SHAKESPEARE IN TAMIL VEDA TIRUKKURAL- Part 1 (Post No.4423)

Written by London Swaminathan 

 

Date: 22 NOVEMBER 2017

 

Time uploaded in London- 20-58

 

 

Post No. 4423

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WHAT IS TIRUKKURAL?

Tirukkural is a book of ethics in Tamil. Tirukkural means a ‘book of sacred couplets’. It has 1330 couplets divided into 133 chapters. It is divided into three sections dealing with Dharma (Virtue), Artha (wealth) and Kama (Love between man and woman). It was written by Tiruvalluvar, who lived approximately 1500 years before our time. The book is praised as Tamil Veda by his contemporaries. All the Hindu ideals are incorporated into the book. Some of the couplets can be compared with the sayings of Shakespeare.

 

Who is Shakespeare?

Shakespeare (1564-1616) was an English dramatist and poet. He wrote 37 plays and over 150 poems. His quotations are used very often in English essays and other literary articles. Tiruvalluvar and Shakespeare agree on many issues. When one reads them one thinks that the famous saying ‘Great men think alike’ is proved once again.

Here are some comparisons culled out from various books:

Compassion and Mercy

Tiruvalluvar says

Those who are merciful are really the men of virtue

because they have compassion for all living creature (Kural 30)

In the Merchant of Venice, Shakespeare say that people with mercy are the real sages of the world.

 

The quality of mercy is not strain’d,

It droppeth as the gentle rain from heaven

Upon the place beneath: it is twice blest;

It blesseth him that gives and him that takes:

‘Tis mightiest in the mightiest: it becomes

The throned monarch better than his crown;

His sceptre shows the force of temporal power,

The attribute to awe and majesty,

Wherein doth sit the dread and fear of kings;

But mercy is above this sceptred sway;

It is enthroned in the hearts of kings,

It is an attribute to God Himself;

And earthly power doth then show likest God’s

When mercy seasons justice. Therefore, Jew,

Though justice be thy plea, consider this,

That in the course of justice, none of us

Should see salvation. We do pray for mercy;

And that same prayer doth teach us all to render

The deeds of mercy. I have spoke thus much

To mitigate the justice of thy plea;

Which if thou follow, this strict court of Venice

Must needs give sentence ‘gainst the merchant there.

 

(Portia in The Merchant of Venice, Act 4, Scene 1)

Chastity

Tiruvalluvar says

Of what avail is watch and ward? A woman’s will

is the best safeguard of her honour (Kural 57)

Prison walls, pad-locks and chastity belts are absolutely of no use to ensure a woman’s chastity. Her own conscience and inner strength will alone keep her really pure.

Sakespeare says,

“My chastity is the jewel of our house bequeathed down from many ancestors”

DIANA.
I see that men make hopes in such a case,
That we’ll forsake ourselves. Give me that ring.

BERTRAM.
I’ll lend it thee, my dear, but have no power
To give it from me.

DIANA.
Will you not, my lord?

BERTRAM.
It is an honour ‘longing to our house,
Bequeathed down from many ancestors;
Which were the greatest obloquy i’ the world
In me to lose.

DIANA.
Mine honour’s such a ring:
My chastity’s the jewel of our house,
Bequeathed down from many ancestors;
Which were the greatest obloquy i’ the world
In me to lose. Thus your own proper wisdom
Brings in the champion honour on my part
Against your vain assault.

All is well that ends well, Act 4, Scene 2

 

Wife,The Helpmate

Tiruvalluvar says,

If a man’s wife does not bring him credit and honour, he cannot walk

with proud leonine gait in the face of his distractors- (Kural 59)

 

Shakespeare says,

‘A light wife doth make a heavy husband’

-The Merchant of Venice, Act 5, Scene 1

 

It is a sarcastic remark.

It’s a pun (a play on words to make a joke) because “light” and “heavy” have many meanings.

“A light wife” is an adulteress.
We also say someone is “heavy” if they carry an emotional burden, e.g. an unfaithful wife.

Light and heavy most commonly refer to the weight of something and are opposites, as are husband and wife, as are an unfaithful and faith spouse.

Enter BASSANIO, ANTONIO, GRATIANO, and their Followers.
  Bass.  We should hold day with the Antipodes,
If you would walk in absence of the sun.
  Por.  Let me give light, but let me not be light;         145
For a light wife doth make a heavy husband,
And never be Bassanio so for me:
But God sort all! You are welcome home, my lord.
  Bass.  I thank you, madam. Give welcome to my friend:
This is the man, this is Antonio,         150
To whom I am so infinitely bound.

 

–to be continued

 

–Subham–

மனு தர்மத்தில் விலங்கியல், தாவரவியல்; மனு நீதி நூல் -4 (Post No.4422)

Written by London Swaminathan 

 

Date: 22 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-03

 

 

Post No. 4422

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கீழேயுள்ள ஸ்லோகங்கள் குறித்த எனது கருத் து:—-

இந்த ஸ்லோகங்களில் மிகவும் முக்கியமானது 49-ஆவது ஸ்லோகம்; தாவரங்களுக்கு உள்ளறிவு உண்டு, அவைகள் சுக துக்கங்களை அனுபவிக்கின்றன என்ற பேருண்மையை, அறிவியல் கருவிகள் இல்லாத காலத்தே உலகிற்கு அறிவித்த மாபெரும் விஞ்ஞானி மனு!

மனுதர்ம நூல் ஒரு சட்டப் புத்தகம்; அதில் தாவரங்கள் பற்றிய இப்படியொரு விஷயம் இருப்பது வியக்கத்தக்கது!

 

அதற்கு முன்னர் தாவரங்களை, பூக்கும் தாவரம், பூக்காத தாவரம், கொடிகள், புல் வகைகள் என்றெல்லாம் பிரிக்கிறார். தாவரங்களை வகைப்படுத்துவது காலம்தோறும் மாறிவருகிறது. லின்னேயஸ் என்பவர் தாவரங்களை குடும்பங்களாகவும் உப குடும்பங்களாகவும் அதில் தனித்தனி பெயர் உடையனவாகவும் (Family, Genus, Species) பிரித்ததை உலகம் இப்போது பின்பற்றி வருகிறது. இவை எல்லாம் 300, 400 வருடங்களுக்குள் வந்தவை. அதற்கு முன்னரே மனு முதலானோர் தாவரம்,பி  ராணிகளை வகைப்படுத்த முயன்றதே அவர்களின் அறிவியல் அணுகுமுறைக்குச் சான்று பகர்வனவாக உள்ளன!

 

உயிருள்ளவைகளை  நான்கு வகையாக பிரிக்கிறார் மனு. விலங்கியல் தாவரவியலைப் பொருத்த பொதுவான பிரிவினை இது.

(1)ஸ்வேதஜ= வேர்வையிலிருந்து பிறந்தவை (ஸ்வெட் என்னும் ஆங்கிலச் சொல் ஸ்வேத என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்தது; இந்த இடத்தில் ஸ்வேத என்பதை ஆவி, நீராவி என்னும் பொருளுடைத்தாய் உரைகாரர்கள் கருதுவர்),

(2)அண்டஜ (முட்டையிலிருந்து   தோன்றுபவை),

(3)ஜராயுஜஹ= கர்ப்பப்பையில் தோன்றுபவை, (4)உத்பீஜ = பூமியிலுள்ள விதையிலிருந்து   மேல் நோக்கி எழும் மரம், செடி, கொடி வகையறா.

 

அந்தக் காலத்தில் இவைகளைப் பிரிக்க வேண்டும் என்று எண்ணி அதை வகைப் படுத்தியதே இவர்கள், கைபர் கணவாய் வழி வத நாடோடிகள் அல்ல, மாபெரும் அறிவு படைத்த உலகத்தின் முதல் அறிவுள்ள குடிமகன்கள் என்பதைக் காட்டும்.

 

இன்னும் 50 ஆண்டுகளில் நாம் படித்த விலங்கியல் தாவர இயல் நூல்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு புதிய டி,என்.ஏ. பிரிவினை (D N A Classification; Genetic mapping) வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக, காலம் தோறும் மாறும் விஞ்ஞானத்தை முதலில் துவக்கி வைத்தவர்கள் நாமே. அந்தக் கால மக்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியுமோ அந்த மொழியில் எழுதப்பட்டது மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மனு நீதி நூல் என்பதை அறிக; உணர்க; தெளிவு பெறுக.

ஆரிய மாயை- திராவிட மாயை

 

கீழேயுள்ள ஸ்லோகங்களில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஆரிய- திராவிட என்னும் பிரிவினை சங்கத் தமிழ் நூல்களி லோ, சமுத்திரம் போலக் கரை காண முடி யாத அளவுப் பெருகிக் கிடக்கும் சம்ஸ்கிருத நூல்களிலோ எங்கும் இல்லை; ஆனால் மதத்தைப் பரப்பி நாடு பிடிக்க வந்த பிரித்தாளும் சூழ்ச்சியினர் பரப்பிய திராவிடர்- ஆரியர் என்ற புதிய இனப்பாகுபாட்டை நாம் பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் கற்பித்து வருகிறோம். ஆனால் மனுவோ புற நானூற்றிலும், புராண இதிஹாசஙகளிலும் உள்ள பிரிவை சொல்கிறார். நாகர், கந்தர்வர், யக்ஷர், தேவர், மானுடர் இராக்ஷசர், அசுரர் என்று. இப்படி 18 வகையாகப் பிரித்த பிரிவே நம் இலக்கியத்தில் உள்ளன. அதை விட முக்கியமான உண்மை அசுரர்களும், ராக்ஷஸர்களும், மானுடரும் தேவரும் ஒரே மனுக்குலத்தில் உதித்தவர்கள் என்பதை மனுவே சொல்லும் ஸ்லோகங்களை இங்கே கொடுத்துள்ளேன்.

 

வெளி நாட்டு  “அறிஞர்கள்” (???) ம றைத்து வரும் விஷயம் இது. அவர்களே நம்மை திராவிடர்- ஆரியர் என்று பிரித்ததற்கு தமிழில், சம்ஸ்கிருதத்தில் ஆதாரமே இல்லை.

 

ஜாதிகள் உண்டு அடி பாப்பா!

