நேமி – ரிக் வேதம் முதல் சங்க இலக்கியம் வரை! (Post No.7450)

Indra. chakra, nemi in Indus script

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7450

Date uploaded in London – 13 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Tags – நேமி , ரிக் வேதம், சங்க இலக்கியம், இந்திரன், சிந்து சமவெளி

MY OLD ARTICLES:–

“Indus” Valley Civilization to “Ganges” – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/03/28 › change-indus-valley-civilization…

  1.  
  2.  

28 Mar 2014 – Following this morning’s news report of the discovery of an “Indus” valley site on the Ganges plains larger than Harappa, I wrote this article.

Indus Valley – Brahmin Connection! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/10 › indus-valley-brahmin-connection

  1.  
  2.  

10 May 2014 – The world was misled by some scholars in the case of Indus Valley … Ram’s sons invaded Indus cities: Please see my earlier article Indus …

Indus Valley Civilization | Tamil and Vedas

https://tamilandvedas.com › category › indus-valley-civilization

  1.  

Posts about Indus Valley Civilization written by Tamil and Vedas. … Read more: https://www.newscientist.com/article/2227146-ancient-monkey-painting- …

Indra – Taranis – Thor in Indus Valley Civilization | Tamil and …

https://tamilandvedas.com › 2014/09/05 › indra-taranis-thor-in-indus-valle…

  1.  

5 Sep 2014 – On 29 May 2011, I posted an article with the title “Indus Valley Civilization- New Approach required” in this blog. I have posted the picture of a …

Tiger Goddess of Indus Valley | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/08/22 › tiger-goddess-of-indus-valley

  1.  
  2.  

22 Aug 2012 – Scholars who study Indus valley civilization are struggling to identify … Please read my previous articles on Indus/Saraswati Valley civilisation:.

Serpent Queen:Indus Valley to Sabarimalai | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/06/17 › serpent-queenindus-valley-to-sa…

  1.  
  2.  

17 Jun 2012 – We have a faience figure in Indus Valley with two snakes. Minoan Goddess … (Please read my other articles on Indus Valley 1. Bull Fighting: …

Human Sacrifice in Indus Valley and Egypt | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/10/31 › human-sacrifice-in-indus-valley…

  1.  
  2.  

31 Oct 2012 – Indus valley has two or three human sacrifice scenes. On a … Tamil articles: சிந்து சமவெளியில் பேய் முத்திரை. 10.

Indus Valley to Egypt: Lapis lazuli Export! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/09/06 › indus-valley-to-egypt-lapis-lazul…

  1.  
  2.  

6 Sep 2014 – Earlier articles on INDUS VALLEY CIVILIZATION. Indus Valley-Brahmin Connection (Post No 1034, Date 10-5-14) Bull Fighting: Indus Valley to …

You’ve visited this page 2 times. Last visit: 21/02/17

Number 7: Rig Vedic link to Indus Valley Culture ! | Tamil and …

https://tamilandvedas.com › 2014/11/21 › number-7-rig-vedic-link-to-ind…

  1.  

21 Nov 2014 – Sapta Mata (Seven Mothers ) seal from Indus Valley Research paper written by London Swaminathan Research article No.1427; Dated 21st …

Indus Valley Cities in Ramayana | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/12/18 › indus-valley-cities-in-ramayana

  1.  
  2.  

18 Dec 2012 – Ramayana Wonders Part 5 Indus Valley Cities in Ramayana The “destruction of Indus Valley cities” was debated by scholars at one time.

Missing: articles ‎| Must include: articles

Vishnu Seal in Indus Valley Civilization | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2011/10/19 › vishnu-seal-in-indus-valley-civil…

  1.  
  2.  

19 Oct 2011 – Please read my article about a newapproach to solve the Indus … Ficus Indica in Latin) is drawn on many seals and objects in the Indus valley.

Manu on Indus Valley | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › manu-on-indus-valley

  1.  

28 Apr 2014 – Posts about Manu on Indus Valley written by Tamil and Vedas. … (First part of the article “30 Important Quotations from Manu” posted on 27th …

Which were the gods of the Indus Valley civilization and did they …

http://www.interfaith.org › … › Eastern Religions and Philosophies

  1.  
  2.  

25 Sep 2016 – https://tamilandvedas.com/2012/08/22/tiger-goddess-of-indusvalley/. Click to … The Indian Express has an article called The riddle of Mhatoba, …

–subham–

சிந்து சமவெளியில் கந்தர்வர்கள்!!

பிராணியின் கழுத்துக்குக் கீழே உள்ளது சோமரச வடிகட்டி

Research Paper No.1807; Date: 17th April 2015

Written by London swaminathan

Uploaded from London at 19-47

I have already published the English Version of this article.

கட்டுரைச் சுருக்கம்:

1.சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் தொடர்பு உண்டு

.2.அங்கே அவர்கள் மற்ற இனத்துடன் வாழ்ந்தாலும் முக்கியப் பங்கு வகித்தனர்.

3.அவர்கள் சோமக் கொடி பயிர் செய்வதில் வல்லவர்கள். மலைகளில் வசித்ததால் அதை இந்து யாக யக்ஞாதிகளுக்கு சப்ளை செய்தனர். சிந்து வெளியில் சோமரச வடிகட்டி காட்டும் முத்திரைகள் கந்தர்வர்களுடையவை.

4.லவன், குசன், துர்யோதனன் நாகர்கள், இந்திரன் ஆகியோருடன் அவர்கள் சண்டை போட்டது பற்றி இதிஹாச புராணங்கள் கூறுவதால் சிந்து வெளியில் பலதரப்பட்ட மக்கள்– இன்றைய இந்து மதம் போலவே– கூடி வாழ்ந்தனர்.

5.அவர்கள் காதல் திருமணம் ஆடம்பர/செண்ட் போட்ட உடை, நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றில் விருப்பம் உடையவர்கள். சங்கீதத்துக்கு மறு பெயர் கந்தர்வ சாஸ்திரம்

6.இவர்களுக்கு தாவரம் பற்றிய அறிவு, கட்டிடக் கலை அறிவு மிகுதி. இந்த விஷயங்கள் எல்லாம் இந்துமத நூல்களில் உள்ளவை. வேதத்தில் எந்த இடங்களில் இவர்கள் பற்றி வருகின்றன என்பதை எனது ஆங்கிலக் கட்டுரையில் காணவும்.

கந்தர்வர்கள் பற்றி ராமாயணம் மஹாபாரதம், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றில் சொல்லிய விஷயங்களை இன்னும் யாரும் முழுக்க ஆராயவில்லை. சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி நான் எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன்.

soma filter

சிந்து சமவெளி சோமரச வடிகட்டி

1.கந்தர்வ மணம் என்பது காதல் கல்யாணம். இது மனு ஸ்ம்ருதி எனும் சட்டப் புத்தகம் கூறும், இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்களில் ஒன்று. மனு ஸ்ம்ருதி கூறியதை தொல்காப்பியரும் அப்படியே கூறுகிறார். இதன் விவரங்களை “இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்கள்” என்ற எனது கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.

2.வேதங்களில் சோம ரசத்துக்குப் பாதுகாவலர்கள் கந்தர்வர்கள் என்றும் அவர்கள் வானத்தில் (உயரமான மலைகளில்) வசிப்பவர்கள் என்றும் அவர்கள் சோம ரச உற்பத்திக்குப் பெயர் எடுத்தவர்கள் என்றும் பல துதிகள் வருகின்றன.

3.சிந்து சமவெளி முத்திரைகளில் பிராணிகளுக்குக் கீழே ஒரு மர்ம சின்னம் இருக்கிறது. இதுவரை அது என்ன என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. அது போலவே ஒற்றைக் கொம்பு மிருகத்துக்கும் விளக்கம் கிடைக்கவில்லை. சிலர் இது குதிரை என்பர். அது போலவே அந்த மர்ம வடிவம் சோம ரசத்தை வடிகட்டும் பாத்திரம் என்பர். இந்த குறிப்பிட்ட வகை முத்திரைகள் எல்லாம் கந்தர்வர்களுடையவை என்று நாம் கொண்டால் அந்த மர்ம பாத்திரம் சோம ரச வடிகட்டியாக இருக்கலாம். ஏனைய முத்திரைகளில் இவை இல்லாததற்குக் காரணம் அவை கந்தர்வர் இல்லாத வேறு குழுவினருடையவை என்று கொள்ளலாம். சிந்து நாகரீகத்தில் ஆரிய திராவிட இனவெறியைப் புகுத்தி அந்த ஆராய்ச்சியைக் குட்டிச் சுவராக்கிய மார்ட்டிமர் வீலர் போன்றவர்களை மறந்து விட்டு, அது பல இன குழுக்கள் நாகரீகம் என்று கொண்டால் எளிதில் அந்த எழுத்துக்களைப் படிக்கலாம்.

4.கந்தர்வர்கள் என்போர் — மனிதர், நாகர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லோருடனும் வசித்ததை வேத துதிகள் உறுதி செய்கின்றன. அவர்கள் நாகர்களுடனும் சண்டை போட்டனர். இறுதியில் புருகுத்சர் என்பவர் விஷ்ணு அமசத்துடன் தோன்றியதாகவும் நாக குல பெண் நர்மதா புருகுத்சனுக்கு கந்தர்வர் ஒளிந்து கொண்டிருக்கும் பகுதியைக் காட்டி அவர்களை அழித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

5.கந்தர்வர்கள் 27 பேர் என்று யஜுர் வேதமும் 6333 பேர் என்று அதர்வ வேதமும் கூறும். அந்தந்த இடத்தில் இந்த எண்களை வைக்கையில் சரியான பொருள் கொள்ள முடியும். ரோகிணி நட்சத்துடன் கந்த்ர்வர்களை தொடர்புபடுத்துவர். தமிழர்களும் வடக்கே இருந்தவர்களும் பழங்காலத்தில் ரோகிணியில் கல்யாணம் செய்துகொண்டதை அகநானூற்றில் காணலாம்.

6.வானவில், கானல் நீர் ஆகியவற்றுடன் கந்தர்வர்களைத் தொடர்புபடுத்தும் துதிகளும் உள.

