சீதையைப் பார்த்து சிரித்த குரங்குகள்! (Post No.5028)

WRITTEN by London Swaminathan 

 

Date: 20 May 2018

 

Time uploaded in London – 9.46 am (British Summer Time)

 

Post No. 5028

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

சீதைக்கு ஒரு பிள்ளைதான்!! தாய்லாந்து ராமாயணம்-4

 

முதல் மூன்று பகுதிகளில் அனுமனுக்கு இரணடு மனைவிகள், ராவணனின் மகள்தான் சீதை, இலங்கையில் ஆட்சிக்கு எதிராகக் கலகம் , மயில் ராவணன் கதை முதலிய பல விநோதங்களைக் கண்டோம்.  இப்போது குசன் மட்டுமே சீதையின் மகன் என்ற கதையையும் சீதை வரைந்த ராவணனின் படம் குறித்தும் உள்ள சம்பவங்களை தாய்லாந்து ராமாயணமான  ராமகீயனில் (RAMAKIEN) இருந்து காண்போம்.

 

வால்மீகி ராமாயணத்தின்படி ராமனுக்கு லவன், குசன் என்ற இரட்டையர் பிறந்தனர் என்பதை நாம் அறிவோம்

 

சீதை, கர்ப்பவதியாக இருந்தபோது ராமன் காட்டுக்கு அனுப்பினான். அங்கே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளை மீது வால்மீகி முனிவர் குஸ என்ற புனிதப் புல்லினால் புனித நீர் தெளித்ததால் அவனுக்குக் குஸன் என்று பெயரிட்டனர்.

குழந்தை பிறந்த செய்திக்குப் பின்னர்,  ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய சடங்குகளைச் செய்துவிட்டுப் புறப்பட்டும் போய்விட்டான். சீதையின் தந்தையான ஜனகன் முதலிய உறவினரும் வந்தனர்.

 

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள், சீதை காட்டில் பழங்களைச் சேகரிக்கச் சென்றாள். இயற்கை அழகைக் கண்டு ரஸித்தாள். வால்மீகி முனிவரிடம் ‘என் பிள்ளையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனாள்

ஒரு மரத்தில் ஒரு தாய்க் குரங்கு  ஐந்து குட்டிகளுடன் தாவித்தாவி சென்று கொண்டிருந்தது. சீதைக்கு ஒரே கவலை. உடனே தாய்க் குரங்கைப் பார்த்து சொன்னாள்:

“ஏ, குரங்கே! பார்த்துத் தாவு; குட்டிகள கீழே விழுந்துவிடப் போகின்றன. ஜாக்கிரதை!”

 

இதைக் கேட்டவுடன் அந்தக் குரங்கும் அருகாமையில் இருந்த குரங்கும் பலமாகச் சிரித்தன. “ஏம்மா தாயே! உன் கைக் குழந்தையை ஒரு கிழட்டு முனிவன் பாதுகாப்பில் விட்டு வந்திருக்கிறாய்; அவரோ கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்து இருக்கிறார். ‘ஊருக்குத் தாண்டி உபதேசம் உனக்கு இல்லை என்ற கதையாக இருக்கிறதே!’ என்று சொல்லிச் சிரித்தன.

 

இதைக் கேட்டவுடன் சீதைக்கு ‘ஷாக்’ அடித்தது போல இருந்தது. வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்த்க்கு ஓடினாள். அங்கு முனிவரும் இல்லை சிஷ்யர்களும் இல்லை; குழந்தை மட்டும் குடிலுக்குள் உறங்கிக் கொண்டு இருந்தது. சீதை, தனது குழந்தை குஸனுடன் காட்டுக்குள் வந்து இயற்கை அழகைக் கண்டு வியந்தாள்.

 

இதற்கிடையில் ஆஸ்ரமத்துக்குத் திரும்பிவந்த வால்மீகி குழந்தையைக் காணாது திகைத்தார்; பதை பதைதார். உடனே ஒரு கணமும் தாமதிக்காது ஒரு குழந்தையை மந்திர சக்தியால் உருவாக்கினார். சீதை திரும்பி வந்தவுடன், அவள் கையில் உணமைக் குழந்தை — அசல் குழந்தை —இருப்பதைப் பார்த்து தான் பதற்றத்தில் வேறு ஒரு குழந்தையை சிருஷ்டித்த கதைகளைச் சொன்னார்.

 

இரண்டாவது குழந்தையை சீதையின் கையில் கொடுத்து உன் மூத்த  பிள்ளைக்கு விளையாட ஒரு ஆண் வேண்டுமல்லவா; ஆகையால் இவனையும் உன் மகனாக வைத்துக் கொள்; இவனை கம்பளி நூல் மூலம் உருவாக்கினதால் இவனுக்கு ‘லவன்’ என்று பெயர் என நுவன்றார்.

அதைச் செவிமடுத்த சீதைக்குப் பேரானந்தம்!

இதே போல இந்தியாவிலுள்ள ஆனந்த ராமாயணத்திலும் சில சிறிய மாற்றங்களுடன் கதை உளது. ஆகவே ஆனந்த ராமாயணம்தான் தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றது என்றும் சிலர் கதைப்பர்.

 

கதா ஸரித் சாகரம் என்ற நூலிலும் இக்கதை உளது ஆனால் அது முதல் பிள்ளை லவன் என்றும் இரண்டாம் பிள்ளைதான் குசன் என்றும் சொல்லும். வடக்கத்தியர்கள் குசன் லவன் என்று சொல்லுவர். நாமோ லவ குசன் என்போம்.

 

இலக்குவனால்  மூக்கு அறுபட்டுப் போன சூர்ப்பநகைக்கு ஒரு மகள் உண்டாம் ; அவள் பெயர் அதுல். அவளே மாறு வேடத்தில் ராமபிரான் அரணமனையில் வேலைக்கு அமர்ந்தாள் அவள்தான கூனி எனப்படும் மந்தரை. சீதையை பழிவாங்கத் திட்டம் தீட்டினாள். அது ராமனைப் பாதிக்கும் என்று திட்டம் போட்டாள்; அதன்படி ராமன் வரக்கூடிய தருணம் பார்த்து சீதையிடம் ஒரு படம் வரைச் சொன்னாள்:

“அம்மா, அம்மா எனக்கு ராவணன் என்னும் ராக்ஷஸன் எப்படி இருப்பான் என்று பார்க்க ஆசையம்மா! PLEASE ப்ளீஸ், படம் வரைந்து காட்டுங்களேன்” என்றாள். அவளும் வேடிக்கைக்குதானே இந்தக் கூனி கேட்கிறாள் என்று எண்ணி அவளைக் குஷிப்படுத்த படமும் வரைந்தாள் அந்த தருணத்தில் அண்ணலும் வந்தர்; படத்தைப் பார்த்து ஆத்திரமும் அடைந்தார். மாறு வேடக் கூனி அதுலும் (ADUL) நன்றாக சீதையை மாட்டிவிட்டாள்.

கோபம் கொண்ட ராமன், இலக்குவனை அழைத்து, இந்தப் பெண்ணைக்     காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்று விடு என்று காதோடு காதாக சொன்னான்.

 

அவன் அண்ணன் சொல்லைத் தட்ட முடியாமல் காட்டுக்கு அழைத்து வந்தான். ஆனால் கொல்வதற்கு மனம் வரவில்லை. அவளுக்கு வால்மீகி ஆஸ்ரமம் இருக்கும் இடத்தைக் காட்டிவிட்டு, ஒரு மானைக் கொன்று அதன் இதயத்தை எடுத்து ராமனிடம் காட்டி, இதோ பார் சீதையின் இருதயம் என்று காட்டினான். இதற்கு நீண்டகாலத்துக்குப் பின்னரே சீதை உயிருடன் இருந்தது ராமனுக்குத் தெரியவந்தது.

 

இதே கதை மலைஜாதி மக்களிடம் உண்டு; ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததால் 3000 வகை ந் ராமாயணங்களாவது இருக்கும் ; நான் லண்டனில் வாரம் தோறும் பிரிட்டிஷ் லைப்ரரிக்குப் போகையில் புதுப் புது ராமாயணமோ. அல்லது சம்பவங்களோ பார்க்கிறேன். ஜைன ராமாயணம், புத்த ராமாயணம், புற நானூற்றில் ராமாயணம், ஆழ்வார் பாடல்களில் ராமாயணம் என்று ஏராளமாக உள்ளன.

 

பண்டல்கண்டு பகுதி மலை ஜாதி மக்களிடையேயும் நாட்டுப் புறப் பாடல்களில் இந்த  ராமாயணக் கதை இடம்பெறுகிறது.

