மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 18 (3509)

Written by S NAGARAJAN

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  5-53 AM

 

 

Post No.3509

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 18

 

ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள் – 3

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 

25) சிவாஜி சைநியத்தாரிடம் கூறியது – சி.சுப்பிரமணிய பாரதி (1906)

இந்தப் பாடல் கோத்திர மங்கையர் குலங்கெடுக்கின்றார் என்ற வரியுடன் முடிகிறது.

குறிப்பு என்று குறிப்பிட்டு கீழ்க்கண்ட வரிகள் தரப்படுகின்றன:

குறிப்பு: இச் செய்யுளில் ‘பாரதநாடு பார்க்கெலாந் தெய்வமாம், நீரதன் புதல்வரிந் நினைவகற்றாதிர்!’ என்னும் இரண்டு வரிகள் புதிய பதிப்புகளில் (சக்தி 1957) காணப் பெறவில்லை. ‘நவைப்டு துருக்கர்’ என்பது நகைபுரி பகைவர்’ என மாறி யிருக்கிறது.

 

26) அல்லா! அல்லா! அல்லா!  – இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை – சுதேசமித்திரன் 24-6-20

 

இந்தக் கவிதை பற்றிய குறிப்பு ஒன்றும் இங்கு தரப்படுகிறது.

சுதேசமித்திரன் காரியலத்தார் வெளியிட்ட ‘கதாரத்னாகரம்’ என்னும் தமிழ் மாதப்பத்திரிகை 1920 ஜூலை மாத இதழில் 77ஆம் பக்கத்தில் பாரதியார் பாடிய அல்லா பாட்டு வெளியாகியிருக்கிறது. இதில் காணும் ஸ்வரவரிசையும் , மூன்றாவது பாட்டும் ஏற்கனவே வெளிவந்துள்ள ‘பாரதியார் கவிதை’யில் காணப் பெறவில்லை.

 

குமரி மலரில் இந்தக் குறிப்பு ஒரு புறமிருக்க இப்போதுள்ள பாரதியார் கவிதைகளில் விடுபட்ட மூன்றாம் சரணம் இணைக்கப்பட்டுள்ளது.

 

‘ஏழைகட்கும் செல்வர்கட்கும் இரங்கியருளும் ஓர் பிதா’ என்று இந்த சரணம் ஆரம்பிக்கிறது.

 

27) A Beautiful Arrangement நேர்த்தியான வியாபாரம் – சி.சுப்பிரமணிய பாரதி (1907)

இந்தியா வாரப் பத்திரிகை 27-4-1907

 

28) Excessive Optimism   அளவு கடந்த நம்பிக்கை சி.சுப்பிரமணிய பாரதி (1906)

இந்தியா வாரப் பத்திரிகை 2-11-1906

 

29) பத்திரிகைத் தமிழ் சி.சுப்பிரமணிய பாரதி (1909)

இந்தியா 24-4-1909

 

30) பாரதி திருநாள்

திரு.வி.க (1929)

நவசக்தி  11-9-1929 தலையங்கக் குறிப்பு (ஆசிரியர் திரு.வி.க)

 

இந்தக் கட்டுரை மூலம் 1929லிருந்தே பாரதியார் தினம் கொண்டாடப்பட ஆரம்பித்திருபப்தை அறிய முடிகிறது.

இதில் திரு.வி.க குறிப்பிடும் வாசகங்கள் உருக்கமானவை.

சில வரிகளைக் கீழே பார்க்கலாம்:

தமிழ் நாட்டுக்குப் புத்துயர் அளித்துத் தமிழ் மொழிக்கு என்றும் மாறாத இளமையைத் தந்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் திருநாள் இன்று உறுகின்றது.

இதைத் தமிழர்கள் ஆங்காங்கு கொண்டாடுவார்கள் என்று நம்புகிறோம்.

வறுமையில் வாடி நின்ற பாரதியார், இணையிலாத் தமிழ்ச் செல்வத்தை நாட்டுக்கு அளித்துச் சென்றார்.

 

31) சக்கரவர்த்தினி சி.சுப்பிரமணிய பாரதி (1906)

   நெ.100, வீரராகவ முதல்தெரு,

   திருவல்லிக்கேணி, சென்னை

   – சக்ரவர்த்தினி’ 1906 பிப்ரவரி

இந்தக் கட்டுரையில் பாரதியார் எழுதும் முதல் வரி சக்கரவர்த்தினியின் ஆரம்பம் பற்றித் தெரிவிக்கிறது.

“நமது பத்திரிகை பிரசுரமாகத் தொடங்கி ஏழு மாதங்கள் ஆய்விட்டன.”

 

32) மாதர் கல்விக் கணக்கு சி.சுப்பிரமணிய பாரதி (1906)

சக்ரவர்த்தினி  1906 பிப்ரவரி

 

33) மகா மகோபாத்தியாய சாமிநாதய்யர் சி.சுப்பிரமணிய பாரதி (1906)

சக்கரவர்த்தினி சென்னை 1906 பிப்ரவரி

 

34) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி

கனம் கே.வி.அரங்கசாமி ஐயங்கார் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதுவதன் சாராம்சம் : –

கவியும் தேசபக்தரும் ஆகிய ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி இள வயதில் இம்மண்ணுலகை நீத்து விண்ணுலக கெய்தியானது தமிழ் நாட்டிற்கே பெருத்ததொரு நஷ்டமாகும்.

   அவர் தன் கவித்திறமையை இந்தியாவின் முன்னேற்றத்திலும், இந்திய  மக்களின் முன்னேற்றத்திலும் உபயோகப்படுத்தி வந்தார்.

அறிவாளிகள் உயிருடன் இருக்கும் போது ஜனங்கள் கௌரவிக்காதது சாதாரணம். அப்படியிருந்தும் ஸ்ரீமான் பாரதியாரின் தேசபக்தியும் இனிமையான கவிகளும் சிலரை அவர் பால் ஈர்த்தன.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் காலஞ்சென்ற ஸ்ரீமான் வி.கிருஷ்ணசாமி ஐயர் ஆவர். அவர் பாரதியாரின் நூல்களை வாங்கி ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் இனாமாக அளித்தார்.

  ஸ்ரீமான் பாரதியார் அஞ்ஞாதவாசத்தில் அதிக கஷ்டப்பட்டார். பாரதியாருக்கு போதிய சௌகரியகளில்லாமையாலும், குடும்பக் கவலைகள்  மேலிட்டமையாலும் அவர் உடல், மனம் இரண்டிலும் நலிவுற்றார்.

அவர் தம் சொந்த நாட்டிற்கு வந்த பின்னரும் கவனிக்கப்படடமையால் இறக்க நேரிட்டது தேசத்திற்காக உழைக்கும் தேசபக்தர்களின் நன்மைகளைக் காங்கிரஸாவது கவனிக்குமா?

   பாரதியாரின் நூல்கள் எஞ்ஞான்றும் நிலைத்திருக்கும். அவர் தம் பந்துக்களில் யாரேனும் அவர் நூல்களைச் சேகரித்து வெளியிடுவாரா?

   தமிழர்களுக்கு ஆத்மா இருக்கும் வரை அவர்கள் சுப்பிரமணிய பாரதியின் அரிய சேவைகளை  மறக்க மாட்டார்கள்.

            -நவசக்தி

              4-11-1921   ஆசிரியர் திரு.வி.க

 

குமரி மலர் பத்திரிகையில் ஏ.கே. செட்டியார் வெளியிட்டு வந்த அரிய பாரதியாரின் கவிதை மற்றும் கட்டுரைகள் அவரின் தமிழ் பற்றையும் பாரதியார் பற்றையும் அறிவிப்பன. அத்துடன் பாரதியார் பற்றிப் பலரும் அந்தக் காலத்தில் பல்வேறு இதழ்களில் எழுதியிருந்த கட்டுரைகளையும் கூட அவர் தொகுத்து தன் குமரி மலரில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

இன்னும் பல கட்டுரைகளை அடுத்துக் காண்போம்.

இவை பாரதி இயலில் ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல, பாரதியாரைப் பற்றி நன்கு அறிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

                         *****

 

 

‘Eyeless Needle’ Changed the Life of a Millionaire! (Post No.3508)

Compiled by London swaminathan

 

Date: 2 January 2017

 

Time uploaded in London:-  16-15

 

Post No.3508

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Pattinathar was a rich man who lived in the port city Kaveri Poompattinam (also known as Pumpuhar) in the tenth century CE. He has not been included among the Sixty-Three Saiva Nayanmars, though five of his poems have been taken into the Eleventh Tirumurai.

 

A bright infant he was, left uncared for in a garden at Tiruvidaimarudur. It was picked by a poor couple who it to Pattinathar for reward. He took the child and reared it as his own son, naming him Marudapiran. Some years later the boy disappeared after asking his mother to handover a box to his father when he returned home. When Pattinathar opened, it he found an eyeless needle and a palm leaf on which a conundrum had been written.  This is said to have opened his eyes to the truth about the divine nature of the boy, who was thought to be God Shiva himself. He immediately arranged for the distribution of his wealth to the poor, renounced life and became an ascetic. He wandered far and wide visiting several sacred places and temples and finally attained salvation at Tiruvotriyur.

 

In the course of his pilgrimage he is reported to have visited the Tuluva country and converted a king of Bhadragiri to his creed of Yogic asceticism.

 

Commenting on the eyeless needle which brought a sea change in the life of Pattinathar A J Appasamy (in a book published by YMCA Publishing house nearly 100 years ago) says: “The eyeless needle, tradition maintains, was the means of Pattinathar’s conversion. It swiftly flashed across his mind that just as a needle without an eye is of no value., though the eye itself be the tiniest of things, so the human soul which does not devote itself to God, is lost. The little symbol brought home to him that great truth.