தாய்லாந்து மியூசிய கின்னரர் சிலை

7.கந்தர்வர்களுக்கு தாவரங்கள் பற்றி நன்கு தெரியும் என்றும் விஸ்வவசு ஒரு முறை சோமக் கொடியைத் திருடியதாகவும் பின்னர் அது மீட்கப்பட்டது என்றும் அதர்வ வேதம் கூறும்

8.ஒரு இந்துப் பெண் கல்யாணம் முடிப்பதற்கு முன், அவள் அக்னி, சோம, கந்தர்வருக்கு சொந்தமாக இருந்தாள் என்றும் கூறப்படுகிறது

.9.கந்தர்வருடைய தோற்றம் பற்றியும் வேத மந்திரங்கள் வருணிக்கின்றன.

10.வராஹமிகிரர் எழுதிய ப்ருஹத் சம்ஹிதையில் கந்தர்வர்கள், ஆப்கனிஸ்தான-பாகிஸ்தானம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார். இது சிந்து சமவெளிப்பகுதிக்குள் வந்து விடுகிறது. அவர் சிந்து நதியின் இரு கரைகளில் உள்ள புஸ்கலவதியையும், தக்ஷசீலத்தையும் குறிப்பிடுகிறார்.

11.கந்தர்வரின் நகரங்களை மிகவும் அழகான நகரங்கள் என்று புராணங்கள் வருணிக்கின்றன இந்து சிந்துவெளி நகரங்களைப் பற்றியதாக இருக்கலாம்.

12.கந்தர்வர் பெயர்களில் “சித்ர” என்ற பெயர் மிகவும் அடிபடுகிறது. இந்த மூன்று எழுத்துக்களை சிந்துவெளி முத்திரைகளில் கண்டுபிடித்துவிட்டால அதைப் படிப்பது எளிதாக இருக்கும்.

13.சங்கத் தமிழ் இலக்கியத்தில் கங்கை, இமயம் பற்றி பல குறிப்புகள் உண்டு. ஆனால் சிந்து நதி அல்லது அந்தப் பிரதேசம் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆகவே “தமிழர்-சிந்துவெளி தொடர்பை” ஒதுக்கி வைத்துவிட்டு ஆராய்வது நலம் பயக்கும்.

14.கந்தர்வர்களை சுகந்த மணம் வீசும் ஆடைகளை அணிபவர்களாகவும் வேதங்கள் பாடுகின்றன.

15.சரஸ்வதி நதிதீரத்தில் 12 ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது பிராமணர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர் என்றும் 12 ஆண்டுகளில் அவர்கள் வேதங்களைக்க்கூட மறந்து விட்டனர் என்றும் மஹாபாரதம் கூறும். அதில் ததீசி முனிவரின் மகன் மட்டும்  அங்கேயே தங்கியதால் அவர் பெயர் சரஸ்வத என்றும் அவர் திரும்பிவந்த பிராமணர்களுக்கு வேதம் கற்பித்ததாகவும் கூறும். வெளியேறிய சாரஸ்வத பிராமணர்கள் இப்போது இந்தியாவில மேற்குக் கடற்கரையோர மாநிலங்களில் வசிக்கின்றனர். சிந்துவெளி-சரஸ்வதி தீர நாகரீகம் வறட்சி முதலிய இயற்கைக் காரணங்களால் அழிந்ததற்கு மஹாபாரதத்தில் தடயம் உள்ளது.

நான் முன்னரே ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். சிந்துவெளியில் இன்றைய இந்தியாவைப் போலவே பல்வேறு தரப்பினர் ஒரே நேரத்தில் இருந்திருக்கலாம். ராமனின் மகன்கள் லவனும் குசனும் கந்தர்வர்களிடம் இருந்து சிந்துவெளி நகரங்களைக் கைப்பற்றியதை நான் ராமாயண ஆதாரங்களோடு எழுதினேன். இதை மகாபாரதமும் உறுதி செய்கிறது.

சந்தனுவுக்கும் சத்யவதிக்கும் சித்ராங்கதன் என்று ஒரு மகன் இருந்ததாகவும் அவன் அகந்தையால் அழிந்தான் என்றும் சரஸ்வதி நதிதீரத்தில் கந்தர்வர்களுக்கும் அவனுக்கும் நடந்த யுத்தத்தில் அவனுடைய பெயர் உடைய ஒருவனே அவனைக் கொன்றான் என்றும் மகாபாரத ஆதி பர்வம் கூறும் (1-101). ஆக சிந்துவெளியை கந்தர்வர்கள் ஆட்சிபுரிந்ததை இரு இதிஹாசங்களும் உறுதி செய்கின்றன. மகா பாரதம் ஜெயத்ரதன் என்ற மன்னனையும் சிந்து தேச அரசன் என்றே குறிப்பிடுகிறது.

celestials.jpg (400×300)

மாமல்லபுரத்தில் கந்தர்வர்கள்

சித்ரரதன் யார்?

மஹாபாரதத்தில் சித்ரரதன் பற்றி இரண்டு விஷயங்கள் வருகின்றன. இவன் கந்தர்வ இனத் தலைவன். இவன் தலைமையில் இருந்த படைகள் கௌரவர் படையைத் தாக்கவே கர்ணன் போன்ற பெருந் தலைவர்கள் உயிருக்குப் பயந்து ஓடி விட்டனர். துரியோதனனை கந்தர்வர்கள் கைது செய்தனர். அர்ஜுனன் போய் சமாதானம் பேசி மீட்டு வந்தான். ஏனெனில் சித்ரரதன் அர்ஜுனனின் நண்பன்.

கந்தர்வர்கள், ஒரு குறிப்பிட்டவகை போர்ப் பயிற்சியில் வல்லவர்கள். இசைக் கலையிலும் மன்னர்கள். அவர்களுடைய மனைவியரான அப்சரஸ் என்னும் அழகிகள் நாட்டியக் கலையில் வல்லவர்கள் ஆகவே இந்தியாவில் இசை-நடனக் கலைக்குப் பெயர் கந்தர்வ வேதம். இது ஆய கலைகள் 64-இல் ஒன்று. சிந்து சமவெளியில் கிடைத்த நாட்டியப் பெண்ணின் சிலை, கந்தர்வர் தொடர்பை உறுதி செய்கிறது.

இப்போது ஒரு சந்தேகம் எழும். தேவ லோக கந்தர்வர்களுக்கும் பூலோக கந்தர்வர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை என்னவென்றால் கந்தர்வர் என்னும் சொல்லும் கின்னரர் என்ற சொல்லும் பூவுலகில் வேறு பொருள் உடைத்து. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதிகளும், தாங்கள் கடவுள் அல்லது தேவர்களிடம் தோன்றியதாகக் கூறும். அதாவது தேவலோகம் வேறு, அவர்களுடன் தங்களை அடையாளம் காண விழையும் பூலோக வாசிகள் வேறு. இதனைப் புரிந்து கொண்டு இரு மட்டங்களில் – இரு வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிதல் வேண்டும். தமிழ் மன்னர்கள் கூட சூரியகுலம், சந்திர குலம் என்று சொல்லி தங்களை தேவலோகத்துடன் தொடர்பு படுத்துகின்றனர்.

சிந்து சமவெளி பற்றிய என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:

சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!!  28-10-2014

சிந்து சமவெளி: பிராமணர் தொடர்பு, 10 மே 2014

சிந்து சமவெளியில் பேய் முத்திரை

சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்  Aug.23, 2012

கொடிகள்: சிந்து சமவெளி- எகிப்து இடையே அதிசய ஒற்றுமை

‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13

தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012

சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை(15/10/12)

‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்

சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature

Flags: Indus Valley- Egypt Similarity

Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?

Indra on Elephant Vahana in Indus Valley

Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012

Indus Valley Cities in Ramayana Dec.18, 2012

Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013

Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014

Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013

‘Sex Worship’ in Indus Valley
Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)

The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012

Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14

சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!

indus4

Research Paper written by London swaminathan

Research Article No.1653; Dated 16th February 2015.

சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25  கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆரிய-திராவிடம் என்னும் பிரிவினைக் கண்ணோட்டத்தில் பார்க்காது புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க முடியுமா, புதிரை விடுவிக்க முடியுமா என்று பார்ப்போம் என்பதே.

50 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் –பின்னிஷ் ஆராய்ச்சியா ளர்கள், அதற்கு முன்னால் அதைத் தோண்டி எடுத்தவர்கள் என்ன சொன்னார்களோ அதையே சொல்லி ஆராய்ச்சி உலகத்தையே திசை திருப்பிவிட்டார்கள். இதனால் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை–  சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கம் அந்த முத்திரையில் இருப்பது — தனி நபர்களின் பெயர்களாக இருந்தால்  — அதை எப்படிப் படிப்பது என்ற ஒரு யோஜனைதான்.

InscriptH506

மக் டொனால்ட் (Mac Donald) என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். இதற்கு ஐரிஷ் மொழியில், டொனால்ட் மகன் என்று பொருள். இதே போல ஓ’ஷானஸ்ஸி (o’ Shaughnessy) என்ற பெயரும் அயர்லாந்தில் அதிகம் காணப்படும். ‘ஓ’ என்பது பேரன் என்ற பொருளில் வரும். அதாவது ஷானஸ்ஸியின் பேரன். இதை சிந்து சமவெளியிலும் பார்க்க முடியுமா? முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சிந்து சமவெளியில் பல முத்திரைகள் ஒரு வட்ட வடிவ எழுத்துடன் துவங்கும். அதற்கு அடுத்தாற் போல், ஆங்கிலத்தில் ‘அபாஸ்ட்ரோபி’ (apostrophe) குறி போடுவது போல இரண்டு கோடுகள் வரும். படத்தில் காண்க. இதுவும் அயர்லாந்தில் உள்ளது போல இன்னாரது மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்கும் குறி ஈடாக இருக்கலாம்.

சிந்துவெளி முத்திரைகளில் உள்ள விஷயம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. சிலர் அது, உப்பு, புளி, மிளகு கணக்கு என்று எண்ணுகின்றனர். அதாவது இன்ன அளவு இன்ன பொருள்களை ஏற்றி அனுப்புகிறோம் என்ற (ஏற்றுமதி) விஷயம் என்பர். மற்றும் சிலரோ, இது தனி நபர்களின் பெயர்கள் பொறித்த டோக்கன் (Token) வில்லைகள், ஜப்பானில் இப்படி குடும்பத்திற்குக் குடும்பம் உண்டு என்பர். அது உண்மையானால், நான் எண்ணுவது போல மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்க கோடுகள் பயன்பட்டிருக்கலாம். அல்லது என்ன ஊர் என்பதைச் சொல்லும் குறியாக இருக்கலாம்.

