அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “ அங் ” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 41
88. திருகோணமலை பத்ரகாளி அம்மன் கோவில்
திருகோணமலை நகருக்குள் அமைந்த மிகப்பழைய கோவில் பத்ரகாளி கோவில். இவள்தான் நகரத்தின் காவல் தேவதை என்பதால் நகர காளி என்ற பெயரும் உண்டு. மூலஸ்தானத்தில் கம்பீரமாககே காட்சி தரும் காளிதேவி ,கோவிலுக்கு வரும் பக்தர் மீது அருள் மழை பொழிந்த வண்ணம் உள்ளாள்.
இலங்கைத் தமிழர்கள் தீபாவளி வரை அனுஷ்டிக்கும் கேதார கெளரி நோன்பும் விரதமும் எல்லோரும் அறிந்ததே புரட்டாசி மாத விஜய தசமியில் துவங்கும் இந்த விரதம், ஐப்பசி அமாவாசை வரை நீடிக்கும். இதற்கான பூஜைகளைச் செய்து, நோன்புக் கயிற்றையும் பூஜை சாதனங்களையும் அளிப்பது இந்த பத்ர காளி கோவிலின் சிறப்பு வைபவம் ஆகும் . ஏராளமான பெண்கள் இதற்காக இங்கே வருவார்கள் .
கோவிலின் வரலாறு சோழர் காலத்திலிருந்து துவங்குகிறது ; குளக்கோட்ட மன்னன் காலம் முதல் ஆதாரங்கள் கிடைக்கின்றன. பழங்காலத்தில் கோவில் இருந்த இடத்தில் 1933-ல் கோவில் கட்டப்பட்டு 1947-ல் விரிவாக்கப்பட் து. மஹா மண்டபம் , கோபுரம் முதலியன கட்டப்பட்டன; கிழக்கு நோக்கிய வாசல், மணிக்கூண்டு கோபுரம் முதலியனவும் கலை வேலைப்பாடு மிக்க தூண்களும் அமைந்தன.
பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், பைரவர், நாக தம்பிரான் சந்நிதிகள் இருக்கின்றன. மார்ச் மாதம் நடக்கும் 10 நாள் உற்சவம் தேர்த் திருவிழாவுடன் நிறைவடைகிறது
கேதார கெளரி விரதம் துவங்கும் முன் வரும் 9 நாட்களிலும், நவராத்திரி விழா மிக விமரிசையாகக் கொண்டாடபடுகிறது . 21 நாள் விரதம் முடிந்தவுடன் பெண்கள் மீண்டும் கோவிலுக்கு வந்து நோன்பினை முடிக்கிறார்கள்.
இந்தக்கோவிலில் 1980ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது ; 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி.
xxxx
விக்கிபீடியா தரும் கூடுதல் தகவல் இதோ:
இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.
வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றது. இந்த ஒழுங்கு பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலை நகரம் சக்தி வழிபாட்டு பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காணலாம்.
XXXX
89.நல்லூர் வீர மகாகாளி அம்மன் கோவில்
நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் , யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில்,சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது . நல்லூர் வட்டாரத்தில் இரவு முழுதும் நடக்கும் தண்டிகை பவனி, பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பெறும். மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய பின்னர், அவருக்கு மண்டகப்படி தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதமும் வழங்கப்படுவது போல காளி உலா வருகையிலும் மண்டகப்படிகள் உண்டு.
யாழ்ப்பாணத்தில் இந்து ஆட்சியை ஏற்படுத்திய முதல் ஆரிய சக்ரவர்த்தி காலிங்க சிங்கை சக்கரவர்த்தி, காலத்தில் நல்லூரின் நான்கு திசைகளிலும் 4 கோவில்களை கட்டினர். அதில் ஒன்று நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில்.
