பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3 (Post No. 3497)

Written by S NAGARAJAN

 

Date: 30  December 2016

 

Time uploaded in London:-  10-25 AM

 

Post No.3497

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 17

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் மூன்றாம்  பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்.

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3

 

                      ச.நாகராஜன்

 

பரிபாடல்

 

 

பரிபாடலின் மூன்றாம் பாடல் 94 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார். பரிபாடலில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. இரண்டு பாடல்கள் திருமாலை வாழ்த்துவதாகவும் ஒரு பாடல் செவ்வேளை வாழ்த்துவதாகவும் அமைந்துள்ளன. மூன்றாம் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்டன் நாகனார். அழகுற அமைந்துள்ள இந்தப் பாடலில் பல பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. அத்துடன் திருமாலின் பெருமையையும் அறியலாம்.

 

 

இந்தப் பாடல் திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள், முனிவரும் தேவரும், பாடும் வகை, வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும், வனப்பும் வலியும், சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள், நூல் வகை, யுக்ங்களிலும் ஆராயப்படும் சிறப்பு, நால் வகை வியூகம், பல திறப் பெயரியல்புகள் ஆகிய தலைப்புகளில் பிரிக்கப்பட்டு பொருளுரை வழங்கப்படுகிறது.

மா அயோயே! மா அயோயே!

மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி

மணி திகழ் உருபின் மா அயோயே!

தீ வளி, விசும்பு நிலன் நீர் ஐந்தும்,

ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்

திதியைன் சிறாரும் விதியின் மக்களும்

மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்

தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,

மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்   10

மாயா வாய்மொழி உரைதர வலத்து

‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும்,

நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை

;ஏஎர்,வ்யங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை,

பயந்தோள் இடுக்கண்  களைந்த புள்ளின்

நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்

சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்

கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை        20

தீ செங் கனலியும் கூற்றமும், ஞமனும்,

மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூவும்

ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு

கேழலாய் மருப்பின் உழுதோய்; எனவும்,

‘மா விசும்பு ஒழுகு புனல் வறள, அன்னச்

சேவலாய் சிறகாப் புலர்த்தியோய்’ எனவும்

ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து

நூல் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்

பாடும் வகையே எம் பாடல்தாம் அப்

பாடுவார் பாடும் வகை                   30

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்

எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின், கை;

நகை அச்சாக நல் அமிர்து கலந்த

நடுவுநிலை திறம்பிய் நயம் இல்  ஒரு கை

இரு கை மாஅல்!

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!

ஐங் கைம்  மைந்த! அறு கை நெடு வேள்!

எழு கையாள! எண் கை ஏந்தல்!

ஒன்பதிற்றுத் தடக் கை  மன் பேராள!

பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!   40

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!

பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!

நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!

அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்

இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!

நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணாதியோ,

முன்னை மரபின் முதுமொழி முதல்வ?

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,

வலியினும், மனத்தினும், உணர்வினும் எல்லாம்

வனப்பு வரம்பு அறியா மரபினோயே!                50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர்,

பிறை வளர், நிறை மதி உண்டி,

அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ:

திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து அகன்று ஓடி,

நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்

ந்ன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;

அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்

வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?”

ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட

சேவல் ஊர்தியும். ‘செங் கண்  மாஅல்!             60

ஓ! ‘எனக் கிளக்கும் கால முதல்வனை;

ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம்

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;            70

முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

பறவாப் பூவைப் பூவினோயெ!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமு

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,

நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை           80

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!

பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!

இட வல! குட வல்! கோவல! காவல!

காணா மரப! நீயா நினைவ!

மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!

தொல் இயல் புலவ! நல் யாழிப் பாண!

மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!

பொலம் புரி ஆடை! வலம்புரி வண்னை!

பருதி வலவ! பொரு திறல் மல்ல!

திருவின் கணவ! பெரு விறல் மள்ள!                 90

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து

நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனொரு மலர்ந்த

தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே!

 

 

 

அருமையான இந்தப் பாடலின் சிறப்பைச் சொல்லி மாளாது. படிக்கப் படிக்கத் தமிழ் இன்பம்; சொல்லச் சொல்ல சொல் இன்பம். நினைக்க நினைக்க பொருள் இன்பம் ஊறும்.

அமுதூறும் சொற்களில் மனம் ஆழ்ந்து பதிய பல முறை படித்த பின்னரே மனம் இதன் சிறப்பை உணரும். அப்படி ஒரு அழகிய பாடல்.

 

 

இதில் ஹிந்து மத தத்துவங்கள் ஏராளம் சொல்லப் படுகின்றன.

அதை ஆய்வது தனிப் பெரும் கட்டுரையாக அமையும்

நம் ஆய்வுக்கான பொருளான அந்தணரும் வேதமும் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்தப் பாடலில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அந்தணரும் வேதமும் பல்வேறு விதங்களில் புகழப்படுவதைப் பார்க்க முடியும்.

அவையாவன:

 

1)‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும் (வரிகள் 12,13)

இங்கு வாய் மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது

 

2) நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை (வரி 14)

இந்த வரியில் அந்தணரும் அவர் ஓதும் அரு மறையும் குறிப்பிடப்படுகிறது.

 

3) பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! (வரி 42)

இந்த வரியில் வேதம் முதுமொழி என்று குறிப்பிடப்படுகிறது. திருமால் முதுமொழி முதல்வன் என விளிக்கப்படுகிறான்.

 

4 & 5) முன்னை மரபின் முதுமொழி முதல்வ?

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், (வரிகள் 47,48) இங்கு முதுமொழி என்றும் கேள்வி என்றும் வேதம் கூறப்படுகிறது.

 

6) ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம் (வரி 62)

இங்கு ஏஎ என்று சாம வேதத்தின் இசை இனிமை கூறப்படுகிறது.

 

7) வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ; (வரி 66)

இங்கு வேதம் குறிப்பிடப்பட்டு வேதத்து மறை நீ என திருமால் போற்றப்படுகிறார்.

 

8) வாய்மொழி மகனொரு மலர்ந்த

தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே! (வரிகள் 93,94)

இங்கு வாய்மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது.

ஆக இப்படி எட்டு இடங்களில் அந்தணரும், வேதமும் குறிப்பிடப்ப்டுவதைக் காண்பதோடு மட்டுமின்றி ஹிந்து தத்துவங்கள் பல அழகுற அடுக்கப்படுவதையும் காண்கிறோம்.

 

 

இந்த ஒரு பாடல் மட்டுமே விரித்து உரைக்கப்பட்டால் சங்க காலத்தில் வேரூன்றி இருந்த ஹிந்து மதத்தின் ஆணி வேர் கொள்கைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை அறியலாம்.