Indus_script.jpg3

இதை உறுதிப் படுத்த சில எடுத்துக் காட்டுகளைத் தருவேன். புறநானூற்றில் “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்று அப்பா பெயருடன் மகன் பெயர் வரும்.

இப்படிப் பல தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லும் வழக்கம் இந்தியாவில்தான் முதலில் இருந்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் புகழ் பெற்ற துதியில் ஐந்து தலை முறைகளின் பெயர்கள், ஒரே ஸ்லோகத்தில் வந்து விடுகிறது!

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்

பரசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்

இதில் வசிஷ்டர், அவருடைய மகன் சக்தி, அவருடைய மகன் பராசரர், அவருடைய மகன் வியாசர், அவருடைய மகன் சுகர் ஆகிய ஐந்து தலைமுறைகளைச் சொல்லி வணங்குகின்றனர்.

இதே போல பிராமணர்கள் மாதப் பிறப்பிலும் அமாவாசையிலும் செய்யும் தர்ப்பணத்தில் தந்தை, தாத்தா (தந்தைக்கு தந்தை), கொள்ளுத் தாத்தா (பிதா, பிதாமஹான், ப்ரபிதா மஹான்)  என்ற மூன்று தலை முறைக்கு நீர்க்கடன் செலுத்துவர்.

ammonite-king.jpgthree generations

இந்த வழக்கம் உலகம் முழுவதும் இருந்தது. அஸ்ஸீரீயாவில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதத்தில் “பாலாவின் மகனான ஆடா”வின் அம்பு (Arrow of Ada, Son of Bala) என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு.1100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. எட்டாம் நூற்றாண்டு மன்னர் ஒருவர் உருவத்தில் அந்த மன்னர், அவருடைய தந்தை மற்றும் தாத்தா பெயர் எழுதப் பட்டுள்ளது.

பெயர் வைக்கும் முறை உலகம் முழுதும் இந்திய முறையை ஒட்டியே இருந்தது. சம்ஸ்கிருதத்தில் ‘சு’மதி, ‘சு’கந்தி, ‘சு’கர்ணன் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும் இந்த “சு” என்பது நல்ல என்று பொருள்படும். இதையே தமிழ்ப் புலவர்களும் ‘நக்’கீரன், ‘நன்’னாகன், ‘நச்’செள்ளை, ‘நப்’பின்னை என்று வைத்துக் கொண்டனர். அதாவது முன் ஒட்டு Pre fix (நல்/ நற்) மூலம் பெயர் பெற்றனர். இதே போல வர்மன், சேன என்பதற்கு இணையாக மாறன், சேரன் என்று பின் ஒட்டுகளையும் (Suffix) பயன்படுத்தினர். வட மொழியில் சு= தமிழில் நல்.

kassite weapon 1275 BCE

அயர்லாந்தில் பெண்கள் “மக்”, “ஓ” என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக “நி” அல்லது “நிக்”  (Ni or Nic) எனப் பயன்படுத்தினர். சுமேரியாவிலும் “என்” என்ற முன் ஒட்டு ஆண்களுக்கும் “நின்”  (En and Nin) என்ற முன்னொட்டு பெண்ளுக்கும் பெயர்களில் வரும்.

அயர்லாந்தில் “மோர்” என்றால் பெரிய, “ஓக்” என்றால் (Mor and Og) இளைய (ஜூனியர்) என்பது பெயர்களில் ஒட்டிக் கொண்டுவரும். இதுவும் சம்ஸ்கிருத வழக்கே. தமிழில் இதை “முது”கண்ணன், “முது”கூத்தன் என்றும் “இள”நாகன், “இள”ங்கீரன் என்றும் பயன்படுதுவதைக் காணலாம். சம்ஸ்கிருதத்தில் மஹா மூலன், மஹா சாஸ்தா என்பர். இது சங்க இலக்கியத்தில் தமிழில் “மா”மூலன், “மா”சாத்தன் என (புறநானூற்றில்) வரும். சுருங்கச் சொல்லின் சம்ஸ்கிருதப் பெயர்களில் உள்ள முன் ஒட்டுகளை (Prefix) சுமேரியா, அயர்லாந்து, சங்கத் தமிழில் காணாலாம். உலகில் மிகப் பழைய இலக்கியமான வேதங்களில் இப்படிப் பெயர்கள் காண ப்படுவதால் நாமே உலகிற்கு இதைக் கற்றுத தந்தோம் என்றால் அது மிகையாகாது.

indus1

உலக மொழிகள் எல்லாம் தமிழில் இருந்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் சென்றனவே என்றும், அவ்விரு மொழிகளும் பாரத மண்ணில், பாரத சிந்தனையில் பிறந்தவை என்றும் நான் இதே பிளாக்-கில் ஆய்வுக் கட்டுரை எழுதிவிட்டேன். நான் சொல்லும் மறுக்க முடியாத ஆதாரம் “சந்தி (புணர்ச்சி)” விதிகள் ஆகும். உலகில் இரண்டே மொழிகளில்தான் அது நடை முறையில் உள்ளது- இலக்கண விதிகளில் உள்ளது. சம்ஸ்கிருதமும் தமிழும் ஒரே மூலத்தில் உதித்தவை என்ற நம் முன்னோர் கருத்து மேல் நாட்டாரின் மொழிக் கொள்கைகளைத் தகர்த்து எறியும். இதற்கு சந்தி விதிகள் ஒன்றே போதும். உலகில் வேறு எங்காவது கொஞ்சம் மிச்சம் சொச்சம் சந்தி விதிகள் இருக்கிறதென்றால் அவைகள் எல்லாம் சம்ஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய மொழிகளாக இருக்கும் (பிரெஞ்ச், லத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் கொஞ்சம் உண்டு. அவை எல்லாம் சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே என்பதை எல்லோரும் ஏற்பர்).

inscription

ஆகவே இந்த மொழிக் கொள்கைகளின் பின்னணியில் சிந்து வெளி முத்திரைகளை அணுகினால், ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) இல்லாமலேயே சிந்துவெளி முத்திரைகளைப் படித்து விடலாம்.

லண்டனுக்கு வரும் சொந்தக் காரர்களையும் நண்பர்களையும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் நான் ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) பக்கத்தில் போய் ஒருமுறை பெருமூச்சுவிட்டு வருவேன். “இறைவா! எகிப்திய ஹைரோகிளிபிக்ஸைப் படிக்க இப்படி ஒரு மும்மொழிக் கல்வெட்டைக் கொடுத்தாயே! எங்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க ஒரு இருமொழிக் கல்வெட்டையாவது கொடுக்கக்கூடாதா! அதையும் என் கைகளில் கொடுத்தால் இலக்கிய நோபல் பரிசையே வாங்கிவிடுவேனே! என்று ஏங்குவேன்.

rosettastone-detail

Rosetta Stone in Ancient Greek, Demotic and Hieroglyphs, displayed in British Museum,London.

முடிவுரை: சிந்துவெளி முத்திரைகளில் Personal Name பெர்ஸனல் நேம்- கள் இருந்தால் ஐரிஷ் மொழி Formula பார்மூலாவை apply ளை செய்யுங்கள். உலகின் பழைய மொழிகள் எல்லாம்,ஆண்-பெண் பெயர்களில் முன் ஒட்டைப் பயன்படுத்டுவது சம்ஸ்கிருதத்தில் உள்ளது போலவே உள்ளது. சங்கத் தமிழ் புலவர் பெயர்களும் அப்படியே உள்ளன. ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்கள் பெயர்கள் என்று ஒன்று இருக்குமானால் அதற்கும் இதே பார்முலாவை Formula பயன்படுத்துங்கள்.

வாழ்க தமிழ் (வலக் கண்)! வளர்க சம்ஸ்கிருதம் (இடக் கண்)!!

swami_48@yahoo.com

சிந்து சமவெளி மன்னர்கள் பெயர் எப்படி இருக்கும்?

313183-mahabharat.jpg

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1393; தேதி 6 நவம்பர், 2014.

சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் பார்த்து இது திராவிட வகை மொழியாக இருக்கலாம் என்று பின்லாந்து, சோவியத் ஆய்வாளர் கள் சொன்னார்கள். இதுவரை அது ருசுப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே இது பற்றிக் கருத்துச் சொன்ன அறிஞர்களும் குழம்பிப்போய் திராவிட, ஆரிய சகதியில் சிக்கி மாற்றி மாற்றி உளறிக்கொட்டி கிளறி மூடி வருகிறார்கள். எல்லோரும் சாண் ஏறினால் முழம் சறுக்கி விழும் ஆராய்ச்சி இது!! இத்தனை அதி நவீன வசதிகள் இருந்தும் ஏன் சிந்து வெளி எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை?
ஏன் என்றால் “முதல் கோணல், முற்றும் கோணல்” — என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. சின்னக் குழந்தைகளிடம் ஒரு முறை இருட்டில் காற்றில் ஆடும் தென்னை மரத்தைக் காட்டி, அது பேய், தோட்டத்துக்குள் போகாதே என்று அம்மா சொல்லிவிட்டால் அது அடி மனதில் பதிந்து வாழ்நாள் முழுதும் அக் குழந்தை — பெரியவன் ஆன பின்னரும் –— பயப்படும். இது போல வெளிநாட்டில் இருந்து மதத்தையும் ஆட்சியையும் நிலைநாட்ட வந்த சிலர் இதற்கும் ஆரிய—திராவிடப் பேய் வர்ணத்தைப் பூசிவிட்டார்கள். நம்மவர்கள் அதில் சிக்கி சாண் ஏறி முழம் சறுக்கி விழுகிறார்கள்.

நாளைய தினம் சிந்துவெளி எழுத்துக்களை யாராவது படித்துவிட்டாலும் அதில் ராமாயண, மஹாபாரத, வேத, புராண விஷயங்கள் இருக்கும். அப்போது பல அறிஞர்கள், அது எல்லாம் திராவிடர்களிடமிருந்து ரிக்வேத ரிஷி முனிவர்கள் கற்றுக் கொண்டது என்று சொல்லி, “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை”– என்பர்!

