5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு (Post No. 3487)

Written by S NAGARAJAN

 

Date: 27  December 2016

 

Time uploaded in London:-  5-31 AM

 

Post No.3487

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை

 5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு!

 

 

ச.நாகராஜன்

 

“எகிப்தில் உள்ள பிரமிடுகளைத் தவிர அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாலும் செதுக்கப்பட்ட கற்களாலும் சிற்பங்களாலும் முப்பரிமாண சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன” – எகிப்திய அகழ்வாராய்ச்சித் தகவல்

 

  உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று எகிப்திய நாகரிகம் என்றும் எகிப்தில் உள்ள பிரமிடுகள் அபூர்வ சக்தி வாய்ந்தவை என்பதையும் பறைசாற்றி பல நூறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

 

பெரும் நிபுணர்களும் ஆய்வாளர்களும், சரித்திர ஆசிரியர்களும் பிரமிடின் சக்தியைப் புகழ்ந்து அதிசயிக்கின்றனர். நெபோலியன் உள்ளிட்ட மாவீரர்கள் பிரமிடின் அமானுஷ்ய சக்தியை நேரில் சென்று அனுபவித்து வியந்திருக்கின்றனர்.

 

 

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எகிப்தில் 118 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து எகிப்தில் அகழ்வாராய்ச்சிப் பணி நடந்து கொண்டே இருக்கிறது.

 

இதன் தொடர்ச்சியாக, இப்போது எகிப்திய வரலாற்றில் புதிய ஒரு சுவையான செய்தி சேர்ந்துள்ளது.

 

5000 வருடங்களுக்கு முந்தைய எகிபதிய நகரம் ஒன்றின் சிதிலமடைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை உலகத்தின் அறிவியல் பத்திரிகைகள் நவம்பர் 2016 இறுதி வாரத்தில் அறிவித்துள்ளன!

 

 

பண்டைக்காலத்தில் இருந்த ஒருங்கிணைந்த பிரம்மாண்டமான எகிப்தில் அபிடாஸ் (Abydos) என்ற பகுதியில் உள்ள இந்த நகரம் பாரோக்களின் ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று மஹம்மதி அஃபிபி என்ற எகிப்திய அரசின் தலைமை அகழ்வாராய்ச்சியாளர் தெரிவித்திருக்கிறார். இவரது அறிக்கை அராபிய மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

இந்த நகரின் கட்டிடங்கள்  களிமண்ணாலான செங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன.

 

கட்டிடங்களின் அருகே ஒரு கல்லறையும் இருக்கிறது. இங்கு ஒரு மனிதனின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 

 

 

இந்தக் கல்லறையில் பாரோக்கள் புதைக்கப்படவில்லை என்றும் அபிடாஸை ஆண்ட முந்தைய கால  மன்னர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அபிடாஸை ஆண்ட ஆஹா என்ற மன்னர் ஒரு பிரம்மாண்டமான வளாகத்தைக் கட்டியுள்ளார். இங்கு அவர் வேலையாட்களுக்கான தனி கல்லறை ஒன்றையும் அமைத்துள்ளார்.

 

 

அத்துடன் அந்தக் காலத்தில் பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் களியாட்ட நிகழ்ச்சிகளில் களிப்பூட்டி உற்சாகப்படுத்த குள்ளர்கள் பங்கேற்பர். அவர்களுக்கும் தனி இருப்பிடங்களை ஆஹா அமைத்துத் தந்துள்ளார்.

சிங்கங்களுக்கும் நாய் உள்ளிட்ட இதர மிருகங்களுக்கும் தனி இருப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

 

ஆஹா மன்னரின் கல்லறை கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்லறையில் காணப்படும் ஏராளமான மிருகங்களின் உடல்கள் அவர் இறந்த பிறகு அவருடன் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இதில் முக்கியமான அம்சம் இந்த நகரின் பழமை குறித்தது தான். சில நிபுணர்கள் இந்த நகரம் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் என்று கூறுகின்றனர்.

 

    ஆனால் அராபிய மொழியில் இருந்த அறிக்கையை மொழிபெயர்ப்பு செய்யும் போது தவறுதலாக இது 7000 ஆண்டு பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று  கருதும் சில நிபுணர்கள் எகிப்திய அரசு ஆங்கிலத்தில் அறிக்கையை வெளியிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  அத்துடன் இந்த நகரம் எவ்வளவு பெரியது, அதன் பரப்பளவு என்ன போன்ற தகவலை எல்லாம் கூட எகிப்திய அரசு வெளியிடவில்லை என்றும் உலக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறி அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சிப் பிரிவிற்குக் கடுமையான பணத்தட்டுப்பாடு இருப்பதால் அது ஊடகங்களுக்கு சரியான முறையில் அறிக்கையைத் தர முடியவில்லை என்பதும் ஒரு முக்கியமான விஷயம்.

 

உலகின் மிகப் பழமையான நகரம் அபிடாஸ் தானா என்பதை ஆராய விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். அப்படி இந்த நகரம் மிக மிகப் பழமையானது என்று நிரூபிக்கப்பட்டு விட்டால் அது உலக சரித்திரத்தில் ஒரு முக்கியமான திருப்பம் தரும் செய்தியாக அமையும்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

ஃபாஸில்ஸ் (FOSSILS) எனப்படும் படிமப்பாறைகள், பழைய கால மிருகங்களின் உடல்களே என விஞ்ஞான உலகம் 18ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது.

 

இந்தத் துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இதை ஆராய்ந்தவர் விஞ்ஞானி ஜோஹன் பெரிஞ்சர் (Johann Beringer).  அவர் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில்   (University of Wurzburg) பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

 

ஃபாஸில்ஸ் அனைத்துமே கடவுளால் படைக்கப்பட்டு தெய்வீக காரணங்களுக்காக பூவுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் திடமாக நம்பினார்.

 

அவருடைய படிமப்பாறை பைத்தியத்தைப் பற்றி நன்கு உணர்ந்த அவரது மாணவர்கள் ஆங்காங்கு தாங்களே உருவாக்கிய ஃபாஸில்ஸை புதைத்து வைக்க ஆரம்பித்தனர்.இதில் வேடிக்கை என்னவென்றால் சிரிய, பாபிலோனிய, ஹிப்ரூ எழுத்துக்களுடனெல்லாம் இவை கிடைக்க ஆரம்பித்தன.

 

பெரிஞ்சருக்கோ ஒரே உற்சாகம்.

 

அனைத்து ஃபாஸில்ஸையும் அட்டவணைப்படுத்தி ஒரு பெரிய புத்தகத்தை 1726ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார்.

ஒரு நாள் அவர் பெயர் கொண்ட ஒரு ஃபாஸில்ஸே கிடைத்தது.

 

அப்போது தான் அவருக்கு சந்தேகம் வந்தது.

அவர் எழுதிய புத்தகத்தைப் பலரும் கிண்டல் செய்ய ஆரம்பிக்கவே அனைத்துப் புத்தகங்களையும் தானே திருப்பிப் பெற்றுக் கொண்டார். இந்தப் புத்தகத்தின் பிரதி அரிதாகிப் போய் விடவே இதை அரிய பொருள்கள் சேகரிப்போர் தேடிக் கண்டுபிடித்து அதிக விலைக்கு வாங்கினர்.

 

மனம் நொந்து போன பெரிஞ்சர் தன்னை கேலி செய்பவர்கள் மீது பெரிய வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.

அவர் இறந்த பிறகு அவரது உறவினர் ஒருவர் அந்தப் புத்தகத்தை மீண்டும் அச்சடித்து வெளியிட்டு பெரிய லாபத்தை ஈட்டினர்.