போருக்குச் செல்லும்போதும், பெரிய வீரதீரச் செயல்களில் ஈடுபடும்போதும் காளி தேவியின் அருளை முதலில் பெறுவது சம்பிரதாயம் ஆகும்; போர் வீரர்கள் தங்கள் வாட்களுடன் வந்து மன்னருக்கு வெற்றிவாகை சூட்ட சபதம் செய்வது வழக்கம். இன்றும் தொழில் சம்பந்த மான கருவிகளை தொழில் வினைஞர்கள் கோவிலுக்குக் கொண்டு வந்து ஆசி வேண்டுகின்றனர் .
xxx
சோக வரலாறு
யாழ்ப்பாணத்தின் மன்னனாக சங்கிலி இருந்த 16- ஆம் நூற்றாண்டில் ஒரு சோக நிகழ்ச்சி நடந்ததால் , இந்த இடம் வரலாற்றிலும் இடம்பெற்றுவிட்டது . பரராஜ, செகராஜ என்ற பெயர்களில் மன்னர் பெயர்கள் அடுத்தடுத்து வரும். அவ்வகையில் சங்கிலி, செகராஜசேகரம் என்ற பெயரில் ஆண்ட காலம் அது 1519- 1564 . போர்ச்சுகீசிய படைகள் யாழ்ப்பாணத்தைச் சூறையாடியபோது பறங்கியர்க்கு எதிராக சங்கிலிக்கும் விடிய பண்டாரத்துக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது . அதை உறுதி செய்வதற்கு இரு தரப்பினரும் கோவிலுக்கு முன்னர் கூடியபோது அருகிலுள்ள வெடி மருந்து ஆலை வெடித்ததில் பெரும் குழப்பம் ஏற்பட்டது ; அதில் பண்டாரம் இறந்தார் ; சங்கிலிக்கு மிகவும் வருத்தம் ஏற்படவே பரிகாரமாக , அவருடைய நினைவாக பூதராயர் கோவிலைக் கட்டினார் .. சங்கிலிக்கு போர்ச்சு கீசியருக்கும் இடையே போர் மூண்டபோது நடந்த 11 நாள் முற்றுகை நடந்ததும் இந்த இடத்தில்தான் 1560-ம் ஆண்டுப் போரில் சங்கிலி வெற்றிபெற்றார். ஆயினும் பின்னர் ஒரு சண்டையில் பிடிபட்டார்.
1621ம் ஆண்டில் மதவெறி கொண்ட போர்ச்சுகீசியர் காளி கோவிலைத் தரைமட்டம் ஆக்கினர் . சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமத மறுமலர்ச்சி ஏற்பட்டது. கோவில் அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது . ஜூன் மாத பெளர்ணமியில் நிறைவுபெறும் 25 நாள் உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது
இலங்கை முழுதும் பல ஊர்களில் முத்துமாரி அம்மன் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன . மாரி அம்மன் வழிபாடு எல்லாக் கிராமங்களிலும் நடைபெறுகிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது. கோடையில் வரும் நோய்களிலிருந்து , மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, மாரியை வணங்குவதும் , அவளுடைய வேப்பிலையால் குணம் பெறுவதும் தென் இந்தியாவிலும் உண்டு. நூறு கோவில்களுக்கு மேல் மாரி அம்மன், முத்து மாரி அம்மன், என்ற பெயர்களில் இந்த வகைக் கோவில்கள் காணப்படுகின்றன.
மாத்தளை, வல்வை, அராலி, பண்டாரிகுளம் , சுன்னாகம், அல்வாய் , ஹேரி, பலகொல்ல , சல்லி, சாவகச்சேரி , நாவலபிடிய , கோப்பாய், கொழும்பு கொட்டாஞ்சேனை முதலியன குறிப்பிடத் தக்கவை.
பெரிய நகரங்களில் உள்ள முத்துமாரி அம்மன் கோவில்களை அடுத்தாக காண்போம்
பர்த்ருஹரி இயற்றிய நீதி சதகத்தில் 100 ஸ்லோகங்கள் உண்டு . அவர் யாத்த சிருங்கார சதகம், வைராக்ய சதகத்தில் மேலும் 200 பாடல்கள் இருக்கின்றன. இவைகளை ஸதக த்ரயம் (100X3 ) என்பார்கள்
நீதி சதகத்தில் உள்ள நூறு பாடல்களை தமிழ், ஆங்கிலம், ஸம்ஸ்க்ருதம் , ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் காண்போம் . அத்தோடு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ம. மாணிக்கவாசகம் பிள்ளை (ஆண்டு 1925) என்பவர் இயற்றிய தமிழ்ச் செய்யுள் வடிவிலும் அர்த்தத்தைக் காண்போம் காலஞ் சென்ற Sri P R RAMAMURTHY பி.ஆர். ராமமூர்த்தி இதை தமிழ் ஸ்லோக வடிவிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் கொடுத்துள்ளார். அதையும் அவருக்கு நன்றி சொல்லிப் பகிர்கிறேன் அவர் எல்லா ஸ்லோகங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை.