 

The word Pattinathar means “He of the City”. Pattinathar belonged to the mercantile clan. According to the tradition he was a Chettiar. A flourishing merchant, it is well known, will be greatly attached to his business and wealth. It takes a miracle to wean him away from these. And, a miracle did take pace, in his life. It pleased Lord Shiva to bring about his enlightenment in a flash “ All wealth is worthless, yes as worthless as an eyeless needle”. This knowledge made a new man of Pattinathar. He revelled in divine vagabondry. He sang

Our home is Tiruvalankadu; we have with us

A begging-bowl – God given- and never empty;

To supply as whatever we need, there is the rich land;

O goody heart, there is none our equal.

 

Visit to a Courtesan’s house

The great commentator Sivagnana Munivar says “Here is commanded the chanting of Panchakshara as ordained. Though for these souls the effulgence of Gnanam (wisdom) is vouchsafed, Nescience does its besetting, even as the worm accustomed to eating neem, forever repairs to it.” Lust besieged, out saint visited a courtesan. She took some time to present herself before him. Meanwhile, our saint quelled his sinful thought. When the woman eventually came, he burst into verse thus:

“O Peafowl-like woman adorned with the garlands

Of bourgeoning flowers, the one that just now

Quested for you, has gone away; compose yourself.

If you yearn for me I will kick you on your hips

And if I think of you, you kick me.

 

In the history of Tamil religious literature he has secured a niche which is proof against the tooth of time and razure oblivion.

 

Two Pattinathars?

It is said that there were two Pattinathars. The author of the hymns included in the Eleventh Tirumurai is the earlier of the two. A careful perusal of his poems establishes this fact indubitably. Pattinathar the second, if such a description can pass muster, is the author of the poems given below:

Kovil Tiru akaval, Kachi Tiru akaval, Tiruvekampamalai, The decad of Obsequies, Anatomical song.

 

Pattinathar refers to the eyeless needle episode his poems:

He tore a cloth of silk, placed there in with love

A thick needle, folded it and put it into the hand

Of my wife with rich tresses;

Did Siva by his advent intend that I should

Give up my love for my bewitching wife?

For ever hail the flower-feet of the strong-armed Lord

Of Annamalai, oh my heart!

In this world, of what avail are wealth

Tined with evil and the buries riches?

Even an eyeless needle accompanies you not

After you decease”.

 

AV Subramania Aiyar wrote the following in 1957 believing that there was one Pattinathar:

 

“A careful study of the very scanty materials about the life and works of Pattinathar shows that there are, broadly, two periods in his life after his final and sudden renunciation. Ther is a tradition that when he left his home he took with him a broken pot and a palm leaf manuscript of Tirumular’s poem. There is no doubt that he was greatly influenced by Tirumular’s Tirumantiram.  There was a significant change in the lives of both Sivavakkiyar (a Tamil Siddha) and Pattinathar at some crucial period in their lives.

 

There are some similarities and differences in the pomes of Sivavakkiyar and Pattinathar. Both have shown an excessive desire to extoll the virtues of unqualified asceticism and Yogic mysticism in language that can be understood by the masses. Their frequent and repeated scornful references to the physical facts of sex and the biological facts of birth are similar in tone, if not in language.

Pattinathar’s poems are happily free from the violent denunciations of idol worship, temples, rituals, caste, the Vedas, Agamas etc. which Sivavakkiyar indulges in.

 

Source Books:

St Pattinathar in English by Sekkizhar Adippodi T N Ramachandran, Dharmapura Adinam,1990

 

The Poetry and the Philosophy of THE TAMIL SIDDHAS, A V Subramania Aiyar, Tirunelveli, 1957

–Subham–

 

32 அறங்கள், 16 பேறுகள், 8 மங்களச் சின்னங்கள் (Post No. 3507)

Written by London swaminathan

 

Date: 2 January 2017

 

Time uploaded in London:-  9-27 am

 

Post No.3507

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பூங்கா வைத்து மலர்ச் செடிகளை வளர்த்தல், கோவிலில் நந்தவனம் அமைத்து பூஜைக்கு வேண்டிய மரம் செடி கொடிகளை வளர்த்தல். தல மரங்கள் என்ற பெயரில் பல்வேறு மரங்களுக்கு சிறப்பான இடம் தருதல், ஏழைகளுக்கு சத்திரம் அமைத்து உணவு கொடுத்தல், மருந்து கொடுத்தல், பிராணிகளுக்கு உணவும் நீரும் கிடைக்க ஏற்பாடு செய்தல் முதலிய ஏராளமான அறப் பணிகள் அந்தக் காலத்திலேயே நடைபெற்றன.

 

சிறைச்சாலைக் கைதிகளுக்கு உணவு கொடுத்தல் மேலை நாட்டிலும் இல்லாத ஒரு நூதன விஷயம். மன்னர்களின் பட்டாபிஷேகம், இளவரசர் பிறப்பு, திருமணம் ஆகிய காலங்களில் கைதிகளை மன்னித்து விடுதலை செய்தல் போன்ற பல அறப்பணிகள் நடந்துள்ளன. அறப்பணிகளுக்கான ஆதாரபூர்வ கல்வெட்டு அசோகர் சாசன காலத்திருந்து கிடைக்கின்றன. மஹாபாரத, ராமாயணம், அர்த்த சாத்திரம் முதலிய நூல்களிலும் கிடைக்கின்றன. மிகவும் நாகரீக முன்னேற்றம் உடைய ஒரு நாட்டில் மட்டுமே இத்தகைய சிந்தனைகள் எழும். சமூக சேவையில் பாரதம் உலகிற்கு வழிகாட்டியது என்று சொன்னால் மிகையில்லை

 

உவமான சங்ரகம் என்ற நூலில் எட்டு மங்கலச் சின்னங்கள் (அஷ்ட மங்கலம்), 16 பேறுகள், 32 அறங்கள் செய்யுள் வடிவில் உள்ளன.

செய்யுள் வடிவில் இருப்பதால் இரண்டு நன்மைகள்:- ஒன்று மனப்பாடம் செய்து நினைவில் வைப்பது எளிது. இரண்டாவது  இடைச்செருகலுக்கோ, மாற்றங்களுக்கோ வாய்ப்புகள் குறைவு.

 

 

1).வண்ணான் புன்னாவிதன் காதோலை சோலை மடந்தடம் வெண்

சுண்ணாம் பறவைப் பிணஞ்சுடற் றூரியஞ் சோறளித்தல்

கண்ணாடி யாவிற்குரிஞ்சுதல் வாயுறை கண்மருந்து

தண்ணீர் பந்தற் றலைக்கெண்ணை பெண்போகந் தரலையமே

 

2).மேதகுமாதுலர்க்குசாலை யேறுவிடுத்தல் கலை

யோதுவார்க் குண்டி விலங்கிற் குணவோடுயர்பிணிநோய்க்

கிதன் மருந்து சிறைச் சோறளித்தலியல் பிறரின்

மதுயற்காத்தநற்கந்நியர் தானம் வழங்கலுமே

 

3).கற்றவறுசமயத்தார்க் குணவு கருதும் விலை

உற்றதளித்துயிர் மீட்டல் சிறார்க்குதவனற்பான்

மற்று மகப்பெறுவித்தல் சிறாரை வளர்த்த்லெனப்

பெற்றவிவற்றினையெண்ணான்கறமெனப் பேசுவாரே

-உபமானசங்கிரஹம், இரத்தினச் சுருக்கம்

 

32 அறச் செயல்களின் பட்டியல்:-

1.ஆதுலர்க்குச் சாலை (ஏழைகள்=ஆதுலர்)

2.ஓதுவார்க்கு உணவு (மாணவர்களுக்கு)

3.அறுசமயத்தோர்க்கு உண்டி (உணவு)

4.பசுவிற்கு வாயுரை (உணவு)

5.சிறைக் கைதிகளுக்கு உணவு

6.ஐயமிட்டு உண் (பிச்சை போடுதல்)

7.திண்பண்டம் நல்கல் (விழாக் காலங்களில் பொங்கல், வடை)

8.அறவைச் சோறு (அன்னதானம்)

9.மகப்பெறுவித்தல் (பிள்ளை பெறுதல்)

10.மகவு வளர்த்தல் (பிள்ளைகளை வளர்த்தல்)

11.மகப்பால் வார்த்தல் (அவர்களுக்கு பால் வழங்கல்)

 

12.அறவைப் பிணஞ்சுடல் (அனாதைகள் இறுதிச் சடங்கு)

13.அறவைத் தூரியம் ( தூரியம்=மேள வாத்தியம்

அளித்தல்)

14.சுண்ணம் அளித்தல்

15.நோய்க்கு மருந்து வழங்கல்

16.வண்ணார்

17.நாவிதர்

18.காதோலை

19.கண்ணாடி

20.கண்மருத்து

21.தலைக்கு எண்ணெய்

 

22.பெண்போகம்

23.பிறர்துயர் காத்தல்

24.தண்ணீர் பந்தல்

  1. மடம் அமைத்தல்

26.குளம் வெட்டல்

27.பூங்கா வைத்தல்

28.ஆவுறுஞ்சுதறி (பசு முதலிய பிராணிகளுக்கு நீர்)

29.விலங்கிற்குணவு

30.ஏறுவிடுத்தல் (இனப்பெருக்கத்த்துக்கு காளைகள்)

31.விலைகொடுத்துயிர்காத்தல்

32.கன்னிகாதானம்

 

எட்டு மங்களச் சின்னங்கள்

 

சாற்றுங்கவரி நிறைகுடந்தோட்டிமுன் றர்ப்பணமா

மேற்றிய தீபம் முர்சம் பதாகை யிணைக்கயலே

நாற்றிசை சூழ்புவி மீதஅட்ட நன்குழையின்

மேற்றிதழ் வேற்றடங்கட்செய்ய வாய்ப்பைம்பொன்ந்த் மெய்த்திருவே

 

கவரி, நிறைகுடம் (பூர்ணகும்பம்),  தோட்டி(அங்குசம்),  தர்ப்பணம் (கண்ணாடி), தீபம், முரசம், பதாகை (கொடி), இணைக்கயல் ( இரட்டை மீன்)– ஆகியன அட்டமங்கலம் எனப்படும்.