1963ஆம் ஆண்டு பெரிஞ்சரைப் பற்றி ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர் மெல்வின் ஈ. ஜான் என்பவர் உண்மையில் அவரது மாணவர்கள் இந்த தகாத வேலையில் ஈடுபடவில்லை என்றும் பெரிஞ்சரின் புகழைப் பொறுக்க மாட்டாத அவர்கள் சகாக்களே இந்த வேலையில் பலரை ஈடுபடுத்தியதாகவும் கண்டு பிடித்துள்ளார்.

 

ஆனாலும் என்ன, இறக்கும் வரையில் அவர் கேலிக்குத் தான் ஆளாக வேண்டியிருந்தது.

*******

 

 

Eastern and Western View of Women (Post No. 3486)

Compiled by London swaminathan

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:-  14-57

 

Post No.3486

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

There is good and bad said about women in all the literatures of the world. To take one quotation out of context and interpret it as the author’s view about women is wrong. There are lots of praise for women in the Vedic mantras  (Marriage Hymns); in the Upanishads they are shown as spiritually inclined; in the Hindu epics Draupadi, Savitri, Sita and others are shown as intelligent women. When it came to Kaikeyi, Tadaka and Surphanakha we see diametrically opposite views. It is same in Tamil literature as well. When the poets sing about young women they praise their beauty. When the same women are shown as concubines or harlots they are condemned. As Mothers, they command the highest respect in Hindu literature, which is not seen in any other ancient literature. If we consider the Vedic age they command more praise and respect than any other period (Please see my earlier posts on Manu and others on women)

 

BHARATIYAR

The lock is opened by the hand

And good mind by the intellect;

It is tune that opens he song

And women the home of delight–Tamil Poet Bharati

 

It is mother’s milk that gives us strength

While the wife’s kind words reap our harvest of fame

As women’s blessedness blasts all evil,

let us rejoice with linked hands.

Blow the conch! Dance in joy!

For woman is sweeter than life itself.

She the protectress of life, and creatrix too;

She is the life of our life, and the soul of sweetness

 

We will grow lofty by dint of merit;

we will rub off the old stigmas;

if men take us fully as their equals Attributing nought of defects to us

We will join them and labour in the fight

To win back our nation and retrieve –Tamil Poet Bharati

 

Gone are the days who said to woman: Thou shall not

Open the Book of Knowledge

And the strange ones who boasted saying:

We will immure these women in our homes

Today they hang down their heads–Tamil Poet Bharati

 

Thou to me the flowing Light

And I to thee the discerning sight

Honeyed blossom thou to me

Bee enchanted I to thee

O Heavenly Lamp with shining ray

P Krishna, love, O nectar-sparay

With faltering tongue and words that pant

Thy glories here I strive to chant

–Tamil Poet Bharati

 

 

 HOMER

O woman, woman, when to ill thy mind

Is bent all hell contains no fouler fiend – The Odyssey, XI

 

For since of womankind so few are just

Think all are false, nor even the faithful trust– The Odyssey XI

xxx

 

The time for trusting women’s gone forever!- The Odyssey XI

A man shall walk behind a lion rather than behind a woman- Babylonian Talmud

And I find more bitter than death the women, whose heart is snares and nets, and her hands as bands – Ecclesiastes XXV-19

 

Women are the gate of hell – St Jerome

Nothing is  worse than a woman, even a good one – Menander

Women have no souls – Lewis Wager

xxx

 

 

SHAKESPEARE

Down from the waist they are Centaurs

Though women all above;

But to the girdle do the gods inherit

Beneath is all the fiends

There is hell, there is darkness, there is sulphrous pit

Burning, scalding, stench, consumption;

Fie, fie, puh, pah

Give me an ounce of civet, good Apothecary,

to sweeten my imagination there is money for thee

-King Lear Act 4, Scene 6

 

age cannot wither her, nor custom stale

Her infinite variety; other women cloy

The appetites they feed, but she makes hungry

Where most she satisfies; for vilest things

Become themselves in her, that the holy priests

Bless her when she is riggish

–Antony and Cleopatra Act 2, Scene 2

xxx

PATTINATHAR

O peafowl like woman adorned with garlands

Of bourgeoning flowers, the one that just now

Quested for you, had gone away; compose yourself.

If you earn for me I will kick you on your hips

And if I think of you, you kick me – Pattinathar, Tamil saint

xxx

 

 

KALHANA

For, a woman who has sold her soul for love, reveals the changed attitude (towards her husband), due to the orgy of the demon of unchastity -Rajatarangini 3-501

O these wretched women, pursuers of physical love, barren of thought, by whom men are soon hurled downward-Rajatarangini 3-513

Women being quick-witted analyse, at the same time while they are lamenting, their altered position and sons even while they are by the side of the funeral pyre discuss the material and moral condition-Rajatarangini 7-734

xxxx

Thou to me the Harp of Gold

And I do thee the finger bold;

Necklace shining thou to me

New-set diamond I to thee;

O mighty queen with splendour rife

O Krishna, Love, O well of life

Thine eyes do shed their light on all

Wherever turn, their beams do fall

–Tamil Poet Bharati

Bharati’s poems are translated by several scholars and published by Tamil University, Thanjavur

 

–Subham–

 

 

 

 

 

 

 

சிவனுக்குரிய எட்டு பூக்கள்: அப்பர், மாணிக்க வாசகர் தரும் தகவல் (Post no. 3485)

Written by London swaminathan

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:-  9-19 AM

 

Post No.3485

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சிவ பூஜையில் பயன்படுத்தும் பூக்களில் நான், செண்பகத்தையும் சேர்த்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். ஒருவர், இது தவறு என்று சொல்லுவதாக எனக்கு பிப்ரவரி மாதம் ஈ மெயிலில் எழுதி இருந்தார்.

 

விஷ்ணுவும்  பிரம்மாவும் சிவனின் அடியையும் முடியையும் தேடிச் சென்ற கதையில் பிரம்மாவுக்கு ஆதரவாக பொய்ச் சாட்சி சொன்ன பூக்களில் தாழையும் செண்பகமும் உண்டு என்று வட நாட்டில் கருதப்படுவதால் இந்த நம்பிக்கை வலுத்தது. ஆயினும் தென்னாட்டுப் பாடல்களில் தாழை மட்டுமே இருப்பதாக நான் கருதுகிறேன்

 

நான் எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதுவதில்லை என்றும் நேரம் கிடைக்கும் போது எந்த இடத்தில் இது உள்ளது என்பதை எழுதுவேன் என்றும் சொன்னேன். இதோ அந்தப் பாட்டு:-

 

 

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி

மட்டலரிடு வார் வினைமாயுமால்

கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ

ரட்டானரடி சேருமவருக்கே

தேவாரம் 5-54-1

 

அப்பர் பாடிய இப்படலுக்கு உரை எழுதிய பெரியோர் எட்டு பூக்களின் பெயர்களைக் கொடுக்கின்றனர். அவை அலரி, பாதிரி, புன்னை, செந்தாமரை, குவளை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை.

