ஒரு கிராமத்தின் சோகக் கதை! (Post No.4391)

Written by S.NAGARAJAN

 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-35 am

 

 

Post No. 4391

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

 

ஜிஹாதி கொடுமை

 

ஒரு கிராமத்தின் சோகக் கதை!

 

ச.நாகராஜன்

 

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வி.எஸ். கர்னிக் கூறுகின்ற சோகக் கதை இது.

ஒரு கிராமத்தில் பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியா, தேலி மற்றும் ஹரிஜன்கள் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட மிகவும் சந்தோஷமாகவும் அன்யோன்யமாகவும் வாழ்ந்து வந்தனர்.

 

ஒரு நாள் ஒரு முல்லா முஸ்லீம் தனது மனைவியுடனும் எட்டுப் பிள்ளைகளுடனும் அந்த கிராமத்திற்கு வந்தார். கிராம அதிகாரியிடம் அவர்கள் சென்றனர். அவர் ஒரு ராஜபுத்திரர். அந்தக் கிராமத்தில் தங்களை வசிக்க அனுமதிக்குமாறு அவர்கள் கெஞ்சினர்.

 

தேலி மற்றும் ஹரிஜன சமூகங்கள் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். மற்ற அனைவரும் முஸ்லீம் குடும்பத்தைத்  அனுமதிக்கலாம் என்றனர்.

 

சில வருடங்கள் கழிந்தன. எட்டுப் பிள்ளைகளும் கல்யாண வயதை அடைந்தனர். முஸ்லீம் முல்லா கிராமத் தலைவரை அணுகினார். “ஹூஸூர், பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது.எனக்கு ஒரே ஒரு வீடு தான் இருக்கிறது.” என்றார்.

 

ராஜபுத்திர தலைவர் தரிசாகக் கிடந்த நிலப்பகுதியை அவருக்குத் தந்து, கூறினார்: “இதில் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளுங்கள்.”

பனியாவிடன் சென்ற முல்லா அவரிடம் பணத்தைக் கட்னாகப் பெற்றுக் கொண்டார்.

 

காலம் கழிந்தது. எட்டுப் பிள்ளைக்ளுக்கு 72 பிள்ளைகள் பிறந்தன. 30 வருடங்களுக்கு அந்த கிராமத்தின் ஜனத்தொகையில் 40 சதவிகிதம் முஸ்லீமாக இருந்தது.

 

இப்போது முஸ்லீம் இளைஞர்கள் அவர்களது கலாசாரத்தின்படி ஹிந்து இளைஞர்களுடன் சண்டை போடத் துவங்கினர். ஹிந்து பெண்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.

மெல்ல மெல்ல பிராமணர்களும் பனியாக்களும் அந்த கிராமத்தை விட்டுச் சென்றனர்.

 

ஒரு நாள் முல்லா அந்த கிராமத்தின் பிரதான கோவிலை இடித்தார். உடனே ராஜபுத்திரர்கள் இதற்கு வெகுவாக் ஆட்சேபணை தெரிவித்தனர்.

 

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒண்டிப் புக்லிடம் கேட்க வந்த முஸ்லீம்கள், “ அல்லாவின் பணியை எதிர்க்கும் எவரும் துண்டு துண்டாக வெட்டப்படுவர்” என்றனர்.

 

ராஜபுத்திரர்களும் கிராமத்தை விட்டு அகன்றனர். அவர்கல் தேலி மற்றும் ஹரிஜன்களை நோக்கி, “உங்களின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். இந்த கிராமத்தின் பெயர் இப்போது பஞ்ச்வடி என்ற பெயரிலிருந்து ரஹிமாபாத் என்று ஆகி விட்டது.” என்றனர்.

 

இந்த கிராமம் மஹ்ராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் உள்ளது.

இது ஒரு உண்மைச் சம்பவம்.

 

இதே போன்ற பல சம்பவங்கள் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய  ப்ங்களாதேஷின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நடந்துள்ளன.

 

முஸ்லீம் ஜனத்தொகை அதிகமாக் உள்ள் உத்தர பிரதேசம், கேரளா மற்றும் இதர் மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் இது சர்வ சகஜம்.

 

பிரிவினைக்குப் பிறகு காஷ்மீர் பண்டிட்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.

ரோஹிங்யா முஸ்லீம்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதித்தால் இந்த வேலை இன்னும் தீவிரமாக நடக்கும்.

தாராள் மனமுடையவர்களும், போலி செகுல்ரிஸ்டுகளும் மனித உரிமைக் கழகப் போராளிகளும்  இந்திய நீதித் துறையும் ரோஹிங்யாக்களுக்கு ஆதரவு தந்தால் . அடடா, பாராட்டுக்கள்,பாராட்டுக்கள்!

 

கொஞ்ச காலம் பொறுத்திருங்கள், ஐஎஸ ஐ எஸ் உங்களைத் துரத்தி விடுவார்கள்.பாரதத்தில் வசிப்போருக்கு பொறுமைக்கான் நோபல் பரிசு கிடைத்து விடும்.

*

மனம் நொந்து எழுதியுள்ள ஒரு உண்மைச் சமபவம் நம் கண்களைத் திறக்கட்டும். 11-9-2017 அன்று தனது பிளாக்கில இதை எழுதியுஅ வி.எஸ்.கர்னிக் நிர்வாகத் துறையில் பி.ஹெச் டி பட்டம் பெற்றவர்.

 

தனது கண்களால் கண்ட சொந்த அனுப்வத்தை இப்படி எழுதியுள்ளார்.

 

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே தருகிறோம்:

*

A (Retired) Major General’s observation : The True Story worth studying/ analyzing and ensuring this does not happen in future: Major General V S karnik (Retired) PhD ( Management) writes on 2017-09-11:

 

In one village, Brahamans, Rajputs, Baniyaas, Teli, and Harijan, all from different castes, were happily and peacefully staying. One day, one Muslim (Mulla) with his wife and their eight children came to that village.

 

They went to village pramukh, a Rajput man, and begged him that they be allowed to stay in that village. Except Teli and Harijan community, all agreed to allow the Muslim family to stay there.

 

After some years the eight children grown up and were of marriageable age. The Muslim man first went to Rajput and requested that “Huzoor,Baccho ki shadi hone wali hai. I have only one house.” The Rajput gave him some uncultivated land, and said that you build a house on it. Then the Muslim went to Baniya, and borrowed money.

 

After some time, his eight children had 72 children and after about 30 years the Muslim population of that village was 40 % of total population.

 

Now the Muslim youths, as per their culture, started having fights with Hindu youths and harassing Hindu girls. Slowly Brahmins and Baniyas left the village. One day Mulla started destroying the main temple of Hindus. To this, Rajputs of the village objected. The Muslim, who came 30 years ago, said that anyone objecting about the work for Allah, will be cut into pieces. The Rajputs also left the house.

 

While leaving the village, they said to Harijan and Telis, if we had listened to your advice and not trusted the Mulla, we would have not come to this stage of leaving the village. This village name is, now, changed from Panchvati to Rahimabad. This village is in Maharashtra, in Amvravti district. This is a true story.

 

(Similar experiences are not scarce but of common occurrence in Assam, West Bengal, districts bordering Bangladesh and many other districts with large Muslim population in UP, Kerala and other states). It happened after partition. It happened with Kashmiri Pundits. It is happening, now, in W. Bengal. Get Rohingyas Muslims in India and this process will speed up. Congratulations to liberals, secularists, Human right protectionists and Judiciary of India, for supporting the cause of Rohingyas. You all wait for some time, when you all will be driven out by ISIS. Bharatvasis should get “Noble Prize” for tolerance.

 

 

THANKS TO TRUTH 27-10-2017 ISSUE

***

 

 

மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 12 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-01

 

 

Post No. 4390

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நியூகினி என்னும் தீவு உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. இது ஒரு தனி நாடு. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோநேஷியாவுக்கும் இடையே, பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ளது. இங்கு சுமார் 750 மொழிகள் பேசப்படுகின்றன. இது ஏன் என்பதை, மொமழி ஆராய்ச்சியாளர்களாலும் விளக்க முடியவில்லை. சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் இரண்டு பழைய மொழிகளை உடைய பாரதத்துக்கு இது பல செய்திகளை அளிக்கும்.

