ரிக் வேதம் உருவாகப் பல நூற்றாண்டுகள் பிடித்தன! (Post No.4401)

Written by London Swaminathan 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-29

 

 

Post No. 4401

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ரிக் வேதம் இப்போதுள்ள வடிவில் உருவாக  பல நூற்றாண்டுகள் ஆனது அதிலுள்ள பல துதிகள் மூலம் தெரிகின்றன. முதல் மண்டலத்திலும் கடைசி மண்டலத்திலும் உள்ள பெரும்பாலான துதிகள் காலத்தால் பிந்தியவை என்றும் இடையிலுள்ள ஆறு மண்டலங்கள் காலத்தால் முந்தியவை என்பதும் பொதுவாக உள்ள கருத்து. 500 ஆண்டுக் காலத்தில் தோன்றிய  பாடல்கள் இருக்கலாம் என்பது பலர் கருத்து.

 

ரிக்வேதம் என்பது கவிகளால் இயற்றப்பட்டது அன்று; வானத்தில் எப்போதுமுள்ள ஒலிகளை ரிஷிகள் கண்டு (மந்த்ர த்ருஷ்டா:) அளித்தனர் என்பது இந்துக்கள் ஏற்கும் கொள்கை; ஆயினும் அதை அவர்கள் வெவ்வேறு காலங்களில் கேட்டு அல்லது கண்டு அளித்தனர் என்பதை வேதத்தில் உள்ள குறிப்புகளாலும் இலக்கண அமைப்புகளாலும் அறிய முடியும்; இதை ஒப்புக்கொள்வதால் வேதத்தில் புதியதும் பழையதும் உண்டு என்று அறிந்து அவைகளில் எது எது புதியது என்று சொல்ல முடியும்; அதற்குச் சில உத்திகள் உள்ளன.

இதனால் வேதம் பற்றிய நம்பிக்கை பாதிக்கப்பட மாட்டாது என்றே நான் கருதுகிறேன். “உண்மையே உலகில் வெல்லும் – சத்யம் ஏவ ஜயதே” – என்பதை யார் எந்த மொழியில் எப்படிச் சொன்னாலும் , புதிய இலக்கணத்துடன் சொன்னாலும் பழைய இலக்கண விதிகளின்படி சொன்னாலும், வெவ்வேறு மொழிகளில் சொன்னாலும் அந்த மந்திரத்தின் பொருள் மாறாது. இதனால்தான் வேதம் அனாதியானது; என்றுமுளது என்று நாம் சொல்கிறோம். அதாவது அழியாத தர்மங்கள், கொள்கைகள், பண்புகள் அதிலுள்ளன.

 

ரிக்வேதத்திலுள்ள பத்து மண்டலங்களில் 2, 3, 4, 5, 6, 7 ஆகிய ஆறு மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் (2- க்ருத்சமடர்  3-விஸ்வாமித்ரர், 4- வாமதேவர், 5- அத்ரி, 6-பரத்வாஜர், 7-வசிஷ்டர்) எனப்படும்; அதாவது ஒரு ரிஷி பரம்பரையில் வந்த தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்பவர்கள் கண்டு (கேட்டு) நமக்கு அளித்தது. வேதத்தில் “மிகப் பழங்காலத்தில்”, “முன்னோர்கள் சொன்னது” என்றெலாம் வாக்கியங்கள் வருகின்றன. அப்படியானால் அந்த ரிஷிகளுக்கு முன்னதாகப் பல தலைமுறைகள் இருந்தன என்பதை நாம் அறிகிறோம்.

சுமார் 450 புலவர்கள் இயற்றிய சுமார் 2500 பாடல்களை உடைய சங்கத் தமிழ் இலக்கையமும் 300, 400 ஆண்டுகளில் உருவானவையே என்பர் அறிஞர் பெருமக்கள். ஏனெனில் கடை எழு வள்ளல்களைத் தனித் தனியாக பாடிய புலவர்களை நாம் புற நானூறு முதலிய நூல்கள் மூலம் அறி வோம். மலைபடுகடாம் போன்ற நூல்களில் அவர்களை “கடை எழு வள்ளல்கள்” என்று படிக்கும்போது , அவ்வாறு அவர்களை ஒரு அணி சேர்த்துப் பாடுவதற்கு சில நூற்றாண்டுக் காலமாவது ஆகியிருக்கும்; தற்காலம் போலத் தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்களை ஒரு தொகையில் சேர்த்து “கடை எழு” என்று சொல்லுவதால் இதுதான் காலத்தால் பிந்தியது என்று நாம் கருதுகிறோம்.

 

இது போலவே ரிக் வேதத்திலும் சில குறிப்புகள் உள்ளன.

இது பற்றி உரையாற்றிய  டாக்டர் கடே என்பார் சில விஷயங்களைப் பட்டியல் இடுகிறார்; அவைகளைத் தொட்டுக் காட்டுவன்:-

 

எட்டாவது மண்டலத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ள 11 துதிகள் வாலகில்ய துதிகள் என்று அழைக்கப்படும். இது பொருந்தாத ஒரு இடத்தில் இருப்பதாலும், இதற்கு சாயனர் உரை (பாஷ்யம்) எழுதாததாலும் இதை பிற்சேர்க்கை எனக் கருதுவாரும் உளர். ஆயினும்  காத்யாயனர் தனது அனுக்ரமணியில் (Index) இவைகளைக் குறிப்பிடுவதால் இரண்டாயிரத்து ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னையது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

 

 

மேலும் தைத்ரீய ஆரண்யகத்திலேயே (1-23) வாலகில்யர் பற்றிய விஷயங்கள் காணப்படுகின்றன.

 

ஆப்ரி துதிகள்

 

ஆப்ரி துதிகள் என்பனவும் பல கேள்விக ளை எழுப்பும் விநோதத் துதிகள் ஆகும்.

சாம வேதம், யஜூர் வேதம் ஆகியவற்றில் இருக்கும் துதிகள் போலுள்ளதால் இவைகளும் யாக நோக்கங்களுக்காக இயற்றப்பட்டதாக இருக்கலாம். பத்து மண்டலங்களிலும் பத்து துதிகள் விரவிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் 11 மந்திரங்கள்/ பாடல்கள் இருக்கும். 11 கடவுளரை நோக்கி, ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் மந்திரங்கள் இருக்கும். அவையாவன: 1.அக்னி, 2. தனூனபாத் அல்லது நராம்சச (இவை அக்னியின் இரு வேறு அம்சங்கள்), 3. ஈலா (தானம்), 4.பர்ஹி: (யாகத்துக்கான புல்), 5. தேவீ: த்வார: 6.உஷசானகௌ 7.தைவ்யௌ ஹோதாரௌ (அக்னி, ஆதித்யன் முதலானோர்), 8.ஸரஸ்வதீ, ஈளா, பாரதீ , 9.த்வஷ்ட (படைப்போன்), 10. வனஸ்பதி 11.ஸ்வாஹாக்ருதி

ரிக் வேதத்தின் துதிகள் இரு வடிவங்களில் கிடைக்கின்றன: 1. சந்தி பிரிக்காமல், இலக்கணப்படி உள்ள சம்ஹிதை, 2.பத பாடம். பத பாடம் என்பதில் சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

ஆறு துதிகளுக்குப் பத பாடம் இல்லை: 7-59-12; 10-20-1; 10-121-10; 10-190-1/3. இவைகளும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக அறிஞர் பெருமக்கள் கணிப்பர்.