ஜாதிகள் உண்டு என்பதை ரிக்வேதத்தில் உள்ள புருஷசூக்தம் (10-90) தெளிவாகச் சொல்லுகிறது; ஆனால் அவை பகவத் கீதை சொல்லுவது போல குணத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை. ஆதிகாலத்தில் அப்படித்தான் இருந்தது. நாலு வகைச் சாதிகளை 4000 வகைச் சாதிகளாகப் பிரித்ததும் நாம்தான். புராண,  இதிஹாசங்களில் வேதத்தில் ஆதாரம் இல்லை. அறிவு உடைய எல்லோரும் பிராம ணர். நாட்டைக் காப்போர் எல்லோரும் க்ஷத்ரியர்; வணிகம் செய்வோர் எல்லோரும் வைஸ்யர்; உடலுழைப்பு செய்வோர் அனைவரும் சூத்திரர். இந்த தொழில் முறைப் பாகுபாட்டை பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரித்தது நாம்தான்.

 

அதிலும் “இந்தியாவில் இரு வகை மக்களே உண்டு ஒன்று பிராமணர்; மற்றொன்று சூத்திரர்; அவர்களில் பிராமணர் எல்லோரும் ஆரியர்; மற்ற எல்லோரும் சூத்திரர்” என்று பிரித்தது வெளி நாட்டு பிரித்தாளும் சூழ்ச்சியினர்; அவர்களுக்குத் துணை போனவர்கள் நம்மூர் அரசியல்வாதிகள்; மார்கஸீய வாதிகள்!

 

சுருங்கச் சொன்னால், மக்கள் இனம் ஒன்று- வசுதைவ குடும்பகம்- யாதும் ஊர், யாவரும் கேளிர் – என்பதை மனு தர்மத்தின் முதல் அத்தியாயத்திலேயே காண்கிறோம்.

 

கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் படிப்பதற்கு முன்னால் மனுவைப் படித்து, ‘கொள்ளுன எது?, தள்ளுவன எது?’ என்பதை நாமே கற்கலாம்; காட்டலாம்.

மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறு சட்டம்; நாட்டுக்கு நாடு வேறு சட்டம் உள்ள விநோத உலகத்தில் மனுவை மட்டும் கோபிப்பதில் பொருள் இல்லை.

முதல் அத்தியாயம்

 

ஸ்லோகம் 31

உலகம் வளர்ச்சி அடைவதற்காக தன்னுடைய முகத்திலிருந்து பிராமணனையும், தோளிலிருந்து க்ஷத்ரியனையும், தொடையிலிருந்து வைஸ்யனையும், காலிலிருந்து சூத்திரனையும் உண்டு பண்ணினார்.

 

  1. அந்த பிரம்மாவானவர் தனது உடலை இரண்டு துண்டமாக்கி, ஒன்றை ஆணாகவும், ஒன்றைப் பெண்ணாகவும் உண்டாக்கினார். அந்த ஆண் பெண் சேர்க்கையாலே விராட புருஷனை படைத்தார்.

 

33.அந்த விராட புருஷன் தவம் செய்து, இந்த உலகத்தைச் சிறப்பாக படைப்பதற்காக யார் ஒருவனை உருவாக்கினாரோ அவர்தான் நான் (மனு)

 

34.நானும் அனேக உயிரினங்களைத் தோற்றுவிப்பதற்காக, செயற்கரிய தவம் செய்து, பிராணிகளைப் படைக்கும் வல்லமை படைத்த பத்து மகரிஷிகளைப் படைத்தேன். அவர்கள் பிரஜாபதிகள் ஆவர்.

  1. அந்த ரிஷிகளின் பெயர்கள்:- மரீசி, அத்ரி, அங்கீரஸ், புலஸ்தியர், புலகன், கிரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன்

 

36.மிகுந்த ஒளிபடைத்த இந்தப் பிரஜாபதிகள் ஏழு மனுக்களையும், தேவர்களையும், சுவர்க்காதி லோகங்களையும், காந்தர்வர்களையும், தவ சீலம் உடைய மஹா முனிவர்களையும் உண்டாக்கினார்கள்

 

37.இந்தப் பிரஜாபதிகள் யக்ஷர்கள், வாசுகி முதலிய நாகர்கள்,  ரத்தவெறி கொண்ட காட்டுமிராண்டிகள், சர்ப்பங்கள், கருடன், இராக்ஷசர்கள்,  பைசாசர், அப்சரஸ்கள், அசுரர்கள், பறவைகள், பித்ருக்கள்

 

38.மின்னல், இடி, மேகம், இந்திர தனுசு எனப்படும் வானவில், தூமகேது (வால் நடசத்திரம்), பூகம்பம் (நில அதிர்ச்சி) முதலான இயற்கைச் சீற்றங்கள்

39.கின்னரர், வானரர் , மீன்கள், பலவகைப் பட்சிகள், பசுக்கள், மிருகங்கள்,  மனிதர்கள், இரண்டு பக்கத்தில் பற்களுள்ள புலி முதலிய விலங்குகள்.

 

40.புழு, உலண்டுப்பூச்சி, விளக்கணைப் பூச்சி (விட்டில்), எட்டுக்கால் பூச்சி (சிலந்தி) ஈ, முகடு,  கொசு, பலவகையான மரங்கள்

  1. இவை அனைத்தையும் பிரஜாபதிகள், என்னுடைய கட்டளைப்படி, தவம் செய்து, பிராணிகளின் தொழிலுக்கு ஏற்ப, தாவர, ஜங்கமத்தை (அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள்) உருவாக்கினர்.

42அடுத்ததாக பிராணிகளின் உற்பத்தி வரிசையும் அவற்றின் செய்கைகளையும் சொல்கிறேன்

43.பசுக்கள், மிருகங்கள், இரு புறம் பற்களை உடைய புலி முதலிய விலங்குகள், இராக்கதர் (ராக்ஷஸர்), பைசாசர் (பிசாசு), மனிதர்கள் ஆகியோர்  சராயு என்னும் கர்ப்பப் பையில் உண்டாகி   கர்ப்பப் பையுடன் பிறக்கின்றனர்.

44.பலவித பறவைகளும், நீரில் வாழும் முதலை, ஆமை, மீன், கரையில் வசிக்கும் ஓணான் ஆகியனவும் முட்டையில் இருந்து பிறக்கின்றன

 

45.கொசு, சிலந்தி, ஈ, மோட்டுப் பூச்சிகள் இவை புழுக்கதால், வேர்வையால் உண்டாகின்றன. இவைகளைப் போன்ற புழு, எறும்பு முதலியன உஷ்ணத்தால் உண்டாகின்றன.

 

  1. மரங்கள் விதைகளால், கிளைகளால் பூமியைப் பிளந்து மேல் நோக்கி வளர்கின்றன. இந்த மரங்களில் இருந்து வேறுபட்ட புடலை முதலிய கொடி, நெல் முதலிய பயிர்களும் பலன் கொடுத்தவுடன் அழிந்து போகின்றன.
  2. பூவாமல் காய்க்கும் அத்தி முதலிய மரங்களுக்கு வனஸ்பதி என்று பெயர். பூக்கும் மற்றுப் பூத்துக் காய்க்கும் மரங்கள் என மரங்கள் இரண்டு வகைப்படும்.

(பூவாது காய்ப்பன வனஸ்பதி= காட்டு ராஜாக்கள்; பூத்துக் காய்ப்பன = சாதரண மரங்கள்)

 

48.சில செடிகள் கொத்துக் கொத்தாயும் சில செடிகள் தூறாகவும் உண்டாகின்றன. புற்கள், கோரைகள், கொடிகள் இவைகள் விதைகளாலும் கொடிகளாலும் உண்டாகின்றன.

49.பாபகர்மத்துக்குக் காரணமாகிய பலவகை உருவம் படைத்த, தமோ குணத்தினால் சூழப்பட்ட இந்த தாவர ஜாதிகளுக்கு உள்ளறிவும் சுக துக்கங்களும் உண்டு.

50.பிரம்ம உற்பத்தி முதல், மரங்களின் உற்பத்தி வரை கோரமான சம்சார சாகரத்தின் உற்பத்தி சொல்லப்பட்டது.

 

  1. But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.
  2. Dividing his own body, the Lord became half male and half female; with that (female) he produced Virag.
  3. But know me, O most holy among the twice-born, to be the creator of this whole (world), whom that male, Virag, himself produced, having performed austerities.
  4. Then I, desiring to produce created beings, performed very difficult austerities, and (thereby) called into existence ten great sages, lords of created beings,
  5. Mariki, Atri, Angiras, Pulastya, Pulaha, Kratu, Praketas, Vasishtha, Bhrigu, and Narada.
  6. They created seven other Manus possessing great brilliancy, gods and classes of gods and great sages of measureless power,
  7. Yakshas (the servants of Kubera, the demons called) Rakshasas and Pisakas, Gandharvas (or musicians of the gods), Apsarases (the dancers of the gods), Asuras, (the snake-deities called) Nagas and Sarpas, (the bird-deities called) Suparnas and the several classes of the manes,
  8. Lightnings, thunderbolts and clouds, imperfect (rohita) and perfect rainbows, falling meteors, supernatural noises, comets, and heavenly lights of many kinds,

39 (Horse-faced) Kinnaras, monkeys, fishes, birds of many kinds, cattle, deer, men, and carnivorous beasts with two rows of teeth,

  1. Small and large worms and beetles, moths, lice, flies, bugs, all stinging and biting insects and the several kinds of immovable things.
  2. Thus was this whole (creation), both the immovable and the movable, produced by those high-minded ones by means of austerities and at my command, (each being) according to (the results of) its actions.
  3. But whatever act is stated (to belong) to (each of) those creatures here below, that I will truly declare to you, as well as their order in respect to birth.
  4. Cattle, deer, carnivorous beasts with two rows of teeth, Rakshasas, Pisakas, and men are born from the womb.
  5. From eggs are born birds, snakes, crocodiles, fishes, tortoises, as well as similar terrestrial and aquatic (animals).
  6. From hot moisture spring stinging and biting insects, lice, flies, bugs, and all other (creatures) of that kind which are produced by heat.
  7. All plants, propagated by seed or by slips, grow from shoots; annual plants (are those) which, bearing many flowers and fruits, perish after the ripening of their fruit;
  8. (Those trees) which bear fruit without flowers are called vanaspati (lords of the forest); but those which bear both flowers and fruit are called vriksha.
  9. But the various plants with many stalks, growing from one or several roots, the different kinds of grasses, the climbing plants and the creepers spring all from seed or from slips.
  10. These (plants) which are surrounded by multiform Darkness, the result of their acts (in former existences), possess internal consciousness and experience pleasure and pain.
  11. The (various) conditions in this always terrible and constantly changing circle of births and deaths to which created beings are subject, are stated to begin with (that of) Brahman, and to end with (that of) these (just mentioned immovable creatures).

