புத்த மத அதிசயம்! தண்ணீர் மீது நடந்தான் அரசன்!! (Post No.5039)

WRITTEN by London Swaminathan 

Date: 23 May 2018

Time uploaded in London – 17-28 (British Summer Time)

Post No. 5039

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
 

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘அங்குத்த நிகாய’ என்ற புத்த மத நூலுக்கு புத்தகோஷர் எழுதிய பாஷ்யத்தில் பின்வரும் சம்பவத்தை விவரிக்கிறார்:

 

கப்பினா என்ற அரசன் 1000 மந்திரிகளுடன் கங்கைக் கரைக்குச் சென்றான்.

 

(இந்துக்கள் 60,000 என்பதை பயன்படுத்துவது போல பௌத்தர்கள் 500 அல்லது 1000 என்ற எண்ணைப் பயன்படுத்துவர். பொருள்= அதிகமான)

 

கங்கை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மன்னன் சொல்கிறான்: படகுகள் செய்ய நம்மிடம் அடிமை வேலை ஆட்களோ நம்முடைய சேவகர்களோ இல்லை. ஆனால் வானம் முதல் பூமி வரை புகழும், அருளும் பரப்பிய நம்  குருநாதர் உண்மையிலேயே ஞானம் பெற்ற புத்தராக இருப்பாரானால் என்னுடைய குதிரைகளின் குளம்புகளில் கூடத் தண்ணீர் படாமல் இருக்கட்டும். இதைச் சொல்லிவிட்டு மன்னன், தனது குதிரைகளை ஆற்றின் மீது நடக்கவிட்டான். குதிரைகளின் காலில் ஒரு துளி கூடத் தண்ணீர் படவில்லை மறு கரைக்குச் சென்றனர்.

 

நெடுந்தொலைவு சென்றனர். மீண்டும் ஒரு ஆறு வந்தது. அதுவோ ஆழமான நதி. ஆயினும் முன்னர் சொன்ன ஒரு சொல்லை வைத்துக் கொண்டே துணிச்ச்சலாக குதிரைகளை விட்டனர். அவை நனையாமல் ஆற்றின் மீது நடந்து சென்றன. கடைசியாக சந்திரபாகா என்ற பெரிய நதியை அடைந்தனர். அங்கும் புத்தர் பெயர் சொல்லி எளிதில் நதி மீது நடந்தனர். இறுதியில் மன்னன்   புத்தர் காலடியில் சரண் புகுந்தான்.

அவனது மஹாராணி அநோஜாவும் இச்செய்தியைக் கேட்டாள். அவள் 1000 ரதங்களுடன் புறப்பட்டாள். கங்கை நதிப் பிரவாஹத்தைக் கண்டவுடன் தன் கணவன் செய்தது போலவே புத்தர் உண்மையான குருவானால் எனக்கும் வழி திறக்கட்டும் என்றாள். அப்படியே நிகழ்ந்தது.

 

ஆக ரிக் வேதத்தில் துவங்கி பைபிளின் புதிய ஏற்பாடான பீட்டர் சம்பவம் வரை இந்து, சமண, பௌத்தர்கள் ‘நீரின் மேல் நடந்த அற்புதம்’ உள்ளது (விவரங்களை முதல் இரண்டு கட்டுரைகளில் காண்க)

 

இன்னொரு அற்புதமும் புத்தர் கதையில் இணைக்கப்பட்டுள்ளது. மன்னன் கப்பினாவும், மஹா ராணி அநோஜாவும் புத்தர் பக்கத்தில் வந்து நின்ற போது ஒருவரை ஒருவர் காண முடியாதபடி புத்தர் செய்துவிட்டாராம். ஏனெனில்

காதல் மலர்ந்து விடும்; காமம் பரவிவிடும் என்று.

 

இருவரும் பௌத்த மதத்தைத் தழுவிய பின்னர் அந்த மாயத் திரையை புத்தர் விலக்கி விட்டாரம். அதாவது ஒருவரை ஒருவர் கண்டனர். ஆனால் காமம் மலரவில்லை.

 

இதே போல மஹாவம்ச பாஷ்யத்திலும் உளது. இவை எல்லாம் ரிக்வேத துதியின் எதிரொலி என்றால் மிகை ஆகாது.

 

திலீபன் என்ற ரகுகுல மன்னன் நீரின் மீது சென்ற போது அவன் தேர் தண்ணீரில் மூழ்கவிலை என்று மஹாபாரதம் பகரும்.

 

 

 

இதே போல யசா என்பவர் புத்தரிடம் ஓடிச் சென்றவுடன் அவனுடைய அம்மாவுக்கு வருத்தமாம; கணவனை விரட்டி மகனக்கூட்டி வர அனுப்பினாள் புத்தரிடம் அவர் போனார். என் மகன் இங்கே வந்தானா? என்று கேட்டதற்கு புத்தர் ஈரெட்டாக,  மழுப்பலாகப் பதில் தந்தார்; யசனை கண்ணுக்குத் தெரியாதபடி மறையச் செய்து விடுகிறார்.

 

 

அவனது அப்பாவுக்கு ஞான உபதேசம் செய்து மதம் மாற்றிய பின்னர் கண்ணுக்குத் தெரியாமல் வைத்திருந்த யசனக் காட்டுகிறார். யசனைத் தாயின் துயரத்தைத் துடைக்க த்நதை அனுப்பிய காலையில் புத்தரும் அவஓடு சென்று யசனின் தாயார், மனைவி மகள் ஆகியோரையும் மதம் மாற்றுகிறார்.

 

இப்படிப் பல கதைகள் பௌத்த நூல்களில்!! புத்தரே நீரின் மீது நடந்ததாகவும் கடலின் மீது பறந்து இலங்கைக்கு வந்ததாகவும் சில கதைகள் உண்டு. ஏசு பற்றியும் இப்படிப் பல கதைகள் உண்டு.

–சுபம்–

ஈற்றடி இங்கே! முதலடி எங்கே? சொல்லுடா, தமிழா! (Post No.5038)

WRITTEN by London Swaminathan 

Date: 23 May 2018

Time uploaded in London – 16-05 (British Summer Time)

Post No. 5038

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழா, திருக்குறள் , திருக்குறள் என்று வாய் கிழியக் கத்துகிறாயே! அந்த உலகப் புகழ் பெற்ற நூல் உனக்குத் தெரியுமா? நீயே உன்னை ஆத்ம சோதனை செய்து கொள். இதோ பத்துக் குறள்கள். முதலடி சொல்லு பார்ப்போம்:

1.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

 

2.அன்பு ஈனும்  ஆர்வம் உடைமை அது ஈனும்

 

 

3.வறியார்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

 

4.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

 

 

5.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

 

6.கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

 

7.அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

 

8.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

 

9.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

 

10.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

 

 

11.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 

12.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

 

13.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

 

14.ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

 

15.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

 

16.கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

 

 

விடைகள்

 

1.வேண்டாமை வேண்ட வரும்

 

  1. நண்பென்னும் நாடாச் சிறப்பு

 

  1. குறியெதிர்ப்பை நீர துரைத்து

 

  1. தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று

 

 

  1. புன்கண்நீர் பூசல் தரும்
  2. தாளை வணங்காத் தலை

 

  1. தீயுழி உய்த்துவிடும் –

 

  1. சுற்றமாச் சூழ்ந்து விடும்

 

 

  1. கோல்நோக்கி வாழும் குடி

 

10.நாவினாற் சுட்ட வடு

 

  1. செய்நன்றி கொன்ற மகற்கு

 

  1. சான்றோன் எனக்கேட்ட தாய்

 

  1. தெய்வத்துள் வைக்கப்படும்

 

  1. வேந்தனும் வேந்து கெடும்

 

  1. செல்வர்க்கே செல்வம் தகைத்து

 

  1. களை கட்டதனோடு நேர்

–Subham–

பாரதியார் பற்றிய நூல்கள் – 49 (Post No.5037)

Written by S NAGARAJAN

 

Date: 23 MAY 2018

 

Time uploaded in London –  5-43 AM   (British Summer Time)

 

Post No. 5037

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 49

க.கைலாசபதி அவர்களின் ‘இரு மகா கவிகள்

 

ச.நாகராஜன்

pictures from Taitini Das are used;thanks. 

