‘எல்லா உயிர்க்கும் இன்பம்’- என்று தொல்காப்பியர் எப்படி செப்பினார் ? (Post No.9385)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9385

Date uploaded in London – –15 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

‘எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே’ –என்றார் தாயுமானவர். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’— என்றார் திருமூலர். ‘மன்னுயிர்க்கெல்லாம் இன்பம்’ –என்றார் வள்ளுவர்.  ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்

tags — எல்லா உயிர்க்கும் இன்பம், தொல்காப்பியர், மங்கல சொல், 

தொல்காப்பியர் காப்பி அடித்தாரா? தொகுத்தாரா ? (இலக்கணம் ) எழுதினாரா? (Post.9227)

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9227

Date uploaded in London – –4 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியர் பற்றி இருபது முப்பது கட்டுரைகள் எழுதி விட்டேன். இப்பொழுது அவர் பற்றிய மேலும் சில உண்மைகளை அவரே தன து நூலில் காட்டுகிறார். அதை ஆதாரங்களுடன் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் ஒரு  ஜோக்.. திருவள்ளுவர் உருவத்தைக் காட்டும் பழந்தமிழ் நூல் களில் அவர் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி இருக்கும். 1967ல் திராவிடக் கடசிகள் ஆட்ச்சிக்கு வந்தவுடன் அவர் நெற்றியில் இருந்ததை அழித்து விதவை போல ஆக்கிவிட்டனர்.ஆனால் தொல்காப்பியர் படத்தை எந்த நூலிலும் காண முடியாது. தொல்காப்பியர் காப்பியக் குடியில் பிறந்ததால் அவருக்கு அந்தப் பெயர் என்றும் அவருடைய உண்மையான பெயர் த்ருண தூமாக்கினி என்றும் பழைய உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட தமிழ் என்சைக்ளோபீடியாவான ‘அபிதான சிந்தாமணி’யிலும் இந்த விஷயம்தான் இருக்கிறது.

காப்பியக் குடி – காவ்ய கோத்ரம் – கவி = ரிக் வேதமும் கிருஷ்ணனும் (பகவத் கீதையில்) புகழும் உஷனஸ் கவி. ரிக் வேத காலத்திலேயே அவர் மிகப் பழைய கால கவி என்பப்படுகிறார்!!!

மீசை வைத்த பிராஹ்மணன் !

ஜமதக்கினி முனிவரின் மகன், பரசுராமனின் சகோதரன். அத்தகைய பெருமை மிகு குலத்தில் உதித்தவர் என்பதே பொருந்தும் இதற்கு இன்னும்  இரண்டு  எடுத்துக் காட்டுகளைத் தருகிறேன்  கேரளத்தைக் கடலிலிருந்து மீட்டுக் கொடுத்த பரசுராமன் ‘ஒரிஜினல்’ Original அல்ல. அந்தக் குலத்தில் வந்த , அவரைப் போன்ற சிறப்பு மிக்கவர். இதே போல ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பரசுராமன் (கர்ணனின் குரு ) வருகிறார். மஹாபாரத பரசுராமன் ‘ஒரிஜினல்’ அல்ல. அகத்தியர் என்பதும், பரசுராமன் என்பதும் கோத்திரப் பெயர்கள். நாம் மதுரைக்காரன் என்றவுடனே அவன் செந்தமிழ் பேசுவான் மதராஸ்காரன் என்றால் சம்ஸ்கிருதம் பேசுவான் (வாடா , கஸ்மாலம்; கஸ்மலம் = பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்ட கண்ணன் பயன்படுத்திய சொல் – கஸ்மலம் ) என்றெல்லாம் பொதுப்படையாகக் கொள்வதை போன்றதே இதுவும்.

தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் நட்டு மலர்களை வெளியிட்டபோது தொல்காப்பியருக்கு மீசை வைத்து படங்களை வெளியிட்டது! பாவம் அவர் பிராமணர் இல்லை என்று காட்ட இந்த முயற்சி. ஆனால் சிவபெருமானுக்கே மீசை உள்ள பழைய படங்கள் இருப்பது அந்த திராவிட கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை. போகட்டும் . சப்ஜெக்ட் subject டுக்கு வருவோம் .

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்கள் உண்டு (அதிகாரம் என்பது தொல்காப்பியம், திருக்குறள் , சிலப்பதிகாரம் ஆகிய மூன்று நூல்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பதால் இவை மூன்றும் சமணர் ஆடசிக் காலத்தில் — சுமார் 4, 5ம் நூற்றான்டில் தோன்றியவை என்றும்  முன்னரே காட்டிவிட்டேன்)

தொல்காப்பியத்தின் சிறப்பே பொருள் அதிகாரம்தான். தொல்காப்பியருக்கு சுமார் 1000  அல்லது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினியும் பல்வேறு விஷயங்களை கதைத்தாலும் இப்படி தனி அதிகாரமாக எழுதவில்லை. ஆனால் இந்தப் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை என்பது சிலர் கருத்து. ஏனெனில் இதன் சொல் அமைப்பும் , பொருளடக்கமும் அப்படிப்பட்டவை என்பது அவர்கள் வாதம். இந்திரன், வருணன் ஆகியோரை தமிழ்க் கடவுள் என்று பாடிவிட்டார் தொல்காப்பியர் . அதுமட்டுமல்ல பலராமனின் பனைக்கொடி முதலிய விஷயங்களையும் தொல்காப்பியர் காட்டுகிறார். சூத்திரம் என்னும் சம்ஸ்க்ருத பதத்தையும் பயன்படுத்திவிட்டு நான்கு ஜாதிகள் பற்றியும் பாடுகிறார். அதில் அந்தணரை முதலில் வைக்கிறார். அது மட்டுமல்ல தர்மார்த்த காம மோக்ஷ என்ற வரிசையை அப்படியே தமிழில் திருக்குறள் போலவே அறம்,பொருள், இன்பம், வீடு என்று பேசுகிறார்.

எனது முடிவு

கீழேயுள்ள இணைப்புகளில் தொல்காப்பியர் 300 இடங்களுக்கும் மேலான வரிகளில் ‘என்மனார்’, ‘என்ப’, ‘மொழிப’ எந்றெல்லாம் பாடியிருக்கிறார். இது பத்திரிகையாளர் பயன்படுத்தும் (Journalists Jargon) வழக்கு. ‘அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்’, ‘என்று சொல்லப்படுகிறது’, ‘என்று அறியப்படுகிறது’, ‘பேசப்படுகிறது’ என்ற வகையைச் சேர்ந்தது.  முதல் சூத்திரமே “எழுத்தெனப்படுவது ……………………… “ என்று துவங்குகிறது —

சிலர் , எங்கெங்கு தனக்குப் பிடிக்காத விஷயங்கள் வருகின்றதோ அவற்றை எல்லாம் இடைச் செருகல் (Interpolation)  என்று சொல்லி விட்டனர் . சில வெளிநாட்டுக்காரர்கள் மூன்றாவது அதிகாரமான பொருள் அதிகாரம் பிற்பாடு வந்தது என்றும்  கூறிச் சென்றனர் (Kamil Zvelebil )கமில் சுவலபில் கூட இப்படிச் சொன்னதாக நினைவு.)

ஆனால் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை அல்ல என்பதை அவர் ‘என்ப’, ‘மொழிப’ , ‘என்மனார்’ என்பதை ஒரே வேகத்தில் , ஒரே மூச்சில்  (cogently, uniformly) பாடுவதை 300 இடங்களையும் கவனிப்போருக்கு விளங்கும் .

தொல்காப்பியர் காலத்தை அறியவும் இது உதவுகிறது. ‘என்ப’ என்பதை இவரைப் போலவே திருவள்ளுவரும் அதிகம் பயன்படுத்துகிறார். சங்கப் புலவர்கள் இதை அதிகம் பயன்படுத்தவில்லை. ஆக நமக்குக் கிடைத்த தொல்காப்பியம் – மூன்று அதிகாரங்களும் – ஒரே காலத்தவை – களப்பிரர்  காலத்தவை – களப்பிரர் எனப்படும் மர்ம (கர்நாடக சமணர்?? ) ஜாதி ஆட்சி முடிந்த காலத்தவை. அதாவது 4 அல்லது 5ம் நூற்றாண்டு .

இன்னொரு விஷஜ்யத்தையும் சொல்ல வேண்டும். தொல்காப்பியர் ‘ஒரிஜினல்’ வேறு. நாம் மனதிற் கற்பனை செய்யும் தொல்காப்பியர்  வேறு. அதாவது இளங்கோ, சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது

உண்மையானால், அவர் கஜபாகு (கிபி.132) காலத்தில் வாழ்ந்தவரே. ஆனால் அவர் பெயரிலுள்ள சிலப்பதிகாரம் அந்த இளங்கோ யாத்தது இல்லை. அது போலவே தொல்காப்பியர் என்பவர் அ கத்தியர் மாணாக்கர் என்றால் அவர் வேறு; அவர் பெயரில் நாம் படிக்கும் தொல்காப்பியம்  வேறு.சங்க இலக்கியத்திலும் காண முடியாத நீண்ட உவமை உரு பு பட்டியலைக் கொடுப்பதால் இவர் பழங்கால விதிகளை, சூத்திரங்களை, நமக்கு 5ம் நூற் றாண்டில் தொகுத்துத் தந்தார் என்று சொல்லுவதே  பொருந்தும்.

சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் தொல்காப்பியர்  மிகப் பழங்காலத்தவர். ஆனால் தொல்காப்பிய நூல்  பிற்காலத்தது.

திராவிட ரகஸியம்

தொல்காப்பியத்துக்கு சொல்லடைவு (Word Index)  வெளியிட திராவிடர்கள் பயப்படுகிறார்கள் . ஏனெனில் அவர் யார், எக்காலத்தவர் என்பது  வெளிப்பட்டுவிடும். அதாவது அவர் சொல்லும் பல ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் முதலியன வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடும். திருவள்ளுவர் துணிச்சலாக குணம், காமம், காலம், தானம், என்றெல்லாம் சம்ஸ்கிருத்ச் சொற்களை முதலில் வைத்தே கவி பாடினார். மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான வள்ளுவன் காமத்துப் பால் என்று ஒரு அத்தியாத்துக்கு சம்ஸ்கிருதப் பெயர் வைத்தார். இதைப் போலவே த்ருண தூமாக்கினி என்ற பெயர்படைத்த பார்ப்பன தொல்காப்பியரும்  உவம இயல் என்று ஒரு பிரிவுக்கே சம்ஸ்கிருதத் சொல்லை பயன்படுத்துகிறார். ஏனெனில் இவர்கள் அனைவரும் உலகப் புகழ் பெற்ற உவமை மன்னன்  காளிதாசன் காலத்துக்குப் பிற்பட்டவர்கள். சங்கப்  புலவர் சிலரும் வள்ளுவனும் உவமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் கையாளுகின்றனர் .

முதல் இரண்டு அதிகாரங்களில் வேத கால மக்கள் எழுத்தின் பிறப்பிடம் பற்றிப் பாடியதை தொல்காப்பியர் நமக்குத் தருகிறார். கர , கார (அ -கர, உ-கார )  என்பதை பற்றி பாணினி சூத்திரம் செய்தது போலவே இவரும் சூத்திரம் செய்கிறார் . இவர் காலத்தில் சம்ஸ்கிருதத் சொற்களை கடன் வாங்குவது இருந்ததால் அதுபற்றியும் சூத்திரம் செய்கிறார். மேலும் சம்ஸ்கிருத நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதால் அது பற்றியும் பாடுகிறார்.

இதற்கெல்லாம் மேலாக இவருக்கு ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்து நூலை உலகிற்கு அளித்தது நான்கு வேதங்களில் கரைகண்ட பார்ப்பனன் அதங்கோட்டு ஆச்சார்யா என்பதை பனம்பாரனார் பாடிவிட்டார். அக்கால மன்னர் பெயர்கள் மஹா கீர்த்தி! நூல்களின் பெயர்கள் பூதபுராணம்!! , ஊரின் பெயர் கபாடபுரம்!!! , அவர் படித்தது ஐந்திரம்!!! என்றெல்லாம் முழுக்க முழுக்க சம்ஸ்கிருதம் வருகிறது. அவர்களுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண்களாக விளங்கின.

305 இடங்களில் “மொழிப , என்ப, என்மனார்” என்பதெல்லாம் அகத்தியர் சொன்னதை இவர் திரும்பிச் சொல்கிறார் என்று உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். “முந்து நூல்” என்று பனம்பாரானார் சொல்லுவதும் அகத்தியமே என்பது ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரின் துணிபு

ஆக முடிவுரை —

தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒருவரால் இயற்றப்பட்டதே.

ஒரே காலத்தில் — திருக்குறள் காலத்தை ஒட்டி – 4, 5-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டதே .

தொல்காப்பியர் பெயரில் இந்த நூல் இருந்தாலும் இதை தொகுத்து நமக்குத் தந்தவர்கள் பிறகாலத்தவரே.

வாழ்க தமிழ், வளர்க தொல்காப்பியன் புகழ்

–subham—

tags தொல்காப்பியர், காப்பி அடித்தாரா?, தொகுத்தாரா ?, இலக்கணம் , எழுதினாரா? 

தொல்காப்பியத்தில் Biology உயிரியல் விஞ்ஞானம்! (Post No.6761)

Written by  London Swaminathan
swami_48@yahoo.com

 Date: 11 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  1
7-08

Post No. 6761

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தொல்காப்பியர் காலம் தவறு-1 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கா…

  1.  
  2.  

Translate this page

9 Sep 2012 – ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது …

தொல்காப்பியர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/தொல்காப்பியர்/

  1.  

Translate this page

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு. Picture shows the greatest of the Choza Kings: Karikalan. தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் …

Images for தொல்காப்பி

தொல்காப்பிய அதிசயங்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

  1.  

Translate this page

14 Nov 2014 – கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014. ‘ஒல்காப் புகழ் …

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

  1.  

Translate this page

24 Dec 2014 – அதியமான், அவ்வையார் First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410) The Wonder that is Tamil – Part 3 தொல்காப்பிய அதிசயங்கள் …

குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி …



https://tamilandvedas.com/…/குதிரைச்-சேவல்-பன…

  1.  

Translate this page

7 May 2019 – குதிரைச் சேவல்பன்றிப் பாட்டி தெரியுமாதொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354). Written by London swaminathan swami_48@yahoo.com. Date: 7 May …

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி! | Tamil …



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

  1.  

Translate this page

31 Mar 2014 – இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன.

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி …



https://swamiindology.blogspot.com/2014/03/blog-post_31.html

31 Mar 2014 – தொல்காப்பியத்தில் துர்கைஅக்னி. Durga in the form of Mahisauramardhani in Mhabalipuram, Tamil Nadu. கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன். கட்டுரை …

தொல்காப்பியத்தில் இந்திரன் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

  1.  
  2.  

Translate this page

14 Jun 2013 – தொல்காப்பியர் மஹா அறிஞர். இந்திரன் என்பது அரசன் என்ற பொதுப் பெயராகும். அந்தப் பதவியில் அமருவோருக்கு அந்தப் பெயர்.

Tags தொல்காப்பியர்  காலம்

தொல்காப்பியத்தில் இந்திரன், அக்னி வாயு வருணன்

குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 May 2019


British Summer Time uploaded in London – 14-10

Post No. 6354

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354)

தொல்காப்பியம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/தொல்காப்பியம்/

1.      

2.      

Translate this page

தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம்எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் … தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் …. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com).

You’ve visited this page 3 times. Last visit: 16/12/16

தொல்காப்பிய அதிசயங்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

1.      

Translate this page

14 Nov 2014 – ‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் … தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் …

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

1.      

Translate this page

24 Dec 2014 – அதியமான், அவ்வையார் First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410) The Wonder that is Tamil – Part 3 தொல்காப்பிய அதிசயங்கள் …

தொல்காப்பியர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/தொல்காப்பியர்/

1.      

Translate this page

ஆனால் தொல்காப்பியர் மட்டும் நவரசத்தை —அஷ்ட ரசம்— ஆக்கிவிட்டார். இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஏன் என்று தெரியவில்லை!

அகத்தியம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/அகத்தியம்/

1.      

Translate this page

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு. Picture shows the greatest of the Choza Kings: Karikalan. தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் …

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி! | Tamil …



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

1.      

Translate this page

31 Mar 2014 – இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன.

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

1.      

2.      

Translate this page

இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள். Written by London swaminathan. Research article No. 1789 Date 9th April 2015. Uploaded from London at 10-18 காலை. கட்டுரையின் முதல் பகுதி …

தொல்காப்பியர் கதை | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கத…

1.      

Translate this page

அதங்கோட்டாசனார் ஆசங்கித்துக் கடாவக் கடாவத் தொல்காப்பியர் முறையே விடைகளாக விளக்கியிருந்த புதிய சூத்திரங்கள் ஓராயிரத்தின் …

தொல்காப்பியர் காலம் தவறு-1 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கா…

1.      

2.      

Translate this page

9 Sep 2012 – ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது …

தொல்காப்பியத்தில் வருணன் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

1.      

2.      

