What is the True Meaning of ‘Sloka’- Did ‘Shoka’ become ‘Sloka’? (Post No.6752)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 9 AUGUST 2019  
British Summer Time uploaded in London – 15-
43

Post No. 6752

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

6 கால பூஜை, 6 வகை உற்சவம், 6 தொழில் (Post No.6751)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 9 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 9-19 am

Post No. 6751

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சூரியன் அஸ்தமிக்காத நாடு ! (Post No.6750)

Written by S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 9 AUGUST 2019  


British Summer Time uploaded in London –8-33 AM

Post No. 6750

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கோகுலம் கதிர் மாத இதழில் ஆகஸ்ட் 2019 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை.

உலக உலா

உலக உலாவில் இடம் பெறும் இரண்டாம் நாடு இங்கிலாந்து!

சூரியன் அஸ்தமிக்காத நாடு !

ச.நாகராஜன்

Narendra Modi in London

சூரியன் அஸ்தமிக்காத நாடு!

சூரியன் அஸ்தமிக்காத நாடு என்ற புகழ் பெற்ற ஒரே நாடு உலகில் இங்கிலாந்து தான். அதற்கு உரிமையாக 14 நிலப் பகுதிகள்  இருப்பதால் ஏதோ ஒரு பகுதியில் சூரியன் உதித்துக் கொண்டே இருப்பான். ஆகவே தான்

“Rule, Britannia! Britannia, rule the waves!

Britons never, never,never shall be slaves.

 (பிரிட்டனே! உலகை ஆள்வாயாக! அலைகடலை ஆட்சி செய்! பிரிட்டானியர்கள் ஒரு போதும் அடிமையாக ஆக மாட்டார்கள்) என்ற பிரசித்தி பெற்ற பாடல் எழுந்தது.

ஜான் வில்ஸன் என்பவர் “ஒருபோதும் சூரியன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அஸ்தமிப்பதில்லை” (The Sun never sets on the British Empire) என்று எழுதினார். இது பிரபலமான வாக்கியமாக ஆகி விட்டது!

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமானது உலகின் கால் பகுதியை ஆண்டது!

கையளவே உள்ள ஒரு சிறிய நாடு முப்பது கோடி மக்களை உடைய இந்தியாவை அடக்கி ஆண்டது என்றால் அதன் அதிகார ஆணவத்தையும் பலத்தையும் புரிந்து கொள்ளலாம். பல தியாகங்களைச் செய்து இடைவிடாத சுதந்திரப் போரால் நாம் சுதந்திரம் பெற்றோம்.

இத்தனைக்கும் அதன் நிலப்பரப்பு 93,600 சதுர மைல்கள் தான்! அதன் எந்தப் நிலப்பகுதியிலிருந்தும் கடல் 70 மைல் தூரத்தில் தான் உள்ளது!

அதிசயமான இந்த நாட்டில் அரசிக்குப் பெரும் மரியாதை உண்டு. அதன் தேசிய கீதமே கடவுள் அரசியைக் காப்பாராக (God Save the Queen) என்பது தான்! அரசர் ஆண்டால் கடவுள் மன்னரைக் காப்பாராக (God Save the King) என தேசீய கீதம் மாறும்.

க்வீன் எலிஸபத் 116 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் விஜயம் செய்திருக்கிறார். ஏனெனில் பாஸ்போர்ட் வழங்கும் அதிகார உரிமை பெற்றவர் அவர் தானே! அவர் தனது அடையாளத்தை உலகில் யாருக்கும் காண்பிக்கத் தேவை இல்லை அல்லவா!

ஜனநாயகம் கண்ட நாடு

இங்கிலாந்தின் புகழுக்குக் காரணங்கள் பல!

உலகிலேயே முதன் முதலில் பாராளுமன்ற நடைமுறை பிரிட்டனில் தான் 1707இல் ஆரம்பித்தது. பின்னர் தான் ஸ்வீடனில் 1721இல் தோன்றியது. ஆக ஜனநாயக நடைமுறையின் தாயகமாக பிரிட்டன் விளங்குகிறது. 650 பாராளுமன்றத் தொகுதிகள் பிரிட்டனில் உள்ளன!

