பாரதி போற்றி ஆயிரம் (Post No.4479)

Date: 11 DECEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4479

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 1

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

1

ஏறத்தாழ கடந்த நூறு ஆண்டுகளில் பாரதிக்குப் புகழாரம் சூட்டியோர் ஆயிரக்கணக்கானோர். அவனைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கும் ஒன்று.

எத்தனை கவிதைகள் என்பதை எண்ணிச் சாத்தியமில்லை. ஆனால் அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றிய ஆவலின் விளைவே இந்த முயற்சி.

இதில் பாரதியைப் பற்றிப் பாடியவர்களின் கவிதைகள் தொகுத்து வெளியிடப்படும்.

 

காபிரைட் பிரச்சினை இருப்பின் அதை எழுதியோரோ அல்லது கவிதைகள் அல்லது புத்தகத்தை வெளியிட்டோரோ வேண்டாம் என்று சொன்னாலோ ஆட்சேபணை தெரிவித்தாலோ அது உடனடியாக இந்தத் தொகுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று உறுதி கூறுகிறோம்.

 

பாரதிக்குப் பாமாலை சூடியோர் அனைவரையும் முடிந்த மட்டில் ஒரு இழையில் இணக்க முயலும் முயற்சி இது.

அன்பர்கள் இதை வரவேற்பர் என்றே கருதுகிறோம்.

 

 

2

 

இந்தத் தொகுப்பிற்கென முதல் கவிதையைத் தேர்ந்தெடுத்தப்பதில் எனக்கு எந்த வித சிரமமும் இருக்கவில்லை.

பாரதியை எனக்கு அறிமுகப்படுத்தி, அந்த பக்தியை வளர்த்து அதற்கு உரமும் இட்டவர் பாரதி அன்பர் திரு வி.ஜி. சீனிவாசன் அவர்கள்.

சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

தீரா பாரதிக் காதலன். பாரதி பற்றி பேசாத நாள் எல்லாம் அவருக்குப் பிறவாத நாளே! நூற்றுக் கணக்கானோருக்கு பாரதி பற்றும் பக்தியும் ஊட்டியவர்.

 

 

சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியின் சிலை நிறுவ பாடுபட்டவர். உருவச்சிலை கமிட்டியின் செயலாளர். பல ஊர்களிலும் சென்று பாரதி புகழ் பரப்பியவர்.

நல்ல பேச்சாளர். எழுத்தாளர். மதுரை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். திரு கி.வா.ஜகந்நாதன், தீபம் நா.பார்த்தசாரதி உள்ளிட்ட ஏராளமானோரை நண்பராகக் கொண்டவர்.

 

எனது வீட்டிற்கு அடிக்கடி வருவார். எனது தந்தையாரிடம் பேசிக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி மகிழ்ச்சி அவருக்கு.

எனக்கு ஜர்னலிஸ்ட் என்ற அந்தஸ்தைத் தந்தவரும் அவர் தான்.

எட்வர்ட் ஹாலில் மாணவர்கள் உறுப்பினராக முடியாது. அங்கிருந்த நூலகத்தின் மீதோ எனக்கு அளவற்ற பற்று.

ஒரு நாள் பாரத்தைக் கொடுத்து அதில் ஜர்னலிஸ்ட் என்று போட்டு அவரே என்னைச் சேர்த்து விட்டார்.

சற்று திகைத்த என்னை.”நீ தான் தினமணியில் மதிப்புரைகள் எழுதுகிறாயே” என்றார்.

 

மழலைச் செல்வி, ஜீவகுப்தா, நாகராஜன் என்று பல பெயர்களில் நான் புத்தக மதிப்புரை எழுதினாலும் சரியாக நான் தான் அந்தப் பெயரில் எழுதினேன் என்பதை உடனடியாக ஊகித்து அறிந்து என்னைப் பாராட்டுவார்.

 

ஆக என்னை ஜர்னலிஸ்டாக ஆக்கியவருக்கு, பாரதி பணியில் இந்த நாள் வரை – 57 வருடங்களுக்கும் மேலாக – உத்வேக மூட்டிய ஆசிரியருக்கு இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக சமர்ப்பிப்பதில் பேருவகை அடைகிறேன்.

ஆகவே தான் பாரதியாரைப் போற்றி அவர் எழுதியுள்ள வெண்பாக்களை தொகுப்பின் முதல் போற்றியாக வெளியிட்டு அவரின் நினைவைப் போற்றுகிறேன்.

 

பாடல்கள் 1 முதல் 6

 

பாரதியார் பா

வி.ஜி.சீனிவாசன்

1  

தொன்மொழியாம் தென்மொழியும் தூய வடமொழியும்

தன்மொழியாக் கொண்டு தமிழகத்தை – நன்மையுறச்

செய்தபுகழ் பாரதிசீர் செப்புதற்குத் தானெளிதாய்

எய்திடுமோ என்றனுக்கு மே!

 

2

நாட்டிற்கு இன்பம் நனிவிளையச் செய்வதற்கும்

வாட்டம் ஒழிப்பதற்கும் வாய்ந்தசுகம் – ஈட்டுதற்கும்

சத்தியமும் ஒற்றுமையும் தான்வேண்டும் என்றுரைக்கும்

பத்தியுள பாரதியார் பா!

 

3

 

மன்னுலகோர் என்றும் மனவேறு பாடின்றி

தன்மையுட னேயிருந்தால் தாரணியுள் – இன்பமெலாம்

பொங்குமெனச் சொன்ன புதுயுக சக்தியின்

தங்குரலே பாரதிசொல் தான்!

 

4

 

நாட்டின் விடுதலைக்காய் நம்வீரர் பாரதியின்

பாட்டென்னும் மந்திரத்தைப் பத்தியுடன் – போட்டியிட்டுப்

பாடி அதன்சக்தி பாலிக்கத் தாமகிழ்ந்து

நாடிதனைப் பெற்றார் நயந்து!

5

 

விஞ்ஞான முண்டுநல் வேதாந்த மும்முண்டு

அஞ்ஞானம் போக்கும் அருளுண்டு – மெஞ்ஞான

சீலகுண பாரதியார் செந்தமிழ்ப் பாடலிலே

ஞாலமிது தானுணரும் நன்று!

6

 

பாட்டுத் திறத்தாலே பாரிதனைப் பாலித்திட

நாட்டமுற்ற பாரதிசொல் நம்புபவர் – கேட்டதெலாம்

தந்தருளும் இன்பம் தழைக்க அருள்செய்யும்

சந்ததமும் மக்களுக்குத் தான்!

 

 

Picture posted by Bhaskran Shivaraman

தமிழ்க் குயில் என்ற சிறு வெளியீடு மதுரையில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்டது.

இரகுபதி சாமிநாதன், இரா. இளங்குமரன், கலைமோகன், சூ.கிரிதரன், மு.சதாசிவம், ம.க. சிவசுப்பிரமணியம், வி.ஜி.சீனிவாசன், கா.தேவராசக்கனி, க.பாண்டியன், சு.சா. பாப்பையா (சாலமன் பாப்பையா), நா.பார்த்தசாரதி, நா.சீ.வரதராஜன் ஆகிய 12 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த நூல்.

 

அதில் திரு வி.ஜி.சீனிவாசன் பற்றிய குறிப்பு இது:

வி.ஜி.சீனிவாசன்: பி.ஏ., எல்.டி. இந்தி மொழியில் ‘விசாரத் பட்டம் பெற்றவர். ‘பரிதிமாற் கலைஞரின் பெண்வழிப் பேரர். பன்னூலாசிரியர். மதுரைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்.

 

          ****           தொடரும்

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

ஹிந்து பாரதி! (Post No.4478)

Date: 11 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-45 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4478

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

பாரதி இயல்

டிசம்பர் 11 : பாரதி பிறந்த தினம்; அதையொட்டிய சிறப்புக் கட்டுரை

 

ஹிந்து பாரதி!

 

.நாகராஜன்

1

மஹாகவியை கடந்த எண்பது ஆண்டுகளில் ‘எங்களில் ஒருவர்’ ஆக்க பலர் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்; தொடரும் முயற்சிகள் பற்றியும் எல்லோருக்கும் புரியும்.

முதலில் சிலர் பாரதியை ஒதுக்கிப் பார்த்தார்கள். அவனோ விசுவ ரூபம் எடுத்தான்.

பின்னர் சிலர் வெறுத்துப் பார்த்தார்கள். வெறுத்தவர்கள் வெறுக்கப்பட்டதால் மிரண்டு போனார்கள்.

இறுதியாக இருந்த ஒரே வழி புகழ்வது தான்.. அதிலும் அவர் எங்களில் ஒருவர் என்று சொல்லி விட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது இல்லையா?

‘ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி’ என்ற வரியைக் கையிலே ஏந்திக் களமிறங்கினர் கம்யூனிஸ்ட் தோழர்கள். மதத்தைப் பற்றியும், சிவன், முருகன், கண்ணன், அம்பிகை உள்ளிட்ட தெய்வங்களை அவன் மனமுருகித் தொழுததற்கு விபரீத வியாக்யானங்களைத் தந்தனர். ஏனென்றால் மதம் என்பது அபின் இல்லையா அவர்களுக்கு! என்றாலும் எடுபடவில்லை!!

திராவிடப் பிசாசுகளுக்கு பாரதி என்றாலே பாகற்காய். கம்பனைப் புகழ்ந்த வம்பன் அல்லவா அவன்! ஆனால் பாரதிக்குக் கிடைத்த பாரதிரும் புகழ் கண்டு பயந்தவர்கள் ‘பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே’ என்ற வரியைக் கையில் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினர். ஆனால் இவர்களின் இரட்டை வேடத்தைக் காலம் தோலுரித்துக் காட்டியது. கர்த்தரின் ஏஜண்டுகளுடன் எடுத்துக் கொள்ளும் போட்டோக்களும், தலையில் முக்காடிட்டு நோன்பில் பங்கு கொள்வதும் ஒரு புறம் அவர்களைப் ‘பக்திப் பரவசத்தில்’ ஏற்ற, இன்னொரு புறமோ ராமனையும், கிருஷ்ணனையும் ஏசி, அம்பாள் எந்தக் காலத்திலடா அருள் பாலித்தாள் என்று வீர வசனம் பேசினர். மக்கள் இந்த ஜகஜாலப் புரட்டைக் காலம் கடந்தேனும் புரிந்து கொண்டனர். ஆக அவர்களும் வலுக்கட்டாயமாக பாரதி விழாக்களிலும் கவியரங்கங்களிலும் பங்கேற்க வேண்டி வந்து விட்டது.