 

சீதையை எல்லாப் பெண்களும் சேர்ந்து கிண்டல் செய்து, ‘உன்னை சிறை வைத்த ராக்ஷசன் எப்படி இருந்தான்?’ என்று கேட்கவே அவள் சாணத்தால் ராவணனின் படத்தை வரைந்ததாகாவும் , பாதி வரைகையில் ராமன் வந்து அதைப் பார்த்து கோபம் அடைந்து அவளைக் காட்டிற்கு அனுப்பியதாகவும் அந்த நாட்டுப் புறப்பாடலில் வரும். மலைஜாதி மக்களிடையே கூட ராமாயணம் இப்படிப் பரவி இருக்குமானல் அது பல்லாயிரக் கணக்கான ஆண்டு பழமை உடையது என்பதும் தெள்ளிதின் விளங்கும். உலகம் முழுதும் பரவிய பழங்கால காவியங்களில் ராமாயணம் முதலிடத்தைப் பெறுகிறது.

காலத்தால் அழியாத காவியம்  ராமாயணம்– மனித குலத்தின் எல்லா நற்குணங்களையும்  கதா பாத்திரங்களில் பிரதிபலிக்கும் சீரிய காவியம் ராமாயணம்.

வாழ்க ராமாயணம் ! வளர்க ராமன் புகழ்!!

–சுபம்–

 

 

 

 

 

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்! (Post No.5027)

Written by S NAGARAJAN

 

Date: 20 MAY 2018

 

Time uploaded in London –  6-28 AM   (British Summer Time)

 

Post No. 5027

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் மே 2018  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆரோக்கிய ரகசியம்

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்!

 

ச.நாகராஜன்

நமது ஆயுர்வேத நூல்களிலும், வைத்ய நூல்களிலும் இதர சுபாஷித நூல்களிலும் ஆரோக்கியம் பற்றிய ஏராளமான நுட்பமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது அடிப்படையான விஷயம். இதை முதலில் தெரிந்து கொண்டால் நமக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற்று நோய்களிலிருந்து மீளலாம்.

நோயே இல்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறவும் இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை.

சில கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்படுகின்றன.

1

நோய் வருவதற்கான நான்கு காரணங்கள்

ரோக நிமித்தம்

  • ஆகண்டுகா – Exogenous – வெளியிலிருந்து
  • வாதம்
  • பித்தம்
  • ஸ்லேஷ்மா

சரக சம்ஹிதை (சூத்ர 20-3)

 

2

நோயாளியின் நான்கு குணங்கள்

ரோகாதுரா குணா:

 

1) ஸ்மிருதி – நல்ல ஞாபக சக்தி (good memory)

2) நிர்தேசா – மருத்துவ அறிவுரையின் படி நடத்தல் (follwoing the prescription)

3) அபீருத்வா – பயமின்மை (fearlessness)

4) ஞானபாகா – தடையற்ற வெளிப்பாடுகள் (uninhibited expressions)

 

சரக சம்ஹிதை (சூத்ர 9-9)

 

3

நோயைப் போக்கத் தேவையான அம்சங்கள்

Aspects of therapeutics for the cure of disease

 

1)பிஷக் – வைத்தியர் (Physician0

2) த்ரவ்யாணி –  மருந்துகள் (Medicines)

3) உபஸ்தாதா – உடன் இருந்து உதவி செய்பவர் -Upasthata

4) ரோகி – வியாதியஸ்தர் – Rogi

சரக சம்ஹிதை (சூத்ர 9-3)

 

4

வைத்யருக்கான குணங்கள்

வைத்ய குணா:

 

1) மிகச் சிறந்த மருத்துவ அறிவு (ச்ருதே பர்யாவதாதத்வம்)

2) பரந்த மருத்துவ அனுபவம் (பஹுஷோ த்ருஷ்டகர்மதா)

3) திறமை (தாக்ஷ்யம்)

4) சுத்தம் (சௌசம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-6)

 

5

அறுவை சிகிச்சை நிபுணருக்கான குணங்கள்

சஸ்த்ர வைத்ய குணா:

பயப்படாமை – சௌர்யம்

எளிதாகக் கையாளும் தன்மை – ஆசுக்ரியா

சஸ்த்ரதைக்ச்ன்யம் – மிகக் கூர்மையான கருவிகள்

வியர்வை இல்லாமல் இருத்தல், நடுங்காமல் இருத்தல் -அஸ்வேதவேபது

குழப்பமின்றி இருத்தல் – அஸம்மோஹ:

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 5-10)

 

6

நோயாளிகளிடம் வைத்யரின் அணுகுமுறை

வைத்ய வ்ருத்தி

 

நட்பு – (மைத்ரி)

தயை – (காருண்யா)

சந்தோஷம் – (ப்ரீதி)

இரக்கம் – (உபேக்ஷணம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-26)

7

நோய் அறிதல்

வியவஹார தர்ஷணம் (Diagnosis)

 

கேட்டல்- (ஆகம)

உரையாடுதல் – (வியவஹாரா)

சிகிச்சை – (சிகித்ஸா)

முடுவெடுத்தல் – (நிர்ணயா)

நாரத ஸ்மிருதி (1-36)

 

8

நோய் அறிதல்

ரோக விஞ்ஞானம்

நோய் வருவதற்கான காரணம் – நிதானம்

முந்தைய நிலை – பூர்வரூபா

தோற்றம் – ரூபா

நோய்க்குத் தீர்வு – உபசாயா

முடிவு – சம்ப்ராப்தி

மாதவ நிதானம் (1-4)

 

9

 

வியாதிகளின் வகைகள்

வியாதி

 

தொற்று நோய் – (ஆகண்டவா)

உடல் சம்பந்தமானது – (சரீரா)

மனோ வியாதி – (மானஸா)

இயற்கையானது – (ஸ்வாபாவிகா)

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 1-23)

10

எலும்பு வகைகள்

அஸ்திவர்கா

 

தட்டை – (கபாலா)

பல் – (ருசகா)

குருத்தெலும்பு – (தருணா – cartilege)

வட்ட வடிவமானது – (வளயா)

நீளமானது – (நாளகா)

சுஸ்ருத சம்ஹிதா (சரீர 5-20)

11

மருந்துக் கஷாயங்கள்

கஷாயம்

 

அத்தி – (சமி)

அரசு – (அஸ்வத்தா)

ஆலமரம் – (ந்யாக்ரோதா)

புரசு – (பலாச)

 

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக ஆராய்ந்து எது நல்லது, யார் வியாதியை நீக்கத் தகுதியானவர்கள் என்பன போன்றவற்றை ஆயிரக் கணக்கான செய்யுள்கள் தருகின்றன.

 

அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த வைத்தியர்கள் ஒவ்வொரு கிராமம்தோறும் இருந்து மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடுபட்டனர். பாரம்பரிய வழியிலான அந்த ஆயுர்வேத மருத்துவம் பற்றி அறிவது நமது கடமை – நமது நலனுக்காகவே!

***

 

 

 

 

 

 

 

 

 

WALKING ON THE WATER: INDIAN MIRACLES! (Post No.5026)

WRITTEN by London Swaminathan 

 

Date: 19 May 2018

 

Time uploaded in London – 16-43 (British Summer Time)

 

Post No. 5026

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Miracles in water or on the surface of water is in every religion. But the earliest miracles appear in the Rig Veda, the oldest book in the world.  Rig Veda is dated by various scholars from 6000 BCE to 1500 BCE. Buddhist literature followed it. Around 300 BCE we have some stories about Buddha flying over water to Sri Lanka or Buddhist disciples walking on water to reach the Buddha. Hebrews had the Miracle of Israelites crossing the Red Sea in the old testament of the Bible. New Testament has Peter crossing the waters on foot. Greek writers have story of Alexander doing some miraculous crossings.

Krishna was taken in the basket by Vasudeva across the River Yamuna and the river gave him the way. Adi Shankara’s disciple Padmapada (Mr.Lotus Feet) got the name because when his Guru called him he simply walked on the river and a lotus appeared at every step he took and he walked over it. Hinduism has so many stories like this. Hatayoga teaches one to walk on water.

 

Water miracles are of different types:

 

1.The water divides and one can walk in the dry area.

2.The water becomes shallow and one can easily cross it.

3.The water stays as such and one can simply walk on it.

4.Some factors like strong wind or a lotus or a board appear and one can cross the sea or river

5.One can levitate and fly over the surface like a hovercraft.

  1. A mixture of one or two features of the above list.

 

Let us first look at the Rig Vedic miracle which is the source for all water miracles:

William Norman Brown, who surveyed the ancient literature for water miracles says, “The earliest example of crossing water magically appears in the Rig Veda (3-33), where it is accomplished by means of a religious act. The hymn is famous, celebrating the crossing of the rivers Vipaas and Sutudri, the modern Beas (Vyasa) and Sutlej in Punjab. The hymn is in the form of a dialogue between the seer Visvamitra and the two Rivers”.

