பக்காத் திருடனுக்கு நிதியமைச்சர் பதவி! (Post No. 2416)

king raja

Compiled by London swaminathan
Date: 23 December 2015

Post No. 2416

Time uploaded in London:- காலை 8-11
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

 

ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”

 

சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?

திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.

சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.

திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.

சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”

 

திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.

சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.

 

மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.

அது என்னடி கதை? என்றான்.

ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.

“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.

 

இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில்  நகர் வலம் வருவதுண்டு.

ராஜா: நில், யார் அங்கே?

திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.

ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்

திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.

 

ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?

திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.

IMG_2802

மறு நாள் அரசவை கூடியது.

ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.

நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.

அவர்  கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.

அரசவைக்கு ஓடோடி வந்தார்.

நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.

 

ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?

நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்

ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?

அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.

குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.

திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.

திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)

ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)

நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.

நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்

ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

 

ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.

 

அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!

 

புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.

சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்.

-சுபம்-

 

THIEF PROMOTED AS FINANCE MINISTER! (Post No. 2415)

king raja

Compiled by London swaminathan
Date: 22 December 2015

Post No. 2415

Time uploaded in London:- காலை 10-31
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

In a town there was a thief. He used to go to ‘his work’ after worshipping in a temple praying for a good ‘harvest’. Every day he saw a big crowd listening to a saint. The saint was giving religious discourses. Sometimes he used to listen to it because of some jokes or stories told by the saint.

 

Suddenly wisdom dawned upon him. One day he visited the saint in the day time.

Thief: Guruji, Namaste!

Guru/saint: My son! Blessings! What brought you here?

Thief: I want to learn some Mantras. Please teach me some mantras.

Guru: Good. What do you do every day for living?

Thief: I am a thief. I have been doing it for the past thirty years.

Guru: What? You have been doing it for 30 years and you want to learn Mantras!

Thief: I want to shine in my life.

Guru: Since you boldly told me the truth that you are a thief, I see something good in you. So here is my Upadesa/teaching. From today onwards ‘Satyam Vada’ i.e. Speak the truth. This is enough for today.

 

Thief: Yes, Guruji! Thanks. I will follow it.

The same night he wanted to try his hand at the palace with the help of powerful mantra ‘Satyam Vada’.

 

At the dead of night, he went round the place with all the tools of his trade: Measuring thread, spade, chisel, ladder and hammer. At the same time the king came out of the palace to find the pulse of the country. Hindu kings always go out in disguise to know what the people think about his rule.

 

King: Hey! Who is it there?

Thief: I am a thief. Today I am going to rob the treasury.

King: Good. I come from outside. I need money. Can I help you? Just give me half of what you get.

Thief: Fine by me. Come on, let us climb the wall.

Since the king know his own palace, he took him straight to the treasury in the pitch darkness.

When they reached the treasury they came across a box. When they opened it they found three big, valuable ruby stones.

King: We are lucky. The very first found itself is valuable.

Thief: Right. Here is one for you and one for me. Let us leave the third stone for the owner.

King: I am surprised. We came to steal. Why do you leave one for the owner/King?

Thief: Look, man. I told you that I would give you half of what I get. If I take the second stone it would not be 50 – 50. If you take the second stone, then again it wouldn’t be half – half. But that is not the only reason. The owner of the stones will be happy to find at least one of his valuables is left out.

The king appreciated his opinion and both of them left the place. The king followed the thief without him knowing. King found out where exactly he lived in the town.

 

IMG_2802

Next day the royal court began its daily session.

King: An important announcement! Spies told me that there was one robbery in the treasury. Did the finance minister who is in charge of treasury know it?

Finance Minister: Oh, King! None of us knew about the theft. We had even our ministerial meeting earlier in the day. I will quickly run to the treasury and give you a report.

When the finance minister went there he saw two gems were stolen and one left out. Greediness blinded him and he took one and put it in his inside pocket.

 

He came straight to the king and reported:

FM: King! Our spies are very efficient and correct. Three valuable gems- all rubies—were missing.

King: Are you sure that all the three gems missing? Nothing was left by the thief?

F M : Which foolish thief in the world will leave one gem?

King: Right. I have got one more bit of information. Guards, Go and get this man from this address. Don’t harm him.

 

The king gave the thief’s address to the royal guards who fetched him in no time.

Thief (shivering): Namaste, Maharaj.

King: What did you do last night?

Thief: I came to your palace with another thief and took two gems from your treasury. I kept one and gave the other to my partner. There was one more gem and I left it for the owner.

King: That is right. I was your partner last night. I came in disguise. Now the third gem is missing. FM, put it on the table at once.

FM: King, how dare you accuse me of theft? I and my forefathers have been serving you for generations.

King: If you don’t place it in front of me, I am going to order body search and your house search.

FM: Pardon me, King. My greediness blinded my eyes. He placed the ruby at the king’s feet.

As soon as he confessed, he was taken to the prison at the order of the king.

 

King: One more important announcement: This thief is appointed as the Finance Minister from today on wards. He is more truthful and more loyal to my kingdom than any one of you.

All the ministers congratulated the newly appointed FM.

The new FM went and met his Guru next day and told him what happened

In the past few days.

Guru: One Vedic command “Satyam Vada” is enough for you to shine in life. I will teach you more next week.

 

–subham–

தஞ்சாவூர் நகைச்சுவை!! தாசி தையனாயகி சமர்த்து!! (Post No. 2414)

IMG_3349

Compiled by London swaminathan

Date: 22 December 2015

 

Post No. 2414

 

Time uploaded in London:- காலை 8-01

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

இந்தக் கதை — பழைய கால தமிழ்நடை, நகைச்சுவை, சமுதாய நிலையைப் பிரதிபலிப்பதால் இங்கே இடப்படுகிறது.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

IMG_3227

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

 

ஒரு ஊரில் தையனாயகி என்ற தாசி ஒருத்தி உண்டு. அவளை ஒரு செட்டியாரும், அவர் மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்பன் செட்டியார் வந்துவிட்டார். மகன், தன்னை ஒளித்துவைக்கும்படி தாசியை வேண்ட, இருட்டாயிருக்கும் சேந்தியிலிருக்கும்படி செய்து, செட்டியாருடன் பேசும் முன்பு, கணக்குப் பிள்ளை வந்துவிட்டார். இதுசெய்தி செட்டியாரறிந்து தன்னை ஒளித்துவைக்கும்படி வேண்டினார். அவரையும் அவ்வாறே சேந்தியிலேற்றினாள்.