 

புதியது, பழையது பற்றி  துதிகளிலேயே சில சான்றுகள் கிடைக்கின்றன; ஒரு மண்டலத்தில் மட்டும் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்:

 

7-18-1

த்வே ஹ யத்பிதர ஸ்ரவன்ன இந்த்ர விஸ்வா வாமா ஜரிதாரோ அசன்வன்

 

7-22-9

யே ச பூர்வே ருஷய; யே ச நூத்னா: ப்ரஹ்மாணி ஜனயந்த விப்ரா:

7-29-1

உதோ கா தே புருஷ்யா இதாசன் யேஷாம் பூர்வேஷாம் ச்ருணோர் ருஷீணாம்

7-53-1

தே சித்தி பூர்வே கவயோ க்ருணந்த:

7-76-4

த இத் தேவானாம் சதமாத  ஆசன் க்ருதாவான: கவய: பூர்வ்யாச:

7-91-4

புரா தேவா அனவத்யாச ஆசன்

இவைகளில் புரா (முன்பு), பூர்வ கவய: (முன்னாள் கவிஞர்கள்) என்ற சொற்றொடர்கள் வருவதைக் ‘கொஞ்சம்’ சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களும் கண்டுபிடித்துவிடலாம்.

 

புதிய கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் 7-56-23, 7-15-4, 7-59-4, 7-61-6, 7-98-1 ஆகியவற்றில் காணலாம். இதில் நவ (புதிய) என்ற சொல் வருகிறது. வேதங்களை நன்கு அறிந்தவர்கள் கண்டுபிடித்தவை இவை.

இலக்கணமும் , சில சொற்றொடர்களும் கூட புதிய செய்யுட்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

பெயர் சொற்கள், வேற்றுமை உருபுகள், வினைச் சொற்களை ஆராய்ந்தோர் குறைந்தது 16 வேறுபாடுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

 

சொற்களைப் பொருத்தமட்டில் ‘அக்து’, அத்ய (வேகம்), அம்பிஷ்டி (உதவி)க்ஷிதி (இருப்பிடம்) சன: (ஆனந்தம்) முதலிய பழைய சொற்கள் ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே காணப்படும்.

 

மாயாஜாலம், நோய்கள், சடங்குகள், தத்துவம், தொழில்நுட்பச் சொற்கள் முதலியன புதிய துதிகளிலும், அதர்வ வேதத்திலும் மட்டுமே காணப்படும்.

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கையாளப்பட்ட பல சொற்களை மத்திய கால இலக்கியத்தில் காணமுடியாது. சங்க காலத்தில் நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம் என்ற மூன்று காலங்கள் கிடையா. பல உவமை உருபுகள் தொல்காப்பியப் பட்டியலில் உள்ளன. ஆனால் சங்க காலத்தில் கூட 2500 பாடல்களில் அவை இல்லை! இதை ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். உலகில் எல்லா மொழிகளும் மாற்றத்துக்குட்பட்டவை. சந்தி இலக்கணமும் வேத காலத்திலும் பாணினி காலத்திலும் வேறு வேறு.

 

யாபிலக்கணமும் வேதத்தில் மாறிக்கொண்டே வருகிறது. உஷ்ணிக், ககுப, ப்ருஹதி, சதீப்ருஹதீ ஆகியன ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

 

அதர்வ வேதத்தில் காணப்படும் ரிக்வேதப் பாடல்களும் புதியவை.

 

இன்னொரு பொதுவான வித்தியாசம்:- பழைய துதிகள், இறைவனை மட்டும் துதித்தன. பிற்காலத்தில் சடங்குகள், சமயத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் முதலியன விவாதிக்கப்பட்டன.

தான துதிகளும் பெரும் சடங்குகளுக்குப் பின்னரே, பெரிய யாகங்களுக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.

சமபாஷணை/ உரையாடல் உள்ள துதிகளும் பிற்காலத்தியவை; எடுத்துக்காட்டுகள்

புரூருவஸ் — ஊர்வசி உரையாடல்

யமா- யமீ உரையாடல்

அகஸ்தியர் – லோபாமுத்ரா உரையாடல்

முதலியன.

எனது கருத்து:

 

இவை எல்லாம் வெள்ளைக்காரர் வாதங்கள்; அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இந்திய வேத பண்டிதர்களும் பேசிய உரை இது; நாம் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை; பல பழைய கொள்கைகளை புதிய ஆராய்ச்சி உத்திகள் பொய்யாக்கிவிட்டன. மேலும் மொழி வேறு பாடு என்பதும் மொழிக்கு மொழி வெவ்வேறு வேகத்தில் நடைபெறக்கூடும்.

 

ஆக இவை எல்லாம் ஆராய்சிக்கு ‘வித்து’ என்று வைத்துக்கொண்டு மற்ற பழங்கால மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் என்று மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக வைத்துக்கொண்டு ரிக் வேதத்துக்கு காலம் கற்பித்தார். ஆனால் உலகில் வேறு எந்த மொழிக்கும் இப்படிக் காலம் நிர்ணயித்ததாகத் தெரியவில்லை.

 

இந்தியப் பண்பாட்டில் ஊறித் திளைத்த பால கங்காதர திலகர்,  அரவிந்தர் போன்றோரின் வேதக் கொள்கைகளை நாம் பின்பற்றுவது நல்லது.

 

சுபம்–

வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது! (Post No.4400)

Written by S.NAGARAJAN

 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-27 am

 

 

Post No. 4400

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

 

தமிழ் இன்பம்

25-10-2017 அன்று வெளியான கட்டுரை எண் 4333 – ‘பயறு மிளகான கதை’- கொங்கு மண்டலப் பெருமையைக் கூறும் ஒன்று.

 

வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!

 

ச.நாகராஜன்

 

கொங்கு மண்டலம் பல விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட தங்க மண்டலம்.

அந்த வியத்தகு சம்பவங்களில் வெண்மைப் பெண்மணி சம்பவமும் ஒன்று.

அதைப் போற்றி கொங்கு மண்டலப் பெருமைகளில் ஒன்றாக அதையும் தன் கொங்குமண்டல சதகத்தில் சேர்த்துப் பாடியுள்ளார் கார்மேகக் கவிஞர்.

அந்தப் பாடல் வருமாறு:

 

காடையிற் சேடக் குலத்தான் மகள்மெய்க் கழுவறைந்து

மேடையிற் சங்கப் பலகையுண் டாக்கிநல் வேப்பமலர்த்

தோடையும் பாடகக் காங்கேயன் றன்னைச் சுமந்துபெற்று

மாடையு நேர்தெய்வப் பேறுபெற் றாள்கொங்கு மண்டலமே

(கொங்கு மண்டல சதகம் – பாடல் எண் 75)

 

பாடலின் பொருள் :- சேடர் குலத் தலைவனின் மகள், நட்ட கழுவிற் சத்தயம் செய்து, சங்கப் பலகை உண்டாக்கி, வேப்ப மாலை பெற்ற பாடகம் அணிந்த, இளமையனான காங்கேயனைப் பெற்று பெரும் புகழ் பெற்றாள். அவள் இருந்ததும் கொங்கு மண்டலத்திலேயே என்பதாம்.

 

இந்தப் பாடல் சுட்டிக் காட்டும் வரலாறு சுவையான ஒன்று.

காங்கேய நாட்டுக் காடையூரில் கொங்கு வேளாளரில் சேட குலத் தலைவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்தப் பெண் குழந்தை பிறவியிலேயே வெண்மையாக இருந்தது. அவள் வளர்ந்து பெரியவள் ஆனாள்.