 

Probably this is the earliest such inter action with nature. There is a beautiful description of rivers running towards ocean. The sage uses several similes.

This hymn exploded the half- baked theories of Vedic Hindus’ ‘ ignorance’ about the seas. Apart from that, it is a beautiful poetry on Nature. This portrays rivers as mothers and sisters. There also it strikes a first. Later cultures followed this Vedic concept and described earth as Mother (Gaia in Greek)

 

Sayana, the most famous Vedic commentator, has a story about this hymn. Sage Visvamitra came with lot of treasures and asked the rivers to give him way. Then it allowed him to pass through the rivers. There is history as well. Sudas was helped by Indra to marchforward.

 

Now look at the beautiful similes:

3-33-1: Like a pair of racing horses you two rivers flow

Like two mother cows licking their calves, your waves lash the banks

3-33-2: you two rivers are like the wheels of a chariot

3-33-10 : Rivers say: Oh, seer! You have come far away with wagon and chariot. We will heed to your words “Low shall I bow like a blooming young woman; like a maiden to her lover”.

 

Visvamitra’s request to the rivers:

Pray listen sisters, to the bard;  he has come to you from afar with wagon and chariot; pray bow down yourselves; become easy to cross. O rivers be lower than the axles with your streams.

May your waves reach up to as far as the hubs, but O waters spare the reins; and let not the two innocents, faultless oxen come to harm.

 

Here we see some kindness towards animals. Let the oxen of the wagon be safe. They are innocent. In every aspect, it shows a highly civilized society.

 

Visvamitra’s penance made the rivers to subside and allowed the hosts to pass over.

When we compare other miracles attributed to Visvamitra we can be of sure about his powers.

 

The feat of crossing these rivers are also in 3-53-9, 7-18-5, 7-33.

 

Similar help in crossing rivers is given by Indra to Turviti and Vavya in RV 2-13-2 and 4-19-6, 1-61-11.

There are also others getting such help in 1-174-9 and 2-15-5.

 

So it is established that Indra as God of the Waters, miraculously renders them passable to his worshippers.

RV 10-136 also speaks of such a miracle.

There is a reference in the Mahabharata about the pious king Dilipa. His chariot did not sink in the water. Bhagavata Purana clearly says the River Yamuna gave passage to infant Krishna. Basha, one of the earliest playwrights, also refer to this in his drama Bala carita:

“VASUDEVA FLEES WITH INFANT Krishna; the darkness is impenetrable, but a marvellous light comes from the child and the Yamuna makes a dry path for him to cross”. All the above references are from BCE time.

 

—Subham–

இலங்கையில் பயங்கரக் கலகம் – சுவையான கதை! தாய்லாந்து ராமாயணம்-3 (Post No.5025)

இலங்கையில் பயங்கரக் கலகம் – சுவையான கதை! தாய்லாந்து ராமாயணம்-3 (Post No.5025)

 

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 19 May 2018

 

Time uploaded in London – 12-28 (British Summer Time)

 

Post No. 5025

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

அம்பு மூலம் அவசரச் செய்தி !!

மஹிபால தேவாசுர!!

மஹாபல தேபாசுர அல்லது மஹிபால தேவாசுர, ராவணனின் இனிய நண்பன்.அவனுக்கு ராவணன் இறந்தது தெரியாது. ராரவணனைப் பார்க்க இலங்கைக்கு வந்தான். ராவணன் கருமாதி முடிந்து பத்து நாள் ஆகிவிட்டது. ‘ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிடவா வந்த?’ என்று மக்கள் வினவினர். என் நண்பன் ராவணனைக் கொன்று, விபீஷணன் இந்த நாட்டை ஆள்கிறானா? என் தாய் தடுத்தாலும் விடேன்- என்று சொல்லி லங்காபுரியை முற்றுகை இட்டான். முக்காலமும் உணர்ந்த இராமபிரானுக்கு இப்படியெல்லாம் எதிர்காலத்தில் ஆபத்து வரும் என்று அறிந்து வாரா வாரம் ஒரு ராம பாணத்தை (அம்பு) இலங்கைக்கு அனுப்பி வந்தான். இப்படிப்பட்ட ஒரு அம்பை விபீஷணன் எடுத்தான்- தொடுத்தான்— ஒரு அவசரக் கடிதத்தை!

 

தமிழ் இலக்கியத்திலும் உலகின் பிறநாட்டு இலக்கியங்களிலும் புறா விடு தூது, அன்னம் விடு தூது, செங்கால் நாரை விடும் தூது என்றெல்லாம் பாடல்கள் உண்டு. புற நானூறு, நளவெண்பா, தேவாரம், திவ்யப் பிரபந்தப் பாடல்களில் இவற்றை ரஸிக்கலாம். ஆனால் அம்பு மூலம் கடிதம்/ தூது அனுப்பியது விபீஷணனே. இது தாய்லாந்து ராமயணத்தின் விஷேசச் செய்தி.

 

 

ராமனிடம் அம்பு வந்தது; இது என்னடா? ‘அம்புத் (அன்புத்) தொல்லை’ என்று சொல்லி அவன் அனுமனை அழைத்து ‘’மகனே சென்று வா, வென்று வா, புகழ் மொண்டு வா’’ என்று அனுப்பினான்.

 

அனுமன் அப்போது பியாஜித் என்ற பெயரில் நபபுரியை (ப்ரிய ஜித்; நவ புரி) ஆண்டு வந்தான். அவன் ‘’வம்புச் சண்டைக்குப் போக மாட்டான்; வந்த சண்டையை விட மாட்டான்’’.

 

மஹீபாலனை எட்டி உதைத்தான்; கட்டிப் புரண்டான்; வெட்டி வீழ்த்தினான். ஆயினும் வெட்டிய உடல் இரண்டும் சேர்ந்து ஒட்டின. அனுமனுக்கு வியப்பு; உடல் எல்லாம் வியர்ப்பு; வழித்தான் வேர்வையை; சுழித்தான்  முகத்தினை. பழித்தான் மஹிபாலனை.

 

அப்போது விபீஷணன் செப்பினான்; முதலில் மஹீபாலனின் மார்பைப் பிள. அனுமனும் அப்படியே செய்ய, மஹிபாலன் கதை முடிந்தது.

 

இலங்கையில் பயங்கரக் கலகம்

 

ராவணன் இறந்து சில வாரங்கள் ஓடிப்போனது. விபிஷணனின் நல்லாட்சி நடந்து வந்தது. அப்போது மண்டோதரி கர்ப்பமாக இருந்தாள்; விபீஷணனின் மஹாரணிகளில் ஒருவள் ஆனாள். பிள்ளையும் பிறந்தது. அவன் பெயர் வரணிசூரன்.

 

அவன் ராவணன் பிள்ளை என்றும், விபீஷணன் எதிர்க் கட்சியில் சேர்ந்து அண்ணனைக் கொன்றான் என்றும் அவனுடைய நண்பன் சொல்லி வைத்தான். இதைக் கேட்டவுடன் வரணிசூரனுக்கு ரத்தம் கொதித்தது. இலங்கையில் போர்க்கொடி உயர்த்தி கலகம் செய்தான்; ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தான்; ராவணனின் நண்பனான சக்ரவர்த்தி என்ற மன்னனுடன் சேர்ந்து இலங்கை மீது படை எடுத்தான் .அவன் பைனிசூரிவாங்ஷ் என்ற பெயர் கொண்டு விபீஷணனைச் சிறைப் பிடித்தான்.

 

உடனே அனுமன் உதவியை நாடினான் விபீஷணன்.

 

அனுமன் நேரடியாக கிஷ்கிந்தைக்குச் சென்று சுக்ரீவன் படைகளை சேர்த்துக் கொண்டான்.அயோத்திக்குச் சென்று ராமன் படைகளைச் சேர்த்துக் கொண்டான். பின்னர் தனது மகன் அசுரபாத்துடன் கலகப் படையைத் தாக்கினான். அது தோற்று ஓடிப்போனது. பின்னர் விபீஷணனை  அனுமன் விடுதலை செய்தான்.

மைய்ராப் ( மயில் ராவணன் ) கதை

 

ராவணனின் ஆருயிர்த் தோழன் மைராப். அவன் பாதாள உலகத்துக்கு மன்னன். அவன் இராம பிரானை வெல்ல மைராப்பை அனுப்பினான். அவனும் ராமனிடம் சென்று தூக்க மாத்திரைப் பொடியை ராம லெட்சுமணர்கள் மீது தூவவே அவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை அலாக்காகத் தூக்கி வந்து கடலடி பாதாள உலகில் காவலில் வைத்தான் மைராப். உடனே சுக்ரீவன் இதைக் கண்டுபிடித்து அனுமனை மீட்புப்  பணியில் அமர்த்தினான். அவன் கடலடிக் குழந்தை மீனவனை (மச்சானு/ மத்ஸ்யனு) அனுப்பி பாதாள உலகில் இருந்து இராம இலக்குவர்களை மீட்டான்.