ஆங்கிலம் உலகின் பொதுமொழியாக விளங்குகிறது. உலக ஜனத்தொகையான 750 கோடிப் பேரில் 150 கோடிப் பேர் ஆங்கிலம் பேசுகின்றனர்! 36 கோடி பேர் இதைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

ஷேக்ஸ்பியரின் நாடு

ஆங்கிலத்தின் இலக்கிய வளம் அகன்றது. ஷேக்ஸ்பியரை அறியாதோர் இருக்க முடியாது. அவர் தன் வாழ்நாளில் 37 இலக்கிய நூல்களைப் படைத்தார். அவர் பயன்படுத்திய மொத்தச் சொற்கள் 8,35,997! குறைந்த சொற்களாக 14701 சொற்களைக் கொண்டு அவர் எழுதிப் படைத்த படைப்பு Comedy of Errors. அதிகச் சொற்களாக 8,35,997 சொற்களைக் கொண்டு அவர் படைத்த படைப்பு புகழ்பெற்ற Hamlet! அவர் தன் படைப்புகளில் தொடாத துறைகளே இல்லை. இது தவிர வோர்ட்ஸ்வொர்த், மில்டன், ஷெல்லி, ஜான் கீட்ஸ், பைரன்,டென்னிஸன் என ஆங்கிலக் கவிஞர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

உலகை மாற்றிய விஞ்ஞான நாடு

உலகிற்கு விஞ்ஞானத் துறையில் இங்கிலாந்தின் பங்களிப்பு மிகப் பெரியது. குறைந்த பட்சம், உலகின் போக்கை மாற்றிய பெரிய 50 கண்டுபிடிப்புகளை உடனே சொல்லி விடலாம்.நியூட்டனின் விதிகள் பற்றித் தெரியாதவரே இருக்க முடியாது. டெலஸ்கோப்பை 1668இல் நியூட்டன் கண்டுபிடித்தார். ஏன் டூத் பிரஷ் கூட இங்கிலாந்தின் கண்டு பிடிப்பு தான். 1770இல் வில்லியம் அடிஸ் என்பவர் டூத் பிரஷை அறிமுகப்படுத்தினார்.

உலகில் ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து தான். 1698இல் தாமஸ் சேவரி ஸ்டீம் எஞ்ஜினைக் கண்டுபிடித்தார். பின்னர் ஜேம்ஸ் வாட் அதை நன்கு அபிவிருத்தி செய்து நடைமுறைக்கு உகந்ததாக மாற்றினார். தந்தி அனுப்பும் முறையை (1837இல்) உருவாக்கியதும் பிரிட்டனே. சிமெண்ட், டின் கேன்,ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், ஹோவர் கிராப்ட், யுத்தத்தில் பயன்படுத்தும் டேங்க் என இப்படிப் பல கண்டுபிடிப்புகளும் பிரிட்டனில் உருவானவையே!

இரண்டாம்  உலகப் போர் பிரிட்டன் கண்ட பிரம்மாண்டமான போர். ஹிட்லரை வீழ்த்த பிரிட்டானியர்கள் ஓரிழையில் ஒருங்கு திரண்டனர். இங்கிலாந்தின் முப்படை வீரர்களும் ஆற்றிய சாகஸங்களைப் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை!

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள்

ஏஜண்ட் 007 – ஜேம்ஸ் பாண்டை அறியாத திரைப்பட ரசிகரே உலகில் இருக்க முடியாது. ஐயான் ப்ளெமிங்கால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். ‘டாக்டர் நோ’வில் ஆரம்பித்து இதுவரை 25 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் வசூலோ பிரம்மாண்டம்! ஸ்கை ஃபால் என்ற ஒரு படம் மட்டுமே உலகெங்குமாக 111 கோடி டாலர்களைச் சம்பாதித்து ரிகார்டை ஏற்படுத்தியது. (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 69 ரூபாய்கள்)

பிரிட்டன் இன்றுடன் புகழுடன் விளங்கக் காரணங்கள் பல என்றாலும் கூட அங்கு இருப்போரின் அழகும், பொறுமைக் குணமும் ஒரு முக்கியமான காரணம்! சிவந்த மேனியையும் மினுமினுப்பான அழகையும் கொண்ட பிரிட்டிஷ் அழகிகள் உலகெங்கும் மதிக்கப்படுகின்றனர்! எம்மா வாட்ஸன், செரில் கோல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நடிகைகள் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

Awesome நாடு

பிரிட்டனில் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. சேரிங் க்ராஸ் லண்டனில் ஆறு சாலைகளின் பிரபல சந்திப்பாக விளங்குகிறது. லண்டனில் பாண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள கடைகளில் ஷாப்பிங் செய்யாத பிரபலங்களே உலகில் இல்லை!ஸ்டான்லி கிப்பன் தபால் தலை சேகரிப்போர் செல்லும் பிரபல ஷாப்!