1

பாரதி ஆர்வலர் .கைலாசபதி அவர்கள் மகாகவி பாரதியாரையும் வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பற்றியும் ஒப்பிட்டு எழுதியுள்ள நூல் இது. 114 பக்கங்கள் கொண்ட இந்த நூல் என்சிபிஎச் பிரைவேட் லிமிடெட், சென்னை -2 பதிப்பகத்தாரால் செப்டம்பர் 1962ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

மிக அழகாகவும், தெளிவாகவும் இரு கவிஞர்களைப் பற்றிய முக்கிய விஷயங்களை பத்து அத்தியாயங்களில் தருகிறார் நூலாசிரியர்.

 

Taitinidas Dance Troupe

2

இரவீந்திரநாத் தாகூரைப் பற்றி மகாகவி பாரதியார் எழுதியுள்ள இந்தக் குறிப்புடன் நூல் ஆரம்பிக்கிறது:

கீர்த்தியடைந்தால் மஹான் ரவீந்திரரைப் போலே அடைய வேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுக்களோ வங்க பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புகளைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத் தான் இந்தக் கீர்த்தி.

தாகூர் இறப்பதற்கு இருபது ஆண்டுகள் முன்னதாகவே இறந்தவர் பாரதியார். அவரை விட இருபத்தோரு ஆண்டுகள் இளையவர்.

இருவரது கவிதைகளின் ஆழத்தையும், கவிஞர்களின் பார்வையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளையும் அலசி ஆராய்கிறது இந்த நூல்.

3

ஒரு முக்கிய நிகழ்ச்சியை இந்த நூல் இரண்டாம் அத்தியாயத்தில் பதிவு செய்கிறது. அது வருமாறு:

மகாகவி பாரதியாருடைய சரிதையைத் தமிழில் எழுதியவர்களில் ஒருவரான சுத்தானந்த பாரதியாரும், ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர் பி.மகாதேவனும்  ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளனர். பாரதியார் இரவீந்திரநாத் தாகூருடன் கவிதைப் போட்டி நடத்த விரும்பினார் என்பதைக் காட்டும் அந்தச் சம்பவத்தைச் சுத்தானந்தர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

பாரதி : அப்பா! இப்போது டாகூர் எங்கிருக்கிறார்?

சிஷ்யன் : மதுரையில்.

பாரதி : உடனே புறப்படு. சலோ மதுரை.அவனை ஒரு கை பார்க்கிறேன்.

சிஷ்யன் : நாம் போவதற்குள் டாகூர் சென்று விட்டால்..?

பாரதி : அட அபசகுனமே! நமது தமிழ்நாட்டுக்கு டாகூர் வந்து நம்மைக் காணாமல் செல்லுவதா?

சிஷ்யன் : விலாசம் தெரியாதே!

பாரதி : அட சீ! “டாகூர் மதுரை என்றால் தந்தி பறக்கும் ஐயா!

சிஷ்யன் : சரி, என்ன செய்தி அறிவிக்க?

பாரதி : ‘தமிழ்நாட்டுக் கவியரசர் பாரதி, உம்மைக் கண்டு பேச வருகிறார் என்று உடனே தந்தி அடியும்.

சிஷ்யன் : அங்கே போய் என்ன செய்யப் போகிறீர்?

பாரதி : ஓய் ஓய், நாம் டாகூருக்கு ஒன்று சொல்லுவோம்.நீர் வங்கக் கவி; நாம் தமிழ்க் கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம் கூட்டுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம்.நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு ‘அப்ளாஸ் கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்.

Dancer Taitini Das in Tagore Celebrations

சிஷ்யன் : அதெப்படி? அவர் வங்காளத்தில் பாடுவார். நீர் தமிழில் பாடுவீர். வங்காளத்திற்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?

பாரதி : அட, அட ஜெயமே! சர்வேசுவரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசு லாயக்கில்லையோ?

சிஷ்யன் : மன்னிக்க வேண்டும். தமிழ் வங்கத்திற்குத் தாழ்ந்ததில்லை. ஆனாலும் அவர் உலக மகாகவி, உலகப் புகழ் பெற்றவர்.

பாரதி : நாம் உலகப் புகழ் பெற முடியாதோ? அட தரித்திர மனிதா! அந்த இழவுக்குத் தான் நோபல் வெகுமதியை டாகூரிடமிருந்து வெல்ல வேண்டும் என்கிறோம்!

இந்த மாதிரியே பேசிக் கொண்டு பாரதியார் இரவில் எட்டையபுரம் வந்தார். (1919) பிறகு நன்றாகச் சாப்பிட்டுத் தலையைச் சாய்த்தார்; மறுநாள் காலையில் தான் எழுந்தார். நோபல் வெகுமதி விஷயம் மறந்தே போயிற்று.

         

இது யோகி சுத்தானந்த பாரதியார் தீட்டிய சித்திரம். 1918-ல் பாரதியார் புதுச்சேரி வாழ்க்கை அலுத்துப் போய்த் தமது மனைவியின் ஊரான கடயத்திற்குச் சென்றார். கடயத்தில் ஈராண்டு வாழ்க்கை; அப்பொழுதுதான் மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

நூலாசிரியர் ரவீந்திரரைப் பாரதியார் பாராட்டி எழுதியதையும் அவரது சிறுகதைகள் சிலவற்றை மொழிபெயர்த்திருப்பதையும் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ ரவீந்திர திக் விஜயம் என்னும் கட்டுரையை 1921 ஆகஸ்டு 25ல் சுதேசமித்திரனிலே பாரதியார் எழுதினார்.அதற்கடுத்த மாதம் செப்டம்பர் 11ம் தேதி பாரதி அமரராகிறார்.

புதுச்சேரியில் இருந்த காலத்தில் (1908-1918) தாகூர் சிறுகதைகளில் எட்டைப் பாரதியார் மொழி பெயர்த்தார்.

தாகூருடைய ஐந்து கட்டுரைகளை பாரதியார் மொழி பெயர்த்திருக்கிறார். 1917-ல் ‘மாடர்ன் ரிவியூசஞ்சிகையில் இந்தக் கட்டுரைகள் வெளிவந்தன.

        

4

மூன்றாம் அத்தியாயத்தில் தாகூர் உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்ததையும் பாரதியார் இந்தியாவில் முகிழ்ந்த மறுமலர்ச்சியானது இந்து மதத்தின் அடிப்படையில் இருந்ததை ஏற்றுக் கொண்டதையும் நூலாசிரியர் விவரிக்கிறார்.

மகாத்மா காந்தியை எமது தலைவர் என்று தாகூர் பாராட்டினாலும் அவர் ஆரம்பித்த வெகு ஜன இயக்கத்தைக் கண்டித்தார். ஆனால் பாரதியாரோ, “ஸ்ரீ காந்தியின் நெறியையும் திடசித்தத்தையும் பார்த்தால் இப்படிப்பட தெய்வீக குணங்களமைந்த புருஷனும் உலகத்திலிருக்கிறானாவென்று யோசிக்க வேண்டியதாயிருக்கிறது” என்று மகாத்மாவை வெகுவாகப் பாராட்டினார்.

