சுவர்க்கமும் பூமியும் உருவான வரலாறு; மனு நீதி நூல் – பகுதி 2 (Post No.4413)

Written by London Swaminathan 

 

Date: 19 NOVEMBER 2017

 

Time uploaded in London- 20-58

 

 

Post No. 4413

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

(First Part was posted yesterday)

முதல் அத்தியாயத் தொடர்ச்சி

ஸ்லோகம் 11. முதலில் ஒரு புருஷன் உருவாக்கப்பட்டான்; அவர்தான் பிரம்மா எனப்படுகிறார். அவரைப் படைத்தவரோ இந்த பிரபஞ்சத்துக்குக் காரணமானவர். சரீரம் இல்லாதவர்; வேதாந்தத்தினால் அவரை அறிவதால் அவரை ‘சத்’ (real) என்றும், கண் முதலிய புற உறுப்புகளால் அறிய முடியாமையால் ‘அசத்’ (unreal) என்றும் சொல்லுவர்.

12.பிரம்மாவானவர் ஒரு பிரம்ம வருஷம் வசித்து, மனத்தினாலேயே இந்த அண்டம் இரண்டாகும்படி, இரு துண்டுகளாக்கினார்.

 

13.மேல் பகுதியில் சுவர்க்கத்தையும், கீழ்ப்பகுதியில் பூமியையும் இடையில் ஆகாசத்தையும் உருவாக்கினார். எட்டு திக்குகளையும் சமுத்திரத்தையும் படைத்தார்.

14.அந்த பிரம்மாவானவர் மனத்தை (மனது) படைத்தார். அதை ‘சத்’(real) என்றும் ‘அசத்’ (unreal) என்றும் அறிக; ஞானத்தை உண்டு பண்ணுவதால் மனஸ், ‘சத்’ ஆகும்;  கண்ணுக்குத் த்ரியாமையால் ‘அசத்’ எனப்படும்; அத்தோடு நான் என்னும் அஹம்காரத்தைப் படைத்தார்.

 

  1. சிருஷ்டிக்கு முன்னமே, சத்வம் முதலிய மூன்று குணங்களையும் ஐந்து விஷயங்களைக் கிரஹிக்கக்கூடிய 5 ஞானேந்திரியங்களையும் வரிசைக் கிரமத்தில் உருவாக்கினார்.
  2. முன் சொல்லிய ஆகாயம் முதலிய ஐம்பூதங்களின் தன்மாத்திரைகளையும் அஹம்காரத்தையும் சூட்சுமமாய் அதன் அதன் நிலைகளில் அடக்கி–தன்னுடைய சக்தியையும் சேர்த்து– மானுடம், விலங்கு, பறவைகள் என்று உயிரினங்களைப் படைத்தார்.

17.பிரம்மாவினால் உண்டாக்கப்பட்ட ஐம்பூதங்களும், அஹங்காரமும் இந்த உடலில் சூட்சும ரூபத்தில் அடைந்ததால், உடலுக்கு ஸரீரம் என்று பெயர். சம்ஸ்கிருதத்தில் ‘ஆஸ்ரயந்தி’ (inhabit) என்றால் வசிக்கிறது’ உருவம் அடைகிறது (embody) என்று பொருள்; இந்த ஆச்ரயந்தியால் சரீரம் உருவானதாகச் சொல்புரட்டு செய்கிறார் மனு; பின் ஒரு ஸ்லோகத்தில் மனிதன் என்ற பெயர் எப்படி உருவானது என்றும் சொல் வித்தை செய்வதைக் காண்போம்.

  1. பஞ்ச பூதங்களும் அதனதன் குணங்களுடன், மனத்துடன் சூட்சுமமாக உள்ளே நுழைகிறது.

 

19.பஞ்ச தன்மாத்திரை, அஹங்காரம், மனது இந்த ஏழு விஷயங்களையும் சிருஷ்டிக்கும் வல்லமை படைத்தவர் கடவுள். பிறப்பு, இறப்பற்ற அவரிடமிருந்து அழியக்கூடிய இந்த உலகம் உண்டாகிறது.

 

20.ஐம்பூதங்களில் முதாலனது

ஆகாசம், அதன் குணம் சப்தம்;

இரண்டாவது வாயு-அதன் குணம் ஸ்பரிசம்/தொடும் உணர்ச்சி,

மூன்றாவது தீ/ தேயு- அதனுடைய குணம் உருவம்/ரூபம்; , நான்காவது- நீர்/அப்பு- அதனுடைய குணம்- சுவை /ரசம், ஐந்தாவது பிருதிவி (பூமி) -அதன் குணம்-  கந்தம்/வாசனை . ஒவ்வொன்றும் முந்தையவற்றின் குணங்களையும் சேர்த்துக்கொண்டு தன் குணத்தையும் உடைத்தாய் இருக்கும். அதாவது,  கடைசியாக உள்ள பூமிக்கு மொத்தம் ஐந்து குணங்கள் இருக்கும்.

 

என் கருத்து

 

பிற்கால புராணங்களிலும், பிற நாட்டு நூல்களிலும் மனிதனைக் களி மண்ணால் செய்து அதில் உயிரைக் கடவுள் ஊதினார், உடனே அது உயிருள்ள உருவமாயிற்று என்று எழுதி வைத்தனர். ஆனால் மனு, அறிவியல் முறையில் அணுகுகிறார். நம்முடைய உடம்பில் ஐந்து பூதங்கள் – நீர், நெருப்பு (உடல் சூடு), வாயு (மூச்சுக் காற்று), தண்ணீர் (உடலில் 70 சதவிகிதமும் பூமியின் பரப்பில் 70 சதவிகிதமும் உள்ளது), ஆகாசம் (வெற்றிடம் (மூக்கினுள், காதினுள்…..) உள்ளன. இவைகளைச் சேர்த்தால் மட்டும் உயிர் வந்துவிடாது. பிரம்மனின் சக்தி, “நான்” என்னும் உணர்வு இருந்தால்தான் அது அசையும் பொருளாக இருக்கும். நாம் இறந்தவுடன் பஞ்ச பூதங்களுடன் நம் உடல் கலப்பதும் கண்கூடு. ஆக , அறிவியல் முறையில் மனு, அணுகியுள்ளார்.

பஞ்ச பூதங்கள் மட்டும் இருக்குமானால், அது உயிரற்ற திடப் பொருளாகவும் இருக்கமுடியும்; ஆகையால் மனிதனாக இயங்க, அதனுள் மனஸ், நான் என்னும் உணர்வு, சத்வ ரஜோ, தமோ குணங்கள், ஞான இந்திரியங்கள் ஆகியன அவசியம் என்பது மனுவின் வாதம்.

 

மனம், உள்ளம், நெஞ்சம், இதயம், சிந்தனை ஆகியன ஒரு ஆழமான விஷயம். இதற்கு உடலில் ஒரு உறுப்பு இல்லை. ஆனால் உள்ளத்திலிருந்து—- என் இதயத்திலிருந்து——நெஞ்சத்தைத் திறந்து- சொல்கிறேன்— உணர்கிறேன் என்று சொல்லுவது வழக்கு—- இது எல்லா மொழிகளிலும் உண்டு. ஆனால் இதை எல்லாம் செய்வது மூளை என்பது அறிவியல் கூற்று. இந்துக்களோவெனில் மூளை மட்டும ல்  ல- மனஸ், அஹம்காரம் (அஹம் என்ற சம்ஸ்க்ருத சொல்லுக்கு நான் என்று பொருள்) ஆகியனவும் மனிதனின் செயல்பாட்டிற்குக் காரணம் என்று சொல்லுவர்.

 

சரீரம் என்ற சொல்லுக்குக் கொடுக்கும் விளக்கம், நாராயண என்ற சொல்லுக்குக் கொடுத்த விளக்கம், இனிமேல் மனித என்ற சொல்லுக்குக் கொடுக்கப் போகும் விளக்கம் எல்லாம், இந்துக்கள் சொல்லில் வல்லவர்கள், அவர்கள் அனைவரும் செல்லேர் உழவர்கள் என்பதைக் காட்டுகிறது. வேதத்திலேயே இது போன்ற சொல் ஜாலம், (Pun on Words) சொல் விந்தை, சொல் சர்கஸ் இருப்பதால் இந்து நாகரீகம் அறிவில் முதிர்ச்சி கண்ட நாகரீகம் என்பது தெளிவாகிறது.

  1. From that (first) cause, which is indiscernible, eternal, and both real and unreal, was produced that male (Purusha), who is famed in this world (under the appellation of) Brahman.
  2. The divine one resided in that egg during a whole year, then he himself by his thought (alone) divided it into two halves;
  3. And out of those two halves he formed heaven and earth, between them the middle sphere, the eight points of the horizon, and the eternal abode of the waters.
  4. From himself (atmanah) he also drew forth the mind, which is both real and unreal, likewise from the mind egoism, which possesses the function of self-consciousness (and is) lordly;
  5. Moreover, the great one, the soul, and all (products) affected by the three qualities, and, in their order, the five organs which perceive the objects of sensation.
  6. But, joining minute particles even of those six, which possess measureless power, with particles of himself, he created all beings.
  7. Because those six (kinds of) minute particles, which form the (creator’s) frame, enter (a-sri) these (creatures), therefore the wise call his frame sarira, (the body.)
  8. That the great elements enter, together with their functions and the mind, through its minute parts the framer of all beings, the imperishable one.
  9. But from minute body (-framing) particles of these seven very powerful Purushas springs this (world), the perishable from the imperishable.
  10. Among them each succeeding (element) acquires the quality of the preceding one, and whatever place (in the sequence) each of them occupies, even so many qualities it is declared to possess.