31 to 50

ं१।३१अ/ लोकानां तु विवृद्ध्यर्थं मुखबाहूरुपादतः ।

ं१।३१च्/ ब्राह्मणं क्षत्रियं वैश्यं शूद्रं च निरवर्तयत् ॥ 31॥

 

ं१।३२अ/ द्विधा कृत्वाऽत्मनो देहमर्धेन पुरुषोऽभवत् ।

ं१।३२च्/ अर्धेन नारी तस्यां स विराजमसृजत् प्रभुः ॥ 32॥

 

ं१।३३अ/ तपस्तप्त्वाऽसृजद् यं तु स स्वयं पुरुषो विराट् ।

ं१।३३च्/ तं मां वित्तास्य सर्वस्य स्रष्टारं द्विजसत्तमाः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३४अ/ अहं प्रजाः सिसृक्षुस्तु तपस्तप्त्वा सुदुश्चरम् ।

ं१।३४च्/ पतीन् प्रजानामसृजं महर्षीनादितो दश ॥Bछ्.Sछ्॥

 

ं१।३५अ/ मरीचिमत्र्यङ्गिरसौ पुलस्त्यं पुलहं क्रतुम् ।

ं१।३५च्/ प्रचेतसं वसिष्ठं च भृगुं नारदमेव च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३६अ/ एते मनूंस्तु सप्तान् यानसृजन् भूरितेजसः ।

ं१।३६च्/ देवान् देवनिकायांश्च महर्षींश्चामितोजसः ॥ 36॥

ं१।३७अ/ यक्षरक्षः पिशाचांश्च गन्धर्वाप्सरसोऽसुरान् ।

ं१।३७च्/ नागान् सर्पान् सुपर्णांश्च पितॄणांश्च पृथग्गणम् ॥ Bछ्.Sछ्॥ %[ं।

 

ं१।३८अ/ विद्युतोऽशनिमेघांश्च रोहितैन्द्रधनूंषि च ।

ं१।३८च्/ उल्कानिर्घातकेतूंश्च ज्योतींष्युच्चावचानि च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३९अ/ किन्नरान् वानरान् मत्स्यान् विविधांश्च विहङ्गमान् ।

ं१।३९च्/ पशून् मृगान् मनुष्यांश्च व्यालांश्चोभयतोदतः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४०अ/ कृमिकीटपतङ्गांश्च यूकामक्षिकमत्कुणम् ।

ं१।४०च्/ सर्वं च दंशमशकं स्थावरं च पृथग्विधम् ॥ 40॥

 

ं१।४१अ/ एवमेतैरिदं सर्वं मन्नियोगान् महात्मभिः ।

ं१।४१च्/ यथाकर्म तपोयोगात् सृष्टं स्थावरजङ्गमम् ॥ Bछ्.Sछ्॥

ं१।४२अ/ येषां तु यादृशं कर्म भूतानामिह कीर्तितम् ।

ं१।४२च्/ तत् तथा वोऽभिधास्यामि क्रमयोगं च जन्मनि ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४३अ/ पशवश्च मृगाश्चैव व्यालाश्चोभयतोदतः ।

ं१।४३च्/ रक्षांसि च पिशाचाश्च मनुष्याश्च जरायुजाः ॥ Bछ्.Sछ्॥ %[ंंअनुषाश्च ]

ं१।४४अ/ अण्डजाः पक्षिणः सर्पा नक्रा मत्स्याश्च कच्छपाः ।

ं१।४४च्/ यानि चैवं।प्रकाराणि स्थलजान्यौदकानि च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४५अ/ स्वेदजं दंशमशकं यूकामक्षिकमत्कुणम् ।

ं१।४५च्/ ऊष्मणश्चोपजायन्ते यच्चान्यत् किं चिदीदृशम् ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४६अ/ उद्भिज्जाः स्थावराः सर्वे बीजकाण्डप्ररोहिणः ।

ं१।४६च्/ ओषध्यः फलपाकान्ता बहुपुष्पफलोपगाः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४७अ/ अपुष्पाः फलवन्तो ये ते वनस्पतयः स्मृताः ।

ं१।४७च्/ पुष्पिणः फलिनश्चैव वृक्षास्तूभयतः स्मृताः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४८अ/ गुच्छगुल्मं तु विविधं तथैव तृणजातयः ।

ं१।४८च्/ बीजकाण्डरुहाण्येव प्रताना वल्ल्य एव च ॥ Bछ्.Sछ्॥

 

 

तमसा बहुरूपेण वेष्टिताः कर्महेतुना ।

अन्तस्संज्ञा भवन्त्येते सुखदुःखसमन्विताः ॥ 49॥

 

एतदन्तास्तु गतयो ब्रह्माद्याः समुदाहृताः ।

घोरेऽस्मिन् भूतसंसारे नित्यं सततयायिनि ॥ 50॥

 

 

Tags: மனுநீதி நூல் -4, பிராணிகள் தாவரங்கள் பிரிவு, தாவரவியல்,விலங்கியல் அறிவு, திராவிடர், ஆரியர் பிரிவினை

 

–Subham–

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்: பேரழகியின் வர்ணனை! (Post No.4421)

Written by S.NAGARAJAN

 

 

Date: 22 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-46 am

 

 

 

Post No. 4421

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

சங்கிலிருந்து எழும் கலாநிதி மண்டலம் : பேரழகியின் வர்ணனை!

 

 

ச.நாகராஜன்

 

ஒரு பேரழகி. அவளை எப்படி வர்ணிப்பது.கவிஞர் ஒருவர் முயன்று பார்க்கிறார். அதன் விளைவாக அவர் நாவிலிருந்து உதிக்கிறது ஒரு பாடல்.

அது இது தான்:

 

உதயதி தடிச்சித்ரம் மித்ரம் ரதே: கமலத்வயி

குஸுமிதநவஸ்தம்பே ரம்பே விதாய தனோரத: I

தடிதி வலதி வ்யோம வ்யோமாஸ்ரயம் ச கிரித்வயம்

கிரிபரிசிரே கம்பு: கம்பௌ கலாநிதிமண்டலம் II

 

 

சூக்தி முக்தாவளி என்ற நூலில் காணப்படும் இந்தப் பாடல் ஹரிணி சந்தத்தில் அமைந்துள்ளது.

 

 

பாடலின் பொருள்:-

இதோ எழுகிறது ஒரு புதிய மின்னல் (கால்கள்), காதலின் தோழி, மேலும் இரு தாமரை (பாதங்கள்) மலரும் புதிய இரு வாழைத்தண்டுகளுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளன (தொடைகள்), மின்னலைச் சுற்றி (கைகள்) வட்டமான ஆகாயம் உள்ளது (மெல்லிய இடை), இதைத் தாங்குகின்ற வானத்தில் இரு மலைகள் உள்ளன (கொங்கைகள் அல்லது மார்பகங்கள்), மேலும் மலைகளின் அருகேயே ஒரு சங்கும் (கழுத்து) அந்த சங்கிலிருந்து எழுகிறது வட்டமான சந்திரன். (அழகியின் முகம்)

 

இதை ஆங்கிலத்தில் அழகுறத் தருகிறார் திரு ஏ.ஏ.ராமநாதன் இப்படி:-

Here rises a novel lightning (legs), the friend of love, and two lotuses (feet), being placed below two plantain stems (thighs) that are fresh and flowering, and encircling is the flash of lightning (hands) round the sky (thins waist), supported by the sky are two hills (breasts) and a conch (neck) in the vicinity of the hills and the round orb of the moon (the face of the damsel) rises from the conch. (Translation by A.A.R)

 

 

இன்னொரு வர்ணனைப் பாடல்:

 

உத்க்ருஹா வோடோக்ரதனம் நதம்ரூர்

ஆச்சாத்ய வக்ஷ:ஸ்தலமஞ்சலேன I

உத்தாரயந்தி நிவிடம் நிசோலம்

மனோபவஸ்யாபி மனோ மினோதி II

 

வேணிதத்தரின் பத்யவேணி என்ற நூலில் வரும் பாடல் இது.

 

உபஜாதி சந்தத்தில் அமைந்துள்ள பாடல் இது. (இந்த்ரவ்ரஜம் மற்றும் உபேந்த்ரவஜ்ரம் இணைந்த சந்தம்)

இதன் பொருள்:-

 

அழகிய புருவத்தை உடைய அந்த அழகி, தனது மார்புக் கச்சை உயர்த்தி, தனது ஆடையின் நுனியால் மார்பகங்களை மூடிக் கொண்டு, தனது முகத்திரையைச் சற்றே உயர்த்தி, மனதிலே பிறந்த காதல் கடவுளின் மனதைக் கூடச் சலனப்படுத்துகிறாள்!

 

Holding high the knot of her bodice, the charming-browed one, having covered her bosom with the end of her garment, and raising her thick veil, she measures (agitates) the mind of even the mind-born (god) of love.

(Translation by A.A.R)

 

இப்படி ஆயிரக் கணக்கில் அழகிகள் பற்றிய வர்ணனைகளைக் கொண்ட அற்புதமான பாடல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

தெய்வ மொழி சம்ஸ்கிருதம் என்பர் சிலர்.

காதல் மொழி சம்ஸ்கிருதம் என்பர் சிலர்.

இரண்டுமே சரி தான்!

 

பாடல்களைப் படியுங்கள். காதலையும் பக்தியையும் போற்றி கவிஞர்கள் பாடிய அழகை ரஸியுங்கள்!

***

Why did Hindu Gods lose their Heads? (Post No.4420)

Written by London Swaminathan 

 

Date: 21 NOVEMBER 2017

 

Time uploaded in London- 21–04

 

 

Post No. 4420

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Why did Lord Ganesh lose his head?

 Why did Lord Vishnu lose his head?

Why did Lord Brahma lose his head?

Why did Daksha lose his head?