கீழ்கரைப் பூந்துறை நாட்டுக் கருமாபுரத்திலிருந்து வந்திருந்த பொருளந்தை குலத்து வாலிபன் ஒருவனுக்கு அவள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள்.

விவாக கால ஒப்பந்தப்படி  காடையூரில் காணி முதலிய உரிமைகளை அந்த வெண்மைப் பெண்ணின் சகோதரர்கள் கொடுக்க மறுத்து விட்டனர்.

 

சபை கூடியது. அந்தச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் படி, நட்ட கழுவில் அந்த வெண்மைப் பெண்மனி  கையறைந்து சத்தியம் செய்தாள். தன் உரிமைகளை அடைந்தாள்.

அந்தப் பெண்மணியின் குழந்தைக்குக் கல்லி கற்பிப்பதற்காக, சில தேர்ந்த தமிழ்ப் புலவர்களைக் கூட்டி அந்தப் பெண்மணி ஒரு தமிழ்ச் சங்கத்தை உருவாக்கினாள்.

 

அந்தப் புலவர்களிடம் தமிழ் கற்ற சிறுவன் பாண்டிய வீரனின் படையில் சேர்ந்தான்.

போருக்குச் சென்ற அவன், பாண்டியன் படைக்கு வெற்றி பெற்றுத் தந்தான்.

 

அதனால் மகிழ்ந்த பாண்டிய மன்னன் அவனுக்குக் காங்கேய்ன் என்ற பட்டத்தைத் தந்ததோடு அரச சின்னங்களான மாலை, கொடி ஆகியவற்றைக் கொடுத்துக் கௌரவித்தான்.

இதுமட்டுமல்லாமல் பின்பு இம்முடிக்காங்கேயன் – மன்றாடி என்ற பட்டத்தை இவன் சந்ததியினர் பெற்றனர்.

இப்படிப்பட்ட வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது கொங்கு மண்டலத்தில் தான் என்று வியந்து பாடுகிறார் கவிஞர்.

தமிழரின் வீரத்திற்கும் தமிழ்ப் பற்றிற்கும் கொங்கு மண்டலம் இது போன்ற ஏராளமான சம்பவங்களைச் சான்றாகத் தருகிறது.

***

 

 

 

ஊர்வசியே வந்து ஆடினாலும் போக மாட்டேன்- ஆழ்வார் உறுதி (Post No.4399)


Written by London Swaminathan
 

 

Date: 15 NOVEMBER 2017

 

Time uploaded in London-  12-28

 

 

Post No. 4399

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

ஊர்வசியே வந்து ஆடினாலும் போக மாட்டேன்- ஆழ்வார் உறுதி (Post No.4399)

 

குலசேகர ஆழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் தனித்து நிற்கிறார். அவர் ஒரு விநோதமான பேர்வழிதான்; யாரும் விடுக்காத கோரிக்கைகளை விடுக்கிறார். ஒரு லட்சம் பவுன் தா, தங்கக் கட்டிகளாக மழை பொழி, உலக மஹா அழகிகள் எனக்கு சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆயினும் பெருமாள்– திருவேங்கடத்தான் ஏற்க முடியாத கோரிக்கைகளாக முன் வைக்கிறார். யாருக்கும் தோன்றாத அற்புத எண்ணங்கள் அவருக்குத் தோன்றுகின்றன. ஏன்?

 

 

திருப்பதி மலை மீது– திரு மலையில் – குடிகொண்டிருக்கும் திரு வேங்கடத்தானை — திருப்பதி பெருமாளை- வேங்கடமலையானை- வெங்கடாசலபதியை (வேங்கடம்+அசலம்+பதி)– தரிசிப்பது எவ்வளவு கடினமென்று நமக்கு எல்லோருக்கும் தெரியும். இலவச தரிசனத்துக்கு நின்றால் 14 மணி நேரம் க்யூ வரிசை; காசு கொடுத்து ஸ்பெஷல் வரிசையில் நின்றாலோ மந்திரி வருகிறார் என்று திடீர் தடை; இதற்கெல்லாம் மேலாக அற்புதமாக அவர் முன் விரைவில் போய் நின்று விட்டாலோ நம் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் கோவில் சேவகர்கள் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் இதே நிலைதான் போலும்! ஏனெனில் விஜய நகரப் பேரரசன் கிருஷ்ணதேவ மஹா ராயர்

 

மட்டும் திருப்பதிக்கு 30 தடவைக்கு மேல் வந்துள்ளதாக வரலாறு பேசுகிறது; இது போல எத்தனையோ அரசர்கள் அந்தக் காலத்திலும் வந்திருப்பர். ஆகையால் குல சேகர ஆழழ்வார் ஒரு புது வழி– குறுக்கு வழி– கண்டுபிடித்தார். இவ்வளவுக்கும் அவரே சேர நாட்டு அரசர்.

 

அவருக்கே இந்த கதி என்றால் நமக்கெல்லாம்?

 

அவர் 10 அம்ச திட்டத்தை வெங்கடாசலபதியிடம் சமர்ப்பிக்கிறார்.

1.என்னை மீனாகப் பிறக்கச் செய்

2.என்னை நாரையாக ஆக்கிவிடு

3.என்னை காட்டாறு (wild stream) ஆக்கிவிடு

4.ஒரு மலைச் சிகரமாகவாவது ஆக்கிவிடு

5.பூவாக மாற்றிவிடு

6.புதாராக வளர்த்து விடு

7.எச்சில் (வெற்றிலைச் சக்கை) துப்பும் பொன்வட்டில் பிடிக்கும் சேவகனாய் மாற்று

8.பாதையாக மாற்று

  1. அல்லது படியாக மாற்று

10.ஐயா, இதெல்லாம் முடியாதா? ஏதாவது ஒரு

பொருளாக ஆக்கப்பா!

(எங்கே என்றால்?  திருப்பதி மலையானைத் தரிசிக்கச் செல்லும் ஏழு மலைப் பாதையில்)

 

இதையேல்லாம் விட்டு விட்டுவிட்டு எல்லா   அரம்பையர்களையும் (அப்ஸரஸ் பேரழகிகள்)  —  அதிலும் பெரிய பேரழகி ஊர்வசி– அவளையே அனுப்பி – அவள் என்னை வா, வா என்று அழைத்தாலும் எனக்கு வேண்டாம்; இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் (   அரங்கமா நகருள்ளானே) திருவேங்கடத்தானே—என்கிறார்.

என்ன மன உறுதி! திட சித்தம்!!

ஏன் இப்படிச் செய்தார்?

பக்தர்களின் பாத தூளிகளுக்கு அவ்வளவு மதிப்பு! இறைவனை விட பக்தர்களுக்கு மதிப்பு அதிகம்; பக்தர்களுக்குத் தீங்கிழைத்தால் கடவுளும் கூடத் தலையிடமாட்டார். பக்தனிடமே சென்று மன்னிப்புக் கேள் என்று ஆண்டவனே சொல்லி விடுவான்; இதை அறிந்த குல சேகரர் பக்தர்களின் பாதத் தூசு படட்டும் அல்லது அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஏழுமலை வாசா என்றும் போடும் கோஷமாவது கேட்டுக்கொண்டே இருக்கட்டும் என்று இப்படி வேண்டுகிறார்.

 

இதோ அவரது அற்புத வரிகள் அடங்கிய பாசுரம்; இதை மாணிக்க வாசகரின் திருவாசகத்தைப் பாடும் மோஹன ராகத்தில் பாடினால் , பாடிக்கேட்டால், புல்லரிக்கும்; மெய்சிலிர்க்கும்; ஆனந்தக் கண்ணீர்  துளிர்க்கும்.

