Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி!
ராமாயணத்தின் முக்கிய வருடங்கள் 38 : அதில் அதிசயமான ஒன்றரை நாள்! – Part1
ச.நாகராஜன்
உலகின் ஆகப் பெரியதும் புனிதமானதுமான இதிஹாஸமான ராமாயணத்தில் முக்கிய வருடங்கள் 38 தான் என்றால் அது ஆச்சரியமாக இல்லை?!
கோடானு கோடி பேர்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அதைப் படித்து எல்லையற்ற நன்மைகளை அடைந்து வருகின்றனர்; இனியும் வருங்காலத்தில் அனைவரும் அடையப் போகின்றனர்.
எல்லையற்ற மஹிமை கொண்ட ஒரு புனித புருஷரைப் போற்றுகிறோம், ஆனால் அது 38 வருடங்களில் அவர் வாழ்வில் நடந்த வாழ்க்கையைப் பற்றித் தான் என்றால் பிரமிப்பாயில்லை?
38 வருடங்களில் பிரபஞ்ச நாயகனாக ஒருவர் உயர முடியுமா?
முடியும், மஹா விஷ்ணுவினால் முடியும்!
அவரே ராமாவதாரம் எடுத்தார்.
அந்த 38 வருடங்களைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போமா?
எண் சம்பவம் வருடம் மாதம் நாள்
1. பிறந்ததிலிருந்து சீதையை மணந்தது முடிய 12 – –
2. திருமணத்திற்குப் பிறகு அயோத்தியில் வசித்தது 12 – –
Bharatiyar, the greatest of the Tamil poets, was so fascinated by Guru Gobind Singh, that he composed a long poem with 204 lines on him. This month Good Thoughts calendar has 31 quotations from the Tenth Guru ‘Guru Gobind Singh’.
January 1 Sunday
Chirion se main baaz turaun,
Tabe Gobind Singh naam kahaun
It is when I make sparrows fight hawks that I am called Gobind Singh
xxx
January 2 Monday
“Let no man in his error wrangle over differences in names.” Guru Gobind Singh Ji
xxx
January 3 Tuesday
“Those who call me God, will fall into the deep pit of hell. Regard me as one of his slaves and have no doubt whatever about it. I am a servant of the Supreme Being; and have come to behold the wonderful drama of life.”
xxx
January 4 Wednesday
“Without the Guru, no one has found the Lord s Name, O my Siblings of Destiny.”
xxx
January 5 Thursday
“I ever bow in humble reverence to my True Guru, meeting Him, I have come to know the Lord s Name.”
xxx
January 6 Friday
“Those who worship and adore the Lord through the Guru s Word, forget all their pain and suffering.“
xxx
January 7 Saturday
“Fruitful is the entire life of those, who feel hunger for the Name of the Lord in their minds”
xxx
January 8 Sunday
Worship the One God who is the Lord of all. Know that his form is one and He is the One light diffused in all.” Guru Gobind Singh Ji
xxx
January 9 Monday
Gidderon se main sher banaun,
Tabe Gobind Singh naam kahaun
It is when make I lions out of wolves that I am called Gobind Singh
xxx
January 10 Tuesday
Nichon se main ucch banaun,
Tabe Gobind Singh naam kahaun
It is when I make the lowly rise that I am called Gobind Singh
xxx
January 11 Wednesday
Sawa lakh se ek laraun,
Tabe Gobind Singh naam kahaun.
It is when I make one fight a hundred thousand that I am called Gobind Singh
Xxx
January 12 Thursday
“Kisae dee ninda, chugalee, atae eirkhaa nahee karnee”. “Do not gossip, nor slander, or be spiteful to anyone.”
xxx
January 13 Friday
“Dhan, javaanee, tae kul jaat da abhiman naee karnaa (Nanak daadak tahe duae goath. Saak guroo Sikhan sang hoath)”
“Do not be proud of riches, youthfulness or lineage. (Regardless of maternal and paternal caste or heritage, all of the Guru’s Sikhs are siblings of one family.)”
xxx
January 14 Saturday
“Shabad da abhiaas karnaa”: “Practice the sacred hymns to life.”
xxx
January 15 Sunday
“Guru Granth Sahib Jee noo Guru mananaa”: “Believe in and accept Shri Guru Granth Sahib Ji as the Guide to enlightenment.”
xxx
January 16 Monday
“Chugalee kar kisae da kam nahee vigaarnaa”: “Do not ruin anyone’s work by gossiping.”
xxx
January 17 Tuesday
“Kum karan vich daridar nahee karnaa”: “Work hard and don’t be lazy”.
xxx
January 18 Wednesday
“Dushman naal saam, daam, bhaed, aadiak, upaa vartnae ate uprant udh karnaa”: “When dealing with enemies, practice diplomacy, employ a variety of tactics, and exhaust all techniques before engaging in warfare.”
xxx
January 19 Thursday
“All modes of redressing the wrong having failed, raising of sword is pious and just.” (verse 22)
xxx
January 20 Friday
“Pardaesee, lorvaan, dukhee, apung manukh dee yataahshkat seva karnee”: “Do as much possible to serve and aid Pardaesees, those in need, or in trouble.”