 

தமிழ் என்னும் மொழி ஏன் உடைந்து போய் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்ற மொழிகளாக உருவாயின? சம்ஸ்கிருதம் என்னும் மொழி உடைந்து குஜராத்தி, மராத்தி, இந்தி என்று ஏன் பல மொழிகள் உருவாயின? பலமொழிகளைப் பேசியோர் வந்து குடியேறினரா? அல்லது பிற மொழிக் கலப்பால் இப்படி உருவாயிற்றா? அப்படிப் பல மொழி கலந்தால் அது ஒரு புறம் தெலுங்காகவும் இன்னொரு புறம் கன்னடமாகவும் மற்றொரு புறம் மலையாளமாகவும் இன்னும் துளு என்றெல்லாம் ஏன் பிரிந்தன? இப்படி ஒருமொழி உடைய எவ்வளவு காலம் பிடிக்கும்? — இவ்வறெல்லாம் கேள்விகள் கேட்டால் எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினாலும் அவைகளை எல்லாம் ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போக்கடிக்கும்’ சில எடுத்துக் காட்டுகளும் கிடைக்கும்!

 

 

நான் நீண்ட காலமாக முன்வைத்துவரும் கொள்கை: உலகில் தமிழும் சம்ஸ்கிருதமும் மிகப் பழைய மொழிகள். ஒரே மூலத்திலிருந்து வளர்ந்த மொழிகள்; வேறு எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைவிட இவ்விரு மொழிகளுக்கு இடையே தான் ஒற்றுமை அதிகம். சந்தி இலக்கணமும் வேற்றுமை உருபுகளும் இரண்டு மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டும் முக்கிய அம்சங்கள். மேலும் தமிழில் உள்ள ஆயிரக்கணக்கான ஆங்கிலச் சொற்களுக்கு விளக்கம் காண ஒரே வழி– தமிழ் -சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள்தான் உலகிலுள்ள பெரும்பாலான சொற்களுக்கு வேர் என்று ஒப்புக் கொள்வதாகும். அது எனது கொள்கை.

 

பழைய மொழிகளில் உள்ள பெரும்பாலான சொற்களை இவ்விரு மொழிகளில் காட்டலாம். ஆகவே தமிழ் ஒரு தனி மொழி- அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதெல்லாம் பிதற்றல்; உண்மை என்ன என்றால் பாரத மண்ணில் வாழ்ந்த மக்கள் வடக்கு, தெற்கு எனப் பிரிந்து நீண்ட நெடுங்காலம் வாழ்ந்ததால் இரண்டும் தனித் தனி — ஆனால் சஹோதர மொழிகள் ஆயின. இந்த விஷயங்களைப் பல முறை எழுதி ஆதாரங்களும் கொடுத்துள்ளேன். தமிழ் மொழியில் ஆயிரக் கணக்கான ஆங்கிலச் சொற்கள் உள்ளன. இவைகளை எல்லாம் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பச் சொற்கள் என்று வெளிநாட்டினர் கூறுவர்; அது தவறு; பாரத நாட்டின் மூல மொழியிலிருந்து ஆங்கு குடியேறிய புராதன இந்தியர்கள் பரப்பிய சொற்கள் அவை. ஆகையால் அவைகளைத் தமிழ் சொற்களாகவும் கருதலாம் என்றேன்

நியுகினி மொழிகளின் வரலாறு எனது கொள்கைகளுக்குத் துணையாக வருகிறது.

 

 

முதலில் நியூகினி பற்றிய புள்ளி விவரங்களைக் காண்போம்:

 

நியூகினியில் 750-க்கும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. அவை ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகளுடன் தொடர்பு அற்றவை. இவர்களுடன் தொடர்பில்லாத மொழி பேசும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் 250 வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். இந்த மக்களின் முன்னோர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள்; ஒருவர் பேசும் மொழி மற்றவர்களுக்குத் தெரியாது; புரியாது!

 

வெளி நாட்டினர் படை எடுத்ததில்லை; வணிகத் தொடர்பும் பிற நாட்டினருடன் இல்லை; எல்லோரும் மேலனேசியக் (Melanesia; Mela= mala= black) கருப்பர்கள்; ஏன் 750 மொழிகள்? இவைகளைப் பார்க்கும்போது ஆரிய-திராவிட மொழிக் கொள்கைகள் அடிபட்டுப் போகும்; அதா வது ஒருவர் வந்து குடியேறியதால் பல மொழிகள் உருவாயின என்பது தவறு. யாருமே வராத நியூகினி காட்டுக்குள் 750 மொழிகள்; ஆஸ்திரேலியப் பழங்குடி இடையே மேலும் 250    மொழிகள்!

இதில் இன்னும் ஒரு விந்தை என்ன வென்றால் அந்த மொழிகளுக்குள், சில கொஞ்சமும் மற்ற மொழிகளுடன் தொடர்பிலாத- தனிப்பெரும் மொழியாக நிற்கிறது. ஸ்பெயின் நாட்டிலுள்ள பாஸ்க் (Basque) மொழி போல! இதுவும் மொழியியல் வல்லுநர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. அலை அலையாக மக்கள் குடி ஏறியிருந்தாலும் அவர்கள் வெவ்வேறு இடத்திலிருந்தா வந்தார்கள்? ஆக மொழிகள் உருவாக வெளி அம்சங்கள் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.

 

 

இன்னும் ஒரு பெரிய விந்தை பாபுவா நியூகினி (Papua New Guinea)  மொழிகள் தமிழ் சம்ஸ்கிருதம் முதலிய இந்திய மொழிகளைப் போல எழுவாய்- செயப்படுபொருள் – வினைச் சொற்கள் (subject, object, verb= SOV) வரிசையில் அமைந்துள்ளன. ஆனால் சற்றுத் தொலைவில் உள்ள ஆஸ்திரேலிய மொழிகள் எஸ். வி. ஓ (Subject, Verb, Object) வரிசையில் உள்ளன. அதாவது ஆங்கிலம் போல.

நான் இட்லி சாப்பிட்டேன் என்பது இந்திய மொழிகளின் வாக்கிய அமைப்பு; நான் சாப்பிட்டேன் இட்லி என்பது ஆங்கில மொழி அமைப்பு; ரஷியன் போன்ற மொழிகளில் எதை எங்கு வேண்டுமானாலும் போடலாம்: இட்லி நான் சாப்பிட்டேன்; சாப்பிட்டேன் நான் இட்லி;  நான் சாப்பிட்டேன் இட்லி.

 

 

மேற்கு பாபுவாவின் வளைகுடா மாகணத்தில் (Gulf Province of West Papua) ஆயிரம் பேர் மட்டுமே பேசும் போரோம் (Porome) மொழி மலையாளம் போல மூக்கொலி (nasal sound) அதிகம் உடையது; ஆனால் உலகிலுள்ள எந்த மொழிக்கும் தொ டர்புடையதல்ல; இது

மொழியியலாளருக்கு சவால் விடும் மர்ம மொழி; பாஸ்க் (Basque)  மொழி போல!

கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக சில மொழிகளைக் கற்று எளியதொரு அகராதியைத் தொகுத்தனர். இதனால் சில் புதிய சொற்கள் தோன்றின.

ஒவ் வொரு மொழி பேசுவோரும் சில ஆயிரம் மட்டுமே இருந்ததால் கல்யாணத்துக்கு மற்ற  மொழிக்குடும்பத்தை நாட வேண்டி இருந்தது. இதனால் ஒரே குடும்பத்தில் மூன்று நான்கு மொழி பேசும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பேரன் எனப் பெருகினர். இதனால் கலப்பின (Pidgin) மொழிகள் உருவாயின. ஆயினும் ஆதியில் எப்படி 750 வெவ்வேறு மொழி பேசுவோர் இங்கு வந்தனர்  என்பது  மொழியியல் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிடுகின்றன.

 

உலக ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் உடைய பபுவா நியுகினி உலக மொழிகளில் ஆறில் ஒரு பங்கு மொழிகளை உடைத்தாயிருப்பது அதிசயமே.

  

இந்தியர்களைப் போலவே நெருங்கிய உறவினர்களின் பெயர்களையோ, இறந்தோரின் பெயரையோ சொல்ல மாட்டார்கள். பழங்காலத்தில் கணவர் பெயரைச் சொல்ல மாட்டாத தமிழ்ப் பெண்கள், ‘அவர்’ ‘வீட்டுக்காரர்’ ‘ஆத்துக்காரர்’, ‘இந்த ஊர் கோவிலில் உள்ளவரின் பெயர்’ என்றெல்லாம் சுற்றி வளைத்து கணவர் பெயரைச் சொல்லியது ;போல அங்கும் புதுப்புது சொற்களை உருவாக்கும் தேவை ஏற்பட்டது.