 

 

அனுமாருக்கு இரண்டு மனைவிகள்

 

விபீஷணன் மகள் பெஞ்சகாயுடன் (வஞ்சகி அல்லது வஞ்சி) அனுமாருக்கு பிறந்தது அசுரபாத் என்னும் மகவு.

 

விபீஷணன் மகள் என்று தெரிந்ததும் பெஞ்சகாய் அரக்கியை ராமன் கொல்லாமல் அனுமாரோடு  பாதுகாப்போடு அனுப்பியபோது காதல் மலர்ந்து பெற்ற பிள்ளை இது.

சுவர்ணமத்ஸ்யானு என்னும் கடல் அரக்கியுடன் அனுமார் பெற்று எடுத்த மகவின் பெயர் மத்ஸ்யானு (மீனன்). பாலம் கட்டும் பணியில் PLAN பிளான் போட்டுக்கொடுத்த நீலன் என்ற சிவில் எஞ்சினீயருக்கும் (CIVIL ENGINEER) அனுமாருக்கும் மோதல் ஏற்படவே ராமபிரான் நீலனை டிஸ்மிஸ் செய்து சுக்ரீவனிடம் சேவகம் செய்ய அனுப்பினான். அனுமனுக்குக் கடுங்காவல் தண்டனை கொடுத்தான் —அதாவது ஏழே நாளில் பாலம் கட்ட வேண்டும் என்று.

 

அனுமான் போட்ட கற்களை எல்லாம் கடலுக்கடியில் யாரோ களவாடிச் சென்றார்கள். அனுமன், கடலுக்கு அடியில் முங்கு நீச்சல் போட்டான். அங்கே சொர்ண மச்சா என்ற மீனழகி களவாணி வேலையில் ஈடுபட்டது தெரிந்தது. அவளை விரட்டி மிரட்டினான்; அவள் பணிந்தாள்; கனிந்தாள்; இருவருக்கும் காதல்; பிறந்த மகனின் பெயர் மச்சானு (மத்ஸ்ய= மீனவன்)

 

பிரம்மாவின் தீர்ப்பு

ராவணனின் தாத்தா மாலிவக்க பிரஹ்மா. ராமனின் அம்புகளால் அடுத்தடுத்து தோல்வி அடைந்த ராவணன் தாத்தாவை சமரசம் செய்ய அழைத்தான். ராமன் மீது சரமாரியாக புகார் கொடுத்தான். ராமனும் புகார்ப் பட்டியல் கொடுத்தான். தேவர்கள் அனைவரும் பிரம்மாவின் கோர்ட் வாசலில் தீர்ப்புக்குக் காத்து இருந்தனர்.சட்ட புத்தகங்களைக் கலந்தாலோசித்த பிரம்மா- ராவணனே குற்றவாளி என்று தீர்ப்பு எழுதினார். ராவணனின் சுப்ரீம் கோர்ட் வழக்கும் தோல்வி கண்டது.

 

இப்படிப் பல சுவையான சம்பவங்களைக் கொண்டது ராமகியன் எனப்படும் தாய் (THAI LANGUAGE) மொழி ராமாயணம்.

அடுத்ததாக லவன், குசன் பற்றிய விசித்திர விநோதக் கதைகளையும், சீதையின்  “ராவணக் காதல்” பற்றியும் காண்போம்

–தொடரும்

–சுபம்–

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 1(Post No.5024)

Written by S NAGARAJAN

 

Date: 19 MAY 2018

 

Time uploaded in London –  5-35 AM   (British Summer Time)

 

Post No. 5024

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

18-5-18 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினொன்றாம்) கட்டுரை

 

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 1

.நாகராஜன்

உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்கள் இல்லை.

நாடகம் முடிந்தாலும் சரி, பெரிய விழா முடிந்தாலும் சரி திருஷ்டி கழிப்பது வழக்கமாகி விட்டது.உடனடியாக திருஷ்டி கழித்துப் போட்டு விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள்.

சில பேருடைய பார்வை பட்டாலேயே போதும் திருஷ்டிக்கு உள்ளானவர் பல விதத்திலும் பாதிக்கப்படுவர், ஏன், சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுண்டு!

தி ஈவில் ஐ –  எ கேஸ் புக் என்று ஆலன் டுண்டஸ் (The Evil Eye : A casebook – Alan Dundes) இது பற்றிப் பெரிய ஆராய்ச்சி நூலையே எழுதியுள்ளார்.

பார்த்த பார்வையில் புதுச் சட்டை கிழியும்; பால் புளித்துப் போகும், பார்த்த பார்வையில் பல நாட்களுக்குச் சாப்பிடவே பிடிக்காது. வாந்தி எடுக்கும் – இப்படி கெட்ட திருஷ்டியின் “மஹிமையை”ச் சொல்லிக் கொண்டே போகலாம்.

திருஷ்டி பற்றிக் கவலைப்படாத நாகரிகமே இல்லை; நாடே இல்லை; மக்களே இல்லை!

ஒவ்வொரு நாட்டிலும் இதற்குத் தனிப் பெயர் உண்டு.

சுவாரசியமான அந்தப் பெயர் பட்டியலை அப்படியே கீழே காணலாம்:

ஜெர்மனியில் இதற்குப் பெயர் போஸ் ப்ளிக் (Bose Blick)

ஹாலந்தில் இதற்குப் பெயர் பூஸ் ப்ளிக   (boose Blick)

போலந்தில் இதற்குப் பெயர் டே ஒகோ   (Zte Oko)

இத்தாலியில் இதற்குப் பெயர் மால் ஓச்சியோ  (Mal Occhio)

சார்டினாவில் இதற்குப் பெயர் ஒகு மாலு   (Ogu Malu)

கோர்ஸிகாவில் இதற்குப் பெயர் இன்னோச்சியாடுரா   (Innochiatura)

ஸ்பெயினில் இதற்குப் பெயர் மால் டி ஓஜோ   (Mal De Ojo)

பிரான்ஸில் இதற்குப் பெயர் மௌவாயிஸ் செய்ல்  (Mauvais Ceil)

நார்வேயில் இதற்குப் பெயர் ஸ்கோயர் டுஞ்ஜ்   (Skjoertunge)

டென்மார்க்கில் இதற்குப் பெயர் ஆண்ட் ஓஜே (Ondt Oje)

இங்கிலாந்தில் இதற்குப் பெயர் ஈவில் ஐ (Evil Eye)

அயர்லாந்திலும் ஸ்காட்லாந்திலும் இதற்குப் பெயர் இல் ஐ   (Ill Eye)

சிரியாவில் இன்று வரை இதற்குப் பெயர் அயினா பிஷா   (Aina Bisha)

பெர்சியாவில் இதற்குப் பெயர் ஆகாஷா  (aghasha)

ஆர்மீனியாவில் இதற்குப் பெயர் படேரெக்   (Paterrak)

இந்தியாவில் இதற்குப் பெயர் கோர சக்ஷு (Goram cakshu)

இப்படி உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் கெட்ட திருஷ்டிக்குத் தனிப்  பெயர் உண்டு. அவ்வளவு நம்பிக்கை.

கிரேக்க, ரோமானிய, ஹிந்து நூல்களில் இந்த கண் திருஷ்டி பற்றி நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. பைபிளில் ப்ராவெர்ப் 23:6-இல் கெட்ட திருஷ்டி உடையவனிடம் ரொட்டியை வாங்கிச் சாப்பிடாதே; அவனது திருஷ்டி பட்ட உணவையும் விரும்பாதே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

குரானிலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் கண் திருஷ்டி சொல்லப்படுகிறது.

ஹிந்துக்கள் குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடுவதை வெளியார் யாரும் பார்ப்பதை விரும்புவதில்லை!

கோணல் கண், கண்களில் பல முடிச்சுகள் இருந்தால் அவரைக் கண்டு விலகுவது எல்லோருக்கும் சகஜமான பழக்கம். குறிப்பாக அபாயகரமான தொழில்களான சுரங்கப் பணி, கடலில் மீன் பிடிக்கச் செல்லுதல் போன்றவற்றில் ஈடுபடுவோர் திருஷ்டி பற்றி நன்கு கவனிப்பர்.குறிப்பாகப் பெண்மணிகள் தங்கள் வீட்டு ஆண்கள் வெளியே செல்லும் போதோ அல்லது ஒரு காரியத்தை நன்கு முடித்து விட்டு வந்தாலோ திருஷ்டி பற்றிக் கவனிப்பர். திருஷ்டி சுற்றிப் போடுவர்.