January 21 Saturday
“Gurbanee dee kathaa tae keertan roaz sunanaa atae karnaa”: “Take part in listening to Kirtan and discussions of the essence of Gurbani every day.”
xxx
January 22 Sunday
“The Lord Himself reveals the Path, He Himself is the Doer of deeds.”
xxx
January 23 Monday
“Let everyone hail and praise the True Guru, who has led us to find the treasure of the Lord s devotional worship.”
xxx
January 24 Tuesday
“They are always at peace, and immaculately pure, they perform service for the True Guru.“
xxx
January 25 Wednesday
“The world is blind and ignorant, in the love of duality, it engages in actions.”
xxx
January 26 Thursday
“Sab sikhan ko Hukam hai guru manyo Granth.” Guru Gobind Singh Ji
“God himself is the Forgiver” – Guru Gobind Singh Ji
xxx
January 27 Friday
“I tell the truth; listen everyone. Only those who have Loved, will realize the Lord” Guru Gobind Singh Ji
xxx
January 28 Saturday
“He alone is a man who keeps his word, Not that he has one thing in the heart, and another on the tongue.”
xxx
January 29 Sunday
“Meeting the True Guru, hunger departs, hunger does not depart by wearing the robes of a beggar.”
xxx
January 30 Monday
“He who regards all men as equals is religious.”
xxx
January 31 Tuesday
“I fall at the feet of those who meditate on the Truest of the True.” Guru Gobind Singh Ji
Xxx subham xxxxTags- Guru Gobind Singh, January 2023, Calendar, Quotations, Tenth Guru
அடுத்திருக்க அறிந்த சுந்தரருக்காகப் (பரவையாரிடம்) தூதுசென்ற
தலைவனே!, அருமை ……… தேவனே!,
பெண்புத்தி கேட்கின்ற மூடரும் –
பெண்ணின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் பேதையரும், தந்தைதாய்பிழைபுறம் சொலும் மூடரும் பெற்றோர் குற்றத்தை வெளியிடும் பேதையரும், பெரியோர்கள் சபையிலே முகடுஏறி வந்தது பிதற்றிடும் பெருமூடரும் – சான்றோர் வீற்றிருக்கும் அவைக்களத்திலே மேடைமீது நின்று (வாய்க்கு) வந்ததை உளரும் பெரும் பேதையரும், பண்புஉற்ற சுற்றம் சிரிக்க இழிவான பழிதொழில் செய்திடும் மூடரும் -நற்பண்புடைய உறவினர் நகைக்குமாறு இழிந்த நிந்தைக்குரிய செயல்களைப் புரியம் பேதையரும் பற்று அற்ற பேர்க்கு முன்பிணை நின்று பின்புபோய்ப் பரிதவித்திடும் மூடரும் – எந்த ஆதரவும் இல்லாதவர்களுக்கு முதலில் (ஆராயாமல்) பிணையாகச் சென்று, பிறகு வருந்துகின்ற பேதையரும், கண்கெட்ட மாடு என்ன ஓடி இரவலர்மீது காய்ந்து வீழ்ந்திடும் மூடரும் – குருட்டு மாட்டைபோல ஓடி யாசகர் மேல் சீறி விழுகின்ற பேதையரும், இவர் எலாம் – இவர்கள் யாவரும் கற்று அறிவிலாத முழு மூடருக்குக் கால்மூடர் அரைமூடர் – (நூல்களை) உணர்ந்தும் (அவற்றின்படி நடக்கும்) அறிவு இல்லாத பெரும் பேதையர்களை நோக்கக் கால்பேதையரும் அரைப் பேதையரும் ஆவர்.
(வி-ரை.) நாவலர் : திருநாவலூரிற் பிறந்தவர் (சுந்தரர்). பிணை –
ஈடு. சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையாரிடம் தூது
சென்று பரவையாரூடலைத் தவிர்த்தார். அதனால் அடியார்க்கு எளியர்
என்னும் தன்மை இங்குப் புலப்படுகிறது.
(க-து.) கற்றறிமூடரே யாவரினும் பெருமூடராவர்.
Xxx
தமிழ் இலக்கியத்தில் பெண்களுக்கு எதிராக நிறைய கருத்துக்கள் உள்ளன. இது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அக்காலத்தில் ஆண்களுக்கும் கல்யாணமான பெண்களுக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் இருந்தது. அவர்களுக்கு வயது முதிர்ந்த ஆண்களின் அளவுக்கு பக்குவம் அல்லது அனுபவம் இருந்திராது. ஆகையால் இப்படி ஒரு கருத்து நிலவியது போலும்.
தாயார் என்ற ஸ்தானத்தில் இருக்கும்போது பாராட்டுவதும், மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்கும்போது தாழ்த்துவதும் கண்கூடு. நான் பெண்கள் பற்றி வெளியிட்ட 300 பழமொழிகளில் பெரும்பாலும் அவர்களை மட்டம் தட்டுவதாகவே உள்ளன. ஆனால் உபநிஷதம், மனு ஸ்ம்ருதி போன்றவற்றில் அவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்துள்ளனர்.
எந்த வீட்டில் பெண்கள் அழுகை கேட்கிறதோ அந்தக் குடும்பம் வேருடன் அழியும் என்று மனு நீதி நூல் சொல்கிறது. எங்கு பெண்கள் பூஜிக்கப் படுகிறார்களோ அங்கேதான் தெய்வங்கள் வசிக்கும் என்று மனு கூறுகிறார். சகோதரிகளுக்கு நகை நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கிக் கொடுத்து எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்கள் என்றும் அறிவுரை பகிர்கிறார் மநு .
இதோ எதிரும் புதிருமான கருத்துக்கள்|:
பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை
உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.
These shall be honoured and adorned by their fathers and brothers, husbands and brothers-in-law, who are desirous of their own welfare.—(55)
‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)
‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)
Yatra naryastu pujyante ramante tatra Devata, yatraitaastu na pujyante sarvaastatraafalaah kriyaah
—-Manu Smriti 3-56
Yatra naryastu pujyante ramante tatra Devata, yatraitaastu na pujyante sarvaastatrafalaah kriyaah —is a famous sloka taken from Manusmruthi which means where Women are honored, divinity blossoms there, and where women are dishonored, all action no matter how noble remain unfruitful.
xxx
शोचन्ति जामयो यत्र विनश्यत्याशु तत् कुलम् । न शोचन्ति तु यत्रैता वर्धते तद् हि सर्वदा ॥ ५७ ॥
śocanti jāmayo yatra vinaśyatyāśu tat kulam | na śocanti tu yatraitā vardhate tad hi sarvadā || 57 ||
Where the female relations live in grief, the family soon wholly perishes; but that family where they are not unhappy ever prospers.—(57)
‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கேஅந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57)
The houses on which female relations, not being duly honoured, pronounce a curse, perish completely, as if destroyed by magic.—(58)
‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)
Xxx
तस्मादेताः सदा पूज्या भूषणाच्छादनाशनैः । भूतिकामैर्नरैर्नित्यं सत्कारेषूत्सवेषु च ॥ ५९ ॥
Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(3-59 Manu Smriti)
‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)
மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).
சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!
xxx
உலகங்களை எரித்து சாம்பலாக்கும் சக்தி எனக்கு உண்டு — சீதா தேவி
சீதையின் மகத்தான சக்தி
(சீதாதேவி சொன்னாள்; கண்ணகி செய்து காட்டினாள்)
‘’ அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் (கம்ப ராமாயணத்தில் சீதை)
பொருள்:- ஈரேழு (14) உலகங்களையும் என் சொல்லினால் (சாபத்தால்) சுடும் சக்தி எனக்கு உண்டு. என் கணவன் வில் ஆற்றலுக்கு பெருமை சேர்ப்பதற்காக காத்திருக்கிறேன். அவன் ஆற்றலுக்கு இழுக்கு வரக்கூடாது-
(தாயே என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத்தில் ராம பிரானிடம் சேர்த்துவிடுகிறேன் என்று சொன்ன அனுமனிடம் சீதை கூறியது இது)
Xxx
அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்:
அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்
கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே
கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ
மானார் விழியார் மனம்.
பொருள்:
பெண் மயக்கம் கொண்ட பைத்தியக்காரர்களே! அருமையான அத்திப் பூவும், காக்கையின் வெள்ளை நிறமும், கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும் ஒருக்கால் பார்க்க இயன்றாலும் பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது. மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெண்களின் நெஞ்சத்தை தேவர்களும் காண மாட்டார்.
Xxx
ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?
புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது
ஹென்ரி 6- பகுதி 3
Oh tiger’s heart wrapped in a woman’s hide – York
Henry VI Part 3
ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்
Must, like a whore, unpack my heart with words – Hamlet
Xxx
பெண்கள் பற்றி விவேக சிந்தாமணி
விவேக சிந்தாமணி என்ற நூலில் கொஞ்சம் கூடுதலாகவே பெண் எதிர்ப்பு உணர்வு காணப்படுகிறது. அதை எழுதிய ஆசிரியரை தமிழ் கூறு நல்லுலகம் அறிய முடியாததால் அவரது மனப்பாங்கிற்குக் காரணம் என்ன என்று தெரியவில்லை. இதோ சில பெண் எதிர்ப்புப் பாடல்கள்:
1.மங்கை கைகை (கைகேயி) சொற்கேட்டு மன்னர் புகழ் தசரதனும் மரணம் ஆனான் செங்கமலச் சீதை சொல்லை ஸ்ரீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின்; தங்கை அவள் சொல்லைக் கேட்டு இராவணனும் கிளையோடும் தானும் மாண்டான் நங்கையற் சொற் கேட்பதெல்லாம் கேடுதரும் பேர் உலகோர் நகைப்பர்தாமே.
Emperor Dasaratha died because he listened to Kaikeyi; Rama went after a deer to satisfy lotus like Sita; Ravana died with all his relatives after listening to his sister; listening to women will bring disasters and you will be a laughingstock.
xxxx
2.பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரெனும் குணம் மூடப் பேடி லோபர் முண்டைகளுக்கு இணையில்லா முனை வீரர் புருடரென மொழியொணாதே உண்டுலகம் உதிர்ப்பாருள் கீர்த்தியறம் இன்ன தென உணர்வே யில்லார் அண்டினவர் தமைக் கொடுப்பார் அழிவழக்கே செய்வதவர் அறிவுதானே
Hen pecked husbands are eunuchs and reckless; one can’t even compare them with misers and widows. They are not men at all. Those who don’t know what fame and dharma, are the ones who always support the wrong side. They support injustice and harm those who ask for help.
You may trust a deadly poison and a flowing river and gale force wind. You can trust a mad elephant or a man eating tiger. You can even trust messengers of death and robbers; but those who trust sari clad women will surely be left to suffer (This verse is used in a Tamil film)
xxx
4.படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம் பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் கொடு மதக் குவடென வளர்த்திடும் குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்கப் பேசி நகைத்திடும் சிறுகுமரர் தம்மையும் நம்பலாம் கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர் தம்மையும் நம்பலாம் காக்கைபோல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம் நடை குலுக்கி மினுக்கிய நகை நகைத்திடு மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய்காணுமே
You can trust instant killing poison; you can even trust the old waylaying Neeli; you can trust a mad elephant, you can trust the laughing cheats, fraudulent accountants, land lords who rule the lands with crow like vision but never ever trust cat walking, laughing women with shiny jewellery. Never trust. Never trust. (For Neeli story, read my post The Ghost that killed 72 Tamils)
xxxx
5.அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள் பொன்னம் பெருத்த முலை கன்னங்கருத்த குழல் சின்னஞ் சிறுத்த இடை பெண் எண்னெஞ் சுருக்கவ டென்னெஞ்சுகற்ற கலை என்னென்று உரைப்பதினி நான் சின்னஞ் சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங்களுக்கு அபயமே
A Woman with more beautiful gait than a swan, more powerful eyes than poison, with words sweeter than nectar, with big breasts and dark curly hair and a thin waist made me go crazy. How can I describe the impact she made; that harlot has landed me in big trouble. Only God can save me now!