      

5

இந்தியா முழுவதையும் கவர்ந்த சக்தி வழிபாட்டை ஏறத்தாழ தாகூர் நிராகரித்தார் என்றே சொல்ல வேண்டும் என்று ஆறாம் அத்தியாயத்தில் விவரிக்கும் நூலாசிரியர் பாரதியார் சிவாஜி உற்சவம் கோலாகலமாக நடைபெற வேண்டும் என்று ‘இந்தியா பத்திரிகையில் வேண்டுகோள் விடுத்ததையும் சக்தி வழிபாட்டை பாரதியார் மேற்கொண்டதையும் விவரிக்கிறார்.இருவருக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

 

6

ஏழாம் அத்தியாயம் தாகூர் இயந்திரங்களைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் அவை சிருஷ்டிக்கு முரணானவை என்று கருத்துக் கொண்டிருந்த போது பாரதியாரோ அதற்கு நேர் முரணான கருத்தைக் கொண்டிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது.

7

மகாகவிகள் இருவரும் தமது எழுத்துக்களில் கவிதையே நித்தியத்துவத்தைப் பெறும் என்பதை உணர்ந்திருந்தனர்.இருவரும் மேலான இசை உணர்வு கொண்டவர்கள். இது இருவருக்கும் உள்ள ஒற்றுமை.

 

இது போன்ற ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டும் நூல் அரவிந்தருடனான பாரதியாரின் தொடர்பை விரிவாக இறுதி அத்தியாயங்களில் சுட்டிக் காட்டுகிறது.

 

    

 

நூலாசிரியர் இலங்கையின் பிரபலமான எழுத்தாளர். இலங்கை சர்வகலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்த சிறந்த ஆய்வு நூலை எழுதியுள்ளதன் மூலம் இரு கவிஞர்களைப் பற்றிய சிறந்த ஒப்பீடு நமக்குக் கிடைக்கிறது.

பாரதி ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூலாக இது அமைகிறது.

****

கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள் (Post No.5035)

கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள் (Post No.5035)
WRITTEN by London Swaminathan 

Date: 22 May 2018

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

Post No. 5035

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

பழங்காலத்தில் கீழை நாடுகளில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒருவர் சத்தியத்தின் பெயரில் சூளுரைத்து கடலை விரட்டலாம். தண்ணீர் மீது நடக்கலாம்; நதிகளை ஓடாமல் செய்யலாம் என்று நம்பினர். இந்தக் கதைகள் சிலப்பதிகாரம், திருவிளையாடல் புராணம், புத்த, ஜைனமத நூல்களில் உள்ளன. மோஸஸ் கடலைக் கடந்த கதை, ஜீஸஸ் சிஷ்யன் கடலைக் கடந்த கதை எல்லாவற்றுக்கும் மூலம் ரிக்வேதம் என்று முதல் கட்டுரையில் நேற்று காட்டினேன்.

 

 

தமிழர்களைப் போலவே சீனாவிலும் மன்னன் செய்த செயலைப் பார்க்கையில் இரு ஒரு பழங்காலச் சடங்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

திருவிளையால் புராணத்தில் ஒரு கதை இருக்கிறது; அதன் தலைப்பு “கடல் சுவற வேல்விட்ட படலம்”. 96 அஸ்வமேத யாகம் செய்த உக்கிரகுமார பாண்டியன் மீது இந்திரன் பொறாமை அடைந்தான். ஏனெனில் எவரேனும் 100 அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரன் பதவி பறிபோய்விடும் இதனால் இந்திரன் மதுரை நகர் மீது கடல் தண்ணீர் பாயும்படி ஏவிவிட்டனன். இது தமிழ்ச் சங்கம் இருந்த தென் மதுரையாக இருக்கலாம்.  பாண்டிய மன்னன் சிவ பக்தன் என்பதால் சிவபெருமானே அவன் கனவில் தோன்றி கடலைக் கட்டுக்குள் வைக்க அனுப்பினான் என்பது கதை. உடனே அவன் இரவோடு இரவாக கடல் மீது வேல் ஒன்றை எறிய  அது பின்வாங்கியது.

உண்மை பேசுவோர், நியாயமான ஆட்சி நடத்துவோருக்கு இப்படிப் பட்ட அபூர்வ சக்திகள் இருந்ததாக மக்கள் நம்பினர். நல்லாட்சி நடக்கும் நாட்டில் பயிர்கள் தாமாகவே செழித்து வளரும் என்று வள்ளுவனும் செப்புவான்.

சீனாவில் நடந்த அதிசயம்

மிலிந்த பன்னா என்னும் நூலில் ஒரு கதை வருகிறது:–

“மன்னாதி மன்னா! சீனாவில் ஒரு மன்னன் நாலு மாதங்களுக்கு ஒரு முறை, கடலுக்குக் காணிக்கை செலுத்துவதற்காக சபதம் செய்கிறான். அவன் தேரில் ஏறி கடலுக்குள் ஒரு லீக் ( மூன்றரை மைல்) தொலைவு செல்வான் அவன் உள்ளே நுழைந்தவுடன் கடல் பின் வாங்கி விடும். அவன் தேர் வெளியே வந்தவுடன் கடல் அந்த இடத்தில் பாய்ந்து முழுகடித்துவிடும்”.

இது புத்தமத நூலில் உள்ள கதை. ஆக பரசுராமன் கோடரியை எறிந்து கேரள பூமியை மீட்ட கதை, மஹாவம்சம் எனும் இலங்கை நூலில் உள்ள கதை ஆகியன எல்லாம் ஸத்தியத்தின் மூலம் சபதம் செய்து தண்ணீரைக் கட்டுப்படுத்த முடியும் என்று காட்டுகின்றன; நிலம் தரு திருவில் பாண்டியன், கடல் சுவற வேல் விட்ட உக்கிரப் பெருவழுதி அல்லது உக்கிர குமாரன் அகியோர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் உண்டு.

 

From my earlier post:–

மஹாவம்சக் கடல் கதை

சுனாமி/ கடல்கோள்
அத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.
கல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடிதத்தைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.

இது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.

உடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான்.

 

இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
-காடுகாண் காதை, சிலப்பதிகாரம்

இதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.

 

xxx

சம்பந்தர் செய்த அற்புதம்

தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற பாடலகளைப் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றுமுள்ள ஏனைய சிவனடியார்கள் வாழ்விலும் நதி நீர் , கடல் நீர் முதலியவற்றை அடக்கி ஆண்ட செய்திகள் உள. திருஞான சம்பந்தர் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய   போது   படகோட்டிகளும் பயந்து தயங்கி நின்றதாகவும் அவர் அடியார்களுடன் படகில் ஏறி தேவாரம் பாட, படகு அமைதியாக தவழ்ந்து மறு கரை சேர்ந்ததாகவும் ஸ்தல புராணங்கள் நுவலும். கொள்ளம்புதூரில் வெட்டாறு வெள்ளப் பெருக்கெடுத்தபோது சம்பந்தர் நதி கடந்த அதிசயம் சைவ வரலாற்றில் உள்ளது

 

கொள்ளம்புதூரில் ஆண்டுதோறும் ஓட (படகு) விழா நடப்பதோடு அந்த ஆற்றுக்கே ஓடம்போக்கி ஆறு என்றும் பெயர் வைத்துவிட்டனர்.

to be continued…………….

–subham–

MORE MANAGEMENT STORIES (Post No.5034)

COMPILED by S NAGARAJAN

 

Date: 22 MAY 2018

 

Time uploaded in London –  6-24 AM   (British Summer Time)

 

Post No. 5034

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

THE MECHANIC AND THE SURGEON

A heart surgeon took his car to his local garage for a regular service, where he usually exchanged a little friendly banter with the owner, a skilled but not especially wealthy mechanic.

“So tell me,” says the mechanic, “I’ve been wondering about what we both do for a living, and how much more you get paid than me..”

“Yes?..” says the surgeon.

