
சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கியன் (Post No.4913)
WRITTEN by London Swaminathan
Date: 14 April 2018
Time uploaded in London – 14-18 (British Summer Time)
Post No. 4913
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தில், தண்டனை பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன.
கடுமையான தண்டனை கொடுத்தால் மக்கள் வெறுக்கிறார்கள்;
குறைவான தண்டனை கொடுத்தால் மக்கள் நிந்திப்பார்கள்;
தவற்றுக்கு ஏற்ற தண்டனை கொடுத்தால் மக்கள் மதிப்பார்கள் (அர்த்தசாஸ்திரம் 1-4
யார் ஒருவன் அதிகமாகக் குடிக்கிறானோ சூதாடுகிறானோ, வேட்டை ஆடுகிறானோ அவர்களை, சட்டம் சந்தேகத்துடன் பார்க்கும் – (4-6)
பெண்கள் விஷயத்திலோ அல்லது வேறு எதிலோ அதிக ஈடுபாடு கொண்டிருப்பது குற்றம் – (8-1)
ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழ வேண்டும். மாத விலக்குக்குப் பின்னர் மனைவியுடன் படுக்க மறுக்கும் கணவன் குற்றம் இழைத்தவன் ஆவான் (1-3; 3-2)
மஹா பாரதமும் இந்தக் கருத்தைச் சொல்கிறது.

ஒரு ஆண்மகன் இஷ்டப்பட்டால் வீட்டை விட்டு ஓடிப் போய் சந்யாசி ஆகிவிட முடியாது. அவன் தனது மனைவியும், மகனும் வாழ வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்த பின்னரே சந்யாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயதானவ ஒருவர் காவி ஆடை போட்டுக்கொள்ள விரும்பினாலும் அரசாங்க அதிகாரிகளுக்குச் சொல்லாமல் செய்வது தண்டணைக்கு உரிய குற்றம் ஆகும் – (2-1)
ஒரு அரசன் கூட எதிலும் நிதானம் காட்ட வேண்டும் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கொள்கை. அரசன் சுக போக விஷயங்களில் ஈடுபட்டால் அறமும் இல்லை, பொருளும் இல்லை என்று ஆகிவிடும் (பொருள்= செல்வம்; அறம்= தர்மம்) – மநு 7-46
தொல்காப்பியமும் திருக்குறளும் அறம், பொருள், இன்பம் ( தர்ம, அர்த்த, காம) என்ற சொற்களைப் பல இடங்களில் வலியுறுத்துகிறது. இதையே கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் அவ்விரு நூல்களுக்கும் முன்னரே சொல்லிவிட்டான்.
இன்பம் இல்லாமல் வாழாதீர்கள் (ந நிஸ்ஸுகஸ்யாத்- 1-7) என்று கௌடில்யன் கூறுவான். உள்ளத்தில் ஆசைத் தீ எரியட்டும். ஆனால் அறத்துக்கும் பொருளுக்கும் ஊறு விளைவிக்காத வகை யில் காமம் (ஆசை) இருக்க வேண்டும் என்பான் (1-7).
சாணக்கியன் சொல்லும் பல விஷயங்கள் மஹா பாரத சாந்தி பர்வத்திலும் உள்ளது. இது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததால் தமிழர்களும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் அறம், பொருள் இன்பமென்பதை அதே வரிசையில் அப்படியே (தர்ம, அர்த்த, காம) விளம்பினர்.
திருக்குறளின் பெயர்களில் ஒன்று முப்பால் (அறம், பொருள், இன்பம்).