Translate this page

8 Jul 2013 – தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம். பெரும்பாலான அறிஞர்கள் இதை கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் …

You’ve visited this page 3 times. Last visit: 05/02/17

தொல்காப்பியர் காலம் தவறு-1 | Swami’s Indology …



https://swamiindology.blogspot.com/2012/09/1_9.html

9 Sep 2012 – தொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் … Labels: ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலம்த்ருணதூமக்கினி …

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 3 …



https://swamiindology.blogspot.com/2012/09/3.html

12 Sep 2012 – எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. எள் என்ற வித்தைக் …

தொல்காப்பியருக்கு நவரசத்தில் ஒரு ரசம் குறைந்தது ஏன்? (Post No.3553)

Written by London swaminathan

 

Date: 17 January 2017

 

Time uploaded in London:- 22-09

 

Post No.3553

 

 

Pictures are taken from different sources; thanks.

Pictures from Dhanyavarshini’s posts on Facebook; thanks

 

contact:– swami_48@yahoo.com

 

பரத நாட்டிய சாஸ்திரத்தில் ஒன்பது ரசங்கள், முக பாவங்கள், உணர்ச்சி வெளிப்படுத்தல்கள் இருப்பதை இந்தியர் அனைவரும், மற்றும் இந்தியக் கலையைப் பாராட்டுவோர் பலரும் அறிந்திருக்கிறார்கள். பிற்காலத் தமிழ் நூல்களும் ஒன்பான் ரசங்களை அங்கீகரித்துள்ளன. ஆனால் தொல்காப்பியர் மட்டும் நவரசத்தை —அஷ்ட ரசம்— ஆக்கிவிட்டார். இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஏன் என்று தெரியவில்லை!

 

தொல்காப்பியம்–பொருளதிகாரம், மெய்ப்பாட்டியல்

 

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப (1197)

 

நகை (Laughter) என்பது இகழ்ச்சியிற் பிறக்கும்

அழுகை (Weeping) என்பது துன்பத்தில் பிறக்கும்

இளிவரல் (Despise/disgust)  என்பது அருவெறுப்பால் உண்டாகும்

மருட்கை (Wonder) என்பது வியப்பில் தோன்றும்

அச்சம் (Fear) என்பது பயத்தில் பிறக்கும்

பெருமிதம் (Fortitude, Heroism) என்பது வீரத்தால் பிறக்கும்

வெகுளி (Anger) என்பது கோபத்தால்/வெறுப்பால் தோன்றும்

உவகை (Delight/Happiness) என்பது மகிழ்ச்சியில் பிறக்கும்

சாந்தம் (Peaceful/ Tranquility) என்பது தொல்காப்பியத்தில் இல்லை!

 

சிருங்காரம் என்பதும் இல்லாவிடினும் அதை உவகையில் சேர்க்கமுடியும்

நவரசம் என்பது எவை?

 

சிருங்காரம், ஹாஸ்யம், கருணா, ரௌத்ர, வீர, பயங்கர, பீபத்ஸ, அத்புத, சாந்த என்று வடமொழி நூல்கள் விளம்பும்.

 

 

இடமொன்றுமைக்கரனீந்த மெய்ப்பகதெழிற்கிணையாத்

திடமொன்றியவணச் சிங்காரம் வீரஞ்சிரிப்பருளே

யடமின்றியஞ் சினம் குற்சையுஞ் சாந்தமுமற்புதமுங்

கடியென்று மொன்பது மாலிரதத்தைக் காட்டுதற்கே

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

 

 

இடது பக்கத்தை உமைக்கு சிவன் கொடுத்த சரீரத்தின் அழகிற்கு இணையாக உறுதியாகிய வண்ணம் 1.சிங்காரம், 2.வீரம், 3.சிரிப்பு, 4.அருள், 5.அடமில்லாத சினம், 6.குற்சை, 7.சாந்தம், 8.அற்புதம்,  9.கடி என்ற ஒன்பதும் அழகிய ரசத்தைப் புலப்படுத்துவதற்காம்.

பரத நாட்டியம் பயின்று அரங்கேறுவோர் அனைவரும் இந்த ஒன்பது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் முகபாவங்களைக் காட்டும் அழகு தனி அழகுதான்!

–சுபம்–

 

 

தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No.3513)

Research Article written by London swaminathan

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  15-53

 

Post No.3513

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஆதிகாலத்தில் இந்தியர்களுக்கு ஒரே சிந்தனைதான். அவர்கள் உவமைகள் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும் அததகைய உவமைகளை வேறு எந்த பண்பாட்டிலும் காண முடியாது. இதனால் என்ன தெரிகிறது? ஆரியரும் கிடையாது, திராவிடரும் கிடையாது; இமயம் முதல் முதல் குமரி வரை ஒரே சிந்தனைதான். ஒரே பண்பாடுதான். ஒரு உவமையை வைத்து மட்டும் இப்படிச் சொல்லிவிட  முடியாது.  ஏராளமான இடங்களில் இதைக் காணலாம் “யானையால் யானையாத்தற்று” = நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடிப்பது என்பதை வள்ளுவனும் சொல்லுவான். அவனுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாணக்கியனும் அர்த்தசாத்திரத்தில் சொல்லுவான்!

 

தொல்காப்பியனும், காளிதாசனும், சங்கப் புலவர்களும் கிருஷ்ண பரமாத்மா என்ன சொன்னாரோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லுவர்.

 

ஒரே ஒரு உவமையை மட்டும் எடுத்துக்கொள்வோம்:

முத்துமாலை அல்லது ரத்தின மணிமாலை

 

மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய

மயி சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி-கணா இவ

-பகவத் கீதை 7-7

தனஞ்சயா! என்னைக் காட்டிலும் உயர்ந்தது வேறு ஒரு சிறிதும் இல்லை; நூலில் மணிகள் போல இவை எல்லாம் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளன.

 

இது அவதூதோபநிஷத்திலும் உள்ளது

யேன ஸர்வமிதம் ப்ரோதம்  ஸூத்ரே மணிகணா இவ; தத் ஸூத்ரம் தாரயேத் யோகீ யோகவித் ப்ராஹ்மணோ யதி:

 

தொல்காப்பியர் சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற சொல்லையே தனது சுருக்கமான விதிகளுக்குப் (1425) பயன்படுத்தியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கீழேயுள்ள பகுதியில் நூல் (சரடு) என்ற பொருளில் வருகிறது. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நூல்=சூத்ரம் என்றால் ஒரே பொருள்தான்! அதவது சரடு/ நூல் , புத்தகம்

 

நூற்பா=சூத்ரம் 1426

நேரின மணியை நிரல்படவைத்தாங்கு

ஓரினப் பொருளை ஒருவழி  வைப்பது

ஒத்து என மொழிப உயர்மொழிப் புலவர்

 

பொருள்:– ஒரே மாதிரியான மணிகளை வரிசையாகக் கோர்ப்பதுபோல ஓரினப் பொருள்களைத் தொகுத்து ஒரு முறையில் வைப்பதை ஒத்து என்று கூறுவர் சிறந்த புலவர்.

 

சூத்திரம் 1425-ல் சூத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் சூத்திரம் 1426-ல் மணி என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் தொல்காப்பியர் கையாளுவதையும் மறந்துவிடக் கூடாது.

 

இதையே மற்ற புலவர்கள் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கையில் மேலும் வியப்படைவோம்.

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு (குறள் 1273)

 

பொருள்:-

கோத்த மணியின் ஊடே விளங்கும்  நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளே (இவள் மறைத்து வைத்தாலும்) தோன்றுகின்ற குறிப்பு ஒன்று இருக்கின்றது.

 

காளிதாசன் பயன்படுத்தும் இடங்கள்:

 

ரகுவம்சம் 1-4; 6-28; 7-10, 8-64, 16-62; விக்ர 5-2, 5-3

எனக்கு முன்னால் இருந்த பெரியோர்களால் செய்ய்ப்பட்ட ராமாயணம் இந்த துவாரமுடைய சூரியவம்சத்தில் என்னுடைய போக்கு, வஜ்ரத்தினால் துளியிடப்பட்ட ரத்தினத்தில் நூல் (எளிதாகச்) செல்லுவது போல இருக்கிறது- ரகுவம்சம்.1-4

 

 

இந்த அங்கதேச மன்னர், பல தேச மன்னர்களை வென்றதால் அவர்களுடைய மனைவிமார் முத்துமாலைகளை இழந்தனர். இப்பொழுது அவர்கள் அழுவதால் விழும் கண்ணீர்த்துளிகள் நூலின்றியே புது முத்துமாலைகள் சூட்டியதைப் போல விளங்கின – ரகுவம்சம்.6-28

 

(இந்த உவமையைப் பல தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி இருப்பதைக் கீழே காண்க)

 

ஒரு பெண் கால் கட்டைவிரலில் நூலைக் கட்டி, அதில் மணிகளைச் சேர்த்து மாலை கட்டிக் கொண்டிருந்தாள். அஜன் வருவதைக் கேட்டவுடனே நூலின் மறுமுனையை விட்டுவிட்டு அவனைப் பார்க்க ஜன்னலுக்கு ஓடினாள். அவள் காலில் நூல் மட்டுமே இருந்தது. மணிகள் சிதறி ஓடின- ரகுவம்சம்..7-10

 

பெண்கள் தனது உள்ளங்கைகளால் தண்ணீரை அடித்து விளையாடினர். அந்த வேகத்தில் அவர்களுடைய முத்துமாலைகள் இற்றுப் போயின. ஆனால் அவர்கள் எழுப்பிய நீர்த்துளியானது அவர்களுடைய மார்பகங்கள் மேல் மணிகள் போல இருந்ததால் மாலை நழுவியதை அவர்கள் உணர  முடியவில்லை.-ரகுவம்சம்.18-62

 

பாதி தொடுக்கபட்ட மேகலை என்னும் வரிகள் ரகுவம்சத்தில் (ரகுவம்சம்.8-64) வருகிறது.