திருஷ்டியிலிருந்து எப்படித் தப்புவது? முதல் வழி அப்படிப்பட்ட ஆள்களைப் பார்க்கவே பார்க்காதே என்பது தான். அடுத்த வழி சில தாயத்துகளை அணிவது தான்.

அரைஞாண் கயிற்றில் ஆரம்பித்து மணிக்கட்டு, புஜத்தின் மேல் பகுதியில் கயிறு கட்டுதல், கழுத்தில் கயிறில் தாயத்தை அணிவது என்று பல ரகங்களில் திருஷ்டியிலிருந்து தன்னைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயல்கின்றனர்.

லத்தீன் அமெரிக்காவில் கண் திருஷ்டிக்கு மால் டி ஓஜோ என்று பெயர். இதை நம்பாதவர்களே அங்கு இல்லை. ப்யூர்டோ ரிகோசில் பிறந்த குழந்தைகளுக்கு அஜாபச்சே (Azabache) என்ற அதிர்ஷ்டத்திற்கான தாயத்து தரப்படுகிறது.

திருஷ்டியை எதிர்கொள்ள சிறப்பான வண்ணம் நீலம் தான். இது  சுவர்க்கம் அல்லது இறைத்தன்மையைக் குறிக்கும். உள்ளிப்பூண்டை சில தேசத்தவர் பயன்படுத்துகின்றனர். உள்ளிப்பூண்டு என்று சொன்னாலேயே திருஷ்டி போய் விடுமாம்.

நமது ஊரில் மிளகாயைப் மரக்கால் படியில் வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவர். கடல் உப்பை (கல் உப்பு; உப்புப் பொடி அல்ல) வைத்து திருஷ்டி கழிப்பது அன்றாடப் பழக்கம். பூசணிக்காய் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

சிலருடைய வீடுகளில் எல்லையற்ற துன்பம் நேர்ந்தால் (திடீரென்று கல்லாக விழுதல் போன்றவை) உடனடியாக இந்த திருஷ்டியைப் போக்க அல்லது சாபத்தைப் போக்க மாந்திரீக வழிகளையும் நாடுவர்.

உலகில் தன்னை திருஷ்டியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளாத பிரபலங்களே இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா ஹனுமான் உருவத்தைத் தன்னுடன் எப்போதும் வைத்திருந்த செய்தியை நாம் அறிவோம். பேஷன் மாடலான கிம் கர்டாஷியான் கெட்ட திருஷ்டியைப் போக்கும் ப்ரேஸ்லெட், தலையணி போன்றவற்றை அணிந்து போஸ் கொடுப்பது வழக்கம். ஜிஜி ஹடிட் 2017இல் ‘ஐ லவ் ஷீ லைன்’ -ஐ திருஷ்டியிலிருந்து காத்துக் கொள்வதற்காக அறிமுகப்படுத்தினார்.

பிரபலங்கள் இதற்காகவே அறிமுகப் படுத்தும் கண் அணிகள், நெக்லேஸ், கீ-செய்ன் ஆகியவை சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன.

கிரேக்க நாகரிக இலக்கியத்தில் பொறாமையுடன் பார்க்கப்படும் பார்வை பொல்லாத பார்வை என்று குறிப்பிடப்படுகிறது. ‘பூரி நஜர்’ (தீய பார்வை) என்றும் இது பொதுவாகச் சொல்லப்படுகிறது. திருஷ்டி பற்றி இன்னும் கொஞ்சம் அலசுவோம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல இந்திய கணித மேதையான சீனிவாச ராமானுஜனால் உத்வேகம் பெற்ற கணித மேதை ஜப்பானியரான கென் ஓனோ.(Ken Ono). இவருக்கு வயது இப்போது 50.

இவரது தந்தையார் ஒரு கணித மேதை. தாயாரோ படித்து சாதித்தால் தான் உருப்படுவாய் என்று மகனைத் தூண்டிக் கொண்டே இருக்கும் ‘பெண் புலி’.

பிரபல விஞ்ஞானி ஓப்பன்ஹீமரின் அழைப்பின் பேரில் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு வந்தார் கென் ஒனோவின் தந்தை.

ஒனோவிற்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. தந்தை, தாயின் எதிர்பார்ப்புக்கு அவரால் 27 வருடங்கள் ஈடு கொடுக்க முடியவில்லை.

ஒருவழியாக கணிதத்தில் தேறி அமெரிக்காவில் ஒரு பேராசிரியராக ஆனார். அப்பொழுது தான் சீனிவாச ராமானுஜனைப் பற்றி அவர் தெரிந்து கொண்டார்.

ஆயிரக்கணக்கான சூத்திரங்களை ராமானுஜன் நோட்புக்குகளில் எழுதி வைத்திருந்தது அவரை பிரமிக்க வைத்தது. அவரைப் பற்றி நன்கு ஆராயலானார்.

அவரது சூத்திரங்களில் ஒன்றை ஒட்டித் தானும் அல்ஜிப்ரெய்க் நம்பர் தியரியில் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தார்.

சீனிவாச ராமானுஜனைப் புகழ்ந்து கொண்டே இருக்கும் ஒனோ அவரைப் பற்றிய திரைப்படமான ‘The Man Who Knew Infinity’ படத்திற்கும் கணித சம்பந்தமான ஆலோசகர் ஆனார். சீனிவாச ராமானுஜனுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அவரைப் பற்றிய ஒரு நூலையும் அமிர் அஜல் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் : My Search for Ramanujan: How I Learned to Count .

படிப்பே பிடிக்காத தானே ராமானுஜனால் உத்வேகம் பெற்று பெரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததால், “ராமானுஜனைப் பற்றி அறியுங்கள்; அவரிடமிருந்து யார் வேண்டுமானாலும் உத்வேகம் பெற்று அவரைப் போல் ஆகலாம்” என்று கென் ஒனோ எல்லோருக்கும் இன்று அறிவுரை கூறி வருகிறார்.

நமது கும்பகோணத்தைச் சேர்ந்த கணித மேதைக்கு இப்போது கடைசியாக வந்துள்ள புகழாரம் கென் ஓனோவினுடையது என்பதில் நமக்குப் பெருமை தானே!

***

 

STRANGE STORIES ABOUT RAMA’S SONS -THAI RAMAYANA-3 (Post No.5023)

STRANGE STORIES ABOUT RAMA’S SONS KUSA AND LAVA-THAI  RAMAYANA-3 (Post No.5023)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 18 May 2018

 

Time uploaded in London – 11-54 am (British Summer Time)

 

Post No. 5023

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Thai Ramayana ‘Ramakien’ differs with Valmiki Ramayana in the birth story of Kusa and Lava. They were the twin sons of Rama and Sita according to Valamiki. But ‘Ramakien’ of Thailand and Ananda Ramayana of India differ very much. It is an interesting animal story.

 

A son was born to Sita and he was named Mongkut. But her second son was created by a miracle by sage Vajmrga (Valmiki). One day Sita went into the forest to gather fruits after leaving her son Mongkut with the sage. She was enjoying nature and saw a family of monkeys. She told the monkey mothers to be careful with their babies otherwise they may fall from the trees. Monkey mothers laughed at her and said to her that they were better than Sita who left her child with the sage who closed his eyes for meditation. Sita was shocked to hear this and rushed back to the sage’s ashram and brought back her child.

 

In the meantime, sage opened his eyes after meditation and found the child was missing. Thinking that Sita would feel sad, he created another child by miracle. When Sita came back he explained what happened and advised her that the second son will be the playmate of her first son. He gave it the name Lava.

This Thai versions is somewhat similar to Ananda Ramayana:

It is in the Janmakanda section (Canto 4, verses 21-86).

Sita had only one son and he was named Kusa because sage Valmii sprinkled holy water on the baby with Kusa grass.  Rama came by Pushpaka Vimana (aeroplane) and did the birth rites with some brahmins and went back to Ayodhya by the Vimana. He told them not to reveal the news to anyone. Sita’s father Janaka also came but he stayed even after Rama left.

 

One day she went to the river to take bath and saw a monkey mother with five baby monkeys. She left her baby with the sage Valmiki. When she saw the mother monkey carrying five of its litter, she felt very guilty for not taking her baby. Sita rushed back to the hermitage of Valmiki and took her baby. At that time, Valmiki with his disciples went to the riverside. When Valmiki came back to his hermitage, he was surprised to see Sita’s son missing. So he created a double of her first son. He gave the second son to Sita and named him Lava, because he was created with Lava/wool. Both the children grew up together at the hermitage and their parents showered love and affection on them.

 

Kathasarit sagara, slightly differed from this version and said Lava was her first son and Kusa was the second son who was created by Valmiki’s miraculous power.