 

 

வேண்டுநற்சுற்ற மிராசாங்க மக்கள்மேவு பொன்ம ணி

யாண்டிடுந்தொண்டு நெல்வாகன மாமிவை யட்டசெல்வங்

காண்டவி சீதல் கால்கெழு நீரொடு முக்குடி

நீராண்டளித்  தேபுனலாட்டனல் லாடை யணிதல்பினே

 

நல் சுற்றம், ராஜாங்கம், பிள்ளைகள் தங்கம், அணிவதற்குரிய ஆடை, ஆளுதர்க்குரிய அடிமை, நெல் முதலிய தானியம், வாஹனம் – இவையே அட்ட ஐஸ்வர்யம் (எட்டு செல்வங்கள் ) எனப்படும்.

 

16 பேறுகள்

 

பதினாறு பேறுகள் பற்றிய ஐந்து பாடல்களை ஏற்கனவே கொடுத்துள்ளேன். 16 பேறுகள்;

 

அழகு, வலிமை, இளமை, நன் மக்கள், நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிலம், பெண், தங்கம், அறிவு, உற்சாகம்,கல்வி, வெற்றி, புகழ், மரியாதை, தானியம் (உணவுப் பொருட்கள்).

 

ஐந்து கவிஞர்கள் பாடிய “பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்க”! –Posted on 2nd July 2014.

 

–subham–

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 25 (Post No. 3506)

Written by S NAGARAJAN

 

Date: 2 January 2017

 

Time uploaded in London:-  4-39 AM

 

Post No.3506

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 25

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 85 இந்த வருடம் பழமை வாய்ந்த 16 ஸ்தூபங்களும் புதுப்பிக்கப்பட்டதோடு அனைத்து புத்தர் சிலைகளும் புதுப்பிக்கப்பட்டன. ஷெங் – இன் மடாலயத்தில் புதிய வெங்கலச் சிலைகள் செய்யப்பட்டு பிரதான ஹாலில் நிறுவப்பட்ட்ன. களிமண்ணாலான  மூன்று சிலைகள் மேற்கு சுவர்க்கம் என்னும் தலத்தில் வைக்கப்பட்டன.

 

 

ஒழுக்க விதிகளை முதன் முதலில் பெற்ற சான் பிட்சு ஸூ ஸிங்கின் வாழ்க்கை வரலாறு மிக்க சுவையானது.

பிட்சு ரி-பியான் என்றும் அழைக்கப்பட்ட ஸு ஸிங் ஹூயிலி என்ற இடத்தைச் சேர்ந்தவர. இளம் வயதிலேயே அவர் அனாதையானார்.

செங் என்ற ஒருவர் அவரை அன்புடன அரவணைத்து ஆதரித்ததோடு தன் மகளையும் அவருக்கு  மணம் முடித்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. மிகவும் ஏழைகளாக அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

 

 

ஸு யுன் அவர் இருந்த மடாலயத்திற்கு வந்த போது எட்டுப் பேர் அடங்கிய அந்தக் குடும்பம் மடாலயத்தில் சேவை புரிந்து வந்தது. காக் ஃபுட் மவுண்டனுக்கு ஸு யுன் வந்த போது அவருக்கு வயது 20. ஸு ஸிங்கிற்கு பிரதான சூத்திரங்களை ஸு யுன் தந்தார்.

 

அவருக்கு 21 வயது ஆன போது அந்தக் குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேரும் சங்கத்தில் சேர்ந்தனர்.

ஸு ஸிங்கின் முகம் அவலட்சணமாக ஒன்று.  காது வேறு அவருக்குக் கேட்காது.. படிப்பறிவும் இல்லாதவர்.

 

 

தினமும் தோட்ட வேலை செய்தும் மாலை நேரத்தில் பிரார்த்தனை செய்தும் வந்த அவர் 1920இல்  ஸு யுன் யுன் – ஸி ஆலயத்தில் இருந்த போது அங்கு வந்து தோட்ட வேலை செய்யும் பணியை ஏற்றார்.

 

மூன்றாம் மாதம் 29ஆம் நாளன்று பகல் தியானத்தை முடித்துக் கொண்ட அவர் பிரதான ஹாலின் பின்பக்கம் உள்ள  முற்ற்த்திற்குச் சென்றார். அங்கு பிட்சுக்கான் ஆடையை அணிந்து கொண்டு  தியான நிலையில் மேற்குப் பக்கம் பார்த்து அமர்ந்தார். அவர் நா தொடர்ந்து புத்தரின் நாமத்தை உச்சரித்தது. பின்னர் ஒரு கையால் மணியை அடித்தும் இன்னொரு கையால் மர மீனால் அடித்துக் கொண்டும் வைக்கோல் போரில் தீயை மூட்டினார்.

 

 

 

அங்கு குழுமியிருந்த ஏராளமான பேருக்கு அப்போது என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் தீ ஜுவாலையின் பிரகாசத்தைக் கண்டு ம்டாலயத்தின் உள்ளே ஓடி வந்து அவர் அருகில் சென்ற போது அவரது உரு அமர்ந்த நிலையில் சாம்பலின் மீது இருந்தது. ஆனால் மணியின் பிடியும் மர மீனும் எரிந்திருந்தன.

உடனே இந்த விவரம் ஸு யுன்னுக்கு அறிவிக்கப்பட  அவர் போதிசதவரின் சடங்கில் ஈடுபட்டிருந்ததால் உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்க முடியாமலிருந்தது.

 

உரிய அதிகாரிகளுக்கு ஸு யுன் கடிதம் எழுதி அனுப்பினார். கவர்னர் டாங் உள்ளிட்ட அனைவரும் அசாதாரணமான இந்த நிகழ்வு பற்றி அறிந்து அதிசயித்தனர்.

 

 

அவரது கையில் இருந்த் மணி அகற்றப்பட்ட போது அவரது உடல் கீழே விழுந்து பிடி சாம்பலானது.

 

 

கவர்னார் டாங் மூன்று நாட்கள் நினைவு தினம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தார்.  ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி அஞ்சலி செலுத்தினர்.

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 86.

 

சான் தியான முறை ஒரு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு இருந்த ஏராளமான மரங்கள் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. உள்ளூர்  மக்களின் உதவியோடு மரங்கள் அகற்றப்பட்ட போது அந்த மரங்களில் பாதி மக்களுக்கே வழங்கப்பட்டது. அவர்கள்  மிகவும் மகிழ்ந்தனர்.

 

 

ஆட்சியிலோ கவர்னர் பதவி ஒழிக்கப்பட்டது. ஆகவே கவர்னர் டாங் ஓய்வு பெற்றார். அடிக்கடி மடாலயம் வந்து தங்கி தியானம் செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டார்.

வருடம் உருண்டு ஓடி முடிந்தது.

*********

 

.

 

8 Auspicious Things, 16 Gifts and 32 Charitable Acts! (Post No.3505)

 Written by London swaminathan

 

Date: 1 January 2017

 

Time uploaded in London:-  19-50

 

Post No.3505

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Ancient Hindu poets have composed poems to remember important things in life. Uvamana Sangraham is a book that contains good verses giving details of Eight Auspicious Symbols, Sixteen Good Fortunes or God Given Gifts in life and 32 Charitable Acts.

According to it, the Eight Auspicious (Ashta Mangla) symbols are:

1.Fly whisk 2.Purna Kumbha/Pot 3.Mirror 4Ankusam/Goad 5. Drum 6.Flag 7. Two Fishes 8.Lamp

Eight Precious Things (Aiswarya) are

1.Good Relatives 2.Good Government 3.Good Children 4.Gold 5. Clothing 6.Servants 7. Grains (food items) 8. Vehicles for Transport

 

16 God Given Gifts

1.Strength 2. Youthfulness 3.Good Children 4.Good Health 5. Long Life span 6. Lands 7. Woman/wife 8. Gold 9. Intelligence 10. Enthusiasm 11. Education 12. Victory 13. Fame 14. Respect 15. Grains/Food Items 16. Beauty

 

32 Charitable Acts

Provision of 1.Washerman 2.Barber 3.Ear Ornament 4.Mutts 5.Public Gardens 6.Public Tanks 7.Lime 8. Cremating bodies of Orphans 9. Fodder for Cows 10. Medicine for Eye sight 11. Water Provision by erecting Pandals/Thatched Sheds 12.Oil for head 13.Rescuing people from Danger 14. Milk for Children 15. Giving birth to children 16. Raising them 17. Setting Orphanage 18.Food for learners/students 19.Food for all animals 20. Medicine for the sick 21. Providing Bulls for breeding 22. Serving food in Prisons 23.Solving the difficulties of People/Community Service 24. Help for Marriage 25. Food for mendicants 26. Provision of Snacks 27. Help for clothing 28. Provision of women 29. Shelter for the Poor 30.Giving to Beggars 31. Water Drinking Places for cows 32.Provision of Mirrors

–Subham–

 

 

மனைவி- குடும்ப விளக்கு, மகன் -குல விளக்கு!! (Post No.3504)

852fe-rameswaram2bvilakku2bpuja

Research Article Written by London swaminathan

 

Date: 1 January 2017

 

Time uploaded in London:-  10-18 am

 

Post No.3504

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பெண்களை குடும்ப விளக்காகப் போற்றுவதை சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் காண்கிறோம். இது உலகில் வேறு எந்தப் பழைய கலாசாரத்திலும் நாகரீகத்திலும் காணக்கிடைக்காத அரிய கொள்கை. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாதான் உலகிலேயே பெரிய நாடு. அந்தக் காலத்திலேயே இமயம் முதல் குமரி வரை இப்படி ஒரு உயரிய சிந்தனையைக் காணுகையில் ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும்.