 

சங்கத்   தமிழ் இலக்கியத்தில்

 

அகம்225 (எயினந்தை மகன் இளங்கீரனார்

பூத்த இருப்பைக் குழைபொதி குவீணர்

கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர

பொருள்:-

குவிந்த துளை உடைய பூங்கொத்துகள் நூலினின்று அறுந்து விழும் துளையுடைய முத்தைப் போல சிவந்த நிலத்தில் உதிரும்.

 

குடவாயிற் கீரத்தனார் பாடிய (அகம்.315) பாடலில்

கோடை உதிர்த்த குவி கண் பசுங்காய்

அறுநூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப

வறு நிலத்து உதிரும் அத்தம்

 

பொருள்:-

நெல்லி மரத்தில் மேல் காற்று உதிர்த்த, குவிந்த கண்ணை உடைய பசிய காய்கள், நூல் அறுபட்டு விழுந்த துளையுடைய , பளிங்குக் காசுகளைப் போல வெற்று நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறி….

 

 

 

இதே புலவர் (அகம்.289) இன்னொரு பாட்டில், ”

கண்பனி நெகிழ்நூல்முத்தின், முகிழ் முலை தெறிப்ப”

பொருள்:-

 

உடன் அவர் இல்லாமையை எண்ணி வருந்த, நூலறுந்து விழும் முத்துக்களைப் போல கண்ணீர் முலை மீது சிந்தக், குற்றம் இல்லாத படுக்கையில் அழகிய மெல்லிய அன்னச்சிறகால் ஆகிய  அணையைச் சேர்த்து………………………………….

 

இளங்கீரனார் ஒவ்வொரு பாட்டிலும் காளிதாசன் பயன்படுத்திய இரண்டு விஷயங்களைப் பயன்பத்துகிறார் என்பது அவர் காளிதாசனைக் கரைத்துக்குடித்தவர் என்பதைக் காட்டும்.

 

குறுந்தொகைப் பாடலில் (51) குன்றியனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

கூன் முண் முண்டகக் கூர்ம்பனி மாமல்ர்

நூலறு முத்திற் காலொடு பாறித்

துறைதொறும் பரக்குந்தூமணல் சேர்ப்பனை

 

பொருள்:-

வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலரானது, நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றால் சிதறி நீர்த்துறைகள் உள்ள இடம்தொறும் பரவும் தூய மணல் பரப்பை………………

 

குறுந்தொகை  104-ல் காவன் முல்லைப்  பூதனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளமேயும்

 

பொருள்:-

தோழி, ஒன்று கூறுவன்; கேட்பாயாக, நம் தலைவர் (காதலர்) நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல, குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை,  விடியற்காலத்தில் பசுக்கள் மேயும்…………..

கலித்தொகையிலும் (பாடல் 82, மருதக்கலி, மருதன் இளநாகன்) கண்ணீர்த் துளிகளை அறுந்த முத்துமாலைக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.

 

தமிழ் பக்தி இலக்கியத்தில் நிறைய இடங்களில் முத்துமாலை  கோத்தல், அறுந்த முத்துமாலை உவமைகளை  காணலாம்.

 

“செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில்

சிந்தனை ஒன்றுடையாள்” (பாரத தேவி)– பாரதியார்

 

–சுபம்—

 

மர்ம எண் 8-ம், உலகிலேயே பழைய பெண்கள் பெயர்களும்!

saraswati

Written  by London Swaminathan

Research Article No. 1965

Dated 1 July 2015.

Uploaded at London time : 5-45 am

ரிக் வேதம் உலகிலேயே பழைய நூல் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இரா. மாக்ஸ்முல்லர் இதை யாரும் கி.மு.1200-க்குக் கீழே கொண்டு வரமுடியாது. உலகில் எந்த சக்தியும் இதன் காலத்தைக் கணிப்பது அரிது என்று கடைசியாகச் சொல்லிவிட்டு இறந்து போனார். ஏ.சி.தாஸ் என்பவர் வேத காலம் கி.மு.25,000 என்றும் எஸ்.வி.வெங்கடேஸ்வரா கி.மு.11,000 என்றும் பாலகங்காதர திலகர், ஜெர்மன் ஆராய்ச்சியாளர் ஹெர்மன் ஜாகோபி ஆகியோர் கி.மு 4500-க்கும் முன் என்றும், வீபர் கி.மு 2780 என்றும், ஹாக் கி.மு.2400 என்றும், விண்டர்நீட்ஸ் கி.மு.2000 என்றும், பர்ஜிட்டர் கி.மு.2050 என்றும்,மக்டொனெல், கீத் கி.மு.1400 என்றும், மைகேல் விட்சல் கி.மு.1700 என்றும், ஸ்ரீகாந்த் தலகரி கி.மு.2000க்கு முன் என்றும் செப்புவர்.

ரிக் வேதத்தில் மிகப் பழைய விஷயங்கள் ரகசிய சங்கேத மொழிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு சிறிய ரகசிய விஷயத்தைப் பார்ப்போம். ஆப்ரி சூக்தம் என்று ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு துதி உண்டு. இது அக்னி தேவனை நோக்கிப் பாடப்பட்டாலும்  பல தெய்வங்களின் பெயர்களும் அடிபடுகின்றன. யாக, யக்ஞத்தில் பயன்படுத்தும் புனிதப் பொருட்களைப் போற்றும் துதியெனவும் அறிஞர் பெருமக்கள் மொழிவர். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தத் துதியில் சரியாக எட்டாவது பத்தியில் மூன்று பெண் தெய்வங்களின் பெயர்கள் வருகின்றன. ஏன் எட்டாவது பத்தியில் இப்படிப் பாடுகிறார்கள்? எட்டு எண்ணுக்கும் இந்தப் பெண் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்கும் நியுமெராலஜி NEUMEROLOGY (எண் ஜோதிடம்) தெரியுமா? அல்லது பாணினிக்கும் முன்னால் சம்ஸ்கிருத இலக்கணம் எழுதியோர் ஏதேனும் விதி இயற்றி இப்படிப் பாடச் சொன்னாரா? என்பதெல்லாம் மர்மமாக உள்ளது.

சம்பந்தர் பாடிய தேவார பதிகத்தில் ராவணன் கர்வத்தை ஒடுக்கியது ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு குறிப்பிட்ட எண் பத்தியில் வரும், பதிகத்தின் பலன் கடைசியாக வரும் என்று நமக்குத் தெரியும். ஆனால் ரிக் வேதம் என்பது 450-க்கும் மேலான கவிஞர்கள் வாய்மொழியாக வந்தது. அவ்வளவு பேரும் ஒரே காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் அல்ல. 500 ஆண்டுக் கால எல்லைக்குள் வாழ்ந்தவர்கள். அவ்வளவு நீண்ட காலத்தில் பாடிய ஒவ்வொரு குடும்பத் தலைமை ரிஷியும் (புலவர்) எப்படி எட்டாவது பத்தியில் இதைச் சொன்னார்கள்? ஏன்? என்ற மர்மம் நீடிக்கிறது. இப்படி ஒரு பாணி (ஸ்டைல்) வகுக்கப் படவேண்டுமானால் அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னேயே பாடத் துவங்கினாலன்றோ இப்படி ஒரு நெறிமுறை உருவாகும்!

“இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை” என்பது—ஆன்றோர் வாக்கு ஆயிற்றே!! ஆகையால் வேதங்களுக்குப் பின்னால்தான் இலக்கணம் வரமுடியும்.

(ரிக் வேதம் என்பது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. 10 மண்டலங் களில் ஆறு மண்டலங்கள் ஒரே ரிஷியின் வம்சத்தில் வந்தோர் பாடிய பாடல்களாக வியாசர் தொகுத்து தந்திருக்கிறார். இவற்றை குடும்ப (மண்டலம் 2–7) மண்டலங்கள் எனலாம்.

sarasvati-map-crop

இன்னும் ஒரு அதிசயம்!

யார் அந்த மூன்று பெண் தெய்வங்கள்?