“Well look at this,” says the mechanic, as he worked on a big complicated engine, “I check how it’s running, open it up, fix the valves, and put it all back together so it works good as new.. We basically do the same job don’t we? And yet you are paid ten times what I am – how do you explain that?”

The surgeon thought for a moment, and smiling gently, replied, “Try it with the engine running..”

 

2

 

PHILOSOPHY STUDENT

This is a widely circulated story from the early 2000s. It appeared online and in emails in many different versions. Please tell me if you know it to be earlier, and/or the origin. I’ve refined the wording of the story as follows:

A philosophy professor gave an unusual test to his class. He lifted his chair onto his desk and wrote on the board simply: “Prove that this chair does not exist.” The class set to work, composing long complex explanations – except one student, who took just thirty seconds to complete and hand in his paper, attracting surprised glances from his classmates and the professor. Some days later the class received their grades for the test. The student who took thirty seconds was judged the best. His answer was, “What chair?”

 

The story is one of several similar urban myths which make fun of supposedly high-minded theorizing and academia, in which an apparently very difficult or impossible question is defeated by a very simple quick ‘clever’ answer. The story also inspired the fine ‘philosophy student’ contribution to the Glass Half-Full/Empty Quotes Collection. Here are some other examples of funny legendary test questions and answers:

Question- What do you think of this as a question? Answer – What do you think of this as an answer?

Q – Why? A – Why not?

Q – Why? A – Because.

Q – Define ‘courage’. A – This. (or This is.)

Q – Prove that this chair does not exist. A – This chair is actually a word on a board. The chair that exists is that one on the table.

Q – Briefly explain what hard water is? A – Ice. (This one was real)

Q – What do we call the science of classifying living things? A -Racism. (So was that)

 

****

MORE MIRACLES ABOUT WALKING ON THE WATER (Post No.5033)

WRITTEN by London Swaminathan 

 

Date: 21 May 2018

 

Time uploaded in London – 15-18  (British Summer Time)

 

Post No. 5033

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

First part of the article “Walking on the Water: Indian Miracles” was posted here on 19th May, 2018. Following is the second part.

 

‘Milinda panhaa’, the Buddhist book, has an interesting story. The sage Nagasena tells king Milinda : “ Your Majesty! In the land of China there is a king who once every four months, desiring to make offerings to the great ocean, performs an Act of Truth, and then proceeds in his chariot of state a league’s distance into the great ocean. Before the chariot of the state the mighty mass of water rolls back, and, as he returns, it pours back again. 4-1-46”

Tamil Miracle

Tamils also has such miracles in their literature. There was a Pandya King who shot his arrow or spear and the sea rolled back. Parasurama, one of the Ten incarnations of Vishnu, reclaimed land from the sea. Rama was very angry when the sea refused to give him way. Then he threatened Varuna with severe punishment. And then Varuna came and subdued the sea.

Kollambudur Miracle from sakaravijayam,blogspot.com

When Tamil saint Thirugnanasambandar visited the place (Kollambudur) with his followers, the river Vettar was in floods. Nobody dared to operate the boats to cross the river. Divine Grace blessed Sambandar to perform a miracle at that time. He sang a Thevaram Padigam in praise of the Lord of Kollambudur and stood inside the boat with his followers. The boat crossed the waters automatically and brought them to the other bank of the river.

 

Act of Truth is the ‘Truth command’. If it is true let it…………………..happen- is the vow one makes

 

King and Queen Miracle

Buddhagosa’s commentary on Angutta Nikaya has another miracle. King Kappina is on his way to enter the religious life under Buddha. This is what happened—

“Now the king with his 1000 ministers, reached the banks of the River Ganges. But at this time the Ganges was full. When the king saw this he said,  The Ganges here is full and swarms with savage fish. Moreover, we have with us no slaves or men to make boats for us. But of this Teacher virtues extend from the Avici Hell beneath to the Peak of Existence above. If this Teacher be the Supremely Enlightened Buddha, may not the tips of the hoofs of these horses be wetted.

They caused the horses to spring forward on the surface of the water. Not a single horse’s tip of the hoof wetted.  On a king’s high way proceeding, they went to the far shore. Farther on they reached another river. There was needed no ‘Act of Truth’. By the same act of truth, the river also, did they cross over. Then they reached the third river, the mighty River Chandrabhaga. That river also, by the same ‘Act of Truth’, did they cross over.

In short, Pandya king Nilam Tharu Thiruvil Pandya, Kadal Suvara Vel vitta Pandya and Buddhist King Kappina – did water miracles.

They made the water to roll back!

 

Later Queen Anoja of King Kappina , surrounded by 1000 chariot,s also crossed the Ganges by th Act of Truth.

 

All these stories recall the legend of Rig Veda (3-33) (See my previous post).

Jain Miracle- Walking on the Water

There is a Jain story with paradoxical riddles. A Jain king’s brother by name Soma became an ascetic. When the king came to know that Soma was camping outside the city he went there to pay his respects. Queen also vowed to see that holy man and decided not to take food till she pays respects to him that evening. #

 

When she rode in her chariot, the river in the middle of the city was in spate. She came back and asked her husband what to do. He told her to go back and say, “O Goddess River! if my husband has practised chastity since he paid his brother in law respects (in the past), then promptly give me passage”. She did say it and the river parted in to two and gave her passage.

 

She got confused because she became pregnant through her husband after he started paying respects to his brother (several years ago). When she met Sage Soma she asked the sage to clarify. He told her that her husband was chaste in his mind. Then the queen asked how can she return if the river is still in floods. Sage Soma told her,

“You must say to River Goddess, If the sage since taking the vow, has steadily lived in fast (for several years), then give me passage”. She recited words and easily crossed the river.

 

She asked her husband to clarify Soma’s statement. He told her “Lofty minded sages are indifferent to eating and non- eating. Mind is the root, speech the crown, deed the branch expansion of the tree of religion: from the firm root of that tree everything springs forth”. Then the queen understood.

 

—–to be continued

 

–Subham–

நீர் மேல் நடக்கும் அற்புத வித்தை! (Post No.5032)

WRITTEN by London Swaminathan 

 

Date: 21 May 2018

 

Time uploaded in London – 10-31 AM (British Summer Time)

 

Post No. 5032

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

அஷ்டமா சித்தி (எட்டு வகை அற்புத சக்திகள்) பெற்றவர்களுக்கு நீர் மேல் நடக்கும் வித்தை மிகவும் எளிது. ஹடயோகம் பயின்றவர்களுக்கு இது இயலும்.

 

கண்ணன் பிறந்தவுடன் வசுதேவர், அக்குழந்தையைக் கூடையில் வைத்துக்கொண்டு சென்றபோது யமுனை நதி திறந்து வழிவிட்டதை நாம் அறிவோம். இந்துக்களின் கணக்குப்படி இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பின்னர் இது போன்ற தண்ணீர் அற்புதங்களை பைபிளின் பழைய, புதிய ஏற்பாடுகளிலும் புத்த மத நூல்களிலும் அலெக்ஸாண்டரின் வரலாற்றிலும், ஆதி சங்கரர் வரலாற்றிலும் காண்கிறோம்.

 

இதற்கெல்லாம் ஆதி மூலமாக இருப்பது ரிக் வேதக் கவிதையாகும் (3-33). அந்தக் கவிதை விஸ்வாமித்ர மஹரிஷிக்கும் இரண்டு நதி தேவதைகளுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும். கவிதை என்ற கண்ணோட்டத்திலும் மிக அற்புதான கவிதை. நதிகளைப் பெண்களாகப் போற்றும் கவிதை; உவமைகள் மிக்க கவிதை. அந்த ‘’தண்ணீர் அற்புதக்’’ கவிதையைக் காண்பதற்கு முன்னர் நீர் வித்தைகளை வில்லியம் நார்மன் பிரவுன் என்பவர் எப்படிப் பிரித்துள்ளார் என்பதைக் காண்போம்.