 

பின்னர் கணக்குப்பிள்ளை பேசிக்கொண்டிருக்கும் போது அகுதார் வந்துவிட்டார். தற்சமயம் தன்னை ஒளித்துவைக்கும்படி கணக்குப்பிள்ளை வேண்ட, அவரையும் சேந்தியிலேற்றிவிட்டாள். இவர்கள் மூவரும் ஒரே காபி கிளப்பில் உப்பு ஜாஸ்தியாகப் போட்ட உப்புமா சப்பிட்டுவந்தபடியாலே தாகம் அதிகரித்து, ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கூவினார்கள். உடனே அகுதார் இது என்ன கூப்பாடு? எங்கிருந்து வருகிறது? என்று கேட்டார். அதற்கு தாசி “பிரபுவே, எங்கள் குலதெய்வத்துக்கு வருஷவாரி நேத்திக்கடன் செய்வது வழக்கம். அது இந்த வருஷம் நின்றுவிட்டது. அதனால்தான் தாகம், தாகம் என்று கூவுகிறது. கொல்லையில் இருக்கும் மரத்தில் இரண்டு இளநீர் வெட்டிப் போட்டாற் கூவாது” என்றாள்.

 

உடனே வேலையாளை ஏவி, இரண்டு, மூன்று இளநீர் வெட்டி மேலே எறியப்பட்டது. இளநீர் சேந்தியில் விழவே மூவரும் அதை இருட்டில் தடவி எடுத்துக்கொண்டு உடைப்பதற்கு கல்லைத் தேடினார்கள். “இறப்பில் செருகிவைத்த சூரியன் குஞ்சைத் தேடின”. நாட்டுப்புறத்தானைப் போல மூவரும் தேட, மூவர் தலையும் மொட்டையாகவும், அன்று சவரம் செய்துகொண்டதால் தலை மொண்ணையாயுமிருந்தது. அதை குத்துக் கல் என்றெண்ணி ஒருவர் தலைவர் மீது மற்றொருவர் இளநீரை ஓங்கி அடித்தனர். அவர்கள் மூவருக்கும் அதிர்ச்சி தாளாமல் மயக்கம் வந்தது. குய்யோ முறையோ என்ற கூக்குரலுடன் கீழே குதித்தனர்.

 

குலதேவதைதான் கீழே குதிக்கிறது என்று நினைத்த, அகுதார், அந்த தேவதையைச் சாந்தம் செய்யும்படி கூறிவிட்டு ஓட்டம்பிடித்தார். மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் மூடிக்கொண்டு இல்லங்களுக்கு விரைந்தேகினர்.

 

நீதி: எப்போதும் தாசியின் வலையில் அகப்படுவோருக்கு இந்த கதிதான் ஏற்படும். அவர்களால் தொல்லையே தவிர சுகமில்லை.

 

IMG_4359

-சுபம்-

ஆசீர்வாதம் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!( Post No. 2413)

baba-blessing

Written by S NAGARAJAN

Date: 22 December 2015

 

Post No. 2413

 

Time uploaded in London :– காலை 6-16

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!

 

ச.நாகராஜன்

 

பெரியோர்களைப் பணிய வேண்டும் என்று சொல்லும் அறநூல்களை போற்றுகிறோம்.

 

 

அப்படிப் போற்றும் போதே பெரியோர்கள் தம்மிடம் வந்து வணங்கியோரை வாழ்த்துவதிலும் ஒரு அழகை, முறையைக் கையாண்டனர். ஆசீர்வாதம் செய்தனர் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

 

இதை நமது இதிஹாஸ, புராண, காவியங்களில் காணலாம். வேத மந்திரங்களில் வாழ்த்து கூறும் மந்திரங்களைக் கேட்பதே ஒரு புண்ணியம்; அவ்வளவு அழகு; அவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்துக்கள்; ஆசீர்வாதங்கள்.

கோவையைச் சேர்ந்த என்.வி.நாயுடு (N.V.Nayudu) என்னும் சம்ஸ்கிருத ஆர்வலர் தன் வாழ்நாள் முழுவதும் படித்து வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில் நல்ல பகுதிகளைக் குறிப்பெடுத்து வந்தார். அவற்றை 21 தலைப்புகளில் அழகுறப் பிரித்தார். SUBHASHITA COLLECTION ANTHOLOGY என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.

 

 kanna, rajini

இலக்கியங்களைப் படிப்பது மட்டும் போதாது; அவற்றை அடுத்த தலைமுறைக்குப் பொருள் பொதிந்த முறையில் வழங்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு நூல் நல்ல எடுத்துக் காட்டு.

வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள் என்ற முதல் பகுதியில் மட்டும் இந்தப் பொருளையே 17 விதங்களாகப் பிரிக்கிறார்!

 

 

  • பொதுவான வாழ்த்து முறைகள் 2) குழந்தையை ஆசீர்வாதம் செய்தல் 3) தம்பதிகளை ஆசீர்வாதம் செய்தல் 4) ஒரு குடும்பத்தை ஆசீர்வாதம் செய்தல் 5) பெரும் வீரச்செயலைச் செய்தவரை பாராட்டுதல் 6) ஒரு பெண்மணிக்கு ஆசீர்வாதம் செய்தல் 7) அறிவுரையுடன் ஆசீர்வாதம் செய்தல் 8) சொந்த அனுபவத்தைக் கொண்டு அதை வைத்து ஆசீர்வாதம் செய்தல் 9) வழிப்பயணம் செய்யும் போது ஒருவரை வாழ்த்தி அனுப்புதல் 10) போருக்குச் செல்வோரை வாழ்த்தி அனுப்புதல் 11) திருப்தியுடன் வெற்றி பெற்றுத் திரும்ப ஆசீர்வதித்தல் 12) வாழ்த்தும் போதே அதில் நையாண்டி அடிநாதமாக இழைந்தோடல் 13) வாழ்த்துக்களினால் அடுத்து இன்னும் மாபெரும் வெற்றி அடைய ஊக்குவித்து வாழ்த்தல் 14) வாழ்த்துக்களை அங்கீகரிப்போர் அதன் மூலமாகத் தமது அரிய குணநலன்களைக் காண்பித்தல் 15) ஊழிக்காலம் வரைக்குமான நம்பிக்கை வாழ்த்துக்கள் 16) உலகம் நலம் பெற வாழ்த்து 17) ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறவுரை வாழ்த்துக்கள்

இப்படிப் பல விதமாக ஆசீர்வாதங்களை வகை பிரித்து அதற்கான இலக்கிய மேற்கோள்களையும் திரு என்.வி.நாயுடு தந்துள்ளார்.

 

 

மிக பிரம்மாண்டமான ஒரு வாழ்க்கை முறையை ஹிந்துத்வம் பாரம்பரிய வழியில் கடந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதற்கு இந்த வாழ்த்துக்களே சான்று.

