Spectacular Comet Show in November

Spectacular Comet Show in November

(This article has been already posted in Tamil: swaminathan)

Picture of Halley’s Comet

What are comets?

Comets are small icy bodies orbiting the sun usually on a highly elliptical path. A comet consists of a central nucleus a few kilometres across, and has been likened to a dirty snow ball because it consists mostly of ice mixed with dust. As a comet approaches the sun its nucleus heats up releasing gas and dust which form a tenuous coma up to 60,000 miles wide around the nucleus. Gas and dust stream away from the coma to form one or more tails which may extend to millions of miles. Comet Encke is with the shortest period of orbit and returns every 3.3 years. Comets are named after their discoverers.

 

New Comet sighted

New Scientist magazine has listed ten great discoveries or inventions that would hit the headlines in newspapers in 2013. One of the ten sensational events is the sighting of a comet that is heading towards earth. Astronomers expect a spectacular show on the sky in November 2013.They expect at its peak this comet known as C/2012/S1 will outshine full moon in brightness. It will be visible even during day time.

It was spotted in September last year by Russian astronomers of the International Scientific Optical Network (ISON) and so it is also known as ISON. Coming from the Oort cloud this dirty snowball will evaporate as it approaches sun. The gas surrounding the comet will shine as a tail brightly in November. As it goes away from sun it will disappear in the vast space. Comets contain three parts Head, Nucleus and Tail. The nucleus will extend as head and tail as it approaches the sun.

ISON may even be visible from October 2013 to January 2014. There is a big superstition surrounding the comets. In some cultures they believe they bring changes for good. But Hindus believed that it portends a danger to the rulers and the country. We see this reference from Mahabharata to Puranas and from Sanskrit literature to Tamil Literature.

Picture of Comet Hale Bopp

Lord Ganesh’s Chemical Warfare

Bhargava Purana has an interesting story:

Dhumaketu in Sanskrit means Lord Ganesh and the comet. Lord Ganesh conducted a ‘chemical warfare’ with Dhumasuran and killed him. Hence Ganesh was called Dhumaketu. Dhumasuran was born as a King known as Vikuthi in his previous birth. When he desired for Indra’s post, he was cursed to be born as demon Dhumasuran. Vinayaka appeared as a child to the couple Sumuthai and Madhavarajan and killed Dhumasuran. Dhumasura wellversed in chemical warfare used weapons of mass destruction by blowing poisonous gases on good people. Lord Ganesh (Vinayaka) swallowed the poisonous gas and threw it back on Dumasuran, says the Puranas. Dhumasuranwas killed by the smoke (smoke is Dhumam in Sanskrit)

In Tamil and Sanskrit literature, the poets compare evil persons with comets. Actual appearance of comets provokes wars such as Mahabharata war. Sangam Tamil literature which is 2000 year old has a few interesting references to comets.

Picture of Comet Mc Naught

Hindu Beliefs

Kudalur Kizar, a poet, sings an elegy to the Chera king (Yanaikat Chey) Mantaram Cheral Irumporai, in which he says that the sighting of a comet seven days earlier portended his death. What he feared seven days ago came true today. In short the king died after the appearance of a comet. It may be Halley’s comet ( Purananauru verse 229)

In another verse Kapilan, the most famous Brahmin poet, who composed the highest number of poems in Sangam period says that even if a comet appeared Pari’s land will get good rains and good harvest because he was such a just and generous king (Puram verse 117). He used the Sanskrit word Dhumam for a comet.

Among the modern greats, Bharathiyar, the most famous Tamil poet composed a poem on Halley’s comet during its 1910 visit. The poem was titled Sadharana Varusha Dhumaketu. He also echoed the ancient beliefs on comets, but questioned them whether they are true or false:

Bharathiyar’s Tamil poem as translated by Dr T N Ramachandran:

1.Like a palm tree set on a millet plant

With a growing tail on a little star

You blaze forth in kinship with eastern moon,

Oh illustrious comet! Sid you welcome.

2.You range over countless crores of Yojanas;

They say your endless tail is wrought of gas

The softness of which is indeed peerless.

3.They aver that your tail touches the earth too

And you fare forth with no harm to the poor;

The wise talk of your myriad marvels

4.We that are over Bharath spread, have forgot

Long long ago the lore of works; we learnt

Of your nature true from aliens only;

None amongst us is with clarity blessed

5.Come, Oh flame! I will put you some questions.

They say, you will cause harm to the evil.

And will immerse in a sea of misery

The ancient world. Is this true or untrue?

6.”By Her mandate great—the Primal Goddess,

You fare forth executing punishment

Purging the world of its impurities

And making it pure” they say. True or false?

7.”It is a rule with you to appear once

In a cycle of seventy five years;

This time you will cause many marvels” say they.

I ask of you, if this be true or false?

(Poem by Bharathiar, Translated by TNR)

 

When I worked as the Producer of the BBC Tamil Service in the Bush House, London, comets evoked great interest among Tamil listeners and they asked several questions about it in the Questions and Answers programme. I answered their questions giving the above details.

 

 

பூமியை நோக்கி வால் நட்சத்திரம் வருகிறது

பூமியை நோக்கி வால் நட்சத்திரம் வருகிறது

Comet Hale Bopp

2013ஆம் ஆண்டில் பெரிய செய்தியாக அடிபடப் போவது ஒரு புதிய வால் நட்சத்திரம் ஆக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதை சூப்பர் காமெட் (super comet) என்று அவர்கள் அழைக்கின்றனர். காரணம் என்னவென்றால் இது பௌர்ணமி நிலவை விட அதிகம் வெளிச்சம் உடையதாக இருக்கும். பகல் நேரத்தில் கூட இது நிலவை விடப் ப்ரகாசமாகத் தெரியும்.

இது பூமிக்கு மிக அருகில் நவம்பர் 28ஆம் தேதி வரும். ஒரு மாத காலத்துக்கு வான வேடிக்கைகளை நடத்திவிட்டு சூரிய மண்டலத்திலிருந்து கண் காணாத தொலைவுக்குச் சென்றுவிடும். இதன் பெயர் சி/2012எஸ்1 (C/2012S1). இதைக் கண்டுபிடித்த அமைப்பின் பெயரில் இதை இசான்(ISON) அல்லது ஐசான் என்றும் அழைப்பர். இதைப் போன வருஷம்தான் முதலில் பார்த்தனர். அது முதல் இதைக் கண்காணித்து வருகின்றனர்.

ஹாலியின் (Halley’s Comet) வால் நட்சத்திரம் 76 ஆண்டுக்கு ஒரு முறை வரும். ஆனால் இது அப்படிப்பட்ட பாதையில் செல்லாமல் சுற்றி வராத பாதையில் செல்கிறது. இது ஊர்ட்(Oort Clouds) மேகப் பகுதியில் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 1997ஆம் ஆண்டில் வந்த  ஹேல் பாப் (Hale Bop) வால் நட்சத்திரமும் பெரிய வாலுடன் பூமியிலுள்ளோருக்குத் தெரிந்தது. புதிய வால் நட்சத்திரமோவெனில் நிலவைப் போல பன்மடங்கு ஒளிவீசும்.

Halley’s Comet

ஆபத்து வருமா?

வால் நட்சத்திரம் தோன்றினால் தேசத்துக்கும் அதை ஆள்வோருக்கும் ஆபத்துவரும் என்ற நம்பிக்கை மஹா[பாரத காலத்தில் இருந்து நிலவி வருகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இதே செய்தி வருகிறது. ஒரு வால் நட்சத்திரம் தோன்றிய பின்னர் ஒரு சேர மன்னன் இறப்பார் என்று புலவர் கவி பாடினார். எதிர்பார்த்தபடியே அம் மன்னன் ஏழாம் நாளில் இறந்தான். மாபாரதத்திலும் போருக்கு முன் தூமகேது தோன்றியது.

இதோ புறநானுற்றில் உள்ள பாடல்:

பாரி வள்ளளின் பெருமையைப் பாடும் கபிலன் அந்த நாட்டில் “மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,, தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்” (பொருள்: சனிக் கிரகம் புகை போல மங்கிக் காணப்படினும், தூமகேது (வால் நட்சத்திரம்) தோன்றினும், வெள்ளி கிரகம் தென்  திசை நோக்கிச் சென்றாலும்) மழை பொய்க்காது என்கிறார். ஆக கபிலரும் தூமகேது தோன்றினால் கெடுதிகள் வரும் என்பதை அறிந்திருந்தார்.