 

வேடிக்கை என்னவென்றால் மிக அ திகம் பேர் பேசுவது எங்கா ENGA மொழி; அதை சுமார் இரண்டு லட்சம் பேர் பேசுகின்றனர். அவர்களோவெனில் நாட்டின் நடுப்பகுதியில் யாரும் அணுகமுடியாத மலைப்பகுதியில் வசிப்பவர்கள்!

 

டான் லேகாக் (Late Don Laycock) என்பவர் வாழ்நாள் முழுதும் இந்தத் தீவின் மொழிகளை ஆராய்ந்தார்; அவர் சொல்கிறார்: இந்தத் தீவில் எப்படி இவ்வளவு மொழிகள் வந்தன? என்று கேட்காதீர்கள். உலகில் பெரிய நாடுகளில் ஏன் ஒரு சில மொழிகள் மட்டுமே உள்ளன? என்று கேள்வியை மாற்றிப்

போடுங்கள்; விடை கிடைத்துவிடும். ஏனேனில் அங்கெல்லாம் நாடு முழுவதையும் ஒரு குடைக் கீழ் ஆண்ட மன்னர் இருந்தனர்; ஒரே எழுத்து முறை இருந்தது; நீண்ட கால இலக்கியம் இருந்தது; போக்குவரத்து வசதிகள்– அதன் மூலம் வணிகத் தொடர்புகள் இருந்தன; இவை எதுவும் பபுவா நியூகினி நாட்டில் இல்லாததால் பல மொழிகள் உலா வந்தன என்பார்.

 

எது எவ்வாறாயினும் உலகில் இவ்வள வு மொழிகள் வேறு எங்கும் இல்லை; அதுவும்கூட ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத மொழிகள்!

750 மொழிகளை ஒரு சில தலைப்புகளில் சேர்த்து வகைப் படுத்தினாலும் மொழிகளில் உள்ள இலக்கண வேறுபாடுகள் பெரிய புதிர்களாக விளங்குகின்றன.

 

இந்தத் தீவின் மொழிகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. காலனியாதிக்க காலத்திலேயே பிரிட்டன், ஜெர்மனி, ஹாலந்து ஆகியன பல பகுதிகளைப் பிடித்து ஆண்டன. ன்னர் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் வந்தது; ஒரு பகுதி – இரியன் ஜயா- என்பது இந்தோநேசியாவின் ஆட்சிக்குட்ப்பட்டது. சுசுவாமி என்னும் மொழி பேசுவோர் 50 பேர் மட்டுமே இருந்தனர். இன்னும் சில மொழிகளை 500 பேர் மட்டுமே பேசினர். ஆங்கிலக் கல்வி முதலியவற்றால் 750 மொழிகளில் பெரும்பாலானவை அழிந்து வருகின்றன அல்லது அழிந்துவிட்டன என்றே சொல்லலாம்.

 

மொத்தத்தில் மொழிக் கொள்கையாளர் சொன்ன பல விதிகளைப் பொய் என்று காட்டுகிறது பபுவா நியூகினி நாடு.

TAGS:– நியூகினி, மொழிகள் கொள்கை

MORE ABOUT TREE WORSHIP IN ANCIENT INDIA (Post No.4389)

Written by London Swaminathan 

 

Date: 12 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-17

 

 

Post No. 4389

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

I have written several articles on trees. Now I am adding more points to the Pipal and Nyagrodha tree articles:-

Three important trees of Ficus genus (Plant Family: Moraceae) are considered holy by the Hindus. Of the three, the most important one was Ficus Religiosa known as Pipal or Peepul or Bodhi tree. Tamils named it as King Tree, i.e. the King of the Trees. Hindus has never lived without the Pipal tree. They used the sticks for the fire sacrifice. Even today Brahmin boys use it for their daily Samidhadanam ( fire ritual of celibate boys) . The seers were named after this tree. Pippaladan is found in Vedic literature. Almost all the Pipal trees in Tamil Nadu will have one god’s statue underneath and worshipped. Because of its sanctity Buddha who was born as a Hindu sat under it and attained wisdom. Asoka made the tree more popular by sending its branches to Sri Lanka and other places. Then it became more popular among the Buddhists.

 

Upanayana and Wedding to a Tree!

Pipal tree is believed by some as to be the abode of Brahma and is consequently invested with the sacred thread by the regular Upanayana ceremony. Others believe that all the Three Gods Brahma, Vishnu and Shiva abide in it. Ohers again connect it to Vasudeva, father of Krishna.

Devout Hindus worship the tree, pour water at its roots and smear the trunk with red ochre. Women make vows under the tree to get a male child. In Tamil,  there are even proverbs about it. “As soon as she went round (circumambulated) the tree, she touched her abdomen” to see whether she had become pregnant is the Tamil proverb.

 

Women tie cotton threads around its trunk or fastening red strips of red materials to its lower branches. A vessel of water for the comfort of the departed souls on their way to ‘the land of the dead’ is hung from its branches.  And beneath it is placed the rough stones which form the shrine of many village gods. In Tamil Nadu, Ganesh statues or Nagadevas (snake figures) are installed under the tree.

 

When a statement is made on oath the witness sometimes takes one of its leaves in his hand and invokes the gods above him to crush him if he is guilty of falsehood.

In South India the trees are married to Neem trees. Some people touch it only on Sundays believing Lakshmi, goddess of wealth, comes to it on Sundays.  They go around the tree after pouring water at its roots. If a Monday coincides with new moon day, pious Hindus go round it 108 times. They wind cotton threads about its trunk.

 

Birds drop its seeds in the cracks of the building and it sprouts from there damaging the buildings. But yet because of its holiness some people never disturb it.

BANYAN TREE WORSHIP

Huge banyan tree, another Ficus species (Ficus indica), is also worshipped in the same way. This tree is sacred to Vishnu. But we find other village gods also under the tree. The tree once planted propagates itself by its hanging roots. It lives for several hundred years. The planter uses the following prayer:

“Oh Vishnu, grant that for planting this tree, I may continue as many years in heaven as this tree shall remain growing on earth.”

He also expects that he won’t be scorched on his way to Yama loka (after death).

 

Please read my old articles on Trees:-

Nyakrodha tree | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/nyakrodha-tree/

Posts about Nyakrodha tree written by Tamil and Vedas.

of trees | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/of-trees/

5000 year old Yew Tree (from The Guradian News paper). Research Article Written by London swaminathan. Date: 3 November 2015. Post No:2297.

Trees in literature | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/trees-in-literature/

Picture of Deodar: Tree of the Gods. We have heard about people adopting children. But the greatest of the Indian poets Kalidasa and Sangam Tamil poets give …

 

save trees | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/save-trees/

 

Picture of Palasa tree. Research Article Written by london swaminathan. Date: 7th August 2016. Post No. 3043. Time uploaded in London :– 16-24. ( Thanks for …

Trees of Wisdom | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/trees-of-wisdom/

Picture shows Newton under Apple Tree. Hindu Saints composed Upanishads under the Himalayan Trees. Buddha attained wisdom under the Bodhi Tree.

water and trees | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/water-and-trees/

Posts about water and trees written by Tamil and Vedas.

Peepal tree | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/peepal-tree/

19 Feb 2017 – Trees are used as similes and metaphors in Tamil and Sanskrit literature from very ancient times. The upside down Peepal Tree(Ficus …

Bodhi Tree | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/bodhi-tree/

Mahabodhi Tree in Bodha Gaya. Research paper by London Swaminathan Post No.1325; Dated 3rd October 2014. This article is part of my series on …

 

Nature | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/nature/

Posts about Nature written by Tamil and Vedas. … “Trees that have fruit but no flowers are traditionally known as the Lords of the Forest; those that bear both …

Hindus’ Respect for Trees and Forests | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/hindus-respect-for-trees-and-forests/

 

18 Feb 2015 – In the Vedas, Lord Shiva is called the Lord of the Forests (Vanaspathi), Lord of the Trees (Vrkshanaam pathi) and Lord of the Animals …

 

Tamarind Tree | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/tamarind-tree/

Posts about Tamarind Tree written by Tamil and Vedas.

 

Magic of Trees! | Tamil and Vedas

Magic of Trees!