 

திருவேங்கடமுடையான்

 

 

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்*

ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்*

கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து*

கோனேரி வாழும்  குருகாய்ப் பிறப்பேனே.                            1

 

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ*

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்*

தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்*

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.                          2

 

பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்*

துன்னிட்டு புகலரிய வைகுந்த  நீள்வாசல்*

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்*

பொன்வட்டில்  பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே.                  3

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்*

கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு*

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து*

செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே.                       4

 

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*

இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*

எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்*

தம்பகமாய் நிற்கும்  தவமுடையே னாவேனே.                        5

 

மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்*

அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்*

தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்*

அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே.                 6

 

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம்

கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்*

தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்*

கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே.                        7

 

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்*

முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்*

வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்*

நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே.                      8

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!*

நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்*

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்*

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.                          9

 

உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன்

அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்*

செம்பவள வாயான்  திருவேங் கடமென்னும்*

எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே.                  10

 

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்*

பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி*

கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன*

பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே.                     11

 

வாழ்க குலசேகர ஆழ்வார்! வளர்க அவர்தம் அடியார்கள் !!

–Subham, Subham–

Bear Hunting Anecdotes (Post No.4398)

Compiled by London Swaminathan 

 

Date: 15 NOVEMBER 2017

 

Time uploaded in London-7-50 am

 

 

Post No. 4398

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Fresh Foot Prints!

A Californian went out to follow up a grizzly bear and was gone three days. Then he turned up without his game.

“Lost the trail, Bill, I suppose”, said one of his cronies.

“Naw, I kept on the trail alright “

“Then ,what is the matter?”

“Wall, the footprints was getting too fresh, so I quit.”

 

Xxx

 

Narrow Escape for Bears!

An old hunter was holding his usual court before a group of summer visitors in the small town.

“How many bears did you kill?” ,asked one of them.

“Oh, about a hundred “

“Say, you must have had plenty narrow escapes”.

“Young man”, replied the old timer ,”If there were any narrow escapes,it was the bears had them”

 

Xxx

 

Can’t find a Single Animal!

An eager sport man accosted one of the natives in the small Maine town where he was spending his vacation

 

“Is there much good hunting around here?”, he asked eagerly.

The native glanced around him for a minute and said,

“Well,sure,there is plenty hunting, but damned little finding”

 

Xxx

Eagle Hunting!

A cowboy from one of the many dude ranches in the Rockies was spending his day off doing a little hunting. Sighting an eagle, he took aim and brought the bird down. He scrambled down the crag and retrieved his game.

As he slung the bird over his shoulder he saw one of the customers from the dude ranch approaching him .

“I say”, said the Easterner in a patronising sort of tone,

“I was watching you. You should have saved that shot, Why the fall alone would have killed the eagle”.

Xxxx SUBHAM xxxx

 

 

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் சூக்தங்கள்! (Post No.4397)

Written by S.NAGARAJAN

 

 

Date: 15 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-44 am

 

 

Post No. 4397

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் திருமதி மஞ்சுளா ரமேஷை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வருகிறது. அதில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் வைதிக சூக்தங்கள்!

 

 

 

(செல்வம்,ஆரோக்கியம், மன அமைதி, நீண்ட ஆயுள் பெற வழி!)

 

 

BY ச.நாகராஜன்

ஒருவன் இந்த உலகில் இப்பிறவியில் அனுபவிக்கும் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அவனது கர்ம வினைகளே காரணம் என்று நமது வேதங்களும் சாஸ்திரங்களும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.

 

‘உனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் நீயே காரணம் ஆகவே உன்னை நீயே உயர்த்திக் கொள்’ (உத்தரேத் ஆத்மனாத்மானம் – பகவத் கீதை) என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

 

 

இந்த ஜன்மத்தில் விதி வசத்தால் தாழ்நிலையில் இருப்பவர்களுக்கு, ‘அப்படியெனில் எனக்கு உய்வே கிடையாதா? தரித்திரனாக, படிக்க முடியாதவனாக, ஆரோக்கியம் குன்றியவனாக, மன அமைதியற்று இந்த ஜன்மம் பூராவும் இருக்க வேண்டுமா?’ என்ற கேள்வி எழுகிறது.

 

இதை மனதில் கருதி ரிஷிகளும் ஞானிகளும் வைதிக சூக்தங்கள் பலவற்றை அருளியுள்ளனர்.

தீர்க்க முடியாத சில கர்ம வினைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர ஏனையவற்றை சூக்தங்களை ஒதி அல்லது ஓதுவித்து கஷ்டங்களைத் தீர்த்து இப்பூவுலக வாழ்வை பரிபூரணமாக் ஆனந்தமாக அனுபவித்துக் கடைத்தேறலாம் என்பது வேதங்களின் தீர்ப்பு.

 

இந்த வகையில் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒரு நிவாரணம் உண்டு; அதற்கான சூக்தம் உண்டு. இதை நன்கு ஓதி உணர்ந்தவர்களை அணுகி அவர்கள் மூலமாக பரிகாரம் தேட வழி வகை செய்திருப்பதே வைதீக மதத்தின் தனிச் சிறப்பு.

சூக்தங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றையும் அதன் சிறப்பையும் இங்கு காணலாம்.

 

  • ஸ்ரீ சூக்தம்

ஹிரண்ய வர்ணாம் என்று ஆரம்பிக்கும் சூக்தம் இது. வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் மஹாலக்ஷ்மியின் பல்வேறு துதிகளின் தொகுப்பே இது. இதனைப் பாராயணம் செய்வதன் மூலம் அளப்பரிய செல்வ வளத்தைப் பெறலாம். அனுதினமும் பல பக்தர்கள் ஒதும் சூக்தம் இதுவே.

 

 

  • அக்னி சூக்தம்

அக்னியை வேதங்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்றாகப் புகழ்கிறது.பிரஜைகளின் உற்பத்தி,, மனிதர்களின் பலம், வீர்யம் ஆகியவை அக்னியினாலேயே உருவாகிறது. அக்னியே அனைத்தும்.

ரிக்வேதத்தின் முதல் பாடலாக அமையும் இந்த சூக்தம் அக்னி மீளே என்று துவங்குகிறது.மகனுக்குத் தந்தை போல எளிதில் அணுகத் தக்க அக்னியால் புகழும் ஒளியும் பெருகும் (யசஸம், வீரவத்தமம் – புகழை வளர்ப்பது, மனித குலத்தை வளர்ப்பது)

 

  • வைஸ்வானர சூக்தம்

வேதங்களில் வைஸ்வானர அக்னியின் புகழ் எல்லையற்றதாக வர்ணிக்கப்படுகிறது. ஆனந்தம் தருபவன், சுவர்ணமய ரதம் கொண்டிருப்பவன்,ஜலத்தில் வசிப்பவன்,சர்வக்ஞன்,சர்வ வியாபி, அனைவரிடமும் இருப்பவன்.

 

வைஸ்வானரோ என்று இந்த சூக்தம் ஆரம்பிக்கும்.

நல்ல ஆரோக்கியம் வாழ்நாள் முழுவதும் நிலை பெறவும் மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைவது வைஸ்வானர சூக்தமே. குறிப்பாக ஜீரண சம்பந்தமான வியாதிகளைக் கொண்டிருப்போர் நாட வேண்டியது இந்த சூக்தம்.