 

 

அத்தோடு இந்தத் தொன்ம நம்பிக்கைகள் பாரத நாடு முழுவதற்கும் பொதுவான ஒன்றாக இருந்ததும் தெரிய வருகிறது

 

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;            70

முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

 

 

என்று இந்த வரிகளில் சாம வேதத்தின் திரண்ட பொருள் கூறப்படுவதை வியப்புடன் பார்க்க முடிகிறது

இதைப் பாடிய புலவர் இளவெயினனார் அந்தணராக இருந்தால் சாம வேதத்தில் விற்பன்னராக அவர் இருந்ததோடு, அதை முறைப்படியும் இசைப்படியும் ஓதிய உத்தமர் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

 

அவர் அந்தணர் இல்லை என்றால் அந்தணர் இல்லாத ஒருவரும் கூட வேதத்தின் உட்பொருளை அறிய முடியும், அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்பதை பாடலிலிருந்து அறியலாம்.

 

 

சங்க காலத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லை என்பது தெளிவாகிறது.

 

ஒன்று பட்ட ஒரு ஹிந்து சமுதாயத்தையே சங்க இலக்கியத்தில் நாம் காண முடிகிறது.

 

 

**********

நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை!! (Post No.3496)

கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)

Written by London swaminathan

 

Date: 30 December 2016

 

Time uploaded in London:-  10-09 am

 

Post No.3496

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

நாரதர் என்றாலேயே கலகம்தானே! கலகம் ஏற்பட்டால்தான் தீர்வு பிறக்கும் என்பது இவரால்தான் வந்ததோ? ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து முருகனுக்கும் , கணபதிக்கும் இடையில் போட்டி வைத்து பழனி தலத்தை உருவாக்கினார். ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே பிணக்கு ஏற்படுத்தி துளசியின் மஹிமையை உலகுக்கு உணர்த்தினார். இந்தக் கதையில் பாரிஜாத பெருமையை உலகுக்குக் காட்டுகிறார்.

 

நாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.

 

அவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .

 

நாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் கண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார். சத்ய பாமாவுக்கு ஒரே பயம். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ என்று அன்பாக விசாரித்தார்.

நாரதர் சொன்னார்::

ஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம்:

கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)

சத்யபாமா சொன்னார்:

அப்படியா சேதி? இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.

நாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார்.

சத்யபாமா ஓடிப்போய் கோப க்ருஹத்தில் படுத்துக் கொண்டு கதவைச் சாத்திக் கொண்டாள். அந்தக் காலத்தில் அரசர்கள் பல மனைவியரை மணந்ததால் கோபக்காரர் அறை அல்லது வீடு ஒன்று வைத்திருப்பர். எந்த மஹாராணிக்கு மனத்தாங்கல் ஏற்படுகிறதோ அவர் அங்கு போய் அமர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். மன்னர்களும் யாராவது ஒரு மனைவியரைக் காணவில்லை என்றாலும் முதலில் அஙுங்குதான் போய்ப் பார்ப்பார்.

சத்யபாமாவைத் தேடிக்கொண்டு கண்ணனும் அங்கே வந்தார்; கோபத்துக்கான காரணத்தை அறிந்தார்.

தேனே! மானே! கல்கண்டே! கரும்பே! இதற்கா கோபம்? நீ சொன்ன படி மரத்தை வேரோடு பெயர்த்தெடுத்து வருகிறேன். ஐந்து நிமிடம் பொறு என்று புறப்பட்டார்.

 

இதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.

 

கிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார்.

பவள மல்லிகை

கண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. எனக்கும் பல மனைவியர்; பல சண்டைகள்; உன் பிரச்சனை புரிகிறது. நீ இருக்கும்வரை இது பூவுலகில் இருக்கட்டும் என்றவுடன் கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.

 

கண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.

 

இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் கிட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள  மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.

 

–சுபம்–

 

THE STORY OF PARIJATA TREE (Post No.3495)

Wikipedia Picture of Parijata at Kittoor in Uttar Pradesh

Compiled by London swaminathan

 

Date: 29 December 2016

 

Time uploaded in London:-  17-37

 

Post No.3495

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

This mythical (Parijata) tree rose of the milk ocean and Indra planted it in his garden. “Its bark was gold, and it was embellished with young sprouting leaves of a copper colour, and fruit stalks bearing numerous clusters of fragrant fruits.”

 

It is related that once Narada brought a flower of this tree to Dwaraka and presented it to his friend Krishna. He waited to see to to which of his wives Krishna gave the flower. The flower was given to Rukmini, and Narada went straight to Satyabhama and made a show of sorrow. On her enquiring why he was not in good cheer, the sage told Satyabhama, that he had presented Krishna with a flower of the Parijata tree thinking that she was her favourite wife and he would present it to her, but was grieved to find that Krishna had given it to Rukmini.

 

Satyabhama’s jealousy was roused and she asked Narada what could be done to spite Rukmini. The sage advised her to ask Krishna to bring the Parijata tree itself from heaven and plant it near her house. After giving this advice, he went back to the celestial region and told Indra to guard the Parijata tree carefully as thieves were about.

 

Satyabhama repaired to the anger-chamber, (ancient Hindu kings who had more than one wife had room or house, called anger-chamber, set apart for a dissatisfied queen to occupy and demand redress of her grievances) and when Krishna came to her shereviled him for cheating her.

“You pretend that I am your favourite wife, but treat me as Rukmini’s handmaid she said, and asked him what made him present the Parijata flower to Rukmini. Krishna admitted his guilt and asked her what he could do in expiation. She wanted possession of the tree. Krishna immediately proceeded to Amaravati, Capital City of Indra’s Empire. Krishna stole into Indra’s grove and started uprooting the tree. The king of the gods came upon the scene and caught the thief red-handed but seeing who his despoiler was, he allowed him, after some show of resentment, to take the tree to Dwaraka, Capital city of Krishna’s empire.

 

It is fabled that, after Krishna’s death, Dwaraka was submerged in the ocean and the Parijata tree was taken back to heaven.

 

Source: EPICs, MYTHS AND LEGENDS OF INDIA by P Thomas

Coral Jasmine is also called Parijata

 

Botanical Information: Two different plants are known as Parijata one is Coral Jasmine (Pavala Mallikai in Tamil) and another is Baobob Tree in Uttar Pradesh; See the picture taken from Wikipedia)

 

–Subham–

 

 

 

துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி! (Post No.3494)

a82d8-tulsi

Written by London swaminathan

 

Date: 29 December 2016

 

Time uploaded in London:-  8-58 am

 

Post No.3494

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதற்கு மேலும் ஒரு கதை!

ருக்மணி, சத்யபாமா ஆகிய இருவரும் கிருஷ்ண பரமாத்மாவின் மனைவியர். லெட்சுமியின் மறு அவதாரம் ருக்மணி ஆவார். ஒரு நாள், கலக மன்னன் நாரதர், சத்யபாமாவைப் பார்க்க வந்தார். அவருக்கு ருக்மணி விஷயத்தில் கொஞ்சம் பொறாமை உண்டு. ஆகவே இனி வரும் பிறவிகளிலும் கிருஷ்ணன் தனக்கு கணவனாக வேண்டும் என்றும் அதற்கு வழி என்ன என்றும் கேட்டார்.

 

நாரதர் வந்த வாய்ப்பை நழுவ விடுவாரா? அவர் சொன்னார்: பிராமணர்களுக்கு தானம் கொடுத்தால் அது இனி வரும் ஜன்மங்களில் பன்மடங்காகக் கொடுத்தவருக்கே திரும்பிவரும் என்ற நம்பிகை உள்ளது. ஆகவே கிருஷ்ணனை எனக்கு தானம் கொடுத்துவிடு. நீ எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் உனக்கே கிடைத்து விடுவார்.