 

இந்துக்களுக்கு விளக்கு என்பது புனிதச் சின்னம்; மங்களச் சின்னம். பழங்காலத்தில் விளக்கு என்பது இல்லாமல் எவரும் வாழ்ந்திருக்க முடியததுதான் ஆயினும் அவர்கள் எல்லாம் இந்துக்கள் போல விளக்குக்குப் புனிதத்துவததைக் கொடுக்கவில்லை. தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் மகனைக் குல விளக்காகவும் மனைவியைக் குடும்ப விளக்காவும் சித்தரிக்கின்றன.

 

தினமும் மாலையிலும் காலையிலும் கடவுள் படத்துக்கு முன் விளக்கேற்றி வனங்குவர். சிலர் அதற்காகவுள்ள விசேஷ பிரார்த்தனைப் பாடல்களைச் சொல்லுவர். தீட்டுக் காலத்தில் விளக்கைத் தொட மாட்டார்கள். அப்போது மட்டும், வீட்டிலுள்ள சிறுவர்களோ ஆண்களோ அந்த விளக்கேற்றும் பணியைச் செய்வர்.

 

பெரிய ஆலயங்களில் நடைபெறும் விளக்கு பூஜைகளில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர். பெரிய நிகழ்ச்சிகளை சுமங்கலிகளைக் கொண்டு விளக்கேற்றித் துவக்கி வைப்பர்.

737cf-palanai2bvilakku2bpuja

விளக்கு பற்றி அவர்களுக்குப் பல்வேறு நம்பிக்கைகள் உண்டு. விளக்கு திடீரென்று அணைந்தாலோ. கீழே விழுந்தாலோ அதை அப சகுனமாகக் கருதுவர். யாரேனும் இறந்தால் அந்த அமங்கலக் காட்சியைக் காட்டாமல் ஒரு விளக்கு அணைந்ததாகத் திரைப்படங்களில் காட்டுவர்.

 

காளிதாசனும், மனுவும், வியாசரும், சங்க இலக்கியப் புலவர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதை ஒப்பிட்டு மகிழ்வோம்:-

 

புறநானூற்றில் (314) புலவர் ஐயூர் முடவனார்,

 

மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்

முனைக்கு வரம்பு ஆகிய வென்வேல் நெடுந்தகை

 

பொருள்:- இல்லத்தில் ஒளிசெய்யும் விளக்கைப் போல் தன் மாண்பால் விளக்கத்தைச் செய்யும் ஒளியுடைய நெற்றியுடையவளுக்குக் கணவனும்

 

ஐங்குறுநூற்றில் புலவர் பேயனார்

 

ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர்போல

மனைக்கு விளக்காயினள் மன்ற கனைப்பெயல்

பூப்பல அணிந்த வைப்பின்

புறவணி நாடன் புதல்வன் தாயே

ஐங்குறுநூறு 405

 

பொருள்: விளக்கு தலைவன் மனைக்கும் அதன் கண் நின்று எரியும் செஞ்சுடர் தலைவிக்கும் உவமை ஆயின.

 

அகநானூற்றில் (184) புலவர் மதுரை மருதன் இளநாகனார்

 

கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய

புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்

நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்

இனிது ஆகின்றால்; சிறக்க நின் ஆயுள்!

 

பொருள்:- தெய்வத்தனமை பொருந்திய கற்புடன் குடிக்கு விளக்கமான மகனைப் பெற்ற புகழ்மிக்க சிறப்பை உடைய தலைவிக்கே அன்றி எனக்கும் இனிமையைத் தருகின்றது.உன் ஆயுள் ஓங்குக (தீர்க்காயுஸ்மான் பவ:).

 

இதே கருத்துகளை சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசனும், மனுவும், மஹாபாரத வியாசனும் செப்புவதைக் காண்போம்:-

 a4b0f-oil-lampsie

மனுதர்ம ஸ்லோகம்

 

வீட்டிலுள்ள அதிர்ஷ்ட தேவதைகளுக்கும், குடும்பத்தின் விளக்குகளாக ஒளிரும் பெண்களுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை. அவர்கள் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்கள்; அவர்கள் புதல்வர்களைப் பெற்றுத் தருவதால் இறையருள் பெற்றவர்களாவர் — மனு 9-26

 

மனுவைப் போல பெண்களைப் போற்றும் நூல் உலகில் வேறு இல்லை! பெண்களை மதிக்காதோர் குடும்பம் வேருடன் சாயும் என்ற மனுதர்ம ஸ்லோகம் குறிப்பிடத்தக்கது.

 

காளிதாசன் புகழுரை

 

ரகுவம்ச ப்ரதீபேன தேனாப்ரதிமதேஜஸா

ரக்ஷாக்ருஹகதாதீப: ப்ரத்யாதிஷ்டா இவாபவன் ( ரகு.10-68)

 

ரகுவின் வம்சத்தை விளக்குகின்ற நிகரற்ற ஒளியுடைய  அந்த ராமனால்  பிரஸவ அறியில் இருந்த விளக்குகள் மங்கியது போல இருந்தன.

ரகுவம்ஸ ப்ரதீபேன என்று ராமன் போற்றப்படுகிறார்.

 

ரகுவம்ச காவியம் 6-45ல் சுசேனன் என்ற சூரசேன மன்னன் தாய், தந்தையரின் வம்சங்களுக்கு விளக்காகத் திகழ்ந்ததால் வம்ச தீபம் என்று போற்றப்படுகிறான்.

 

ரகுவம்சத்தில் 8-38 பாடலில்  இந்தக் காலத் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியை  நினைவூட்டுகிறான் காளிதாசன்:

 

அஜன் என்ற மன்னனின் மனைவி இந்துமதி திடீரென்று மயங்கி விழுந்தாள். அவரது அருகில் இருந்த அஜனையும் அவள் விழ்த்தினாள். இந்துமதி உடனே இறந்தாள். இதை வருணிக்கும் காளிதாசன், இந்துமதி விளக்கின் சுடருக்கும், அத்துடன் சொட்டிய எண்ணைத் துளி அஜனுக்கும் உவமிக்கப்பட்டன.

 

பிள்ளைகளை ஒளிக்கும் விளக்கிற்கும் ஒப்பிடுவது பாரதம் முழுதும் இருந்தமைக்கு ஒரு சான்று:

தசரதனுக்கு துயரம் என்னும் இருட்டைப் போக்கும் ஒளி (ஜோதி) என்ற புதல்வன் இல்லை (ரகு 10-2)

 

ஹிமவானுக்கு பார்வதி குழந்தையாகப் பிறந்தாள்.ஒரு விளக்கு தூண்டப்பட்டு மேலும் ஒளி பெறுவது போலவும், இருண்ட வானத்தில் ஆகாய கங்கை (MILKY WAY ) எனப்படும் நட்சத்திர மண்டலம் ஒளி வீசுவது போலவும் ஹிமவானுக்கு சிறப்பும் புனிதமும் கூடின. (குமார 1-28)

 

ஒரு யோகியின் மன நிலையை வருணிக்கும்போது சலனமற்ற நீர் போலவும், காற்றில்லாத இடத்திலுள்ள தீபம் போலவும் விளங்கியது என்றும் காளிதாசன் வருணிப்பான் (குமார 3-48)

6e628-kuthu2bvilakku

 

ஒரு புயல்காற்றில் விளக்கு சுவாலை எப்படி தாக்குப்பிடித்து நிற்காதோ அப்படி சுதர்சனனும் நோயின் வேகத்துக்கும் மருத்துவர்களின் மருந்துக்கும் கட்டுப்படாமல் இறந்தான் (ரகு.19-53)

 

ஒரு விளக்கிலிருந்து ஏற்றப்பட்ட மற்றொரு விளக்கு எப்படி ஒளியில் வித்தியாசப்படாதோ அப்படி அஜனும் அவன் தந்தையின் குணத்திலும் வீரத்திலும் சிறிதும் மாறுபடவில்லை (ரகு.5-37)

 

இவ்வாறு ஏராளமான விளக்கு உவமைகள் பிற்கால இலக்கியங்களிலும் கிடைக்கின்றன. பாரதம் முழுவதும்  விளக்கு முதல் யானை வரை ஒரே விதமான உவமைகள், கற்பனைகள் இருப்பது இது ஒரே பண்பாடு, இந்த மண்ணில் உருவான பண்பாடு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை அன்று என்று காட்டுகின்றன.