 

25 Nov 2012 – Buddha attained wisdom under the Bodhi Tree. Vaishnavite saint Nammalvar attained wisdom under a Tamarind tree. Sanatkumaras attained …

Tansen and Tamarind Tree! Ghosts in Tamarind … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/tansen-and-tamarind-tree-ghosts-in-ta…

 

26 Mar 2016 – Tansen and Tamarind Tree! Ghosts in Tamarind Trees! (Post No 2666). tansen tomb. Research Article by london swaminathan. Date: 26 March …

 

Indian Wonder: The Banyan Tree | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2012/05/indian-wonder-banyan-tree.html

26 May 2012 – There is a beautiful verse in the Panchatantra about Banyan Tree: “Deer recline in its shade; Birds in multitude gather to roost. Darkening its …

Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/

Nov 6th. வேதத்தில் மரங்களின் கதை (Post No.4372). Nov 6th. STRANGE STORIES ABOUT TREES IN VEDAS –Part 2 (Post No.4371).

Plants in Mahavamsa | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2014/10/plants-in-mahavamsa.html

3 Oct 2014 – In the same chapter we come across the story of Nigrodha (MrBanyan Tree). When Emperor Asoka killed his elder brother Sumana, his …

Significance of Neem Tree in Hinduism – Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2017/06/significance-of-neem-tree-in-hinduism.html

11 Jun 2017 – 18 Mar 2013 – Reand and enjoy this article about “Banyan Tree” from Mr. Santhanam Swaminathan. Tamarind Tree | Tamil and Vedas.

 

–subham–

 

 

 

 

பிறவி ஏன்? முக்தி எப்போது? (Post No.4388)

Written by S.NAGARAJAN

 

 

Date: 12 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-52 am

 

 

Post No. 4388

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அத்வைத ஸார விளக்கம்

பிறவி ஏன்? முக்தி எப்போது?

 

ச.நாகராஜன்

 

1

நம்மைக் குழப்பும் கேள்விகள் பல. பிறவி ஏன்? அது ஏன் வந்தது? எப்போது போகும்? – இப்படிப் பல கேள்விகள்

அத்வைத, விசிஷ்டாத்வைதம், த்வைதம் ஆகிய மூன்றும் மூன்று நிலைகளை நம் முன்னே வைக்கிறது.

 

அத்வைதம் தரும் சில பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுத் தரப்படுகின்றன.

இங்கு தரப்பட்டதைத் தவிர ஏராளமான கேள்விகளும் உண்டு. அதற்கு அத்வைத சித்தாந்தம் தரும் அற்புத பதில்களும் உண்டு.

இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது சிந்திக்க வேண்டும் என்பது பெரியோர் போதனை.

இப்போது இதோ , சில கேள்விகள், அதற்கான பதில்கள்- அத்வைத நோக்கில்.

 

2

ஆத்மா சுகஸ்வரூபன். அழிவற்றவன் என்று சொல்லப்படுகிறது.

அப்படியானால் ஆத்மாவுக்குத் துக்கம் எப்படி வந்தது?

உடலை அடைவதால் – சரீரத்தை அடைவதால் வந்தது.

 

சரீரம் – உடல் – எப்படி வந்தது?

பூர்வ கர்மத்துடன் கூடிய ஐந்து பூதங்களால் (பஞ்சீகிருத பூதங்களால்)

 

கர்மம் எத்தனை வகை?

மூன்று வகை.

அவை என்ன?

ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என மூன்று வகை

 

ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்றால் என்ன?

ஆகாமியம் என்றால் இந்த தேகம் எடுத்த பதினான்கு வயது முதல் செய்ததும் ,சஞ்சிதத்துடன் சேருவதுமாம்.

சஞ்சிதம் என்றால் பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை.

 

பிராரப்தம் என்றால் பூர்வ ஜென்ம கர்மங்களில் எந்தக் கர்மத்தின் பலனாக இந்த ஜென்மம் வந்ததோ,அந்த தேகத்தினால் அனுபவிக்க வேண்டியவையாம்.

இந்தக் கர்மங்கள் எப்போது நசிக்கும்?

 

ஞானம் வந்தால் ஆகாமியம் சஞ்சிதம் நாசம் அடையும்.

பிராரப்தம் அனுபவத்தால் தான் நசிக்கும்.

ஆகவே அனைவரும் விதேக முக்தியின் பொருட்டு பிரயத்னம் செய்ய வேண்டும்.

 

 

விதேக முக்தி என்றால் என்ன?

தேகமில்லாத முக்தி

 

அப்படியானால் வேறு பல முக்திகளும் உண்டா?

ஆம்.

ஸாலோக்கியம், ஸாமீப்யம்,ஸாரூப்யம், ஸாயுஜ்யம் என் இப்படி நான்கு வகை முக்தி உண்டு.

 

 

 

இவைகளை அடைவதற்கு சாதனங்கள் என்ன?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு உண்டு.

 

சரியை என்ரால் என்ன?

பகவத் கைங்கரிய ரூபமான தாஸ பாவனை.

 

கிரியை என்றால் என்ன?

தேவதா பூஜை செய்தல்

 

யோகம் என்றால் என்ன?

யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை,தியானம், சமாதி ஆகிய எட்டு அங்கங்களைக் கொண்டது யோகம். இவற்றினால் பரமாத்மாவுடன் ஜீவாத்மா ஐக்கியம் ஆதல் அதாவது ப்ரம்மத்துடன் கலந்து பேதமற்று ஒன்றாக ஆதல்

 

 

ஞானம் என்றால் என்ன?

ப்ரம்ம் சைதன்யத்தை எங்குமாய் ஏகமாய் கண்டு ஆனந்தித்து  ஐக்கியமுற்றிருத்தல்.

 

இந்த நான்கில் முந்தைய மூன்றும் மறுபடியும் பூமியில் ஜனனத்தைக் கொடுக்கும்.

ஸாயுஜ்யமே முக்கியமான முக்தி.

 

 

இன்னும் புண்யம், பாவம், மிஸ்ரம், இராக த்வேஷம் போன்றவற்றிற்கும் விளக்கம் உண்டு. அவற்றை பின்னால் பார்ப்போம்

***

 

 

இருதலைக் கொள்ளி எறும்பு! அப்பர் பெருமான் தவிப்பு! (Post No.4387)

Written by London Swaminathan 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-37

 

 

Post No. 4387

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பல அடியார்கள் தங்களை நெருப்பு பற்றி எரியும் விறகில் அகப்பட்ட எறும்பு என்று உவமிக்கின்றனர். இது ஒரு அருமையான உவமை. எரியும் வீட்டில் நாம் சிக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நடு அறையில் மாட்டிக் கொண்டோம்; வாசல் பக்கம் போனாலும் தீ; கொல்லைப் புறம் சென்றாலும் தீ என்றால் நம் மனம் எப்படி இருக்கும்? இதைப் போலத் தவிக்கும் தவிப்புதான் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை.

 

ராம கிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று இறைவன் இருக்கிறானா? என்று கேட்ட விவேகாநந்தரிடம் ‘இருக்கிறானே. உனக்கும் காட்டுகிறேன்’ என்று சொன்னவுடன் அதை விவேகாநந்தர் நம்பவில்லை; ஏன் எனில் அதற்கு முன்னர்  பல போலி சாமியார்களைக் கண்டவர் அவர். ‘எங்கே காட்டுங்கள் பார்க்க்கலாம்’ என்று சொன்ன உடனே, விவேகாநந்தர் தலையில் அவர் கை வைத்தவுடன் அவர் மூச்சுத் திணறிப் போகிறார். எங்கும் கடவுள்; கை, கால் வைக்க இடமில்லை. அதாவது தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடுபவன் நிலைமை. ராம கிருஷ்ண பரமஹம்சர் பின்னே சொல்கிறார்: ” தண்ணீரில் மூழ்கிவிட்ட ஒருவன், மேலே வந்து மூச்சு விட எவ்வளவு தவிப்பானோ அவ்வளவு தவிப்பு இருப்பவனே இறைவனைக் காண முடியும் என்று.

அப்பர், மாணிக்க வாசகர் எல்லாம் இப்படிப்பட்ட நிலையில் இருந்து , இறைவனையும் கண்டதால் தேவாரமும் திருவாசமும் பாடி, காலத்தால் அழிக்க முடியாத இடம் பெற்றனர். ஆயினும் நம்மைப் போன்றோருக்காக இப்படி ‘இருதலைக் கொள்ளி எறும்பு போல’ தவிப்பதாகப் பாடிச் சென்றனர். இதோ அப்பர் பெருமானின் அருட் புலம்பல்:–

 

உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை

உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி

எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற

கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே

–நாலாம் திருமுறை

பொருள்

தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.

அவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என்  உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.

பதவுரை:

 

உள்குவார் உள்ளத்தான் =நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவன்;

உணர்வு என்னும் பெருமையானை = பரமசிவன் தலைசிறந்த பெருமையாகிய    அருளை உடையவன்;

உள்கினேன் ஊறி ஊறி உருகினேன்; ஊறுவது அன்பு, உருகுவது உள்ளம்;

எள்கினேன் = அரியனாகக் கருதாது எளியனென்று கொண்டிட்டேன்;

இரு தலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு = இரு பக்கமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் நடுப்பக்கத்தில் நின்று கொண்டு போக வழி இல்லாமல் சிக்கிய எறும்பு போல;

எறும்பு= உள்ளத்துக்கு உவமை.

 

மாணிக்கவாசகரும் இருதலைக் கொள்ளியினுள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்– — என்று பாடியது காண்க.

–நீத்தல் விண்ணப்பம்

 

சுபம், சுபம்–

 

TWO WIVES OF BRAHMA FOUGHT AND BRAHMA LOST! (Post No.4386)

Written by London Swaminathan 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 8-08 am

 

 

Post No. 4386

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Brahma, in addition to his learned wife Sarasvati, had a second wife by name Gayatri. An interesting story is told in the Skanda Purana of their rivalry between the two women and subsequent reconciliation.

 

Siva told this story to his wife Parvati

“Listen, O Devi! I will tell you how Sarasvati forsook Brahma  and he in consequence espoused Gayatri. The Vedas have declared the great advantages that are derived from sacrifice, by which the Gods are delighted and bestow rain upon the earth.

For this purpose Brahma, Sarasvati, the gods and the holy sages repaired to Pushkara; but when all preparations were made, with all our rites and ceremonies for performing the sacrifices, Sarasvati detained by some household affairs was  not in attendance. A priest went to call her, but she replied, “I have not yet completed my dress, nor arranged several affairs. Lakshmi, Gowri, Gangadevi, Indrani and the wives of other gods and holy sages have not yet arrived, how therefore can I enter the assembly alone?”

 

The priest returned and addressed Brahma,

“Sarasvati is busy with other things and so she would not come. A man can’t do any religious rites without his other half (wife). Immediately Brahma got angry and commanded Indra, “Hurry up, get me another wife wherever you can find one”  Indra ran out and saw a beautiful milkmaid with a smiling face. He brought her to the assembly of Brahma. With the consent of the gods and sages in the assembly he married the milkmaid named Gayatri.

At this time Sarasvati accompanied by the wives of Rudra, Vishnu and other gods came to the place of the sacrifice. Seeing the milkmaid in her seat and the priests performing sacrifice, she cried out,

“O Brahma! have you decided to leave me who is your lawful wife? Have you no sense of shame and influenced by love, you did a shameful act. You are called the great father of gods and yet you publicly acted in a manner as to excite the derision of the three worlds”.

 

Brahma replied, “O my darling! The priests informed me that the time for the sacrifice was fast passing by and I cannot perform the sacrifice without my wife. Indra brought Gayatri and Rudra and Vishnu gave her in marriage to me”.

 

On hearing these words Sarasvati got and angry and cursed,

“By the powers which I have obtained by the performance of sacrifice, may Brahma never be worshipped in a temple or sacred place except one day in a year. And Indra!  since you have brought this woman you shall be bound in chains and confined in a strange country. Turning to Vishnu she said, since you gave that milkmaid in marriage you shall be born amongst men and wander for a long time with the cattle. To the priests she said you shall perform the sacrifices with the sole aim of receiving gifts.”

 

Having pronounced these curses, Sarasvati left the assembly; but at Brahma’s request, Vishnu and Lakshmi followed Sarasvati  and begged her to return to the assembly. In the meantime, Gayatri modified the curses and promised all kinds of benefits and blessings for the worshippers of Brahma

When Sarasvati returned to the assembly, Brahma asked Sarasvati  what she wished him to do with Gayatri. Before she replied, Gayatri threw herself at the feet of Sarasvati. She raised her up and said,

“A wife must obey the orders of her husband; for that wife who reproaches her husband and who is complaining and quarrelsome shall most assuredly, when she dies, go to hell. Therefore, let us both be attached to Brahma”.

Picture posted by Lalgudi Veda

 

‘So let it be’, said Gayatri

“I will obey your orders; I esteem you friendship, precious as my life. I am like your daughter. Please protect me.”

The reconciliation was complete. But Sarasvati’s curse was so strong even now Brahma is not worshipped in temples as a main deity.

 

(There are a few other reasons given for the non- worship of Brahma  in South India.)

 

My Comments:

What are the messages this story gives us:

1.A Hindu cannot do any ritual without his wife

  1. A wife though angry always obeys her husband

3.No one can escape from the curses or the evil acts they do.

4.Brahma lost his pride and prominence because of marrying second time when his wife was alive.

5.When there is obedience and humility, two women can live amicably

  1. Sacrifices don’t wait for anyone; they must be done on time. Even gods follow the rules laid out in the Vedas.

Brahma from Cleveland Museum

7.Skandam (Kanda Purana) is the largest of the 18 major Puranas (mythology) and it has lot of interesting stories like this.

8.Gayatri and Sarasvati, Savitri and Sandhya are all one and the same goddess with different aspects. They are created by the sages to give some messages.

9.Symbolism must be understood and explained at the end of each story; otherwise it would confuse children and illiterates.

 

–Subham–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7 (Post No.4385)

Written by S.NAGARAJAN

 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-32 am

 

 

Post No. 4385

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7

 

ச.நாகராஜன்

10

பாரிஸிலிருந்த தனது தாயாருக்கு அவர் 1845ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள அம்மா, உங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கு பதிலாக கொஞ்சம் மகிழ்ச்சியை நான் கொடுத்திருக்கலாம். ஆனால் அது முடியாத காரியம் – எனது எதிர்காலத்தை நான் முற்றிலுமாக தியாகம் செய்தாலொழிய…. லெடர்ஹோஸிடமிருந்து இன்னும் 200 ஃபிராங்குகளை நான் வாங்க வேண்டியிருந்தது. நீங்கள் இப்போது அனுப்பியுள்ள பணத்தை வைத்து ஜனவரி அல்லது பிப்ரவரி வரை ஓட்ட முடியும்” என்று எழுதியுள்ளார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைக் காண்போம்.

TO HIS MOTHER. PARIS, December 23, 1845.

“…instead of taking money from you, my dearest mother, I could have given you some little pleasure. But it was impossible, unless I sacrificed my whole future… I have again had to get 200 francs from Lederhose, and with the money you have just sent shall manage till January or February.”

1847ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று அவர் தன் தாயாருக்கு எழுதுகையில்,எனது லண்டன் அறைகள் பிரமாதமாக இருக்கின்றன.கீழ்த்திசை ஆராய்ச்சியாளரான டாக்டர் ட்ரிஹென்னும் அதே வீட்டில் தான் தங்கி இருக்கிறார். அவரை  எனக்கு பாரிஸிலேயே தெரியும். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர் வெளியுறவு இலாகாவில் பணிபுரிந்து வந்தார். இன்னும் பல கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் எனக்கு அருகிலேயே வசித்து வருகின்றனர். உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு ஓரியண்டல் காலனியையே இங்கு உருவாக்கியுள்ளோம். நல்ல வேடிக்கை பொழுதுபோக்குகளை எங்கள் காஸ்மாபாலிடன் தேநீர் அருந்தும் மாலை நேரங்களில் கொண்டுள்ளோம் என்று எழுதுகிறார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைப் பார்ப்போம்:

TO HIS MOTHER. September 1, 1847.

“My rooms in London are delightful. In the same house lives Dr. Trithen, an orientalist, whom I knew in Paris, and who was once employed in the Office for Foreign Affairs in St. Petersburg. Then there are a great many other orientalists in London, who are mostly living near me, and we form an oriental colony from all parts of the world… We have a good deal of fun at our cosmopolitan tea-evenings.”

அதாவது மாக்ஸ்முல்லர் லண்டனில் ஒருவாறாகசெட்டில் ஆகி விட்டார்.

ஆக கடுமையான பணத்தட்டுப்பாட்டில் இருந்த மாக்ஸ்முல்லருக்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனி மூலம் ஒரு வழி பிறந்தது. மளமளவென்றுஎதையாவது செய்து அவர்களைத் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.

மனம் போனபடி அவர் வேதங்களின் மொழி பெயர்ப்பைத்தயார்  செய்யலானார்.