Xxxx
மேல் நாட்டாரும் பெண்களைத் தாக்கி எழுதியுள்ளனர் . இதோ சில மேற்கோள்கள்
“A man’s face is his autobiography. A woman’s face is her work of fiction.” ― Oscar Wilde
Here’s all you have to know about men and women: women are crazy, men are stupid. And the main reason women are crazy is that men are stupid.” ― George Carlin, When Will Jesus Bring The Pork Chops?
“As usual, there is a great woman behind every idiot.” ― John Lennon
“Dispute not with her: she is lunatic.” ― William Shakespeare, Richard III
“Good girls go to heaven, bad girls go everywhere.” ― Mae West, Wit & Wisdom of Mae West
“Like a compass needle that points north, a man’s accusing finger always finds a woman. Always.” ― Khaled Hosseini
“There is always one woman to save you from another and as that woman saves you she makes ready to destroy” ― Charles Bukowski, Love is a Dog from Hell
“It’s absolutely unfair for women to say that guys only want one thing: sex. We also want food.” ― Jarod Kintz, $3.33
“I have been crying,” she replied, simply, “and it has done me good. It helps a woman you know, just as swearing helps a man.” ― Horace Annesley Vachell, The Romance of Judge Ketchum
பயனில்லாது பேசுவோரை மனிதன் என்று மக்கள் அழைக்கக் கூடாது பதடி என்றே சொல் —திருவள்ளுவர்
Xxx
பர்த்ருஹரி நீதி சதகம்
முட்டாள்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் மெளனம் ஆகும்; குறிப்பாக அறிஞர்கள் சபையில் பேசாமடந்தையாக இருப்பது முட்டாள்களுக்குக் கிடைத்த சிறந்த அணிகலன் — பர்த்ருஹரி நீதி சதகம்
விஸே²ஷதஸ்ஸர்வவிதா³ம்ʼ ஸமாஜே விபூ⁴ஷணம்ʼ மௌனமபண்டி³தானாம் ||– பர்த்ருஹரி நீதி சதகம்
Silence is a unique cover for ignorance that is available to all, which the Creator has made. Especially in a gathering of learned people, it is an ornament to the ignorant.
—-subham—
TAGS–பெண் புத்தி , மூடர்’, அம்பலவாணர், பர்த்ருஹரி, நீதி சதகம், மனு, எச்சரிக்கை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 48
திருஞானசம்பந்தர் நளிர் ஜுரம் நீங்கப் பாடிய பாடல்!
ச.நாகராஜன்
சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளம். அவர் நிகழ்த்திய அற்புதங்களோ அதை விட ஏராளம்.
ஒவ்வொரு ஊராகச் சென்று இறைவனை வழிபட்டு தேவாரப் பதிகங்களை அவர் பாடிக் கொண்டே இருந்தார்.
கொங்கு மண்டலத்தில் காவேரிக்குத் தென்கரையிலிருந்த ஆலயங்களைத் தரிசித்த பின்னர் வடகரையில் இருந்த திருச்செங்கோடு ஆலயத்திற்கு அவர் சென்றார்.
திருச்செங்கோடு அந்தக் காலத்தில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பிரசித்தி பெற்றிருந்தது.
அங்கு தேவாரம் பாடி அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டார். பின்னர் மேல் பக்கம் திருநண்ணா முதலிய தலங்களுக்கு யாத்திரை சென்றார். பின்னர் மறுபடியும் திருச்செங்கோட்டில் எழுந்தருளினார்.
அப்போது பனிக்காலம். பல நாள் அங்கு தங்கி இருந்த போது பனிகாலத்தில் பொதுவாக அனைவரையும் வருத்தும் குளிர் ஜுரம் அவருடன் இருந்த திருக்கூட்டத்தாரையும் பிடித்தது. அனைவரும் அதனால் வருந்தினர்.
இதைப் பார்த்த திருஞானசம்பந்தர், “அவ்வினைக் கிவ்வினையாம்” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார்.
அடியார்களை வருத்தும் நளிர் ஜுரம் நீங்க வேண்டி, “அடியார்களை நளிர் ஜுரம் தீண்டப்படா” என்று ஆணை வைத்துத் திருநீலகண்டம் என்னும் பதிகத்தை ஓதி அருளினார்.
என்ன ஆச்சரியம்! உடனடியாக திருக்கூட்டத்தாரை மட்டுமின்றி அங்கு நளிர் ஜூரம் பீடித்திருந்த அனைவரிடமிருந்தும் நளிர் ஜுரம் நீங்கியது. அந்த நாட்டிலேயே நளிர் ஜுரம் நீங்கவே அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.
இந்த திருநீலகண்ட பதிகத்தை மந்திரமாக ஓதி விபூதி பூசினால் குளிர் ஜுரம் போகும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும்.
அப்படியே இன்றும் நடப்பதும் கண்கூடு.
இந்த வரலாறு நிகழ்ந்தது கொங்குமண்டலத்தில் என்பதால் கொங்குமண்டல சதகம் பாடல் 48இல் இந்தப் பெருமையைப் பேசுகிறது.
பாடல் இதோ:
திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின்
பெருக்காக “வவ்வினைக் கிவ்வினை யாமெனப்” பீடுபெறத்
திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேயமுற்றும்
வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள்:
சீகாழிப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருச்செங்கோடு என வழங்கும் திருக்கொடி மாடச் செங்குன்றூர்க்கு திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியபொழுது, நளிர் ஜுரமானது அனவரையும் பீடிக்கவே, “அவ்வினைக் கிவ்வினையாம்” எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தை அன்பின் பெருக்கால் பாடி அவ்வூர் மட்டுமின்றி அந்த நாடு முழுவதும் அந்த விஷ நோய் தீரும்படி ஓதப் பெற்றதும் கொங்குமண்டலமே என்பதாகும்.
