietly working to secure a nomination for the Presidency, although knowing that Mr Lincoln was to be a candidate for re-election. His friends insisted that the cabinet officer ought to be made to give up his Presidential aspirations or be removed from office. The situation reminded Mr Lincoln of a story :-

“My brother and I , he said, were once playing plowing corn, I driving the horse and he holding the plow. The horse was lazy, but on one occasion he rushed across the field so that I, with my long legs could scarcely keep pace with him. Oh! reaching the end of the furrow, I found an enormous chin fly fastened up on him, and knocked him off. My brother asked what I did that for. I told him I didn’t want the old horse bitten in that way
“Why”, said my brother, “ that is all that made him go”.
Now,said Mr Lincoln, If Mr ,,,,,, has a Presidential chin fly biting him, I am not going to knock it off, if it will only make his department go

plow

/plou/

noun

  • a large farming implement with one or more blades fixed in a frame, drawn by a tractor or by animals and used for cutting furrows in the soil and turning it over, especially to prepare for the planting of seeds.

chin-fly

  • A horse bot-fly, Gastrophilus nasalis, possibly so called because its eggs are laid about the horse’s mouth where they can be reached by the tongue of the horse and thence carried to its stomach.

xxx

Egg Throwing!

Oliver Hereford, the well k own humourist, attended a dinner at which he was seated next to a very serious and soulful young lady.
“Tell me, Mr Hereford”, she asked, “have you no other ambition beyond making people laugh?”
In the same serious vein, Hereford replied,
“Yes I have. And some day I hope to gratify it”
Eagerly the girl asked, please tell me, “what is it?”
“I want to throw an egg into an electric fan,” replied Hereford simply.

Subham.

காந்திஜியும் மத மாற்றமும் (Post No.5155)

Written by S NAGARAJAN

 

Date: 28 JUNE 2018

 

Time uploaded in London –   7-27 AM (British Summer Time)

 

Post No. 5155

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காந்திஜியும் மத மாற்றமும்

 

ச.நாகராஜன்

 

மஹாத்மா காந்தி அடிக்கடி தான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதாகக் கூறி வந்தார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களை மதம் மாறச் செய்வதில் அவர் வருத்தமும் கோபமும் கொண்டார்.

பல்வேறு சமயங்களில் அவர் அவர்களை இதற்காகக் கண்டித்துள்ளார்.

ஒரே ஒரு உரையை மட்டும் இங்கு காணலாம்:

23-4-1931 தேதியிட்ட அவரது உரையில் பல கருத்துக்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன.

அவற்றின் சாரத்தைத் தமிழிலும் மூலத்தை – ஒரிஜினலை – ஆங்கிலத்திலும் கீழே காணலாம்.

மனிதாபிமானத்திற்காக அல்லாமல் மதமாற்றத்திற்காக கல்வி,மருத்துவ உதவி போன்றவற்றை ஏழை மக்களுக்கு அவர்கள் செய்வதாக இருந்தால் அதை நான் ஆதரிக்க மாட்டேன்.

ஒவ்வொரு தேசமும் அதன் மத நம்பிக்கை இதர தேச மத நம்பிக்கை போலவே நல்லது என்று கருதுகிறது.

இந்தியாவில் உள்ள மத நம்பிக்கைகள் அங்குள்ள மக்களுக்கு நிச்சயமாகப் போதுமானது. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது இந்தியாவிற்குத் தேவையே இல்லை.