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு                  சூழ்கலை வாணர்களும் –   இவள்                     என்று பிறந்தவள் என்றுணராத                 இயல்பினளாம் எங்கள் தாய் என்று இப்படி

ஆரியச் செல்வம் அல்லது ஹிந்துச் செல்வம் அல்லது பாரதீயச் செல்வத்தை அவர் பாரதமாதாவாகப் பாவித்துக் கூறுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள சத்தியமாக விளங்குகிறது.

 

 

நூலுக்கு வருவோம்.

 

நம்மைக் குளிர வைக்கும் சில எடுத்துக்காட்டுகள் :-

பத்ரம் தே |

எல்லா நலமும் (புகழ், தூய்மை) உனக்கே!

 

 

ஸ்வஸ்தி ப்ராப்னுஹி |

நீ நலமுற இருப்பாயாக

 

 

தே பவந்து மங்களம் |

உனக்கு மங்களம் உண்டாகட்டும்

 

 

சிரம் ஜீவ |

நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக

 

 

ஜயது பர்த்தா |

ஆதரவு அளிப்பவனுக்கு (இறைவன், ஆதரவாளன்) வெற்றி உண்டாகுக

 

அதிதி துஷ்யந்தனிடம் கூறுவது:

அப்ரதிரதோ  பவ | (சாகுந்தலம் 7-17)

 

ரதம் ஒட்டுவதில் உனக்கு நிகரானவர் யாரும் இல்லாதபடி ஆவாயாக

 

யசோதை கிருஷ்ணரை ஆசீர்வதிப்பது

ஜீவ, க்ருஷ்ணா, சரதாம் சதம் சதம் |  (க்ருஷ்ண கர்ணாமிருதம் 2 – 67)

 

க்ருஷ்ணா, நீ நூற்றுக்கணக்கான சரத்காலங்கள்  வாழ்வாயாக

 

அருந்ததி ஜனகரை ஆசீர்வதிப்பது :

அக்ஷரம் தே ஜ்யோதி: ப்ரகாஷதாம் | (உத்தர ராம சரிதம் 4 -10)

 

 என்றும் மறையாத ஜோதி (ப்ரகாசிக்கும் நுண்ணறிவு) உன்னிடம் என்றும் ப்ரகாசிக்கட்டும்

 

ரிஷிகள் துஷ்யந்தனை ஆசீர்வதிப்பது :

இஷ்டேன யுஜ்யஸ்வ | (சாகுந்தலம்  5-13)

(உன்) இஷ்டம் பூர்த்தியாகட்டும்

 

 

துஷ்யந்தனிடம் சகுந்தலையின் தோழிகள் கூறுவது :

ஸ்வாகதம் அவிலம்பினோ மனோரதஸ்ய | (சாகுந்தலம் 3 – 16)

 

வருக, உங்கள் மனோரதம் தாமதமின்றி அதி விரைவில் நிறைவேறட்டும்

( மனோரதம் என்ற அழகிய வார்த்தை மனம் ஒரு ரதம்  என்றும் அது தான் விரும்பிய விஷயங்களை நோக்கி அதி வேகமாக ஓடும் என்பதையும் தெரிவிக்கும் பொருள் பொதிந்த சொல்)

 IMG_2597 (2)

******                                       

 

நாமும் ஒரு குறிப்பேடு தயாரிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் பல நூல்களில் இதுவும் ஒன்று என்பதை மேலே நாம் படித்தவற்றைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்!

–subham–

 

TALKING BEHIND SOMEONE’S BACK! (Post No. 2412)

o-NAPOLEON-BONAPARTE-facebook

Napoleon Bonaparte. Portarit of Napoleon Bonaparte 1769-1821 at the battle. Detail of a painting by Joseph Chabord 1786-1848. Museo Napoleonico, Rome Italy

Compiled by London swaminathan

Date: 21 December 2015

 

Post No. 2412

 

Time uploaded in London:- 16-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Mohammed

A disciple came to Mohammed and said:

“Master, my six brethren are all asleep, and I alone have remained awake to worship Allah.

Mohammed replied:

“And you too had better been asleep, if your worship of Allah consists of accusations against your brethren.”

xxx

napoleonprimary

Napoleon III

One day M Villemain, the Secretary of the French Academy, was declaiming in the library of in a vigorous manner against napoleon III. Leverrier, who was an ardent imperialist, chanced to overhear some of his remarks, and demanded:

“How dare you speak in this manner of the emperor in a public building?”

 

Villemain looked up carefully and replied:

And who are you?

You know me, Sir, said the astronomer.

Your face may be familiar to me, but I don’t exactly recall your name.

Leverrier is my name

Oh, yes, Leverrier. Astronomer, I think. In his day I was intimately acquainted with Laplace; he was an astronomer too, and a gentleman.

 

“Sir,” said Leverrier, “I despise wit, but if you continue speaking thus I warn you that I shall report your words to the proper authorities.”

 

“Well,” said Villemain shrugging his shoulders, “everyone has his way of making a living.”

XXX

 

 

 

அரசன் பேசிய பிழையான சம்ஸ்கிருதம்! குட்டிக் கதை! (Post No. 2411)

IMG_3207

Compiled by London swaminathan

Date: 21 December 2015

 

Post No. 2411

 

Time uploaded in London:- 9-35 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

palanquin

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாக இருந்ததேயில்லை என்று பல அரைவேக்காடுகள் அவ்வப்பொழுது தனது அறியாமைக்கும், முட்டாள்தனத்துக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. இவை எவ்வளவு தவறு என்பதற்கு வேத காலம் முதல் இன்றுவரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள.

சிலப்பதிகாரத்தில் வைஸ்ய ஜாதியைச் சேர்ந்த கோவலன், தெருவில் கதறி அழுத ஒரு பார்ப்பனப் பெண்ணின் சம்ஸ்கிருத ஓலைச் சுவடியைப் படித்தது, “த, த, த” கதையில் (பிருஹத் ஆரண்யக உபநிஷத்) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகிய மூவரும் சம்ஸ்கிருதம் பேசியது, கும்பகர்ணன் சம்ஸ்கிருதத்தில் தவறான வரம் கேட்டது, விருத்ராசுரன் கதையில் ஒரு அசுரப் பிராமணன் தவறாக சம்ஸ்கிருதம் பேசியது, அகஸ்தியர்-வாதாபி கதையில், அகஸ்தியர் சம்ஸ்கிருதம் பேசியது, மஹாபாரத யுத்தத்தில் தர்மன், சம்ஸ்கிருதத்தில் பொய் சொன்னது (அச்வத்தாமா இறந்தான்), ஹாலன் என்ற மன்னன், அவனுடைய மனைவி சம்ஸ்கிருதத்தில் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டவுடன் அவள் ‘கொல்’ என்று சிரித்தது – இப்படி நூற்றுக் கணக்கான எடுத்துக் காட்டுகளை அவ்வப்பொழுது காட்டி வந்துள்ளேன். இதோ மேலும் ஒரு சுவையான கதை.