சுயநல மதவாதிகளுக்கோ பாரதி கூறிய ஏசு, அல்லா உதவிக்கு வந்தது.

ஆக, பாரதியை ஒரு குழப்பு குழப்பி விட்டு ஒரு பெரிய உண்மையை எல்லோருமாகச் சேர்ந்து மறைக்க முயன்றார்கள்.

என்ன உண்மை அது?

ஹிந்து பாரதி! பாரதி ஹிந்துவாக வாழ்ந்தான்; ஹிந்துத்வத்திற்கு ஏற்றம் தந்தான். அது வாழ்ந்தால் உலகம் வாழும் என்று நம்பினான். அந்த ஹிந்து பாரதியைத் தங்கள் குப்பைக் கொள்கைகளாலும் வீர தீரப் பேச்சுக்களாலும் மூடி மறைத்தார்கள்!

மலையை, சிறு கை மறைக்க முடியுமா?

ஆதவன் ஒளியை, அறை இருட்டு எதிர் கொள்ளுமா?முடியாது.

ஹிந்துத்துவத்தின் அடிப்படையான அன்பால் (அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்!) அனைவரையும் கட்டுப் படுத்தலாம் என்று பாரதி ஹிந்து சிந்தனையோடு ஏராளம், ஏராளம் எழுதினான்.

ஹிந்து பாரதி பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், அவனது எழுத்தைக் கொண்டே எழுதுவதாக இருந்தால், பல நூறு பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும்.

இந்தச் சிறு கட்டுரையில் சில கருத்துக்களைப் பார்க்கலாம்.

ஒரு பானைச் சோற்றில் இவை சில பருக்கைகளே. ஆனால் அனைத்தும் உண்மையில் வெந்த பருக்கைகள்!

சுவையுங்கள். ஹிந்து பாரதியை அனைவருக்கும் சொல்லி ஆனந்தம் அடையுங்கள்.

2

உமையே பாரத தேவி

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!

கமலமெல் லிதழ்களில் களித்திடும் கமலை நீ!

வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவி நீ   – வந்தே மாதரம்!

(பங்கிம் சந்திர சட்டர்ஜியின் கீதத்தில் பாரதி எப்படி மனதைப் பறி கொடுத்தான், வந்தேமாதரம் பற்றி எப்படியெல்லாம் பாடியுள்ளான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை)

 

ஆரிய மென்ற பெரும்பெயர் கொண்ட எம் அன்னை …

பாரத தேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடு மந்திரமும்,

பாதகர் ஓதினும் மேதகவுற்றிடும் பண்புயர் மந்திரமும்…

மாணுயர் தேவி விரும்பிடும் வந்தேமாதரமே.

 

உபநிடதப் புகழ்

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே

பார்மிசை ஏதொரு நூலிது போலே

 

 

வேத பூமி

நாரத கான நலந்திகழ் நாடு

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே!

 

உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே!

 

நாவில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் – தனை

மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு தோளுடையாள்

 

ஹிந்து பாரம்பரியமே தேச பாரம்பரியம்!

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்?

எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில்!

 

இப்படி வேத பாரதியின் வரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையெல்லாம் படித்தும் கூட ஹிந்து பாரதியைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன!

ஹிந்துப் பண்பாட்டை, ஹிந்து அடித்தளத்தை வைத்தே சுதந்திரத்தை அடைய எழுச்சியை ஊட்டியவன் ஹிந்து பாரதி!

3

தாய் பிறன் கைப்படச் சகிப்பவன் நாயே!

இனி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜியின் வாய்ச் சொற்களாக கம்பீரமான வார்த்தைகளில்  அவன் தரும் சில கருத்துக்கள்:

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

தாய்த்திரு நாட்டைத்  தறுகண் மிலேச்சர்

பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வண்மையும்

ஞானமும் அறியா நவைபடு துருக்கர்

வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

இந்நாட் படைகொணர்ந் தின்னல்செய் கின்றார்

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்

பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்

மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்

கேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்.

தாய் பிறன் கைப்படச் சகிப்பவ னாகி

நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ?!

காளியும் கனக நல்நாட்டு தேவியும் ஒன்றே!

அடுத்து குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம்.

வ.வே.சு. ஐயர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு  எழுந்தது இந்தக் கவிதை.

காளியும் நமது கனக நன்னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!

 

நீர் அனைவரும் தரும, கடவுள், சத்தியம், சுதந்திரம்

என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

சாதி ஒன்றனையே சார்ந்தோர் ஆவீ ர்.

 

 

ஹிந்து பாரதியின் மனம் இன்னுமா புரியவில்லை?

அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் அறிந்திலார் என்று பாரதி கேலி செய்வானே, அந்தக் கூட்டத்தில் நாமும் சேர்ந்து விடக் கூடாது.

செகுலரிஸ்டுகளும்  கம்யூனிஸ்டுகளும் போலி மதவாதிகளும் மேலே கூறியது போன்ற பாரதியின் நூற்றுக் கணக்கான வரிகளை எங்குமே மறந்தும் கூடச் சொல்ல மாட்டார்கள்.

ஆகவே பாரதியை நாமே தான், நேரடியாகக் கற்க வேண்டும்.

4

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். முடிவே இருக்காது.

இறுதியாக ஒரு கட்டுரைப் பகுதியை மட்டும் இங்கு பார்ப்போம்:

“ஆதி முதல் அந்தம் வரையில் இந்தியா மேல் படையெடுத்து வந்த ஒவ்வொரு மிலேச்ச ஜாதியும் இந்தியர்களில் வேற்றுமைகளுண்டு பண்ணி அவர்களில் தேசத் துரோகிகளாயும், ஸகோதரத் துரோகிகளாயுமிருந்த சிலரைத் தம் வசம் சேர்த்துக் கொண்டு வஞ்சனையாலும் பலவித மோசங்களாலும் இராஜ்யங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்களேயொழிய  வீரத் தன்மையோடும் தரும வழியிலும் ஒருவராவது ஒரு அடி பூமி கூட ஸம்பாதிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் சென்னை இராஜதானியிலும் மற்றுமுள்ள இந்தியாவின் பிராந்தியங்களிலும் என்னென்ன மோசங்களும் மித்திர துரோஹங்களும் செய்து இராஜ்யம் ஸம்பாதித்தார்களென்பது சரித்திரங்களை வாசிக்கத் தெரியும். பூர்வீக பிரதேச மஹம்மதீய எதிரிகளும் இவ்வாறே தான் ஸம்பாதித்தார்கள். இன்றைக்கும் நாளைக்கும் இது தான் ஆங்கிலேயரின் இராஜதந்திரம்.”

 

“ஆகாயத்தினின்று விழும் எல்லா ஜலங்களும் எப்படிக் கடலையே போய்ச் சேருமோ அவ்வண்ணம் எல்லா மதஸ்தர்கள் செய்யும் ஆராதனைகளும் ஒரே ப்ரஹ்மத்தைத் தான் சேரும் என்னும் வேதாந்த சமரஸ புத்தியை அடைந்து இனியாகிலும் ஒத்து வாழ வேண்டும்.”

 

மேற்கண்ட கட்டுரைப் பகுதிகள், “ இந்தியர்களில் ஜாதீய ஐக்கியம் எங்ஙனம் உண்டாகும்?” என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்.

இந்தக் கட்டுரை புதுவை சூரியோதயம் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரை.

இந்தக் கட்டுரை பாரதியின் கட்டுரை அல்ல என்று அபிப்ராயப்படுகிறார் சீனி.விசுவநாதன். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இரண்டு. 1) நூலில் எங்கும் பாரதியின் பெயர் இல்லை. 2) நூலின் நடையும் பாரதியினுடையதாகத் தோன்றவில்லை.

 

அதாவது இந்தக் கட்டுரை ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது. அது பிரிட்டிஷ் நூலகத்தில் மட்டும் தான் இருக்கிறது. இந்தியாவில் இல்லை.

ஆனால் ‘பாரதிக்குத் தடை’ என்ற நூலை எழுதியுள்ள வி.வெங்கட் ராமன் தனது நூலில் இது பாரதி எழுதியது தான் என்று ஆய்ந்து நிறுவியிருக்கிறார்.

சூரியோதயத்தில் பாரதியின் பணி குறிப்பிடத்தகுந்தது. ஆகவே இந்தக் கட்டுரையின் கருத்துகள் அவர் எழுதினாரோ இல்லையோ அவரது குழுவினரின் ஏகோபித்த கருத்து என்பதில் ஐயமில்லை.

“பிற தேச எதிரிகளுடைய வஞ்சக வேலையென்று முன்னமே தெரிவித்திருக்கிறோம்” என்ற கட்டுரை வரியை வைத்து இதர பாரதியின், “முன்னமே தெரிவித்திருக்கிற” பெயரிடப்பட்ட கட்டுரைகளை ஒப்பிட்டால் இது அவர் எழுதியதே என்ற முடிவுக்கு வர முடியும்.

5

 

பாரதிக்குச் சங்கடங்கள் ஏராளம். வெள்ளையரால் மட்டுமல்ல; நம்மவராலும் கூடத் தான். அவரைத் தன் மனதிற்கு ஏற்றபடி எல்லாம் ஒவ்வொருவரும் டிசைன் செய்யப் பார்ப்பதால் அவர் படும் அல்லல் ஏராளம்.

அவர் வாயில், தனக்குக் கெட்டது என்று தோன்றும் “கெட்ட வார்த்தைகள்” (செகுலர் அல்லாத என்று கொள்க) எதையும்  வந்து விட்டதாகச் சொல்லி விடக் கூடாது என்ற “பாரதியின் மீது கொண்ட கருணையால்” அந்த வார்த்தைகளை சென்ஸார் செய்த அறிஞர்களும் உண்டு.

சின்னச் சின்ன மாற்றங்களை – வார்த்தைகளை மாற்றி – சில்மிஷம் செய்த அறிஞர்களும் உண்டு.

ஆய்வுப் பதிப்புகள் என்று எடுத்துக் கொண்டாலோ, அவர்கள் அரசுக்குப் பயந்து இப்படியும் இருக்கலாம்; அப்படியும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம் என்ற பாணியில் பதிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆக மஹாகவிக்கு வாழ்ந்த நாளிலும் சங்கடம்; மறைந்த பிறகும் சங்கடம்.

இந்த சுயநலமிகளின் பதிப்புப் பணியில் ஹிந்து பாரதி மறைந்து விட்டார்.