 

சத்யபாமா சொன்னாள்: அப்படியே ஆகட்டும், ஸ்வாமி! உங்களுக்கே கொடுத்துவிட்டேன்.

f156a-tulasi2bbig

கிருஷ்ணரும் நாரதருடன் புறப்பட்டார். நாரதருக்கு எடுபிடி வேலை செய்யும் ஆளாக கிருஷ்ணன் இருந்தார். நாரதரின் வீணையைச் சுமக்கும் வேலை, மூன்று உலகங்களுக்கும் அவர் பின்னால் ஓடும் பையனாக இருந்தார்.

 

தேவலோகம், வைகுண்டம், கைலாசம், குபேரனின் அளகாபுரி, இந்திரனின் அமராவதி, பிரம்ம லோகம் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. கண்ணன் மீது தீராக்காதல் கொண்ட ஏனைய பெண்களும் மனைவியரும், அவரை உடனே திருப்பித் தரவேண்டும் என்று நாரதரிடம் முறையிட்டனர். அவர்கள் அனைவரும் சத்யபாமாவிடம் சென்று அனல் பறக்கப் பேசினர். அப்பொழுதுதான் தெரிந்தது அவர் செய்தது தவறு என்று. உடனே அவரும் நாரதரிடம் ஐயா, என் கணவரை உடனே திருப்பி அனுப்பவும் என்று செய்தி அனுப்பினாள்.

 

 

நாரதர் சொன்னார்:- பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த எந்தப் பொருளையும் திரும்பி வாங்குவது தவறு. வேண்டுமானால் உங்களுக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. கிருஷ்ணனின் எடைக்குத் தக்க அளவு தங்கக் கட்டிகள் தரவேண்டு மென்றார்.

 

உடனே கிருஷ்ணனை தராசின் ஒரு தட்டில் உட்காரவைத்து, அங்குள்ள பெண்கள் அனைவரும் தங்களுடைய நகைகளை தராசின் அடுத்த தட்டில் வைத்தனர். இப்படியாக துலாபாரம் ஆரம்பமானது. கிருஷ்ணனின் எடைக்குப் பக்கத்தில்கூட வரவில்லை அவர்களுடைய நகைகளின் எடை! மேலும் மேலும் தங்க கட்டிகளைச் சேர்த்தும் பலனில்லை.

f1832-tulasi-lady

உடனே அவர்கள் எல்லோரும் ருக்மணிக்குச் செய்தி அனுப்பினர். அவள் விரைந்தோடி வந்து எல்லோர் நகைகளையும் எடுங்கள் என்று உத்தரவிட்டாள். தான் கொண்டுவந்த ஒரே ஒரு துளசி இலையை அந்தத் தராசுத் தட்டில் வைத்தார். கிருஷ்ணன் உட்கார்ந்த தட்டும் மிகவும் லேசாகி மேலே எழும்பியது. எல்லோரும் துளசியின் மகிமையை அறிந்தனர். நாரதரும் சிரித்துக் கொண்டே யாருக்கும் தெரியாமல் நழுவிவிட்டார்.

 

இந்துக்கள் எல்லோர் வீட்டிலும், குறிப்பாக வைணவர்கள் வீடுகளில், துளசி மாடமிருக்கும். அதைத் தினமும் வழிபடுவதும், கோலமிட்டுப் பூஜை செய்வதும் வழக்கம்.

 

வடநாட்டில் கார்த்திகை மாத (அக்டோபர்-நவம்பர்) ஏகாதசி நாளில் துளசி கல்யாணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. துளசி-விஷ்ணு கல்யாணம் முடிந்தவுடன் கல்யாண சீசன் ஆரம்பமாகிவிடும். துளசி கல்யாணம் செய்தால் கன்யா தான புண்யம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கன்யாதானம் என்பது ஒருவருடைய பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாகும். இதையும் இந்துக்கள் புனித காரியமாகவே கருதுவர்!

துளசி கல்யாண வைபோகமே!

-Subham-

 

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2 (Post No.3493)

Written by S NAGARAJAN

 

Date: 28  December 2016

 

Time uploaded in London:-  5-58 AM

 

Post No.3493

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 17

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 

14) பௌராணிகர்கள் – சி.சுப்பிரமணிய பாரதி (1909) புதுச்சேரியிலிருந்து வெளியான இந்தியாவில் வெளியான உபதலையங்கம் இது. 25-8-1909 தேதியிட்டது

 

15) விநோதச் செய்திகள் – சக்தி தாஸன் (பாரதியார்)

  கதாரத்னாகரம் மாதப் பத்திரிகை சென்னை, தொகுதி 3, பகுதி 5   1920, அக்டோபர் பக்கம் 209-214

 

16) ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயரின் உபதேசங்கள் – சக்திதாஸன் (பாரதியார்) எழுதுகிறார்

சுதேசமித்திரன் 25-4-1916

இந்தக் கட்டுரையை ‘காலஞ்சென்ற ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய ஐயருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன்’ என்று ஆரம்பிக்கிறார் பாரதியார்.

பின்னர் அவர் உள்ளத்தில் இருந்த ‘மூல தர்மங்கள்’ ஆறினை விளக்குகிறார்.

 

17) ஞாபகச் சின்னம் சக்திதாஸன் (பாரதியார்) எழுதுகிறார்.

சுதேசமித்திரன் 25-4-1916 இதழில் பாரதியார் சுப்பிரமணிய ஐயரின் நினைவைப் போற்றும் வகையில் செய்ய வேண்டியவற்றை விளக்குகிறார்.

 

18) சென்னைச் சிம்மம் – சி.சுப்பிரமணிய பாரதி – இந்தியா 27-4-1907 இதழ்

இதில் பாரதியார் கேட்கும் கேள்வி இது: சென்னைச் சிம்மம் கனம் ஜி;சுப்பிரமணிய அய்யரவர்கள் மாத்திரம் உழைக்க மற்றவர்கள் தூங்குவது என்ன தேசபக்தி!

 

19) ஒரு வகையில் பரம  குரு

வ.ரா நடத்திய காந்தி என்ற பத்திரிகையில் 25-11-1933 தேதியிட்ட இதழில் 618-619 ஆம் பக்கங்களில் வெளியான கட்டுரை இது.

கட்டுரையின் ஆரம்ப பகுதியை இங்கே பார்க்கலாம்:

1904ஆம் ஆண்டில் சென்னைக்கு வ்ந்த சுப்பிரமணிய பாரதியார், ‘சுதேசமித்திரன்’  பத்திரிகையில் உதவி ஆசிரியராக அமர்ந்தார். கஜானாவைப் பார்த்துப் பெற்று விட்டதாக எண்ண வேண்டாம். சம்பளம் ரொம்பக் குறைவு. வேலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

  “பாரதி, நீ அருமையான தமிழ் எழுதுகிறாய்.  உனக்கு அட்சர லட்சம் கொடுக்கலாம். நீ காளிதாஸன் தான். ஆனால் நான் போஜராஜனில்லையே. உனக்குத் தகுந்த சன்மானம் செய்ய, என்னிடம் பணமில்லையே’ என்று சுப்பிரமணிய அய்யர் பாரதியாரிடம் சொல்லுவாராம்.