 

  • கர்ப்ப சூக்தம்

கர்போஸ்ய என்று ஆரம்பிக்கும் இந்த சூக்தம் கர்ப்பம் உற்பத்தியாகவும்.கர்ப்ப ரக்ஷைக்காகவும், கர்ப்பம் உரிய விதத்தில் வளர்ச்சியுறவும் ஓதப்படுகிறது.

 

  • நவக்ரஹ சூக்தம்

ஆஸத்யேன ரஜஸா வர்த்தமானோ என்ற சூர்ய மந்திரத்துடன் ஆரம்பிக்கிறது இந்த சூக்தம்.

நவகிரகங்கள் அசுப பலன்களைத் தரும் விதத்தில் ஒருவருக்கு அமைந்திருந்தால் அதனால் எற்படும் தீய விளைவுகளை அகற்ற நவ கிரகங்களையும் பிரார்த்திக்கும் அற்புத சூக்தம் இது.

 

 

  • மேதா சூக்தம்

யச்சந்தஸாம் என்று ஆரம்பிக்கும் சூக்தம் இது. விஞ்ஞான உலகில் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் உள்ளுணர்வின் தூண்டுதலினாலேயே அமைகிறது. இந்த உள்ளுணர்வை நல்ல விதமாக ஆக்கவும் தூண்டி விடவும் ஓதப்படும் அற்புத சூக்தம் இது. உள்ளுணர்வு மேதா தேவியாக வர்ணிக்கப்படுகிறாள்.

 

தேவியின் அருள் பெற்றவன் ரிஷி ஆகிறான்.பிரம்ம ஞானி ஆகிறான், செல்வந்தன் ஆகிறான், சிறந்த ஐஸ்வர்யங்களை அடைகிறான் என்று வர்ணிக்கும் இந்த மந்திரத்தின் மூலம் என்னென்ன பலன்களை நாம் அடைய முடியும் என்பதை எளிதில் ஊகித்து உணரலாம்.

 

  • ச்ரத்தா சூக்தம்

சிரத்தை இல்லாமல் எதுவும் இல்லை; எந்த வெற்றியும் இல்லை.யமனிடம் நசிகேதன் யாருமே அறிய முடியாத ரகசியத்தை அடைந்ததற்குக் காரணமே அவனது சிரத்தை தான். வாழ்வின் நல்ல காரியங்களுக்கு அஸ்திவாரமாக அமைவது சிரத்தையே.

இந்த சூக்தம் ச்ரத்தயாக்னி சமித்யதே என்று ஆரம்பிக்கிறது.. சிரத்தையை நாடி அதன் மூலம் வெற்றிக்கு வழி கோலுவோர் ஓத வேண்டிய சூக்தம் இது.

 

 

  • சங்கல்ப சூக்தம்

ஹிந்து மதத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்குவதற்கு முன்னர் சங்கல்பம் செய்வது இயல்பு.  எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கத் தேவை திட சங்கல்பம். அதை நமக்கு அருளுமாறு வேண்டவே இந்த சங்கல்ப சூக்தம் வீடு, பணி புரியும் இடம் உள்ளிட்டவற்றில் காரியம் துவங்கும் முன்னர் இது ஓதப்படுகிறது.

 

  • தேவி சூக்தம்

எல்லையற்ற மஹிமையை உடைய தேவியின் அருளைப் பெற பல்லாயிரக்கணக்கானோரால் பாரதமெங்கும் அனுதினமும் ஓதப்படும் அற்புத சூக்தம் இது.  அஹம் ருத்ரேபிர் என்று இது ஆரம்பிக்கும்.

இதை இயற்றியவர் ஒரு பெண் ரிஷி. அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளான  வாக் என்பவர் கண்ட சூக்தம் இது.

சகல நலன்களையும் தேவியின் அருளையும் அடைய உகந்த சூக்தம் இது.

 

  • சூர்ய சூக்தம்

ரிக் வேதத்தில் வரும் அற்புத சூரிய துதி இது. நமோ மித்ரஸ்ய என்று இது ஆரம்பிக்கும்.

சூரியனே எல்லாம்! புகழ், ஒளி, படிப்பு, செல்வம்,. நீண்ட ஆயுள், தீராத வியாதிகள் எல்லாம் தீர்ந்து பரிபூரண ஆரோக்கியம் பெறுதல், கணவன் – மனைவி ஒற்றுமை உள்ளிட்ட அனைத்தையும் தரும் பிரத்யக்ஷ பகவான் சூரியனே. அனைத்தும் நலனையும் ஒருங்கே பெற சொல்ல வேண்டிய சூக்தம் சூரிய சூக்தம்.

 

 

  • துர்க்கா சூக்தம்

மிகவும் சக்தி வாய்ந்த இந்த சூக்தம் தைத்திரிய ஆரண்யகத்தில் இடம் பெறும் ஒன்று. வாழ்க்கையில் வரும் எந்தக் கஷ்டத்தையும் அகற்றும். எதிரிகள் ஒழிவர். யுத்தத்தில் ஜெயம் நிச்சயம். பாரத பாகிஸ்தான் போரில் நாம் ஓதிய சூக்தம் இதுவே. எந்தக் காரியத்திலும் வெற்றி நிச்சயம். ஜாதவேதஸே என்று ஆரம்பிக்கும் இது பரவலாக பல்லாயிரக்கணக்கானோரால் தொன்று தொட்டு இன்று வரை ஓதப்பட்டு வருகிறது.

 

  • நாஸதீய சூக்தம்.

விஞ்ஞானிகளே வியக்கும் சூக்தம் இது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பேயே இன்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கும் பிக்-பேங் தியரியை விட உன்னதமான பிரபஞ்ச தோற்றம் பற்றிய கொள்கையை விளக்கும் சூக்தம் இது. ரிஷி பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் அதன் தலைவனையும் பற்றி வியந்து கூறும் அபூர்வ சூக்தம் இது. விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவருக்குமான் இந்த சூக்தம் இயற்கை இரகசியங்களை அறியத் துடிப்போர் ஒத வேண்டிய ஒன்றாகும்.

 

 

  • ஸம்வனன சூக்தம்

இது சமுதாயத்தின் மொத்த நலனுக்கான சூக்தம். அனைவராலும் சமுதாய நலனைக் கருதி ஓதப்பட வேண்டிய ஒன்று. ரிக் வேதத்தில் இடம் பெறும் இது ஸ்ம்ஸமித்யுவஸே என்று ஆரம்பிக்கும். அனைவரின் பிரார்த்தனையும் ஒத்த கருத்துடன் அமையட்டும் என்ற இந்த வேத பிரார்த்தனை இன்றைய அமைதியற்ற உலகில் மிகவும் தேவைப்படும் ஒன்று. வேதம் உலகளாவிய விதத்தில் அனைவரது நலனையும் வேண்டுகிறது என்பதை நிரூபிக்கும் சூக்தம் இது.

 

  • சாந்தி சூக்தம்

அதர்வண வேதத்தில் இடம் பெறும் இது மகத்தான சாந்தி மந்திரம்.. சாந்தா த்யௌ என்று ஆரம்பிக்கும் இது நல்லன ஓங்கட்டும் தீயன விலகட்டும் என்ற உயர்ந்த சிந்தனையை முன் வைக்கிறது.

 

பொதுவாக சாந்தி சூக்தம் ஓதலின் முடிவில் இறுதியாகச் சொல்லப்படுகிறது.