தனது மொழி பெயர்ப்பைப் பற்றி அவரே தனது Vedic Hymns”  என்ற புத்தகத்தில், “எனது வேத மொழியாக்கம் ஊகத்திற்கிடமானது (“My translation of the Vedas is conjectural”) என்று கூறியுள்ளார்.

வேதத்திற்கு  பல பொருள்கள் உண்டு. அதை உள்ளுணர்வு பெற்றவர்களே சரியாக அறிய முடியும். வெறும் கற்றுக் குட்டிகளை வைத்து வார்த்தைகளைத் தனக்குத் தோன்றிய பொருளில் அவர்  மொழியாக்கம் செய்தது தவறு.

பல கொள்கைகளை அவர் உருவாக்கினார். ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், வேதத்தின் காலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது போன்ற கருத்துக்களை அவர் வித்திட்டார்.

இப்படிச் சொன்னதால் அவர்அறிஞராக்கப்பட்டார்.

மிஷனரிகளுக்குத் தேவையான அனைத்து விதைகளும் அவர் தந்து விட்டதால்செடிகளை வளர்ப்பது அவர்களுக்குச் சுலபமானது.

ஆனால் பின்னால் இதே மாக்ஸ்முல்லர் தன் கருத்துக்களைத் திருத்திக் கொள்ள முற்பட்டபோது அதே கிறிஸ்தவ மிஷனரிகளால் கடுமையாக விமரிசிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

அதையும் பார்ப்போம்.

                                –தொடரும்

****

எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே! (Post No.4384)

Written by London Swaminathan 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 16-56

 

 

Post No. 4384

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு: “எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே!”

ஏன் இப்படிச் சொல்லுகின்றனர்?

 

மஹாபாரதம் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்: இதில் சொல்லாத பொருள் உலகில் இல்லை என்று; அதில் வியப்பில்லை; ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் உலகிலேயே பெரிய காவியம்; ஆகையால் எல்லாம் இருக்க வாய்ப்புள்ளது. வியாசர் தனது காலத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் பாண்டவர் கதைக்குள் அழகுபடப் புகுத்திவிட்டார். அதே போல கந்தப் புராணத்தில் இருக்கிறதா?

இதோ சில சுவையான விஷயங்கள்:–

கந்த புராணத்தை இயற்றியவர் யார்?

கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள்

 

கந்த புராணத்திலே எத்தனை செய்யுட்கள் உள்ளன?

10346

 

இதன் முதல் பாட்டு எப்படி துவங்குகிறது?

‘திகடச் சக்கரச் செம்முக மைந்துளான்’

 

இது பற்றி ஏன் சர்ச்சை எழுந்தது?

காஞ்சீபுரத்தில் கந்தபுராண நூலை அரங்கேற்ற கச்சியப்பர் வந்தபோது முதல் செய்யுளே இலக்கணப் பிழையுடையதென்று அறிஞர்கள் சிலர் ஆட்சேபித்தனர். மறு நாள் விளக்கம் தருவதாகச் சொன்ன கச்சியப்பர் அதற்கான இலக்கண விதியைக் காணாமல் பரிதவித்தார். இரவில் முருகப் பெருமானே கனவில் வந்து வீரசோழியத்தில் அதற்கான விளக்கம் இருப்பதாகச் செய்யுளைக் காட்டியவுடன், மறு நாள் அவர் அதற்கு விளக்கம் தந்து வெற்றி கரமாக அரங்கேற்றினார்.

எந்தப் பொருளும் இந்தப் புராணத்தில் உளதா?

ஆம்; எல்லா உபகதைகளும் இதில் உள்ளன. இதன் மூலம் சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஸ்காந்தம் ஆகும்.அதுதான் 18 புராணங்களில் மிகப் பெரியது 81,000 ஸ்லோகங்கள் உடைத்து.

 

கந்த புராணத்தின் பெருமை என்ன?

பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் சிவ பரமானவை; அவைகளில் கந்த புராணம் சிறந்தது; ஏனெனில் வேதாந்த சித்தாந்த சாரங்களை உள்ளடக்கியது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் எளிதில் தரவல்லது.மங்கலத்தைச் செய்விப்பது; வலிமிக்க கலித் துன்பத்தை நீக்குவது.

கச்சியப்பர் இது பற்றி செப்பியது யாது?

“காந்தம் என்னும் பெருங்கடல்”  — என்று அருளினார். 10,346 பாடல்களை ஆறு காண்டங்களாகவும் 94 படலங்களாகவும் அவர் பிரித்தார்.

 

இதைச் சுருக்க முடியுமா?

சம்பந்த சரணாலய சுவாமிகள் என்பார், கந்தப் புராணத்திலுள்ள வரலாறுகளை ‘சுருக்கித் தொகுத்தல்’ என்னும் யாப்பால் 1049 செய்யுட்களால் இயற்றி அருளினார்.

 

வடமொழியில் உள்ள ஏழாவது காண்டமான உபதேச காண்டத்தை கோனேரியப்பர் என்பவர் 4347 செய்யுட்களாகப் பாடியுள்ளார்; அதில் சூரன் முதலியோரின் முன்னை வரலாறும் உருத்திராக்க மஹிமையும்,  விபூதி மஹிமையும், சிவ நாம மஹிமையும் உளது.

கந்த புராணத்தில் உள்ள ஆறு காண்டங்கள் யாவை?

உற்பத்தி காண்டம், அசுர காண்டம் , மஹேந்திர காண்டம் , யுத்த காண்டம் , தேவ காண்டம், தக்க காண்டம் என்று ஆறு காண்டங்கள்

இவற்றில் அறுமுகக் கடவுளின் அவதாரம், தேவரை அசுரர்கள் சிறை செய்த வரலாறு,  சூரபன்மனை முருகன் வென்ற வரலாறு, வள்ளி, தெய்வயானை திருமணம், முதலியன உடைத்து.

 

 

கச்சியப்பரின் கந்த புராணத்தில் என்ன உளது?

 

கனிச்சுவை மிக்கது; நவில்தொறும் நவில்தொறும் நா நயம் பயப்பது;

பயில்தொறும் பயில்தொறும்  அறுமுகக் கடவுள் மேல் பக்தி ஞானம் விளைப்பது.

இதில் சொல்லபடாத கிளைக் கதைகள் இல; இதை ‘புதுமயிலூர்பரன் புராணத்துற்றிடாக் கதையிலை’ என்னும் செய்யுட் பகுதியால் அறியலாம்.

 

அது கிரந்தத் தொகை, கதைப் பரப்பு, அரும்பொருட்கிடக்கை, பொருள் ஆழம் என்பவைகளால் மற்றவற்றைச் விடச் சிறந்து விளங்குவதால்

கந்த புராணத்தை தமிழில் வெளியிட்டவர் யார்?

கந்த புராணத்தின் மூல பாடம் முழுவதையும் முதலில் யாழ்ப் பாணத்து நல்லூர் ஸ்ரீ ஆறுமுக நாவலர் பதிப்பித்தார். அவரே கந்தபுராணத்தை வசன நடையிலும் எழுதி  வெளியிட்டார்.

கந்த புராணத்தில் சுவையான, அதிசய விஷயங்கள்  இருக்கின்றனவா?

ஆம். யுத்த காண்டத்தில் 108 பூத கணத் தலைவர்கள் பெயர் உள்ளது. அசுர  காண்டத்தில் காச்யபர் உபதேசம், மாயாதேவி உபதேசம், சுக்கிராச்சாரியார் உபதேசம் உள்ளன. கஸ்யபருக்கு மாயைபால் தோன்றிய சூர பன்மன் , வீர வேள்வி செய்து, சிவனிடம் வரம் பெற்று 1008 அண்டங்களை 108 யுகங்களுக்கு ஆள வரம் பெற்றதையும் காணலாம். தட்ச காண்டத்தில், தக்கன் புதல்வர்களை, நாரதர் தவ வழியில் செலுத்தல், ததீசி முனிவர் பதில் கூறல், வீரபத்திரர், பத்திர காளி தோற்றம், யாக சங்காரம் ஆகியன ஆழ, ஊன்றிப் படித்தற்குரியனவாம். கந்தன் தொடர்பான விரதங்களும் நல்ல தகவல் தருவன.

 

கந்தபுராணத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியை, முசுகுந்த சக்ரவர்த்தி கொண்டு வந்து, திருவாரூரில் பிரதிஷ்டை செய்த வரலாறும் ஆறு மூர்த்திகளை  ஆறு ஸ்தலங்களில்  பிரதிஷ்டை செய்த வரலாறும் அறிய வேண்டிய விஷயங்கள்.