யாரவது ஒருவர் வடமொழியையும் தமிழ் மொழியையும் படிக்காமல் இந்தியா பற்றி எழுத வந்தால் அவர்களை அரைகுறை என்று அறியுங்கள். வடமொழி, தென் மொழியில் உள்ள விஷயங்களை திரித்து எழுதினால் அவர்களை குதர்க்கவாதிகள் என்றும் பி.எச்டி. ஆய்வுப்பட்டத்துக்காக பொய் சொல்லுகிறார்கள் — அல்லது உலக …………………………….. மகாநாட்டில் பொன்னாடைக்காக இப்படிச் சொல்லுகிறார்கள் என்று ஒதுக்கிவிடுங்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், லண்டன் பல்கலைக் கழகத்தில் பேச வந்த அஸ்கோ பர்போலாவிடம் Asko Parpola ஒரு சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய Deciphering the Indus Script “டிசைபரிங் தி இண்டஸ் ஸ்கிரிப்ட்” படித்தேன். அதற்குப் பின் எழுந்த ஆய்வு பற்றி இன்றைய சொற்பொழிவில் எதுவும் புதிதாகச் சொல்ல வில்லையே என்று கேட்டேன். “அதற்குப் பின் ஒன்றும் புதிது இல்லை” — என்றார். அதாவது இந்த ஆய்வு தேக்க நிலையை அடைந்துவிட்டது. நிற்க.

சிந்து சமவெளியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு யாரோ ஆட்சி செய்துள்ளனர். அதுவும் பல நகரங்களில் பலர் ஆட்சி செய்திருக்கவேண்டும். பழைய சுமேரிய, இந்திய நாகரீக வரலாற்றைப் பார்க்கையில் இது தெரிகிறது. இந்தியாவில் 56 தேச மன்னர்கள் ஆண்டது போல சுமேரியா, கிரேக்கத்தில் பல நகர அரசுகள் இருந்தன. அப்படியானால் 20 ஆண்டுக்கு ஒரு மன்னர் வீதம் குறைந்தது 75 மன்னர்கள் சிந்து வெளியில் ஒரு நகரத்தை மட்டும் ஆண்டிருக்க வேண்டும். ஹரப்பாவுக்கும் (பாஞ்சாலம்), மொஹஞ்சதாரோவுக்கும் (சிந்து) தனித்தனி அரசர் என்றால் இன்னும் இரு மடங்கோ மும்மடங்கோ மன்னர்கள் இருந்திருப்பர். அவர்கள் பெயர் என்ன?

Krishna-Arjuna

மாற வர்மன், சடைய வர்மன்?
“மஹாபாரதம் யார்? எவர்?” (சுபாஷ் மஜூம்தார் தொகுப்பு) — என்ற ஆங்கில நூலைப் பல ஆண்டுகளுக்கு முன் படித்தபோது ஒரு ஆராய்ச்சி செய்தேன். எந்தப் பெயர் அதிகமாக பின் ஒட்டாக வருகிறது? என்று பார்த்தேன். வர்மன், கேது, சேனன், தத்தன், பதி, வதி, மதி ( பதி, வதி, மதி என்பது பற்றிய எனது ஆய்வுக் கட்டுரையையும் படிக்க வேண்டுகிறேன் ) எனப் பல பெயர்கள் வந்தாலும். இதில் மிகவும் அதிசயம்!! வேத காலம் முதல் சமீப மன்னர் காலம் வரை — அம்புலிமாமா கதைகள், வேதாளம்-விக்ரமாதித்தன் கதைகள், கதா சரித் சாகர/கதைக் கடல் கதைகள் வரை — சில பெயர்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. குறிப்பாக வர்மன் என்ற பெயர் இந்தியா மட்டுமின்றி தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகள் அனைத்திலும் காணப்படுகிறது.

ஆக என் கருத்து — சிந்து வெளி மன்னர்கள் சேனன், கேது (கொடி), வர்மன், தேவன், ரதன் என்ற பெயரிலேயே முடிந்திருக்க வேண்டும். குடும்பப்பெயர்கள் பதி, வதி, மதி என்ற பெயரிலேயே முடிந்திருக்க வேண்டும். அப்பர் வீட்டிலும், காரைக்கால் அம்மையார் விட்டிலும் திலக வதி, புனித வதி இருந்தது பற்றி எனது ஆய்வுக்கட்டுரையில் சொல்லிவிட்டேன். இது வேத கால சரஸ் வதி யில் துவங்கியது.

cheran flag

சேனன், கேது, தத்த, அயன
உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் பதி, வதி, மதி, சேன, கேது ரத ஆகியவற்றில் முடியும் பெயர்கள் நிறைய இருக்கின்றன ( காண்க: வேதிக் இண்டெக்ஸ், கீத் & மக்டொனல்)
நம்மில் யாரவது ஒருவர் இந்த பின் ஒட்டுப் பெயர்களை சிந்து சம்வெளி எழுத்துக்களில் கண்டுபிடித்துவிட்டால் புதிர் விட்டுப் போகும்.

இதோ மஹா பாரதப் பெயர் பட்டியல் ( இது முழு ஆய்வு அல்ல. ஒரு சாம்பிள் மட்டுமே):–

சேன (ன்)– என்ற பெயரில் முடிபவை; 24 எடுத்துக் காட்டு:– பீம சேன, சித்ர சேன, த்யூமட சேன
வர்ம (ன்) – என்ற பெயரில் முடிபவை;13 எடுத்துக் காட்டு:– கேது வர்மன், க்ருத வர்மன்
கேது – என்ற பெயரில் முடிபவை; 9 எடுத்துக் காட்டு:– ஸ்வேத கேது, கேது என்றால் கொடி என அர்த்தம்.
தத்த (ன்) – என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– பக தத்த, வ்யாக்ரதத்த
பதி+வதி– என்ற பெயரில் முடிபவை;13+3 எடுத்துக் காட்டு:– மாத்ரவதி, மாயாவதி,
த்யூம (ன்)– என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– த்ருஷ்டத்யும்ன
ரத (ன்)– என்ற பெயரில் முடிபவை; எடுத்துக் காட்டு:– ஜெயத்ரத, பகீரத,
ஆயுத / யுத்த (ன்) – என்ற பெயரில் முடிபவை; 3 எடுத்துக் காட்டு:–ஹலாயுத
அஸ்வ (ன்) – என்ற பெயரில் முடிபவை; 5 எடுத்துக் காட்டு:–பிருஹதஸ்வ
மானன் – என்ற பெயரில் முடிபவை; 5 எடுத்துக் காட்டு:–அன்சுமான
வான (ன்) – என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– ருமன்வான
தேவ – 8; சஹதேவ
ஜய – 6
வசு -5
இப்படி பல பெயர்களை வைத்து ஆராயலாம். ரிக் வேத கால ரிஷிகளின் பெயரில் அயன என்று முடிவோர் பெயர்களே அதிகம். பிற்காலத்தில் இது அருகிப் போய்விட்டது.

கால வாரியாக, புத்தக வாரியாக பெயர்களைத் தொகுத்து ஒப்பீட்டால் பல விடுகதைகளுக்கு விடை கிடைக்கும்.
–சுபம்–

என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)

‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
பதி – வதி — மதி சிந்து சமவெளியில் உண்டா? அக்டோபர் 20, 2014
ரிக்வேதத்தில் ஹரப்பா நகரம் – நம்பர் 1. 2014
சிந்துசமவெளி பாடகர்கள்: ஹாஹா ஹூஹூ — அக்டோபர் 2014
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

TAMIL-Sindhu samaveli- piramanar thotarpu ((Post No 1033, Date 10-5-14)
Hariyupia-harappa posted 30-10-14
Indus Valley-Brahmin Connection (Post No 1034, Date 10-5-14)
Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature
Flags: Indus Valley- Egypt Similarity
Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?
Indra on Elephant Vahana in Indus Valley
Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012
Indus Valley Cities in Ramayana Dec.18, 2012
Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
‘Sex Worship’ in Indus Valley

Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)
The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012
Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14
Indus Valley Civilization- New Approach , posted on May 29, 2011

contact swami_48@yahoo.com

ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்?

harappa2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014.

உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். வியாசர் என்பவர் இதைத் தொகுத்தார். 5200 ஆண்டுகளுக்கு முன் வேதங்கள் அளவுகடந்து பெருகிவிட்டன. யார் எதைப் படிப்பது? எப்படி மனனம் செய்வது? கடல் போலப் பரந்துவிட்டதே? என்று கவலைப்பட்ட வியாசர் வேதத் துதிப்பாடல்களை நான்காகப் பிரித்து நாலு சிஷ்யர்களைக் கூப்பீட்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் பரப்புங்கள் என்றார். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம் என்று உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது. அதில் பத்து மண்டலங்கள் உள்ளன. ஒன்று, பத்து ஆகிய மண்டலம் தவிர ஏனையவை ஒவ்வொரு ரிஷியின் குடும்பத்தினர் பாடிய பாடல்களாகும்.

ஆறாவது மண்டலம் பாரத்வாஜ ரிஷியின் மண்டலம் ஆகும். இதில் 27-ஆவது துதியில் ஹரியூபிய என்னும் ஒரு சொல் வருகிறது. வழக்கம் போல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இங்கேயும் உளறிக்கொட்டி கிளறி மூடியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதியதாலும், அப்போது பிரிட்டிஷ்காரகள் நம் நாட்டை ஆண்டதாலும் நம் ஊர் மக்குகள், அசடுகள் அவர்கள் சொன்னதை எல்லாம் வேதத்துக்கு மேலான வேதம் என்று நம்பிவிட்டன!!
நல்ல வேளை! இந்துக்கள் செய்த பாக்கியம்! அத்தனை வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் ஆளுக்கு ஒன்றைத் தத்துப் பித்து என்று எழுதிவிட்டனர். எல்லோரும் ஒரே கருத்தை எழுதி இருந்தால் இவ்வளவு நேரம் இந்துமதத்தையே “த்வம்சம்” செது அழித்திருப்பர். ஆளாளுக்கு ஒவ்வொரு வகையில் உளறியதால் நம் மதம் பிழைத்தது. அவர்கள் சொன்ன ஒரு கருத்து ஹரியூபிய என்பது ஹரப்பா என்பதாகும்.

கிழக்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரம் இருக்கிறது. இப்போது இது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. இதுவும் மொஹஞ்சதாரோ என்னும் நகரமும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய இரண்டு நகரங்கள் ஆகும். உலகம் வியக்கும் செங்கற் கட்டிடங்களையும் அருமையான திட்டமிடப்பட்ட நகர அமைப்பையும் உடையன இவ்விரு ஊர்களும்.