பிரிட்டனில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரே ஆகிய இரு தீவுகளுக்கு இடையே செல்லும் விமானப் பயணம் தான் உலகின் மிகக் குறுகிய விமானப் பயணம். இந்தப் பயணத்திற்காக ஆகும் நேரம் இரண்டு நிமிடங்கள் தான்!

உலகில் அதிகமாக இந்திய உணவு விடுதிகளைக் கொண்ட ஒரே நாடு இங்கிலாந்து தான்!

தேம்ஸ் நதி உள்ளிட்ட அனைத்து லண்டனின் முக்கிய இடங்களையும் காண்பிக்கும் டூரிஸ்ட் பஸ்களின் திறந்த அமைப்பு கொண்ட மேல் தளத்தில் உட்கார்ந்து லண்டனைப் பார்ப்பது ஒரு தனி அனுபவமாக இருக்கும்.

தனி மனித சுதந்திரம் பெரிதும் மதிக்கப்படும் முதல் நாடு பிரிட்டனே. ஆரோக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறப்பாக விளங்குவதும் பிரிட்டனே. ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட இடங்களை உலகெங்குமுள்ள கல்வி ஆர்வலர்கள் நாடுவது இதனால் தான்!

விளையாட்டிலோ என்றால் கிரிக்கெட், ஃபுட் பால், ஹாக்கி, பேட்மிண்டன் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதே இங்கிலாந்து தான். விம்பிள்டன் டென்னிஸ் என்றால் தொலைக்காட்சி முன்னால் அமர்பவர்கள் கோடானு கோடி பேர்கள்.

ஆனால் அப்படிப்பட்ட நாட்டையே தனது மென் சிரிப்பாலும் இடையில்  கட்டிய அரைத் துண்டாலும் , அஹிம்சை வழி முறையாலும் வென்றவர் நமது மகாத்மா காந்திஜி என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம்!

ஒரு வார்த்தையில் பிரிட்டனைப் பற்றிச் சொல்லுங்கள் என சமூக ஊடகங்கள் விடுத்த அழைப்பில் வந்த வாக்கியங்களில் சில : Awesome! Breathtaking! Beauty! Inspiring!, Colourful! Contentment!

இதற்கு மேல் இந்த நாட்டைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

****

ஹிட்லரும் முசோலினியும் (Post No.6749)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London –1
8–03

Post No. 6749

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இரண்டாம் உலகப் போர் கதாநாயகர்கள் ஹிட்லரும் முசோலினியும் இறப்பதற்கு முன்னர் அவர்களைப் பற்றி தினமும் செய்திகளும் துணுக்குகளும் வந்த வண்ணம் இருந்தன. அவற்றில் சில பாராட்டியும் சில கிண்டல் செய்தும் இருக்கும். இதோ சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் சக்தி மாத இதழில் வந்த சில துணுக்குகள்.

75 ஆண்டுக்கு முன் தமிழ் சினிமா (Post No.6748)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London –16-
21

Post No. 6748

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கருப்பு- வெள்ளைத் திரைப்பட விளம்பரங்கள்- சுமார் 75 ஆண்டுக்கு முந்தைய சக்தி மாத இதழ் பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை-

குபேர குசேலா

திவான் பகாதூர்

பாலநாகம்மா

மங்கமா சபதம்

நந்தனார்

மீரா

லவங்கி

பில்ஹணன் (Drama)

மங்கம்மா

கண்ணகி

Tags — சினிமா விளம்பரங்கள்

கருப்பு- வெள்ளை,

பழைய திரைப்படங்கள்

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி8819 (Post No.6747)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London –15-39

Post No. 6747

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – 8  எழுத்துக்கள்-புகழ்பெற்ற சைவ அறிஞர்; இலங்கையில் அவதரித்தவர்

6. – 8–நீக்ரோ

8. – 3–கார்த்திகைக்கு முதல் நாள்

9.– 7–தேவகுரு, அசுர குரு; வானத்தில் வலம் வரும் கிரகங்கள்

11. – 7–சோற்றை இறக்கும் முன் கிடைக்கும் சத்துணவு

12. – 5–சிங்கமும் வசிக்கும்; யோகியரும் தவம் செய்வர்

13. – 3–இளம்பெண்

கீழே

1.  – 4 எழுத்துக்கள்- வால்மீகியின் அடைமொழி

2. – 5–இளஞர்களை மிகவும் கவலைப்பட வைக்கும் ; முகத்தில் வெடிக்கும்

3.  – 8- விளம்பி நாகனார் இயற்றியது; ஒவ்வொரு பாட்டிலும் 4 நீதிகள் உள.