   நயமாய் என்னை ஏய்த்து வேலை வாங்குகிறதில் அய்யர் (சுப்பிரமணிய அய்யர்) ரொம்ப ‘கொம்பன்’ என்றாலும், பத்திரிகைத் தொழிலில் எனக்குப் பழக்கமும் தேர்ச்சியும் வரும்படி செய்தது அவர் தான். அவரை ‘நான், ஒரு வகையில் பரம குருவாக மதிக்கிறேன்’ என்பார் பாரதியார்.

 

20) சுய ஆட்சி – ஒரு யோசனை  – பாரதியார் புதுச்சேரி அதலம் வைகாசி 7 என்ற தேதியிட்டு சுதேசமித்திரனுக்கு எழுதிய கடிதம் – சுதேசமித்திரன் நள வைகாசி 12ஆம் தேதி பிரசுரிக்கப்பட்டது. 25-5-1916

 

21) மது என்ற கவிதை நித்திய தீரர் என்ற நமது நேயர் இயற்றியது

நித்தியதீரர் என்ற புனைபெயரில் பாரதியார் இக்கவிதைகளை எழுதியிருக்கக் கூடும் என்ற குறிப்பு காணப்படுகிறது.

கவிதையின் முதல் வரி : “பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று”

ஞான பாநு பத்திரிகையில் 1913 ஆகஸ்ட் மாதம் வெளியானது பக்கம் 112-114

 

22) பாரத நாட்டின் நவீன உணர்ச்சி – சி.சுப்பிரமணிய பாரதி (1909) இந்தியா, புதுச்சேரி , உப தலையங்கம் 21-9-1909

இந்தக் கட்டுரையில் அரவிந்தரைப் பற்றி  பாரதியார் குறிப்பிடுகிறார்.

நவசக்தியை யடக்க ஒருவராலும் முடியாது ஏனென்றால் அது கடவுளின் திவ்ய ரூபத்தின் ஓர் அம்சம். தெய்வம் மனுஷ ரூபேண என்றபடி அந்த அம்சம் ஒவ்வொரு பாரத புத்திரனின் மனதிலும் தேஜோமயமாய் விளங்குகிறது. இதைப் பெரும்பாலோர் உணரவில்லை.

சமீபத்தில் இதை உணர்ந்த ஸ்ரீ அரவிந்தர் என்னும் தேசபக்தர் அநியாயமாய் ஒரு வருஷ காலம் சிறைப்படுத்தப் பட்டிருந்தார் பிறகு குற்றவாளியல்லவென்று விடுதலை அடைந்தார்.வெளி வந்ததும் தான் தமது தேசத்திற்குத் தொண்டு பூண்டு முன்னிலும் பலமாய் மாதுரு ஸேவை செய்து வருகிறார்.”

 

23) சூரத் காங்கிரஸ் – (1907)

இந்தக் கட்டுரை ‘எங்கள் காங்கிரஸ் யாத்திரை’ என்ற தலைப்பில் பாரதியார் எழுதியது.

24) How are we to acquire Swaraj?  நாம் எப்படி ஸ்வராஜ்யத்தை அடைகிறது?   சி.சுப்பிரமணிய பாரதி (1907) இந்தியா வாரப் பத்திரிகையில் 27-4-1907 தேதியிட்ட இதழில் வெளி வந்த நீண்ட கட்டுரை

 திரு செட்டியார் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் கட்டுரைகளை மூலப் பத்திரிகைகளைப் பார்த்துக் கண்டுபிடித்து குமரிமலரில் வெளியிட்டிருப்பார் என்பதை நினைத்தால் நெஞ்சம் உருகுகிறது.

இன்னும் பல கட்டுரைகளை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

அவற்றை அடுத்துப் பார்ப்போம்

                     ******      தொடரும்

Tulsi Leaf is heavier than Lord Krishna! (Post No. 3492)

Compiled by London swaminathan

 

Date: 28 December 2016

 

Time uploaded in London:-  15-42

 

Post No.3492

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

STORY OF THE TULSI PLANT (OCIMUM SANCTUM)

 

This plant is sacred to Vishnu. Its leaves are supposed to possess medicinal properties. Orthodox Hindus plant it in their gardens and and compounds and worship it.

 

A story is told how even Rukmini, the chief wife of Krishna, and an incarnation of Lakshmi, gave pride of place to Tulsi.

Narada, one day, visited Satyabhama, one of the wives of Krishna, and this lady confided to the sage that she wished to obtain Krishna as her husband in all her future births, and asked him how this could be done.

Narada said that the best way of ensuring this was to give her husband to Narada himself, as anyting given to a Brahmin could be depended upon to return to the giver in future births in manifold forms. Carried away by Narada’s eloquence Satyabhama gave her husband to Narada and the latter asked Krishna to work as his page, gave him his Vina to carry and proceeded towards the celestial regions.

 

The other wives of Krishna, on coming to know of this rushed to the sage and implored him to return their husband. They reviled Satyalhara for her presumption, and this lady repented on her rash act and requested Narada to return Krishna to her.

 

Narada now disclosed to them that it was a sin to receive anything in charity from a Brahmin and told them they could buy their husband from him if they cared to. He was asked to name his price and he demanded Krishna’s weight in gold. The ladies piled up their ornaments in one pan of the scales, but when Krishna sat in the other this one came in a thud. Now they sent for Rukmini who was not in the crowd. She came with a leaf of the Tulsi plant, asked the ladies to remove the ornaments from the pan and, when this was done, placed the leaf in the pan when Krishna was lifted upwards in the other. Rukmini now told all the ladies that Tulsi was more beloved to Krishna than any of them.

 

On the eleventh day of Kartik (october-November) a ceremony is performed in honour of Tulsi and her marriage with Vishnu. “This ceremony opens the marriage season among high caste Hindus. It is said that he who performs this marriage ceremony assuming that Tulsi is his daughter, gets all the benefits of Kayadandan, (giving away a daughter in marriage),a very meritorious act.

 

Source:Epics, Myths and Legends of India by P Thomas, Year 1961

 

–Subham–

அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (Post No.3491)

Written by London swaminathan

 

Date: 28 December 2016

 

Time uploaded in London:-  11-05 am

 

Post No.3491

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்பது தமிழ் பழமொழி. இது அநேகமாக பல்வேறு மொழிகளிலும் உள்ள பழமொழி. ஏசு கிறிஸ்துவும் மலைப் பிரசங்கத்தில் “அழுகின்றவான்களே பாக்கியவான்கள் ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அழுதே கடவுளை அடைந்தவர்கள் அல்லது அவன் அருளைப் பெற்றவர்கள் இந்து மதத்தில் நிறைய பேர் உண்டு.

 

துச்சாதனனால் துகில் உரிக்கப்பட்ட திரவுபதி தன் மானத்தைக் காக்க எவ்வளவு கதறியும் யாரும் காப்பாற்றவில்லை . அதுவரை புடவையை ஒரு கையால் பற்றி இருந்த திரவுபதி, இரு கைகளையும் உயர்த்தி கண்ணா காப்பாற்று என்று கதறியவுடன் இறைவனே வந்து ஆடை கொடுத்தான்.