Rigvedic_geography

நகரமா? நதியா?

ரிக்வேத சூக்தத்தில் வரும் ஹரியூபிய என்ற சொல்லை நதி என்றும் ஊர்ப்பெயர் என்றும் சொல்லுவர் சிலர். இன்னொருவர் “ஐரோப்பா” என்பதே ஹரியூப்பியவில் இருந்து என்றும் சொல்லி இருக்கிறார். உளறுவதற்கு வெள்ளைக்காரகள் மட்டும்தான் உரிமை வாங்கி இருக்கிறார்களா? நாங்கள் உளறக்கூடாதா? என்று இப்போது “பிளாக்:குகள் எழுதுவோரிடயே ஒரு போட்டி!! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்; பிளாக் எழுதுபவன் எல்லாம் அறிஞன் என்று ஆகிவிட்டது. நிற்க.

லுட்விக் என்பவர் இதை யாவ்யாவதி நதியின் மேல் உள்ள நகரம் என்று சொல்வதாக வேதங்களுக்கு இண்டெக்ஸ் தயாரித்த கீத், மக் டொனல் எழுதி வைத்துள்ளனர்.
ஹில்பிராண்ட் என்பவர் குரும் நதியின் உபநதி இது என்று கூறுகிறார்.
வேதத்துக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் இதை நதி என்பார்.

இந்தத் துதியை மொழி பெயர்த்த கிரிப்பித் என்பவர், அபயவர்த்தின் சாயமான என்ற மன்னன் விரிச்சிவன் என்பவர்களைத் தோற்கடித்த இடம் என்கிறார். ‘’ஹரியூப’’ என்றால் பொன் மயமான யூப தூண்கள் என்று பொருள். ஆகவே ஹரி யூப என்பது வேத கால நகரம் என்ற பொருள் தொனிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்திலேயே யூப நெடுந்தூண் என்று சம்ஸ்கிருதச் சொல் பயன் படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழ் மன்னர்கள் யாக யக்ஞங்களை செய்து புகழடைந்தனர்.
harppa mohanjo

போர்னியோ தீவில் (இந்தோநேசியா) மனிதர்கள் காலடி படாத காடு என்று நினைத்த அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் என்பவனின் யூப நெடுந்தூன் கல்வெட்டுடன் கிடைத்ததை காஞ்சிப் பெரியவர் 1932 சென்னைச் சொற்பொழிவுகளில் குறிப்பீட்டுள்ளார். ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது.

யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் தூண் ஆகும். சங்க இலக்கியத்தில் குறைந்தது நான்கு இடங்களில் ரிக்வேதத்தில் பயன்படுத்தப்பட்ட அதே யூப என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், கரிகால் பெருவளத்தானும், பெருநற்கிள்ளியும் யாகங்கள் செய்து புகழ் அடைந்ததை சங்க இலக்கியப் பாடல்கள் விதந்து ஓதும். யூப என்ற சம்ஸ்கிருத சொல் வழங்கும் நான்கு பாடல்கள்:—
புறநானூறு- 15, 224
மதுரைக்காஞ்சி – வரி 27
பதிற்றுப்பத்து – 67–10
Samudra-4787v-280.50

Samudra Gupta’s gold coin with Yupa post near the Horse.

ஆக, ஹரியூப்பிய என்பது ஹரப்பாதான் என்று நம்புவோர் பொன் மயமான ஹரி+யூப நெடுந்தூண் நடப்பட்ட நகரம்தான் அது என்பதை ஒப்புக் கொண்டதாக அர்த்தம். அங்கே நடந்த யுத்தமும் ஒரு மன்னன் மற்றொரு மன்னனைத் தாக்கும் சாதாரணப் போராக இருந்திருக்கலாம். இனப் போர், ஆரிய -திராவிடப் போர் என்று பொருள் கொள்ளத் தேவை இல்லை. உலகிலேயே நீண்ட காலம் போரிட்ட — தங்களுக்குள்ளேயே போரிட்ட —- சேர, சோழ பாண்டியர்களுக்கு உள்ளேயே போரிட்ட — 1500 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் போரிட்ட – இனம் தமிழ் இனம் ஒன்றுதான். அவர்கள் பேசிய மொழி தமிழ்— அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் இந்துக் கடவுளர்- அவர்கள் பின்பற்றிய பண்பாடு பாரதப் பண்பாடு – அப்படி இருந்தும் முஸ்லீம்களும், வெள்ளைக்காரர்களும் வரும் வரை போரிட்டது தமிழ் இனம் — ஆகவே ரிக் வேத கால போர்களை இனப் பூசல்கள் என்று வருணிப்பது மடமை!!

ujjain333
Ujjain coin with Yupa post

என்னுடைய முந்தைய சிந்துவெளிக் கட்டுரைகள்:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
பதி – வதி – மதி: சிந்து சமவெளியில் உண்டா? 20-10-2014
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை
(15/10/12)‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு (Post No 1033, Date 10-5-14)

harappa
Harappa buildings
Contact swami_48@yahoo.com

பதி – வதி – மதி : சிந்து சமவெளியில் உண்டா?

bull-seal-4

Look at the “U” shaped letters

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1358; தேதி அக்டோபர் 20, 2014.

மிகவும் அதிசயமான ஒரு விஷயம்!! இந்துக்கள் பெயரிடும் முறையாகும்!! எனது நாற்பது ஆண்டு ஆராய்ச்சியில் கண்ட சில விஷயங்களைச் சுருக்கமாகத் தருகிறேன். ஆதிகாலம் முதல் இன்றுவரை இந்துக்கள் தனது பெயர்களில் பின்னொட்டு (விகுதி) களாக ‘’பதி – வதி – மதி’’ —களைப் பயன்படுத்துகின்றனர். இந்தோநேஷியாவின் முஸ்லீம் ஜனாதி’’பதி’’யாக இருந்த பெண் பெயர் கூட மேக’’வதி’’ சுகர்ண புத்ரீ!! தூய சம்ஸ்கிருதம்.

காரைக்கால் அம்மையாரின் பெயர் புனித’’வதி’’. அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலக’’வதி’’. இவர்கள் இருவரும் பிராமணர்கள் அல்ல. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைஸ்ய குல பெண்ணான காரைக்கால் அம்மையார் வீட்டிலும் அதற்கு முன் பிறந்த வையஸ்குல கோபாலன் (சிலப்பதிகார கோவலன்) பெயர்களும் சம்ஸ்கிருதமே. சங்க இலக்கியப் புலவர்களில் கபில, தாமோதர, பரண, கேசவ, கௌசிக, விஷ்ணுதாச (விண்ணந்தாயன்), கண்ணதாச (தாயங்கண்ணன்), பிரம்மதத்த, வால்மீகி என்று ஏராளமான சம்ஸ்கிருதப் பெயர்களைக் காண்கிறோம்.

ஆண்கள் பெயர்கள் எல்லாம் ‘’பதி’’ யில் முடியும்.பெண்கள் பெயர் எல்லாம் ‘’மதி’’ அல்லது ‘’வதி’’ யில் முடியும். எடுத்துக்காட்டு:–

பசு — பதி
பார்– வதி
இந்து — மதி (வளர் மதி)

முதலில் ஆண்கள் பெயர்களை எடுத்துக் கொள்வோம். இந்தப் பெயர்கள் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே இருக்கின்றன. இந்துக்களை கடித்துக் குதறுவதைப் பொழுது போக்காகக் கொண்ட “”அறிஞர்களும்”” இப்பொழுது ரிக் வேதத்தின் காலத்தை கி.மு. 1700 என்று ஒப்புக் கொண்டுவிட்டனர். அப்படியானால் சிந்து சமவெளியிலும் இந்தப் பெயர்கள் இருக்கதானே வேண்டும்? அப்படி இருக்குமானால் அந்த எழுத்தின் வடிவம் எப்படி இருக்கும்? என்று ஆராய்வோம்.

ப்ருஹஸ் –பதி, வாசஸ் – பதி, த்ரிதஸ பதி, பசு பதி, வனஸ் பதி முதலிய பல பதி–க்கள் வேதங்களில் வருகின்றன. நம்முடைய நண்பர்கள் பெயர்களில் இப்படி நூற்றுக் கணக்கான ‘’பதி’’–க்கள் கட்டாயம் இருப்பர். சில எடுத்துக் காட்டுகள்:

லெட்சுமி பதி (தினமலர் ஆசிரியர்)
உமா பதி
பூ பதி (டென்னிஸ் வீரர்)
கண பதி
தன பதி செட்டியார்
அபாம் பதி (வருணன்)
ஜனாதி – பதி
அதி — பதி

Indus_seal_impression

பெண்கள் பெயர்களைப் பார்த்தால் அவை ‘’வதி’’ அல்லது ‘’மதி’’ யில் முடியும் — சில எடுத்துக் காட்டுகள்:

மது மதி, இந்து மதி, வசு மதி, வளர் மதி, சாரு மதி — இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

மஹாபரதத்தில் வரும் மீனவப் பெண்ணின் பெயர் கூட சத்ய – வதி! ((ஆரிய—திராவிட வாதம் பொய் என்பதற்கு இப்படிப் போகிற போக்கில் நான் ஆயிரம் உதாரணங்களைக் கொடுக்க முடியும். அசுரர்கள், ராக்ஷசர்கள் என்பதெலாம் சம்ஸ்கிருதம், அவர்கள் பெயர்களும் சம்ஸ்கிருதம்))
அகத்தியர் மணந்த நாக கன்னிகை பெயர் (வியட்நாம் பெண்) யசோவதி. பார் —வதியை எல்லோருக்கும் தெரியும். பிரபல கணித மேதை லீலா —வதியையும் தெரிந்திருக்கும் (பாஸ்கராச்சார்யார் மகள்).

நகரங்களுக்கும் நதிகளுக்கும் , நல்ல குணங்களுக்கும் இந்துக்கள் பெண்கள் பெயர்களையே சூட்டுவார்கள் (பெண்கள் வாழ்க முதலிய பல கட்டுரைகளில் இது பற்றி எழுதி விட்டேன்)

சபர் மதி, ஷரா வதி, வேக வதி என்பன சில ஆறுகளின் பெயர்கள்.
இந்திரனின் தலை நகர் அமரா வதி
நாகர்களின் தலை நகர் போக வதி

இப்படி நிறைய நதிகள், நகரங்கள் இந்தியாவில் இன்றும் உண்டு. ஆந்திரத்தில் உள்ள புத்தமதச் சிற்பம் உடைய அமரா வதி, குஜராத்தின் பழைய தலை நகர் கர்னா வதி (இப்பொழுதைய பெயர் ஆமதாபாத்).