Why did Bhrigu lose his head?

Daksha got goat’s head!

We have various versions of Daksha’s fire sacrifice in the Puranas and epics. In one of the versions Bhrigu loses his head. In another version Daksha himself lost his head. All this happened when he refused to invite Lord Siva for the sacrifice. Siva married Daksha’s daughter Sati.  Siva became angry and destroyed the Yaga. He decapitated Daksha and threw his head into fire. Later Siva was propitiated and he couldn’t find Daksha’s head. So he replaced it with that of a goat.

(We have goat headed figures in Indus valley civilisation)

 

Ganesh got Elephant’s Head

Ganesa is the god of wisdom and remover of obstacles. There is a variety of legends accounting for his elephant’s head. When his mother Parvati proudly asked Saturn to look at him he looked at him. Immediately Ganesa’s head was burnt to ashes. Brahma told Parvati in her distress to replace the head with  whatever she finds in the first place. Since she found only an elephant’s head , it was fixed on Ganesa’s head.

Another story is that Ganesh was guarding the bath room door of Parvati. Siva was refused permission. In his rage he cut off the head . When Parvati felt sad, Siva replaced it with an elephant’s head just to pacify her.

 

Brahma lost his head for lying

Again there are different versions about Brahma losing his head. One point is common in all these stories. Brahma had five heads and Siva also had five heads. And Brahma lost one. When Parvati got confused and went near Brahma thinking it was Siva, Lord Siva became angry and cut off one of the five heads to avoid future confusion.

 

Another version is Siva decapitated one of the 5 heads of Brahma, because he spoke disrespect fully. Now Brahma has only four heads.

 

Another version is that he was looking at his daughter Satarupa with bad intention and his head was cut off as a punishment.

 

All these Head losing stories are symbolic. They were told to illustrate certain points.

Why did Vishnu lose his Head?

There is a strange story of Vishnu losing head in Satapata Brahmana:

Satapata Brahmana (SB) belongs to the White (Sukla) Yajur Veda (Vajasaneyi Samhita). It consists of 100 sections (sata+path) and so it is known as the Satapata Brahmana. This is the most important Brahmana (SB) because it deals with various fire sacrifices, both minor and major. Most of the stories told in the Brahmana re symbolic. One of the stories is about Vishnu and ants.

The 14th book contains a legend concerning a contention among the gods in which Vishnu came off victorious. So it is customary to say ‘Vishnu is the luckiest (Sreshta) of the gods’ or ‘Vishnu is the most excellent of the gods’. Vishnu has brought into prominence for the first time. Earlier the legend of his three strides was known. The three stride episode is mentioned in the Satapata Brahmana also. Later the Puranas shifted this to the Vamana (Trivikrama) Avatar.

 

When Indra came to know that Vishnu won, he struck off his (Vishnu’s)  head in jealousy, says the SB. There is another version :-

 

The gods sent forth ants to gnaw the bow string of Vishnu. They did it out of jealousy. When Vishnu was standing leaning on the bended bow they sent the ants. They thought once the ants cut off the string, the bow will strike on Vishnu and knock him down. The string snapped as expected and sprang upwards, severed his (Vishnu’s) head from the body. The same legend appears in Taittiriya Aranyaka as well.

 

–Subham–

 

 

கடல் போல புத்தகங்கள்! அம்மாடியோவ்வ்வ்வ்வ்! (Post No.4419)

Written by London Swaminathan 

 

Date: 21 NOVEMBER 2017

 

Time uploaded in London- 8-16 am

 

 

Post No. 4419

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சம்ஸ்கிருதத்திலுள்ள நீதி நூல்கள் கடல் போலப் பெருகி இருக்கின்றன. தமிழில் திருக்குறள் முதலிய 18 நூல்களில் நீதிகள் குவிந்து கிடப்பதை நாம் அறிவோம். அவ்வையின் ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், அதி வீரராம பாண்டியனின் வெற்றி வேற்கை, முனைப்பாடியாரின் அறநெறிச்சாரம், பெயர் தெரியாமல் அழிந்துபோன் ஆசிரியர்கள் யாத்த விவேக சிந்தாமணி, நீதி வெண்பா, குமரகுருபரின் நீதி நெறி விளக்கம், பாரதியாரின் புதிய ஆத்திச் சூடி– இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் சம்ஸ்கிருதத்தில் உள்ள நீதி நூல்களை அடுக்க முடியாது; தொகுக்க முடியாது; வகுக்க முடியாது; பகுக்க முடியாது!! அவ்வளவு இருக்கின்றன. சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் பலசுவைப் பாடல்கள் இடையே நீதி ஸ்லோகங்கள் காணப்படுகின்றன; மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்திலும், சாந்தி பர்வத்திலும் ஆயிரக் கணக்கில் நீதிகள் , பொன் மொழிகள் காணப்படுகின்றன. பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம் போன்ற கதைகள், சிறு வயதிலிருந்தே நீதிகளை போதிக்க உதித்த நூல்கள். இது தவிர நீதிக்காகவே — அதாவது நீதி நெறி பற்றிய ஸ்லோகங்கள் மட்டுமே அடங்கிய நூல்களின் பட்டியல்– நீண்ண்ண்ண்ண்ண்ண்ட பட்டியல்:-

சுக்ர நீதி

சாணக்ய  நீதி

விதுர நீதி

பர்த்ருஹரியின் நீதி சதகம்

காமாந்தகீய நீதிசார

வரருசி நீதிசார

 

கடகாபரண நீதிசார

 

வேதாளபட்ட நீதிப்ரதாப

பல்லட சதக (வல்லாளன்)

பில்ஹணரின் சாந்தி சதக

சம்புவின் அன்யோக்திமுக்தலதா சதக

குசுமதேவனின் த்ருஷ்டாந்த சதக

குமானியின் உபதேச சதக

நாகராஜாவின் பாவசதக

சங்கரரின் சதஸ்லோகி

சாணக்ய நீதி

சாணக்ய சதக

சாணக்ய ராஜநீதி

வ்ருத்த சாணக்ய

லகு சாணக்ய

சாணக்ய சார சங்ரஹ ராஜநீதி சாஸ்திர

கௌடில்யரின் அர்த்த சஸ்திரம் (சாணக்ய)

 

சதகம் என்றால் நூறு ஸ்லோகங்கள் என்று பொருள்; பதிகம் என்றால் பத்து பாடல்கள் கொண்டது.

இவைகளிலுள்ள விஷயங்களைக் காணும் முன் ஒரு ஆறு நூல்களின் தொகுப்பை மட்டும் காண்போம்.

சாணக்யர், கௌடில்யர், குடிலர் என்ற பெயரால் அழைக்கப்படும் பிராமணன் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்துவிட்டு குடிசையில் போய் அமர்ந்து கொண்டார். இவ்வளவுக்கும் அவர் அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த மௌரியப் பேரரசின் — மகத சாம்ராஜ்யத்தின் மந்திரி — பிரதம மந்திரி!

 

நந்த வம்ச அரசர்கள் — இந்து மத வேள்விகளைக் கிண்டல் செய்து, அவைகளுக்குத் தடை போட்டு வந்தனர்; விடை ஏதும் கிடைக்காமல் நாடு தவித்தது. ஒருநாள் ஐயர் குடுமியுடன், சாணக்கியர் நடந்து கொண்டிருந்தார். புல்லோ கல்லோ தடுக்கியவுடன் தடுமாறினார். கெக்கெக்கென்று சிரித்தனர் நந்த வம்ச அரச குடும்பத்தினர். தடுமாற்றத்தில் ஐயருக்கு குடுமி வேறு அவிழ்ந்து போயிற்று.!

 

 

உங்கள் வம்சத்தை வேரறுக்கும் வரை இந்தக் குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்தார். (துரியோதனனின் ரத்ததைக் கூந்தலில் தடவும் வரை தலை முடியைப் பின்ன மாட்டேன் என்று சபதம் செய்து வெற்றி கண்ட திரவுபதி போல).

 

மயில்களை வளர்க்கும் முரா வம்சத்தில் உள்ள சில வீரர்களுக்கு பஞ்ச தந்திரங்களையும் சாம,தான பேத, தண்ட அணுகுமுறைகளையும் கற்பித்தார். நவ நந்தர்களை நடு நடுங்க வைத்தார். சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது. மௌரியப் பேரரசு உதய சூரிய ன் போலத் தொடுவானத்தில் தோன்றியது. அசோகன் காலம் வரை இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டது.

அந்த சாணக்கியர் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அர்த்த சாஸ்திரம்தான் உலகில் தோன்றிய முதல் பொருளாதார நூல். வரி விதிப்பு, எவ்வளவு வரி என்பது முதல் படை அமைப்பு வரை அவர் பேசுகிறார்.

 

அவர் பேசாத பொருளாதார விஷயம், அரசியல் கொள்கை ஏதுமில்லை. ஐயர் குடுமியை முடிந்து கொண்டு நீதி வாக்கியங்களை உதிர்த்தார்; பின்னர் மொழிந்தார்; இறுதியில் மழை போலப் பொழிந்தார். அவர் எழுதியதாக அவர்  பெயரிலுள்ள ஆறு நூல்களை ஒரு வெளிநாட்டு அறிஞர் ( Ludwik Sternbach லுட்விக் ஸ்டேன்பாக்) ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிட்டார்.

 

சாணக்கிய சபதம் என்னும் நாடகம் தமிழ்நாட்டில் பலரால் இயற்றப்பட்டு, பலரால் நடிக்கப்பட்டும் இருந்தது; நூறு ஆண்டுகளுக்கு முன் வரை; வெள்ளைக்காரனுக்கு எதிராக போராட்டம் பெருகியவுடன் அவை எல்லாம் மறையத் தொடங்கின. பல தமிழ் நாடகங்கள் இன்றும் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைக்கின்றன.

சாணக்கியர் பெயரில் உள்ள ஆறு நீதி நூல்கள்:-

  1. வ்ருத்த சாணக்ய

எளிய நடையில் உள்ளதை சாணக்ய நீதி தர்பண என்பர் (தர்பண= கண்ணாடி)

2.வ்ருத்த சாணக்ய

கடின நடையில் உள்ள நூல்

3.சாணக்ய நீதி சாஸ்த்ர

இதில் 109 கவிகள் உண்டு; வேறு ஒருவர் இதைத் தொகுத்து அளிப்பதாக முதல் ஸ்லோகத்திலேயே சொல்லிவிடுகிறார்.