4. – 4–மென்மையான-பெண்களின் பெயர்; சஹஸ்ரநாமத்தின் பெயர்

5.–7– அரசன் ஊர்வலம்

7. – 3-ஒரு மரம்; இலையை பிராமணர்கள் யாகத்தில் நெய் ஊற்ற உபயோகிப்பர்

9.- 3- ஏழைகள் வசிக்கும் வீடு

10.- 4– சங்கீதப் பிரியன்; சினிமாப் பிரியன்; நடிகர் நடிகையர்க்கு சங்கம் வைக்கும் பொழுது போக்கற்ற பேர்வழிகள்

–SUBHAM–

LARGEST AND LONGEST STONE INSCRIPTION IN THE WORLD (Post No.6746)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London –9-27 AM

Post No. 6746

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Largest and longest stone inscription in the world is in Rajasthan,India.

It has 1106 Sanskrit slokas detailing the history of Mewar from 7th century to 17th century.

They are inscribed on 25 marble slabs. It was composed by a Telegu Brahmin who went to Rajasthan with his family. He has done a book in 24 cantos. The whole book is on the slabs.

Where is it?

About 40 miles from Udaipur is Lake Raj Samand (Raja Samudra). On the banks of this artificial lake is the inscription. It is 400 years old.

First Woman to write an Epigraph!

First woman epigraph writer was Lota of Nasik. She engraved historical information during the reign of Gautami putra Satakarni who ruled 2000 years ago.

Encyclopaedic information about 800 Sanskrit and Prakrit poets of Indian inscriptions is in a book by Prof. Disalkar published from Pune.

When I read about Ranachota Bhatta, who proclaimed himself as Telenganapati in the book, I googled for information. To my surprise there was only one article in the Times of India about this world wonder. Then I went to University of London Library and gathered some information.

Please see the interesting information about Rana Raj Sing, Princess Charumati, beautiful marble temples around Raja Samand.

(More details are in the attachments)

Read more at:
http://timesofindia.indiatimes.com/articleshow/62781989.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

–subham–

உலகத்திலேயே மிகப்பெரிய கல்வெட்டு! (Post No.6745)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London –8-14 AM

Post No. 6745

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Kudumianmalai Tamil Inscriptions

ஆரோக்கியம் தெரிந்து கொள்ளுங்கள்! – 1 (Post No.6744)

Written  by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 6-49 am

Post No. 6744

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹெல்த்கேர் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதிய பகுதி

புத்தகச் சுருக்கம் : All about Good Health by Dr Christian Barnard, C.Northcote Parkinson, M.K. Rustomji 187 pages

ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! – 1

தமிழில் தருபவர் : ச.நாகராஜன்

நூலாசிரியர்கள் பற்றி :-

Dr Christian Barnard உலகின் தலைசிறந்த டாக்டர். The Body Machine என்ற அவரது புத்தகம் மூன்று லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கிறது. உலகில் முதல் இதய மாற்று நடவு சிகிச்சையைச் செய்தவர் இவரே. (Heart Transplant operation) C.Northcote Parkinson உலகின் தலைசிறந்த மருத்துவ புத்தகங்களை எழுதியவர். ஒவ்வொரு புத்தகமும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.

M.K. Rustomji ஆரோக்கியம் பற்றி எளிமையாக விளக்குபவர் என்பதால் உலகளாவிய அளவில் பிரபலமானவர். இந்தப் புத்தகம அவரது ஒன்பதாவது புத்தகம். நிர்வாக இயல் பற்றியும் அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.அதில் ஒன்று திரைப்படமாகப் பிடிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தின் பரிசையும் பெற்றது.

நூல் sex, Psyvhology, Food, Ecercise, Physiology, General என்ற ஆறு பகுதிகளைக் கொண்டது.

முக்கிய விஷயங்கள் இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. முழு நூலையும் வாசித்துப் பயன் பெறலாம்.

  1. SEX

தூக்கம் போல பாலியல் உறவும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம்.