यत् तत् कारणमव्यक्तं नित्यं सदसदात्मकम् ।

तद्विसृष्टः स पुरुषो लोके ब्रह्मैति कीर्त्यते ॥ 11

 

तस्मिन्नण्डे स भगवानुषित्वा परिवत्सरम् ।

स्वयमेवात्मनो ध्यानात् तदण्डमकरोद् द्विधा ॥ 12

 

ताभ्यां स शकलाभ्यां च दिवं भूमिं च निर्ममे ।

मध्ये व्योम दिशश्चाष्टावपां स्थानं च शाश्वतम् ॥ 13॥

 

उद्बबर्हात्मनश्चैव मनः सदसदात्मकम् ।

मनसश्चाप्यहङ्कारमभिमन्तारमीश्वरम् ॥ 14॥

 

अहङ्कारम्] महान्तमेव चात्मानं सर्वाणि त्रिगुणानि च ।

विषयाणां ग्रहीतॄणि शनैः पञ्चैन्द्रियाणि च ॥ 15॥

 

तेषां त्ववयवान् सूक्ष्मान् षण्णामप्यमितौजसाम् ।

संनिवेश्यात्ममात्रासु सर्वभूतानि निर्ममे ॥ 16

 

सन्निवेश्य यन् मूर्त्यवयवाः सूक्ष्मास्तानीमान्याश्रयन्ति षट् ।

तस्माच्छरीरमित्याहुस्तस्य मूर्तिं मनीषिणः ॥ 17

 

यन् मूर्त्यवयवाः सूक्ष्मास्तानीमान्याश्रयन्ति षट् ।

तस्माच्छरीरमित्याहुस्तस्य मूर्तिं मनीषिणः ॥ 18॥

 

तदाविशन्ति भूतानि महान्ति सह कर्मभिः ।

मनश्चावयवैः सूक्ष्मैः सर्वभूतकृदव्ययम् ॥ 19॥

 

तेषामिदं तु सप्तानां पुरुषाणां महौजसाम् ।

सूक्ष्माभ्यो मूर्तिमात्राभ्यः संभवत्यव्ययाद् व्ययम् ॥ 20॥

 

आद्याद्यस्य गुणं त्वेषामवाप्नोति परः परः ।

यो यो यावतिथश्चैषां स स तावद् गुणः स्मृतः ॥ Bछ्.Sछ्॥

 

–Subham–

Science and Linguistics in Manu Smrti- Part 1 (Post No.4412)

Written by London Swaminathan 

 

Date: 19 NOVEMBER 2017

 

Time uploaded in London- 14-15

 

 

Post No. 4412

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Manu Smrti is the first Law book in the world. It is in Sanskrit. There are over 2650 couplets in 12 chapters in the book. Latest updated version belongs to 2nd century BCE. But my research shows that the original Manu Smrti was composed before 2000 BCE. There are internal evidences for such dating; they are as follows:

 

Manu is referred to in the oldest book in the world – The Rig Veda

Manu talks about Sarasvati river which existed around 2000 BCE

Manu never spoke about Sati- the widow burning

Many of Manu’s rules wouldn’t fit into a period around 2nd century BCE

And updated version has lot of interpolations.

Leaders like Gandhiji could easily spot them, which went contradictory to the true spirit of the book.

People like B R Ambedkar felt very angry and burnt the copies because of Anti Shudra references in the book.

But even a child could see the interpolated Anti Shudra verses as later interpolations.

One must read it in full and then weigh it pros and cons.

The subjects he deals with are of amazing variety.

He lived before Hammurabi (1810 BCE) and other law makers.

Following is the evidence for his knowledge in Science:

My comments on first ten slokas:

  1. He knew Big Bang (See Sloka 5, 6 and 7 given below)
  2. He knew water is the source of living beings and the first seed was in the waters (see sloka 8 given below).

 

  1. Pancha Bhuta (Five Elements) concept went from India to Greece and other parts (See sloka 6).

 

  1. Linguistics:

His interpretation of the name Narayana (Nara=water+ Ayana=dwelling place) shows that water is called Nara. Linguists like S K Chatterjee thought Neer/water found in the Rig Veda was a Tamil word. But it is found in Greek in the word Nereids (water nymphs).

When a word is found in the Greek language it would be considered Indo European (Sanskrit family). But I have listed 20 to 30 Tamil words in ancient Greek. This supports my pet theory that Tamil and Sanskrit are the parents of most of the ancient languages. Most of the words can be traced back to either Tamil or Sanskrit (see Sloka 10 given below)

 

॥ मनुस्मृति अथवा मानवधर्मशास्त्रम् ॥

 

अध्याय १

मनुमेकाग्रमासीनमभिगम्य महर्षयः ।

प्रतिपूज्य यथान्यायमिदं वचनमब्रुवन् ॥ Bछ्.Sछ्॥

 

भगवन् सर्ववर्णानां यथावदनुपूर्वशः ।

अन्तरप्रभवानां च धर्मान्नो वक्तुमर्हसि ॥ Bछ्.Sछ्॥

 

त्वमेको ह्यस्य सर्वस्य विधानस्य स्वयंभुवः ।

अचिन्त्यस्याप्रमेयस्य कार्यतत्त्वार्थवित् प्रभो ॥ Bछ्.Sछ्॥

 

स तैः पृष्टस्तथा सम्यगमितोजा महात्मभिः ।

प्रत्युवाचार्च्य तान् सर्वान् महर्षींश्रूयतामिति ॥ Bछ्.Sछ्॥

 

आसीदिदं तमोभूतमप्रज्ञातमलक्षणम् ।

अप्रतर्क्यमविज्ञेयं प्रसुप्तमिव सर्वतः ॥ Bछ्.Sछ्॥

 

ततः स्वयंभूर्भगवानव्यक्तो व्यञ्जयन्निदम् ।

महाभूतादि वृत्तोजाः प्रादुरासीत् तमोनुदः ॥ Bछ्.Sछ्॥

 

योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।

सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥

सोऽभिध्याय शरीरात् स्वात् सिसृक्षुर्विविधाः प्रजाः ।

अप एव ससर्जादौ तासु वीर्यमवासृजत् ॥ Bछ्.Sछ्॥

 

तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् ।

तस्मिञ्जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामहः ॥ Bछ्.Sछ्॥

 

आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।

ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ Bछ्.Sछ्

 

 

CHAPTER I

 

  1. The great sages approached Manu, who was seated with a collected mind, and, having duly worshipped him, spoke as follows:

 

  1. ‘Deign, divine one, to declare to us precisely and in due order the sacred laws of each of the (four chief) castes (varna) and of the intermediate ones.

 

  1. ‘For thou, O Lord, alone knowest the purport, (i.e.) the rites, and the knowledge of the soul, (taught) in this whole ordinance of the Self-existent (Svayambhu), which is unknowable and unfathomable.’

 

  1. He, whose power is measureless, being thus asked by the high-minded great sages, duly honoured them, and answered, ‘Listen!’

 

 

  1. This (universe) existed in the shape of Darkness, unperceived, destitute of distinctive marks, unattainable by reasoning, unknowable, wholly immersed, as it were, in deep sleep.

 

  1. Then the divine Self-existent (Svayambhu, himself) indiscernible, (but) making (all) this, the great elements and the rest, discernible, appeared with irresistible (creative) power, dispelling the darkness.

 

 

  1. He who can be perceived by the internal organ (alone), who is subtile, indiscernible, and eternal, who contains all created beings and is inconceivable, shone forth of his own (will).

 

  1. He, desiring to produce beings of many kinds from his own body, first with a thought created the waters, and placed his seed in them.

 

 

  1. That (seed) became a golden egg, in brilliancy equal to the sun; in that (egg) he himself was born as Brahman, the progenitor of the whole world.

 

  1. The waters are called narah, (for) the waters are, indeed, the offspring of Nara; as they were his first residence (ayana), he thence is named Narayana.

 

–to be continued……………..

 

 

 

உலகை மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்கள்!! (Post No.4410)

Written by S.NAGARAJAN

 

 

Date: 19 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4410

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வாரம் தோறும் வெளியாகிறது பாக்யா வார இதழ். அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 39வது கட்டுரையாக 17-11-17 இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.

 

 

 

ஸூனிஷ்! உலகை மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்கள்!!

 

 ச.நாகராஜன்

 

 

 

 

“எதிர்காலம் தங்கள் கனவுகளின் அழகில் நம்பிக்கை கொண்டவர்களுக்கே உரித்தாகுகிறது – எலினார் ரூஸ்வெல்ட்

 

 

இன்று உலகையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கும் புத்தகம் ஸூனிஷ்! (Soonish)

 

ஜாக் மற்றும் கெல்லி வெய்னர்ஸ்மித் (Zach and kelly Weinersmith) எழுதியுள்ள இந்தப் புத்தகம் 17-10-2017 அன்று தான் வெளியிடப்பட்டது.

 

உலகையே மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்களைப் பற்றி அப்படிப்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை நேரடியாகச் சந்தித்து விவரங்களைப் பெற்று இந்த நூலை எழுதியுள்ளனர் இந்த இரட்டையர். இவர்கள் தம்பதிகள் என்பது ஒரு சுவையான விஷயம்.