 

மனிதாபிமானம் என்றபெயரில் மதம் மாற்றுவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. இங்குள்ளோர் அதனால் மிகவும் வருத்தமடைகின்றனர். மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். அது இதயத்தைத் தொடும் ஒன்று. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஒரு டாக்டர் ஏதோ ஒரு வியாதியை எனக்குக் குணப்படுத்தி விட்டார் என்பதற்காக நான் ஏன் மதம் மாற வேண்டும்? அவரது செல்வாக்கில் நான் இருக்கும் போது அப்படி ஒரு டாக்டர் அதை ஏன் எதிர்பார்க்க வேண்டும் அல்லது அப்படி மாற ஏன் யோசனை கூற வேண்டும்? அவரது மருத்துவத்தினால் குணமாவதே அவருக்கான சிறந்த பரிசும் திருப்தியும் இல்லையா? ஒரு மிஷனரி கல்வி நிலையத்தில் நான் படிக்கையில் கிறிஸ்தவபோதனைகள் என் மேல் ஏன் திணிக்கப்பட வேண்டும்? எனது அபிப்ராயத்தில் இவை என்னை மேலே தூக்கி விடும் ஒன்றல்ல; இரகசிய எதிர்ப்பிற்காக இல்லையென்றாலும் அது சந்தேகத்திற்கு இடமளிக்கும் ஒன்றாகும். மதமாற்ற வழிமுறைகளானது சீஸரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.மதசார்பற்ற விஷயம் போல மத நம்பிக்கை இருத்தல் வேண்டும். அது இதயம் பேசும் மொழியால் தரப்படும் ஒன்று. ஒரு மனிதன் ஜீவனுள்ள நம்பிக்கையைத் தன்னிடம் கொண்டிருந்தால் அது ரோஜா மலரின் வாசனை போல மணம் பரப்பும். கண்ணுக்குத் தெரியாத அதன் தன்மையினால் கண்ணுக்குத் தெரியும் மலர் இதழ்களின் அழகை விட அதன் செல்வாக்கு வெகு தூரம் வரை பரப்பும்.

 

நான் மதமாற்றத்திற்கு எதிரானவன் இல்லை. ஆனால் அதன் நவீன முறைகளுக்கு எதிரானவன். மதமாற்றம் என்பது இன்று வணிகமாகி விட்டது. ஒரு மிஷனரி அறிக்கையில் ஒரு மனிதனை மதமாற்ற தலைக்கு ஆகும் செலவு எவ்வளவு என்றும் அதன் அடிப்படையில் அடுத்த “அறுவடைக்கு” ஆகும் செலவுக்கு பட்ஜெட் தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருப்பதை நான் படித்தேன்.

 

“ஆமாம். இந்தியாவின் பெரிய மத நம்பிக்கைகள் அதற்குப் போதும். கிறிஸ்தவம், யூதம் தவிர ஹிந்து அதன் கிளைகள்,இஸ்லாம்,ஜொராஷ்ட்ர மதம் ஆகியவை ஜீவனுள்ள மதங்கள். எந்த ஒரு மதமும் பூரணமானதல்ல.

எல்லா மதங்களும் சமமானவை. ஆகவே வேண்டுவது என்னவெனில் உலகின் பெரும் மதங்களைப் பின்பற்றுவோரிடையே நட்புடனான தொடர்பு வேண்டுமேயன்றி மற்றவற்றை விட பெரிது என்று காட்டும் பயனற்ற முயற்சி தேவையில்லை. அப்படிப்பட்ட நட்பு ரீதியிலான தொடர்பால் நமது மதத்தில் உள்ள குறைகளையும் தேவையற்றவற்றையும் களைந்து விட முடியும்.

 

மேலே நான் கூறியவற்றால், இந்தியாவில் மதமாற்றத்திற்கான தேவை இல்லை. சுய தூய்மை, ஆன்மாவை உணர்தல் ஆகிய மாற்றமே இன்றைய அவசரத் தேவை.  இதை மதமாற்றம் என்று சொல்லப்படுவதற்கு என்றுமே அர்த்தமாகக் கொண்டதில்லை.

 

இந்தியாவை மாற்ற வருபவரிடம், “வைத்தியரே, முதலில் உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும்” என்று சொல்ல வேண்டுமல்லவா?