சரஸ்வதி, பாரதி, ஈலா; ஒரே ஒரு இடத்தில் பாரதிக்குப் பதிலாக மாஹி (SARASVATI, BHARATI, ILA).

இதில் என்ன அதிசயங்கள் இருக்கின்றன என்று கண்போம். நமது வேதங்களைப் படித்த வெளிநாட்டுகாரகள் உள் நோகத்துடன் எழுதியதால் பல விஷயங்கள் அவர்களுக்குப் புரியவில்லை. வேத கால மக்கள், ஆண் தெய்வங்களை வணங்கினர், நாகரீகமற்ற பழங்குடி மக்கள் பெண் தெய்வங்களை வணங்கினர் என்று உளறிவிட்டுப் போய்விட்டனர். அவர்கள் உளரியதெல்லாம் ஆங்கிலத்தில் இருந்தவுடன் நம்மவர்கள் அதைப் பார்த்து, அட! அம்மாடியோவ்! இது ஆங்கில மொழியாயிற்றே, ஆகவே அவன் அறிஞன்தான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். உண்மையில் இன்று வரை தொடர்ந்து பெண் தெய்வங்களை வணங்குவது உலகில் இந்துக்கள் மட்டுமே. அருள் சுரக்கும் பூமி, நதிகள் ஆகிய அத்தனைக்கும் பெண்கள் பெயரையே சூட்டினர். எல்லா நல்ல குணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் பெண்மை வடிவத்தில் கண்டனர் (கருணா, பிரேமா, சத்யா, சுகுணா, சுகந்தா).

சரஸ்வதி என்னும் நதி வேத காலத்தில் ஓடிய பிரம்மாண்டமான நதி. அது வறட்சியினாலோ, நில அதிர்ச்சியினாலோ மண்ணில் புதைந்து மறைந்த பின்னரே கங்கை, சிந்து ஆகியன பிரபலமாயின. சரஸ்வதி நதியின் நீர் உயிர் கொடுப்பது போல, சரஸ்வதி என்னும் தெய்வம் உள்ளத்துக்கு உரமூட்டியது. தெய்வமாகவும், தாயாகவும், மொழியாகவும் வணங்கப்பட்டவள் சரஸ்வதி. உலகிலுள்ள பழைய நாகரீக பெண் தெய்வங்கள் எல்லாம் மியூசியங்களில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டுப் போயின. சரஸ்வதியோ இந்து கலாசாரம் பரவிய நாடுகளில் எல்லாம் மக்களின் உள்ளத்தில் உறைகிறாள் இன்றும்!

இதைவிட உலக அதிசயம்! இமயம் முதல், இலங்கையின் தென் கோடி கண்டி/கதிர்காமம் வரை இன்றும் சரஸ்வதி பாரதி, ஈலா பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஈலா என்பது, குஜராத்தி இந்துக்கள் அதிகம் வைக்கும் பெயர். நாம் சரஸ்வதி என்போம். சிருங்கேரி சங்கராச்சார்யார் பெயர்கள் எல்லாம் பாரதி என்றும் காஞ்சி சங்கராசார்யார்கள் பெயர்கள் எல்லாம் சரஸ்வதி என்றும் முடியும்.

gold-number-8

இதைவிட பெரிய அதிசயம்!

யதுகுல (யாதவர்) மக்கள் ஆடுமாடு மேய்த்துக் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று யூதர் ஆயினர். யது = யூத (Yadu = Yuda= Juda). நாம் ‘ய’ (Y) என்றால் மற்றவர்கள் மொழியில் ‘ஜ’ (J) ஆகும். அவர்கள் யேசு என்றால், உலகம் அதை ஜீஸஸ் என்று சொல்லும். ஆகையால் ஜூடாயிஸம் (யூத மதம்) என்றனர். அவர்களில் மூத்தவர் ஆப்ரஹ்ம (ஆபிரகாம்) அவருடைய மனைவி பெயர் சரஸ்வதி (சாரா). ஆக அவர்களும் கூட, பிரம்மாவின் பெயரையும் அவர் மனைவி சரஸ்வதி பெயரையும் வைத்துக் கொண்டனர். நாம் சரஸ்வதியை செல்லமாக சச்சு அல்லது சரசு என்போம். அவர்கள் ஸாரா என்பர்.

(ஜ, ய என்னும் எழுத்துக்கள், ர, ல என்னும் எழுத்துக்கள் உரு மாறுவது பற்றி காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவையும் படித்துப் பயன் பெறுக. அவர் மிகப்பெரிய மொழியியல் அறிஞர். அவர் மட்டும் சங்கராசார்யார் ஆகாமல் மொழியியல் அறிஞர் ஆகியிருந்தால் மேல்நாட்டு மொழியியல் கொள்கைகள் எல்லாம் இவ்வளவு நேரம் குப்பைத் தொட்டிக்குள் போயிருக்கும். யூத மதத்தில் வேத மந்திரம் இருப்பதை எடுத்துக் காட்டி “ரப்பைகளையே” வியக்கவைத்தவர். ரப்பை= யூத மத சாஸ்திரிகள்).

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு: ரிக் வேத துதிகளில் எட்டாம் பத்தியில் வரும் ஈலா என்பது மத்தியக் கிழக்கில் ILA இலா, IDA இடா என்ற தெய்வங்களின் பெயராக உரு மாறியது.

ஆப்ரி APRI SUKTA சூக்தம் வரும் இடங்கள்:

ரிக் வேதம்: RV 3-4-8; 7-2-8; 2-3-8, 1-13-8/9; 1-188-8; 5-5-8; 9-5-8; 10-70-8;10-110-8. (எட்டு என்பதைக் கவனிக்க)

மூன்று தேவியர் வரும் யஜூர் வேதப் பாடல்கள்:

Yajur Veda 28-18; 27-17; 20-43 and several other places.

R veda

ஆப்ரி சூக்தம் பற்றி ஒரு சர்ச்சை!

இலக்கிய விஷயங்களில் எல்லாவற்றிலும் முதன்மை வகிப்பது சம்ஸ்கிருதமே! உலகின் முதல் GRAMMAR இலக்கண நூல், முதல் காம EROTICS சாஸ்திரம், முதல் DICTIONARY அகராதி, நிகண்டு, மொழியியல் LINGUISTICS  ஆராய்ச்சி, மொழியியல் ஆய்வு, சொற்பிறப்பியல் ETYMOLOGY ஆய்வு, நூல் யாத்தல், பெண் கவிஞர்களின் பங்கு பணி, பெண்களுக்கான முதல் SYLLABUS சிலபஸ் (64 கலைகள்), முதல் நாட்டிய சாத்திர நூல், சங்கீத சாத்திர நூல், முதல் THESARUS நிகண்டு — முதலிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதமே உலகில் முதன்மை வகிக்கிறது. இதே போல புத்தகங்களுக்கு இண்டெக்ஸ் INDEX போடுவதிலும் சம்ஸ்கிருதமே FIRST! அதாவது முதல்! அணுக்ரமணி என்ற வேத இண்டெக்ஸில் எல்லா புலவர் பெயர்களும் உள்ளன.

இந்த இண்டெக்ஸில் ஆப்ரி சூக்தங்களை இயற்றிய வெவ்வேறு பெயர்களைப் பார்த்த ப்ளூம்ஸ்பீல்டு என்பார், “ பாருங்கள் இரண்டு மண்டலங்களில் ஒரே மாதிரி ஆப்ரி சூக்தங்கள் உள்ளன. ஆனால் வசிட்டர், விஸ்வாமித்திரர் என்று இரண்டு பெயர்களை அணுக்ரமணி கூறுகிறது. ஆகாயால் அணுக்ரமணி பிழையுடைத்து என்று நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். ஆனல் பிற்காலத்தில் வந்தவர்கள் அது ஒரு அரைவேக்காட்டுத் HALF BAKED தனமான வாதம் என்பதை ஆதாரங்களுடன் காட்டினர்.

கிரேக்க கவிதைகளில் ஒரே வரி பல முறை வருகிறது. பாதி வரி பல முறை வருகிறது. ஒரே உவமை பலமுறை வருகிறது; சில சொற்றொடர்களை எல்லோரும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று கிலபர்ட் மர்ரே GILBERT MURRAY  என்பவர் எடுத்துக் காட்டினார். இதை தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய இந்திய வேத அறிஞர் ஸ்ரீகாந்த் தலகரி SHRIKANT G.TALAGERI  என்பார், இந்த் ஆப்ரி சூக்தங்களைப் பயன்படுத்தி ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களைக் கால வரிசைப் படுத்தியிருக்கிறார்.

book05

தமிழில் மீண்டும் மீண்டும் வரும் வரிகள்

இந்திய வரலாற்றை அல்லது பண்பாட்டை எழுதப் புகுவோருக்கு பாரத மாதாவின் இரு கண்காளான தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியாவிடில் தப்பும் தவறுமாக பிதற்றத் துவங்கி விடுவார்கள். தமிழில் ஏராளமான வரிகள் திரும்பத் திரும்ப வரும்

ஐங்குறு நூறு என்னும் 500 பாடல் தொகுப்பில் நூற்றுக்கும் மேலான வரிகளை எல்லா புலவர்களும் பயன்படுத்துவர்.