நண்பர்களே, தேடிக் கண்டு பிடியுங்கள். உண்மை பாரதி தோன்றுவார்.

அப்படித் தோன்றும் பாரதி, ‘ஹிந்து பாரதி’ என்பதை அறிந்து மகிழலாம்.

***

Valluvar and Manu agree on Violence, Non-Violence, Leadership and Householder (Post No.4477)

Valluvar and Manu agree on Violence, Non-Violence, Leadership and Householder (Post No.4477)

WRITTEN by London Swaminathan 

 

Date: 10 DECEMBER 2017 

 

Time uploaded in London-  15-13

 

 

Post No. 4477

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Rev. G U Pope in the Sacred Kural of Tiruvalluva Nayanar compared the Tirukkural with Manu and Bhagavad Gita; he gave it in the appendix of his book published in 1886. This is another article in the series.

 

Householder

Tiru Valluvar says,

He is the true householder who helps the three orders of the virtuous (Brahmachari, Vanaprastan, Sanyasin) in their home life is the fruit of love begotten by a harmonious, right path of life.- (Kural 41)

 

Manu says,

“3.78. Because men of the three (other) orders are daily supported by the householder with (gifts of) sacred knowledge and food, therefore (the order of) householders is the most excellent order (Manu).”

 

Valluvar says,

The true house-holder gives succour to the forsaken, the poor and the departed (Kural 42)

The paramount duty of a house-holder is to cherish daily the manes, the gods, his guests, his relations and himself (43)

If a man acquires wealth by fair means and is charitable to whom charity is due his progeny will never become extinct (44)

 

Manu says,

3-71. He who neglects not these five great sacrifices, while he is able (to perform them), is not tainted by the sins (committed) in the five places of slaughter, though he constantly lives in the (order of) house (-holders).

3-72. But he who does not feed these five, the gods, his guests, those whom he is bound to maintain, the manes, and himself, lives not, though he breathes.

3-117. Having honoured the gods, the sages, men, the manes, and the guardian deities of the house, the householder shall eat afterwards what remains.

3-118. He who prepares food for himself (alone), eats nothing but sin; for it is ordained that the food which remains after (the performance of) the sacrifices shall be the meal of virtuous men.

xxxxxxxxxx

 

Ahimsa (non-killing)  chapter 33 of Tirukkural

Tiru Valluvar deals with Killing animals in the chapter Ten. He says,

Non-killing is a matchless virtue according to teachers of ethics. Truthfulness ranks as second in merit to non-killing (Kural 323)

Killing leads to all other sinful acts. Therefore non-killing is the highest virtue (321)

 

 Manu says on Ahimsa

5-43. A twice-born man of virtuous disposition, whether he dwells in (his own) house, with a teacher, or in the forest, must never, even in times of distress, cause an injury (to any creature) which is not sanctioned by the Veda.

10-63. Abstention from injuring (creatures), veracity, abstention from unlawfully appropriating (the goods of others), purity, and control of the organs, Manu has declared to be the summary of the law for the four castes.

xxxx

LEADERS and KINGS

 

Valluvar says,

He is a lion among leaders who has these six: an army, subjects, wealth, ministers, allies, fortification (Kural 381)

Courage, wisdom, liberality and zeal – these four qualities form royal features (382)

The three things alertness, learning and bravery should never be wanting in the ruler of a country (383)

A noble leader must be brave, virtuous, adventurous and free from vices and injustice (Kural 384)

An able leader makes and and earns wealth; guards and apportions it for people’s good (385)

Death Sentence:

The judge gives capital punishment to wicked killers like removing weeds from a flourishing field (Kural 550)

 

Manu says,

7-20. If the king did not, without tiring, inflict punishment on those worthy to be punished, the stronger would roast the weaker, like fish on a spit;

7-99. Let him strive to gain what he has not yet gained; what he has gained let him carefully preserve; let him augment what he preserves, and what he has augmented let him bestow on worthy men.

7-100. Let him know that these are the four means for securing the aims of human (existence); let him, without ever tiring, properly employ them.

7-101. What he has not (yet) gained, let him seek (to gain) by (his) army; what he has gained, let him protect by careful attention; what he has protected, let him augment by (various modes of) increasing it; and what he has augmented, let him liberally bestow (on worthy men).

7-102. Let him be ever ready to strike, his prowess constantly displayed, and his secrets constantly concealed, and let him constantly explore the weaknesses of his foe.

7-103. Of him who is always ready to strike, the whole world stands in awe; let him therefore make all creatures subject to himself even by the employment of force.

Manu says in the Third Chapter,

 

xxx

 

Marriage Types in Manu and Tolkappiam

Manu says,

3-20. Now listen to (the) brief (description of) the following eight marriage-rites used by the four castes (varna) which partly secure benefits and partly produce evil both in this life and after death.

3-21. (They are) the rite of Brahman (Brahma), that of the gods (Daiva), that of the Rishis (Arsha), that of Pragapati (Pragapatya), that of the Asuras (Asura), that of the Gandharvas (Gandharva), that of the Rhashasas (Rakshasa), and that of the Pisakas (Paisaka).

3-32. The voluntary union of a maiden and her lover one must know (to be) the Gandharva rite, which springs from desire and has sexual intercourse for its purpose.

Oldest book Tolkappiam (Porul Adikaram ) refered to the eight types of marriages.

Oldest Tamil book Tolkappiyam refers to eight types of marriages which is already said by Manu and other Hindu law books/smrtis. Most famous Tamil commentator Nachinarkiniyar explained them in detail.

xxx

More articles on Manu and Tirukkural

MARRIAGE – TWO OPPOSSING TAMIL VIEWS (Post No.4462) | Tamil …

https://tamilandvedas.com/…/marriage-two-oppossing-tamil-views-…

 

9 hours ago – Post No4462. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. (Tamil Joke: Husband:While I read my love … Dr G U Pope compared couplet 41 with Manu’s 3-78 and showed Naladiyar, the poems of Jains were opposed to marriage.

 

 

Tamil Literature | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/tamil-literature/

 

MANU IN TAMIL VEDA TIRUKKURALRev GU Pope and Father Beschi compare -1 ( Post No.4459). MANU … RevG U Pope, a Tamil scholar and Christian preacher published The Sacred Kural of Tiruvalluva Nayanar in 1886 with his English translation. Throughout the book he had used his predecessors’ views. He had .

 

–Subham–

 

 

சிவனா, விஷ்ணுவா யார் பெரியவன்? கம்பன் பதில் (Post No.4476)

WRITTEN by London Swaminathan 

 

Date: 10 DECEMBER 2017 

 

Time uploaded in London-  10–31 am

 

 

Post No. 4476

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பன் வாழ்ந்த காலம் பற்றி பல வேறு கருத்துக்கள் உண்டு. சிலர் 9-ஆம் நூற்றாண்டு என்றும் இன்னும் சிலர் 10ஆம் நூற்றாண்டு என்றும், மற்றும் சிலர் 12ஆம் நூற்றாண்டு என்றும் பகர்வர். எது எப்படியாகிலும் அவருக்கு முந்தைய காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே சண்டை இருந்தது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் இருந்து தெரிகிறது. கம்பன் இவர்களுக்குப் பின்னால் வாழ்ந்தவன் என்பது அவரது சமரசப் போக்கில் இருந்து அறியப்படுகிறது.

Siva and Vishnu in one form in SANKARANARAYANA idol.

சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்ற கேள்விக்கு, கிட்கிந்தா காண்டத்தில் போகிறபோக்கில் பதில் சொல்லுகிறான். அவன் பாடும் இடமோ சீதையைத் தேட,  வழி சொல்லும் கட்டம் ஆகும்; முழுக்க, முழுக்க பூகோள வருணனை. அதற்கிடையில் சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்ற கேள்விக்குப் பதில் தருகிறான். இப்படி வாதாடுபவர் எல்லோரும் ‘முட்டாள்கள்’ என்று முதல் வரியிலேயே ஒரு ஒரு போடு போடுகிறான்.

 

 

இதோ பாடலைப் பாருங்கள்:-

 

அரன் அதிகம் உலகு அளந்த அரி அதிகன்

என்றுரைக்கும் அறிவிலோர்க்குப்

பரகதி சென்று அடைவரிய பரிசேபோல்

புகல் அரிய பண்பிற்றாமால்

கரநதியின் அயலது வான்தோய் குடுமிச்

சுடர்த் தொகைய தொழுவோர்க்கு எல்லாம்

வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி யாம்

நெடுமலையை வணங்கி அப்பால்

நாடவிட்ட படலம்

பொருள்:-

சிவனே உயர்ந்தவன், உலகை அளந்த திருமாலே உயர்ந்தவன் என்று

சொல்லும் அறிவில்லாதவர்கள், நல்ல கதியை அடைதல் அருமையானது போல, புகுவதற்கு அரிய தன்மையுடைய வானத்திலுள்ள சுரநதியின் அருகில் உள்ளதும், வானளாவிய சிகரங்களில் சூரிய, சந்திரர்களின் சேர்க்கை உடையதும், வணங்கியவர்க்கு வேண்டிய வரங்களைத் தருவதுமான அருந்ததி என்னும் மலையைத் தொழுத பின்னர் அப்பால் செல்லுங்கள்.

 

அதாவது மூடர்கள் எப்படி மோட்சத்தை அடைவது கடினமோ, அவ்வளவு கடினமானது அருந்ததி மலையை அடைவது! அவ்வளவு வானளாவிய சிகரங்கள் உடைய மலை!

 

கம்பன் சொல்ல வந்தது– அருந்ததி மலையை அடைவது கடினம்; அங்கும் சென்று சீதையைத் தேடிவிட்டு அப்பால் செல்லுங்கள்.

 

இந்த வழிகாட்டும் படலத்தில் இடையே சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா என்ற வாதத்தை நுழைத்து அப்படி வாதிடுவோர் மூடர்கள் என்கிறார்.

 

இதற்கு முன்னர் கம்பன் சொன்ன வேறு ஒரு கருத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தக் கடவுள் விஷயத்தில், கம்பன் என்ன கருத்து உடையவன் என்பது புலப்படும்.