பாலியல் உறவில் திருப்தி அடையாத ஒரு பெண்மணியுடன் வாழ்க்கை வாழ்வது மிகவும் கஷ்டம். பாலியல் உறவில் 50%க்கு மேல் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அனுபவித்ததில்லை என்பதை ஆய்வு செய்த உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் உறவில் எந்த ஒரு தோற்ற நிலையும் (Pose and Posture) மோசமானதில்லை

உறவை அடிக்கடி கொள்ளலாமா?

இது ஆணின் ஆண்மை வீரியத்தையும் வயதையும் பொறுத்த ஒரு விஷயம். பெண்களால் அடிக்கடி உறவு கொள்ள முடியும். ஆனால் ஒரு வயதுக்கு மேல் – 45 வயதுக்கு மேல் – இதில் ஆர்வம் பலருக்கும் போய் விடுகிறது.

ஒரு முறை உறவு கொள்வது என்பது 15 முதல் 20 வரை உள்ள press-upக்குச் சமமானது. இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் சீரான உடல்பயிற்சி மேற்கொள்ளல் அவசியம்.

சீரான இடைவெளியில் உறவு கொள்வது ஆரோக்கியத்தைத் தருகிறது; ஆயுளையும் நீட்டிக்கிறது.

ஆண்மையற்ற தன்மை என்பது பெரும்பாலும் உளவியல் ரீதியிலான ஒன்று.

அதிகமாக மது அருந்துவது பாலியல் உறவுக்கு தீங்கு பயக்கும் ஒன்று; இது ஆண்மையற்ற தன்மையை உருவாக்குவது.

“பாலியல் உறவு கொள்ளுங்கள்; இதயத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான ஒரு இரவு இயற்கையின் இயல்பான தூக்கம் தரும் மருந்து” என்று பிரபல அமெரிக்க பாலியல் நிபுணரான டாக்டர் யூஜின் ஷெய்மேன் (Dr Eugene Scheimann) கூறுகிறார்.

எந்த ஒரு வயதும் பாலியல் உறவுக்கு ஒரு தடையில்லை.

2. PSYCHOLOGY

How to overcome tension and stress

மன இறுக்கமும் மன அழுத்தமும் 50 சதவிகித நோய்க்குக் காரணமாக அமைகின்றன. கவலை நரம்பு மண்டலத்திற்குப் பெரும் தீங்கை உண்டாக்குகிறது.

மன இறுக்கம் அதிகமாகும் போது சில ஹார்மோன்கள் அதிகமாக உடலில் சுரக்கிறது. Blood sugar அதிகமாகிறது.

மன இறுக்கம்,மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது?

முதலில் அது ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை அறிய வேண்டும். காரணத்தை அறிந்த பின் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் கவலையை மனம் விட்டுப் பேசுவதிலேயே பாதிப் பேருக்கு பல நோய்கள் போய் விடுகின்றன.

சிறு சிறு விஷயங்களையும் கூட மனம் திறந்து பாராட்டுவது, அன்பு பாராட்டுவது, மரியாதை தருவது போன்றவை உடலையும் மனதையும் சீராக வைக்க உதவுபவை.

இளமையான மனத்தை எப்போதும் கொண்டிருப்பது உடலையும் இளமையுடன் வைத்திருக்கும். பெர்னார்ட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சாமர்செட் மாம், மைக்கேல் ஆஞ்சலோ, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இதற்கு உதாரணம்.

சவாசனம் போன்ற ஆசனம் கவலையைப் போக்கும். மனதிற்கும் உடலுக்குமான பயிற்சி இது.

அவ்வப்பொழுது ஓய்வான நேரத்தை உருவாக்கிக் கொண்டு எப்போதும் உழலும் வாழ்க்கையிலிருந்து ஒரு ஓய்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நிகழ்காலத்தில் வாழ்வது என்பது இன்னொரு உத்தி. நாளை என்ன நடக்கப் போகிறதோ என்று கவலைப்படுவதை விட்டு விட்டு இன்றைய பொழுதின் மீது கவனம் செலுத்தல் வேண்டும்.

மருத்துவம் சம்பந்தமாக சில தவறான விஷயங்கள் உண்மை போலக் கூறப்படுகின்றன. அவற்றில் சில

நீச்சலுக்கு முன்னர் உணவை உட்கொள்ளக் கூடாது. இது தவறு. மிதமான உணவுக்குப் பின்னர் கூட நீந்தலாம்.

வயது அதிகமாகும் போது எடை கூடினால் பரவாயில்லை. இது தவறு. 21 வயதில் என்ன உடல் எடை இருந்ததோ அதை சீராக வைத்திருப்பதே ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்று.