 

 

இதில் ஜாக் கார்ட்டுன் வரைவதில் பெயர் பெற்றவர்.  மனைவி கெல்லியோ ஒரு விஞ்ஞானி. ஒட்டுண்ணியியல் வல்லுநர். (Parasitologist). ரைஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

 

    விண்வெளியில் இனி பறக்கப்போகும்  ராக்கட்டுகளின் வடிவமைப்பு எப்படி இருக்கும், ஆஸ்ட்ராய்டுகளில் சுரங்கம் தோண்டி விலை மதிப்புள்ள தாதுப்பொருள்களை எடுத்தல், ஃப்யூஷன் பவர், கம்ப்யூட்டர் மூளை இணைப்பு, ரொபாட்டுகளின் வடிவமைப்பு, சிந்தடிக் பயாலஜி, உடலின் புது அங்கங்களை பிரிண்ட் போட்டுக் கொள்ளுதல் என்பன போன்ற பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றி இந்த நூல் விரிவாக விளக்குகிறது.

விண்வெளித் தொழில்நுட்பத்தை எடுத்துக் கொண்டால் இன்று விண்ணில் செலுத்தப்படும் ராக்கட்டுகள் ஒரு முறையே செலுத்தப்பட முடியும். ஆனால் எதிர்கால ராக்கட்டுகள் மீண்டும் மீண்டும் விண்ணில் பறக்கத் தக்கவையாக அமைக்கப்படும் ஸ்பேஸ் எலிவேடர் எனப்படும் விணிவெளித் தூக்கி விண்ணில் செல்வதை எளிதாக்கும்!

 

 

ஜெர்வின் ஷால்க் (Gerwin Schalk) என்ற விஞ்ஞானியை இந்த இரட்டையர் சந்தித்தனர். ஷால்க் மூளையைக் கம்ப்யூட்டருடன் இணைக்கும் ஆராய்ச்சியில் வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கிறார். அவர் சொல்லும் விவரம் யாராலும் நம்ப முடியாத அளவு பிரம்மாண்டமான விஷயம். இப்போது க்ளவுட் என்ற கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் போல உலகில் தோன்றியுள்ள மனிதர்களின் அனைத்து மனங்களும் ஒரு க்ளவுடில் இணைக்கப்பட்டு விடும். ஒவ்வொரு மனிதரும் அவரது மூளையை  ஒரு சூப்பர் கம்ப்யூட்டரில் இறக்கி விடுவார். அதனால் உலகில் பிரம்மாண்டமான மாறுதல் ஏற்படும்.

 

  உடல் அங்கங்களில் குறைபாடு கொண்டவர்களுக்கு மூளை- கம்ப்யூட்டர் இணைப்பு அந்தக் குறைபாடைப் போக்கி விடும்!

       ஜெனிடிக் துறை எனப்படும் மரபியல் சம்பந்தமான முன்னேற்றங்களோ வியத்தகு அளவில் மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை நிரந்தரமாக அளிக்கும்.

 

 

     ஜோர்டான் மில்லர் (Jordan Miller) என்ற விஞ்ஞானி அங்கங்களை பிரிண்ட் (Organ printing) போடுவது பற்றி இவர்களிடம் விளக்கினார். இந்த விஞ்ஞானி திசுக்களை வளர்க்கிறார் என்பது பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.

எதிர்காலத்தில் மனிதர்களுக்கு என்ன நடக்கப் போகிறது?

ஒருவர் தனக்குத் தனது கை பிடிக்கவில்லை என்றால் அதை அவரே எரித்துக் கொண்டு, பிடித்த முறையில் கையை டிசைன் செய்து கொண்டு அதை பிரிண்ட் போட்டு கையை உருவாக்கிப் பொருத்திக் கொள்ளலாம். இப்படியே ஒவ்வொரு அங்கமும் உடலில் பொருத்தப்படப் போகிறது!

பறக்கும் கார்கள் என்பதில் மட்டும் 80 வகைகள் இன்றைய ஆய்வில் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இது சாத்தியமான ஒன்றாக ஆகி உலகின் போக்குவரத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிச் சாதனை படைக்கும்.

நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி அத்தியாயத்தின் முக்கிய விஷயத்தை விளக்கும். மூளையையும் கம்ப்யூட்டரையும் இணைப்பது என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டால் எப்படி அவை இணைக்கப்படும், இதுவரை அப்படி ஏன் இணைக்க முடியவில்லை என்பன போன்ற செய்திகள் இடம் பெறும். இரண்டாவது பகுதி இந்த முயற்சியில் தோல்விகள் எப்படி ஏற்படலாம் என்பதை விளக்கும். மூன்றாவது பகுதி இந்த ஆராய்ச்சி வெற்றி பெறும் போது அது எப்படி உலகை மாற்றும் என்பதை விளக்கும். நான்காவது பகுதி நகைச்சுவை ததும்ப கார்ட்டூன்கள் மூலம் இந்த இரட்டையர் ஆய்வின் போது எதிர்கொண்ட நிகழ்வுகளை விளக்கும். நூலில் கார்ட்டூன்களுக்குப் பஞ்சமில்லை.

இந்த மாறுதல்களால் ஒழுக்க சம்பந்தமான ஏராளமான பிரச்சினைகள் எழப் போகின்றன. அங்கங்களை டொனேஷன் தருவது, நினைத்தபடி தனது உடல் அங்கங்களை மாற்றிக் கொள்வது போன்றவை சட்ட சம்பந்தமான பிரச்சினைகளை மட்டும் தரப்போவதில்லை; வாழ்க்கை முறையின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கே ஒரு சவாலை விடப் போகின்றன.

மொத்தத்தில் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மனிதனை ஒரு புதிய வாழ்க்கை முறைக்குக் கொண்டு செல்லப் போகின்றன.

இதை ஒரே வரியில் சொல்வதென்றால் மனிதன், பிரமிக்க வைக்கும் சூப்பர் மனிதன் ஆகப் போகிறான்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

 

 

பிரபல ஹாலிவுட் நடிகையான ஹெடி லமார் ஒரு கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, பெரிய விஞ்ஞானியும் கூட. (ஏற்கனவே இந்தத் தொடரில் இவரைப் பற்றிய சில துணுக்குச் செய்திகளைப் பார்த்திருக்கிறோம்.) ஆஸ்திரியாவைச் சேர்ந்த யூதரான இவர் தொலைத் தொடர்பு அமைப்பில் புதிய முறைகளைக் கண்டு பிடித்து நேச நாடுகளுக்கு உதவினார்.

அவரது தந்தை ஒரு வங்கி அதிகாரி. அவர் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி ஆர்வத்துடன் லமாருக்குச் சொல்வார்.

 

 

ஹிட்லரின் கொடுமைகள் தாங்காமல் யூதர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியது போல லமாரும் தப்பி ஓடினார். ஆனால் அவர் தனது தாயாரைப் பற்றி வெகுவாகக் கவலைப்பட்டார்.

 

யூதர்கள் ஹிட்லரின் கொடுமை தாங்காமல் தப்பித்து கப்பல் மூலமாக ஓடும் போது ஹிட்லர் குண்டுகள் வீசி அவர்கள் கப்பல்களை அழித்தான். லமார் ஒரு இரகசியமான சங்கேத முறையிலான தொலைத்தொடர்பு முறையை அமைத்து நேச நாடுகளுக்குத் தந்தார். இந்த அமைப்பில் உள்ள ரேடியோ சிக்னல் மூலமாக நேச நாடுகளின் போர்க்கப்பல்கள் தங்கள் டார்பிடோகளைக் கட்டுக்குள் வைக்கும். இந்த அமைப்பு கப்பலிலிருந்து வெளியே செல்லும் ரேடியோ சிக்னல்களின் அலைவரிசையை மாற்றிக் கொண்டே இருக்கும். அதனால் நாஜிகளின் போர்க்கப்பல்களுக்கு நேச நாட்டின்  கப்பல்கள் இருக்குமிடம் சரியாகத் தெரியாமல் போனது. அவர்களின் சிக்னலை ஜாம் செய்து, செய்தித் தொடர்பையும் நாஜிக்களால்  தடுக்க முடியாமல் போனது. இதனால் நேச நாடுகளின் கப்பல் படைகள் வலுவுள்ளதாக ஆயின.

 

 

லமாரின் கணவர் நாஜிக்களுக்கு போர் தளவாடங்களை சப்ளை செய்து வந்தவர். ஆஸ்திரியாவிலிருந்து தப்பி ஓடுவதற்கு முன்னர் தன் கணவரிடமிருந்து நாஜிக்களின் டார்பிடோ வகைகளைப் பற்றியும் அவற்றின் வடிவமைப்பையும் நன்கு அறிந்து கொண்ட லமார் தனக்கே உரிய விஞ்ஞான அறிவின் மூலமாக நேச நாடுகளுக்கு புது டார்பிடோவை வடிவமைத்துக் கொடுத்தார்.

இது நாஜிக்களின் வடிவமைப்பை விடச் சிறந்ததாக அமைந்தது.

 

நடிகை ஒருவர் உலகப் போரில் விஞ்ஞானியாக சேவை செய்தது ஒரு அதிசயமான செய்தி!