 

நாம் வெளியே பூஜை செய்யும்போது மலர்களைப் பயன்படுத்துகிறோம். ஆத்ம பூஜை செய்கையிலும் இவ்வாறு எட்டு மலர்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்:–

புகையெட்டும் போக்கெட்டும் புலன்களெட்டும்

பூதங்களவை யெட்டும் பொழில்களெட்டும்

கலையெட்டும் காப்பெட்டும் காட்சியெட்டுங்

கழற் சேவடியடைந்தார் களைகணெட்டும்

நகையெட்டும் நாளெட்டும் நன்மையெட்டும்

நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்களெட்டும்

திகையெட்டும் தரிப்பதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே

————-ஆறாம் திருமுறை, அப்பர்

 

 

பாடலின் பொருள்  ( நமக்கு வேண்டிய வரிகள் மட்டும் ):-

மனதிலே மலர்கின்ற எட்டு  மலர்கள்:- கொல்லாமை, புலனடக்கம், அமைதி,  அன்பு, தியானம், தவம், சத்தியம், மெய்யறிவு. இவை எட்டும் ஞான மலர்களாம்.

மாணிக்க வாசகரின் திருவாசகத்தில்

பரவுவார் இமையோர்கள்

பாடுவன நால்வேதம்

குரவுவார் குழன்மடவாள்

கூறுடையாள் ஒருபாகம்

விரவுவார் மெய்யன்பின்

அடியார்கள் மேன்மேலுன்

அரவுவார் கழலிணைகள்

காண்பரோ அரியானே

–திருச்சதகம், 17, திருவாசகம்

 

பொருள்: காண்பதற்கு அரியவனே; தேவர்கள் உன் முன்னால் நின்று உன்னை வாழ்த்துவர்; நான்கு வேதங்களும் உன்னைப் பாராட்டுகின்றன. குராமலரை கூந்தலில் அணிந்த உமா தேவியார் உனது உடலில் இடப்பாகத்தை ஏற்றுக்கொண்டார். உண்மை அன்பினுடைய மெய்யடியார்கள் எப்போதும் உன்னுடன் இருக்கின்றனர். ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த உன் திருவடிகள் இரண்டையும் இவர்கள் அனைவரும் காண்பரோ!

 

இதற்கு விரிவுரை எழுதிய தண்டபாணி தேசிகர் அவர்கள், “இறைவன் வழிபாட்டிற்குரிய பூக்களில் குரா, மரா, கொன்றை, பாதிரி, செண்பகம் முதலிய  எல்லாம் உரியவாதலின் குரவுவார் குழல் மடவாள் என்று குறிக்கபெற்றார்- என்று எழுதியுள்ளார்.

 

பழைய சான்றோர்களின் உரைகள்தான் நமக்கு ஆதாரங்கள். இதையொட்டியே நானும் சிவ பெருமானுக்கு செண்பக மலரும் பிடிக்கும் என்று ஓராண்டுக்கு முன் ஒரு கட்டுரையில்  எழுதினேன்.

 

கொன்றைப் பூவின் சிறப்பு

திருவாசகத்தில் ஒரு பாடலில் சிவனைப் போற்றும் வரிகளில் தேனேயும் மலர்க் கொன்றைச் சிவனே எம்பெருமானே – என்று பாடியுள்ளார். இதில் சிவனுக்கு கொன்றைப்  பூவைப் பயன்படுத்துவது ஏன் என்று உரைகாரர் எழுதுவர்:-

கொன்றை இறைவனுக்கு அடயாளப் பூ; இதன் கேசரங்கள் பிரணவ வடிவமாக இருப்பதாலும் (பிரணவம் = ஓம்காரம்) பூ பொன்னிறமாய் இறைவன்  மேனியை ஒத்திருத்தலாலும்  இறைவனுக்கு அது  உககந்ததாயிற்று.

 

–Subham–

கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை! (Post No.3484)

Written by London swaminathan

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:-  7-12 AM

 

Post No.3484

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தேனினும் இனிய திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்:-

 

உண்டோ ஒண்பொருளென்றுணர் வார்க்கெலாம்

பெண்டி ராணலி யென்றறி யொண்கிலை

தொண்டனேற்குள்ள வாவந்து தோன்றினாய்

கண்டுங் கண்டிலேன் என்ன கண் மாயமே!

—-திருச்சதகம் 42, திருவாசகம்

 

பொருள்:-

ஒப்பற்ற ஒளிவடிவான முதற்பொருள் உண்டு என்று அறிந்தோருக்கும் நீ ஆணா, பெண்ணா, அலியா என்று துணிந்து அறிய முடியவில்லை. ஆனால் அடியேனுக்கு காட்சி தந்தாய்; அப்படி இருந்தும் என்னுடைய அறியாமையினால் உன்னைக் கண்டும் காணதவன் போல் இருந்துவிட்டேன்; இது என்ன வகை கண் மயக்கமோ!

 

சில் நேரங்களில் நாம் ஒருவரையோ, ஒரு பொருளையோ கண்டாலும், கவனம் வேறு புறம் இருந்தால் அதை உணர மாட்டோம். இறைவன் எங்கும் உளன். ஆயினும் அவனைக் காணும் பக்குவமும் அதிர்ஷ்டமும் நமக்கு வரவேண்டும்.

 

இதற்கு திருவாசக உரைகாரர்கள் ஒரு கதை சொல்லுவர்:-

 

ஒரு ஏழை நடந்து போய்க்கொண்டிருந்தான். அப்போது பார்வதியும் பரமசிவனும் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தனர். ஒரு ஏழையைக் கண்டால் தாயின் உள்ள உருகத்தானே செய்யும்? சிவபெருமானை கேள்வி கேட்கத் துவங்கினார் பார்வதி:

ஐயோ பாவம், இந்த ஏழைக்கு மனம் இரங்கி ஏதேனும் கொஞ்சம் பணம் தரக்கூடாதா?

சிவன் சொன்னார்: அதற்கு காலமும் சூழ்நிலையும் இடம்தரவில்லையே; அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இவ்வளவு நேரம் எல்லாம் கிடைத்திருக்குமே என்றார்.

பார்வதி விடவில்லை; சிவ பெருமானை நச்சரித்தார்.

அன்பே, ஆருயிரே! உன் சொல்லை நான் என்றாவது தட்டியதுண்டா? என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவன் முன்னால் ஒரு  தங்கக் காசு மூட்டையைத் தூக்கி எறிந்தார். சற்று முன்வரை முழித்துக் கொண்டு நடந்த அந்த மனித்தனுக்கு அப்போதுதான் ஒரு திடீர் யோசனை — விபரீத யோஜனை தோன்றி இருந்தது.

 

உலகில் பலருக்குக் கண் இல்லையே; அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று நாமும் செய்து பார்ப்போம் என்று கண்களை இறுகி மூடிக்கொண்டு சென்றான். பரமசிவன் அவன் வழியில் போட்டிருந்த தங்கக் காசு மூட்டை அவன் காலில் இடறியது. சீ, சீ, கண்ணில்லாதோர் வழியில் இப்படி மூட்டை இருந்தால் என்ன கஷ்டப்படுவர் என்று கண்களை மூடியவாறே அதை ஒரு எத்து எத்திவிட்டுச் சென்றான்.

பார்வதிக்கோ ஒரே வருத்தம்; பரமசிவனுக்கோ ஒரே சிரிப்பு.

இதுதான் மாணிக்க வாசகரின் நிலையும்; நீ என் முன் காட்சி அளித்த போது உன்னை உணரவில்லையே! கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமோ? என்று வியக்கிறார்.

 

உண்மையில் மாணிக்க வாசகர் இறைவனைக் கண்டவரே. அவர் இப்படிப் பாடுவது எல்லாம் நம்மைப் போன்ற கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்பவரை மனதிற் வைத்துதான்.