 

ஒரு அரசன் பல்லக்கில் பவனி வந்தான். அந்தப் பல்லக்கைப் பலர் தூக்கி வந்தனர். அவர்களில் ஒருவனைப் பார்த்து, இந்த பாரம் மிகவும் வலிக்கிறதா? என்று கேட்டான். அதை சம்ஸ்கிருத்தில் கேட்டான். அதையும் பிழைபடக் கேட்டான். உடனே பல்லக்குதூக்கி சொன்னான். உன் உடல் பாரம் வலிக்கவில்லை. நீ பேசிய சம்ஸ்கிருதத்தில் உள்ள இலக்கணப் பிழைதான் பொறுக்கமுடியாத வலியைத் தருகிறது என்றான்.

 

ஒவ்வொரு மொழியிலும் சில குறிப்பிட்ட முறையில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்கால வினைச் சொற்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக தமிழில் இறந்த கால வினைச் சொற்கள்தான் மிகவும் சிக்கலானவை. கிட்டத்தட்ட பத்துவகைகள் உள்ளன. நான் வெளி நாட்டுக்காரர்களுக்குத் தமிழ் சொல்லித் தருவதால் இதை அவர்கள் புரிந்துகொள்ளப் படும் சிரமம் எனக்குத் தெரியும். வா என்பதன் இறந்த காலம் வந்தான். போ என்பதன் இறந்தகாலம் போந்தான் இல்லை! சாப்பிடு என்பதன் இறந்த காலம் சாப்பிட்டான். ஆனல் சா என்பதன் இறந்த காலம் செத்தான்! தமிழ் தெரியாத வெளி நாட்டுக்கார்கள் சா என்பதன் இறந்த காலத்தை சாப்பீட்டான் என்றும், சாத்தான் என்றும் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வரும். வில் என்ற வினைச் சொல்லை நாம் பயன்படுத்துவதே இல்லை. ஆனால் விற்றான், விற்கிறான், விற்பான் என முக்காலங்களிலும் பயன்படுத்துகிறோம் (கல்= கற்றான், கற்கிறான், கற்பான்). சொல் என்பதை சொற்றான், சொற்பான், சொற்கிறான் என்று சொல்ல மாட்டோம் இது போல எல்லா மொழிகளிலும் உண்டு. இப்படி சம்ஸ்கிருதத்திலும் உண்டு. இது தெரியாமல் ஒரு மன்னன் ஒரு தப்பு- இலக்கணத் தப்பு- விட்டான்.

 

பல்லக்கில் பவனி வந்த மன்னன்:

பாரம் பாததி வா? (என் உடல் பாரம் வலிக்கிறதா) என்றான். இது தவறு.

பல்லக்கு தூக்குபவன் சொன்னான்: “பாரம் ந பாததே யதா தவ பாததி”.

அதாவது பாரம் வலிக்கவில்லை. நீ (தவறாக) சொன்னாயே  “பாததி” என்று அதுதான் வலிக்கிறது.

palanquin1

இதிலிருந்து அக்காலத்தில் ராஜா முதல் பல்லக்கு தூக்கிவரை எல்லோரும் சம்ஸ்கிருதம் பேசியது தெள்ளிதின் விளங்கும். இதை ஒரு வேளை கற்பனைக் கதை என்று கருதினாலும், மஹாபாரத (அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது), ராமாயண (கும்பகர்ணன் நித்திரை கேட்டது), உபநிஷத (த, த, த கதை) கதைகளை யாரும் பொய்யென்று சொல்லமுடியாது. பிருஹத் ஆரண்யக உபநிஷதம் (பெருங்காட்டு உபநிஷதம்) காமாலைக் கண் படைத்த வெள்ளைக்காரன் கணக்கிலும் கூட மிகப் பழைய நூல். அதாவது இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

 

இந்த த, த, த கதையை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு, ஐ.நா.சபையில் பாடுவதற்கு எழுதிக்கொடுத்த மைத்ர்ரிம் பஜத – என்ற சம்ஸ்கிருதப் பாடலில் எழுதியுள்ளார். ஆக 2800 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பேச்சு மொழி நமது காலத்தில், ஐ நா. சபையிலும் ஒலித்து, அதை ஒலிபரப்பிய 100+ நாடுகளிலும் ஒலித்தது.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!

 

மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி! (Post No. 2410)

book reincarnation

Written by S NAGARAJAN

Date: 21 December 2015

 

Post No. 2410

 

Time uploaded in London :– காலை 5-56

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடரில் 11,டிசம்பர்,2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளியான கட்டுரை

மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி!

.நாகராஜன்

 

அவர் (டாக்டர் ஸ்டீவன்ஸன்) ஒன்று மாபெரும் தவறை இழைத்திருக்க வேண்டும். அல்லது இருபதாம் நூற்றாண்டின் கலிலியோ என்ற (மாபெரும் புகழுடன்) அறியப்பட வேண்டும்”    

                                                            –   டாக்டர் ஹரால்ட்

 

லியஃப் (டாக்டர்ஸ்டீவன்ஸனின் மறுபிறப்பு ஆராய்ச்சி பற்றி ஜர்னல் ஆஃப் நெர்வஸ் அண்ட் மென்டல் டிஸீஸ் பத்திரிகையில் எழுதியது)

 

Capa livro Reencarnação

    உலகிலுள்ள மறுபிறப்பைப் பற்றி அறிவியல் ரீதியாக அணுவளவும் பிசகாது ஆய்வு நடத்தி உலகைப் பிரமிக்க வைத்தவர் டாக்டர் ஐயான் ஸ்டீவன்ஸன். கனடா நாட்டைச் சேர்ந்த இவர் 3000 குழந்தைகளைப் பற்றி ஆராய்ந்தார். பெரும்பாலும் குழந்தைகளுக்கே முன்பிறப்பு பற்றிய பல தகவல்கள் துல்லியமாகத் தெரிகின்றன என்று இவர் கண்டு பிடித்தார். மிகச் சிறு வயதில் அப்போது பிறந்திருக்கும் குடும்பத்தினரின் பழக்க வழக்கங்கள், நடத்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு நடக்கும் குழந்தைகள் இவரது கவனத்தை கவர்ந்தன. உலகமெங்கும் சுற்றினார். அப்படி முன்பிறவி பற்றிக் கூறும் தகவல்களை நுணுக்கமாக ஆராய்ந்தார்.