இந்த மூன்று விஷயங்களை (த்ரிவர்க) என்று இயம்புவர்.
வாத்ஸ்யாயனர் எழுதிய காம சூத்ரமும் இது பற்றிக் கூறும்:-
ஒரு மனிதனுடைய வாழ்வு 100 ஆண்டுகள். இதை அவர்கள் முறையாகப் பிரித்து, ஒன்றுக்கு ஒன்று மோதாமல், அனுசரணையாக இருக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் கல்வியும், பொருள் ஈட்டும் வழிகளும் நோக்கம் ஆக இருக்க வேண்டும்.
வாலிபப் பருவத்தில் காம சுகங்களை நாட வேண்டும்; முதுமையில் மோட்சத்துக்கான வழிகளில் மனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, தக்க விதத்தில் இக்குறிக்கோள்கள்களைப் பின்பற்ற வேண்டும்.
திருக்குறளுக்கு முப்பால் என்று பெயரிட்டது ஏன்?
த்ரிவர்கங்களில் (அறம், பொருள் இன்பம்) மூன்றையும் அல்லது இரண்டையாவது அடையும் செயல்களைச் செய்ய வேண்டும். ஆனால் மூன்றில் எந்த ஒன்றும் அடுத்த இரண்டு குறிக்கோள்களைப் பாதிக்கக்கூடாது.(காமசூத்திரம் 1-2-51)
இவற்றைக் காணும் போது திருக்குறளுக்கு முப்பால் என்று பெயர் வந்தது ஏன்? திருவள்ளுவர் ஏன் தன் நூலை முப்பால்களாகத் தொகுத்தார் என்பது நன்கு விளங்கும்.
கிரேக்க அறிஞர் அரிஸ்டாடிலும் கூட கிட்டத்தட்ட இந்தக் கருத்துகளை எதிரொலிக்கிறார்.
எந்த ஒரு விஷயத்திலும் மிக அதிக ஈடுபாடோ மிகக் குறைவான ஈடுபாடோ அழிவை ஏற்படுத்தும். உடற்பயிற்சியில் இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் பலம் பாதிக்கப்படும்; மதுவிலோ, மாமிச உணவிலோ இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தைரியம், கோபம் முதலிய குணங்களில் ஏற்ற தாழ்வு இப்படி இருந்தால் அழிவை உண்டாக்கும்; நடுநிலை வகிப்பதே சாலச் சிறந்தது (ETHICS , ARISTOTLE எதிக்ஸ் 2-2)
மநுவும் மனு நீதி நூலில் இதையே உரைக்கிறார்:
மன்னன் என்பவன் தர்ம அர்த்த காம விஷயங்களைக் கற்றவன் ஆக இருத்தல் அவசியம்; தன் ஆட்சி அதிகாரத்தில் இம்மூன்றிலும் படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும் (தர்ம காமார்த்தகோவிதம்; த்ரைவர்கேனாபிவர்ததே- மநு 7-26/27)
அர்த்தசாஸ்திரம் இதை இன்னும் தெளிவாகச் செப்பும்:
அறம், பொருள் இன்பம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை அளவுக்கு அதிகமாகப் பின்பற்றினால் பின்பற்றப்பட்ட ஒரு விஷயம் பாதிப்பதோடு மற்ற இரண்டையும் கெடுத்துவிடும் (1-7)
2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இதையெல்லாம் சிந்தித்துஎழுதி இருப்பது சிறப்புக்குரியது.
xxxx

தொல்காப்பியத்தில் அறம் பொருள் இன்பம்
தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas
https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…
Translate this page
… (மோட்சம்)= அறம், பொருள், இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது. 9.
அறம் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/அறம்/
Translate this page
”தர்ம, அர்த்த, காம” என்ற வட மொழிச் சொற்றொடர் ”அறம்,பொருள், இன்பம்” என்று தமிழில் அதே வரிசையில் வருகிறது. இவை வாழ்க்கை மூல்யங்கள்- இந்தியர்களின் ஆதார சுருதி- பாரதீய வாழ்வின் அஸ்திவாரக் கற்கள்.–இதை மஹாபாரதத்திலும் காணலாம். தொல்காப்பியம்(சூத்திரம்1037, 1363) …
தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas
https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…
Translate this page
தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!! … ஆரிய திராவிட வாதம் பேசும் அரை வேக்காடுகளுக்கு சூத்திரம் சூத்திரமாகத் தொல்காப்பியர் அடிமேல் அடி கொடுக்கிறார். … வாழ்க்கையின் லட்சியங்களை அறம், பொருள் இன்பம், வீடு (தர்மார்த்த காமமோக்ஷ) என்று பிரிப்பது.
Bhagavad Gita in Tamil | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/bhagavad-gita-in-tamil/
Translate this page
“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும். அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல” (புறம் 31, கோவுர் கிழார்). மேலும் சில :தொல்காப்பியம் 1038,,கலி.141,திருவள்ளுவ மாலையில் 5 இடங்கள். உ.வே.சாமிநாத அய்யர் புறநானூறு பாடல் முறை வைப்பு அறம்,பொருள்,இன்பம் என்ற தலைப்பில் …
You’ve visited this page 2 times. Last visit: 03/02/17

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு | Tamil …
https://tamilandvedas.com/…/பகுதி4-தொல்காப்பி…
Translate this page
13 Sep 2012 – ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது). தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் …
தொல்காப்பியம் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/தொல்காப்பியம்/
Translate this page
தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் பற்றிச் சொல்லுவதையும் கூட இன்று பெண்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாடே!சந்தேகமே! ….. தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம், பொருள், இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு …
You’ve visited this page 3 times. Last visit: 16/12/16
கண்ணனின் பக்தி அறம், பொருள், இன்பம் …
https://tamilandvedas.com/…/கண்ணனின்-பக்தி-அற…
Translate this page
1 Feb 2014 – … சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் …
–சுபம்–