 

இதனால் “எனக்கு எப்போதும் துக்கமே தா கண்ணா, அப்போதுதான் உன் நினைவு நீங்காது நிற்கிறது” என்பாள் இன்னொரு பெண்மணி: “துன்பக் கண்ணீரைத் துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் அடிக்கடி துன்பம் வரட்டும் என்பது என் பிரார்த்தனை”– இது குந்தியின் பிராத்தனை.

 

முதலையிடம் சிக்கிய ஒரு யானையை எவ்வளவோ யானைகள் மீட்க முயன்றும் பலனில்லாமற் போகவே, ஆதிமூலமே என்று கதறியது அந்த யானை. உடனே கஜேந்திர மோட்சமளிக்க கருட  வாஹனத்தில் ஏறி விரைந்தோடி வந்தான் விஷ்ணு பகவான்.

 

கண்ணனும் பகவத் கீதையில் தன்னை நான்குவிதமான பக்தர்கள் நாடுகின்றனர் என்றும் அவர்களுக்குத் தான் அருள் பாலிப்பதாகவும் சொல்கிறான்.

 

அர்ஜுனா! துன்பம் அடைந்தோன், ஞானத்தைத் தேடுவோன், செல்வத்தை நாடுவோன், ஞானி ஆகிய நால்வரும்  என்னைப் பூஜிக்கும் புண்யவான்கள் ஆவர்.(பகவத் கீதை 7-16)

 

இதன் தாத்பர்யம் என்னவென்றால், ஒருவன் அழும் நிலைக்கு துக்கம் வரும்போது பரிபூரண சரணாகதி அடைந்து விடுகிறான். அதற்கு முன்வரை,  “தான்” என்னும் அஹங்காரத்துடன் சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு விதமான உபாயங்களையும் கடைப் பிடித்துப் பார்க்கிறான்.

மாணிக்க வாசகர் சொல்லுவதைக் கேட்போம்

யானே பொய் என் நெஞ்சும்

பொய் என் அன்பும் பொய்

யானால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

உனைவந்துறுமாறே

 

பொருள்:-

தேனும் அமுதமும் கருப்பஞ்சாறும் போலட் தித்திக்கும் பெருமானே! அடியேன் உன்னை வந்து அடையும் உபாயத்தினை அறிவித்து அருள்வாயாக. யானும், என் நெஞ்சும், அன்பும் பொய். ஆனாலும் வினையேனாகிய யான் அழுதால் உன்னை டையலாமா?

 

இந்தப் பாட்டில் கேள்வி கேட்பது போல உரை எழுதப்படிருந்தாலும், அழுதால் உன்னைப் பெறலாம் என்றே பொருள் கொள்ளவேஎண்டும் ஏனெனில் இரண்டு பாடல்களுக்கு முந்தியுள்ள பாட்டில்

அழுதேன் நின்பால் அன்பாய்

மனமாய் அழல் சேர்ந்த

மெழுகேயன்னார்  – என்ற வரிகளில் தான் தனித்து நின்று அழுவதாய்ப் பாடுகின்றார்.

 

பாரதியாரும் கூறுவார்:-

 

துன்பம் நெருங்கிவந்தபோதும் – நாம்

சோர்ந்து விடலாகாது பாப்பா!

அன்பு மிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

 

திருவிளையாடற் புராணத்தில் 2 கதைகள்

மதுரை மாநகரில் சிவபெருமான் நடத்திய 64 லீலைகளும் பல்வேறு நீதிகளை உணர்த்தும் கதைகளாம்.

 

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் இரண்டு கதைகளில் இறைவனிடம் அழுது மன்றாடியவர்க்கு சிவ பெருமான் உதவிய கதைகள் வருகின்றன. இது போல தேவார மூவர் வாழ்விலும் பாம்புக் கடியினாலும் முதலைத் தாக்குதலினாலும் இறந்த பக்தர்களின் பிள்ளைகளை, அவர்களுடைய பெற்றோரின் அழுகை நீங்க, உயிர்மீட்ட வரலாற்றையும் படிக்கிறோம்.

 

மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

மதுரையில் வணிக குலத்தில் பிறந்து குபேரன் போலப் பெருஞ் செல்வம் படைத்து வாழ்ந்து வந்தான் தனபதி என்பான். அவன் மனைவி சுசீலை கற்பும் லெட்சுமீகரமும் பொருந்தி வாழ்ந்து வந்தாள். அவர்களுக்கு புத்திர  பாக்கியம் இல்லாததால்  தனபதி, அவருடைய தங்கை மகனை சுவீகார புத்ரனாக ஏற்று வாழ்ந்து வந்தார். நாளடைவில் தனபதிக்கும் அவருடைய தங்கைக்கும் இடையே பிணக்கு வளரவே, ஒரு நாள், பிள்ளைப் பேரற்ற பாவியே! என்னாலன்றோ உனக்கு ஒரு பிள்ளை கிடைத்தது? என்று சுடு சொற்களைப் பெய்துவிட்டாள். இதனால் மனமுடைந்த தனபதி, அடுத்த பிறவியிலாவது தனக்கு மகப்பேறு கிட்டவேண்டும் என்று தவம் செய்யும் நோக்கத்தோடு கானகம் சென்றான். போகும்போது தங்கையின் பிள்ளை பேருக்கே சொத்து சுகங்களை உடமையாக்கிச் சென்றான்.

 

நீண்டகாலத்துக்கு தனபதி திரும்பிவராததை அறிந்த தாயாதிகள் (தூரத்துச் சொந்தங்கள்) தங்கையின் பிள்ளையிடம் இருந்து சொத்துகளை அபகரித்தார்கள். இதனால் வருந்திய மகனும் தாயும் மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சோமசுந்தரப் பெருமானிடம் அழுது புலம்பினர்.  அவள் நித்திரையில் கனவில் வந்த சிவபெருமான், மறு நாள் தாயத்தாரை எல்லாம் வழக்கிற்கு இழுத்து அரண்மனைக்குச் சென்றால் தான் வந்து உதவுதாக சொன்னார்.

மறுநாள் அந்தப் பெண்மணியும் அரசனிடம் சென்று முறையிடவே அரசனும் சேவகர்களை அனுப்பி தாயாதிகளை அழைத்துவரச் செய்தான்.  “திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை” என்பது உண்மையாகிவிட்டது என்று மகிழ்ந்து மறுநாள் அவள் வழக்குரைத் தாள்.

 

அவர்களோவெனில், தனபதி இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்த சொத்துகள் அனைத்தும் தங்கள் பங்கே என்று வாதிட்டனர். அந்த தருணத்தில் — காதில் விலைமிக்க குண்டலங்களையும், கழுத்திலே ரத்ன கண்டிகையையும், கையில் வைர மோதிரமும் விளங்க தனபதி செட்டியாரைப் போலவே சிவபெருமான் தோன்றினார். தன்னுடைய மருமகனுக்குத் தான் அணிவித்திருந்த ஐம்படை, காற்சிலம்பு, தோளில் மதாணி, காதில் கடுக்கன், நெற்றிச் சுட்டி ஆகியனவற்றைக் காணவில்லையே என்று கதறினார். அவர் தனபதி செட்டியார் அல்ல என்று தாயாதிகள் சொன்ன மாத்திரத்தில், தனபதி செட்டியாரின் வம்சத்தில் உதித்த அத்தனை முன்னோரின் பெயர்களையும் குண நலன்களையும் அவர் எடுத்துரைத்தவுடன் அதுவரை அங்கிருந்த தாயாதிகள் அனைவரும் ஆளுக்கு ஒரு சாக்குச் சொல்லி மறைந்தோடினர். . தனபதி செட்டியாராக வேடமணிந்து வந்த சிவபெருமானும் மறைந்தார். சொத்து சுகம் அனைத்தும் தங்கை மகனுக்கே கிடைத்தன.