 

இது தவிர ஆயுளை நீடிக்க ஆயுஷ்ய சூக்தம், இறைவனை அறிய வழிகாட்டும் ஹிரண்ய கர்ப்ப சூக்தம்,விஷ்ணுவைத் துதிக்கும் விஷ்ணு சூக்தம், கருத்துச் செறிவு மிக்க, மிகப் பிரபலமான, மந்திர ஆற்றல் பெற்ற புருஷ சூக்தம், நல்லன எங்கிருந்தாலும் வரட்டும் என்று வரவேற்கும் ஆ நோ பத்ரா சூக்தம்,,அறிவை வளர்க்கும் சரஸ்வதி சூக்த்ம்,

 

 

நாராயணனைத் துதிக்கும் நாராயண சூக்த்ம், பாவத்தைப் போக்க வருணனை வேண்டும் அகமர்ஷண சூக்தம், பிராணனைப் போற்றும் ப்ராண சூக்தம், சகல வியாதிகளையும் போக்கும், உதவத் துடிக்கும் தேவதைகளான அஸ்வினி தேவதைகளை அழைக்கும் அஸ்வினி சூக்தம், நக்ஷத்திர அடிப்படையில் நலனை வேண்டி அவற்றைப் பெற நக்ஷத்ர சூக்தம் என்று சூக்தங்களுக்கு முடிவே இல்லை.

 

 

ஒவ்வொன்றும் (காரண்டியாக) நன்மை தரும் என்பதற்கு பல்லாயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள்

ஓதி அனுஷ்டித்துப் பலனைப் பெற்ற நம் முன்னோர்களே சாட்சி.

 

இவற்றை முதல் படியாக அறிய வேண்டும்; பின்னர் இதை முறையாக ஒதும் வேத பிராமணர்களை அணுகி அவர்களிடம் உரிய அறிவுரை பெற வேண்டும்.

 

காப்பிக்கும், அன்றாட வாழ்க்கை நடத்த இன்றைய நாளில் ஊழலுக்கெனவே நாம் தரும் ‘கட்டியப் பணத்திற்கும்’, இதர தேவையற்ற ஹோட்டல் ஆகியவற்றிற்காக ஆகும் செலவிற்கும் ஆகும் பணத்தை ஒப்பிட்டால் அதில் பல நூறு பங்கில் ஒரு சிறிது பங்கே இந்த ஓதலுக்கு நாம் செலவிடும் தொகையாக அமையும்.

 

திருமதி மஞ்சுளா ரமேஷ் நடத்தும் விசேஷ நிகழ்ச்சிகளில்இவற்றை ஓதக் கேட்டுப் பயன் பெறலாம்.

நாம் தரும் பணத்திற்கு ஈடாகப் பெறும் பலனோ  பெரிது.

இந்த வைதீக சூக்தங்க்ள் அளப்பரிய பலனை அனுக்ரஹத்துடன் தரும் என்பதில் ஐயமே இல்லை!

***

Bernard Shaw, Shelley, Byron Swimming Anecdotes (Post No.4396)

Written by London Swaminathan 

 

Date: 14 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-26

 

 

Post No. 4396

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Although unable to swim Shelley was forever invading pools and streams…. one day when Trelawney, a powerful swimmer, jumped into a deep pool in the Arno, Shelley immediately jumped in after him and lay ‘like a conger eel on the bottom’ till Trelawney fished him up with great difficulty, Shelley protesting as soon as he could breathe that ‘truth lay always at the bottom of the well’ and that in another minute I should have found it.

 

Xxx

Impressing upon his class an admiration for notable feats of physical prowess the teacher related the experience of a vigorous man who swam three times across a broad river in the morning, before breakfast.

There was a giggle from one of the youngsters in the class.

“Well”, said the teacher with some irritation

“What is that it seems so amusing? I see nothing amusing”.

“It’s only this sir, replied the pupil

I was wondering why he didn’t make it four times and get back on the side where he left his clothes”.

 

Xxx

Swimming in the Desert!

A certain American soldier, attached to one of the American Tank units fighting with the British in the Libyan campaign, had been carried by the exigencies of the service many miles deep into the heart of desert with his comrades. This outpost of the Front had been quiet for days. The soldier found himself one afternoon with a few hours leave.

It was with some surprise that his commanding officer spotted the man striding purposefully across the sands clad in his bathing trunks.

“Murphy! Shouted the officer in some astonishment. Where in blazes do you think you are going?”

Why, sir, said the soldier, I just thought while I had a couple of hours off I would take a dip in the surf.

Are you crazy? demanded the officer. The ocean is 500 miles from here!

“Beautiful big beach, isn’t it?” said the soldier.

 

Xxx

 

Shelley- Byron Argument!

The greatest and most mysterious of all Shelley s preoccupation s was with water, boat and swimming. He was apparently fascinated by water as a great element, and time and again prophesied his death by drowning. But it was typical of Shelley’s humourless absolutism where his fancy was involved that he was without fear in the business, and never troubled to learn either to navigate or to swim.

 

In 1816 the friendship that sprang up with Byron at Geneva was based partly on mutual literary admiration, and partly on their common love of boating. Byron knew something of sailing and navigation and they took a trip together around the lake in an open boat. They nearly foundered in a sudden storm one night. After Byron, had got the sail down and while the water poured in and the wind roared in darkness, they sat in furious argument, Byron, proud of his power as a swimmer, declaring that he would save Shelley when they sank, Shelley equally determined that he would not be saved.

 

Xxxxx

Following was published by me under the 15 Anecdotes from Bernard Shaw’s Life

G B Shaw Helped a youth

 

Bernard Shaw was enjoying a swim in a pool during a stay in South Africa; so were some boys who knew nothing of the august author one small boy was “dared” by his playmates to “duck the old man” for a Shilling. He accepted, but when he was close to his victim, panic seized him. Shaw turned, saw the youngster, and asked him what he wanted. In halting accents, the boy revealed the plot and the shilling bet.

“Well”, said Shaw, looking sternly at the youngster, “if you wait a moment while I get my breath, I will let you push my head under water.

He did, and the small boy swam back triumphantly to collect his shilling.

 

–subham–

 

தானம் செய்தால் வானம் திறக்கும்-புறநானூறு (Post No.4395)

Written by London Swaminathan 

 

Date: 14 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4395

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

புறநானூற்றுப் புலவர்  ஏணிச்சேரி முடமோசியாரும், அறநெறிச் சார ஆசிரியர் முனைப் பாடியாரும் சொல்லுவர்:

 

“தானம் செய்தால் வானம் திறக்கும்”.

 

வானம் என்ற சொல்லைத் தமிழ்ப் புலவர்கள் இரு வகையில் பயிலுவர்:

வானம் = மழை

வானம் = சொர்க்க லோகம் , இந்திர லோகம்

 

மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான திருவள்ளுவன் பகவத் கீதை பாணியில் (16-1) யாத்த தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம், வானம் வழங்காதெனின் (குறள் 19)” என்னும் இடத்தில் வானம் என்பது மழையைக் குறிக்கும்; வள்ளுவன் தானம், தவம் என்னும் சம்ஸ்கிருதச் சொற்களை பகவத் கீதை ‘ஸ்டைலில்’ 19, 295 ஆகிய எண்ணிட்ட குறள்களில் பயன்படுத்துவான். சம்ஸ்கிருத ஸ்லோகக்ங்களில் இது நூற்றுக் கணக்கான இடங்களில், குறிப்பாக கீதையில், சேர்ந்தே பயிலப்படும் சொற்கள்; நிற்க

 

நாம் சொல்ல வந்த விஷயத்தைக் காண்போம். தானம் செய்தால் வானம், அதாவது சொர்க்க லோகம் திறந்து இருக்குமாம்!~

 

அறநெறிச் சாரம் என்னும் நீதி நூலில் முனைப்பாடியார் புகல்வது யாதெனின்,

ஒன்றாகநல்லது உயிரோம்பல் ஆங்கதன்பின்

நன்றாய்ந்தடங்கினார்க் கீத்துண்டல் – என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து

 

–அறநெறிச்சாரம்

பொருள்:-

ஒன்றாகநல்லது உயிரோம்பல் = அறங்களில் சிறந்தது பிற உயிர்களைப் பாது காப்பது ஆகும்

 

ஆங்கு அதன் பின்  நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்= ஞான நூல்களைக் கற்று, மனம் போன வழியில் செல்லாமல், அடக்கத்துடன் வாழ்வோருக்கு உணவு கொடுத்தல் மற்ற ஒரு சிறந்த தர்மம்; பிறகு தானும் உண்ணுதல் வேண்டும்.