 

One can understand the deep impact of Ramayana  on a vast geographical area and long span of  time. Valmiki’s original version was distorted here and there in course of 2000 or 3000 years. Ramayana is in Buddhist and Jain literature as well.

 

Sita’s ‘infidelity’!

Hindus never like one woman staying with another man who is not her brother or father. So there are lot of stories about the infidelity of Sita.

 

In Thai Ramayana Adul, a demoness daughter of Surpanakha wanted to take revenge upon Rama, because his brother Lakshmana cut off Surpankaha’s nose. Adul was working as a servant maid in the palace of Rama under a different disguise. She asked  Sita to draw the figure of Ravana and when she drew the picture out of fun, Rama saw that. The demoness used that opportunity to betray Sita and Rama wanted to kill his wife Sita. He assigned the task of killing Sita deep inside the forest to Lakshmana. And Lakshmana took her to the jungle, but his mind didn’t allow him to commit the ghostly act. So he showed her the hermitage of Valmiki and took back the heart of a deer and showed it to Rama as a proof of killing Sita. Rama came to know that Sita was alive after a very long time. In the original Ramayana of Valmiki she was simply banished from the country because a washer man suspected her chastity.

 

Tribal Folk song!

Ramayana is the only epic in the world which has penetrated the deepest parts on earth in the oldest time. Even tribal communities have different versions of Ramayana episodes in their folk songs. That shows Ramayana might have happened several thousand years ago.  The folk song in the tribal Bundelghund region says when Sita visited the forest she drew a portrait of Ravana at the behest of her friends. They insisted her to draw the figure to see How Ravana looked like. This happened long after the death of Ravana and Sita’s joining her husband. Sita did it with the cowdung.  As she was making the figure up to waist, there appeared Rama and suspected Sita’s fidelity. Then he ordered her expulsion.

 

There are over 3000 versions or more of Ramayana. Every time I go to British Library in London, I see a new Ramayana episode or many episodes in very old Tamil Books. In 2000 year old Sangam Tamil literature there are two episodes which are not found anywhere else in the world. In the Alvar/ Tamil Vaishnavite saints’ poems we see new episodes about squirrels helping in the bridge work. In the Pali and Prakirit language literature we see newer versions.

 

The most attractive story of Rama and Sita stand for the purest qualities and virtues on earth. No other literature of the ancient world has made such an impact anywhere on earth. After the founding of ISKCON and other organisations, story of Rama and Krishna and the Mantra ‘Hare Rama’ have been echoing in the nook and corner of the world.

Please read also my articles on Vivekananda’s lecture on Sita and Sangam literature poems on Rama and Sita.

Long Live Rama’s Name!

–Subham–

கடலுக்கு அடியில் ராவணன் உயிர்!! தாய்லாந்து ராமாயணம்-2 (Post No.5022)

கடலுக்கு அடியில் ராவணன் உயிர்!! தாய்லாந்து ராமாயணம்-2 (Post No.5022)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 18 May 2018

 

Time uploaded in London – 7-49 AM (British Summer Time)

 

Post No. 5022

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தாய்லாந்து ராமாயணமான ராம்கீயனில் பல சுவையான, விநோதமான செய்திகள் இருப்பதை நேற்று முதல் பகுதியில் சொன்னேன். இதோ பல விசித்திர, அதிசய ராமாயணக் கதைகள்.

 

வால்மீகி ராமாயணம் காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி ராமாயணம் அப்படிப் பிரிக்கப்படவில்லை.

 

உலகின் முதல் அரசன் அநோமதன்

முன்னொரு காலத்தில் சக்ரவாள மலையின் மீது ஹிரன்யாக்ஷன்

வசித்தான். அவன் தேவர்களைத் துன்புறுத்தவே அவர்கள் ஈஸ்வரனை அணுகி முறையிட்டனர். ஈஸ்வரன் சொற்படி நாராயணன் அந்த ஹிரன்யாக்ஷனை அழித்தார். அவர் திரும்பி வருகையில் பாற்கடலில் ஒரு அழகிய தாமரை மலரையும்     அதில் ஒரு குழந்தையையும் கண்டார். உடனே நாராயணன் அக் குழந்தையை எடுத்து ‘க்ரைலாஸம்’ சென்று, ஈஸ்வரனிடம் அக்குழந்தையை அளித்தார். அவர் அக்குழந்தைக்கு அநோமடன் என்று பெயரிட்டு  அவரை உலகின் முதல் அரசனாக்கி ஜம்பூத்வீபத்தில் உள்ள அயோத்தியில் ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். இறைவன் சொற்படி இந்திரன், அந்த அயோத்தி மாநகரை உருவாக்கினான்.

விபீஷணன் மகள் பெஞ்சகாய்- அனுமன் காதல் திருமணம்

 

ராவணன், பெஞ்சகாய் என்ற ராக்ஷஸியை அழைத்து நீ சீதை போல உரு எடுத்து, இறந்த சடலம் போல ஆற்றில் மிதந்து போ. ராமன் அதைப்

பார்த்து மயங்கி கதறட்டும் என்று கட்டளை இட்டான். அவளும் அப்படியே செல்லுகையில், ராமன் காலைக் குளியலுக்கு நதிக்கு வருகையில் அதைக் கண்டு துக்கம் அடை ந்தான்.

 

அனுமனும் லக்ஷ்மணனும் அடுத்து வந்தனர். லக்ஷ்மணனும் அந்த சீதையின் சடலத்தைக் கண்டு கதறினான். ஆனால் அனுமனோ இது போலியா அசலா என்று ஐயமுற்று அந்த சடலத்தை சிதைத் தீயில் வைத்தான். பெஞ்சகாய் கதறியவாறு வானத்தில் தாவிக் குதித்தாள். சுக்ரீவன் அவளை சாட்டையால் அடித்து நீ யார்? என்று வினவ, அவளும் உண்மையைச் சொன்னாள். அவள் விபீஷணனின் தங்கை என்பதை அறிந்து ராமன் அவளை மன்னித்து அருளினன்.

 

அனுமனை அழைத்து இவளை பத்திரமாக இலங்கை வரை கொண்டு போய் விடு என்றனன். அனுமனுக்கும் பெஞ்சகாய்க்கும் இடையே காதல் மலர்ந்தது; அதுவும் கனிந்தது. ‘அசுரபாத’ என்ற பிள்ளையும் பிறந்தது. இது அனுமனின் முதல் திருமணம்; முதல் பிள்ளை.

 

இந்தியாவில் ராமாயணத்தில் ஹனுமார் நித்திய பிரம்மாச்சாரி. தாய்லாந்து மக்கள், ராமாயணத்தில் அவர்களுடைய கலாச்சாரத்தைக் கலப்பதற்ககாக ஹனுமாரை காதல் மன்னன் ஆக்கிவிட்டனர். அவருக்கு மேலும் பல மனைவியர் உண்டு! கதை வளர்கிறது.

 

ராவணன் உயிர் எங்கே?

ராமன் எத்தனையோ அம்புகளை எய்தும் ராவணன் மாயவில்லை. அப்பொழுது விபீஷணனன் ஒரு உண்மையைச் சொன்னான்.

 

மனிதனின் உடல் வேறு; உயிர் வேறு; உயிர் வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்; அதை ஒருவர் அழிக்கும் வரை  ஒருவனுடைய உயிர் போகாது என்ற விஷயம் ராமகீயனின் பல இடங்களில் சொல்லப்படுகிறது.

 

ராவணனுடைய குரு  கோ புத்ரன்; அவனிடம்தான் ராவணனின் உயிர் இருக்கும் பேழை (கலசம்) பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விபீஷணன் சொன்னான். உடனே ராமன், அனுமனை அழைத்து “சென்று வா மகனே; வென்று வா” என்று அனுப்பினன்.

 

ஹனுமார், அங்கதனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கோபுத்ரன் ஆஸ்ரமத்துக்குச் சென்றான். “இதோ பார்,  எங்களுக்கு ராமனைப் பிடிக்கவில்லை. நாங்கள் ராவணன் தரப்புக்கு கட்சி மாற வந்துள்ளோம். எங்களை அவனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்து என்றான். வெளுத்தை எல்லாம் பால் எனும் நம்பும் கோபுத்ரன் அவ்விருவரையும் இலங்கை வாயில் வரை அழைத்துச் சென்றான்.

ஒருவேளை ராவணன் உயிரையும்   இதயத்தையும் வைத்திருக்கும் பேழையை ராமன் திருடக்கூடும் என்று ஹனுமன் எச்சரித்து இருந்ததால் கோபுத்ரன் அதையும் கையில் எடுத்துக்கொண்டே சென்றான். இலங்கை வாயிலை அடைந்தவுடன் திடீரென்று ஒரு விஷயம்  நினைவுக்கு வந்தது. வாயிலைக் கடந்தால் கிண்ணத்தில்/ பேழையில் உள்ள உயிர் ராவணனிடமே பறந்து போய்விடும் என்று!