 

வன்னியும் கிணறும் லிங்கமும் சாட்சியாக வந்த கதை

 

1400 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைப் பட்டிணம் ஒன்றில், புத்திர பாக்கியம் இல்லாத ஒரு செட்டியாரும் அவரது மனைவியும் ஒரு பெண்ணை சுவீகாரம் எடுத்து வளர்த்து வந்தனர். அவர்கள் இருவரும் அடுத்தடுத்து  இறந்தனர். அவர்களிடையே நிறைய செல்வம் குவிந்திருந்தது. இறப்பதற்கு முன்னரே அவர் மதுரையிலுள்ள தனது மருமகனுக்குத் தான் இந்தப் பெண் என்று கூறி வந்திருந்தார். அவர் இறந்தவுடன் அருகிலிருந்த உறவினர்கள் மதுரைக்கு ஓலை எழுதி அனுப்பினர். இறந்துபோன தனவந்தரின் விருப்பப்படி, இந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு சொத்துக்களை ஏற்றுக்கொள் என்று அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்தது.

 

ஓலை கிடைத்தவுடன் நல்ல நாள் பார்த்து அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல அவன் பட்டிணத்துக்கு வந்தான். ஆனால் அவனுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி மனைவியும் உயிரோடு இருந்தாள். அப்படியும் பட்டிணத்துக்கு வந்து புதுப் பெண்ணை அழைத்துச் சென்றான். மதுரையை நெருங்குவதற்கு முன்னர், தன்னுடன் வந்திருந்தோரை மதுரைக்கு அனுப்பிவிட்டு  அருகிலுள்ள கிணற்றில் நீராடிவிட்டு  அந்தப் பெண்ணுடன் சமைத்துச் சாப்பிட்டு விட்டு ஒரு வனி மரத்தடியில் படுத்து உறங்கினான். அப்பொழுது அவனை ஒரு விஷ நாகம் தீண்டவே அவன் இறந்துபோனான். அவனுடன் வந்த பெண்ணும் ஊராரும் கூடி அழுதனர். அந்தப் பக்கமாக யாத்திரை மேற்கொண்ட ஞானசம்பந்தப் பெருமான் இந்த அழுகுரலைக் கேட்டு விஷயத்தை அறிந்தார். உடனே அந்த தனவந்தரின் உடலில் இருந்த விஷத்தை இறக்கி அவனை உயிர்ப்பித்தார். அங்கேயே திருமணத்தையும் நடத்திவைத்தார்.

இருவரும் நன்றி கூறி மதுரை சென்றனர்.

 

அந்த இளைஞனின் முதல் மனைவிக்கும் இளையவளுக்கும் நாளடைவில் சக்களத்தி சண்டை வந்தது. மூத்தவள், இளைவளைப் பார்த்து என் புருஷனை ஏமாற்றிய காமக்கிழத்தி நீ, அவனுக்கும் உனக்கும் திருமணமே நடக்கவில்லை என்றாள்.  அவள் கோவென்று கதறி அழுது, தங்களுக்கு முறையான திருமணம் நடந்தது என்றும் சொன்னாள். அதற்கு யார் சாட்சி என்றவுடன், அப்பெண் தாங்கள் திருமணம் செய்துகொண்ட இடத்தில் ஒரு வன்னி மரமும் கிணறும் லிங்கமும் இருந்தது என்று சொல்ல, மூத்தவள் சிரி சிரி என்று சிரித்து உனக்கு சாட்சி சொல்ல அவை வருமா? என்றாள். அந்தப் பெண் கண்கலங்கி சோமசுந்தரப் பெருமான் கோவிலுக்குச் சென்று  நெஞ்சுருகப் பிரார்த்தித்தாள். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒரு வன்னி மரமும் லிங்கமும் கிணறும் அங்கே தோன்றின. உடனே எல்லோரையும் அழைத்துக் காண்பிக்க அவர்ர்கள் அனைவரும் வியந்து, சிவபெருமானை வணங்கினர். உடனே அவன் மூத்தவளை வீட்டைவிட்டு வெளியேறு என்று சொல்ல இளையவள் மன்றாடி அவளையும் உடனிருக்க  அனுமதிக்கும்படி கெ,,,சினாள். அவனும் மனமிறங்கி சரி என்று சொன்ன பின்னர் இருவரும் சுகமாக வாழ்ந்தார்கள்.

 

(இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வன்னிமரம், கிணறு, லிங்கம் சிலைகள் உள்ளன.)

 

நம்பினார் கெடுவதில்லை! இது நான்கு மறைத் தீர்ப்பு — மஹாகவி பாரதியார்.

–Subahm–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 24 (Post No.3490)

Written by S NAGARAJAN

 

Date: 28  December 2016

 

Time uploaded in London:-  5-34 AM

 

Post No.3490

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 24

 

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 84.

 

 

புத்த தர்மத்தில் பக்தர்களில் ஏழு பிரிவுகள் உண்டு.

  • பிட்சுக்கள் – முழுவதுமாக உலகைத் துறந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இவர்கள்
  • பிட்சுணி – முழுவதுமாக உலகைத் துறந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெண்மணிகள்
  • சிக்ஷம்ணா – ஆறு உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகர்கள்
  • ஸ்ரமணிரா – ஆரம்ப உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகர்கள்
  • ஸ்ரமணிரிகா – ஆரம்ப உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகப் பெண்மணிகள்
  • உபாசகா – முதல் ஐந்து உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் சாமானியன்
  • உபாசிகா – முதல் ஐந்து உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் சாமானியப் பெண்மணி

 

இந்த ஏழு வகைப் பிரிவினரின் அஸ்திகளை வைப்பதற்காக ஒரு பெரிய ஸ்தூப கட்டிடம் இந்த வருடத்தில் அமைக்கப்பட்டது.

 

 

அதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது பத்தடி ஆழத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில், “ஸ்ரீமதி லி. ஃபான் யாங்கைச் சேர்ந்தவர் ஜியா ஜிங் ஆட்சியில் (1525-1526ஆம் ஆண்டு) நான்காம் ஆண்டில் மறைந்தவர்” என்று பொறிக்கப்பட்டிருந்தது.

 

 

அவரது  முகம் உயிரோடிருப்பது போல அன்றலர்ந்த நிலையில் இருந்தது. அவரை எரியூட்டும் சமயம் அந்த சிதையிலிருந்து எழுந்த ஜுவாலைகள் தாமரை வடிவில் உருவெடுத்தன.அவரது அஸ்தி  உபாசிகாக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.

ஆலயத்திற்கு வலப்புறத்தில் இருந்த அனைத்து கல்லறைகளும் தோண்டப்பட்டன. எரியூட்டப்பின்னர் எடுக்கப்பட்ட அஸ்திகள் ஸ்தூபத்தில்  முறைப்படி வைக்கப்பட்டன.