 

என்ற இரண்டும் குன்றாப் புகழோன்= இவ்விரு தர்மங்களால் புகழ்பெற்று விளங்குபவர்களை

வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது =  வருக வருக என வரவேற்பதற்காக சொர்க லோகம் அதன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது.

 

அதாவது மாலையைக் கையில் வைத்துக்கொண்டு இந்திரனும் அப்சரஸ் அழகிகளும் மேள தாளத்துடன் காத்து  நிற்பர் என்பதாம்!

இந்திர லோகத்தில் டமாரம்!

ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடாமோசியார் பாடிய புறநானூற்றுப் பாடலில் (241)

 

திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,

அண்டிரன் வரூ உம்என்ன, ஒண்தொடி

வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,

போர்ப்புறு முரசம் கறங்க,

ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே

 

சுருக்கமான பொருள்:

வறுமையில் வாடியோருக்கு அள்ளி, அள்ளித் தந்த ஆய் அண்டிரன் (அஜேந்திரன்) இறந்தவுடன் அவனை வரவேற்க இந்திர லோகத்தில், இந்திரன் கோவிலில், முரசுகள் முழங்கினவாம். வச்சிரத் தடக்கை நெடியோன் கோயில் என்பதற்கு பழைய உரைகாரர்கள் இந்திரலோகம் (சொர்க்கலோகம்) என்றே பொருள் கண்டுள்ளனர். பூமியில் உள்ள இந்திரன் கோயிலன்று.

 

அதாவது, பூமியில் தானம் என்னும் புண்ணிய கருமத்தைச் செய்தால் அவர்களை வரவேற்க இந்திரன் காத்திருப்பானாம்; அதுவும் எப்படி? ‘பாண்டு வாத்திய’க் குழுவுடன் வாசலில் நிற்பானாம்!

புற நூலுக்குப் பின் தோன்றிய அறநெறிச் சாரத்தில் முனைப்படியாரும் இதே கருத்தைச் சொல்லும் போது நம் ஐயமெல்லாம் பறந்தோடிப் போகின்றது.

 

–Subham, Subham–

 

ஆஹா! அபார விஞ்ஞான வளர்ச்சி! ஆனால் மனிதன் .. ?! (Post No.4394)

Written by S.NAGARAJAN

 

 

Date: 14 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-20 am

 

 

Post No. 4394

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

அறிவியல் தாக்கம்

 

ஆஹா! அபார விஞ்ஞான வளர்ச்சி! ஆனால் மனிதன் .. ?!

 

ச.நாகராஜன்

 

1

 

நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் தாக்கம் மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும், எல்லா அம்சங்களிலும் வந்து விட்டது – ஆன்ம வளர்ச்சியைத் தவிர.

இதைப் பலரும் கவலையுடன் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

சாது டி.எல்.வாஸ்வானி 365 நாளுக்குமான தினசரி சிந்தனைகளைத் தனது “Breakfast With God” என்ற நூலில் தந்திருக்கிறார்.

அதில் பிப்ரவரி 22ஆம் தேதிக்கான நற்சிந்தனை இது:

 

The Modern man is proud of his progress, his science, his commerce and mechanical inventions.

 

This scientific age is, to many, the age of wonders; yet is man unhappy still! This age of wonders is, also, an age of deep unrest.

 

There is weariness in many hearts.

 

In this mechanical age man is becoming, more and more, a machine himself.

Not until he rises above the machine into a realm of the Atman may man be truly happy.

 

பொருள் பொதிந்த சிந்தனை அல்லவா இது! இயந்திரங்களைப் பயன்படுத்தப் போய் மனிதன் இயந்திரமாகவே இதயமின்றி ஆகி விடுவானோ?!

 

ரொபாட்டில் இனி இரு வகை இருக்குமோ? ரொபாட்,மனித ரொபாட் என்று??!!

2

ஹரி கிஷன் தாஸ் அகர்வால் (Hari Kishandas Aggarwal) என்ற சிந்தனையாளர் Peace  Of Mind  என்ற இரண்டு பாகம் கொண்ட நூலில் 775 பாக்களைப் புனைந்துள்ளார்.

அதில் சில:

 

Change

 

The Stone age has gone

The Iron age has gone

The bullock-cart age has gone

The Jet age has come

Contentment has gone

Discontentment has come (Verse 409)

 

Paradoxes of Materialism – I

Inventions have increased and the wants too,

The doctors have multiplied and the diseases too,

Weapons have grown and the wars too,

Production has doubled and the population too. (Verse 548)

 

Paradoxes of Materialism – II

Science has developed and the destruction too,

Employment has increased and the strikes too,

Wealth has increased and poverty too,

Education has increased and ignorance too. (Verse 549)

 

Paradoxes of Materialism – III

Vegetables have increased and the non-vegetarians too,

Politicians have increased and the problems too,

Leaders have increased and the labels too,

Religions have increased and the repulsions too. (Verse 550)

 

இவர் இப்படிக் கூறுவதெல்லாம் சரிதானே!

 

3

விஞ்ஞானம் வளர்கிறது. அதைக் குட்டிக் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டமா, என்ன?

பார்த்தார் ஒரு கவிஞர், குழந்தைகளுக்கான் ‘ட்விங்கிள், ட்விங்கிள், லிட்டில் ஸ்டார் பாடலைக் கூட விட்டு வைக்கவில்லை. பாடினார் இப்படி:-

 

Twinkle, twinkle little star,

How I wonder where you are:

High above I see you shine,

But, according to Einstein,

You are not where you pretend,

You are just around the bend;

And your sweet seductive ray

Has been leading man astray

All these years – O, Little Star,

Don’t you know how bad you are?

 

சரி, குழந்தைகள் ஒரு புறம் இருக்கட்டும், வாலிபர்களும், பருவ மங்கைகளும் விஞ்ஞானத்தால் வளர்ந்தார்களா?

ஒரு கவிஞர் பதிலிறுக்கிறார் இப்படி:

 

A girl at college, Miss Breese,

Weighed down by B.A.’s and Litt.D’s

Collapsed from the strain

Said the doctor, “’T is plain

You are killing yourself – by degrees.

 

4

சிந்திக்க வேண்டும் சற்று!

எதை எதை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அதை அதை அந்த்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

அறிவியலுக்கு ஒரு இடம்; ஆன்மீகத்திற்கு முதலிடம்!

புரிந்தால் சரி!