 

மற்றவகை விளக்குகள்

 

ஒளிவிடும் தாவரங்கள் பற்றியும் நாகரத்னம் பற்றியும் குறிப்பிட்டு அவை விளக்குகளாகத் திகழ்ந்தன என்பான் காளிதாசன். நாகரத்னம் பற்றித் தமிழ் இலக்கியத்தில் நிறைய பாடல்கள் உண்டு. ஆயினும் ரகு வம்சத்திலும் (4-75) குமார சம்பவத்திலும் (1-10) உள்ள ஒளிவிடும் தாவரங்கள் பற்றிக் கிடையாது. ஒருவேளை மரங்களில் அடர்த்தியாகத் தங்கும் மின்மினிப் பூச்சிகள இப்படி ஒளிவிடும் தாவரங்களாகத் தோன்றியிருக்கலாம். இதே போல ஞான தீபம் பற்றி பகவத் கீதையிலும் ஆழ்வார், நாயன்மார் பாடல்களிலும் காணலாம்.

 

-சுபம்–

வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை! (Post No.3503)

Written by S NAGARAJAN

 

Date: 1 January 2017

 

Time uploaded in London:-  5-08 AM

 

Post No.3503

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

பாக்யா வார இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

 

வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை!

ச.நாகராஜன்

 

மாவீரனான சத்ரபதி சிவாஜிக்கு வியட்நாமின் மிகப் பெரிய நகரமான ஹோ சி மின் நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டிருக்கிறது என்ற செய்தி நம்ப முடியாத அதிசயமான செய்தி தானே!

என்றாலும் அது உண்மை தான்!

 

 

சைகோன் என்று பழைய நாட்களில் அழைக்கப்பட்ட இந்த நகரம் புரட்சி வீரன் ஹோசிமின் பெயரால் இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

 

 

சத்ரபதி சிவாஜி மஹாராஜா  வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தைத் தன் சிறு படையினால் கதி கலங்க அடித்தார். இதற்கான காரணம் அவரது புதிய முறையிலான போர் உத்திகள் தாம்! சிறிய தொகுதிகளாக உள்ள படைவீரர்களைக் கொண்ட படைப்பிரிவுகளைக் கொண்டு அவர் நடத்திய தாக்குதல்  முறைக்கு கொரில்லா தாக்குதல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

 

 

இந்தத் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஔரங்கசீப்பின் மாபெரும் படை அலறியது. ஒரு பெரும் வெற்றியைப் பெற்ற சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிப் புகழ் பெற்றார்.

 

வியட்நாமில் பலம் பொருந்திய அமெரிக்க ராணுவம் நவீன சாதனங்களுடன் வியட்நாமியர்களைத் தாக்கிய போது ஹோசிமின்னுக்கு சற்று திகைப்பாக இருந்தது.

 

 

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இதே போன்று வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தின் படைகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற சிவாஜி மஹராஜின் போர்த் தந்திர முறைகள் ஹோசிமின்னின் கவனத்திற்கு வந்தது.

 

அதே முறைகளை அவர் பின்பற்றவே அமெரிக்க ராணுவம் அதிர்ந்து போனது.

 

சுமார் இருபது ஆண்டுகள் நடை பெற்ற போரில் க்டைசியாக அது பின் வாங்கியது. 1975ஆம் ஆண்டு வியட்நாம் வெற்றி பெற்றது.

 

தனக்கு இந்த வெற்றியை வாங்கித் தந்தது மாவீரன் சிவாஜியே என்று  ஹோசிமின் நம்பினார். ஆகவே அவரை கௌரவிக்கும் வண்ணம் ஹோசிமின் மாவீரனுக்கு குதிரை மீது அமர்ந்த நிலையிலிருக்கும் சிலையை ஹோசிமின் நகரில் நிறுவினார்.

 

இன்று அந்த சிலை நிறுவியிருக்கும் இடம் ஹோசிமின் நகருக்கு வருகை புரியும் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகத் திகழ்கிறது.

 

வியட்நாமிய மக்கள் வெற்றியைப் பெற தங்களுக்கு வழி காட்டிய வீர சிவாஜியைப் பெரிதும் போற்றுகின்றனர்.

 

வட வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி மேடம் பின் (Madame Binh) 1977ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்த ஜகஜீவன் ராம் அவரை வரவேற்றார். வெளிநாட்டு மந்திரிகள் விஜயம் புரியும் இடமாக இருக்கும் ராஜ் காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு அவரை அழைத்துச் சென்றார். பின்னர் குதுப்மினார், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்கள் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் அவருக்கு எடுத்துரைக்க அவரோ தனக்குப் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஒன்று இருக்கிறது என்று கூறினார்

‘சத்ரபதி சிவாஜி மஹராஜின் சமாதி எங்கு உள்ளது, அங்கு செல்ல வேண்டும்’, என்றார் அவர்

 

சத்ரபதி சிவாஜி மஹராஜின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டுமென்ற தனது விருப்பத்தை இந்திய அரசுக்கு அவர் தெரிவித்த போது அதிகாரிகளுக்குச் சற்று வியப்பு ஏற்பட்டது. சிலையின் உயரத்திற்கு அவரைக் கொண்டு செல்ல ஒரு கிரேன் வேண்டும்.

மற்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமே!

 

 

ஏன் வீர சிவாஜிக்கு அவர் சிலை அணிவிக்க விரும்புகிறார் என்று கேட்ட போது அவர் அமெரிக்கர்களுக்கு எதிரான எங்கள் போரில்  வியட்காங் ராணுவ வீரர்கள் சிவாஜியின் வீர கதையைச் சொல்லி மகிழவது வழக்கம் என்றும் அவ்ரது ராணுவ தளபதிகள் முகலாய சாம்ராஜ்யத்தைக் கதிகலங்க அடித்ததைச் சொல்லி உத்வேகம் பெறுவது வழக்கம் என்றும் அதனாலேயே தாங்கள் வெற்றி பெற முடிந்தது என்றும் விளக்கமாகக் கூறினார்.

அத்தோடு  கொரில்லா போர்முறையைக் கண்டு பிடித்தவர் வீர சிவாஜியே என்று கூறிய அவர் இதே முறையைத் தான் பெடல் காஸ்ட்ரோ கியூபாவில் அமெரிக்க ராணுவத்தினரை எதிர்கொள்ளக் கையாண்டார் என்றும் கூறினார்.

 

அவரிடம் சிவாஜியின் சமாதி மஹராஷ்டிரத்தில் ராய்கட்டில் உள்ளது என்று  கூறிய அதிகாரிகள் அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.

 

சமாதியைச் சுற்றி வந்து வணங்கிய அவர் அங்கு கீழே இருந்த மண்ணில் கொஞ்சம் எடுத்துப் பொட்டலத்தில் மடித்து வைத்துக் கொண்டார். அந்த மண்ணைத் தன் தலையிலும் இட்டுக் கொண்டார்.

 

வியப்படைந்த நிருபர்கள் அதற்கான காரணத்தைக் கேட்ட போது, மாவீரன் பிறந்த மண் இது; இந்த மண்ணை எங்கள் நாட்டில் தூவினால் அங்கும் இவர் போன்ற  மாவீரர்கள் தோன்றுவார்கள் என்று பதிலளித்தார்.

 

மிலிந்த் காட்கில் என்பவர் கொரில்லா உத்தியை போர்களின் பயன்படுத்துவதைப் பற்றி ஒரு சுவையான புத்தகத்தை எழுதியுள்ளார். ராணுவம் பற்றி எழுதும் பத்திரிகையாளரான இவர் எப்படி சத்ரபதி சிவாஜியின் போர்முறையை வியட்நாமியர் பயன்படுத்தி அமெரிக்கர்களை வெற்றி கொண்டனர் என்பதை விவரித்துள்ளார்.

 

 

சிவாஜியின் முடிசூட்டு விழாவைப் பற்றி ஒரு ஆங்கிலேயர் மூன்று மாத காலம் ராய்கட் கோட்டையில் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

சிவாஜியின் மகுடாபிஷேகம் பற்றிய செய்திகள் சுவையானவை.

சிவாஜியின் சிம்மாசனம் 32 மணங்கு தங்கத்தால் செய்யப்பட்டது. ஒரு  கோடியே நாற்பது லட்சம் ‘ஹண்’ (மராட்டிய பணம்) செலவழித்து முடிசூட்டு விழா நடைபெற்றது.

 

சிவாஜி அரியணை ஏறியதும் வைரக்கல் பதித்த பொன் தாம்ரை மலர்களையும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த வேறு பல மலர்களையும் அங்கே கூடியிருந்தோரிடையே வாரி வழங்கினார்.

 

 

சமீபத்தில் மணமாகி இருந்த 16 சுமங்கலிகள் அரியணையில் அமர்ந்த மாவீரனுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தார்கள்.

வேத மந்திரங்களை முறையாக் அந்தணர்கள் ஓத ‘ஜய் சிவாஜி’ என்ற கோஷம் வானைப் பிளந்தது. சிவாஜியின் ராஜகுருவான் காகபட்டர்  சிம்மாசனத்தின் அருகில் சென்று நல்ல முகூர்த்த நேரத்தில் பொன்னும் பவழமும் முத்தும் கோர்த்துப் பின்னப்பட்டிருந்த மகுடத்தைச் சிவாஜிக்குச் சூட்டினார். சிவா, தன்னிகரில்லாத சுதந்திரத் தலைவர்  என்று அவர் சிவாஜியின் புகழை அறிவித்தார்!

 

இந்த வைபவம் நடந்த தேதி 1674ஆம் ஆண்டு ஜூன் 6 என்று வ்ரலாறு குறிப்பிடுகிறது!