 

ஹனுமார் சொன்னார்

“குறை ஒன்றுமில்லை கோபுத்ரா. அங்கதனிடம் அதைக் கொடுத்து வாயிலுக்கு வெளியே நிற்கச் சொல்லுவோம்” என்றான். அவருடைய சதித் திட்டம் பலித்தது. அங்கதன் வாயிலி நிற்க இருவரும் இலங்கைக்குள் நுழைந்தனர். திடீரென்று ஹனுமார் திரும்பிச் சென்றார். அங்கதனை எவரேனும் சந்தேகப்பட்டு கொன்று விடலாம் ஆகையால் பாதுகாப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றார். கோபுத்ரனும் அவரை நம்பினார்.

 

 

அங்கதனிடம் திரும்பிவந்த ஹனுமார், ராவணனின் உயிர் போல ஒரு போலி உயிரை ( இதயத்தை) உருவாக்கி பேழையில் வைத்துவிட்டு அசல் உயிரை அங்கதனிடம் கொடுத்து இதை கடலுக்கு அடியில் புதைத்து விடு என்றார். அங்கதனுமவ்வாறு செய்யவே ராவணனை ராமன் எளிதாக வீழ்த்த முடிந்தது.

சீதை யார்?

ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த பெண்ணே சீதை என்றும் சிறு வயதிலேயே அவளைக் காட்டில் விட்டதாகவும், ‘தாய்’ மக்கள் நம்புகின்றனர். அந்தக் குழந்தையை ஜனகன் எடுத்து வளர்க்கவே அவள் பெரியவளாகித் திருமணம் முடித்து ராமனுடன் வாழ்கையில் ராவணன் அவளைத் தூக்கிவந்தான் என்றும் ‘தாய்’ மக்கள் கதை சொல்லுவர். அவளை ராவணன் தொட முயன்றபோது ராவணன் உடல் எரியவே அவளைத் தொடாமல் விட்டனன் என்பதும் கதை.

 

இப்படி ராமாயணத்தைத் தங்கள் கலாச்சார நம்பிக்கைக்கு ஏற்ப தாய் மக்கள் கதை கட்டிவிட்டனர்.

 

அடுத்த பகுதியில் மேலும் சில சுவையான ராமயண சம்பவங்களைக் காண்போம்.

 

தொடரும்……………..

 

— சுபம்—

வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -2 (Post No.5021)

Written by S NAGARAJAN

 

Date: 18 MAY 2018

 

Time uploaded in London –  6-58 AM   (British Summer Time)

 

Post No. 5021

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒசை இன்பம் கொண்ட வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -2

 

.நாகராஜன்

 

3

1807ஆம் ஆண்டு முதல் முதலாக இந்தக் கவிதை அச்சிடப்பட்டது. ஆனால் 1815க்குள் இந்த அழகிய தனது கவிதையில் வோர்ட்ஸ்வொர்த் ஏராளமான மாற்றங்களைச் செய்தார். கருத்து நயம், ஓசை இன்பம் கொண்ட இந்த மாறுதல்களால் கவிதையின் மெருகு அற்புதமாகக் கூடியது.

 

அவர் செய்த மாறுதல்களைப் பார்ப்போம்.

 

நான்காம்  வரியில் இருந்த dancing என்ற வார்த்தையை golden  என்று அவர் மாற்றினார்.

 

A host, of dancing daffodils;

என்பது

 

A host, of golden daffodils;  என்று மாறியது.

அடுத்து ஐந்தாம்  வரியில் இருந்த along என்ற வார்த்தையை beside  என்று அவர் மாற்றினார்.

 

Along the lake, beneath the trees

என்பது

 

Beside the lake, beneath the trees என்று மாறியது.

 

அடுத்து ஆறாம்  வரியில் இருந்த ten thousand என்ற வார்த்தையை fluttering and என்று அவர் மாற்றினார்.

Ten thousand dancing in the breeze. என்பது

Fluttering and dancing in the breeze. என்று மாறியது.

 

 

அடுத்து பதினாறாம்  வரியில் இருந்த laughing என்ற வார்த்தையை jocund என்று அவர் மாற்றினார்.

இரண்டாவது செய்யுளாக – Stanzaவாக – உள்ள – வரிகள் 7 முதல் 12 முடிய உள்ள செய்யுள் புதிதாகச் சேர்க்கப்பட்டது.

 

கடகடவென செய்யுளை வேகமாக தன்னிச்சையாக இயற்றி வந்த கவிஞர் They flash upon that inward eye

 

Which is the bliss of solitude;

 

என்ற  21 மற்றும் 22 வரிகளை இயற்ற முடியாமல் தடுமாறினார்.

அவரது மனைவி மேரி உதவிக்கு வரவே அந்த வரிகள் பூர்த்தி செய்யப்பட்டது.

 

இப்போது முதலில் இருந்த கவிதையையும் மாற்றப்பட்ட கவிதையையும் படித்துப் பார்க்கலாம்.

 

முதலில் இருந்த கவிதை:

 

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of dancing daffodils;

Along the lake, beneath the trees,

Ten thousand dancing in the breeze. (வரிகள் 1 முதல் 6)

 

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a laughing company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought: (வரிகள் 13 முதல் 18)

 

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.  (வரிகள் 19 முதல் 24)

 

மாற்றப்பட்ட கவிதை அதாவது இப்போது நாம் ரஸிப்பது :

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of golden daffodils;

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze. (வரிகள் 1 முதல் 6)

 

Continuous as the stars that shine

And twinkle on the milky way,

They stretched in never-ending line

Along the margin of a bay:

Ten thousand saw I at a glance,

Tossing their heads in sprightly dance. (வரிகள் 7 முதல் 12)

 

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a jocund company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought: (வரிகள் 13 முதல் 18)

 

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.  (வரிகள் 19 முதல் 24)

 

ஒரு அற்புதமான கவிதை உருவாவது என்பது சாதாரண விஷயமல்ல. அதை Daffodils நமக்கு உணர்த்துகிறது.

***                       முற்றும்

 

RAVANA’S SOUL IN A RECEPTACLE; STRANGE THAI RAMAYANA -2 (Post No.5020)

RAVANA’S SOUL IN A RECEPTACLE; STRANGE THAI RAMAYANA -2 (Post No.5020)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 May 2018

 

Time uploaded in London – 16-14 (British Summer Time)

 

Post No. 5020

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

I posted the first part yesterday under the title

SITA DAUGHTER OF RAVANA! STRANGE THAI RAMAYANA-1

 

Episode of Ravana’s Soul/Heart

Ramakien repeats one strange thing in more than one place- that is the soul of a person is kept away from his body. Ravana’s soul was also kept in a receptacle separately and was left with Goputra. When Rama’s weapons did not work with Ravana Vibhishana revealed the secret of Ravana’s soul.

Goputra was his preceptor. Hanuman was given the task of finding Ravana’s soul or heart and crush it. So he went with Angada to the ASHRAMA of Goputra and told him that he was fed up with Rama and so he wanted to join the army of Ravana.  Goputra believed the words of Hanuman like a simpleton. Taking both of them, Goputra went to Ravana’s place with the receptacle. Hanuman and Angada accompanied with some secret plan. When they reached the palace gate Goputra remembered if they went inside the palace the soul will fly back to Ravana. So he left it with Angada. Hanauman suddenly came back to Angada under the excuse of giving him some safety first instructions. At that time Hanuman created a fake heart/ soul and took the real soul and asked Angada to bury it under the sea. Then Rama easily killed Ravana.

Episode of Mahipala Debasura

Mahipala Debasura was Ravana’s best friend. Without knowing Ravana’s death, he came to Ravana’s palace to see him. Having heard about Ravana’s death, he became angry and laid a siege around Lanka. At that time, Vibhishana was ruling Lanka. Rama realising that Vibishana may not have enough strength to tackle all the troubles, sent an arrow to Vibhisana every week. Using that arrow Vibhishana sent an SOS message to Rama. He sent Hanuman to help Vibishana. Since Hanuman was ruling nearby kingdom Nabapuri with the name Phya Anujit came to Lanka and fought with Mahipala. When Hanuman tore the body of Mahipala it united into one. Then Vibishana revealed him the secret of killing him. At his behest Hanuman tore the chest of Mahipala and he died.

Episode of Insurrection in Lanka

After Ravana’s death Mandodari became one of the queens of Vibishana. At that time she was already pregnant and gave birth to a son. He was named Varanisura. His governor told him the story of his father Ravana and Varanisura decided to take revenge upon Vibhishana. His governor gave him the new name Bainasuri vangsh. With the intention of taking revenge he sought the help of Chakravarti, the ruler of Malivan. He was Ravana’s friend. They invaded Lanka and put Vibishana behind the bars. Hanuman with his son Ashurapad came to Kishkinda and got the help of Sugreeva. They went to Ayodhya to get the help of Rama. All of them marched to Lanka, killed Baina surivangsh and released Vibhishana.