4.சாணக்ய சார சம்க்ரஹக

இதில் 300 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன. இதுவும் வேறு ஒருவரால் தொகுக்கப்பட்டதே.  கங்கையையும் காசியையும் புகழ்வதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

 

5.லகு சாணக்ய

எட்டு அத்தியாயம் உடையது; ஒவ்வொன்றிலும் 10 முதல் 13 ஸ்லோகங்கள் வரை உள்ளன. இதை ஒருவர் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதால் ஐரோப்பா முழுதும் பிரபலமாகியது.

6.சாணக்ய ராஜ நீதி சாஸ்த்ர

எட்டு அத்தியாயங்களில் 534 ஸ்லோகங்கள் இருக்கின்றன. திபெத்திய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

இவை அனைத்தும் சாணக்யரால் எழுதப்பட்டவையா, சொல்லப்பட்டவையா என்று எவராலும் சொல்ல முடியவில்லை. ஆனால் சாணக்யர் என்றால் ‘ராஜ தந்திரம்’, ‘நீதி’ என்ற பொருள் வந்துவிட்டது

இவை தவிர ஏராளமான நீதி நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உண்டு. ஆன்மீக விஷயம் பற்றிச் சொல்லும் நீதி வாசகங்கள் அடங்கிய நூல்களும் உள்ளன. அவைகளைப் பொதுவாக இதில் சேர்ப்பதில்லை.

 

அடுத்த சில கட்டுரைகளில் சாணக்ய நீதியிலுள்ள விஷயங்களை தமிழ் நீதி நூல்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறேன்.

 

TAGS:– சாணக்கியர், நீதி நூல்கள், கௌடில்யர், நீதி சாஸ்திரம்

 

–சுபம், சுபம்–

கம்பன் பாட்டால் கல்லெலாம் மணி! ( Post No.4418)

Written by S.NAGARAJAN

 

 

Date: 21 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-39 am

 

 

 

Post No. 4418

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 8)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

கம்பன் பாட்டால் கல்லெலாம் மணியேயான! கனியெலாம் கனகமான!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

Ram Navami in Kolkata

பாடல் 41

சைவம் வைணவம் மென்றிரு சமையத்தின் னிலையிற்

கைவந் தமத நூல்களோ கணக்கில கவியின்

மெய்வந் தேவிக சிக்குமிந் நூல்விர கறியார்

பொய்வந் தேறிடம் பொதிந்தனர் கவிப்புல னில்லார்

 

பாடல் 42

விரிந்த சாத்திரத் தொகை,கலைத் தொகுதி, வேற் றுமையே

தெரிந்தி லார்பலர், தெரிந்தவர் கலையினும் பிரிவாய்ப்

பொருந்தெ ழிற்கலை தொழிற்கலை வேற்றுமை பூட்டாரே

திருந்து சித்திர கலையுருங் கவிக்கலைத் தெரியார்

 

பாடல் 43

ஓவியம் சிற்ப மெனுமுயர் கலையினுள்

காவிய மென்னுங் கலைபயப் பதோகவி னின்பம்

தீவு காவியக் கலைவரு வேற்றுமை தெரிப்பின்

பாவி கத்துரு மொழிகொடு பண்ணலே மன்னி

 

பாடல் 44

இன்னும் வேறொரு வேற்றுமை காவியத் தியலும்;

முன்னங் கூறிய சிற்பமோ வியமமை முறையும்

முன்னும் பாவிக வுருவொரு கணநிலைத் தொகுக்கும்;

மன்னுங் காவியப் பொருளிறப் பெதிர்வினான்

 

பாடல் 45

காவிய மென்னுங் கடற்படு நூனிரை கணிப்பார்

ஓவி யக்கலை யுள்ளுறை நோக்குண ராதே

கூவிக் காட்டிய கொள்கையுங் கொள்கையாக் கொள்ளேம்;

மேவும் சித்திரம் விழியிலான் மதித்திடின் வினையென்?

 

பாடல் 46

ஆயினு மிஃதறிந்த் திலார் கித்தம் மதிமார்

தீய னுங்கிய சிந்தைய ராய்ச்செவிச் செறுத்தே

வாய னுங்கிய வாறுரை மதித்தனர் தமிழெந்

தாயு நுங்கிய தனியமு தலையெறி கடலை

 

Ram Navami in Bengaluru

பாடல் 47

கம்பன் பாவருங் கனிவினைக் கனிதா வியலா:

கம்பன் பாவருங் கடிமணம் மலர்தந்து கமழா;

கம்பன் பாவருங் கவினுரு கலைதந்து நிலையா;

கம்பன் பாவருங் கண்டிசை எண்டிசை காட்டா;

வேறு

பாடல் 48

அளப்பரு மான்ற தன்மை யாழ்ந்துகீழ் போகு நீர்மை

கிளப்பரு நளிர்மை யின்ன கெழுமிய குணத்தி நாலும்

களைப்பற வுயிர்கட் கோசைக் களிப்பையே யளிப்ப தாலும்

வளைப்புறு கடலுங் கம்பன் கவியென மருவிற் றன்றே

 

பாடல் 49

சவியுறத் தெளித லாலும் தவழ்நயம் தழைத் தலாலும்

புவியுறு முயிர்க்கு மேலாம் புலம்நின்று விளங்க லாலும்

கவினுறு பொருட்கோ ரெல்லை கதுவுறா விதுப்பி னாலும்

கவியுறு விசும்புங் கம்பன் கவியெனக் காட்டிற் றன்றே

 

பாடல் 50

தொல்லையிற் றொடர்ந்த ஞானத் தொகைவயின் வருத லாலும்

வல்லையில் வரம்பி லின்பம் மக்கட்கு வகுத்த லாலும்

ஒல்லையி லொன்றே யாகி யொப்புயர் வின்மை யாலும்

எல்லையிற் பொருளுங் கம்பன் கவியென இலகிற் றன்றே

 

பாடல் 51

சொல்வளம் பெரிதென் கோயான்? சொல்லினுட் டுளும்பு ஞான

எல்வளம் பெரிதென் கோயான்? நவையறு மணிகள் வீசும்

வில்வளம் பெரிதென் கோயான்! வியங்கியம் விழுமி தென்கோ?

பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்!

 

Ram Ram Seva Sangham in Chennai

பாடல் 52

அழகினை முடியக் காண வகிலத்துப் புலவ ரெல்லாம்

பழகிய நூலின் பண்பே பற்றியொன் றொன்றே  கண்டார்

பழையவா சனையிற் கம்பன் பைந்துணர் பூத்த பாவிற்

குழகெலா மொருங்கே கூடிக் குடியிருப் பதையுங் கண்டார்

 

பாடல் 53

பூவிடைப் பொலிவு நோக்கிப் பொற்றிரு நளினஞ் சார்ந்தாள்

சேவுடை சிவனார் சோதி திகழவே யுமையுஞ் சேர்ந்தாள்

நாவினின் றொலிக்குஞ் சொல்லி னயமெலா மடுத்த கம்பன்

பாவிலில் விருபண் பொன்றப் பாரதி பருகி வென்றாள்

 

பாடல் 54

வம்பவிழ் மலரில் வந்தோன் வகுத்தவர் கோடி யேனும்

கம்பனார் உதித்த பின்றான் கறுவிய கதமும் கொண்டான்

கொம்பெறும் வாணி தன்னாக் குடிச்செய ணீக்கி யன்னார்

பம்பிசை நாப்புக் காங்கே பணிசெய்து நிற்றல் கண்ட

 

பாடல் 55

கல்லெலாம் மணியே யான; கனியெலாங் கனக மான;

அல்லெலாம் ஒளியே யான; ஆறெலா மமுத மான;

புல்லெலாம் புலமே யான;  புகழெலாம் புகுத லான

சொல்லெலாம் தொகுத்துக் கம்பன் சூழ்ரச வாதச் சீரால்

 

பாடல் 56

வேறு

பல்வளத்தின் மாரிவான்ப டர்ந்துதாரை சோரலோ

எல்வளத்தி னெல்லிநூ றெழுந்துசோதி வீசலோ

பல்வளத்தி ராமன்வில் வழங்குமீனி வானிலோ

சொல்வளத்தின் பெற்றி முற்றச் சொல்லலாக வற்றதோ!

 

பாடல் 57

ஓடலாலு லாவலாலுள் ளோய் வுலைத் துற் சாகமே

மூடலால்மு ணுங்கலால்மு ழங்கலால்மு கந்தணி

சூடலால் சொலித்தலால் தொனித்தலாலுள் ளம்நெகிழ்

பாடலாலின் பத்துனாரிப் பாருளாரில் யாருளார்?

*

அழகிய இப்பாடல்கள் ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளதைக் கம்பனை நன்கு கற்றோர் உணர முடியும்.

கம்பனின் சொற்களை வைத்தே கம்பனின் இன்பத்தைக் காண்பிக்கும் பாடல்கள் இவை.

எளிதில் பொருள் விளங்கக் கூடியவை!

கோதாவரியைக் கண்ட கம்பன் சவியுறத் தெளிதலால் என்று ஆரம்பித்துக் கவிதையின் இலக்கணத்தைப் பகர்வான். அதே சவி (ஒளி) கம்பனின் கவிதையில் இருக்கிறது என்கிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

சொல் வளம் பெரிதா? சொல்லினுள் துளும்பும் ஞான ஒளி பெரிதா?

நமக்கும் விடை சொல்லத் தெரியவில்லை!

கல் மணியாக மாற, கனியெல்லாம் தங்கமாக மாற,இருட்டெலாம் ஒளியாக மாற, ஆறெல்லாம் அமுதமாக மாற, புல்லெலாம் புலமாக மாற, புகழ் எல்லாம் ஓடி வந்து  கம்பன் தன் பாட்டில்!

கம்பனைச் சுவைத்து மகிழும் கம்ப ரஸிகர் சிவராஜ பிள்ளை அவர்களின் பாடலை மேலும் சுவைப்போம்!

                                          -தொடரும்

***

கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு; மனு நீதி நூல்-பகுதி 3 (Post No.4417)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 21-18

 

 

Post No. 4417

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

முதலிரண்டு பகுதிகள் கடந்த இரண்டு தினங்களில் வெளியிடப்பட்டன.