புறநானுற்றில கூடலூக் கிழார் பாடிய பாடல் எண் 229ல்:

ஆடு இயல் அழல் குட்டத்து

ஆர் இருள் அரை இரவில்

முடப்பனையத்து வேர் முதலாக்

கடைக் குளத்துக் கயம் காய

பங்குனி உயர் அழுவத்துத்

தலை நாள்மீன் திரிய…………..

கனை எரி பரப்பக், கால் எதிர்பு பொங்கி

ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே………….. (புறம் 229)

 

அதாவது தூமகேது ஒன்று தோன்றிய ஏழாம் நாளில் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்து விடுவான் என்று கூடலூர்க் கிழார் அஞ்சினார். அதன்படியே அவன் இறந்துபட்டவுடன் புலவர் பாடிய பாடல் இது. சிலர் இதை எரிகல் விழுந்தது என்பர். தினமும் பூமியில் பல்லாயிரக் கணக்கான எரிகற்கள் விழ்வதால் பல அறிஞர்கள் இதை தூம கேது என்றே விளக்கியுள்ளனர்.

Comet Hale Bopp

பாரதியாரின் வால் நட்சத்திரப் பாடல்

சாதாரண வருஷத்து தூமகேது (1910) என்ற பெயரில் பாரதியார் வால் நட்சத்திரப் பாட்டு இருக்கிறது.இது ஹாலியின் வால் நட்சத்திரம் வந்தபோது எழுதிய பாடல்:

தினையின் மீது பனை நின்றாங்கு

மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்

கீழ்த்திசை வெள்ளியை கேண்மை கொண்டிலங்கும்

தூமகேதுச் சுடரே வாராய்!

எண்ணில் பல் கோடி யோசனை எல்லை

எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்

புணைந்த நின்னொடு வால் போவது என்கின்றார்

மண்  அகத்தினையும் வால் கொடு தீண்டி

ஏழையர்க்கு ஏதும் இடர் செய்யாதே நீ

போதி என்கின்றார்; புதுமைகள் ஆயிரம்

நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால்.

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்

நூற்கணம் மறந்து பன் நூறாண்டாயின!

உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே

தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.

வாராய் சுடரே! வார்த்தை சில கேட்பேன்;

தீயர்க்கெல்லாம் தீமைகள் விளைத்துத்

தொல் புவியதனை துயர்க்கடலில் ஆழ்த்தி நீ

போவை என்கின்றார்; பொய்யோ, மெய்யோ?

ஆதித் தலைவி ஆணையின்படி நீ

சலித்திடும் தன்மையால், தண்டம் நீ செய்வது

புவியினைப் புனிதமாய்ப் புனைதற்கே என

விளம்புகின்றனர், அது மெய்யோ பொய்யோ?

ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை

மண்ணை நீ அணுகும் வழக்கினை யாயினும்

இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்

விளையும் என்கின்றார்; மெய்யோ பொய்யோ?

 

சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும்

மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதாப்

புகலுகின்றனர்; அது பொய்யோ, மெய்யோ?

— தேசிய கவி சுப்பிரமணிய பாரதி

 

Comet Mc Naught

பி.பி.சி.( BBC Tamil Service) தமிழோசையில் சுவாமிநாதன் பதில்கள்

பி.பி.சி. தமிழோசை ப்ரொட்யூசராக (Producer) நான் வேலை பார்த்த காலத்தில் வினவுங்கள் விடைதருவோம் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினேன். அந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் வினவுங்கள் விடைதருவோம் என்ற அதே பெயரில் புத்தகமாக வந்தது. அதில் வால் நட்சத்திரம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில் இருந்து சில பகுதிகள்:

1.வால் நட்சத்திரங்களும் சூரிய மண்டலத்தைச் (Solar System) சேர்ந்தவைதான். ஆனால் இவைகள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.

2.இதற்கு தலை, தலையின் நடுவே உட்கரு, வால் (Head, Nucleus and Tail) என்ற மூன்று பகுதிகள் உண்டு. சூரிய மண்டலம் உருவான காலத்தில் கிரகங்களாக உருவாகாமல் எஞ்சிய விண்துகள்களே இப்படி தூமகேது ஆயின.

3.உட்கரு என்பது தூசியாலும் பனிக்கட்டியாலும் ஆனது. அதைச் சுற்றி வாயுக்கள் இருக்கும்

4.சூரியனில் இருந்து தொலைவில் இருக்கும்போது உட்கரு மட்டுமே இருக்கும். சூரியனை நெருங்கியவுடன் அது ஆவி ஆகி வாயுக்களும் வாலும் தோன்றும்

5.சூரியனை நெருங்கும்போது வால் பிரகாசமாகத் தெரியும், தொலைவில் செல்லுகையில் மங்கி மறைந்துவிடும்

6.எட்மண்ட் ஹாலி (Edmund Halley) என்பவர் கண்டு பிடித்த ஒரு தூமகேதுவுக்கு அவர் பெயர் சூட்டபட்டது. அது 76 ஆண்டுக்கு ஒரு முறை நமக்குத் தோன்றும்.

7.பூமியில் உயிரினங்கள் தோன்றவும் நோய்க்கிருமிகள் பரவவும் வால் நட்சத்திரங்கள் காரணமாக இருக்கலாம் என்று   சிலர் கருதுகின்றனர்.

8.மூன்றேகால் ஆண்டுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வரும் என்கே (Encke)யும் இரண்டரைக் கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் டெலாவ(Delavan)னும் ஆச்சரியம் நிறைந்தவை.

9.சில தூமகேதுக்கள் கிரகங்களின் ஈர்ப்புவிசையால் பிளவுபடும்

10.லட்சக் கணக்கில் இவை இருந்தாலும் அத்தனையும் பூமிக்கு அருகில் வாரா.

11.இவற்றின் தலை, வால் ஆகியன பல கோடி மைல் அகலம், நீளம் உடையவை.

12.இவற்றை யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்களின் பெயரே சூட்டப்படும். ஒரே வால் நட்சத்திரத்தை மூன்று ஜப்பானியர்கள் கண்டு பிடித்துச் சொன்னதால் அதற்கு டாகோ—சாடோ—கொசாகா (Tago—Sat0—Kosaka) என்று பெயர் சூட்டினர்.

13.சேகி (Seki) என்ற ஜப்பானியர் இரண்டு வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடித்துச் சொன்னதால் இரண்டுக்கும் அவருடைய பெயரையே சூட்டினர்.

வால் நட்சத்திரம் தோன்றினால் அரசர்க்கோ நாட்டிற்கோ தீங்கு நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் ஏற்பதில்லை.. நவம்பர் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஜோதிடர்களுக்கும் ஆரூடக்கார்களுக்கும் நல்ல ‘பிசினஸ்’ நடக்கும்!

For further detail contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

அபிநவ வராஹமிகிரர் பி.வி. ராமன்

B V Raman 1912- 1998

 

 

சாமா பி வி ராமன் (click here for the Tamil article)

 

பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

madurai pillayar

பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

உங்களுக்குப் பிள்ளையாரின் பரிபூரண அருள் கிடைக்குமா என்பதற்கு இதோ ஒரு சோதனை. ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண்கள். இருபது கேள்விகளுக்கும் பதில் தெரிந்தால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அருள் உண்டு. குறைந்த மதிப்பெண்கள் கிடைத்தால் அஞ்ச வேண்டியதில்லை. மேலும் பல துதிகளை ஆழமாகப் படியுங்கள். அருள் சுரக்கும்.

1.பால்,தேன்,பருப்பு, பாகு ஆகிய நாலையும் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கணபதியை வேண்டியவர் யார்?

2.சீதக் களபச் செந்தாமரைப்பூம் என்று துவங்கும் பிள்ளையார் பாடலுக்கு என்ன பெயர்?

3.”முன்னவனே யானை முகத்தவனே,முக்தி நலம் சொன்னவனே”—- என்று விநாயகரைத் தொழுதவர் யார்?