பர்த்ருஹரியின் கதையை முன்னரே கொடுத்துள்ளேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அவரது மனையாள் அவரை ஏமாற்றி வேறு ஒருவன் மீது காதல் கொண்டதை அறிந்து துறவறம் பூண்டார் என்பதே கதை.
Slokam 1 பாடல் 1
Concerning Morality. (Translated by B Hale Wortham in 1886
नीतिशतकं भर्तृहरिकृत
दिक्कालाद्यनवच्छिन्नानन्तचिन्मात्रमूर्तये ।
स्वानुभूत्येकनामाय नमः शान्ताय तेजसे ॥ १॥
திக்காலாத்யனவச்சின் னாநந்த சின் மாத்ர மூர்த்தயே
ஸ் வானு பூத்யேக நாமாய நமஹ சாந்தாய தேஜஸே -1
1. SALUTATION to the deity who is not definable in time
or space: infinite pure intelligence in incarnate form:
who is peace and glory : whose sole essence is self-know-
ledge.
கால அளவுமங் கருதரிய தேசத்தின்
மூல அளவு முடிவுமின்றி –ஞாலமெங்கும்
ஞானுபவத்தால் நாடுசுயஞ் சோதிமயந்
தானாம் பொருளெமக்குச் சார்பு -1
உரை –
காலத்தினாலோ, வியாபகத் தன்மையாலோ வேரறுக்க முடியாதவனுக்கு வணக்கம் . ஞானமே உருவான எல்லையற்ற தூய அறிவானவன் சாந்தமும் பெருமையும் படைத்தவன் சோதியும் அறிவும் உருவானவன் . அவனுக்கு வந்தனம்
Hindi version is in attached photocopy frm year 1889 book by
Gopinath
Xxxx
Slokam 2
यां चिन्तयामि सततं मयि सा विरक्ता
साप्यन्यमिच्छति जनं स जनोऽन्यसक्तः ।
अस्मत्कृते च परिशुष्यति काचिदन्या
धिक् तां च तं च मदनं च इमां च मां च ॥ २॥
2. That woman is attracted by another man whom I
supposed to be always devoted to me : to her another man
is attached : while a certain other woman takes pleasure
in my doings. Fie on her and on him, on the god of love,
on that woman, and on myself.
நான் யாரை நினைக்கிறேனோ அவள் என்னை நாடவில்லை; அவளோ வேறு ஒருவனின் காதல் வய ப்பட்டாள் .அவனோ வேறு பெண்மணியை காதலிக்கிறான் இது போக, வேறு ஒருத்தி என்னைக் காதலிக்கிறாள் . இதை பார்க்கையில் அவளை , அவனை, மன்மதனை, என்னையே வெறுக்கிறேன் சீ போகட்டும் அவள் இது புலவரின் சுயசரிதம் என்பது உரைகாரகளின் கருத்து
Xxxxx
பர்த்ருஹரி ஸ்லோகம் 2??
இரண்டாவது ஸ்லோகம் வெவ்வேறு பதிப்பில் வேறு மாதிரியாகவுள்ளது
தெரிந்தார் அருவறுத்தார் செல்வஞ் சிறந்தார்
திரிந்தார் அகந்தை செறிந்து — பிரிந்தார் கீழ்
மக்களுக்குக் கேட்கு மதியில்லை ஆகலிநென்
சொற்களடங்கினவே சோர்ந்து -2
Xxxx
Slokam 3
अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥ ३॥
அக்ஞஹ சுகமாராத்ய சுகதரமாராத்யதே விஷேஷக்ஞஹ
ஞானலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி தம் நரம் ந ரஞ்சயதி- 1-3
தெரியாக்கெளிதில் தெரித்தலாம் நன்றாய்
ஒப்பத் தெரிந்தார்க்கும் தெரித்தல் – அரிதன்றால்
அற்பமதியால் அனைத்தும் உணர்ந்தோமென்னும்
அற்பருக்க்கார் சொல்லுவார் அறிவு 1-3
The ignorant one is easily convinced. It is easier to convince a really knowledgeable person. But even the Creator himself will not be able to convince a fool who, with his half-baked knowledge, thinks that he is the wisest person in the world.(P R TRANSLATION)
எனது உரை
அறியாதவனுக்குச் சொல்லிதருவது எளிது;
புத்திசாலிக்கும் விஷயம் தெரிந்தவனுக்கும் கற்பிப்பது மேலும் எளிது;
கொஞ்சம் படித்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல உலவுகிறானே அவனுக்கு பிரம்மாவும் கூட சொல்லித் தரமுடியாது; அவனை திருப்தி செய்யவும் முடியாது. (1-3)
An ancient saying from the Middle East says:
He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him. He who knows not, and knows that he knows not, is simple. Teach him. He who knows, and knows not he knows, is asleep. Wake him. He who knows, and knows that he knows is wise. Follow him.