 

கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு; மனு நீதி நூல்-பகுதி 3 (Post No.4417)

 

முதல் அத்தியாயம்

ஸ்லோகம் 21. அந்த பிரம்மானவர் வேதத்தில் சொல்லியபடி, அதனதன் அடையாளங்களுடன் மனிதனையும் பிராணிகளையும் படைத்தார். அதாவது படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் அதனதன் தொழில்கள், பெயர்கள், அடையாளங்கள் ஆகியவற்றை, வேதத்தில் சொல்லியபடி செய்தார்.

 

22.காமத்தை சுபாவமாகவுடைய இந்திராதி தேவர்களையும், சூட்சும ரூபமுள்ள சாத்திய தேவர்களையும், அழிவற்றதான யாகங்களையும், சராசரங்களையும் அந்தப் பிரபுவானவர் சிருஷ்டித்தார்.

 

  1. யாகங்கள் நிறைவேறும் பொருட்டு அக்னி, வாயு, சூரியன் ஆகியவற்றிலிருந்து ரிக், யஜூர், சாம வேதங்களை வெளிப்படுத்தினார். இவை அநாதியான வேதங்கள் (அதாவது ஆதி அந்தம் அற்றவை.)

 

24.பின்னர் காலத்தையும், காலத்தின் பிரிவான மாதங்களையும், நட்சத்திரங்களையும் நவக் கிரஹங்களையும், நதிகளையு, சமுத்திரங்களையும், மலைகளையும் மேடு பள்ளங்களையும் உண்டு பண்ணினார்.

25.தவம், வாக்கு, சுக துக்கங்கள் காம,  க்ரோதம் முதலியவற்றை, மக்களின் இனப்பெருக்கத்துக்காக உண்டு பண்ணினார்.

  1. கர்மத்தை அறிவதற்காக தர்மம், அதர்மம் மற்றும் அதைப் பின்பற்றுபவர்கள், அவர்களுக்கு வரக்கூடிய சுக துக்கங்களையும் உண்டுபண்ணினார்.

27.முன் சொன்ன பஞ்ச பூதங்களுடைய சூட்சுமமான தன்மாத்திரைகளால் இவ்வுலகம் கிரமமாக வளர்கின்றது. இந்த உலகம் சூட்சுமமாகவும், ஸ்தூலமாகவும் இருக்கிறது.

28.இறைவன் ஒவ்வொரு பிராணிக்கும் நிர்ணயித்த அதே குணங்களுடன் அவை மீண்டும் பிறந்து அதேபடி செயல்படுகின்றன.

29.கொலை செய்யும் குணத்தை சிங்கம் முதலிய மிருகங்களுக்குக் கொடுத்தார். மான்களுக்கு கொலையின்மையை அளித்தார். தயை என்னும் குணத்தை பிராமணர்களுக்கும், கொடுமை (போர்) என்பதை க்ஷத்ரியர்களுக்கும், குருவுக்குப் பணிவிடை செய்வதை பிரம்மசாரிகளுக்கும், அவர்களுக்கே மது மாமிச புசித்தல் எனும் அதர்மத்தையும், தேவர்களுக்கு சத்தியத்தையும், மனிதர்களுக்கு அசத்தியத்தையும் (பொய்) உண்டு பண்ணினார்.

 

30.வசந்தம் முதலிய பருவ காலங்கள் எப்படி மாறுதல் அடைகின்றனவோ அது போலப் பிராணிகளும் தம்தம் கர்மத்துக்குத்  தக்க  செய்கைகளைத் தாமே அடைகிறார்கள்.

 

எனது கருத்து:

டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு நேரடியான சான்றுகள் இல்லை. ஆயினும் இறைவன், தன்னுடைய விதையை முதலில் கடலில் வித்தித்தான் என்பது பரிணாமக் கொள்கையின் முதல் படியாக எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்தில் பரிணாமக் கொள்கை வரிசையாக இருப்பது போல இங்கு இல்லை.

 

மேலும் எதிர் எதிர் குணங்கள் இருந்தால்தான் (இன்பம்/துன்பம்; மகிழ்ச்சி- சோகம்) மனித இனம் வளர முடியும் என்பதையும் சொல்கிறார். எல்லோரும் ஒரே குணத்துடன் இருந்தால் வளராது என்று இப்படிப் படைத்தான். மின்சாரம் ஓடுவதற்கு பாஸிட்டிவ், நெகட்டிவ் மின்சாரம் (நேர்மறை, எதிர்மறை மின்சாரம் ) தேவைப்படுவது போல இது.

 

ஒவ்வொரு பிராணியும் அதே குணத்தோடு மீண்டும் மீண்டும் வரும் விஷயம் மரபியல் (Genetics) விஷயமாகும்

 

வேதம், யாக, யக்ஞம் ஆகியன ஆதிகாலம் தொட்டு  இருக்கின்றன. மனிதன், பிராணிகள் படைப்புக்குப் பின்னர் கிரஹங்கள், நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாக சொல்லுவது அறிவியலுக்கு முரணானது. ஆயினும் ஸ்லோகத்தின் அல்லது வாக்கியத்தின் வரிசைக் கிரமத்தை மாற்றுவதில் தவறு ஏதுமில்லை.

 

  1. But in the beginning he assigned their several names, actions, and conditions to all (created beings), even according to the words of the Veda.
  2. He, the Lord, also created the class of the gods, who are endowed with life, and whose nature is action; and the subtile class of the Sadhyas, and the eternal sacrifice.
  3. But from fire, wind, and the sun he drew forth the threefold eternal Veda, called Rik, Yajus, and Saman, for the due performance of the sacrifice.
  4. Time and the divisions of time, the lunar mansions and the planets, the rivers, the oceans, the mountains, plains, and uneven ground.
  5. Austerity, speech, pleasure, desire, and anger, this whole creation he likewise produced, as he desired to call these beings into existence.
  6. Moreover, in order to distinguish actions, he separated merit from demerit, and he caused the creatures to be affected by the pairs (of opposites), such as pain and pleasure.
  7. But with the minute perishable particles of the five (elements) which have been mentioned, this whole (world) is framed in due order.
  8. But to whatever course of action the Lord at first appointed each (kind of beings), that alone it has spontaneously adopted in each succeeding creation.
  9. Whatever he assigned to each at the (first) creation, noxiousness or harmlessness, gentleness or ferocity, virtue or sin, truth or falsehood, that clung (afterwards) spontaneously to it.
  10. As at the change of the seasons each season of its own accord assumes its distinctive marks, even so corporeal beings (resume in new births) their (appointed) course of action.

 

सर्वेषां तु स नामानि कर्माणि च पृथक् पृथक् ।

वेदशब्देभ्य एवादौ पृथक् संस्थाश्च निर्ममे ॥ 21

 

कर्मात्मनां च देवानां सोऽसृजत् प्राणिनां प्रभुः ।

साध्यानां च गणं सूक्ष्मं यज्ञं चैव सनातनम् ॥ 22

अग्निवायुरविभ्यस्तु त्रयं ब्रह्म सनातनम् ।

दुदोह यज्ञसिद्ध्यर्थं ऋच्।यजुस्।सामलक्षणम् ॥ 23  ॥

 

कालं कालविभक्तीश्च नक्षत्राणि ग्रहांस्तथा ।

सरितः सागरान् शैलान् समानि विषमानि च ॥ 24

 

तपो वाचं रतिं चैव कामं च क्रोधमेव च ।

सृष्टिं ससर्ज चैवैमां स्रष्टुमिच्छन्निमाः प्रजाः ॥ 25

 

कर्मणां च विवेकार्थं धर्माधर्मौ व्यवेचयत् ।

द्वन्द्वैरयोजयच्चैमाः सुखदुःखादिभिः प्रजाः ॥ 26

अण्व्यो मात्रा विनाशिन्यो दशार्धानां तु याः स्मृताः ।

ताभिः सार्धमिदं सर्वं संभवत्यनुपूर्वशः ॥ 27

 

यं तु कर्मणि यस्मिन् स न्ययुङ्क्त प्रथमं प्रभुः ।

स तदेव स्वयं भेजे सृज्यमानः पुनः पुनः ॥ 28

 

हिंस्राहिंस्रे मृदुक्रूरे धर्माधर्मावृतानृते ।

यद् यस्य सोऽदधात् सर्गे तत् तस्य स्वयमाविशत् ॥29

 

यथर्तुलिङ्गान्यर्तवः स्वयमेवर्तुपर्यये ।

स्वानि स्वान्यभिपद्यन्ते तथा कर्माणि देहिनः ॥30

 

 

–சுபம் சுபம்–

 

Miracles in the Life of Kerala King Kulasekara! (Post No.4416)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-49

 

 

Post No. 4416

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Alvars are Vaishnava saints of Tamil Nadu. They are 12 in number. They were the famous authors of Nalayira Divya Prabandham, a collection of 4000 divine poems praising Lord Vishnu. They stand on the same footing of sanctity as Tevaram of the three Tamil Saiva saints. Kulasekara was the king of Kerala and one of the 12 Alvars.

 

Though he discharged his duties as a king regularly he was deeply involved in practising the ancient customs. As part of it he used to listen to Ramayana every day from his Guru. When he was engaged in hearing the story, he came to the stage of Khara Vadha—Killing of demon Kharan by Rama single handily. When he came to know that Rama was fighting single all alone, he ordered his army to march to back up Rama. He also put on his armours and went forth to help Sri Ramachandra. Rama lived several thousand years before Kulasekara, but he travelled back in Time, only mentally.

 

There was another occasion when his Guru was narrating the portion of Ramayana where Rama began to cross the sea to Sri Lanka. Immediately he armed himself and went into the sea with his retinue of soldiers!

These incidents and his deep emotional involvement made the ministers to devise a plan to keep him away from the Vaishnava devotees. They want to get rid of them so that he would pay more attention to his royal duties. They deliberately removed the costly jewels from the deity he worshipped and attributed the theft to his Vaishnava devotees and the priest. But Kulasekara did not believe it because he had so much faith in them. He offered put his hand in a pot containing cobras. If the cobras did not bite, it was a monumental proof of the innocence of the Vaishnava devotees and the criminal offence of the ministers. The cobras did not harm him. The ministers realised his sincerity and begged for pardon.