அவ்வினை எனத் தொடங்கும் பாடல் இது:
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மதுவறியீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தம்பி ரான்கழல் போற்றுது நாமடியேஞ்
செய்வை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
பதிகத்தின் இறுதிப் பாடல் இது:
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான் இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண் திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே
நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய நகர்க்குப் பாழாகும், மேம்பாடு இலாத மன்னவர்கள் வந்து ஆள்வதே மிக்க
தேசச்சூனியம் – உயர்ந்த பண்பு இல்லாத அரசர்கள் வந்து ஆட்சிபுரிவது பெரிய நாட்டுக்குப் பாழாகும், மிக்க சற்புத்திரன் இலாததே நலமான வீறுசேர் கிருக சூனியம் – சிறந்த நன்மகன் இல்லாமையே அழகிய பெருமைபெற்ற வீட்டுக்குப் பாழாகும், சோம்பாத தலைவர் இல்லாததே
பழமையான உலகத்தில் யாவருக்கும் பெருஞ்செல்வம் இல்லாமையே பெரும் பாழாகும் என்றும் (அறிஞர்) கூறுவர்.
(வி-ரை.) ஆம்பல் – யானை. வதனம் (வட) முகம். சற்சனர் x
துர்ச்சனர். சூனியம் – பாழ். தாம்பூலத்திற்கு முகவாசம் என்று பெயர்.
தொன்மை + உலகு : தொல்லுலகு.
(க-து.) எவற்றிற்கும் அவற்றைச் சிறப்பிக்க ஒரு பொருள் வேண்டும்.
Xxxx
பணம் பற்றிய பாடல்களையும் பொன்மொழிகளையும் பார்த்தாலே செல்வம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துவிடும்
பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள்
பொருளிலார்க் கின்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும்,
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை,
கருதிய தரும மில்லை கதிபெற வழியுமில்லை,
பெருநிலந் தனிற்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே.
—-விவேக சிந்தாமணி
கையில் பணம் இல்லாத ஏழைக்கு இவ்வுலகில் மகிழ்ச்சியானது இல்லை, நற்செயல்களை செய்ய முடியாததால் புண்ணியமில்லை, புகழ் இல்லை, அவரது புதல்வர்களுக்கும் பெருமை ( ஸமூக அந்தஸ்து) இல்லை. தான தர்மங்களைச் செய்ய முடியாததால் மறுபிறவிக்கும் நன்மை இல்லை. இந்த பெரும் பூமியில் அவர்கள் நடைப்பிணங்களைப் போல திரிவார்கள். ——-விவேக சிந்தாமணி
பொன்னும் மணியும் நிறைந்த செல்வம் இருந்தால் கீழானவரையும் உறவினன் என்று சொல்லி புகழ்ந்து கொண்டாடி அவன் வீட்டில் திருமணமும் செய்து செய்துகொள்வார்கள். அதேசமயம் மன்னரைப் போல் வாழ்ந்து பின்னர் செல்வம் இழந்து யாருக்கும் எவ்வித உதவியும் செய்ய சக்தி அற்றவராக ஒருவர் ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளமாட்டார், இகழ்ந்தும் பேசுவார்.– விவேக சிந்தாமணி
XXXXX
பணம் பத்தும் செய்யும்
xxx
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247
xxxx
பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்
கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊர்; வழக்கைத் தீர்த்து
வைக்கின்ற அறிவு முதிர்ந்தவர் இல்லாத சபை; தமக்கு உள்ளதைப்
பிறருக்கும் பகுத்துக்கொடுத்து உண்ணும் தன்மை யில்லாதவர்களின்
பக்கத்திலே வாழ்வது; இம்மூன்றும் நன்மை தருவதில்லை’’ (பா.10)
XXX
சபைக்கு அழகு விகட கவி (தெனாலி ராமன்)
நகைச்சுவை இறை வணக்கம்
ககனே காக ரத்னானி க்ரக ரத்னானி மூஷிகா
சயனே மட்குண ரத்னானி சபாரத்னானி விதூஷக
ககனே- ஆகாயத்திற்கு
காக ரத்னானி – காகங்கள் பறப்பது அழகு
க்ரகரத்னானி – வீட்டிற்கழகு
மூஷிகா – பெருச்சாளிகள் வசிப்பது
சயனே- படுக்கைக்கு
மட்குண ரத்னானி – மோட்டுப் பூச்சிகள் வசிப்பது
சபாரத்னானி- சபைக்கு அழகாவது
விதூஷகா – காணதனைத்தியும் கண்டவிதம் பிரசங்கம் செய்யும் விகடப் பிரசங்கிகள்
தெனாலி ராமன் போன்ற விகட கவிகள் பேரறிஞராகத் திகழ்ந்தனர்
XXX
நேர்மையான ஆட்சி இல்லாத நாடு பாழ்
கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற்
கடும்புலி வாழுங் காடு நன்றே. 63– வெற்றிவேற்கை
கொடுங்கோல் மன்னர் ஆளும் நாட்டில் வாழ்வதை விடக்
கொடிய புலி வாழும் காட்டில் வாழ்வது நல்லது.
கொடுங்கோல் மன்னன் புலியை விடக் கொடுமையானவன்.
XX
குறள் 559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]
பொருள்
நூல்கள் கூறியுள்ள அரச நீதி தவறி, ஒழுக்கம் தவறி, நடுவுநிலைமை தவறி ஒரு மன்னன் ஆட்சி செய்தால் அந்நாட்டின் பெருமை புகழ் செல்வம் உணவு ஆயுதங்கள் மழை ஆகியவை தவறும். மழை பொழியாமல் போனால் நாடு வறண்டு விடும். மிகுந்த துன்பம் நிலவும். அத்தகைய ஆட்சி ஒரு கொடுமையான ஆட்சி.
ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன் நைசா பேசி பைசா இழுப்பேன் ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன் நைசா பேசி பைசா இழுப்பேன் டிராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி நான் இப்போதே போவோணும் உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாயிப் போயிடுவீங்க அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை கணக்குக்கும் மீறி பணம் வந்த போது மனுஷனை சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்யவே துணிஞ்சு இரவு ராணிகள் வலையிலே விழுந்து ஏமாந்து போவே..இன்னும் கேளு அப்புறம்..?
போலீசுப் புலி புடிக்கும் மாப்பிள்ளே புர்ராவைப் பெயர்த்தெடுக்கும் அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பெண்சாதி பேச்சைக் கேளு. அப்பிடியாஆஹா.
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாக தோணுது.
பட்டணம்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணைத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே.. மாமா ஏம்மா?
என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு எங்கப்பனானே சத்தியம் ..சத்தியம் .. சத்தியம் ..
ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம் (2)
–SUBHAM—
TAGS- அவிசாரி, பட்டணம், மனு நீதி நூல், பணம் பந்தியிலே, பணம் ,தமிழ், பொன் மொழிகள் ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோகவாசிஷ்டம்
யோக வாசிஷ்டம் கூறும் புஸுண்டோபாக்யானம்!
ச.நாகராஜன்
முன்னொரு காலத்தில் பெரும் மஹரிஷிகள் அனைவரும் தேவ சபையில் ஒருங்கே கூடினர். அப்போது ஒரு கேள்வி எழுந்தது.
உலகில் வசித்துக் கொண்டிருந்தாலும் உலக சம்பந்தமான தொடர்பு சிறிதும் ஏற்படாத மஹா ஞானிகளுள் சிறந்தவர் யார்? அவர் எங்கிருக்கிறார்? – இது தான் கேள்வி.
அப்போது சாதாதபர் என்னும் மஹரிஷி சபையோரைப் பார்த்துச் சொல்லலானார் : “ ரிஷி பெருமக்களே! மஹாமேருவின் ஈசான கோணத்தில் எத்தகைய தவம் செய்தாலும் செல்வதற்கு மிக அரிதாக உள்ள ஒரு ரகசியமான இடத்தில் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தின் பொந்திலே காகத்தின் உருவத்தில் புஸுண்டர் என்ற மாபெரும் யோகியார் இருக்கிறார். அவரைப் போன்ற இன்னொருவரைக் காண்பது அரிது”.
இதைக் கேள்வியுற்ற வசிஷ்ட மஹரிஷி தனது தவத்தின் வலிமையாலும் யோக சக்தியாலும் அந்த மரத்தின் அருகில் சென்றார். அங்கே புஸுண்ட மஹரிஷியைக் கண்டார்.
அவரிடம் அர்க்யம் பாத்யம் ஆகிய அனைத்து உபசாரங்களையும் பெற்றார்.
பின்னர் வினவலானார் தனது சந்தேகத்தை!
“ ஓ! யோகீஸ்வரரே! வெகு நீண்ட காலமாக உலகில் நீங்கள் வசிக்கிறீர்கள். உங்களது அனுபவத்தில் கண்ட விஷயங்களைச் சற்று எனக்குச் சொல்லுங்கள்” என்று அவர் வேண்டினார்.
அப்போது புஸுண்ட மஹரிஷி பல ரகசியங்களை அவரிடம் விண்டுரைத்தார்.
அவை அதிசயிக்கத்தக்க விவரங்கள்! யோகம், ஞானம் பற்றிய பல மர்மமான விஷயங்களை அவர் எடுத்துரைத்தார்.
பின்னர் கூறினார் இப்படி:
: ஓ, முனிவரே! நீர் பிரம்மாவினால் இதற்கு முன் ஏழு தடவை உண்டாக்கப்பட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். பிரம்மாவின் சங்கல்பத்தால் கர்ப்பவாசம் இன்றி நீர் தோன்றினீர். அப்படித் தோன்றிய ஜன்மங்களில் இது உமக்கு எட்டாவது ஜன்மம். ஒரு சமயம் ஆகாயத்திலிருந்து நீர் பிரம்மாவின் சங்கல்பத்தினால் தோன்றினீர். இன்னொரு சமயம் அக்னியிலிருந்து தோன்றினீர்.
பூமி அந்தர்தானம் அடைந்து கூர்மத்தினால் சமுத்திரத்திலிருந்து உத்தாரணம் செய்யப்பட்டதை இதற்கு முன் ஐந்து கல்பங்களில் கண்டிருக்கிறேன்.
இப்போது நடந்த அம்ருத மதனமானது நான் கண்டதில் பனிரெண்டாவது தடவை ஏற்படுவதாகும். ஹிரண்யாக்ஷன் பூமியைக் கீழே கொண்டு போனதை மூன்று தடவை நான் கண்டிருக்கிறேன்.
ஹரியானவர் பரந்தாமராகத் தோற்றமுற்ற அவதாரங்களில் எட்டை நான் பார்த்திருக்கிறேன். திரிபுர சம்ஹாரங்களில் முப்பதைப் பார்த்திருக்கிறேன். தக்ஷயக்ஞ நாசம் இரண்டு முறை கண்டிருக்கிறேன்.
ஒரே விஷயத்தைச் சொல்லுவதாகவும் பல பாடங்களை உடையதாயும் உள்ள புராணங்கள் கலியில் நஷ்டமடைந்து போக அவை மீண்டும் ஒவ்வொரு சதுர்யுகத்திலும் மீண்டும் பிரவர்த்திப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ராமாயணம் என்னும் வேறு இதிஹாஸம் ஒன்று லட்சம் கிரந்தங்களோடு கூடிய ஞான சாஸ்திரமாகத் தோன்றியதைக் கண்டிருக்கிறேன்.
பூபார நிவிருத்திக்காக வசுதேவர் இல்லத்தில் கிருஷ்ணன் என்னும் பெயரை உடைய பதினாறாவது அவதாரமானது விஷ்ணுவுக்கு இனி ஏற்படப் போகிறது.