 

வீர சிவாஜியின் சமாதி இன்றும் புகழ் பெற்ற யாத்திரைத் தலமாக இலங்குகிறது!, வியட்நாமியர் உள்ளிட்டவர்க்கும் கூட!!

**************

 

 

 

 

Lamps in Tamil and Sanskrit Literature (Post No 3502)

Research Article Written by London swaminathan

 

Date: 31 December 2016

 

Time uploaded in London:-  18-28

 

Post No.3502

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Prince Aja did not differ from his father in resplendent form, in valour and in nobility of nature as a lamp lighted from another lamp does not differ in brightness– Raghuvamsa 5-37

 

Lamp or Deepa is considered an auspicious symbol in Hindu literature. I don’t think that any other culture gives such a treatment to Lamps. Though lamps were essential items in a household in the ancient world, it did not get any sanctity in other cultures. Hindus light lamps in the morning and in the evening in front of God’s pictures or idols in the prayer rooms and worship god. They have special prayers for lighting the lamp and special places for the lamps. women won’t even touch the lamp during the menstrual period or periods of pollution. Someone else in the house will take care of it. They wouldn’t use the word ‘switch off’ to put out the lamp. They will say ‘see the lamp’ meaning see that it is taken care of. So much sanctity and respect was given to lamps in Hindu homes.

 

There are lots of beliefs regarding the lamps. If it goes out in the wind or falls down then they think it is inauspicious thing or a bad omen. Tamil and Sanskrit literature compare the wife as a lamp in the family. In old Indian films a person’s death will be hinted by a lamp going off suddenly or blown out by wind.

 

Hindu organisations organise 1008 Lamps Pujas or 10008 Lamps Pujas regularly and Hindu women participate in them with great devotion and enthusiasm.

Kalidasa use the lamp simile in several places:-

In the Kumarasambhava, Himalaya with Parvati, received sanctity and was also glorified as the lamp by its exceedingly brilliant flame (K.S. 1-28). The image suggests the bright lustre of Parvati.

Nagaratna or Cobra jewel on the head of snakes giving out light is used by Tamil and Sanskrit poets in innumerable places. In certain places, it served as light. This is also a typical Hindu imagery used from the lands ned to the Himalayas. We see such things in the oldest part of Tamil and Sanskrit literature which explodes the myth of Aryan-Dravidian theories.

Steady lamp is compared to the steady mind of a Yogi or an ascetic. Siva, on account of the suspension of the vital airs, is imagined to be like a lamp steady in a place free from wind. The image shows the steadiness of the mind of Siva (KS 3-28).

 

Manmata (cupid) is imagined to be like a lamp put out by a blast of wind because he was at once, burnt by the anger of Siva. Rati, Manmata’s wife, is said to be the wick f a lamp which when blown out emits smoke for some time.

 

In the Raghuvamsa, the lustrous herbs, burning without oil, served at night, as lamps to King Raghu. Kalidasa sang about these light emitting plants in many places which is not seen in any other literature. Probably some plants attracted the families of fireflies on a large scale (RV 4-75)  Phosphorescent or luminescent plants also KS 1-10.

 

In the Raghuvamsa, Indumati, wife of King Aja, all of a sudden fell from the couch and died. Aja sitting close to her also fell down with her. Kalidasa depicts the sad event by the image of a lamp which is apt and homely. Indumati is compared to the flame of a lamp while Aja to the drop of dripping oil (RV8-38)

 

In another place, the poet says “As the flame of a lamp does not stand a gale, similarly, son of Sudarsana who had no offering could not outlive the disease that defied all attempts of the Physicians (RV 18-53)

 

The king of Surasena is praised as the Vamsadeepa (lamp of the dynasty) in RV 6-45.

A son in a family is also compared to light in RV 10-2.

Rama is described as A Big Lamp of the Dynasty of Raghu (Raghuvamsa Pradeepena)

in 10-68. Because of him all other lamps in the delivery room lost their brightness. They became dim.

Woman- Family Lamp

There is no difference at all between the Goddesses of Good Fortune (Sriyas) who live in houses and women (Striyas) who are the Lamps of their Houses, worthy of reverence and greatly blessed because of their progeny (Manu 9-26)

 

Lamp of Wisdom is used by all the Tamil and Sanskrit devotional poets.

 

Iyur Mutvanar, A Tamil Sangam poet, is also praising the wife as the lamp of a family in Purananuru verse 314, echoing Manu.

 

Madurai Maruthan Ilanagan, A Tamil sangam poet, praised the son as the lamp of the family or lineage in Akananuru 184.

 

Throughout the length and breadth of India, largest country in the world 2000 years ago had the same thought regarding family and family values. This explodes the foreigners’ theory of Aryan-Dravidian divisions. We cant see such a praise for a woman or her son in any other ancient literature.

 

Peyanar, another Tamil poet of Sangam Age also praised the woman (wife) of a house as the Lamp of the House in Ainkurunuru verse 405

Lamp of Mind

In the Mahabharata, we come across a strange imagery of Mind lamp.

pradiptena va dipena  manodipena pasyati (3-203-38)

One sees the soul with the lamp of the mind as if with a lighted lamp.

–Subham–

மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை (Post No.3500)

Written by S NAGARAJAN

 

Date: 31  December 2016

 

Time uploaded in London:-  11-40 AM

 

Post No.3500

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை   உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை

ச.நாகராஜன்

 

 

 

நோபல் பரிசு பெறுவது உலகின் மிகப் பெரிய கௌரவம். அங்கீகாரமும் கூட. இதைப் பெறுவோர் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஒரு உரை நிகழ்த்துவர். அது மிகவும் அற்புதமான உரையாக அமையும். ஆகவே ஒவ்வொரு துறையிலும் பரிசு பெற்றவர்கள் நிகழ்த்திய நோபல் பரிசு உரைகளைத் தொகுத்து தொகுதி தொகுதியாக வெளியிடப்படுகிறது.

 

அவற்றுள் டோனி மாரிஸனின் (Tony Marrison) உரையும் ஒன்று. அதன் சுருக்கத்தை இங்கே காணலாம்..

 

1993ஆம் ஆண்டு டோனி மாரிஸன் நோபல் பரிசை இலக்கியத்திற்காகப் பெற்றார். இப்படி நோபல் பரிசு பெறும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே என்ற புகழையும் கூடவே பெற்றார்.

 

 

அவர் தனது நாவல்களில் ஆழ்ந்த பார்வையுடனும் கவிதை ஆவேசத்துடனும் அமெரிக்க வாழ்வியல் உணமைக்கு உயிர் தருபவர் என்பது நோப்ல பரிசு பெறுவதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டது.

 

டிசம்பர் 7ஆம் தேதி ஸ்வீடனின் பரிசு பெறும் மேடையில் ஏறி அவர் ஆற்றிய உணர்ச்சி மிக்க சொற்பொழிவு அனைவருக்கும்  மொழியைப் பயன்படுத்த வேண்டிய வழியைப் பற்றி உத்வேகமூட்டும் ஒரு உரையாக அமைந்தது. அவர் உரையின் சாரம்:

 

 

: முன்னொரு காலத்தில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் கண்பார்வையற்றவள். ஆனால் புத்திசாலி. அவள் ஒரு அடிமை. கறுப்பு இனத்தைச் சேர்ந்தவள். அமெரிக்க பிரஜை. தனியே ஒரு சிறிய வீட்டில் நகருக்கு வெளிப்புறத்தில் அவள் வாழ்ந்து வந்தாள்.

 

 

அவளது  புத்திகூர்மை அவள் அண்டை அய்லாரையும் தாண்டி நகரில் வசிப்போரையும் தாண்டி எங்கும் பரவியிருந்தது.

ஒரு நாள் சில இளைஞர்கள் அந்தப் பெண்மணி அப்படிப்பட்ட புகழுக்கு உரியவள் இல்லை என்று நிரூபிக்கும் கெட்ட எண்ணத்துடன் அவளை அணுகினர்.

 

ஒரே ஒரு கேள்வி கேட்போம். அதற்குச் சரியான பதிலைச் சொல்லி விட்டால் அவள் மேதாவி தான் என்பதை ஒப்புக் கொள்வோம். இல்லையேல் அவள் ஒரு ஃப்ராடு என்று சொல்வோம் என்றனர்.

 

 

அவர்களில் ஒருவன் அந்தப் பெண்மணியை அணுகி, “அம்மணி, இதோ என் கையில் ஒரு சிறிய் பறவை இருக்கிரது. அது உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து விட்டதா?” என்று கேட்டான்.

 

 

பறவை உயிரோடு இருக்கிறது என்று அவள் கூறினால் கையை ஒரே ஒரு அமுக்கு அமுக்கி அந்தப் பறவையைக் கொன்று விடலாம். அவள் செத்து விட்டதாகச் சொன்னால் உயிரோடு இருக்கும் பறவையைக் காட்டி அவள் கூறியது தவறு என்று நிரூபிக்கலாம் என்பது அந்த இளைஞர் கூட்டத்தின் திட்டம்.

 

ஆனால் மகா புத்திசாலியான பார்வையற்ற அந்தக் கறுப்பு இனப் பெண்மணி அவர்களின் மோசமான திட்டத்தை அறிந்து கொண்டாள்.  சற்று பேசாமல் இருந்த அவளை அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

 

 

கடைசியில் அவள் பேசினாள்: “உங்கள் கையில் இருக்கும் பறவை உயிரோடு இருக்கிறதா செத்து விட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விடை உங்கள் கையில் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும். விடை உங்கள் கையில் தான் இருக்கிறது!”