****

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

 

 Written by London Swaminathan 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-21

 

 

Post No. 4393

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பூணூல் அணிந்த ராவணனை, “இரா+வண்ணன்= இருட்டு போலக் கருப்பு நிறத்தன்” என்று சொல்லி அவனுக்கு திராவிட முத்திரை குத்தும் அறிவிலிகள் உலகில் உண்டு! இப்படிப் பிரித்தாளும் சூட்சி உடையோர் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைப்பர் என்று முன் உணர்வால் அறிந்து இராவணனுக்கு பிராமணன் என்று ‘அக்மார்க்’ முத்திரை வைத்துவிட்டனர் அப்பரும் கம்பரும். ஒருவர் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மற்றொருவர் 1000 . ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

 

 

அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் பற்றிச் சொல்லுகையில் அவனுடைய பூணூலையும் சேர்த்துப் பாடுகிறார்.

 

அசுரர்கள் ராக்ஷசர்கள் தேவர்கள், நாகர்கள் முதலியோர் , ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று நம் வேத, இதிஹாச புராணங்கள் பேசும்; ஆனால் வேற்றுமை பாராட்டி இந்துக்களைப் பிரிக்க விரும்பும் அரசியல்வாதிகளும், பிற மதத்தினரும் ஒரு சாராரை திராவிடர்கள் என்றும், பழங்குடி மக்கள் என்றும் சொல்லிப் பிரித்தாளுவர்.

 

எல்லாக் கதைகளிலும் சிவனிடமோ, பிரம்மாவிடமோ அசுரர்களும் வரம் வாங்கினர். அவர்களும் ஒரே கடவுளை வணங்கினர்; அந்தக் கடவுளரும் பாரபட்சமின்றி வரம் ஈந்தனர். ஆனால் உலக விதி, ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்பதாகும். இதனால் வரம் பெற்றும் கூடத் தீயோர் வெல்ல முடியாது. ராவணனும் பல வரங்களைப் பெற்றும், செய்த தவற்றினால் உயிர் இழந்தான். ராவணன் பூணூல் பற்றி அப்பர் தரும்  தகவல் இதோ:

 

மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்

வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்

நூலினா  னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்

காலினா  லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

பொருள்:-

பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க,  ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்

 

 

வேத நாவர்- மறை ஓதும் நாவினை உடையோர்

நூலினான் – நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன்

 

இரண்டும் இராவணனைக் குறித்தன எனக் கொண்டு, சாம வேத கானம் பாடியவன், நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.

 

இதி வேதம் ஓதுதலையும், முப்புரி நூல் அணிவதையும் சிலர் சிவன் மீது ஏற்றிச் சொல்லுவர். அப்படிச் சொல்லும் வழக்கம் அரிது. அப்படிச் சொன்னாலும் அதை பிரம்மனுக்கே ஏற்றிச் சொல்லுவர்.

 

பூணூலும் வேத நாவும் ராவணனையே குறிக்கும் என்பதற்கு கம்ப ராமாயணம் துணை புரியும்; இதோ கம்பன் கூற்று:–

வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்

ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் — என்று சுந்தர காண்ட நிந்தனைப் படலத்தில் ராவணனை வருணிக்கிறான் கம்பன்; இதன் பொருள்:-உலகைப் படைத்தவன் பிரம்மன்; அவன் மகன் புலஸ்தியன்; அவன் மகன் விசிரவசு; அவன் மகன் ராவணன்; ஆயிரம் கிளைகளை உடைய சாம வேதத்தில் வல்லவன்.

பிரம்மாவை வேதியன், பிராமணன் என்றே இலக்கியங்கள் போற்றும்

அக்க குமாரன் வதைப் படலத்தில் கம்பன் சொல்லுவான்:

அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்

மயன்மகள் வயிறு அலைத்து  அலறி மாழ்கினாள் என்று. இதன் பொருளாவது– மயனுடைய மகளான மண்டோதரி தன் கணவனான ராவணனிடம் சென்று வயிற்றில் அடித்துக்கொண்டு அலறினாள்– சீதையை விட்டுவிடு என்று. ராவணனுக்குக் கம்பன் கொடுக்கும் அடை மொழி– பிரம்மனின் மகனான, புலஸ்தியன் மகனான, விசிரவசுவின் மகனான ராவணன்  என்பதாகும்.

அதே சுந்தர காண்டத்தில் பிணிவீட்டு படலத்தில்,

அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்

தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்த தக்கோய்” என்று சொல்லுவான்; உலகங்கள் மூன்றையும் ஆதிகாலத்தில் படைத்த அந்தணன் பிரம்மாவின் வழி வந்தவனே! என்று  ராவணனை போற்றும் வரிகள் இவை. ஆக கம்பராமாயணம் முழுதும் ராவணன் ஒரு பிராமணன் என்று அடிக் கோடிட்டுக் கொண்டே செல்வான் கம்பன். இதன் காரணமாகவே தேவாரத்துக்கு உரை எழுதிய பெரியாரும் பூணுல் அணிந்ததையும் வேத பாராயணம் செய்ததையும் அப்பர் பாட்டில் ராவணனுக்கு உரித்தானதாகச் சொல்கி றார். நாம் அதை ஏற்பதில் தயக்கம் ஏதுமில்லை.

 

சுபம் –

 

ELEVEN TYPES OF PENANCE OF DEMON TARUKA (Post No.4392)

 Written by London Swaminathan 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 16-25

 

 

Post No. 4392

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

SIVA Purana tells us that there was a demon king of Tripura, by name Taruka, who was exceedingly ambitious and oppressive. He forced Brahma by his austerities to grant any boon he should demand. A list of these austerities is interesting, as devotees in certain parts of India may be seen today practising many of them. Taruka went through eleven mortifications, extending over a hundred years:

  1. He stood on one foot, holding the other, and both hands up towards heaven, with his eyes fixed on the sun
  2. He stood on one great toe
  3. He took only water as sustenance
  4. He lived on air
  5. He remained in water
  6. He was buried in earth, but continued in incessant devotion
  7. He was burned in fire
  8. He stood on his head
  9. He hung on a tree by his hands
  • He bore the weight of his body on one hand
  • He hung on a tree head downwards.

Such merit was irresistible, and Brahma granted his request. After getting a boon that he should not be defeated by anyone, he became arrogant. Indra was forced to give his horse, Rishis had to part with their Kamadhenu/ magical cow. At last Siva’s son Kartikeya killed him.

MY COMMENTS

What is the message such stories give us?

1.Foreigners are wrong in describing demons as aborigines who were against Hinduism. In fact, all the demons got their boons from the same Hindu gods who Devas also worshipped.

2.Why did Hindu gods help the demons?

Hinduism go by mathematical rules. Success directly is proportional to the efforts you put in. Even bad people get their share according to their efforts, but the inherent weakness of bad people destroy them.

Tamil Poet Tiruvalluvar, author of Tamil Veda Tirukkural says,

“Though the fate written by God stands in the way, strenuous effort yields ready fruit. Labour recompenses what fate denies.”

Even if providence is not particularly helpful, personal efforts will bear proportionate results.

In Hinduism, even Gods obey the rules. Once they are propitiated they must give the boon; once they give the boon they cannot withdraw it. But god and demons are controlled by Truth. Truth alone will triumph (Satyameva Jayate).

 

3.The third message we get is that the methods employed by demons and seers for doing penance requires utmost concentration. Once a student gets that much concentration he succeeds in his studies. Once an aspirant practise that much concentration and involvement in the task he or she undertakes, definite success is assured.

  1. The eleven types of penance gave stuff for modern comics like Superman, Spiderman, Phantom, Tarzan and Harry Potter.

–Subham —