 

 

 தனது ஆய்வில் இவர் சேர்த்த இன்னொரு முக்கிய அம்சம் உடல் அடையாளங்கள் குறித்தது. இப்பிறவியில் உடலில் காணப்படும் வடுக்கள், தழும்புகள் முற்பிறவி வாழ்க்கையுடன் ஒத்திருப்பது இவரைப் பெரிதும் கவர்ந்தது. இந்த அங்க அடையாளங்கள் முற்பிறவியின்கதைகளைத்தெரிவிக்கும் ஒரு அம்சம் என்பதையும் இவர் கண்டுபிடித்தார்.

ஹிப்நாஸிஸ் அல்லாத அறிவியல் ரீதியிலான ஒரு அணுகுமுறையை இவர் மேற்கொண்டதால் இவரை யாரும் ஏளனம் செய்யவோ அல்லது மறுத்துப் பேசவோ முடியவில்லை.

 

 

தனது அறை ஒன்றில் விசேஷ பேழை ஒன்றை இவர் பூட்டி வைத்துள்ளார். அதை எப்படித் திறப்பது என்ற இரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும். தனது மறுபிறப்பில் அல்லது இன்னும் ஏதாவது ஒரு வகையில் அந்தப் பேழையை நிச்சயம் தன்னால் திறக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை. இப்போது இறந்து விட்ட அவர் எப்படி அந்தப் பேழையை எப்போது திறக்கப் போகிறார் என்பதை உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நாள் என்று வருமோ!

 

 

20 Cases suggestive of reincarnation என்ற அவரது புத்தகம் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு புத்தகம்.

அவர் தரும் சில சுவையான முற்பிறவி சம்பவங்களில் முக்கியமான ஒன்றானஸ்வீட் ஸ்வர்ணலதாகேஸைப் பார்ப்போம்:-

 

 ian-stevenson-md1

ஸ்வர்ணலதாவிற்கு மூன்று வயது ஆகும் போது அவள் தனது முன்பிறவி பற்றிய 50 நுணுக்கமான தகவல்களைத் தந்தாள். அத்தனையையும் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்தார்.

ஸ்வர்ணலதா மிஸ்ரா 1948இல் இந்தியாவில், மத்யப்ரதேசத்தில் பிறந்த குழந்தை. ஒரு நாள் தந்தையுடன் கத்னி என்ற இடத்தின் அருகில் பயணப்பட்ட குழந்தை திடீரென்று டிரைவரை ஒரு சாலையைக் காட்டித் திரும்பச் சொல்லிதனது வீட்டிற்குப்போக வேண்டும் என்றாள். அங்கு நல்ல டீ கிடைக்கும் என்றாள் அவள்!

 

பின்னர் தன்னைப் பற்றிய முழு விவரத்தையும் அவள் கூறலானாள். அவள் முந்தைய ஜென்மத்திலும் பெண்ணாகப் பிறந்தவள் தான். பெயர் பியா பாதக். பாதக்கிற்கு இரண்டு மகன்கள்.

 

ஜுர்குடியா என்ற இடத்தில் இருந்த தனது வீடு பற்றிய சிறு சிறு விவரங்களையும் கூட விடாமல் அவள் சொன்னாள். வீட்டின் முன்னால் ஒரு ரயில் லைன். பின்னால் பெண்கள் பள்ளி உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் அவள் குறிப்பிட்டாள். தனது காரைப் பற்றிய விவரத்தையும் கூட அவள் குறிப்பிட்டாள். (ஐம்பதுகளில் கார் என்பதே அரிது)

 

தொண்டையில் வலி வந்ததால் ஜபல்பூரில் டாக்டர் எஸ்.சி. பாப்ரட்டிடம் சிகிச்சை பெற்றும் பலனின்றி (1939ஆம் ஆண்டு) இறந்ததாக அவள் சொன்னாள்.

 

1959ஆம் ஆண்டு பியாவின் கணவன், இரு மகன்கள், சகோதரர் ஆகியோர் முன்னறிவிப்பின்றி ஸ்வர்ணலதாவைப் பார்க்க வந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் சகோதரனை அன்புடன்பாபுஎன்று பெயர் சொல்லி அழைத்தாள் ஸ்வர்ணா! தனது கணவனான சிந்தாமனி பாண்டே அருகில் வந்த போது, ஸ்வர்ணலதா வெட்கத்துடன் அவரைப் பார்த்தாள்! தனது மகன்களையும் அவள் அடையாளம் கூறினாள். அவர்கள், தாங்கள் அவளுடைய மகன்கள் இல்லை என்று கூறிய போதிலும் கூட, அவள் அதனால் ஏமாறவில்லை. உள்ளது உள்ளபடி அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்தாள்!

 

பின்னர் 1200 ரூபாயை மறைத்து வைத்திருந்ததைத் தன்கணவரிடம்சொல்ல, பாண்டே அது தனக்கும் தன் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் என்று பிரமிப்புடன் ஒப்புக் கொண்டார்.

 

பின்னர் பியாவை அவளது முன் ஜென்ம வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தான் இறந்த பிறகு செய்யப்பட்ட அனைத்து மாறுதல்களையும் சொன்னதோடு அக்கம்பக்கத்தார், உறவினர் அனைவரையும் அடையாளம் கண்டு சொன்னாள்.

 children reincarnation

சரி, வளர வளர இந்த முன் ஜென்ம ஞாபகங்கள் ஸ்வர்ணலதாவைப் பாதித்ததா?

தாவரப் படிப்பில் ((Botany) மேற்படிப்பை முடித்த ஸ்வர்ணா தனது வாழ்க்கை இயல்பாக இருக்கிறது என்றாலும் பழைய கத்னியை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன, அந்த பணக்கார வாழ்க்கை போல வருமா, என்ன என்றாள். ஆனாலும் கூட இப்போதைய மிஸ்ரா குடும்பத்தினரிடம் அவள் அன்பு குறையவில்லை! அழகிய இளம் பெண்ணாக வளர்ந்த ஸ்வர்ணலதா இந்த ஜென்மத்தில் தகுந்த மணவாழ்க்கையை மேற்கொண்டாள்!

 

அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்களில் வரும் திருப்பங்கள், ஹிட்ச்காக் படங்களின் சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் விஞ்சிய உண்மைச் சம்பவங்களை ஐயான் ஸ்டீவன்ஸன் எடுத்துரைக்கும் போது மெய் சிலிர்க்கும்.

ஸ்டீவன்ஸனின் ஆய்வுகள் முன் பிறவி பற்றி நமக்கு நம்பிக்கையை நிச்சயம் ஏற்படுத்தும்; ஏற்கனவே இருந்தால் அது வலுப்படும்!