புற நானூற்றில் பல் சான்றீரே! என்ற வரிகள் இரண்டு பாடல்களில் வரும். சேண் விளங்கு முதலிய சொற்றொடர்களைப் பலரும் பயன்படுத்துவர். இது வாய்மொழி இலக்கியம் துவங்கிய காலத்தில் எல்லா மொழிகளிலும் உண்டு.

ஆனால் தொல்காப்பியர் போல எவரும் இலக்கண நூலில் இப்ப்டிச் செய்ததில்லை. தொல்காப்பியத்தில் ஒரே பத்தியில் தேவையில்லாமல் ஒரு வரியை ஆறு முறை (பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) கூறியிருக்கிறார் ஒல்காப்புகழ் தொல்காப்பியர்.ஏதோ நர்சரி ரைம் Nursery Rhyme போலப் பாடிவிட்டார். “என்ப”, “மொழிப” போன்ற சொற்களை 287 முறை சொல்கிறார். ஒரே சூத்திரத்தில் (சூத்திரம் 1568) ‘என்றலும்’ என்பதை ஆறு முறை சொல்லுவார்’ இன்னும் ஒரு இடத்தில் ஒரே சூத்திரத்தில் ‘அறிவதுவே’ என்பதை ஏழு முறை சொல்லுவார் (சூத்திரம் 1526). அதாவது சொற்செட்டு என்பது அவருக்கில்லை. பாணினிக்கும் இவருக்கும் இடைவெளி 1000 மைல் என்றால் மிகையில்லை!!

தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி

tolkappian-katturai

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1369; தேதி அக்டோபர் 25, 2014.

( கேள்விகள் –சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-தொல்காப்பியத்திலிருந்து )
1.ஒல்காப் புகழ் தொல்காப்பியனாரே! தமிழனுக்கு கடவுள் யார்?
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.துவக்கமே சுபமாக இருக்கிறது. விஷ்ணு, முருகன், இந்திரன், வருணன் நம் கடவுள்கள்.— வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம் என்று பனம் பாரனார் கூறுகிறாரே?

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழா அமை இசைக்கும் சொல்லே (398)
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச் சொற் கிளவி (சூத்திரம் 400)

3.ஆம், புரிகிறது. செந்தமிழ் நிலத்தில் பேசும் இயற்சொற்கள் மாறாது– பக்கத்திலுள்ள 12 பகுதிகளிலிருந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள். இது தவிர திரி சொல், வட சொல் ஆகியனவும் உண்டு. ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், உணவு, மிருகம், மரம், பறவை, முரசு, தொழில், இசை ஆகியவும் உண்டா?

தெய்வம் உணா மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகை பிறவும் கருவென மொழிப. (பொருள் 1-18)

4.சரி. அதைப் பட்டியலில் பார்த்துக்கொள்கிறேன். மனிதர்களுக்கு ஆறு அறிவு என்றால் மற்ற உயிரகளுக்கு எவ்வளவு அறிவு?

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

15FR-_TOLKAPPIYAM__1120361e

5.அது சரி, 1610 சூத்திரங்களில் 68 இடங்களில் ‘’என்மனார்’’ என்றும், 15 இடங்களில் ‘’வரையார்’’ என்றும் இன்னும் பல இடங்களில் ‘’என்ப, மொழிப’’ என்றும் கூறுகிறீர். இதைப் பார்த்தால் உமக்கு முன்னரே நிறைய விதிகள் இருந்து நீவீர் அவைகளத் தொகுத்தது போல் அல்லவோ இருக்கிறது?
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (சொல் 402)

6.யான் பெற்ற இன்பம் இவ் வையகம் என்றும் ‘’லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து’’ — என்றும் பெரியோர்கள் கூறுகிறார்களே. நீங்கள். . . . ..

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்

7.உங்களுடைய உண்மைப்பெயர் த்ருணதூமாக்கினி என்று சிலர் சொல்லுகிறார்கள். நீங்கள் வேதம் கற்ற பார்ப்பனரா?
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளவிற்கோடல் அந்தணர் மறைத்தே
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென

8.கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழரும் உங்கள் நூலைப் புகழ்கிறார்கள். நீரோ ‘’தர்மார்த்த காமம்’’ என்பதையும் கடவுளையும் பற்றிப் பேசுகிறீர். உண்மை என்ன?
கொடிநிலை,கந்தழி வள்ளியென்ற மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை

10.அட, நீரும் வள்ளுவனைப் போல அறம், பொருள் இன்பம் (தர்ம அர்த்த காம) பற்றிப் பேசிவிட்டீர் — பெண்கள் வாழ்க — என்பது உமது கொள்கையாமே?
செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான

11.தமிழில் மாற்றங்களை ஏற்க வேண்டுமா?
உணரக் கூறிய புணரியல் மருங்கிற்
கண்டு செயற்குரியவை கண்ணினர் கொளலே

tolkappaima

12.சரி. நீர் மாற்றங்களை ஆதரிப்பதற்கு நன்றி. ‘’பசுப் பாதுகாப்பு இயக்கம்’’ பற்றியும் நீர் பேசினீராமே?
வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
ஆ தந்தோம்பல் மேவற்றாகும் (1003)

13.போர் வேண்டாம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். உமது கருத்து என்னவோ?
இரு பெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகை நிலை

14.நன்றி. நீரும் போரை எதிர்ப்பதற்கு நன்றி. வள்ளுவன் சுருங்கs சொல்லி விளங்கி வைத்தான். நீர் எதிர்பார்ப்பது என்ன?
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே

15.அற்புத மாகச் சொன்னீர்கள். கண்ணாடியில் பார்ப்பது போல தெளிவு வேண்டும். அடடா, அருமை, அருமை. நன்றி! தொல்காப்பியனாரே!

முந்தைய 60 வினாடி பேட்டிகள்
இவைகளையும் படிக்க வேண்டுகிறேன்

1.அப்பருடன் 60 வினாடி பேட்டி
2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி
3.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி
4.இளங்கோவுடன் 60 வினாடி பேட்டி
5.கம்பனுடன் 60 வினாடி பேட்டி
6.கண்ணதாசனுடன் 60 வினாடி பேட்டி
7.காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி
8.சாக்ரடஸுசுடன் 60 வினாடி பேட்டி
9.சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி
10..சுந்தரருடன் 60 வினாடி பேட்டி
11.தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி
12.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி
12.திருஞானசம்பந்தருடன் 60 வினாடி பேட்டி
13.திருமூலருடன் 60 வினாடி பேட்டி
14.பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி
15.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
16.பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி
17.மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி
18.வள்ளுவருடன் 60 வினாடி பேட்டி
19.ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி
20.சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி
21.தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி
22.திரிகூடராசப்ப கவிராயருடன் 60 வினாடி பேட்டி

English 60 second Interviews:
60 second Interview with Swami Vivekananda
60 second Interview with Socrates
60 second Interview with Adi Shankara
60 second Interview with Sri Sathya Sai Baba

contact swami_48@yahoo.com

‘இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு’

 

Pictures are drawn by Maniam Selvam for another book.Thanks.

வணக்கம். என் பெயர் நக்கீரன். சென்ற 4 வாரங்களில் ‘சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை’,  ‘மன்னிக்க வேண்டுகிறேன்”,  “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”,  ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்புகளில் பேசினீர்கள். இன்று நாம் அலசும் விஷயம் ‘’இன்பம் எங்கே?’’ யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம்.

 

திருமூலர்:

நான் பாடியதை முதலில் படியுங்கள், இன்பம் என்ன என்று விளங்கும்:

“முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” (திருமந்திரம்)

“யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உயர் திருமந்திரம்தான்

தான் பற்றப் பற்ற தலைப்படும்தானே”  (திருமந்திரம்)

(இறை வழிபாடே இன்பம் தரும்)

‘’ஆசை விடவிட ஆனந்தம் ஆகுமே’’

 

வள்ளுவர்:

என்னுடைய குறளில் 29 இடங்களில் இன்பம், இன்புறுவது என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.

‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)

‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)

‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)

‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)

‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)

 

அப்பர்=திருநாவுக்கரசர்

நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்

ஏமாப்போம் பிணி அறியோம் இடர்வோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை. . . . .