***

 

 

 

மனு நீதி நூல்- உலகின் முதல் சட்டப் புத்தகம்- Part 1 (Post No.4408)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 15-22

 

 

Post No. 4408

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மனு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலேயே வருவதாலும்,மனு சரஸ்வதி நதி தீரம் பற்றிப் பேசுவதாலும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவும் பேசாததாலும் அவர் ஹமுராபி (Hamurabi, 1810 BCE) போன் றோருக்கு முந்தியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலப்போக்கில் அதில் புதுச் சரக்கு சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. மனு நீதி நூலை முழுதுமாகப் படிப்போருக்கு முரண்பட்ட சில விஷயங்கள் வருவதை காணலாம். ஆகவே மனு நீதி எனப்படும் மானவ தர்ம சாஸ்திரத்தை ஒவ்வொருவரும் படித்து சரியான முடிவுக்கு வரலாம். நானும் எனது கருத்துக்களை ஆங்காங்கே உதிர்க்கிறேன்.

 

அம்பேத்கர் போன்றோர் கோபத்தில் எரித்த நூல் இது. ஆனால் காந்தி போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டனர். மனு சொல்லும் விஷயங்களும் அவருடைய அணுகு முறையும் உலகம் வியக்கும் ஒரு புதுமையாகும். முழுக்கப் படித்த பின்னரே இதை எடை போட வேண்டும் என்பது என் கருத்து.

மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647

 

மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12

 

வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு

என் னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.

 

முதல் அத்தியாயத்தில் வரும் விஷயங்கள்

 

மனுவின் சிறப்பு

வேதத்தின் சிறப்பு

பிரளயம்

பிரபஞ்சத்தின் தோற்றம்- படைப்பு

நாராயண சப்,தத்தின் பொருள்

பிரம்மனின் தோற்றம்

மஹத் தத்துவம் முதலான சிருஷ்டி

தேவர் முதலானோரின் தோற்றம்

பிராணிகளின் தொழில்

விராட புருஷனின் தோற்றம்

மநுப் பிரஜாபதியின் தோற்றம்

மரீசி முதலானோரின் தோற்றம்

சராசரங்க ளின் உற்பத்திக் கிரமம்

தினப் பிரளயம்

மஹாப் பிரளயம்

இந்த நூல் தோன்றிய வரலாறு

காலக்      கணக்கு

யுகக் கணக்கு

மன்வந்தரக் கணக்கு

யுக தருமம்

வர்ண தர்மம்

பிராமணன் சிறப்பு

இதில் சொல்லப்படும் விஷயங்கள்

 

முதல் அத்தியாயம்

1.சுவாயம்பு மனு மனதை ஒருமுகப் படுத்தி பிரம்ம நிஷ்டையில் இருக்கி றார். அப்போது ரிஷி முனிவர்கள் அவரிடம் வந்து, அவரைப் பூஜித்து, அவர் சொல்லப்போகும் விஷயம் என்ன வென்று கேட்கின்றனர்.

 

2.தெய்வீக புருஷரே! நான்கு வர்ணத்தாருடைய, மற்றும் இடைப்பட்ட ஜாதிகளுடைய தருமங்களை முறையாக வரிசையாக எங்களுக்குச் சொல்ல வேண்டும்.

விளக்கம்: 4 வர்ணம்- பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர்

இடைப்பட்ட சங்கர ஜாதிகள்-அநுலோமன், பிரதிலோமன், அந்தராளன், விராத்தியன்

தெய்வீக புருஷர்- பரிபூரணமான ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகியவற்றை இயல்பாக உடையவர்.

3.உங்களுக்கு மட்டுமே சகல வேதத்தின் உண்மையும் தெரியும். அளவிடமுடியாத, சாஸ்திரம், அறியாதவர்களால் அறியப்படாத உண்மையை அறிந்தவர் நீர் ஒருவரே. யாகாதி கர்மங்களையும், ஆத்ம ஞானத்தையும், அக்னிஷ்டோமம் முதலிய கர்மங்களின் பலனையும் அறிந்தவர் நீர் ஒருவரே.

 

4.பெரிய, உயர்ந்த மஹரிஷிகளின் சந்தேகங்களையும் தெளிவிக்கத்தக்க ஞான தேஜஸ் உடைய அந்த மநுப் பிரஜாபதியானவர், இப்படிக்கேட்ட ரிஷிகளைப் பூஜித்து இதோ கேளுங்கள் என்று சொல்லத் தொடங்கினார்.

 

5.பிரளய காலம் பற்றி முதலில் சொல்லத் தொடங்கினார்.  இந்த உலகமானது முதலில் மூலப் பிரக்ருதியில் ஐக்கியமாய், இருளில் மறைந்த பொருள் போல கண்ணுக்குத் தோன்றாததாகவும், அடையாளமில்லாததாகவும், சப்தத்தால் அறிய முடியாததாகவும், தர்க்க நூல் அறிவு கொண்டு ஊகிக்க முடியாததாகவும் , உறங்கினது போல இருந்தது.

 

6.பிரளய காலம் முடிந்த பின்னர், நம்மைப் போல கர்ம வினையினால் பிறக்காமல், தன்னிச்சையால் தோன்றும் ஸ்வயம்புவான (தான் தோன்றி) கடவுளானவர் ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களையும் பிரகாசிக்கச் செய்பவராய்  தோன்றினார். அவரை புற இந்திரியங்களால் அறிய முடியாது; ஒருவராலும் தடுக்க முடியாத சக்தி உடையவர் அவர்.

 

 

7.ஐம்புலன்களால் அறிய முடியாதவர்; மனத்தினால் மட்டும் அறியத்தக்கவர், உருவமில்லாதவர்; சிந்திக்கமுடியாத மஹிமை உடையவர் பிறப்பு-இறப்பில் லாதவர், சகல வேத புராணங்களினால் பிரசித்தமானவர், தாமாகவே பிரகாசித்தார்.

8.அந்த பரமாத்மாவானவர் எல்லா உயிர் இனங்களுக்கும் உறைவிடமான தன் உடலில் இருந்து பல்வேறு உயிர்களைத் தோற்றுவிக்க எண்ணினார். முதலில் தண்ணீரைப் படைத்தார். அதில் சக்தி ரூபமான விதையை விதைத்தார்.

 

9.அந்த விதையானது இறைவனின் இச்சையினால் தங்க நிறமான முட்டையாக மாறியது. அதில் பிரம்மனைப் படைத்து அவருக்குள் நுழைந்தார்; அந்தப் பிரம்மனுக்கு பிதாமகன் என்று பெயர்.

  1. அந்த நீரானது நரன் என்ற பெயருடைய இறைவனால் படைக்கப்பட்டதால் நார என்கிற பெயரைப் பெற்றது. அந்த நாரம் என்கிற பெயரை உடைய நீரில் வசிப்பதால் நாராயண என்று பெயர் பெற்றது (நார+ அயன) நார=நீர், அயன= வீடு

என் கருத்து

முதல் பத்து ஸ்லோகங்களில் BIG BANG பிக் பேங் எனப்படும் மாபெரும் பிரபஞ்சத் தோற்றம் பேசப்படுகிறது.

மேலும் நீரின்றி அமையாது உயிரினம் என்ற விஞ்ஞானக் கருத்தும் பேசப்படுகிறது

கிரேக்கர்கள் முதலியோர் நம்மிடமிருந்து கடன் வாங்கிய ‘பஞ்ச பூதம்’, முதல் பத்து ஸ்லோககங்களில் உள்ளது

பிரபஞ்சம், உலகம் எல்லாம் கோள வடிவில் (Globular, round), முட்டை வடிவில், உருண்டை வடிவில் இருப்பதை கண்டு பிடித்ததும் இந்துக்களே. அந்தக் கருத்தும் இங்கே இருக்கிறது. இதற்கு முன்னர் பிராமண நூல்களிலும் வேதத்திலும் உள்ளது.

 

முதல் பத்து ஸ்லோகங்களிலேயே அறிவியல் உண்மைகளைக் காண்கிறோம். அது மட்டுமல்ல. மொழி இயல் உண்மை ஒன்றுமுளது. நீர் என்னும் தமிழ்ச் சொல், ரிக் வேதத்தில் இருப்பதாக சுநீத் குமார் சாட்டர்ஜி போன்ற அறிஞர்களும் ஏமாந்துபோயினர். ஆனால் நீரெய்ட்ஸ் (Nereids = Water Nymphs)  கிரேக்க மொழியில் இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு சொல் கிரேக்க மொழியில் இருந்தால் அது சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை மொழி இயல் அறிஞர்கள் ஒப்புக்கொள்வர். ஆனால் அதுவும் தவறு என்பதைது என் ஆராய்ச்சிக் கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன். கிரேக்க மொழியில் 30, 40 பழைய தமிழ்ச் சொற்கள் இருப்பதைப் பட்டியலிட்டுள்ளேன். உண்மை என்னவென்றால், உலகம் முழுதும் நம்மவர் நாகரிகத்தைப் பரப்பியபோது இவைகளும் அங்கே சென்றன. ஆக மூல மொழி சம்ஸ்கிருதம்-தமிழுக்கும் முந்திய மூல மொழி ஆகும்.