ஸ்டீவன்ஸன் காட்டிய வழியில் இன்றும் பல விஞ்ஞானிகள் இந்த மறுபிறவி மாயத்தை ஆராய்ந்து வருகின்றனர்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரிட்டனின் புகழ் பெற்ற ராஜதந்திரி, (முதல் உலக) போர்க்கால பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ். ((Lloyd George 1863-1945) அவரை புது இடங்களை ஆராயும் சாகஸக்காரரான ராபர்ட் ஃபால்ஸன் ஸ்காட் (Robert Falson Scott) என்பவர் சந்தித்து தனது துருவ ஆராய்ச்சிப் பயணம் பற்றி சொல்லி அந்தப் பயணத்திற்கு ஏராளமாக செலவாகும், அதற்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். உடனே லாயிட் ஜார்ஜ் பிரபலமான ஒரு பணக்காரரிடம் தன் பெயரைச் சொல்லி உதவி பெறுமாறு சொன்னார். அந்த நபர் அரசியலில் செல்வாக்கு உள்ளவரும் கூட.

சிறிது நாள் கழித்து ஜார்ஜை சந்தித்த ஸ்காட் நன்றி தெரிவித்தார். ‘எப்படி அவரிடம் பணம் வாங்கினாய்?’ என்று கேட்டார் ஜார்ஜ்.

 

உங்கள் பெயரைச் சொன்னவுடன் ஆயிரம் பவுண்டுகளை உடனே தந்தார். உங்களையும் நான் துருவத்திற்கு அழைத்துச் சென்றால் இருபதினாயிரம் பவுண்டுகள் தருவதாக வாக்களித்தார். அத்தோடு உங்களை துருவத்திலேயே விட்டு விட்டு நான் மட்டும் திரும்பி வந்தால் நிச்சயம் பத்து லட்சம் பவுண்டுகள் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்!” என்றார் ஸ்காட்!

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா!!!

***********

 

 

Ancient Madurai and Old Delhi! Beautiful Description!!( Post No. 2409)

old-madurai-290x290

Compiled by London swaminathan

Date: 20 December 2015

 

Post No. 2409

 

Time uploaded in London:- 13-24

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

old mdu

Here is a beautiful description of Madurai as seen by Mankudi Marudan, a poet who was in the court of a Pandya king who ruled South Tamil Nadu 2000 years ago:–

“The poet enters the city by its great gate, the posts of which are carved with images of the Goddess Lakshmi, and which is grimy with ghee, poured in oblation upon it to bring safety and prosperity to city it guards. It is a day of festival, and the city is gay with flags, some, presented by the king to celebrate to commemorate brave deeds, flying over the homes of captains, and others waving over the shops which sell the gladdening toddy.

 

The streets are broad rivers of people, folk of every race, buying and selling in the market place or singing to the music of wandering minstrels.

 

A drum beats and a royal procession passes down the street, with elephants leading to the sounds of conches. A refractory beast breaks his chain, and tosses like a ship in an angry sea until again he is brought to order. Chariots follow with prancing horses and fierce footmen.

 

Meanwhile stall keepers ply their trade, selling sweet-cakes, garlands of flowers, scented powder and betel quids. Old women go from house to house, selling nosegays and trinkets to the womenfolk.  Noblemen drive through the streets in their chariots, their gold-sheathed swords flashing, and wearing brightly-dyed garments and wreathes of flowers. From balconies and turrets the many jewels of the perfumed women who watch the festival flash in the sun light.

 

The people flock to the temples to worship to the sound of music, laying their flowers before the images and honouring the holy sages. Craftsmen work in their shops – men making bangles of conch shell, goldsmiths, cloth- dealers, coppersmiths, and flower sellers, vendors of sandal wood, painters and weavers. Food shops busily sell their wares – greens, jack fruits, mangoes, sugar candy, cooked rice and chunks of cooked meat.

madurai1904b

In the evenings the city prostitutes entertain their patrons with dancing and singing to the sound of the lute (Yaz), so that the streets are filled with music. Drunken villagers, up for the festival, reel in the roadways, while respectable women make evening visits to the temples with their children and friends, carrying lighted lamps as offerings. They dance in the temple courts, which are clamorous with their singing and chatter.

 

At last the city seeps—all but the goblins and ghosts who haunt the dark, and the bold housebreakers, armed with rope ladders, swords and chisels, to break through the walls of mud houses. But the watchmen are also vigilant, and the city passes the night in peace.

madurai 028

Mornings come with the sound of the Brahmins intoning their sacred verses. The wandering bards renew their singing, and the shopkeepers busy themselves opening their booths. The toddy-sellers again ply their trade for thirsty morning travellers. The drunkards reel to their feet and once more shout on the streets. All over the city is heard the sound of opening doors. Women sweep the faded flowers of the festival from their court yards. Thus the busy everyday life of the city is resumed.

–Maduraikanchi, Pattuppaattu.

 

delhi-and-agra-062

ANCIENT CITY OF DELHI

Ibn Batuta, Moroccan traveller who travelled from 1326 for 27 years, wrote about Asian countries and its peoples. Here is what he wrote about Delhi:–

“We then proceeded on from Masud Abad till we came to Delhi, the capital of the empire. It is a most magnificent city, combining atone beauty and strength. Its walls are such as to have no equal in the whole world. This is the greatest city of Hindustan; and indeed of all Islam in the East. It now consist of four cities, which becoming contiguous have formed one. The city was conqured in the year of the Hejra 584 (1188 CE). The thickness of its walls is 11 cubits. They keep grain in this city for a very long time without undergoing any change whatever. I myself saw rice brought out of the treasury, which was quite black, nevertheless, had lost noe of the goodness of its taste.  The same was the case with the kodru, which had been in the treasury for ninety years, flowers, too, are in continual blossom in this place. Its mosque is very large; and in the beauty and extent of its building, it has no equal. Before the taking of Delhi, it had been a Hindoo temple, which the Hindoos call El Bur Khana (But Khana); but, after that event, it was used as a mosque. In its court-yard is a cell, to which there is no equal in the cities of the Muhammadeans; its height is such that men appear from the top of it like little children. In its court, too, there is an immense pillar, which they say, is composed of stones from seven quarries. In length it is 30 cubits; its circumference eight; which is truly miraculous. Without the city is a reservoir for the rain water; and out of this inhabitants have their water for drinking.  It is two miles in length, and one in width. About it are pleasure gardens to which the people resort.

Ibn Batuta in Arabic

OldDelhi_AP_Alkazi

—Subham–

 

ஒன்று பட்டாலுண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!( Post No. 2408)

unity

Compiled by London swaminathan

Date: 20 December 2015

 

Post No. 2408

 

Time uploaded in London: காலை 8-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒற்றுமையே பலம் என்பதை வலியுறுத்த பாரத நாட்டில் பல கதைகளும், பழமொழிகளும் இருக்கின்றன. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்று பாடினான் பாரதி.