உண்மையில் மொழியியல் அறிஞர்களுக்குத் தெரியும் ப = ம = வ ஆகிய எழுத்துக்கள் இடம் மாறும் என்பது.

தமிழில் வங்கம் (படகு, கப்பல்) என்றால் வங்காளத்தில் வசிப்போர் பங்கம் என்பர்.
வேதத்தில் ‘’வ்ருக’’ என்றால் பிற்கால சம்ஸ்கிருதத்தில் அது ‘’ம்ருக’’ ஆகும். இது போல நூற்றுக் கணகான சொற்கள் இருக்கின்றன. முற்காலத்தில் இதை மாறி மாறி பயன்படுத்தி இருப்பர். பிற்காலத்தில் இலக்கணம் வகுத்து முறைப்படுத்தி இருப்பர்.

indus seal2

வேதகாலம் முதல் இந்துக்கள் பயன்படுத்தும் இந்த வதி – பதி – மதி சிந்து சமவெளியில் இருந்தால்…………. இருந்திருந்தால்…………. எப்படி இருக்கும்? சிந்து சமவெளி முத்திரைகளில் “U” பல வகைகளில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதைப் பாதம் என்று கொண்டால் பத, பதி என்ற ஒலியை உருவாக்கும். அதற்குள்ளும் வெளியேயும் வெவ்வேறு குறியீடுகளைப் பொறிக்கையில் அதற்குத்தக புதிய ஒலிகளும் வரும் என்று ஊகிக்கலாம். இது ஒரு ஊகமே.

“U” இந்த வடிவத்தைச் சிலர், அளக்கும் படி (லிட்டர்) என்றும் இன்னும் சிலர் இது மரியாதைக்குரிய விகுதி/ பின்னொட்டுச் சொல் (கள், ஆர்) என்றும் கூறி இருக்கிறார்கள். (ஆங்கில எழுத்தான யு போன்றது).
ARV_INDUS_12484f

சிந்து சமவெளி எழுத்துக்களை யாரேனும் முழுக்க முழுக்க புதிய கோணத்தில் ஆராய்ந்தால்தான் அதன் உண்மைப் பொருள் விளங்கும். மற்ற எழுத்துக்களுக்குக் கிடைத்தது போன்ற இரு மொழிக் கல்வெட்டுகள் கிடைக்காததால் கம்யூட்டரில் போட்ட பின்னரும் இதன் பொருள் தெரியவில்லை!! சிலர் ‘’எண்’’ என்பர், மற்றும் சிலர் ‘’எழுத்து’’ என்பர். இன்னும் சில அமெரிக்கர் இது எழுத்தும் அல்ல, எண்ணும் அல்ல, சுத்தக் ‘’கிறுக்கல்கள்/படங்கள்’’ என்றும் திருவாய் மலர்ந்தருளுவர்!! இதற்கெல்லாம் மூல காரணம் —- ஆரம்ப காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்தோர், ஆரிய—திராவிட விஷத்தை இதிலும் தூவிவிட்டனர். அதனால் இன்று வரை அறிவு என்னும் மரமோ, பழமோ அங்கே விளையவில்லை!!

i_tiger_seal

contact swami_48@yahoo.com

ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்

Swastik_on_head

 

Brahmin boy with Swastika on head.

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

 

‘’சாதிகள் இல்லையடி பாப்பா!—குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!’’ (பாரதி)

 

6 கோடி பேரைக் கொன்ற ஆரிய இனவெறிக் கொள்கை:

இந்து மதத்தினரின் புனிதச் சின்னம் ஸ்வஸ்திகா. ‘’ஸ்வஸ்தி’’ என்றால் மங்களம் உண்டாகட்டும் என்பது பொருள். ஆயிரக் கணக்கான தமிழ் கல்வெட்டுகள் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் தான் துவங்கும். சிந்து சமவெளியில் நிறைய ஸ்வஸ்திகா முத்திரைகள் கிடைத்துள்ளன. வட இந்திய பிராமணர்கள் பூணுல் போடுகையில் சிறு பிள்ளைகளின் தலையை மொட்டை அடித்து தலையில் இந்த சின்னத்தை வரைவார்கள். வணிகர்கள் கடையில் லாபம் தரும் இந்த சின்னத்தை வரைவார்கள்.( இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா, அவருடைய பெண் கல்யாணத்துக்கு அடித்த பத்திரிகையில் பெரிய ஸ்வஸ்திகா சின்னம் இருந்தது. அவர், எனது தந்தைக்கு அனுப்பியதை வெகு காலம் வரை நான் பாதுகாத்து வைத்திருந்தேன்).

 

ஸ்வஸ்திகாவை ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் தனது கொடியில் பயன்படுத்தும் வரை, மேலை நாட்டிலும் இதற்கு நல்ல பெயரே இருந்தது. ஐரோப்பாவில் 10,000 ஆண்டுப் பழமையான தொல் பொருட் துறை சின்னங்களிலும் இந்த சின்னம் காணப்படுகிறது. இதை சூரியனைக் குறிக்கும் சின்னம் என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.

swastika stamps

Swastika stamps issued by Germany under Hitler

ஆரிய திராவிடக் கொள்கை என்னும் விஷப் பாம்பை வளர்த்தவர்கள் வெள்ளைக்காரகள். அந்த விஷப் பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தவர்களை அதுவே கொன்றது என்றால் மிகையல்ல. ஆறு கோடிப் பேரை பலிவாங்கிய இரண்டாவது உலகப் போருக்கு ஆரிய இனவாதக் கொள்கைதான் காரணம் என்பதை உலகம் அறியும். ஆறு லட்சம் யூதர்களும், ஐந்து லட்சம் ‘’ஹிந்து ஜிப்சி’’ இனத்தவர்களும், பல்லாயிரகணக்கான இந்திய சிப்பாய்களும் இந்த ஆறு கோடித் தியாகிகளில் அடங்குவர்.

 

 

ஹிட்லர் தான் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ என்னும் சுய சரிதை டயரியில் ஆரிய இன வெறிக் கொள்கையை விளக்கி, உலகில் தூய ஆரியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்றும் அவர்கள் மற்றவர்களுடன் கலந்து பிள்ளைகளைப் பெற்றதே ஜெர்மானிய வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் எழுதியுள்ளார். (ஆங்கிலக் கட்டுரையில் ஹிட்லரின் சொற்களை அப்படியே கொடுத்துள்ளேன்).

 

அவர் யூத மதத்தினரை வெறுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியின் வீழ்ச்சிக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் அவர்களே காரணம் என்றும் நினைத்ததோடு அவர்கள் ஆரியரால்லாத தாழ்ந்த இனத்தினர் என்றும் கருதினார். வெள்ளைக்கார்கள் இந்தியாவில் விதைத்த அதே விஷ வித்தை ஐரோப்பாவிலும் விதைத்தனர். ஆறு கோடிப் பேரை அந்த இன வெறிக் கொள்கை பலி வாங்கிய பின்னர், அந்த கொள்கையைப் புதைத்து அதன் மேல் கல்லறை கட்டி விட்டனர். ஆனால் இந்தியாவில் இதை அரசியல்வாதிகள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவேளை இங்கும் ஆறு கோடிப் பேரை இது பலி வாங்கினால்தான் கல்லரை கட்டுவார்களோ என்னவோ!

 

ஹிட்லரின் தீப்பொறி கக்கும் பேச்சுகளும் ,நாஜி கட்சியினரின் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆரிய இனவெறிக் கொகையையும் யூத மத எதிர்ப்புக் கொள்கைகளையும் வரி வரியாக விளக்குகின்றன. ஹிட்லர் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ புத்தகத்தில் ‘’ஆரிய இனம்’’ என்ற ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது.

 

IndusValleySeals_swastikas

Indus Seals with Swastika

 

 

தமிழ்ச் சங்க இலக்கியத்திலும் வேத இதிஹாச புராணங்களிலும் இல்லாத, வெள்ளைதோல்—கருப்புத் தோல் இனக் கொள்கை இந்தியாவை மெதுவாகக் கொல்லும் விஷம் என்பது வெள்ளைகாரனுக்குத் தெரியும். நெப்போலியனை தனித் தீவில் வைத்து உணவில் ஆர்சனிக் என்னும் ரசாயனத்தைக் கலந்து, பிரிட்டிஷ்காரகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். இப்போது நெப்போலியன் தலைமுடியை ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. அதுபோல ஆரிய திராவிட இனவெறிக் கொள்கை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதத்தை ஒழித்துகட்டவும் இந்தியாவைத் தகர்த்து அழிக்கவும் அவர்கள் திட்டம் போட்டதை இப்பொது மக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

 

சிந்து சமவெளி நாகரீகம் இந்து மத நாகரீகம் என்பதையும் அது அழிந்ததற்கு சரஸ்வதி நதியின் போக்கே காரணம் என்பதும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கிருஷ்ணரின் துவாரகை ‘சுனாமி’-யில் அழிந்தது பற்றி மஹா பாரதமும் புராணாங்களும் கூறியது உண்மைதான் என்பதும் கடலடித் தொல் பொருட் துறை அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 

திராவிடர்களை சிந்து சமவெளியிலிருந்து ஓடிவந்த ‘’கோழைகள்’’ என்றும் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்த ‘’வந்தேறு குடியினர்’’ என்றும் வெள்ளைகாரன் எழுதிய சரித்திரம் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டன. சங்க இலக்கியமும் புராணங்களும் கூறும் 18 குடிகளே இந்தியாவின் பூர்வீகக் குடிகள் என்பதும் அது தோலின் நிறத்தின் அடிப்படையிலன்றி மக்களின் வாழ்க்கை முறை, குணங்களின்  அடிப்படையில் அமைந்தது என்றும் எனது 600–க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளில் விளக்கி வந்துள்ளேன். மேலும் வரும்……..