 

TAGS:– மனு நீதி, மனு ஸ்மிருதி, அர்த்தம், ஸ்லோகம், பிரபஞ்ச உற்பத்தி

 

॥ मनुस्मृति अथवा मानवधर्मशास्त्रम् ॥

 

अध्याय १

मनुमेकाग्रमासीनमभिगम्य महर्षयः ।

प्रतिपूज्य यथान्यायमिदं वचनमब्रुवन् ॥ Bछ्.Sछ्॥

 

भगवन् सर्ववर्णानां यथावदनुपूर्वशः ।

अन्तरप्रभवानां च धर्मान्नो वक्तुमर्हसि ॥ Bछ्.Sछ्॥

 

त्वमेको ह्यस्य सर्वस्य विधानस्य स्वयंभुवः ।

अचिन्त्यस्याप्रमेयस्य कार्यतत्त्वार्थवित् प्रभो ॥ Bछ्.Sछ्॥

 

स तैः पृष्टस्तथा सम्यगमितोजा महात्मभिः ।

प्रत्युवाचार्च्य तान् सर्वान् महर्षींश्रूयतामिति ॥ Bछ्.Sछ्॥

 

आसीदिदं तमोभूतमप्रज्ञातमलक्षणम् ।

अप्रतर्क्यमविज्ञेयं प्रसुप्तमिव सर्वतः ॥ Bछ्.Sछ्॥

 

ततः स्वयंभूर्भगवानव्यक्तो व्यञ्जयन्निदम् ।

महाभूतादि वृत्तोजाः प्रादुरासीत् तमोनुदः ॥ Bछ्.Sछ्॥

 

योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।

सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥

सोऽभिध्याय शरीरात् स्वात् सिसृक्षुर्विविधाः प्रजाः ।

अप एव ससर्जादौ तासु वीर्यमवासृजत् ॥ Bछ्.Sछ्॥

 

तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् ।

तस्मिञ्जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामहः ॥ Bछ्.Sछ्॥

 

आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।

ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ Bछ्.Sछ्

 

 

 

CHAPTER I.

  1. The great sages approached Manu, who was seated with a collected mind, and, having duly worshipped him, spoke as follows:
  2. ‘Deign, divine one, to declare to us precisely and in due order the sacred laws of each of the (four chief) castes (varna) and of the intermediate ones.
  3. ‘For thou, O Lord, alone knowest the purport, (i.e.) the rites, and the knowledge of the soul, (taught) in this whole ordinance of the Self-existent (Svayambhu), which is unknowable and unfathomable.’
  4. He, whose power is measureless, being thus asked by the high-minded great sages, duly honoured them, and answered, ‘Listen!’
  5. This (universe) existed in the shape of Darkness, unperceived, destitute of distinctive marks, unattainable by reasoning, unknowable, wholly immersed, as it were, in deep sleep.
  6. Then the divine Self-existent (Svayambhu, himself) indiscernible, (but) making (all) this, the great elements and the rest, discernible, appeared with irresistible (creative) power, dispelling the darkness.
  7. He who can be perceived by the internal organ (alone), who is subtile, indiscernible, and eternal, who contains all created beings and is inconceivable, shone forth of his own (will).
  8. He, desiring to produce beings of many kinds from his own body, first with a thought created the waters, and placed his seed in them.
  9. That (seed) became a golden egg, in brilliancy equal to the sun; in that (egg) he himself was born as Brahman, the progenitor of the whole world.
  10. The waters are called narah, (for) the waters are, indeed, the offspring of Nara; as they were his first residence (ayana), he thence is named Narayana.

 

-தொடரும்

புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post No.4407)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 10-51 am

 

 

Post No. 4407

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழர்களின் பண்பாடு இந்துப் பண்பாடே. அவர்களுக்கு பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், மறு பிறப்பு, உருவ வழிபாடு, விதி, கர்ம வினை, யாகம், யக்ஞம் முதலியவற்றில் நம்பிக்கை உண்டு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தின் 18  மேல் கணக்கு நூல்களிலும் , திருக்குறள் அடங்கிய 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன. தொல்காப்பியமோவெனில் அறம், பொருள், இன்பம் (தர்ம-அர்த்த- காம) என்ற சொற்றொடரைப் பல இடங்களில் பகர்கின்றது.

 

இப்பொழுது நரகம் பற்றி மட்டும் காண்போம்.

 

ரிக் வேதத்தில் ஒரே ஒரு நரகம் பற்றி மட்டும் காண்கிறோம்.

மத நம்பிக்கையற்றோரை அவன் அதள பாதாளத்தில் தள்ளுகிறான் என்ற வாசகம் (9-73) ரிக்வேதத்தில் வருகிறது மனு நீதி நூல் 21 வகை நரகங்களை நாலாவது அத்தியாயத்தில் பட்டியல் இடுகிறது. சிவ புராணம் 28 வகை நரகங்களைச் சொல்லும். பவிஷ்ய புரா ணக் கதையில் யமலோகத்தில் நரகப் பகுதியில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி வருகிறது ஆனால் ரிக் வேதத்தில் சித்திரவதை முதலியன பற்றி இல்லை.

 

மரம் வெட்டினால் நரகம், பொய் சொன்னால் நரகம், பசுவைக் கொன்றால் நரகம்– என்று ஒவ்வொரு தப்புக்கும் ஏற்ற 21 வகையான நரகங்கள் பற்றி மனு பேசுகிறார். அதை மற்ற  ஒரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

 

தமிழில் அளறு (Tamil) , நிரயம் (Sanskrit word) என்ற இரு சொற்களில் நரகம் குறிப்பிடப்படுகிறது. சமயம் தொடர்பான சொற்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதமாகவோ, அல்லது தமிழ் மயமாக்கப்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களாகவோ இருக்கும் ( எ.கா. யூப, ஆகுதி). ஆனால் நிரயம், அளறு என்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதால் இது இற க்குமதி செய்யப்பட்ட விஷயமன்று, தமிழர்களின் பழைய நம்பிக்கை என்பது புலப்படும்.

 

அளறு என்பது சங்க காலத்தில் சேறு, சகதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, திருவள்ளுவர் காலத்தில் நரகம் என்ற பொருளுக்கு ‘பதவி உயர்வு’ பெற்றுவிடுகிறது!

சுவர்க்கம் (துறக்கம்) பற்றிப் பெரும்பாலான இடங்களில் வருவதால் தமிழர்கள் புண்ணியவான்கள் என்பதும் பெறப்படும்.

 

முதலில் புறநானூற்று நரகத்தைப் பார்ப்போம்:-

 

இது மிகவும் பழைய பாட்டு. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூஉத் தலையார் பாடியது.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக! என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது:-

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,

கானக நாடனை! நீயோ, பெரும!

நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:

அருளும் அன்பும் நீக்கி, நீங்கா

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

குழவி கொள்பவரின், ஓம்புமதி!

அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே”.

 

பொருள்:

எருமை போன்ற கரிய பாதைகள் உடைய இடமெல்லாம் பசுக்கூட்டம் போல யானைகள் உலவும் காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்! ஆகையால் ஒன்று சொல்கிறேன், கேள். அருளையும் (கருணை) அன்பையும் நீக்கியவர்கள் நரகத்தில் வீழ்வர். அத்தகையோரோடு சேராதே. பெற்ற தாய் குழந்தையைப் பாதுகாப்பது போல, உன்னுடைய நாட்டு மக்களைக் காத்து வருவாயாக. அரச பதவி எளிதில் கிடைப்பதன்று. ஆகையால் கருணையுடன் செயல்படு.

 

(நரகம் பற்றிய கருத்து, ரிக் வேதக் கருத்தை ஒட்டிச் செல்கிறது).

 

திருக்குறளில் நரகம்!

 

பேதை என்பவன் யார் தெரியுமா? ஒரு பிறவியிலேயே எல்லா அட்டூழியங்களையும் செய்து ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைச் சேர்த்துக் கொள்பவன் பேதை!

 

ஒருவருக்கு லாட்டரி பரிசு கிடைத்துவிட்டால், அவனுக்கு என்ன கவலை? இனி ஏழு தலைமுறைகளுக்குக் கவலை இல்லை என்போம்.

ஒருவனுடைய தந்தை நிறைய பணத்தை ஒருவனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்தால், அவன் எதற்கு வேலைக்குப் போகவேண்டும்;  அவன் அப்பன் ஏழுதலை முறைக்கான சொத்தை விட்டுச் சென்றிருக்கிறானே! என்று பேசுவது உலக வழக்கு.

 

இது போல ஒருவன் எல்லா தீய செயல்களையும் செய்வதைப் பார்த்தான் வள்ளுவன்; அம்மாடி! கவலையே இல்லை; இவன் ஏழு தலைமுறைகளுக்கு அல்லது ஏழு பிறவிகளுக்கு வேண்டிய நரகத் துன்பத்தை ஒரே பிறவியில் செய்து விட்டானே! சபாஷ்! சபாஷ்! என்கிறார் வள்ளுவர்.

 

இன்னுமொரு குறளில் செப்புவான்:

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு (919)

 

ஆரியர்களுக்கு எதிர்ப்பதம் பூரியர்கள்; இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஸ்பூரியஸ் SPURIOUS என்பது வந்தது

 

பொருள்

ஒழுக்கம் இல்லாத வேசிகளின் தோள், கீழ்மக்கள் (பூரியர்) சென்று விழும் நரகம் ஆகும்.

 

இதையே கிருஷ்ண பகவான் கீதையிலும் புகல்வார்:

 

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:

காமக்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத் (கீதை 16-21)

பொருள்:

ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; அவை காமம், க்ரோதம், லோபம்; அதாவது பெண்வழிச் சேரல், சினம் அல்லது கோபம், பேராசை. ஆகையால் இம்மூன்றையும் விலக்கிவைக்க வேண்டும்.