 

ஒருவன் கோவிலுக்குச் சென்றான். இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து தீவாரதனை நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் அந்த அரிய காட்சியினைக் கண்டு பரவசம் அடைந்து கண்களை அகல விரித்துப் பார்த்துப் பரவசப்பட்டனர். ஒருவர் மட்டும் அதீத பக்தியினால் கண்களை மூடிக்கொண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு மூர்த்திக்கு முன்னே நின்றார். இவரது கவனக் குறைவைக் கண்ட ஒரு ஜேப்படித் திருடன், அவருடைய பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு நழுவிவிட்டான். அடடா, கண்ணிருந்தும் குருடனாக இருந்தேநே என்று அவர் வருந்தினார். இதுதான் நம்முடைய நிலை!! கடவுள் கண் முன் தோன்றினாலும் அந்த நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு வாய்ப்பை நழுவ விடுவோம்.

 

இறைவனை அனுதினமும் வழிபடுவோருக்கு இத்தகைய கஷ்டங்கள் வராது.

 

 

–Subham—

 

 

அழகியின் ஆசையும் கோடீஸ்வரரின் புத்திமதியும்! (Post No.3483)

Written by S NAGARAJAN

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:- 5-42 am

 

Post No.3483

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

அழகியின் ஆசையும் கோடீஸ்வரரின் புத்திமதியும்!

 

ச.நாகராஜன்

 

சில வருடங்களுக்கு முன் தன்னைப் பேரழகி என்று அழைத்துக் கொண்ட ஒரு இளம் பெண் தான் உலகின் மிகச் சிறந்த அழகி என்பதால் உலகின் மிகப் பெரிய பணக்காரனை மணந்து கொள்ள விருப்பப்படுவதாகவும் அது நியாயமான ஆசை தான் என்றும் கூறினாள். அதற்கு ஒரு கோடீஸ்வரர் அருமையாக பதில் அளித்தார்.

 

 

பல ஆண்டுகளாக இந்தக் கடிதம் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டு வந்தது.

 

இப்போது இண்டர்நெட் யுகம் என்பதால் இந்தச் சம்பவம் ஆண்டுகொரு முறை புதிய ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் எத்தனை முறை படித்தாலும் அழகிகளும் சரி, ஏனையோரும் சரி இதை விரும்பத்தான் செய்கின்றனர்.

அழகி பகிரங்கமாகத் தன் கருத்துக்க்ளைத் தெரிவித்து எழுதிய கடிதம் இது:

 

 

“நான் மிகவும் நியாயமாகச் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். எனக்கு 25 வயது பிறந்து விட்டது. நான் ஒரு பேரழகி. மயக்கும் ஸ்டைலைக் கொண்டவள். விதவிதமான டேஸ்டும் உண்டு. என் அங்க லாவண்யங்களில் மயங்காதோர் நிச்சயம் இருக்க முடியாது.

 

 

ஐம்பது லட்சம் டாலரோ அல்லது அதற்கு மேலுமோ வருடாந்திர சம்பளத்தைப் பெறும் ஒருவரை மணக்க ஆசைப்படுகிறேன். வெறும் பத்து லட்சம் டாலர் சம்பளத்தைப் பெறுபவர் நியூயார்க்கைப் பொறுத்த மட்டில் மத்திய தர வர்க்கத்தினராகவே கருதப்படுகிறார்.

 

 

எனது ஆசை மிகவும் பேராசையான ஒன்று அல்ல. ஐம்பது லட்சம் டாலர் சம்பளம் பெறுகின்ற யாராவது ஒருவர் என்னை மணக்க ஆசைபப்டுகிறீர்களா?

 

 

இதுவரை நான் டேடிங் செய்த வாலிபர்களுள் அதிக பட்சமாக ஒருவர் 25 லட்சம் டாலர்களையே சம்பளமாகப் பெற்றுள்ளார். ஆனால் எனக்கு இது போதுமானதல்ல.

 

ஆகவே நான் சில விஷயங்களைத் தெரிந்து  கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து தெரிந்தவர்கள் இதற்கு பதிலை அளியுங்கள்.

 

 

  • நல்ல பணக்கார வாலிபர்கள் எஙகு வருகிறார்கள்? தயவுசெய்து ஜிம், ஹோட்டல், கிளப் என்று சரியான முகவரியைத் தாருங்கள்

 

  • எந்த வயதினரைச் சந்தித்து நான் கவர முடியும்?

 

  • மிகப் பெரிய பணக்காரர்களின் மனைவிமார்கள் ஏன் சுமாரான அழகுடனேயே இருக்கிறார்கள்? நான் சந்தித்த சில பெண்கள் அழகிகளே இல்லை. பார்க்க சுமாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகப் பெரிய பணக்காரர்களை மண்ந்து கொண்டிருக்கின்றனர்!

 

 

4) எப்படி நீங்கள் உங்கள் வருங்கால மனைவியைத் தீர்மானிக்கிறீர்கள்? உங்கள் கேர்ள்ஃப்ரண்டாக நீங்கள் யாரை எப்படி எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?”

இப்படிக்கு

 

பேரழகி

 

 

ஜே.பி. மார்கன் என்ற பிரபல நிறுவனத்தின் சொந்தக்காரரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோடீஸ்வரர் பேரழகிக்கு இப்படி பதில் அளித்தார்.

அன்புள்ள பேரழகிக்கு,

 

உனது கடிதத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். உன்னைப் போலவே ஏராளமான இளம் பேரழகிகள் இதே கேள்விகளுடன் இருக்கின்றனர்.

 

உனது நிலையை ஆய்ந்து பார்த்து இங்கே பதில் அளிக்கிறேன். நான் முதலீட்டுத் துறையின் தலை சிறந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி என்பதை நீ நினைவில் வைத்துக் கொள்!

 

எனது வருடாந்திர சம்பளம் நீ விரும்புகின்ற அதே ஐம்பது லட்சம் டாலர் தான்! ஆகவே உனது நேரத்தை நான் வீணடிப்பதாக  நினைக்க வேண்டாம்..

 

 

வணிக நோக்கில் பார்த்தால் உன்னை மணப்பது என்பது ஒரு மோசமான முடிவாகவே இருக்கும். ஏன் என்பதை இங்கே விளக்குகிறேன்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் உனது ‘பேரழகை’ இன்னொருவரின் ‘பணத்திற்கு’ மாற்ற விருப்பப்படுகிறாய்! அதாவது ‘ஏ’ என்பவரின் அழகுக்கு ‘பி’ என்பவர் பணம் தருகிறார்!

மிகச் சரியான பேரம் தான்!

 

என்றாலும் கூட இங்கு ஒரு மிக மோசமான பிரச்சினை எழுகிறது. உனது பேரழகு ஒரு நாள் போய் விடும். ஆனால் எனது பணமோ அசம்பாவிதமாக ஏதாவது நடந்தால் ஒழிய அழியாது.

 

 

உண்மை என்னவென்றால் எனது வருமானம் வருடா வருடம் அதிகரிக்குமே தவிர குறையாது.

 

 

ஆகவே பொருளாதார நோக்கில் பார்த்தால் நான் அதிகரித்துக் கொண்டே போகும் சொத்து. நீயோ தேய்ந்து கொண்டே போகும் ஒரு சொத்து. நீ சாதாரணமாக தேயும் சொத்து இல்லை. பல ம்டங்கு அதிகரித்துத் தேயும் சொத்து. உனது அழகு தான் உனது சொத்து என்றால் அது பத்து வருடங்கள் கழித்து மிக மோசமான நிலையில் அல்லவா இருக்கும்!

 

 

இங்கு வால் ஸ்ட்ரீட்டில் ஒவ்வொரு விற்பனைக்கும்  நிலை எனப்படும் ஒரு பொஸிஷன் உண்டு. உன்னுடன் டேடிங் செய்வதும் கூட ஒரு வகை பொஸிஷன் தான்!