To be continued…………………………
–subham—
Tags- Niti sataka, Bhartruhari, Part 1, in four languages
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 40
85.வண்ணார் பண்ணை கண்ணத்திட்டி காளி கோவில்
வண்ணை ஸ்ரீ நொச்சியம்பதி பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது
xxxx
கண்ணத்திட்டி காளிதேவி கோவில் 1782-ல் கட்டப்பட்டது சிவன் கோவில் கட்டுவதற்காக வைத்தி லிங்கம் செட்டியார் அழைத்து வைத்த சிற் பிகள் இந்தக் கோவிலைக் கட்டினார்கள் . 1800 ஆம் ஆண்டில் பத்தர் குடும்பத்தினர் கோவிலை விரிவுபடுத்தினார்கள் . விஷ்வ குல பொற்கொல்லர்கள் தொடர்ந்து நிர்வகித்துவந்தனர் சிவன் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது.; சாலையில் எதிரேயுள்ள தாமரைக்குளம் இந்த இடத்துக்கு அழகு சேர்க்கிறது. மூலஸ்தானத்திலிருந்து காளி தேவி அருள்புரிகிறாள் . பரிவார தேவதைகளும் தனி சந்நிதிகளில் இருக்கின்றனர். .
ஒரு நாளைக்கு நான்கு முறை நடக்கும் நித்திய பூஜைகளுடன் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது 21 நாள் கெளரி விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது. 1971ல் கும்பாபிஷேகம் நடந்தது .
xxxxx
86. பிட்டியம்பதி பத்ரகாளி கோவில்
யாழ் நகரில் இருந்து எட்டுமைல் தொலைவிலுள்ள கிராமம் வட்டுக்கோட்டை. இதன் அருகிலுள்ள சங்கரத்தையில் வயல் வெளிகள் சூழ உள்ள ஆலயத்தில் பத்ரகாளி காட்சி தருகிறாள். கோவிலின் வரலாறு சுவையானது 300 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் வயல்களுக்கு இடையே ஒரு பெரிய புளியமரம் பரந்து வளர்ந்து இருந்தது. இந்த மரம் சாகுபடிக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி, நிலைச் சொந்தக்காரர் அதை வெட்டுவதற்குத் தீர்மானித்தார். அருகில் வட்டுக்கோட்டையிலிருந்து இதற்காக ஆட்களை அழைத்தார். அவர்கள், இந்த மரம் பற்றிக் கிராம மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக வெட்ட மறுத்தனர். அவர்களை அனுப்பிய பின்னர் நில உரிமையாளர் தாமே வெட்டலாம் என்று கோடரியைத் தூக்கினார். அப்போது மரத்திலிருந்து பாய்ந்த ஒரு பாம்பு அவரை ஓட ,ஓட விரட்டியது. அன்று இரவு அவரது கனவில் பத்ரகாளி தோன்றி தனக்கு அங்கே கோவில் அமைக்குமாறு ஆணையிட்டாள்; அதைத் தெடர்ந்து அவர் புளிய மரத்தின் அருகில் ஒரு கொட்டகை அமைத்து காளிதேவி வழிபாட்ட்டைத் துவங்கினார். கோவிலும் படிப்படியாக வளர்ந்து பெரிதானது . அருகிலேயே படிகளுடன் கூடிய கேணி அமைக்கப்பட்டது . விநாயகர், பைரவ மூர்த்தி சந்நிதிகள் கட்டப்பட்டன அருகிலுள்ள புளிய மரத்தையும் சங்கரத்தை மக்கள் வண ங்குகின்றனர்.
. இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் காளி தேவியுடன் வீரபத்ர மூர்த்தியும் இருப்பதாகும் உள்ளூர் மக்கள் உதவியுடன் ராஜநாயகம், வைரவநாதர் ஆகியோர் முன்னின்ன்று கோவிலை வளர்த்தனர்.
பத்ரகாளி சமேதராக வீரபத்ரர் வணங்கப்படுதற்குப்பின்னால் , ஒரு கதை உள்ளது. புராண காலத்தில் தக்கன் என்பவன் அதிகார ஆணவத்தால் தலைவிரித்தா டிய போது அவனது கொட்டத்தை அடக்க சிவபெருமான் வீர பத்திரரையும் , பார்வதி தேவி பத்ரகாளியையும் படைத்தார்கள் . அத்துடன் தக்கன் ஆட்டம் அடங்கியது
இங்கு மார்ச் மாதம் அறுவடை முடிந்தவுடன் கோவில் விழா நடைபெறுகிறது. ஆனி உத்தரம், பங்குனி உத்தரத்தை ஒட்டி இரண்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
xxxx
87.வீர மாகாளி அம்மன் கோவில்; சரசாலை
யாழ்ப்பாண சாவாகச்சேரியிலிருந்து சில மைல்களில் சரசாலை உள்ளது. இங்கு வீர மாகாளி அம்மன் கோவில் இருக்கிறது சில நூற்றாண்டு களுக்கு முன்னால் கதிவேலவர் என்பவர் தமிழ்நாட்டிலுள்ள தலங்களுக்கு யாத்திரை சென்றார்.. தில்லையில் காளி அமான் கோவில் மிகவும் பிரசித்தமானது. சிதம்பரத்திலிருந்து திரும்பிவருகையில் காளி தேவி சிலை ஒன்றி னை கொண்டு வந்து நாவல் மரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். தில்லை காளி அம்மனைச் சுற்றி கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கர்ப்பக்கிரகத்தில் பெரிய காளி விக்கிரகம் இருக்கிறது பிரகாரத்தில் பழைய தில்லை காளியை வைத்தனர்.
Xxxx
செல்வச் சந்நிதி- கதிர்காம பாத யாத்திரை
தமிழ்நாட்டில் பழனி, ஆந்திரத்தில் திருப்பதி முதலிய தலங்களுக்கு பக்தர்கள் வண்டி வாகனம் ஏதுமில்லாமல் பாத யாத்திரை செய்து ஆண்டவனை வணங்குவதை இன்றும் காண்கிறோம். இது போல இலங்கையில் பிரசித்தமானது கதிர்காம யாத்திரை. இப்போதும் பக்தர்கள் நடந்தே கதிர்காம யாத்திரையை மேற்கொள்கின்றனர் யாழ்ப்பாணத்துக்கு வடக்கில் 20 மைல் தொலைவில் செல்வச் சந்நிதி முருகன் கோவில் இருக்கிறது அங்கிருந்து ஆண்டுதோறும் புறப்படும் பாதயாத்திரை பற்றிய செய்தி இதோ
May 6 , 2023
வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காம ஆடிப் பெருவிழாவுக்கு யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் பாத யாத்திரை சனிக்கிழமை புறப்பட்டது .பாத யாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் இந்த யாத்திரை நடைபெறுகிறது செல்வச் சந்நிதி ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து, மோகன் சுவாமியால் கதிர்காம பாத யாத்திரைக் குழுத் தலைவரிடம் வேலாயுதம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களிலும் உள்ள 98 ஆலயங்களைத் தரிசித்து, 46 நாட்களில் 815 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, கதிர்காம ஆலயத்துக்கு இந்த பாத யாத்திரை சென்றடையும்.
இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக இது கருதப்படுகிறது. :-
அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “ பரு ” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 39
79.உடுவில் மீனாட்சி அம்மன் கோவில்
யாழ்ப்பாண நகருக்கு வடக்கில் ஆறு மைல் தொலைவில் மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வயல்வெளியில் ஒரு புனிதக் கல் கண்டுபிடிக்கப்பட்டது அது கண்ணகி சிலையும் சிலம்பு அடங்கிய சந்தனப் பேழையும் ஊர்வலமாகச் சென்ற வழியில் இருந்ததால் கண்ணகை அம்மன் என்று மக்கள் வழி படத் துவங்கினர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரங்கநாத அய்யர் என்பவர் இந்தியாவிலிருந்து மீனாட்சி விக்கிரகத்தை அங்கே பிரதிஷ்டை செய்து முறையான வழிபாட்டினைத் துவக்கி வைத்தார். இப்போது பக்தர் கூட்டம் பெருகி, பெரிய அளவில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலின் புகழ் பரவவே, இலங்கை யிலும் கடந்த 300 ஆண்டுகளில் பல இடங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்கள் தோன்றியுள்ளன. தனியாகக் கோவில் இல்லாத இடங்களிலும் மீனாட்சி பக்தர்கள் சந்நிதிகளை அமைத்துள்ளனர். சுமார் 300 ஆண்டு வரலாறு உடையது உடுவில் மீனாட்சி அம்மன் கோவில்..
XXXX
இலங்கையில் மேலும் பல மீனாட்சி அம்மன் கோவில்கள்
80.மடத்தடி மீனாட்சி அம்மன் கோவில்
காரைதீவு, மாட்டுப்பளை, மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் மதுரையைப் போலவே சித்திரா பெளர்ணமி காலத்தில் விழா நடத்தப்பட்டுகிறது .
வரலாற்றுப் பிரசித்திபெற்ற அருள்மிகு மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழா 2022 ஏப்ரல் மாதம் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலிருந்து பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
xxxx
81.ஊரெழு மீனாட்சி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரெழு எனும் இடத்தில் அமைந்துள்ளது.
xxxx
82. கந்தரோடைக்கு அணித்தே மாகியப்பட்டி கண்ணகை அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மனும் கண்ணகியும் வழிபடப்படுகின்றனர்
அது முதற்கொண்டு கண்ணகி சிலை சென்ற வழியெல்லாம் கண்ணகை அம்மன் கோவில்கள் தோன்றின. மதுரை நகரினை ஒரு முலையால் கண்ணகி எரித்த செய்தி உலகறிந்தது. ஆகையால் அவளை மதுரை மீனாட்சி அம்மன் போலவே மக்கள் கருதினர். இதனால் பல இடங்களில் மீனாட்சியுடன் சேர்த்தே கண்ணகி வழிபடப்பட்டாள் ; காலப் போக்கில் கண்ணகையை ராஜ ராஜேஸ்வரி முதலிய தேவிகளாகவும் வழிபட்டு அந்த விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்ததை இலங்கைக் கோவில்களின் வரலாற்றை ஊன்றிப் படிப்போர் அறிவர்.
Xxxxx
Pungudu Tivu Raja Rajeswari Temple
இலங்கையில் துர்க்கை அம்மன் வழிபாடு
தெல்லிப்பளை துர்கா கோவில் பற்றி கோவில் எண் 63-ல் எழுதியுள்ளேன்
யாழ்ப்பாண நகரிலிருந்து காங் கேசன் துறை நோக்கிச் செல்லும் சாலையில் எட்டாவது மைலில் தெல்லிப்பளை துர்கா கோவில் அமைந்துள்ளது. ஏனைய சில துர்க்கை அம்மன் கோவில்களையும் தரிசிப்போம்
83. மிருசுவில் துர்க்கை அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசத்திலமைந்த மிருசுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.
84.திருகோணமலை துர்க்கை அம்மன்
திருகோணமலை, உவர்மலை துர்க்கை அம்மன் ஆலய த்திலும் ஆண்டுதோறும் பெரிய அளவில் உற்சவம் நடக்கிறது ஆலய நவதள இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பூஜைகள் 2022 மார்ச் மாதம் நடந்தது.
மேலே குறிப்பிட்ட கோவில்களுக்கு நேரில் செல்ல இயலாதவர்கள் யூ ட்யூப் YOU TUBE வாயிலாக உற்சவ நிகழ்ச்சிகளைக் காணலாம்.
–SUBHAM–
Tags – துர்க்கை அம்மன், கோவில், கண்ணகை அம்மன், மீனாட்சி அம்மன்