கம்பன் கூறுகிறான்,

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்:
பல என்று உரைக்கின் பலவே ஆம்:
அன்றே என்னின் அன்றே அம்:
ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்:
இன்றே என்னின் இன்றே ஆம்
உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

(கடவுள் வாழ்த்து, யுத்தகாண்டம்)
பொருள்:–கடவுளை உண்டு என்பவனுக்கு அவன் உண்டு. இல்லை என்பவனுக்கு அவன் இல்லை. ஒரு கடவுள்தானென்றால் ஒரே கடவுளாகவே காட்சி தருவான். பல கடவுள் என்றால் பல கடவுளராக காட்சி தருவான். இன்றே காட்சி தருவன் என்ற நம்பிக்கை இருந்தால் இன்றே அவன் வருவான்.

ஆக, மேம்போக்கான காரணங்களை வைத்து, தோற்றங்களைக் கொண்டு அதுதான் உண்மை என்று வாதம் செய்யாதே. முழு உண்மையையும் உணர். அல்லது அப்படி உணர்ந்த பெரியோர்கள் கூறுவதையாவது நம்பு!

 

இவ்வளவு கஷ்டப்பட்டு கம்பன் போன்றோர் பாடிய கருத்தை நம் கிராமத்து  பாட்டிமார்களும் தாத்தாமர்களும் ஒரே வரியில் சொல்லி விடுகின்றனர்:-

அரியும் சிவனும் ஒன்னு; அரியாதவன் வாயில மண்ணு-– என்று.

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்கள் அவர்கள்!

 

சுபம் –

எண்ணற்ற கீதைகள்! (Post No.4475)

Date: 10 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-55 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4475

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் ஆன்மீக மாத இதழ் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வருகிறது. அதில் டிசம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஏற்றம் தரும் எண்ணற்ற கீதைகள்!

 

ச.நாகராஜன்

 

பகவத் கீதையின் பெருமை

 

Miss World Manushi Chillar in Gita Mahotsava in Kurukshetra

கீதை என்றால் அது பகவத் கீதையை மட்டுமே குறிக்கும் என்ற அளவிற்கு அளவிலாப் புகழ் பெற்றது கண்ணன் அர்ஜுனனுக்கு மஹாபாரதப் போர்க்களத்தில் உபதேசித்த கீதை.

கீதைக்கு உரையைப் பல நூறு அறிஞர்கள் எழுதி உள்ளனர். சமீப காலத்தில் பால கங்காதர திலகர்,மஹாத்மா காந்திஜி, அரவிந்தர், வினோபாஜி உள்ளிட்டோர் கீதைக்கு விரிவுரை எழுதியுள்ளனர்.

கீதையே எனக்கு ஆறுதல் தருவது என்றார் காந்திஜி. இறுதி வரை கீதையைத் தன்னுடன் வைத்திருந்தார் நேதாஜி.

இதைக் கண்டு வியந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு நாள் மறைந்தாலும் மறையலாம்; கீதை மறையாது என்றார். அவர் கூறியது போலவே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது. கீதையோ வழக்கம் போல பல்லாயிரக்கணக்கானோருக்கு வழிகாட்டி மிளிர்கிறது; ஒளிர்கிறது.வேதத்தின் சாரம் எனப்படுகிறது பகவத் கீதை.

 

 

பதினெட்டு அத்தியாயங்கள்; எழுநூற்றி ஒன்று ஸ்லோகங்கள்;  6446 பதங்கள் 8990 பதச் சேதங்கள் (சப்தங்கள்) உள்ள பகவத் கீதை உலகில் கோடானுகோடி பேருக்கு காலம் காலமாக வழி காட்டி வருகிறது. இப்படி ஒரு நூல் அற்புதமான நூலன்றி வேறென்ன?

‘என் ஒருவனையே சரண் அடை; உன்னை சகல பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; வருந்தாதே’ ( மாம் ஏகம் சரணம் வ்ரஜ்; அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச -கிருஷ்ணர்) என்பதே கீதையின் அருள்வாக்காக அமைகிறது.

 

சிரத்தை நம்பிக்கையுடன் இறைவனை சரண் அடைபவன் முக்தி அடைகிறான் என்பதே ஹிந்துத்வம் காட்டும் தத்துவம்.

ஆனால் ஹிந்து மதத்தில் பகவத் கீதை போல வாழ்வின் மரமங்களையும் பிரபஞ்ச ம்ரமங்களையும் இறை மர்மங்களையும் சுட்டிக் காட்டும் கீதைகள் பல உண்டு.

 

 

143 கீதைகள்

பேரறிஞர் டாக்டர் வி.ராகவன் 123 கீதைகளின் பட்டியலைத் தனது ‘ரீடிங்ஸ் இன் பகவத் கீதா’ என்ற நூலில் தந்திருக்கிறார்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தக் கட்டுரை ஆசிரியர்  சுமார் 143 கீதைகளின் பட்டியலைத் தொகுத்திருக்கிறார்.

 

 

மஹாபாரத கீதைகள்

 

மஹாபாரதத்தில் மட்டும் பகவத் கீதை, பராசர கீதா, ஹம்ஸ கீதா, அனு கீதா, உத்தர கீதா, ஷட்ஜ கீதா, ப்ராம்மண கீதா, வ்யாத் கீதா, பக கீதா, நகுஷ கீதா, சௌன்க கீதா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

 

ஒவ்வொன்றும் அபூர்வமான தத்துவங்களை விளக்குகின்றது.

பாதை காட்டும் கீதைகள் பலவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

உத்தர கீதை ; பிரமாண்ட புராணத்தில் இடம் பெறும் கீதை இது. ப்கவத் கீதைக்கு இது ஒரு அநுபந்தம் போன்றது. உண்மையை இடையறாது தியானி என்ற சுலபமான வழியை இது கூறுகிறது. இதற்கு ஆதி சங்கரரின் குருவான கௌடபாதர் ஒரு விளக்கவுரை எழுதியுள்ளார்.

 

 

வேணு கீதை: பாகவதத்தில் பத்தாவது ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கோபிகள் கிருஷணர் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது மிகவும் பக்தி மேலிட அவரது புகழைப் பாடத் தொடங்குகின்றனர். கிருஷ்ணரின் குழலோசை அவர்களை புளகாங்கிதம் அடைய வைத்து இறை உணர்வை ஊட்டுகிறது.

 

 

சுருதி கீதை: பாகவதம் பத்தாம் ஸ்காந்தத்தில் இடம் பெறும் இக்கீதை சுருதிகள் நாராயணனைப் பிரார்த்திப்பதை விளக்குகிறது.

 

கபில கீதை: பாகவதம் மூன்றாம் ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கபிலர் தன் தாயாரான தேவஹூதிக்கு செய்த பிரமாதமான போதனை இதில் உள்ளது.

 

யுதிஷ்டிர கீதை. மஹாபாரத்த்தில் வரும் பிரசித்தமான சம்பவம் ய்ட்சனும் யுதிஷ்டிரரும் செய்த சம்வாதம். யட்சனின் கேள்விகளுக்கு அனாயாசமாக பதில் கூறி அவனிடம் வரம் பெற்று இறந்த தன் சகோதரர்களை உயிர்ப்பிக்கிறார் தர்மர்.  யட்ச ப்ரஸ்னம்  என்று புகழ் பெற்றுள்ளது இதுவே.

 

அஷ்டாவக்ர கீதை; மாமன்னன் ஜனகன் ஒரு கனவு காண்கிறான். அதில் அவன் பசியால் வாடி பிச்சை எடுப்பது போலவும் இறுதியில் சிறிது கஞ்சி கிடைக்க, அதை வாயருகில் கொண்டு போகும் போது இரு எருதுகள் சண்டையிட்டுக் கொண்டு அவன் மீது மோத கைக்குக் கிடைத்த கஞ்சி வாய்க்குக் கிடைக்காமல் கஞ்சி சட்டி கீழே விழுந்து சுக்கு நூறாக உடைவது போலவும் காண்கிறான்.. அப்போது கனவிலிருந்து விழித்த ஜனகன், “இதுவா, அதுவா , எது உண்மை?” (மன்னனாக இருப்பதா, பிச்சை எடுப்பதா?) என்ற கேள்விக்கு ஆளாகிறான். அவனை சந்திக்கும் அஷ்டாவக்ரர், “இதுவும் உண்மையல்ல; அதுவும் உண்மையல்ல” என்று கூற அவன் தன் குழப்பம் நீங்குகிறான். ‘அப்போது எது உண்மை?’ என்று ஜனகன் கேட்க உண்மைப் பொருளை அஷ்டாவக்ரர் விளக்குகிறார். அதுவே இந்த அஷ்டாவக்ர கீதையாக மலர்கிறது.

 

சௌனக கீதை ; மஹாபாரதத்தில் சௌனக முனிவர் தர்மபுத்திரருக்கு உரைக்கும் உபதேச மொழிகளே சௌனக கீதையாக அமைகிறது. பிரபஞ்ச வாழ்வு பற்றி இதில் எடுத்துரைக்கப்படுகிறது.

 

 

பக கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது.

பக முனிவர் பல கற்பங்கள் வாழ்ந்தவர். அவருக்கும் இந்திரனுக்கும் நடக்கும் இந்த சம்பாஷணையில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மிக மிக நீண்ட காலம் வாழ்ந்த முனிவர் தன் அனுபவங்களை எடுத்துக் கூறுகிறார்.

 

 

நஹுஷ கீதை: மஹாபாரதத்தில் வரும் ஒரு சம்பவத்தை ஒட்டி எழும் கீதை இது. நஹுஷன் என்ற பாம்பிடம் பீமன் பிடிபடுகிறான். அவனை விடுவிக்க விரைகிறார் தர்மபுத்திரர். தர்மரிடம் நஹுஷன் கேள்விகள் கேட்க அதற்குத் தக்க விடை அளிக்கிறார் தர்மர். அதனால் மனம் மகிழ்ந்த நஹுஷ பாம்பு பீமனை விடுவிக்கிறது. நஹுஷனின் கேள்விகளும் தர்மரின் பதில்களும் மிக்க சுவையானவை.

 

அவதூத கீதை; உயர்ந்த அத்வைத ஞானம் பற்றி அறிய விரும்புவோருக்கான  கீதை இது. பரமாத்மா சிவம். சிவம் என்றால் மங்கலமானவர். அவரைப் பற்றிய உண்மையில் ஆரம்பித்து அத்வைத சித்தாந்தத்தைக் கூறுகிறது இது.

தத்தாத்ரேய முனிவருக்கும் ஸகந்தனுக்கும் நடந்த இந்த சம்பாஷணை உயர் நிலையில் உள்ள சாதகர்களுக்காக அமையும் ஒரு கீதை.