 

வணிக மதிப்பு குறைந்து விட்டது என்றால் பொருளை நாங்கள் உடனே விற்று விடுவோம். அதை நீண்ட காலம் வைத்திருபப்து ஒரு நல்ல முடிவு இல்லை.

 

 

இதே தான் உன்னை  மணப்பதிலும் ஏற்படுகிறது.. ஒரு சிறந்த வணிகர் மோசமாகத் தேய்ந்து வரும் ஒரு சொத்தை ஒன்று லீஸுக்கு விடுவார் அல்லது விற்று விடுவார்.

 

ஐம்பது லட்சம் டாலர் சம்பாதிக்கும் ஒருவர் முட்டாள் இல்லை. அவர் உன்னை டேடிங் செய்ய ம்ட்டுமே விரும்புவார். மணக்க விரும்ப மாட்டார்.

 

 

உனக்கு ஒரே ஒரு சின்ன புத்திமதியைத் தான் என்னால் தர முடியும். ஒரு பெரிய பணக்காரனை மணக்க எந்த வித உபயோககரமான குறிப்பையும் என்னால் தர முடியாது. அதை மறந்து விடு என்பது தான்!

 

நீயே ஐமபது லட்சம் டாலர் சம்பாதிக்கும் வழியை ஆராய்ந்து அதை சம்பாதிக்க முயற்சி செய்! ஒரு பணக்கார முட்டாளைப் பிடிப்பதில் உனது வேலையை இது சுலபமாக்கும்.

இந்த பதில் உனக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.

 

அன்புள்ள

ஜே.பி,மார்கன்

 

இன்றளவும் பேராசைப்படும் பேரழகிகளுக்கு பயனுள்ள ஒரு அறிவுரையாக இது அமைகிறது!

**********

.
.

5 ஜோதிகளும், 4 விளக்குகளும்: திருமூலர், அப்பர் தரும் அரிய தகவல் (Post No.3482)

Written by London swaminathan

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:-  8-09 AM

 

Post No.3482

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக்வேதம் முதல் முதலில் கடவுளை ஜோதி வடிவில் கும்பிட எல்லோருக்கும் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லித் தந்தது.

 

ஓம் பூர் புவஸ்ஸுவஹ, தத்சவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹீ

தியோ யோநஹ பிரசோதயாத்

–என்ற இந்த மந்திரத்தை எல்லோரும் அறிந்து பயன் பெறுவதற்காக மஹாகவி பாரதியார்

செங்கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

—-என்று அழகிய தமிழில் மொழிபெயர்த்து அருளினார்.

 

ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு) உபநிஷத்தில் தமஸோ மா ஜ்யோதிர் கமய (இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாய்) என்ற மந்திரத்திலும் ஒளி இடம் பெற்றது.

அருணகிரிநாதரோ திருப்புகழில் தீப மங்கள ஜோதீ நமோ நம என்று பாடினார். அவருக்குப் பின்னர் வந்த அருட்பிரகாச வள்ளலாரோ அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை என்று பாடினார்.

 

அருணகிரிக்கும் வள்ளலாருக்கும் முன்னால் வாழ்ந்த திருமூலர் ஐந்து ஜோதிகள் பற்றிப் பாடினார். திருமூலருக்கும் முன்னால் வாழ்ந்த அப்பரோ நான்கு விளக்குகள் பற்றிப் பாடினார்.

 

இந்த ஐந்து ஜோதி (ஒளி), நான்கு விளக்குகள் பற்றிப் புரிந்துகொள்ள பாரதியாரின்  சில வரிகள் உதவும்:-

 

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்  – என்று பாரதி பாடினார்.

 

நமக்குத் தெரிந்த ஒளி எல்லாம் விளக்கின் மூலம் வரும் ஒளிதான். ஆனால் ஞானிகளுக்கும் கவிஞர்களுக்கும் மனத்தின் ஒளி (உள்ளத்தில் ஒளி), அறிவு ஒளி (ஞானதீபம்) முதலியனவும் தெரியும்.

 

எப்படி சூரியன் சந்திரன் அக்னி (நெருப்பு) ஆகிய மூன்றும் ஒளியை உண்டாக்கி இருளகற்றுகின்றனவோ அதே போல ஞான ஒளி அறியாமை என்னும் இருளை அகற்றும்.  நம்மைப் போன்ற ‘கண்ணிருந்தும் குருடராய்’ வாழ்வோரை வாக்கினிலேயுள்ள ஒளி மூலம் பெரியோர்கள் கரை ஏற்றுவர். பாரதியார் சொன்னதைப் போலவே அவருக்கும் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தேவார மூவரும் திருவாசகப் பெரியாரும், திருமூலரும் பாடி வைத்தனர்.

 

 

சோதி=  ஜோதி= ஒளி = விளக்கு

 

அப்பர் காட்டும் 4 விளக்கு

 

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

அப்பர் தேவாரம் 4-11-8

 

 

பொருள்

 

1.இல்லத்தினுள் உள்ள விளக்கானது இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது;

 

  1. சொல்லினுள் உள்ள விளக்கானது ஜோதி வடிவில் உள்ளது;

3.பலருடைய மனதில் உள்ள விளக்கு அது எல்லோரும் காண்பது.

 

4.நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு நமச்சிவாய” என்ற மந்திரம்

 

நமச்சிவாய என்னும் விளக்கு அறியாமை எனும் இருளை அகற்றும்; சிவஜோதியில் கலக்க உதவும்.

 

 

திருமூலர் சொல்லும் 5 ஜோதி

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்

பிண்ட ஒளியுடன் பிதற்றும் பெருமையை

உண்டவெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது

கொண்டகுறியைக் குலைத்ததுதானே

–திருமூலரின் திருமந்திரம் 1975

 

பொருள்:-

மானிடர் உடம்பைச் சூழ்ந்துள்ள அண்ட ஒளியானது, உலகில் வானமண்டலத்தில் விளங்கும் ஒளியுடன்  — உடலிலுள்ள உட்கருவிகளின்  அறிவால் பிதற்றும்  வீணான பெருமையை விழுங்கி —  உடல் கடந்துள்ள ஆகாய வெளியில் திகழும்  ஒளியினுள்ளே மறைந்தது. அதனால் உடலின் அமைப்புகள் காணாமல் போகும்; உடலும் ஒளியாய்த் திகழும்.

 

ஐந்து வகை ஜோதிகள்:-

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் — என்ற மாணிக்க வாசகரின் (திருவாசக/திருவெம்பாவை) பாடலுக்கு உரை எழுதிய திரு தண்டபாணி தேசிகர் மேற்கூறிய திருமந்திரப் பாடலை மேற்கோள் காட்டிப் பின் வருமாறு எழுதுகிறார்:-

 

“சோதியுள் அண்ட ஜோதி, பிண்ட ஜோதி, மன ஜோதி, ஞான ஜோதி, சிவ ஜோதி என ஐந்து என்பார் திருமூலர். அவற்றுள் அண்ட ஒளி ஒவ்வோர் அண்டங்களிலும் உள்ள சூரியன் சந்திரன் அங்கி (தீ), விண்மீன் முதலியன (திருமந்திரம் 1975).

பிண்ட ஒளி உடம்போடு கூடிய உயிர் அறிவின் கண்ணதாய் —  மல நாசம் விளைக்க உபாயமாகும் பசுஞான ஒளி (பாடல் 1985);

உயிரைச் சூரியன், சந்திரன், அனல், கலையாகிய நான்குமாக அறிதல் மனவொளி (பாடல் 1990);

ஞான ஒளி பர நாதத்தின் செயலாய்  வைகரியாதி வாக்குகள் உதயமானதற்கு இடமாய் இருப்பது.