இதற்கு முன் அந்த அவதாரத்தில் பதினைந்து அவதாரங்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு சமயம் ருத்திரர் சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் பிரம்மா சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் விஷ்ணு சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் முனிவரது சிருஷ்டியையும் கண்டிருக்கிறேன்.
ஒரு கல்பத்தில் தாமரை மலரிலிருந்தும் ஒரு சமயம் ஜலத்திலிருந்தும் ஒரு கல்பத்தில் அண்டத்திலிருந்தும் ஒரு கல்பத்தை ஆகாயத்திலிருந்தும் பிரம்மா உண்டாகியதைக் கண்டிருக்கிறேன்.
இப்படிப் பல விஷயங்களைக் கேட்ட அனைவரும் பிரமித்தனர்.
நாம் இப்போது இருப்பது ஸ்வேத வராஹ கல்பம். மன்வந்தரத்தின் பெயர் வைவஸ்வத மன்வந்தரம்.இது இந்த கல்பத்தில் ஏழாவது மன்வந்தரம்.
இப்போது இருப்பது பிரம்மாவின் 51வது வருடம்.
இப்படிப்பட்ட நீண்ட ஒரு சரிதத்தை சிருஷ்டி பற்றிக் கேள்விப்பட்ட கார்ல் சகன் என்ற விஞ்ஞானி மலைத்தே போனார்.
சிருஷ்டியின் மர்மத்தைக் கூறும் சிதம்பரம் நோக்கி வந்தார். நடராஜரை தரிசித்தார்.
தனது காஸ்மாஸ் என்ற பிரபலமான அமெரிக்க தொடரின் ஒரு பகுதியின் ஆரம்பத்தில் நடராஜரைக் காண்பித்தார்.
நமது பிரபஞ்சம் பற்றிய அறிவு விஞ்ஞான பூர்வமானது.
இதை முற்றிலுமாக அறிந்து கொள்ள கல்பம் பற்றிய விவரங்களை அறிதல் இன்றியமையாதது!
1. ‘கூறிய’ என்றும் பாடம்.கைப்பொருளாலே மிகு வெற்றி (உண்டு). வரும் மருத்துவர்க்குக் கைவிசேடந்தன்னில் சயம் – முன்னுக்கு வரும் மருத்துவர்களுக்குக் கைராசியால் வெற்றி (உண்டாகும்), நலம் உடைய வேசையர்க்கு அழகிலே- நன்மையுடைய பரத்தையர்க்குத் தங்கள் அழகினாலே (வெற்றியுண்டு),நாளும் அரசர்க்கு ரணசூரத்திலே – எப்போதும் மன்னவர்கட்குப் போர்க்களத்திலே (அதிக வெற்றியுண்டு), நற்றவர்க்கு உலகுபுகழ்பொறையிலே அதிக சயம் – நல்ல தவத்தினர்க்கு உலகம் புகழும் பொறுமையினாலே மிகுவெற்றி (உண்டாகும்), ஞானவேதியர் தமக்கோ குலமகிமை தன்னிலே – அறிஞரான மறையவர்களுக்கோ தம் மரபுக்குரிய பெருமையினாலே வெற்றி உண்டாகும், வைசியர்க்கோ கூடிய துலாக்கோலிலே சயம் – வணிகர்களுக்குப் புகழ்பெற்ற தராசுக்கோலை ஒழுங்காகப் பிடிப்பதனாலே வெற்றி (உண்டாகும்), குற்றம் இல்லாத வேளாளருக்கோ குறையாத கொழுமுனையிலே சயம் – குற்றம் அற்றவர்களான வேளாளர்க்கு நிறைவுற்ற கொழுவின் நுனியினாலே (உழுவதால்) வெற்றி உண்டாகும், அலைவுஇல் குதிரைக்கு நடைவேகத்தில்அதிக சயம் ஆம் என்பர் – வருத்தம் இல்லாத குதிரைக்கு அதனுடைய நடைவிரைவினால் மிகு வெற்றியுண்டாகும் என்று (அறிஞர்) உரைப்பர்.
(க-து.)அவரவர்கள் தம் தொழில் முறையிலேதான் வெற்றியுண்டாகும்.
Xxx
My commentary on verse 33 of ARAPPALISURA SATAKAM
வெற்றி வேற்கை (நறுந்தொகை) எழுதிய அரசர் அதிவீரராம பாண்டியனும் அம்பலவாணரும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர்.
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் 4
மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை 5
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல் 6
உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல் 7
XXX
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் 11
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல் 12
விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல் 13
XXX
காலையும் மாலையும் நான் மறை ஓதா அந்தணர் என்போர் அனைவரும் பதரே 65
குடி அலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே 66
முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே 67
வித்தும் ஏரும் உளவா இருப்ப எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே 68
XXX
தவம் செய்வோருக்கு பொறுமை அவசியம் ஏன்?
அப்போது அவர்களுக்கு வெற்றி எளிதில் கிட்டாது; வெற்றி வரும் நேரத்தில் அஹங்காரமும் காம எண்ணங்களும் வலை வீசும்; அதில் அகப்பட்டு சிறை சென்ற ஆனந்தாக்களை பத்திரிக்கையில் படிக்கிறோம் . விசுவாமித்திரர் அகம்கார வெறியில் வஸிட்டரின் காமதேனுவைப் பறிக்கப் பார்த்தார்; நல்ல அடி வாங்கினார் ;பின்னர் திரிசங்குவை உடலுடன் இந்திரலோகத்துக்கு அனுப்பி, அவர்கள் அவரை பூமிக்கு உருட்டிவிட்டபோது மற்றோரு அடி வாங்கினார் மேனகா வலையில் சிக்கி தவத்தை இழந்தார். அவர் மன்னர்- ஞானி; ஆக அவருக்கு பொறுமை இல்லாததால் மும்முறை தோற்றார். பின்னர் தவற்றை உணர்ந்து பக்குவ நிலை அடைந்தார். பிராமணர் பட்டத்தை அவருக்கு வசிஷ்டரே தந்தார்.