தண்ணீர் வித்தைகள் ஆறு வகையானது:-

1.ஒருவர் தனது அற்புத சக்தியினால் கடல் அல்லது ஆறுகளை இரண்டாகப் பிரியும் படி செய்து காய்ந்த தரையில் நடந்து போவது.

 

2.அற்புத சக்தியினால் நீரின் ஆழத்தைக் குறைத்து அதில் நடந்து செல்வது.

 

  1. தண்ணீர் அப்படியே நிற்க, அதன் மேல் நடந்து செல்வது

 

4.தண்ணீரில் விரைந்து செல்ல காற்றோ அலைகளோ அல்லது தாமரை போன்ற பொருள்களோ உதவுவது

 

  1. அல்லது தண்ணீர் மேல் HOVERCRAFT ஹோவர்கிராஃட் போன்று பறந்து செல்வது

 

  1. மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ இரண்டோ கலந்து உதவுவது.

 

ஆதி சங்கரரின் சீடரான பத்மபாதரை எதிர்க்கரையில் இருந்த சங்கரர் அழைத்தார். உடனே அவர் நீர் என்றும் பாராது விரைந்து செல்ல அவர் நீர் மீது கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர் தோன்றி அவரைத் தாங்கிச் சென்றது. இதனால் அந்த சிஷ்யருக்கு பழைய பெயர் மறைந்து போய் தாமரைக் காலன் (பத்மபாதர்) என்ற புதுப்பெயர் தோன்றியது.

 

புத்தர் கடல்மேல் பறந்து வந்து இலங்கைக்கு வந்ததாக புத்த மத நூல்கள் இயம்பும். புத்தர்களின் சீடர்கள் அற்புத சக்தியால் ஆற்று வெள்ளத்தைக் கடந்ததையும் அவைகள் விளம்பும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர்களுக்கும் மோஸசுக்கும் செங்கடல் திறந்து வழிவிட்டதாகப் பகரும்

 

ஏசுவின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரான பீட்டர் நீரின் மேல் நடந்த கதையை பைபிள் நுவலும்.

 

இப்படி ஏராளமான கதைகளைப் பழங்குடி மக்களும் பகர்வர்.

 

ஆனால் உலகிலேயே பழமையான நூலில் — ரிக் வேதத்தில் – இவைகளைக் காணும்போது நாம்தான் இந்தக் கலையை உலகிற்குக் கற்பித்தோமோ என்றும் தோன்றும். ரிக் வேதத்தின் காலம் கி.மு 1500 முதல் 6000 வரை என்று அறிஞர்கள் செப்புவர்.

 

ரிக்வேதக் கவிதை 3-33

 

விபாசா (வியாஸ), சுதுத்ரி (சட்லெஜ்) இரண்டு பஞ்சாப் நதிகள் இப்பாடலில் இடம் பெறுகின்றன.

 

விஸ்வாமித்ரர்–

அடடா! என்ன அற்புதம் ! மலைகளில் பிறந்து கடலுக்குப் போகும் உங்கள் அழகே, அழகு! போட்டி போடும் இரண்டு குதிரைகளப் போல பாய்கிறீர்களே. கன்றுகளை அன்பாக நாவால் நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசு போல இரு கரைகளையும் அலைகள் என்னும் நாவால் தொடுகிறீர்களே.

 

இந்திரனுடைய கட்டளைக்குப் பணிந்து தேரில் விரைந்து செல்லும் தேவர்கள்  போலப் பிரகாஸிக்கிறீர்கள். அதே வேகத்தில் கடலை நோக்கி ஓடுகிறீர்கள்! அலைகள் ஒன்றன் மீது ஒன்று புரள்வது ஒருவரை ஒருவர் நாடுவது போல உளதே!

 

தாய் போன்ற சுதுத்ரி நதியே! சௌபாக்கியவதியான விபாஸையே! கன்றுகளை நாடும் தாய் போல ஒருமித்துப் பாய்கிறீர்களே!

 

 

இரண்டு நதிகளும் சொல்லுகின்றன

நாங்கள் நீரினால் நிலத்தை வளப்படுத்தி இறைவனால் படைக்கப்பட்ட கடலுக்குப் போகிறோம். எங்களை எவராலும் தடுக்க இயலாது. நீவீர் எம்மை அழைத்த காரணம் யாதோ?

விஸ்வா:-

 

நான் ஸோம லதை எனப்படும் அற்புத மூலிகையை எடுக்க செல்கிறேன். நான் குஸிகனின் புதல்வன்; ஏ, சுதுத்ரி நதியே ஒரு கணப்பொழுது  ஓடாமல்தான் நில்லேன்.

 

நதிகள் பதில்

விருத்திரன் எங்களைத் தடுத்து நிறுத்திய போது வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் அந்த விருத்ரனைக் கொன்றான். நல்ல கைகள் உள்ள ஸவிதா எங்களை இந்த வழியில் செலுத்தினான். அவன் கட்டளைபடி வெள்ளப் பிரவாஹம் எடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

 

விஸ்வா

நல்லது; இந்திரன் அந்த அஹி என்னும் பாம்பைக் கொன்று செய்த நற்செயல் என்றும் போற்றப்பட வேண்டியதே தடை செய்தவர்களை அவன் வஜ்ர ஆயுதம் கொண்டு அழித்தான்

 

நதிகள் பதில்

 

ஓ, துதிபாடும் முனிவா; எதிர்கால சந்ததியினர் உன்னுடைய இந்தக் கவிதையைப் போற்றுவார்கள் ; நீயும் மறந்து விடாதே; ஆனால் மக்களுக்கு முன்னர் எங்களைத் தாழ்திவிடாதே.

விஸ்வா:

சஹோதரிகளான நதிகளே! நான் சொல்லுவதை அன்போடு செவிமடுங்கள்; நான் தொலை தூரத்தில் இருந்து தேரோடும் வண்டிகளோடும் வந்து இருக்கிறேன். கொஞ்சம் தாழ்வாகப் பாய்ந்து செல்லுங்கள் உங்கள் நீரோட்டம் காளை மாட்டு வண்டியின் அச்சுக்குக் கீழே பாயட்டும்

நதிகள் பதில்

ஓ, கவிஞரே! நீ தொலைவில் இருந்து தேர், காளை மாட்டு வண்டிகளோடு வந்ததாகச் சொல்லுவது எங்கள் காதில் விழுந்தது குழந்தைக்குப் பால் ஊட்டும் தாய் போலவும் காதலனைக் கட்டித் தழுவ ஓடிவரும் காதலியின் அன்பு போலவும் நாங்களும் உன்னைத் தாழ்ந்து வணங்குவோம்.

விஸ்வா:–

நதிகளே; என்னைக் கடக்க உதவினீர்கள்; அதைப் போல பரதர்களும் படைகளும் கடந்து செல்ல உதவுங்கள்; பின்னர் பிரவாஹம் எடுத்துப் பாய்ந்து செல்லுங்கள்; உங்களைப் போற்றுவேன்

 

பரதர்களும் பசுக்களை நாடிக் கடந்து சென்றனர்.  உங்கள் அன்பு எனக்குக் கிடைத்தது; உங்கள் அலைபோல செல்வத்தைப் பொழியுங்கள்;  உணவு தான்யம் பெருகட்டும்; வளம் கொழிக்கட்டும்; பாய்ந்து செல்க.

 

எங்கள் மாட்டு வண்டியின் நுகத்துக்கு கீழே பாயுங்கள். எங்கள் காளை மாடுகள் ஒரு பாவமும் அறியாத ஜந்துக்கள் அவைகளுக்குத் தீங்கு செய்துவிடாதீர்கள்.