4.பிள்ளையாருக்கு ஒற்றைக் கொம்பு (தந்தம்) ஒடிந்திருப்பது ஏன்?

5.”கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல்பொறி”—- என்று துவங்கி கரிமுகனைத் துதித்தவர் யார்?

6.பொல்லாப் பிள்ளையாருடன் தொடர்புடைய சைவ அடியார் யார்?

7.”வாதாபி கணபதிம் பஜே” என்ற கிருதியை இயற்றியவர் யா?

8. “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி” என்று உரிமையோடு பாடியவர் யார்?

9.”முதாகராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்”….என்ற சம்ஸ்கிருத ஸ்தோத்திரத்தின் பெயர் என்ன?

10.”கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவீம் கவீனாம்”…… என்று கணபதியைப் போற்றும் துதி எதில் இருக்கிறது?

sangu pillayar

11. “வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை” என்று பாரதி மொழிபெயர்த்த மந்திரம் எது?

12.விநாயகரின் 16 முக்கியப் பெயர்களென்ன?

13. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருக்கு முன் அவ்வையார் கைலாசம் சென்றது எப்படி?

14.மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக கோவில்கள் மிகவும் பிரபலமானவை. அவை யாவை?

15.வாதாபி கணபதியை தமிழகத்துக்கு கொண்டுவந்த சைவப்பெரியார் யார்?

16.”.திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்”…….. என்ற பிள்ளையார் துதியுடன் துவங்கும் நூல் எது?

17. “பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு”…என்று பாடியவர் யார்?

18. தெற்கில் பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கில் அவருக்கு இரண்டு மனைவியர் உண்டு. அவர்கள் பெயர்கள் என்ன?

19. பிள்ளையாருக்கு பிடித்த பூ எது? தின்பண்டம் எது?

20.நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றும் சித்தர் யார்?

ganesh and vyasa

விடைகள்: 1.அவ்வையார் 2.விநாயகர் அகவல் 3.அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 4.வியாசர் சொன்ன மகாபாரதத்தை எழுத ஒரு கொம்பை ஒடித்ததாக ஐதீகம் 5.அருணகிரிநாதர் 6. திருநரையூரில் உள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள்பெற்றவர் நம்பி ஆண்டார் நம்பி 7.முத்து சுவாமி தீட்சிதர் 8.பாரதியார் 9.கணேச பஞ்ச ரத்னம் 10.ரிக் வேதம் 11.சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்…………. என்ற மந்திரம் 12. சுமுகன், ஏகதந்தன், கபிலன்,கஜகர்ணன்,லம்போதரன்,விகடன்,விக்னராஜன், விநாயகன்,தூமகேது, கணாத்யக்ஷன், பாலச்சந்திரன், கஜானனன், வக்ரதுண்டன், சூர்ப்பகர்ணன்,ஏரம்பன், ஸ்கந்தபூர்வஜன் 13.பிள்ளையார் தன் துதிக்கையால் அவ்வையாரை கைலாசத்துக்கு தூக்கிவைத்தார் 14.இவைகள் புனே நகரைச் சுற்றியுள்ளன: மோர்கான் மயூரேஸ்வர் கோவில்,சித்தடெக் சித்தி விநாயகர் கோவில், பாலி வல்லாலேஸ்வர் கோவில், மஹத் வரத விநாயகர் கோவில்,தேவுர் சிந்தாமணி விநாயகர் கோவில்,லென்யாத்ரி கிரிஜாத்மஜ விநாயகர் கோவில்,ஓஜார் விக்னேஸ்வரர் கோவில்,ரஞ்சன்காம் மஹாகணபதி கோவில் 15. சிறுத்தொண்ட நாயனார் 16.கந்தபுராணன் 17.திரு ஞான சம்பந்தர் 18.சித்தி, புத்தி தேவியர் 19. எருக்கம் பூவும், கொழுக்கட்டையும் (மோதகம்) 20.திருமூலர்

8-ashtavinayak-temples-ganesha

உங்களுக்கு மேலும் தமிழ் இலக்கியம் ,இந்துமதம் பற்றி வினா விடைகள் (க்விஸ்) வேண்டுமானால் என்னுடைய முந்தைய 13 பதிவுகளைக் காணுங்கள்:

(1).ராமாயண வினா விடை (க்விஸ்) (2).Quiz on Hymns in English and Tamil (3).27 star quiz (4).Hindu Picture Quiz (5,6,7,8). Hindu quiz parts 1,2,3,4 (9) Quiz on Saivaite Saints in Tamil சைவம் க்விஸ் (10,11,12) Tamil Quiz Parts 1,2,3 (13) Interesting Logo Quiz

 

அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் சூர்யநாராயண ராவ்

astro mag 2

அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் ஆசிரியர் மாடர்ன் ரிஷி           ஸ்ரீ சூர்யநாராயண ராவ் 

ச.நாகராஜன்

 

ஷிமோகாவுக்கு சென்ற போது அபூர்வ சந்திப்பு

 

1885ம் ஆண்டு ஒரு நாள். தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த பி.எல் படிக்கும் இளைஞர் ஒருவர் குப்பி ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கினார்.பங்களூர்  சென்ட்ரல் காலேஜில் அப்போது தான் ஆரம்பிக்கப்பட்டிருந்த விஞ்ஞானப் படிப்பில் முதல் குழுவில் முன்னணி மாணவராக இருந்தார் அவர். ஆங்கிலப் படிப்பினால் ஹிந்து சாஸ்திரங்களில்  பகுத்தறிவுக்கு ஒத்த பௌதிக விஞ்ஞானத்திற்கு இடமே இல்லை என்று அவர் முடிந்த முடிவுக்கு வந்திருந்தார்.

 

 

அப்போது தான் எஸ்.எம்.ரயில்வே ரயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே ஷிமோகாவுக்கு மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும்!ஷிமோகா 150 மைல் தூரம். ஒரு நாளைக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்- ஷிமோகா போய்ச் சேர! ரயிலை விட்டு இறங்கிய அந்த இளைஞரின் கண்ணில் ஒரு ஏழை வைதிக அந்தணர் போலத் தோற்றமளித்த ஒருவர் தென்பட்டார். அவரது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸ் அந்த இளைஞரை வெகுவாகக் கவர்ந்தது. அவரிடம் சென்று, “நீங்கள் யார்? எங்கு போக வேண்டும்”, என்று கேட்டார் அந்த இளைஞர்.

 

 

“எனது பெயர் சுப்பராய சாஸ்திரி. நான் ஷிமோகா செல்ல வேண்டும்.அங்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்ஸிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன்” என்றார் அவர்.

 

அடுத்த எட்டு நாட்களில் சூர்யநாராயணராவ் என்ற அந்த விஞ்ஞான மனப்பான்மை படைத்த இளைஞரின் வாழ்க்கைப் போக்கே மாறி விட்டது சுப்பராய சாஸ்திரி என்ற அந்த அற்புதமான மனிதரால்! உலகில் உள்ள எல்லா பௌதிக விஞ்ஞானத்துறைகளும் ஓர் உருவம் எடுத்து நடை பயில்வது போல இருந்த அவர் சூர்யநாராயணராவின் கண்களைத் திறந்தார்.

 

“அடுத்த 25 ஆண்டுகள் அவருடன் பழகினேன். எனது நீண்ட வாழ்வில் அவரைப் போல ஒரு மனிதரை நான் கண்டதே இல்லை. முதல் சில நாட்கள் அவருடன் உரையாடியது என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது” என்று பின்னாளில் பெரும் புகழ் படைத்த ஜோதிடரான பின்பு கூறினார் சூரியநாராயண ராவ்.