TAGS:— கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியார், திகடச்சக்கர, ஆறு காண்டங்கள்

 

–சுபம், சுபம் –

 

STORY ABOUT A.BRAHMANA (Post No.4383)


Written by London Swaminathan
 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-35

 

 

Post No. 4383

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

This is a story about the origin of Aitareya Brahmana.

The Brahmanas are the prose works in the Vedic literature. They deal with the fire sacrifices of the Vedic Hindus. Each Veda has separate Brahmanas. In fact each ‘Shaka’ of the Veda has one Brahmana. One of the oldest Brahmanas is Aitareya Brahmana of Rig Veda.

 

There is a curious story about the origin of this book. Sayana, the Vedic commentator said this story. There was a sage who had many wives, and one of them was called Itara. She had a son whose name was Mahidasa. The father neglected him and loved the other sons more than Mahidasa, and at a certain sacrifice, he allowed all the other sons to sit on his lap, but refused the honour to Mahidasa.

Thereupon Itara prayed to Goddess of Earth who appeared at once and offered a divine thrown to Mahidasa and seated him on it. The goddess then made him a great scholar. To Mahidasa Aitareya, enlightened by the boon of Earth,there appeared or was revealed. One Brahmana of the Rig  Veda  (of Sakala Saka was called after his name. Itara——-A/Itareya. The aranyaka is also called Aitareya Aranyaka.

 

(The legend says that Aitareya was the son of Itara; itara means the other woman, probably the woman was not the legal wife of the King and so her son was neglected.)

Aitareya Brahmana is divided into eitght Panchikas (pentads), each of which has five adhyayas and so it contains forty chapters; it deals with the duties of the priests, explanations of Soma, Uktya, Shodasa, Atiratra and other sacrifices including 12 minor sacrifices

 

How many Brahmana Books are there?

 

There is one more Brahmana of Rig Veda: Kaushitaki Brahmana.

Satapata Brahmana

Of all the Brahmana books, Satapata Brahmana is the most important one. It belongs to Sukla Yajur Veda. It deals with important fire sacrifices in addition to etymology, grammar and meanings of several other things. The name itself shows that it has hundred (sata) chapters. The Krishna Yajur Veda has Taittiriya Brahmana.  Atharva Veda has Gopata Brahmana.

 

The Brahmanas shows the oldest stage in the development of Sanskrit prose. It is a most interesting phase in the history of Indian thought. Some of the things are said in a symbolic language and so they appear as silly stories. The seers themselves often say the gods love mysterious language. The astronomical remarks in the Brahmanas show they belong to a period between 2000 BCE and 3000 BCE. Foreigners date them around 1000 BCE. This is wrong because Max Muler gave a rough date believing that a anguage changes every 200 years. This theory is not applied to any other language and proved More over, apart from language, there is huge difference between the Upanishadic stage and Brahmana stage.

 

–subham —

 

வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை! (Post No4382)

Written by S.NAGARAJAN

 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4382

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

10-11-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில்  வெளியாகியுள்ள  கட்டுரை

 

 

 

வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை!

 

 ச.நாகராஜன்

 

 

“ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்வது எப்படி என்றால், அதைச் செய்து விடுவது தான்! -அமிலியா எர்ஹார்ட்

Amelia Earhart

 

   உலகில் முதன் முதலாக ஒரு விமானத்தை ஓட்டிப் பல சாகஸங்களைச் செய்த துணிச்சல்காரப் பெண்மணியை உலகம் அவ்வளவாக அறிந்திருக்காது. அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தது உட்பட ஏராளமான சாகஸங்களை நிகழ்த்திய அமெரிக்கப் பெண்மயான அமிலியா எர்ஹார்ட் (பிறப்பு 24, ஜூலை 1897 மர்ம மறைவு 2, ஜூலை, 1937 – Amelia Earhart) மங்கையர் சரித்திரத்தில் மகோன்னதமான இடத்தைப் பிடிப்பவராவார்

 

 

அமிலியா மேரி எர்ஹார்ட் அமெரிக்காவில் கான்சாஸில் பிறந்தவர். இளமையிலிருந்தே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருந்தார். இளமையில் பேஸ்கட் பால் விளையாடுவார். ஆட்டோ ரிப்பேர் வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் கல்லூரியிலும் படித்தார்.

முதல் உலகப்போரில் ரெட் கிரஸில் இணைந்து நர்ஸாகப் பணி புரிந்தார். கனடாவில் டோரொண்டோவில் ராயல் ஃப்ளையிங் கிளப்பில் விமானங்கள் பறப்பதை வேடிக்கை பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

முதல் உலகப் போர் முடிந்தவுடன் அமரிக்கா திரும்பி நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  மருத்துவ ஆரம்பப் படிப்பில் சேர்ந்தார்.

கலிபோர்னியாவில் 1920இல் டிசம்பர் மாதம் புகழ் பெற்ற பைலட்டான ஃபிராங்க் ஹாக்ஸ் என்பவருடன் கூடச் சேர்ந்து அவர் விமானத்தில் பறந்தார்.

 

 

1921, ஜனவரி மாதம் நேதா ஸ்னூக் என்ற பெண் பயிற்சியாளரிடம் விமானத்தை ஓட்ட கற்றுக் கொண்டார்.

இதற்காகப் பணம் கட்ட லாஸ் ஏஞ்சலஸில் டெலிபோன் கம்பெனியில் குமாஸ்தாவாக அவர் பணி புரிந்தார்.

பயிற்சி முடிந்தவுடன் தனக்கென சொந்தமாக ஒரு பழைய விமானத்தை வாங்கிக் கொண்டார். அதற்கு ‘கேனரிஎன்று செல்லப் பெயரையும் சூட்டினார்.

 

 

டிசம்பர் 1921இல் பறப்பதற்கான லைசென்ஸை பெற்றவுடன் தைரியமாக வானில் பறக்க ஆரம்பித்தார்.

1922இல் 14000 அடி உயரத்தில் பறந்த முதல் பெண்மணி என்ற சாகஸத்தை நிகழ்த்திக் காட்டினார். 1932இல் அட்லாண்டிக்கில் தனியாகப் பறந்து அதைக் கடந்த முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார். அவர் இந்த சாதனையை நிகழ்த்தியவுடன் அமெரிக்காவில் காங்கிரஸ் அவருக்கு  ‘ஃபிளையிங் கிராஸ் என்ற அரிய விருதைக் கொடுத்து கௌரவித்தது.

 

 

அதே ஆண்டில் தொடர்ந்து 19 மணி நேரம் இடைவிடாது பறந்து, லாஸ் ஏஞ்சலஸில் கிளம்பியவர் நியு ஜெர்ஸியில் வந்து இறங்கி புது சாதனையைப் படைத்தார்.

1935இல் ஹவாயிலிருந்து தனியாகக் கிளம்பி அமெரிக்காவை அடைந்து அதிலும் முதலாவது பெண்மணியாகத் திகழ்ந்து புகழ் பெற்றார்.

 

இதனாலெல்லாம் உலகெங்கும் வாழும் மங்கையர் மனதில் ஒரு உற்சாகமும் ஆர்வமும் ஏற்பட்டது. ‘நைண்டி நைன்ஸ் (Ninety Nines)  என்ற விமான ரேஸை நடத்தும் நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்தார்.

 

தொடர்ந்த சாகஸமே அவரின் இறுதிக்குக் காரணமாக அமைந்தது.

 

1937ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்திலிருந்து உலகத்தைச் சுற்றுவது என்ற முடிவில் தன் பயணத்தைத் தொடங்கினார்.

 

 

அவருக்கு வழி காட்ட ப்ரெட் நூனன் என்பவர் உடன் சென்றார். மியாமி வழியாக தென் அமெரிக்கா சென்று பின்னர் அட்லாண்டிக்கிலிருந்து ஆப்பிரிக்கா சென்று இந்தியா வழியே தென்கிழக்கு ஆசியாவை அடைந்தார் அமிலியா.

ஜூன் 29ஆம் தேதி அவர்கள் நியூ கினியாவில் லீ என்ற இடத்தை அடைந்த போது 22000 மைல்கள் பறந்திருந்தனர். புறப்பட்ட இடத்தை அடைய இன்னும் 7000 மைல்கள் தான் பாக்கி. லீயிலிருந்து ஜூலை இரண்டாம் தேதி அமிலியாவும் நூனனும் கிளம்பினர். பிறகு அந்த இருவரையும் காணோம்.