 

 

கீதை போன்ற சமய நூல்களில் நிறைய இடங்களில் நிரயம் பற்றிக் காணலாம்.

இறுதியாக இன்னும் ஒரு குறள்:-

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

 

ஒருவன் மாமிசம் சாப்பிட மாட்டான் என்ற தர்மத்தின் அடிப்படையில் உயிர் வந்து, உடம்பில் தங்கி இருக்கிறது. அப்படி அவன் அதையும்  மீறி மாமிசம் சாப்பிட்டால், நரகம் வாயைத் திறந்து ‘லபக்’ என்று ஆளை விழுங்கிவிடும்.  பின்னர் நரகத்தின் வாய் திறக்காவே திறக்காது.

ஆளின் கதி– சகதி (அளறு என்பதற்கு சேறு, சகதி என்றும் நரகம் என்றும் பொருள் உண்டு; அலறு என்றாலும் பொருத்தமே. மக்கள் அலறும் இடம்தானே!!

திருவள்ளுவரின் கற்பனை மிகவும் அருமையான கற்பனை;  ‘நீ ஒரு உயிரைக் கொன்று முழுங்கினாய் அல்லவா? இப்பொழுது பார்! உன்னை நான் விழுங்கி விட்டேன்; இனி மேல் வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று நரகம் சொல்லுமாம்.

 

திருக்குறள் பொது மறையன்று. யார் இந்து மதக் கொள்கைகள், கொல்லாமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோரோ அவர்களின் மறைதான் திருக்குறள்.

 

இதோ நான் முன் சொன்ன கதை

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் …

https://tamilandvedas.com/…/பவிஷ்ய-புராணத்தி…

 

1 Oct 2017 – பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்: …யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம் … கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி …

 

TAGS: நரகம், அளறு, நிரயம், பாவம், புறநானூறு, மனு

–சுபம், சுபம் —

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்! (Post No.4406)

Written by S.NAGARAJAN

 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-24 am

 

 

Post No. 4406

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 2

பிறவி ஏன்? முக்தி எப்போது – கட்டுரை எண் 4388 வெளியான தேதி ̀12-11-17 – இதைத் தொடர்ந்து வெளியாகும் கட்டுரை இது.

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்!

 

ச.நாகராஜன்

அத்வைத நோக்கில் புண்ணிய, பாவ கர்மங்களைப் பற்றி இனி காண்போம்,

 

*

 

சரீர பரிக்கிரகத்தினால் ஆன்மாவுக்குத் துக்கம் எனில். அது எத்தனை விதம்?

புண்ணியம், பாவம், மிஸ்ரம் என்று மூன்று விதம்.

 

இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?

புண்ணிய கர்மத்தினால் தேவாதி சரீரம் உண்டாகும்.

பாவ கர்மத்தினால் மிருகாதி சரீரம் உண்டாகும்.

புண்யமும் பாவமும் இணைந்த மிஸ்ராதி (கலந்த) கர்மத்தினால் மனுஷ்யாதி சரீரம் உண்டாகும்.

 

இவைகளில் வித்தியாசம் உண்டா?

அத்ருஷ்டம், மத்யமம்,சாமான்யம் என்று தனித் தனியாக மூன்று வித பேதங்கள் (வேறுபாடுகள்) உண்டு.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ம பந்தத்தினால் தான் நானாவித ஜனபேதம் உருவாகிறது.

எப்படி எனப் பார்ப்போம்.

ஹிரண்யகர்ப்பாதி சரீரம் புண்யோத்க்ருஷ்ட சரீரம்.

இந்திராதி சரீரம் புண்ய மத்யமம்.

யட்ச, ராக்ஷஸ, பிசாசம் புண்ய சாமானியம்.

 

இந்த மூன்று வித கர்மங்கள் எதனால் ஏற்படுகிறது?

மூன்று வித கரணங்களினால்.

 

அப்படியா? ஆத்மாவினால் அல்லவா?

ஆத்மா அவிகாரி, நிஷ்கிரியன் (அவத்த பேதம்) அவயவம் அற்றவனாவதால் கர்த்ருத்வம் கிடையாது.

 

ஆனால் ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் இருப்பது போலத் தோற்றமளிக்கிறதே. இது ஏன்?

அத்தியாசிகமே. (அதாவது ஆரோபிதமே)

 

புரியவில்லை. ஆரோபிதம் என்றால் என்ன?

ஒன்றின் தர்மங்கள் வேறொன்றில் காணப்படுதலே ஆகும்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஓடம் ஒன்று நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஓடத்தின் ஓட்டம் நதிக்கரையில் இருக்கின்ற மரங்களிலும், அசையாமல் ஓரே இடத்தில் இருக்கும் தன்மையை உடைய  மரங்களின் தர்மம் ஓடத்திலும் ஆரோபிப்பது போலாகும்.

 

நல்லது, மூன்று கரணங்களும் அசேதனமாக இருக்கின்ற போது, அதற்கு எப்படி கர்த்ருத்வம் உண்டாகும்?

(குறிப்பு: சேதனம் என்றால் உயிருள்ளவைகள். ஜங்கமம் என்று சொல்லப்படும். அசேதனம் என்றால் ஸ்தாவரம் , அதாவது உயிரில்லாத ஜட வஸ்துக்கள்)

அசேதனமன நீரும், காற்றும் மரம் முதலானவற்றை வேருடன் பிடுங்கித் தூக்கிக் கொண்டுபோவது போல,தூக்கி எறிவது போல கர்த்ருத்வம் காணப்படுகிறதில்லையா?

அதே போல மூன்று கரணங்களுக்கும் வேறு கரணங்களின்றிக் கர்த்ருத்வம் காணப்படுகிறது.

 

இந்த மூன்று வித கரணங்களினால் செய்யப்படுகின்ற கர்மங்கள் யாவை?

ஸவிசேஷ சிந்தை, நிர்விசேஷ சிந்தை, பரலோக சிந்தை, பக்தி ஞான வைராக்கிய சிந்தை என்பவையேயாம்.

இவைகளில் மனதினால் செய்யப்படுபவை புண்ணிய கர்மங்கள்- விஷய சிந்தை.

மற்றவர்களுக்கு உபகார சிந்தை,

வேத சாஸ்திரங்களில் பற்றுள்ள சிந்தை,

தர்மம், அதர்மம் என்கிற சிந்தை,

இவை போன்ற புத்தி விகாரங்கள் மன சம்பந்தமான பாவ காரியங்கள்.

அவிசேஷ, நிர்விசேஷ, புண்ய விஷய சிந்தை முதலான பாவ சிந்தையுடன் கலந்து அநுஷ்டிப்பது மிஸ்ர கர்மங்களாகும்.

வேத சாஸ்திரப்படி பகவத் சங்கீர்த்தனம், சத்தியம், பரோபகார வார்த்தை, மிருதுவாகப் பேசுதல், பூர்வ பாஷணம் (தானாக முனவந்து முதலில் பேசுதல்) ஆகியவை வாசிக புண்ய கர்மங்கள் ஆகும்.

வேத சாஸ்திர தூஷணை (இழித்துப் பேசுதல்) வேத தூஷணை,அசத்தியம், கடும் சொல், பொய் சொல்லுதல், கேலி செய்தல் ஆகியவை வாக்கினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் ஆகும்.

 

வேதாத்தியயனம், தேவ பூஜை காலங்களில் பரநிந்தை, கேலி, அசத்தியம் ஆகியவற்றை அனுஷ்டித்தல் மிஸ்ர பாவ கர்மங்களாகும்.

இப்படியே பலவித பாவ கர்மங்கள் உண்டு.

பிரம்ம ஞானம் உண்டாயிருந்தாலும் கூ மூன்று வித கரணங்களையும் புண்ய கர்மத்திலேயே நிறுத்த வேண்டும்.

***

HELL in Rig Veda and Tamil Veda!(Post No.4405)

Written by London Swaminathan 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 20-33

 

 

Post No. 4405

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Hell and Heaven figure prominently in Hindu mythology. We read about in the oldest book in the world Rig Veda! There is not a single religious scripture without a reference to the hell. References to Hell are found in the Sangam Tamil literature and post Sangam Tamil book Tirukkural, the Tamil Veda.

 

Though later Hindu scriptures refer to various hells, Rig Veda only one hell is mentioned. It is a dark place; but no mention of torture or suffering is there. We read, “knowing he beholds all creatures; he hurls the hated and the irreligious into abyss” (RV 9-73)

 

In Manu Smrti, the Hindu Law Book, 21 hells are enumerated. Some of the name of the hells are: Darkness, Frightful, Burning, Place of Spikes, Frying Pan, Thorny Tree, Sword Leaved Forest and Place of Iron Fetters.

A liar would go to Raurava (dreadful) hell. He who kills a cow would go to the Rodha hell (hell of obstruction).

A horse stealer falls into the red hot iron hell. The wicked person who eats food before offering it to gods or ancestors or guests falls into where, instead of food, saliva is given to him. ( My comments: If people followed this rule and shared their food there woudn’t be any poverty, any beggar or communism in the world!).

TREE CUTTING – A SIN!

He who cuts down trees goes to the Hell of Sword Leaved Trees. So much environmental awareness was there during Manu’s days! Manu has listed the hells to fit each crime perfectly. He is a great law maker.