 

 

ஜோதிடக் கலையைத் தானே கற்றவர்

பங்களூர் சூரியநாராயணராவ் (1856-1937) மிகவும் புகழ் வாய்ந்த ஜோதிடராக சென்ற நூற்றாண்டில் விளங்கியவர். ஜோதிட சாஸ்திரத்தை யாரிடமும் பயிலாமல் தானே கற்றுக் கொண்டவர். பல்வேறு பழைய நூல்களைப் படித்து ஜோதிட நுட்பங்களில் அவர் நன்கு தேர்ந்து, ஜோதிடத்திற்கு தேசீய அளவில் ஒரு புது மதிப்பை ஏற்படுத்தியவர். வரலாறு, வாழ்வியல், இலக்கியம், சாஸ்திரம் என பல துறைகளிலும் மேதை. எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். எல்லாவற்றிற்கும் மேலாக புகழ் வாய்ந்த ஜோதிட மேதை பி.வி.ராமனை உருவாக்கியவர். ஸ்ரீ பி.வி.ராமனுடைய பாட்டனார் தான் சூரிய நாராயண ராவ்.

 

1895 முதல் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து  ஜோதிட சம்பந்தமான நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு அவர் உலக அறிஞர்களை வேத ஜோதிடத்தின் பால் பார்வையைப் பதிக்க வைத்தார்,சுப்பராய சாஸ்திரிகளின் நூல்களை அவர் வெளியிட்டார். 1914 மார்ச் மாதமே முதல் உலகப் போர் வரப்போவதை அவர் முன் கூட்டியே அறிவித்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. பல்வேறு ராஜாக்களும், மந்திரிகளும்,  வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டுப் பிரமித்துப் போனார்கள். தன் வாழ் நாள் முழுவதும் ஒரு கர்மயோகியாகத் திகழ்ந்த அவர் ப்ருஹத் ஜாதகம்,ஜைமினி சூத்திரங்கள் உள்ளிட்ட பழம் பெரும் முக்கிய நூல்களை வடமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.

 

Astro mag 1

புகழ்பெற்ற நூல்களில் சில

 

அவரது நூல்களில் மாதிரிக்குச் சிலவற்றைப் பார்ப்போம்:

ஸ்திரீ ஜாதகம்:பாரத நாகரிகத்தின் ஹிந்து வாழ்க்கை முறைக்கு ஜீவாதாரமாக விளங்குபவள் பெண். பல்வேறு நூல்களிலிருந்து அற்புதமான தகவல்களைச் சேகரித்து அபூர்வமான இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். ஆண், பெண் ஜனனம், ஆண் பெண்ணாக மாறுவது, அர்தவ லக்னம், பெண்களின் குணாதிசயங்கள்,வாழ்க்கையில் துணையாக இருக்கும் மனைவி லட்சணம், புத்ரபாக்கியம், கல்யாணமாகாமல் இருக்கும் பெண்கள்,பெண்களின் ஆன்மீக சிந்தனை, பழக்க வழக்கங்கள், கிரக தசா புக்தி பலன்கள், சந்திர, சூர்ய, செவ்வாய், குரு, சுக்ர, சனியின் பாவ பலன்கள், ராஜயோகம் உள்ளிட்ட நல்ல யோகங்களின் விவரணம் ஆகியவை கொண்ட இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்டது.

 

 

ஸ்ரீ சர்வார்த்த சிந்தாமணி :இரண்டு தொகுதிகள். முதல் பாகம் 1899ம் ஆண்டும் இரண்டு மூன்றாம் பாகங்கள் 1920ம் ஆண்டும் வெளியிடப்பட்டது. வெங்கடேச தைவக்ஞர் இயற்றிய அற்புதமான இந்த நூலை சூரியநாராயண ராவ் மொழிபெயர்த்தார். திருமணம், யோகங்கள், தசா புக்தி பலன்கள், பாவங்களைப் பற்றிய பகுப்பாய்வு உள்ளிட்ட அரிய நூல் இது.

 

 

புகழ்பெற்றவரின் ஜாதகங்கள் : ஸ்ரீ ராமர், ஹரிச்சந்திரன், ஸ்ரீ கிருஷ்ணர்,ஆதி சங்கரரிலிருந்து ஆரம்பித்து தற்கால மஹாராஜாக்கள் வரை உள்ள ஏராளமானோரின் ஜாதங்களைத் தொகுத்து வழங்கும் நூல்.1921ல் வெளிவந்தது.

 

ஜோதிடத்திற்கு புத்துயிரூட்டிய மாடர்ன் ரிஷி ஸ்ரீ சூர்யநாராயண ராவ்.

ஜோதிட ஆர்வலர்கள் அவரது நூல்களைப் படிக்க வேண்டிய அவசியத்தை இந்த ஒரு வரியே விளக்கி விடும்.

*********

 

 

பாரதியின் பேராசை!

old bharathi

“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!”

–பாரதியின் விநாயகர் நான் மணிமாலை

என்ன ‘பேராசை’ பாருங்கள் பாரதிக்கு!!

 

எல்லோருக்கும் ஆசை உண்டு. அது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே இருக்கும். அது சின்ன ஆசை. நாட்டைப் பற்றியும் மனித குல முன்னேற்றத்தைப் பற்றியும் சதா சர்வ காலமும் அல்லும் பகலும் அனவரதமும் ஆசைப்பட்டால் அதை என்ன என்று அழைக்கலாம்? அது பெரிய ஆசை= ‘பேராசை’ அல்லவா?

படித்துப் பாருங்களேன். நீங்களே சொல்லுவீர்கள்

பிச்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும் என்ற நிலை இருக்குமானால் பிரம்மாவே நாசமாகப் போகட்டும் என்று சபித்தான் வள்ளுவன் (இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்.  குறள் 1062)

பாரதி என்ன வள்ளுவனுக்கு சளைத்தவனா?

“தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறான். இதெல்லாம் வெட்டிப் பேச்சு, வீராப்பு என்று நினைப்பவருக்கு அவனே வழியும் சொல்லிக் கொடுக்கிறான்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்—வீணில்

உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”.

உழைத்து வாழ வேண்டும். லாட்டரி பரிசு மூலமோ அரசாங்க நிதி உதவி மூலமோ பணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது.

அவனுக்கு இன்னும் ஒரு ஆசை!

செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்

செம்மை ஏறி வாழ்வேன்

இல்லை என்ற கொடுமை—உலகில்

இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை!

 

இன்னொரு இடத்தில்

“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.

கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!

வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

இந்த நிலத்துக்குச் சுமையென வாழாமல் பிறருக்கு உதவி செய்து வாழ அருள்புரி என்று இறைவனிடம் மன்றாடுகிறார். அல்லும் பகலும் நம்மைப் பற்றியும் நம் குடும்பத்தையும் பற்றி சிந்திக்கும் நம்மையும் நம்ம ஊர் அரசியல் தலைவர்களையும் பாரதியுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவனிடம் இருந்து ஊற்றுணர்ச்சி பெற வேண்டும்.

 

எப்போதும் ‘பாஸிடிவ் திங்க்கிங்’ (Positive Thinking) உடையவன் பாரதி.

மனப் பெண் என்னும் பாடலில் மனதை நோக்கிச் சொல்கிறான்:

“நின்னை மேம்படுத்திடவே

முயற்சிகள் புரிவேன்; முக்தியும் தேடுவேன்

உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட

சிவமெனும் பொருளை தினமும் போற்றி

உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்”

கடந்த கால கஷ்டங்களை எண்ணிக் கவலைப் படுவோருக்கு ஒரு அறிவுரையும் வழங்குகிறான்

“இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்

தீமை எல்லாம் அழிந்து போம் திரும்பிவாரா”

. . . .. . . . .

‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடத் துவங்கியவன் திடீரென்று

“பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும்”

என்று ஆசைப்படுகிறான். பெண்கள் கல்வி கற்றால்தான் முன்னேற முடியும் என்பது அவன் துணிபு.

stamp of bharathy

 

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்

பொறிகளின் மீது தனி அரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை அருளாய்

குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்

குலவிடும் தனிப் பரம் பொருளே!

………………………

என்றும் இன்னொரு பாட்டில்

செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்

சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்

கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்

தொல்லைதரும் அகப் பேயைத் தொலைக்க வேண்டும்

துணையென்று நின்னருளைத் தொடரச்செய்தே

நல்வழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்

நமோ நம ஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே! என்று பாடுகிறான்.

…………..

வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ் பாட்டில்………….

“இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க

நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!

அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக ! என்று வேண்டி

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !  வாழிய பாரத் மணித்திரு நாடு என்றும் வாழ்த்துகிறான்.

…………………..

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி

மனத்திற் சலனம் இல்லாமல்

மதியில் இருளே தோன்றாமல்

நினைக்கும்பொழுது நின்மவுன

நிலை வந்திட நீ செயல் வேண்டும்

கனக்கும் செல்வம் நூறு வயது

இவையும் தர நீ கடவாயே!

………………….

என்றும் இன்னொரு பாட்டில்

அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்

நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்

அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்

உடைமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்

வேண்டாதனைத்தையும் நீக்கி

வேண்டியயதனைத்தும் அருள்வது உன் கடனே”  என்பான்

…………………

ஒரு கோடி தமிழ் பாட ஆசை

விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே

தொண்டுனது அன்னை பராசக்திக்கென்றும் தொடர்ந்திடுவேன்

பண்டைச் சிறுமைகள் போக்கி, என் நாவில் பழுத்த சுவை

தெண்டமிழ் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!

…………………………..

கலியுகத்தைக் கொல்வேன்

பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண் முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே (பாரதி) என்பான்.

 

அவனுக்குள்ள பல ஆசைகளில் ஒன்று வேதத்தை தமிழில் பாடவேண்டும் என்பதாகும்:

“அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம்—நித்தம்

அனலைப் பணிந்து  மலர் தூவுவோம்

தமிழில் பழ மறையைப் பாடுவோம்

தலைமை பெருமை புகழ் கூடுவோம்”

 

இப்போது எனக்கும் பாட வேண்டும் போல இருக்கிறது:

பேராசைக் காரனடா பாரதி—அவன்

ஏது செய்தும் தமிழை வளர்க்கப் பார்ப்பான்!

பேராசைக் காரனடா பாரதி—அவன்

ஏது செய்தும் மனித குலம் செழிக்க வைப்பான்!

வாழ்க பாரதி, வளர்க தமிழ்! செழிக்க வையகமே!

……………….

 

Aladdin’s Magic in Valmiki Ramayana

Ramyana Wonders 6

Aladdin’s Magic in Valmiki Ramayana

Valmiki Ramayana has some magic shows as well. Bharadvaja Maharishi (seer) showed some amazing magic to Bharata. Chapter 91 of Ayodhya Kanda gives a vivid description of the magic shown by Bharadvaja.

The seer asked him why he came alone leaving his army behind. Bharata replied to him that his army was huge and they may damage the trees and huts and defile the water.

Look at the environmental concerns of Bharata!

But Bharadvaja insisted to him to bring the army so that he can entertain everyone. In the middle of the thick jungle, he summoned all the angels. Suddenly a cool breeze came from Malaya and Dardura hills. There was a rain of flowers. Sound of divine gongs could be heard on every side. Apsaras women danced to the tune of the Gandharvas. Earth and sky were filled with sweet and harmonious sounds. Bharata’s army could see the wonderful creations of Viswakarma (Divine Architect).

The forest looked like a paradise with fruit bearing trees. A royal palace emerged from nowhere. Ambrosial drinks of every kind were provided as also magnificent attire and food of every variety well prepared. Rivers were running with sweet water. Magnificent mansions appeared. Bharata entered a palace full of gems. Rivers of Payasa flowed at the feet of Bharata.20,000 Apsara girls appeared and danced.

All were in ecstasy at these marvels and they thought they were dreaming. Then the Gandharvas returned from whence they had come, as also the lovely Apsaras girls.

This is from the translation of Valmiki Ramayana by Hari Prasad Shastri. Bharadvaja achieved more than what Aladdin achieved through his magic lamp. Probably the authors of Arabian Nights copied it from Valmiki!

Sita worshipped Banyan Tree

I have already written about the Indian Wonder: The Banyan Tree. Valmiki gives more information about this tree in Ayodhya Kanda chapter 55:

Rama, Lakshmana and Sita crossed the river Kalindi in a raft. Sita offered obeisance to the river. Then she went to a banyan tree (nyagrodha) named “Shyama”. Vaidehi approached the tree and offered salutations to it, saying, “ “Homage to thee, Oh Mighty tree! May my lord fulfil his vow! May we behold Kausalya and the blessed Sumitra once more!”

With these words, the virtuous Sita with joined palms circumambulated the tree. This shows tree worship was among royals and general public from time immemorial. We have ancient coins with fenced trees. After killing Ravana Rama, Lakshmana and Sita returned to Ayodhya by aerial car. Rama pointed out the tree to her once again and reminded her.

In chapter 56, there is a beautiful description of Chitrakuta forest. All nature lovers must read it. Valmiki must have been well versed with the jungle trees. He never missed an opportunity to mention the trees. Hundreds of trees are mentioned by name in a lot of places. Valmiki must be a great lover of nature.

Rama—A Tiger

Vedas describe Indra and others as Bull. Ramayana described Rama as a tiger  among men in several places and bull among men in other places.

Venkateswara Suprabatham sung at Tirupati Balaji temple begins with

“Kausalya Supraja Rama purva sandhya pravarthathe

Uththishta narasardhula karthavyam daivamahnikam” (Balakanda)

Not many people know that this is a couplet from Valmiki Ramayana. The meaning of ‘Narasardhula’ in the couplet is Tiger among men.

Cave of Horrors

We have seen mysterious caves with treasures etc in films such as Indiana Jones and the Temple of Doom. But Valmiki beat Indiana Jones stories in the description of mysterious Nikumbila caves. It is a Cave of Horrors where Ravana’s son Indrajit did voodoo ceremonies by sacrificing blood and human beings. Read Valmiki’s own words about this eerie place:

The cave was in a dark place with lot of trees. It was “darkened by trees”. There was “a huge Nyagrodha tree (banyan tree) of fearful aspect”  under which the sacrifice was done.

Indrajita went to the sacrificial altar of Nikumbhila and invoked the God of Fire, Pavaka. Indrajita started pour on the libations and the fire blazed up, consuming the oblations of blood. Then he poured libations on the earth.

Indrajita had a boon of winning anyone provided he does a sacrifice there. Vibheeshana warned Rama and Lakshmana to finish off Indrajita before he did the sacrifice. Lakshmana with Hanuman went on time to Nikumbhila and prevented the sacrifice.

Nobody knew what God was worshipped in the cave .Some think it may be Kali or Pratyankara Devi.

Please read other posts by Santanam Swaminathan :

1. Ram –the Best PR Man 2. தியாகராஜ சுவாமிகளுடன் 60 வினாடி பேட்டி 3.நாமும் அனுமார் ஆகலாம் 4.கம்பனுடன் 60 வினாடி பேட்டி 5.ராமாயண வினா-விடை (க்விஸ்) 5.Where is Rama Setu (Rama’s Bridge) ? 6. Did Sita Devi Die in Earth Quake? 7. Ramayana Wonders Part1 (8) . Ramayana Wonders Part2 :How many miles did Rama walk? (9) Ramayana Wonders Part 3: Rama and Sanskrit G’ramma’r 10) Part 4: Who can read all 300 Ramayanas? 11) Ramayana Wonders part 5: Indus Valley Cities in Ramayana 12) Indian wonder: The Banyan Tree  13) இந்திய அதிசயம்: ஆலமரம்

contact : swami_48@yahoo.com

Pictures are from various websites; thanks.

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!

Shocked back to life: The theory holds that when patients have a near death experience their quantum soul is released from the body and re-enters the cosmos, before returning when they are revived

ஞான ஆலயம்

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா! 

By ச.நாகராஜன்

      “மனிதனின் பிரக்ஞை அவன் மறையும் போது அழிவதில்லை; அது பிரபஞ்ச பிரக்ஞையில் சேர்கிறது; உடல் எடுக்கும்போது அது வந்து இணகிறது” என்று க்வாண்டம் கான்ஸியஸ்னெஸ் என்ற  புதிய அறிவியல் கொள்கையைக் கண்டுள்ள உலகின் பிரபல விஞ்ஞானி ஸ்டூவர்ட் ஹாமராஃபை ஞான ஆலயம் வாசகர்களுக்காகத் தொடர்பு கொண்டோம். ஞான ஆலயம் வாசகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து தனது அற்புதக் கொள்கையை விளக்கும் நமது கட்டுரை பற்றி மகிழ்ந்ததோடு அடுத்த மாதம் (மார்ச் 2013இல்) இந்தியாவில் ஆக்ராவுக்கு வரும் தனது விஜயம் பற்றியும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து ஹிந்து தத்துவத்தோடு ஒத்திருக்கும் அவரது அபூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகளை இந்தக் கட்டுரையில் தருகிறோம்.