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

Hitler about SWASTIKA

In 1920, Adolf Hitler decided that the Nazi Party needed its own insignia and flag. For Hitler, the new flag had to be “a symbol of our own struggle” as well as “highly effective as a poster.” (Mein Kampf, pg. 495)

On August 7, 1920, at the Salzburg Congress, the red flag with a white circle and black swastika became the official emblem of the Nazi Party.

In Mein Kampf, Hitler described the Nazis’ new flag: “In red we see the social idea of the movement, in white the nationalistic idea, in the swastika the mission of the struggle for the victory of the Aryan man, and, by the same token, the victory of the idea of creative work, which as such always has been and always will be anti-Semitic.” (pg. 496-497)

Because of the Nazis’ flag, the swastika soon became a symbol of hate, anti semitism, violence, death, and murder.

4x4HitlerStamps

The Aryan Race

 

Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People

 

‘’If we divide mankind into three categories – founders of culture, bearers of culture, and destroyers of culture – the Aryan alone can be considered as representing the first category.’’

‘’Every manifestation of human culture, every product of art, science and technical skill, which we see before our eyes to-day, is almost exclusively the product of the Aryan creative power’’.

‘’The readiness to sacrifice one’s personal work and, if necessary, even one’s life for others shows its most highly developed form in the Aryan race. The greatness of the Aryan is not based on his intellectual powers, but rather on his willingness to devote all his faculties to the service of the community.’’

Contact swami_48@yahoo.com

Pictures are taken from Wikipedia and other sites; thanks.

swastika in Berlin May PoleSwastika raised in Berlin during Hitler’s rule.

 

சிந்துசமவெளியில் ‘செக்ஸ்’ வழிபாடு

lingam yoni indus

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

சிந்து சமவெளி பற்றி தமிழர்களின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’’ என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. ‘’பேனா எடுத்தவன் எல்லாம் ‘பிளாக்’காரன்’’ என்பது புதுமொழி. சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ‘பிளாக்’கில் எழுதுபவர்கள் எவ்வளவு தூரம் படித்துவிட்டு எழுதுகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றி எழுதுபவர்கள் முதலில் அங்கே பின்பற்றப்பட்ட மதத்தையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும் அறியவேண்டும். அதுவும் ஊகம்தான். ஏனெனில் படத்தில் உள்ள எழுத்துக்களை இதுவரையும் யாராலும் படிக்க முடியவில்லை. அவரவர்கள் தங்கள் கருத்துக்களை மனம்போல போக்கில் எழுதிவருகிறார்கள்.

 

மனம்போன போக்கில் எழுதுபவர்களில் மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியவர் மார்ஷல் என்னும் தொல்பொருட் துறை இயக்குநர் ஆவார். இவர் அங்கே கிடைத்த சில பொருட்கள் ஆண்குறி வடிவில் இருக்கவே அதை லிங்க வழிபாடு என்று சொல்லிவிட்டார். நடுவில் துளைகளுடன் வட்டவடிவில் கிடைத்த கற்களை பெண்குறி (யோனி) என்று சொல்லிவிட்டார். அவை மொஹஞ்சதாரோவில் எங்கே கிடைத்தன என்பதைச் சொல்லவில்லை. அது போன்ற கற்கள் வேறு எங்கேயும் கிடைக்கவும் இல்லை. இவர் செய்த தவறுகள் மகத்தான தவறுகள். தொல்பொருட் துறையினரின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார். பெரிய வெள்ளைக்கார அதிகாரி சொல்கிறார் என்பதால் அப்போது கேள்வி கேட்க நாதி இல்லை.

 

தற்கால வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த லிங்கம்-யோனி கற்கள் பற்றிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். உலகிலேயே மிகப்பெரிய சிந்துவெளி நாகரீகத்தில் மற்ற இடங்களில் இது ஏன் கிடைக்கவில்லை? 4000 முத்திரைகளில் இப்படி ஒரு வழிபாடு பற்றி ஏன் படமே இல்லை? புலி தேவதை, பேய் முத்திரை, ஆடு நரபலி முத்திரை, பசுபதி முத்திரை, பெண்குறியிலிருந்து மரம் வெளிவரும் முத்திரை, கொம்பன் முத்திரைகள், ஆட்டுக் கொம்பு தெய்வ முத்திரை, பல மிருகங்கள் ஒட்டிக் கிடக்கும் பலமிருக முத்திரை இப்படி எவ்வளவோ கிடைத்த இடத்தில் லிங்க வழிபாடு பற்றி ஏன் ஒன்றுமே இல்லை?

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டுகிறேன்)

மார்ஷலை மாஹா ‘பிராட்’ (மோசடிக்காரன்) என்று இதுவரை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் தொல்பொருட் துறை ஊழியர்கள் பின்பற்றும் அடிப்படைக் கொள்கைகளைக் கூடப் பின்பற்றவில்லை என்று மட்டும் குற்றம் சாட்டுகின்றனர்.

pasupati

ஒரு யோகி போல அமர்ந்திருக்கும் ஒரு கடவுளைச் சுற்றி பல மிருகங்கள் இருப்பதைப் பார்த்தார். இது பசுபதி என்றும் சிவனுக்கு முந்திய ஒரிஜினல் சிவன் என்றும் சொல்லிவைத்தார். இந்த உருவத்தின் ஆண்குறி எடுப்பாக வெளியே நீண்டிருக்கும் (ithyphallic). அவருக்குத் தமிழ் தெரியாது. அப்போது தமிழ் தெரிந்த ஆட்களுக்கு சிந்து சமவெளி தெரியாது. ஆரிய திராவிட வாதம் என்னும் விஷச் செடி மட்டும் கொஞ்சம் வளர்ந்திருந்ததால் அதைப் பற்றித் தமிழர்களுக்கு தெரியும். இந்த விஷ வித்தை ‘’ஈஸ்ட் இந்தியா கம்பெனி’’யிடம் (East India Company) மானிய உதவி பெற்று வேதங்களை மொழிபெயர்த்த மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர் விதைத்திருந்தார். பின்னர் சிந்து சமவெளி நாகரீகத்தைத் தோண்டி எடுத்தவர்கள் அந்த விஷச் செடிக்கு நீர் பாய்ச்சி  மரமாக வளர்த்தனர்.

 

சிவன் என்ற தெய்வம் தொல்காப்பியத்தில் இல்லையே? சிவன் என்ற சொல்லே தேவார காலம் வரை தமிழில் இல்லையே? சங்க இலக்கியத்தில் வரும் சிவனை முக்கண்ணன், நீலமணிமிடற்றோன் என்று வேதகால தெய்வமாக மட்டுமே புறநானூறு வருணிக்கிறதே? தேவார மூவரும் திருவாசக மாணிக்கவாசகரும் சிவனை திராவிடனே என்று சொல்லாமல் ஆரியனே என்று மட்டும் சொல்கிறார்களே? சிவனை கருப்பன் என்று சொல்லாமல் செம்மேனி அம்மான் என்று மட்டும் சொல்கிறார்களே? என்றெல்லாம் கேள்வி எழுப்பி மார்ஷலை மடக்க ஆட்கள் இல்லை. நான் இப்போது டென்மார்க்கிலும் (Gundestrup Cauldron) பஹ்ரைனிலும் பசுபதி முத்திரை இருப்பதை படத்துடன் வெளியிட் டிருக்கிறேன். சிந்து சமவெளி பற்றி எழுதும் எவருக்கும் நான் பஹ்ரைனில் இருந்து வெளியிட்ட முத்திரை இருப்பது கூடத்தெரியாது. பசுபதி, சிவன், லிங்கம், யோனி இவை எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் ஆயிற்றே? இவைகளை திராவிட என்று எப்படி சொல்லலாம்? திராவிடர்களை ஆரியர்கள் ஓடஓட விரட்டியதாக எழுதி திராவிடர்களைக் கோழைகளாக, பயங்கொள்ளிகளாகச் சித்தரிக்கிறீர்களே என்று கேட்கவும் அப்பொழுது நாதி இல்லை.

 

பசுபதி உருவத்தில் ஆண்குறி (ithyphallic) நீட்டிக்கொண்டு இருப்பதாகச் சொன்னதோடு, அவர் எங்கோ கண்டு எடுத்த கற்களை லிங்கம்—யோனி என்று வருணித்ததோடு, ஆரிய திராவிட வாதத்தையும் புகுத்தி சிந்து சமவெளி நாகரீகத்தையே திசை திருப்பிவிட்டார்.

 

இப்போதைய ஆராய்ச்சியாளர்கள் அவை லிங்கமும் இல்லை, யோனியும் இல்லை, அவை விளையாட்டுப் பொருட்கள் (செஸ் விளையாட்டு சிப்பாய், யானை, குதிரை Gamesmen) போன்றவை என்றும் அவை எடைக் கற்கள் என்றும் யோனி போன்ற வட்டக் கற்கள் தூண்களை எழுப்பப பயன்பட்டக் கற்கள் என்றும், அவை காலம் அறியப் பயன்படுத்தப்பட்ட கற்கள் (astronomical)  என்றும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.

indus lajjagauri

மேலும் பல ‘செக்ஸ்’ முத்திரைகள்

ஒரு முத்திரையில் இரண்டு பக்கம் பாயும் புலிகளும் நடுவில் சித்திர எழுத்துக்களும் ஒரு பெண்ணுடைய உறுப்பிலிருந்து ஒரு மரம் வெளிவரும் படமும் உள்ளது. இதை பூமாதேவி என்றும் தாவரங்கள்  வளருவதை இது குறிப்பதாகவும் ‘அறிஞர்கள்’ விளக்குவர்.

 

வட இந்தியாவில் பல இடங்களிலும் ‘’லஜ்ஜ கௌரி’’ (Lajja Gauri) என்ற சிலைகள் உண்டு. இவையும் இதே போல காலை அகட்டி பெண் உறுப்பு தெரியும் வகையில் இருக்கும். இவை எல்லாம் ‘’பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும்’’ என்ற வளப்பத்தைக் (Fertility)  குறிக்கும் என்று அறிஞர் பெருமக்கள் பகர்வர்.

பலி ஆட்டுடன் தோன்றும் ஒருவன் ஒரு தலையை (நரபலி) தெய்வத்தின் முன்பு வைத்திருக்கும் முத்திரையில் ஒரு மீன் வடிவ எழுத்தில் ஒரு பொட்டு வைத்திருக்கும். இதைக் கூட பெண்குறி என்று ஆய்வாளர்கள் எழுதுவர். சுருங்கச் சொல்லின் சிந்து சமவெளியில் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது!!!