 

I have already the Bhavishya Purana story” about tortures in the heaven:–

“Yama was exceedingly pleased with a girl named Vijaya, a Brahmin’s daughter. When she first saw him she was greatly alarmed, alike at his appearance and on learning who he was. At length he allayed her fears and he consented to marry him.

 

On her arrival at Yama’s city, her husband cautioned her and assured her all would be well if she never visited the southern portion of kingdom. After a while curiosity overpowered her, and thinking that a rival wife may live in the Southern region and that is why Yama asked her never to visit that area, she visited the forbidden region.

 

There she saw the torments of the wicked, and alas! amongst these she recognised her own mother. Greatly distressed she appealed to Yama to release her mother but Yama told her that was impossible unless someone living on earth perform a certain sacrifice, and transfer the act of the merit of the act to this poor woman then suffering. After some difficulty, a woman was found willing to perform the sacrifice, and Vijaya obtained her release.”

 

Siva Purana gives a list of 28 types of hell. Each one has five levels!

 

A Scene from Heaven

 

HELL in Tamil Literature

Tamils have pure Tamil words for the hell, not Tamilized Sanskrit words. This shows that the belief was very old and independent of any Puranic influence. Alaru and Nirayam are found in Tirukkural (Tamil Veda) and Pura Nanuru (Sangam Tamil Book).

NIRAYAM (hell) – Aka Nanuru-67, Pura Nanuru -5

There are more references to Heaven in Tamil. They looked more at the positive side of the life.

From the Tamil Veda Tirukkural

ALARU (hell):- Kural 255, 835 and 919

“Abstinence from meat-eating contributes to this maintenance of life. Therefore if  a man has once committed the sin of eating meat the HELL which swallowed him will not open its mouth again to release him _ Kural 255

In one brief birth a fool can gain

Enough HELL for seven births pain- Kural 835

The delicate shoulders of harlots with fine jewels are a HELL into which are plunged the ignorant vile- 919

 

Jeevaka Chintamani, one of the Five Tamil Epics, also has reference to hell in several places (E.g.1235)

 

Tamil and Sanskrit inscriptions curse those who defile or harm the inscriptions or the things mentioned in it to go to hell.

 

Scriptures like Bhagavad Gita have lot of references and one of them is as follows:

The gateway of this HELL leading to the ruin of the soul is three fold, lust, anger and greed Therefore these three, one should abandon. The man who is released from these, the three gates to darkness, Arjuna, does what is good for his soul and then reaches the highest gate.

It is very interesting to see the belief of sinners going to hell is found from the Rig Veda to latest poems in Tamil.

 

(Mr Rajendra Gupta has commented that NIRAYA for hell is a Sanskrit word. Thanks)

–Subham–

 

 

பெண் சிரித்தாள்! படை எடுத்தான் பாண்டியன்!! (Post No.4404)

Written by London Swaminathan 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 17-43

 

 

Post No. 4404

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பெண்கள் சிரித்தால் போர் மூளும் என்பது மஹா பாரத காலத்திலும் உண்மை; 500 ஆண்டுகளுக்கும் முன்னரும் உண்மை!

மயன் கட்டிய மாளிகையில்,  சலவைக் கல் தரை, கண்ணாடி போல, பளபளத்தது. அதைத் தண்ணீர் என்று நினைத்த துரியோதனன், தன் பட்டாடை  நனைந்து விடப் போகிறதே என்று தூக்க, அதை மேலே மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த திரவுபதி அம்மாள் நகைக்க, துரியோதணனுக்குக் கோபம் வர, தீராப் பகை ஏற்பட்டு போராய் முடிந்ததை நாம் மஹாபாரதத்தில் படித்துள்ளோம்.

 

 

இதே போல 500 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாட்டிலும் நடந்தது. ஆனால் மாபாரதப் போர் போல அழிவு ஏற்படுத்தாமல் ஒரு நூல் உதிக்கக் காரணமாய் அமைந்தது!

பாண்டியர் பரம்பரையில் வரதுங்க பாண்டியன்,  அதி வீரராம பாண்டியன் என்று இரு சஹோதரர்கள் இருந்தனர். மூத்தவனான வரதுங்கன் தன் மனைவியுடன், தவம் மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்தான். அவன் திருக்கருவை நல்லூரில் வசித்தபோது, இளையவனான அதிவீரராம பாண்டியன், தென்காசியில் இருந்துகொண்டு அரசோச்சி வந்தான். அவன் சைவ புராணங்களின் சாரமான பிரம்மோத்தர காண்டம் என்னும் அரிய நூலை மொழி பெயர்த்தான். திருக்கருவை நல்லூரில் வீற்றிருக்கும் சிவ பெருமான் மீது வெண்பா அந்தாதி,  கலித்துறை அந்தாதி ஆகியன பாடி சிவநேசச் செல்வனாய் வாழ்ந்து வந்தான்.

 

அவன் நள சரிதத்தையும் கவிதை வடிவில் யாத்தனன். பாதி நூல் வரைந்த காலையில், அதனை வரதுங்கனிடம் காட்டினன். இதென்ன அரனைத் துதிக்காமல் அரசன் துதி பாடுகிறாயே (அரன்= சிவன்; அரசன்= நள மஹாராஜா) என்று வருத்தப்பட்டனன். அண்ணன் இப்படிச் சொன்னதால், உப்பு சப்பில்லாமல் அதை ஒருவாறு பாடி முடித்தான். அதனால் அதன் பின்பகுதி சுவையற்றதாயிற்று.

 

அத்தோடு நில்லாமல், அதைத் தமையன் மனைவியிடம் போய்க் காட்டினான். அண்ணியாவது பாராட்டுவாளோ என்ற ஒரு நப்பாசை. அவளோ  கற்றுணர்ந்த பேரரசி; தமிழரசி; புன் சிரிப்புடன் அதைத் திருப்பிக் கொடுத்தாள். எதற்காக்ச் சிரிக்கிறீர்கள்? உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டான் அதிவீரராமன்.

 

அவள் சொன்னாள்: “வேட்டை நாய், வேட்டைக்குப் போகும்போது, வேகமாகச் செல்லும்; வேட்டை முடிந்து திரும்பும்போது ஏங்கி இளைத்து வருமன்றோ! அது போலத் தான் உமது காவியம்” என்று சொல்லி சிரித்தாள்.

இது அவன் செவியில் நாராசம் பாய்ச்சியது போல இருந்தது; கோபத்துடன் வெளியே சென்றான். நால்வகைப் படைகளைத் திரட்டிக்கொண்டு படை எடுத்து வந்தான். அண்ணனுக்குத் தூதும் அனுப்பினான். அந்த தூதன் கொண்டுவந்த செய்தியைப் பார்த்த வரதுங்கன்  , “நீ மார்த்தாண்டன் மைந்தனையும், விபீஷணனையும் பஞ்சவரிற் பார்த்தனையும் எண்ணாமல், பரத-ராகவருடைய அன்பை எண்ணுவாயாக” என்ற கருத்துப் பட ஒரு வெண்பாப் பாடலை எழுதி அனுப்பினன்.

அதைப் பார்த்தவுடன், சினம் தணிந்து, வெட்கம் மேலிட, அண்ணன் காலில் விழுந்து, வணங்கி, என் வாழ்வுக்கு வழிகாட்டுவாயாக என்று வேண்டினான் அதி வீர ராம பாண்டியன்.

உடனே அண்ணனான வரதுங்கன், “தம்பி, காசி காண்டத்தைத் தமிழில் மொழி பெயர்; உன் குற்றம் எல்லாம் மறையும்” என்றான். அதற்குப் பின்னர் அண்ணியார் காலடியிலும் விழுந்து வணங்கி ஆசி பெற்று சம்ஸ்கிருதத்தில் உள்ள காசிக் காண்டத்தைத் தமிழில் வடித்தான். நறுந்தொகை என்னும் நீதி நூலையும் இயற்றினான். அதன் மூலம் அவன் புகழ் தமிழ் கூறும் நல்லுலம் முழுதும் பரவிற்று. அதற்குப் பின்னர் கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதியும் பாடினன். முப்பது பாடலடங்கிய அம்பிகை மாலை, இலிங்க புராண தமிழ் மொழி பெயர்ப்பு என்று மேலும் பல நூல்களும் அவருடைய எழுதுகோல் மூலம் தமிழர்களுக்குக் கிடைத்தது.

–Subham—

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்? (Post No.4403)

Written by S.NAGARAJAN

 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-00 am

 

 

Post No. 4403

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீ  ஜோஸியம் பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்?

 

ச.நாகராஜன்

நமது முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்த்வர்கள். தேவதைகளின் அனுக்ரஹத்திற்கு உரிய வழிகளைக் கண்டவர்கள். மஹாசக்தியின் அருள் வேண்டி உள்ளுணர்வால் தாம் கண்டவற்றை மனித குலத்திற்கு சாஸ்திரமாகத் தந்தவர்கள்.

 

 

எடுத்த காரியம் வெற்றியைப் பெறவும் அநுகூலமாக முடியவும் அவர்கள் பல எளிய வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த வகையில் வார நாட்கள் ஏழிலும் எதை எதை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருளுரை பகர்ந்திருக்கின்றனர். எந்த நாளில் எந்தத் திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அருளி இருக்கின்றனர்.

 

 

அதன் தொகுப்பு இதோ:-

 

எந்த திசையில் எந்த நாளில் செல்ல் வேண்டும் ?