 

பிரக்ஞை உடலில் எங்கு உள்ளது

கடவுளின் படைப்பில் கோடிக் கணக்கில் ஆச்சரியகரமான விஷயங்கள் உள்ளன.அவற்றில் மனிதனின் பிரக்ஞையும் ஒன்று.

பிரக்ஞை மனிதனின் உடலில் எங்கு உள்ளது? மூளையிலா, அல்லது வேறு இடத்திலா?

மூளையைத் துளைத்துக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகள் போன பல நிகழ்வுகளில் அதைத் தாங்கி மனிதனின் மூளை பிரக்ஞையைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அதே சமயத்தில் தலை ஒரு சாதாரண மோதலுக்கு உள்ளாகி அதனால் பல நிமிடங்கள் அல்லது பல நாட்கள் கூட பிரக்ஞை இழந்த ஏராளமான சம்பவங்களையும் பார்க்கிறோம். உணர்வு திரும்பாமல் பல மாதங்கள் கோமாவில் இருக்கும் ஒருவரின் உடலில் உயிர் இருக்கிறது. ஆனால் பிரக்ஞை இல்லை!பிரக்ஞை இருந்து ஆனால் உடல் அங்கங்கள் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் இயக்கம் இன்றி இருக்கும் அனேகரையும் பார்க்க முடிகிறது.இந்த பிரக்ஞை தான் எவ்வளவு விசித்திரம்! இதை ஆராயும் இன்றைய முன்னணி விஞ்ஞானிகளுள் ஒருவர் ஸ்டூவர்ட் ஹாமராஃப்

Dr Stuart Hameroff of University of Arizona

ஸ்டூவர்ட் ஹாமராஃப்

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உணர்வகற்றலியல் எனப்படும்

அனஸ்தீசியாலஜியிலும் உளவியலிலும் பேராசிரியராக இருபத்தைந்து

வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்று, பின்னர் அங்கேயே சிறப்புப்

பேராசிரியராக அவர் பணியாற்றி வருகிறார். 1996ஆம் ஆண்டிலிருந்து அரிசோனா

பல்கலைக்கழகத்தின் பிரக்ஞை பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குநராக இருக்கிறார்.

க்வாண்டம் கான்ஸியஸ்னெஸ்

ஆன்மா இருப்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்று அவர் கூறியது அறிவியல் உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் இயற்பியல் நிபுணரான ரோஜர் பென்ரோஸுடன் இணைந்து க்வாண்டம் பிரக்ஞை என்ற புதிய கொள்கையை அவர் அறிவியல் உலகின் முன் வைத்துள்ளார்

மூளை செல்களுக்குள் மைக்ரோட்யூபூல் என்ற அமைப்பு உள்ளது. இந்த மைக்ரோட்யூபூலில் ஆன்மா உறைந்திருக்கிறது. செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கையில் உயிர் உடலை விட்டு நீங்கும் போது பிரக்ஞையானது இந்த மைக்ரோட்யூபில்லிருந்து நீங்கி பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைகிறது.

உயிர் மீண்டும் உடலுடன் இணைகையில் இந்த பிரக்ஞை மைக்ரோட்யூபிலில் வந்து இணைகிறது.

அழியாத ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியும்

மூளையை ஒரு பயாலஜிகல் கம்ப்யூட்டராக அதாவது உயிரியல் கணினியாகக் கொண்டு ஆன்மாவை நிரூபித்து விட முடியும் என்கிறார் ஹாமராஃப்.

ஒரு பில்லியன் என்பது நூறு கோடியைக் குறிக்கும் எண். இப்படி நூறு பில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு மனித மூளையிலும் இருக்கிறது. இந்த நியூரான்கள் அனைத்து தகவலையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை.இதனுள் இருக்கும் மைக்ரோட்யூபூல் தான் பிரக்ஞைக்கும் ஆன்மாவுக்கும் இருப்பிடம் என்கிறார் ஹாமராஃப்.

இந்த ஆன்மா உடல் நீங்கினாலும் பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்து விடுவதாலேயே ஆன்மாவுக்கும் மரணம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

கீதையில் (இரண்டாம் அத்தியாயம் இருபதாம் ஸ்லோகம்) வரும் அற்புதமான ஸ்லோகம் இது தான்:

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்

நாயம் பூத்வா பவிதா வா ந பூயா I

அதோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ

ந ஹந்யதே  ஹந்யமாநே சரீரே II

இதன் பொருள் : இந்த ஆத்மா எப்போதும் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை.ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லை என்பதுமில்லை. இது  பிறப்பற்றது. என்றுமுள்ளது. நிலையானது.பழமையானது.சரீரம் கொல்லப்படும்பொழுதும் இது கொல்லப்படுவதில்லை. இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை (நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி) நெருப்பு எரிப்பதில்லை (நைநம் தஹதி பாவக:) தண்ணீர் நனைப்பதில்லை (ந சைநன்ம் க்லேதயந்த்யாபோ) காற்று உலர்த்துவதும் இல்லை (ந சோஷயதி மாருத:) (2ம் அத்தியாயம் 21ம் ஸ்லோகம்)

Picture: Role of Quantum Physics in the navigation of birds

“ இதயம் துடிப்பதை நிறுத்தட்டும்; ரத்தம் ஓடுவதை நிறுத்தட்டும்; அப்போது மைக்ரோட்யூபூல் தனது க்வாண்டம் தன்மையை இழக்கிறது. ஆனால் மைக்ரோட்யூபூலின் உள்ளுக்குள் இருக்கும் க்வாண்டம் தகவலானது அழிவதில்லை” என்று அவர் தனது கொள்கையை அமெரிக்க ஸயின்ஸ் சேனலில் த்ரூ தி வோர்ம்ஹோல் (Through the wormhole) என்ற டாகுமெண்டரி மூலமாக விளக்கி அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.

 

யோக வாசிஷ்டம் கூறும் உண்மை

ப்ரக்ஞை பற்றிய ரகசியத்தையும் ஆன்மா அழியாது என்ற உண்மையையும் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ள இவரை பிரபல ஆன்மீகவாதியான தீபக் சோப்ரா நேரடி பேட்டி கண்டார். அந்த ஒளிபரப்பு அனைவரையும் கவர்ந்தது.

தீபக் சோப்ரா தனது பேட்டியில் ஹாமராஃபை நோக்கி, “ யோக வாசிஷ்டம் என்ற முக்கியமான பழம்பெரும் வேதாந்த நூல்  ஒன்று இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் ராமர் தனது குருவான வசிஷ்டரின் காலை பாரதத்தின் தொன்று தொட்டு வரும் சம்பிரதாயப்படி தொட்டு வணங்குகிறார். வசிஷ்டரோ.” நில். அப்படிச் செய்யாதே. நீ கடவுள். இப்படி ஏன் செய்கிறாய்! என்கிறார். அதற்கு ராமர்.” நான் மறந்து விட்டேன். நீங்கள் தான் நான் கடவுள் என்பதை எனக்கு ஞாபகப்படுத்த வேண்டும்” என்று பதில் கூறுகிறார். பின்னர் தனது முதல் பாடத்தை ராமருக்கு வசிஷ்டர் இப்படிப் போதிக்கிறார்: “உலகத்தில் நீ இல்லை; உலகம் உன்னுள் இருக்கிறது. நீ உடலில் இல்லை. உடல் தான் உன்னுள் இருக்கிறது. நீ மனத்தில் கூட இல்லை மனம் தான் உன்னுள் இருக்கிறது. நீ உன் பிரக்ஞையுள் நுழைகையில்  மனம், உடல் மற்றும் உலகத்தை நீ உருவாக்குகிறாய்” என்று கூறி விட்டு ஹாம்ராஃபை நோக்கி தீபக் சோப்ரா, “ நீங்கள் கூறும் கொள்கை இதையொட்டி இருக்கிறதே!” என்றார்.