XXX
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை
ஒரு தவசி ராம கிருஷ்ண பரமஹம்ஸரிடம் வந்தார். வர, வர தனக்கு ஞான திருஷ்டி அதிகரிப்பதாகச் சொல்லி. தொலை தூரத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் முன் கூட்டியே தெரிவதாகவும் அதைத்தானே சரி பார்த்து அறிந்த தாகவும் சொன்னார். உடனே தவத்தை சில நாட்களுக்கு நிறுத்தும்படி பரமஹம்ஸர் சொன்னார். வந்தவர் வியப்புடன் ஏன் நிறுத்தவேண்டும் என்று வினவினார். தவம் சித்தி அடையப்போகும் நேரத்தில் இப்படி தேவதைகள் வந்து திசை திருப்பும் என்றும் ஆகையால் அதை நிறுத்த, சில நாட்கள் தவம் செய்வதை கைவிடுதல் நன்று என்றும் சொன்னார்.
இன்னொருவர் வந்து தான் தியானம் செய்யும்போது பழைய தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுப்பதாக வருத்தத்துடன் செப்பினார்.அதற்கும் பரமஹம்ஸர் தக்க பதில் கொடுத்தார். எண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்தை எவ்வளவு கவிழ்த்து எண்ணெயை வெளியேற்றினாலும் சிறிது ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். நம்முடைய பழைய எண்ணங்களும் அப்படித்தான். எளிதில் போகாது.ஆகையால் அது பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தியானம் செய்யலாம் என்கிறார். தியானத்தில் வெற்றி அடைய நிறைய பொறுமை வேண்டும்.
XXXX
நரஸ்ய ஆபரணம் ரூபம் ரூபஸ்ய ஆபரணம் குணஹ
குணஸ்ய ஆபரணம் ஞானம் ஞானஸ்ய ஆபரணம் க்ஷமா — என்று
சம்ஸ்க்ருத சுபாஷிதம் செப்பும்.
மனிதனுக்கு அழகு எடுப்பான தோற்றம் ;
அந்த உருவத்துக்கு அழகு நல்ல குணம்;
அந்த குணத்துக்கு அழகு தருவது ஞானம்;
அந்த ஞானத்துக்கு அழகு சேர்ப்பது பொறுமை
XXXX
மற்றொரு பொறுமை ஸ்லோகம் இதோ :
கோகிலானாம் ஸ்வரம் ரூபம் பாதிவ்ரத்யம் து யோஷிதாம்
வித்யா ரூபம் விரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்
குயிலுக்கு அழகு அதன் இனிய குரல் ;
பெண்களுக்கு அழகு கற்பு;
அசிங்கமான தோற்றம் உடையோருக்கு அழகு அவர்கள் கற்ற கல்வி;
தவசிகளுக்கு அழகு பொறுமை .!
சாணக்கியர் கதை அனைவரும் அறிந்ததே ; அழகற்ற கருத்த பிராமணர் அவர். ஒரு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அவரை , நந்த வம்ஸத்து மன்னர், தர தர என்று வெளியே இழுத்து வந்து அவமானப்படுத்தவே உனது சாம்ராஜ்யத்தை வேரறுக்காதவரை என் குடுமியை முடிய மாட்டேன் என்று வீர சபதம் செய்தார். அதன் படி நந்த வம்சத்தை பூண்டோடு அழித்து, அலெக்ஸ்சாண்டரையும் அச்சுறுத்தக்கூடிய மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை நிறுவினார். மஹா மேதாவி; ஆனால் தோற்றத்தில் விகாரம்.
XXX
பார்ப்பனர் பற்றி வள்ளுவரே சொல்லிவிட்டார். வேதத்தை வேண்டுமானாலும் மறக்கலாம். ஆனால் ஒழுக்கத்தைக் கைவிட்டால் அதற்கு மன்னிப்பே கிடையாது. அந்தக் காலத்தில் பிராமணர் மூலம் செய்திகளை அனுப்புவார்கள் ; அதைத் தொல்காப்பியரும் சொல்கிறார். கோவலனுக்கு மாதவி அனுப்பிய மன்னிப்பு LOVE LETTER லவ் லெட்டரை பார்ப்பனர் கையில் கொடுத்து அனுப்பியதை சிலப்பதிகாரம் செப்புகிறது. அவ்வளவு நம்பிக்கை அவர்கள் மீது.
குறள் 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
பிராமணர்கள் அடிப்படை வேலை, வேதங்களை கற்று ஓதவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அவர்களின் கடமையில் இருந்து தவறுகிறார்கள். அப்படி வேதத்தை மறந்து ஓதாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒருவன் ஒழுக்கத்தில் இருந்து தவறினால் அவனுடைய புகழும் அவன் குடும்பத்தினுடைய புகழும் குலத்தினுடைய புகழும் குன்றி விடும். ஆதலால் ஒருவருடைய புகழ் அவர் ஒழுக்கத்தில் உள்ளது.
தைவாதீனம் ஜகத் சர்வம்
மந்திராதீனம் து தைவதம்
தன்மந்த்ரம் பிராஹ்மணாதீனம்
பிராஹ்மணோ மமதேவதா
பொருள்: “உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது. தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் மந்திரங்களும் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை – பிராமணர்களே எனது தெய்வம்” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்
இவை அனைத்தும் ஒழுக்கமுள்ள, வேத வாழ்வினைக் கடைப்பிடிக்கும் பார்ப்பனர்களைப் பற்றி சொன்ன வசனங்கள்.