 

 

இது போல பல அற்புதக் கவிதைகள மந்திர சக்தியால் நதிகளைக் கட்டுப்படுத்தியதைக் காட்டுகின்றன (குறிப்பாக 10-136)

இந்தக் கவிதையில் என்ன அற்புதம் இருக்கிறது?

விஸ்வாமித்ரன் வேண்டியவுடன் நதிப் பிரவாஹம் குறைந்தது. வண்டியின் அச்சுக்குக் கீழே பாய்ந்தது. உடனே அவரும், பரதர்களும்  கடந்து சென்றனர்.

 

பாடலில் உள்ள உவமைகள் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்ற மாணிக்க வாசகரின் பாடலை நினைவு படுத்தும்

நதிகளைத் தாயாக போற்றுவதையும் பூமியைத் தாயாக போற்றுவதையும் உலகம் நம்மிடம் கற்றது.

காளை மாடுகளுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற அன்புப் பிரவாஹம் நதிப் பிரவாஹம் போல உளது.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் தெரியாது என்று பிதற்றும் பித்துக்குளிகளுக்கு  இந்த நதிக் கவிதையும் ஸரஸ்வதி நதிக் கவிதையும் சாட்டை அடி கொடுக்கிறது. மலைமீது தோன்றி கடல் வரை செல்லும் நதிகள் பற்றிய மாபெரும் பூகோள அறிவு அக்காலத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல கவிதையில் காணும் உவமைகள் அமைதியான ,நனி நாகரீகம் மிக்க வேத காலத்தை நம் கண்களுக்கு முன்னால் கொணர்கிறது.

 

‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’– பாரதி.

 

-சுபம்-

 

ரமணரின் கருணை மழை! (Post No.5031)

Written by S NAGARAJAN

 

Date: 21 MAY 2018

 

Time uploaded in London –  6-33 AM   (British Summer Time)

 

Post No. 5031

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ரமண தரிசனம்

அனைவருக்கும் சமமான ரமணரின் கருணை மழை!

 

ச.நாகராஜன்

1

பகவான் ரமண மஹரிஷியிடம் பக்தர் ஒருவர் வந்தார்.

அவர் கேட்டார்: கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் தானே!

ரமணர் : ஆமாம்.

பக்தர் : அவரது கருணையும் அனைவருக்கும் பொதுவானது தானே!

ரமணர் : ஆமாம்

பக்தர் : அப்படியானால் அவர் எனக்கு மட்டும் ஏன் கருணை காட்ட மாட்டேன் என்கிறார்.எப்பொழுதும் துன்பம் தானே எனக்கு வருகிறது.

ரமணர் : நீ பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாயே. அதை நிமிர்த்தி வைத்தால் தானே கருணை மழை பொங்கித் ததும்பும்!

 

பக்தர் புரிந்து கொண்டார். இறைவன் அனைவருக்கும் சமமான கருணையைத் தான் பொழிகிறார். அதை ஏற்க நாம் தயாராக – பாத்திரத்தைத் திறந்து வைத்து – இருக்க வேண்டும்.

மனதைத் தூய்மையாக, ஏற்கக்கூடிய பக்குவ நிலையில் வைக்க வேண்டும்.

அத்துடன் பாத்திரம் சிறிய அளவா, அண்டாவா அல்லது மிகப் பெரியதா என்பதையும் நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இறைவனின் கருணை மழையைப் போலவே பகவான் ரமணரின் கருணை மழையும் அனைவருக்கும் பொதுவானது.

 

2

பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.

ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். ஏராளமான துறவிகள், பேராசிரியர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.

அனைவர் மீதும் அவரது கருணை மழை சமமாக இருந்தது.

உயர்தட்டில் இருந்தவர்களுக்குத் தான் அவரது கருணை என்பது இல்லை; ஏழையாக, சாமானியராக, எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் அவர் பொது தான்; அவர்கள் மீதும் அவரது கருணை அளப்பரியதாக இருந்தது.

ஒரு சம்பவம்.

பூவன் என்ற ஆட்டிடையனின் ஆடு தொலைந்து விட்டது. ஒரே கவலை. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஆடு கர்ப்பமாக வேறு இருந்தது. அவனுக்கு நம்பிக்கையே போய் விட்டது. காட்டு மிருகங்கள் அதை அடித்துத் தின்று விட்டதோ!

ஒரு நாள் ஆசிரமம் வழியே சென்று கொண்டிருந்த அவன் பகவானைப் பார்க்க, அவர் அவனை எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். பூவன் தனது ஆடு தொலைந்த விஷயத்தைச் சொன்னான். பகவான் வழக்கம் போலப் பேசாமல் இருந்தார். பிறகு அவனிடம் சில கற்களைத் தூக்கத் தனக்கு உதவுமாறு கேட்டார். அவனும் சந்தோஷமாக அந்த வேலையைச் செய்தான். அந்தப் பணி முடிந்ததும் பகவான், “இந்தப் பக்கமாகப் போ” என்று ஒரு வழியைச் சுட்டிக் காட்டினார். “அங்கு உன் ஆட்டை வழியில் காண்பாய்” என்றார் அவர். அதே மாதிரி தனது ஆட்டை இரண்டு குட்டிகளுடன் அவன் கண்டான்!

பூவன், “என்ன அற்புதமான பகவான் இவர்! அவரது வார்த்தைகளின் சக்தியைப் பாருங்கள். என்னப் போன்ற ஒரு ஏழையைக் கூட அவர் மறக்கமாட்டார். எனது பையன் மாணிக்கத்தைக் கூட அவர் அன்புடன் நினைவு வைத்துக் கேட்கிறார். பெரியவர்கள் எப்போதுமே அப்படித்தான்.  கோடையில் பசுக்களைப் பார்க்கும் சிறு பணியை அவருக்காகச் செய்வதில் எனக்கு சந்தோஷம்.” என்றான்.

 

முனகல வெங்கடராமையா தொகுத்திருக்கும் அற்புத நூலான

Talks with Sri Ramana Maharshi  என்ற நூலில் 16 டிசம்பர் 1936 தேதியிட்ட பதிவு இது: (ஆங்கில மூலத்தை அப்படியே கீழே காணலாம்.)

 

Poovan, a shepherd, says that he knows Sri Bhagavan since thirty

years ago, the days of Virupakshi cave. He used at times to supply

milk to the visitors in those days.

Some six years ago he had lost a sheep, for which he was searching

for three days. The sheep was pregnant and he had lost all hopes of

recovering her, because he thought that she had been set upon by

wild animals. He was one day passing by the Asramam, when Sri

Bhagavan saw him and enquired how he was. The man replied that

he was looking out for a lost sheep. Sri Bhagavan kept quiet, as is

usual with Him. Then He told the shepherd to help in lifting some

stones, which he did with great pleasure. After the work was finished,

Sri Bhagavan told him: “Go this way”, pointing the footpath towards

the town. “You will find the stray sheep on the way”. So he did and

found the lost sheep with two little lambs.

 

He now says, “What a Bhagavan is this! Look at the force of his

words! He is great! He never forgets even a poor man like me. He

remembers my son Manikkam also with kindness. Such are the great

ones! I am happy when I do any little work for Him, such as looking

to the cows when they are in heat.

 

3

இதே போல பகவானுக்கு பௌர்ணமி தோறும் க்ஷவரம் செய்ய வரும் நடேசனும் அவர் பால் அதீத பக்தி கொண்டவர். பகவானுக்கு நமஸ்காரம் செய்து விட்டுத் தான் அவர் தன் வேலையைத் தொடங்குவார். ஒரு நாள் மலையில் வழியில் பார்த்த பகவானை அவர் நமஸ்காரம் செய்ய, “இங்கு எதற்கு? என்றார்.

என்ன அற்புதமான குறிப்பு!