 

Kartikai Deepa on top of Tiruvannamalai

சிவ ஒளி :-

முற்கூறிய நான்கு ஒளிகளும் சிவ ஒளியின் முன், இருள் போல அகன்றொழியும் —  குடங்கள் தோறும் (அதிலுள்ள நீரில்) சூரிய ஒளி தோன்றினும், அந்தக் குடங்களின் வாயை மூடச் சூரிய ஒளி அந்தக் குடங்களில் மட்டும் அடங்கியதாகச் சொல்ல முடியாததுபோல எல்லா உயிர்களிடத்தும் விளங்குவதாயிருப்பது அகண்ட ஒளி எனப்படும்.

 

இம்மந்திரத்தினுள்ளும் அண்ட ஒளி, பிண்ட ஒளி, பிதற்றும் பெருமையை உண்ட வெளியாகிய மனத்துள் விளங்கும் ஒளியாம் மனவொளி, அவ்வொளிக்குள் ஒளியாகிய ஞான ஒளி, அகண்ட ஒளி என்று ஐந்து கூறுதல் காண்க. இவ்வண்ணம் இறைவன் நால்வகை ஒளியினும் சிறந்து, பெரிய ஒளியாகிய சிவஞானமாகிய முதற்படியில் நின்றாரும் அரிதற்கரிதாய் இருத்தலின் அரும்பெருஞ் சோதியை  என்றார் மாணிக்கவாசகர்.

 

திருவெம்பாவை இயற்றப்பட்ட இடம் திருவண்ணாமலையாதலின் திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் தேடி அறிய முடியாத ஒளிப் பிழம்பாக நின்றார் இறைவன் என்னும் தல புராண வரலாற்றை அடக்கிக் கூறியதாக உரைத்தலுமாம்” — என்பது தண்ட பாணி தேசிகரின் உரை.

பாரதியாரும் சோதிமிக்க நவகவிதை என்று பாடுவதைக் காண்க.

 

–சுபம்-

 

 

Book Review: Brindavan Express by Mr V.Desikan (Post No. 3481)

74231-sundal

Written by S NAGARAJAN

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:- 6-17 am

 

Post No.3481

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

This article first published in www.ezinearticles.com under expert author : santhanam Nagarajan

 

 

Brindavan Express by Mr V.Desikan

 

Santhanam Nagarajan

 

The book under review Brindavan Express written by Mr V Desikan is a fantastic book.

 

Mr Desikan belongs to Tamilnadu.

 

He has obtained his  degree in electronics from the Madras Institure of Technology and joined in Defence Research and Development organization at Bangalore. He is the recipient of ‘Scientist of the Year (1983) DRDO  award from the late Prime Minister of India Mrs Indira Gandhi

 

He has jotted down his thoughts systematically from time to time and like a sculptor creates his dream statue, has written down articles weaving his beautiful thoughts with a  humorous touch.

 

The book has 73 articles under twelve captions namely My roots, Emotions, Life is a game, My living town – Bangalore, Food, Music and Novels, Future Tense, Language, Growing old, Science and Engineering, What is in a name and Mixture.

 

One of his friends Mr RV Rajan induced him to publish these article in a book form.

 

The articles were published in a leading English daily Deccan Herald. His style is lucid.

 

Each and every article kindles readers thought process. His conclusions are compelling and convincing.

 

As a scientist he dreams towards a better future where every thing is perfect. He points out that the future lies in Nano technology.

 

There are  many quotations through out the book from great men like Rabindranath Tagore, Harry Emerson Fosdick, Shakespeare, G.K.Chesterton etc.

 

The book makes an interesting reading. He has

 

The book is neatly printed and can be obtained from leading book shops.

 

Some excerpts from the book:

f31bf-sundal2b2

About his Boss:

 

My boss Burman, a confirmed bachelor was in charge of system integration. He was a chain smoker.If he liked someone,he would call him an ‘idiot’ or ‘a fool’ –  I was one of his favorite idiots!

 

On seeing his dream vehicle,  the 40 feet long SANGAM:

I went towards my favorite SANGAM  and stood there for a long time. I looked at her and gently whispered (what Brutus told Cassius):

‘Forever and forever farewell, my dear

If we do meet again, why, we shall smile.

If not, why then this parting was well made.’

 

About Sundal :

If there be Chat Centres, fast food outlets all over our cities, why can’t someone open a ‘Sundal Center’?

 

About KDK (Kumbakonam Degree (Coffee) Kaapi :

Thank you KDK

You bring me joy in the morning

You bring me joy in the morning;

 

About the requirement of a positive newspaper :

I have a real problem on hand. All my life I have enjoyed sipping my morning coffee, reading the morning newspaper. I have recently discontinued my habit as it is no more a pleasant experience. Now I need a ‘Positive Newspaper’ badly.

 

I have a dream:

My idea of Next-gen city is that it should be

Totally green and with Zero pollution

With efficient and complete public transportation

With minimum private vehicles

Total Connectivity – Airports, roads, sea (where applicable)

Full Safety

 

I congratulate Mr Desikan for releasing this wonderful book. I strongly recommend this book for the book lovers.

 

*********

திரு/ ஸ்ரீ என்ற சொல் ‘ஸர்’ ஆக மாறியது எப்படி? (Post No. 3480)

73ed7-shri

Research Article Written by London swaminathan

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:-  6-01 AM

 

Post No.3480

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திரு என்ற சொல்லுக்கு செல்வம், அதிர்ஷ்டம், வளமை, லெட்சுமி, ஒளி— என்று பல பொருள் உண்டு. தற்காலத்தில் பெயருக்கு முன்பாகவும் கோவில், புனித நூல்கள், ஊர்கள், நாடுகளுக்கு முன்பாகவும் இதைப் பயன்படுத்தி வருகிறோம்.

9cf2c-shri-ganesh

மொழி இயல் ரீதியில் பார்த்தால் இது ‘ஸ்ரீ’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து (S=T) வந்தது தெரியும். அது மட்டுமல்ல; இதுவே ஆங்கிலத்தில் ஸர் SIR என்னும் பட்டத்தையும் ஸார் Sir (ஐயா) என்ற சொல்லையும் கொடுத்தது என்பதும் புலப்படும். திரு என்ற சொல்லுக்கு என்ன பொருள் உண்டோ, என்ன என்ன உபயோகம் உண்டோ அது அததனையும் சம்ஸ்கிருதத்திலும் ஸ்ரீ — என்ற சொல்லுக்கும் உண்டு. 3000 ஆண்டுகளுக்கு முன் இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிரிந்து இரண்டு பெரிய மொழிகளாக உருவாயின. பிரித்தாளும் சூழ்ச்சியுடைய வெளி நாட்டார் திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கி புதுக் கதைகளை எட்டுக்கட்டிவிட்டனர். உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழ் அல்லது சம்ஸ்கிருத மூலத்துடன் எளிதில் தொடர்பு படுத்தலாம். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு.

 

ஆங்கில நாட்டில் ஒரு காலத்தில் வீரதீரச் செயல்கள் செய்தோருக்கு ‘ஸர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து சான்றுகள் உள. ஆனால் பிற்காலத்தில் சிறப்பான செய்கைகள் சாதனைகள் புரிந்தோர் அனைவருக்கும் இப்பட்டம் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலுருந்து வெளியேறி பின்னர் காமன்வெல்த்COMMON WEALTH என்னும் அமைப்பிலுள்ள நாட்டு சாதனையாளருக்கும் இப்பட்டம் வழங்கப்படுகிறது.