 

 

அனு கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது. மஹாபாரதப் போர் முடிந்த பின்னர் கிருஷ்ணரை மீண்டும் பகவத் கீதையை உரைக்குமாறு அர்ஜுனன் வேண்ட அவனை கிருஷ்ணர் கடிந்து கொள்கிறார். நினைத்த நேரம் எல்லாம் சொல்லக் கூடிய ஒன்று அல்ல கீதை. இருந்தாலும் அருள் மீதூற சுருக்கமாக கீதை தத்துவத்தை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளி உரைப்பது இது.

 

 

தேவி கீதா ; தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 32ஆம் அத்தியாயமாக மிளிர்கிறது தேவி கீதா. இதே நூலில் பகவதி கீதாவும் இடம் பெறுகிறது.

 

ஹம்ஸ கீதை ; அன்னப் பறவை வடிவில் இருந்த விஷ்ணுவிற்கும் பிரம்மாவின் புத்திரரகளுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையே ஹம்ஸ கீதை.

 

 

 

இதர கீதைகளில் முக்கியமானவை சில

 

வராஹ புராணத்தில் ருத்ர கீதா மற்றும் அகஸ்திய கீதா இடம் பெறுகின்றன.

கூர்ம புரணமோ ஈஸ்வர கீதா மற்றும் வியாச கீதாவை எடுத்துரைக்கிறது.

ரிபு கீதா:  விஷ்ணு புராணத்தில் இடம் பெறும் இதில் ரிபு முனிவர் தனது சீடரான நிதகருக்கு வேதாந்த தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

சிவ பார்வதி சம்வாதமான குரு கீதா குருவின் பெருமையை எடுத்துரைக்கிறது.

ஹனுமானுக்கும் ராமருக்கும் இடையில் நடந்த சுவையான உரையாடல் ராம கீதையாக அத்யாத்ம ராமாயணத்தில் அமைகிறது.

வசிஷ்ட கீதையில் வசிஷ்ட முனிவர் ராமருக்குப் பல பேருண்மைகளைக் கூறுகிறார்.

 

 

நாரத கீதை கிருஷ்ணருக்கும் நாரத முனிவருக்கும் நடந்த சம்பாஷணையைக் கூறுகிறது.

இன்னும் சூர்ய கீதா, பஞ்ச தச கீதா, சக்தி கீதா, பிங்கல கீதா, சம்பு கீதா, சப்த ஸதி கீதா, ப்ரமர கீதா, ராஸ கீதா, விஷ்ணு கீதா, பித்ரு கீதா, பிருத்வி கீதா, சாந்தி கீதா, போத்ய கீதா, துளஸி கீதா, வைஷ்ணவ கீதா, ஹரித கீதா, பீஷ்ம கீதா, ஞான கீதா, ஜன்ம கீதா, ம்ருத்யுஞ்சய கீதா,ப்ரணவ கீதா என்று இப்படி பெரிய கீதை பட்டியல் தொடர்கிறது.

ஒவ்வொன்றும் ஒரு பிரம்மாண்டமான பேருண்மையை உபதேசிக்கிறது.

 

 

ஆன்மீக நாட்டம் உள்ளவர் உயரிய நிலைக்குச் செல்ல வழி வகுக்கும் கீதைகள் இவை; அதே சமயம் இக உல்க வாழ்க்கையை எந்த வித சிரமமும் இல்லாமல் கடக்க வழி காண்பிப்பவையும் இவையே.

 

இவற்றைத் தொகுத்துப் படிப்பவர் பாக்கியசாலி. ஹிந்துத்வம் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கும் அருளுரைகளை அற்புதமாகத் தரும் என்பதை இந்த நூற்றுக்கும் மேற்பட்ட கீதைகள் நிரூபிக்கின்றன.

 

பாதை காட்டும் கீதைகளில் நமக்குப் பிடித்த கீதையைப் பயின்றால் இசைவான வாழ்வைப் பெறலாம்!

 

***

ஞான ஆலயம் முகவரி: பழைய எண் 7, புதிய எண் 32, அருணாச்சலபுரம் இரண்டாவது தெரு, அடையாறு, சென்னை  600020 . (வருட சந்தா ரூ 300/)

 

FACEBOOK LIKES! NEW YEAR RESOLUTION! (Post No.4474)

WRITTEN by London Swaminathan 

 

Date: 9 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-29 am

 

 

Post No. 4474

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 
“BEGGAR THAT I AM, I AM EVEN POOR IN THANKS” ( SHAKESPEARE IN HAMLET).

 

Every year I make a new year resolution; but before the ink is dry it is thrown into dustbin. Why?

I thought big of me. I thought of becoming a Shankaracharya or a Baba or a Swamiji. I took a resolution not to feel angry or hate anyone. Was it possible? No. Some people did great injustice to me in my work spots though I did all the good things to them. So till this day I hate them. I can never win in such resolutions!

So, this year I am going to take a new year resolution which is possible and practicable (?!?!?!).

London swaminathan’s name in Guinness Book of Recordss! How?

I learnt a lesson from my father. He was Mr V Santanam, News Editor of Dinamani (Indian Express Group of Newspapers), Madurai. Everyday people used to come to our house or his office to give news items. He used to read them and smile. He would never say YES or NO to the bringer of those news items. But they would request my dad to publish the item the very next day, in a prominent place in the newspaper with BIG headlines.

 

I used to wonder why he smile like this. Some of the items attracted my attention as well. One day when I read one of those news items I laughed loudly. And made some comments in front of my father.

“Fools! Idiots! Ganges- Vaigai River Link Association (!!!) meeting; resolution number 1 etc. These people did not even know geography. No one could even find a solution to link the rivers Narmada, Godavari, Krishna and Kaveri, leave alone Vaigai! there is a big Deccan plateau in between!”

 

My father was a man of few words. But on that day, he interrupted me to say, ‘An association can live long only when there is some unachievable goal. The man who brought the item is Gulam Bhai, a good soul; he runs seven organisations including ‘Kashmr is ours Association’, ‘Madurai pedestrians Association’  , ‘Cyclists Association’ and this ‘Ganaga- Vaigai Association’. He continued…………

 

I learnt a lesson from him. Never set an unachievable goal if you want to reach the goal. So this year I decided to think small and set an achievable goal! What is it?

I must enter the Guinness Book of Records in 2018 under the category of the man who put most likes in Facebook in 2018.

 

Please don’t compete with me in this category!

 

You may wonder why I chose FACEBOOK LIKES for this year. Very often I see women’s posts or women’s pictures get most likes. Good and original ideas get less likes. Don’t think that I am frustrated because I don’t get many likes. I know the difficulties. When you have 5000 friends and you put likes to someone or a few, those people will ‘haunt’ you whenever you open the Facebook page! Moreover I get 6000 hits every day to my blogs and most of them come from my Facebook friends. But I still wonder why do they have this new disease of clicking LIKES only for WOMEN!

Let me stop there and give you the second reason for choosing Facebook Likes this year.

 

While I was reading Shakespeare, I came across three beautiful quotations: –

 
‘BEGGAR THAT I AM, I AM EVEN POOR IN THANKS ‘(HAMLET).

‘HOW SHARPER THAN A SERPENT’S TOOTH IT IS TO HAVE A THANKLESS CHILD’ (KING LEAR).

‘I THANK YOU FOR YOUR VOICES, THANK YOU, YOUR MOST SWEET VOICES’ (CORIOLANUS)

 

 

I was most attracted by the first quotation.

Why should I be a beggar in thanking people? So let me click as many likes as possible in the new year. But I am restraining myself with a big condition—This may even place hurdles in my goal of entering Guinness Book of Records. The BIG condition is,

“I should not put likes to any Tom, Dick and Harry posts. It must have good messages, original thoughts, not recycled You Tube materials, neither political support nor hatred towards something!”

 

Let me see whether I can win by putting LIKE only to good and original ones.

Hey,

Why don’t you also place likes or tick likes when you see something GOOD, POSITIVE and ORGINAL in the new year?

 

Long live Facebook! Long, Longer, Longest live LIKES!

 

–SUBHAM-

 

 

 

என்னுடைய புத்தாண்டு சபதம்! FACEBOOK LIKES! பேஸ்புக் லைக்ஸ்!

WRITTEN by London Swaminathan 

 

Date: 9 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7–19 am

 

 

Post No. 4473

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சபதம் ( NEW YEAR RESOLUTION) எடுக்கிறேன்; அது ஜனவரி இரண்டாம் தேதியே காற்றில் பறந்துவிடுகிறது. ஏன் தெரியுமா? நடக்க முடியாத விஷயங்களை நினைப்பதால்தான்! ‘கோபமே வரக்கூடாது; யாரையும் சபிக்கக்கூடாது’ என்று சபதம் எடுத்தேன். நான் வேலை பார்த்த இடத்தில் காரணமே இல்லாமல் எனக்கு எதிராகச் சதி செய்தவர்களைச் சபிப்பதும் வெறுப்பதும் இன்று வரை மனதை விட்டு அகலவில்லை. கோபத்தையும் வெறுப்பையும் வெல்லுவது அப்படி என்ன கிள்ளுக் கீரையா?

அப்படி கோபத்தையும் வெறுப்பையும் வென்று விட்டால் அப்புறம் சங்கராச்சார்யார், பாபா ஆகியோர் படங்களுடன் என் படமும் சுவரில் தொங்குமே! அது நடக்கக் கூடிய காரியம் இல்லை!!!

என் தந்தையைக் காண தினமும் நிறைய பேர் வருவார்கள்; அவர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார். அவர் பெயர் வெ. சந்தானம். மதுரையில் தினமணி பொறுப்பு ஆசிரியராக இருந்தார். வீட்டிற்கு வந்து செய்திகளைக் கொடுத்து ‘ஸார்! கட்டாயம் நாளைக்கே, கொட்டை எழுத்துக்களில் பெரிய செய்தியாகப் போட்டு விடுங்கள்’ என்பார்கள். என் தந்தை ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பார். யெஸ் YES என்றோ நோ NO என்றோ சொல்ல மாட்டார்.

 

சில நேரங்களில் நானும் அதை வாங்கிப் பார்ப்பேன், படிப்பேன்; அவருடைய புன் சிரிப்பின் காரணத்தை அறிய! ஒரு முறை அந்தச் செய்தியைப் படித்தவுடன் எனக்கு புன்சிரிப்புக்குப் பதிலாகக் குபீர் சிரிப்பு வந்தது வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தேன். என் அப்பாவின் முன்னிலையில் ஒரு காமெண்ட் (COMMENT) டும் அடித்தேன்.