பௌர்ணமி தோறும் கோசாலையில் க்ஷவரம் செய்ய வரும் போது செய்யும் நமஸ்காரமே போதுமே என்று கருணையுடன் குறிப்பால் உணர்த்த அவர் கூறிய அன்புச் சொற்கள் அது.

இன்னொரு முறை நடேசன் அவசரமாக செல்ல வேண்டிய ஒரு தருணத்தில், அவன் போக வேண்டும்; ஆனால் சாப்பிட்டிருக்க மாட்டானே என்றார் பகவான்.

குறிப்பறிந்த தொண்டர் உடனடியாக சமையலறைக்குச் சென்று நடேசனுக்கு உணவு கொண்டு வந்தார்.

தழுதழுத்த குரலில் சொன்னார் நடேசன்: “பகவானுக்கு அனைவருமே சமம் தான். பொதுவாக அனைவரும் உண்ட பின்னரே நாங்கள் உண்பது வழக்கம். இன்று பாருங்கள், பகவானின் கருணையை! என்றார்.

எந்த வித பேதமுமின்றி பொழிவதே இறைவனின் கருணை.

அந்த அவதாரமாக வந்த பகவானுக்கும் அதே கருணை இருப்பது இயல்பு தானே!

***

சொன்னது எல்லாம் 100 % பலிக்கும் ஜோஸியர்! (Post No.5030)

WRITTEN by London Swaminathan 

 

Date: 20 May 2018

 

Time uploaded in London – 16-46 (British Summer Time)

 

Post No. 5030

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ஒரு ஊரில் ஒரு மஹா தரித்திரன் இருந்தான்; எதைத் தொட்டாலும் விளங்கவில்லை. பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டியதாயிற்று. ஒரு நாள் பிச்சை எடுக்கப் போன போது ஒரு வீட்டில் இருந்து மசாலா வாசனை அடித்து. கதவு மூடி இருந்த போதும் எச்சில் இலைக்காக திண்ணையில் காத்திருந்தான். அப்போது   ‘சொய்ங்’ என்று சப்தம் ஒலித்தது.

 

ஆஹா! மசாலா தயாரன பின்னர் தோசை ‘ரெடி’ ஆகிறது. கொஞ்சம் ‘வெயிட்’ பண்ணுவோம் என்று காத்து இருந்தான். மீண்டும் சொய்ங்ங்ங்’ சப்தம்; ஓஹோ இரண்டு தோசை ‘ரெடி’ என்று கணக்குப் போட்டான். இப்படி பத்து முறை சப்தம் கேட்கவே பத்து தோசை தயார்; ஒன்றிரண்டு கேட்டுப் பார்ப்போம் என்று கதவைத் தட்டினான்.

‘அம்மா, தாயே, வயிறு காயுது; ஏதேனும் கொஞ்சம் கஞ்சித் தண்ணி வாருங்களேன்’ என்றான் பய பக்தியோடு.

அந்த அம்மாளோ வழக்கம் போல ‘இல்லை’ பாட்டுப் பாடினாள்.

 

மசாலா தோசை

என்ன தாயே! இல்லை என்று சொல்லலாமா? பத்து தோசையில் ரெண்டு தோசையாவது போடலாமே! என்றான்.

அந்த அம்மாளுக்கு ஆயிரம் ‘வாட்’ ‘ஷாக்’ அடித்தது.

அடப் பாவி மகனே! இவன் பெரிய சாமியாரோ அல்லது ஜோஸியனோ கர்ரெக்டா சொல்லிப்புட்டானே ! பத்து தோசை என்று எண்ணி,  பய பக்தியோடு இரண்டு தோசைகளைப் பரிமாறி சூடான காப்பியும் கொடுத்து அனுப்பினாள்.

குழாய் அடிக்கு தண்ணீர் பிடிக்கப்போன போது 100 சதவிகிதம் பலன் சொல்லக்கூடிய ஜோஸியர் தன் வீட்டுக்கு வந்த செய்தியை ஒவ்வொரு வீட்டுப் பெண்மணியிடமும் சொல்லித் தீர்த்தாள்.

 

 

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்

அதிர்ஷ்ட தேவதை நமது பிச்சைக்கார ஜோஸியர் மீது கடைக் கண் பார்வையைச் செலுத்தவே கழுதை காணவில்லை என்று ஒரு வண்ணான் அந்த புதிய ஜோஸியர் வீட்டு வாசலில் நின்றான். அவருக்குப் பிழைக்கும் வழி புரிந்துவிட்டது.

“அன்பா! இன்று இரவு சக்கரம் போட்டு பூஜை செய்து கண்டு பிடிப்பேன் ; பொழுது விடிந்ததும் வா” என்றான்.

அன்றிரவு முழுதும் ஜோஸியர் கழுதையைத் தேடி ஓட இவர் அதிர்ஷ்டம்! கழுதை கிடைத்தும் விட்டது!

‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர்’ என்பது பழமொழி அல்லவா!

 

 

“பொழுது விடிந்தது யாம் செய்த தவத்தால் புன்மை யிருட்கணம் போயின யாவும்” என்று திருப்பள்ளி எழுச்சி பாடும் நேரத்தில் கழுதை தேடும் வண்ணானும் வந்தான்;

அன்பனே! தெருக்கோடி வீட்டின் குட்டிச் சுவர் அருகே போ; உன் கழுதை உனக்காக காத்திருக்கும் என்றான். என்ன அதிசயம்! கழுதையும் கிடைத்தது.

அந்த வண்ணான்,  தான் போகும் வாடிக்கையாளர் வீடுகளில் எல்லாம் மஹா ஜோஸியரின் புகழைப் பரப்பினான். அவன் அரண்மனைக்கும் வண்ணான். ராஜா காதிலும் செய்தி விழுந்தது.

மன்னாதி மன்னன்

ராஜாவுக்குக் கொஞ்சம் நாளாகப் புதுக் கவலை. அரண்மனை வைர நகைகளைக் காணோம்; அந்த நேரத்தில்  இந்த சகல நோய்களுக்கும் கைகண்ட மருந்து போல மஹா ஜோஸியர் தகவலும் வரவே சிறந்த காவலர்களை அழைத்து பறந்து போய் , சிறந்த ஜோஸியரை உடனே அழைத்து வருக என்று கட்டளை இட்டனன்.

 

 

ராஜா வீட்டு சேவகர்களைக் கண்டவுடன் கூஜா தூக்கும் போலி ஜோஸியருக்கு உதறல் எடுத்தது. சேவகர்களும் திருட்டைக் கண்டு பிடிக்க உங்களை ராஜா அழைத்தார் என்று சொல்லி குதிரையில் ஏற்றிக் கொண்டு சிட்டாய்ப் பறந்தனர். ஜோஸியர் பயத்தில் ‘திருடன், திருடன்’ என்று உளறத் துவங்கினார். இரண்டு சேவகர்களும் குதிரையை நிறுத்தி தண்ணீர் குடிப்பது போல அந்தப் பக்கம் போய் காதோடு காதாகப் பேசினர்.

“ஏய், ஜோஸியர் அய்யா. நம்மைத் திருடன் என்று கண்டுபிடித்து விட்டார். அவர் வழி எல்லாம் திருடன் திருடன் என்று நம்மைத் திட்டிக்கொண்டே வருகிறார். உண்மையிலேயே இவர் பெரிய ஜோஸியர்– ஆகையால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு உண்மையை சொல்லி விடுவோம் என்று ஜோஸ்யர் காலில் விழுந்து செப்பினர்

“ஐயா, நாங்கள்தான் அரண்மனை நகைகளைத் திருடினோம்; நீங்களும் எங்களைத் திருடர்கள் என்று கண்டு பிடித்து விட்டீர்கள்– இன்றிரவே நகைகளை ஒப்படைக்கிறோம் ; எங்களை மட்டும் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்; ‘ப்ளீஸ்’” என்று கெஞ்சிக் கூத்தாடினர்.