 

மாணிக்கவாசகர்

‘’ இன்ப ஊர்தி ‘’ (சிவ பெருமான்)

‘’பால் நினைந்தூட்டும் தாயினும்

சாலப் பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து

புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே’’

 

’ஆராத இன்பம் அருளும் மலை போற்றி’’

 

நம்மாழ்வார்

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதுஇல தந்திடும்

என் வள்ளலேயோ (திவ்யப் பிரபந்தம் 3298)

தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே (திவ்யப் பிரபந்தம் 3834)

 

தாயுமானவர்

‘’எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி

யாமொன்றும் அறியோம் பராபரமே’’

 

பாரதிதாசன்

அட நான் கூடத்தான் இன்பத் தமிழ் பற்றிப் பாடிய பாடலில்

தமிழுக்கும் அமுதென்று பேர்—அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று ஒரே பாடலில் ‘’இன்பத் தமிழ்’’ என்ற சொல்லை எட்டு முறை பயன்படுத்தி தமிழ்தான் இன்பம் என்று நிரூபித்திவிட்டேன்.

பாரதி

என் சீடன் பாரதிதாசன் கூறியது முற்றிலும் உண்மையே. அத்தோடு சுதந்திரமும் ஆனந்தம் தரும். உலகே ஒரு இன்பக் கேணி என்று வேதம் சொல்லுவதையும் கணக்கிற் கொள்ள வேண்டும். இதோ கேளுங்கள்;

‘’செந்தமிழ் நாடெனும் போதினிலே—இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே’’

‘’ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’’

‘’ஒன்று பரம் பொருள்- நாம் அதன் மக்கள்

உலகு இன்பக் கேணி என்றே- மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை’’

‘’தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா’’

‘’தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்’’

 

அருணகிரி

‘’என் பிறப்பு பங்கம் சிறைப்பங்கம் சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே’’ (முருகன் திரு அடியே இன்பம்)

‘’சுரர்ச் சங்கம் துதித்து அந்தஞ்சு எழுத்து இன்பம் களித்து உன்பண் சுகத்த உய்ந்து இன்பு அலர்’’ (ஐந்தெழுத்தே இன்பம்)

தொல்காப்பியர்:

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (தொல்காப்பியம்)

சினிமா பாட்டு

மருதகாசி: ஐயா, என் பெயர் மருத காசி. நான் எழுதிய பாடலில் இன்பம் என்றால் என்ன என்று சினிமா பாட்டு வடிவிலேயே சொல்லிவிட்டேன்; நல்ல மனைவியும் மக்களும் தான் ஒருவனுக்கு இன்பம் தருவர்:

இன்பம் எங்கே இன்பம் எங்கே – (திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)

 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (2 முறை)
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை – இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை (2 முறை)
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

 

நக்கீரன்

நன்றி. தேச சுதந்திரம், ஆன்ம சுதந்திரம், தமிழ் மொழி, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், முருகன் திருவடி, சிவபெருமான், ஐந்தெழுத்து, விஷ்ணு, இறை வழிபாடு, தருமம் என்பன எல்லாம் இன்பம் பயக்கும் என்று அருமையான கருத்துக்களை முன் வைத்தீர்கள். ஆயினும் 29 குறட் பாக்களில் இன்பம் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவனுக்கு எல்லோரும் ஒரு ‘’அப்ளாஸ்’’ கொடுக்கும் படி வேண்டுகிறேன். நமது அடுத்த வார தலைப்பு ‘’வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’’ (பலே பாண்டியா திரைப் படம்) நன்றி, வணக்கம்.

 contact swami_48@yahoo.com

 

3 தமிழ் சங்கங்கள்: கட்டுக்கதையா? உண்மையா?

(படத்தில் புலவர் தருமியும் இறையனாரும்)                                                          தலை, இடை, கடை என மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன என்றும் அவைகளில் முதல் இரண்டு சங்கங்கள் கடலுக்குள் போய்விட்டன என்றும் படிக்கிறோம். இந்த சங்கங்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறுவது மிகைப் படுத்தப் பட்ட செய்தியாக உள்ளது. கடைசி தமிழ் சங்கத்துக்கு நிறைய ஆதாரம் இருந்தாலும் அதைப் பற்றியும் விடைகாண முடியாத பல புதிர்கள் உள்ளன. பாணிணீயத்துக்கு உரை எழுதிய பதஞ்சலி மஹரிஷியின் அணுகு முறையையும் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாக்ஸ்முல்லர் பின்பற்றிய முறையையும் பயன்படுத்தி ஒரு விடை காண்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

 

தமிழ் மொழியை வளர்க்க, பாண்டிய மன்னர்கள், தமிழ் சங்கங்களை நிறுவிப் புலவர்களை ஆதரித்து வந்தனர். தென் மதுரையில் இருந்த முதல் சங்கம் சுனாமிப் பேரழிவில் கடலுக்குள் போனது. பின்னர் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் இருந்தது. மற்றொரு சுனாமி பேரலை ஏற்படவே அதையும் கடல் விழுங்கியது. பின்னர்தான் மூன்றாம் தமிழ்சங்கம் கூடல் மாநகர் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் மதுரை மாநகரில் அமைக்கப் பட்டது.

 

மதுரையில் கடைச் சங்கம் இருந்ததற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. சங்கத் தமிழ் புலவர் பெயர்களில் நாற்பதுக்கும் மேலான பெயர்கள் மதுரை என்ற அடைமொழியுடன் துவங்குகிறது. திருவாசகம், திருக்கோவையாரில் “தண்ணார் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டான்” பற்றிய குறிப்புகள் வருகின்றன. அப்பரும் ஆண்டாளும் சங்கத் தமிழ் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர். தருமி திருவிளையாடல் கதையையும் தமிழ் சங்கத்தையும் ஒரே பாடலில் அப்பர் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் வந்த செப்பேடுகளில், கல்வெட்டுகளில் சங்கம் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருவிளையாடல் புராணத்தில் நக்கீரர்- சிவ பெருமான் மோதல், சங்கப் புலவர்களிடையே ஏற்பட்ட போட்டி, பூசல், பொறாமை பற்றியும் பல கதைகள் உள்ளன.

நமக்கு இப்பொழுது கிடைத்துள்ள சங்க நூல்கள் 18. அவை பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் ஆகும். 2000 க்கும் அதிகமான பாடல்கள் அதில் உள்ளன. 470 புலவர்களுக்கு மேல் அவைகளைப் பாடியுள்ளனர்.

தமிழ் கெழுகூடல் (புறம் 58), என்றும் தமிழ் வையை தண்ணம்புனல் (பரி 6-60) என்றும் “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் – மகிழ் நனை மறுகின் மதுரை (சிறுபாண்) என்றும் சங்கப் பாடல்களில் படிக்கிறோம்.

 

கடைச் சங்கம் பற்றி எழும் கேள்விகள் இவைதாம்:

இறையனார் களவியல் உரையில் 49 சங்கப் புலவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சங்கப் பாடல்களை 470 க்கும் மேலானோர் பாடியுள்ளனர். இவர்களில் யார் அசல்-ஒரிஜினல் சங்கப் புலவர்கள் என்று தெரியவில்லை. ஊமைப் பையன் ஒருவன் முன்னால் பாடச் செய்து அவன் யார் பாட்டுக்கு உருகுகிறானோ அவர்களே உண்மைப் புலவர்கள் என்ற டெஸ்டில்-சோதனையில் கபிலர், பரணர், நக்கீரர் ஆகியோர் தேறியதாக திருவிளையடல் புராணம் கூறும்.

கி.பி. 470 ஆம் ஆண்டில் வஜ்ரநந்தி என்ற சமண மதத் துறவி தலைமையில் திராவிட சங்கம் என்ற ஒரு சங்கம் இருந்ததாக சமண வட்டாரம் கூறும். அது யார் சங்கம்? தமிழ் சங்கமா? சமணர் தமிழ் சங்கமா? போட்டி, பூசல் பொறாமை இருந்தது உண்மையா? திருவள்ளுவரையும் திணறடித்ததாக தி. வி. புராணம் கூறும் செய்திகள் உண்மையா? இவை எல்லாம் விடை காணப் படவேண்டிய கேள்விகள்.

 

இவைகளை விட நம்ப முடியாத, பிரமிக்க வைக்கும் செய்திகள் முதல் இரண்டு சங்கங்களைப் பற்றியவை ஆகும். மொத்தம் மூன்று சங்கங்களும் சேர்ந்து 10,040 வருடங்கள் இருந்ததாக களவியல் உரை கூறும். அது மட்டுமல்லாது அந்தக் காலத்தில் இருந்த அரசர் எண்ணிக்கை, புலவர் எண்ணிக்கை முதலியனவும் பெரிய தொகையாக உள்ளன. இவைகளை உறுதிசெய்ய வேறு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. மொழியியல் ரீதியில் இவை சாத்தியமும் இல்லை.