அதற்கு ஹாமராஃப், “ ஆஹா! அது மிக அருமை, அற்புதமான வரிகள். பீட்டில்ஸ் “யுவர் இன்சைட் இஸ் அவுட் அண்ட் யுவர் அவுட்சைட் இஸ் இன்’ (உனது அகம் வெளியில் உள்ளது; உனது புறம் அகத்தில் உள்ளது)என்று கூறுவது போல உள்ளது” என்று பதில் கூறினார்.

“பிரக்ஞையைப் பற்றி நான் கூறி இருப்பது ஐஸ்பெர்க்கின் ஒரு முனை தான்; அதாவது பிரம்மாண்டமான கடலில் ஒரு துளி தான்”, என்று கூறியுள்ள ஹாமராஃப் இது பற்றி இன்னும் விரிவாக ஆராய்ந்தால் இன்னும் ஏராளமான உண்மகைகளை அறிய முடியும் என்கிறார்.

பிரக்ஞை பற்றிய தத்துவத்திற்கும் ஆன்மாவுக்கும் அறிவியல் அளிக்கும் அங்கீகாரம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு பெரும் சந்தோஷத்தை உலகெங்கும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் வியப்புடன் கூடிய சந்தோஷத்தில் திளைக்க வழி வகுத்து விட்டது! வேதாந்தத்தைப் போதிக்கும் பாரதமோ தன் ஆழ்ந்த ஆன்மீகக் கொள்கையில் இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது,!

contact: swami_48@yahoo.com

**************

Ghost that killed 72 Tamil People!

( Tamil version of this article has been posted already. Pictures are from various websites. Thanks: swami )

There are many ghost stories in ancient Indian literature. The most famous one is the Vetal and Vikramaditya. There are stories of Shiva Bhutas, the fore runner of Aladdin and the Magic Lamp stories. I have already written about them and showed those foreign stories are carbon copies of Tamil and Sanskrit stories. Sangam Tamil literature has got innumerable references to ghosts and ghouls, demons and devils.

 

Not many people know the Tamil Nili or Neeli ghost story that made a lasting impact in Tamil life. Tamils have proverbs and literary references about this ghost. This is a story that shook the ancient Tamil Nadu. Neeli in her second birth took revenge upon 72 people and killed all of them. If there is a Guinness Book of Records entry for a ghost killing large number of people then Neeli will get the first and foremost entry.

 

Hundred years ago, A Singaravelu Mudaliyar, who published the first Encyclopaedia of Tamil literature under the title Abithana Chintamani in Tamil, narrated the story of Pazaiyanur Neeli.

Tamils have a proverb “Don’t shed Neeli tears” equivalent to Don’t shed Crocodile tears. Neeli has a reference in a poem of Viveka Chintamani. The author famous for his anti women tirade says in one of the verses that we can even trust Neeli, but not the women who throws her charms on anyone.

The story of Neeli spans over her two births. A merchant of Tamil country travelled to the holiest city of Hindus, Varanasi (also known as Benares and Kasi). There he received the hospitality of a Brahmin. His daughter was Navanjani. The guest fell in love with her and married her. He never told them that he was already married in Tamil Nadu. The newly married travelled towards Tamil Nadu with Navanjani’s brother. As they reached Tiru Alankadu in Tamil Nadu, the merchant sent his brother in law to fetch some water and killed her new wife in the meantime. When her brother returned with water he saw the gory scene and hanged himself.

Now the story continues in her second birth:

The merchant was reborn as Darsana Chetty and Neeli and her brother were born as abnormal children. Darsana Chetty was forewarned by astrologers that he may be revenged by a ghost. So he received a magic sword which will protect him. The abnormal children Neeli and her brother killed the cattle in the night and left them with blood stained wounds. Parents of the abnormal children tied the ghostly children to an acacia tree and abandoned them. People from Palaiyanur came and cut the tree for wood when Neeli went for a revenge. Her brother who occupied the tree was left ‘homeless’ and later killed by another man at the instigation of a temple priest.

Neeli went in the guise of a woman with a child. The story goes that the child was created by her from the broken branch of a tree. She made a big scene in front of the village council which consists 70 elders from the Velala caste. She told the council that Darsana Chetty was her husband and the child in her hand was born to him. She pleaded to them to reunite her with her ‘husband’. He tried his best to tell the council that this woman was a fraud. But her cries and tears moved the council and they reached a compromise that he must live with her and the child.

 

Neeli tried one more trick now. Knowing the power of the magic sword she told the council that there was no need for a sword when there was a child with her. Village council also agreed with her. He told him that his life would be in danger without the sword. Village council promised him that all the 70 will sacrifice their lives in the fire if anything happened to him. The final piece of the gig saw puzzle fell into its place. Neeli killed Darsana Chetty in the night. Next day Neeli herself went in the guise of Darsana Chetty’s mother to the council and asked all of them to sacrifice their lives as promised. Out of the 70 elders, 69 immolated themselves. Neeli was very happy to take revenge upon those who cut the tree and took her brother’s life.

So far she killed 69+1. The story did not stop there. She went after the person who escaped from the council. He went to him in the guise of his daughter and trapped him. He became the 71st victim. Neeli knowing that he finished her job killed the child in her hand by crushing it under her feet. This was the Murder most foul. This story of death of 72 people+ Neeli and her brother made her notorious as Pazaiyanur Neeli. Now the village has got a ‘temple’ for her in the village.

 

Had it happened in a place like England it would have become a big tourist spot for Halloween day fans.

Silappadikaram, the most famous Tamil epic has another Neeli, which has no connection to Pazaiyanur Neeli.

Please read earlier Ghost Stories posted by me in the past:

1. Most feared Numbers 666 and 13

2. Aladdin’s Magic Lamp and Tamil saints

3. கடலில் தோன்றிய மர்மத் தீ

4. Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri

5. Largest Story Collection in the World

6. தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்

7. டெல்பி ஆரூடமும் குறிசொல்வோரும்

8. பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்

9. Mysterious disappearance of Great Hindu saints

10. Time Travel by Two Tamil Saints

10. Do Hindus believe in E.T.s and Alien Worlds?

Contact : swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

தமிழ்நாட்டை உலுக்கிய பேய்!

 

படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்

பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்

கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்

………………

(விவேக சிந்தாமணி—பாடல் 30)

பெண்களை நம்பாதே என்ற பாடலில் முதலில் “உடனே கொல்லும் விஷத்தை நம்பலாம், பழியைக் கருதாத ஒரு வணிகனை வழிமறித்துக் கொலை செய்த பழையனூர் நீலியை நம்பலாம், கொடிய மும்மதங்களை உடைய மலை போன்று வளர்ந்த யானையையும் நம்பலாம்…………….. என்று சொல்லிக்கொண்டே போய்  “நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே” என்று முடிகிறது கவிதை.

யார் இந்த பழையனூர் நீலி?

தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலி. புறநானூறு முதலிய 18 சங்க இலக்கிய நூல்களில் ஏராளமான பேய்க் கதைகள் வருகின்றன. ஆயினும் நீலி என்ற பேய்தான் தமிழர்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பேய். பல நூற்றாண்டுகளாகப் பலரும் பாடல்களில் உவமையாகக் கூறும் அதி பயங்கர தமிழ்ப் பேய்.