 

அவரும், “அன்பர்களே! மன்னித்தேன், மறந்தேன். புறப்படுவோம்” என்றார்.

 

ராஜாவின் அரண்மனையில்

 

“ஓய் ஜோஸியரே! என்னமோ பெரிய ஜோஸியர் என்று சொல்லுகிறார்கள்– களவு போன நகைகளைக் கண்டு பிடியுங்கள் தவறினால் தக்க தண்டனை உண்டு; கண்டு பிடித்தாலோ நீர் தான் ஆஸ்தான ஜோஸீயர்” என்றார் மன்னன்.

ஜோசியருக்கு ஏற்கனவே நகை பற்றித் தெரிந்து விட்டதால்

“ராஜாதி ராஜனே! என் ஜோதிடம் பொய்யாகுமா? இன்றிரவே பூஜை போட்டு நாளையே  நகை கிடைக்க வழி வகை செய்வேன்” என்றார்.

 

சேவகத் திருடர்களும் இரவோடு இரவாக ஜோஸியரிடம் நகைகளைக் கொண்டு வந்தனர்.அவர் ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் அவைகளைப் புதைக்கச் சொன்னார்.

 

மறு நாள் காலையில் மன்னர் அவையில் அனைவரும் ஆர்வத்துடன் காதுகளைத் தீட்டிக் கொண்டு நிற்க ஜோஸியர், இந்த மரத்துக்கு அடியில் அந்த நகைகள் உள்ளன. அவை எல்லாம் குட்டிச் சாத்தான் செய்த வேலைகள் என்றார். அரசனும் சேவகர்களை அனுப்ப நகையும் கிடைத்தது.

 

கம்பளிப் பூச்சி

 

ஆனால் மந்திரிமார்களுக்கு ஒரு சம்ஸயம்; அதாவது சந்தேஹம்; இந்தப் பயலோ பூர்வீகத்தில் பிச்சைக்கரன் என்று நமது உளவாளிகள் சொல்லுகின்றனர். இவனுக்கு ஆஸ்தான ஜோதிடர் பட்டமா? இவன் வண்டவாளத்தை ரயில் தண்டவாளத்தில் விடுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்தனர். அவர்களில் ஒரு அமைச்சர் ஒரு கம்பளிப் பூச்சியைக் கையில் வைத்து மூடிக்கொண்டு

“ஓய், ஜோஸியரே! நீவிர் மஹா பெரிய ஜோஸியர் என்றால் எங்கள் கையில் இருப்பது என்ன என்று விளம்புங்கள்?” என்றனர்.

 

அவருக்கு நடுக்கம் ஏற்பட்டது.

அடக்கடவுளே!

“அங்க தப்பி, இங்க தப்பிச்சுக் கொண்டு அகப்பட்டுக் கொண்டேனே கம்பளி முத்தன்” என்று சொல்லிக் கொண்டே தன் கம்பளிச் சால்வையை மேலே போட்டுக் கொண்டு ஓடுவதற்குத் தயாரானார். அவர் சொன்னது தன் கம்பளியை;

 

மந்திரிகள் நினைத்தார்கள்,

 

அட ஆண்டாவா! என்ன அற்புத மன சக்தி; இந்த மஹானுக்கு!! கையில் மூடி வைத்து இருந்த கம்பளிப் பூச்சியைக் கூட ஞான திருஷ்டியில் கண்டு வி ட்டாறே என்று ஜோஸியர் காலில் விழுந்து ஆஸீர்வாதம் பெற்றனர்.

 

அரசனிடம் போய், அவருக்குக் கூடுதல் மான்யம் தருவதற்கு சிபாரிசும் செய்தனர்.

 

‘அதிர்ஷ்டம் இருந்தால் குதிரை தானாகவே கு………………….  அடியில் புகுந்து  தூக்கிக் கொண்டு போய் சவாரி செய்யும்!’ —என்பது தமிழ்ப் பழமொழி

 

–சுபம்-

ASTROLOGER WHO PREDICTED 100% CORRECT! (Post No.5029)

WRITTEN by London Swaminathan 

 

Date: 20 May 2018

 

Time uploaded in London – 13-47 (British Summer Time)

 

Post No. 5029

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

There are many folk tales in Tamil Nadu about astrologers. If one is lucky all his predictions will come true. Here is an interesting story about a lucky beggar turned astrologer.

 

There lived a person in a village in utter poverty. He tried all the tricks to make a living but failed miserably. One day he was very hungry and went begging for food. He could smell something nice from one of the houses in the street. He went there and sat on the pial outside the house, because the door was shut. He was listening keenly to know what was happening inside the house. He heard the sound of someone making Masala Dosa (famous Tamil dish). Every time lady of the house poured oil and the dough on the heated pan it made the sound ‘Soyyyyn’. He said to himself, ‘Oh my god the lady of the house made one Dosai now”. Then he heard Soyyyn again. He counted two. It went on like this until he counted ten ‘Soyyn’ sound.

He knocked at the door and the lady opened the door and asked why he was standing there. He told that he was very hungry and he need something to eat. The lady wanted to drive him away and said ‘Sorry man, there is no food in the house to spare’.

 

Then the beggar told her, “Look Madam, you have ten Dosas in the kitchen. Can’t you spare me a few?”

 

She was astonished when he said TEN dosas. Anyone could smell dosa and easily could have said you have dosas. But this person said TEN dosas! She asked him how did he know this.

 

He gave a simple answer: ‘I know everythin’g. She thought that he must be a saint or an astrologer. But without inquiring much about it, the gullible woman simply fed him and said ‘Good Bye’. He thanked her and went his way. She spread the news of a ‘Famous Astrologer’ visiting her house, who can predict 100% percent correct.

 

As the days went by people went to the poor man’s house and started donating good clothes fit for an astrologer so that they can also use him in future. A lazy waterman also heard the story of this astrologer went to seek his help to find his ‘missing’ donkey. The astrologer heard from his own mouth he didn’t even go round the village looking for the donkey. This fact gave the ‘astrologer’ some confidence. He assured the waterman he could find the donkey’s whereabouts after  that night’s puja. At the dead of night the poor beggar turned astrologer went looking for the donkey. When he found it he tied it in a pole outside the village and came home. The worried washer man came next day to see the ‘astrologer’. He told him that the donkey was just outside the village tied to a pole. The washer man ran towards the pole and found his donkey. He told all his customers about the great astrologer. He used to serve the palace as well. So the king also got the news.

At that time the king had a problem too. He lost his valuable jewels in the palace. He sent word for the ‘astrologer’. When the king’s servants went to the ‘astrologer’s’ house he was shaking and sweating. He knew that the king would chop his head if he found out that he was a fake astrologer.

 

While he was riding along with the servants, he was mumbling ‘thieves’, ‘thieves’ ‘jewel thieves’. Since the servants who came to see him was the real thieves they started shivering and shaking. They fell at the feet of the ‘astrologer’ and told him the truth. ‘Astrologer warned them to return the jewels to him that night so that they can escape execution. They agreed to his proposal.

 

When he met the king he warned the astrologer that if he failed to locate the stolen jewellery he would be severely punished. But the ‘astrologer’ put a brave face and said that there was nothing to worry because he would find it very next day.

 

In the night, he received the stolen jewels from the servants and then instructed them to bury it in a particular place. The astrologer met the king next morning and pretended doing lot of calculations and gesticulating spelling many mantras. Then he said,

“Aha! the ghosts have taken them and buried them under the tree in a place”. He revealed the location. Same servants who stole and secretly returned them the previous night were sent on the mission. They easily located after getting ‘instructions’ from the ‘astrologer’.

The king felt immensely happy and made him the Royal Astrologer as soon as he got back his stolen jewels.

MORAL:

If you are lucky whatever you say will be 100% correct!!

-Subham–