 

Later he crowned his son as the king and retired to lead a life of penance and prayer. He made an extensive pilgrimage to all the Vaishnava temples in South India. When he reached Mannarkoil in Tirunelveli district his soul departed from his body. He is the one who composed the well known Mukundamala in Sanskrit in addition to his Tamil poems ‘Perumal Tirumozi’ in Divya Prabandham.

He was very fond of Tirupati Balaji known as Thiruvenkaathan or the Lord of the Venkata Hills. The Lord of the Seven Hills is known as Venkatachapathi. He made very strange requests to Him in a decad.

“Oh Lord, Make a fish in the stream of Venkata Hills. Change me in to a crane in the Holy Hills. Let me be a servant holding a plate for you. Or at least make me a bush, a pathway, a flower or anything in the hills. It was heart melting poems.

 

Hindus believe that the dust of devotees has more powers than the Lord himself. He wanted to be a part of the dust of millions of devotees marching to see the Lord up above the seven hills. He wanted to hear the reverberating slogans of ‘Govinda, Govinda’ from the devoted pilgrims. So he wanted to be an animate or inanimate thing on the hills. A novel idea! His intense devotion is expressed in the aptest and most beautiful words in his poems. Very often the Vaishnava singers sing his poems in public platforms and the listeners are visibly moved.

–Subham–

அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன் ! (Post No.4415)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-15

 

 

Post No. 4415

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சோழநாட்டில் திருமங்கை என்னும் ஊரில் பிராமண குலத்தில் உதித்தவர். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுச் செந்தமிழில் விளையாடினார். ஆழ்வார்கள் பாடிய அமுதப் பாசுரங்களைப் பருகினார். இராமானுஜர் நூற்று அந்தாதி பாடிய திருவரங்கத்தமுதனார் வம்சத்தில் தோன்றியவர். கோனேரி அப்பனையங்கார் இவரது பேரன். ‘குலத்தளவே ஆகுமாம் குணமென்னும்’ ஔவையார் மொழிக்கேற்ப, வைணவ குலத்தின் ஆசார அனுஷ்டானங்களை அப்படியே பின்பற்றி வந்தார். வீர வைஷ்ணவராகத் திகழ்ந்தார். பெருமாளின் அருளில் பிறந்த பிள்ளை ஆதாலால் பிள்ளைப் பெருமாள் ஆனார். ஆனால் பெற்றோர் சூட்டிய திரு நாமம்- ரங்கநாததாசன். மற்றொரு பெயர் மணவாளதாசன்.

 

சுமார்  400 ஆண்டுகளுக்கு முன்னர்   திருமலை நாயக்கர் (1623-1659)  காலத்தில் வாழ்ந்த  பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் , நாயக்கரின் அரண்மனையில் செய்த அற்புதத்தை முன்னரே எழுதியுள்ளேன் ( கீழே இணைப்பு முகவரி உள்ளது). இப்பொழுது அவர் செய்த மேலும் சில அற்புதங்களைக் காண்போம். தவ வலிமையாலும், சொல் புலமையாலும் அவர் பல அற்புதங்களைச் செய்தார்; யமகம், சிலேடை, திரிபு என பல வகைப் பாடல்களை பாட வல்லவரான அவர் அஷ்டப் பிரபந்தம் என்று அழைக்கப்படும் எட்டு அருமையான தமிழ் நூல்களை மொழி அன்பர்களுக்கு வழங்கியுள்ளார். “அஷ்டப் பிரபந்தம் படித்தவன் அரைப் பண்டிதன்” என்னும் சொல் வழக்கினால் அதன் பெருமை நன்கு விளங்கும். அதாவது, அத்துணை சிறிய அளவு படித்துவிட்டாலே பண்டிதன் என்னும் பாதையில் பாதி தூரம் சென்றவர் ஆகிவிடுவோம்.

 

பாலும் தேனும் அமுதும் கைக்கும்படி பாட வல்லவர். கவிநயம் உணர்ந்த புலவரெலாம் இவரை திவியகவியெனக் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவர் (திவிய= திவ்ய = தெய்வப் புலவர்)

இவர் தொடர்பாக வழங்கும் இன்னும் ஒரு சொல் வழக்கு, “அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்” — என்பதாகும் இதற்கு இரு வேறு விளக்கங்கள் உண்டு.

ஐயங்காருக்கு ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டுள்ள அரங்கநாதனைப் பாடுவதிலே பேரின்பம் கிடைத்தது. ஆதலால் வேறு எவரையும் பாட மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்தார். பார் புகழும் திருவேங்கடத்தானைப் பாடாத ஆழ்வார் இலையே; அவர் மீதும் உங்கள் செந்தமிழில் இனிய கீதம் இசைக்கக் கூடாதா? என்று அன்பர்கள் வேண்டினர். ஆனால் இவரோ மாட்டேன் என்று சொல்லிவிட்டார். திருப்பதி மலையில் வீற்றிருந்த வெங்கடாசலபதியைத்தான் இவர் மலை மேதுள்ள குரங்கன் என்று சொன்னார். இரு பொருள்படும் சிலேடைக் கவியில் வல்லவர் அல்லவா?

 

கிருஷ்ணமாச்சாரியார் சொல்லும் விளக்கம்

 

“ஒரு நாள் இரவில் இவர் கனவில் திருவேங்கடத்தான் தோன்றி எம்மையும் பாடுக என்றனன். அப்போது ‘மாட்டேன்’ என்று சொல்லி மறுத்து விட்டார் இதைத் தொடர்ந்து இவருக்கு கழுத்தில் கண்டமாலை தோன்றியது உடனே தம் தவற்றை உணர்ந்து திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி என்று இரண்டு பிரபந்தங்களைப் பாடினார்; கண்டமாலை நோயும் காணாமற் போயிற்று!”

 

இது 1906 ஆண்டில் திவான் பகதூர் கிருஷ்ணமச்சாரியார் எழுதிய விளக்கம்.

இது சென்னை பல்கலைக் கழக பாடபுத்தகமாக அங்கீகரிக்கப்பட்டதால் இதுவே சரியான விளக்கம்.

 

சிலர் ஐயங்கார் குறிப்பிட்டது ‘மந்தி’ பாயும் வேங்கட மலை என்ற பொருள் அல்ல; குரங்கன் என்பது மானைக் (குரங்கம்) கையில் ஏந்திய சிவனைக் குறிப்பிட்டது என்பர். சைவர்கள் இவரிடம் வந்து சிவனைப் பாடும்படி கேட்ட போது இவ்வாறு சொன்னதாகக் கதை கட்டிவிட்டனர்.

 

 

இவருடைய கவிகளில் அப்பர் பெருமான், வள்ளுவப் பெருமான் ஆகியோரின் தாக்கத்தைக் காணலாம்.

“கற்றதனால் பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழா அர் எனின்” என்பான் வள்ளுவன்.

ஐயாங்காரோ 14 உலகம் சுற்றி வந்தாலும், பல நூல்கள் கற்றார் எனினும் அரங்க நாதனை வழிபடாவிட்டால் யாது பயன்? என்கிறார்:

கற்றாரெனினும் பதினாலுலகுங்

கண்டாரெனினுந் தண்டா மிருபற்

ற்றாரெனினுந்த் திருமாலடியார

ல்ரல்லாதவர் வீடில்லாதவரே

பொற்றாமரையாள் கணவன் றுயிலும்

பொற்கோயிலையே புகழ்வார் பணிவார்

மற்றாரெனினும் பெற்றாரவரே

வானோர் திருமாமணி மண்டபமே

–திருவரங்கக் கலம்பகம்

 

அரங்கனைப் புகழ்வார் மட்டுமே வைகுண்டத்திலுள்ள திருமாமணி மண்டபத்தைப் பெற்றவர்கள் என்பது இதன் பொருள்.

 

 

 

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து

    தரணியொடு வானாளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்

    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்

அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்

    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

    அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

 

என்று அப்பர் பாடினார் சிவபெருமான் மீது.

இதன் எதிரொலியை ஐயங்கார் பாடலில் காணலாம்:-

 

பாதியா யழுகிய கால்கையரேனும்

பழிதொழிலு  மிழிகுலமும் படைத் தாரேனும்

ஆதியா யரவணையா யென்பராகி

லவரன்றோ நாம் வணங்கு  மடிகளாவர்

சாதியா லொழுக்கத்தான் மிக்காரேனுஞ்

சதுர் மறையால் வேள்வியாற் றக்கோரேனும்

போதினான் முகன் பணியப் பள்ளி கொள்வான்

பொன்னரங்கம் போற்றாதோர் புலையர்தாமே.

 

 

இவர் பாடிய எட்டு நூல்கள் (அஷ்டப் பிரபந்தம்) பின் வருமாறு:

 

திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்

திருவரங்கக் கலம்பகம் – 105

திருவரங்கத்து மாலை- 112

திருவேங்கட மாலை -103

திருவேங்கடத்தந்தாதி-101

அழகர் அந்தாதி- 101

108 திருப்பதி அந்தாதி-114

ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள் -32

 

ஆகமொத்தம் – 773

 

இவர்  திரு நறையூர் நம்பி விஷயமாக மேக விடு தூது ( 205 பாடல்கள்), வீர வைணவ நிலையை நாட்டும் விடுதிக் கவிகள் 32  ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.

ஒருமுறை திருவரங்கத்துக் கோவில் பசு ஒன்று பொது நிலத்தில் மேய அதை சைவர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர். சிவன் மீது பாடல் பாடினால் அதை விடுவிப்போம் என்றனர். அவரும் சம்மதித்தார். அவர்கள் அருகிலுள்ள சிவத் தலமான திருவானைக் காவலைச் சேர்ந்தவர்கள். பசு இல்லாமல் விசுவ ரூப தரிசனம் தடைப்படுமே என்று அஞ்சிய ஐயங்கார் பாடலைப் பாடுவதாகவும் உடனே அதை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார். அவர்கள் பாடலைப் பாடுங்கள் என்று சொன்னவுடன் மங்கை பாகன் என்று தொடங்கி பின்னர் முடித்துத் தருவதாகச் சொன் னார். பசுவும் விடுதலை பெற்றது பின்னர் அவர் பாடிய பாடலோ சிவனை விட உயர்ந்தவர் பெருமாள் என்று முடிந்தது! இதோ அந்தப் பாடல்:–

 

சிவனை விட உயர்ந்தவர்!