 

“சரியான முட்டாள் பயல்! கங்கை நதி -வைகை நதி  இணைப்பு  சங்கக் கூட்டம்! இது என்ன பைத்தியக்காரத்தனம்? கங்கை நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகளையே இணைக்க முடியாது. இடையில் பெரிய தக்காண பீடபூமி இருக்கிறது. பூகோளமே தெரியாத பயல் எல்லாம் சங்கம் நடத்துகிறான்” என்றேன்

 

பொதுவாக எங்களிடம் அதிகமாகப் பொது விஷயங்களைக் கதைக்காத என் தந்தை கதைத்தார். சிரித்துக்கொண்டே சொன்னார். அவன் பெயர் குலாம்பாய்; 7 சங்கங்களுக்கு தலைவன்; நல்லவன்; காஷ்மீர் நமதே சங்கம், நடைபாதைக்காரர் கள் சங்கம், சைக்கிள் சவாரி செய்வோர் சங்கம் போன்ற சங்கங்களுடன் கங்கை- வைகை நதி இணைப்பு சங்கமும் வைத்திருக்கிறான். எது நடக்க முடியாதோ அதை லட்சியமாக வைத்து நடத்துவதே அவன் தொழில்; நடக்கக்கூடிய ஒரு லட்சியம் வைத்து இருந்தால் சங்கத்தின் முடிவு நெருங்கிவிடும். கங்கை- வைகை இணைப்பு நடக்க 100 ஆண்டுகள் ஆகலாம்; நடக்காமலும் போகலாம். இதனால் சங்கம் ஆண்டுதோறும் கூடி, ஒரு தீர்மானமாவது நிறை வேற்றலாம் என்று தொடர்ந்தார். என் சிரிப்பு அடங்கியது. மேலும் ஒரு பாடம், தந்தையிடமிருந்து, கற்றேன்.

 

இது போல நடக்கமுடியாத பிரமாண்டமான லட்சியங்களை வைக்கக்கூடாதென்று நினைத்து இந்த ஆண்டு, நடக்கக்கூடிய(?!?!?!) ஒரு ரெஸல்யூஷன் – தீர்மானம் நிறைவேற்றப் போகிறேன்.

புதிய, நடக்கக்கூடிய ஒரு புத்தாண்டு சபதம் எடுக்கப்போகிறேன். அது என்ன? தயவு செய்து யாரும் போட்டிக்கு வராதீர்கள்!

 

பேஸ்புக்கில் FACEBOOK நிறைய பேருக்கு LIKE லைக் போட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதே என் லட்சியம்! ஆனால் எனக்கு நானே ஒரு கட்டுப்பாடு, நிபந்தனையும் போட்டுக்கொள்வேன். கண்ட கண்ட, தோழான் துருத்திக்கெல்லாம்,(TOM DICK AND HARRY)  சகட்டுமேனிக்கு லைக் போட மாட்டேன். அடி மனதின் ஆழத்திலிருந்து, இந்த விஷயம் புதிய விஷயம், இது உன்னத கருத்து, இது உண்மையிலேயே அழகானது என்று என் மனதில் படும்போது மட்டுமே லைக் போடுவேன்.

பொம்பளை படத்துக்கு அதிக லைக்ஸ்!

ஏன் இந்த திடீர் ஆசை? அற்ப ஆசை! என்று கேட்கிறீர்களா? ஷேக்ஸ்பியர் பொன்மொழிகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒரு அழகான பொன்மொழி கண்களில் பட்டது.

 

‘சீ! நன்றி சொல்லுவதில்கூட நான் பிச்சைக்காரன்!’ என்று ஹாம்லெட் நாடகத்தில் ஒரு வசனம் வருகிறது.

BEGGAR THAT I AM, I AM EVEN POOR IN THANKS (HAMLET).

 

பேஸ்புக்கில் பலர் LIKE லைக் போடுவதில்கூட பிச்சைக்காரகளாக இருக்கிறார்களே! என்ற நினைப்பு உடனே பளிச்சிட்டது. ஆனால் அவர்கள் தவறாமல், பெண்கள் படங்களுக்கு, அதாவது பெண்கள் (நண்பிகள்) UPLOAD அப்லோட் செய்யும் படத்துத்துக்கு

தவறாமல் லைக் போடுவதையும் பார்க்கிறேன்.

இது என்னடா? புதிய வியாதி!

 

ஆனால் இதைச் சொன்னவுடன் என் போஸ்டு POST களுக்கு எல்லாம் லைக் போட வேண்டும் என்று நான் நினைப்பதாக நீங்கள் நினைத்துவிட மாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன் (குழப்புகிறேனோ?)

லைக் போடுவதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எனக்கும் புரிகிறது. யாராவது ஒருவருக்கு லைக் போட்டால் அந்த ஆள் போடும் வேண்டாத போஸ்டுகளும் நம் கண் முன் தோன்றி நம் கழுத்தை அறுக்கும். வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிய கதை ஆகிவிடும். வேலியிலே போன ஓணானை ……………………. (UNPARLIAMENTARY WORDS!) விட்டுக்கொண்டு குடையுதே குடையுதே என்று கத்திய கதை ஆகிவிடும்.

 

 

நான் சொல்ல வந்த விஷயங்கள் இரண்டே!

 

  1. புத்தாண்டில் 2018-ல், நான் அதிகம் பேருக்கு லைக் போட்டு பேஸ்புக்கில் முதலிடம் பிடிக்க வேண்டும் (நடைமுறை வாழ்க்கையிலும் இதைச் செய்யலாம்)
  2. நீங்களும் எல்லாருடைய ஒரிஜினல் போஸ்டுகளுக்கும் லைக் போட்டு அவர்களை ஆதரியுங்கள்.

 

  1. பெண்களின் போஸ்டுகளுக்கும், பெண்களின் படங்களுக்கும் லைக் போடுவதை நான் தடுக்கவா முடியும்?

கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக

ஷேக்ஸ்பியர் உதிர்த்த மேலும் இரண்டு நன்றிப் பொன்மொழிகளை மொழிவேன்.

 

வள்ளுவன் சொன்ன செய்நன்றி அறிதல் பற்றிய பத்துக் குறட்களும் தான் நமக்கு அத்துபடியாயிற்றே! நான் அரைத்த மாவையே அரைக்க விரும்புவதில்லை!

 

இதோ ஷேக்ஸ்பியர்:–

 

சீ நன்றிகெட்ட ஒரு மகன், விஷப்பாம்பின் பல்லை விடக் கொடுமையானவன்! –(கிங் லியர்)

HOW SHARPER THAN A SERPENT’S TOTH IT IS TO HAVE A THANKLESS CHILD (KING LEAR).

 

நான் உன் குரலுக்கு நன்றி சொல்லுகிறேன், நன்றி, என்ன இனிமையான குரல்! – (கொரியோலேனஸ்)

 

I THANK YOU FOR YOUR VOICES, THANK YOU, YOUR MOST SWEET VOICES (CORIOLANUS)

 

பேஸ்புக் வாழ்க! லைக்ஸ் வாழ்க! வாழ்க!!

ஞானத்தின் வகைகள்! (Post No.4472)

Date: 9 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-17 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4472

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 4

முதல் மூன்று கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேது : 30-11-17

 

ஞானத்தின் வகைகள்!

ச.நாகராஜன்

 

அத்வைத விளக்கத்தில் ஞான வகைகளைப் பற்றிப் பார்ப்போம். இதைப் படிப்பவர்கள் வேதாந்த விசாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும், விஷயத்தை பல முறை படித்து நுணுகி ஆராய்வதற்கான பொறுமையைக் கொண்டுள்ளவர்களாகவும் இருத்தல் அவசியம். (சிரத்தா + பொறுமை)

*

 

சரீரத்தினால் சம்சார துக்கம் வருகிறது என்கிறீர்கள். இந்த சம்சார துக்கம் எப்போது போகும்?

சரீரம் போனால் துக்கம் போகும்.

கர்மம் நசித்தால் சரீரம் போகும்.

இராக த்வேஷங்கள் முதலியவை நசித்தால் கருமம் போகும்.

அபிமானம் நசித்தால் இராக த்வேஷாதிகள் போகும்.

அவிவேகம் நசித்தால் அபிமானம் போம்.

அஞ்ஞானம் நசித்தால் அவிவேகம் போகும்.

அஞ்ஞானமோ எனில், அத்வைத ப்ரம்மஸ்வரூபமாகிய ஆத்மாவாகிய தன்னை,’பிரம்மமே நான்’, ‘நானே பிரம்மம்’என்ற ஞானத்தினால் போகும்.

அதாவது இருளும் வெளிச்சமும் போல இவைகளில் ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்க முடியாது. அதுபோல ஞானம் உண்டானவிடத்து அஞ்ஞானம் இருக்காது.

 

கர்மமானது மூன்று வித கரணங்களினால் உண்டாகிறது என்று சொன்னீர்கள். ஞானமும் அந்தக்கரணத்தினால் உண்டாகி விருத்தியாகி இருக்கின்றபடியால் அதுவம் கூட கர்மமே என்று ஆகிறதல்லவா? ஆகவே, அது எப்படி அஞ்ஞானத்தை நசிக்கச் செய்யும்?

விருத்தி என்பது மனத்திலிருந்து உண்டான கர்மமேயாகும். அந்த விருத்தியானது ரூபத்தை அறிகின்ற விஷயத்தில்,  கண்களைப் போல, ஞானத்திற்கு ஒரு சாதனமாக இருந்து அஞ்ஞானத்தை நிவர்த்திக்கிறது. ஞானமோ நித்தியமானது.

 

இந்த ஞானம் எத்தனை வகைப்படும்?

ஸ்வரூப ஞானம், விருத்தி ஞானம் என இப்படி ஞானம் இருவகைப் படும்.

ஸ்வரூப ஞானம் என்றால் சுஷூப்தியில் அஞ்ஞானத்தைப் பிரகாசிப்பதாம்.

ஜாக்கிர ஸ்வப்னங்களில் விஷயங்களைப் பிரகாசிப்பது விருத்தி ஞானம்.

ஞானம் ஆத்ம ஸ்வரூபம்.

அந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஞானமானது, விருத்திகளில் பிரவேசித்து அஞ்ஞானத்தை நசிக்கச் செய்கிறது.

 

அதெப்படி?புரியவில்லை! உதாரணங்களுடன் விளக்குங்களேன்.