 

‘ஸ்ரீ’ என்ற சொல்லின் இடமாறு தோற்றப் (Sri = Sir) பிழைதான் ஸர். நாம் எப்படி மதுரை என்பதை மருதை, குதிரை என்பதை குருதை, வாயில் என்பதை இல்வாய் என்றெல்லாம் மாற்றிச் சொல்ல்கிறோமோ அது போலத்தான் ச்ரீ என்பது ஸர் ஆகியது. இந்தியில் கூட தர்ம என்ற சொல்லை தரம் என்பர்.

 

இதற்கு இன்னொரு முறையிலும் விளக்கம் உண்டு. திரு என்பதே ஸர்(ரு) ஆனது என்று. ‘ச’ அல்லது ‘ஸ்’ என்பத ‘த’ அல்லது ‘த்’ ஆக மாறும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வி’த்’தை என்பதை வி’ச்’சை என்பர். த்யூதம் என்ற சொல் தமிழில் சூது எனப்படுகிறது. ஆங்கிலத்தில் எடுகேடியான் EDUCATION என்று எழுதி அதை எடுகேஷன் என்று உச்சரிப்பர். இவ்வாறு நூற்றுக்கணக்கான சொற்கள் டியான் TION என்று எழுதபட்டாலும் ஷன் SION என்றே உச்சரிக்கப்படும் அங்கும் டி என்பது ஷ ஆக மாறியதைக் காணலாம்.

 

ஆங்கிலத்தில் ஸர் SIR  பட்டம் சாதனை புரிந்தோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. நமது நாட்டிலும் திரு, ஸ்ரீ என்பன எல்லாம் புனித அல்லது சாதனையாளருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்போழுது சர்வ சாதாரணமாக திருவாளர், திருமதி என்று எல்லோர் பெயர்க்கு முன்னாலும் போடத் துவங்கி விட்டோம். ஸர் என்பதும் ஒருவரை மரியாதையாக ஸார் (ஐயா Sir) என்று கூப்பிடுவதும் தொடர்புடைய சொற்களே. எப்படி நாம் திரு என்பதை மலிவான சரக்காக்கி எல்லோருக்கும் பயன் படுத்துகிறோமோ அப்படி அவர்களும் ஸார் என்பதை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

74595-sri

அது சரி, உங்கள் இஷடப்படி இப்படி வியாக்கியானம் செய்கிறீர்களே. ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்ட் (ETYMOLOGICAL) அகராதி போன்ற நூல்கள் இந்த சொல்லின் பிறப்பு (etymology) பற்றி என்ன கூறுகிறது? என மொழியியல் அறிஞர் வினவலாம். அவர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். இது லத்தீன் மொழியில் அல்லது பழைய பிரெஞ்சு மொழியில் (Latin or Old French) இருந்து வந்திருக்கலாம் என்று ஆயிரம் ஆண்டுக் கதையை மட்டுமே சொல்லுவர். அதற்கு முன் லத்தீனும் அதிலிருந்து தோன்றிய பிரெஞ்சு முதலிய மொழிகளும் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுவர்.  கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே! என்போர் கதையாக சம்ஸ்கிருதம் என்பதை நேராக ஒப்புக்கொள்ளாமல் அதற்கும் ஒரு மூல மொழி இருந்ததாகவும் அதிலிருந்து பிரிந்ததாக்கும் என்றும் தட்டி மழுப்புவர்!

 

மேலும் அவர்கள் கூறும் பழைய சொற்கள் இன்றும் உலகில் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் இது செரி SERE என்பதிலிருந்து ஸர் SIR ஆகி இருக்கலாம் என்பர். இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஸ்ரீ என்பதை செரி SERE என்றுதான் எழுதுகின்றனர். இன்னும் சிலர் செயுர், சிர், சிரி என்பனவற்றிலிருந்து மருவியிருக்கலாம் என்பர். அதையும் இலங்கையில் காணலாம அவர்கள் ஸ்ரீ மாவோ என்பதை சிறீ (siri) மாவோ என்பர். சிறீலங்கா (SRI LANKA) என்றே எழுதுவர். ஸ்ரீ லங்கா என்றால் ஒளிமிகு இலங்கை என்று பொருள்.

 

இந்தியாவில் ஸர் (SIR) பட்டம் பெற்றோர்:

ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திர போஸ், சி.பி.ராமஸ்வாமி அய்யர், அண்மையில் சசின் டெண்டூல்கர் மற்றும் பலர்.

 

திரு அல்லது ஸ்ரீ அடை மொழி உடைய நூல்கள், ஊர்கள் (சில எடுத்துக்காட்டுகள் மட்டும்):-

 

ஸ்ரீ சைலம், ஸ்ரீ நகர், ஸ்ரீ பெரும்புதூர்

d6814-shri-symbol-svg

திருவாரூர், திருவையாறு முதலிய 400 பாடல் பெற்ற சிவ, விஷ்ணு தலங்கள்.

 

திருவாசகம், திருக்கோவையார் முதலிய நூல்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம்

 

–Subham–

 

Origin of Sri= Sir = Thiru (Sanskrit/English and Tamil) – Post No. 3479

Research Article Written by London swaminathan

 

Date: 24 December 2016

 

Time uploaded in London:-  15-22

 

Post No.3479

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Believe it or not, the Sanskrit word ‘Sri’, English honorific title ‘Sir’ and Tamil word ‘Thiru’ all mean the same. Sir and Thiru came from the Sanskrit word Sri.

Sri is written as ‘Siri’ (as in Sirimao Bhandaranayake) in Sri Lanka and ‘Sere’ in South East Asia.

 

In India, Sri is also written as Shree, Sree, Shri and Sree. Sri means wealth and Goddess Lakshmi. Sri also means light, resplendent etc.

 

In the name of a country Sri Lanka , the meaning of Sri is ‘replendednt’.

 

Nowadays Hindus use it before a male’s name to give him respect. It is used as Mr and in Tamil Tiru. If it is a woman, then Srimati (in Tamil Tirumati) is used. It may mean respectful or enlightened.

 

Sri= Lakshmi, Wealth, Fortune, Prosperity, Light, Resplendent (nowadays Mr)

 

Tamil word Thiru or Tiru is also derived from Sanskrit Sri. In Tamil also the meaning is similar to Sanskrit.

According to linguistic rules ‘S’ and ‘T’ are interchangeable. That is why all the English words with ‘TION’ ending is pronounced ‘SION’ ((E.g) Education, Fruition, Cognition. Even in Tamil literature Tamil saints changed Vithyai as Viccai (Vidhya=Vithyai- vicchai) in Tevraram and Tirvasagam and Divya prabandham. The oldest portion of these Tamil devotional literature is at least 1500 year old.

Sir—Honorific Title

English people who are knighted are given the title ‘Sir’. In India scientists like Sir C V Raman, Sir Jagadish Chandra Bose, Literaturs like Ravindranatha Tagore and judges like Sir C Ramaswami Iyer, sportsmen like Sachin Tendulkar were awarded this ‘SIR’ title by the British Queen.

 

The etymology of the word according to Oxford dictionary is as follows:-

The word Sir derived from the Middle English ‘Sire’ according to the dictionary. It was first used in 1297. All these are forced etymology, because it doesn’t explain where the Old French or Latin got it. As everyone knows that Germanic languages and Romance languages are derived from Sanskrit , the root of Sir can be easily traced.