 

 

அதற்கான அர்த்தம் – ஒருவேளை அது இறந்து கிடந்த போது அதை எடுத்து வந்திருக்கலாம். அல்லது அதை நீங்களே சாகடித்திருக்கலாம். ஒருவேளை அது உயிரோடு இருந்தால் அதை நீங்கள் இப்போது நினைத்தாலும் சாக அடிக்கலாம். அது உயிரோடு இருக்க வேண்டுமா இல்லையா என்பது உங்கள்  முடிவைப் பொறுத்தது. பொறுப்பு உங்களுடையதே.

இந்த அதிரடி பதிலைக் கேட்டு திருதிருவென்று விழித்த இளைஞர்கள் மனம்  மாறி அவளிடம் தங்களின் உண்மையான திட்டத்தை எடுத்துரைத்து தங்கள் செய்கைக்கு வருந்தினர்.

பார்வையற்ற அந்தப் பெண்மணி அவர்கள் தங்கள் வலிமையை உறுதிப்படுத்துவதிலிருந்து தன் கவனத்தை அவர்கள் எந்தக் கருவியின் மூலம் அதை உறுதிப்படுத்த முயல்கிறார்கள்  அதற்கு மாற்றிக் கொண்டாள். பதிலைச் சொன்னாள்.

 

 

கையில் இருக்கும் பறவையைப் பற்றிய உண்மை நிலையப் பற்றிய ஹேஷ்யம் எனக்கு எப்போதுமே ஒரு கவர்ச்சியைத் தந்தது. ஆனால் இப்போது நினைக்கும் போது நான் செய்யும் எழுத்துப் பணியே என்னை இந்த நோபல் பரிசு பெறும் இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது.

 

 

ஆகவே அந்தப் பறவையை மொழி என்றும் அந்தப் பெண்மணியை ஒரு எழுத்தாளர் என்றும் நான் காண்கிறேன். அவளுக்குப் பிறக்கும் போது கொடுக்கப்பட்ட  மொழியை – அது பல கொடிய காரணங்களுக்காகத் தடுக்கப்பட்ட போதிலும் கூட –  அதை எப்படி உரிய முறையில் கையாண்டு  சேவை செய்ய முடியும் என்று தான் அவள் கவலைப்பட்டாள்.

 

அவள் ஒரு எழுத்தாளர் என்பதால், மொழியை ஒரு அமைப்பாகவும் அத்துடன் கூட உயிர்ப்புடன் கூடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் அவள் நினைக்கிறாள்.

 

 

ஆகவே குழந்தைகள் அவளிடம் “அது உயிருட்ன்  இருக்கிறதா அல்லது செத்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பும் போது அவள் மொழி என்பது இறக்கக் கூடிய ஒன்றே. ஆனால் அதை உயிர்ப்புடன் தக்கவைக்க முயற்சியும் திட மனதும் வேண்டும்; கையில் இருக்கும் பறவை இறந்து விட்டது என்றால் அந்த சவத்திற்கு  காரணம் அதை வைத்திருந்தவர்களே என்று நம்புகிறாள்.

பேச்சு வழக்கொழிந்து, எழுதவும் முடியாமல் இறந்து போன ஒரு மொழி என்பது விளைச்சலைத் தராமல் தனக்குத் தானே முடக்கு வாதத்தை உருவாக்கிக் கொண்ட ஒன்றேயாகும்.

 

 

ஒரு மொழியின் செழுமை என்பது அதை கையாண்டு பேசுபவர்கள், படிப்பவர்கள், எழுதுபவர்கள் ஆகியவர்களிட்ம் அது வாழும் திறனைப் பொறுத்தே உள்ளது.

 

டோனி மாரிஸன் இப்படி அற்புதமாக மொழியின் ஆற்றலையும் அதைக் கட்டிக் காத்து வளர்கக் வேண்டிய கடமையையும் தன் உரையில்  எடுத்துரைத்தார்.  அவரது உரை எந்த ஒரு மொழிக்கும் பொருந்தக் கூடியதே!

 

 

டோனி மாரிஸனின் கருத்துப் படி ஒரு  மொழி அடிமைத் தனத்தையோ போரையோ அல்லது ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்கோ ப்யன்படுத்தக்கூடாது. மாறாக ஒடுக்கப்பட்டவர்களை உயர்ததுவதற்காக மொழியின் வலிமை அவர்களைச் சென்று சேர வெண்டும்.

 

 

அறிவை நோக்கியே ஒரு  மொழி முன்னேற வேண்டும், அதன் அழிவை நோக்கி அல்ல.

 

 

நாம் இறக்கிறோம். அதுவே வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கலாம். நாம் மொழியைப் பேசுகிறோம். அதுவே நமது வாழ்க்கையை அளக்கும் அளவுகோலாக இருக்கும்.

 

 

இப்படி, மொழியைப் பற்றி தனது ஆழ்ந்த கருத்தைக் கூறியுள்ள டோனி மாரிஸன் எந்த எழுத்தும் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை  தன் நோபல் உரையில் உலக மக்களின் முன் வைக்கிறார்.

 

 

அவரது நெகிழ்வு தரும் இந்த உரை உலகில் அனைவராலும் அடிக்கடி பேசப்பட்டு அனைவருக்கும் உத்வேகத்தைத் தருகிறது.

மொழிச் சண்டையை விடுத்து மொழியின் வலிமையை ஆக்க பூர்வமாக ஒடுக்கப்பட்டோரின் நலத்திற்காகப் பயன்படுத்தினால் உல்கம் ஒன்று படும்; மேம்படும்!

*******

ஓம் பற்றிய 43 அற்புதப் பொன்மொழிகள்! (Post No.3498)

Compiled by London swaminathan

 

Date: 30 December 2016

 

Time uploaded in London:-  13-06

 

Post No.3498

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஜனவரி 2017 காலண்டர்

துர்முகி வருடம் (மார்கழி-தை மாதம்)

 

(இம்மாத காலண்டரில் ஓம் பற்றிய பொன்மொழிகள் இடம்பெறுகின்றன)

முக்கிய நாட்கள்:- ஜனவரி 8- வைகுண்ட ஏகாதசி, 13 போகிப் பண்டிகை, 14 பொங்கல்/ மகர சங்கராந்தி, 15 கனு/ மாட்டுப் பொங்கல், 17 திருவையாறு தியாகராஜ ஆராதனை, 26 குடியரசு தினம், 27 தை அமாவாசை.

ஏகாதசி- ஜனவரி 8,23; அமாவாசை- 27; பௌர்ணமி-12

ஜனவரி 1 ஞாயிற்றுக் கிழமை

இவ்வுலகிற்கு தகப்பனும் தாயும்  தாங்குபவனும் பாட்டனும், கற்றுணரத்தக்கவனும் பரிசுத்தமளிப்பவனும், ஓம்காரப்பொருளும் அவ்வறே ருக், யஜுர், சாம வேதங்களும் நானே- பகவத் கீதை 9-17

ஜனவரி 2 திங்கட்கிழமை

ஓம் இதி ஏகாகஷரம் ஆத்ம ஸ்வரூபம்; நம இதி த்வ்யக்ஷரம் ப்ரக்ருதி ஸ்வரூபம்; நாராயணாய இதி பஞ்சாகஷரம் ப்ரப்ரம்ம ஸ்வரூபம் — தாரஸரோபநிஷத்

ஜனவரி 3 செவ்வாய்க் கிழமை

யோகதாரனையில் நிலைபெற்றவனாய் ஓம் என்னும் பிரம்மவாசகமாகிய ஓரெழுத்தை உச்சரித்துக்கொண்டு என்னை முறைப்படி சிந்தித்தவனாய் உடலைவிட்டு எவன் செல்லுகிறானோ அவன் உயர்ந்த கதியை அடைகிறான் -பகவத் கீதை 8-13

ஜனவரி 4 புதன் கிழமை

குந்தீபுத்ரனே!நான் நீரில் சுவையும் சந்திர சூரியர்களிடத்தில் ஒளியும் வேதங்களனைத்துள்ளும் ப்ரணவமாகவும்(ஓம்), ஆகாயத்தில் சப்தமும், மனிதர்களுள் ஆண்மையும் ஆகின்றேன் -பகவத் கீதை 7-8

 

ஜனவரி 5 வியாழக்கிழமை

 

ஊமையெழுத்தே உடலாச்சு – மற்றும்

ஓமென்றெழுத்தே உயிராச்சு

ஆமிந்தெழுத்தை யறிந்துகொண்டு விளை

யாடிக் கும்மியடியுங்கடி–கொங்கண நாயனார்

ஜனவரி 6 வெள்ளிக்கிழமை

தினந்தினைப் போதாகிலும் தான் தீதற நில்லாமல்

இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் — தினந்தினமும்

ஓங்காரத்துள்ளொளியாய் யுற்றுணர்ந்து நீ மனமே

ஆங்கார அச்சம் அறு – பட்டினத்தார்

 

ஜனவரி 7 சனிக்கிழமை

நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல்வினைகளும்

ஆங்காரமாம் ஆசியும் அருந்தடந்த பாதமும்

ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந்தொன்றிலத்

தூங்கா ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே–சிவவாக்கியர்

 

ஜனவரி 8 ஞாயிற்றுக் கிழமை

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்

உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்

மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம்

சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே -சிவவாக்கியர்

 

ஜனவரி 9 திங்கட்கிழமை

 

ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின்

பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்

நானும் நீயும் உண்டடா நலங்குலம் அது உண்டடா

ஊணும் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே – சிவவாக்கியர்

 