 

சின்னக் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லுவதுண்டு. ஒரு குடியானவனுக்கு நாலு மகன்கள்; எப்போது பார்த்தாலும் அவர்களிடையே சண்டைதான். அந்தக் குடியானவனுக்கு அந்திம காலம் நெருங்கியது. மரணப்படுக்கையில் இருக்கும்போது, நான்கு மகன்களையும் அழைத்து, ஆளுக்கு ஒரு விறகுக்கட்டையைக் கொண்டுவரச் சொன்னான். இதை ஒடிப்போருக்குதான் நான் சொத்து முழுவதையும் எழுதிவைப்பேன் என்றான். பின்னர் ஒவ்வொருவ ரையும் விறகை ஒடிக்கச் சொன்னான். அவர்கள் பலம் முழுதையும் பிரயோகித்து எளிதில் உடைத்தனர்.

 

பின்னர் நாலு விறகுக் கட்டைகளையும் சேர்த்து ஒன்றாகக் கட்டச் சொல்லி இப்பொழுது இதை ஒடிப்போருக்குதான் முழுச் சொத்தும் கிடைக்கும் என்றான். நால்வரும் தனித்தனியே முயன்றனர். ஒடிக்க முடியவில்லை

 

அப்பொழுது சொன்னான்: என்னருமை மகன்களே, நீங்கள் தனித் தனியே இருந்தால் பலவீனம் அடைவீர்கள். நமது பரம்பரைச் சொத்துக்களைப் பாதுகாக்க இயலாது. உங்களை யாவரும் வென்று விடுவர். நீங்கள் நால்வரும் ஒற்றுமையுடனிருந்தால் பலம் அதிகரிக்கும். உங்களை யாரும் வெல்ல முடியாது என்றான். அவர்கள் நால்வருக்கும் புத்தி வந்தது. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்தனர்; அதைக் கடைப்பிடித்தனர்.

 

ஒற்றுமை பற்றிய கீழ்கண்ட சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பொன்மொழிகள்- சான்றோர் மேற்கோள்களைப் படிக்கையில் உங்களுக்கு இந்தக் கதை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். இதோ அந்தப் பொன்  மொழிகள்:–

IMG_0377 (2)

1).அல்பானாம் அபி வஸ்தூனாம் சம்ஹதி: கார்ய சாதிகா- ஹிதோபதேசம்

எவ்வளவு சின்ன பொருளானாலும், அவை ஒன்று சேருகையில் செயலை முடிக்க உதவும்

 

2).ஏக சித்தே த்வயோரேவ கிம் அசாத்யம் பவேத் இதி – கதாசரித் சகரம்

இரண்டு பேருடைய மனம் ஒன்றுபட்டால், செய்யமுடியாதது எதுவுமில்லை.

 

3).ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்தபேதமும் இல்லை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் -972)

 

4).பஞ்சபிர் மிலிதை: கிம் யஜ்ஜஹதீக ந சாத்யதே – நைஷதீக சரிதம்

ஐந்துபேர் சேருமிடத்தில் என்னதான் செய்யமுடியாது?

 

 

5).பஹூனாம் அபி சாராணாம் சமவாயோ ஹி துர்ஜய:

த்ருணைர்விதீயதே ரஜ்ஜுர்பத்யந்தே மத்ததந்தின: – பஞ்ச தந்திரம்

சாரமற்று இருப்பினும் எண்ணிக்கையில் அதிகமானதை வெற்றிகொள்ள இயலாது; புற்களைச் சேர்த்துச் செய்யப்படும் கயிறு மத யானையையும் கட்டிப்போடும்.

 

6).பஹூனாம் ச ஏவ சத்வானாம் சமவாயோ ரிபுஞ்ஜய: — சாணக்ய நீதி தர்பணம்

சாதுவானவர்களானும், ஒன்று சேர்ந்தால் எதிரிகளையும் வென்றுவிடலாம்.

 

7).சம் கச்சத்வம்

சம் வதத்வம்

சம் வோ மனாம்ஸி ஜானதாம் – ரிக் வேதம்

 

நாம் எல்லோரும் ஒன்றாகச் செல்வோம் (ஒன்றாகச் செல்லுங்கள்)

ஒன்றாகப் பேசுவோம் (ஒன்றகப் பேசுங்கள்)

ஒரே சிந்தனை உடையவர்களாவோம் (ஒன்றாகச் சிந்தியுங்கள்)

 

8).சங்கே சக்தி கலௌ யுகே

கலியுகத்தில் சங்கம் (ஒன்றுபட்டிருப்பதே) தான் சக்திவாய்ந்தது.

 

9).சமவாயோ துரத்யய:- போஜ சரித்ரம்

கூட்டாக இருப்பது வெல்ல இயலாதது (ஒன்றாக இருந்தால் அவர்களை யாரும் தோற்கடிக்க முடியாது)

 

(மீண்டும் மீண்டும் ஒரே கொள்கை/ தத்துவம் வலியுறுத்தப் பட்டிருக்கிறது)

IMG_0378 (2)

பராதீனதா – அடிமை (பிறரிடம் தொழில் செய்தல்)

10).கஷ்டம் கலு பராஸ்ரய: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

பிறரைச் சார்ந்து வசிப்பது கடினமாகும்.

 

11).கஷ்டாத் அபி கஷ்டதரம் பரக்ருஹவாச: பரான்னம் ச – (சு.ர.பா)

கஷ்டங்களிலும் பெரிய கஷ்டம் மற்றவர் வீட்டில் வசிக்க வேண்டியிருப்பதும், மற்றவர் கொடுக்கும் உணவுக்காகக் காத்திருப்பதும் ஆகும்.

 

12).கஷ்டா வ்ருத்தி: பராதீனா

பிறரிடத்தில் ஊழியம் செய்வது கடினம்

 

13).திகஸ்து பரவசதாம் – ராமாயணம்

பிறருடைய வசத்தில்/ ஆளுகையில் இருப்பது ஒழியட்டும்

 

14).பராதீனே பரம் துக்கம் ஸ்வாதீனே ச மஹத் சுகம் – புத்த சரிதம்

பிறர் வசம் இருப்பது துக்கமானது

சுதந்திரமாகச் செயல்படுவது மிகவும் சுகமானது.

 

–சுபம்–

இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!( Post No. 2407)

ravana

Written by S NAGARAJAN

Date: 20 December 2015

 

Post No. 2407

 

Time uploaded in London :– காலை 6-23

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

 

சம்ஸ்கிருதம் அகன்ற, ஆழ்ந்த ஒரு பெருங்கடல். அதில் மூழ்கி கோடானு கோடி நல்முத்துக்களை எடுக்கலாம். இராவணனைப் பற்றிய சுவையான இரண்டு கவிதைகளைப் பார்க்கலாம்.