 

 

ஒரு கல்லறையில் இருந்த கல்லறை வாசகத்தில் டாவோ மிங் என்ற பிட்சுவின் வாழ்க்கை பற்றி பொறிக்கப்பட்டிருந்தது. அவர் டாவோ-குவாங் ஆட்சியின் போது (1821-1850) பிறந்தவர். சங்கத்தில் சேருமாறு அவர்கள் பெற்றோரால் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டவர். முறைப்படியான சடங்குகளுக்குப் பின்னர் அவர் அவலோகிதேஸ்வரர் நாமத்தைச் சொல்ல ஆரம்பித்தார்

 

அவர் படுத்த படுக்கையாக கிடந்த சமயம், ஒரு நாள் இரவு போதிசத்வர் அவர் கனவில் தோன்றி அவரைக் குளிக்குமாறு ஆணையிட்டார். அதற்குப் பின்னர் அவர் கனவில் போதிசத்வர் வரவே இல்லை.

 

 

குளித்ததற்குப் பின்னர் அவர் கால்கள் மிகவும் இலேசாக ஆயின. அடுத்த நாள் காலை அவரால் மற்றவர்களைப் போல நடக்க முடிந்தது. அவர் அகத்தில் ஞானம் உதிக்கவே இறுதி வரை போதிசத்வர் நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கல்லறையில் இருந்த் சவப்பெட்டியின் மூடி கரையானால் அரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கரையான் அரிப்பு ஒரு சித்திர வடிவில் இருந்தது. அது ஒரு ஏழு மாடி எண்கோண ஸ்தூப வடிவில் இருந்தது. அந்த பிட்சுவின் தவத்திற்கான சித்தியாக அது அமைந்திருந்ததைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.

 

இப்படியாக அந்த ஆண்டு முடிவிற்கு வந்தது.

-தொடரும்

******

 

Nature’s Orchestra in the Forest: Sanskrit Tamil Poets’ Chorus (Post No. 3489)

Written by London swaminathan

 

Date: 27 December 2016

 

Time uploaded in London:-  13-05

 

Post No.3489

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

The amazing thing about India is it was the largest country in the world 2000 years ago. Invaders like Alxander, Genghis khan wetn from one end to the other part of the world and plundered the wealth of the countries they invaded. Before they returned to their starting points, whatever they “conqurered” broke into pieces. But Bharat was united for long time, though there were so called “56 Desas” (countries or Kingdoms). The second amazing thing about the olden days is that all the Tamil and Sanskrit poets followed the same customs in such a vast space. There was no internet or mobile phone or fast transport and yet they did it!

 

Kalidasa sings about nature’s orchestra in Meghaduta, Raghuvamsa and Kumara sambhava. Tamil poets Kapilar and Kamban echoed it in their verses.

 

Kapilar lived in age nearer to Kalidasa. He was the Sangam period poet who contributed the highest number of poems. He and Kalidasa sang about the flute music that originated in the bamboo forest. The holes made by the beetles in the bamboos produced music when the wind passed through its holes. Whenever the clouds made thunderous noise it served as the drum beats. Moreover, it echoed through the caves in the mountains.

 

When there are rainy clouds with rolling thunderous sound naturally the peacocks begin to dance. The forest is full of noises from deer, frogs and song birds. This kindled the imagination of the poets to sing beautiful verses. Sudraka, author of the Sanskrit Drama Mrcha katika (The Clay Cart) also used such imagery.

 

Let us look at the verses from Kalidasa:

 

“Who by filling the holes of the bamboos with wind breathed from the mouths of the caves, appears as if he wishes to play an accompaniment to the Kinnaras, singing in high pitch”–Kumarasambhava 1-8

xxx

And in the Meghaduta, Kalidasa addresses the Cloud Messenger (megha duta):

“The wind breathing through the hollow bamboos makes sweet music

woodland nymphs sing with passion-filled voices

of the victory over the Triple City (Tri pura);

If your thunder rumbles in the glens like a drum

would not the ensemble then be complete

for the Dance-Drama of the Lord of Beings?

xxx

the same thing is repeated in the Raghu vamsa (2-12 and 4-73)

 

While Dilipa is on his way he heard the hum and thrum of nature that seemed to be the full score singing of georgic deities to the accompaniment of high-pitched fluty bamboos while the air is filling their holes like a flutist, and he is all ears for that symphony as if it is having the sonata form of his glory. [2-12]

The soft breeze causing murmuring rustle in the leavers of birch trees and melodious sounds in bamboo trees, and surcharged with the coolness of the sprays of River ganga has adored Raghu on his way. [4-73]

Tamil Poets Love of Nature

 

Kapila, the Brahmin poet of Sangam age, sang the highest number of verses in the Sangam literature. He was a great Sanskrit scholar and must have mastered Kalidasa who lived just a few hundred years before Kapila. When a Northern King by name Brhat Dutta ridiculed Tamil he called him, and taught Tamil and made him to compose verses in Tamil. His poems were also included in the Tamil Sangam literature. To impress upon Brhat Dutta, Kapilar composed a poem Kurinji Pattu. It is nearly an imitation of Kalidasa. Kapila must have used Sanskrit to teach him Tamil

 

In the Akananuru verse 82, Kapilar used the bamboo flute music imagery of Kalidasa. But it has more than what Kalidasa said; here is a rough translation of the Tamil verse:-

“Beetles made holes in the bamboo trees; the wind blowing through the holes produced sweet music; on the other side the water falls made big noise by rolling the big stones; deer made noise; the humming of the bees came from another direction. Hearing this the peacocks danced and the monkeys were the audience! For the poet Kapilar it was like an orchestra with wind sound as flute, water falls as drums, deer cry as a musical instrument, humming of the beetles as lute and the peacock as bard’s wife and monkeys as the fans.

Kamban who composed Ramayana in Tamil, also has a similar scene in the Kishkinda Kanda. He describes the rainy season beautifully:

Humming of the beetles sounded like lute; the thundering clouds were like the playing of drums; peacocks looked like the girls with bangles in their arms. Red colour Kanthal flowers looked like the lamps on the stage. Karuvilam flowers looked like the eyes of the onlookers.