உலகமே பரபரப்படைந்தது. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் பிரம்மாண்டமான ஒரு தேடுதல் வேட்டைக்கு ஏற்பாடு செய்தார். இரண்டு வார காலம் இந்தத் தேடுதல் பணி நடந்தது. ஆனால் பயனில்லை.

 

 

1937, ஜூலை 19ஆம் தேதி அவர்களைக் கடலில் மறைந்தவர்களாக அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அமிலியாவின் மர்மமான மறைவுக்கு ஏராளமான காரணங்கள் கூறப்பட்டன.

 

1937லிருந்து 2017 முடிய இந்த எண்பது ஆண்டுகளில் பல திடுக்கிடும் தகவல்களை அவரது மர்ம மறைவு பற்றி ஆராய்வோர் தந்து கொண்டே இருக்கின்றனர்.

‘விழுந்து மூழ்கிய கொள்கை என்பதை வலியுறுத்துவோர் அமிலியாவின் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போய்விட்டதால் ஹௌலேண்ட் ஐலேண்ட் அருகே அவர்கள் விமானம் கீழே விழுந்து மூழ்கியிருக்கலாம் என்கிறனர். கடந்த 15 ஆண்டுகாலமாக அவர்கள் பயணித்த விமானத்தின் சிதிலமடைந்த பாகம் ஏதேனும் கிடைக்குமா என்ற ஆராய்ச்சிக்காக ஹை டெக் சோனார் தொழில்நுட்பமும் ஆழ்கடல் ரொபாட்டுகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவர்கள் பயணித்த ‘எலெக்ட்ரா விமானத்தின் எந்த ஒரு பகுதியும் பசிபிக் பிராந்தியத்தில் கிடைக்கவில்லை.

     

 

 

     பன்னாட்டு விமான மீட்பு வரலாற்றுக் குழு தனது ஆய்வில் அவர்கள் ஒருவேளை ஹௌலேண்ட் ஐலேண்டிலிருந்து சுமார் 350 மைல் தள்ளில் உள்ள கார்ட்னர் ஐலேண்டில் இறங்கி இருக்கலாம் என்ற கொள்கையை முன் வைக்கின்றனர். யாருமே குடியிருக்காத அந்தப் பகுதியிலும் விமானங்கள் பறந்து ஆய்வை நடத்தின. ஆனால் பலனில்லை. ஒருவேளை அவர்கள் அந்தத் தீவில் தங்கி பசியால் வாடி இறந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.

1988ஆம் ஆண்டிலிருந்து பல முறை இந்தத் தீவிற்குப் பலரும் சென்று இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தனர்.

ஜூன், 2017இல், அங்கு தொடங்கி நடத்தப்படும் ஆய்வில் ஏதேனும் மனித எலும்புக் கூடுகள் கிடைக்குமா என்று பார்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

 

ஆயிரத்திதொள்ளாயிரத்து முப்பதுகளில் பெண்கள் அணிந்து வந்த மாடல் செருப்பு போல ஒரு செருப்பு அந்த ஆய்வில் கிடைத்தது. பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன குடுவை ஒன்றும் கிடைத்தது. மனித  விரல் ஒன்றும் கிடைத்தது.

 

இது தவிர இந்த மர்மம் பற்றி, வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன.

 

 

சிலர் அவர்களை ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு சென்று கொன்று விட்டனர் என்கின்றனர். இன்னும் சிலரோ அமிலியா ரூஸ்வெல்ட் நிர்வாகத்தில் உளவாளியாகப் பயன்படுத்தப்பட்டதால் அவர் இறந்தது போல ஒரு நாடகம் நடத்தப்பட்டு ‘இறந்து போன இருவருக்கும் புதுப் பெயர்கள் வழங்கப்பட்டு அவர்கள் எங்கோ வாழ்கின்றனர் என்கின்றனர்.

   

 

  ஆயிரக்கணக்கான ஆவணங்களைத் தன் ஆய்வில் சேர்த்துள்ள லெஸ் கின்னி என்பவர், கப்பல் ஒன்று உடைந்த விமானத்தை ‘டோ செய்து இழுத்துக் கொண்டு செல்வது ஒரு போட்டோவில் காணப்படுகிறது என்றும் அந்தக்  கப்பலில் காணப்படும் இருவர் அமிலியா மற்றும் நூனன் போல இருக்கிறது என்றும் கூறுகிறார்.

 

 

இந்த போட்டோ உண்மையான ஒன்று தானா என்பதை ஆய்வு செய்த ஃபோரன்ஸிக் நிபுணரான டக் கார்னர், “சந்தேகமே இல்லை; இது உண்மையான போட்டோ தான் என்கிறார்.

‘சரி, கப்பல் யாருடையது என்பதை ஆராய்ந்த அவர்கள் அது கோஷு மாரு என்ற ஜப்பானியக் கப்பல் என்று கண்டு பிடித்துள்ளனர்.

 

அமிலியாவும் நூனனும் ஜப்பானுக்குக் கடத்தப்பட்டனரா? அவர்கள் ஜப்பானில் என்ன ஆனார்கள்?

மர்மத்தைத் துலங்கிக் கொள்ள ஆய்வு தொடர்கிறது.

இதில் ஆர்வம் உள்ள உலக மக்கள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

உலக சாதனை படைத்த மங்கையை அப்படியே விட்டு விடலாமா என்ன?என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேணடாமா?

 

 

தாய்க்குலம் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் பல்வேறு ஆய்வுகளைக் கவனித்து வருகின்றனர். மர்மம் தொடர்வது போல ஆய்வுகளும் தொடர்கின்றன!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

 

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மறைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. என்றாலும் கூட அவர் அன்றாட செய்திகளில் அவ்வப்பொழுது முதலிடம் வகிக்கிறார். சமீபத்தில் விஞ்ஞானிகள் குழு நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர். அது கிராவிடேஷனல் அலைகளைப் பற்றி அவர் முன்னமேயே கூறி இருந்ததை மெய் என்று நிரூபித்தது.

 

 

   இப்போது அவர் தன் கைப்பட, ‘வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று எழுதிய அறிவுரைகளை ஏலம் போட்டதில் அது 18 லட்சம் டாலருக்கு விற்பனை ஆகி இருக்கிறது. (ஒரு டாலரின் இன்றைய மதிப்பு ரூபாய் 65)

 

ஜப்பானில் 1922இல் அவர் ஒரு சொற்பொழிவை ஆற்றச் சென்றிருந்தார். நோபல் பரிசு பெற்ற அவரது சொற்பொழிவு நான்கு  மணி நேரம் நடந்தது. 2500 பேர் அதைக் கேட்டனர். அங்கு தங்கி இருந்த போது ஒரு டெலிவரி பாய் அவரிடம் ஒரு செய்தியைக் கொடுக்கச் சென்ற போது அவனுக்கு டிப்ஸ் கொடுக்க அவர் விரும்பினார். ஆனால் போதுமான சில்லறை இல்லை. ஆகவே தன் கைப்பட அவர் குறிப்புகளை எழுதினார். அது தான் இன்று உலக பிரசித்தி பெற்ற ‘சந்தோஷக் குறிப்புகள் ஆகி விட்டன. ஒரு குறிப்பு ஹோட்டல் பேப்பரிலும் இன்னொரு குறிப்பு ஒரு துண்டுச் சீட்டிலும் எழுதப்பட்டன.

 ‘இதற்கு என்றேனும் ஒரு நாள் கொஞ்சம் மதிப்பு கிடைக்கும் என்று கூறியவாறே அவற்றை டெலிவரி பாயிடம் அவர் கொடுத்தார்.

 

அதில் ஒரு குறிப்பு இது: எப்போதும் அமைதியற்று வெற்றியை அடைய விழைவதை விட அமைதியான எளிய வாழ்க்கை சந்தோஷத்தைத் தரும் ( “A calm and modest life brings more happiness than the pursuit of success combined with constant restlessness.”)

இன்னொரு குறிப்பு இது : மனம் இருந்தால் மார்க்கம் உண்டு   ( “Where there is a will, there is a way.”)

 

ஐன்ஸ்டீன் ஆரூடம் கூறியது போலவே அவற்றின் மதிப்பு இன்று பதினோருகோடியே எழுபது லட்சம் ரூபாய் ஆகி விட்டிருக்கிறது.

பெரியோர் வாக்கு பொய்க்காது!

***