சிங்காரவேலு முதலியார் பழைய தமிழில் தொகுத்தளித்த அபிதான சிந்தாமணி (என்சைக்ளோபீடியா/ கலைக் களஞ்சியம்) கூறும் கதையை முதலில் பார்ப்போம்:

1.“இவள் முற்பிறப்பில் நவஞ்ஜயென்னும் பார்ப்பனி. தன் கணவனையும் குமாரனையும் ஒருவன் கொலை செய்ததால் பழிக்குப்பழி வாங்க  திருவாலங்காட்டில் புரிசைக்கிழாருக்குப் புத்திரியாகப் பிறந்து  அவன் பேயென்று  நீக்க அலைந்து திரிந்து  தரிசன செட்டியாகப் பிறந்திருக்கும்  தன் கணவனைக் கண்டு களித்து  அவனைப் பலவாறு மயக்கி  பழையனூர் வெள்ளாளரிடம் முறையிட்டு அவர்கள் 70 பேரையும் அவன் உயிர்க்கு பிணையாக இருக்க உடன்படுத்தினள். அவர்கள் அவ்வாறு பிணை இருப்பதாக செட்டிக்குக் கூறி  அவளுடன் இருக்கும்படி உடன்படுத்தினர். இவள் அவனிடம் இருந்த மந்திர வாளை நீங்கச் செய்து  அவனுடனிருந்து அவனைக் கொலைபுரிந்து  மீண்டும் செட்டியின் தாய் போல வந்து  வேளாளர்  69 பேரையும்  தீயில் முழுகச் செய்வித்து  மிகுந்த ஒருவன் போயிருந்த கழனியிடம்  அவன் மகள் போலச் சென்று நடந்த செய்தி கூறிப் பழி வாங்கினள்.  வேல மரத்தில் இருந்த அண்ணன் இறந்ததற்கு  ஊரார் வெட்டிய வேல மரம் காரணமாதலால்  ஊரார் எழுபது பெயரையும் பழிவாங்கினள்.”

2. சங்கமன் என்ற வைசியன் மனைவி. கோவலன் கொலையுண்டிருக்க முற்பிறப்பில் அவனைச் சபித்தவள் (சிலப்பதிகாரம்)

இது நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் நடை. சுருக்கமான கதை இதோ:

திரு ஆலங்காட்டுக்குப் பக்கத்தில் பழையனூர் இருக்கிறது. அங்கே நீலிக்கு ஒரு கோவிலும் உண்டு. தமிழில் நீலிக் கண்ணீர் வடிக்காதே என்ற பழமொழியும் இருக்கிறது. நீலியின் கதை தெரியாதோருக்கு இது என்ன என்று தெரியாது. நீலி கதை இரண்டு ஜன்மங்களில் நடந்த கதை.

நவக்ஞானி என்ற பார்ப்பனி காசியில் தந்தையுடன் வசித்துவந்தார். அவருடைய தந்தை காஞ்சீபுரத்தில் இருந்து வந்த ஒரு வணிகரை விருந்துக்கு அழைத்தார். அவர் ஏற்கனவே திருமணமாகியும் கூட விருந்து கொடுத்தவரின் மகளான நவக்ஞானியை மணம் புரிந்தார். ஊருக்குத் திரும்பிய அவர் வீட்டுக்கு வரும் முன்னரே ஆலங்காட்டில் நவக்ஞானியக் கொலை செய்து விடுகிறார். அவளுடைய மறு அவதாரம்தான் நீலி. அந்தப் பெண்ணுடன் வந்த அண்ணன் தூக்குப் போட்டு இறக்கிறான்.

 

மறு பிறப்பில் நீலியாகப் பிறந்த பெண்ணும் அண்ணனும் பேயாகத் திரிந்து ஆடு மாடுகளை வதம் செய்கின்றனர். அவ்விருவரையும் பெற்றெடுத்தோர் ஒரு வேல மரத்தில் கட்டி விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள் நீலி, தன் கணவர் தரிசன செட்டியாகப் பிறந்ததை அறிந்து பழிவாங்கக் காத்திருந்தாள். தரிசன செட்டிக்கு எப்படியோ உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரிந்தது. மந்திர தந்திரம் அறிந்தோரிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க ஒரு மந்திர வாளை பெற்றுக் கொண்டார்.

இது இப்படி இருக்க நீலியின் அண்ணன் தங்கியிருந்த வேல மரத்தை பழையனூர் வணிகர்கள் கலப்பை செய்ய வெட்டிச் சென்றுவிட்டனர். அந்தப் பேய்க்கிருந்த வீடும் போய்விட்டது. அதுவும் பழிவாங்கக் காத்திருந்தது. இதற்கிடையில் அதன் தொல்லை தாங்காதபடி ஒருவர் அந்த பேய்க்கு முடிவுகட்டுகிறார்.

நீலியின் ஆத்திரம் தரிசன செட்டி மீது மட்டும் இல்லாமல், வேளாளர் மீதும் பாய்ந்தது. உரிய தருணத்துக்காக காதிருந்தாள். நீலி வேறு ஒரு தந்திரம் செய்தாள். ஒரு மரக் கிளையை ஒடித்து அதைக் குழந்தையாக ஆக்கி ஊர் ஜனங்கள் அனைவரையும் கூட்டி தரிசன செட்டி தன் கணவர் என்றும் அவர் பெற்ற குழந்தைதான் இது என்றும் கதறி அனுதாபத்தைப் பெற்றாள். (இதுதான் நீலிக் கண்ணீர் !!) ஊர் ஜனங்களின் கெட்ட காலம்– 70 வேளாளர்கள் பஞ்சாயத்து கூடி அவளுடன் செல்ல உத்தரவிட்டனர். பெண்ணுடனும் குழந்தையுடனும் இரவில் தங்கும் போது வாளுக்கு வேலை இல்லை என்று கூறி அதை விட்டுப் போகச் சென்றனர். தரிசன செட்டிக்கு பயம் வந்தது. எவ்வளவோ மன்றாடியும் வாளை விட்டுத் தூங்கவேண்டிய தருணம் வந்தது. இதற்குக் காரணம் 70 பேரும் “உங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் நாங்கள் 70 பேரும் தீக்குளித்து உயிர்விடுவோம்” என்று சூளுரைத்ததுதான்.

நீலிப்பேயின் ஆற்றலை அறியாத அப்பாவிகள் அவர்கள். அன்றிரவு தரிசன செட்டியைத் தீர்த்துக்கட்டியது நீலிப் பேய். மறு நாள் சத்தியத்துக்குக் கட்டுப் பட்ட 69 பேர் தீக்குளித்து உயிர் நீத்தனர். இதுதான் பாரதத்தின் பெருமை. உண்மைக்கும் சொன்ன சொல்லுக்கும் அவ்வளவு மதிப்பிருந்த காலம் அது.ஒருவர் மட்டும் ஒளிந்து கொண்டார். விடடுவாளா நீலி? அவன் ஒளிந்திருந்த கழனிக்குப் போய், அவன் மகள் போல நடித்து அவனையும் ஏமாற்றிக் கொன்றாள்.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களில் ஒரு நீலி வருகிறாள். அவள் முற்பிறப்பில் கோவலனைச் சபித்ததால்தான் கோவலன் கொலை உண்டான் என்பது சிலப்பதிகாரத்தின் பூர்வ கதை.

நீலி கொன்றது 70+1 பேர் மட்டும் அல்ல. புளியங் கொப்பை ஒடித்து குழந்தை ஆக்கினாள் அல்லவா? அதையும் காலுக்கடியில் போட்டு மிதித்துக் கொன்றதாக பழையனூர் கதைகள் கூறுகின்றன.. அந்த இடங்கள் இன்னும் பழையனூரில் இருக்கின்றன. இதே இடம் எங்கள் இங்கிலாந்தாக இருந்திருந்தால் பேய் நகரம் என்று பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக/ சுற்றுலாத் தலமாக ஆகி இருக்கும். இங்கிலாந்தில் ஆண்டு தோறும் பேய் தினமான ஹாலோவீன் தினத்தில் பேய் வீடு சுற்றுலா நடத்துகிறார்கள். பேய்கள் நடமாடும் பிரபல பத்து இடங்களுக்கு நிறைய பேர் தைரியமாகப் போவார்கள். ஆனால் பழையனூர் நீலியைப் பற்றிக் கேட்டால் அவர்களும் நடுங்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

Please read earlier Ghost Stories posted by me in the past:

1. Most feared Numbers 666 and 13

2. Aladdin’s Magic Lamp and Tamil saints

3. கடலில் தோன்றிய மர்மத் தீ

4. Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri

5. Largest Story Collection in the World

5.தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்

6.டெல்பி ஆரூடமும் குறிசொல்லுவோரும்

7.பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்

8. Mysterious disappearance of Great Hindu saints

9. Time Travel by Two Tamil Saints

10. Do Hindus believe in E.T.s and Alien Worlds?

 

contact :swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com