தேத்தாங்கொட்டை நியாயம் தெரியுமா? அதன்படி , அதாவது தேத்தாங்கொட்டையானது, தண்ணீரிலுள்ள அழுக்கைப் போக்கி விட்டு, அந்த அழுக்குடன் அதுவும் அடியில் தங்கி விடுவது போல, விருத்தி ஞானமும் அஞ்ஞானத்தையும், அதன் காரியத்தையும் நசிக்கச் செய்து தானும் தானாகவே நசித்துப் போகும். இப்படி விருத்தி நாசமானால், அதில் பிரதிபலித்த ஞானமும்  தனக்கு பிம்பமான ஸ்வரூப ஞானத்தை அடையும்.பிறகு அத்வைதமாகிய ஆத்ம ஸ்வரூபம் மட்டும் மிஞ்சும். இப்படிப்பட்ட ஞானம் ஆத்மனாத்மா (ஆத்மா, அனாத்மா) விசாரத்தினாலே உண்டாகிறது.

ஆத்மா யார்?

மூன்று சரீரங்களுக்கு விலக்ஷணன் ஆகியும், மூன்று அவஸ்தைகளுக்கும் சாக்ஷி ஆகியும், பஞ்ச கோசங்களுக்கு அன்னியன் ஆகியும் உள்ள சச்சிதானந்த லக்ஷணனே!

 

அனாத்மா யார்?

மூன்று சரீரங்களும் உடையவன்.

 

விளக்கமாகச் சொல்லுங்கள்.

ஸமஷ்டி  ஸ்தூல சரீரம்

ஸமஷ்டி சூக்ஷ்ம சரீரம்

ஸமஷ்டி காரண சரீரம்

என்றும்,

வியஷ்டி ஸ்தூல சரீரம்

வியஷ்டி சூக்ஷ்ம சரீரம்

வியஷ்டி காரண சரீரம்

என்று மூன்று சரீரங்களும்,

ஆக ஸமஷ்டி ,வியஷ்டியினால் இப்படி ஆறு விதமாக இருக்கிறான்.

 

ஆத்மாவுக்கு ஈஸ்வரத்துவமும்,  ஜீவாத்வமும் வாஸ்தவமாக உள்ளதா?

வாஸ்தவம் அல்ல.

ஸமஷ்டி உபாதியினால் ஈஸ்வரத்துவமும்

வியஷ்டி உபாதியினால் ஜீவாத்வமும்

மயோபாதியினால் (மய, உபாதி; மய =மாயை) ஈஸ்வரத்துவமும்

அவித்யோபாதியினால் (அவித்யா, உபாதி) ஜீவாத்வமுமே அன்றி வாஸ்தவமல்ல.

ஆத்மாவானவன் மாயையாகவும், அவித்தையாகவும் தானாகவே ஆகி,

ஜீவீஸ்வரர்களாகச் செய்து கொள்ளுகிறான்.

ஈஸ்வரனுக்கு சமஷ்டி காரண சரீரத்தில் அபிமானம் (விருப்பம்) இல்லை.

 

ஏன் இல்லை?

அகங்காரமானது மஹாசுஷூப்தியில் நசித்துப் போவதால்.

 

இந்த ஸமஷ்டி காரணோபதியான ஈஸ்வரனுக்கு என்ன பெயர்?

அவ்வியாக்ருதன் என்றும் அந்தர்யாமி என்றும் பெயர்.

 

 

ஸமஷ்டி சூக்ஷ்ம சரீரோபாதியான ஈஸ்வரனுக்கு என்ன பெயர்?

ஹிரண்யகர்ப்பன், சூத்திராத்மா, மஹாபிராணன் என்ற பெயர்கள் உண்டு.

 

ஸமஷ்டி ஸ்தூலோபாதிகனானை ஈஸ்வரனின் பெயர்கள் யாவை?

விராட்டு, வைராஜன், வைஸ்வானரணன் என்ற பெயர்கள் உண்டு.

 

நன்றி. இன்னும் சில கேள்விகள் உள்ளன, கேட்கலாமா!

கேளுங்கள், கொடுக்கப்படும் (விடை தரப்படும்)!

****

 

பிராமணர்களுக்கு ஜே! மநு நீதி நூல்-7 (Post No.4471)

WRITTEN by London Swaminathan 

 

Date: 8 DECEMBER 2017 

 

Time uploaded in London-  14-52

 

 

Post No. 4471

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

(முதல் ஆறு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப்படிப்பது பொருள் விளங்கத் துணை புரியும்)

முதல் அத்தியாயம் ஸ்லோகம் 92

மனிதனின் தேகமே பரிசுத்தமானது. அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானது

 

93.அந்த பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும், வேதத்தை ஓதுவதாலும், க்ஷத்ரியனுக்கு தர்மத்தைப் போதிப்பதாலும் பிராமணன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

 

94.அந்தச் சுயம்புவான பிரம்மாவானவர், தேவர்கள், பிதுர்களுக்கு

யக்ஞம், சிரார்த்தம் முதலியன செய்து திருப்திப்படுத்துவதற்கும், மற்ற வருணத்தாருக்கு தர்ம உபதேசம் செய்து காப்பாற்றும் பொருட்டும், முகத்தில் இருந்து பிராமணர்களை உருவாக்கினார் அல்லவா?

 

95.பிராமணன் சொன்ன மந்திரத்தினால் தேவர்களும் பித்ருக்களும் தம்தம் அவிர்பாகங்களை (உணவை) அடைகின்றனர். அதனால் அவனைவிட உயர்ந்தவர் இல்லை.

  1. அசையும் அசையாப் பொருட்களில் புழுக்கள் உயர்ந்தன. அவைகளைவிட, அறிவோடு வாழ்கின்ற பசு முதலிய பிராணிகள் உயர்ந்தன. அதைவிட மனிதன் உயர்ந்தவன். அவர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்கள் உயர்ந்தவர்கள்.

97.அவர்களிலும் வேதத்தின் பொருளை அறிந்த பண்டிதர்கள் உயர்ந்தவர்கள்; அதைவிட விதி விலக்குகளை அறிந்தவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொண்டு வாழ்வோர் உயர்ந்தவர்கள். அவர்களிலும் பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் உயர்ந்தவர்கள்.

 

98.பிராமணன் என்பவன் தர்மத்தின் வடிவமாக இருக்கிறான். தர்மம் விளங்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட  அவன் ஞானத்தினால் மோட்சத்திற்கு உரியவன் ஆகின்றான்.

 

99.பூமியில் பிறந்திருக்கின்ற பிராமணன், பெருமை பெற்றவனாய், நால் வர்ணத்தாருடைய தர்மம் என்னும் பொக்கிஷத்தை காப்பாற்றுகிறான்.

 

100.பிராமணன் முதல் வர்ணத்தானவன் என்பதாலும், பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும் எல்லா வர்ணத்தாரிடமிருந்தும் தானம் வாங்க அருகதை உள்ளவன் ஆகின்றான்.

 

101.ஆகையால் பிராமணன் தர்மம் வாங்கினாலும் அவன் பொருளையே — தன் பொருளையே சா     ப்பிடுகிறான்; தன் உடைகளையே உடுத்துகிறான். தன்னுடையதையே தானம் வாங்குகிறான். மற்றவர்கள் அவன் தயவில் வாழ்கிறார்கள்.

  1. அந்த பிராமாணன் உடைய, மற் றவர்களுடைய தர்மங்களை பகுத்தறிவதற்காக, மனித யோனியில் பிறவாத ஸ்வாயம்புவ மநு இந்த சாஸ்திரத்தைப் பிரபலப்படுத்தினார்.

103.இந்த சாஸ்திரத்தின் பயனை அறிந்த பிராமணர்களே இதைக் கற்கலாம்; தனது சீடர்களுக்குக் கற்பிக்கலாம். மற்றவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது.

104.விரத அனுஷ்டானங்களுடன் இதை பின்பற்றுபவனுக்கு மனம், உடல், சொல்லினால் ஏற்படும் குற்றங்கள் வாராது.

  1. இதை ஓதுகின்ற பிராமணன தன்னுடைய சமூகம் முழுவதையும் தூய்மைப் படுத்துகிறான். தன்னுடைய முன் ஏழு, பின் ஏழு தலைமுறைகளை நல்ல கதி அடையச் செய்கிறான். அவன் இந்த பூமி முழுவதையும் தானம் வாங்குவதற்கு உரியவன் ஆகின்றான்.

106.இந்த சாஸ்திரத்தை ஓதுகின்றவர்களுக்கு இது மங்களத்தையும் கீர்த்தியையும் (புகழ்), ஆயுளையும், உயர்ந்த மோக்ஷ கதியையும் தருகின்றது.

 

  1. இந்த சாஸ்திரத்தில் தொன்றுதொட்டு வந்த நான்கு வருணத்தாரி னொழுக்கங் களும்,வினைகளால் ஏற்படும் விளைவுகளும்,எல்லா அறங்களும் சொல்லப்பட்டுள்ளன.

 

108.வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் உள்ள ஒழுக்கவிதிகளே எல்லோருக்கும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் யார் சுகம் அடைய விரும்புகின்றனரோ அவர்கள் இதில் ஈடுபடவேண்டும்.

 

109.ஒழுக்கத்தைவிட்ட பிராமணனுக்கு வேதத்தில் சொல்லிய பலன்கள் கிடைப்பதில்லை. ஒழுக்கம் உடைய பிராமணனுக்கு எல்லா நன்மைகளும் கிட்டும்

 

110.முனிவர்கள் ஒழுக்கத்தின் பலனை அறிந்து எல்லாத் தவத்திற்கும் அதுவே முதற்காரணம் என்று சொல்லுகின்றனர்.

எனது கருத்து

இந்தப்  பகுதியைப் படிக்கையில் ,மநு, ஒரேயடியாக பிராமணர்களை உயர்த்தி வைத்ததுபோலத் தோன்றும். ஆனால் 2600 ஆண்டுகளுக்கு முன்னர், யாக யக்ஞங்கள் தேவை இல்லை என்று சொன்ன புத்தரும் பிராமணர்களை உச்சானிக் கொம்பில் வைத்திருப்பதுடன் ஒப்பிட்டு பொருள் காண வேண்டும; புத்தர் அப்படி ஏன் சொன்னார் என்று அதன் தாத்பர்யத்தையும் அறிய வேண்டும்

 

“ஒரு மகானும், பிராமணனும் கடந்த கால பாவங்களினால் பாதிக்க படுவதில்லை; அவன் தனது சொந்த தாய் தந்தையரைக் கொன்று இருந்தாலும், இரண்டு நல்ல அரசர்களிக் கொலை செய்திருந்தாலும்,  ஒரு பெரிய நாட்டையும், மக்களையும் சீரழித்து இருந்தாலும் அவனைப் பாவங்கள் அணுகாது (தம்மபதம் 294) என்று புத்தர் செப்புகிறார்.