 

மங்கைபாகன் சடையில் வைத்த கங்கைநீர் யார்பதத்து நீர்

வன்சமேவு முனிவனுக்கு மைந்தனான தித்ல்லையோ

செங்கையாலிரந்தவன் பால மார கற்றினார்

செய்ய தாளின் மலரரன் சிரத்தினா தில்லையோ

வெங்கண் வேழமூலமென்ன வந்ததுங்கள் தேவனோ

வீறு வாண லமரில் அன்று விரலழிந்ததில்லையோ

அங்கண் ஞால முண்டபோது வெள்ளி வெற்பகன்றதோ

ஆதலா ரங்கனின்றி வேறு தெய்வமில்லையே

 

 

புராணக் கதைகளில் சிவனுக்கும் மேலாக விஷ்ணு செய்த விஷயங்களை உள்ளடக்கியது இப்பாடல்; கங்கை நீர் விஷ்ணுவின் பாதத்திலிருந்து சிவன் தலைமீது விழுந்தது. விஷ்ணு உல கையே உண்டபோது அதில் கயிலையும் சென்றது சிவன் கை  விரலில் சிக்கிய பிரம்மனின்  கபாலம்   விஷ்ணுவால் அகன்றது என்றெல்லாம் பாடித்தீர்த்தார்.

 

 

சுமார் எண்பது ஆண்டுக் காலம் வாழ்ந்த ஐயங்காரை, அவர் திருவரங்கத்தானை வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு நொண்டிப் ப்சு மோதியது ; அவர் அங்கேயே உயிரைவிட்டு அரங்கன் திருவடிகளை அடைந்தார்.

சைவ- வைணவ சண்டை ஒரு புறம் இருக்க,செந்தமிழ்க் கடலில்  ஐயங்கார் இயற்றிய பல கவிதை முத்துக்கள், ஐயங்கார் மூலம் சேர்ந்தது என்றால் அது மிகையல்ல!

 

ஐயங்கார் செய்த அற்புதம்

ஐயங்கார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஐயங்கார்/

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம்பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு …

 

–Subham–

திருப்புகழ் ஓதுதல் : ஒரு வழிகாட்டி (Post No.4414)

Written by S.NAGARAJAN

 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-58 am

 

 

Post No. 4414

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருப்புகழ் பெருமை

திருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி (திருப்புகழ் கைட்)!

 

ச.நாகராஜன்

 

1

அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழின் மஹிமையை முற்றிலுமாக யாராலும் உரைத்திடல் இயலாது.

திருத்தணிகையில் அவர் அருளியுள்ள திருப்புகழ் “வீ ர ஜெயத் திருப்புகழ் என்று கொண்டாடப்படுகிறது.

அந்தப் பாடல் வருமாறு:

 

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

    செகுத்தவ ருயிர்க்குஞ்               சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

    திருப்புகழ் நெருப்பென்               றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

    நிசிக்கரு வறுக்கும்                  பிறவாமல்

    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ்                    செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி  திமித்திந்

    தகுத்தகு தகுத்தந்                     தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

    தளத்துட னடக்குங்                   கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

   சிரித்தெரி கொளுத்துங்

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

   திருத்தணி யிருக்கும்                 பெருமாளே

 

அற்புதமான இந்தத் திருப்புகழை எத்தனை தரம் படித்தாலும், பயின்றாலும் அதன் முழுப் பொருளையும் பெருமையையும் உணர்ந்ததாக ஆக முடியாது!

 

அத்துணை பொருள் செறிந்த புகழ்ப் பாட்டு.

 

திருப்புகழை ஓதினால் நினைத்ததும் அளிக்கும்.

மனத்தையும் உருக்கும்.

 

பிறவாமல் நிசிக் கருவறுக்கும்.

அடுத்து வரும் சொற்றொடர் அற்புதமான ஒரு சொற்றொடர்

எதையும் எரிக்கும்! நெருப்பையும் கூட எரிக்குமாம் திருப்புகழ்

 

மலையைக் கூடப் பொடிப் பொடி ஆக்கி விடும்.

அப்படிப்பட்ட பெருமையை உடைய அற்புதமான திருப்புகழை ஓதும் செயலை எனக்குத் தருவாயாக, திருத்தணி உறை பெருமாளே என்கிறார் அருணகிரிநாதர்.

அவர் பாடிய திருப்புகழுக்கான பெருமையும் இதில் தான் உள்ளது; அது உரைக்கும் முருகனின் பெருமையும் இதில் தான் உள்ளது.

 

 

2

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாடுகள் இந்தியா மீது குண்டுகள் வீசும் அபாயம் ஏற்பட்டதால் மக்கள் மிகவும் பீதியுற்றனர்.

 

 

     அப்போது வள்ளிமலைத் திருப்புகழ் ஸ்வாமிகள் மக்களின் பீதியை அகற்ற திருப்புகழ் பாராயணக் குண்டு என்னும் நூலை 1942ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டார்.

அந்த நூலின் முகவுரையில், “இத்திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்கவல்ல பேராற்றல் வாய்ந்த எதிர் குண்டு. சூர சம்ஹார காலத்தும் முருகன் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது,

 

 

   “கஜரத பதாகிநி அரக்கர் துணி பட்டுவிழு

  களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன

கடிய குணத்த சினத்த ஸஹத்ர யோஜனை

     நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய

காத நூறாயிர கோடி வளைந்தன

   பூத வேதாளம அநேக விதங்களே

 

 

என வரும் பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால், போர்க்களத்தும், மற்றும் எல்லாவிடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் ஸுகம் பெறலாம். திட புத்தியுடன் நித்திய பாராயணம் செய்தால் இத்திருப்புகழ்க் குண்டின் ஆற்றலையும் ப்ரபாவத்தையும் அநுபவத்தில் காணலாம் என்று இவ்வாறு ஸ்வாமிகள் அருளினார்.

அனைத்துத் துன்பங்களையும் விடுவிக்க வல்ல திருப்புகழ்த் தொகுப்பை ஸ்வாமிகள் அருளினார். அதைக் கீழே காண்போம்.

 

 

 

3

1.பாடும் பணி பெற – கந்தரனுபூதி – ஆடும் பரிவேல்

2.உயிர்க்கு ஆதரவு –  திருப்புகழ் –  உம்பர்தருத்தே

3.எழுந்தருள வேண்டுதல் – திருப்புகழ் – சென்றே இடங்கள்

4.கோள்கள் ஒடுங்க – கந்தரலங்காரம் – நாள் என் செயும்

  1. திருப்புகழ் நெருப்பு – திருப்புகழ் – சினத்தவர் முடிக்கும்
  2. தரிசனப் பாடல் – கந்தரலங்காரம் – ஓலையும் தூதரும்
  3. வேலும் மயிலும் துணை – கந்தரலங்காரம்-விழிக்குத் துணை
  4. வேலின் ப்ரபாவம் கூறி பகைவரை வெல்ல – வேல் வகுப்பு பருத்த முலை ; ஸுரர்க்குமுநிவரர்க்கும்; தருக்கி நமன்; திரைக்கடலை உடைத்து ; கந்தரலங்காரம்- தேரணியிட்டு;

வேல்வாங்கு வகுப்பு – திடவிய நெஞ்சுடை; அடவி படும்ஜடை;

வடவை இடும்படி;

 

 

  1. பிரார்த்தனை பாக்களின் அடிகள்
  2. கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்

    என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய்

  1. அஞ்சா நெஞ்சாக்கம் தரவல பெருமாளே
  2. ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே
  3. இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
  4. ஒருக்கால் முருகா பரமா குமரா உயிர்கா என ஓதருள் தாராய்
  5. நவர் வாட்டோமர சூலம் தரியாக் காதிய சூரும்

         தணியாச் சாகரம் ஏழும்      கிரி ஏழும்

        சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்

         தரிகூத்தாடிய மாவும்         தினைகாவல்

       துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட்டாள் ஒரு தேனும்

           துணையாத் தாழ்வற வாழும்     பெரியோனே!

             துணையாய்க் காவல் செய்வாய்!

 

7.வேலுமயிலும் நினைத்தவர் தந்துயர் தீர அருள்தரு கந்த!

   

  1. பதினால் உல கத்தினில் உற்றுறு பக்தர்கள்

    ஏது நினைத்ததும் மெத்த அளித்தருள்    இளையோனே

  1. மொழியும் அடியார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு

          முனிய அறியாத தேவர்               பெருமாளே

  1. வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

      வேண்ட வெறாதுதவு               பெருமாளே

  1. வேல் எடுத்த ஸமர்த்தை உரைப்பவர்

       ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே

  1. அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன

          அவைதரு வித்தருள்          பெருமாளே

**

 

  

  1. நவக்ரஹ சேஷ்டை நீங்க- கந்தரனுபூதி – சேயவன் புந்தி

          கந்தரலங்காரம் – மயில் துணை -குசைநெகிழா

           கந்தரலங்காரம் – சேவல் துணை -படைபட்ட

11.மனக்கவலை நீங்க – கந்தரனுபூதி -எந்தாயும்

  1. அச்சமற்ற வாழ்வுற – கந்தரலங்காரம் – சேந்தனைக்
  2. தாழ்வின்றி வாழ கந்தரலங்காரம் – சேந்தனை
  3. நாம விசேஷப் பலன் – கந்தரலங்காரம் – முடியாத் துயர
  4. திக்பந்தனம் – கந்தரலங்காரம் – தடக்கொற்ற

குறிப்பு: சலங்காணும், மடங்கல் நடுங்கும், வேலன் வாய்த்த திருப்புகழ்,கருப்புகழாம்,ஏகாந்த வீரம் போற்றி ஆகிய பாடல்கள் மட்டும் இங்கு மேலே குறிப்பிடப்படவில்லை.

 

 

4

இந்தத் திருப்புகழ் பாராயணக் குண்டு யுத்த காலத்துக்கு மட்டுமானது அல்ல; தினசரி வாழ்க்கை என்னும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் உகந்தது.

திருப்புகழைப் பாராயணம் செய்வோம்; இகபர சௌபாக்கியம் அடைவோம்.

*****