 

Sri is found in the Vedas. There is a Suktam (Poem/verse/hymn) named after Sri. Names such as Srimati, Sri, Sridharan, Srinidhi, Srinivas are common even today. Oldest Shasranama Vishnu sahasranama has several names beginning with Sri. Several town names (Srisailam, Sriperumpudur) and book names (Sri Bhagavata, Srimad Bhagavd Gita) also have the Sri as prefix.

Following the Hindus, the world used sir(i) in other European langauges. We have proofs for such usage even today in Sri Lanka (Siri) and South East Asia (sere). Change in the position of the letter ‘I’ or change in the position of sound cause such spellings. For instance Dharma is written as Dharam in Hindi. The famous city of Tamil Nadu Madurai is pronounced as Marudai and Kuthirai (horse) is pronounced as Kuruthai. No wonder Sri ischanged to Sir or Siri or Sere in other languages!

 

–Subham–

 

 

‘தேவர் கோ அறியாத தேவ தேவன்’ யார்? திருவாசகக் கதை (Post No.3478)

Written by London swaminathan

 

Date: 24 December 2016

 

Time uploaded in London:-  5-59 AM

 

Post No.3478

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்: சிவ பெருமானே உன்னை இந்திரனாலும் கண்டு கொள்ள முடியவில்லையே! என்று.

 

தேவர் கோ அறியாத தேவ தேவன்

செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை

மூவர் கோனாய் நின்ற முதல்வன்

பாடல் 30, திருச்சதகம்

இன்னொரு பாட்டிலும் இதே கருத்தை முன்வைக்கிறார்

மேலை வானவரும் அறியாததோர் கோலமே யெனை ஆட்கொண்ட கூத்தனே — பாடல 43, திருச்சதகம்

 

தேவர் கோ= தேவர்களுக்கு அரசனான இந்திரன்; வானவர்=தேவர்கள்

 

 

அது என்ன கதை?

இந்திரன் தலைமையிலுள்ள தேவர்கள் ஒருமுறை அசுரர்களை வென்றவுடன் தலைக் கனம் ஏறிவிட்டது. ஆண்டவன் அருளால் கிடைத்த வெற்றியைத் தாங்களே போராடிக் கிடைத்த வெற்றி என்று யான், எனது என்னும் செருக்கில் (அஹங்காரம் – யான், மமகாரம்/மமதை=எனது) மிதந்தார்கள் இவர்களுடைய இறுமாப்பை வெட்டி வீழ்த்த சிவபெருமான் அவர்கள் முன்னால் ஒரு யக்ஷனாகத் தோன்றினார். யக்ஷன் என்பது மரங்களில் வாழும் பேய். ஒரு பெரிய ஆசனத்தில் உடகார்ந்தார். அது இந்திரலோகத்தில் இந்திரன் அமரும் ஆசானத்தைவிடப் பெரியது. இந்திரனுக்கு யார் இந்த ஆள் என்று தெரியவில்லை. உடனே அக்னியை அழைத்து, நீ போய் யார்?  என்ன? என்று விசாரித்து வா ஏன்று அனுப்பினான்.

 

அக்னி போய் கேள்வி மேல் கேள்வி கேட்ட உடனே யக்ஷன் கேட்டான்:

நீ யார்?

நானா? நாந்தான் அக்னி/நெருப்பு;  எதையும் எரிக்கும் வல்லமை படைத்தவன்.

யக்ஷன் சிரித்துக்கொண்டே, அப்படியா? இதோ ஒரு துரும்பு; இதை எரித்துக்காட்டு என்றான்

அக்னி எவ்வளவு முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே இந்திரனிடம் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிட்டான்.

 

இந்திரன் வியப்புற்று, அப்படியா சேதி? என்று சொல்லி வருண பகவானை அழைத்தான். அவன் அங்கே சென்றபோது அந்த யக்ஷன், துரும்பை நனைக்க முடியுமா  என்று கேட்டான். வருணன் சிரித்துக் கொண்டே துரும்பின் மீது மழையைக் கொட்டுவிப்போம் என்று சங்கல்பித்தான். ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீரும் விழவில்லை. அவன் பயந்துபோய் இந்திரனிடம் சொல்லவே வாயு பகவனை அனுப்பினான். அவனும் எதையும் நகர்த்த சக்தி இல்லாதவனாக திரும்பி வந்தான்.

 

உடனே இந்திரன் நான் போய் என் வலைமையைக் காட்டுவேன் என்று புறப்பட்டான். முதலில் யக்ஷனைப் பார்த்து யார் என்று கேட்டான. உடனே யக்ஷன் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அப்போது உமையம்மை அவன் முன் தோன்றி, அவனுடைய கேள்விக்குப் பதில் சொன்னாள்:- யக்ஷன் வடிவில் வந்தவர் தனது கணவரே என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றும் சொன்னாள். அப்போதுதான் தேவர்களின் செருக்கு அழிந்தது. பின்னர் இந்திரனும் சிவனை வழிபட்டு பெரும்பேறு பெற்றான் என்ற கதை கேனோபநிஷத்தில் இருக்கிறது. இது சிவ பெருமானே முழுமுதற் கடவுள் என்பதைக் காட்டும் கதை ஆகும்.

 

இப்போது  திருவாசகப் பாடலைப்  படித்தால் பொருள் நன்கு விளங்கும்:-

 

மேலை வானவரும் அறியாததோர்

கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே

ஞால மேவிசும்பே வந்து போங்

காலமேயுனை என்று கொல் காண்பதே (43)

 

பொருள்:-

மேலான பதவிகளில் உள்ள தேவர்களும் அறிய முடியாத ஒப்பற்ற திருவுருவே! அடியேனையும் ஒரு பொருட்டாகக் கருதி ஆட்கொண்டவனே! மண்ணும் விண்ணும் தோன்றி அழிதற்குக் காரணமான கால வடிவானவனே! உன்னை நான் காண்பது எப்போது?

 

தேவர் கோ அறியாத தேவ தேவன்

செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை

மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி

மூதாதை மாதாளும் பாகத் தெந்தை

யாவர்கோன் என்னையும் வந்தாண்டு கொண்டான்

யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

மேவினோம் அவன் அடியார்  அடியாரோடு

மேன்மேலுலுங் குடைந்தாடி யாடுவோமே

பாடல் 30, திருச்சதகம்

பொருள்:-

தேவர்களின் அரசனான இந்திரனும் அறியப்படாத தேவ தேவனும், செழுமையான உலகங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவர்க்கும் தலைவனாய் நிற்கும் முதற்பொருளும், அம்மூவர் வடிவும் தன் மேனியில் கொண்டவனும், அவர்கட்கு மூதாதையும், உமாதேவியை இடப்பக்கத்தில் வைத்தாடும் எந்தையும் யாவர்க்கும் தலவனாக இருப்பவன் சிவன்; அவன் அடியேனையும் வலிய வந்து ஆட்கொண்டான். ஆகையால் நாம் எவர்க்கும் அடிமையல்ல; எவர்க்கும் அஞ்சோம்; அவனுடைய அடியார்க்கும் அடியார் ஆவோம்; மேலும் மேலும் இந்த ஆனந்த வெள்ளத்துள் மூழ்கிக் குடைந்தாடுவோம்.

(இந்தப் பாட்டிலுள்ள வரிகளை அப்பரும் நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்ற பாட்டில் பயன்படுத்துவது குறிப்பிடத் தக்கது. அப்பர் தேவாரத்தில் மாணிக்க வாசகரின் தாக்கத்தை தனி ஒரு கட்டுரையில் காண்போம்.)

 

–சுபம்–