 

அங்காரபூர்வே கமனே ச லாப:

    சோமே சனௌ தக்ஷிணம்ர்த்த லாபம் I

புதே குரௌ பச்சிமகார்யசித்தி

   ரவி ப்ருகௌ சோத்தரமர்த்த லாப: II

 

 

உபஜாதி என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தின் பொருள் : :-

செவ்வாய்க்கிழமைகளில் கிழக்குத் திசையில் சென்றால் ஒருவன் லாபத்தை அடைவான்.

திங்கட்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் தெற்குத் திசையில் சென்றால் லாபம் உண்டாகும்.

புதன்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் மேற்குத் திசையில் சென்றால் எடுத்த காரியம் வெற்றியை அடையும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வடக்குத் திசையில் சென்றால் செல்வம் பெருகும்.

 

அடுத்து எந்த நாளில் எதை எதைச் செய்யலாம் என்பதற்கான அறிவுரைகளைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருபாபிஷேக மாங்கல்ய யானாஸ்த்ர கர்ம ச I

ஔஷதா ஹவ தான்யாதி விதேயம் பானுவாஸரே II

 

1 மன்னர்களுக்கு மகுடாபிஷேகம் செய்தல் 2. மங்களகரமான காரியங்களைச் செய்தல் 3) உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளுதல் 4) பணிபுரியத் தொடங்குதல் 5) பிரபு தர்சனம் (உயர் அதிகாரிகள் சந்திப்பு) செய்தல் 6) மருந்து தயாரித்தல் (மூலிகை சேர்ப்பதிலிருந்து உட்கொள்ளுதல் முடிய) 7) வாகனம் செய்தல், வாகனத்தில் ஏறி அமர்தல் 8) போர் செய்யத் தொடங்குதல், அதற்கான் ஆயுதங்களைத் தயாரித்தல் 9) தான்யம் முதலியனவற்றைச் சேகரித்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்தல் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

திங்கட்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

சங்கமுக்த அம்பு ரஜத வ்ருக்ஷ இக்ஷு ஸ்தீரி விபூஷணம் I

புண்யகீத க்ரதுக்ஷீ ர க்ருஷிகர்ம இந்துவாஸரே II

 

  • சங்கு, முத்து சேகரிப்பு வேலைகள் 2) நீர் சம்பந்தமான பணிகள் 3) வெள்ளி சம்பந்தமான பணிகள் 4) மரவேலைகள், கரும்பு ஆலையாட்டல் 5) பெண்களின் நலத்திற்கான அனைத்துப் பணிகள் 6) ம்லர்த் தோட்டம் அமைத்தல் 7) நல்ல சங்கீதப் பயிற்சி 8) யாகம் செய்தல் 9) பால் சம்பந்தமான பணிகள் 10) விவசாயம் செய்தல் ஆகியவற்றை திங்கட்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

செவ்வாய்க்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

விஷாக்னிபந்தன்ஸ்தேய சந்திவிக்ரஹகர்ஷணம் I

தாத்வாகர ப்ரவுளாதி கர்மபூமிஜாவஸரே II

 

  • விஷப் பொருள்களைச் சுத்தம் செய்தல் 2) காளவாய் அடுப்புப் போடுதல் 3) அணை கட்டல் 4) திருட்டுக் காரியங்களைச் செய்தல் 5) கலகம் செய்தல் 6) பகைவரைச் சந்தித்தல் 7) போர் 8) சுரங்க வேலை 9) பவளம் எடுத்தல்; பவள நகை செய்தல் 10) அம்பு (போர்க்கருவி) தயாரித்தல் ஆகியவற்றைச் செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

புதன்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

ந்ருத்யஷில்பகலாகீதிலிபி பூரசஸங்க்ரஹம் I

விவாததாது சங்க்ராம கர்ம குர்யாதித்தோஹனி II

 

  • நடனம் பயிலுதல் 2) சிற்பக் கலை கற்றல் 3) பாட்டுப் பயில ஆரம்பித்தல் 4) எழுத்து வேலை 5) புஸ்தகம் எழுதல், அச்சிடல் 6) கலகம் புரிதல் 7) விவகாரம் – விவாதம் செய்தல் 8) தாதுப் பொருள் சேகரித்தல், விற்றல் 9) கலை பயிலல் ஆகியவற்றைப் புதன்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

வியாழக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

யக்ஞபௌஷ்டிக மாங்கல்ய ஸ்வர்ணவஸ்த்ராதி பூஷணம் I

வ்ருக்ஷ குல்மலதாயான் கர்மதேவேத்வாஸரே II

 

  • யாகம் செய்தல் 2) புஷ்டியளிப்பன 3) மங்களகரமானவை 4) பொன்வேலை 5) ஆடை முதலியன செய்தல்,வாங்குதல் 6) நகை செய்தல் 7) மரம், செடி, கொடி நடுதல் (படரவிடல்) 8) வாகனத்தில் ஏறுதல் 9) தெய்வீகமான செயல்களைச் செய்தல் ஆகியவற்றை வியாழக்கிழ,மைகளில் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருத்யகீதாதி வாதித்ர ஸ்வர்ண்ஸ்த்ரீ ரத்னபூஷணம் I

பூபண்யோத்ஸவ கோதான்யவாஜிகர்ம ப்ருகோர்தினே II

 

  • பாட்டு, நடனம் கற்றல் 2) வாத்தியம் கற்க ஆரம்பித்தல் 3) தங்க வேலை தொடங்குதல் 4) புத்தாடையுடுத்தல் 5) ஆபரணம் அணிதல் 6) புண்ணிய காரியம் செய்தல் 7) உற்சவம் முதலியன இயற்றல் 8) பசு வளர்த்தல் 9) தானியங்களைச் சேகரித்தல் 10) குதிரை வாகனம் வாங்குதல் 11) திருவிழா நடத்தல் 12) பூமி சேகரித்தல், வியாபாரம் தொடங்குதல் ஆகியவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

சனிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

த்ரபு சீஸ ஆயஸ அஷ்மாதி விஷ பாப ஆஸவா ந்ருதம் I

ஸ்திரக்ர்மாகிலம் வாஸ்து சங்க்ரஹ: சௌரிவாஸரே II

 

  • துத்தநாகம், ஈயம் போன்ற தாது சம்பந்தமான வேலைகள் 2) விஷ சாயம் 3) அம்பு- யுத்த வேலை 4) கல் பணி 5) பாவ காரியங்கள் 6) கள் (ஆஸவம்) தயாரித்தல் 7) பொய் கூறுதல் 8) வீடு, மனை சேகரித்தல் ஆகியவற்றை சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

இப்படி அந்தந்தக் கிழமைகளில் பலிக்கக்கூடிய காரியங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உசிதமான நமது  பணிகளைத் தொடங்கிச் செய்தால் வாழ்வு சிறக்கும்; வெற்றி கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் அறிவுரை.

கடைப்பிடிப்போம்; வெற்றி பெறுவோம்

***

 

 

 

 

 

 

 

KILL ANYONE, NO SIN IF YOU ARE A BRAHMIN: MANU AND BUDDHA SAY! (Post No.4402)

Written by London Swaminathan 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 21-09

 

 

Post No. 4402

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

KILL ANYONE, NO SIN IF YOU ARE A BRAHMIN: MANU AND BUDDHA SAY! (Post No.4402)

Manu said that if anyone can recite the Rig Veda, even if he destroys the three worlds, he incurs no sin!

Buddha said that even if a Brahmin killed a king, his father and mother, he incurs no sin! It may look strange. But one must read between the lines.

 

What is the message they want to give us?

A true Brahmin who has mastered Rig veda can’t think of anything like hurting anyone; leave alone destroying the three worlds.

A true Brahmin, according to Buddha, is equal to a saint, i.e. one with saintly virtues. So, he can’t think of hurting anyone.

 

Tamil poet Tiru Valluvar also said that “A Brahmin is kind to all creatures” (Kural 30)

 

MANU ON RV

“A Brahmin by retaining Rig Veda (RV) in his memory incurs no guilt, though he should destroy the three worlds”– 11-261

Manu on the Veda

“The Veda is the eternal eye of the ancestors, gods and humans; the teachings of the Veda are impossible to master and impossible to measure; this is an established fact”–Manu 12-94

The same verse is translated by Monier Williams as follows:-

“The Veda is of patriarchs and men

And even of gods, a very eye eternal

Giving unerring light; it is beyond

All finite faculties, nor can be proved

By force of human argument—this is

A positive conclusion”–  Manu 12-94

 

 

Buddha Says:–

 

“And a saint, a Brahmin, is pure from past sins; even if he had killed his father and mother, had murdered two noble kings, and had ravaged a whole kingdom and its people”

–Buddha in Dhammapada, Sloka 294

 

Because he has put away evil, he is called a Brahmin; because he lives in peace, he is called a ‘samana’; because he leaves all sins behind, he is called a ‘Pabbajita’, a pilgrim.

–Buddha in Dhammapada, Sloka 388

Ons should never hurt a Brahmin; and a Brahmin should never return evil for evil

–Buddha in Dhammapada, Sloka 389

 

It is important that we should never quote anything out of context; more important is that we should understand the meaning behind the words.

Foreigners who quoted Vedic hymns always used them out of context and took literary meaning. So we must be careful when we read anything written by foreign and non-Hindu hands.

–Subham, Subham-