 

 

இராவணனின் இருபது கண்கள்

 

இராவணனுக்கு பத்துத் தலைகள். ஆகவே இருபது கண்கள் உண்டு என்பதை அறிவோம்.

 

அந்த இருபது கண்கள் என்ன செய்கின்றன – ஒரே சமயத்தில்? கவிஞர் தன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். பிறந்தது பாடல்.

 

 

இராவணனின் இருபது கண்களில் ஒன்று வளைந்து இருக்கிறது. இன்னொன்று குறுகி இருக்கிறது. அடுத்தது ஆவலுடையதாக இருக்கிறது. நான்காவது புன்சிரிப்புடன் இருக்கிறது. அடுத்ததோ ஏதோ அர்த்தத்துடன் ஒன்றைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. அடுத்ததோ அரைக் கண்ணாக முடியிருக்கிறது. அடுத்தது கறுப்பாக ஆகியுள்ளது ,அடுத்தது எதையோ தூரத்தில் பார்க்கிறது. ஒன்பதாவது கண்ணோ மகிழ்ச்சியுடன் திகழ்கிறது. பத்தாவது அரும்பு போல மூடியிருக்கிறது. அடுத்தது  நடுங்குகிறது. பன்னிரெண்டாவது கண்ணோ நிலையாக நேர் பார்வையைக் கொண்டுள்ளது. அடுத்தது சுழல்கிறது. பதிநான்காவது கண்ணோ இமையோரத்தில் நகர்ந்துள்ளது; அடுத்தது நீர்த்துள்ளது பதினாறாவது கண்ணோ சோர்வைக் காண்பிக்கிறது. அடுத்தது அலை போன்ற இயக்கத்தைக் காண்பிக்கிறது. கடைசி மூன்று கண்களும் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது.

 

 

இப்படி ஒவ்வொரு கண்ணும் ஒரு குறிப்பிட்ட நிலைக்குத் தக்கபடி ஒவ்வொரு வித்தியாசமான விதத்தில் தன் நிலையைக் காண்பிக்கிறது!

 

 

கவிஞர் ஸ்வபாவோக்தி என்ற அலங்காரத்தைக் காட்டுமாறு இதை அமைத்துள்ளார்.

 

 

இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை – ரஸிக்லால் சி.பரீக் (Rasiklal C Parikh) செய்துள்ளதையும் – கீழே காணலாம்:

 

One of the twenty eyes of Ravana is bent,another is contracted, a third is eager, a fourth is smiling, the fifth is full of significance: the sixth is half-closed, the seventh is turned back; the eighth is having a long-range; the ninth is full of joy; the tenth is contracted like a bud; the eleventh is trembling; the twelfth is steady; the thirteenth is rolling’ the fourteenth is moving to its corner; the fifteenth is diluted; the sixteenth is drooping; the seventeenth is full of wave-like movements; the last three are full of tears.

(Thus owing to some particular condition every eye is working in a different way!)

 

India Hindu Festival

An Indian girl watches as a man displays effigies of ten-headed demon king Ravana for the upcoming Dussehra festival in Hyderabad, India, Saturday, Oct. 17, 2015. The Hindu festival of Dussehra commemorates the triumph of Hindu God Rama over Ravana, marking the victory of good over evil. (AP Photo/Mahesh Kumar A.)

குபேரபுரியில் கொண்டாட்டம்

 

மஹா வீரனான இராவணன் இறந்து விட்டான். உடனே விழா எடுக்கப்பட்டு விட்டது.

 

வானர சேனைகள் இருந்த இலங்கைக் கடற்கரையிலா? இல்லை! சுக்ரீவனின் கிஷ்கிந்தையிலா, அங்கும் இல்லை!

குபேர புரியில் கொண்டாட்டம்!

குபேரனின் அளகாபுரியில் ஒரே கொண்டாட்டமாம். யட்சர்கள் வசிக்கும் நகரில் மாதர்களுக்கு ஒரே மகிழ்ச்சி!

பாடலைப் பார்ப்போம்:

 

கைலாஸாசகர்ணிகேயமளாகா நேத்ரைகபேயா புரோ

தேவஸ்ய த்ரவிணப்ரபோ: கிமபரம் ஸ்ருங்காரஸாரஸ்யம்: I

அஸ்யாமஸ்தமிதே ஹி ராக்ஷஸபதௌ யக்ஷாங்கநாநாமமீ

வர்தந்தே ப்ரதிசத்வரம் ப்ரதிக்ருஹம் ப்ரத்யாபணம் சோத்ஸதா: II

 

 

இதன் பொருள் :- கண்களுக்கு விருந்தளிக்கும் அளகாபுரி,  செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் தலைநகர், மேலும் காமக்களியாட்டங்களின் மொத்த சாரத்தைக் கொண்டுள்ள நகர், கைலாஸத்தின் செவியில் உள்ள ஆபரணமாய் அமைந்துள்ளது. ராக்ஷஸர்களின் அதிபனான ராவணன் இறந்து விட்டான் என்று தெரிந்தவுட யட்ச பெண்மணிகள் ஒவ்வொரு நாற்சந்தியிலும் கூடிக் கொன்ண்டாடினர்.ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டம் தான்!

 

 

 

குபேரனின் புஷ்பக விமானத்தை அபகரித்ததிலிருந்து ராவணனின் ஒவ்வொரு செய்கையும் பாதித்தது அளகாபுரி மக்களைத் தான்! அவன் ஒழிந்தான் என்றவுடன் இன்ப புரியில் இன்ப லோகக் கொண்டாட்டம் தான்! குறிப்பாக மாதர்கள் ஸ்த்ரீலோலன் ஒழிந்தான் என்று மகிழ்ந்தனர்.

 

பெரும் வாழ்நாள் கொண்டிருந்தாலும், வேத விற்பன்னனாக இருந்தாலும், சிவ பக்தனாக இருந்தாலும் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டு அநியாயமாகத் தூக்கிக் கொண்டு வந்தவந் ஒழிவது தானே தர்மம்!

 

 

கவிஞரின் கற்பனையை நாம் கொண்டாட வேண்டியது தான்.சார்த்தூலவிக்ரிதித சந்தத்தில் அமைந்துள்ள இதை பகதத்த ஜலஹணர் என்பவர் தொகுத்த சுக்திமுக்தாவளியில் காணலாம்.

ராவணனைப் பற்றி இப்படி ஏராளமான தனிப் பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் மிகச் சுவையானது!

 

******