 

ஆயினும் 26ஆவது (தம்மபதம்)  அத்தியாயம் முழுதும் பிராமணன் யார் என்று இலக்கணம் கற்பிக்கிறார். அதாவது அன்பும் கருணையும் ஒழுக்கமும் அறிவும் உடையவனே பிராமணன் என்பதைத் தெளிவாக்குகிறார். இது போலவே மநு வும் வேதம் கற்காதவனோ, ஒழுக்கம் இல்லாதவனோ பிராமணன் இல்லை  என்பார். அது மட்டுமல்லாமல் கடு மையான விதிகளையும் விதிக்கிறார்.

 

வள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவன் என்றும்,கொல்லாமை என்னும் விரதத்தைப் பின்பற்றுபவன் என்றும் பிறப்பொழுக்கம் குன்றாதவன் என்றும் பிராமணர்களுக்கு இலக்கணம் கற்பிக்கிறார் (குறள்  30, 134, 543, 560, 28, 8).

ஆகவே ஒழுக்கமும் அன்பும் கருணையும் உடையவர்களுக்குச் சிறப்பு சலுகை இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் கடுங்குளிர்ப் பிரதேச கட்டாய முகாம்களுக்கு அனுப்பி’ காணமற் போகச் செய்த’ கம்யூனிஸ ரசும் கூட ரஷ்யாஷ்வின் அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை என்று கருதப்பட்ட ஷகாரோவ் அவர்களைக் கொல்லாமல் வெளியேற அனுமதித்தது. அறிவாளிகளையோ, தூதர்களையோ கொல்லக்கூடாது என்ற தர்மத்தைப் பல நாடுகளும் கடைப் பிடித்தன. இந்துக்கள், இத்தோடு பெண்களையும் புற முதுகு காட்டுவோரையும் கொல்லக்கூடாது என்ற தர்மத்தையும் கடைப் பிடித்தனர்.

 

மநு பிராமணர்களுக்கு ஜே போட்டாலும் அத்தகைய இலக்கணத்திற்கு உட்படும் பிராமணர்கள் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம்.

 

மனுவே கூட பூணூல் போட எல்லோரும் உயர்ந்தவர், பிராமண குலத்தில் பிறந்து விட்டாலேயே உயர்ந்தவர் என்று சொல்லாமல், ஒழுக்கமும் வேதம் ஓதுதலுமே பிராம்ம ணத்துவத்தின் உரைகல் என்று பகர்வது கருத்துக்குரியது; கவனத்துக்குரியது.

 

இறுதியாக மநு சொல்லுவதை எழுத்துக்கு எழுத்து அப்படியே எடுத்துக் கொண்டு ‘பொங்கி எழுவோர்’ அவர் சொல்லும் மற்ற விஷயங்களையும் நம்ப வேண்டும்.

அவர் எழுதிய சாத்திரம், சரஸ்வதி- த்ருஷத்வதி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்வோருக்கு அந்த நதிகள் ஓடிய காலத்தில் (கி.மு.2000க்கு முன்) எழுதப்பட்டது. அதற்குப் பின் அது எவ்வளவோ மாற்றங்களை அடைந்திருக்கிறது; இடைச் செருகலுக்கு உடப்படிருக்கிறது.

 

சுபம்–

 

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE (Post No.4470)

Compiled by London Swaminathan 

 

Date: 8 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8–14 am

 

 

Post No. 4470

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

SRI UMAPADA SEN OF CALCUTTA HAS ESTABLISHED THE DATE OF RIG VEDA AROUND 3000 BCE IN HIS BOOK THE RIGVEDIC ERA. HE SUPPORTS THE VIEW OF A. LUDWIG WHO ALSO APPRECIATED THE VEDIC HINDUS’ AMAZING KNOLEDGE ABOUT HEAVENLY BODIES.

 

Here is a summary of Umapada Sen’s article (part of his book):

Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam adade’. this means it was the sun that was eclipsed, for the words ‘ vi suryo Madhya amuchat rathevam divah’ in the preceding verse point clearly to a solar eclipse.

Ludwig’s observation about the attitude of some persons always ready to defame the Veda and the Vedic Indians is worth noticing. He says, “such narrations in other texts ( he quotes other texts) do not appear doubtful, but such expressions when found in the Rig Veda are quite doubtful and many critics regard it as extremely doubtful. There should be no doubt any further, by all events it is not lunar but solar eclipse”.

“Compare RV 4-28-2. There Indra is said to have eclipsed the sun (somena, induna, by the moon). Prof. Willibrandt in his book on Vedic mythology has elaborately and extensively demonstrated that there is never any reason for disbelieving that Soma was Chandramas/Moon.

 

“The eclipse of ‘svarvanu’ has no relation with the clouds. Svarvanu, etymologically taken designates him whose light is the sun or sun’s. This is no other than the moon. We can accurately frame the translation of RV 5-40-6 …….”

 

In the mantra it is said that “Thou, Oh Indra, hadst hurled down by means f svarvanu’s witcheries spreading down from heaven, Atri by means of the fourth brahma has found out the hidden sun”.

 

Atri had to utter four Rik verses and by that time the eclipse subsided. This was the time taken by total solar eclipse!

 

The ‘Svarvanu after 3000 years turned out to be Rahu in the Vishnu Purana after it had lost the etymological meaning. (For the laymen, they gave a story of snake devouring moon or sun and in course of the time the original  view forgotten)

Ludwig further gives a detailed account of Hindu tradition and praises the accuracy of observations.

 

Attempts for determining the date of the Rig Veda through astronomy by Ludwig, Jacobi and B G Tilak amply proved their intimate acquaintance with the Vedic literature.

 

Antares (star Jyeshta or Kettai in Tamil) or Indra was called Jyeshtagni meaning one who commences the New Year (must be sidereal in this case).

Ludwig says, “Vedic priests were aware of moon’s borrowing light from the sun. That the ancient Hindus had a correct notion of the orbits of sun and moon, that their ability to account for the phenomenon of eclipses is absolutely out of doubt and the part assigned to Indra is interesting in a double point of view, and be it noted here that ADRI in the Veda often stands for a node that hurts the weaker Soma (moon) when he passes it, and not always for a stone to pierce Soma plants.”

Ludwig’s vivid narrations of the solar eclipses, wherein times without number he mentions of Indra’s peculiar function, must be carefully noted. Vedic narrations invariably connect Indra with the eclipses. In RV 10-138-4, Indra forces sun to unyoke the horses. It simply means sun was forced to lose his rays when it was just over or near Antares (star). The entire hymn 5-40 describes the eclipse in greater details. It, therefore, appears that two solar eclipses, of which one was definitely total, took place during the Vedic period on dates very near autumnal equinoxes that were visible from Indian latitude 28-32 N and longitude 68-74 E of Greenwich, so as to give an impression to the onlookers that Indra was competent to cause solar eclipses. (Indra= star Antares)

 

Umapada Sen believes the word Suhanta for thunder in 7-30-2 was a comet. He says that the 27 stars, five planets, sun and moon were the Rig Vedic Devas.

Antares and Sun

The scanning of the Rig Vedic revelations does reveal to us that Indra (star Antares) was privileged to enjoy the close company of the sun and as such the date when the particular star Antares was enjoying autumnal equinoxes bears the all-important connection with the Rig Vedic period.

When Umapada sen approached Indian observatories to find out the equinox position of Antares, and they were not helpful. But Greenwich and Hamburg observatories have promptly responded with requisite assistance and Dr Brian G Marsden of Smithsonian Astrophysical Observatory, USA has very kindly favoured him by undertaking the desired calculations.

Dr Marsden writes to say, “The date when a. Scorpi  (Antares) was at ecliptic longitude 180 degree is around 2990 BCE”. The Vedic hymns were composed in earlier periods do reveal that around 3000 BCE, Indra (star Antares) had actually clutched on the thunder (comet) that impressed the Vedic singers as to the massive stature of his weapon.

The date of the solar eclipse near about the autumnal equinox visible from 30 degee  N Indian latitude calculated by expert astronomers is between 3000 BCE and 2800 BCE.

 

Umapada sen concludes the article with a tribute to the Vedic seers, “The Rig Veda is not a code of ethics, a book of morals, a bunch of liturgical exhortations, a bundle of idle speculations, a product of utter frustration or a text with meaningless jargons. It is a collection of sincere invocations, the spontaneous out pouring of the heart of the earliest poets, ovations to the Devas, the stellar gods, wherein the celebrations by and by engulf a vast sphere of sublime religious thought and a true record of intellectual growth and material progress attained by a group of human souls in a corner of the earth well before 3000 BCE.”

 

My comments

It is interesting to see that Vedic poets used a particular style of language or symbolism to express facts. The Brahmanas and the Vedas say that the gods like mysterious language (RV 4-3-16). Though our sees calculated the time of eclipses scientifically and accurately, they told the laymen some interesting stories about the snake Rahu devouring moon or sun to describe the eclipse. Here Atri utters four verses or mantras and the hidden sun came out, says the Vedic hymn. I think that is the time taken for the total eclipse of the sun.

 

Even today we are thrilled to read about the total eclipse of the sun in newspapers. My London neighbour spent 1000 pounds to see the solar eclipse in America. So even when Vedic Hindus knew what is an eclipse Atri might have told them “wait till I finish the four mantras and you will see the sun out. Like our astronomers tell us that the sun will be in full eclipse between this minute and this minute, Atri might have told his disciples, that before I finish the fourth mantra the sun will be out. If a solar eclipse is an astronomical wonder for us today, it would, definitely, have been a wonder for a Vedic Hindu 5000 years ago.

 

The second point I would like to make is that Vedic language is very difficult. Only those who are well versed in Astronomy can figure out the meaning of certain mantras. Sometime ago I posted Ornithologist K N Dave’s view of a mantra where in seven sisters meant actually birds. But even Sayana who lived just 600 years ago could not give the correct meaning. Because Dave was an ornithologist, he could understand what our seers said. Yaska who lived at least 2800 years before our time could not understand hundreds of words. That shows Vedas were very ancient, more ancient than we thought until today. Now our job is to reinterpret all the mantras with a panel of experts from every walk of life or profession and present both Sayana’s and the new interpretations. We must discard all foreigners’ writings.

 

Now that we know the Vedic civilization existed before Indus Valley civilization through scientific research of Sarasvati river and through the astronomical research, we must rewrite Indian history ASAP.

 

–Subham–