தலைச் சங்கம் 4440 ஆண்டுகள் இருந்ததாகவும் இடைச் சங்கம் 3750 ஆண்டுகள் இருந்ததாகவும் கடைச் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்ததாகவும் மொத்தம் மூன்று தமிழ் சங்கங்களும் 10040 ஆண்டுகள் இருந்ததாகவும் இறையனார் களவியல் உரை கூறும். முதல் சங்கத்தில் இருந்த முரிஞசியூர் முடிநாகராயர் பாடல் புறநானூற்றில் உள்ளது. இரண்டாம் தமிழ் சங்க நூலான தொல்காப்பியமும் நமக்குக் கிடைத்துள்ளது. முடிநாகராயர், தொல்காப்பியர் ஆகியோரின் மொழிநடை சங்கப் பாடல்களின் மொழிநடையை ஒத்து உள்ளன. ஆகையால் மொழி இயல் ரீதியில் இவற்றை சங்கப் பாடல் காலத்தில்தான் வைக்க முடியும். மிகவும் பின் போடவோ முன் போடவோ முடியாது.

 

மாக்ஸ்முல்லர், ரிக் வேதத்தின் காலத்தைக் கணக்கிட குத்து மதிப்பாக ஒரு உத்தியைக் கையாண்டார். ஒரு மொழியின் நடை மாற இரு நூறு ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டு சம்ஹிதை, பிராமண, ஆரண்யக இலக்கியங்களுக்கு தலா 200 ஆண்டுகள் வீதம் ஒதுக்கி, உலகின் பழைய மத நூலான ரிக் வேதத்தை யாரும் கி. மு 1200 க்குக் குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறினார். பெரும்பாலான அறிஞர்கள் அவர் கூற்றை ஏற்றனர். அதே விதியை தமிழுக்குப் பயன்படுத்தினால் முதல், இரண்டாம், மூன்றாம் சங்கங்களை 200 ஆண்டு கால கட்டத்துக்குள்தான் வைக்க முடியும்.

 

தொல்காப்பியர் ஒரு அந்தணர் என்றும் அவர் நூல் “நான்மறை முற்றிய” ஒரு ஆச்சார்யர் தலைமையில் நிலந்தரு திரு வில் பாண்டியன் அவையத்துள் நிறைவேறியதாகவும் பழந்தமிழ் நூல்களும் உரை ஆசிரியர்களும் எழுதிச் சென்றுள்ளனர். மாக்ஸ்முல்லரின் மொழி மாற்ற விதியைத் தமிழுக்குப் பயன்படுத்தினால் திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியன நாலாம் ஐந்தாம் நூற்றண்டில் வந்துவிடும்.

அதிகாரம் என்னும் சொல்

மற்றொரு கேள்விக்குறிய வட மொழிச் சொல் “அதிகாரம்” ஆகும். திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் பெயரில் அதிகாரம் உள்ளது. தொல் காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள் உள்ளன. இவை மூன்றும் ஒரே காலத்தில் எழுந்த நூல்களோ என்ற ஐயப்பாட்டை இந்த சொல் எழுப்பும்.

 

தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை என்றும் தொல்காப்பியத்தின் காலம் கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டு என்றும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்வர்.

இதில் ஒரு முக்கிய விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு நிகழ்ச்சி நடந்த காலம் வேறு. அதை பதிவு செய்த காலம் வேறு. சிலப்பதிகார நிகழ்ச்சிகள் நடந்தது இரண்டாம் நூற்றாண்டு. ஆனால் எழுத்தில் வடித்தது 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு. தொல்காப்பிய விதிகள் மிகவும் பழம் தமிழ் விதிகள். அவைகளை தொல்காப்பியர் தொகுத்தளித்த காலம் பிற்காலம். அவரே நூற்றுக் கணக்கான இடங்களில் “என்ப: என்று கூறுவதிலிருந்து அவர் தொகுத்தவரே அன்றி முழு நூலையும் எழுதியவர் அல்ல என்பது புலப்படும். அவருக்கு 4 அல்லது 5 நூற்றண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கண வடிவம் பெற்றிருக்கலாம். அகத்தியம் உள்பட வேறு பல இலக்கண நூல்கள் அவருக்கு முன்னரே இருந்தன.

 

முதல் இரண்டு சங்கங்களின் நூற் பட்டியலைப் பார்த்தால் பல நூல்கள் முழுக்க முழுக்க சம்ஸ்கிருதப் பெயர்களாக உள்ளன (பஞ்ச மரபு, பூத புராணம், மா ப்புராணம், தகடூர் யாத்திரை, பஞ்ச பரதீயம் –இன்னும் பல)

உலகின் முதல் இலக்கண புத்தகத்தை எழுதிய மாமேதை பாணிணியின் அஷ்டாத்யாயிக்கு உரை கண்ட பதஞ்சலி கி.மு இரண்டாம் நூற்றாண்டச் சேர்ந்தவர். பாணிணியை பகவான் பாணிணி என்று தெய்வ நிலைக்கு உயர்த்தியவர். ராமயணத்தில் ராமர் பல ஆயிரம்ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதை நம்பாத பதஞ்சலி, அந்த ஆண்டுகளை 365 ஆல் வகுத்து ராமர் 28 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்று விஞ்ஞான முறையில் விடை கண்டுள்ளார். இதே உத்தியை முச் சங்கங்களுக்கும் பயன் படுத்தினால் ஓரளவுக்குத் திருப்தியான விடை கிடைக்கிறது.

 

முதல் மூன்று சங்கங்களுக்கான ஆண்டுகளை 37ஆல் வகுத்தால் 120+100+50= 270 ஆண்டுகள் கிடைக்கும் ஆக மூன்று சங்கங்களும் 270 ஆண்டுகள் இருந்தன என்பதை மொழியியலும் ஏற்கும். முடிநாகராயர் (முதல் சங்கம்), தொல்காப்பியர், பனம்பரனார், காக்கைபடினியார், முடத்திருமாறன் (இரண்டாம் சங்கம்), ஏனைய 470+ புலவர்களின் (மூன்றாம் சங்கம்) மொழி நடை ஆகியன ஏறத்தாழ ஒன்றே. ஆனால் ஒரு கேள்வி எழும். எதற்காக 37 ஆல் வகுக்க வேண்டும்? இந்த எண்கள் சமணர்களின் கண்டு பிடிப்பு என்றும் அவர்களுக்கு 37 எண்ணின் மேல் ஒரு காதல் என்றும் சில ஆய்வாளர்கள் வாதிட்டனர். இது ஒரு திருப்தியான விட இல்லைதான். ஆனால் மொழி நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது. இதை ஏற்றால் பெரும் எண்ணிக்கை மன்னர்கள், பெரும் எண்ணிக்கை புலவர்களை எப்படி நியாயப் படுத்துவது என்ற கேள்வி எழும். இதற்கும் வலியச் சென்றே விடைகாண வேண்டும். அந்த மன்னர்களின் எண்ணிக்கையில் ஒன்பது என்ற இலக்கத்தை விட்டாலோ அல்லது ஒற்றைப் படை எண் ஆக்கினாலோ ஓரளவுக்கு நம்பத்தகுந்த விடை கிடைக்கும். ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டால் இவைகளை எல்லாம் எழுதியவர்கள் பொய் சொல்லும் நோக்கத்தோடு எழுதவில்லை ஏதோ நமக்கு ஒரு புதிர் போட “சங்கேத” மொழியில் (coded language) எழுதி வைத்துள்ளார்கள் என்றுதான் சொல்ல முடியும்.

 

இதோ கணக்குப் பட்டியல்:

முதல்               இரண்டாம்                மூன்றாம்

ஆண்டு 4440             3700                        1850

மன்னர் 89              59                       49

(மன்னர் எண்ணிக்கையில் 9 என்பதை விட்டால் 17 மன்னர்கள் வரும் (8+5+4=17). 17 மன்னர்கள் 270 ஆண்டுகள் ஆள்வதை உலகம் ஏற்கும்)

புலவர் 4449                  3700                          449

(இதை அந்த நாட்டில் இருந்த மொத்த தமிழ் புலவர்களின் எண்ணிக்கையாக ஏற்பதில் தடை ஏதும் இல்லை)

சங்க உறுப்பினர் 549       69                     49

 

இவ்வளவு விஷயங்களும் சங்கம் என்று ஒன்று இருந்ததை நன்கு உறுதி செய்கிறது. ஒன்றுமே இல்லாமல் அடியார்க்குநல்லாரும் இறையனார் களவியல் உரை கண்டவரும் எழுதியிருக்க மாட்டார்கள். கடல் கொண்ட தமிழ்நாடு, லெமூரியா கண்டம் போன்ற விஷயங்களை “சங்க இலக்கியத்தில் கடல் கோள் (சுனாமி )” என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். (It was published In August 2006 in Ulaka Thamaizar Peramaippu Souvenir,Salem,Tamilnadu)