ஜனவரி 10 செவ்வாய்க் கிழமை

அவ்வெனும் எழுத்தினால் அண்டம் ஏழு ஆக்கினாய்;

உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை

மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்

அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!- -சிவவாக்கியர்

 

ஜனவரி 11 புதன் கிழமை

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்

எவ்வெத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை

சவ்வுதித்த மந்திரத்தைத்னு தற்பரத்து இருத்தினால்

அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!- சிவவாக்கியர்

 

ஜனவரி 12 வியாழக்கிழமை

கொண்டல் வரை நின்றிழிந்த குலக்கொடி

அண்டத்துள் ஊறி இருந்தெண்டிரையாகி

ஒன்றின் பதஞ்செய்த ஓம் என்ற அப்புறக்

குண்டத்தின் மேல் அங்கி கோலிக்கொண்டானே–திருமந்திரம் 410

 

ஜனவரி 13 வெள்ளிக்கிழமை

தரணி சலங்கனல் கால்தக்க வானம்

அரணிய பானு அருந்திங்கள் அங்கி

முரணிய தாரகை முன்னிய ஒன்பான்

பிரணவம் ஆகும் பெருநெறி தானே –திருமந்திரம் 839

 

ஜனவரி 14 சனிக்கிழமை

போற்றுகின்றேன் புகழ்ந்தும்புகல் ஞானத்தைத்

தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை

ஏற்றுகின்றேன் நம் பிரான் ஓர் எழுத்தே–திருமந்திரம் 864

 

ஜனவரி 15 ஞாயிற்றுக் கிழமை

நாடும் பிரணவ நடுவிரு பக்கமும்

ஆடு மலர்வாய் அமர்ந்தங்கு நின்றது

நாடு நடுவுண் முகநமசிவாய

வாடுஞ் சிவாய நம புறவட்டத்தாயதே–திருமந்திரம் 902

 

ஜனவரி 16 திங்கட்கிழமை

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே –திருமந்திரம் 2628

ஜனவரி 17 செவ்வாய்க் கிழமை

 

ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.

ஜனவரி 18 புதன் கிழமை

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.

ஜனவரி 19 வியாழக்கிழமை

உலகின் மிகப்   பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும். ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர்.

 

ஜனவரி 20 வெள்ளிக்கிழமை

வைவஸ்வதோ மனுர் நாம மானனீயோ மனீஷிணாம்

ஆசித் மஹீக்ஷிதாம் ஆத்ய: ப்ரணவ: சந்தசாம் இவ –ரகுவம்சம் 1-11

வேதங்களுக்கெல்லாம் முதலில் பிரணவம் இருப்பது போல அரசர்களுக்கெல்லாம் முதல் அரசராக இருந்தவர் வைவஸ்வத மனு என்பவர். அவர் சூரியனுடைய புத்ரர். அறிவாளிகளாலும் மதிக்கத் தக்கவராய் இருந்தார்.

 

ஜனவரி 21 சனிக்கிழமை

வாதாபி கணபதிம் பஜே

……………….

ப்ரணவ ஸ்வரூபம் வக்ரதுண்டம்

–முத்துசுவாமி தீட்சிதர்

 

ஜனவரி 22 ஞாயிற்றுக் கிழமை

 

மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில்  துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில் உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.

கடைசியாக அமைந்த பாடற்பகுதி அச்சோ பதிகம். அதிலும், உய்யு நெறி காட்டுவித்திட்டோங்காரத்துட் பொருளை ஐயனெனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே – என்று சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்..

 

ஜனவரி 23 திங்கட்கிழமை

பாரதி பாடலில் (பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடல்):

ஓமெனப் பெரியோர்கள் – என்றும், ஓதுவதாய் வினை மோதுவதாய்,

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர் ,தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்

நாமமும் உருவும் அற்றே – மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய்

ஆமெனும் பொருளனைத்தாய் – வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்

நின்றிடும் பிரமம் என்பார் – அந்த

நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்– பாரதி

 

ஜனவரி 24 செவ்வாய்க் கிழமை

பாஞ்சாலி சபதத்தின் முடிவுப் பாடல் ஓம்கார கர்ஜனையுடன் முடிகிறது:

ஓமென்றுரைத்தனர் தேவர் – ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்

பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணை

பூழிப்படுத்தியதாஞ் சுழற் காற்று

சாமி தருமன் புவிக்கே – என்று

சாட்சியுரைத்தன பூதங்களைந்தும்!

நாமுங் கதையை முடித்தோம் – இந்த

நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.– பாரதி

 

ஜனவரி 25 புதன் கிழமை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்:

காமியத்தில் அழுந்தி இளையாதே

காலர் கைப்படிந்து மடியாதே

ஓமெழுத்தில் அன்பு மிகவூறி

ஓவியத்தில் அந்தமருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுக லீலா

சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற்புயர்ந்த மயில்வீரா

ஏரகத்தமர்ந்த பெருமாளே

ஜனவரி 26 வியாழக்கிழமை

அகத்திய முனிவனுக்கு முருகப் பெருமான் ஓம்கார மகிமையை உபதேசித்ததை, தெய்வ மணிமாலையில் வள்ளலாரும் பாடுகிறார்:-

சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பதத்

திறனருளி மலைய முனிவன்

சிந்தனையின் வந்தனையும் வந்த மெய்ஞ்ஞானசிவ

தேசிகாரத்னமே

 

ஜனவரி 27 வெள்ளிக்கிழமை

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

 

ஜனவரி 28 சனிக்கிழமை

 

நான்கு முறை ஓம்காரம்!

 

போற்றியோ நமச்சிவாய

புயங்கனே மயங்குகின்றேன்

போற்றியோ நமச்சிவாய

புகலிடம் பிறிதொன்றில்லை

போற்றியோ நமச்சிவாய

புறமெனப் போக்கல் கண்டாய்

போற்றியோ நமச்சிவாய

சயசய போற்றி போற்றி

—–திருச்சதகம் பாடல் 64, திருவாசகம்

 

ஜனவரி 29 ஞாயிற்றுக் கிழமை

 

பரந்தது மந்திரம் பல்லுயிர்க்கெல்லாம்

வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்

துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக

உரந்தரு மந்திரம் ஓம் என்றெழுப்பே–திருமந்திரம் 923

ஜனவரி 30 திங்கட்கிழமை

ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை

நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை

ஆமென் றெழுப்பியவ் வாறறி வார்கள்

மாமன்று கண்டு மகிழ்ந்திருந்தாரே–திருமந்திரம் 924

 

ஜனவரி 31 செவ்வாய்க் கிழமை

ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறில்

ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்

ஓமய முற்றது உள்ளொளி பெற்றது

நாமயமற்றது நாமறியோமே

–திருமந்திரம் 2119

 

xxxx

32.நீரில் எழுத்து இவ்வுலகர் அறிவது

வானில் எழுத்தொன்று கண்டறிவாரில்லை

யாரிவ்வெழுத்தை அறிவாரவர்கள்

ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே–திருமந்திரம் 934

 

33.வேரெழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்

நீரெழுத்தாய் நிலந்தாங்கியும் அங்குளன்

சீரெழுத்தாய் அங்கியாய் உயிராமெழுத்து

ஓரெழுத்தீசனும்ய் ஒண்சுடராமே–திருமந்திரம் 949

 

34.ஓங்கரர முந்தீக்கீழ் உற்றிடும் எந்நாளும்

நீங்கா வகாரமும் நீள்கண்டத்தாயிடும்

பாங்கார் நகாரம் பயில் நெற்றியுற்றிடும்

வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே–திருமந்திரம் 988

 

35.ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்- பராசக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்- பராசக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்– பாரதி

 

 

36.ஆமையொன் றேறி அகம்படி யானென

ஓமஎன் றோதியெம் உள்ளொளி யாய்நிற்கும்

தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்

சோமநறுமலர் சூடி நின்றாளே–திருமந்திரம் 1182

37.உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே

மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங்

குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்

கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே–திருமந்திரம் 1198

 

38.ஓம்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்

றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்

சார்ங்கால முன்னார் பிறவாமை சார்வுற்றார்

நீங்காச் சமயத்துள் நின்றொழிந்தார்களே–திருமந்திரம் 1531

 

 

39.இலிங்க நற்பீடம் இசையும் ஓங்காரம்

இலிங்க நற்கண்ட நிறையு மகாரம்

இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம்

இலிங்க மகார நிறைவிந்து நாதமே–திருமந்திரம் 1722

 

 

40.ஒளியை யொளிசெய்து வோமென்றெழுப்பி

வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி

வெளியை வெளிசெய்து மேலெழவைத்துத்

தெளியத் தெளியுஞ் சிவபதந்தானே–திருமந்திரம் 2447

 

41.வைத்துச் சிவத்தை மதிசொரூபானந்தத்து

உய்த்துப் பிரணவ மாம் உபதேசத்தை

மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து

அத்தற்கடிமை யடைந்து நின்றானன்றே–திருமந்திரம் 2452

 

42.ஓமெனும் ஓங்காரத்துள்ளே யொருமொழி

ஓமெனும் ஓங்காரத்துள்ளே  யுருவரு

ஓமெனும் ஓங்காரத்துள்ளே பல பேதம்

ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே–திருமந்திரம் 2627

 

 

43.ஓமெனும் ஓரெழுத்துள் நின்ற ஓசைபோல்

மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்

சேய் நின்ற செஞ்சுடர் எம்பெருமானடி

ஆய்நின்ற தேவர் அகம்படியாகுமே–திருமந்திரம் 2781

 

–Subham–