(மகாத்மா காந்தி நூல்கள் தொகுதி 46 பக்கம் 28)

**

ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

 

Gandhiji clarified his views on the role of foreign missionaries in India. (23-4-1931)

 

“(If) instead of confining themselves purely to humanitarian work such as education,

medical services to the poor and the like, they would use these activities of theirs for

the purpose of proselytizing, I would certainly like to withdraw. Every nation considers

its own faith to be as good as that of any other. Certainly, the great faiths held by the

people of India are adequate for her people. India stands in no need of conversion from

one faith to another.

“Let me now amplify the bald statement. I hold that proselytizing under the cloak of

humanitarian work is, to say the least, unhealthy. It is most certainly resented by the

people here. Religion after all is a deeply personal matter, it touches the heart. Why

should I change my religion because a doctor who professes Christianity as his religion

has cured me of some disease or why should a doctor expect or suggest such a change

whilst I am under his influence? Is not his medical relief its own reward and

satisfaction? Or why should I, whilst I am in a missionary educational institution, have

Christian teaching t^mist upon me? In my opinion these practices are not uplifting and

give rise to suspicion if not even secret hostility. The methods of conversion must be

like Caesar^ wife above suspicion. Faith is imparted like secular subjects. It is given

through the language of the heart. If a man has a living faith in him, it spreads its aroma

like the rose its scent. Because of its invisibility, the extent of its influence is far wider

than that of the visible beauty of colour of the petals.

“I am, then, not against conversion. But I am against the modern method of it.

Conversion nowadays has become a matter of business like any other. I remember

having read a missionary report saying how much it cost per head to convert and then

present a budget for ‘the next harvest’.

“Yes, I do maintain that India’s great faiths all suffice for her. Apart from Christianity

and Judaism, Hinduism and offshoots, Islam and Zoroastrianism are living faiths. No one

faith is perfect.

All faiths are equally dear to their respective votaries. What is wanted therefore is living

friendly contact among the followers of the great religions of the world and not a clash

among them in fruitless attempt on the part of each community to show the superiority

of its faith over the rest. Through such friendly contact it will be possible for us all to rid

our respective faiths of shortcomings and excrescences.

“It follows from what I have said above that India is in no need of conversion of the kind

I have in mind. Conversion in the sense of self-purification, self-realization is the crying

need of the times. That, however, is not what is ever meant by proselytizing. To those

who would convert India, might it not be said, ‘Physician heal thyself’ ? (Complete Works of Mahatma Gandhi – Volume 46:Page 28)

**

மதமாற்றம் பற்றிய காந்திஜியின் கருத்துக்களை இதற்கு மேல் விளக்க வேண்டிய தேவை இல்லை.

இன்றைய போலி செகுலரிஸவாதிகள் காந்திஜியை தங்கள் துஷ்பிரசாரத்திற்கு இனியும் இரையாக்கத் தேவையில்லை.

1931ஆம் ஆண்டு அவர் கூறிய இந்தக் கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தும்.

மதமாற்றப் பாதிரிகள் இன்னும் தீவிரமாக மக்களை ஏமாற்றுவதை நாடெங்கும் தினம்தோறும் பார்த்து வருகிறோம்.

கடலோரப் பகுதிகளிலும், மலைவாழ் மக்களின் பட்டி தொட்டிகளிலும், தேசத்தின் எல்லையோரப் பகுதிகளிலும் அவர்களின் முயற்சி அதிக அளவில் அதிகப் பணச்செலவில் இன்றும் தொடர்கிறது.

மதமாற்றத்திற்காக தேசத்தைத் துண்டாடும் கலவரங்களைத் தூண்டிவிடும் அளவிற்கு இன்றைய நிலைமை மோசமாகி விட்டது.

 

கிறிஸ்தவ பாதிரிகளே, முதலில் உமது வியாதியிலிருந்து நீவீ ர்  உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும் என்று காந்திஜியின் வார்த்தைகளை அப்படியே கூறி அவர்களை உடனடியாக பாரதத்தை விட்டு அகற்றுவதே இன்றைய தேவை.

***