 

If we compare other episodes of Valmiki Ramayana with Ramakiyan, there are only minor differences in the Thai Ramakiyan.

Who is Sita?

Sita was the daughter of Mandodari and Ravana, but abandoned in a forest as soon as she was born. King of Mithila found her and raised her. Ravana came and abducted her without knowing it was his daughter. When he tried to touch her his skin burnt and then couldn’t touch her. So there are so many versions of Ramayana in Ramakien as well as palatial murals in Bangkok and other places in Thailand.

 

There are some differences in the birth of Rama’s sons and Sita’s infidelity etc. It is an unending story. Beautiful sculptures and murals of Ramayana are in Bangkok and other places. We will look at them separately.

to be continued……………

–Subham–

 

‘சீதைக்கு ராமன் சித்தப்பா’! தாய்லாந்து ராமாயணம்-1 (Post No.5019)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 May 2018

 

Time uploaded in London – 9-00 AM (British Summer Time)

 

Post No. 5019

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

விடிய விடிய ராமாயணம் கேட்டானாம்; என்னடா கதை? என்று கேட்டபொழுது சொன்னானாம் ‘சீதைக்கு ராமன் சித்தப்பா’ – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது தாய்லாந்தைப் பொறுத்த மட்டில் மிக மிக உண்மை. ராமாயணத்தைத் தலை கீழாக மாற்றிவிட்டார்கள்.

கேட்கக் கேட்க வேடிக்கையாக இருக்கும்; ராமபக்தர்களுக்கோ அபச்சாரமாகத் தோன்றும்; நீண்ட கட்டுரை; ஆகையால் முதலில் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டுகளில் (in Bullet Points) தருகிறேன்.

1.சீதாதேவி, ராவணனின் மகள்; வேறு ஒரு இடத்தில் வளர்ந்ததால், தெரியாமல் தூக்கி வந்து விட்டார்.

 

2.அனுமனுக்கு குறைந்தது இரண்டு மனைவிகள்; இரண்டு மகன்கள்! அவர் குரங்கு மனம், குரங்கு புத்தி உடையவர். பிரம்மச்சாரி அல்ல.

 

3.ராமாயணத்தில் பலப்பல புதுக்கதைகள்; இந்தியாவில் அந்தப் பெயர்களையே கேள்விப்பட்டதில்லை; கம்பனும் வால்மீகியும் சொல்லாத கதைகள்.

4.ராமன் பெயர், சீதை பெயர், அனுமன் பெயர் தவிர மற்ற எல்லாப் பெயர்களும் கண்டபடி மாற்றம். ராமாயணம் படிக்காதவர்கள் பார்த்தால், இது ஏதோ வேறு ஒரு கதை என்று மலைப்பர்.

5.இந்தியாவில் உள்ள ராமாயணம் பற்றியோ அதை எழுதிய வால்மீகி பற்றியோ தெரியாது.

6.ராவணனையும் விடப் பெரிய ராக்ஷஸன் உண்டு. அவனுக்கு ஆயிரம் தலைகள்!

7.ராமாயணம் என்பது தாய்லாந்தில் நடந்தது!

ஏன் இத்தனை கோளாறுகள்?

 

தாய்லாந்து மக்களின் வாழ்வில், கலையில், பண்பாட்டில், வரலாற்றில் ராமாயணம் இரண்டறக் கலந்துவிட்டது. ஆகையால் அது வெளி நாட்டில் நடந்ததாகச் சொன்னால் மக்கள் மனம் ஏற்காது. மேலும் தாய்லாந்தின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப ராமாயணம் திரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ‘’தாய்’’ மக்கள் அது இங்கேதான் நடந்தது என்று நம்புகின்றனர் என்று தாய்லாந்து மொழி ராமாயணமான ‘ராம்கியன்’ அறிஞர் மனீக் (மாணிக்க) ஜும்சாய் கூறுகிறார்.

உண்மை என்ன?

 

தாய்லாந்தில் இருந்த தாய்லாந்து மொழி ராமாயணத்தின் பெயர் ராம்கீயன் ( ராம க்யான அல்லது ராம கீர்த்தி).இது 200 ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் அழிந்து விட்டது. பின்னர் முதலாவது ராமா, இரண்டாவது ராமா என்ற மன்னர்களும் தக்ஷின் என்ற கவிஞர் முதலியோரும் புதிய ராமாயணத்தை யாத்தனர். அதில் பல கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவிட்டனர். மக்களுக்கு ரசனையாக தாய்லாந்து மக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளைப் புகுத்தினர். ஆனால் ராமனையோ சீதையையோ பழிக்க வில்லை போற்றித் துதி பாடினர்.

 

 

இதைத் தமிழ்நாட்டிலுள்ள கோயில் தல புராணங்களுக்கு ஒப்பிடலாம். நமக்குத் தெரிந்த புராணக்  கதைகளை, இதிஹாசக் கதைகளை உள்ளூரில் நடந்ததாகக் கூறி அந்த ஊர் சாமியின் புகழை ஏத்தி விடுகிறோம்.

 

மேலும் வேத காலத்தில் இதிஹாச காலத்தில் வாழ்ந்த ரிஷி முனிவர்களை அங்கு வந்து சாப விமோசனம் பெற்றதாகக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் கடவுளையோ அந்த சாது சந்யாசிகளையோ பழிக்காமல் அவர்கள் புகழை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம்.

 

மேலும் பல உள்ளூர்க் கதைகளையும் நம்பிக்கைகளையும் பழையதுடன் கலந்து சுவைபடக்  கூறுகிறோம். நேற்று தோன்றிய முஸ்லீம், கிறிஸ்தர்களைக் கூட இணத்து சில புதிய கதைகளை உண்டாக்குகிறோம்; உண்மையில் அவர்கள் அண்மைக்  காலத்தில் வாழ்ந்த பக்தர்கள். அவ்வளவுதான்.

 

இப்படி நமது நாட்டிலேயே நடக்குமானால் சில ஆயிரம் மைல்கள் தள்ளியுள்ள தாய்லாந்தில் கதைப்போக்கு மாறுவதில் வியப்பொன்றுமில்லை. அது மட்டுமல்ல அங்கு இப்பொழுது மூன்று      வேறு வேறு பாட பேதங்கள் உள்ளன. கோவில் சிலைகளில் வேறு புதிய கதைகள்!

சிலைகள், ஓவியங்கள் முதலியன அவரவர் கற்பனைக்கேற்ப புனையப்பட்டுள்ளன.

இதோ தாறுமாறாக திரிக்கப்பட்ட ராமாயண கதாபாத்திரஙகள்:-

குச்சி= கூனி மந்தரை (குப்ஜ/கூன் முதுகு;ஸம்ஸ்க்ருதம்)

ஸ்வாஹா= அஞ்சனா

கல்லாசனா= அஹல்யா (கல் என்ற தமிழ் சொல்)

காகனாசுரா= தாடகா

கூகன்= வேடன் குகன்

மங்குட்= லவன் (ராமன் புதல்வன்)

வஜ்ம்ருகா = வால்மீகி

சத்ருட் = சத்ருக்னன்

க்ருட்= கருடன்

லக்= லக்ஷ்மணன்/ இலக்குவன்

லாஸ்டியன்= புலஸ்த்ய

பிபெக்= விபீஷணன்

 

நங் மோண்டோ= மண்டோதரி

தத்சகன்= தச கண்டன்/ ராவணன்

பாலி= வாலி

சுக்ரீப்= சுக்ரீவன்

நங் சீடா = சீதா தேவி

ப்ரம் ராம் = ராமன்

கும்பகன் = கும்ப கர்ணன்

இந்ததரசிட்= இந்திரஜித்

புதிய பெயர்கள்

 

பெஞ்சகாய்= வஞ்சகி???

மைராப் = மயில் ராவணன்??

மாலிவக்க ப்ரஹ்மா= பிரம்மா

சுவண்ணமச்சா= ஸ்வர்ண மத்ஸ்ய= தங்க மீன்

மச்சானு= மத்ஸ்யன் (மீனன்)

மஹாபால் = மஹீபாலன்??? (மன்னன்)

தேபாஸுரா = தேவாசுர (தேவர்கள்+ அஸுரர்கள்

உன்ராஜ் = ஊன ராஜன் ( நொண்டி ராஜா?)

 

இனி அனுமனின் இரண்டு மனைவி, மயில் ராவணன் , மாண்டோதரி மகள் சீதை முதலிய கதைகளைக் காண்போம்.

 

தொடரும்…………………………….

 

–சுபம்–