 

‘தில்முன்’ எனப்படும் பஹ்ரைனில் பல செக்ஸ் காட்சி முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. அவை வேறு வகையானவை.

சிந்து சமவெளி பற்றிப் பேசும், எழுதும் தமிழர்கள் முதலில் அந்தக் கால மத நம்பிக்கைகளை அறியவேண்டும். சிந்து நதி, பஞ்சாப் சமவெளி பற்றித் தமிழர்கள் ஏன் ஒன்றுமே சொல்லவில்லை? சங்க இலக்கியத்தில் கங்கையையும் இமயத்தையும் புனிதமானவை என்று போற்றிப் புகழ்ந்தவர்கள் ஏன் சிந்து பற்றி மவுனம் சாதித்தனர்? என்றெல்லாம் சிந்திக்கவேண்டும்.

 

lajja gauri,bhaktapur,nepal

Lajja Gauri from Nepal

சிந்து சமவெளி பற்றிப் புத்தகம் எழுதிய எல்லோரும் ஏன் சம்ஸ்கிருத நூல்களைப் பக்கத்துக்குப் பக்கம் மேற்கோள் காட்டுகின்றனர்? மீன் உருவத்தைத் தவிர வேறு எதற்கும் தமிழில் ஏன் உதாரணம் காட்டமுடியவில்லை என்றும் மதத் தொடர்பான முத்திரைகளுக்கு ஏன் தமிழில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் சொல்ல முடியவில்லை என்றெல்லாம் சிந்திக்கவும் வேண்டும். 1960ஆம் ஆண்டுகளில் இந்த எழுத்துக்களை திராவிட அமைப்புடையவை என்று சொன்ன பின்லாந்துக்காரர்கள், இந்த ஆய்வில் ஏன் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்

gota bali seal

சிந்து சமவெளி பற்றிய என்னுடைய கீழ்கண்ட கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:

Please read my earlier posts: 1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals 7. Bull Fighting: From Indus Valley to Spain via Tamil Nadu 8. The Great Scorpion Mystery in History 9.  (In Tamil) சிந்து சமவெளியில் புலிப்பெண் 10. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 11. Ramayana Wonders part 5: Indus Valley Cities in Ramayana + 575 articles on Tamil Sanskrit Literature and Indian Culture.

To get the above articles, type any of the article titles and add ‘from tamilandvedas.wordpress.com or from swamiindology.blogspot.com

For further list contact swami_48@yahoo.com

நாக ராணி: சிந்துவெளி முதல் சபரிமலை வரை


Minoan Snake Goddess 1600 BC

சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாக ராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் தெரிவிக்கின்றன.
உலகத்தில் பாம்புகளைப் போற்றாத பழைய நாகரீகங்களே இல்லை. வேத காலம், சிந்து சமவெளி, கிரேக்க, எகிப்திய, சுமேரிய ,பாபிலோனிய, மாயா பண்பாடுகள் அனைத்திலும் நாக உருவில் தெய்வங்கள் உண்டு. ஆயினும் இந்துக்களுக்கு இதில் மிகவும் சிறப்பான இடம் இருக்கிறது. வேத காலத்தில் போற்றப்பட்ட நாகங்களுக்கு இன்றுவரை கோவில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். உலகில் வேறு எங்கும் காணாத புதுமை என்னவென்றால் உயிருள்ள பாம்புகளுக்கே நாக பஞ்சமி அன்று பூஜையும் செய்கிறோம். எல்லா இந்து தெய்வங்களும் பாம்புடன் சம்பந்தப்பட்டவை.

Indus Valley Snake God

ஆர்தர் ஈவான்ஸ் என்ற தொல்பொருள் துறை நிபுணர் கிரீட் தீவில் நாசோஸ் என்னும் நகரில் பெரிய மினோவன் நாகரீக அரண்மனையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்தார். அதில் ஒரு பெண் இரு கைகளிலும் பாம்புடன் நிற்கிறார். அவர் தெய்வமா பூசாரினியா என்று தெரியவில்லை. அந்தச் சிலை மேலை உலகில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது.

மானசா தேவி, நாகராஜன், நாக யக்ஷி முதலிய பல வடிவங்களில் சபரிமலை முதல் சிந்து சமவெளி வரை கோவில்கள் அல்லது பாம்பு ராணி சிலைகள் இருக்கின்றன. அன்று போல் இன்றும் நாகங்களைத் தெய்வமாக வழிபடும் தொடர்ச்சியையும் காண்கிறோம்.

Naga Yakshi

அயர்லாந்தில் ஹெகடெ (சக்தி என்ற சொல்லின் மருவு) என்ற நாகராணியை வணங்கினர். சுமேரியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன் கபஜா என்னும் இடத்தில் இரண்டு கைகளில் இரண்டு பாம்புகள் உடைய தெய்வத்தைக் காணலாம். இதே தெய்வம் நாக யட்சி என்ற பெயரில் கர்நாடகம் கேரளம் முழுதும் உள்ளன. ஒரிசா, வங்காளம் ஆகியவற்றில் மானசா தேவி இதே உருவத்தில் வழிபடப்படுகிறாள்.

அதிசயச் செய்தி: சுமேரியாவில் தமிழ்?

ரிகவேதத்தில் 27 பெண் கவிஞர்களின் பெயர்களைக் காணலாம். அவர்களில் ஒருவர் பெயர் சர்ப்பராக்ஞி (பாம்பு ராணி). சர்ப்பராக்ஞீ என்ற தெய்வமும் பலவித தைத்ரீயம் முதலிய பிராமண நூல்களில் வருகிறது. தைமத என்ற பாம்புத் தெய்வத்தின் பெயரும் இருக்கிறது. இதை டியாமத் என்ற பாம்புத் தெய்வமாக பாபிலோனியர்கள் வணங்கினர். ஆக வேத கால தெய்வங்கள் 5000 ஆண்டு பழமை உடையவை என்பது நிரூபணம ஆகிவிட்டது.

அதர்வண வேதத்தில் வரும் அலிகி, விலிகி என்ற சொற்களுக்கு பொருள் விளங்காமல் இருந்தது. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் வேதங்கள் 6000 ஆண்டுப் பழமை உடையவை என்று நிரூபிக்கும் புத்தகத்தில் அலிகி, விலிகி ஆகியன சம்ஸ்கிருதம் அல்ல, அவை அக்கடியன் மொழிச் சொற்கள் என்று எழுதி இருந்தார். இதை இப்போது ஆராய்ந்த டாக்டர் பகவத்சரண் உபாத்யாயா, டாக்டர் நாவல் வியோகி முதலானோர் இந்தச் சொற்கள் கி.மு 3000இல் ஆட்சி செய்த ஆலால, வேலால (தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்) என்ற இரண்டு அசீரிய மன்னர்கள் என்று கண்டுபிடித்தனர். இவைகள் உண்மை என்றால் அதர்வண வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன் என்றாகிவிடும். மொழி இயல் ரீதியில் இதற்கு மிகவும் முற்பட்டது ரிக் வேதம். உலகின் மிகப் பழைய மத நூல். ஆகவே அது 6000, 7000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று திலகர் எழுதியது சரி என்றாகிறது.

வேதத்தில் குறிப்பிடப்படும் சரஸ்வதி நதி மறைந்து 5000 ஆண்டுகள் ஆகியதை பாபா அணுசக்தி ஆய்வு மையமும் அமெரிக்க விண்வெளி நாஸா- வும் உறுதி செய்ததாலும் வேத காலத்தின் பழமை உறுதியாகிறது.

(இந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் Serpent Queen: Indus Valley to Sabarimalai எழுதியுள்ளேன், பெயர்களின் சரியான ஸ்பெல்லிங் முதலியன தேவைப்பட்டால் ஆங்கிலக் கட்டுரையை வாசித்து கூகிள் செய்தால் மேலும் ஆழமான தகல்களைப் பெறலாம்)

சுமேரியாவின் வரலாற்றை எழுதிய பெரோருஸ் என்ற கிரேக்க ஆசிரியர் ஆதிகால மன்னர்களின் பெயர்களை அளிக்கிறார். ஊர்த்வரேதஸ் (ஒட்டரடெஸ்) மற்றும் துமுசி என்ற பெயரில் இரண்டு மன்னர்கள் சுமேரியாவை ஆண்டனர். ஒரு துமுசி இடையர், மற்றொரு துமுசி மீனவர். ராமன், கண்ணன் ஆகிய மன்னர்களை நாம் எப்படி தெய்வம் ஆக்கினோமோ அப்படி இவர்களை அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்கலாம். ஏனெனில் துமுசி என்பதை தமிழி என்று வாசிக்கும்படி ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கிறது. அதைப் பிற்காலத்தில் டம்முஸ் என்றும் சம்மட என்றும் பல வகையாக எழுதினர். டம்முஸ் என்பதும் தமிழன் என்பதை ஒட்டி வருகிறது.

இது தவிர சுமேரிய மொழிக்கு சிறிதும் தொடர்பில்லாத சுமுகன் என்ற தெய்வப் பெயரும் இருக்கிறது. இது விநாயகப் பெருமானைக் குறிக்கும் தூய சம்ஸ்கிருதச் சொல். பெரோரஸ் என்ற ஆசிரியரின் பெயரையும் வர ருசி என்றும் படிக்கலாம். அவர் சில மன்னர்களின் தலைநகரம் பத்தர்குரு என்று எழுதிவைத்தார். இந்த பத்தர்குரு புராணங்களில் மிகவும் போற்றப்படும் உத்தரகுரு ஆகவும் இருக்கக் கூடும்.

5000 ஆண்டுகளுக்கு முன் இப்படி சுமேரியாவில் தமிழும் சம்ஸ்கிருதமும் இருப்பதை நோக்கும் போது இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்ற பழைய கோட்பாடும் உயிர் பெறுகிறது. இத்துடன் இணைத்திருக்கும் படங்களைக் காண்போருக்கு, உண்மைகள் சொல்லாமலே விளங்கும்.

கீழ்கண்ட எனது கட்டுரைகளையும் படித்தால் முழு சித்திரம் கிடைக்கும்:

1. Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu
2. The Sugarcane Mystery: Ikshwaku Dynasty and Indus Valley
3. Mysterious link between Karnataka and Indus Valley
4. Vishnu in Indus valley seal
5. Indra on Airavata in Indus valley)
*******************