It is very interesting to compare both Tamil and Sanskrit literature and see the same similes, same messages and same approach in both of them

–Subham–

 

 

நடுக் காட்டில் கச்சேரி! கபிலன், கம்பன், காளிதாசன் தகவல் (Post No.3488)

Written by London swaminathan

 

Date: 27 December 2016

 

Time uploaded in London:-  6-55 AM

 

Post No.3488

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

காளிதாசன் இயற்றிய குமார சம்பவம், ரகுவம்சம், மேக தூதம் ஆகிய மூன்று படைப்புகளிலுள்ள காட்டிற்குள் நடக்கும் இன்னிசை நிகழ்ச்சி பற்றி கபிலரும் கம்பனும் பாடியுள்ளனர். மிருச்சகடிகம் (மண்ணியல் சிறுதேர்) இயற்றிய சூத்ரகரும் காட்டில் நடந்த ORCHESTRA ஆர்க்கெஸ்ட்ரா பற்றி, தனது நாடகத்தில் சொல்கிறார். இமயம் முதல் குமரி வரை இப்படி ஒரே அணுகு முறை இருப்பது பாரதீய சிந்தனை ஒன்றே என்று காட்டுவதோடு ஆரிய-திராவிட வாதங்களுக்கும் வேட்டு வைக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் அதிலும் 15 லட்சம் சதுர மைல் பரப்பில், அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்  இருந்த ஒரு மரபைக் காண  முடியாது

 

கபிலன் வருணனை

 

காட்டில் இன்னிசை நிகழ்ச்சி

காட்டில் மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன. அதில்    உள்ள ஓட்டைகள் வழியாகக் காற்று வீசும்போது புல்லாங்குழல் ஓசை எழுகிறது. மழை மேகங்கள் கர்ஜிக்கின்றன. இந்த இடி முழக்கம் மத்தளம் வாசிப்பது போல உள்ளது. மேகம் கர்ஜித்தால் மயில்கள் தோகை விரித்து ஆடத்தானே செய்யும்? இது இன்னிசை நிகழ்ச்சியுடன் ஒரு நடனக்காரி ஆடுவது போல இருக்கிறது. சில நேரங்களில் குயில் பாடினாலும் தவளைகள் குரல் கொடுத்தாலும் அதெல்லாம் வாய்ப் பாட்டாகக் கேட்கின்றன நம் கவிஞர்களுக்கு! பாட்டிலும் ஆட்டத்திலும் ஊறிப்போன  பாரத நாட்டில் இப்படி ஒரே சிந்தனை எழுவதில் வியப்பில்லை. ஆகவே ஒருவரைப் பார்த்து ஒருவர் ‘காப்பி’ அடித்தனர் என்று சொல்லத் தேவை இல்லை.

 

சம்ஸ்கிருதத்தில் மிருச்ச கடிகம் நாடகம் எழுதிய சூத்ரகனும் சங்க காலத்தில் வடநாட்டில் வாழ்ந்த புலவன் ஆவான். அவனும் இதுபோல இயற்கையை வருணித்துள்ளான் (மிருச்சகடிகம் (5-52)

 

 

முதலில் கபிலன் பாடலைப் பார்ப்போம்:

 

வண்டு துளைத்த மூங்கில் வழியே காற்று வீசியவுடன் புல்லாங்குழல் இசை எழுந்தது.

இதே நேரத்தில் அருவியிலிருந்து விழும் தண்ணீரின் ஓசை மத்தளம் வாசிப்பது போல இருந்தது.

மயில்கள் ஒரு பக்கம் ஆடின. மான்கள் ஒலி எழுப்பின.

 

வண்டுகளின் ரீங்காரம் யாழ் ஓசை போலவும், மான்களின் குரல் வாத்ய இசை போலவும் இருந்தது.

இவ்வளவும்  நடைபெறும் போது இதைப் பார்க்க ரசிகர் கூட்டம் வேண்டுமல்லவா?  குரங்குகள் கூட்டமாக உட்கார்ந்து இதைப் பார்த்து ரசித்தனவாம். இது கபிலன் பாடிய அகநானூற்றுப் பாடலில் காணப்படும் நல்லதொரு காட்சி!

 

ஆடமை குயின்ற அவிர்துளை மருங்கில்

கோடை யவ்வளி குழலிசையாகப்

பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்

தோடமை முழவின் துதை குரலாகக்

கணக்கலை இருக்கும் கடுங்குரல் தூம்பொடு

மலைப்பூஞ் சாரல் வண்டியாழாக

இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து

மந்தி நல்லவை மருள்வன நோக்கக்

கழைவளர் அடுக்கத் தியலியாடும் மயில்

நனவுப்புகு விறலியில் தோன்றும் நாடன்

………………………………

–அகநானூறு 82 (கபிலன்)

சங்க இலக்கியத்தில் மேலும் சில் பாடல்களில் இது போன்ற இயற்கையின் புல்லாங்குழல் இன்னிசை நிகழ்ச்சிகளைக் காணலாம்:-

அகம் 225 (எ.ம.இளங்கீரனார்); அகம் 219 (கயமனார்)

 

கம்பன் கவிநயம்

 

கம்பனும் கிட்கிந்தா காண்டத்தில் கார்காலப் படலத்தில் இது போன்ற ஒரு காட்சியினை வருணிக்கிறான்

 

கிளைத்துளை மழலை வண்டு கின்னர நிகர்த்த மின்னும்

முளிக்குரல் மேகம் வள்வார்த் தூரியந் துவைப்ப போன்ற

வளைக்கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின் மாடே

விளக்கினம் ஒத்தகாண்போர் விழியொத்த விளையின் மென்பூ

 

பொருள்:-

வண்டுகளின் ரீங்காரம் கின்னரம் என்னும் யாழ் இசை போல இருந்தது.

மின்னலுடன் இடிக்கும் மேகம் மத்தளம் வாசிப்பது போல இருந்தது.

மயில்கள் வளையல் அணிந் தாடும் மங்கையர் போலத் தோன்றின.

செங்காந்தள் மலர்கள் நடன அரங்கில் விளக்குகளை ஏற்றி வைத்தது போல இருந்தன.

கருவிள மலர்கள் , காண்போரின் கருவிழிகள் போல விளங்கின.

இது கம்பனின் கற்பனை.

 

 

காளிதாசன் கற்பனை ஓவியம்

 

 

இவர்களுக்கெல்லாம் முன்னதாக தனது மூன்று நூல்களில் இதே கருத்தை இயம்பியுள்ளான் காளிதாசன் :-

மேக தூதத்தில் (பாடல் 58) அவன் சொல்வதாவது:மேகமே! காற்றினால் நிரப்பப்படும் மூங்கில்கள் இனிமையாக ஒலிக்கும்.

கின்னரப் பெண்கள் ஜோடியாக நின்று சிவனின் முப்புரம் எரித்த நிகழ்ச்சியைப் பாடுவர்.

மேகமாகிய உன்னுடைய கர்ஜனை குகைகளில் எதிரொலித்து மத்தளம் போலக் கேட்கும்.

அங்கு நிரந்தரமாக வாசம் செய்யும் சிவபெருமானுக்கு இவை சுருதி, பாட்டு, தாளம் ஆகிய மூன்றையும் கொடுக்கும் இன்னிசை நிகழ்ச்சியாக அமையும்.

 

ரகுவம்சத்திலும் இதையே சொல்லுவான்:

 

திலீபன் காட்டு வழியில் செல்லுகையில், மூங்கில் மரத் துவாரங்களில் காற்று புகுந்து புல்லாங்குழல் இசையை எழுப்பின; இதே காற்று புதர்களில் பட்டு எழுப்பிய ஓசை திலீபனின் புகழைப் பாடுவதாக இருந்தது (ரகு 2-12)

நாலாவது சர்கத்திலும் (4-53) குமாரசம்பவத்திலும் (1-8) இதே மூங்கில் மர ஓசை, மேக கர்ஜனை ஆகியன வருகின்றன.

சம்ஸ்கிருதத்தில் இதே கருத்து வேறு பல நூல்களிலும் இருப்பதால் இமயம் முதல் குமரி வரையுள்ள ஒரு கற்பனை இது என்பது விளங்கும்.

 

–Subahm–