சற்று கூட நேரம் தூங்குவது நல்லது. இது தவறு. தேவையான அளவு தூக்கம் போதும்.

உடல் பயிற்சி செய்யும் பெண்மணிகள் தங்கள் பெண்மைத் தன்மையை இழக்கின்றனர். இந்த நம்பிக்கை தவறு. உடல் பயிற்சி ஆரோக்கியத்தை உறுதி செய்து ஓய்வான தன்மையையும் அளிக்கிறது.

நீரிழிவு நோய்க்கு சிறுநீர பரிசோதனையை மேற்கொள்ளல் அவசியம்.

இரத்த அழுத்த சோதனை இதய நிலை பற்றி அறிய உதவும்;

அதிக கொழுப்புச் சத்துக்கும் இது உதவும்.

மத்திய வயதை அடைந்த பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சீரான இடைவெளியில் சோதித்துக் கொள்வது அவசியம். மார்பகப் புற்று நோய் இருக்கிறதா, கட்டி உள்ளதா என்பதைச் சோதித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் வலி இல்லாமல் இருந்தாலும் கூட இவை இருக்கும் அபாயம் உண்டு என்பதால் தான்!

ஆழ்மனதின் சக்தி (The power of Subconscious mind) அபாரமானது. தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை அதனிடம் விடுவது நல்லது. உறக்கத்தின் போது அது வேலை செய்து பிரச்சினைகளைத் தீர்க்கும் தீர்வுகளை நீங்கள் எழுந்திருக்கும் போது அது உங்களுக்கு வழங்கும்!

  • FOOD

பாக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளும், குளிர்பானங்களும் தேவையற்றவை; பல சமயங்களில் தீங்கு பயப்பவை. சமச்சீர் உணவே ஆரோக்கியத்திற்குப் போதுமானது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு உண்ண வேண்டும்? எப்பொழுது உண்ண வேண்டும். பொதுவாகச் சொல்லப் போனால் பெரும்பாலானவர்கள் தேவைக்கு அதிகமாகவே உண்கிறார்கள். பொதுவான விதி – பசி எடுத்தவுடன் உண்ணுங்கள் என்பது தான்!

இன்னொரு அருமையான விதி : குறைவான அளவே உண்ணுங்கள்;பல முறை கூட உண்ணலாம். ஓரிரு முறை சாப்பிட்டு வயிறைத் தேவைக்கு அதிகமாகச் சுமக்க வைப்பதை விட இது மேலானது.

சரியாகச் சமைக்காததே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

இந்தியர்களின் வீட்டில் உள்ள உணவில் சப்பாத்தி, அரிசி, பருப்பு வகைகள், கறிகாய்கள் உள்ளன. இதுவே போதுமானது. சில சமயங்களில் மட்டும் விடமின்கள் தேவைப் படலாம். ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள் சாப்பிடும் போது சில சமயங்களில் விடமின் B  தேவைப்படலாம்.

உடல் பயிற்சியானது உடல் நலமாக இருக்கும் உணவை எப்போதும் ஒருவருக்கு நல்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய ரொட்டித் துண்டு 40 நிமிட நேர கடும் பயிற்சியைத் தேவைக்குள்ளாக்குகிறது. ஆகவே உடல் எடையைச் சீராக வைத்திருக்கவும், அதிக எடை ஏற்படாமல் இருக்கவும் உடல் பயிற்சி எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணரலாம்.

High Fibre Diet – அதிக பைபர் அடங்கிய உணவு ஏராளமான நன்மைகளைத் தருகிறது. இது சீராக மலத்தைக் கழிக்க உதவுகிறது. கோலன் கான்ஸரை – பெருங்குடலில் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது. ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

*** அடுத்த இதழில் முடியும்

Swami’s Crossword Puzzle7819 (Post No.6743)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 7 AUGUST 2019  
British Summer Time uploaded in London –1
9-11

Post No. 6743

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. -7 LETTERS—most famous Sanskrit poet

6. – 4/5– – virtue

7. — 6- father of Ashtavakra; he argued with Bandi and lost in Janaka’s court

8. -6- Number 4

9. -6- Hindu’s horoscope

DOWN

1.– 5 LETTERS-  tenth incarnation of Vishnu

2. – 5- light, easy in Sanskrit and many other Indian languages

3. A -5- stick, one of the four methods to solve problem; punishment, fines

4. -3- goat, brahma

5. – 7- Indonesian island near Java ruled by Hindus for 1000 years

–subham–

–subham–